Aggregator

சுய மரியாதை இயக்கம் தமிழ்நாட்டின் அரசியல், மொழி, பண்பாட்டுத் தளத்தில் ஏற்படுத்திய மாற்றம் என்ன?

2 months 1 week ago
தி.மு.க. தலைவர்கள் நூற்றாண்டு விழா மேடைக்கு செல்லும் பாதையில்... சிறுநீர் கழிக்கும் உடன்பிறப்பு. 😂 Arya S R Tvk

மனிதனை கடிக்கும் தெரு நாய்களுக்கு ஆயுள் தண்டனை!

2 months 1 week ago
மனிதனை கடிக்கும் தெரு நாய்களுக்கு ஆயுள் தண்டனை! இந்தியா முழுவதும் தெருநாய் பிரச்சனை ஒரு பெரிய சிக்கலாக உருவெடுத்து இருக்கும் நிலையில் இது தொடர்பாக உத்தரபிரதேச அரசு ஒரு வினோதமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது ஒரு தெருநாய் காரணமே இல்லாமல் இரு முறை மனிதர்களைக் கடித்தால் அந்த நாய்க்கு ஆயுள் முழுவதும் காப்பகத்தில் அடைக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில காலமாகவே இந்தியாவில் தெருநாய் பிரச்சனை மிக மோசமான ஒன்றாக மாறியிருக்கிறது. தெருநாய் பிரச்சனையைக் கையாள உச்ச நீதிமன்றமும் கடந்த மாதம் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்து இருந்தது. மேலும், இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தடுப்பூசி , கருத்தடை பணிகளை எல்லா மாநில அரசுகளும் தீவிரமாக மேற்கொண்டு வந்தன. இந்த நிலையில்தான் உத்தரப் பிரதேச அரசு வினோதமான ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது ஒரு மனிதனைக் காரணமின்றிக் கடித்தால் நாய்களுக்குத் தண்டனையாம். இதுபோல முதல் முறை நடந்தால் அந்த நாய்கள் 10 நாட்களுக்கு விலங்கு மையத்தில் வைக்கப்படுமாம். அதேநேரம் மீண்டும் அந்த நாய் காரணமில்லாமல் மனிதர்களைக் கடித்தால் வாழ்நாள் முழுவதும் அந்த நாய் அங்கேயே அடைக்கப்படும் என்றும் உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இது கிட்டத்தட்ட நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிப்பதற்குச் சமம். அப்படிக் காப்பகத்தில் அடைக்கப்படும் நாய்கள் தப்பிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறதாம். யாராவது ஒருவர், அந்த நாயைத் தத்தெடுத்தால் மட்டுமே அது காப்பகத்தில் இருந்து விடுவிக்கப்படும். மீண்டும் நாயைத் தெருக்களில் விட மாட்டோம் என உறுதிமொழிப் பத்திரம் கொடுத்தால் மட்டுமே நாயை விடுதலை செய்வார்களாம். கோபத்தை கட்டுப்படுத்தமுடியாத நாய்களைக் கையாளும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே அம்மாநில முதன்மைச் செயலாளர் அம்ரித் அபிஜாத் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். தெருநாய் கடி காரணமாக ஒருவர் ரேபிஸ் தடுப்பூசி பெற வந்தால், அந்தச் சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நாய் விலங்குகள் மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுமாம். கால்நடை மையத்தில் நாய்கள் பரிசோதிக்கப்பட்டு கருத்தடை செய்யப்படாவிட்டால், கருத்தடை செய்யப்பட்டு பின்னர் 10 நாட்கள் அந்த நாயின் நடத்தை கண்காணிக்கப்படும் எனவும் விடுவிக்கப்படுவதற்கு முன்பு, அந்த நாய்க்கு மைக்ரோசிப் பொருத்தப்படும் எனவும் இதன் மூலம் நாயின் இருப்பிடத்தைக் கண்காணிக்க முடியும் எனவும் இந்திய மாநில கால்நடை அலுவலர் பிஜய் அம்ரித் ராஜ் தெரிவித்துள்ளார். அதே நாய் மீண்டும் மனிதனைக் காரணமின்றி இரண்டாவது முறை கடித்தால், அது வாழ்நாள் முழுவதும் மையத்திலேயே வைக்கப்படும் எனவும் நாய் காரணமில்லாமல் கடித்ததா.. இல்லை தற்காப்பிற்காகக் கடித்ததா என்பதைக் கால்நடை மருத்துவரைக் கொண்ட 3 பேர் கொண்ட குழு முடிவு செய்யும் எனவும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1447561

பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?

