ஊர்ப்புதினம்

போதைப்பொருள் பற்றிய தகவல்களைத் தெரிவிக்க துரித தொலைபேசி இலக்கம்!

1 day 6 hours ago

30 Oct, 2025 | 05:06 PM

image

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டுடன் இணைந்த வகையில் 24 மணித்தியாலமும் செயற்படும் வகையிலான துரித தொலைபேசி இலக்கம் ஒன்றை  தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபையின் வேண்டுகோளுக்கு இணங்க அறிமுகப்படுத்தியுள்ள ‘1818’ துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்களுக்கு நாடு பூராகவும் இயங்கும் போதைப்பொருள் வர்த்தகம், விநியோகம் அல்லது அதனுடன் தொடர்புடைய சந்தேகத்திற்கு இடமான செயற்பாடுகள் குறித்து சரியான தகவல்களை  வழங்க முடியும். 

https://www.virakesari.lk/article/229074

யாழ்.மாவட்டப் போக்குவரத்து; எம்.பி.க்கள் நேரில் ஆராய்வு!

1 day 10 hours ago


1164419052.jpg

யாழ்ப்பாணம் 1 மணி நேரம் முன்

யாழ்.மாவட்டப் போக்குவரத்து; எம்.பி.க்கள் நேரில் ஆராய்வு!

இணைந்த அட்டவணை தொடர்பில் கூடுதல் கவனம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் இ.போ.ச. மற்றும் தனியார் பேருந்துச் சேவைகளின் குறைபாடுகள் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதிகாரிகளும் நேற்று நேரடிக்களப்பயணம் மேற்கொண்டு ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் யாழ். மேலதிக மாவட்டச் செயலர் சிவகரன், உள்ளூராட்சி ஆணையாளர் சுதர்சன், யாழ்ப்பாணம் பிரதேச செயலர், யாழ். மாநகர மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், நகர அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர்கள் உட்படப் பலரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கெடுத்தனர்.

குறிப்பாக, தூரசேவை பேருந்து நிலையத்தில் இருந்து இரு பேருந்து சேவைகளையும் இணைந்த சேவை நேர அட்டவணையின் பிரகாரம் முன்னெடுப்பதில் இருக்கின்ற பிரச்சினைகள் குறித்து கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உயர்மட்டக் கலந்துரையாடல் மூலம் சிறப்புப்பொறிமுறையை ஏற்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

யாழ்.மாவட்டப் போக்குவரத்து; எம்.பி.க்கள் நேரில் ஆராய்வு!

நல்லூர் பகுதிகளில் கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை

1 day 10 hours ago

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நல்லூர் பிரதேச சபையின் கழிவகற்றல் முகாமைத்துவத்தினை மேம்படுத்துவதற்கான செயற்றிட்டங்களினை நல்லூர் பிரதேச சபை மேற்கொண்டு வருகின்றது. அது மிகப்பெரிய சவாலாக காணப்படுகின்ற போதும் அசாத்தியமானதை சாத்தியமாக்கின்ற பணியில் நாம் தொடர்ந்தும் மிகுந்த ஈடுபாட்டுடன் பயணிக்கின்றோம்.

அதன் பிரகாரம் நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் பொது இடங்களில் கழிவுகள் கொட்டப்படுவதனை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை தடுக்கும் முகமாக முதற்கட்டமாக அதிகளவில் கழிவுகள் கொட்டப்படுகின்ற 11 பொது இடங்களை அடையாளப்படுத்தி அங்கு கண்காணிப்பு கமராங்கள் பொருத்தப்பட்டு தினமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. 

இவ்வாறு பொது இடங்களில் கழிவுகளை வீசுபவர்கள் கண்காணிப்பு கமராங்கள் மூலமாக அடையாளப்படுத்தப்பட்டு கிராம சேவையாளர்களுக்கூடாக அவர்கள் தொடர்பான விபரங்கள் பெறப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கின்ற செயற்பாடுகளும் நடைபெற்றுவருகின்றது.

அதே நேரம் வாகனங்களில் வந்து கழிவுகளை வீசுபவர்களின் வாகன இலக்கங்கள் மோட்டார் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு அவர்கள் மூலம் குறித்த வாகனங்களின் விபரங்கள் பெறப்பட்டு அபராதம் விதிக்கின்ற செயற்பாடுகள் நடைபெற்றுவருகின்றது.

குறித்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கென ஒரு தனி அலகும் நல்லூர் பிரதேச சபையில் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பொது இடங்களில் கழிவுகளை வீசுபவர்கள் பலர் அடையாளப்படுத்தப்பட்டு கடந்த இரண்டு மாத காலத்தினுள் இரண்டு லட்சம் ரூபாவுக்கு மேல் தண்டப்பணம் நல்லூப் பிரதேச சபைக்கு வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளது.

பொது இடங்களில் கழிவுகளை கொட்ட வேண்டாம் என்று நல்லூர் பிரதேச சபை பல தடவைகள் அறிவுறுத்தல்கள் விட்டபோதும் சிலர் அவற்றினை அலட்சியம் செய்து பொது இங்களில் கழிவுகளை வீசிவிட்டே செல்கின்றனர்.

அதனைக் கட்டுப்படுத்த வேண்டிய தார்மீக பொறுப்பினையுணர்ந்த நல்லூர் பிரதேச சபை கழிவு போடும் இடங்களினை அடையாளப்படுத்தல் - கண்காணிப்பு கமராக்கள் பொருத்துதல் - கண்காணித்தல் - கழிவுகளை வீசுபவர்களை அடையாளப்படுத்தல் - அவர்களுக்கு அபராதம் விதிக்கின்ற செயற்பாட்டினை முன்னெடுத்தல் என்ற பொறிமுறையினை தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றது. இப் பொறிமுறைக்கு எம்மை இட்டுச் சென்றது எம்முடைய சில பொறுப்பற்ற மக்கள் கூட்டத்தினரே. 

இவ்வாறு கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு அபராதம் விதிக்கின்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் பொது இடங்களில் கழிவுகள் வீசுகின்ற செயற்பாடுகள் நிறுத்தப்படவில்லை.

எனவே காலத்தின் தேவை கருதி இச் செயற்பாட்டினை முற்றாக நிறுத்துவதற்குரிய கடுமையான நடவடிக்கைகளை நல்லூர் பிரதேச சபை மேலும் விரிபுபடுத்தும். எனவே பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளுகின்றேன் என தெரிவித்துள்ளார்.

நல்லூர் பகுதிகளில் கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை | Virakesari.lk

இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவானது!! ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதம்

1 day 10 hours ago

இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை மதிப்பீட்டுக்கமைய இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளது.

இந்நிலையில், இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதமாகவும்,பெண்களின் எண்ணிக்கை 51.7 வீதமாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, இலங்கையில் சனத்தொகை கூடிய மாவட்டமாக கம்பஹா மாவட்டம் பதிவாகியுள்ளது. 

