Aggregator

மண்டைதீவில் படுகொலையானவர்களின் நினைவேந்தல்!

2 months 1 week ago
மண்டைதீவில் படுகொலையானவர்களின் நினைவேந்தல்! adminAugust 27, 2025 யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை தொடக்கம் மண்டைதீவு வரை படுகொலை செய்யப்பட்டவர்களின் 35 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. முன்னதாக ஊர்காவற்துறை பகுதியில் மாலை ஆரம்பமான நிகழ்வுகளை தொடர்ந்து , அராலி சந்தி , மண்கும்பான் பிள்ளையார் கோவிலடி ஆகிய இடங்களில் நிகழ்வுகள் இடம்பெற்று , இரவு மண்டைதீவில் பிரதான நிகழ்வுகள் இடம்பெற்றன. மண்டைதீவு பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களை மண்டைதீவு முதலாம் வட்டாரம் பகுதியில் உள்ள கிணறொன்றில் போடப்பட்டதாக கூறப்படும் பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மூடப்பட்ட கிணற்றுக்கு முன்பாக பிரதான தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து , கிணற்றை சுற்றி தீபங்கள் ஏற்றப்பட்டு , மூடப்பட்ட கிணற்றின் மேல் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து , படுகொலை செய்யப்பட்டவர்களில் இருவரின் உருவ படங்கள் அவ்விடத்தில் வைக்கப்பட்டு , மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது https://globaltamilnews.net/2025/219648/

மண்டைதீவில் படுகொலையானவர்களின் நினைவேந்தல்!

2 months 1 week ago

மண்டைதீவில் படுகொலையானவர்களின் நினைவேந்தல்!

adminAugust 27, 2025

Mandaithivu.jpg?fit=1170%2C658&ssl=1

யாழ்ப்பாணம்   ஊர்காவற்துறை தொடக்கம் மண்டைதீவு வரை படுகொலை செய்யப்பட்டவர்களின் 35 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

முன்னதாக ஊர்காவற்துறை பகுதியில் மாலை ஆரம்பமான நிகழ்வுகளை தொடர்ந்து , அராலி சந்தி , மண்கும்பான் பிள்ளையார் கோவிலடி ஆகிய இடங்களில் நிகழ்வுகள் இடம்பெற்று , இரவு மண்டைதீவில் பிரதான நிகழ்வுகள் இடம்பெற்றன.

மண்டைதீவு பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களை மண்டைதீவு முதலாம் வட்டாரம் பகுதியில் உள்ள கிணறொன்றில் போடப்பட்டதாக கூறப்படும் பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மூடப்பட்ட கிணற்றுக்கு முன்பாக பிரதான தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து , கிணற்றை சுற்றி தீபங்கள் ஏற்றப்பட்டு , மூடப்பட்ட கிணற்றின் மேல் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து , படுகொலை செய்யப்பட்டவர்களில் இருவரின் உருவ படங்கள் அவ்விடத்தில் வைக்கப்பட்டு , மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது

https://globaltamilnews.net/2025/219648/

ரணிலுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும்!

2 months 1 week ago
ரணிலுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும்! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன தெரிவித்துள்ளார். அறுவை சிகிச்சையை தேசிய வைத்தியசாலையில் செய்வதற்காக காத்திருப்பு பட்டியலில் இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு முடியாவிடின் தனியார் வைத்தியசாலைக்கு சென்று அதைச் செய்யும் வாய்ப்பு ரணில் விக்ரமசிங்கவுக்கு உள்ளதாகவும் அவர் கூறினார். “அவரது இதயத்தில் சில சிக்கல்கள் உள்ளன. விரைவில் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தினால் நல்லது. பிணை வழங்கப்பட்டதால் அறுவை சிகிச்சைக்காக அவர் விரும்பும் வைத்தியசாலைக்கு செல்லலாம். தேசிய வைத்தியசாலையில் காத்திருப்பு பட்டியல் சில நேரங்களில் சுமார் 3 ஆண்டுகள் ஆகும். எனவே, அவர் தனது சொந்த செலவில், விரும்பும் வைத்தியசாலையில் அதை விரைவாகச் செய்ய முடியும். தற்போது, அவருக்கு கரோனரி தமனிகளில் அடைப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவருக்கு நீரிழப்பும் உள்ளது. அந்த நிலை படிப்படியாக சரி செய்யப்பட்டு வருகிறது. அந்த நேரத்தில், அவரது இருதயம் பலவீனமாக இருப்பதைக் கண்டறிய முடிந்தது. அதை இயல்பு நிலைக்குக் கொண்டுவர அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.” என்றார். https://www.samakalam.com/ரணிலுக்கு-உடனடியாக-இருதய/

ரணிலுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும்!

