Aggregator

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2 months 1 week ago
இங்கும் பாடசாலை தொடங்கி விட்டது. விமானச் சீட்டின் விலையும் குறையும். பென்சன் எடுத்தவர்களும், பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகள் இல்லாத தம்பதிகளும் சுற்றுலா செல்ல உகந்த நேரம்.

பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?

2 months 1 week ago
இது கருணா சொன்னதை நீங்கள் புரிந்து கொண்டது. அனால் கருணாவின் மதியில், மனதில் அந்த நேரத்தில் இருந்தது என்ன? நான் யதார்த்தம் என்றதும், பொதுவானது அல்ல. கருணாவின் பார்வையில் , விளக்கத்தில், கருணாவின் மதியில், மனதில் அந்த நேரத்தில் இருந்த விளக்கம், புரிவு.

புதைத்து பல ஆண்டுகள் ஆகியும் சில உடல்கள் அழுகாமல் இருப்பது ஏன்?

2 months 1 week ago
இது சுமார் 30 வருடங்களுக்கு முன் நடந்த உண்மைச் சம்பவம். அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் ஓய்வு பெற்ற பொறியியலாளர். அவர் திருமணம் செய்து கொள்ளாத கட்டை பிரமச்சாரி. அந்தக் குடியிருப்பில் வசிக்கும் மற்றவர்களுடனும், உறவினர்களுடனும் எந்தவித தொடர்பும் இல்லை. தனியாக நடக்கப் போவது, கடைக்குப் போய் சமையல் பொருட்கள் வாங்கி தானே சமைத்து சாப்பிடுவது என்று… அவரின் ஓய்வு காலம் அமைதியாக போய்க் கொண்டு இருந்தது. நீண்ட நாட்களாக அவரை வெளியே ஒருவரும் காணவில்லை. அவரின் வீட்டு தபால் பெட்டி கடிதங்களாலும், விளம்பரங்களாலும் நிரம்பி வழிந்ததை கண்ட அயலவர்கள் காவல்துறைக்கு அறிவித்து… அவர்கள் வந்து பல வழிகளிலும் முயற்சித்து எந்தவித பதிலும் வீட்டிற்குள் இருந்து வராமல் போக, காவல்துறையினர் கதவை உடைத்துப் பார்த்த போது… வீட்டின் வரவேற்பறையில் உள்ள கதிரையில் தொலைக்காட்சி பார்த்த நிலையில் அவர் மூன்று மாதத்திற்கு முன்பே இறந்து விட்டார். மூன்று மாதமாக… இறந்த ஒருவருக்காக தொலைக்காட்சியும் ஓடிக் கொண்டு இருந்தது. ஆச்சரியம் என்னவென்றால்…. இறந்த அவரின் உடலில் இருந்து நாற்றம் எதுவும் வராததால் அயலவர்களுக்கு சந்தேகம் ஏற்படவில்லை. இச் செய்தி அக்காலத்தில்… பிரபலமாக பேசப் பட்டது.

