Aggregator

ஒரு விமான தளத்துக்காக தாலிபன்களை எச்சரித்த டிரம்ப்; தலையிட்டு பதில் கொடுக்கும் சீனா

2 months 1 week ago
பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, பக்ராம் விமானத் தளத்தை அமெரிக்கப் படைகள் 20 ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்தன. 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஆப்கானிஸ்தானின் பக்ராம் விமானத் தளத்தைப் பற்றிப் பேசினார். அமெரிக்கா அதை மீண்டும் கைப்பற்ற விரும்புவதாக அவர் கூறினார். மேலும், அவ்வாறு நடக்கவில்லை என்றால், அதன் விளைவுகளைத் தாலிபன் அரசு சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார். டிரம்ப் ட்ரூத் சோஷியலில் வெளியிட்ட ஒரு பதிவில், "ஆப்கானிஸ்தான் பக்ராம் விமானத் தளத்தை அதை உருவாக்கியவர்களான அமெரிக்காவுக்குத் திருப்பித் தராவிட்டால், அது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்!!!" என்று எழுதினார். இருப்பினும், சில நாட்களுக்கு முன்பு பிரிட்டன் பயணத்தின்போது டிரம்ப் இதேபோன்ற கருத்தை வெளியிட்டபோது, தாலிபன் அரசு கடுமையாக எதிர்வினையாற்றியது. தாலிபன் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரி ஜாகிர் ஜலாலி, சமூக ஊடகங்களில் பதிவிட்டு, "ஆப்கானியர்கள் வரலாற்றில் ஒருபோதும் வெளிநாட்டு ராணுவ இருப்பை ஏற்றுக்கொண்டதில்லை. தோஹா பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தத்தின் போது இந்த சாத்தியக்கூறு முழுமையாக நிராகரிக்கப்பட்டது, ஆனால் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தே உள்ளன" என்று கூறினார். 2021-ல் ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அமெரிக்காவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே எந்த தூதரக உறவுகளும் இல்லை. டிரம்ப் சமீபத்தில் தனது பிரிட்டன் பயணத்தின்போது பக்ராம் தொடர்பான இந்த கருத்தை வெளியிட்ட பின் இது மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர், "பக்ராம் உலகின் மிகப்பெரிய விமானத் தளங்களில் ஒன்றாகும், அதை நாங்கள் திருப்பிக் கொடுத்துவிட்டோம். சீனா தனது அணு ஆயுதங்களை உருவாக்கும் இடத்திலிருந்து அது ஒரு மணிநேர தூரத்தில் உள்ளது என்பதால் இப்போது அந்தத் தளத்தை மீண்டும் பெற விரும்புகிறோம்," என்று கூறியிருந்தார். இந்த ராணுவத் தளத்தைப் பற்றி அவர் பேசும் ஒவ்வொரு முறையும், சீனாவைப் பற்றியும் குறிப்பிடுகிறார். இந்த ஆண்டு மார்ச் மற்றும் மே மாதங்களிலும் அவர் இதைப் பற்றிப் பேசியுள்ளார். பக்ராம் விமானத் தளத்தைச் சீனா ஆக்கிரமித்திருப்பதாகவும் அவர் பேசினார். இந்த விமானத் தளம் பல காரணங்களுக்காகச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. தாலிபனுக்கு எதிரான போரில் இது 20 ஆண்டுகளாக அமெரிக்கா தலைமையிலான படைகளின் மையமாக இருந்தது. அமெரிக்க ராணுவம் விமானத் தளத்தை விட்டு வெளியேறியபோது, பெரிய அளவிலான ராணுவ உபகரணங்கள், ராணுவ வாகனங்கள் மற்றும் வெடிபொருட்கள் அங்கேயே விடப்பட்டிருந்தன. பக்ராம் விமானத் தளத்தை யார் கட்டியது? பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, சோவியத் ஒன்றியம் ஒன்பது ஆண்டுகள் ஆப்கானிஸ்தானில் போரில் ஈடுபட்டது, 1988 இல் தனது படைகளைத் திரும்பப் பெற்றது பக்ராம் விமானத் தளம் காபூலுக்கு வடக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் பர்வான் மாகாணத்தில் அமைந்துள்ளது. இது முதன்முதலில் 1950-களில் சோவியத் ஒன்றியத்தால் கட்டப்பட்டது. 1980-களில் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தபோது அது அவர்களின் முக்கிய ராணுவத் தளமாக மாறியது. 2001-ல் அமெரிக்கா தாலிபனை ஆட்சியில் இருந்து அகற்றியபோது, அது இந்தத் தளத்தைக் கட்டுப்பாட்டில் எடுத்தது. அப்போது பக்ராம் இடிபாடுகளாக மாறியிருந்தது. ஆனால் சுமார் 30 சதுர மைல்கள் (77 சதுர கிலோமீட்டர்) பரப்பளவில் விரிவடைந்துள்ள அந்த தளத்தை அமெரிக்க ராணுவம் மீண்டும் கட்டியது. கான்கிரீட் மற்றும் எஃகால் ஆன பக்ராம் தளம், அமெரிக்காவின் மிகப்பெரிய மற்றும் உலகின் வலிமையான விமானத் தளங்களில் ஒன்றாக இருந்தது. இது பல கிலோமீட்டர் நீளமுள்ள வலுவான சுவர்களால் சூழப்பட்டிருந்தது. அதன் சுற்றுப்புறப் பகுதி பாதுகாப்பாக இருந்தது. எந்த வெளியாட்களும் அதற்குள் நுழைய முடியாது. இங்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் ஒரே நேரத்தில் தங்கக்கூடிய அளவுக்கான முகாம்கள் உள்ளன. பக்ராமின் இரண்டு ஓடுபாதைகளில் ஒன்று இரண்டரை கிலோமீட்டருக்கும் மேல் நீளமானது. டொனால்ட் டிரம்பின் கூற்றுப்படி, "இந்தத் தளத்தில் வலிமையான மற்றும் மிக நீளமான கான்கிரீட் ஓடுபாதை உள்ளது. இந்த ஓடுபாதையின் தடிமன் சுமார் இரண்டு மீட்டர் ஆகும்." சீனாவின் அணுசக்தி மையத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது? பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, டிஎஃப்-61 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் செப்டம்பர் 3, 2025 அன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் காணப்பட்டன. ஜூலை 2025-ல் பிபிசி ஆப்கன் சேவையால் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின்படி, இந்த பெரிய ராணுவத் தளத்தில் சீனா இருக்கிறதா என்பதை கண்டறியச் செயற்கைக்கோள் படங்கள் ஆய்வு செய்யப்பட்டன. முந்தைய மற்றும் பிந்தைய செயற்கைக்கோள் படங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அங்கு ராணுவ நடவடிக்கைகள் மிகக் குறைவாக இருப்பதும், போர் விமானங்கள் இல்லாததும் தெரியவந்துள்ளது. பக்ராம் ராணுவத் தளத்தில் பெரிய அளவிலான உத்தி ரீதியான மாற்றம் எதுவும் இல்லை என்பதையும் ஆய்வு கண்டறிந்துள்ளது. சென்டர் ஃபார் ஸ்ட்ராடஜிக் அண்ட் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் அமைப்பைச் சேர்ந்த ஜெனிஃபர் ஜோன்ஸ், ஏப்ரல் 2025-ஆம் ஆண்டுப் படங்கள் இரண்டு ஓடுபாதைகளும் நல்ல நிலையில் இருப்பதை காட்டுவதாக பிபிசி குழுவிடம் தெரிவித்தார். ஆனால் 2025-ஆம் ஆண்டு செயற்கைக்கோள் படங்களில் எந்த விமானமும் காணப்படவில்லை. பக்ராம் விமானத் தளத்திற்கு மிக அருகில் உள்ள சீன அணுசக்தி ஆய்வகம், வடமேற்கு சீனாவில் உள்ள 'லோப் நூர்' என்ற இடத்தில் 2,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சாலை அல்லது பிற வழிகளில் இந்தத் தொலைவை கடக்க பல மணிநேரம் ஆகலாம். ஆனால் லாக்ஹீட் எஸ்ஆர்-71, பிளாக்பேர்ட் போன்ற நவீன ராணுவ விமானங்கள் இந்தத் தூரத்தை சுமார் ஒரு மணிநேரத்தில் கடந்துவிட முடியும். இந்த விமானத் தளத்தின் முக்கியத்துவம் என்ன? பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், தாலிபன் வீரர்கள் பக்ராம் விமானத் தளத்தில் அணிவகுப்பு நடத்தினர். இருபது ஆண்டுகளில் ஜார்ஜ் டபிள்யூ. புஷ், பராக் ஒபாமா மற்றும் டொனால்ட் டிரம்ப் என மூன்று அமெரிக்க அதிபர்கள் இந்த ராணுவ தளத்திற்கு வருகை தந்ததிலிருந்தே இந்த ராணுவத் தளத்தின் முக்கியத்துவத்தை அறியலாம். ஜோ பைடன் 2011-ல் பக்ராம் விமான நிலையத்திற்குச் சென்றார். ஆனால் அப்போது அவர் அமெரிக்காவின் துணை அதிபராக இருந்தார். ஏர் கால்குலேட்டர் வலைத்தளத்தின்படி, அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுடன் அணுசக்தி திட்டம் தொடர்பாக பதற்றம் உச்சத்தில் உள்ள இரானில் இருந்து இந்த விமான தளத்தின் வான் வழி தூரமும் சுமார் 1644 கிலோமீட்டர் ஆகும். அணுசக்தித் திட்டம் தொடர்பாக அமெரிக்காவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் தற்போது உச்சத்தில் உள்ளது. மத்திய ஆசியாவில் அமெரிக்காவின் வான்வழி ஆதிக்கத்துக்கும் இந்த விமானத் தளம் முக்கியமானது என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக, பக்ராம் விமானத் தளத்தில், அமெரிக்க வீரர்கள் விட்டுச் சென்ற ராணுவ உபகரணங்களைப் பயன்படுத்தித் தாலிபன் படைகள் ராணுவ அணிவகுப்புகள் மற்றும் பிற நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. சீனாவின் பதில் என்ன? பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, டிரம்பின் கருத்துக்கு சீனாவின் பதில் மிகவும் நிதானமாக இருந்தது. பக்ராம் விமானத் தளம் குறித்த டிரம்பின் கருத்துக்கு கடந்த சனிக்கிழமை சீனாவிடம் இருந்தும் ஒரு பதில் கிடைத்தது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், "ஆப்கானிஸ்தானின் பிராந்திய ஒருமைப்பாட்டைச் சீனா மதிக்கிறது, அதன் எதிர்காலம் ஆப்கானிஸ்தான் மக்களின் கைகளில் இருக்க வேண்டும்" என்று கூறினார். அவர், "பிராந்திய பதற்றத்தை அதிகரிப்பது ஆதரவைப் பெறாது என்று நாங்கள் நம்புகிறோம். பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்த பிராந்தியத்தை சேர்ந்தவர்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பை அளிப்பார்கள் என்று நம்புகிறோம்" என்றார். தற்போது, ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசுக்கு ரஷ்யாவைத் தவிர வேறு எந்த நாடும் அங்கீகாரம் அளிக்கவில்லை. ஆனால், சீனாவுக்கும் தாலிபனுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது என்று கூறலாம். ஆப்கானிஸ்தானில் பெரும்பாலான நாடுகளுக்கு தூதரகங்கள் இல்லை, ஆனால் சீனா தனது தூதரை இங்கு அனுப்பியுள்ளது. உலகின் மிகப்பெரிய தாமிர சுரங்கங்களில் ஒன்றாக இருக்கும் ஒரு தாமிர சுரங்கத்தின் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டுள்ளனர். சீனாவுக்கு இது ஏன் ஒரு பதற்றமான விஷயம்? பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, பக்ராம் விமானத் தளத்தில் ஏராளமான அமெரிக்க ராணுவ தளவாடங்கள் விடப்பட்டிருந்தன. சர்வதேச விவகார நிபுணரும், டெல்லியின் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறைப் பேராசிரியருமான ரேஷ்மா காசி, பிபிசி நிருபர் மான்சி தாஷிடம் ஒரு பிபிசி நிகழ்ச்சியில், உத்தி ரீதியாக இது மிகவும் முக்கியமானது என்று கூறினார். அவர், "இது உத்தி ரீதியாக ஒரு முக்கியமான மையம் மட்டுமல்ல. இங்கிருந்து ஒரு மணிநேர தூரத்தில் சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் அதன் அணுசக்தி மையங்கள் உள்ளன. அதன் கண்காணிப்புக்கும் இது மிகவும் முக்கியமானது. இந்தத் தளத்திலிருந்து இரான், பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா மற்றும் பிற மத்திய ஆசிய நாடுகளைக் கண்காணிக்க முடியும்" என்றார். அவர் கூற்றுப்படி, தற்போது பக்ராம் விமானத் தளம் உலகளாவிய புவிசார் அரசியலின் ஒரு முக்கிய மையமாக மாறிவிட்டது. அவர், "சீனாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் மிகவும் அதிநவீனமானவை. அது இந்தத் திசையில் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. 2030-க்குள் சீனாவிடம் 1000 அணு ஆயுதங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அவற்றை எடுத்துச் செல்வதற்கான அதிநவீன ஏவுகணை அமைப்புகளும் அதனிடம் உள்ளன" என்றார். "ஒரு எதிரி நாட்டின் விமானத் தளம் இவ்வளவு அருகில் இருப்பது சீனாவுக்கு ஒரு கவலைக்குரிய விஷயம். அணு ஆயுதங்களின் போக்குவரத்து, பராமரிப்பு, அவற்றின் பயன்பாடு அல்லது வேறு நாட்டுக்கு அவற்றைக் கொடுக்கும் நடவடிக்கை ஆகியவை கண்காணிப்பில் வரலாம்," என்கிறார் ரேஷ்மா காசி. பக்ராம் விமானத் தளத்தை அமெரிக்கா கைப்பற்றினால், சீனாவின் அணுசக்தி மையங்களுக்கு மட்டுமின்றி, அதன் 'பெல்ட் அண்ட் ரோடு இனிசியேட்டிவ்' (BRI) திட்டத்துக்கும் ஆபத்து ஏற்படும் என்று அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd9ykv5xxdko