2 months 1 week ago

ரணிலுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன தெரிவித்துள்ளார்.

அறுவை சிகிச்சையை தேசிய வைத்தியசாலையில் செய்வதற்காக காத்திருப்பு பட்டியலில் இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு முடியாவிடின் தனியார் வைத்தியசாலைக்கு சென்று அதைச் செய்யும் வாய்ப்பு ரணில் விக்ரமசிங்கவுக்கு உள்ளதாகவும் அவர் கூறினார்.

“அவரது இதயத்தில் சில சிக்கல்கள் உள்ளன. விரைவில் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தினால் நல்லது.

பிணை வழங்கப்பட்டதால் அறுவை சிகிச்சைக்காக அவர் விரும்பும் வைத்தியசாலைக்கு செல்லலாம்.

தேசிய வைத்தியசாலையில் காத்திருப்பு பட்டியல் சில நேரங்களில் சுமார் 3 ஆண்டுகள் ஆகும்.

எனவே, அவர் தனது சொந்த செலவில், விரும்பும் வைத்தியசாலையில் அதை விரைவாகச் செய்ய முடியும்.

தற்போது, அவருக்கு கரோனரி தமனிகளில் அடைப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவருக்கு நீரிழப்பும் உள்ளது.

அந்த நிலை படிப்படியாக சரி செய்யப்பட்டு வருகிறது. அந்த நேரத்தில், அவரது இருதயம் பலவீனமாக இருப்பதைக் கண்டறிய முடிந்தது.

அதை இயல்பு நிலைக்குக் கொண்டுவர அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.” என்றார்.

https://www.samakalam.com/ரணிலுக்கு-உடனடியாக-இருதய/

தமிழரசு கட்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2 months 1 week ago
தமிழரசு கட்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு! ஆட்சேபனையின் ஒரு பகுதி ஆங்கிலத்திலும் அதன் மறு பகுதி தமிழிலும் சமர்ப்பிப்பு! adminAugust 27, 2025 வலி. வடக்கு பிரதேச சபையின் தமிழரசு கட்சியின் உறுப்பினரான தன்னை கடிதம் மூலம் கட்சியின் பொது செயலாளர் இடைநிறுத்தியமையை சவாலுக்கு உட்படுத்தி யாழ் . மாவட்ட நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவுகளின் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் அறிவுறுத்தலுக்கு மாறாக செயற்பட்டதாக கூறி வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலம் ராசேந்திரம் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து சுமந்திரனால் கடிதம் ஒன்றின் மூலம் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து குறித்த பிரதேச சபை உறுப்பினர், சுமந்திரன் தன்னை எந்த அடிப்படையுமற்று மத்தியக்குழுவின் தீர்மானம் எதுவுமின்றி கட்சியில் இருந்து தன்னிச்சையாக நீக்கியதாக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். கடந்த தவணை குறித்த வழக்கில் முன்னிலையான தமிழரசு கட்சியின் பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளர் ஆகியோர் குறித்த வழக்கு தாக்கல் செய்ததே தவறு என தமது ஆட்சேபனையினை எழுத்துமூலம் தாக்கல் செய்திருந்தனர். குறித்த ஆட்சேபனைக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தமது பதில் ஆட்சேபனையை பிரதேச சபை உறுப்பினர் தாக்கல் செய்திருந்தார். அதில் குறித்த கட்சியின் பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனையானது ஒரு பகுதி ஆங்கிலத்திலும் அதன் மறு பகுதி தமிழிலும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமை சட்டத்திற்கு புறம்பானது, யாழ்ப்பாணத்தில் நீதி நிர்வாக மொழி தமிழ் ஆகையால் முழுமையாக தமிழிலேயே ஆட்சேபனை தாக்கல் செய்யப்பட வேண்டும் என பிரதேச சபை உறுப்பினரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்சேபனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. https://globaltamilnews.net/2025/219646/

தமிழரசு கட்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2 months 1 week ago

