2 months 2 weeks ago
“முதல் முதல் வாழ்ந்த கிராமத்து வீடு முதல் முதல் ஆக்கிய கூட்டாஞ் சோறு …” ஞாபகம் வருதே ஞாபகம் வருதே… மீண்டும் மீட்டிப் பார்க்க வைத்தது👍
2 months 2 weeks ago
அப்போதிருந்த இலங்கை 83 இல் உலக கோப்பையினை வென்ற இந்தியணி போன்றது என நினைக்கிறேன், ஆனால் இப்போதுள்ள இந்தியணி மிக பலமான அணி ஆனால் இதே இந்தியணியினை 2000 இலிருந்த அவுஸ் அணியுடன் ஒப்பிட முடியாது, 2000 இலிருந்த அவுஸ் அணி போல இந்தியணி உருவெடுக்குமா என தெரியவில்லை. தற்போதய இலங்கை அணி திறமையான அணி, ஆனால் ஏனோ மோசமாக விளையாடுகிறார்கள் (விளையாட்டு ஒழுக்கமின்மை?), இந்த அணி பழைய அணிக்கு எந்த விதத்திலும் திறமையில் குறைவில்லை, ஒரு போட்டியில் மகேல 77 (முதலாவது போட்டி?) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்து, வீரர்கள் தங்கும் அறைக்கு செல்லும் போது அவரை ரணத்துங்க அவரது மோசமான அடி தேர்வினால் ஆட்டமிழந்தமைக்காக அவரை திட்டினதாகவும் அவர் உள்ளே போகாமல் படிக்கட்டிலே இருந்ததாகவும் கூறியிருந்தார், அதே போல் ஜெயசூரியாவும் தனது சம்பவம் ஒன்றைனை கூறியிருந்தார். இலங்கையிலிருக்கும் போது வெளிநாடு வருவதில்லை என நினைத்திருந்தேன், ஆனால் வெளிநாடு வந்த பின்பு நினைத்தேன் எனது வாழ்வின் பெரும்பகுதியினை இலங்கையில் வீணாக்கிவிட்டேன் என, ஆனாலும் இலங்கை ஒரு நல்ல நாடுதான், முட்டாள் அரசியல்வாதிகளினால் இந்த நிலைக்கு வந்துவிட்டது. இலங்கை அணி மைதான ஈரலிப்பு வரும் என நினைத்து தவறான முடிவு எடுத்திருப்பார்களோ? நீங்கள் என்ன நினைகிறீர்கள்? மழை வந்ததால் மைதான ஈரலிப்பு வராது என தெரிந்திருந்தாலும் மழையின் பின்னர் ஏற்படும் ஒரு சூழல் மாற்றத்தினை தவறாக புரிந்து கொள்ளவாய்ப்பு உள்ளது என கருதுகிறேன். காற்றின் வெப்பத்திற்கேற்ப அது கொள்ளும் ஈரப்பதன் கொள்ளவில் மாற்றம் ஏற்படும், அதிக வெப்பமான காற்று அதிகமான ஈரப்பதனை கொண்டிருக்கும், இரவு நேரத்தில் காற்று குளிராகும் போது காற்று கொண்டிருந்த ஈரப்பதனில் ஒரு பகுதியினை கைவிடுகிறது (Dew), குளிர்பான போத்தில், டின் இவற்றுக்கு வெளியே நீர்த்துளிகள் தோன்றுவது போல, ஆனால் மழை காற்று ஒடுங்கும் போது (பாரம்) மழை உருவாகிறது, அதனால் மழையின் பின்னர் அந்த மழை கொண்டிருந்த வெப்பம் சுற்றாடலில் மறை வெப்பமாக வெளிவிடப்படும், அது ஒரு வெக்கையான உணர்வினை தரும், ஆனால் காற்றில் அதிகரித்த ஈரப்பதன் மேலதிகமாக ஈரப்பதனை கொள்ள முடியாமல் ஏற்படும் புழுக்கம் போன்ற உணர்வு இரு வேறுபட்ட விடயம் (மழை மற்றும் மைதான ஈரப்பதன்). இது ஒரு தவறான உள்ளுணர்வு முடிவாக இருந்திருக்கலாமோ என தோன்றுகிறது. எல்லோரும் வைத்தியராகவும் பொறியலாளராகவேணும் என நினைத்தால் மற்ற வேலைகளை யார் செய்வது?🤣
2 months 2 weeks ago
“நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே…” என்ற பாடல் வரும் என்று பார்த்தேன். வரவில்லை. சுப்பர் ஸ்ராரை விடுங்கள். அவர் இன்னும் கோடிகளில் வாங்கிக் கொண்டிருக்கிறார். சித்தர்களை நான் கண்டது கண்ணதாசனிடம்தான். சித்தர்களுடைய பல பாடல்களை கண்ணதாசன் எல்லோருக்கும் புரியும்படி மிக எளிமையாக்கித் தந்திருப்பார். உதாரணத்துக்கு சிவவாக்கியர் பாடலில் உள்ளதை, “சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி…” என்ற பாட்டில், “உடைத்த கல்லில் ஒன்று தெய்வம் ஒன்று கோவில் ஒன்று வாசல் இறைவன் படைப்பில் எல்லாம் ஒன்றே இடத்தைப் பொறுத்தே எதுவும் மாறும்..” சிவ வாக்கியர் சொன்ன கருத்துக்கள் எல்லாம் சிறப்பானவை. ஆனால் அவர் பிறக்கும் போதே ‘சிவ சிவ’ சொன்னதும் மண்ணை சோறாக்கி சுரைக்காயை கறியாக்கிய கதை எல்லாம் பின்னால் வந்தவர்கள் அவிட்டு விட்ட கட்டுக் கதைகள்