2 months 1 week ago
உள்ளூர் ஊடகங்களில் காட்டப் பட்ட வீடியோக்கள் இன்னும் இணையத்தில் இருந்தால் அவற்றை நீங்கள் ஏன் வெளியிடவில்லை? வெளியிட்டால் உண்மைகள் வெளிப்பட்டு விடுமே என்ற பயமா? அதனால் நீங்கள்தான் இறுக கண்களை மூடிக் கொண்டிருப்பதுபோல் தெரிகிறது.😣

காலில் விழுதல்

2 months 1 week ago
ஒரு மனிதர் காலில் விழுவது என்பது மிக கேவலமான முறை. இந்தியாவில் தமிழ்நாட்டில் அதிகமாகவும் சிங்கலவர்களிடம் ஓரளவுக்கு இருப்பதாகவும் அறிந்தே. ஜெயலலிதா இந்த முறையை தனது காலில் மறறவர்கள் வீழ்வதற்காக ஊக்குவித்தாராம்.சங்க இலக்கியங்களில் சொல்லபட்டிருந்தால் என்ன அவசியம் ஒழிக்கபட வேண்டியது. காணொளி பார்க்க முடியவில்லை

இரவில் தூங்குவதற்கு முன் வைஃபை, மொபைல் இன்டர்நெட்டை அணைத்துவிட வேண்டுமா?

