2 months 1 week ago
இனிமேல் பாலஸ்தீனம் என்ற எதுவும் கிடையாது! இனி பாலஸ்தீன நாடு என்று எதுவும் கிடையாது எனவும், அந்த நிலம் தங்களுக்கே சொந்தமானது எனவும் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் மேலும் இஸ்ரேலிய குடியேற்றத்தை விரிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய E1 குடியேற்ற விரிவாக்க திட்டத்தில் நேற்று கையெழுத்திட்டதன் பின்னர் ஊடகங்களை சந்தித்து கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்””எங்கள் வாக்குறுதிகள் நிறைவேறி வருகின்றன. இனி பாலஸ்தீன நாடு என்றவொன்று இல்லை. இந்த நிலம் எங்களுடையது மட்டுமே. இங்கு இன்னும் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்படும். நமது கலாச்சாரம், நிலம் பாதுகாக்கப்படும். மேற்குக் கரையின் மக்கள் தொகை இரட்டிப்பாகும். இங்கு பல சிறந்த விஷயங்கள் நடக்கும்” என்று கூறினார். இஸ்ரேலில் குடியேறிகளுக்கு 3,000 புதிய வீடுகளைக் கட்டுவதற்கான திட்டமே E1 ஆகும். மேற்குக் கரையின் மாலே அடுமிம் பகுதியில் உள்ள குடியிருப்புகளை ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமுடன் இணைக்கும் இந்தத் திட்டம், கிழக்கு ஜெருசலேமிலிருந்து உள்ள பாலஸ்தீனியர்களிடமிருந்து மேற்குக் கரையை முற்றிலுமாகத் துண்டிக்கும். சர்வதேச அழுத்தத்தால் பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த E-1 திட்ட பணிகள் கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கியது. பாலஸ்தீனியர்களுக்காக பிரத்தியேகமாக வடக்கு மற்றும் தெற்கு மேற்குக் கரைகளை இணைக்கும் சாலையை அமைக்கும் திட்டத்தை இஸ்ரேல் இதன் மூலம் தொடங்கியது. இது பாலஸ்தீனியர்கள் பிரதான நெடுஞ்சாலையில் நுழைவதைத் தடுக்கும். தற்போதைய நிலவரப்படி, மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் உள்ள 300 சட்டவிரோத குடியிருப்புகளில் சுமார் 700,000 இஸ்ரேலிய குடியேறிகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1446977
2 months 1 week ago
அது வழமையான துண்டு போடும் நடவடிக்கை அண்ணோய்!(ஆட்சிமாறினால்)
2 months 1 week ago
உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து விடைபெற்ற மஹிந்தவின் பதிவு! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விஜேராமவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிய பின்னர், அந்த சம்பவம் குறித்து தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளார். அந்தப் பதிவில், ஜனாதிபதிகளுக்கான உரித்துரிமைகளை நீக்கும் சட்டமூலம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் நடைமுறைக்கு வந்த புதிய சட்ட நிலைமைக்கு மதிப்பளித்து, தான் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியதாகக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி தனது பேஸ்புக் கணக்கில் இட்டுள்ள பதிவு பின்வருமாறு, "ஜனாதிபதிகளுக்கான உரித்துரிமை நீக்க சட்டமூலம் கடந்த 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் நடைமுறைக்கு வந்த புதிய சட்ட நிலைமையை மதித்து, எனக்கு சட்டப்பூர்வமாக ஒதுக்கப்பட்ட விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து நான் நேற்றைய தினம் (11) வெளியேறினேன். விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற ஊடகங்களில் சிலர் இதற்கு முன்னர் வௌியிட்ட பல்வேறு கருத்துக்களை நான் அவதானித்தேன். மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது மிகக் குறுகிய காலத்தில் நாளுக்கு நாள் மக்களின் அதிருப்தி சம்பாதித்து வரும் குழு தங்கள் திறமையின்மையை மறைக்க ஊடகங்களில் வெளியிட்ட அந்த கருத்துகளுக்கு கீழ்ப்படிய வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை. இருப்பினும், பின்னர், அவர்களால் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டதன் மூலம், 24 மணி நேரத்திற்குள் விஜேராம இல்லத்திற்கு விடைகொடுத்தேன். ஏனென்றால் நாம் சட்டத்தை மதிக்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ என்ற நான், சட்டத்தின் முன்பும், என் மக்கள் முன்பும் மட்டும் தான் தலை வணங்குவேன். தனிப்பட்ட பழிவாங்கலை நோக்கமாகக் கொண்ட ஒழுக்கமற்ற, தொழில்முறையற்ற அரசியல் பயங்கரவாதத்தை நாம் அனைவரும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மேலும், கொடூரமான பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததால், அது தொடர்பாக எழுந்த நிகழ்வுகளின் இலக்காக நான் மாறிவிட்டேன். ஆனால் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததற்கு நான் ஒருபோதும் வருத்தப்பட மாட்டேன். இந்த தாய்நாட்டில் சுதந்திரமாக சுவாசிக்கும் உரிமைக்காக நான் போராடினேன். சுவாசம் நம் அனைவருக்கும் பொதுவானது. இனம் அல்லது மத வேறுபாடு இல்லை. எமது சுவாசத்திற்காக தங்களின் மூச்சை இழந்தவர்கள் இராணுவ வீரர்களே. அவர்கள் வென்ற ஒரு பெருமைமிக்க தேசத்தின் சுதந்திரத்தை அடையாளப்படுத்தவும், அதற்கு நன்றி தெரிவிக்கவும், நாங்கள் அனைவரும் புனித நகரமான அனுராதபுரத்தில் சந்த ஹிரு சேயவை உருவாக்கினோம். சந்திரனும் சூரியனும் இருக்கும் வரை, எங்கள் தாய்நாடு ஒரே நாடாக, ஒரே கொடியின் கீழ் இருக்கும் என்பதை இது குறிக்கிறது. எனது மூத்த மகன் நாமல் கூறியது போல நான் எல்லாம் தொடங்கிய எனது சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டேன். நாங்களே கட்டிய தெற்கு அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து வந்தேன். இப்போது கிராமத்தில் புளிப்பு மீன் குழம்பை அனுபவிக்க முடியும். அதை கொழும்புக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், இது அனைத்தும் இந்த பூமியிலிருந்து தொடங்கியது. மஹிந்த ராஜபக்ஷ என்ற இளைஞன் 1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கிருவாவிலிருந்து போட்டியிட்டார். எனக்கு அந்த வாய்ப்பை வழங்கியவர் சிறிமாவோ பண்டாரநாயக்கா. ஒரு இளம் எம்.