Aggregator
ஒரு பயணமும் சில கதைகளும்
ஐஸ் போதைப்பொருளுடன் தேரர்கள் இருவர் கைது!
ஐஸ் போதைப்பொருளுடன் தேரர்கள் இருவர் கைது!
ஒரு பயணமும் சில கதைகளும்
விரைவில் சுமோவுக்கு நிரந்தர ஓய்வு...!
மகிந்தவுக்கு கொழும்பில் சொந்த வீடு..! வெளியான இரகசியத் தகவல்
புலம்பெயர் தமிழர்களை குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது..! முன்னாள் கடற்படை பேச்சாளர் ஆதங்கம்
புலம்பெயர் தமிழர்களை குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது..! முன்னாள் கடற்படை பேச்சாளர் ஆதங்கம்
ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் எமக்கெதிராக புலம்பெயர் தமிழர்கள் செயற்படுவதென்பது ஏற்றுக் கொள்ள முடியாத காரணியாகும் என முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க தெரிவித்துள்ளார்.
இணையத்தள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து
அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டின் முழுமையான நோக்கம் ஐரோப்பாவின் ஆதிக்கத்தில் இலங்கையை உள்ளடக்க வேண்டும் என்பதாகும்.அதற்காக ஐரோப்பா பயன்படுத்தும் கருவியாக புலம்பெயர் தமிழர்கள் காணப்படுகிறார்கள்.

அதாவது இந்திய பெருங்கடலில் தங்களின் ஆதிக்கம் மேலோங்க இலங்கை ஒரு மர்மஸ்தானமாக இருப்பதாலாகும்.இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த 2009ஆம் ஆண்டு காலகட்டத்தில் அமெரிக்க காங்கிரஸுக்கு நிபுணர்கள் குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர்.
அது போருக்குப் பிறகு இலங்கையின் மறுசீரமைப்பு (recharcting of srilanka sfter war) ஆகும்.
அதில், இந்து சமுத்திர ஆதிக்கத்தில் இலங்கை முக்கிய புள்ளியாகும்.அதில் எமது பலத்தை நிலை நாட்ட எமக்குள்ள பலத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எமது நாட்டில் தேசிய ஒருமைப்பாடு இல்லை என்பது பொய்யான கருத்தாகும்.யுத்தம் நிறைவடைந்த சில காலத்தில் நாம் அனைவரையும் மீள குடியமர்த்தினோம்.
தேசிய ஒருமைப்பாடு
சிங்களவர், தமிழர் முரண்பாடுகள் ஊதி பெருப்பிக்கப்பட்டதாகும். நாட்டில் தேசிய ஒருமைப்பாடு நிலைப்பது சர்வதேச தரப்பில் விரும்பப்படாத ஒன்றாகும். அவர்களுக்கு இவை ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.எங்கள் நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தி.எமக்கிருக்கும் குறைந்தளவான வளங்களையும் சூறையாடிக் கொள்வதாகும்.
அதற்காக எம்மிடையே பிரிவினையை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கமாகும்.அப்போது எமக்கிருக்கும் வளங்களை பிரித்து கொள்வதற்கு எமது நாட்டில் நடக்கும் சண்டையில் அவர்கள் பலன் அடைவதே நோக்கமாகும்.

