ஊர்ப்புதினம்

Subscribe to ஊர்ப்புதினம் feed
Updated: 42 min 7 sec ago

தடையை மீறி புலிக்கொடிகளுடன் பேரணி நடத்திய மாணவர்கள் கைது. [படங்கள் ]

51 min 35 sec ago

18 மே இனப்டுகொலை  நாளன இன்று  தமிழினப் இனப்படுகொலையைக் கண்டித்து , ஐ.நா. மன்றம் உடனடியாக ஈழத் தமிழர்கள் வாழும் பகுதியில் பொது வாக்கெடுப்பு (Referendum) நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் தனித்தமிழீழம் அமையும் வரை மாணவர் போராட்டம் ஓயாது என்ற கோஷங்களுடன்   சென்னை மெரினா கடகரையில்   தடையை மீறி புலிக்கொடிகளுடன் பேரணி  நடத்திய தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு மாணவர்களை   காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .

 

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14779:pulikkotikal-march-in-defiance-of-the-ban,-with-the-arrest-of-students-movies&catid=36:tamilnadu&Itemid=102

 

merina-kaithu.JPG

தனித்தமிழீழம் அமையும் வரை மாணவர் போராட்டம் ஓயாது ; தடையை மீறி மெரீனாவில் பேரணி. [ படங்கள் ]

2 hours 53 min ago

இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட பிறகும், சொந்த மண்ணை விட்டு பல இலட்சம் தமிழர்கள் உலகெங்கும் சிதறி ஓடிய பின்னரும் ஈழத்தில் மீதமிருப்போர் மேலும் மேலும் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். இக்கொடுமையைத் தடுத்து நிறுத்த வழியில்லாமல் உலகத் தமிழரெல்லாம் மனம் வெதும்பிய நிலையில் தமிழக மாணவர்கள் போராட்டம் எல்லோருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுத்தது.

தமிழக, இந்திய அரசியலில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. தமிழக சட்டமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவமான தீர்மானங்கள் நிறைவேறின. தமிழகத்தில் ஒரு நம்பத்தகுந்த அரசியல் எழுச்சியை ஏற்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாக, ஈழப்போரில் இறுதி நாட்களில் ஆயிரமாயிரம் பேர் கொன்றுகுவிக்கப்பட்டு ஓர் இனப்படுகொலை நடத்திமுடித்ததாக இந்த உலக நாடுகள் அறிவித்த நாள் மே மாதம் 18, 2009. தமிழினப் இனப்படுகொலையைக் கண்டித்து , ஐ.நா. மன்றம் உடனடியாக ஈழத் தமிழர்கள் வாழும் பகுதியில் பொது வாக்கெடுப்பு (Referendum) நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் தனித்தமிழீழம் அமையும் வரை மாணவர் போராட்டம் ஓயாது என்ற கோஷங்களுடன்   சென்னை மெரினா கடகரையில் தடையை மீறி தடையை மீறி பேரணி நடைபெற்று கொண்டு உள்ளது .

 

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14777:oyatu-struggle-to-be-top-student,-in-defiance-of-the-ban-on-the-march-marina-movies&catid=36:tamilnadu&Itemid=102

 

 merina-may-18.jpg

 

செல்வராசா கஜேந்திரன் கைதுசெய்யப்பட்டார்!

3 hours 5 min ago

yarlmedia_kajendran.jpg

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் (சட்டத்தரணி) உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளளனர்.

 

இன்று மாலை 4 மணியளவில் இவர்கள் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தற்போது மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

 

கஜேந்திரனுடன், அவர்களது கட்சியின் தேசிய அமைப்பாளரான மணிவண்ணன் என்னும் சட்டத்தரணியும் வேறு சுமார் 10 பேரும் கைது செய்யப்பட்டதாக கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

 

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

http://tamilworldtoday.com/home

ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக?

3 hours 50 min ago
ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? [ சனிக்கிழமை, 18 மே 2013, 06:02 GMT ] [ புதினப் பணிமனை ] Mulli-2009.jpg« ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? » என்னும் தலைப்பில் வெளியாகும் இத்தொடர் கட்டுரையின் முதல் பகுதி இது. இதனை குணா. கவியழகன்* எழுதுகின்றார். 

எதற்காக எழுதுகிறேன்? 

மனித நேயத்தில் மையங்கொண்டே உலக அரசியல் நியமங்கள் இயங்குவதாக நம்பப்படும் இந்த நாகரீக உலகில் தம் இன அடையாளத்திற்காக ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு ஆளாகினர். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் எனும் பெயரால் மனிதப் பேரழிவைக் கணக்கிலெடுக்காது இறுதி யுத்தத்தை கொடுரமாக நடத்தி முடித்தது சிறிலங்கா அரசு. 

சிறிலங்காவில் தேசிய இனப்பிரச்சினையை ஒப்புக் கொண்டு அனைத்துலகத் தலையீட்டோடு தீர்வு காணும் முயற்சி நடந்த பின்னரும் ஈழத்தமிழ் மக்களின் தலைமைத்துவமாகப் பேச்சில் ஈடுபட்ட 'தமிழீழ விடுதலைப் புலிகள்' மீது பயங்கரவாத முத்திரை குத்தி யுத்தம் தொடுக்கப்பட்டது. சமாதான முயற்சிக்கு கடமையாற்றிய கண்காணிப்புக்குழுவை - மூன்றாந்தரப்பை ஒருதலைப் பட்சமாய் வெளியேற்றிவிட்டு யுத்தத்தை சிறிலங்கா அரசால் தொடுக்க முடிந்தது. 

ஈழத்தமிழ் மக்களின் போராட்ட சக்தியை அழிப்பதற்காக நாற்பதாயிரத்திற்கு அதிகமான மக்கள் பலியாவது பற்றியோ, ஒரு இலட்சம் வரையானவர்கள் காயமுறுவது பற்றியோ எந்த ஆட்சேனையும் இன்றியே இறுதி யுத்தம் நிகழ்த்தப்பட்டது. ஒரு வகையில் ஈழத்தமிழ்மக்களின் போராட்ட முனைப்பை வேரோடு பிடுங்க மனிதப்பேரழிவு கொண்ட இந்த ‘இனப்படுகொலை’ திட்டமிடப்பட்ட தேவையாகவும் இருந்தது எனலாம். 

உலகில் தடைசெய்யப்பட்ட பேரழிவு ஆயுதங்களைப் பிரயோகித்தும், யுத்த தர்மங்களை மீறியும் போர் குரூரமாக நிகழ்த்தப்பட்டது. இருந்தும் அதை தடுக்கும் வல்லமை இந்த உலக சக்திகளிடம் இருக்கவில்லை. அல்லது தடுப்பதற்கான உளவூக்கம் இந்த உலக மனச்சாட்சியிடம் இருக்கவில்லை. 

மனித உரிமையின் மகத்துவத்தின் பேரால் உலக அரசியல் நியமங்கள் சுழல்வதாக காட்டப்படும் காட்சியின் மாயவிம்பத்தை மீண்டும் ஒருமுறை கிழித்திருக்கிறது முள்ளிவாய்க்கால் பிணவயல். 

ஒரு சிறிய அரசு தன் மக்களின் மீது புரிந்த கொலைவெறித் தாண்டவத்தை விஞ்ஞானம் தந்த செய்மதிக் கண்களால் அனைத்து உலகமும் பார்த்திருந்த போதும் அவற்றின் மனச்சாட்சியை அது உலுக்கவில்லை. சர்வசக்தி கொண்ட உலக நாடுகளால் இச்சிறிய அரசின் கொலைவெறியை தடுத்து மக்களைக் காக்க முடியவில்லை. உடன்பாட்டு மீறலை கட்டுப்படுத்த இயலவில்லை எனின் இந்த உலக அரசியல் சுற்றும் அச்சாணியே வேறு. 

புனித யுத்தம் எனும் பெயரால் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் மீது நடத்தப்பட்ட குருட்டுத் தாக்குதல் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போரை’ பிரகடனம் செய்ய வைத்தது. அது செல்லுபடியான உலக உலக அரசியலாகவும் மாறிற்று. 

இதைவிடவும் குரூரமாக முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக அல்லது அரச பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை இந்த உலகு பிரகடனம் செய்யுமா? அப்படி ஒரு உலகஅரசியலை முன்னெடுக்குமா? 

இந்தப் படிப்பினை ஈழத்தமிழர்களுக்கு மட்டுமானதல்ல. ஒடுக்கப்படும் இனங்களுக்கான உலகளாவிய படிப்பினை. முப்பதாண்டு ஆயுதப் போராட்டம் ஈழத்தில் முறியடிக்கப்பட்டிருக்கிறது. இதில் கற்றுக்கொண்ட பாடங்கள் அனுபவத்திலிருந்து தேசிய போராட்டத்திற்கு புதிய செல்நெறிகளைக் கண்டு பிடிக்க வேண்டியது மனித உரிமைக்கான உலக அறிவியலின் கடமையும் கூட. 

மேலான ஆயுத பலமோ, அர்ப்பணிப்பும் துணிச்சலும் கொண்ட நுண்மையான போராற்றலோ, அனைத்துலக நீதி நியமங்களோ அரச பயங்கரவாதத்திடம் இருந்து ஒடுக்கப்படும் மக்களைக் காத்துவிடாது என்பது கற்றுக் கொண்ட பாடம் அனுபவத்திலிருந்து புரியப்பட்டிருக்கிறது. 

இந்த அறிவிலிருந்து ஈழத்தின் ஆயுதப்போராட்டத்தை அதன் பயணவழியை மறுவாசிப்புச் செய்யவே இந்த கட்டுரைகளின் மூலம் முயற்சிக்கிறேன். ஈழத்தமிழர்களுக்கு பிற சக்திகளால் இழைக்கப்பட்ட அநீதி பற்றி இங்கு எடுத்தாளப்படவில்லை. அவை அவையாகவே இருக்கின்றன. இந்த நியதியான அரசியலில் ஒடுக்கப்பட்ட மக்கள் தம்மை விடுவித்துக் கொள்ள நிகழ்த்திய போராட்டத்தில் நிகழ்ந்திருக்கக்கூடிய தீர்மானத் தவறுகளையே இங்கு கருப்பொருளாக்கியுள்ளேன். 