கூன் விழுவதன் காரணம் – மருத்துவர் விளக்கம்

2 months 1 week ago
கூன் விழுவதன் காரணம் – மருத்துவர் விளக்கம் September 16, 2025 0 வயதாகும்போது தங்கள் உயரத்தில் சில அங்குலங்கள் குறைவது அல்லது உடலில் கூனல் விழுவது அல்லது குனிந்த முதுகு ஏற்படுவது போன்ற பிரச்னையை சில முதியோர் சந்திக்கின்றனர். ஆனால், இதை பலரும் தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை. இதை முதுமையின் இயல்பான ஒரு பகுதியாகவே கருதி அலட்சியம் செய்துவிடுவார்கள். ஒரு குறுகிய காலத்தில் 1.5 அங்குலம் (4 செ.மீ) உயரம் குறைந்தால், அது வெறும் முதுமையின் பாதிப்பல்ல. குனிந்த அல்லது கூன் விழுந்த தோற்றத்துடன் கூடிய திடீர் (கவனிக்கத்தக்க அளவிற்கு) உயர இழப்பு ஏற்படுமானால், அது முதுகெலும்பு அழுத்த முறிவின் (VCF) ஒரு முக்கிய அறிகுறியாக இருக்கலாம். இந்த முறிவுகள், 50 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் அபாயத்தை இரட்டிப்பாக்கும் எலும்புப்புரை (osteoporosis) நோயினால் ஏற்படும் பின்விளைவுகளாகும் என்கிறார் தண்டுவட அறுவை சிகிச்சை முதுநிலை நிபுணர், மருத்துவர் விக்னேஷ் ஜெயபாலன். இதற்கு காரணம் என்ன.. தீர்வு என்ன.. என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். முதுகெலும்பில் உள்ள ஒன்று அல்லது பல எலும்புகள் நசுங்கும்போது முதுகெலும்பு அழுத்த முறிவு ஏற்படுகிறது. இது பொதுவாக பலவீனமான, நுண்துளைகள் கொண்ட எலும்புகளின் காரணமாக நிகழ்கிறது. எலும்புப்புரை பாதிப்பு இருக்கும்போது, முதுகை வளைப்பது, குனிவது, இருமுவது அல்லது பொருட்களைத் தூக்குவது போன்ற அன்றாட செயல்களே இதுபோன்ற முதுகெலும்பு முறிவுகளை ஏற்படுத்தப் போதுமான காரணமாக இருக்கலாம். இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பதை தாமதமாக கண்டறிவதற்கு முக்கிய காரணம், தாங்கள் என்ன பாதிப்புக்கு உள்ளாகிறோம் என்பதை நோயாளிகள் உணர்வது அவர்களுக்கு மிகவும் கடினமானது. ஏனெனில், முதுகெலும்பு அழுத்த முறிவுகள் குறிப்பிட்டு சொல்ல முடியாத முதுகுவலியாகவே இருக்கும். மேலும், காலப்போக்கில் அந்நபரின் தோற்றத்தில் வெளிப்படையாகத் தெரியும் மாற்றம் ஏற்படும். தொடர்ச்சியாக திரும்பத் திரும்ப நிகழும் நுண் முறிவுகள் நோயாளிக்கு நாள்பட்ட வலி, உயர இழப்பு மற்றும் கூன் விழுந்த தோற்றம் ஆகியவற்றை ஏற்படுத்தி, சிரமப்படுமாறு செய்வதுடன் அவர்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். இதற்கான அதிக ஆபத்தில் இருப்பவர்கள் யார்? மாதவிடாய் நின்றுவிட்ட பெண்கள்: இவர்களிடம் ஈஸ்ட்ரோஜென் குறைவாக இருப்பது எலும்பு வலுவிழப்பை மேலும் துரிதப்படுத்துகிறது. 50 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் குறைந்த உடல் எடை அல்லது ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள நபர்கள்: குறிப்பாக வைட்டமின் டி குறைபாடுள்ளவர்கள் மற்றும் குறைவான அளவு கால்சியம் உட்கொள்பவர்கள். பரிந்துரைக்கப்படும் மருத்துவத் தீர்வுகள் எலும்பு அடர்த்தி சோதனைகள் (DEXA ஸ்கேன்): முதுகெலும்பு முறிவைக் கண்டறிவதில் ஆரம்பகால நோயறிதல் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. மாதவிடாய் நின்றுவிட்ட பெண்கள் மற்றும் வயதான ஆண்களுக்கு எலும்புப்புரைக்கான பரிசோதனையை குறித்த காலஅளவுகளில் செய்து கொள்ளுமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம். குறிப்பாக அவர்களுக்கு உயர இழப்பு, முதுகெலும்பு வளைவு போன்ற அறிகுறிகள் இருக்குமானால், இச்சோதனையை தவறாமல் செய்ய வேண்டும். வெர்டிப்ரோபிளாஸ்டி அல்லது கைஃபோபிளாஸ்டி: எலும்பு முறிவானது கடுமையான அழுத்த முறிவு வகையாக இருக்குமானால், வலியைக் குறைக்கவும் முதுகெலும்பை உறுதிப்படுத்தவும், தண்டுவட எலும்பில் முறிவு ஏற்பட்ட இடத்தில், எலும்பு சிமென்ட்டைக் கொண்டு உறுதியாக்கவும் மற்றும் ஊசிமூலம் செலுத்தவும் சிறிய கீறல்கள் மட்டுமே இந்த மருத்துவ செயல்முறைக்கு தேவைப்படும். உடற்பயிற்சி சிகிச்சை: முதுகெலும்பை நீட்டுதல், தோற்றத்தைச் சரிசெய்தல் மற்றும் முதுகின் மையப்பகுதியை வலுப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை உள்ளடக்கிய ஒரு மறுவாழ்வுத் திட்டம் உருவாக்கப்படலாம். ஏற்பட வாய்ப்புள்ள ஆபத்தைக் குறைக்கவும் மற்றும் இயக்கத்திறனை மேம்படுத்தவும் கண்காணிப்பின் கீழ், அத்திட்டத்தை செயல்படுத்துவது உதவக்கூடும். பாரம்பரிய வீட்டு வைத்திய முறைகள் மற்றும் சுய-பராமரிப்பு நடவடிக்கைகள் மருத்துவர்கள் வழங்கும் சிகிச்சை முறைகள் முக்கியமானவையே. எனினும், அச்சிகிச்சைக்கு சில வீட்டு வைத்திய வழிமுறைகள் ஆதரவளிக்கக்கூடும்:எலும்பு அடர்த்தி குறையும்போது, எலும்பு முறிவுகள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும். சுவரில் கைகளை வைத்து நகர்த்துவது அல்லது தாடையை உள்ளிழுத்து (சின் டக்ஸ்) மெதுவாக விடுவது போன்ற உடற்பயிற்சிகள் கூன் விழுவதை தடுக்கவும், குறைக்கவும் உதவும். இதன்மூலம் கூன் விழாமல் உங்கள் உடல் தோற்றத்தை உங்களால் பராமரிக்க முடியும். குறைவான தாக்கம் ஏற்படுத்தும் அல்லது தாக்கம் இல்லாத எடை தாங்கும் பயிற்சிகள் (எ.கா. நடைபயிற்சி, யோகா (கண்காணிப்பின் கீழ்)) வயதாகும்போது எலும்பு அடர்த்தி இழப்பை தாமதப்படுத்தவும் மற்றும் கீழே தவறி விழுவதைக் குறைக்கவும் உதவும். முதியவர்கள் தரையில் ‘விழாமல் தடுக்கும்’ வகையில் வீட்டை மாற்றியமைப்பது: இலேசாக கீழே விழும் நிகழ்வுகள் கூட மோசமடைந்திருக்கும் எலும்புகளில் முறிவுகளை உருவாக்கலாம். போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதிசெய்வது, பொருட்கள் அடைசலாக சிதறிக்கிடக்கும் நிலையை அகற்றுவது தேவைப்படும் இடங்களில் பிடிமானக் கம்பிகளை அமைப்பது ஆகியவற்றின் மூலம், உங்கள் வீட்டை முடிந்தவரை ‘விழாமல் தடுக்கும்’ வகையில் பாதுகாப்பானதாக மாற்றலாம். பயன்பாட்டிற்கு ஏற்ற பாதுகாப்பான தளவாடங்களைப் பயன்படுத்துதல்: முதுகுக்கு ஆதரவு தரும் நாற்காலிகள் ஒரு நபரின் இயற்கையான நேரான முதுகெலும்பு தோற்றத்தை ஆதரிக்க உதவுகின்றன; மேலும் ஒருவர் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் ஏற்படும் அழுத்தத்தையும் குறைக்கின்றன. உணவுமுறை: கால்சியம் (பருப்பு வகைகள், பால் பொருட்கள், செறிவூட்டப்பட்ட உணவுகள், கீரை வகைகள்) மற்றும் மெக்னீசியம் (பருப்பு / கொட்டைகள்) எலும்புகளின் உறுதியை மேம்படுத்துகின்றன. கூனல் விழுந்த தோற்றத்தை அல்லது உயரம் குறைந்து வருவதை வயது முதிர்வால் வரும் ஒரு பிரச்னையாக கருதி அலட்சியம் செய்யக்கூடாது. முதுகெலும்பு முறிவுகள் பெரும்பாலும் தடுக்கக்கூடியவையே; ஆரம்பத்திலேயே இவை கண்டறியப்படுமானால், சிகிச்சையின் மூலம் சரிசெய்யக்கூடியவையே. எனவே ஆரம்பகாலத்திலேயே பாதிப்புகளையும் மற்றும் அதன் அறிகுறிகளையும் கண்டறிவது மிக முக்கியமானது. ஆரம்பகட்ட பரிசோதனை, சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சைப் பெறுவது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது ஆகியவை ஒரு நபரின் குறிப்பாக, நடுத்தர வயதை கடந்த நபரின் எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்க பெரிதும் உதவும். https://akkinikkunchu.com/?p=341076

கூன் விழுவதன் காரணம் – மருத்துவர் விளக்கம்

2 months 1 week ago

கூன் விழுவதன் காரணம் – மருத்துவர் விளக்கம்

September 16, 2025

0

What_is_Kyphosis_Roundback_of_the_Spine1

வயதாகும்போது தங்கள் உயரத்தில் சில அங்குலங்கள் குறைவது அல்லது உடலில் கூனல் விழுவது அல்லது குனிந்த முதுகு ஏற்படுவது போன்ற பிரச்னையை சில முதியோர் சந்திக்கின்றனர். ஆனால், இதை பலரும் தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை. இதை முதுமையின் இயல்பான ஒரு பகுதியாகவே கருதி அலட்சியம் செய்துவிடுவார்கள்.

