Aggregator

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months 2 weeks ago
ஜெயசூரியா அடிக்காத அடியா. சார்ஜாவில நடந்த இறுதிப்போட்டியில 189 அடிச்சார். ரசல் ஆர்னல்டும் அவரும் சேர்ந்து வெளுத்த வெளு இப்பவும் கண்ணுக்க நிக்குது. அதுவும் வெங்கடேஸ் பிரசாத் என்டா, சனத்துக்கு அல்வா சாப்பிடுறமாதிரி. இந்தியா அடிச்சது வெறும் 54. இதுதான் அந்தப் போட்டி https://www.espncricinfo.com/series/coca-cola-champions-trophy-2000-01-61074/india-vs-sri-lanka-final-65900/full-scorecard

இந்தியர்கள், இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா

2 months 2 weeks ago
ரஷ்யா, சீனா, மூன்றாம் உலக நாடுகள் அனைத்தும் தமக்கென புதிய பாதையை அமைக்க தொடங்கி விட்டார்கள். இதனால் அமெரிக்காவிற்கு பெரிய வேலை இருக்காது என நினைக்கின்றேன்.இதில் தென் அமெரிக்காவும் கூட்டு சேர இன்னும் சிறப்பு.😃 சொந்த செலவில் தனக்கு தானே சூனியம் வைக்கும் அமெரிக்கா.😎

இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.

2 months 2 weeks ago
அவர் மீது உங்களுக்கு அப்படி என்ன தனிப்பட்ட கோபம்? மக்களால் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பப்பட்ட ஒரு அரசியல்வாதியின் காலம் மூன்றோ நான்கு வருடங்கள் மட்டுமே.அதன் பின் அவரை நிகாரிப்பதோ அல்லது மீண்டும் பாராளுமன்றம் அனுப்புவதோ வாக்காளர்களின் கடமை. இதுவரை காலமும் தமிழ் அரசியல்வாதிகள் ஜெனிவாவில் சாதித்தது என்னவென்று உங்களால் சொல்ல முடியுமா? அதேபோல் இவர் முதல் தடவையாக வந்திருக்கின்றார். என்ன செய்யப்போகின்றார் என பார்க்கலாம். அதன் கருத்து மழை பொழியலாம்.😎 ஒரு பழமொழி ஒன்று இருக்கின்றது.அதை உங்கள் மேல் இருக்கும் மரியாதையால் இங்கு எழுதவில்லை.

ரஷ்யாவின் கலப்பினப் போரை (Hybrid war) எதிர்கொள்வதற்கான இராணுவ விருப்பங்களை நேட்டோ விவாதிக்கிறது - FT

2 months 2 weeks ago
வெளிப்படையாக இன்னுமொரு உலக யுத்தம் வருமாயின்...... புல் பூண்டு முளைக்காத ஹிரோஷிமா-நாகஷாகி போல் ஜேர்மனியும் வரும்.இரண்டாம் உலக யுத்த அழிவுகளின் பின் மூன்று இலை முளைத்து தளிர் விட முதல் உக்ரேன் சம்பந்தமாக போர்க்குண அரசியல் செய்கின்றார்கள்.😂