அதாவது "Responsibility to Protect" (R2P) என்ற சாசனத்தின் படி ஒரு நாட்டுக்கு தனது மக்களை பாதுகாக்க முடியாவிட்டால் ஐ.நாவின் பங்கேற்பில் அவர்களை பாதுகாப்பதற்காக தலையிட முடியும்.
அவ்வாறான ஒரு நிலைக்கு எமது நாட்டை கொண்டுவரவே முயற்சிக்கின்றனர். அல்லது தமிழர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்கவோ அல்லது புலம்பெயர் தமிழர்களின் அன்புக்காகவல்ல.
ஐரோப்பிய நாடுகளின் பிரதான குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்வதற்கே இவ்வாறான முன்னெடுப்புகள் செய்யப்படுகின்றன. இலங்கை அரசியல்வாதிகள் கூச்சலிடும் புலம் பெயர் தமிழர்கள் அல்ல.
அவர்களையும் சர்வதேசம் தங்கள் பக்கம் சார்ந்து வைத்து கொண்டே தங்களில் குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்ள மேற்கொள்ளும் பிரயத்தனமாகும். உங்களின் வாக்குகள் எமக்கு தேவை, உழைப்பு எங்களுக்கு முக்கியமானது என கூறும் ஐரோப்பியா தமிழர்களுக்கான தனி நாடு அவசியம் என கருத்துகள் புலம்பெயர் தமிழர்களுடாக இலங்கையில் பரப்பப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
யாழின் அத்திப்பட்டி கிராமம்! 35 வருடங்களின் பின் அம்பலமாகும் உண்மைகள் - கிணற்றுக்குள் மனிதப்புதைகுழி
யாழின் அத்திப்பட்டி கிராமம்! 35 வருடங்களின் பின் அம்பலமாகும் உண்மைகள் - கிணற்றுக்குள் மனிதப்புதைகுழி
செம்மணி மனிதபுதைக்குழி விவகாரம் பேசுபொருளாகியுள்ள நிலையில், மண்டைதீவு மனிதபுதைக்குழி விவகாரமும் துளிர்விட ஆரம்பித்துள்ளது.
1990களில் மண்டைதீவு பகுதியில் மிகப்பெரிய பேரவலம் அரங்கேறியுள்ளது.
50ற்கும் மேற்பட்பட்டோர் புதைக்கபட்ட மண்டைதீவு செம்பாட்டு தோட்டம் கிழக்கு தெருவில் அமைந்திருக்ககூடிய ஒரு கிணற்றின் ஊடாகத்தான் பல செய்திகள் வெளிவர காத்திருக்கின்றன.
யாழ்.தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மண்டைதீவானது 1990களின் பின்னர் இலங்கையின் உள்நாட்டு போரின் இருண்ட சாட்சியமாக மாறியுள்ளது.
போர்ச்சூழல் காரணமாக மண்டைதீவு விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கும் இலங்கை இராணுவத்திற்குமிடையில் அடிக்கடி கைமாறியுள்ளது.
மண்டைதீவு பல தசாப்தங்களாக நடந்த போர் மற்றும் அரசியல் வன்முறையின் சோக கதைகளில் ஒன்றாக உள்ளது.
விரைவில் சுமோவுக்கு நிரந்தர ஓய்வு...!
விரைவில் சுமோவுக்கு நிரந்தர ஓய்வு...!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் அவரது கும்பலுக்கு விரைவில் நிரந்தர ஓய்வு கிடைக்கும் என மட்டக்களப்பு கல்குடா தொகுதியின் தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் திலீப்குமார் தெரிவித்துள்ளார்.
அநுர அரசுக்கு ஆரம்பத்தில் வாக்களித்த மக்கள் இன்று பிழையானவர்களைத் தெரிவு செய்துவிட்டோம் என வருத்தப்படுவதாக சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இட்ட முகநூல் பதிவிலேயே திலீப்குமார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த முகநூல் பதிவில் மேலும்,
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் இனிக் கிடையாது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரியில்லா வாகன இறக்குமதி அனுமதி பத்திரம் கிடையாது.
நிரந்தர அரசியல் ஓய்வு
சிங்கள பௌத்த பேரினவாத அரசியலை அநுர அரசு செய்வதில்லை என்பதால் தமிழ்த் தேசிய அழிவு அரசியலை வைத்து பிச்சை எடுக்க முடியாத நிலைமை.

தென்னிலங்கையில் ரணில், ராஜபக்ச, பண்டாரநாயக்க குடும்பங்கள் நிரந்தர அரசியல் ஓய்வுக்கு செல்வது போல் விரைவில் சுமோ கும்பலுக்கும் ஓய்வு கிடைக்கும்.

ஆனால், எந்தவொரு அரசு கொடுப்பனவுகளும் கிடைக்காது. அஸ்வெசுமவுக்கு மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் - என குறிப்பிடப்பட்டுள்ளது.