ஒரு விமான தளத்துக்காக தாலிபன்களை எச்சரித்த டிரம்ப்; தலையிட்டு பதில் கொடுக்கும் சீனா

2 months 1 week ago

பக்ராம் விமானத் தளம்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, பக்ராம் விமானத் தளத்தை அமெரிக்கப் படைகள் 20 ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்தன.

2 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஆப்கானிஸ்தானின் பக்ராம் விமானத் தளத்தைப் பற்றிப் பேசினார். அமெரிக்கா அதை மீண்டும் கைப்பற்ற விரும்புவதாக அவர் கூறினார்.

மேலும், அவ்வாறு நடக்கவில்லை என்றால், அதன் விளைவுகளைத் தாலிபன் அரசு சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

டிரம்ப் ட்ரூத் சோஷியலில் வெளியிட்ட ஒரு பதிவில், "ஆப்கானிஸ்தான் பக்ராம் விமானத் தளத்தை அதை உருவாக்கியவர்களான அமெரிக்காவுக்குத் திருப்பித் தராவிட்டால், அது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்!!!" என்று எழுதினார்.

இருப்பினும், சில நாட்களுக்கு முன்பு பிரிட்டன் பயணத்தின்போது டிரம்ப் இதேபோன்ற கருத்தை வெளியிட்டபோது, தாலிபன் அரசு கடுமையாக எதிர்வினையாற்றியது.

தாலிபன் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரி ஜாகிர் ஜலாலி, சமூக ஊடகங்களில் பதிவிட்டு, "ஆப்கானியர்கள் வரலாற்றில் ஒருபோதும் வெளிநாட்டு ராணுவ இருப்பை ஏற்றுக்கொண்டதில்லை. தோஹா பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தத்தின் போது இந்த சாத்தியக்கூறு முழுமையாக நிராகரிக்கப்பட்டது, ஆனால் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தே உள்ளன" என்று கூறினார்.

2021-ல் ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அமெரிக்காவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே எந்த தூதரக உறவுகளும் இல்லை.

டிரம்ப் சமீபத்தில் தனது பிரிட்டன் பயணத்தின்போது பக்ராம் தொடர்பான இந்த கருத்தை வெளியிட்ட பின் இது மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவர், "பக்ராம் உலகின் மிகப்பெரிய விமானத் தளங்களில் ஒன்றாகும், அதை நாங்கள் திருப்பிக் கொடுத்துவிட்டோம். சீனா தனது அணு ஆயுதங்களை உருவாக்கும் இடத்திலிருந்து அது ஒரு மணிநேர தூரத்தில் உள்ளது என்பதால் இப்போது அந்தத் தளத்தை மீண்டும் பெற விரும்புகிறோம்," என்று கூறியிருந்தார்.

இந்த ராணுவத் தளத்தைப் பற்றி அவர் பேசும் ஒவ்வொரு முறையும், சீனாவைப் பற்றியும் குறிப்பிடுகிறார். இந்த ஆண்டு மார்ச் மற்றும் மே மாதங்களிலும் அவர் இதைப் பற்றிப் பேசியுள்ளார். பக்ராம் விமானத் தளத்தைச் சீனா ஆக்கிரமித்திருப்பதாகவும் அவர் பேசினார்.

இந்த விமானத் தளம் பல காரணங்களுக்காகச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. தாலிபனுக்கு எதிரான போரில் இது 20 ஆண்டுகளாக அமெரிக்கா தலைமையிலான படைகளின் மையமாக இருந்தது.

அமெரிக்க ராணுவம் விமானத் தளத்தை விட்டு வெளியேறியபோது, பெரிய அளவிலான ராணுவ உபகரணங்கள், ராணுவ வாகனங்கள் மற்றும் வெடிபொருட்கள் அங்கேயே விடப்பட்டிருந்தன.

பக்ராம் விமானத் தளத்தை யார் கட்டியது?

சோவியத் ஒன்றியம் ஒன்பது ஆண்டுகள் ஆப்கானிஸ்தானில் போரில் ஈடுபட்டது, 1988 இல் தனது படைகளைத் திரும்பப் பெற்றது

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, சோவியத் ஒன்றியம் ஒன்பது ஆண்டுகள் ஆப்கானிஸ்தானில் போரில் ஈடுபட்டது, 1988 இல் தனது படைகளைத் திரும்பப் பெற்றது

பக்ராம் விமானத் தளம் காபூலுக்கு வடக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் பர்வான் மாகாணத்தில் அமைந்துள்ளது.

இது முதன்முதலில் 1950-களில் சோவியத் ஒன்றியத்தால் கட்டப்பட்டது. 1980-களில் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தபோது அது அவர்களின் முக்கிய ராணுவத் தளமாக மாறியது.

2001-ல் அமெரிக்கா தாலிபனை ஆட்சியில் இருந்து அகற்றியபோது, அது இந்தத் தளத்தைக் கட்டுப்பாட்டில் எடுத்தது.

அப்போது பக்ராம் இடிபாடுகளாக மாறியிருந்தது. ஆனால் சுமார் 30 சதுர மைல்கள் (77 சதுர கிலோமீட்டர்) பரப்பளவில் விரிவடைந்துள்ள அந்த தளத்தை அமெரிக்க ராணுவம் மீண்டும் கட்டியது.

கான்கிரீட் மற்றும் எஃகால் ஆன பக்ராம் தளம், அமெரிக்காவின் மிகப்பெரிய மற்றும் உலகின் வலிமையான விமானத் தளங்களில் ஒன்றாக இருந்தது.

இது பல கிலோமீட்டர் நீளமுள்ள வலுவான சுவர்களால் சூழப்பட்டிருந்தது. அதன் சுற்றுப்புறப் பகுதி பாதுகாப்பாக இருந்தது. எந்த வெளியாட்களும் அதற்குள் நுழைய முடியாது.

இங்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் ஒரே நேரத்தில் தங்கக்கூடிய அளவுக்கான முகாம்கள் உள்ளன.

