Aggregator

நேபாளத்தில் அரசு கவிழ்ந்தது: இளைஞர் போராட்டத்தால் பிரதமர் கே.பி.ஒலி ராஜினாமா

2 months 1 week ago
நேபாள பிரதமர் இராஜினாமா! Published By: Digital Desk 3 09 Sep, 2025 | 03:23 PM நாட்டில் இடம்பெற்றுள்ள மக்கள் கொந்தளிப்பை தொடர்ந்து நேபாள அரசின் பிரதமர் கே.பி.ஷர்மா சற்றுமுன் இராஜினாமா செய்துள்ளார். சமூக ஊடகங்களுக்கு நேபாள அரசு விதித்த தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு முழுவதும் பெரும் வன்முறைப் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதுவரை ஆர்ப்பாட்டக்காரர்களில் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் காயமடைந்துள்ளனர். நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிகளின் கீழ் பதிவு செய்யத் தவறிய இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு நேபாள அரசு விதித்த தடைக்கு எதிராக வெடித்த போராட்டம், பெரும் வன்முறையாக மாறியது. இதையடுத்து, இந்தத் தடை திங்கட்கிழமை (8) நள்ளிரவில் நீக்கப்பட்டது. இருப்பினும், ஊழல் குற்றச்சாட்டுகளைக் காரணம் காட்டி நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியை பதவி விலகக் கோரி, இளைஞர்கள் இரண்டாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் நேபாள ஜனாதிபதி மற்றும் பிரதமர் இல்லங்கள், பாராளுமன்ற கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குத் தீ வைத்தனர். இதனால், பாராளுமன்றம் முழுவதும் கரும் புகை சூழ்ந்தது. விமான நிலையம் அருகிலும் தீ வைக்கப்பட்டதால் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. இந்தக் கடுமையான அழுத்தத்தைத் தொடர்ந்து, நேபாளப் பிரதமர் ஷர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நேற்று உள்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், இன்று பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224631

உயரத்துக்கு ஏற்ற வீடு; உயர்ந்து நிற்கும் காதல் - நெகிழ வைக்கும் மாற்றுத்திறனாளி தம்பதி

2 months 1 week ago
ஆதர்சமான தம்பதிகள் . ........ அவர்கள் யாரிடமும் இரக்கத்தையோ கருணையையோ எதிர்பார்க்கவில்லை .......நடைமுறையில் சாதாரண மனிதர்போல் நடத்தினால் போதும் என்பதைத்தான் விரும்புகின்றார்கள் . ......! 👍

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு.

2 months 1 week ago
மேலே ஓணாண்டியார் இணைத்த மருத்துவத் தகவல் கட்டுரையில் இருக்கும் அதே அடிநாதமான விடயத்தைத் தான் நானும் என் பாணியில் சொல்லியிருக்கிறேன். "இது முன்னோடி" என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள், ஆனால் செய்தியைப் பிரசுரித்த அனைத்து இந்திய ஊடகங்களும் "ஊசி பாவிக்க தயார், அனைவருக்கும் இலவசம்" என்று கூறியிருக்கும் தகவலை நீங்கள் சரி பார்த்திருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், மருந்தைத் தயாரித்த ரஷ்ய அமைப்பின் தளத்தில் என்ரெறோமிக்ஸ் என்பதே mRNA தடுப்பூசியாக அல்லாமல், நான்கு மனிதனுக்குத் தொற்றும் வைரசுகளின் கலவை என்று இருக்கிறது. அதன் கீழ் ஒரு பந்தியில் mRNA தடுப்பூசி செய்கிறோம் என்று இருக்கிறது. இதையெல்லாம் கலந்து கட்டி ஒரு கற்பனைச் செய்தியை சில ஊடகங்கள் போட்டிருக்கின்றன. இப்படியான செய்திகள் முகநூலில், இன்ஸ்ராவில் ஓடும், யாழில் கஷ்டம் தான்!

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

2 months 1 week ago
வணக்கம் வாத்தியார் . .........! இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : { காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் } (2) நான் ஆண் : அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்னவானாள் ஆண் : { என் உள்ளம் என்ற ஊஞ்சல் அவள் உலவுகின்ற மேடை } (2) ஆண் : என் பார்வை நீந்தும் இடமோ அவள் பருவம் என்ற ஓடை ஆண் : { நடை பழகும்போது தென்றல் விடை சொல்லி கொண்டு போகும் } (2) ஆண் : { அந்த அழகு ஒன்று போதும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும் } (2) ஆண் : { நல்ல நிலவு தூங்கும் நேரம் அவள் நினைவு தூங்கவில்லை } (2) ஆண் : { கொஞ்சம் விலகி நின்ற போதும் இந்த இதயம் தாங்கவில்லை ......... ! --- காற்று வாங்க போனேன் ---

இஸ்ரேல் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளது

2 months 1 week ago
பயங்கரவாதிகள் எங்கிருந்தாலும் எலிமினேட் செய்யப்படவேண்டும். வெல்டன் இஸ்ரேல்! யாஹ்வே நிஸ்ஸி!