இந்தியர்கள், இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா

2 months 2 weeks ago
50-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது. அமெரிக்க நிதித்துறை, ஈரானிய எரிசக்தி ஏற்றுமதியை ஊக்குவித்த 50-க்கும் மேற்பட்ட தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் கப்பல்களுக்கு தடைகளை விதித்துள்ளது. இதில் இந்தியரான வருண் புலா, சோனியா ஷ்ரேஸ்தா மற்றும் ஐயப்பன் ராஜா ஆகியோர் அடங்குவர். இவர்கள் ஈரானிய எண்ணெய் மற்றும் LPG ஏற்றுமதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வருண் புலா, மார்ஷல் தீவுகளில் பதிவு செய்யப்பட Bertha Shipping Inc. நிறுவனத்தை நடத்துகிறார். இந்த நிறுவனம் PAMIR என்ற கப்பலை இயக்குகிறது,இது 2024 ஜூலை முதல் சீனாவுக்கு 4 மில்லியன் பீப்பாய்கள் ஈரானிய LPG ஏற்றுமதி செய்துள்ளது. ஐயப்பன் ராஜா Evie Lines Inc. என்ற நிறுவனத்தை நடத்துகிறார். SAPPHIRE GAS எனும் கப்பலை இயக்கும் இந்நிறுவனம், 2025 ஏப்ரல் முதல் சீனாவிற்கு 1 மில்லியன் பீப்பாய்கள் LPG ஏற்றுமதி செய்துள்ளது. சோனியா ஷ்ரேஸ்தா இந்தியாவிலுள்ள Vega Star Ship Management Pvt Ltd. நிறுவனத்தை நடத்துகிறார். NEPTA என்ற கப்பலை இயக்கும் இந்நிறுவனம், 2025 ஜனவரி முதல் பாகிஸ்தானுக்கு ஈரானிய LPG ஏற்றுமதி செய்துள்ளது. இந்த தடைகள் அமெரிக்காவில் உள்ள அல்லது அமெரிக்க நபர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நபர்களின் சொத்துக்கள் மற்றும் சொத்துக்களின் உரிமைகளை முடக்குகின்றன. மேலும், 50 சதவீதம் அல்லது அதற்கு மேல் பங்குகளை கொண்ட நிறுவனங்களும் தடைக்குள்ளாகின்றன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, உலகளாவிய பாதுகாப்பு மற்றும் அரசியல் நிலைமைகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. Lankasri Newsஇந்தியர்கள், இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதி...50-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது.அமெரிக்க நிதி...

இந்தியர்கள், இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா

2 months 2 weeks ago

50-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது.

அமெரிக்க நிதித்துறை, ஈரானிய எரிசக்தி ஏற்றுமதியை ஊக்குவித்த 50-க்கும் மேற்பட்ட தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் கப்பல்களுக்கு தடைகளை விதித்துள்ளது.

இதில் இந்தியரான வருண் புலா, சோனியா ஷ்ரேஸ்தா மற்றும் ஐயப்பன் ராஜா ஆகியோர் அடங்குவர்.

இவர்கள் ஈரானிய எண்ணெய் மற்றும் LPG ஏற்றுமதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

US sanctions India, Indian nationals Iran oil trade, Iran energy exports, US sanctions, Iranian LPG shipments

வருண் புலா, மார்ஷல் தீவுகளில் பதிவு செய்யப்பட Bertha Shipping Inc. நிறுவனத்தை நடத்துகிறார்.

இந்த நிறுவனம் PAMIR என்ற கப்பலை இயக்குகிறது,இது 2024 ஜூலை முதல் சீனாவுக்கு 4 மில்லியன் பீப்பாய்கள் ஈரானிய LPG ஏற்றுமதி செய்துள்ளது.

ஐயப்பன் ராஜா Evie Lines Inc. என்ற நிறுவனத்தை நடத்துகிறார். SAPPHIRE GAS எனும் கப்பலை இயக்கும் இந்நிறுவனம், 2025 ஏப்ரல் முதல் சீனாவிற்கு 1 மில்லியன் பீப்பாய்கள் LPG ஏற்றுமதி செய்துள்ளது.

சோனியா ஷ்ரேஸ்தா இந்தியாவிலுள்ள Vega Star Ship Management Pvt Ltd. நிறுவனத்தை நடத்துகிறார். NEPTA என்ற கப்பலை இயக்கும் இந்நிறுவனம், 2025 ஜனவரி முதல் பாகிஸ்தானுக்கு ஈரானிய LPG ஏற்றுமதி செய்துள்ளது.

இந்த தடைகள் அமெரிக்காவில் உள்ள அல்லது அமெரிக்க நபர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நபர்களின் சொத்துக்கள் மற்றும் சொத்துக்களின் உரிமைகளை முடக்குகின்றன.

மேலும், 50 சதவீதம் அல்லது அதற்கு மேல் பங்குகளை கொண்ட நிறுவனங்களும் தடைக்குள்ளாகின்றன.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, உலகளாவிய பாதுகாப்பு மற்றும் அரசியல் நிலைமைகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.  

Lankasri News
No image previewஇந்தியர்கள், இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதி...
50-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது.அமெரிக்க நிதி...