பி.யாக நான் பின்பற்ற வேண்டிய பாதையை அவர் எனக்குக் காட்டினார். அவர் எங்களுக்கு ஒரு தலைவராகவும் தாயாகவும் இருந்தார் என்று சொல்வது உண்மைதான். அரசியலில் சரியான வழிகாட்டுதலை வழங்குவது மிகவும் முக்கியம். ருஹுணு எம்.பி.யாக இருந்த எனது மறைந்த அன்புக்குரிய தந்தை, நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களை சோசலிசத்தை நோக்கி வழிநடத்திய பண்டாரநாயக்காவின் பின்னால் எப்போதும் இருந்தார். ருஹுணு பெலியத்தவில் மக்களின் அபிலாஷைகளை என் தந்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். இளைய எம்.பி.யாக 1970 இல் மக்கள் அரசாங்கத்தின் முதல் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை உரையை நான் நிகழ்த்தினேன். ருஹுணு பெலியத்தவில் மக்களின் அபிலாஷைகளைப் பற்றிப் பேசியது எனக்கு நினைவிருக்கிறது. இருண்ட காலங்களில் இருந்த அரசியல் அடக்குமுறை மற்றும் பழிவாங்கல்களைத் தாண்டி, காணாமல் போனவர்களின் சார்பாக ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்குச் சென்றவர் இந்த மஹிந்த ராஜபக்ஷதான். காணாமல் போதல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முன்னிலையாகி சட்ட உதவி வழங்கப்பட்ட இடத்தின் முகவரியான "சட்டத்தரணி மஹிந்த ராஜபக்ஷ, தலைவர் - மனித உரிமைகள் மற்றும் சட்ட உதவி மையம், கார்ல்டன், தங்காலை". என்பதை எனது நண்பர்களுக்கு நான் மீண்டும் நினைப்படுத்த விரும்புகிறேன். பாதயாத்திரைகள், பொதுமக்கள் கூக்குரல், மனித சங்கிலி போன்ற அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் மக்களின் நலனுக்காக ஜனநாயக வழிமுறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் உண்மையான மக்கள் போராட்டங்களுக்கு எடுத்துக்காட்டுகள். யாரும் தங்கள் அரசியல் அழுத்தங்கள் மற்றும் பதட்டங்களை சமாளிக்க ஜனநாயகத்திலிருந்து விலக முடியாது. தவறான தகவல்களை பிரச்சாரம் செய்து பிரதான எதிர்க்கட்சி சித்தாந்தவாதிகளை அடக்குவதற்கான முயற்சி வருந்தத்தக்கது. மக்கள் நம் மீது வைத்திருந்த நம்பிக்கைகள் அதிகமாக இருந்தன. அந்த நம்பிக்கைகளின் தீவிரத்தினால்தான் கடந்த காலங்களில் சில சம்பவங்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மஹிந்த ராஜபக்ஷ தனது இதயத்திற்கு ஏற்பவும் நாட்டிற்காகவும் முடிவுகளை எடுத்தார். மக்களின் அன்பையும் பாசத்தையும் விட எனக்கு மதிப்புமிக்கது எதுவுமில்லை. கடந்த காலத்திலும் இன்றும் நான் பெற்ற அதே மக்களின் அன்பைப் பெறுவது எனது பாக்கியம். அந்த வரப்பிரசாதத்தை யாராலும் என்னிடமிருந்து பறிக்க முடியாது. எங்கள் மரியாதைக்குரிய மதத்தலைவர்களிடம் இருந்து நான் எப்போதும் பெற்ற ஆசீர்வாதங்கள் பொருள் சலுகைகளுக்கு அப்பாற்பட்டவை. என் அன்பு மனைவி ஷிராந்தி அரசியலில் ஈடுபடுவதற்குத் தேவையான மன சுதந்திரத்தை எனக்கு வழங்குவதன் மூலம் எப்போதும் எனக்கு பலத்தை அளித்து வருகிறார். அன்றும் இன்றும் என் பக்கத்தில் இருந்த, இருக்கும் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி தலைமையிலான எனது பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து நான் பெறும் பாதுகாப்பு, வேலைக்கு அப்பாற்பட்ட மிகவும் அன்பான பிணைப்பாகும். நான் தங்காலையில் இருந்தாலும் விஜேராமவில் இருந்தாலும், மஹிந்த ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷ தான். நான் உயிருடன் இருக்கும் வரை, நாம் அனைவரும் வாழும் சிங்கக் கொடியின் நிழலில் இருக்கும் இந்த ஒன்றுபட்ட தாய்நாட்டை யாராவது காட்டிக் கொடுத்தால், எவ்வளவு துன்புறுத்தல்கள் வந்தாலும் நான் எழுந்து நிற்பேன் என்று அறிவிக்கிறேன். அந்த நாள் வந்தால், ஆதரிப்பதற்கு மகா சங்கத்தினருடன் இந்த நாட்டின் அன்பான மக்கள் இருப்பார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். கிருவாப்பத்துவைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்ஷ அரசியல் அச்சுறுத்தல்கள் மற்றும் கர்ச்சிப்பினை நன்கு அறிந்தவர்." என பதிவிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmfgq82sk00cwqplpmebt7dbn
2 months 1 week ago
Published By: Digital Desk 3 12 Sep, 2025 | 11:35 AM மன்னார் - சிறுத்தோப்பு கடற்கரைக்கு அருகில் இந்த வாரம் 91 பறவைகளை கடத்த முயன்ற இரண்டு சந்தேக நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பேசாலை மற்றும் மன்னாரைச் சேர்ந்த 17 மற்றும் 52 வயதுடையவர்கள் ஆவர். கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 72 புறாக்கள் மற்றும் 19 வேட்டை கோழிகளுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். கடத்தல் முயற்சியில் பயன்படுத்தப்பட்ட படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். பறவைகள் மற்றும் படகுடன் சந்தேகநபர்கள் பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/224884
2 months 1 week ago
Published By: Digital Desk 3
12 Sep, 2025 | 11:35 AM

மன்னார் - சிறுத்தோப்பு கடற்கரைக்கு அருகில் இந்த வாரம் 91 பறவைகளை கடத்த முயன்ற இரண்டு சந்தேக நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பேசாலை மற்றும் மன்னாரைச் சேர்ந்த 17 மற்றும் 52 வயதுடையவர்கள் ஆவர்.
கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 72 புறாக்கள் மற்றும் 19 வேட்டை கோழிகளுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடத்தல் முயற்சியில் பயன்படுத்தப்பட்ட படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
பறவைகள் மற்றும் படகுடன் சந்தேகநபர்கள் பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
https://www.virakesari.lk/article/224884
2 months 1 week ago
அததெரண கருத்துப்படம்
2 months 1 week ago
Published By: Priyatharshan 12 Sep, 2025 | 10:46 AM வத்தளை, ஹெந்தலையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆசியாவின் பழமையான தொழுநோய் வைத்தியசாலைக்கு இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) விஜயம் செய்தார். 1708 ஆம் ஆண்டு ஒல்லாந்தர்களால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் ஆசியாவின் பழமையான தொழுநோய் வைத்தியசாலையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலை நிர்வாகத்தால் தூதுவர் இசொமதா அன்புடன் வரவேற்கப்பட்டு வைத்தியசாலை வரலாறு குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது. முதலில் காலனித்துவ கால புகலிடமாக நிறுவப்பட்ட இந்த வைத்தியசாலை, இப்போது குறைந்து வரும் உள்நோயாளிகளுக்கான பராமரிப்பு வசதியாக செயல்படுகிறது. 1995 ஆம் ஆண்டில் இலங்கையில் ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையாக இருந்த தொழுநோயை வெற்றிகரமாக ஒழித்த போதிலும், சிகிச்சை, கண்காணிப்பு மற்றும் நோயாளிக்கான ஆதரவில் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு சுகாதார அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது. தொழுநோய் தொடர்பான மனித உரிமைகள் பிரச்சினைகளில் ஜப்பான் தூதர் இசொமதா தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் சர்வதேச அமைப்புகளுக்கான ஜப்பானின் நிரந்தர மிஷனில் பணியாற்றிய காலத்தில், தொழுநோய் ஒழிப்புக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் நல்லெண்ண தூதரும், அப்போதைய நிப்பொன் அறக்கட்டளையின் தலைவருமான திரு. யோஹெய் சசகாவாவுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றினார். 2008 ஆம் ஆண்டு மனித உரிமைகள் கவுன்சிலில் , தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிப்பதற்கான தீர்மானத்தை வெற்றிகரமாக ஏற்றுக்கொள்வதற்கு இருவரும் இணைந்து பணியாற்றினர், இது இந்த நூற்றாண்டுகள் பழமையான பிரச்சினை தொடர்பான முதல் தீர்மானமாகும். வைத்தியசாலை, சுகாதார அமைச்சகம் மற்றும் குறிப்பாக பல தசாப்தங்களாக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட வைத்தியர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களுக்கு தூதுவர் தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார். தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களின் கண்ணியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதில் இலங்கையுடனான ஜப்பானின் தொடர்ச்சியான நட்பு மற்றும் ஒற்றுமையையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். https://www.virakesari.lk/article/224878
2 months 1 week ago
Published By: Priyatharshan
12 Sep, 2025 | 10:46 AM

வத்தளை, ஹெந்தலையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆசியாவின் பழமையான தொழுநோய் வைத்தியசாலைக்கு இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) விஜயம் செய்தார்.
1708 ஆம் ஆண்டு ஒல்லாந்தர்களால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் ஆசியாவின் பழமையான தொழுநோய் வைத்தியசாலையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலை நிர்வாகத்தால் தூதுவர் இசொமதா அன்புடன் வரவேற்கப்பட்டு வைத்தியசாலை வரலாறு குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது. முதலில் காலனித்துவ கால புகலிடமாக நிறுவப்பட்ட இந்த வைத்தியசாலை, இப்போது குறைந்து வரும் உள்நோயாளிகளுக்கான பராமரிப்பு வசதியாக செயல்படுகிறது.
1995 ஆம் ஆண்டில் இலங்கையில் ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையாக இருந்த தொழுநோயை வெற்றிகரமாக ஒழித்த போதிலும், சிகிச்சை, கண்காணிப்பு மற்றும் நோயாளிக்கான ஆதரவில் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு சுகாதார அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது.
தொழுநோய் தொடர்பான மனித உரிமைகள் பிரச்சினைகளில் ஜப்பான் தூதர் இசொமதா தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் சர்வதேச அமைப்புகளுக்கான ஜப்பானின் நிரந்தர மிஷனில் பணியாற்றிய காலத்தில், தொழுநோய் ஒழிப்புக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் நல்லெண்ண தூதரும், அப்போதைய நிப்பொன் அறக்கட்டளையின் தலைவருமான திரு. யோஹெய் சசகாவாவுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றினார்.
2008 ஆம் ஆண்டு மனித உரிமைகள் கவுன்சிலில் , தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிப்பதற்கான
தீர்மானத்தை வெற்றிகரமாக ஏற்றுக்கொள்வதற்கு இருவரும் இணைந்து பணியாற்றினர், இது இந்த நூற்றாண்டுகள் பழமையான பிரச்சினை தொடர்பான முதல் தீர்மானமாகும்.
வைத்தியசாலை, சுகாதார அமைச்சகம் மற்றும் குறிப்பாக பல தசாப்தங்களாக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட வைத்தியர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களுக்கு தூதுவர் தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களின் கண்ணியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதில் இலங்கையுடனான ஜப்பானின் தொடர்ச்சியான நட்பு மற்றும் ஒற்றுமையையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.



https://www.virakesari.lk/article/224878
2 months 1 week ago
இலங்கையில் நடந்து வரும் கிராமப்புற பாலங்கள் வடிவமைப்பு மற்றும் கட்டுமான திட்டத்தை ஆதரிப்பதற்காக நெதர்லாந்து €730,000 கூடுதல் மானியத்தை அங்கீகரித்துள்ளது. இந்த நிதி திட்டத்தின் கூடுதல் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மேம்பாட்டு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும். இலங்கை முழுவதும் 162 கிராமப்புற பாலங்களை நிர்மாணிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது, இது இயக்கம், நகர்ப்புற-கிராமப்புற இணைப்பு மற்றும் கிராமப்புற சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது. செப்டம்பர் 2025 நிலவரப்படி, இந்த திட்டம் 96% இயற்பியல் முன்னேற்றத்தை அடைந்துள்ளதோடு 151 பாலங்களின் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. திட்டத்தின் முடிவைக் குறிக்கும் வகையில், திட்டமிடப்பட்ட அனைத்து பாலங்களின் கட்டுமானமும் பிப்ரவரி 2026 க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திட்டத்தின் தொடக்கத்தில், இலங்கை அரசாங்கம் நெதர்லாந்தின் Coöperatieve Rabobank U.A. உடன் 41.8 மில்லியன் யூரோ கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, இது திட்ட செலவில் 75% ஐ ஈடுகட்டுகிறது. நெதர்லாந்து வெளிநாட்டு முதலீட்டு வங்கியான “முதலீட்டு சர்வதேச வங்கி” மீதமுள்ள 25% அல்லது யூரோ 13.9 மில்லியனை மானியம் மூலம் வழங்கியது. இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை உணர்ந்த நெதர்லாந்து, 2024 ஆம் ஆண்டில் அதன் மானிய பங்களிப்பை மொத்த திட்ட செலவில் தோராயமாக 35% ஆக அதிகரித்தது, இது தோராயமாக யூரோ 5.3 மில்லியன் அதிகரிப்பு. இந்த சரிசெய்தல் நிலுவையில் உள்ள கடன் நிலுவையில் ஒரு பகுதியை ரத்து செய்ய உதவியது மற்றும் நாட்டின் கடன் சுமையை மேலும் குறைத்தது. சமீபத்திய €730,000 மானியத்துடன், திட்டத்திற்கான மொத்த மானியம் €18,912,335.72 ஆகும், இது மொத்த திட்ட செலவில் சுமார் 37% ஆகும். இந்த ஆதரவைப் பாராட்டி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் நெதர்லாந்தின் பதில் தூதர் இவான் ருட்ஜென்ஸ், அவர்களுக்கிடையிலான சந்திப்பின் போது நெதர்லாந்து அரசாங்கத்திற்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். இலங்கையின் வளர்ச்சி முன்னுரிமைகளை ஆதரிப்பதில் நெதர்லாந்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை பதில் தூதர் மீண்டும் உறுதிப்படுத்தினார், மேலும் சந்திப்பன்போது எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்களுக்கு சலுகை நிதியுதவியை தொடர்ந்து வழங்க விருப்பம் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmfghzlvl00cpqplpt5sbk6dy
2 months 1 week ago

இலங்கையில் நடந்து வரும் கிராமப்புற பாலங்கள் வடிவமைப்பு மற்றும் கட்டுமான திட்டத்தை ஆதரிப்பதற்காக நெதர்லாந்து €730,000 கூடுதல் மானியத்தை அங்கீகரித்துள்ளது.