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு.

2 months 1 week ago
நல்ல இணைப்பு, ஆனால் பலருக்கு இந்த தடுப்பூசி பற்றி சரியான புரிதல் இல்லை, இதனை ஒரு வழமையான Prophylactic vaccine ஆகவே கருதுகிறார்கள், நோய் வருவதனை முன் கூட்டியே வராமல் தவிர்ப்பதற்காக போடப்படும் தடுப்பூசி எதுவும் 100% வினைத்திறனுடன் இருக்காது அதனாலேயே 100% என்றவுடன் குழம்புகிறார்கள் (வழமயான தடுப்பூசி என கருதி), இது ஒரு Therapeutic Vaccine, இது நோய் வந்த ஒருவரின் அவரது சொந்த உடல்கூறினை ஆராய்ந்து அதற்கேற்ப செயற்கைநுண்ணறிவின் செயற்பாட்டுடன் அவருக்கென பிரத்தியேகமாகவடிவமைக்கப்படுவதாலேயே 100% வினைத்திறன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு.

2 months 1 week ago
எமது தலைவருக்கு ரசியா மீது கோபம் கோபமாக வருகிறது.அது தான் உங்க தலைவர் ரம். பாரிய பொருளாதாரத் தடை கொண்டுவந்து எழும்ப முடியாமல் செய்யப் போகிறாராம்.

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்

2 months 1 week ago
பரவாயில்லை மோகன். தனிமடல் பகுதி எப்போதாவது தானே எழுதுவது.கருத்துக் களத்தில் எழுதிவிட்டு வெட்டி ஒட்டினால் சரிதானே. உங்கள் கரிசனைக்கு மிக்க நன்றி மோகன்.

மட்டக்களப்பில் பிரபல ஹோட்டலுக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைப்பு! பெருமளவு பழுதடைந்த உணவுப் பொருட்களும் மீட்பு!

2 months 1 week ago
எந்த உணவகம் என்று பெயரை வெளியிட, வீரகேசரி ஏன் பஞ்சிப் படுகின்றது. முஸ்லீம் உணவகம் என்றால்… வீரகேசரி பம்மிக் கொண்டு, விழுங்காமல் நலுங்காமல் செய்தி வெளியிடுவது ஒரு வகை பயபக்தி என நினைக்கின்றேன். 🤔

மட்டக்களப்பில் பிரபல ஹோட்டலுக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைப்பு! பெருமளவு பழுதடைந்த உணவுப் பொருட்களும் மீட்பு!

2 months 1 week ago
09 Sep, 2025 | 04:50 PM மட்டக்களப்பு தலைமையாக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு நகரில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற முறையில் உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்த பிரபல ஹோட்டல் ஒன்றை இரு தினங்களுக்கு மூடி சீல் வைத்து மூடுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சுதர்சனி உத்தரவிட்டுள்ளார் மட்டக்களப்பு நகரிலுள்ள குறித்த உணவு விற்பனை நிலையத்தின் மீது பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ் முரளீஸ்வரனின் பணிப்புரையின் பேரில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ டாக்டர் இ.உதயகுமாரின் வழிகாட்டலில் கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி. மிதுன்ராஜ் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த ஹோட்டலை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியபோது மனிதபாவனைக்கு உதவாத பெருமளவிலான உணவுப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன மனித நுகர்விற்கு பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்தல், மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்தல் உட்பட ஐந்து குற்றச்சாட்டுகளின் மீது குறித்த ஹோட்டல் மீது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள் வழக்கு தாக்கல் மேற்கொண்ட போது குறித்த ஹோட்டல் உரிமையாளருக்கு 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன் இருதினங்களுக்கு ஹோட்டலை சீல் வைத்து மூடுமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ சுதர்ஷினி உத்தரவிட்டார் நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த ஹோட்டல் பொது சுகாதார பரிசோதகர்களினால் நேற்று மிலை(8)சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. இரு தினங்களின் பின்னர் ஹோட்டல் உரிமையாளர் ஹோட்டலினை தூய்மைப்படுத்தி மனித நுகர்விற்கு பொருத்தமான முறையில் உணவு தயாரிக்கும் இடமாக மாற்றி அமைத்தால் மீண்டும் ஹோட்டலை திறப்பதற்கான அனுமதியை பொதுச் சுகாதார பரிசோதவர்கள் வழங்குவார்கள் என கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் மேலும் தெரிவித்தார். குறித்த ஹோட்டல் உரிமையாளர் மீதான வழக்கு எது வரும் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் பிரபல ஹோட்டலுக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைப்பு! பெருமளவு பழுதடைந்த உணவுப் பொருட்களும் மீட்பு! | Virakesari.lk