2 months 1 week ago
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வைஃபை ரூட்டர்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு (radiation) குறித்து விவாதங்கள் தொடங்கியுள்ளன. கட்டுரை தகவல் பரத் ஷர்மா பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் "படுடா செல்லமே, மணி இரவு 12 ஆகிறது, இன்னும் எவ்வளவு நேரம் மொபைல் ஃபோன் பார்ப்பாய்?" "ஒரு படம் மட்டும் முடிச்சிடறேன், பகலில் வைஃபை கிடைக்காதே!" "இந்த வைஃபை-க்கு ஏதாவது செய்யணும்!" டெல்லி நொய்டாவைச் சேர்ந்த சரிதாவுக்கும், எட்டாம் வகுப்பு படிக்கும் அவரது மகன் அக்ஷருக்கும் இடையே நடக்கும் இந்த உரையாடல் ஒரு வழக்கமான நிகழ்வு. வாரத்தில் மூன்று, நான்கு இரவுகள் இது நடக்கும். சிலர் வைஃபை (Wi-Fi) என்பதன் முழு வடிவம் 'வயர்லெஸ் ஃபிடலிட்டி' (Wireless Fidelity) என்பார்கள். அதேபோல, ஹை-ஃபை (Hi-Fi) என்பதன் முழு வடிவம் 'ஹை ஃபிடலிட்டி' (High Fidelity) என்பதாகும். ஆனால், வைஃபை அலையன்ஸ் என்ற தொழில் கூட்டமைப்பு வைஃபைக்கு என்று எந்த விரிவாக்கமும் இல்லை என்று கூறுகிறது. எளிமையாகக் கூறுவதானால் வைஃபை என்பது கேபிள்கள் மற்றும் இணைப்புகளின் சிக்கலில் சிக்காமல், நம்மை இணையத்துடன் இணைக்கும் ஒரு தொழில்நுட்பம். இதன் மூலம் நாம் இணையத்திலிருந்து தகவல்களைப் பெறவும், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும் முடியும். இரவில் வைஃபையை இயக்கத்தில் வைப்பதால் ஆரோக்கியத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இரவு நேரங்களில் பொழுதுபோக்கு அல்லது வேலைக்காக இணையத்தைப் பயன்படுத்தும்போது வைஃபை ரூட்டர்கள் இரவிலும் அணைக்கப்படாமல் அப்படியே இருந்து விடுகின்றன. வைஃபை என்பது கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் போன்ற சாதனங்களை கேபிள்கள் இல்லாமல் ஒரு நெட்வொர்க்குடன் இணைக்கும் ஒரு தொழில்நுட்பம் ஆகும். இது வயர்லெஸ் ரூட்டரைப் பயன்படுத்தி ஒரு வயர்லெஸ் லோக்கல் ஏரியா நெட்வொர்க்கை (WLAN) உருவாக்குகிறது. மொபைல் ஃபோன் பழக்கம் நமக்கு எல்லோருக்கும் தெரியும். இப்போது வைஃபை ஒரு புதிய பழக்கமாக வளர்ந்து வருகிறது. ஆனால், இதைப்பற்றி அதிகம் விவாதிக்கப்படாத ஒரு அம்சம் இப்போது விவாதத்திற்கு வந்துள்ளது. யாராவது இரவு தாமதமாக மொபைல் ஃபோன், டேப்லெட், கணினி அல்லது லேப்டாப்பில் பொழுதுபோக்கு அல்லது வேலைக்காகச் செயல்படும்போது, வைஃபை ரூட்டரும் இரவு முழுவதும் அப்படியே இயக்கத்தில் இருக்க வாய்ப்பு அதிகம். அப்படியானால், வைஃபை ரூட்டரை அணைக்காமல் வைத்திருப்பதால் நம் ஆரோக்கியத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? அல்லது அதை அணைப்பதால் ஆரோக்கியத்திற்கு ஏதேனும் நன்மைகள் உண்டா? இந்தக் கேள்வியை இன்னும் கூர்மையாகக் கேட்டால், இரவில் வைஃபை ஆன் செய்து வைப்பதால் மனித உடலின் நரம்பியல் அம்சங்களுக்கு அல்லது மூளைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? டெல்லி-என்சிஆர் பகுதியில் உள்ள யசோதா மெடிசிட்டியில் ஆலோசகராகப் (குறைந்தபட்ச ஊடுருவல் கொண்ட நரம்பியல் அறுவை சிகிச்சை) பணிபுரியும் மருத்துவர் திவ்ய ஜோதியிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டபோது, அறிவியல் ரீதியாக இதுவரை அப்படி எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்பதால், நேரடியாக அப்படிச் சொல்ல முடியாது என்று கூறினார். "தர்க்கரீதியாகப் பார்த்தால், மூளையின் தூண்டல்கள் மின் தூண்டல்கள் என்பதால், அப்படி நினைக்கலாம். வைஃபை அல்லது பிற சாதனங்கள் மின்காந்த அலைகளை (electromagnetic fields -EMF) சார்ந்துள்ளன," என மருத்துவர் மேலும் தெரிவித்தார். "எனவே, இது மூளையின் தூண்டல்களுடன் குறுக்கிட வாய்ப்புள்ளது. ஆனால், அப்படி யோசிப்பதற்கு எந்தவொரு அறிவியல் காரணமோ, விளக்கமோ அல்லது முடிவோ இதுவரை இல்லை. ஆனால், முடிந்தவரை அதிலிருந்து நாம் விலகி இருக்க வேண்டும் என்றுதான் தர்க்கம் கூறுகிறது." மூளைத் தூண்டுதல்கள் என்றால் என்ன? மூளைத் தூண்டுதல்கள் (Brain impulses) என்பவை, நியூரான்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளவும், தகவல்களைப் பறிமாறவும் உதவும் மின்னணு - வேதியியல் சமிக்ஞைகள் (electrochemical signals) ஆகும். இந்த நரம்புத் தூண்டுதல்கள், செயல் ஆற்றல் (action potential) என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தத் தூண்டுதல்களை மூளைக்கு எடுத்துச் செல்லும் நரம்புக்கு உணர்ச்சி நரம்பு (sensory nerve) என்று பெயர். இந்த நரம்புகள் மூளைக்கு செய்திகளைக் கொண்டு செல்வதால்தான், நம்மால் தொடு உணர்ச்சி, சுவை, வாசனை ஆகியவற்றை உணர முடிகிறது. இரவு மற்றும் பகல் நேரங்களில் வைஃபை ரூட்டரின் விளைவு பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இரவு மற்றும் பகலில் கதிர்வீச்சால் ஏற்படும் விளைவுகளில் என்ன வித்தியாசம் உள்ளது என்ற கேள்வி அடிக்கடி மனதில் எழுகிறது இரவில் வைஃபை ரூட்டரை அணைத்து வைப்பது அவசியம் என கூறினால் பகலில் ஏன் அணைத்து வைக்க தேவையில்லை? இந்தக் கேள்விக்கு பிபிசியிடம் பதிலளித்த மருத்துவர் திவ்ய