பயண வழியில் நிகழ்ந்த தவறை மறுவாசிப்பு செய்யும் நேர்மையின் மூலம் புதிய செல்நெறியை கண்டுபிடிக்கும் இயலுமையை வழங்குவதே இதன் உள்நோக்கம். மாறாக குற்றம் கண்டு இது அரசியல் தலைமைத்துவப் போட்டிக்கு உபயோகப்படுத்துவதற்கான ஆயுதம் அல்ல. இழைக்கப்பட்ட துரோகத்தனங்கள் ஒழிந்து கொள்வதற்கானதும் அல்ல. மக்களின் குருதிதோய்ந்த இந்தப் போராட்டத்தின் அனுபவத்தை மீதிப் பயணத்தின் பாதையை வகுத்துக் கொள்வதற்காகவன்றி சுயநல அரசியலுக்கு உபயோகப்படுத்தினால் அதுவே மன்னிக்க முடியாத அரசியல் அயோக்கியத்தனமும் ஆகும். 

இந்த வாசிப்பும் கூட ஒரு பார்வையே இதுவே முடிவான கருத்தாக வற்புறுத்தக் கூடியதல்ல. இது ஒரு தர்க்க வெளியை உருவாக்கும் நேர்மையுடனேயே எழுதப்பட்டிருக்கிறது. அவ்வாறான ஓர் ஆரோக்கிய வெளி உருவாகினால் அதுவே முதல் வெற்றி. அதில் வலிதான தர்க்கம் புதிய அரசியல் செல்நெறியை கண்டு பிடித்துத் தரும் என்பதே இந்த எழுத்தின் நம்பிக்கை. 

ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை மறுவாசிப்புச் செய்யும் இந்தப் பார்வை குறித்துப் பெருமை எதுவும் இல்லை ஆட்சேபனையும் எனக்கில்லை. இதை ஆய்வாகமட்டுமல்ல சாட்சியாகவும் கூட ஒப்புவித்திருக்கிறேன் உங்களின் முன் பயணவழியில் இன்றைய என் காலக்கடன் இதுவென. 

- குணா. கவியழகன்* 

*இக்கட்டுரையாளர் ஓர் ஊடகவியலாளர் [கொழும்பிலிருந்து வெளிவந்த ‘North east monthly’ ஆங்கில இதழில் எழுதியவர்], விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர், முள்ளிவாய்க்கால் இறுதிநாட்கள்வரை வன்னியில் வாழ்ந்தவர், தற்போது புலம்பெயர்ந்து வாழ்கிறார்,

பல்கலைக்கழக சூழலில் இரவோடிரவாகப் படைக்குவிப்பு!

4 hours 50 min ago
யாழ்.பல்கலைக்கழக சூழலில் மீண்டும் நள்ளிரவு முதல் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நாலாம் ஆண்டைய நினைவு நிகழ்வுகள் கெடுபிடிகள் மத்தியில் இன்று பல்கலைக்கழக சமூகத்தினால் அனுஸ்டிக்கப்பட்டிருந்தது.
 
இதன் தொடர்ச்சியாக மாணவர்கள் விடுதிகளினிலும் மாணவர்கள் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நாலாம் ஆண்டைய நினைவு நிகழ்வுகளை முன்னெடுக்கலாமென்ற அச்சத்திலேயே மாணவர்கள் விடுதிகளுட்பட்ட பல்கலைக்கழக சூழல் சுற்றிவளைக்கப்பட்டிருக்கலாமென்ற அச்சம் எழுந்துள்ளது.
 
கடந்த ஆண்டைய மாவீரர் தின கைதுகள் மற்றும் மிரட்டல்களையடுத்;து இம்முறை பல்கலைக்கழக சமூகம் அடக்கிவாசிக்குமெனவே பாதுகாப்பு தரப்பு நம்பியிருந்தது.எனினும் அவ்வச்சமான சூழலையும் தாண்டி இன்று காலை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையினில் விடுதிகளிலும் நாளைய தினமும் நினைவு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படலாமென்ற அச்சங்காரணமாகவே இத்தகைய படைக்குவிப்பு நடந்திருக்கலாமென நம்பப்படுகின்றது.
 
சுமுகமான சூழலில் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமாயின் படையினரது பிரசன்னம் இல்லாதிருக்கவேண்டுமென மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

 

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு

4 hours 51 min ago

வவுனியா தமனக்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இனந்தெரியாதவர்களால்  இடித்தழிக்கப்பட்டுள்ளது.

 

2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவுகள் நினைவாக ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு கடந்த 2010 ஆம் ஆண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களும் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி வவுனியாவில் அமைக்கப்பட்டது.

 

இந்தநிலையில் முள்ளிவாய்க்காலில் உறவுகள் படுகொலை செய்யப்பட்டு இன்று 4 ஆம் ஆண்டு நினைவு நாளாகும். இதற்கான நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை 10 மணியளவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் குறித்த நினைவுதூபியில் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடாகியிருந்த நிலையிலேயே நேற்று இரவு விசமிகளால் இடித்தழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91897/language/ta-IN/article.aspx

 

 

 
 

 

வடக்கு கிழக்கில் கொல்லப்ப்ட மக்களுக்கு அஞ்சலி! கொழும்பில் போர் வெற்றி விழா

4 hours 52 min ago

முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் கொல்லபபட்ட மக்கக்கு வடக்கு கிழக்கில் அங்சலி செலுத்தப்பட கொழும்பில் யாரிய அளவில் முள்ளிவாய்க்கால் போர் வெற்றி விழாகொண்டாடப்படுகிறது. 

 

தமிழர் தாயகத்தில் இன்று துயர் பகிர்வு; முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவு கூர உணர்வெழுச்சியுடன் ஏற்பாடுகள்

 

தமிழர் வாழ்வில் துயர்படிந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நான்காம் ஆண்டு நினைவு நாள் தமிழர் தாயகம் மற்றும் அவர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகள் எங்கும் பெருமெடுப் பில் உணர்வெழுச்சியுடன் இன்று நினைவு கூரப்பட வுள்ளது.

 

இதற்கான ஏற்பாடுகளை அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் என்பவற்றால் செய்யப்பட்டுள்ளன. 2009 மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் ஆகுதியான உறவுகளை நினைத்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ் மக்களால் ஆண்டு தோறும் நடத்தப்படுகின்றன

இந்த நிகழ்வுகளுக்கு தடை ஏதும் இல்லை என்று இராணுவம் தெரிவித்துள்ளது. இந்தத் தினத்தில் புலிகளை நினைவுகூரக் கூடாது என்றும் அது அறிவுறுத்தி உள்ளது.

போரில் ஆகுதியான எமது உறவுகளுக்காக ஆலயங்களில் இன்றைய தினம் விசேட வழிபாடுகளை நடத்து மாறும், வீடுகளில் மாலை வேளையில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துமாறும் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

பிரதான நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் வவுனியாவில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. வவுனியா நகரசபை மண்டபத்தில் காலை 10 மணிக்கு இடம்பெறும் இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்க்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில், மாட்டீன் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் மாலை 5 மணிக்கு சுடரேற்றும் நிகழ்வும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் இடம்பெறவுள்ளது.

 

கிளிநொச்சி

கிளிநொச்சி உருத்திரபுரம் புனித பற்றிமா ஆலயத்தில் உள்ள இறுதிப் போரில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்திலும், கிளிநொச்சியில் உள்ள இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களிலும் விசேட பூசை வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் இடம்பெறவுள்ளன.

அத்துடன் வீடுகளிலும் உயிரிழந்த உறவுகளுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வுகளும் இடம்பெறும்.

 

கிழக்கு மாகாணம்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தால் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. தமிழர் தாயகத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் பேரெழுச்சியுடன் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளன.

நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் மக்களால் பேரெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்படவுள்ளன. கண்டனப் பேரணிகள், நினைவுப் பேருரைகள் என்பனவும் இடம்பெறவுள்ளன. 

 

பிரான்ஸ் தமிழர் நடுவகத்தால் மாலை 4 மணி முதல் 7 மணிவரை துரோகத்திரோ மெக்ரோ தரிப்பிடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று அனுஷ்டிக்கப்படவுள்ளன.

 

பிரித்தானிய தமிழர் பேரவையினால் இன்று பி.ப 1 மணிக்கு பேரணி நடத்தப்படவுள்ளது. இந்தப் பேரணியில் மக்களைக் கறுப்பு உடை அணிந்து பங்கெடுக்குமாறு வேண்டுகோள் விடுக்க்பபட்டுள்ளது. றைட் பார்க்கில் ஆரம்பமாகும் பேரணி வெஸ்ற்மினிஸ்ரரில் முடிவடையும்.

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் இன்று பி.ப 2மணிக்கு எரேமில் ரெயாரில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

கனடியத் தமிழர் தேசிய அவையினால் மாலை 5 மணிக்கு டென்மார்க் தமிழர் அமைப்புக்களின் ஒன்றியத்தினால் காலை 10 மணிக்கும் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்படவுள்ளன.

 

ஜேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு, ஈழத் தமிழர் மக்கள் அவையினால் பி.ப. 2 மணிக்கு பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. செல்போர்டில் ஆரம்பமாகும் பேரணி லால்ட்ராகில் முடிவடையவுள்ளது.

 

பெல்ஜியம் தமிழ் இளையோர் அமைப்பு, தமிழர் பண்பாட்டுக் கழகம் ஆகியவற்றால் மதியம் 12 மணிக்கும், நெதர்லாந்து தமிழர் பேரவையால் பி.ப 1மணிக்கும், சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் நண்பகலும் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்படவுள்ளன.