ஒரு குறுகிய காலத்தில் 1.5 அங்குலம் (4 செ.மீ) உயரம் குறைந்தால், அது வெறும் முதுமையின் பாதிப்பல்ல. குனிந்த அல்லது கூன் விழுந்த தோற்றத்துடன் கூடிய திடீர் (கவனிக்கத்தக்க அளவிற்கு) உயர இழப்பு ஏற்படுமானால், அது முதுகெலும்பு அழுத்த முறிவின் (VCF) ஒரு முக்கிய அறிகுறியாக இருக்கலாம். இந்த முறிவுகள், 50 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் அபாயத்தை இரட்டிப்பாக்கும் எலும்புப்புரை (osteoporosis) நோயினால் ஏற்படும் பின்விளைவுகளாகும் என்கிறார் தண்டுவட அறுவை சிகிச்சை முதுநிலை நிபுணர், மருத்துவர் விக்னேஷ் ஜெயபாலன். இதற்கு காரணம் என்ன.. தீர்வு என்ன.. என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

முதுகெலும்பில் உள்ள ஒன்று அல்லது பல எலும்புகள் நசுங்கும்போது முதுகெலும்பு அழுத்த முறிவு ஏற்படுகிறது. இது பொதுவாக பலவீனமான, நுண்துளைகள் கொண்ட எலும்புகளின் காரணமாக நிகழ்கிறது. எலும்புப்புரை பாதிப்பு இருக்கும்போது, முதுகை வளைப்பது, குனிவது, இருமுவது அல்லது பொருட்களைத் தூக்குவது போன்ற அன்றாட செயல்களே இதுபோன்ற முதுகெலும்பு முறிவுகளை ஏற்படுத்தப் போதுமான காரணமாக இருக்கலாம்.

இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பதை தாமதமாக கண்டறிவதற்கு முக்கிய காரணம், தாங்கள் என்ன பாதிப்புக்கு உள்ளாகிறோம் என்பதை நோயாளிகள் உணர்வது அவர்களுக்கு மிகவும் கடினமானது. ஏனெனில், முதுகெலும்பு அழுத்த முறிவுகள் குறிப்பிட்டு சொல்ல முடியாத முதுகுவலியாகவே இருக்கும். மேலும், காலப்போக்கில் அந்நபரின் தோற்றத்தில் வெளிப்படையாகத் தெரியும் மாற்றம் ஏற்படும். தொடர்ச்சியாக திரும்பத் திரும்ப நிகழும் நுண் முறிவுகள் நோயாளிக்கு நாள்பட்ட வலி, உயர இழப்பு மற்றும் கூன் விழுந்த தோற்றம் ஆகியவற்றை ஏற்படுத்தி, சிரமப்படுமாறு செய்வதுடன் அவர்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

இதற்கான அதிக ஆபத்தில் இருப்பவர்கள் யார்?

மாதவிடாய் நின்றுவிட்ட பெண்கள்: இவர்களிடம் ஈஸ்ட்ரோஜென் குறைவாக இருப்பது எலும்பு வலுவிழப்பை மேலும் துரிதப்படுத்துகிறது.

50 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் குறைந்த உடல் எடை அல்லது ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள நபர்கள்: குறிப்பாக வைட்டமின் டி குறைபாடுள்ளவர்கள் மற்றும் குறைவான அளவு கால்சியம் உட்கொள்பவர்கள்.

பரிந்துரைக்கப்படும் மருத்துவத் தீர்வுகள்

எலும்பு அடர்த்தி சோதனைகள் (DEXA ஸ்கேன்): முதுகெலும்பு முறிவைக் கண்டறிவதில் ஆரம்பகால நோயறிதல் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. மாதவிடாய் நின்றுவிட்ட பெண்கள் மற்றும் வயதான ஆண்களுக்கு எலும்புப்புரைக்கான பரிசோதனையை குறித்த காலஅளவுகளில் செய்து கொள்ளுமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம். குறிப்பாக அவர்களுக்கு உயர இழப்பு, முதுகெலும்பு வளைவு போன்ற அறிகுறிகள் இருக்குமானால், இச்சோதனையை தவறாமல் செய்ய வேண்டும்.

வெர்டிப்ரோபிளாஸ்டி அல்லது கைஃபோபிளாஸ்டி: எலும்பு முறிவானது கடுமையான அழுத்த முறிவு வகையாக இருக்குமானால், வலியைக் குறைக்கவும் முதுகெலும்பை உறுதிப்படுத்தவும், தண்டுவட எலும்பில் முறிவு ஏற்பட்ட இடத்தில், எலும்பு சிமென்ட்டைக் கொண்டு உறுதியாக்கவும் மற்றும் ஊசிமூலம் செலுத்தவும் சிறிய கீறல்கள் மட்டுமே இந்த மருத்துவ செயல்முறைக்கு தேவைப்படும்.

உடற்பயிற்சி சிகிச்சை: முதுகெலும்பை நீட்டுதல், தோற்றத்தைச் சரிசெய்தல் மற்றும் முதுகின் மையப்பகுதியை வலுப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை உள்ளடக்கிய ஒரு மறுவாழ்வுத் திட்டம் உருவாக்கப்படலாம். ஏற்பட வாய்ப்புள்ள ஆபத்தைக் குறைக்கவும் மற்றும் இயக்கத்திறனை மேம்படுத்தவும் கண்காணிப்பின் கீழ், அத்திட்டத்தை செயல்படுத்துவது உதவக்கூடும்.

பாரம்பரிய வீட்டு வைத்திய முறைகள் மற்றும் சுய-பராமரிப்பு நடவடிக்கைகள்

மருத்துவர்கள் வழங்கும் சிகிச்சை முறைகள் முக்கியமானவையே. எனினும், அச்சிகிச்சைக்கு சில வீட்டு வைத்திய வழிமுறைகள் ஆதரவளிக்கக்கூடும்:எலும்பு அடர்த்தி குறையும்போது, எலும்பு முறிவுகள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும். சுவரில் கைகளை வைத்து நகர்த்துவது அல்லது தாடையை உள்ளிழுத்து (சின் டக்ஸ்) மெதுவாக விடுவது போன்ற உடற்பயிற்சிகள் கூன் விழுவதை தடுக்கவும், குறைக்கவும் உதவும். இதன்மூலம் கூன் விழாமல் உங்கள் உடல் தோற்றத்தை உங்களால் பராமரிக்க முடியும்.

குறைவான தாக்கம் ஏற்படுத்தும் அல்லது தாக்கம் இல்லாத எடை தாங்கும் பயிற்சிகள் (எ.கா. நடைபயிற்சி, யோகா (கண்காணிப்பின் கீழ்)) வயதாகும்போது எலும்பு அடர்த்தி இழப்பை தாமதப்படுத்தவும் மற்றும் கீழே தவறி விழுவதைக் குறைக்கவும் உதவும்.

முதியவர்கள் தரையில் ‘விழாமல் தடுக்கும்’ வகையில் வீட்டை மாற்றியமைப்பது: இலேசாக கீழே விழும் நிகழ்வுகள் கூட மோசமடைந்திருக்கும் எலும்புகளில் முறிவுகளை உருவாக்கலாம். போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதிசெய்வது, பொருட்கள் அடைசலாக சிதறிக்கிடக்கும் நிலையை அகற்றுவது தேவைப்படும் இடங்களில் பிடிமானக் கம்பிகளை அமைப்பது ஆகியவற்றின் மூலம், உங்கள் வீட்டை முடிந்தவரை ‘விழாமல் தடுக்கும்’ வகையில் பாதுகாப்பானதாக மாற்றலாம்.

பயன்பாட்டிற்கு ஏற்ற பாதுகாப்பான தளவாடங்களைப் பயன்படுத்துதல்: முதுகுக்கு ஆதரவு தரும் நாற்காலிகள் ஒரு நபரின் இயற்கையான நேரான முதுகெலும்பு தோற்றத்தை ஆதரிக்க உதவுகின்றன; மேலும் ஒருவர் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் ஏற்படும் அழுத்தத்தையும் குறைக்கின்றன.