இலங்கையில் தங்கி வாழ்வோரின் வீதம் ( 65 வயதுக்கு மேற்பட்ட ,தொழில் புரியாதோர்) 12.6 வீதமாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் மொத்த சனத்தொகை குறித்து வெளியான தகவல் ! | Virakesari.lk

இலங்கையின் மொத்த சனத்தொகை குறித்து வெளியான தகவல் !

1 day 10 hours ago

இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை மதிப்பீட்டுக்கமைய இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளது.

இந்நிலையில், இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதமாகவும்,பெண்களின் எண்ணிக்கை 51.7 வீதமாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, இலங்கையில் சனத்தொகை கூடிய மாவட்டமாக கம்பஹா மாவட்டம் பதிவாகியுள்ளது. 

இலங்கையில் தங்கி வாழ்வோரின் வீதம் ( 65 வயதுக்கு மேற்பட்ட ,தொழில் புரியாதோர்) 12.6 வீதமாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் மொத்த சனத்தொகை குறித்து வெளியான தகவல் ! | Virakesari.lk

கடலில் கவிழ்ந்த கேஷான் புதா 1 மீன்பிடிக் கப்பல் - மீனவர்களை மீட்கப் புறப்பட்டது சிதுரல கப்பல்

1 day 10 hours ago

30 Oct, 2025 | 05:10 PM

image

இலங்கைக்கு தெற்கே, ஹம்பாந்தோட்டைக்கு சுமார் 354 கடல் மைல் (655 கிமீ) தொலைவில் ஆழ்கடலில் பாதகமான வானிலை காரணமாக கவிழ்ந்த கேஷான் புதா 1 என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்து நான்கு மீனவர்கள் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன் மீட்கப்பட்டதுடன், அவ் மீனவர்களை மீட்கும் நடவடிக்கைக்காக இலங்கை கடற்படையினால், இலங்கை கடற்படை கப்பலான சிதுரல அந்த கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டது. 

தேவேந்திர மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆறு மீனவர்களுடன் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்ட கேஷான் புதா 1 என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலின் தொடர்பு இணைப்புகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு, கப்பல் காணாமல் போயுள்ளது, மேலும் கப்பலையும் அதில் உள்ள மீனவர்களையும் கண்டுபிடிக்க உதவிமாரு, கடற்படை தலைமையகத்தில் அமைந்துள்ள கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு மீன்வள மற்றும் நீர்வளத் திணைக்களம் தகவல் தெரிவித்தது. இந்த அறிவிப்புக்கு உடனடியாக பதிலளித்த கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தினால், இலங்கை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள மீன்பிடி மற்றும் கடற்படை சமூகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதன்படி, பல நாள் மீன்பிடிக் கப்பலான கேஷான் புதா 1, இலங்கை கடற்கரையிலிருந்து ஹம்பாந்தோட்டைக்கு தெற்கே சுமார் 354 கடல் மைல்கள் (655 கிமீ) தொலைவில் ஆழ்கடலில் கவிழ்ந்து ஆபத்தில் இருந்தபோது, நான்கு மீனவர்கள் இந்தோனேசிய மீன்பிடிக் கப்பலால் மீட்கப்பட்ட பின், அடிப்படை முதலுதவி மற்றும் அடிப்படைத் தேவைகளை வழங்கவும் மீனவர்கள் வணிகக் கப்பலான MV Graceful Star அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில், இந்த மீட்பு நடவடிக்கைக்காக கடற்படை இலங்கை கடற்படை கப்பலான சிதுரலவை அனுப்பியது.

கடலில் கவிழ்ந்த கேஷான் புதா 1 மீன்பிடிக் கப்பல் - மீனவர்களை மீட்கப் புறப்பட்டது சிதுரல கப்பல் | Virakesari.lk

பிரகீத் எக்னலிகொட வழக்கு : கொழும்பு உயர்நீதிமன்றம் டிசம்பர் 5 விசாரணை உத்தரவு

1 day 10 hours ago

30 Oct, 2025 | 05:52 PM

image

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல்போனமை தொடர்பாக இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை டிசம்பர் 5ஆம் திகதி மீண்டும் விசாரணைக்குட்படுத்த கொழும்பு உயர் நீதிமன்றம் சட்ட மாஅதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று வியாழக்கிழமை (30) மூன்று நீதிபதிகளைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வின் உறுப்பினரான நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

வழக்கை விசாரிக்கும் மூன்று நீதிபதிகளைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வில் மீதமுள்ள வெற்றிடமாக உள்ள பதவிகளுக்கு தற்போது வரை  நீதிபதிகள் பெயரிடப்படவில்லை என்று நீதிபதி கூறினார்.

விரைவில் அந்தப் பதவிகளுக்கு நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறிய நீதிபதி, வழக்கு டிசம்பர் 5ஆம் திகதி  வரை ஒத்திவைக்கப்படுவதாக உத்தரவிட்டுள்ளார்.

கிரிதலே இராணுவ முகாமின் முன்னாள் கட்டளை அதிகாரி உட்பட ஒன்பது இராணுவ புலனாய்வுப் பிரிவினர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

2010 ஜனவரி 25ஆம் திகதி அல்லது அதற்கு அருகில் கிரிதலே, ஹபரணை மற்றும் கொட்டாவ ஆகிய பகுதிகளில் அடையாளம் தெரியாத ஒரு குழுவினருடன் சேர்ந்து இரகசியமாக சிறையில் அடைக்கும் நோக்கத்துடன், பத்திரிகையாளர் பிரகீத் எக்னலிகொடவை கடத்தி கொலை செய்ததாக குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்ட மாஅதிபர் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.

பிரகீத் எக்னலிகொட வழக்கு : கொழும்பு உயர்நீதிமன்றம் டிசம்பர் 5 விசாரணை உத்தரவு | Virakesari.lk

யாழில் ஒப்பந்த காலம் நிறைவடைந்தும் வெளியேறாத நிறுவனம் - மீனவர்கள் போராட்டம்!

1 day 10 hours ago

30 Oct, 2025 | 05:07 PM

image

ஒப்பந்த காலம் நிறைவடைந்தும் வெளியேறாமல், தம்பாட்டி கடற்றொழில் கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் கட்டடத்தில் இருந்து தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் தனியார் நிறுவனத்தை உடனடியாக வெளியேறுமாறு கோரி, தம்பாட்டி கிராமிய கடற்றொழில் அபிவிருத்தி சங்கத்தினர் இன்றைய தினம் (30) குறித்த கட்டடத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தி, "தனியார் நிறுவனமே உடனடியாக வெளியேறு”, “எங்கள் வீட்டில் உங்கள் ஆட்சியா”, “ஒப்பந்தகாலம் நிறைவடைந்தும் வெளியேறாமல் இருப்பது அராஜகமான செயற்பாடா”, “மீனவர்களின் வயிற்றில் அடிக்காதே”, “எமது கட்டடம் எமக்கு வேண்டும்”, “மீனவர்களுக்கு அநீதி இழைக்காதே" போன்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட தம்பாட்டி கடற்றொழில் கிராமிய அபிவிருத்தி சங்கத்தினர் கருத்து தெரிவிக்கையில்,

எமது சங்க கட்டடமானது கடந்த நிர்வாகத்தால் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 5 வருடகால ஒப்பந்தத்துக்கு வழங்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நிலையில் 2023ஆம் ஆண்டு ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளது. ஒப்பந்தகாலம் நிறைவடைந்து 2 வருடங்கள் கடந்தும் அவர்கள் வெளியேறவில்லை.