இந்த நிதி திட்டத்தின் கூடுதல் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மேம்பாட்டு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்.
இலங்கை முழுவதும் 162 கிராமப்புற பாலங்களை நிர்மாணிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது, இது இயக்கம், நகர்ப்புற-கிராமப்புற இணைப்பு மற்றும் கிராமப்புற சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது.
செப்டம்பர் 2025 நிலவரப்படி, இந்த திட்டம் 96% இயற்பியல் முன்னேற்றத்தை அடைந்துள்ளதோடு 151 பாலங்களின் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. திட்டத்தின் முடிவைக் குறிக்கும் வகையில், திட்டமிடப்பட்ட அனைத்து பாலங்களின் கட்டுமானமும் பிப்ரவரி 2026 க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டத்தின் தொடக்கத்தில், இலங்கை அரசாங்கம் நெதர்லாந்தின் Coöperatieve Rabobank U.A. உடன் 41.8 மில்லியன் யூரோ கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, இது திட்ட செலவில் 75% ஐ ஈடுகட்டுகிறது. நெதர்லாந்து வெளிநாட்டு முதலீட்டு வங்கியான “முதலீட்டு சர்வதேச வங்கி” மீதமுள்ள 25% அல்லது யூரோ 13.9 மில்லியனை மானியம் மூலம் வழங்கியது.
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை உணர்ந்த நெதர்லாந்து, 2024 ஆம் ஆண்டில் அதன் மானிய பங்களிப்பை மொத்த திட்ட செலவில் தோராயமாக 35% ஆக அதிகரித்தது, இது தோராயமாக யூரோ 5.3 மில்லியன் அதிகரிப்பு. இந்த சரிசெய்தல் நிலுவையில் உள்ள கடன் நிலுவையில் ஒரு பகுதியை ரத்து செய்ய உதவியது மற்றும் நாட்டின் கடன் சுமையை மேலும் குறைத்தது.
சமீபத்திய €730,000 மானியத்துடன், திட்டத்திற்கான மொத்த மானியம் €18,912,335.72 ஆகும், இது மொத்த திட்ட செலவில் சுமார் 37% ஆகும்.
இந்த ஆதரவைப் பாராட்டி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் நெதர்லாந்தின் பதில் தூதர் இவான் ருட்ஜென்ஸ், அவர்களுக்கிடையிலான சந்திப்பின் போது நெதர்லாந்து அரசாங்கத்திற்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
இலங்கையின் வளர்ச்சி முன்னுரிமைகளை ஆதரிப்பதில் நெதர்லாந்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை பதில் தூதர் மீண்டும் உறுதிப்படுத்தினார், மேலும் சந்திப்பன்போது எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்களுக்கு சலுகை நிதியுதவியை தொடர்ந்து வழங்க விருப்பம் தெரிவித்தார்.
https://adaderanatamil.lk/news/cmfghzlvl00cpqplpt5sbk6dy
2 months 1 week ago
அது மட்டுமில்லை அதிவிலைகூடிய மதுபானவகை லண்டனில் வாங்கியதிற்கு காசு எங்காலை வந்தது என்றும் கேளுங்கோ..
2 months 1 week ago
சஷீந்திர ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார். மகாவலிக்கு சொந்தமான காணி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த தனது அரசியல் அலுவலகத்தை போராட்டகாரர்கள் தீ வைத்து அழித்ததற்காக சட்டவிரோதமாக 8,850,000 ரூபாய் பணத்தை இழப்பீடாக பெற்றமை ஊடாக "ஊழல்" என்ற குற்றத்தைச் செய்த குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு பின்னர், விளக்கமறியலில் வைக்கப்பட்டார். https://adaderanatamil.lk/news/cmfgh7p9i00coqplpp6l3wrut
2 months 1 week ago
காப்பெற்று ரோட் என்று கழிவு ரயர் எல்லாவற்றையும் கொண்டுவந்து இலங்கையில் கொட்டியாயிற்று...இந்த துணிகளும் எதை உருக்கிச் செய்ததோ தெரியாது...இவையும் உக்காத பிளாஸ்டிக் வகையோ தெரியாது... அய்யா நான் ...விஞ்ஞானி அல்ல...அங்கினைக்கை இங்கினக்கை வாசிச்ச செய்தியில் இர்ந்து புடுங்கினதுதான் ..இது.. அதைவிட இன்னுமொன்று வீடு மாறும் மகிந்தவையும் போய் சந்தித்தவர்...இந்த தூதுவர்..ஜே.வி.பி சீனா போய் சந்திக்குது ...இங்கை தூதுவர் பால் காய்ச்சப் போறவரை வீடு தேடிப்போய் சந்திக்கிறார்..