உணவுமுறை: கால்சியம் (பருப்பு வகைகள், பால் பொருட்கள், செறிவூட்டப்பட்ட உணவுகள், கீரை வகைகள்) மற்றும் மெக்னீசியம் (பருப்பு / கொட்டைகள்) எலும்புகளின் உறுதியை

மேம்படுத்துகின்றன. கூனல் விழுந்த தோற்றத்தை அல்லது உயரம் குறைந்து வருவதை வயது முதிர்வால் வரும் ஒரு பிரச்னையாக கருதி அலட்சியம் செய்யக்கூடாது. முதுகெலும்பு முறிவுகள் பெரும்பாலும் தடுக்கக்கூடியவையே; ஆரம்பத்திலேயே இவை கண்டறியப்படுமானால், சிகிச்சையின் மூலம் சரிசெய்யக்கூடியவையே.

எனவே ஆரம்பகாலத்திலேயே பாதிப்புகளையும் மற்றும் அதன் அறிகுறிகளையும் கண்டறிவது மிக முக்கியமானது. ஆரம்பகட்ட பரிசோதனை, சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சைப் பெறுவது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது ஆகியவை ஒரு நபரின் குறிப்பாக, நடுத்தர வயதை கடந்த நபரின் எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்க பெரிதும் உதவும்.

https://akkinikkunchu.com/?p=341076

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி!

2 months 1 week ago
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகியுள்ளது. அதில் இலங்கையின் பொறுப்புக் கூறல், நீதி விசாரணை தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்றுள்ளது. சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் ஏற்பட்டுள்ள இந்த நிலையில் செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரமும் ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையில் பேசு பொருளாக மாறியுள்ளது. இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள மனித புதைகுழிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் விசாரணைகள் சர்வதேச தரத்தின் படி நடத்தப்பட வேண்டும் என பிரிட்டன் ஜெனீவா அமர்வில் வலியுறுத்தியும் உள்ளது. அதுவும் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளது. திட்டமிட்ட இனப்படுகொலை தமிழர் தாயகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளில் செம்மணி மனிதப் புதைகுழியானது ஒரு இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகளையும், மிலேச்சத்தனமான நடவடிக்கைகளையும், அரச படைகளின் கொடூர முகத்தையும் வெளிப்படுத்தி இனப்படுகொலையின் சாட்சியாக நிற்கின்றது. செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இரண்டு கட்டமாக அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு அது நிறைவுக்கு வந்துள்ளது. செம்மணி சித்துபாத்தியில் மனித எலும்புக்கூடுகள் இருப்பதாக தெரிவித்ததையடுத்து, யாழ் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய முதல் கட்டமாக 9 நாட்களும், அதன் பின் இரண்டாம் கட்டமாக 45 நாட்களுமாக 54 நாட்கள் முழுமையாக அகழ்வுப் பணிகள் இடம் பெற்றிருந்தது. இதன்போது 240 மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்ததுடன், அதில் 239 எலும்புக் கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் 72 சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளும் சான்றுப் பொருட்களும் செம்மணி சித்துபாத்தியில் தமிழ் தேசிய இனத்திற்கு எதிராக இடம்பெற்ற திட்டமிட்ட இனப்படுகொலையை வெளிப்படுத்தி நிற்கிறது. குற்றங்களை விசாரிப்பதற்கு சுயாதீன அலுவலகம் 14 இடங்களில் எலும்புக்கூடுகள் குவியல்களாகவும், சில எலும்புக் கூடுகள் பாகங்கள் உடைவடைந்த நிலையிலும் மீட்கப்பட்டதுடன், கைகள் பின்னால் கட்டப்பட்டு இருந்த நிலையிலும் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு பச்சிளம் குழந்தை முதல் முதியவர் வரை பலர் கொல்லப்பட்டுள்ளனர். இது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மார் மத்தியிலும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மனங்களிலும் மேலும் காயத்தையும், ஆறாத வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பாக கவனம் செலுத்தியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், செம்மணி சித்துபாத்தியில் மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமான எச்சங்கள் ஆடைகள் இல்லாமல் ஆழமற்ற குழிகளில் புதைக்கப்பட்டுள்ளன. இது நீதிக்குப் புறம்பான கொலைகள் குறித்த சந்தேகங்களை எழுப்புகிறது. கடுமையான குற்றங்களை விசாரிப்பதற்கு ஒரு சுயாதீன அலுவலகத்தை நிறுவுதல், மரபணு பகுப்பாய்வு மற்றும் கார்பன் டேட்டிங் ஆகியவற்றிற்கான வெளிநாட்டு நிபுணத்துவத்தைப் பெறுதல் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ஒரு தேசிய மரபணு வங்கியை உருவாக்குதல் ஆகியவற்றை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் யாழ்ப்பாணம் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செம்மணி சித்துபாத்தி புதைகுழியை பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அங்கு செல்லவில்லை. அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது செம்மணி தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெறும் எனவும் தெரிவித்தார். அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் தெரிவிக்கையில், செம்மணி விவகாரம் நீதிமன்றத்துடன் தொடர்புடையதாகும். நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அதனுடன் தொடர்புடைய விடயங்கள் நீதிமன்றத்திற்கே அறிவிக்கப்படும். நீதிமன்றம் சுயாதீனமான நிறுவனமாகும. நீதிமன்ற நடவடிக்கைகளுக்குரிய வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுக்கும். விசேட குழு ஒன்றினால் அதறகுரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொலிஸ் விசாரணைகளும் இடம்பெற்று வருதாக தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் இடம்பெற்று வரும் நிலையில் கடந்த கால அரசாங்கங்கள் போன்று ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைப் பேச்சாளர் ஆகியோரின் குறித்த கருத்தும் வெறும் கண்துடைப்புக்கான கருத்தாக இல்லாமல் உண்மையாவே பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பரிகார நீதியைப் பெறும் வகையில் நீதியான விசாரணைகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். குறித்த சம்பவங்கள் தொடர்பான சாட்சிகளைப் பெறுவதற்கு மாணவி கிருசாந்தி படுகொலை வழக்கில் மரண தண்டனை கைதியாகவுள்ள இராணுவச் சிப்பாய் சோமரத்தின ராஜபக்ச அவர்களையும் பயன்படுத்த முடியும். ஏனெனில் செம்மணியில் 300- 400 பேர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக அவர் முன்னர் தெரிவித்து இருந்ததுடன், செம்மணி புதைகுழி குறித்து சாட்சியமளிக்க தான் தயார் என அவர் தனது மனைவி ஊடாக ஜனாதிபதிக்கு கடிதம் மூலமும் தெரிவித்துள்ளார். அவரது சாட்சியங்களின் அடிப்படையில் இதனுடன் தொடர்புடையவர்கள், அவர்களுக்கு கட்டளை பிறப்பித்தவர்கள் என பலரை இனங்காணக் கூடியதாக இருக்கும். பக்கச் சார்பின்றி விசாரணை நடத்துமா... படை தரப்பின் வன்ம வெறியாட்டத்தை விசாரிக்க இந்த இலங்கை அரசாங்கம் தென்னிலங்கையில் இருந்து வரும் அழுத்தங்களுக்கு அடிபணியாது இடம் கொடுக்குமா..? என்ற கேள்வி பாதிக்கப்பட்ட மக்களிடம் எழுந்தும் உள்ளது. இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வுகள் இடம்பெற வேண்டும். எதிர்வரும் 18 ஆம் திகதி யாழ் நீதவான் நீதிமன்றத்தில் அதற்கான திகதி தீர்மானிக்கபடும். 8 வாரங்கள் அந்த அகழ்வு இடம்பெற வேண்டும் என தற்போது எதிர்பர்க்கபடுகிறது. இதற்கான நிதி, நிபுணத்துவ சேவை மற்றும் ஏனைய வசதிகளை அரசாங்கம் செய்து கொடுத்தால் மட்டுமே அந்த அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள முடியும். அதனை அரசாங்கம் செய்து கொடுத்து நீதியான வகையில் பக்கச் சார்பின்றி விசாரணை நடத்துமா என்ற கேள்வி பாதிக்கப்பட்ட மக்களிடம் எழுந்துள்ளது. பட்டலந்த மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணைகள் செம்மணி என்பது எவராலும் மறந்து விட முடியாத இடம். அதற்கு காரணம் மாணவி கிருசாந்தி படுகொலை. மாணவி கிருசாந்தி படுகொலையின் 29 ஆம் ஆண்டு நிறைவு கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றிருந்தது. மரணித்த கிருசாந்தியின் ஆத்மா மற்றும் அங்கு புதைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரினதும் ஆத்மாக்களும் இன்று அங்கு நடந்த மனிதப் பேரவலத்தை வெளிப்படுத்தி சான்றுகளாக கண் முன்னே வந்து நீதி கேட்கின்றன. ஆக, இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள செம்மணி சித்துபாத்தி விடயத்தை இலங்கை அரசாங்கம் எவ்வாறு கையாளப் போகின்றது. பட்டலந்த மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணைகள் போன்று செம்மணி விசாரணையும் நீதியான முறையில் பக்கச்சார்பின்றி இடம்பெறுமா? தென்னிலங்கையின் அழுத்தங்களுக்கு அடிபணியாது படுகொலைக்களுக்கு காரணமான படைத் தரப்பைச் சேர்ந்தவர்களுக்கு தண்டனை வழங்கி பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரை இந்த அரசாங்கம் துடைக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டிள்ளது. https://tamilwin.com/