20251030_122418.jpg

வேறொரு நிறுவனமானது எம்மிடம் வந்து 80 பேருக்கு வேலைவாய்ப்பும், 10 இலட்சம் ரூபா முற்பணமும், மாதாந்தம் 50ஆயிரம் ரூபா வாடகையும் தருவதாகவும் கூறினார்கள். 

நாங்கள் அவர்களுடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஒப்பந்தமும் செய்துவிட்டோம். ஆனால் ஏற்கனவே எமது கட்டடத்தை பயன்படுத்தும் நிறுவனமானது வெளியேறாத காரணத்தால் புதிதாக ஒப்பந்தம் செய்த நிறுவனம் தமது பணிகளை முன்னெடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய நிறுவனத்தின் வருகையால் எமது பகுதியில் உள்ள பல பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதாரமும் கிடைக்கவுள்ளது. ஆனால் அதற்கு எல்லாம் வழிவிடாது, ஏதோ ஒரு பின்னணியை வைத்து அந்த நிறுவனம் வெளியேறாமல் இருக்கின்றது.

எமது அனுமதியின்றி எமது கட்டடத்திலும், கட்டடம் அமைந்துள்ள வளாகத்திலும் பல்வேறு விதமான வேலைகளை செய்கின்றனர். உள்ளே என்ன நடக்கின்றது என்று கூட எமக்கு தெரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசியிருந்தோம். இருப்பினும் அவர்களும் எமக்கு தீர்வு வழங்கவில்லை.

குறித்த நிறுவனமானது இதற்கு பின்னரும் வெளியேறாவிட்டால் ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல. ஏனெனில் அவர்கள் சட்டவிரோதமாக இருக்கின்றார்கள். ஒப்பந்த காலம் நிறைவடைந்த நிலையில் எங்களது சங்கத்தின் வளாகத்தில் எங்களது மக்களுக்கு நன்மை பயக்கும் எந்த செயற்பாட்டையும் நாங்கள் செய்ய முடியும் என்றனர்.

குறித்த போராட்டம் இடம்பெற்றபோது கட்டடத்தின் உள்ளே இருந்தவர்கள் போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் காணொளி எடுத்ததை அவதானிக்க முடிந்தது.

IMG-20251030-WA0064.jpg

IMG-20251030-WA0067.jpg

யாழில் ஒப்பந்த காலம் நிறைவடைந்தும் வெளியேறாத நிறுவனம் - மீனவர்கள் போராட்டம்! | Virakesari.lk


'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' தொனிப்பொருளின் கீழ் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு செயற்றிட்டம்

1 day 10 hours ago

30 Oct, 2025 | 06:01 PM

image

(எம்.மனோசித்ரா)

'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' என்ற கருப்பொருளின் கீழ் நாடளாவிய ரீதியிலான தேசிய போதைப்பொருள் ஒழிப்பு செயற்றிட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. கொழும்பு - சுகததாச உள்ளக அரங்கில் வியாழக்கிழமை (30) காலை இந்நிகழ்வு இடம்பெற்றது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உள்ளிட்ட ஏனைய அமைச்சரவை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் பொது மக்கள் என நூற்றுக்கணக்கானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அரச நிறுவனங்களின் பங்களிப்புக்கு அப்பால், பரந்த பொதுமக்களின் பங்கேற்புடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. பயனுள்ள செயலாக்கத்தை உறுதிப்படுத்த, மாவட்ட வழிகாட்டுதல் குழுக்கள், பிராந்திய வழிகாட்டுதல் குழுக்கள் மற்றும் அடிமட்ட அளவில் பொது பாதுகாப்பு குழுக்கள் உட்படப் பல கட்டங்களைக் கொண்ட ஒரு கட்டமைப்பு இதற்காக நிறுவப்பட்டுள்ளது.

சமூகத்தின் பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 23 உறுப்பு அமைப்புகளைக் கொண்ட 'ஒன்றிணைந்த தேசம்' தேசிய வழிகாட்டுதல் சபை மத்திய செயல்பாட்டு அமைப்பாகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவு முழுவதும் இந்த முயற்சியை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதியின் தலைமையில் தேசிய வழிகாட்டுதல் சபை ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டுள்ளது, அத்துடன் ஜனாதிபதியின் செயலாளர் சபையின் செயலாளராகப் பணியாற்றுவார்.

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், நாட்டின் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் போதைப்பொருட்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் அச்சுறுத்தலை ஒழிப்பதாகும். இதன்படி, பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், பொலிஸ், முப்படைகள், பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இன்று முதல் இந்தத் திட்டத்தில் இணைந்துகொள்ளும் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கு இணையாக, மாகாண சபைகள், மாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரிகளும் இந்தத் திட்டத்தை ஆதரிப்பதாக முறைப்படி உறுதிமொழி எடுக்க எதிர்பார்க்கப்படுகிறது.

'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' தொனிப்பொருளின் கீழ் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு செயற்றிட்டம் | Virakesari.lk

NPP அரசாங்கம் யாழ்ப்பாண முஸ்லிம்களின் பிரச்சனைகளை தீர்க்குமா..?

1 day 12 hours ago

NPP அரசாங்கம் யாழ்ப்பாண முஸ்லிம்களின் பிரச்சனைகளை தீர்க்குமா..?

Thursday, October 30, 2025 கட்டுரை

Unknown.jpeg


- எம்.எஸ்.எம். ஜான்ஸின் -


1990  ஆம் ஆண்டு ஆக்டொபர் 30  ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சுமார் 20000  முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். தமிழீழத்தை முஸ்லிம்கள் அற்ற பிரதேசமாக மாற்றியமைப்பதற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களை வெளியேற்ற திட்டமிட்ட புலிகள் அமைப்பு கிழக்கு மாகாணத்தில்   1990  ஜூலை 12  அன்று குருக்கள்மடம்   ஊடாக சென்ற 72  ஹஜ் குழுவினரை படுகொலை செய்தது,  1990  ஆகஸ்ட் 3   அன்று காத்தான்குடி பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்த 147  பேரை  படுகொலை செய்தது , 1990  ஆகஸ்ட் 11 ஆம் திகதி இரவு முதல் 12  ஆம் திகதி  காலை வரை  ஏறாவூர் கிராமங்களில் 173 முஸ்லிம்களை படுகொலை செய்தது உட்பட ஏராளமான முஸ்லிம்களை கொன்று அவர்களை வெளியேற்ற முயற்சித்தும் அது வெற்றி பெறவில்லை. 