ஜோதி, "பகல் மற்றும் இரவில் உடலின் செயல்பாடுகள் வேறுபடுகின்றன. இரவில் உடலின் அலைகள் வேறுபட்டவை, அவை தூக்க அலைகள். இரவில் நல்ல தூக்கம் பெறுவது மிகவும் முக்கியமானது. அது தூக்க சுழற்சியால் தீர்மானிக்கப்படுகிறது." "அதனால்தான், இரவில் அதை அணைத்து வைக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதனால், மூளைக்கு முழுமையாக ஓய்வு கிடைத்து, நல்ல தூக்கம் கிடைக்கும். ஆனால், பகல் நேரத்தில் நாம் வேலை செய்ய வேண்டும் என்பதால், தூக்கத்தில் குறுக்கீடு இல்லை. ஆனால், இந்த வெளிப்பாடு எவ்வளவு குறைவாக இருக்கிறதோ, அவ்வளவு நல்லது என்பதுதான் தர்க்கம்." ஆனால், இரவில் வைஃபையை மட்டும் தவிர்ப்பது போதுமா? நாம் அடிக்கடி தலையணைக்கு அருகில் வைத்துத் தூங்கும் மொபைல் ஃபோன்கள் பாதிப்பை ஏற்படுத்தாதா? இதற்கு மருத்துவர், மொபைல் ஃபோன்களும் மைக்ரோவேவ்களை அடிப்படையாகக் கொண்டவை என்று கூறுகிறார். அவையும் ஒரு வகையான கதிர்வீச்சை உருவாக்குகின்றன. ஆனால், அவற்றின் அதிர்வெண் (frequency) வேறுபட்டது. தர்க்கரீதியாகப் பார்த்தால், இவை கூட தூக்கத்தில் குறுக்கிடலாம். நீங்கள் மொபைல் ஃபோனைப் பயன்படுத்தாமல் இருந்தாலும் கூட, மின்காந்த அலைகள் இருந்துகொண்டே இருக்கும். "பின்னணிக் கதிர்வீச்சோடு ஒப்பிடும்போது, மொபைல் ஃபோன் மற்றும் வைஃபை ஆகியவற்றிலிருந்து வரும் கதிர்வீச்சு மிகக் குறைவு. இவை இரண்டிலிருந்தும் வெளிப்படும் கதிர்வீச்சு அதிகமாகுமா என்றால், இல்லை. இதற்கு மாறாக, நம் மீதான பின்னணிக் கதிர்வீச்சின் தாக்கம் மிகவும் அதிகம்," என்று மருத்துவர் திவ்ய ஜோதி தெரிவித்தார். நிபுணர்களின் கூற்றுப்படி, நம் வீடு மற்றும் அலுவலகங்களில் உள்ள அனைத்து வகையான சாதனங்களிலிருந்தும் கதிர்வீச்சு வெளிப்படுகிறது. டிவி, பிரிட்ஜ் முதல் ஏசி வரை. எந்த மின் சாதனமாக இருந்தாலும், மின்காந்த அலைகள் அதனுடன் தொடர்புடையவை. சில நிபுணர்கள், மின்காந்த அலைகள் அளவுக்கு அதிகமாக வெளிப்படுமோ என்று பயந்தால், நீங்கள் தூங்கும் அறையில் ரூட்டரை வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். அல்லது அது சாத்தியமில்லை என்றால், படுக்கையிலிருந்து ரூட்டரை சற்றுத் தள்ளி வைக்கலாம். நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தியாவில் மொபைல் ஃபோனின் வரலாறு சுமார் 30 ஆண்டுகள் பழமையானது மருத்துவத் துறை நிபுணர்களைத் தவிர, தொழில்நுட்பத் துறை நிபுணர்களுடனும் நாங்கள் பேசினோம். இந்த விஷயம் குறித்து துல்லியமான தகவல்கள் எதுவும் இல்லை. இதனால், குழப்பம் அதிகமாக உள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர். தொழில்நுட்ப நிபுணர் முகமது ஃபைசல் அலி, "நல்ல தூக்கத்தைப் பெற இரவில் வைஃபையை அணைக்க வேண்டும் என்பதை நிரூபிக்க எந்த ஆய்வும் இல்லை" என்றார். "அல்லது வைஃபையை ஆன் செய்து வைத்திருப்பது நமது நரம்பியல் அல்லது வேறு எந்த அமைப்பையும் பாதிக்கிறது என்பதை நிரூபிக்கவும் ஆய்வு இல்லை. ஆனால், எந்தவொரு அலைகளின் தாக்கமும் நீண்ட காலத்திற்கு ஏற்படும் போது விளைவை ஏற்படுத்தலாம் என்று கூறலாம். இது ஒரு பொதுவான விஷயம்." "கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் மொபைல் மற்றும் வைஃபையின் வளர்ச்சி மிக அதிகமாக உள்ளது," என அலி பிபிசியிடம், கூறினார். "எனவே, எதிர்காலத்தில் ஒரு ஆய்வு நடத்தப்படலாம். அதில், இந்த விஷயங்களால் இந்தந்த பாதிப்புகள் ஏற்படலாம் ஆகவே, அவற்றைக் குறைவாகவே பயன்படுத்த வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வரலாம். ஆனால், இதுவரை அப்படி எதுவும் இல்லை." மொபைல் ஃபோன்களில் சொந்த இணைய வசதியும் உள்ளது. இந்தத் தர்க்கம் அவற்றுக்கும் பொருந்துமா? "மின்காந்த அலைகளோ அல்லது ரேடியோ அலைகளோ, எதுவாக இருந்தாலும் அதிகமாக அவற்றின் தாக்கத்திற்கு உள்ளாவது நல்லதல்ல என்று ஒரு உணர்வு உள்ளது. இப்போது நம்மிடம் சிறந்த தரவுகள் இருப்பதால் இப்போது இது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். எனக்கு தெரிந்தது மற்றும் புரிதலின்படி, பல நேரங்களில் அதைப் பார்த்து பயப்படும் அளவு இவற்றால் அவ்வளவு பாதிப்பு ஏற்படாது" என்று கூறினார் அலி. கதிர்வீச்சு, அலைகள் அல்லது மின்காந்த அலைகளால் உடலில் என்னென்ன மோசமான விளைவுகள் ஏற்படலாம் என்று நிபுணர்களிடம் கேட்கப்பட்டது "கோட்பாட்டு ரீதியாகப் பார்த்தால், இது நல்ல தூக்கத்திற்கு இடையூறாக இருக்கலாம். அப்படி நடந்தால், பகல் நேரத்தில் நமது செயல்திறன் பாதிக்கப்படும். கவனம் குறையும். மேலும், உடலில் கட்டிகள் உருவாகுவதற்கும், வளர்வதற்கும் கதிர்வீச்சுக்கும் தொடர்புள்ளது," என மருத்துவ திவ்ய ஜோதி தெரிவித்தார். வைஃபை உடன், மொபைல் ஃபோன்களிலிருந்து வரும் கதிர்வீச்சு குறித்தும் விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தியாவில் பல மொபைல் ஃபோன்கள் இப்போது 5G நெட்வொர்க்கில் இயங்குகின்றன. சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இது ஐரோப்பாவில் வந்தபோது, புதிய தொழில்நுட்பம் தொடர்பான உடல்நல அபாயங்கள் குறித்த கேள்விகள் எழுந்தன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz7r0ge2nn0o