பக்ராமின் இரண்டு ஓடுபாதைகளில் ஒன்று இரண்டரை கிலோமீட்டருக்கும் மேல் நீளமானது. டொனால்ட் டிரம்பின் கூற்றுப்படி, "இந்தத் தளத்தில் வலிமையான மற்றும் மிக நீளமான கான்கிரீட் ஓடுபாதை உள்ளது. இந்த ஓடுபாதையின் தடிமன் சுமார் இரண்டு மீட்டர் ஆகும்."

சீனாவின் அணுசக்தி மையத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது?

டிஎஃப்-61 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, டிஎஃப்-61 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் செப்டம்பர் 3, 2025 அன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் காணப்பட்டன.

ஜூலை 2025-ல் பிபிசி ஆப்கன் சேவையால் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின்படி, இந்த பெரிய ராணுவத் தளத்தில் சீனா இருக்கிறதா என்பதை கண்டறியச் செயற்கைக்கோள் படங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

முந்தைய மற்றும் பிந்தைய செயற்கைக்கோள் படங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அங்கு ராணுவ நடவடிக்கைகள் மிகக் குறைவாக இருப்பதும், போர் விமானங்கள் இல்லாததும் தெரியவந்துள்ளது.

பக்ராம் ராணுவத் தளத்தில் பெரிய அளவிலான உத்தி ரீதியான மாற்றம் எதுவும் இல்லை என்பதையும் ஆய்வு கண்டறிந்துள்ளது.

சென்டர் ஃபார் ஸ்ட்ராடஜிக் அண்ட் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் அமைப்பைச் சேர்ந்த ஜெனிஃபர் ஜோன்ஸ், ஏப்ரல் 2025-ஆம் ஆண்டுப் படங்கள் இரண்டு ஓடுபாதைகளும் நல்ல நிலையில் இருப்பதை காட்டுவதாக பிபிசி குழுவிடம் தெரிவித்தார். ஆனால் 2025-ஆம் ஆண்டு செயற்கைக்கோள் படங்களில் எந்த விமானமும் காணப்படவில்லை.

பக்ராம் விமானத் தளத்திற்கு மிக அருகில் உள்ள சீன அணுசக்தி ஆய்வகம், வடமேற்கு சீனாவில் உள்ள 'லோப் நூர்' என்ற இடத்தில் 2,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

சாலை அல்லது பிற வழிகளில் இந்தத் தொலைவை கடக்க பல மணிநேரம் ஆகலாம்.

ஆனால் லாக்ஹீட் எஸ்ஆர்-71, பிளாக்பேர்ட் போன்ற நவீன ராணுவ விமானங்கள் இந்தத் தூரத்தை சுமார் ஒரு மணிநேரத்தில் கடந்துவிட முடியும்.

இந்த விமானத் தளத்தின் முக்கியத்துவம் என்ன?

பக்ராம் விமானத் தளத்தில் தாலிபன் வீரர்கள் நடத்திய அணிவகுப்பு

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், தாலிபன் வீரர்கள் பக்ராம் விமானத் தளத்தில் அணிவகுப்பு நடத்தினர்.

இருபது ஆண்டுகளில் ஜார்ஜ் டபிள்யூ. புஷ், பராக் ஒபாமா மற்றும் டொனால்ட் டிரம்ப் என மூன்று அமெரிக்க அதிபர்கள் இந்த ராணுவ தளத்திற்கு வருகை தந்ததிலிருந்தே இந்த ராணுவத் தளத்தின் முக்கியத்துவத்தை அறியலாம்.

ஜோ பைடன் 2011-ல் பக்ராம் விமான நிலையத்திற்குச் சென்றார். ஆனால் அப்போது அவர் அமெரிக்காவின் துணை அதிபராக இருந்தார்.

ஏர் கால்குலேட்டர் வலைத்தளத்தின்படி, அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுடன் அணுசக்தி திட்டம் தொடர்பாக பதற்றம் உச்சத்தில் உள்ள இரானில் இருந்து இந்த விமான தளத்தின் வான் வழி தூரமும் சுமார் 1644 கிலோமீட்டர் ஆகும். அணுசக்தித் திட்டம் தொடர்பாக அமெரிக்காவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் தற்போது உச்சத்தில் உள்ளது.

மத்திய ஆசியாவில் அமெரிக்காவின் வான்வழி ஆதிக்கத்துக்கும் இந்த விமானத் தளம் முக்கியமானது என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக, பக்ராம் விமானத் தளத்தில், அமெரிக்க வீரர்கள் விட்டுச் சென்ற ராணுவ உபகரணங்களைப் பயன்படுத்தித் தாலிபன் படைகள் ராணுவ அணிவகுப்புகள் மற்றும் பிற நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

சீனாவின் பதில் என்ன?

சீன அதிபர் ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, டிரம்பின் கருத்துக்கு சீனாவின் பதில் மிகவும் நிதானமாக இருந்தது.

பக்ராம் விமானத் தளம் குறித்த டிரம்பின் கருத்துக்கு கடந்த சனிக்கிழமை சீனாவிடம் இருந்தும் ஒரு பதில் கிடைத்தது.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், "ஆப்கானிஸ்தானின் பிராந்திய ஒருமைப்பாட்டைச் சீனா மதிக்கிறது, அதன் எதிர்காலம் ஆப்கானிஸ்தான் மக்களின் கைகளில் இருக்க வேண்டும்" என்று கூறினார்.

அவர், "பிராந்திய பதற்றத்தை அதிகரிப்பது ஆதரவைப் பெறாது என்று நாங்கள் நம்புகிறோம். பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்த பிராந்தியத்தை சேர்ந்தவர்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பை அளிப்பார்கள் என்று நம்புகிறோம்" என்றார்.

தற்போது, ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசுக்கு ரஷ்யாவைத் தவிர வேறு எந்த நாடும் அங்கீகாரம் அளிக்கவில்லை.

ஆனால், சீனாவுக்கும் தாலிபனுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது என்று கூறலாம்.

ஆப்கானிஸ்தானில் பெரும்பாலான நாடுகளுக்கு தூதரகங்கள் இல்லை, ஆனால் சீனா தனது தூதரை இங்கு அனுப்பியுள்ளது.

உலகின் மிகப்பெரிய தாமிர சுரங்கங்களில் ஒன்றாக இருக்கும் ஒரு தாமிர சுரங்கத்தின் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டுள்ளனர்.

சீனாவுக்கு இது ஏன் ஒரு பதற்றமான விஷயம்?

பராம் விமானத் தளம்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, பக்ராம் விமானத் தளத்தில் ஏராளமான அமெரிக்க ராணுவ தளவாடங்கள் விடப்பட்டிருந்தன.

சர்வதேச விவகார நிபுணரும், டெல்லியின் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறைப் பேராசிரியருமான ரேஷ்மா காசி, பிபிசி நிருபர் மான்சி தாஷிடம் ஒரு பிபிசி நிகழ்ச்சியில், உத்தி ரீதியாக இது மிகவும் முக்கியமானது என்று கூறினார்.

அவர், "இது உத்தி ரீதியாக ஒரு முக்கியமான மையம் மட்டுமல்ல. இங்கிருந்து ஒரு மணிநேர தூரத்தில் சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் அதன் அணுசக்தி மையங்கள் உள்ளன. அதன் கண்காணிப்புக்கும் இது மிகவும் முக்கியமானது. இந்தத் தளத்திலிருந்து இரான், பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா மற்றும் பிற மத்திய ஆசிய நாடுகளைக் கண்காணிக்க முடியும்" என்றார்.

அவர் கூற்றுப்படி, தற்போது பக்ராம் விமானத் தளம் உலகளாவிய புவிசார் அரசியலின் ஒரு முக்கிய மையமாக மாறிவிட்டது.

அவர், "சீனாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் மிகவும் அதிநவீனமானவை. அது இந்தத் திசையில் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. 2030-க்குள் சீனாவிடம் 1000 அணு ஆயுதங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அவற்றை எடுத்துச் செல்வதற்கான அதிநவீன ஏவுகணை அமைப்புகளும் அதனிடம் உள்ளன" என்றார்.

"ஒரு எதிரி நாட்டின் விமானத் தளம் இவ்வளவு அருகில் இருப்பது சீனாவுக்கு ஒரு கவலைக்குரிய விஷயம். அணு ஆயுதங்களின் போக்குவரத்து, பராமரிப்பு, அவற்றின் பயன்பாடு அல்லது வேறு நாட்டுக்கு அவற்றைக் கொடுக்கும் நடவடிக்கை ஆகியவை கண்காணிப்பில் வரலாம்," என்கிறார் ரேஷ்மா காசி.