மட்டக்களப்பில் பிரபல ஹோட்டலுக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைப்பு! பெருமளவு பழுதடைந்த உணவுப் பொருட்களும் மீட்பு!

2 months 1 week ago

09 Sep, 2025 | 04:50 PM

image

மட்டக்களப்பு தலைமையாக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு நகரில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற முறையில் உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்த பிரபல ஹோட்டல் ஒன்றை இரு தினங்களுக்கு  மூடி சீல் வைத்து மூடுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சுதர்சனி உத்தரவிட்டுள்ளார் 

மட்டக்களப்பு நகரிலுள்ள குறித்த உணவு விற்பனை நிலையத்தின் மீது பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ் முரளீஸ்வரனின் பணிப்புரையின் பேரில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ டாக்டர் இ.உதயகுமாரின் வழிகாட்டலில் கோட்டைமுனை பொது  சுகாதார பரிசோதகர் ரி. மிதுன்ராஜ் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த ஹோட்டலை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியபோது மனிதபாவனைக்கு உதவாத பெருமளவிலான உணவுப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன 

மனித நுகர்விற்கு பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்தல், மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்தல் உட்பட ஐந்து குற்றச்சாட்டுகளின் மீது குறித்த ஹோட்டல் மீது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள் வழக்கு தாக்கல் மேற்கொண்ட போது குறித்த ஹோட்டல் உரிமையாளருக்கு 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன் இருதினங்களுக்கு ஹோட்டலை சீல் வைத்து மூடுமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ சுதர்ஷினி உத்தரவிட்டார் 

நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த ஹோட்டல் பொது சுகாதார பரிசோதகர்களினால் நேற்று மிலை(8)சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. 

இரு தினங்களின் பின்னர் ஹோட்டல் உரிமையாளர் ஹோட்டலினை தூய்மைப்படுத்தி மனித நுகர்விற்கு பொருத்தமான முறையில் உணவு தயாரிக்கும் இடமாக மாற்றி அமைத்தால் மீண்டும் ஹோட்டலை திறப்பதற்கான அனுமதியை பொதுச் சுகாதார பரிசோதவர்கள் வழங்குவார்கள் என கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் மேலும் தெரிவித்தார்.

குறித்த ஹோட்டல் உரிமையாளர் மீதான வழக்கு எது வரும் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


மட்டக்களப்பில் பிரபல ஹோட்டலுக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைப்பு! பெருமளவு பழுதடைந்த உணவுப் பொருட்களும் மீட்பு! | Virakesari.lk

போதைப்பொருள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிப்பு பொய்யான தகவல்களை பகிரவேண்டாம் - பொலிஸார்

2 months 1 week ago
9 Sep, 2025 | 05:25 PM ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருள் அடங்கிய இரு கொள்கலன்கள் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டமைக்கு மேல் மாகாண வடக்கு குற்றபிரிவு பணிப்பாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ரொஹான் ஒலுகலவே காரணம் என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ள இவ்விடயம் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை (08) பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டிருந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களும் பாதாள உலக குழுவை சேர்ந்த மனுதின பத்மசிரி பெரேரா என்னும் கேல்பத்தர பத்மே மற்றும் கமென்டோ சலிந்த உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்கள் இந்தோனேசிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு கடந்த ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி நாடிற்கு அழைத்துவரப்பட்டனர். இந்நிலையில் குறித்த நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து, நாட்டினுள் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்கு அவசியமான மூலப்பொருளான ஒருவகை இரசாயனம் அடங்கிய இரு கொள்கலன்கள் கொண்டுவரப்பட்டமை மற்றும் மித்தெனிய பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டமை உள்ளிட்ட தகவல்கள் தெரியவந்தது. அதற்கமைய மித்தெனிய பகுதியிலிருந்து போதைப்பொருள் தயாரிப்புக்கான இரசாயனமும் மீட்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சர்வதேச புலனாய்வு பிரிவு ஏற்கனவே தகவல் அளித்திருந்த போதும், சிவப்பு அடையாளமிடப்பட்ட இரசாயனம் அடங்கிய இரு கொள்கலன்களை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு பணிப்பாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ரொஹான் ஒலுகலவே விடுவித்ததாக சமூக வலத்தளங்களில் உண்மைக்குப்புறம்பான கருத்துகள் பகிரப்பட்டுள்ளன. இதுபோன்ற தேவையற்ற வதந்திகளால் விசாரணை அதிகாரிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதுடன் விசாரணைகளுக்கும் இடையூறு ஏற்படுகின்றது. ஆகையால் விசாரணைகள் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்ப முயலும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிப்பு பொய்யான தகவல்களை பகிரவேண்டாம் - பொலிஸார் | Virakesari.lk