ஜனாதிபதி முறைமையில் பாரிய மாற்றம்! அநுரவுக்கு பின்னர் எவருக்கும் இடமில்லை

2 months 1 week ago
அரசியலமைப்பு மாற்றத்தில் சர்வாதிகார ஜனாதிபதி முறைமை(நிறைவேற்று அதிகாரம் கொண்ட) ஒழிக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறும் புதிய முறைமை உருவாக்கப்படும் என பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க கூறியுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஐந்து வருடகால திட்டத்தில் குறித்த அரசியலமைப்பு மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் உரையாற்றிய அவர், தேர்தல் விஞ்ஞாபனம் "எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து விடயங்களையும் ஐந்து வருடங்களுக்குள் நிறைவேற்ற உள்ளோம். அதில் அரசியலமைப்பு மாற்றமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு மாற்றத்தில் சர்வாதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறும் புதிய முறைமை உருவாக்கப்படும். 2029ஆம் ஆண்டுக்கு முன் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும். ஜனாதிபதி அநுரவுக்கு பின்னர் ஜனாதிபதி யாரும் இருக்க மாட்டார்கள். நாங்கள் சமர்ப்பித்துள்ள சொத்து விபரங்கள் தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதற்கு முன்னர் இவ்வாறு நடந்துள்ளதா என நினைத்து பாருங்கள். இதை நேர்மறையாக நோக்குங்கள். ஒரு நாடு என்ற வகையில் சாதகமான விடயமாகும். நாங்கள் அரசியலுக்கு வரும் போது எவ்வளவு சொத்து இருந்தது. விட்டுச் செல்லும்போது எவ்வாறு என்று மக்கள் தெரிந்து கொள்ளலாம். இதற்கு முன்னர் இருந்த அரசியல்வாதிகள் வரும் போது இருந்த சொத்தின் மதிப்பும் பின்னரும் எவ்வாறு அதிகரித்தது என்பதில் எமக்கிடையில் ஒரு உரையாடல் மட்டுமே இருந்தது. நாங்கள் வெளிப்படை தன்மையுடன் செயற்படுகிறோம்” என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/225321

ஜனாதிபதி முறைமையில் பாரிய மாற்றம்! அநுரவுக்கு பின்னர் எவருக்கும் இடமில்லை

2 months 1 week ago

அரசியலமைப்பு மாற்றத்தில் சர்வாதிகார ஜனாதிபதி முறைமை(நிறைவேற்று அதிகாரம் கொண்ட) ஒழிக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறும் புதிய முறைமை உருவாக்கப்படும் என பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க கூறியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஐந்து வருடகால திட்டத்தில் குறித்த அரசியலமைப்பு மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் உரையாற்றிய அவர்,

தேர்தல் விஞ்ஞாபனம்

"எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து விடயங்களையும் ஐந்து வருடங்களுக்குள் நிறைவேற்ற உள்ளோம்.