 

நோர்வேயில் தமிழர் பேரவையால் நோர்வே நாடாளுமன்றத்தின் முன்பாக கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன. நாடு கடந்த தமிழீழ அரசினால், அமெரிக்காவில் தமிழீழ சுதந்திர சாசனத்துக்காக முரசறைவு நிகழ்வுகள் இன்று இடம்பெறவுள்ளன.

 

கொழும்பில் போர் வெற்றி விழா

 

ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ தலைமையில் போர் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வுகள் தலைநகர் கொழும்பில் காலிமுகத்திடலில் இன்று சனிக்கிழமை பெரும் எடுப்பில் கொண்டாடப்படவுள்ளன.

தமிழ் மக்களால் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நினைவுகள் அனுஷ்டிக்கப்படும் அதேவேளை இலங்கை அரசினாலும் முப் படையினராலும் கொழும்பில் போர்  வெற்றிக் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன.

 

காலி முகத்திடலில் இடம் பெறவுள்ள வெற்றிக் கொண் டாட்ட நிகழ்வுகளுக்கான ஒத்திகை கடந்த ஒருவார காலமாக இடம்பெற்றது. இந்தக் கொண்டாட்டங்க ளுக்காகப் பல கோடி ரூபா செலவு அரசினால் செய்யப் பட்டுள்ளது.

போர் வெற்றிக்கொண்டாட்டத்தின் ஒத்திகை நிகழ்வுகளைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நேரில் சென்று பார்வையிட்டார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91898/language/ta-IN/article.aspx

 

 

கொல்லப்பட்ட மக்களையும் நினைவுகூறக்கூட இடமில்லை

4 hours 54 min ago

இப்படுகொலை குறித்து வன்னி மக்கள் சிலரது கருத்துக்களை தொகுத்து தருகிறார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.

 

 

முள்ளிவாய்க்கால் போர் நடந்து இன்றைய நாட்களுடன் நான்கு ஆண்டுகள் முடிவடைந்து விட்டன. உலகையே உலுக்கிய முள்ளிவாய்க்கால் படுகொலை இந்தறூற்றாண்டின் மாபெரும் அவலம். இந்தப் படுகொலையில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. இப்படுகொலை குறித்து வன்னி மக்கள் சிலரது கருத்துக்களை தொகுத்து தருகிறார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர். 

எங்கட வீட்டில நாலு பேர் செத்தவை. ஏன்ட இரண்டு பிள்ளையளும் மனுசனும் தம்பியும் முள்ளிவாய்க்காலி கொத்துக குண்டில செத்திட்டினம். இப்ப ஒரு பிள்ளையும் நானும் இருக்கிறம். எங்கட வாழ்வில முள்ளிவாய்க்கால மறக்க ஏலாது. என்ட வாழ்க்கை முள்ளிவாய்க்காலிலதான் அழிஞ்சது. ஏன் வாழுறன் எனடு தெரியாமல இருக்கிறன். எத்தின சனங்கள கொன்டு போட்டான்கள். எல்லாமே இப்பவும் கண்ணுக்குள்ளதான் நிக்குது. 

 

-ராணி, புதுக்குடியிருப்பு. 

செத்த சனத்துக்கு ஒரு விளக்கு வைக்க விடுறாங்கள் இல்ல. என்ட அம்மாவும் இரண்டு சகோதரமும் புதுமாத்தளனில செல்லடியில செத்தவையள். அவையளின்ட படம்கூட என்னட்ட இல்லை. ஓன்டுமில்லாமத்தான் முகாமுக்குப் போனன். ஏன்ட அம்மாவையும் சகோதரத்தையும் நினைச்சு விளக்குகூ வைக்க ஏலாது என்டு சொல்லுறாங்கள். எங்களுக்கு முன்னாலேயே பங்கரவாதிய அழிச்சிட்டம் என்டு கொடி ஏத்தி கொண்டாடுறாங்கள். 

 

-பராபரன், உருத்திரபுரம்

கொழும்பில போர் வெற்றி விழா நடத்திக் கொண்டாடுறாங்கள். எங்கட வாழ்க்கை முள்ளிவாய்க்காலோடு அழிஞ்சதுதான். என்ட கடையை இழுத்து மூடுற அளவுக்கு வந்தாச்சு. இழந்தது உயிர்கள மட்டுமில்ல. தொழிலயும் புலத்தையும் இழந்தாச்சு. நாங்களும் முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு செத்த பிணம் மாதிரிதான் இஞ்ச வாழ்ந்து கொண்டிருக்கிறம். 

 

-கண்ணிரான், கிளிநொச்சி.

முள்ளிவாய்க்காலோட எல்லாத்தையும் இழக்கேல்ல. இப்பவும் இழந்து கொண்டிருக்கிறம். இவ்வளவு சனத்தையும் இப்பிடிலெ;லாம் கொன்ட பிறகும் இந்த உலகம் கண்ணை மூடிக்கொண்டு தானே இருக்கு. அவங்கள் எங்கள இப்பவும் விட்டு வைக்காமல் எதோ எல்லாம் செய்யிறாங்கள். எங்கட மக்களின்ட வாழ்க்கையில வந்த சோகம் எப்ப தீரப்போகுது, 

 

-உதயராசா, மாங்குளம்

அரசாங்கம் ஒரு தீர்வையும் தராது. காலம் காலமாக செய்யிற மாதிரி இழுத்தடிக்கிறாங்கள். நாங்கள் இதை கணகாலமாகவே பாத்துக்கொண்டிருக்கிறம். முள்ளிவாய்க்காலுக்குப் பிறகும் ஒரு தீர்வும் இல்லை என்டால் நாங்கள் எனனத்த செய்யிறது? ஆரோட பேசுறது? இனிப் பேசி என்ன பலன்? சுரியான மோசமான சூழலில நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறம்.

 

-அச்சுதன், முல்லைத்தீவு.

இந்த நாளுகள் எங்கள திரும்பவும் திரும்பவும் முள்ளிவாய்க்காலுக்கு; கொண்டு போகுது. இவ்வளவு பெரிய படுகொலை நடந்த பிறகும் எங்களுக்கு இந்த உலகம் தீர்வு சொல்லேல்ல. இப்பிடி சனங்களின்ட சத்த பிணங்களப் பாத்த பிறகும் மகிந்தவ கைத செய்யாம கை குலுக்குறாங்கள். தமிழனிட்ட உயிர் என்ன உயிரில்லயா? எங்களுக்கு எல்லாத்திலயும் நம்பிக்கை விட்டுப்போச்சு.

 

-மதி, பளை

இன்னும் மகிந்தவின்ட கொலை வெறி அடங்கேல்ல. பேப்பரக் கொளுத்துறாங்கள். ஆக்கள அடிக்கிறாங்கள். எதும் கதைச்சால் உள்ளுக்கு கொண்டு போய் வைக்கிறாங்கள். கம்பசுப் பொடியளையே  கொண்டு பொய் புனர்வாழ்வு குடுக்கிறம் என்டு அடைக்கிறாங்கள். எல்லாரும் பாத்துக் கொண்டிருக்கினம். பிறகு என்ன செய்யிறது? இந்த நிலமயள் மாற வேணும் என்டு விரும்புறம். 

 

-தங்கராசா, எள்ளுக்காடு 

நாங்கள் மீள்குடியேறவே நாலு வருசத்துக்கு கிட்ட ஆகிட்டுது. முதலில எங்களுக்கு இந்த இடத்துக்கு திரும்பி வரவே விருப்பம் இல்ல. கணபர் இல்ல. வந்தால அவையளின்ட நினைவுதான் வருது. ஏத்தின பேர் செத்துப்போன இடம். நாங்கள் திரும்பேக்குள்ள சுடுகாடு மாதிரித்தான் கிடந்தது. ஆர் ஆர் செத்தது என்டு தெரியாதளவுக்கு ஆன்மக்கள் அந்தரிக்குது. 

 

-பவானி செல்லத்துறை, முள்ளிவாய்க்கால்

இந்த உலகம் எங்களுக்கு ஒன்டும் செய்யாட்டிலும் பரவாயில்ல. செத்த சனத்துக்கு விளக்கு வைச்சு அதுகள நினைவுகூருர உரிமையாவத இந்த அசாங்கத்திட்ட வாங்கித்தரட்டும். இஞ்ச வந்து இன்னொரு முள்ளிவாய்க்கால் வேணுமே என்டு கேக்கிறாங்கள். செத்த ஆக்கள நினைக்ககூட விடாத அரசாங்கத்திட்ட என்ன இணக்கம் கிடைக்கும்? 

 

-அருள், நெடுங்கேணி.

செத்த சனத்துக்கு ஒரு நீதி இல்ல. ஏன் எங்கட மக்கள கொண்டவை என்டு பதில் இல்ல. பயங்கரவாதியள கொண்டம் என்டு கொண்டாடுறாங்கள். இப்ப நடக்கிறதுகள பாக்கேக்குள்ள நாங்களும் முள்ளிவாய்க்கால்ல செத்திருக்கலாம் போலக் கிடக்குது. இந்த நாளில சனத்த நினைச்சு ஒன்டும் செய்யவும் ஏலாதளவில வடக்கின் வசந்தகாம் இருக்குது. 

 

-சுபாஸ்கரன், ஜெயபுரம்.  

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91899/language/ta-IN/article.aspx

 

‘மே 18’ – மகாவம்சக் கொடூரத்தின் இரத்த சாட்சியம்!

5 hours 39 min ago
வங்கக்கடலை வருடி வந்த உப்புக்காற்று முள்ளிவாய்க்கால் மண்ணைத் தொட்ட போது குருதி வாடையிலும் கந்தக நெடியிலும் சிக்கித் திக்கித் திணறுகிறது. ஓங்கியடித்த ஆழி நீர்ப்பரப்பும் தன் அலைக் கரங்களை ஒடுக்கிவிட்டு விம்மி விம்மித் தணிகிறது.
 