தமிழரசு கட்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

ஆட்சேபனையின் ஒரு பகுதி ஆங்கிலத்திலும் அதன் மறு பகுதி தமிழிலும் சமர்ப்பிப்பு!

adminAugust 27, 2025

Tamil-arachu-kadchi.jpg?fit=800%2C450&ss

வலி. வடக்கு பிரதேச சபையின் தமிழரசு கட்சியின் உறுப்பினரான தன்னை கடிதம் மூலம் கட்சியின் பொது செயலாளர் இடைநிறுத்தியமையை சவாலுக்கு உட்படுத்தி யாழ் . மாவட்ட நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவுகளின் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் அறிவுறுத்தலுக்கு மாறாக செயற்பட்டதாக கூறி வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலம் ராசேந்திரம் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து சுமந்திரனால் கடிதம் ஒன்றின் மூலம் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து குறித்த பிரதேச சபை உறுப்பினர், சுமந்திரன் தன்னை எந்த அடிப்படையுமற்று மத்தியக்குழுவின் தீர்மானம் எதுவுமின்றி கட்சியில் இருந்து தன்னிச்சையாக நீக்கியதாக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில்  வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

கடந்த தவணை குறித்த வழக்கில் முன்னிலையான தமிழரசு கட்சியின் பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளர் ஆகியோர் குறித்த வழக்கு தாக்கல் செய்ததே தவறு என தமது ஆட்சேபனையினை  எழுத்துமூலம் தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த ஆட்சேபனைக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தமது பதில் ஆட்சேபனையை பிரதேச சபை உறுப்பினர் தாக்கல் செய்திருந்தார்.

அதில் குறித்த கட்சியின் பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனையானது ஒரு பகுதி ஆங்கிலத்திலும் அதன் மறு பகுதி தமிழிலும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமை சட்டத்திற்கு புறம்பானது,

யாழ்ப்பாணத்தில் நீதி நிர்வாக மொழி தமிழ் ஆகையால் முழுமையாக தமிழிலேயே ஆட்சேபனை தாக்கல் செய்யப்பட வேண்டும் என  பிரதேச சபை உறுப்பினரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்சேபனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

https://globaltamilnews.net/2025/219646/

பொது இடத்தில் வெற்றிலை துப்பியவருக்கு 5ஆயிரம் தண்டம்!

2 months 1 week ago
பொது இடத்தில் வெற்றிலை துப்பியவருக்கு 5ஆயிரம் தண்டம்! adminAugust 27, 2025 பருத்தித்துறையில் வெற்றிலை மென்று பொது இடத்தில் துப்பிய நபருக்கு நீதிமன்று 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது. பருத்தித்துறை மீன் சந்தையில் மீன் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரி ஒருவர் சந்தையில் வெற்றிலை மென்று , பொது இடத்தில் துப்பிய குற்றச்சாட்டில் , அவருக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது மன்றில் முன்னிலையான வியாபாரி தன் மீதான குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவரை எச்சரித்த மன்று 5ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது. https://globaltamilnews.net/2025/219638/

பொது இடத்தில் வெற்றிலை துப்பியவருக்கு 5ஆயிரம் தண்டம்!

2 months 1 week ago

பொது இடத்தில் வெற்றிலை துப்பியவருக்கு 5ஆயிரம் தண்டம்!

adminAugust 27, 2025

fined.jpg?fit=695%2C384&ssl=1

பருத்தித்துறையில் வெற்றிலை மென்று பொது இடத்தில் துப்பிய நபருக்கு நீதிமன்று 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.

பருத்தித்துறை மீன் சந்தையில் மீன் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரி ஒருவர் சந்தையில் வெற்றிலை மென்று , பொது இடத்தில் துப்பிய குற்றச்சாட்டில் , அவருக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு விசாரணையின் போது மன்றில் முன்னிலையான வியாபாரி தன் மீதான குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவரை எச்சரித்த மன்று 5ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.

https://globaltamilnews.net/2025/219638/

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை!