ஜனாதிபதி முறைமையில் பாரிய மாற்றம்! அநுரவுக்கு பின்னர் எவருக்கும் இடமில்லை | Major Change In The Presidential System

அதில் அரசியலமைப்பு மாற்றமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு மாற்றத்தில் சர்வாதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறும் புதிய முறைமை உருவாக்கப்படும்.

2029ஆம் ஆண்டுக்கு முன் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும். ஜனாதிபதி அநுரவுக்கு பின்னர் ஜனாதிபதி யாரும் இருக்க மாட்டார்கள்.

நாங்கள் சமர்ப்பித்துள்ள சொத்து விபரங்கள் தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதற்கு முன்னர் இவ்வாறு நடந்துள்ளதா என நினைத்து பாருங்கள்.

இதை நேர்மறையாக நோக்குங்கள். ஒரு நாடு என்ற வகையில் சாதகமான விடயமாகும். நாங்கள் அரசியலுக்கு வரும் போது எவ்வளவு சொத்து இருந்தது. விட்டுச் செல்லும்போது எவ்வாறு என்று மக்கள் தெரிந்து கொள்ளலாம்.

இதற்கு முன்னர் இருந்த அரசியல்வாதிகள் வரும் போது இருந்த சொத்தின் மதிப்பும் பின்னரும் எவ்வாறு அதிகரித்தது என்பதில் எமக்கிடையில் ஒரு உரையாடல் மட்டுமே இருந்தது. நாங்கள் வெளிப்படை தன்மையுடன் செயற்படுகிறோம்” என குறிப்பிட்டுள்ளார். 

https://www.virakesari.lk/article/225321

ஐஸ் போதைப்பொருளுடன் தேரர்கள் இருவர் கைது!

2 months 1 week ago
17 Sep, 2025 | 03:53 PM கண்டி, கெலிஓயா, பிட்டவலவத்த பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் தேரர்கள் இருவர் கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் திங்கட்கிழமை (15) கைதுசெய்யப்பட்டுள்ளனர். கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தேரர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 25 வயதுடைய தேரர்கள் இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட தேரர்கள் இருவரும் கண்டி பிரதான நீதவான் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (16) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/225321

ஐஸ் போதைப்பொருளுடன் தேரர்கள் இருவர் கைது!

2 months 1 week ago

17 Sep, 2025 | 03:53 PM

image

கண்டி, கெலிஓயா, பிட்டவலவத்த பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் தேரர்கள் இருவர் கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் திங்கட்கிழமை (15) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தேரர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

25 வயதுடைய தேரர்கள் இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட தேரர்கள் இருவரும் கண்டி பிரதான நீதவான் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (16) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/225321

வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத மணல் அகழ்வு - நடவடிக்கை எடுக்காத பொலிஸார்!

2 months 1 week ago
17 Sep, 2025 | 06:14 PM யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு தாளையடியில் அமைந்துள்ள கடல் நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலைய வளாகத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, சட்டவிரோத மணல் அகழ்வினை மேற்கொண்டு வரும் கும்பலொன்று தினமும் பல டிப்பர்களில் மண்ணை செம்பியன் பற்று தாளையடி கடற்கரை வீதி வழியாக ஏற்றிச்சென்று விற்பனையில் ஈடுபடுகிறது. இது தொடர்பாக பல ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த மணல் அகழப்படும் பிரதேசத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மருதங்கேணி பொலிஸ் நிலையம் அமைந்துள்ளது. ஆனாலும் மணல் அகழ்வு விடயத்தில் இதுவரை எந்த சந்தேக நபரும் கைது செய்யப்படவில்லை. தொடர்ச்சியாக இடம்பெறும் மணல் அகழ்வால் வடமராட்சி கிழக்கின் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது மட்டுமன்றி, மக்கள் குடியிருக்க முடியாதளவுக்கு கடல் நீர் உட்புகக்கூடிய நிலைமையும் தோன்றியுள்ளது. https://www.virakesari.lk/article/225316

வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத மணல் அகழ்வு - நடவடிக்கை எடுக்காத பொலிஸார்!