பக்ராம் விமானத் தளத்தை அமெரிக்கா கைப்பற்றினால், சீனாவின் அணுசக்தி மையங்களுக்கு மட்டுமின்றி, அதன் 'பெல்ட் அண்ட் ரோடு இனிசியேட்டிவ்' (BRI) திட்டத்துக்கும் ஆபத்து ஏற்படும் என்று அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cd9ykv5xxdko

உளமார்ந்திருத்தல் (𝐛𝐞𝐢𝐧𝐠 𝐦𝐢𝐧𝐝𝐟𝐮𝐥)

2 months 1 week ago
உளமார்ந்திருத்தல் (𝐛𝐞𝐢𝐧𝐠 𝐦𝐢𝐧𝐝𝐟𝐮𝐥) நீராருங்கடலுடுத்த, அன்பார்ந்த, மனமார்ந்த முதலான சொற்களை அன்றாடம் பயன்படுத்துகின்றோம். இவற்றுள் இருக்கும் ’ஆர்ந்த’ எனும் சொல்? நிறைந்த, நிரம்பிய, பரவிய முதலானவற்றின் பொருள் கொள்கின்றோம். ஆனால் இதன் பொருள் அதற்கும் மேலானது. நீரால் ஆனது கடல், அன்பாகவே ஆகிப்போன நண்பன், இப்படியாக, அதுவாகவே ஆகிப் போவதுதான் ‘ஆர்தல்’ என்பதாகும். வாழ்த்துதலாகவே, வாழ்த்துதல் மட்டுமாகவே ஆகிப் போவதுதான் மனமார்ந்த வாழ்த்து. உளப்பூர்வமாய், உளப்பூர்வமாக மட்டுமே ஒன்றிக் கிடத்தல் உளமார்ந்திருத்தல். பயிற்சியினூடாக வாடிக்கையாக்கிக் கொளல் உளமார்ந்திருத்தல். நம்மில் பெரும்பாலானோர் பொட்டிதட்டிகள்(software programmers), மென்பொருள்ச் சாலைக்கூலிகள். நிரல் எழுதுகின்றோம். மண்டையை உடைத்துக் கொள்கின்றோம். பிழைகளும் வழுக்களுமாக, சென்று சேர வேண்டிய இடத்திற்குச் சென்று சேரமுடியவில்லை. காரணம், எண்ணங்கள் பல வாக்கில். எட்டு மணி நேரம், பத்து மணி நேரம் கூடச் செலவு செய்திருப்போம். வேலைக்காகவில்லை. எழுந்து காலார ஒரு நடை போய்விட்டு வந்தானதும், பிழை தென்படுகின்றது. ஐந்து மணித்துளிகளில், வேலை முடிவுக்கு வருகின்றது. என்ன காரணம்? தனிமையில் நடந்து செல்லும் போது, நடப்புக்கு வருகின்றோம். எல்லாத் தளைகளிலும் இருந்து விடுபட்டு, மனம் ஒருமுகம் கொள்கின்றது. தெளிவு பிறக்கின்றது. மனமார்கின்றோம். பிழை எளிதில் தென்படுகின்றது. சரி செய்கின்றோம். நிரலோட்டம் வெற்றி அடைகின்றது. இதுதான் உளமார்ந்திருத்தல். தற்காலத்தில் மனம்கொள்தல் முன்முடிவுகளின்றி இருத்தல் சலனமற்றுத் தெளிந்திருத்தல் பரிவுடன் இருத்தல் உணர்ந்திருத்தல் இவையாவும் மனமேயாக இருப்பதுதான் உளமார்ந்திருத்தல். இதனால், மனநலமும் மெய்நலமும் சமூகநலமும் மேம்பட்டே தீருமென்பதுதான் அறிவியலாய்வுகளின் அடிப்படை. இத்தகு துறையில், பேராசிரியராக, ஆய்வறிஞராக, நம்மவர் ஒருவர் இருக்கின்றாரென்பது நமக்கெல்லாம் பெரிய பெருமை. நிமிர்வு கொள்ள வேண்டும். டாக்டர் ராமசாமி (ராம்) மகாலிங்கம் அவர்கள், புகழ்பெற்ற கலாச்சார உளவியலாளர், விருது பெற்ற ஆராய்ச்சியாளர், பேராசிரியர், வழிகாட்டி, கலைஞர், திரைப்பட தயாரிப்பாளர். சாதி, பாலினம், இனம், பாலியல், சமூக வர்க்கம் ஆகியவற்றை, விமர்சனக் கலாச்சார உளவியல் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்துவருகின்றார் (www.mindfuldignity.com). அமெரிக்க உளவியல் சங்கத்தின் உறுப்பினரான டாக்டர். மகாலிங்கம் அவர்கள், தனது கற்பித்தல், ஆராய்ச்சி, வழிகாட்டுதலுக்காக பல விருதுகளைப் பெற்றதோடு, “தமிழ் அமெரிக்கன் முன்னோடி (𝑻𝒂𝒎𝒊𝒍 𝑨𝒎𝒆𝒓𝒊𝒄𝒂𝒏 𝑷𝒊𝒐𝒏𝒆𝒆𝒓 𝑨𝒘𝒂𝒓𝒅)” விருதையும் பெற்றவர். https://youtu.be/rSJ6Rb3VYW4 அன்றாடம் கவிதை, கதை, ஏன் டைரியில் ஒரு பக்கம் எழுதுவது கூட, நம்மை மனமார்தலுக்கு இட்டுச் செல்லும். இது போன்ற நுண்ணிய தகவல்களையும் பயிற்சிகளையும் நமக்குத் தருகின்றார் பேராசியர் அவர்கள். மாணவர்கள், இளையோர், அலுவலர்கள், ஏன் நாம் எல்லாருமே நுகர்ந்து பயன்பெற வேண்டிய தருணம். மிச்சிகன் பல்கலைக்கழகச் சான்றிதழுடன் கூடிய 10 மணி நேர வகுப்பு: https://www.coursera.org/learn/mindfulness-dignity-and-the-art-of-human-connection நாளொரு மணி நேரமாகக் கூட பயின்று பயன் கொள்ளலாம்! "𝗕𝗲 𝘄𝗵𝗲𝗿𝗲 𝘆𝗼𝘂𝗿 𝗳𝗲𝗲𝘁 𝗮𝗿𝗲, 𝘁𝗵𝗮𝘁'𝘀 𝘁𝗵𝗲 𝗵𝗲𝗮𝗿𝘁 𝗼𝗳 𝗺𝗶𝗻𝗱𝗳𝘂𝗹𝗻𝗲𝘀𝘀." 🧘‍♂️✨ -பழமைபேசி. https://maniyinpakkam.blogspot.com/2025/07/blog-post_31.html

ஹெச்1பி விசா கட்டணம் பன்மடங்கு உயர்வு - டிரம்பின் புதிய உத்தரவால் இந்தியா கவலை ஏன்?