2 months 1 week ago
முன்னாள் ஜனாதிபதி ரணிலின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த சில நாட்களுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெறுவார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவளித்த அனைவருக்கும், குறிப்பாக அரசியலமைப்பு சர்வாதிகாரத்திற்கு எதிரான இயக்கத்தில் ஈடுபட்டவர்களுக்கு நன்றி. சிகிச்சை முடிந்ததும் ரணில் விக்ரமசிங்க பொதுமக்களிடம் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ணில் விக்ரமசிங்கவுக்கு, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்று மாலை பிணை வழங்கியது. இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதிவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையின் போது முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை காரணமாக அவர் நீதிமன்றத்தில் நேரடியாக முன்னிலையாகவில்லை. எனினும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து ஜூம் தொழில்நுட்பம் மூலம் அவர் முன்னிலையானார். விசாரணையின் பின்னர் நோய் நிலைமையை கருத்திற் கொண்டு, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதியை தலா 05 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று பிணைகளில் விடுவித்தது. மேலும் குறித்த வழக்கினை மீண்டுக்கும் விசாரணைக்காக ஒக்டோபர் 29 ஆம் திகதி எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது. ரணில் விக்ரமசிங்க தனது ஜனாதிபதி பதவி காலத்தில் தனிப்பட்ட வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்காக அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். விளக்கமறியல் காலத்தில் அவர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கும், பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டார். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்ச‍ை பெற்று வருகிறார். https://athavannews.com/2025/1444767

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை!

2 months 1 week ago

New-Project-238.jpg?resize=750%2C375&ssl

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த சில நாட்களுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெறுவார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவளித்த அனைவருக்கும், குறிப்பாக அரசியலமைப்பு சர்வாதிகாரத்திற்கு எதிரான இயக்கத்தில் ஈடுபட்டவர்களுக்கு நன்றி.

சிகிச்சை முடிந்ததும் ரணில் விக்ரமசிங்க பொதுமக்களிடம் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

IMG_7529.jpeg?ssl=1

அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ணில் விக்ரமசிங்கவுக்கு, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்று மாலை பிணை வழங்கியது.

இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதிவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணையின் போது முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை காரணமாக அவர் நீதிமன்றத்தில் நேரடியாக முன்னிலையாகவில்லை.

எனினும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து ஜூம் தொழில்நுட்பம் மூலம் அவர் முன்னிலையானார்.

விசாரணையின் பின்னர் நோய் நிலைமையை கருத்திற் கொண்டு, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதியை தலா 05 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று பிணைகளில் விடுவித்தது.

மேலும் குறித்த வழக்கினை மீண்டுக்கும் விசாரணைக்காக ஒக்டோபர் 29 ஆம் திகதி எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

ரணில் விக்ரமசிங்க தனது ஜனாதிபதி பதவி காலத்தில் தனிப்பட்ட வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்காக அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

விளக்கமறியல் காலத்தில் அவர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கும், பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டார்.

தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்ச‍ை பெற்று வருகிறார்.

https://athavannews.com/2025/1444767

கலேவெல பகுதியில் நபரொருவர் கொலை; கடற்படை சிப்பாய் கைது!

2 months 1 week ago
கலேவெல பகுதியில் நபரொருவர் கொலை; கடற்படை சிப்பாய் கைது! கலேவெல, மகுலுகஸ்வெவ பகுதியில் நபரொருவர் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். பொலிஸாரின் கூற்றுப்படி, 119 அவசர தொலைபேசி இலக்கத்தின் மூலம் ஒருவர் தாக்கப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டதாகக் கூறி முறைப்பாடு அளிக்கப்பட்டது. விசாரணையின் போது, அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பாதிக்கப்பட்டவரை, மற்றொரு நபர் மோட்டார் சைக்கிளில் சென்று வழிமறித்து, தாக்கி, பின்னர் கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. இறந்தவர் தேவஹுவ பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக 26 வயதுடைய கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவருடன் நீண்டகாலமாக ஏற்பட்ட தகராறு காரணமாக சந்தேக நபர் இந்தக் கொலையைச் செய்துள்ளதாக விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம் தம்புள்ளை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மகுலுகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1444773

ராஜஸ்தானில் அரச தேர்வில் மோசடி: 415 பேருக்கு வாழ்நாள் தடை

2 months 1 week ago
ராஜஸ்தானில் அரச தேர்வில் மோசடி: 415 பேருக்கு வாழ்நாள் தடை. ராஜஸ்தானில் அரச வேலைக்கான தேர்வுகளில் மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் பொது தேர்வு ஆணையம் (RPSC) அண்மையில் நடத்திய விசாரணையில், போலி ஊனமுற்ற சான்றிதழ்கள், போலி பட்டப்படிப்பு சான்றிதழ்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான ஆவணங்களை பயன்படுத்தி தேர்வில் பங்கேற்ற 524 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதனையடுத்து 415 பேருக்கு வாழ்நாள் முழுவதும் அரசு தேர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 109 பேருக்கு 1 முதல் 5 ஆண்டுகள் வரை தேர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடை செய்யப்பட்டவர்களில் 514 பேர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றவர்கள் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், ஒதுக்கீட்டு சலுகை பெற போலி விவாகரத்து சான்றிதழ்களை பயன்படுத்திய சம்பவங்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளதால் அதுகுறித்து தனி விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1444790