பார்க்குமிடமெங்கும் பிணக்குவியல்கள்: காணுமிடமெங்கும் குறை உயிரில் முனகும் ஜீவன்கள்; எரிந்து கருகிய கூடாரங்கள்; இடிந்து சிதைந்த குடியிருப்புக்கள்; சிதறிக் கிடக்கும் ஆடைகள்; பாவனைப் பொருட்கள்.
 
ஒரு புறம் இறந்து கிடக்கும் உடல்கள் மீதும், இறந்து கொண்டிருக்கும் மனிதர்கள் மேலும் இரக்கமின்றி ஏறி ஓடும் இராணுவத்தினரின் உழவு இயந்திரங்கள்; மறுபுறம் உயிர் ஒன்றை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு நடக்கவும் தென்பின்றி தடுமாறிச் சாரை சாரையாக நகரும் மக்கள் கூட்டம்!
 
இறந்தவர்களின் உறவுகளைப் புதைப்பதற்கும் வழியில்லை; விழுந்து கதறி ஒப்பாரி வைக்கவும் நேரமில்லை!
 
முதியோர், குழந்தைகள், பெண்கள் உட்பட அத்தனை மனித ஜீவன்களும் வெறும் ஜடங்களாக்கப்பட்டு எங்கோ நகர்த்தப்படுகின்றன. துப்பாக்கி வேலிகளின் நடுவில் திசை தெரியாப் பயணம்!
 
“அவர்கள் மும் மணிகளின் மேன்மையை ஏற்றுக் கொள்ளாதவர்கள்! அவர்கள் கொல்லப்படுவதற்கே உரித்துடையவர்கள்”
 
பிட்சாபாத்திரம் ஏந்திய மக்கள் அங்கிகளால் வரையப்பட்ட மகாவம்சம் சொல்லும் தத்துவம் அது.
 
உணவு கொள்ள ஏற்றப்பட்ட அந்த திருவோட்டுக்குள்ளிருந்து வெளிக் கிளம்பிய அந்தத் தத்துவம் தன் சுயரூபத்துடன் வெறியாட்டம் ஆடியதன் சாட்சியமாக.
 
பெரும் பிணக்குவியல்கள்; குருதிக் குளங்கள்; இடிபாடுகள்; எரிந்து சிதைந்த எச்சங்கள்; நடைப் பிணங்களாக நகரும் மனித ஜீவன்கள்.
 
ஒரு சில நாட்களுக்குள் நாற்பதினாயிரம் உயிர்களைப் பலி கொண்டு, பல்லாயிரம் பேரை ஊனமுற்றவர்களாக்கி, இலட்சக்கணக்கானோரை ஏதிலிகளாக்கி எக்காளமிட்டுச் சிரிக்கின்றது மகாவம்ச மகாத்மியம்.
 
அக்கொலை வெறியாட்டத்தின் செஞ்சால்வை நாயகன் மஹிந்த ராஜபக்ஷ பெயர் சூட்டுகிறார்.
 
மனிதாபிமான நடவடிக்கை!
 
அகராதிகள் அர்த்தங்களை இழந்து தடுமாறுகின்றன.
 
வட பகுதியெங்கும் இறுதிக் கிரிகைகள் இல்லாத ஒப்பாரி வீடுகள்; கொழும்பு காலிமுகத்திடலில் வெற்றிவிழா!
 
தமிழர்களின் இரத்தமும் கண்ணீரும் வெற்றி விழாவாகி தெற்கை மகிழ்ச்சிக் கடலில் குளிப்பாட்டுகின்றன.
 
தனது நாட்டு மக்களைத் தானே கொன்று குவித்த நாட்டுத் தலைவனாகக் கொடியேற்றி தனது வெற்றியை உலகுக்குப் பறைசாற்றுகிறார் மஹிந்த ராஜபக்ஷ.
 
முள்ளிவாய்க்காலுடன் எல்லாம் முடிந்துவிட்டதாக அவர் துள்ளியடிக்கிறார்.
 
முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களின் விடுதலையை போராட்டத்தின் ஒரு கட்டம் முடிந்துவிட்டது.
 
ஆனால் – அது முடிவல்ல!
 
அது ஒரு வடிவத்தின் முடிவு!
 
எனினும், அது வெடிக்கும்! இன்னொரு வடிவத்தில் வெடிக்கும்! இலங்கையில் எல்லைக்குள் நடந்த போராட்டம் எல்லைகளை விரிவாக்கி இன்னும் அகன்று வெடிக்கும்!
 
முன்பைவிடப் பன்மடங்கு பலத்துடன் மூசி எழும்!
 
1905இல் ரஷ்யாவின் செனற். பீட்டஸ்பேர்க்கில் வெடித்த பெரும் புரட்சி தோற்கடிக்கப்பட்டது. அந்தத் தோல்வி 1917இல் பெரும் வெற்றியாகி சோவியத் ஒன்றியத்தினை விடுதலை செய்தது.
 
1927 ல் சங்காயில் இடம்பெற்ற தொழிலாளர் புரட்சி பேரழிவைச் சந்தித்தது. அதில் கற்றுக்கொண்ட பாடங்கள் 1949இல் சீன தேசத்தை விடுவித்தது.
 
கியுபாவில் ஹவானா இராணுவ முகாம் தாக்குதல் தோல்வியடைந்தது மட்டுமின்றி பிடல் காஸ்ரோவை சிறைக்கே அனுப்பியது. அதே கஸ்ரோவின் தலைமையில் கியுபா 1952இல் விடுதலை பெற்றது.
 
எனவே தோல்விகள் எல்லாம் தோல்விகளல்ல! அவை பாடங்களைக் கற்றுத் தரும் பல்கலைக்கழகங்கள்!
 
தோல்விகள் அனுபவங்களைப் பிரசவிக்கின்றன. அனுபவங்கள் அலசப்படும் பொது அவை அறிவாகின்றன. அறிவு ஆயுதமாகும் போது அற்புதங்கள் உருவாகின்றன.
 
தோல்விகள் தூர ஓடுகின்றன; வெற்றிகள் வீடு தேடி வருகின்றன.
 
முள்ளிவாய்க்கால் இழப்புக்கள் பேரிழப்புக்கள் தான்! ஈடு செய்ய முடியாத இழப்புக்கள் தான்!
 
ஆனால், அவை ஒப்பாரிகளுடன் ஓய்ந்துவிடுவதில்லை!
 
ஆண்டுத் துவஷங்களுடன் அடங்கி விடுவதில்லை; நினைவு நிகழ்வுகளுடன் நீர்த்துப் போய்விடுவதுமில்லை.
 
அவை விடுதலைக்குக் கொடுக்கப்பட்ட விலைகள்.
 
எங்கள் விடுதலை வேட்கை என்ற அணையாத தீபத்துக்கு என்றென்றும் நெய் ஊற்றி சுடர் விட்டுப் பிரகாசிக்கச் செய்பவை. எங்கள் ஒவ்வொரு இரத்த அணுக்களிலும் வீரியம் ஊட்டி வீரம் செறிப்பவை.
 
முள்ளிவாய்க்காலில் விலையாகிப் போய்விட்ட எங்கள் உயிர்ப்புக்களே,
நாங்கள் உங்களை வணங்குகிறோம்!
 
அந்த வணக்கத்தின் பேரழுச்சியில் மகாவம்ச மாயை பற்றியெரியும்! விடுதலைத் தீ விளாசி எரியும்!
 
அன்று இலங்கையில் எழுந்த தீ!
 
இன்று உலகெங்கும் பற்றியி எரிகிறது! உங்கள் நினைவுகளுடன்!
 
 - தாயகத்தில் இருந்து தமிழ்லீடருக்காக புருஷோத்மன்
 

புலிகள் களத்தில் இருந்தவரை சாடியவர்கள், இந்த நான்கு ஆண்டுகளில் செய்தது என்ன? - தவிபு

7 hours 45 min ago

18-ltte2-300.jpg

 

 

தமிழீழம்: விடுதலைப் புலிகள் அமைப்பைக் காரணம் காட்டியே எமது மக்களின் அவலங்களும் அபிலாசைகளும் முடக்கப்பட்டன. ஆனால் இந்த நான்கு ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கான நியாயத்தை வழங்க யார் தடைநிற்பதாக பன்னாட்டுச் சமூகம் சாட்டுச் சொல்லப் போகின்றது?, என கேள்வி எழுப்பியுள்ளது விடுதலைப் புலிகள் அமைப்பு.

மே 18 ம் தேதியை இன அழிப்பு நாளாக அறிவித்துள்ள விடுதலைப் புலிகள், இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆண்டாண்டு காலமாக அன்னியப் படைகளாலும் இனவாத அரசாங்கங்களாலும் எமது இனத்தின்மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளின் குறியீடாகவும் எமது இனம் எழுச்சிகொள்ள வேண்டியதைச் சுட்டும் முரசறைவாகவும் இந்நாள் அமையப் பெறுகின்றது.

எமது இனத்தின் மீதான அடக்குமுறைகளிலும் அழிப்பு நடவடிக்கைகளிலும் அதியுச்சமாகக் கருதப்படும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுநாளே தமிழர் இனவழிப்பைச் சுட்டும் பொதுநாளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. நடந்து முடிந்த கொடூரமான இனவழிப்பை நினைவு கொள்வதென்பது அவ்வடுக்களையும் கொடுமைகளையும் நினைத்து அழுது புலம்பிச் சோர்ந்து போய் அடங்கி விடுவதில் முடிந்து விடுதல் கூடாது.
மாறாக இவற்றின் வலிகளை உணர்ந்து, எமது இனம் தொடர்ந்தும் இவ்வலிகளைச் சுமக்கவிடாமல் எமக்கான விடுதலையை விரைந்துபெற முனைப்புடன் செயற்பட ஊக்கப்படுத்தும் ஒருநாளாக அமைய வேண்டும். இன்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னான நான்காம் ஆண்டை நினைவுகொள்கின்றோம். இக்காலப்பகுதியில் எண்ணற்ற துயரங்களை எமது இனம் கடந்துவந்துள்ளது.