2 months 1 week ago

17 Sep, 2025 | 06:14 PM

image

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு தாளையடியில் அமைந்துள்ள கடல் நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலைய வளாகத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

சட்டவிரோத மணல் அகழ்வினை மேற்கொண்டு வரும் கும்பலொன்று தினமும் பல டிப்பர்களில் மண்ணை செம்பியன் பற்று தாளையடி கடற்கரை வீதி வழியாக ஏற்றிச்சென்று விற்பனையில் ஈடுபடுகிறது.

இது தொடர்பாக பல ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த மணல் அகழப்படும் பிரதேசத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மருதங்கேணி பொலிஸ் நிலையம் அமைந்துள்ளது. ஆனாலும் மணல் அகழ்வு விடயத்தில் இதுவரை எந்த சந்தேக நபரும் கைது செய்யப்படவில்லை.

தொடர்ச்சியாக இடம்பெறும் மணல் அகழ்வால் வடமராட்சி கிழக்கின் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது மட்டுமன்றி, மக்கள் குடியிருக்க முடியாதளவுக்கு கடல் நீர் உட்புகக்கூடிய நிலைமையும் தோன்றியுள்ளது.

1000807226.jpg

1000807225.jpg

1000807223.jpg

1000807224.jpg

https://www.virakesari.lk/article/225316

ஒரு பயணமும் சில கதைகளும்

2 months 1 week ago
மிகவும் சரியாகச் சொன்னீர்கள், அண்ணா............ ஒரு முக்கால் வட்ட வடிவில் எல்லா முனையங்களும் அடுத்தடுத்து அமைந்துள்ளதால் இந்தச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்பொழுது வட்டத்தின் குறுக்கே சில புதிய பாதைகள் வந்துள்ளன.ஆனாலும் முதலாவது அல்லது இரண்டாவது முனையங்களின் வெளியே கூட்டம் அதிகமானால், இரத்த அழுத்தம் எகிறுவது உறுதி................🤣. அடுத்த வருடம் இங்கு நடக்கவிருக்கும் உலக கோப்பை கால்ப்பந்தாட்டப் போட்டிகள் மற்றும் 2028ம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை முன்னிட்டு இந்த விமான நிலையத்தில் சில வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. People Mover என்னும் மேம்பாலம் ஒன்றை அமைத்துள்ளார்கள். இது எல்லா முனையங்களுக்கும் செல்கின்றது. இதற்கான ஏறும் தரிப்பு விமான நிலையத்தில் இருந்து வெளியே உள்ளது. அங்கே போய், அந்த மேம்பாலத்தில் செல்லும் வாகனங்களில் ஏற வேண்டும். எட்டுப் பெட்டிகள் கொண்டு செல்பவர்கள் திண்டாடப் போகின்றார்கள்........

ஜெர்மனி ICU வில்.

2 months 1 week ago
ஜப்பான் அமெரிக்காவின் நவீன காலனி. ஜப்பான் அதன் யாப்பை கூட மாற்ற முடியாது அமெரிக்காவின் அனாமதேய அனுமதி இன்றி. ஜப்பான், யாப்பின் படி, ஒரு அரசின் மிகவும் முக்கிய இறைமை அம்சமான யுத்தத்தை பிரகடனப்படுத்த அல்லது பாவிக்க முடியாது, யாப்பின் 9 வது சரத்தின் படி அதை நடைமுறைப்படுத்துவது, ஜப்பான் இடம் தாக்குதல் திறன், வசதிகள் இல்லை. ஜப்பான் தாக்கப்பட்டால், பாதுகாக்கும் வசதிகளே இருக்கிறது. அதனால் தான் ஜப்பானின் படை self defence force எனப்படுவது. இதையும் கொண்டு தான் ஜப்பானின் பொருளாதார வளச்சியை அமெரிக்கா 80 களில் முடக்கியயது பிளாசா ஒப்பந்ததை ஜப்பானை வலொற்காரமாக ஏற்கவைத்து. அதை போலே, இப்பொது சீனாவுக்கு செய்ய முயற்சிக்கிறது, அனல் சீனா ஜப்பான் அல்ல, (அதனால், இப்போது சீனாவுடன் யுத்தத்தை தூண்ட அமெரிக்கா முயற்சிக்கிறது இஸ்ரேல் ஐ கொண்டு.) அனால் இது அமெரிக்காவின் / மேற்றுகின் பரம்பரியங்களில் ஒன்று. இதையும் அடிப்படையாக கொண்டு தான் ஜப்பானின் பொருளாதார வளச்சியை அமெரிக்கா 80 களில் முடக்கியயது பிளாசா ஒப்பந்ததை ஜப்பானை வலொற்றுகாரமாக ஏற்கவைத்து. அதை போலே, இப்பொது சீனாவுக்கு செய்ய முயற்றசிக்கிறது, அனல் சீனா ஜப்பான் அல்ல, அதனால், இப்போது சீனாவுடன் யுத்தத்தை தூண்ட அமெரிக்கா முயற்சிக்கிறது இஸ்ரேல் ஐ கொண்டு. அனால் இது அமெரிக்காவின் / மேற்றுகின் பரம்பரியங்களில் ஒன்று எனது நினைக்கு வரும் சிறிய உதாரணம் GPS. GPS இல் சீன ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து பாங்கெடுத்ததை தடுத்தது அமெரிக்கா. இது சசுருக்கமாக . சீன அதன் பங்குக பணத்தை ஐரோப்பிய நாடுகள் இப்போதும் சீனாவிடம் திருப்பி கொடுக்கவில்லை. பின் சீன, தன பைடு செய்மதி வழிகாட்டி திட்டத்தை விருத்தி செய்ய தொடகங்கியது, அப்போது அமெரிக்கா அது தாக்கி அழிக்கப்படும் என எச்சரித்தது. அதனால் , சீன முதலில் (2007) புவியில் இருந்து செய்மதியை சுட்டு விழுத்தும் ஏவுகணையை செய்து, பகிரங்கமாக அதன் செயல் இழந்த செய்மதியை சுட்டு விழுத்தி, அமெரிக்காவை எச்சரித்த பின்பே, பைடு செய்மதி வழிகாட்டி திட்டத்தை விருத்தி செய்ய ஆரம்பித்தது.