இந்திய தயாரிப்பு சிறிய ரக கார்கள்.... விபத்துக்கு உள்ளாகுவது ஏன்.

2 months 1 week ago
உங்கள் அளவுக்கு எனக்கு பொறியியல் அறிவு எல்லாம் இல்லை. ஆனால் அடியேனின் சிறிய சந்தேகம் என்ன என்றால் இந்திய கார்களின் சக்கரங்கள் தரையில் முட்டாமல் பறக்க பார்க்கின்றன என்றால் இவற்றை பறக்கும் கார்கள் என்று சொல்லி விற்பனை செய்யலாமா?

மண்டைதீவில் சர்வதேச மைதானம் வேண்டும் ; சட்டத்தரணி வி. மணிவண்ணன்

2 months 1 week ago
நாலு பம்பாய் சியர்ஸ் கேர்ல்ஸ், இரண்டு சினிமா நட்சத்திரங்களை இறக்கினால் காணும் எங்கடையதுகள் ஊருடன் படையெடுத்து பனை உயரத்துக்கு ஏறி ஆதரவு கொடுக்குங்கள்.

டபள் கேம் ஆடுகிறதா ரஷ்யா..?

2 months 1 week ago
டபள் கேம் ஆடுகிறதா ரஷ்யா..? Tuesday, August 26, 2025 சர்வதேசம் ஈரானிய வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் அதன் ரகசிய இடங்கள் பற்றிய தகவல்களை ரஷ்யா, இஸ்ரேலுக்கு வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து தெஹ்ரான் விசாரணையைத் ஆரம்பிக்க உள்ளதாக ஈரானிய மற்றும் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ரஷ்யா "முன்னோடியில்லாத துரோகத்தை" செய்திருப்பதைக் கருத்தில் கொண்டு, அனைத்து மையங்களையும் துல்லியமாக மறு பகுப்பாய்வு செய்ய வேண்டும். தெஹ்ரானுக்கும், மாஸ்கோவிற்கும் இடையிலான ஒரு மூலோபாய கூட்டணி பற்றிய பேச்சு "பொய் மற்றும் ஏமாற்று" என்பதைத் தவிர வேறில்லை என்றும், ஈரானிய அதிகாரிகள் வெளியிட்ட கூற்றுக்களை அந்நாட்டு ஊடகங்கள் பதிவேற்றியுள்ளன

டபள் கேம் ஆடுகிறதா ரஷ்யா..?

2 months 1 week ago

டபள் கேம் ஆடுகிறதா ரஷ்யா..?

Tuesday, August 26, 2025 சர்வதேசம்

1626097853-screenshot-2021-07-06-at-09-29-35-edited.png


ஈரானிய வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் அதன் ரகசிய இடங்கள் பற்றிய தகவல்களை ரஷ்யா, இஸ்ரேலுக்கு வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து தெஹ்ரான் விசாரணையைத் ஆரம்பிக்க உள்ளதாக ஈரானிய மற்றும் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


ரஷ்யா "முன்னோடியில்லாத துரோகத்தை" செய்திருப்பதைக் கருத்தில் கொண்டு, அனைத்து மையங்களையும் துல்லியமாக மறு பகுப்பாய்வு செய்ய வேண்டும். தெஹ்ரானுக்கும், மாஸ்கோவிற்கும் இடையிலான ஒரு மூலோபாய கூட்டணி பற்றிய பேச்சு "பொய் மற்றும் ஏமாற்று" என்பதைத் தவிர வேறில்லை என்றும், ஈரானிய அதிகாரிகள் வெளியிட்ட  கூற்றுக்களை அந்நாட்டு ஊடகங்கள் பதிவேற்றியுள்ளன

Jaffna Muslim
No image previewடபள் கேம் ஆடுகிறதா ரஷ்யா..?