2 months 2 weeks ago
அப்போ இந்த மாநாடு கொல்லம் மாவட்டம், கேரளாவில் நடக்கப்போகிறது.
2 months 2 weeks ago
2 months 2 weeks ago
2 months 2 weeks ago
Bjp Eswaramoorthy Kannan · இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் , இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும், இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது சித்த மருத்துவர் பாக்கம் தமிழன் தமிழ் மருத்துவ அறிவுரைப்பா மூளைக்கு வல்லாரை முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை எலும்பிற்கு இளம்பிரண்டை பல்லுக்கு வேலாலன் பசிக்குசீ ரகமிஞ்சி கல்லீரலுக்கு கரிசாலை காமாலைக்கு கீழாநெல்லி கண்ணுக்கு நந்தியாவட்டை காதுக்கு சுக்குமருள் தொண்டைக்கு அக்கரகாரம் தோலுக்கு அருகுவேம்பு நரம்பிற்கு அமுக்குரான் நாசிக்கு நொச்சிதும்பை உரத்திற்கு முருங்கைப்பூ ஊதலுக்கு நீர்முள்ளி முகத்திற்கு சந்தனநெய் மூட்டுக்கு முடக்கறுத்தான் அகத்திற்கு மருதம்பட்டை அம்மைக்கு வேம்புமஞ்சள் உடலுக்கு எள்ளெண்ணை உணர்ச்சிக்கு நிலப்பனை குடலுக்கு ஆமணக்கு கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே கருப்பைக்கு அசோகுபட்டை களைப்பிற்கு சீந்திலுப்பு குருதிக்கு அத்திப்பழம் குரலுக்கு தேன்மிளகே! விந்திற்கு ஓரிதழ்தாமரை வெள்ளைக்கு கற்றாழை சிந்தைக்கு தாமரைப்பூ சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை கக்குவானுக்கு வசம்புத்தூள் காய்ச்சலுக்கு நிலவேம்பு விக்கலுக்கு மயிலிறகு வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர் நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர் வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ வெட்டைக்கு சிறுசெருப்படையே தீப்புண்ணா குங்கிலியவெண்ணை சீழ்காதுக்கு நிலவேம்பு நாப்புண்ணிற்கு திரிபலாவேலன் நஞ்செதிர்க்க அவரிஎட்டி குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான் குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர் பெரும்பாட்டிற்கு அத்திநாவல் பெருவயிறுக்கு மூக்கிரட்டை கக்கலுக்கு எலுமிச்சைஏலம் கழிச்சலுக்கு தயிர்சுண்டை அக்கிக்கு வெண்பூசனை ஆண்மைக்கு பூனைக்காலி வெண்படைக்கு பூவரசு கார்போகி விதைநோயா கழற்சிவிதை புண்படைக்கு புங்கன்சீமையகத்தி புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல் கரும்படை வெட்பாலைசிரட்டை கால்சொறிக்குவெங்காரபனிநீர் கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே உடல்பெருக்க உளுந்துஎள்ளு உளம்மயக்க கஞ்சாகள்ளு உடல்இளைக்க தேன்கொள்ளு உடல் மறக்க இலங்கநெய்யே அருந்தமிழர் வாழ்வியலில் அன்றாடம்சிறுபிணிக்கு அருமருந்தாய் வழங்கியதை அறிந்தவரை உரைத்தேனே!! Voir la traduction.....!