17 போர் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள்: 24 மணிநேரமும் மீனுக்கு இராணுவ பாதுகாப்பு- ஏன்?

2 months 2 weeks ago
வங்காளதேச அரசு, ஹில்சா மீனின் இனப்பெருக்க காலத்தில் அதனை பாதுகாக்க கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஹில்சா வங்காளதேசதத்தின் தேசிய மீன் என்பதால், இம்முறை 17 போர்க்கப்பல்கள், ட்ரோன்கள், ரோந்து படகுகள், ஹெலிகாப்டர்கள் கண்காணிப்பு பயணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 22 நாட்கள் கொண்ட இந்த தடைக்காலம், அக்டோபர் 4 முதல் 25 வரை கடைபிடிக்கப்படுகிறது. வங்காள விரிகுடா மற்றும் பத்மா, மேக்னா மற்றும் ஜமுனா போன்ற முக்கிய நதி அமைப்புகள் உட்பட நியமிக்கப்பட்ட இனப்பெருக்க மண்டலங்களில் உள்ள அனைத்து கடல் மீன்பிடி நடவடிக்கைகளுக்கும் இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறை ஹில்சா மேலாண்மை பிரிவின் துணை இயக்குநர் ஃபிரோஸ் அஹமது, "ஹில்சா மீனின் பாதுகாப்புக்காக நாங்கள் விரிவான கண்காணிப்புகளை மேற்கொண்டு வருகிறோம். இது அதன் இனப்பெருக்கத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கை" என கூறியுள்ளார். வங்காளதேசதத்தின் தெற்கு பகுதியில் உள்ள பரிசால் மற்றும் சட்டோகிராம் மாவட்டங்களில் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில், கடற்படை, கடலோர காவல் படை மற்றும் விமானப்படை உள்ளிட்ட 4 சிறப்பு படைகள் ஈடுபட்டுள்ளன. கடந்த சில நாட்களில், தடை காலத்தில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத மீன்பிடி வலைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வங்காளதேசம் உலகின் மிகப்பெரிய ஹில்சா உற்பத்தி நாடக இருந்தாலும், உள்ளூர் தேவை அதிகமாக இருப்பதால் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், துராக் பூஜை காலத்தில் இந்தியாவுக்கு சிறப்பு அனுமதியுடன் ஹில்சா மீன் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2025-ஆம் ஆண்டில் 1,200 டன் ஹில்சா மீனை இந்தியாவிற்கு அனுப்ப அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் ஏற்றுமதி குறைவாகவே இருந்தது. Lankasri News17 போர் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள்: 24 மணிநேரமும் மீனுக்கு...வங்காளதேச அரசு, ஹில்சா மீனின் இனப்பெருக்க காலத்தில் அதனை பாதுகாக்க கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.ஹில்சா வங்காளதேசத...

17 போர் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள்: 24 மணிநேரமும் மீனுக்கு இராணுவ பாதுகாப்பு- ஏன்?

2 months 2 weeks ago

வங்காளதேச அரசு, ஹில்சா மீனின் இனப்பெருக்க காலத்தில் அதனை பாதுகாக்க கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஹில்சா வங்காளதேசதத்தின் தேசிய மீன் என்பதால், இம்முறை 17 போர்க்கப்பல்கள், ட்ரோன்கள், ரோந்து படகுகள், ஹெலிகாப்டர்கள் கண்காணிப்பு பயணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

22 நாட்கள் கொண்ட இந்த தடைக்காலம், அக்டோபர் 4 முதல் 25 வரை கடைபிடிக்கப்படுகிறது.

வங்காள விரிகுடா மற்றும் பத்மா, மேக்னா மற்றும் ஜமுனா போன்ற முக்கிய நதி அமைப்புகள் உட்பட நியமிக்கப்பட்ட இனப்பெருக்க மண்டலங்களில் உள்ள அனைத்து கடல் மீன்பிடி நடவடிக்கைகளுக்கும் இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Bangladesh Hilsa fish protection, Hilsa breeding season, Bangladesh Navy warships Hilsa, Hilsa fish conservation, Hilsa fishing ban, Hilsa surveillance drones, Mother Hilsa campaign Bangladesh

மீன்வளத்துறை ஹில்சா மேலாண்மை பிரிவின் துணை இயக்குநர் ஃபிரோஸ் அஹமது, "ஹில்சா மீனின் பாதுகாப்புக்காக நாங்கள் விரிவான கண்காணிப்புகளை மேற்கொண்டு வருகிறோம். இது அதன் இனப்பெருக்கத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கை" என கூறியுள்ளார்.