ஒரு பயணமும் சில கதைகளும்

2 months 1 week ago
🤣............ இலங்கை தமிழர்களை அடிப்பதற்கு நான் என்ன இங்கிலாந்தில் பிறந்த தமிழனா, அல்வாயன்...........🤣. சிட்னியின் அந்தப் பகுதிகளில் இருக்கும் புதிய மாடிக் குடியிருப்புகளை பார்த்தவுடன் எனக்கு என்ன தோன்றியதோ அதையே தான் அப்படியே பதிந்துள்ளேன். சிட்னியின் புறநகர்ப் பகுதிகளில் இருக்கும் பழைய வீடுகள் ஊரில் இருக்கும் எங்களின் வீடுகள் போன்றவை. பெரிய ஒரு வளவுக்குள் நடுவில் சிறியதாக ஒரு வீடு இருக்கும். பெரும்பாலும் ஒரு தள வீடுகளே. முன்னரே நம்மவர்கள் அவற்றை இடித்து பெரிய விசாலமான வீடுகளை கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். இப்பொழுது நம்மவர்களின் மிகப் பெரிய வீடுகளுடன், மாடிக் குடியிருப்புகளும் வரிசையாக நிற்கின்றன. சிறிய ஊர்கள் நகரகங்கள் ஆக உருமாறிக் கொண்டிருக்கின்றன. ஆஸ்திரேலியாவில் குடியேறிக் கொண்டிருக்கும் இந்தியர்களுக்கும், அமெரிக்காவில் குடியேறிய, குடியேறும் இந்தியர்களுக்கும் இடையே சில வேறுபாடுகள் உள்ளன போன்று தெரிகின்றது. அங்கே நம்மவர்களில் சிலருக்கு அவர்கள் மேல் உண்டாகியிருக்கும் ஒவ்வாமைக்கு அதுவும் ஒரு பிரதான காரணம். பல வருடங்களின் முன் கனடாவில் அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில் ஒரு அனுபவம் ஏற்பட்டது. அதை நான் எங்கும் பதியவில்லை, அப்பொழுது நான் எழுதுவதில்லை........... ஒரு வரலாற்று ஆவணம் பதியப்படாமல் போய்விட்டது.............🤣.

காட்டாட்சி நிலவிய காலப்பகுதி முடிந்துவிட்டது- இனி சட்டத்தின் ஆட்சி தான்- அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

2 months 1 week ago
ஒரு கிலோமீற்றர் தூரத்தில் பொலிஸ்நிலையம் இருக்கும் போது பாரிய டிப்பர்கள் மூலம் கள்ளமண் அள்ளிக் கொண்டு போகிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு பெரிய மாபியாவாக இருக்கிறார்கள். இலங்கைக்கு வெளியே பாதாள உலகைத் தேடும்போது உள்ளூரில் இருக்கும் பாதாள உலக கோஸ்டியையும் அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு கண்களை இறுக மூடிக் கொண்டிருக்கும் காவல்துறையையும் இதுவரை அரசு கண்டு கொள்ளவே இல்லை என்பதும் சந்தேகத்திற்கு இடமாக உள்ளது.