2 months 1 week ago
12 Sep, 2025 | 10:08 AM “கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி “கெஹெல்பத்தர பத்மே” நடத்திய போதைப்பொருள் உற்பத்தி நடவடிக்கையின் தலைவராக மாத்திரம் அல்லாமல் ஆயுத கடத்தல் வலையமைப்பின் தலைவராகவும் செயல்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகள் உட்பட பல ஆயுதங்கள் ஏற்கனவே பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கைப்பற்றப்பட்ட கைக்குண்டுகள் உட்பட பல ஆயுதங்கள் பாதாள உலக குழுக்களுக்கு சொந்தமானவை என்றும் பொலிஸாரால் நம்பப்படுகிறது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கண்டுப்பிடித்து கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரியுடன் தொடர்புடைய நபர்களின் வீடுகளும் பொலிஸாரால் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், “கெஹெல்பத்தர பத்மே” வுடன் நெருங்கிய தொடர்பை வைத்திருந்த கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவில் இணைக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவரும் அண்மையில் குற்ற புலனாய்வு அதிகாிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224874
2 months 1 week ago
12 Sep, 2025 | 10:08 AM

“கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி “கெஹெல்பத்தர பத்மே” நடத்திய போதைப்பொருள் உற்பத்தி நடவடிக்கையின் தலைவராக மாத்திரம் அல்லாமல் ஆயுத கடத்தல் வலையமைப்பின் தலைவராகவும் செயல்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகள் உட்பட பல ஆயுதங்கள் ஏற்கனவே பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கைக்குண்டுகள் உட்பட பல ஆயுதங்கள் பாதாள உலக குழுக்களுக்கு சொந்தமானவை என்றும் பொலிஸாரால் நம்பப்படுகிறது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கண்டுப்பிடித்து கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரியுடன் தொடர்புடைய நபர்களின் வீடுகளும் பொலிஸாரால் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், “கெஹெல்பத்தர பத்மே” வுடன் நெருங்கிய தொடர்பை வைத்திருந்த கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவில் இணைக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவரும் அண்மையில் குற்ற புலனாய்வு அதிகாிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
https://www.virakesari.lk/article/224874
2 months 1 week ago
நேபாளத்தின் 'ஜென் Z' போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் இப்போது வருந்துவது ஏன் - கள ஆய்வு 'ஜென் Z' போராட்டத்தில், இளைஞர்களுக்கு நல்லது – கெட்டது என்ன என்பதைச் சொல்லி வழிகாட்டக்கூடிய, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமை யாரும் இல்லை. கட்டுரை தகவல் ரஜ்னீஷ் குமார் பிபிசி செய்தியாளர் 17 நிமிடங்களுக்கு முன்னர் நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியவுடன், மழைதான் முதலில் கண்ணில் பட்டது. மேகங்கள் மிகவும் தாழ்வாகவும் நெருக்கமாகவும் தெரிந்ததால், விமான நிலையத்தைப் பாதுகாக்கும் கூடுதல் பொறுப்பு அவற்றிடம் ஒப்படைக்கப்பட்டது போல் தோன்றியது. ஜென் Z போராட்டங்களின் போது சேதமடையாமல் இருந்த ஒரே அரசு நிறுவனம், இந்த விமான நிலையம்தான் என்று சொல்லலாம். விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தவுடன், ஒரு பெரிய புயல் கடந்த பின்பு நிலவும் அமைதியையைத்தான் உணர்ந்தோம். இடையில், எல்லாம் தங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதைச் சொல்லும் விதமாக ராணுவ வாகனங்கள் சாலையில் தென்பட்டன. முழு நகரத்திலும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இரண்டு நாட்கள் நடந்த போராட்டங்களில் நேபாள அரசாங்கம் சரணடைந்துள்ளது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, தலைவர்கள் ஓடிப்போக வேண்டிய நிலை ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி முதல், நேபாளம் முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட எங்கள் வாகனம் பல இடங்களில் ராணுவத்தினரால் தடுக்கப்பட்டது. அப்போது நாங்கள் பத்திரிகையாளர்கள் என்று சொன்னபோது, அவர்கள் எங்களை அனுமதித்தனர். என் அருகில் அமர்ந்திருந்த நேபாளத்தைச் சேர்ந்த ஒரு நண்பர், "ராணுவ ஆட்சியின் கீழ் உள்ள நேபாளத்திற்கு வருக" என்றார். செவ்வாய்க்கிழமை நேபாள நாடாளுமன்றம் தீக்கிரையாக்கப்பட்டது. குறிவைக்கப்பட்டுள்ள ஊடகங்கள் 'ஜென் Z' போராட்டத்தின் போது ஊடகங்களும் குறிவைக்கப்பட்டன. நேபாளத்தின் முன்னணி நாளிதழான காந்திபூரின் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது. போராட்டத்தின் போது, ரபி லாமிச்சானேவின் ஆதரவாளர்கள் அவரை சிறையிலிருந்து விடுவித்தனர். காத்மாண்டுவில் உள்ள நக்ஹூ சிறையிலிருந்து அவர் மட்டும் அல்ல, அங்கிருந்த பல கைதிகளும் வெளியே வந்தனர். நேபாளத்தின் பல சிறைகளிலிருந்தும் கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். காத்மாண்டுவின் பனேஷ்வர் பகுதியில் உள்ள நேபாள நாடாளுமன்றக் கட்டடத்திலிருந்து இன்னும் எரிந்த வாசனை வருகிறது. இந்த நாடாளுமன்றம், நேபாளத்தில் 239 ஆண்டுகள் நீண்ட மன்னராட்சி முடிவுக்கு வந்ததற்கான அடையாளமாகவும், கடந்த 17 ஆண்டுகளாக ஜனநாயகத்தின் கதையைச் சொல்லும் சின்னமாகவும் இருந்து வந்தது. ஆனால் இன்று, அந்தக் கட்டடத்திலிருந்து புகை மட்டுமே எழுகிறது. 2008-ஆம் ஆண்டு நேபாள மக்கள் முடியாட்சியை ஒழித்தபோதும், நாராயண்ஹிட்டி அரச அரண்மனை தீக்கிரையாக்கப்படவில்லை. அது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, வளாகத்தில் குடியரசு நினைவுச் சின்னமும் அமைக்கப்பட்டது. ஆனால் அதே நேபாள மக்கள், வெறும் 17 ஆண்டுகள் பழமையான ஜனநாயகத்தின் நாடாளுமன்றத்தைத் தீயிட்டு சிதைத்தனர். நாடாளுமன்ற சுவர்களில் தேவநாகரி எழுத்தில் கே.