2 months 1 week ago
ஹெச்1பி விசா கட்டண உயர்வு: இந்தியாவை விட அமெரிக்காவையே அதிகம் பாதிக்கும் என்று கருதப்படுவது ஏன்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹெச்1பி விசா கட்டணத்தை பன்மடங்கு வரை உயர்த்துவதாக அறிவித்ததன் மூலம் டிரம்ப் தொழில்நுட்ப உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். கட்டுரை தகவல் சௌதிக் பிஸ்வாஸ் மற்றும் நிகில் இனாம்தார் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பயம், குழப்பம், பின்னர் வெள்ளை மாளிகையின் விளக்கம் என ஹெச் 1-பி விசாவின் கீழ் உள்ள லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு இது ஒரு அதிர்ச்சிகரமான வார இறுதியாக இருந்தது. வெள்ளிக்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திறன்மிகு தொழிலாளர்களுக்கான விசா கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி 100,000 டாலராக அறிவித்தார். இது தொழில்நுட்ப உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சிலிகான் பள்ளத்தாக்கில் செயல்படும் நிறுவனங்கள் ஊழியர்களை வெளிநாடு பயணம் செய்ய வேண்டாம் என்று எச்சரித்தன, ஹெச்1பி விசா வைத்திருந்த வெளிநாட்டு ஊழியர்கள் விமான டிக்கெட் தேடி அலைந்தனர், உத்தரவை புரிந்துகொள்ள குடியேற்ற வழக்கறிஞர்கள் இரவு பகலாக வேலை செய்தனர். சனிக்கிழமை, வெள்ளை மாளிகை இந்தக் குழப்பத்தைத் தணிக்க முயன்று, கட்டணம் புதிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும், அதுவும் ஒரு முறை மட்டுமே வசூலிக்கப்படும் என்று தெளிவுபடுத்தியது. ஆனால், நீண்ட காலமாக இருந்த ஹெச் - 1பி திட்டத்தின் எதிர்காலம் இன்னும் தெளிவில்லாமல் உள்ளது. இந்தத் திட்டம் அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு எதிராக உள்ளது என்று விமர்சிக்கப்பட்டாலும், உலகளாவிய திறமைகளை ஈர்க்கும் ஒன்றாக கருதப்பட்டது. இந்த மாற்றங்களுடனும், மூன்று தசாப்தங்களாக இந்தியர்களின் "அமெரிக்க கனவை" நனவாக்கி, அமெரிக்க தொழில்களுக்கு திறமையான ஊழியர்களை வழங்கிய ஹெச்1பி திட்டத்தை இந்தக் கொள்கை பெருமளவு தடுக்கிறது. இந்த ஹெச் - 1பி திட்டம் இந்தியாவையும் அமெரிக்காவையும் மாற்றியமைத்தது. பட மூலாதாரம், Getty Images இந்தியர்களுக்கு, இது ஒரு கனவு பயணமாக மாறியது. சிறு நகரங்களைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர்கள் டாலர்களில் சம்பாதிக்க ஆரம்பித்தனர், குடும்பங்கள் நடுத்தர வர்க்கத்துக்கு உயர்ந்தன, விமான நிறுவனங்கள் முதல் ரியல் எஸ்டேட் வரை பல துறைகள் உலகம் சுற்றும் இந்தியர்களுக்காக உருவாயின. இந்தத் திட்டம் ஆய்வகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், புதிய நிறுவனங்களை நிரப்பும் திறமையான பணியாளர்களை அமெரிக்காவுக்குக் கொடுத்தது. இன்று, இந்திய வம்சாவளியினர் கூகுள், மைக்ரோசாப்ட், ஐபிஎம் போன்ற நிறுவனங்களை வழிநடத்துகிறார்கள். அமெரிக்க மருத்துவர்களில் சுமார் 6% இந்தியர்கள். ஹெச் -1பி திட்டத்தில் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள், சமீப ஆண்டுகளில் 70% க்கும் மேல் விசாக்கள் இந்தியர்களுக்கு கிடைத்தன. (சீனா இரண்டாவது இடத்தில், சுமார் 12%) தொழில்நுட்பத் துறையில், இந்தியர்களின் பங்கு இன்னும் பெரியது. 2015-ல் கிடைத்த தகவலின்படி, 80% க்கும் மேற்பட்ட "கணினி" வேலைகள் இந்தியர்களுக்கு சென்றன. அந்த நிலை இப்போதும் பெரிதாக மாறவில்லை என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். மருத்துவத் துறையிலும் இது தெளிவாகிறது. 2023-ல், 8,200-க்கும் மேற்பட்ட ஹெச்-1பி விசா பெற்றவர்கள் மருத்துவமனைகளில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். இந்தியா, சர்வதேச மருத்துவ பட்டதாரிகளின் மிகப்பெரிய மூலாதாரமாக உள்ளது. (பொதுவாக ஹெச் - 1பி விசாக்களில் அமெரிக்காவில் இருப்பவர்கள்) அவர்களில் 22% இந்தியர்கள். அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களில் கால் பங்கு வெளிநாட்டவர்கள் என்ற நிலையில், ஹெச் - 1பி விசா வைத்துள்ள இந்தியர்கள் மொத்தத்தில் 5-6% இருக்கலாம். டிரம்பின் புதிய 100,000 டாலர் கட்டணம் நடைமுறையில் முற்றிலும் செயல்படுத்த முடியாதது. 2023-ல் புதிய ஹெச்-1பி ஊழியர்களின் சராசரி சம்பளம் 94,000 டாலர் மட்டுமே. ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு 129,000 டாலர். இந்தக் கட்டணம் புதிதாக நியமிக்கப்படுபவர்களுக்கே மட்டுமே பொருந்துவதால், பலர் இதை செலுத்த முடியாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். "புதிதாக ஹெச் -1பி விசா பெறுபவர்களுக்கு மட்டுமே இந்த கட்டணம் பொருந்தும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதனால், உடனடி பாதிப்பு இல்லாமல், நடுத்தர மற்றும் நீண்டகால தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படலாம்," என்று நிஸ்கனென் மையத்தின் குடியேற்றக் கொள்கை ஆய்வாளர் கில் குவேரா பிபிசியிடம் கூறினார். இந்தியா முதலில் பாதிக்கப்படலாம், ஆனால் அமெரிக்காவிலும் இதன் தாக்கம் ஆழமாக இருக்கலாம். டிசிஎஸ், இன்ஃபோசிஸ் போன்ற இந்திய நிறுவனங்கள் முன்பிருந்தே இதற்கு தயாராகி வருகின்றன. புள்ளிவிவரங்கள் இதுகுறித்த புரிதலை தருகின்றன. ஹெச்-1பி விசா பெறுபவர்களில் 70% இந்தியர்கள். ஆனால், 2023-ல் முதல் 10 ஹெச்-1பி வேலை அளிக்கும் நிறுவனங்களில் மூன்று மட்டுமே இந்தியாவுடன் தொடர்புடையவை, 2016-ல் இது ஆறாக இருந்தது என்று பியூ ஆய்வு கூறுகிறது. இருந்தாலும், 283 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய ஐடி துறை, தனது வருவாயில் பாதிக்கு மேல் அமெரிக்காவுக்கு திறமையான ஊழியர்களை அனுப்புவதை நம்பியுள்ளதால், பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். விசா கட்டண உயர்வு அமெரிக்காவிலுள்ள சில "திட்டங்களின் வணிகத் தொடர்ச்சியை பாதிக்கலாம்" என்று ஐடி துறை அமைப்பான நாஸ்காம் எச்சரிக்கிறது. இந்த சட்டம் குறித்த தெளிவு கிடைக்கும் வரை, வாடிக்கையாளர்கள் திட்டங்களுக்கு புதிய தொகை நிர்ணயம் செய்யவோ அல்லது தாமதிக்கவோ வலியுறுத்தலாம். நிறுவனங்கள் தங்கள் பணியாளர் முறையை மாற்றலாம், அதாவது வேலையை வெளிநாடுகளுக்கு மாற்றுதல், அமெரிக்காவில் உள்ள வேலை வாய்ப்புகளை குறைத்தல், ஸ்பான்சர்ஷிப் வழங்கும் போது மிகவும் தேர்வு செய்து செயல்படுதல் போன்றவை. இந்திய நிறுவனங்கள் கூடுதல் விசா செலவுகளை அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு மாற்றிவிடும் வாய்ப்பும் உள்ளது என்று முன்னணி பணியாளர் நிறுவனம் CIEL HR-இன் ஆதித்ய நாராயண் மிஸ்ரா கூறுகிறார். "முதலாளிகள் அதிக செலவு தேவைப்படும் விசா ஸ்பான்சர்ஷிப்பை ஏற்க தயங்குவதால், தொலைதூர ஒப்பந்தங்கள், வெளிநாட்டு சேவைகள், தற்காலிக பணியாளர்களை அதிகம் நம்பலாம்," என்று அவர் விளக்குகிறார். அமெரிக்காவுக்கு இதன் தாக்கம் கடுமையாக இருக்கலாம். மருத்துவர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மருத்துவமனைகள், ஸ்டெம் (STEM-அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்தை ஒருங்கிணைக்கும் துறை) மாணவர்களை ஈர்க்க முடியாமல் தவிக்கும் பல்கலைக்கழகங்கள், கூகுள் அல்லது அமேசான் போன்ற பெரிய செல்வாக்கு இல்லாத புதிய நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்படலாம். "இந்த விசா கட்டண உயர்வு அமெரிக்க நிறுவனங்களை தங்கள் வேலைவாய்ப்பு முறைகளை மாற்றவும், பல வேலைகளை வெளிநாடுகளுக்கு மாற்றவும் கட்டாயப்படுத்தும். அமெரிக்காவில் நிறுவனங்களை நடத்த வரும் தொழில்முனைவோர் மற்றும் தலைமை நிர்வாகிகளையும் தடுக்கும். இது அமெரிக்காவின் புதுமை படைத்தல் மற்றும் போட்டித்திறனுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்," என்று கேட்டோ இன்ஸ்டிட்யூட்டின் குடியேற்ற ஆய்வு இயக்குநர் டேவிட் பியர் பிபிசியிடம் கூறினார். பட மூலாதாரம், San Francisco Chronicle via Getty Images படக்குறிப்பு, ஹெச் - 1பி திட்டத்தில் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர், அதில் பயன் பெறுபவர்களில் 70% க்கும் அதிகமானோர் உள்ளனர். இந்த கவலை மற்ற நிபுணர்களாலும் பகிரப்படுகிறது. "அமெரிக்காவில் தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற துறைகளில் பணியாளர்களுக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் துறைகள் மிகவும் முக்கியமானவை என்பதால், சில ஆண்டுகள் நீடிக்கும் பணியாளர் பற்றாக்குறை அமெரிக்க பொருளாதாரத்தையும் நாட்டின் நலனையும் கடுமையாக பாதிக்கலாம்," என்று குவேரா கூறுகிறார். "இது திறமையான இந்தியர்களை வேறு நாடுகளில் கல்வி கற்கத் தூண்டலாம். இதனால் அமெரிக்க பல்கலைக்கழகங்களும் பாதிக்கப்படலாம்." உண்மையில், இதன் தாக்கத்தை மிகவும் நேரடியாக உணரப் போகிறவர்கள் இந்திய மாணவர்கள் தான். அமெரிக்காவில் உள்ள சர்வதேச மாணவர்களில் நால்வரில் ஒருவர் இந்தியர். 120 பல்கலைக்கழகங்களில் 25,000 மாணவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வட அமெரிக்க இந்திய மாணவர் சங்கத்தின் நிறுவனர் சுதான்ஷு கௌஷிக், செப்டம்பர் மாத சேர்க்கைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்ததால் புதிய மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்கிறார். "இது நேரடி தாக்குதல் போல் உணரப்பட்டது. மாணவர்கள் ஏற்கனவே 50,000 டாலர் முதல் 100,000 டாலர் வரை செலவு செய்துவிட்டனர். ஆனால் அமெரிக்க வேலைவாய்ப்புக்கான முக்கிய பாதை இப்போது மூடப்பட்டுவிட்டது," என்று கௌஷிக் பிபிசியிடம் கூறினார். பல இந்திய மாணவர்கள் நிரந்தரமாக குடியேறக்கூடிய நாடுகளைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பதால், அடுத்த ஆண்டு அமெரிக்க பல்கலைக்கழக சேர்க்கைகள் பாதிக்கப்படலாம் என்று அவர் கணிக்கிறார். இந்த கட்டண உயர்வின் முழு தாக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. டிரம்பின் இந்த நடவடிக்கை விரைவில் சட்ட சவால்களை எதிர்கொள்ளும் என்று குடியேற்ற வழக்கறிஞர்கள் கருதுகின்றனர். "புதிய ஹெச்1பி கொள்கை அமெரிக்காவுக்கு பல எதிர்மறை விளைவுகளைத் தரலாம். ஆனால் அவை எப்படி இருக்கும் என்பது தெரிய சிறிது காலம் ஆகும்," என்று குவேரா குறிப்பிடுகிறார். "உதாரணமாக, நிர்வாக உத்தரவு சில நிறுவனங்களுக்கு விலக்கு வழங்க அனுமதிக்கிறது. அதனால் அமேசான், ஆப்பிள், கூகுள், மெட்டா போன்ற அதிக அளவில் ஹெச்1பி பயன்படுத்தும் நிறுவனங்கள் இந்தக் கட்டணத்திலிருந்து விலக்கு பெறக்கூடும். ஆனால் அவர்கள் அனைவரும் விலக்கு பெற்றால், அந்தக் கட்டணத்தின் நோக்கமே வீணாகிவிடும்." இந்த ஹெச்1பி மாற்றம் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வரி போல் இல்லாமல், அமெரிக்க நிறுவனங்களுக்கும் பொருளாதாரத்திற்கும் ஒரு சவாலாக தோன்றுகிறது. ஹெச்1பி விசா வைத்திருப்பவர்களும் அவர்களது குடும்பங்களும் ஆண்டுக்கு சுமார் $86 பில்லியன் பங்களிக்கின்றனர், இதில் $24 பில்லியன் பெடரல் வரிகளாகவும், $11 பில்லியன் மாநில மற்றும் உள்ளூர் வரிகளாகவும் செல்கின்றன. நிறுவனங்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றன என்பதைப் பொறுத்து, அமெரிக்கா புதுமையிலும் திறமையிலும் முன்னிலை வகிக்குமா அல்லது மற்ற நாடுகளுக்கு வாய்ப்பளிக்குமா என்பது தீர்மானிக்கப்படும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj6xndpl65ro

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் வலையில் சிக்காமல் கடற்றொழிலாளர்களை மீட்பதற்கான திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