இந்நிலையில் யாழ்ப்பாணம், மன்னார் , முல்லைத்தீவு, வவுனியா , கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் வாழ்ந்த சுமார் 15000  குடும்பங்களை சேர்ந்த   81000 பேர் புலிகள் அமைப்பால் 1990  ஆக்டொபர் 15  முதல் 30  ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கட்டம் கட்டமாக வெளியேற்றப் பட்டனர்.  இந்த வெளியெர்ராஹ்த்துக்கு இறுதியாக முகம் கொடுத்தது யாழ்ப்பாண முஸ்லிம்கள் ஆவர். 


1400 ஆண்டுகளுக்கு முன்னர்  யாழ்ப்பாணத்தின் தீவுப்பகுதியில் அரபிகளும் நாகர் இன  மக்களில் ஒரு தொகுதியினரும் இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து முஸ்லிம்களைன் பிரசன்னம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது.  இவர்கள் யுத்தம், ஆழிப்பேரலை, மற்றும் சில இனவழிப்பு நடவடிக்கைகள் மூலம் காலத்துக்கு காலம் இடம்பெயர்வுகளை சந்தித்து இறுதியாக யாழ்ப்பாணம் நகர பகுதியில் வாழ்ந்து வந்தனர்.     

இனச்சுத்திகரிப்பு வெளியேற்றம்:

 

தமிழர்களுடன் பல தசாப்தங்களாக அன்னியோன்யமாக சகோதர மனப்பான்மையுடன் வாழ்ந்துவந்த  சுமார் 3500 குடும்பங்களை சேர்ந்த 18000    முஸ்லிம்கள் 1990  ஆக்டொபர் 30  ஆம் திகதி  இரண்டு மணி நேர அவகாசம் வழங்கப் பட்டு வெளியேற்றப் பட்டனர்.  சுமார் 600  க்கும்  மேற்பட்ட கனரக ஆயுதங்கள்  தரித்த புலிகள் இயக்க உறுப்பினர்கள் முஸ்லிம்கள் வாழ்ந்த சோனகர் நகரை சுற்றிவளைத்தனர்.  வீட்டுக்கு ஒருவரை ஜின்னா மைதானத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்து அங்கு வைத்து நீங்கள் உடனடியாக இரண்டு மணித்தியாலங்களுக்கு முஸ்லிம்கள் அனைவரும் தமிழீழத்தை விட்டு வெளியேறவேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப் பட்டு.  எச்சரிக்கை வேட்டுக்களும்   வானத்தை நோக்கி  நடத்தப் பட்டது.  

இந்த வெளியேற்றத்தின் போது தமிழீழத்தில் உழைத்தாய் அனைத்தும் தமிழீழத்துக்கே சொந்தம் என  கூறப்பட்டு முஸ்லிம்களின் வெளியேறு பாதைகளில் எல்லாம் சோதனை சாவடிகள் அமைத்து  பணம், நகை, மேலதிக உடைகள் எல்லாம் பறிக்கப் பட்டன. சிலர் 200 ரூபாய் மட்டும் கொண்டுசெல்ல அனுமதிக்கப் பட்டனர். 


வெளியேற்றத்தினால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள்: 


யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் யாழ் சோனகர் நகர், பொம்மைவெளி, மண்கும்பான், சாவகச்சேரி , பருத்தித்துறை, கிளிநொச்சி, நாச்சிகுடா, பள்ளிக்குடா , நயினாதீவு பண்ற பிரதேசங்களில் வசித்து வந்தனர்.  முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டபோது எல்லாப் பொருட்களையும் விட்டு விட்டு செல்லுமாறு கூறப் பட்டனர். கொண்டு சென்ற பொருட்களும் புலிகளின் சோதனைச் சாவடிகளில் பறிக்கப் பட்டது. 


வெளியேற்றத்தினால் முஸ்லிம்கள் 2000  வீடுகளையும், 16  பள்ளிவாசல்கள், நான்கு பொதுக்கட்டிடங்கள்,  7000  சைக்கிள்கள்,  1500 மோட்டார் சைக்கிள்கள், ஏறக்குறைய 1500 கிலோ தங்க நகைகள், கோடிக்கணக்கான பணம், வியாபார பொருட்கள், ஆடுமாடுகள் கோழி உட்பட எல்லா பொருட்களும் பலவந்தமாக பறித்து எடுக்கப் பட்டன. 


அவ்வாறு இழக்கப் பட்ட மொத்த சொத்துக்கள் பொருட்களின் மதிப்பு ஏறக்குறைய 32  பில்லியன்    ரூபாய்களாகும்.  சராசரியாக ஒரு குடும்பம் 91 இலட்சம் ரூபாய் இழப்புகளை சந்தித்துள்ளது.  


2025  இல் தற்போதைய நிலை 

1990  ஆம் ஆண்டு வெளியேற்றப் பட்ட யாழ்ப்பாண மாவட்ட முஸ்லிம்கள் சுமார் 3800  குடும்பங்களை சேர்த்த சுமார்  20000  பேர்களாகும். அவர்கள் இனஅழிப்பு நடவடிக்கையில் வெளியேற்றப் பட்ட பின்னர் பலரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தஞ்சம் புகுந்தனர். இக்கிரிகொல்லாவ, மதவாச்சி, அனுராதபுரம், நொச்சியாகம, குருநாகல், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கோல்பு, திகாரி, மாபோல, கண்டி, மாவனல்லை, அக்குறணை, கொழும்பு, மொரட்டுவ, பாணந்துறை   , களுத்துறை, பேருவளை என தமக்கு அமைந்த ஊர்களில்  அடைக்கலம் புகுந்து அகதி முகாம்களிலும் , நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் , பொது கட்டிட்டங்கள் பாடசாலை கட்டிடங்கள் போன்றவற்றிலும் தற்காலிகமாக வாழ்ந்தனர். 


இக்கிரிகொள்ளவையில் ஒரு அகதிமுகாமும், புத்தளத்தில் பத்து முகாம்களிலும் கொழும்பில் நான்கு முகாம்களிலும் நீர்கொழும்பில் 

ஒரு முகாமிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட பாடசாலைகளிலும் தஞ்சமடைந்த மக்கள் பின்னர் படிப்படியாக இடைத்தங்கல்   முகாம்களுக்கு மாற்றப் பட்டனர்.  


கடந்த 35 வருடங்களில் யாழ்ப்பாணத்தில் இருந்து அவ்வாறு வந்த 3800  குடும்பங்களும் தற்போது பல்கிப் பெருகியுள்ளது. அந்த வகையில் புத்தளத்தில் தற்போது சுமார் 5000  குடும்பங்களை சேர்ந்த   22000  பேர் வசிக்கின்றனர். இவ்வாறு நீர்கொழும்பில்   800  குடும்பங்களை சேர்ந்த   3000  பேர், பலவத்துறையில் 125  குடும்பங்களை சேர்ந்த   600  பேர் , கொழும்பில் 2000  குடும்பங்களை சேர்ந்த   8000  பேர், பாணந்துறையில் 300  குடும்பங்களை சேர்ந்த   1500  பேர் , நாட்டின் பல பாகங்களிலும் 500  குடும்பங்களை சேர்ந்த   2200  பேர் வாழ்கின்றனர். 