வங்காளதேசதத்தின் தெற்கு பகுதியில் உள்ள பரிசால் மற்றும் சட்டோகிராம் மாவட்டங்களில் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையில், கடற்படை, கடலோர காவல் படை மற்றும் விமானப்படை உள்ளிட்ட 4 சிறப்பு படைகள் ஈடுபட்டுள்ளன.

கடந்த சில நாட்களில், தடை காலத்தில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத மீன்பிடி வலைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வங்காளதேசம் உலகின் மிகப்பெரிய ஹில்சா உற்பத்தி நாடக இருந்தாலும், உள்ளூர் தேவை அதிகமாக இருப்பதால் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் உள்ளன.

ஆனால், துராக் பூஜை காலத்தில் இந்தியாவுக்கு சிறப்பு அனுமதியுடன் ஹில்சா மீன் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

2025-ஆம் ஆண்டில் 1,200 டன் ஹில்சா மீனை இந்தியாவிற்கு அனுப்ப அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் ஏற்றுமதி குறைவாகவே இருந்தது.

Lankasri News
No image preview17 போர் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள்: 24 மணிநேரமும் மீனுக்கு...
வங்காளதேச அரசு, ஹில்சா மீனின் இனப்பெருக்க காலத்தில் அதனை பாதுகாக்க கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.ஹில்சா வங்காளதேசத...

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

2 months 2 weeks ago
சேகுவாராவின் கொடியையும் தூக்கி அவர் கொள்கையையையும் கடைப்பிடித்து இனக்கொலை செய்தவர்களையும் இனத்திற்கு எதிராக நிற்பவர்களையும் கண்டு கொள்ளாமல் கடல் கடந்து உங்களுக்கு பிடிக்காதவர்களிடம் புனித்தை தேடுகின்றீர்கள்?! அதே போல் கம்யூனிசத்தை கடைப்பிடிப்பவர்கள் கூட இன வெறியை வாந்தி வாந்தியாக எடுக்கின்றார்கள். அங்கே உங்கள் புனிதம் தேடும் மூளை வேலை செய்யவில்லை.சிங்கள பாதிரியார்கள் உட்பட..... சீமான் செய்த தவறை(என் பார்வையில் தவறு அல்ல) விட பலம் வாய்ந்த கட்சிகாரர்களும் பணபலம் மிக்கவர்களும் இன்றும் செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள். அங்கே எல்லாம் புனிதர்களை தேடவும் மாட்டார்கள்.சித்திரங்களும் வரைய மாட்டார்கள். காரணம் பணபலம் மக்கள் பலம் அதிகார பலம் வாய்ந்தவர்கள். போட்டு தள்ளிவிடுவார்கள் என்ற பயம். கொள்கை பலம் அறவே இல்லாத அரசியல் கூட்டங்கள்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months 2 weeks ago
பெண்கள் அணிகளைப் பற்றி பெரிதாக இங்கு ஒருவருக்கும் தெரிவதில்லை தானே. அதனால் நமக்குத் தெரிந்ததை, சிலவற்றை அங்கு இங்கு பொறுக்கி, சொல்லுவோம் என்று ஒரு முனைப்பு தான். இலங்கை ஆண்கள் அணி உண்மைதான், கடந்த ஒரு பத்து வருடமாக இலங்கை அணி அவ்வளவு வலிதானதாக இல்லை. அத்தோடு இந்திய அணி இன்னும் வலுப் பெற்றுக் கொண்டே இருக்கின்றது. 90களிலும் 2000 ஆண்டுகளிலும், இலங்கை அணி ஒரு நெருப்பு. ஒரு நாள் போட்டிகளில் வெளுத்து வாங்குவார்கள். பல ஒரு நாள் தொடர்கள், முக்கோணத் தொடர்கள், மற்றும் பலவாறான தொடர்கள் எல்லாவற்றிலும் இலங்கை அணி ஜொலித்திருக்கிறது. முக்கியமாக பல இறுதி போட்டிகளில் இலங்கை அணி இந்தியாவை ஓட விட்டிருக்கிறது. சரியாக ஞாபகமில்லை, நான் நினைக்கிறேன், ஒரு 15-16 இறுதிப் போட்டிகளில், இலங்கை அணி இந்தியாவை அடித்துத் துவைத்திருக்கிறது. இப்போ எல்லாம் மாறி நடக்கின்றது. இந்திய அணி எப்படி இவ்வளவு வலிவானதாக இருக்கிறதோ, அதேபோல் இலங்கை அணியும் அப்போ இருந்தது. அது ஒரு பொற்காலம்.