போர் முடிந்ததாக அறிவித்து நான்காண்டுகளாகியும் எமது மக்களின் இன்னல்கள் தீர்ந்தபாடில்லை. தொடர்ந்தும் அவர்கள் படையினரின் கெடுபிடிகளுக்குள்ளேயே வாழ்க்கையை நகர்த்துகின்றனர். எங்கும் சிங்களப் படை - சூறையாடல் எங்கு பார்த்தாலும் படையினரின் இருப்பே எமது தாயகத்தில் நிரம்பியுள்ளது. தமிழ்மக்களின் சிவில் நிர்வாகக் கட்டமைப்புக்கள் அனைத்திலும் படைத்தரப்பினரின் தலையீடு இருந்தவண்ணமேயுள்ளது.

படையினருக்காக எமது மக்களின் இருப்பிடங்கள் அபகரிக்கப்படுகின்றன. படையினரின் துணையோடு எமது நிலங்கள் கொள்ளையிடப்படுகின்றன. ஒரு படையாட்சியே அங்கு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எமது மண்ணினதும் மக்களினதும் வளங்கள் அன்னியரால் சூறையாடப்படுகின்றன. எமது மக்களைத் தொடர்ந்தும் அச்சநிலைக்குள்ளும் அடக்குமுறைக்குள்ளும் வைத்திருக்கும் நோக்கோடு சிங்களப் பேரினவாத அரசு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. தற்போதும் மீன்பிடித்தலுக்கான கட்டுப்பாடு, போக்குவரத்துக் கட்டுப்பாடு என்பன தொடர்ந்த வண்ணமேயுள்ளன.

எமது மக்களின் ஜனநாயகக் குரல்கள் நசுக்கப்படுகின்றன. சுதந்திரமாக தமது கருத்தைச் சொல்ல முடியாத அடக்குமுறைக்குள்ளேயே மக்கள் வாழ்கின்றார்கள். ஊடகங்களின் மீதான அடக்குமுறைகள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன. தமிழ் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் அரச பயங்கரவாதத்தின் வன்மத்தைத் துல்லியமாகக் காட்டுகின்றது. தனியே ஊடகங்கள் மீது மட்டுமன்றி அரசியல்வாதிகள், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள், மதகுருக்கள் என்று அரசாங்கத்தை விமர்சிக்கும், நபர்கள் மீது அரசவன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்டு தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதுகூட வன்முறைகள் ஏவி விடப்படுகின்றன. இந்நிலையில் சாதாரண மக்களுக்குரிய பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்துவது? போர் ஓய்ந்ததாகச் சொல்லப்பட்டபின் இந்த நான்காண்டு காலத்தில் தமிழ்மக்களுக்கான உரிமைகளை வழங்கி அவர்களுக்கான நியாயத்தை வழங்குவதற்குப் பதிலாக மென்மேலும் தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஒட்டுமொத்தமாகவே தமிழினத்தைக் கருவறுப்பதையே சிங்கள பெளத்த பேரினவாதம் செய்துகொண்டுள்ளது.

சிங்கள இனவாத திருகுதாளங்கள் உலகத்துக்கு தன்னை நல்லபிள்ளையாகக் காட்ட சில திருகுதாளங்களை சிங்களப் பேரினவாத அரசு செய்துகொண்டுள்ளது. தமிழர்களைத் தமது படைகளில் சேர்ப்பது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி தாம் தமிழர்களைச் சரிசமமாக நடாத்துவதாக உலகை ஏமாற்ற முனைகிறது. தமிழர்களுக்குரிய அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்து அவர்களுக்கான உரிமைகளை வழங்குவதே இனச்சிக்கலுக்கான தீர்வாக அமையுமேயன்றி படையில் தமிழர்களைச் சேர்ப்பது போன்ற நாடகங்கள் தீர்வாகா.

இணையமுடியா இரு தேசங்கள் ஆயிரக்கணக்கில் எமது மக்கள் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டு, எம்மினம் வதைக்கப்பட்ட நாட்களின் ஆண்டு நினைவில் எமது இனம் துக்கித்திருக்கையில் மிகப்பெரும் போர் வெற்றிவிழாவை சிங்கள தேசம் கொண்டாடுவது என்பது உண்மையில் சிங்கள இனமானது நல்லிணக்கத்துக்குத் தயாரில்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது. அத்தோடு இந்த வெற்றி மமதைக் களியாட்டமானது இலங்கைத்தீவு இணைய முடியா இரு தேசங்களைக் கொண்டுள்ளது என்பதையும் சுட்டுகின்றது. சிங்கள அரசின் இந்தக் கொடூரமான முகத்தை சில பன்னாட்டு ஊடகங்கள் ஓரளவாவது வெளிக்கொண்டு வருகின்றன. சில மனிதவுரிமை அமைப்புக்களும் தொடர்ச்சியாக அரசின் அடக்குமுறைகளைப் பதிவு செய்து வருகின்றன. தன்னலமற்றுப் பணியாற்றும் இவ்வமைப்புக்களின் நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு ஓரளவு ஆறுதலளிக்கின்றன. அதேவேளை, பன்னாட்டு அரசுகள் சில தமது சொந்த நலன்களுக்காகவே சிறிலங்கா அரசுமீது அழுத்தங்களைப் பிரயோகித்தாலும்கூட, பேரினவாத அரசின் தமிழர் மீதான விரோதப்போக்கை ஓரளவாவது ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளன. ஆனால் இந்த மாற்றத்துக்காக எமது இனம் கொடுத்த விலை மிகப்பெரியது.

கடந்த காலத்தில் எமது குரல்களைச் செவிமடுக்காது பாராமுகமாக இருந்துவிட்டு இப்போது மெல்ல மெல்ல, அதுவும் அரைகுறையாகக் குரல்கொடுப்பது என்பது தமிழ்மக்கள் தொடர்பில் உலகம் இன்னமும் முழுமையாக நியாயத்தின்பால் செயற்படத் தொடங்கவில்லையென்பதையே உணர்த்தி நிற்கின்றது. புலிகளைக் குற்றம் சாட்டியவர்கள் செய்தது என்ன? தமிழ்மக்கள் குறித்த கரிசனை மேலெழும்போதெல்லாம் விடுதலைப் புலிகள் அமைப்பைக் காரணம் காட்டியே எமது மக்களின் அவலங்களும் அபிலாசைகளும் முடக்கப்பட்டன. ஆனால் இந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்மக்களுக்கான நியாயத்தை வழங்க யார் தடைநிற்பதாக பன்னாட்டுச் சமூகம் சாட்டுச் சொல்லப் போகின்றது? நியாயமற்ற முறையில் விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டு எமது மக்களின் நியாயமான போராட்டத்தை நசுக்குவதில் குறியாக இருந்த உலகநாடுகளே எமது மக்களின் பாதுகாப்பற்ற தன்மைக்கும், இன்று அவர்கள் எதிர்கொள்கின்ற இனவழிப்புக்கும் பொறுப்புக்கூறக் கடமைப்பட்டுள்ளவர்கள்.

உருப்படியான ஒரு பாதுகாப்புப் பொறிமுறையைக்கூட எமது மக்கள்சார்ந்து ஏற்படுத்தாமல் வெறும் காகித அறிக்கை விட்டுக்கொண்டிருப்பது விளலுக்கு இறைத்த நீரே என்பதை உலகநாடுகள் உணரவேண்டும். சிங்களப் பேரினவாதத்தின் கோரக்கரங்களில் எமது மக்களைச் சரணாகதியாக்கி, மக்களை அழிப்பவர்களிடமே அவர்களின் பாதுகாப்பையும், குற்றச்செயல்களை விசாரிக்கும் பொறுப்பையும் கொடுத்துவிட்டு வாளாவிருக்கும் பன்னாட்டுச்சமூகம் மிகவிரைவில் விழித்துக்கொள்ள வேண்டும். படிப்படியாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் இனவழிப்பை நிறுத்தி உரிய தீர்வைத் தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியைத் தொடங்க வேண்டும். மீண்டும் போராட்டம் பொறுத்துப் பொறுத்துப் பார்த்திருந்த எமது மக்கள் படிப்படியாகப் போராடத் தொடங்கிவிட்டார்கள்.

மண் அபகரிப்புக்கு எதிராக தாயகத்தில் அறவழிப் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்தவண்ணமுள்ளன. தமிழகத்தில் மாணவர்களின் போராட்டங்கள் என்றுமில்லாத வகையில் புத்துணர்வோடு புதிய தடம் பதித்துள்ளன. தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் எம்மினம் இன்றில்லை. இனியும் காலந்தாழ்த்தாது பன்னாட்டுச் சமூகம் எமது மக்களுக்கான தீர்வைப் பெற்றுத்தர முயல வேண்டும். உரிய தீர்வை உரிய நேரத்தில் பெற்றுத்தர வகைசெய்யாவிடத்து நாம் தொடர்ந்தும் எமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர எமக்கு வேறு தெரிவில்லை. அன்பான தமிழ்பேசும் மக்களே, விடுதலைக்காக எத்தகைய அர்ப்பணிப்பையும் செய்யத் துணிந்த மக்கள் கூட்டத்தை எந்த அடக்குமுறைச் சக்தியாலும் அடக்கிவிட முடியாது.