யாழ் பல்கலைக்கு 2,234 மில்லியன் செலவில் புதிய கட்டிடம் : துணை சுகாதார விஞ்ஞான பீடத்திற்கு நவீன வசதிகள் - அரசாங்கம்

2 months 1 week ago
நல்ல திட்டங்கள் ........ வேலிகள் பயிரை மேயாமல் நல்லன நடந்தால் நல்லதே ........!

அவுஸ்திரேலியாவில் இந்திய கடைக்கு எதிராக இலங்கையர் எடுத்த அதிரடி நடவடிக்கை

2 months 1 week ago
அவுஸ்திரேலியாவின் கான்பெராவில் உள்ள ஒரு வீட்டின் வாகனம் பழுது பார்க்கும் இடத்தில் இயங்கும் ஒரு இந்திய கடைக்கு எதிராக இலங்கையர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். குறித்த கடை 2023ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மேலும் உறைந்த உணவுகள் உட்பட பல்வேறு பொருட்கள் அங்கு விற்பனை செய்யப்படுகின்றன. கடையில் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இருப்பதும், அவர்களின் கவனக்குறைவான வாகன நிறுத்துமிடமும் அந்தப் பகுதியில் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். ஆபத்தான சூழ்நிலை கடைக்கு பொருட்களை கொண்டு செல்லும் லொறிகள் வீதியில் பயனாளர்களுக்கு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியுள்ளன. காலை 6:30 மணி முதல் இரவு 11:00 மணி வரை கடை இயங்குகிறது, மேலும் பொருட்களை ஏற்றும்போது கடையின் லொறிகள் வீதிகளை தடுக்கும் வகையில் நிறுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணக் கோரி ACT ஆளுநர் ஆண்ட்ரூ பாருக்கு ,இலங்கையரான பிரசாத் அபேரத்னே ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் இந்த பிரச்சினையை ஆராய்வதாக அமைச்சர் மரிசா பேட்டர்சன் உறுதியளித்துள்ளார். கடை உரிமையாளர் எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை என்று கடை உரிமையாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் தங்கள் வணிகத்திற்கு ABN மற்றும் உள்ளூர் அரசாங்கத்திடமிருந்தும் ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும் கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/

அவுஸ்திரேலியாவில் இந்திய கடைக்கு எதிராக இலங்கையர் எடுத்த அதிரடி நடவடிக்கை

2 months 1 week ago

அவுஸ்திரேலியாவின் கான்பெராவில் உள்ள ஒரு வீட்டின் வாகனம் பழுது பார்க்கும் இடத்தில் இயங்கும் ஒரு இந்திய கடைக்கு எதிராக இலங்கையர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

குறித்த கடை 2023ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மேலும் உறைந்த உணவுகள் உட்பட பல்வேறு பொருட்கள் அங்கு விற்பனை செய்யப்படுகின்றன.

கடையில் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இருப்பதும், அவர்களின் கவனக்குறைவான வாகன நிறுத்துமிடமும் அந்தப் பகுதியில் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

ஆபத்தான சூழ்நிலை

கடைக்கு பொருட்களை கொண்டு செல்லும் லொறிகள் வீதியில் பயனாளர்களுக்கு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியுள்ளன.

அவுஸ்திரேலியாவில் இந்திய கடைக்கு எதிராக இலங்கையர் எடுத்த அதிரடி நடவடிக்கை | Sri Lankan Against Indian Shop In Australia

காலை 6:30 மணி முதல் இரவு 11:00 மணி வரை கடை இயங்குகிறது, மேலும் பொருட்களை ஏற்றும்போது கடையின் லொறிகள் வீதிகளை தடுக்கும் வகையில் நிறுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணக் கோரி ACT ஆளுநர் ஆண்ட்ரூ பாருக்கு ,இலங்கையரான பிரசாத் அபேரத்னே ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் இந்த பிரச்சினையை ஆராய்வதாக அமைச்சர் மரிசா பேட்டர்சன் உறுதியளித்துள்ளார்.

கடை உரிமையாளர்

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை என்று கடை உரிமையாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இந்திய கடைக்கு எதிராக இலங்கையர் எடுத்த அதிரடி நடவடிக்கை | Sri Lankan Against Indian Shop In Australia

மேலும் தங்கள் வணிகத்திற்கு ABN மற்றும் உள்ளூர் அரசாங்கத்திடமிருந்தும் ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும் கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

https://tamilwin.com/

பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?

2 months 1 week ago
கூட இருந்து குழி பறிப்போர், காட்டிக்கொடுப்போர், துரோகிகளுக்கு கிடைக்கும் தண்டனைகள் அவர்கள் சார்ந்தவர்களையும் நோகடித்து வேதனைப்படுத்துவதைத் தவிர்க்க முடியாது. ஒரு இனத்தையே அழிவிலிருந்து பாதுகாக்க தன் உயிரையே துச்சமென எண்ணிப் போராடும் ஒரு போராளிகள் இயக்கத்தைத் தூற்றுபவர்களை உலகமே தூற்றும்.