'போலீஸ் விசாரணையில் கொன்றுவிட்டனர்' - மதுரை பட்டியல் சாதி இளைஞர் மரணத்தில் என்ன நடந்தது?

2 months 2 weeks ago
அஜித்குமார் மரணத்தில் யாழ்களம் உட்பட கொதித்த கொதிப்பு இங்கே ஏன் இல்லை? அதில் சம்பந்தபட்ட பெண் திமுக அரசின் உயர் அதிகாரி அல்லது அரசியல்வாதி தயவில் அதை செய்தார் என சந்தேகிக்கபடுவதால் அதை வைத்து தத்தம் கட்சிகளுக்கு அரசியல் ஆதாயம் தேடலாம். இவர் பட்டியலின இளைஞர்.

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

2 months 2 weeks ago
🤣 சீச்சீ அப்படி உங்களை சொல்வேனா. நீங்கள் வாத்தியார்….துரோணர் நியாயம் முழுவதும் விளங்கினாலும்…கெளரவ சேனையில் நிற்பது உங்கள் கடன் என நினைக்கிறீர்கள்🤣. நான் நிச்சயமாக அர்ஜுனன் இல்லை. யுத்தகளத்தில் நிண்டு ஓவர்திங்கிங் செய்வதில்லை நான் 🤣. கும்பகர்ணன் போல் துன்னுவான், தூங்குவான், எழும்பினா துலைச்சுபோடுவான் கரெக்டர் ஏதும் மஹாபாரதத்தில் உள்ளதா? அப்படி எண்டால் அதுதான்🤣. இல்லாவிடில் - சீமானியர் கேட்காமலே கொடுப்பதால் கர்ணன் 🤣.

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

2 months 2 weeks ago
கிருஷ்ணருக்கு இன்னொரு பெயர் ஜஸ்டின் என்று இப்ப தான் கேள்விப்படுகின்றேன். எங்களைக் கம்சர்கள் என்று விழிக்காதவரை ஓகே😂 நீங்கள் அர்ஜுனன் இல்லைத்தானே 🤣

"நா.த.க., த.வெ.க கட்சிகளுக்கு இளைஞர்கள் அதிகளவில் திரளும் காரணம் இதுதான்!" - பேரா. அருணன் நேர்காணல்

2 months 2 weeks ago
எதிர்க்கலாம் அருணன்…. பாலியல் குற்ற வழக்கில் டெல்லி உச்ச நீதிமன்று மூலம் தப்பிக்க நீங்கள் உதவ வேண்டும்… ரெடியா🤣

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

2 months 2 weeks ago
இல்லையே உங்கள் கருத்துப்படி மூலைக்குள் மாட்டுப்பப்பட்டவர் சீமான் & காம்ப்ஸ்.. வழக்கு இரண்டும் பாலியல் ரீதியான வழக்கு.. இரண்டிலும் மிரட்டல் உள்ளது ( சீமான் மிரட்டியதாகவும் கதைகள் உள்ளன )... இரண்டு வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மனுதாரர்களை பாலியல் தொழிலாளிகள் என பரப்புரை செய்கின்றார்கள்... ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் காம்ப்ஸ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்திருக்கின்ரார் சீமான் அப்படி இல்லை காரணம் வழக்கின் தன்மை தான் அதைவைத்தே நானும் அப்படிக் கருத்தை எழுதினேன் ஆரம்பத்தில் உங்கள் உதாரணம் என்னைப் போன்றவர்களுக்கு அப்படித்தான் விளங்கியிருக்கும்