அளவிட முடியாத அர்ப்பணிப்புக்களைப் புரிந்து போராடிய நாம் எமது இலட்சியத்தை அடையும் வரை ஓய்ந்துவிட முடியாது. உலக அரங்கில் எமது நியாயமான போராட்டம் ஒருநாள் அங்கீகரிக்கப்படும். எமக்கான விடுதலை ஒருநாள் நிச்சயம் கிடைத்தே தீரும். அதுவரை ஓய்ந்துவிடாமல் போராடுவோம் என இந்நாளில் நாம் உறுதிபூணுவோம். புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம். -இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை எல்டிடிஈ தலைமைச் செயலகத்தின் சார்பில் ராமு சுபன் என்பவர் வெளியிட்டுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/05/18/srilanka-ltte-alleges-international-community-for-its-silence-175516.html

 

முள்ளிவாய்க்கால் படுகொலையின் உயிர் ஈந்தவர்களுக்கு 4 ஆம் ஆண்டு நினைவேந்தல். [ படங்கள்/வீடியோ ]

10 hours 2 min ago

சிங்கள பயங்கரவாத அரசால் ஒன்றரை இலட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதன் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சென்னை புரசைவாக்கம் டானா தெருவில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வை இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஒழுங்கு செய்திருந்தது.

இந்நிகழ்வுக்கு பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையேற்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஓவியர் சந்தானம், திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராசு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் ஆகியோர் உரையாற்றினர்.

 

 

may-18-meeting.jpg

தமிழர்களுக்கு சில அரசியல் தலைவர்களும், புலம்பெயர் தமிழர்களுமே எதிரிகள்! மகிந்த ராஜபக்‌ஷ

11 hours 16 min ago

Mahinda.jpg

 

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் போலவே புலம்பெயர் தமிழர்களும், சில அரசியல் கட்சிகளும் தமிழர்களை அழிவு நோக்கி இழுத்துச் செல்ல முயற்சிப்பதாகவும், இவர்கள் இருக்கும் வரை தமிழர்களுக்கு எதிரிகளே தேவையில்லை எனவும் இலங்கை அரச தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

ஒரே நாட்டிற்குள் வாழ வேண்டும் என்ற மனப்பான்மை தமிழர்கள் மனங்களில் மீண்டும் கட்டியெழுப்பப்படுகிறது என்பதைத் தான் நம்புவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

 

வடக்கிலுள்ள மக்களின் மனதை எனக்கு நன்கு தெரியும். 1982ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாடு வேண்டுமெனக் கோரிய பொன்னம்பலத்தைத் தோற்கடித்து, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்ட கொப்பேகடுவையை வடக்கு மக்கள் வெற்றிபெறச் செய்தனர். ஒரே நாட்டிற்குள் வாழவேண்டும் என்ற இந்த மனப்பான்மை மீண்டும் தமிழர்கள் மத்தியில் இன்று கட்டியெழுப்பப்படுகின்றது என்பதை தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

 

காலி முகத்திடலில் இன்று (18) காலை நடைபெற்ற வைபவத்தில் இலங்கை அரசாங்கத்தின் போர் வெற்றியை முன்னிட்டு நடைபெற்ற பிரதான நிகழ்வில் உரையாற்றும்போதே இலங்கை அரச தலைவர் இவ்வாறு கூறினார்.

 

இங்கு உரையாற்றிய இலங்கை அரச தலைவர் மகிந்த ராஜபக்ஷ,

http://tamilworldtoday.com/?p=11070

 

தமிழர்களின் மனதை தான் அறிவதாக மகிந்த ராஜபக்‌ஷ கூறுகிறார்!

12 hours 6 min ago

Mahinda.jpgஒரே நாட்டிற்குள் வாழ வேண்டும் என்ற மனப்பான்மை தமிழர்கள் மனங்களில் மீண்டும் கட்டியெழுப்பப்படுகிறது என்பதைத் தான் நம்புவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

வடக்கிலுள்ள மக்களின் மனதை எனக்கு நன்கு தெரியும். 1982ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாடு வேண்டுமெனக் கோரிய பொன்னம்பலத்தைத் தோற்கடித்து, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்ட கொப்பேகடுவையை வடக்கு மக்கள் வெற்றிபெறச் செய்தனர். ஒரே நாட்டிற்குள் வாழவேண்டும் என்ற இந்த மனப்பான்மை மீண்டும் தமிழர்கள் மத்தியில் இன்று கட்டியெழுப்பப்படுகின்றது என்பதை தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், வெளிநாட்டு அழுத்தங்களும், வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்களும் எமக்குப் புதியவை அல்ல. வருடக்கணக்காக இருந்த ஆயுதப் பயங்கரவாதத்தை சர்வதேசமும் பயன்படுத்திக் கொண்டது. இதனைப் பயன்படுத்தி இலங்கையை தமக்குத் தேவையான வகையில் இயக்குவதற்கு முயற்சிக்கப்பட்டது. தொடர்ந்தும் முயற்சிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை, ஊடகச் சுதந்திரம், மனித உரிமைகள் இவை அனைத்தையும் காலத்திற்குக் காலம் பயன்படுத்தி இலங்கையில் சர்வதேசம் தலையீடு செய்ய முயற்சிக்கிறது. கடந்த நான்கு வருடங்களாக சர்வதேசம் இதனைப் பயன்படுத்தி வருகிறது.

மனித உரிமைகளைப் பேணுவதற்கோ, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கோ இவர்கள் இந்த முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. இலங்கையைப் பிளவுபடுத்துவது எப்படி? அடிமைப்படுத்திக் கொள்வது எப்படி? போன்றவை இவர்களது திட்டத்தின் உள்நோக்கமாக இருக்கிறது.

எனினும், இவற்றைத் தெளிவாக விளங்கிக்கொள்ளும் அறிவு தற்போது இலங்கை மக்களுக்கு இருக்கின்றது என்பதை தான் நம்புவதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

http://tamilworldtoday.com/home

விடுதிகளில் குற்றங்கள் நடைபெற்றால் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றே நபர்களை கைது செய்யமுடியும்: யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

12 hours 41 min ago
விடுதிகளில் குற்றங்கள் நடைபெற்றால் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றே நபர்களை கைது செய்யமுடியும்: யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

எந்தவொரு 18 வயதுக்கும் மேற்பட்ட ஆணும் பெண்ணும் தாமாக விரும்பி விடுதிகளில் தங்கியிருந்தால் அவர்களைக் கைது செய்யமுடியாது. 18 வயதுக்கு உட்பட்டவர்களை மாத்திரமே எம்மால் கைது செய்யமுடியும் என யாழ். பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவிதார்.

யாழ்.பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

விடுதியொன்றினுள் ஒரு குற்றம் நடைபெறுகின்றது என்றால் அக்குற்றம் தொடர்பாகப் புலனாய்வுகள் மேற்கொண்டு அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்து கட்டளையைப் பெற்ற பின்பே நாம் விடுதியினுள் சென்று விசாரணைகளை மேற்கொள்ள முடியும். இது சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

நாம் சட்டத்திற்குப் புறம்பாக எதையும் செய்யமுடியாது. அப்படி சமூக நலன் கருதி நீதிமன்றத்தின் அனுமதியின்றி செயற்பட்டால் எமக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும். கடந்த திங்கட்கிழமை யாழ். நகரிலுள்ள விடுதியை யாழ்ப்பாண பிரதேச செயலர் சோதித்து அங்கு தங்கியிருந்த இளைஞனையும் யுவதியையும் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளார். நாங்கள் செய்யவேண்டிய பணியை பிரதேச செயலர் செய்துள்ளமை சட்டத்திற்கு முரண்பாடான செயற்பாடாகும். எனவே அவர்கள் மீது இவ்விடயம் தொடர்பாக வழக்குத் தொடர உள்ளோம் என்றார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=4633

 

பொலிசு நேராகவே சொல்கிறது அது நம்மட ஆக்கள் என்று.

 

பொலிசு ஐயா அப்போ யார் கண்டு பிடித்தார்கள் அந்த இளைஞன் அந்த இடத்துக்கு அடைக்கடி வேறு வேறு  பெண்களை கொண்டுவருவதாக. அந்த கெஸ்ட் கவுஸ் உறிமையாளர் ஆரோ? 


 

அப்போ புலனாய்வாளர்களை அனுப்ப முகூர்த்த நாள் பார்த்துக்கொண்டிருக்கிறாரா?

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் இம்மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம்: சிவாஜிலிங்கம்

12 hours 47 min ago

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் இம்மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம்: சிவாஜிலிங்கம்

 


தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிக்களுக்கிடையில் இந்த மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். இதற்கான முன்னேற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன. இதற்கான பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று ரெலோவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளுக்கிடையிலும், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். கட்சிகளின் நடைமுறைகள், அமைப்பு விதிகள் தயாரிக்கப்பட்டு ஏனைய கட்சிகளிடமும் ஆலோசனைகள் கருத்துக்கள் பெறப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்படும். இலங்கை தமிழரசுக்கட்சி எங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு வந்துள்ளமை நல்லதொரு விடயமாகும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் நியமிக்கப்படவுள்ள குழுவில் தமிழரசுக்கட்சியை சேர்ந்த எட்டுப்பேரும் அவர்களது பாராளுமன்ற உறுப்பினர்களும் ரெலோ அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இருவரும் மற்றும் அக்கட்சியின் எம்.பி.க்களும் ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இடம் பெறுவார்கள்.

இதனைவிட எட்டு பேருக்கு மேலதிகமாக தாங்கள் இன்னும் சிலரை நியமிக்க வேண்டுமென்றும் அந்தவகையில் அம்பாறை, திருகோணமலை, வன்னி போன்ற மாவட்டங்களில் மேலும் சில பிரதிநிதிகளை நியமிக்க விரும்புவதாகவும், பெண் பிரதிநிதியொருவரையும் நியமிக்க வேண்டுமென்றும் தமிழரசுக்கட்சியின் தலைவர் சம்பந்தன் தெரிவித்த கருத்தை நாம் ஏகமனதாக ஏற்றுக்கொண்டோம்.