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளமை உறுதி

2 months 1 week ago
இஸ்ரேல் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டும் ஐநா அறிக்கையின் அரசியல் விளைவு என்ன? பட மூலாதாரம், AFP படக்குறிப்பு, இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைகள் 2023-ஆம் ஆண்டு அக்டோபர் முதல், 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை குறைந்தது 90% மக்கள் இடம்பெயர்வதற்கு வழிவகுத்துள்ளது கட்டுரை தகவல் ஜெர்மி போவன் சர்வதேச ஆசிரியர், பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இஸ்ரேல் காஸாவில் இனப்படுகொலையை நிகழ்த்துவதாக கூறும் ஓர் அறிக்கை, விரிவான, கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கும் அளவுக்கான ஆதாரங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. 1948-ஆம் ஆண்டில் புதிதாக நிறுவப்பட்ட ஐநாவில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானத்தை இஸ்ரேல் மீறியுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. 'இனப்படுகொலை (Genocide)' என்ற வார்த்தையும் அதை குற்றச்செயலாக கூறும் இந்த தீர்மானமும், நாஜி ஜெர்மனியால் 60 லட்சம் யூத மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதிலிருந்து நேரடியாக தாக்கம் பெற்றதாகும். போர் தொடர்பான சட்டங்கள் மற்றும் சர்வதேச மனிதநேயச் சட்டத்தை உருவாக்க வழிவகுத்த தீர்மானங்கள் மற்றும் உடன்படிக்கைகளை காஸாவில் தங்களின் நடவடிக்கைகள் மீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் மறுத்துள்ளது. தற்காப்பு, தங்கள் நாட்டு குடிமக்கள் மீதான பாதுகாப்பு மற்றும் 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை விடுவிப்பதை வலியுறுத்தும் விதமாகவே தங்கள் நடவடிக்கைகள் அமைந்திருப்பதாக இஸ்ரேல் நியாயப்படுத்துகிறது. இஸ்ரேலிய பணயக்கைதிகளில் சுமார் 20 பேர் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. ஹமாஸால் பரப்பப்படும் யூத எதிர்ப்பு பொய்களால் ஈர்க்கப்பட்டுள்ளதாக, இஸ்ரேலியர்கள் அந்த அறிக்கையை நிராகரித்துள்ளனர். இந்த அறிக்கை, ஐநா மனித உரிமைகள் கவுன்சிலால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவிடமிருந்து தொகுக்கப்பட்ட தகவல்களாகும். தங்கள் நாட்டுக்கு எதிராக பாரபட்சமாக செயல்படுவதாக கூறி, இந்த கவுன்சிலை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா புறக்கணித்துள்ளது. ஆனால், இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராக வளர்ந்துவரும் சர்வதேச கண்டனத்துக்கு இந்த அறிக்கை முடிவுகள் பங்களிப்பதாக உள்ளன. இஸ்ரேலின் பாரம்பரிய மேற்கத்திய நட்பு நாடுகளும் ஆபிரஹாம் உடன்படிக்கைகளில் (Abraham Accords) இஸ்ரேலுடனான தங்கள் நாட்டு உறவுகளை இயல்புநிலைக்குக் கொண்டுவந்த வளைகுடா அரபு முடியாட்சி நாடுகளும் இவ்விவகாரம் தொடர்பாக இஸ்ரேலை கண்டித்துள்ளன. பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, கடும் வான்வழி தாக்குதல்கள் மற்றும் கட்டடங்கள், உள்கட்டமைப்பு வசதிகளை அழிப்பது ஆகியவற்றை உள்ளடக்கிய இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையால் காஸா பெருமளவு அழிவை சந்தித்துள்ளது அடுத்த வாரம் நியூயார்க்கில் ஐநா பொதுச் சபையில், சுதந்திரமான பாலத்தீன நாட்டுக்கான இறையாண்மையை அங்கீகரிக்கும் மற்ற ஐநா உறுப்பினர் நாடுகளுடன் பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் இணைய உள்ளன. இந்த நகர்வு பெரிதும் அடையாள ரீதியான நடவடிக்கையாக இருக்கும். நூற்றாண்டுக்கு முன்பு ஐரோப்பாவிலிருந்து பாலத்தீனத்தில் குடியேற சியோனிய யூதர்கள் (Zionist Jews) வந்தபோது தொடங்கிய இந்த மோதலின் எதிர்காலம் குறித்த விவாதத்தை இது மாற்றும். ஆனால், பாலத்தீனத்தை அங்கீகரிப்பது யூத எதிர்ப்பு என்றும் ஹமாஸ் பயங்கரவாதத்திற்கான வெகுமதி என்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். பாலத்தீன நாடு, இஸ்ரேலியர்களை ஆபத்தில் ஆழ்த்தும் என்பதால், ஜோர்டான் ஆறு மற்றும் மத்திய தரைக்கடலுக்கு இடைப்பட்ட நிலத்தின் எந்த பகுதியிலும் பாலத்தீனர்கள் ஒருபோதும் சுதந்திரம் பெற முடியாது என்று அவர் தெரிவித்தார். அந்த நிலம் கடவுளால் யூத மக்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டது என இஸ்ரேலிய மத தேசியவாதிகள் நம்புகின்றனர். 1948-ஆம் ஆண்டு தீர்மானத்தின்படி, இனப்படுகொலை என்பது, ஓர் தேசிய, இன, மதக்குழுவின் மீது பகுதியாகவோ அல்லது மொத்தமாகவோ வேண்டுமென்றே அழிக்கும் நோக்கத்துடன் செயல்படுவது என விவரிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் காஸாவில் பாலத்தீனர்கள் மீதான தாக்குதல் அவ்வாறு குறிப்பிடப்படுகிறது. பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, காஸாவின் பல பகுதிகளில் "மனிதனால் உருவாக்கப்பட்ட பட்டினி" நிலவுவதாக ஐநாவின் பல முகமைகள் கூறியுள்ளன இஸ்ரேல் மீதான குற்றச்சாட்டுகள் காஸாவில் உள்ள பாலத்தீனர்கள் மற்றும் இஸ்ரேலில் அமைந்துள்ள சிறைகளில் உள்ள பாலத்தீனர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீதான குற்றச்சாட்டுகள் அடங்கிய நீண்ட பட்டியலில், அந்நாடு சட்ட ரீதியாக காக்க வேண்டிய பொதுமக்கள் மீதும் குறிவைப்பதாகவும், "உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகள் பற்றாக்குறையின் மூலம் பாலத்தீனர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் வகையிலான மனிதநேயமற்ற சூழல்களை உருவாக்குதல்" போன்றவையும் குறிப்பிடப்பட்டுள்ளன. உணவு தொடர்பான அவசர சூழலை மதிப்பீடு செய்யும் சர்வதேச அமைப்பான ஐபிசியின் (IPC- கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை வகைப்பாடு) கூற்றுப்படி, பஞ்சம் மற்றும் பரவலான பட்டினிக்கு வழிவகுத்த இஸ்ரேலிய தடையை இது குறிக்கிறது. இஸ்ரேலிய ராணுவம் காஸா நகரத்தில் உள்ள பொதுமக்களை தெற்கு நோக்கி நகருமாறு உத்தரவிட்டதையடுத்து, அங்கு தற்போது நடைபெறும் வலுக்கட்டாயமான இடம்பெயர்வு குறித்தும் ஐநாவின் இந்த புதிய அறிக்கை விவரித்துள்ளது. இதனால் சுமார் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. வான்வழி தாக்குதல்கள் மற்றும் காஸா நகரின் அடையாளமாக விளங்கும் உயர்ந்த கட்டடங்கள் உட்பட பல கட்டடங்களை அழிப்பதன் மூலமாகவும் இஸ்ரேலிய தாக்குதலின் வேகம் அதிகரித்து வருகிறது. காஸா நகரின் அடையாளமாக விளங்கும் கட்டடங்களை ஹமாஸின் "பயங்கரவாத கோபுரங்கள்" என இஸ்ரேலிய ராணுவம் அழைக்கிறது. "காஸாவில் குழந்தை பிறப்பை தடுக்கும் நோக்கத்துடனான நடவடிக்கைகளையும்" இஸ்ரேல் மேற்கொள்வதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. காஸாவில் மிகப்பெரிய கருத்தரிப்பு கிளீனிக் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் சுமார் 4000 கருமுட்டைகள் மற்றும் 1000 விந்து மாதிரிகள் மற்றும் கருவுறாத முட்டைகள் அழிக்கப்பட்டதாக வெளியான தகவலை இது குறிக்கிறது. இனப்படுகொலையை தூண்டியதாக 3 பேர் மீது குற்றச்சாட்டு பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (இடது), அதிபர் ஐஸக் ஹெர்சோக் (நடுவில் இருப்பவர்), பாதுகாப்பு முன்னாள் அமைச்சர் யோவ் கேலண்ட் (வலதுபக்கத்திலிருந்து இரண்டாவதாக இருப்பவர்) ஆகியோர் இனப்படுகொலையை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ராணுவ நடவடிக்கையின் விளைவுகளை தவிர்த்து, இந்த 'இனப்படுகொலைக்கு' தூண்டியதாக இஸ்ரேலிய அதிகாரிகள் மூன்று பேரையும் ஐநாவின் அறிக்கை கோடிட்டுக் காட்டியுள்ளது. அவர்களுள் ஒருவர், இஸ்ரேலின் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட், 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று, "மனித மிருகங்களுடன்" இஸ்ரேல் சண்டையிடுவதாக கூறியிருந்தார். பிரதமர் நெதன்யாகுவை போன்று யோவ் கேலண்ட்டும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் போர் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கைது வாரண்டை எதிர்கொண்டுள்ளார். அமலேக்குக்கு (Amalek) எதிரான யூத சண்டை குறித்த கதையுடன் காஸா போரை ஒப்பிட்டு, அதை தூண்டியதாக நெதன்யாகுவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். அமலேக் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், அவர்களின் உடைமைகள் மற்றும் விலங்குகளை அழிக்குமாறு யூத மக்களுக்கு கடவுள் கூறியதாக பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள மூன்றாவது அதிகாரி ஐஸக் ஹெர்சோக், இவர் போரின் முதல் வாரத்தில் ஹமாஸுக்கு எதிராக நிற்கவில்லையென காஸாவின் பாலத்தீனர்களை கண்டித்தார். 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 13 அன்று, "முழு தேசமும்தான் இதற்கு பொறுப்பு" என கூறினார். கடும் சட்டவிதிகள் சட்டபூர்வமாக இனப்படுகொலை குற்றத்தை நிரூபிப்பது கடினம். இனப்படுகொலை தீர்மானத்தை உருவாக்கியவர்கள் விதிகளை கடுமையாக வடிவமைத்தனர். சர்வதேச நீதிமன்றம் அதுகுறித்து கூறும் விளக்கமும் உயர்ந்த விதிமுறைகளை கொண்டதாக இருந்தது. ஹேக் நகரத்தில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றத்தில், பாலத்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாக தென்னாப்பிரிக்கா வழக்கு ஒன்றை தொடுத்தது. இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட பல ஆண்டுகளாகும். ஆனால், காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில் ஐநா அறிக்கை இந்த போர் தொடர்பான சர்வதேச பிளவுகளை இன்னும் ஆழப்படுத்தும். ஒருபுறம், காஸாவில் நடைபெறும் கொலைகள் மற்றும் அழிவுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தும், இஸ்ரேலின் தடைகளால் உருவாகியுள்ள பஞ்சத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் நாடுகள் உள்ளன. அவற்றில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் உள்ளன. மறுபுறம், இஸ்ரேலும் அமெரிக்காவும் உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், முக்கியமான ராணுவ உதவி மற்றும் ராஜீய ரீதியிலான பாதுகாப்பை வழங்கிவருகிறது, இவை இல்லாமல் காஸாவில் போரை தொடரவும் மத்திய கிழக்கில் குண்டுவீச்சு நடவடிக்கைகளை தொடரவும் இஸ்ரேல் போராட வேண்டிய நிலை உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8xrg7zkwwvo