பி. ஒலி மற்றும் பிரசண்டாவை அவமதிக்கும் வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன. அந்த சுவர்களை பார்த்துக் கொண்டிருந்தபோது, நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர், 'ராஜா மீதுகூட இத்தனை வெறுப்பு இல்லை' என்றார். காத்மாண்டுவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இடைக்கால அரசாங்கம் குறித்து இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இந்திய ஊடகங்கள் மீது வெளிப்படும் கோபம் சுமார் 48 வயதான தீபக் ஆச்சார்யா, தனது மகனுடன் எரிந்த நாடாளுமன்றக் கட்டடத்தின் வெளியே நின்றிருந்தார். நாங்கள் சில பெண்களிடம் பேச முயன்றபோது, அவர்கள் இந்தியைக் கேட்டவுடன் கோபமடைந்துவிட்டனர். அப்போது தீபக் ஆங்கிலத்தில்,'தயவுசெய்து நிறுத்துங்கள். இந்திய ஊடகங்களும் மோதி பிரசாரத்தின் ஓர் பகுதி' என்று கூறினார். அவர் அதை மிக உரத்த குரலில் சொன்னதால், அருகிலிருந்தவர்கள் கூட எங்களை நோக்கிப் பார்க்கத் தொடங்கினர். தீபக்கின் கோபத்தைப் புரிந்துகொள்ள முயற்சித்தேன், அவருடன் நீண்ட உரையாடலும் நடந்தது. "இந்திய ஊடகங்கள் ஜனநாயகத்தையே பலவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அதோடு எங்களது ஜனநாயகத்தையும் சிதைக்கின்றன. யார் பிரதமராக வேண்டும் என்பதை நேபாள மக்கள் தீர்மானிப்பார்கள். ஆனால் இந்திய ஊடகங்கள் சுஷிலா கார்கி பிரதமராவார் என்று சொல்கின்றன. மோதியின் ஆட்சி நேபாளத்திலும் இருப்பது போல இந்திய ஊடகங்கள் நடந்து கொள்கின்றன. இந்திய அரசாங்கமோ, அங்குள்ள ஊடகங்களோ நேபாளத்தை ஒரு இறையாண்மை மற்றும் சுதந்திர நாடாகப் பார்க்கவில்லை. இங்கே உள்ள இந்திய ஊடக செய்தியாளர்களின் பின்னணியைப் பாருங்கள், எல்லோரும் ஆர்எஸ்எஸ் அல்லது பாஜகவுடன் தொடர்புடையவர்கள்தான்" என்று தீபக் கூறினார். இது, தீபக் ஆச்சார்யாவின் கோபம் மட்டும் அல்ல, இந்திய ஊடகங்களுக்கு எதிரான அதிருப்தி நேபாளத்தில் பொதுவாகக் காணப்படும் ஒன்று. இங்குள்ள மக்கள் வெளிநாட்டு சதித் திட்டங்கள் பற்றியும் பேசுகிறார்கள். அதில் அமெரிக்காவின் பெயரும் அடிபடுகிறது. காத்மாண்டுவின் பாபர்மஹால் பகுதியில் உள்ள சாலைத் துறை கட்டிடமும் எரிந்து நாசமானது. தீர்வை விட அதிகமாகக் காணப்படும் குழப்பம் நாங்கள் நாடாளுமன்றத்தின் வெளியே நின்று கொண்டிருந்தபோது, இரண்டு இளைஞர்கள் ஸ்கூட்டரில் வந்து அங்கு பணியில் இருந்த ராணுவ வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில்களையும் பிஸ்கட்டுகளையும் வழங்கத் தொடங்கினர். ஒருவர் தன்னை கிஷன் ரௌனியர் என்றும், மற்றொருவர் சோமன் தமாங் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டனர். 'ஏன் வீரர்களுக்கு தண்ணீர் மற்றும் பிஸ்கட் கொடுக்கிறீர்கள்'? என்று கேட்டபோது, "அவர்கள் நாட்டிற்கு சேவை செய்கிறார்கள். எங்களிடம் அதிக பணம் இல்லை, ஆனாலும் நாங்கள் இதைச் செய்ய முடிவு செய்தோம். நாங்கள் ஒரு சலூன் நடத்துகிறோம்" என்றார் தமங். கிஷன் ரௌனியர் ஒரு மாதேசி இந்து மற்றும் தமாங் ஒரு பஹாடி பௌத்தர். இருவரும் போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள். அதிகமான சேதம் ஏற்பட்டதற்காக கிஷன் இப்போது வருந்துகிறார். "ஒவ்வொரு அரசு கட்டடமும் தீக்கிரையாக்கப்பட்டது. இது பெரிதாகிவிட்டது. இப்போது நாங்கள் வருந்துகிறோம். அடுத்து வரும் அரசு, ஊழல் இல்லாததாக இருக்குமா இல்லையா என்பது கூட எங்களுக்குத் தெரியவில்லை," என்று கிஷன் கூறினார். ஜென் Z போராட்டத்தில் பங்கேற்ற பலரும் இப்போது கட்டடங்களை எரிப்பது தவறு என்று நினைக்கிறார்கள். திங்களன்று 19 இளைஞர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கத்துக்கு எதிராக எழுந்த எதிர்ப்பு அலை, செவ்வாய்க்கிழமை நடந்த சம்பவங்களுக்குப் பிறகு சற்று தளர்ந்தது போல தெரிகிறது. இருப்பினும், நேபாளத்தின் அனைத்துத் தலைவர்களும் இன்னும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டதால் மக்கள் வீடுகளிலிருந்து வெளியே வரத் தொடங்கியுள்ளனர். காத்மாண்டுவின் பாபர்மஹால் பகுதியில் உள்ள சாலைத் துறை கட்டடத்தின் முன் நாங்கள் நின்று கொண்டிருந்தோம். ஒருகாலத்தில் மிகப் பிரமாண்டமாக இருந்த அந்தக் கட்டடத்தின் ஜன்னல்களிலிருந்து இப்போது புகை மட்டும் வெளியேறுகிறது. புகையின் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டது. நேபாள மாவட்ட அலுவலகம். அங்கிருந்து இன்னும் புகை எழுகிறது. நேபாள அரசியலின் திருப்புமுனை நிராஜன் குன்வர், விஷ்ணு சர்மா மற்றும் சுபாஷ் சர்மா ஆகிய மூன்று ஜென் Z போராட்டக்காரர்கள் சோகமான நிலையில் அமர்ந்திருந்தனர். மூவரும் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள். போராட்டத்தில் நிராஜன் குன்வர் காயமடைந்திருந்தார். "அரசு கட்டடங்களுக்கு தீ வைத்தது நாங்கள் அல்ல, வேறு சிலர்தான். நிறைய அழிவுகள் ஏற்பட்டுள்ளன. உண்மையைச் சொல்லப் போனால்,இப்போது நாங்கள் வருந்துகிறோம். இந்தக் கட்டடங்களை அமைக்க நேபாளத்துக்குபல ஆண்டுகள் எடுத்தது. அதனால் நாங்கள் மிகவும் சோகமாக உள்ளோம்" என்று நிராஜன் கூறுகிறார். அந்த 'மற்றவர்கள்' யார்? என்று கேட்டபோது, நிராஜனும் விஷ்ணுவும், ரவி லாமிச்சானேயின் ஆதரவாளர்கள் மற்றும் ஆர்பிபி (RPP) ஆதரவாளர்கள் என்று சொன்னார்கள். ராஷ்ட்ரிய பிரஜாதந்திரக் கட்சி (RPP) முடியாட்சி ஆதரவு கட்சியாக அறியப்படுகிறது. அது நேபாளத்தை ஒரு இந்துத் தேசமாக்க கூறுகிறது. பின்னர் நிராஜன் மற்றும் விஷ்ணுவிடம் 'ஜனநாயக நேபாளமா வேண்டுமா, முடியாட்சி வேண்டுமா? மதச்சார்பற்ற நேபாளமா வேண்டுமா, இந்துத் தேசம் வேண்டுமா?' என்று கேட்கப்பட்டது. இருவரும் வெளிப்படையாகவே, 'முடியாட்சி முறை, இந்துத் தேசம்' என்றனர். ஆனால் அங்கு இருந்த சுபாஷ் சர்மா, தான் ஜனநாயக நேபாளத்தை ஆதரிக்கிறேன் என்று தெளிவாகச் சொன்னார். காத்மாண்டுவில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர் விஷ்ணு