அதுமாத்திரமன்றி அமைக்கப்படும் குழுவில் 25 பிரதிநிதிகள் பரந்துபட்ட அளவில் ஏனைய கட்சிகள் உள்ளடங்களாக குறிப்பாக கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளும் தமது பிரதிநிதிகளை நியமிக்க வாய்ப்பளிக்கும் விதத்தில் பரந்துபட்ட பிரதிநிதித்துவத்தை நாம் ஏற்றுக்கொண்டோம் என்று தெரிவித்தார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=4636

 

யாழ் பல்கலைக்கழக சூழலில் இரவோடிரவாகப் படைக்குவிப்பு

12 hours 50 min ago
யாழ் பல்கலைக்கழக சூழலில் இரவோடிரவாகப் படைக்குவிப்பு
9bdc0f45dd5e9aa67cb91b5f8d6b8239.jpg

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக சூழலில் நேற்றிரவு முதல் பெருமளவான சிறிலங்கா பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு முதல் பெருமளவான இராணுவத்தினர் பல்கலைக்கழகம் மற்றும் அதனை சூழ உள்ள பகுதிகளில் ஆயுதங்களுடன் நடமாடித் திரிகின்றமையினால், அச்சமடைந்த பல மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளனர். குறிப்பாக சிங்கள மாணவர்கள் வெளியேறிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று ஏதாவது அஞ்சலிகள் இடம்பெறலாம் என்று தெரிவித்தே இவ்வாறான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை பெருமளவான படை குவிப்பு காரணமாக பல்கலைக்கழக சூழலில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

http://onlineuthayan.com/News_More.php?id=628772045518420135

இலங்கை சிங்கள பௌத்தர்களின் நாடு : பொதுபல சேனா

12 hours 54 min ago

இலங்கை சிங்கள பௌத்தர்களின் நாடு : பொதுபல சேனா

 

bodu-bala.jpg

 

இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு இங்கு இடமில்லை. அவ்வாறானவர்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென பொதுபல சேனா எச்சரிக்கை விடுத்தது.இங்கு இயங்கும் சர்வ மத அமைப்புக்களை தடைசெய்ய வேண்டும். இவ் அமைப்புக்கள் சிங்கள பௌத்தர்களை அழிக்கும் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுக்கின்றன என்றும் அவ் அமைப்பு தெரிவித்தது.கொழும்பிலுள்ள சம்புத்தத்வ மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பொதுபல சேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்,

இலங்கை பல்லினங்களுக்குச் சொந்தமான நாடல்ல. சிங்கள பௌத்தர்களுக்குச் சொந்தமான அம்மக்களின் ஆட்சியதிகாரத்திற்கு உட்பட்ட நாடாகும். எனவே, இங்கு வாழும் அனைவரும் இலங்கை சிங்கள பௌத்த நாடு என ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 

அதனை வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு, வெளிப்படுத்தாதவர்களுக்கு இங்கு இடமில்லை. அவர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். எதிர்காலத்தில் இதற்கான எமது போராட்டம் ஆரம்பமாகும்.

 

சர்வமத அமைப்புக்கள் இங்கு அவசியமில்லை. இவ் அமைப்புக்கள் சிங்கள பௌத்தத்தை அழித்தொழிக்கும் நிகழ்ச்சிநிரலையே முன்னெடுக்கின்றன. எனவே, இவ் அமைப்புக்களை தடைசெய்ய வேண்டும்.

தானசாலை என்ற பெயரில் பலாத்காரமாகப் பணம் கேட்டு நடத்துவது, இதன் பின்னால் மறைந்து கொண்டு மது அருந்துவது போன்றவை பௌத்த தர்மத்திற்கு மாறானதாகும். இவையனைத்தும் நிறுத்தப்பட வேண்டும்.

கேளிக்கை வெசாக்கிற்கு இதுவே இறுதி வருடமாகட்டும். அடுத்த வருடம் இதற்கெல்லாம் இடமளிக்க மாட்டோமென்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் தெரிவித்தார்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

 



இப்படியான சிந்தனையோட்டம் உள்ளவர்கள் எப்படி , என்ன அடிப்படையில் புலம் பெயர்ந்த புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தினார்கள்?

 

எத்தனை வெற்றிவிழா கொண்டாடினாலும், தீர்க்கப்பட வேண்டிய கணக்குகளுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும்!

13 hours 7 min ago

sl-flag-300x182.jpg

18 ஆம் நூற்றாண்டின் பிரபலமான போரியல் ஆய்வாளரும், படைத்தளபதியுமான Carl von Clausewitz (கர்ல்-வொன் குளோசவிட்ஸ்) கூறிய போரியல் தத்துவத்துக்கும், ஶ்ரீலங்காவின் அதிகாரப் படையாட்சிகள் நடத்தி முடித்த போர் கூறும் செய்திக்கும் இடையே நிறையவே வேறுபாடுகள் உள்ளன. முள்ளிவாய்க்கால் பேரழிவில் நான்காம் ஆண்டு நிறைவின் பின்னணியில் குளோசவிட்ஸ் கூறிய 'போர் என்பது வெவ்வேறான வழிமுறைகளில் நடக்கும் தொடர்ச்சியான அரசியல் ஊடுதொடர்பு' என்ற கருத்து பொய்த்துப்போய், அதுவொரு இனப்படுகொலையாக மட்டமே மிகக் குரூரமாகப் பதிவாகியுள்ளது.

 

ஒருவேளை ஜோன் கீகன் என்ற பிரித்தானியப் படைத்துறை வரலாற்றாளர் தனது History of Warfare என்ற நூலில் கூறுவதுபோல, போரை நடாத்தும் சமூகத்தைப் பொறுத்து அதன் வடிவமும் வீச்செல்லையும் இலங்கையில் வரையறுக்கப்பட்டிருக்கலாம். ஆம்! அதிகாரம் மற்றும் மேலாண்மை கொண்ட சமூகம் என்ற அடிப்படையில் தமிழ் மக்கள் மீது சிங்களம் நடாத்திய போர் அதன் வடிவத்தையும் வீச்செல்லையையும் முள்ளிவாய்க்கால் வரை வரை வரையறுத்துத்தான் உள்ளது.

 

குளோசவிட்ஸ் குறிப்பிடுவதுபோல, தமிழர்கள் மீது சிங்களம் நடத்திய போர் ஒரு அரசியல் ஊடுதொடர்பு அல்ல, மாறாக அதுவொரு அழிவுக்குரிய ஊடுதொடர்பு. விடுதலைப் புலிகளுடனான போரில், போரியல் விதிகள் கோரும் 'விகிதாரசம் பேணும் தன்மையை' மிக மோசமாக மீறிய கொழும்பு, தனது வடிவத்தையும் வீச்செல்லையையும் ஒரு இனப்படுகொலை இலக்கை நோக்கியே நகர்த்தியிருந்தது.

 

இன்றுகூட 'கற்றுக்கொண்ட பாடங்கள், நல்லிணக்கம்' என்ற போலியான பட்டயத்தைக் காவியபடி அனைத்துலகத்தை ஏமாற்ற முனையும் கொழும்பு, 2009 மே வரை நகர்த்தப்பட்ட இந்தப் போர் 'தமிழ் மக்களை' எவ்வளவு தூரம் இன்றுவரை காயப்படுத்தி வருகிறது என்ற 'அரிச்சுவடிப் பாடத்தைக்கூடக் கற்றுக்கொண்டதாக இல்லை'! 'பயங்கரவாதம்' ஒழிக்கப்பட்ட நாள் என்ற மிலேச்சத்தனமாக அடையாளத்துடன் இன்று மீண்டும் ஒருமுறை காலிமுகத்திடலில் வெற்றிவிழா கொண்டாடப்படுகிறது!

 

ஆனால் தமிழ் மக்களின் மனங்களிலிருந்து வெளிப்படும் 'முள்ளிவாய்க்கால் சாபம்' இன்னமும் நீண்ட நாட்களுக்கு சிங்கள தேசத்தைத் துரத்தத்தான் போகிறது. முள்ளிவாய்க்கால் வரை தாம் துரத்தியடிக்கப்பட்டு, தமது உறவுகளும் குரூரத்தனமாகக் காவுகொடுக்கப்பட்ட அந்த வேளையின் துயரத்துக்கான 'கணக்கு' சிங்கள தேசத்திடம் இன்னமும் தீர்க்கப்படாமல்தான் உள்ளது.

 

மரணித்த தமது உறவுகளுக்காக ஒரு நினைவேந்தலைக் கூட செய்ய முடியாத அளவுக்கு சிங்களத்தின் 'வெற்றிவிழா மமதை' பல வழிகளில் அவர்களை அச்சுறுத்துகின்றது. 'பட்டகட்டையிலே' பகற்குருடு செல்வதுபோல இன்று மகிந்தரின் பட்டாளங்கள் காலிமுகத்திடலில் வெற்றிவிழா அணிவகுப்பு செய்து, தமது விமானங்களை கரணமடித்து சாகசம் காட்டினாலும், இவையெல்லாம் மீண்டுமொருமுறை தமிழர்களின் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக அமையும்.

 

கொழும்பு நகரை சில தினங்களாக முடக்கி, வீதிகளை ஆங்காங்கே மூடி வெற்றிவிழா கொண்டாட்ட ஒத்திகைகளை நடாத்திய மகிந்த அதிகார மைய படைத்துறை, இன்று 100 கவச வாகனங்கள், 55 போர்க்கப்பல்கள், 28 வான் கலங்களுடன் தமது சாகசங்களை காட்டுவது, இலங்கையின் எதிர்காலத்துக்கும் வெறும் சாகசமாகவே அமையும். வெற்றிவிழா மமதையுடன் 'தம்' பிடித்து நமோ.. நமோ.. மாதாவை ஒலித்தாலும், தமிழ் மக்களிடமிருந்து ஒலித்த அவலக்குரல்களுக்கான பொறுப்புக் கூறலை சிங்களம் ஏற்கும்மட்டும் நீதிகோரும் அறவழிக் குரல்களும் ஒலிக்கத்தான் செய்யும்.