மத்திய கிழக்கு நாடுகள், பிரித்தானிய, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, சுவீஸ், நியூசீலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் சுமார் ஐநூறு குடும்பங்களை சேர்ந்த 2000 பேரும், தனி நபர்களாக சுமார் 2000  பேரும் வசிக்கின்றனர்.        


2009  யுத்த முடிவும் 2010  மீள் குடியேற்றமும் 


2009 மே மாதம் 19  ஆம் திகதி யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் வாழ்ந்த யாழ்ப்பாண முஸ்லிம்கள் மீண்டும் தமது தாயகப் பூமியான யாழ்ப்பாணத்துக்கு சென்று மீளக் குடியேறும் வாய்ப்பு உண்ட என ஆராய்ந்தனர்.  


அவ்வாறு சென்றவர்கள் தமது  2200  வீடுகள் 16 பள்ளிவாசல்கள் நான்கு பாடசாலை கட்டிடங்கள், கடைகள்  என  எல்லாம் உடைத்தழிக்கப் பட்டு காடுகள் வளர்ந்து, பற்றையாகவும், மீளக் குடியேறும் வாய்ப்பு குறைவானதாக இருப்பதையும் அவதானித்தனர். 


அவ்வாறு   இருந்தும் சுமார் 2000  குடும்பங்கள் கிராம அதிகாரிகள் மற்றும் பிரதேச சபை ஊடாக மாவட்ட செயலக மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுக்கு மீள்குடியேற விருப்பம் தெரிவித்து விண்ணப்பங்களை சமர்பித்திருந்தனர். அவர்கள் தமது உடைந்த வீடுகளை தகரத்தால் மறைத்துக் கொண்டும், கூரையை தரப்பால் கொண்டு மறைத்துக் கொண்டும் மேலும்  பாடசாலை போன்ற பொது கட்டிடங்களிலும் தற்காலிகமாக தங்கியிருந்து வீடமைப்பு மற்றும் மீள்குடியேற்ற உதவிகளை எதிர்பார்த்திருந்தனர். 


நாட்கள் வாரங்களாகின, வாரங்கள் மாதமாகி அது வருடங்களாகியது. 2010 ஆம் ஆண்டு வீட்டமைக்க விண்ணப்பித்தவர்களுக்கு 2015 வரை ஒரு வீடு கூட வழங்கப் படவில்லை. இதே காலப் பகுதியில் இந்திய வீட்டமைப்பு திட்டத்தின்   கீழ் சுமார் 50000 வீடுகள் வவுனியா,மன்னர், கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் கட்டப்பட்டது. அதே ஒன்று இலங்கை அரசாங்கம்  யாழ்ப்பாண மாவட்டத்தில் 4000 பேருக்கு காணிகளை மாவட்ட செயலகம் ஊடாக பெற்று அதில் வீடுகளை கட்டிக்க கொடுத்து இருந்தது.   இந்த திட்டங்களில் முஸ்லிம்கள் உள்வாங்கப்ப படவில்லை. 


2015  ஆம் ஆண்டு யாழ்ப்பாண சோனகர் நகரை சேர்ந்த நபரொருவர் வீடமைப்பு உதவி கேட்டு உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்த பின்னர் அடுத்த மூன்று வருடங்களில் 225  வீடுகள் கட்ட உதவிகள் வழங்கப் பட்டன.   


இந்நிலையில்  2010 ஆம் ஆண்டு   2000  குடும்பங்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்கள் தொலைந்து விட்டதாக கூறி 2016 ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் வீடமைப்பு உதவிக்கு விண்ணப்பங்கள் மாவட்ட செயலகத்தால் சேகரிக்கப் பட்டது. அந்த பதிவின் கீழ் சுமார் 3000  குடும்பங்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து இருந்தனர்.   அவர்கள் யாருக்கும் இதுவரை வீடுகள் வழங்கப் பட்டதாக தகவல் இல்லை. 


புறக்கணிப்பு 


யாழ்ப்பாண முஸ்லிம்களை மீள் குடியேற்ற அவர்களுக்கு வீடமைப்பு திட்டங்களை வழங்க மாறி மாறி வந்த அரசாங்கமும் மாவட்ட செயலகமும் தவறிவிட்டது என்பது கசப்பான உண்மையாகும்.

கருப்பு ஆக்டொபர்  (BLACK OCTOBER ) 


1990  ஆம் ஆண்டு வடமாகாணத்திலிருந்து 81000 முஸ்லிம்கள்  பாசிச புலிகளால் அநீதியாக வெளியேற்றப்  பட்ட அந்த இனவழிப்பு   நடவடிக்கையை  கண்டித்தும் அம்மக்களுக்கு குறிப்பாக யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு மீள் குடியேற்ற உதவிகள் மீள் கட்டமைப்பு வசதிகள் செய்யப் பட வேண்டுமென்ற கோரிக்கைகளை உள்ளடக்கியதாக இந்த கருப்பு ஆக்டொபர் வருடா வருடம் இடம்பெயர்ந்த சமூகத்தால் நினைவு படுத்தப் படுகின்றது.

புதிய தேசிய மக்க சக்தி அரசாங்கம் 


இந்நிலையில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் வீடமைப்பு தேவை, கல்வி அபிவிருத்தி பொது சொத்துக்கள் பாதுகாப்பு , வேலை வாய்ப்பு போன்ற பிரச்சினைகளை கௌரவ ஜனாதிபதி அனுரா குமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் தீர்க்கும்  என நம்பியவர்களாக பின்வரும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் தேவைகளை முன்வைக்கின்றோம்  .


இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்ட மக்கள் இன்னும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் மற்றும்  புத்தளத்தில் அகதியாக வந்தவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் போன்றவற்றுக்கான தீர்வை புதிய  அரசாங்கம் முன்வைக்கும் என நம்பி பின்வரும் தேவைகளை  அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வருகின்றோம்.

யாழ்ப்பாணத்தில் மீளக் குடியேறியுள்ள நபர்களுக்கு சோனகர் நகருக்கு அண்மையாக 300 வீடுகளை அமைத்தல் அல்லது 300 குடுப்பினங்களுக்கு தேவையான தொடர் மாட்டி குடியிருப்புகளை அமைத்தல். 


புத்தளத்தில் இருந்து யாழ்ப்பாணம் சென்று குடியேற விரும்பும் சுமார் 100  குடும்பங்களுக்கு காணியும் வீடும் அமைத்துக் கொடுத்தல். 


 யாழ் ஒஸ்மானியா கல்லூரிக்கு 15  கம்பியூட்டர்களைக் கொண்ட  பயிற்சி நிலையம் ஒன்றை   அமைத்தல்.


யாழ் ஒஸ்மானியா கல்லூரிக்கு  லைப்ரரி, மண்டப வசதி உட்பட 10  கம்பியூட்டர்களைக் கொண்ட  பயிற்சி நிலையம் போன்றவற்றை கொண்ட கட்டிடம்  ஒன்றை   அமைத்தல்.


புத்தளத்தில் தில்லையடி பாடசாலைக்கும் பத்து வகுப்பறைகளை கொண்ட புதிய கட்டிடம் ஒன்றை அமைத்தலும்  அதில்    15  கம்பியூட்டர்களைக் கொண்ட  பயிற்சி நிலையம் ஒன்றை   அமைத்தல்.