2 months 1 week ago
போதைப்பொருள் கடத்தல்காரர்களின் வலையில் சிக்காமல் கடற்றொழிலாளர்களை மீட்பதற்கான திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் 23 Sep, 2025 | 03:50 PM போதைப்பொருள் கடத்தல்காரர்களின் நடவடிக்கையில் சிக்காமல் இருப்பது எப்படி என்பது தொடர்பில் கடற்றொழிலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் திட்டத்தை முன்னெடுக்குமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கடற்றொழில் அமைச்சர் தலைமையில் கடற்றொழில் அமைச்சின் 25 மாவட்ட இணைப்பாளர்களுடனான விசேட கலந்துரையாடல் அமைச்சில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, அமைச்சின் செயலாளர் பி.கே. கோலித கமல் ஜினதாச மற்றும் துரைசார் அதிகாரிகள் ஆகியோருடன் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் பங்கேற்றிருந்தனர். இதன்போது கடற்றொழிலாளர்களை, போதைப்பொருள் கடத்தலுக்கு கடத்தல்காரர்கள் பயன்படுத்துவது பற்றி போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு விளக்கம் அளித்தது. இதனை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்துமாறு அமைச்சர் உத்தரவிட்டார். அதேபோன்று இது பற்றி கடற்படையினருக்கும் தெரியப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார். அத்துடன், உள்நாட்டு நீர்நிலைகளில் மீன் உற்பத்திகளை பெருக்குவது பற்றி நெக்டா நிறுவனத்தின் தலைவர் விளக்கமளித்தார். இதற்குரிய ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். அதேபோல மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் உள்நாட்டு நீர்நிலைகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டன. https://www.virakesari.lk/article/225857

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் வலையில் சிக்காமல் கடற்றொழிலாளர்களை மீட்பதற்கான திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

2 months 1 week ago

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் வலையில் சிக்காமல் கடற்றொழிலாளர்களை மீட்பதற்கான திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

23 Sep, 2025 | 03:50 PM

image

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் நடவடிக்கையில் சிக்காமல் இருப்பது எப்படி என்பது தொடர்பில் கடற்றொழிலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் திட்டத்தை முன்னெடுக்குமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் தலைமையில் கடற்றொழில் அமைச்சின் 25 மாவட்ட இணைப்பாளர்களுடனான விசேட கலந்துரையாடல் அமைச்சில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, அமைச்சின் செயலாளர் பி.கே. கோலித கமல் ஜினதாச மற்றும் துரைசார் அதிகாரிகள் ஆகியோருடன் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கடற்றொழிலாளர்களை, போதைப்பொருள் கடத்தலுக்கு கடத்தல்காரர்கள் பயன்படுத்துவது பற்றி போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு விளக்கம் அளித்தது.

இதனை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்துமாறு அமைச்சர் உத்தரவிட்டார். அதேபோன்று இது பற்றி கடற்படையினருக்கும் தெரியப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன், உள்நாட்டு நீர்நிலைகளில் மீன் உற்பத்திகளை பெருக்குவது பற்றி நெக்டா நிறுவனத்தின் தலைவர் விளக்கமளித்தார். இதற்குரிய ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

அதேபோல மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் உள்நாட்டு நீர்நிலைகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டன.

Photo__3_.jpg

Photo__4_.jpg

Photo__3___1_.jpg

Photo__1_.jpg

https://www.virakesari.lk/article/225857

குளிக்க சிறந்த நேரம் காலையா அல்லது இரவா? எது அதிக நன்மை தருகிறது?

2 months 1 week ago
எனக்கு… 🚰 தண்ணியிலை கண்டம் இருக்கு என்று சிவன் கோயில் சாத்திரியார் சொன்ன படியால், மூன்று மாதத்துக்கு ஒருமுறைதான் 🛀🏾 🪣ஒரு வாளி தண்ணீரில் குளிப்பேன். 😂

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

2 months 1 week ago
2. விஜை தந்தை ஜெ வெற்றிக்கு விஜை “அணிலாக” இருந்து உதவினார் என்பதை வைத்து விஜையை யார் வேணாலும் நக்கல் அடிக்கலாம். ஆனால் அதே தேர்தலில் இலை மலர்ந்தால் ஈழம் மலரும், ஈழத்தாய் என சொன்ன சீமானுக்கு மட்டும் அந்த அருகதை இல்லை. இவர் மட்டும்தான் ரோ ஏஜெண்ட்

குளிக்க சிறந்த நேரம் காலையா அல்லது இரவா? எது அதிக நன்மை தருகிறது?

2 months 1 week ago
நான் வேலை ஓய்வுக்கு வரும் முன் தினமும் இருதடவை குளிப்பது .......பின்பு காலைக்குளியல் , இரவில் கை கால் முகம் கழுவி ஈரத்துவாயால் துடைத்து விட்டு படத்துக்கு விளக்கு ஏற்றிவிட்டு போவது வழக்கம் . ......(எதிர் பாராத கார் வேலைகள் செய்தால் இரவிலும் குளியல்தான் ).....! 😀

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

2 months 1 week ago
அண்ணை அவசரத்தில செய்தியை வடிவா வாசிக்கேல்லையோ? முன்னர் கொடுத்த வருமான வரி தண்ட நோட்டீசுக்கு எதிரான விஜை இடைக்கால தடை பெற்றார் - அதன் வாய்தா விசாரணை இன்று. விஜை காங்கிரஸ் கூட்டணி வருமா தெரியாது. ஆனால் ஈழத்தமிழர்களின் ரத்தம் குடித்த கட்சி, இன எதிரிகள் என தன்வாயால் கூறிய காங்கிரஸின் தற்போதைய மாநில தலைவர் செல்வபெருந்தகையுடன் ஒரே மேடையில் பேசி, அண்ணன் தம்பியாக கட்டி குழாவி, அணில் என இருவரும் சக தமிழ் தேசியம் பேசும் விஜை நக்கல் அடித்த தருணம் (இன்று நடந்தது).

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

2 months 1 week ago
இந்த வருமான வரி சோதனை செய்பவர்களுக்கு… ஸ்ராலின், உதயநிதி, சபரீசன் வீடுகள் ஒன்றும் கண்ணுக்கு தெரியாதோ… 😂

மொரார்ஜி தேசாய் சந்தேகத்திற்கு பெரும் விலை கொடுத்த உளவு அமைப்பான 'ரா'