திலீபனின் 38வது நினைவு தினம் அனுஷ்டிப்பு

2 months 1 week ago
தியாக தீபம் தீலிபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல் 16 Sep, 2025 | 05:14 PM தியாக தீபம் தீலிபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று செவ்வாய்க்கிழமை (15) நல்லூரில் அனுஷ்டிக்கப்பட்டது. திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டு இருந்த நிலையில் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று நடைபெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவாலயத்தில் அனுஷ்டிக்கபட்டது. இதன் போது சுடரேற்றி மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/225248

ஒரு நல்ல மாற்றம்

2 months 1 week ago

AVvXsEibKjOyrxW5mGSYz42eGf0Rw7MWq3vP8mOE

எனக்குத் தெரிந்த ஒருவர், இளைஞர், பொறுப்பானவர், பார்க்க ஆரோக்கியமாகத் தெரிபவர். அவருக்குத் திடீரென மூளைக்குச் செல்லும் தமனியில் அடைப்பு ஏற்பட்டு பக்கவாதம் வரும் நிலை ஏற்பட்டது. அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அடுத்து ஓராண்டில் அவருக்கு மூளைக்கும் முதுகெலும்புக்கும் இடைப்பட்ட பகுதியில் கட்டி வந்தது. அதையும் அறுவை சிகிச்சையால் சரி பண்ணினார்கள். அவருக்கு அதன் விளைவாக பக்கவாதம் வந்தது. அதிலிருந்து மீண்டு வந்ததும் மீண்டும் கட்டி ஏற்பட்டு அது புற்றுநோய் என உறுதிப்படுத்தினார்கள். ஊடுகதிர் சிகிச்சை, வேதிச்சிகிச்சை ஆகியவனவற்றை எடுத்துக் கொண்டு வருகிறார். அவர் மிகவும் மனம் நொந்து போயிருக்கிறார். நானும் செய்தியறிந்து மனம் வருந்தினேன். ஆனாலும் என்னிடம் அவர் சொன்ன ஒரு செய்தி என்னை ஆச்சரியப்படுத்தியது - மருத்துவர்கள் தன்னை டய்ட் உணவு மேற்கொள்ளச் சொல்லியிருப்பதாகவும், குறிப்பாக மாவுச்சத்தை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியிறுத்தியிருப்பதாகவும் சொன்னார். இது ஒரு முக்கியமான நகர்வு - ரொம்ப காலமாக மருத்துவர்கள் இதை ஏற்கத் தயங்கினார்கள். இருபதாண்டுகளுக்கு முன் என் அப்பா புற்றுநோயால் அவதிப்பட்டு இச்சிகிச்சைகளை எடுத்துக்கொண்ட போது மருத்துவர்கள் கொழுச்சத்து அதிகமான மாமிசம், குறிப்பாக மாட்டுக்கறி, காரம், புகைப்பழக்கம், மதுப்பழக்கம் ஆகியவற்றைத் தவிர்க்கவும் குறைக்கவும் சொன்னார்களே தவிர மாவுச்சத்துதான் புற்றுநோய் அணுக்களுக்கு தூண்டுதல் அளிப்பது எனும் புரிதல் அவர்களுக்கு இருக்கவில்லை. இன்று மெல்லமெல்ல அந்த இடத்துக்கு மருத்துவர்கள் வந்திருப்பது பாராட்டத்தக்கது. ஆனால் இதை அவர்கள் பொதுவெளியில் முன்வைத்து மக்களுக்கு அறிவுரைக்க வேண்டும். ஏனென்றால் என் நண்பருக்கு முதலில் மூளையில் பாதிப்பு ஏற்பட்டபோதே அவரிடம் டயட் விசயத்தை அறிவுறுத்தியிருந்தால் புற்றுநோயால் முழுக்க பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்.