2 months 2 weeks ago
😂😂உருட்டுதான் எங்கள் சொத்து🤗🤗❤❤ · Sivasubramanian Sankaralinganadar ·osntSodpre2hihiH1hgaf8g 04r43132mu1 i5feu2:3u027l10a,9ammmcà · (அதனால்தான் டாடா பெரும் கோடீஸ்வரர்) JRD Tata விடமிருந்து அமிதாப் கற்றுக் கொண்டார் அமிதாப் சொல்கிறார்... எனது வாழ்க்கையில் புகழின் உச்சக் கட்டத்தில் நான் இருந்த போது, விமானம் மூலம் ஒரு முறை பயணம் செய்தேன். எனக்கு அருகில் இருந்த பயணி, ஒரு சாதாரண சட்டை,பேண்ட் அணிந்து அமர்ந்திருந்தார். வயதான மனிதர், நடுத்தர வர்க்கம், நன்கு படித்தவர் போன்று அவர் தோன்றினார். நான் யார் என்பதை மற்ற பயணிகள் கண்டு கொண்டார்கள். என் இருக்கையின் அருகில் வந்து ஹலோ சொல்லி கை கொடுத்தனர். ஆனால் இந்த மனிதர் மட்டும் என் இருப்பை உணரவும் இல்லை. என்னை கண்டு கொள்ளவும் இல்லை. ஒருவேளை, அவர் நாளிதழை உன்னிப்பாக படித்துக் கொண்டிருந்ததால், என்னை கவனிக்கவில்லையோ என எண்ணினேன். தேநீர் வழங்கப்பட்ட போது, அமைதியாக அதை எடுத்து, ரசித்து பருக ஆரம்பித்தார். என்னை அவருக்கு யார் என்று தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் தவிர்க்கிறாரா? என்னால் பொருத்து கொள்ள முடியாமல், அவருடன் ஒரு உரையாடலைத் துவக்கும் முயற்சியில் நான் அவரை பார்த்து சிரித்தேன். அந்த மனிதரும் புன்னகை செய்து, 'ஹலோ' என்று சொன்னார். நாங்கள் பேச ஆரம்பித்தோம். சமூகம், பொருளாதாரம், அரசியல், என்று பல விஷயங்களை பற்றி பேசினோம். அவரின் பேச்சில், ஒரு லயிப்பும் ஈர்ப்பும், தேர்ந்த ஒரு நேர்த்தியும் இருந்ததை நான் உணர்ந்தேன். சினிமா மற்றும் திரைப் படங்கள் சம்பந்தமான விஷயங்களை நான் வேண்டுமென்றே கொண்டு வந்தேன். நீங்கள் திரைப்படங்கள் பார்ப்பீர்களா என வினவினேன். ஓ, மிக சில. பல ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்திருக்கிறேன் என அந்த மனிதர் பதிலளித்தார். நான் திரைப்பட துறையில் தான் இருக்கிறேன் என்று குறிப்பிட்டேன். அப்படியா? ரொம்ப நல்லது. நீங்கள் அந்த துறையில் என்ன செய்கிறீர்கள் என கேட்டார். நான் ஒரு நடிகர் என பதிலளித்தேன். அவரிடமிருந்து எந்த வித சலனமும் இல்லை. அதன் பின் நாங்கள் இறங்கி வெளியேறும் போது, உங்களுடன் பயணம் செய்தது மிக்க மகிழ்ச்சி. நல்லது, என் பெயர் அமிதாப் பச்சன் என்றேன். அந்த மனிதரும் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டே, உங்களை சந்தித்த இந்த நாள், நல்ல நாளாக இருக்கட்டும் என கூறி: என் பெயர்: JRD டாட்டா. மோட்டார் தொழில் செய்கிறேன் என்றார் பணிவுடன். நான் விக்கித்து நின்று விட்டேன். அன்றுதான் நான் கற்றுக் கொண்டேன் பணிவை பற்றி. பேரையும், புகழையும் வைத்து, நாம் தான் பெரிய ஆள், என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால், நம்மை விட வசதியிலும், அறிவிலும், படிப்பிலும் உயர்ந்தவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். எப்போதுமே பணிவாய் பேசுங்கள். நல்ல நடத்தை, பண்பு என்பது அறிவை விட மேலானது. வாழ்க்கையில் பல கால கட்டங்களில், அறிவு, பணிவிடம் தோற்றுப் போய் உள்ளது. பணிவும் நல்ல நடத்தையும், எல்லா இடத்திலும் வென்றுள்ளது. எந்த சூழ்நிலையிலும், பணிவுடனும், அடக்கத்துடனும் நடந்து கொள்ளுங்கள். அது உங்களை சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் கொண்டு போய் வைக்கும். Voir la traduction.......! "அடக்கம் அமரருள் உய்க்கும் " .......!