போதைப்பொருள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிப்பு பொய்யான தகவல்களை பகிரவேண்டாம் - பொலிஸார்

2 months 1 week ago

9 Sep, 2025 | 05:25 PM

image

ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருள் அடங்கிய இரு கொள்கலன்கள் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டமைக்கு மேல் மாகாண வடக்கு குற்றபிரிவு பணிப்பாளரும் உதவி பொலிஸ்  அத்தியட்சகருமான ரொஹான் ஒலுகலவே  காரணம் என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ள இவ்விடயம் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை (08) பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டிருந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களும் பாதாள உலக குழுவை சேர்ந்த மனுதின பத்மசிரி பெரேரா என்னும் கேல்பத்தர பத்மே  மற்றும் கமென்டோ சலிந்த உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்கள் இந்தோனேசிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு கடந்த ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி நாடிற்கு அழைத்துவரப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து, நாட்டினுள் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்கு அவசியமான மூலப்பொருளான ஒருவகை இரசாயனம் அடங்கிய இரு கொள்கலன்கள் கொண்டுவரப்பட்டமை மற்றும் மித்தெனிய பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டமை உள்ளிட்ட தகவல்கள் தெரியவந்தது.

அதற்கமைய மித்தெனிய பகுதியிலிருந்து  போதைப்பொருள் தயாரிப்புக்கான இரசாயனமும் மீட்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சர்வதேச புலனாய்வு பிரிவு ஏற்கனவே தகவல் அளித்திருந்த போதும், சிவப்பு அடையாளமிடப்பட்ட இரசாயனம் அடங்கிய இரு கொள்கலன்களை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு பணிப்பாளரும் உதவி பொலிஸ்  அத்தியட்சகருமான ரொஹான் ஒலுகலவே விடுவித்ததாக சமூக வலத்தளங்களில் உண்மைக்குப்புறம்பான கருத்துகள் பகிரப்பட்டுள்ளன.

இதுபோன்ற தேவையற்ற வதந்திகளால் விசாரணை அதிகாரிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதுடன்  விசாரணைகளுக்கும் இடையூறு ஏற்படுகின்றது. ஆகையால் விசாரணைகள் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான  தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பொதுமக்களின்  கவனத்தை திசைதிருப்ப முயலும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

போதைப்பொருள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிப்பு பொய்யான தகவல்களை பகிரவேண்டாம் - பொலிஸார் | Virakesari.lk

இஸ்ரேல் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளது

2 months 1 week ago
இஸ்ரேல் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது. மேலும்..... Israel carries out strike on senior Hamas leaders in Qatari capital Israel has carried out a strike on senior Hamas leaders in Qatar's capital Doha A Hamas official says its negotiating team was targeted during a meeting Explosions are heard and smoke is rising above Doha Israel carries out strike on senior Hamas leaders in Qatari capital - BBC News

இஸ்ரேல் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளது

2 months 1 week ago

இஸ்ரேல் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது.

மேலும்.....

Israel carries out strike on senior Hamas leaders in Qatari capital

  • Israel has carried out a strike on senior Hamas leaders in Qatar's capital Doha

  • A Hamas official says its negotiating team was targeted during a meeting

  • Explosions are heard and smoke is rising above Doha

Israel carries out strike on senior Hamas leaders in Qatari capital - BBC News

சமூகவலைத்தள முடக்கத்துக்கு எதிராக நேபாளத்தில் வெடித்த 'Gen Z' இளைஞர்கள் போராட்டம்

2 months 1 week ago
🔴 கொழுத்தி எரிக்கப்பட்டது நேபாள பாராளுமன்றம்! சமூக ஊடக தடையை கண்டித்து ஆரம்பிக்கப்பட்ட இளைஞர் போராட்டமானது வன்முறையாக வெடித்து தொடர்வதுடன், பிரதமர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளதுடன் பாராளுமன்றமும் போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Vaanam.lk