 

இதற்கிடையே பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட தினத்தை நாம் கொண்டாடுவோம் என்ற வாசகங்களைத் தாங்கிய சுவரொட்டிகளையும் யாழ் நகரப் பகுதிகளில் அதிகார அல்லக்கைகள் இரவோடு இரவாக ஒட்டிய காட்களும் தென்பட்டன. 2009 இல் இடம்பெற்றதைப் போலவே நேற்றுக்காலை உகண்டாவிலிருந்து மீண்டும் நாடுதிரும்பிய மகிந்தரும் இன்னொரு வெற்றிச் செய்தியை கொடுக்கத் தயாராகிவிட்டார்.

 

மறுபுறத்தே, அப்பனுக்குப் பிறந்த தப்பாத பிள்ளையாக, இறுதிக்கட்டப் போரின்போது பொதுமக்கள் மீது எறிகணைத் தாக்குதலை புலிகள் நடாத்தினார்களா, அல்லது படையினர் நடாத்தினார்களா என்பது தெரியாத நாமல் ராஜபக்ச வேறு, BBC யிற்கு 'ஐயத்தை வெளிப்படுத்தும் ஒரு கதை' கூறுகிறார். அத்துடன் வடக்கு மக்கள் மட்டுமன்றி நாட்டின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த மக்களும் போர் காரணமாக துயரங்களை அனுபவித்ததாக 'துயரங்களின் விகிதாசாரக் கணக்கை' வேறு அவர் போட்டுக்காட்டுகிறார்.

 

இவ்வாறு கூறி BBC ஊடகருக்கு வேண்டுமானால் நாமல் கணக்கு விடலாம். ஆனால் தீர்க்கப்படவேண்டிய கணக்குகளுக்கு அவர் கணக்குவிட முடியாது. இவ்வாறான கணக்குகள் பொருந்தாதென்பதால் தானே, சட்டவிரோத படுகொலைகள், சட்டவிரோத தண்டனைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்புப் பிரதிநிதியை இலங்கையில் கால்பதிக்க மகிந்த அதிகார மையம் அனுமதியளிக்கவில்லை.

 

இலங்கைக்குத் தான் பயணிக்க விரும்புவதாக ஏற்கனவே கோரிக்கை விடுத்த கிறிஸ்டோப் ஹென்ஸ் மீண்டும் ஒருமுறை தனது கோரிக்கையை கொழும்பிடம் முன்வைத்தாலும், இதுவரை அவருக்கு பதிலளிக்காமல் மௌனம் காக்கிறது கொழும்பு. சனல் 4 வின் 'இலங்கையின் கொலைக்கள' ஆவணக் காட்சிகள் உண்மையானதென, 2011 இல் ஹென்ஸ் கருத்துத் தெரிவித்திருப்பதால், அவர் நாட்டுக்குள் நுழைந்தால் சிக்கல் என்பதற்காகவும் அவரைக் காய்வெட்ட முனைகிறது கொழும்பு.

 

தனது மனித உரிமை பொறிமுறைக்கு சான்றிதழ் வழங்க ஆபிரிக்க நிபுணத்துவ 'மெக்கானிக்குகள்' வரும்போது ஐ.நா.வாவது, ஜெனிவாவாவது என கொழும்பு எதிர்மறைப் போக்கில் துடிக்கிறது. ஆனால் பொதுநலவாய அமைப்பு என்பது பிரித்தானிய முடியாட்சிக்குட்பட்ட முன்னைய நாடுகளின் அமைப்பு என்பதும், ஐ.நா அமைப்பு உலகப் பொதுமன்றம் என்ற உண்மையையும் விரைவில் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் கொழும்புக்கு ஏற்படும்.

 

http://tamilworldtoday.com/home

 

வடக்கில் இராணுவத்தைக் குறைக்க வேண்டும் என்பது பைத்தியக்காரத்தனம்! அமைச்சர் வாசுவிற்கு கோதாபய சாட்டை!

13 hours 13 min ago

Wasudewa.jpg

செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படவுள்ளதாகக் கூறப்படும் வட மாகாண சபைத் தேர்தல் சுதந்திரமானதும், நியாயமானதுமாக நடத்தப்பட வேண்டுமாயின் வடக்கில் உள்ள இராணுவத்தினர் முகாம்களுக்குள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

 

வடக்கில் இராணுவத்தினரின் பிரச்சனம் தற்போதுள்ளதைப் போல தேர்தல் காலத்திலும் இருந்தால் சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல் நடத்தப்பட்டதாக சர்வதேச சமூகத்திற்கு கூற முடியாது போகும் என வாசுதேவ நாணயக்கார 'ராவய'' சிங்களப் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.

 

இந்தக் கருத்து குறித்து அந்தப் பத்திரிகை, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவிடம் கேட்டபோது இதற்குப் பதிலளித்த அவர்,

 

வடக்கின் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவம் அகற்றப்படமாட்டாது எனக் கூறினார். வடக்கின் அபிவிருத்திக்காக மாத்திரமே இராணுவத்தினர் தற்போது பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

'''பாதுகாப்பு குறித்தும் இராணுவத்தினர் மீதும் குறித்த அமைச்சருக்கு சந்தேகம் இருக்கிறதோ தெரியவில்லை. இல்லையெனில், வடக்கில் இராணுவத்தினர் அரசியலில் ஈடுபடுவதாக அவர் கருதுகிறாரோ தெரியவில்லை?. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் என்பது இலங்கை மீது பலவந்தமாக திணிக்கப்பட்ட ஒன்றாகும். 13ஆவது திருத்தத்தை வாசித்துப் பார்க்கவேண்டும். மாகாண முதலமைச்சருக்கு பொலிஸ் அதிகாரங்கள் கிடைக்கும். பொலிஸ்துறையை அரசியல்மயப்படுத்துவது சரியானதா என நான் கேட்கிறேன். இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு இவ்வாறான அமைச்சர்கள் வீரர்களாக முயற்சிக்கின்றனர்.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 வருடங்கள் இதுகுறித்து பேசவில்லை. இது மக்களுக்குத் தேவையில்லை. சம்பந்தன், சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோருக்கே இது தேவைப்படுகிறது.

 

பாகிஸ்தானுக்கு சமாதானம் கிடைத்ததா? உலகிலுள்ள வேறு எந்த நாட்டிற்காகவது சமாதானம் கிடைத்ததா? இல்லை. இராணுவத்தை முகாம்களுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பது பைத்தியக்காரத்தனம்'' என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

http://tamilworldtoday.com/?p=11059

 

வடக்குத் தேர்தலில் தயா மாஸ்டரையும், தமிழினியையும் களமிறக்குவது ஜனநாயக விரோதம்! – ரவி ரட்ணாயக்கா

13 hours 48 min ago
வடக்குத் தேர்தலில் தயா மாஸ்டரையும், தமிழினியையும் களமிறக்குவது ஜனநாயக விரோதம்! – ரவி ரட்ணாயக்கா
1912147b-659d-4e51-a9b0-03474c3a84591.jp

 

'வடமாகாண சபைத் தேர்தலில் தயா மாஸ்டரையும், தமிழினியையும் அரசு களமிறக்குவதானது நாட்டின் ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்'

இவ்வாறு ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்

கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள ஐ.தே.கவின் தொழிற்சங்கப் பணிமனையில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த அரசு தனது குறைகளை மறைப்பதற்காக எதிர்க்கட்சிகள் மீது குற்றஞ்சாட்டி வருகின்றது. ஆனால், இந்த நாட்டின் நாசகாரச் செயல்களுக்கு நாம் காரணமல்ல.

தற்போது சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் எண்ணெய் இல்லை. ஆனால் எண்ணெய்க் கொள்கலனுடன் கப்பல் ஒன்று வருகிறது என அரசு தெரிவித்தாலும் இதுவரையிலும் துறைமுகத்திற்கு கப்பல் வரவில்லை.

இதுவரையிலும் அரசு எண்ணெய்க்கான கோரல் விடுக்காதுள்ளமையே இதற்கான காரணமாகும். இதனால் தற்போது பல ஆயிரம்கோடிக் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, பொதுநலவாய மாநாட்டிற்காக 'ரோல்ஸ் றொயிஸ்' கார்களை அரசு இறக்குமதி செய்யவுள்ளது. பலகோடி ரூபா பெறுமதியான கார்களை இறக்குமதி செய்வதன் மூலம் எந்தவித இலாபத்தையும் அரசு பெற்றுக்கொள்ளப் போவதில்லை. மேலும், இதனால் ஏற்படும் நஷ்டமும் மக்களையே மேலும் பாதிப்படையச் செய்யும்.

வடமாகாணசபைத் தேர்தலில் முன்னாள் போராளிகளான தயா மாஸ்டரையும், தமிழினியையும் களமிறக்க இந்த அரசு தீர்மானித்துள்ளது. இச்செயற்பாடு மிகவும் மோசமான ஒன்றாகும்.

30 வருட காலமாக நாட்டையே உலுக்கிவைத்த யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்த சரத் பொன்சேகாவை தேசிய பாதுகாப்பைக் காரணம்காட்டி இரண்டு வருடங்கள் சிறையில் தள்ளியது இந்த அரசு. ஆனால், யுத்தத்தில் ஈடுபட்ட அவர்களிருவரையும் தேர்தலில் இறக்கி ஜனநாயகத்திற்கு எதிராக செயற்படுகிறது அரசு. இதனை எதிர்க்க முற்பட்டால் எம்மையும் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துவிடுகிறது.

ஆனால் மக்கள் இப்போது முன்னர் போலல்லாது தெளிவாகிவிட்டார்கள். எதிர்வரும் 21 ஆம் திகதி எம்மால் நடத்தப்படவிருக்கும் பாரிய போராட்டத்தில் மக்களைக் கலந்துகொள்ள நாம் அழைக்கின்றோம். நாம் நிம்மதியாக வாழும் காலம் வரும்வரை தொடர் போராட்டங்களை நடத்திக்கொண்டேயிருப்போம்.

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி ரட்ணாயக்கா தெரிவித்தார்.

 

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=1912147b-659d-4e51-a9b0-03474c3a8459

Pages