புத்தளத்தில் சுமார் 300 குடும்பங்களுக்கு வீடமைப்பு திட்டம் ஒன்றை நடைமுறைப் படுத்தல்.  


https://www.jaffnamuslim.com/2025/10/npp_30.html

இலங்கையின் முதியோர் தொகை 18% ஆக அதிகரிப்பு!

1 day 16 hours ago

New-Project-334.jpg?resize=750%2C375&ssl

இலங்கையின் முதியோர் தொகை 18% ஆக அதிகரிப்பு!

ஆசிய பிராந்தியத்தில் வேகமாக வளர்ந்து வரும் முதியோர் மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

2012 ஆம் ஆண்டில், இலங்கையின் முதியோர் மக்கள் தொகை மொத்த மக்கள் தொகையில் 12% ஆக இருந்ததாகவும், 2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 18% ஆக அதிகரித்துள்ளதாகவும் ஆலோசகர் சமூக வைத்தியர் நிஷானி உபேசேகர தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் மேலும் உரையாற்றிய அவர், 

2012 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மக்கள் தொகையில் 12% பேர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள். 

2024 மக்கள் தொகை கணக்கெடுப்பில், இது 18% ஆக உயர்ந்துள்ளது.

2040 ஆம் ஆண்டுக்குள், மக்கள் தொகையில் 25% – அதாவது, ஒவ்வொரு நான்கு பேரில் ஒருவர் – முதியவர்களாக இருப்பார்கள் என்று நாங்கள் கணித்துள்ளோம்.

ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இலங்கை அதன் முதியோர் மக்கள்தொகையில் அதிக வளர்ச்சி விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நிலைமை முக்கியமாக பிறக்கும் போது ஆயுட்காலம் அதிகரிப்பதாலும் பிறப்பு விகிதங்கள் குறைவதாலும் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

https://athavannews.com/2025/1451563

பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் !

1 day 17 hours ago

பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் !

By SRI

October 30, 2025

571346790_1310014764501283_1280310826655287925_n.jpg

பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் (WINE) தொடர்பாக கண்டுபிடிப்பாளர் விக்டர் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தி , இதன் ஊடாக ஏற்றுமதி பொருளாதாரத்தில் எவ்வாறான மாற்றத்தை உருவாக்கலாம் என்பது தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், TAATAS நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர் விக்டர் ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று ஆளுநர் செயலகத்தில் நேற்று (29) நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் (WINE) தொடர்பாக ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

தாராளமாக மூலப்பொருளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளமை மற்றும் உற்பத்திச் செலவு மிகக்குறைவாக உள்ளமை ஆகியன காரணமாக உலக சந்தையில் இதற்கான கேள்வி அதிகம் உள்ளமையையும் ஆளுநருக்கு குறிப்பிட்ட கண்டுபிடிப்பாளர் விக்டர், இதன் ஊடாக ஏற்றுமதி பொருளாதாரத்தில் எவ்வாறான மாற்றத்தை உருவாக்கலாம் என்பது தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.

பல மில்லியன் ரூபாக்களை ஈட்டக்கூடிய வாய்ப்புக்களிருந்தும் அதனை உரியமுறையில் பயன்படுத்த தவறியுள்ளமையையும் சுட்டிக்காட்டினார்.

தமது தொழிற்முயற்சியின் விரிவாக்கம் மற்றும் எதிர்காலத்திட்டங்களின் ஊடாக உருவாக்கப்படவுள்ள தொழில்வாய்ப்புக்கள் தொடர்பிலும் சுற்றுச்சூழல் நேயமான இந்த உற்பத்திச் செயற்பாட்டின் அவசியம் தொடர்பாகவும் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

இவ்வாறான முயற்சிகள் காலத்தின் தேவையறிந்த செயற்பாடு என வரவேற்ற ஆளுநர், மாகாண சபையூடான ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

572097284_1310014724501287_2998601111796627541_n.jpg

https://www.battinews.com/2025/10/blog-post_800.html

சமூக ஸ்திரத்தன்மைக்கு போதைப்பொருள் ஒழிப்பு அவசியம்: ஜனாதிபதி

1 day 17 hours ago

சமூக ஸ்திரத்தன்மைக்கு போதைப்பொருள் ஒழிப்பு அவசியம்: ஜனாதிபதி

சமூக ஸ்திரத்தன்மைக்காக போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தோற்கடிக்க வேண்டும் என்றும், அதற்காகத் தானும் அரசாங்கமும் எடுத்துள்ள நடவடிக்கைகள் நிச்சயமாக வெற்றி பெறும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் புதிய திட்டமான ‘நாடே ஒன்றுபட்டு’ தேசிய நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். 

போதைப்பொருள் நாட்டைச் சூழ்ந்துள்ள ஒரு மாயாஜாலப் பேரழிவு என்றும், அதைத் தோற்கடிக்கத் தாம் நடவடிக்கை எடுப்பதாகவும், குழந்தைகள், பொதுச் சமூகம் மற்றும் ஒரு தேசம் என்ற வகையில் முழு நாடும் இந்தப் பேரழிவின் இரையாகி வருவதாகவும் ஜனாதிபதி கூறினார். 

இளம் தலைமுறையினர் போதைப்பொருள் அச்சுறுத்தலின் மிகப்பெரிய இரையாகிவிட்டனர் என்றும், இந்த மாயாஜாலச் சூறாவளி கிராமங்கள் மற்றும் நகரங்களில் இப்போது பரவி வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

"ஒரு குழந்தை பிறக்கும்போது, தாய்க்கும் தந்தைக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தங்கள் கண் முன்னே தங்கள் குழந்தை அழிந்து போவதைப் பார்க்கிறார்கள். தாய் மிகுந்த வேதனைக்குள்ளாகி, சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்படுகிறார். 

நாம் 800 - 900 கிலோ போதைப்பொருளைப் பறிமுதல் செய்கிறோம். நாம் வந்த அனைத்தையும் கைப்பற்றவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அனைத்தையும் கைப்பற்றினால், அது இங்கே வராது. இதனால், அவர்கள் அறிந்திருக்கிறார்கள், கைப்பற்றப்பட்ட அளவு வந்த அளவில் ஒரு சிறு பகுதிதான் என்று. ஆனால், கைது செய்யப்பட்ட அளவைப் பார்த்தால், விநியோகிக்கப்படும் அளவு எவ்வளவு பெரியது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். 

800 கிலோ போதைப்பொருள் ரூபா 1,500 கோடிக்கு விற்கப்படுகிறது. இதனால், இந்த வர்த்தகத்தின் மூலம் பெரிய அளவில் பணம் குவிக்கப்பட்டுள்ளது. இது ஒரே நேரத்தில் பெரும் கறுப்புச் சாம்ராஜ்யங்களை உருவாக்கும் கடத்தலாக மாறியுள்ளது. அவர்களுக்குள் இந்தச் சந்தையைப் பங்கிட்டுக் கொள்ள மோதல்கள் உருவாகியுள்ளன. அண்மைக் காலத்தில் நடந்த துப்பாக்கிச் சூடுகள் அனைத்தும் குழுக்களுக்கு இடையே நடந்த சம்பவங்கள். ஆங்காங்கே துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளன. இவை அனைத்தும் போதைப்பொருளுடன் தொடர்புடையவை. 