சர்மா. இவர், 'ஜென் z ' போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இந்த 'ஜென் Z' போராட்டத்தில், இளைஞர்களுக்கு நல்லது–கெட்டது என்ன என்பதைச் சொல்லி வழிகாட்டக்கூடிய, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமை யாரும் இல்லை. அதனால், யார் என்ன நினைத்தார்களோ அதைச் செய்தார்கள். இளைஞர்களுடன் பேசினால், அவர்கள் குழப்பமடைந்தவர்களைப் போலத் தெரிகிறார்கள். நேபாளத்தில் அடுத்த அரசு எப்படி அமைக்கப்படும் என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்க்கியின் பெயர் அடிபடுகிறது, ஆனால் இளைஞர்களிடையே அதற்கு ஒருமித்த ஆதரவு இல்லை. வியாழக்கிழமை, 'ஜென் Z' போராட்டக்காரர்களின் ஒரு பிரிவினர் சுசிலா கார்க்கியின் பெயரை எதிர்த்து ராணுவத் தலைமையகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர். ஜென் Z போராட்டக்காரர்கள் காத்மாண்டு மேயர் பாலேன் ஷா முன்வர வேண்டும் எனக் கூறுகிறார்கள். ஆனால், முதலில் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்பது தான் அவர்களின் முக்கிய கோரிக்கை. ஆனால் நாடாளுமன்றம் ஏன், எப்படிக் கலைக்கப்பட வேண்டும் என்பதற்கான பதில் அரசியலமைப்பில் இல்லை. அடுத்து என்ன? 239 ஆண்டுகளாக முடியாட்சியின் கீழ் வாழ்ந்த நேபாள மக்கள், கடந்த 17 ஆண்டுகளாக ஜனநாயகத்தை அனுபவித்து வருகின்றனர். ஆனால், அதை இனி எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்வார்கள் என்ற கேள்விக்கு இன்னும் முழுமையான பதில் கிடைக்கவில்லை. நிலத்தால் சூழப்பட்ட நாடான நேபாளம், இன்று தனது ஜனநாயகமும் பல பக்கங்களில் இருந்து நெருக்கடிகளால் முற்றுகையிடப்பட்டதைப் போலவே காட்சியளிக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy9ndqqyengo
2 months 1 week ago
இந்தியாவில் 'இந்துத்வா' வும் தமிழகத்தில் 'சாதி' அரசியலும் உள்ளவரை நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் நிகழா? மாற்றத்திற்காகவேணும் வாக்குப் புரட்சியைக்கூடத் துணிந்து செய்யமுடியாத மனநிலைகொண்டோராகத் தமிழக மக்களும், தமிழகத் தமிழ் மக்களும் உள்ளனர் என்பதை வாக்கு வீதங்கள் காட்டி நிற்கின்றன. நா.த.கவின் முதலாவது சட்டமன்றத் தேர்தலில் 1.10வீதத்தையும், 2021 சட்டமன்றத் தேர்தலில் 6.72வீதத்தையும், நாடாளுமன்றத் தேர்தலில் 8.19வீதத்தையுமே மக்கள் வழங்கியுள்ளனர். மக்களின் மனநிலை நுகர்வு மனநிலையாகிவிட்ட காலத்தில் யாராண்டால் என்ன என்ற எண்ணப்போக்கு, வாக்களித்த மக்கள் தேர்தல்கால வாக்குறுதிகளை நிறைவேற்றாமையால் ஏற்படும் ஏமாற்றம், சிறிய கட்சிகளால் என்னத்தை செய்துவிடமுடியும் என்ற பார்வை எல்லாம் தாக்கம் செலுத்துகின்றன. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி சீனா சுயபொருண்மியத்தில் முன்னேறிய நாடு. ஆனால் சுற்றியிருக்கும் மற்ற நாடுகள் இந்த இருநாடுகளிடமும் கையேந்தும் நிலையானபடியால் நிம்மதி வராது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
2 months 1 week ago
ஜெய்சங்கர் தனது திரைப் பயணத்தைத் தொடங்கிய முதல் படம் இது. கதாநாயகனாக முதற்படமே அவருக்கு கிடைத்த அரிய வாய்ப்பு. இந்தப் படம், எம்.ஜி.ஆரின் எங்க வீட்டுப் பிள்ளை படத்துடன் வெளியாகி, குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. ஜெய்சங்கரின் குரல்தோணியை நன்கு உணர, ரி.எம்.எஸ் அவரை நேரில் சந்தித்து உரையாடிய பின்னரே இந்தப் பாடல் பாடலைப் பாடினார். சமீபத்தில் மறைந்த ஆலங்குடி சோமுவின் வரிகளில், நடிகர் எஸ்.ஏ. அசோகன் பாடிய ஒரு பிரபல்யமான தத்துவப் பாடலும் இரவும் பகலும் படத்தில் இடம் பெற்றிருக்கிறது. அந்தப் பாடல், “இறந்தவனைச் சுமந்தவனும் இறந்திட்டான்-அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான் பறந்து பறந்து பணம் தேடி பாபக் குளத்தில் நீராடி பிறந்து வந்த நாள் முதலாய்ப் பேராசையுடன் உறவாடி..” இறந்தவனே சுமந்தவனும் இறந்திட்டான் - அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்…”
2 months 1 week ago
Published By: Priyatharshan 12 Sep, 2025 | 09:52 AM ( வீ. பிரியதர்சன் ) பிள்ளைகளை தொழில்நுட்பத்திலிருந்து விலக்கி வைப்பது நமது பொறுப்பல்ல என்றும் மாறாக அறிவுபூர்வமாகவும், விவேகத்துடனும், ஆக்கபூர்வமாகவும் அதனைப் பயன்படுத்த அவர்களுக்கு வழிகாட்டுவதே நமது பொறுப்பாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பு ITC ரத்னதீப் ஹோட்டலில் வியாழக்கிழமை (செப்டம்பர் 11 ) நடைபெற்ற விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளுக்கான கல்வி உள்ளடக்கங்களை TikTok சமூக வலைத்தளம் மூலம் சமூகமயப்படுத்தும் "STEM Feed" அறிமுக விழாவில் ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட உலகில், TikTok மூலம் கல்விக்கான வாய்ப்பினை ஏற்படுத்துதல், அறிவைப் பகிர்தல், கல்வியை வலுவூட்டுதல் ஆகியவற்றுக்கான பின்புலத்தை உருவாக்குவதன் மூலம் நாட்டின் இளைஞர்களுக்கான டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் கற்பதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் இந்த சந்தர்ப்பம் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, சமமான அணுகல், எதிர்காலத்திற்கு ஏற்றதும் குழந்தைகளுக்குத் தாங்குபிடிக்கக்கூடியதுமான ஒரு கல்வி முறையை அறிமுகப்படுத்துவதற்காக கல்வி அதிகாரிகள், கல்விமான்கள், அறிஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சிறுவர் பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் தனியார் துறை பங்காளிகள் ஆகியோர் உள்வாங்கப்பட்ட ஒரு செயலணியை நிறுவுவதற்கான அரசாங்கத்தின் முன்முயற்சியை வலியுறுத்தினார். தேசிய முன்னுரிமைகளுடன் இணைந்து STEM துறைகளில் இளைஞர்களை ஊக்குவிப்பதற்கும், பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட அறிவை பெறுவதற்கான