2 months 2 weeks ago
நான் எப்போதும் நடுநிலை தவறாதவன் என்று புரிந்து கொண்டால் மகிழ்ச்சி .........! 😃
2 months 2 weeks ago
@suvy தலைவர் 8வது இடத்தில் நிப்பதை பார்க்க மகிழ்ச்சியா இருக்கு சில பிழைகள் தெரியாம விட்டாலும் நல்ல புள்ளியோட நிக்கிறீங்கள்👍.....................
2 months 2 weeks ago
வினா 13) 88 ஓட்டங்களினால் இங்கிலாந்து அணி, இலங்கை அணியை தோற்கடித்தது. 11 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்து இருக்கிறார்கள் . 1) அகஸ்தியன் - 25 புள்ளிகள் 2) ஏராளன் - 23 புள்ளிகள் 3) கிருபன் - 23 புள்ளிகள் 4) ரசோதரன் - 23 புள்ளிகள் 5) வீரப்பையன் - 23 புள்ளிகள் 6) ஆல்வாயன் - 21 புள்ளிகள் 7) நியூபலன்ஸ் - 21 புள்ளிகள் 8) சுவி - 20 புள்ளிகள் 9) புலவர் - 19 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 17 புள்ளிகள் 11) வாதவூரான் - 17 புள்ளிகள் 12) கறுப்பி - 17 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 17 புள்ளிகள் 14) வாத்தியார் - 15 புள்ளிகள் 15) வசி - 15 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 13, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
2 months 2 weeks ago
நான் சும்மா சொல்ல வில்லை அண்ணா 19வயதுக்கு உள் பட்ட இலங்கை மகளிர் நல்லா விளையாடுகினம் , அன்மையில் அவுஸ்ரேலியா மகளிருக்கும் இலங்கை மகளிருக்கும் போட்டி நடந்தது அனைத்து போட்டிகளிலும் இலங்கை மகளிர் அவுஸ்ரேலியா மகளிர வென்றவை......................40வயது மகளிர்கள் இளம் மகளிருக்கு வழி விடனும் அண்ணா......................நான் ஒரு விளையாட்டு பையித்தியம் ஒன்றையும் விட்டு வைக்க மாட்டேன் எல்லாத்தையும் மேல் ஓட்டமாய் பார்ப்பேன் லொள்😁👍...........................
2 months 2 weeks ago
இலங்கை அணியில் யார் விளையாடினாலும், அது தோற்கத்தான் போகின்றது.............. ஆனால் 'இளசா போடுங்கோ, இளசா போடுங்கோ ...........................' என்று பையன் சார் கேட்கிறதிலயும் ஒரு நியாயம் இருக்குது....................😜.