எப்படி இவ்வளவு துப்பாக்கிகள், வெடிமருந்துகள், பாதுகாப்பு வசதிகள் உருவாகின? ஒரு நாட்டின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட அரச கட்டமைப்பு உள்ளது. ஆனால், உண்மையில் நடந்தது என்னவென்றால், அவர்களின் நிதி பலத்தால் அரச கட்டமைப்பு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனால், இனியும் இந்த நிலையை மறைத்துக்கொண்டு எதிர்கொள்ள முடியாது. 

அவர்கள் கையில் துப்பாக்கிகள் உலவுகின்றன. அவர்கள் துப்பாக்கி தயாரிப்பாளர்கள் அல்ல. உரிமம் பெற்ற ஆயுதங்களைப் பெற அதிகாரம் இருப்பது அரசுக்குத்தான். அரசுக்கு சொந்தமான துப்பாக்கிகள் அவர்கள் கைக்கு எப்படிச் சென்றன? சில இராணுவ முகாம்களில் இருந்து 73 T56 துப்பாக்கிகள் அவர்கள் கைக்குச் சென்றதாகத் தற்போது தகவல் வந்துள்ளது. அதில் 35 கைது செய்யப்பட்டுள்ளது. 38 அவர்கள் கைகளில் உள்ளன. அவை அரசுக்கு சொந்தமான ஆயுதங்கள். அதேபோல், அதற்கான குண்டுகளையும் நாங்கள் கைப்பற்றினோம். இராணுவத்தின் முக்கிய கேர்னல் ஒருவர் குண்டுகளை வழங்கியுள்ளார். அதற்குப் பதிலாக வங்கியில் பணம் வந்துள்ளது. அரசுக்கு சொந்தமான துப்பாக்கியை ஒரு பொலிஸ் அதிகாரி விற்றுவிட்டுத் தப்பிச் செல்கிறார். துப்பாக்கிகள் விற்கப்படுகின்றன. ஏன் ஆயுதக் குழுக்களின் பணபலம் நமது அரச கட்டமைப்பை விழுங்க முடிந்தது?" 

பொலிஸ், இராணுவம் இந்த போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கப் பெரும் பங்காற்றினாலும், ஒரு சிலரின் நடவடிக்கைகள் காரணமாக கறுப்பு அரசாங்கம் ஒன்று உருவாகி வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார். 

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் சில அதிகாரிகள் பாதாள உலகத் தலைவர்களுக்குப் கடவுச்சீட்டுக்களைத் தயாரித்துக் கொடுத்துள்ளதாகவும், இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக அரசாங்கம் அழிந்து போயுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

அதிகாரபூர்வமான அரச பொறிமுறையைப் போல பலம் வாய்ந்ததாக இல்லாவிட்டாலும், அதற்கு இணையான ஒரு அரச பொறிமுறையை பாதாள உலகம் உருவாக்கியுள்ளது என்று கூறிய ஜனாதிபதி, கறுப்புப் பொறிமுறையை அழிக்க வேண்டும் என்றும் கூறினார். 

"இந்த நாட்டில் இரண்டு அரசாங்கங்கள் இருக்க முடியாது. மக்களின் ஜனநாயக பலத்தால் நிறுவப்பட்ட அரசாங்கம் மட்டுமே இருக்க முடியும். கறுப்பு அரசாங்கம் அழிக்கப்படும். இது இத்துடன் நிற்காது. இது எங்கு வளர்ந்து வருகிறது? இப்போது அரசியல் கட்சிகளுக்குள் வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகிறார்கள். தலைவர்கள் வருகிறார்கள். தனிப் பட்டியல்களைத் தயாரித்துத் தேர்தல்களில் போட்டியிட்டு அது ஒரு அரசியல் பொறிமுறையாக மாறியுள்ளது. ஒரு காலத்தில் இது அரசியலின் பாதுகாப்பாக இருந்தது. இப்போது அது அரசியல் ஆதிக்கம். ஒரு அரசாங்கத்தை அமைக்கும் அளவிற்கு விதைகள் பரவியுள்ளன. இது நீண்ட காலமாக அரசியல் ஆசீர்வாதத்தின் கீழ் நடந்து வருகிறது." 

இந்தச் செயல்களில் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் தலையீடு செய்துள்ளதாகக் கூறிய ஜனாதிபதி, போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கத் தாம் உறுதியாகத் தீர்மானித்துள்ளதாகவும், அது நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற கருத்து சமூகத்தில் உருவாகியுள்ளது என்றும் கூறினார். 

பொலிஸின் சில அதிகாரிகள் இதில் ஈடுபட்டிருந்தாலும், தற்போதைய பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் போதைப்பொருள் ஒழிப்புக்காகக் கடும் முயற்சி எடுப்பதாகக் கூறிய ஜனாதிபதி, பொலிஸ் வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட காலம் இதுவே என்றும் தெரிவித்தார். 

அரச கட்டமைப்பிற்குள் இந்தச் செயல்களில் ஈடுபடுபவர்கள் இருந்தால், உடனடியாக விலக வேண்டும் என்று கூறிய ஜனாதிபதி, யாரும் மறைந்து கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார். 

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களைக் காப்பாற்ற, விளையாட்டு, இசை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு கலாச்சாரம் தேவை என்றும், அதற்கான திட்டம் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் என்றும் கூறிய ஜனாதிபதி, போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை மறுவாழ்வுக்கு உட்படுத்துவது நமது பொறுப்பு என்றும் கூறினார். 

ஏற்கனவே தன்னார்வ மறுவாழ்வு மையங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான குழந்தைகளை அந்த இடங்களுக்குக் கொண்டு வந்து ஒப்படைக்குமாறு பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்தார். 

இதற்காக வரவுசெலவுத் திட்டத்தில் பெரும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், இராணுவம், புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் பொலிஸ் ஆகிய அனைத்தும் இணைந்த ஒரு தேசிய செயல்பாட்டு மையம் அமைக்கப்படும் என்றும், அதன் மூலம் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய யாரும் வெளிநாடுகளுக்குச் செல்லவோ அல்லது மறைந்து தப்பிச் செல்லவோ இடம் இருக்காது என்றும் கூறினார். 

"இது அவர்களுக்குச் சொந்தமான நாடு அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்..." என்று கூறிய ஜனாதிபதி, மதத் தலைவர்களை ஒன்றிணைத்து பல திட்டங்களைச் செயல்படுத்த இருப்பதாகவும், அதற்கு மதத் தலைவர்களின் ஆலோசனையை எதிர்பார்ப்பதாகவும் கூறினார். 