2 months 1 week ago
பட மூலாதாரம், GETTY IMAGES/BLOOMSBURY படக்குறிப்பு, 1977 ஆம் ஆண்டு பிரதமரான பிறகு, மொரார்ஜி தேசாய், ராமேஷ்வர் நாத் காவை உளவுத்துறை தலைவர் பதவியில் இருந்து நீக்க முடிவு செய்தார். கட்டுரை தகவல் ரெஹான் ஃபசல் பிபிசி இந்தி 23 செப்டெம்பர் 2025, 01:51 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் 1977-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், அவசர நிலைக்குப் பிறகு இந்திரா காந்தி மக்களவைத் தேர்தலை நடத்திய போது, அவரது கட்சி தோற்றது மட்டுமல்லாமல் அவரும் தனது மக்களவை தொகுதியை இழந்தார். அந்தத் தேர்தலில் புலனாய்வுப் பிரிவு (IB), உளவுத்துறை (RAW), சிபிஐ (CBI) ஆகிய இந்திய புலனாய்வு அமைப்புகள் அவசர நிலையில் வகித்த பங்கை எதிர்க்கட்சிகள் பெரிய அரசியல் பிரச்னையாக மாற்றின. பின்னர் பிரதமரான மொரார்ஜி தேசாய், உளவுத்துறை அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவர் ராமேஷ்வர் நாத் காவை பதவியில் இருந்து நீக்க முடிவு செய்தார். "ஜனதா கட்சி அரசாங்கத்தில் மூத்த அமைச்சர்களும், பிரதமர் மொரார்ஜி தேசாயும், உளவுத்துறைக்கு எதிரான எண்ணம் கொண்டிருந்தனர். இந்திரா காந்தி அந்த அமைப்பை ஒரு அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதாக அவர்கள் நினைத்தனர்" என காவுக்குப் பிறகு ரா தலைவராகப் பொறுப்பேற்ற கே. சங்கரன் நாயர், தனது சுயசரிதையான 'இன்சைட் ஐபி அண்ட் ரா'வில் குறிப்பிட்டுள்ளார். "காவ், மொரார்ஜி தேசாயை சந்திக்கும் போதெல்லாம், 'நான் உங்கள் மீது நம்பிக்கை இழந்துவிட்டேன்' என்று கூறி மொரார்ஜி தேசாய் அவரை அவமதிப்பார். இவ்வாறு மூன்றாவது முறை நடந்தபோது, காவ் நேராகவே, 'நான் முன்கூட்டியே ஓய்வு பெற விரும்புகிறேன்' என்று மொரார்ஜி தேசாயிடம் தெரிவித்தார்" என்று 'இன்சைட் ஐபி மற்றும் ரா'வில் கே. சங்கரன் எழுதியுள்ளார். அதோடு, "மொரார்ஜி என்னையும் இந்திரா காந்தியின் முகவராகவே கருதினார். ஆனால் அப்போது அமைச்சரவைச் செயலாளராக இருந்த நிர்மல் முகர்ஜி, நான் உளவுத்துறை நிறுவனர்களில் ஒருவர் என்பதால் என்னைத் தலைவராக்க வேண்டும் என்று சமாதானப்படுத்தினார்," எனவும் சங்கரன் நாயர் எழுதியுள்ளார். பட மூலாதாரம், MANAS PUBLICATION படக்குறிப்பு, கே. சங்கரன் நாயரின் சுயசரிதையான 'இன்சைட் ஐபி அண்ட் ரா' சங்கரன் நாயர் ராஜினாமா ஆனால் கே. சங்கரன் நாயர், உளவுத்துறை (RAW) அமைப்பின் தலைவராக மூன்று மாதங்கள் மட்டுமே பணியாற்றினார். மொரார்ஜி தேசாய் அரசாங்கம், உளவுத்துறை அமைப்பின் தலைமைப் பதவியை "செயலாளர் (Secretary, RAW)" என்பதிலிருந்து "இயக்குநர் (Director, RAW)" என மாற்றியது. இந்த மாற்றம் தனது அந்தஸ்தை குறைக்கும் முயற்சியாக உள்ளதாக நாயர் உணர்ந்தார். அரசாங்கத்திற்கு அத்தகைய நோக்கம் இல்லை என்று மொரார்ஜி தேசாயின் அலுவலகம் அவரை நம்ப வைக்க முயன்றது. இருந்தாலும் பல முக்கிய உளவுத்துறை நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கிய நாயர், ராஜினாமா செய்ய முடிவு செய்தார். சங்கரன் நாயர் வெளியேறியது, உளவுத்துறை அமைப்பின் உயரதிகாரிகளுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. அவர் மிகவும் மதிக்கப்படும் அதிகாரியாகவும், எந்த அரசியல் தொடர்புகளும் இல்லாதவராகவும் இருந்தார். அவசரநிலை விதிக்கப்படுவதற்கு முன்பே, இந்திரா காந்தி அவரை உளவுத்துறைப் பணியகத்தின் (IB) தலைவராக நியமிக்க முடிவு செய்திருந்தார். "பதவி ஏற்கும் முன்பு பிரதமரின் இல்லத்தில் வந்து சந்திக்க வேண்டும் என்று, ஆர்.கே. தவான் மூலம் நாயருக்கு சஞ்சய் காந்தி ஒரு செய்தி அனுப்பினார். ஆனால் நாயர் மறுத்துவிட்டார். இதனால் சஞ்சய் காந்தி அவரது நியமனத்தை ரத்து செய்து, ஷிவ் மாத்தூரை தலைவராக நியமித்தார். நாயர் மீது அவர் அதீத கோபம் கொண்டதால், அவரை உளவுத்துறையில் இருந்தே நீக்கி, மாநில வட்டத்துக்கு திருப்பி அனுப்ப நினைத்தார்" என உளவுத்துறையின் முன்னாள் கூடுதல் செயலாளரான ராமன், தனது 'The Cow Boys of R&W' புத்தகத்தில் எழுதியுள்ளார். "காவ் இதற்குச் சம்மதிக்காமல், சஞ்சய் காந்தியின் தலையீட்டைப் பற்றி நேரடியாக இந்திரா காந்தியிடம் அதிருப்தி தெரிவித்தார். அதற்குப் பிறகு இந்திரா, சஞ்சயிடம் உளவுத்துறை விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்" என்று பி. ராமன் தனது புகழ்பெற்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் . "அடுத்த நாள் காவ் என்னிடம் இரங்கல் தெரிவிக்க வேண்டுமா அல்லது எனக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டுமா என்று தெரியவில்லை என்று கூறினார். நான் உடனடியாக, நீங்கள் என்னை வாழ்த்தலாம் என்று சொன்னேன்" என்றும் சங்கரன் நாயர் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம், MANAS PUBLICATION படக்குறிப்பு, முன்னாள் உளவுத் தலைவர் தலைவர் சங்கரன் நாயர் இரானிய இடைத்தரகருக்கு 6 மில்லியன் டாலர்கள் கொடுத்த வழக்கு மொரார்ஜி தேசாய் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும், இந்திரா காந்தி மற்றும் சஞ்சய் காந்தி உளவுத்துறையைத் தவறாக பயன்படுத்தியிருக்கிறார்களா என்பதைக் கண்டுபிடிக்க, ராவின் பழைய பதிவுகள் அனைத்தும் ஆராயப்பட்டன. ஆனால் ஒரு சம்பவத்தைத் தவிர, எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஜனதா அரசு, நிதி அமைச்சகம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் சில கோப்புகளில் சில தகவல்களை கண்டுபிடித்தது. அவை, உளவுத்துறை, காவ், சங்கரன் நாயர் ஆகியோர் ஒரு வழக்கில் சிக்கக்கூடும் என்று கருத வைத்தன. "அவசரநிலையின் போது, நாயர் ஜெனீவாவுக்கு அனுப்பப்பட்டு, சுவிஸ் வங்கி கணக்கில் ரூ.60 லட்சம் அல்லது ஆறு மில்லியன் டாலர் டெபாசிட் செய்ததாக கோப்புகள் வெளிப்படுத்தின. ஜனதா அரசு, இந்தப் பணம் சஞ்சய் காந்தியின் ரகசியக் கணக்கில் செலுத்தப்பட்டது என சந்தேகித்தது. ஆனால் விசாரணையில், அந்த கணக்கு உண்மையில் இரானிய இடைத்தரகரான ரஷிடியனுக்குச் சொந்தமானது என்று தெரியவந்தது. அவர் இரான் ஷாவின் சகோதரி அஷ்ரப் பஹ்லவியின் நெருங்கிய நண்பர்." இந்திய அரசு, இரானிடமிருந்து மலிவான விலையில் கடன் பெறுவதற்காக அந்த இடைத்தரகரின் சேவைகளை பயன்படுத்தி, அவருக்கு கமிஷனாக ஆறு மில்லியன் டாலர் வழங்கியது. "இந்திரா காந்தி இந்த விஷயத்தை ரகசியமாக வைத்திருக்க விரும்பினார். அதனால், வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுக்கு பதிலாக உளவுத்துறை அமைப்பின் சேவைகள் பயன்படுத்தப்பட்டன. சுதந்திர இந்திய வரலாற்றில், ஒரு வெளிநாட்டு நபருக்கு கமிஷன் வழங்குவதற்கு பிரதமர் ஒப்புதல் அளித்தது இதுவே முதல் முறை. ஆனால், இந்த உண்மைகள் மொரார்ஜியின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்ட போது, அவர் இதற்கு பெரிதாக முக்கியத்துவம் தரவில்லை" என்று பி ராமன் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் பற்றிய முழு விவரங்களையும் கே. சங்கரன் நாயர் தனது 'இன்சைட் ஐபி அண்ட் ரா' (Inside IB and RAW) புத்தகத்தில் எழுதியுள்ளார். பட மூலாதாரம், LENCER PUBLISHERS படக்குறிப்பு, பி.ராமனின் 'தி கவ் பாய்ஸ் ஆஃப் ஆர்&டபிள்யூ' புத்தகம் உளவுத்துறையின் பட்ஜெட் குறைப்பு அவசரநிலைக்கு எதிராக இருந்தவர்களைத் துன்புறுத்த இந்திரா காந்தி உளவுத்துறையைப் (RAW) பயன்படுத்தினார் என்ற சந்தேகத்தை, மொரார்ஜி தேசாய் ஒருபோதும் விடவில்லை. அதனால், அவர் உளவுத்துறை அமைப்புக்குள் பெரும் அளவில் ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்தார். இதை அறிந்த சங்கரன் நாயர் அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இப்படிச் செய்வது உளவுத்துறைப் பணியாளர்களின் மன உறுதியை பாதிக்கும், பணத்திற்காக வேலை செய்யும் முகவர்களின் பார்வையில் அமைப்பின் நம்பகத்தன்மை குறைந்து விடும் என்று அவர் மொரார்ஜி தேசாயை நம்ப வைக்க முயன்றார். "ஆரம்பத்தில், ஜனதா அரசு, ராவின் பட்ஜெட்டை 50 சதவிகிதம் குறைத்தது. இதனால், பல உளவாளிகளின் சேவைகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர், மொரார்ஜி தேசாய் 50% குறைப்பை வலியுறுத்தவில்லை. ஆனால் அதற்குப் பிறகும், உளவுத்துறையின் பட்ஜெட் கணிசமாகக் குறைக்கப்பட்டது"என்று பி.ராமன் எழுதியுள்ளார். "புதிய உளவாளிகளை சேர்ப்பது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. வெளிநாடுகளில் இருந்த பல பிரிவுகள் மூடப்பட்டன. "என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அவசரநிலையை எதிர்ப்பவர்களைத் துன்புறுத்த இந்திரா காந்தி ராவைப் பயன்படுத்தினார் என்ற சந்தேகத்தை மொரார்ஜி தேசாய் ஒருபோதும் கைவிடவில்லை. விசாரணையில் காவுக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை மொரார்ஜி தேசாய்க்கு, ராவின் நிறுவனர் ஆர்.என். காவ் மீது மிகுந்த அவநம்பிக்கை இருந்தது. அதனால், காவ் தனது பொறுப்பை சங்கரன் நாயரிடம் ஒப்படைக்கும் முன், எந்த ஆவணங்களையும் அழிக்காமல் இருப்பதை உறுதி செய்ய, அமைச்சரவைச் செயலாளர் நிர்மல் முகர்ஜியை அவருடைய அலுவலகத்துக்கு அனுப்பினார். ஆனால், ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே காவின் மீது அரசின் பார்வை மாறத் தொடங்கியது. "உள்துறை அமைச்சராக இருந்தபோது விசாரணை நடத்திய பிறகு, காவ் சரியான முறையில் செயல்பட்டார் என்றும், அவர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் சரண் சிங் ஒப்புக்கொண்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, சரண் சிங்கின் இந்த நடத்தை தனது இதயத்தைத் தொட்டதாக காவ் கூறினார்"என்று முன்னாள் ரா அதிகாரி ஆர்.