புற்றுநோய் குறித்து atavistic கோட்பாடு ஒன்றுள்ளது - அதாவது இந்த புற்று அணுக்கள் நம் உடலில் ஏற்படும் கடும் அழுத்தத்தால் அணுக்களின் ஆதி நினைவைத் தூண்டப்படுவதால் தோன்றுபவை என்று. ரெண்டரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு புவியில் உயிர்வளி குறைவாக இருந்த காலத்தில் பெருகியிருந்த ஒற்றை அணு உயிரிகள் காற்றிலி (aneorobic) உயிரிகள் என அழைக்கப்பட்டன. இவை மாச்சர்க்கரையை (குளூகோஸை) உயிர்வளி இன்றி உடைத்து ஆற்றலை உருவாக்கின. ஆனால் உயிர்வளியைக் காற்றில் பெருக்குகிற கிருமிகள் தோன்றி அவை புதுவகையாக (உயிர்வளியைப் பயன்படுத்தி) ஆற்றலை உற்பத்தி பண்ண ஆரம்பித்தன. பழைய ஓரணு உயிரிகள் (உயிர்வளி தேவையற்றவை) அருகிட, அல்லது புதிய வகை கிருமிகளுடன் கலந்து புதுவகையான கிருமிகள் தோன்றிட நம் பிரபஞ்சமே மாறியது. பல்லணு உயிரிகள் தோன்றிப் பெருகி, மனித இனமும் தோன்றிட நமது அணுக்களுக்குள் கிருமிகளின் மரபணுக்கள் உறைந்திருந்தன. இந்த மரபணுவுக்குள் ரெண்டரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பான காற்றிலி உயிரிகளின் நினைவுகளும் இருக்கின்றன. எப்போதெல்லாம் நாம் தொடர்ச்சியாக மாவுச்சத்து மிகுந்த துரித உணவுகளை உட்கொண்டும், வேதியல் நச்சுக்களால், மாசுக்களால் பாதிக்கப்பட்டும் உடலைப் படுத்தி எடுக்கும்போது இந்த உடலால் இனிப் பயனில்லை என அணுக்கள் முடிவெடுக்கின்றன. அவை உடனே ஒரு பக்கம் தற்கொலை செய்கின்றன, இன்னொரு பக்கம் அவை வேகமாகத் தமக்குள் பிரிந்து இந்த உடலுக்குத் தேவையில்லாத சுயாதீனக் குழுமங்களாகின்றன. அவையே புற்று அணுக்கள். உடல் அழியுமுன் வேகமாகத் தோன்றி வளர்ந்து அழிவதே அவற்றின் நோக்கம். உதாரணமாக, இந்த புற்று அணுக்கள் மூளையில் தோன்றினால் அவை மூளையின் பணியைச் செய்து உடலுக்கு உதவாது. மூழ்கும் கப்பலில் உள்ள எலிகளைப் போல அவை நடந்துகொள்ளும். சீக்கிரமாகத் தின்று பெருகிவிட்டு தப்பித்து ஓடப் பார்க்கும்.

ஆனால் உயிர்வளியைப் பயன்படுத்தி ஆற்றலை உற்பத்தி பண்ணும்போது வேகமாக இந்த அணுக்களால் தோன்றவோ வளரவோ முடியாது. அதற்காக இவை காற்றிலி உயிரிகளின் மரபணு நினைவை மீட்டெடுக்கின்றன. அவை பல்லணு உயிரிகளாக அல்லாமல் ஒற்றை அணு உயிரிகளாகத் தம்மைக் கருதிச் செயல்படுகின்றன. உயிர்வளி இன்றியே குளூகோஸைக் கொண்டு ஆற்றலை உற்பத்தி பண்ணுகின்றன. ஆற்றலைக் குறைவாகவே அவ்வாறு பெருக்க முடியும் என்பதால் அவற்றுக்கு மிக அதிகமாக குளோகோஸ் தேவைப்படுகிறது. புற்று அணுக்களில் நாம் காணும் முக்கியமான பண்பு அவற்றில் உயிர்வளி மிகக்குறைவாகவும் குளோகோஸ் அதிகமாகவும் உள்ளன என்பது. இதை 1920களில் ஓட்டோ வார்பெர்க் என்பவர் கண்டறிந்ததால் இது வார்பெர்க் விளைவு என்று அழைக்கப்படுகிறது. முதுமரபை நோக்கிப் பின்னோக்கிச் செல்லும் இந்தப் போக்குக்கும் புற்றுநோயின் வளர்ச்சிக்குமான தொடர்பைப் பற்றி இந்த ஆகையால்தான் இப்போது மருத்துவர்கள் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மருத்துவ சமூகம் ஒட்டுமொத்தமாக வளர்ச்சிதை மாற்றம் சார்ந்த புற்றுநோய் சிகிச்சையை இன்னும் முழுக்க ஏற்கவில்லை என்றாலும் இது கூட ஒரு கவனிக்கத்தக்க மாற்றம்தான்.

இந்தப் புதிய அணுகுமுறையைக் குறித்து Travis Christofferson எழுதியுள்ள நூலும் (Tripping Over the Truth: The Return of the Metabolic Theory of Cancer) பால் டேவிஸ் பேசியுள்ள கருத்துக்களும் முக்கியமானவை.

வாயைக் கட்டுப்படுத்தி, குடலில் நல்ல நுண்ணுயிர்களை வளர்த்து, சரியாக ஓய்வெடுத்து மனத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டாலே புற்றுநோய் அருகிவிடும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளும் காலம் ஒன்று விரைவில் வரும்.

Posted Yesterday by ஆர். அபிலாஷ்

https://thiruttusavi.blogspot.com/2025/09/blog-post_14.html

@Justin அண்ணை உங்கள் கருத்துகளையும் சொல்லுங்க.