"நா.த.க., த.வெ.க கட்சிகளுக்கு இளைஞர்கள் அதிகளவில் திரளும் காரணம் இதுதான்!" - பேரா. அருணன் நேர்காணல்

2 months 2 weeks ago
மண்ணாகட்டி….. அப்படி அண்ணன் ஏற்று கொள்ளவில்லை. நன்றாக நினைவுள்ளது எனக்கு… சவாலில் தோற்ற பின் அவர்கள் பல கட்சிகளின் கூட்டு, நா தனியே, எனவே நாந்தான் உசத்தி என ஆமை ஓட்டை அப்படியே திருப்பி போட்டார்🤣. தம்பிகளும் திருவெம்பாவை காலத்தில் காலை எழுந்து நகரசங்கீர்தனம் போகும் பக்தர்கள் போல் சிங்கி சா போட்டார்கள். சீமான் பேரா வை “லூசாய்யா நீயீ” என ஒருமையில் கேட்க, பேரா “நீதான்யா லூசு” என பதில் சொல்ல…இருவரின் மேடை நாகரீகத்தையும் பார்த்து நாமெல்லாம் புல்லரிக்க…. அதெல்லாம் ஒரு காலம் 🤣.

இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.

2 months 2 weeks ago
சற்று முன்னர் ஜேர்மனிய நாளிதலில் கொட்டை எழுத்துக்களில் வந்த செய்தி..😂 Norwegen zittert vor Trump Drohen neue Zölle? Der norwegische Journalist Harald Stanghelle (69) vermutet, dass die Vergeltung von Trump in verschiedenen Formen kommen könnte: als Zölle, als Forderung nach höheren Nato-Beiträgen oder sogar Norwegen zu einem feindlichen Land zu erklären. Vom „Guardian“ wird er zitiert: „Er ist so unberechenbar. Ich will das Wort Angst nicht verwenden, aber es könnte eine herausfordernde Situation werden. Es ist sehr schwierig, Donald Trump zu erklären, dass es sich um ein völlig unabhängiges Komitee handelt.“ டிரம்ப் முன் நார்வே நடுங்குகிறது😂 புதிய வரிகள் விரைவில் வரவிருக்கிறதா?😂 டிரம்பின் பழிவாங்கல் பல்வேறு வடிவங்களில் வரக்கூடும் என்று நோர்வே பத்திரிகையாளர் ஹரால்ட் ஸ்டாங்கல் (69) சந்தேகிக்கிறார்: வரிகள், அதிக நேட்டோ பங்களிப்புகளுக்கான கோரிக்கைகள் அல்லது நோர்வேயை எதிரி நாடாக அறிவிப்பது கூட. அவர் கூறியதாக கார்டியன் மேற்கோள் காட்டியது: "அவர் மிகவும் கணிக்க முடியாதவர். நான் பயம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த விரும்பவில்லை, ஆனால் அது ஒரு சவாலான சூழ்நிலையாக இருக்கலாம். இது முற்றிலும் சுதந்திரமான குழு என்பதை டொனால்ட் டிரம்பிற்கு விளக்குவது மிகவும் கடினம்." செய்தியின் மூலத்தளம்

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months 2 weeks ago
செம்பாட்டான் இன்று ஒரு தகவல் மாதிரி எப்போதும் ஒரு தகவல் கூறுகிறீர்கள், நீங்கள் கூறுவதனை பார்த்தால் இலங்கை ஆண்கள் அணியினை விட பெண்கள் அணி சிறப்பாக ஆடுகின்றனர், சில வேளைகளில் நினைப்பதுண்டு ஏன் இலங்கை அணி விளையாடுகிறது என, போட்டியின் சுவாரசியத்தினை கெடுத்துவிடுவதுடன் என்னதான் வெளிநாட்டில் இருந்தாலும் மற்றவர்கள் எம்மை இலங்கையராகவே பார்க்கிறார்கள். எவ்வளவுதான் இலங்கையினை விட்டு தூரமாக சென்றாலும் இலங்கை எம்மை விடாது துரத்துகிறது🤣.