புதிய வழிகளை அறிமுகப்படுத்துவதற்கும் TikTok போன்ற உலகளாவிய சமூகத் தளங்களின் ஆதரவைப் பாராட்டிய பிரதமர், ஒரு புதிய, சமநிலையான மற்றும் ஊக்குவிக்கப்பட்ட இளைஞர் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு கலை மற்றும் மனிதநேயத் துறைகள் உட்பட STEAM துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். குழந்தைகளை தொழில்நுட்பத்திலிருந்து பாதுகாப்பது நமது பணியல்ல, மாறாக, அதனை புத்திசாலித்தனமாகவும், விமர்சன ரீதியாகவும், ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்தி வளர்ச்சிக்கு உதவும் ஒரு கருவியாக மாற்ற அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று கூறினார். இலங்கையின் கல்வி முறையை அனைவரையும் உள்ளடக்கிய, எதிர்காலத்திற்குத் தயாரான, மற்றும் உறுதியானதாக மாற்றுவதற்காக, அரசாங்கம் ஒரு பல்துறை சார்ந்த பணிக்குழுவை அமைத்துள்ளதை வலியுறுத்தினார். இந்த பணிக்குழுவில் அதிகாரிகள், கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் குழந்தை பாதுகாப்பு ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டார். இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த TikTok சமூக வலைத்தளத்தின் தெற்காசிய அரச கொள்கை மற்றும் பொது உறவுகளின் தலைவர் Ferdous Mottakin, இலங்கையில் STEM Feed ஐ அறிமுகப்படுத்துவது கல்வி உள்ளடக்கங்களுக்கான அணுகலை விரிவுபடுத்துவதுடன், அத்தகைய கற்றல் பாதுகாப்பான, வெளிப்படையான மற்றும் நம்பகமான டிஜிட்டல் சூழலில் நடைபெறுவதை உறுதிப்படுத்தவும் உதவும் என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் TikTok சமூக வலைத்தளத்தின் தெற்காசிய அரச கொள்கை மற்றும் மக்கள் தொடர்பு பிரிவின் தலைவர் Ferdous Mottakin, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரீ, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஏ. சரத் ஆனந்த மற்றும் அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/224872
2 months 1 week ago
Published By: Priyatharshan
12 Sep, 2025 | 09:52 AM

( வீ. பிரியதர்சன் )
பிள்ளைகளை தொழில்நுட்பத்திலிருந்து விலக்கி வைப்பது நமது பொறுப்பல்ல என்றும் மாறாக அறிவுபூர்வமாகவும், விவேகத்துடனும், ஆக்கபூர்வமாகவும் அதனைப் பயன்படுத்த அவர்களுக்கு வழிகாட்டுவதே நமது பொறுப்பாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கொழும்பு ITC ரத்னதீப் ஹோட்டலில் வியாழக்கிழமை (செப்டம்பர் 11 ) நடைபெற்ற விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளுக்கான கல்வி உள்ளடக்கங்களை TikTok சமூக வலைத்தளம் மூலம் சமூகமயப்படுத்தும் "STEM Feed" அறிமுக விழாவில் ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட உலகில், TikTok மூலம் கல்விக்கான வாய்ப்பினை ஏற்படுத்துதல், அறிவைப் பகிர்தல், கல்வியை வலுவூட்டுதல் ஆகியவற்றுக்கான பின்புலத்தை உருவாக்குவதன் மூலம் நாட்டின் இளைஞர்களுக்கான டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் கற்பதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் இந்த சந்தர்ப்பம் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய,
சமமான அணுகல், எதிர்காலத்திற்கு ஏற்றதும் குழந்தைகளுக்குத் தாங்குபிடிக்கக்கூடியதுமான ஒரு கல்வி முறையை அறிமுகப்படுத்துவதற்காக கல்வி அதிகாரிகள், கல்விமான்கள், அறிஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சிறுவர் பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் தனியார் துறை பங்காளிகள் ஆகியோர் உள்வாங்கப்பட்ட ஒரு செயலணியை நிறுவுவதற்கான அரசாங்கத்தின் முன்முயற்சியை வலியுறுத்தினார்.
தேசிய முன்னுரிமைகளுடன் இணைந்து STEM துறைகளில் இளைஞர்களை ஊக்குவிப்பதற்கும், பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட அறிவை பெறுவதற்கான புதிய வழிகளை அறிமுகப்படுத்துவதற்கும் TikTok போன்ற உலகளாவிய சமூகத் தளங்களின் ஆதரவைப் பாராட்டிய பிரதமர், ஒரு புதிய, சமநிலையான மற்றும் ஊக்குவிக்கப்பட்ட இளைஞர் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு கலை மற்றும் மனிதநேயத் துறைகள் உட்பட STEAM துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
குழந்தைகளை தொழில்நுட்பத்திலிருந்து பாதுகாப்பது நமது பணியல்ல, மாறாக, அதனை புத்திசாலித்தனமாகவும், விமர்சன ரீதியாகவும், ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்தி வளர்ச்சிக்கு உதவும் ஒரு கருவியாக மாற்ற அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று கூறினார்.
இலங்கையின் கல்வி முறையை அனைவரையும் உள்ளடக்கிய, எதிர்காலத்திற்குத் தயாரான, மற்றும் உறுதியானதாக மாற்றுவதற்காக, அரசாங்கம் ஒரு பல்துறை சார்ந்த பணிக்குழுவை அமைத்துள்ளதை வலியுறுத்தினார். இந்த பணிக்குழுவில் அதிகாரிகள், கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் குழந்தை பாதுகாப்பு ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த TikTok சமூக வலைத்தளத்தின் தெற்காசிய அரச கொள்கை மற்றும் பொது உறவுகளின் தலைவர் Ferdous Mottakin, இலங்கையில் STEM Feed ஐ அறிமுகப்படுத்துவது கல்வி உள்ளடக்கங்களுக்கான அணுகலை விரிவுபடுத்துவதுடன், அத்தகைய கற்றல் பாதுகாப்பான, வெளிப்படையான மற்றும் நம்பகமான டிஜிட்டல் சூழலில் நடைபெறுவதை உறுதிப்படுத்தவும் உதவும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் TikTok சமூக வலைத்தளத்தின் தெற்காசிய அரச கொள்கை மற்றும் மக்கள் தொடர்பு பிரிவின் தலைவர் Ferdous Mottakin, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரீ, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஏ. சரத் ஆனந்த மற்றும் அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.







https://www.virakesari.lk/article/224872