கே. யாதவ் தனது 'மிஷன் ரா' புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தியாவின் முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங், காவின் பணி குறித்து திருப்தி தெரிவித்திருந்தார். உளவுத்துறை பொறுப்புகள் குறித்த முரண்பாடுகள் உளவுத்துறையின் எதிர்காலம் குறித்து அரசாங்கத்தின் உயர்மட்ட தலைமைக்குள் பெரும் கருத்து வேறுபாடு இருந்தது. மொரார்ஜி தேசாய், அந்த அமைப்பில் கடுமையான ஆள் குறைப்பைச் செய்ய வேண்டும் என்று நினைத்தார். ஆனால் சரண் சிங், அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். அதே நேரத்தில், வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய், அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் வாழும் நாடுகளில் உளவுத்துறை அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். "இதன் காரணமாக, அந்த நேரத்தில் அரசாங்கத்தில் யாருடைய கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்பதைப் பொறுத்து, ராவின் எதிர்காலம் மற்றும் பொறுப்பு குறித்து உயர் தலைமையின் அறிவுறுத்தல்கள் தெளிவாக இல்லை" என்று ராமன் எழுதியுள்ளார். வாஜ்பாயின் நிலைப்பாட்டிலும் மாற்றம் ஜனதா அரசாங்கத்தில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய், ஆரம்பத்தில் தன்னிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார் என்று காவ் பின்னர் ஒரு நேர்காணலில் கூறினார். பதவியை விட்டு விலகும் நேரத்தில் காவ் அவரைச் சந்திக்கச் சென்றபோது, வாஜ்பாய் தன்னை உளவு பார்த்ததாகவும், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்களை இந்திரா காந்திக்கு வழங்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மொரார்ஜி தேசாயுடனான தனது கடைசி சந்திப்பில், வாஜ்பாயின் நடத்தை குறித்து காவ் புகார் கூறினார். காவ் சொல்வதைக் கேட்ட பிறகு, வாஜ்பாய் அவரிடம் அப்படிப் பேசியிருக்கக் கூடாது என்று தேசாய் கூறினார். இது குறித்து வாஜ்பாயிடம் பேசுவதாக உறுதியளித்த தேசாய், பிறகு அதனை பூர்த்தி செய்துள்ளார். சில நாட்களுக்குப் பிறகு, வாஜ்பாய் காவை அழைத்து, மொரார்ஜி தேசாய்க்கு அளித்த புகார் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு, காவைப் பற்றிய வாஜ்பாயின் கருத்து முற்றிலும் மாறியது. 1998 இல் பிரதமரான பிறகு, அவர் காவை நலம் விசாரித்தார். கார்கில் போர் குறித்த கார்கில் மறு ஆய்வுக் குழுவின் அறிக்கை வெளிவந்த பிறகு, வாஜ்பாய் காவை அழைத்து ஆலோசனை நடத்தினார். பட மூலாதாரம், Bloomsbury படக்குறிப்பு, முன்னாள் பிரதமர்கள் அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் ராம்நாத் கோவிந்த் சூழ்நிலையைக் கையாண்ட சாந்தூக் 1980 ஆம் ஆண்டு இந்திரா காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, மொரார்ஜி தேசாய் மற்றும் சரண் சிங்குக்கு நெருக்கமானவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், உளவுத்துறையில் பணிபுரிந்த நான்கு இந்திய காவல் பணி அதிகாரிகளை அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கினார். உளவுத்துறைக்கு மிகவும் இருண்ட காலமாக அது அமைந்தது. புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் நௌஷர்வான் எஃப். சாந்தூக் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தார். அப்போது கூட்டுப் புலனாய்வுக் குழுவின் தலைவராக சாந்தூக் இருந்தார். அங்கு அனுப்பப்படுவதற்கு முன்பு, அவர் உளவுத்துறையில் காவ் மற்றும் சங்கரனுக்குப் பிறகு மூன்றாவது இடத்தில் இருந்தார். இந்திய கடற்படையில் தனது பணியைத் தொடங்கிய அவர், பின்னர் இந்திய காவல் பணியில் இணைந்தார். பின்னர் வடகிழக்கு மாநிலங்களை நிர்வகிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்திய எல்லைப்புற நிர்வாகப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 1980 ஆம் ஆண்டு இந்திரா காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்தார். மூன்று பிரதமர்களுடன் பணியாற்றிய சாந்தூக் சாந்தூக்கை, காவ் முன்பே அறிந்திருந்தார். அவரை உளவுத்துறையில் சேரவும் சம்மதிக்க வைத்தார். "நாயரைப் போலவே, சாந்தூக்கும் மிகவும் தொழில்முறை மற்றும் அரசியல் சாராத அதிகாரியாக இருந்தார். ரா தலைவரான பிறகு, அவர் பிரிகேடியர் ஐஎஸ் ஹசன்வாலியாவை இரண்டாம் நிலை அதிகாரியாக தேர்வு செய்தார். ஓய்வு பெற்ற பிறகு, எஸ்பி கர்னிக் மற்றும் அவருக்குப் பிறகு சிவராஜ் பகதூர் ஆகியோர் அவரது அவரது இரண்டாம் நிலை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்" என்று பி ராமன் குறிப்பிட்டுள்ளார். "மொரார்ஜி தேசாய், சரண் சிங் மற்றும் இந்திரா காந்தி ஆகிய மூன்று பிரதமர்களுடன் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்ற ஒரே உளவுத்துறை அதிகாரி சாந்தூக் ஆவார்." மொரார்ஜியின் தீவிர எதிர்ப்பாளராக இருந்த இந்திரா காந்தி, 1980 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகும் சாந்தூக்கைப் பதவியில் இருந்து நீக்கவில்லை. பட மூலாதாரம், Bloomsbury படக்குறிப்பு, ராம்நாத் காவ், ரா நிறுவனர் சாந்தூக் மற்றும் தேசாய் இடையே காணப்பட்ட ஒற்றுமை சாந்தூக்கிடம் தனக்கு முன்பிருந்தவர்களை பெருமையாகப் பேசும் அல்லது விமர்சிக்கும் பழக்கம் அவருக்கு இல்லை. "சாந்தூக், காவ் மற்றும் இந்திரா காந்தியின் ரகசியங்களை வெளிப்படுத்துவதன் மூலம் மொரார்ஜியுடன் நெருங்கிப் பழகியிருக்கலாம், ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. அவர் தனிப்பட்ட முறையில் காவுக்கும் விசுவாசமாக இருந்தார்" என சஞ்சோய் கே. சிங் தனது 'மேஜர் ஆபரேஷன்ஸ் ஆஃப் ரா' புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். "மொரார்ஜியின் பதவிக் காலத்தில், காவ் தவிர, வேறு எந்த மூத்த அதிகாரியையும் உளவுத்துறையில் இருந்து நீக்காததற்காக சாந்துக் பாராட்டப்பட வேண்டும். பதவியேற்ற சில மாதங்களுக்குள், அவர் தேசாய் உடன் நல்ல தனிப்பட்ட உறவை வளர்த்துக் கொண்டார்"என்றும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பட மூலாதாரம், Lenin's Media படக்குறிப்பு, சஞ்சய் கே. சிங் எழுதிய 'Major operations of R&AW' புத்தகம் சேத்னா மூலம் மொரார்ஜி தேசாய்க்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் 1977 ஆம் ஆண்டில், வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்குள் உள்ள சில வட்டாரங்களில், இந்தியா அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக நம்பகமான வட்டாரங்களிலிருந்து சாந்தூக் அறிந்து கொண்டார். மும்பையில் வசிக்கும் அணு விஞ்ஞானி முனைவர் ஹோமி சேத்னாவின் ஆலோசனையை பிரதமர் மொரார்ஜி தேசாய் புறக்கணிக்க மாட்டார் என்பதை அவர் அறிந்திருந்தார். "ராம்நாத் காவ் மட்டுமே சேத்னாவை மொரார்ஜி தேசாயுடன் பேச சம்மதிக்க வைக்க முடியும் என்பதை சாந்தூக் அறிந்திருந்தார்" என்று நிதின் கோகலே குறிப்பிட்டுள்ளார். இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் சேத்னாவும், காவும் பல ஆண்டுகள் ஒன்றாகப் பணியாற்றினர். சேத்னாவைச் சந்திக்க ரா அதிகாரியான வி. பாலச்சந்திரனை காவ் அனுப்பினார். மொரார்ஜி தேசாய் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) கையெழுத்திடுவது இந்தியாவின் நலனுக்கு எதிரானது என்பதை சேத்னா மூலம் அவரை நம்ப வைப்பது தான் அவருக்குக் கொடுக்கப்பட்ட பணி. சேத்னாவுக்கும் மொரார்ஜிக்கும் இடையே என்ன உரையாடல் நடந்தது என்பது குறித்த தகவல்கள் பொதுவில் கிடைக்கவில்லை, ஆனால் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற சர்வதேச அழுத்தத்திற்கு இந்தியா அடிபணியவில்லை என்பதே உண்மை. "இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தால், பொக்ரான்-2 நடந்திருக்காது, இந்தியாவுக்கு அணு ஆயுதங்கள் இருந்திருக்காது, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் எந்த அணுசக்தி ஒப்பந்தமும் இருந்திருக்காது" என்று கோகலே குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம், PHOTO DIVISION படக்குறிப்பு, அணு விஞ்ஞானி முனைவர் ஹோமி சேத்னா பழைய நிலைக்குத் திரும்பிய உளவுத்துறை மொரார்ஜி தேசாய் பிரதமராகப் பணியாற்றிய போது, உளவுத்துறையிடம் இருந்து பெறப்படும் புலனாய்வுத் தகவல்களின் முக்கியத்துவத்தை உணர்ந்தார். 1979 ஆம் ஆண்டு வாக்கில், சாந்தூக் தலைமையில், மொரார்ஜி தேசாயின் மனதில் இருந்து எதிர்மறை பிம்பத்தை அகற்றுவதில் உளவுத்துறை வெற்றி பெற்றது. ஆனால், அவர் அந்த சேவைகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு, ஜனதா கட்சியில் பிளவு ஏற்பட்டு, அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. 1980 இல் இந்திரா காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, உளவுத் துறையின் பழைய முக்கியத்துவம் வாய்ந்த சகாப்தம் திரும்பியது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crmex77kmr1o

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

2 months 1 week ago
மூன்றையும் வைத்து சமாளிக்க…. இடுப்பில் நல்ல பலமும் இருக்க வேண்டும். கருணாநிதி என்ன உணவு சாப்பிட்டார் என யாருக்காவது தெரியுமா.

குளிக்க சிறந்த நேரம் காலையா அல்லது இரவா? எது அதிக நன்மை தருகிறது?

2 months 1 week ago
படத்தில்… குளிப்பவரின் கமக்கட்டு முழுக்க ஒரே காடாக பார்க்க அசிங்கமாக இருக்கின்றது. 🤮 அவரை முதலில்… அதுகளை சவரம் செய்து விட்டு, குளிக்கச் சொல்லுங்க, ப்ளீஸ்….. 😂