2 months 2 weeks ago
சங்கிகள் காங்கிரசின் பதவி சுகத்துக்கு ஆப்படித்தவர்கள். ஆகவே சங்கிளை அவர்கள் வளர்க்கவில்லை. ஆனால் 1990 களில் வடக்கே சங்கி ஆதரவு வாக்குகளை கவர காங்கிரஸ் முயன்றதே அதன் நிலை மாற்றத்துக்கும், இன்றைய அவல நிலைக்கும் காரணம். விபி சிங் என்ற அற்புதமான மனிதனை அகற்றி, மண்டல் கமிசன் விடயத்தில் பிஜேபி யோடு சேர்ந்து காங்கிரஸ் ஆடிய தப்பாட்டமே காங்கிரசின் வீழ்ச்சியின், பிஜேபியின் எழுச்சியின் முதல் அத்தியாயம். சங்கிகளை காங்கிரஸ் வளர்க்கவில்லை, ஆனால் ஜனதா வை அழிக்க காங்கிரஸ் செய்தவை+ வடக்கில் கிளறப்பட்ட மதவெறி பிஜேபி வளர ஏதுவானது. இதில் திமுக, அதிமுக என கூட்டணி வைத்த கட்சிகளுக்கும் பங்குண்டு. பிகு உங்களுக்கு ஆதரவான கருத்தை விகடன் வெளியிட்டால் பகிரும் நீங்கள்… சீமானை பற்றி விகடன் எழுதினால் திமுக கைக்கூலி, விபச்சார ஊடகம் என எழுதுவதேன் புலவர்? ஒரே விகடன் சில சமயம் கணிகையாய், சில சமயம் கண்ணகியாய் அமைவது எப்படி?
2 months 2 weeks ago
இந்தியா….. ஆப்கானிஸ்தானை, பாகிஸ்தானுடன் சண்டை பிடிக்கச் சொல்லி, கொம்பு சீவி விடுகின்றார்கள் போலுள்ளது. 😂 ட்றம்புக்கு…. நோபல் பரிசு கொடுக்காத படியால், எக்கேடு ஆவது கெட்டுப் போங்கோ என்று…. அவரும் சமாதானம் பேச வர மாட்டார். 🤣 நமக்கென்ன…. இவங்கள் சண்டை பிடிக்கிறதை வேடிக்கை பார்ப்போம். 😁😂🤣
2 months 2 weeks ago
இதுக்கு முதல் ஆண்களின் பல போட்டிகள் இந்த மைதானத்தில் நடந்து பெரிய அணிகள் ஆன இந்தியா மற்றும் அவுஸ்ரேலியாவை போன ஆண்டும் இந்த ஆண்டும் இலங்கை அணி தொடரை வென்றது.............. நானயத்தில் வென்று இலங்கை மகளிர் ஏன் பந்து வீச்சை தெரிவு செய்தா தெரியல................... வயதான மகளிர விட இளம் மகளிருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் , 19வயதுக்கு உள் பட்ட மகளிர் நல்லா விளையாடுகினம்.......................
2 months 2 weeks ago
2 months 2 weeks ago
இலங்கை ஒன்றிரண்டு போட்டிகள் வெல்லும் என்றுதான் நானும் நினைத்து, இன்று வெல்லக்கூடும் என்று நினைத்தேன். முக்கியமாக அவர்கள் சொந்த மைதானத்தில் விளையாடினார்கள். அதோட, சாமரி ஒரு 100 அடித்தால்தான் ஏதாவது வாய்ப்பு.
2 months 2 weeks ago
பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். மேலே சில கட்சிகளை போலி என்றேனே? அப்படி ஒரு போலிதான் காங்கிரசும். ரஜீவை திமுக புலிகளை வைத்து கொலை செய்தத்து என்பார்கள் சில வருடங்களில் கூட்டணி. அதேபோல் மதசார்ன்மை என கூவி கொண்டே கரசேவையை அனுமதிப்பார்கள். ஆகவே தான் -(சங்கி) கொள்கையில் தடம் மாறாமல் இருக்கும் பாஜக மிக ஆபதானவர்கள். ஜெயலலிதா பற்றி நீங்கள் எழுதுவதில், திமுகவில் சில குடும்பங்கள், தெலுங்கு வம்சாவழி ஆதிக்கம் கூட, களைய வேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை. நானே இவை பற்றி பலதடவை எழுதியிம் உள்ளேன்.
2 months 2 weeks ago
ஐயா, உங்களுக்கு நான் எழுதியது விளங்கவில்லை என்பது எனக்கு விளங்குகிறது. இப்போ வாசகருக்கும் விளங்கி இருக்கும். நீங்கள் கோட் பண்ணி இருக்கும் எனது எழுத்துக்களை மீள ஒருதரம் வாசிக்கவும். அப்போதும் விளங்கவில்லை எனில் சொல்லவும், விரிவாக விளக்கம் தரலாம். புலவருக்கு விளங்கியாதால் லைக் போட்டுள்ளார்.