இந்த அபாயம் குறித்துச் சமூகத்திற்குச் செய்தி தெரிவிக்கும் பொறுப்பு ஊடகங்களுக்கு உள்ளது என்றும், பொறுப்பான ஊடகவியலில் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்திய ஜனாதிபதி, போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து நாட்டை விடுவிக்கும் இந்தப் பணிக்கு அனைத்து ஊடக நிறுவனங்களும் ஆதரவு தெரிவிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறினார். 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அரசியல்வாதிகளிடமிருந்து ஆரோபிக்கப்பட்ட அதிகாரம் கிடைத்துள்ளது என்றும், இதன் காரணமாக விசாரணைகள் முடங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

"நமது நாட்டில் தீர்க்கப்படாத ஒவ்வொரு குற்றத்திற்குப் பின்னாலும் அரசியல் பாதுகாப்பு உள்ளது. அது பொலிஸின் திறமையின்மை அல்ல. நான் ஒன்றைச் சொல்கிறேன். அவர்களின் முதல் அதிகாரம், அரசியல் அதிகாரம், இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. பொலிஸ் செய்யும் பணியைப் பற்றி மிகவும் திருப்தி அடைகிறேன். சிலர் பயப்படுகிறார்கள். இன்றும் சில குற்றங்கள் சிறைச்சாலைகளில் இருந்தே இயக்கப்படுகின்றன மேலும் அவர்கள் அதனை நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் நடந்த வெலிகம சம்பவம். சிலர் பயத்தில் இருக்கிறார்கள். சிலர் பணத்திற்காக சிக்கியுள்ளனர். இன்று இலங்கை பொலிஸ் அந்த ஆபத்தை ஏற்று, இந்த நடவடிக்கையைத் தொடங்க கடமைப்பட்டுள்ளது. பொலிஸ் குற்றவாளியின் எதிரியாக மாறுகிறது. மேலும், எதிர்காலத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகப் போகும் சில பொலிஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள்." 

போதைப்பொருள் ஒழிப்புக்குக் கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை பரவிய மக்கள் குரல் தேவை என்றும், அதற்காக ஒரு மக்கள் இயக்கத்தை உருவாக்குவதாகவும் கூறிய ஜனாதிபதி, இந்த அச்சுறுத்தலுக்கு எதிரான மிகவும் சக்திவாய்ந்த குரல் மற்றும் பாதுகாவலன் அதுவே என்றும் கூறினார். 

"நாம் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன், நாடே ஒன்றுபட்டு. இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக, தனிப்பட்ட ஒருவருக்கு எவ்வளவு நம்பிக்கை இருந்தாலும், தனியாக முடியாது. அரசாங்கத்தால் மட்டும் முடியாது. பொலிஸால் மட்டும் முடியாது. அரச கட்டமைப்பால் மட்டும் முடியாது. அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இதுதான் சந்தர்ப்பம். இறுதியாக, போதைக்கு அடிமையானவர்களுக்கும், விற்பவர்களுக்கும், உடனடியாக விலகுங்கள். அதற்கு எதிரான சக்திவாய்ந்த இயக்கம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. நிச்சயமாக இந்த மாயாஜால சூறாவளியை அழிப்போம். இந்த மாயாஜால சூறாவளியில் இருந்து நமது குழந்தைகளையும், சமூகத்தையும் விடுவிப்போம். இந்த மாயாஜால சூறாவளியில் இருந்து தேசத்தைக் காப்பாற்றுவோம். அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைவோம்."

https://adaderanatamil.lk/news/cmhd2egbk01auqplp01fasoid

இலங்கையின் பொருளாதாரத்தில் அடுத்தாண்டு 3.1 வீத வளர்ச்சி!

1 day 17 hours ago

இலங்கையின் பொருளாதாரத்தில் அடுத்தாண்டு 3.1 வீத வளர்ச்சி!

1230948194.jpeg

அடுத்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் 3.1 வீதம்வரை வளர்ச்சியடைய முடியும் என்று சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்ட, சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் தோமஸ் ஹெல்ப்லின் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கை அரசாங்கம் சீர்திருத்த வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்த பின்னணியில், பொருளாதார வளர்ச்சியில் வலுவான மீட்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வளர்ச்சி 5 வீதமாகக் காணப்பட்ட அதேவேளை, இந்த ஆண்டின் முதல் பாதியில் வளர்ச்சி 4.8 வீதமாக இருந்தது. தற்போது அந்த வலுவான மீட்சியிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு சாதாரண நிலைக்குத் திரும்புதல் மாத்திரமே நிகழ்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://newuthayan.com/article/இலங்கையின்_பொருளாதாரத்தில்_அடுத்தாண்டு_3.1_வீத_வளர்ச்சி!

உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுடன் சிறீதரன் எம்.பி கலந்துரையாடல்!

1 day 17 hours ago

உள்ளூராட்சி மன்றங்களின்  தலைவர்களுடன் சிறீதரன் எம்.பி கலந்துரையாடல்!

1435244292.jpg

இலங்கைத் தமிழரசுக் கட்சியின்நாடாளுமன்றக் குழுத் தலைவரும், யாழ். தேர்தல் மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களை நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினரின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தில் மாலை சந்தித்து கலந்துரையாடினார், 

நாடாளுமன்றில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்திற்கான பிரேரணைகள், விவாதங்களின் போது உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள், விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.   

தவிசாளர்களினால் ஆரோக்கியமான கருத்துக்களை தெரிவித்ததுடன் ஒவ்வொரு விடயங்களையும் தனித்தனியாக ஆராய்ந்து உரிய விடயங்களை கேட்டறிந்து கொண்டதுடன் எதிர்கால நடவடிக்கைக்கான விடயங்கள் தொடர்பாகவும் ஒவ்வொரு பிரதேச சபைகளின் தலைவர்களிடமிருந்தும் விபரங்களை பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மிகவும் பயனுள்ளதாகவும், ஆரோக்கியமான கலந்துரையாடல்களாகவும் அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டார். 

எதிர்காலத்தில் இவ்வாறான சந்திப்புக்கள், கலந்துரையாடல்களை மேற்கொண்டு உள்ளூராட்சி மன்ற செயற்பாடுகளையும் எமது செயற்பாடுகளையும் வெற்றிகரமாக முன்னெடுக்க உதவியாக இது அமையும், என சிறீதரன் எம்.பி தெரிவித்தார்.

https://newuthayan.com/article/உள்ளூராட்சி_மன்றங்களின்%C2%A0_தலைவர்களுடன்_சிறீதரன்_எம்.பி_கலந்துரையாடல்!%C2%A0

வல்வெட்டித்துறையில் குண்டு மீட்கப்பட்ட சம்பவம் – இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் கைது

1 day 17 hours ago

வல்வெட்டித்துறையில் குண்டு மீட்கப்பட்ட சம்பவம் – இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் கைது

adminOctober 29, 2025

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் விடுதலைப்புலிகளின்  வெடிகுண்டு என சந்தேகிக்கப்படும் குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேகநபர்களையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்

வல்வெட்டித்துறை பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் , வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் வல்வெட்டித்துறை  காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் ,குறித்த வெடிகுண்டினை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவரை கைது செய்தவற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அந்நிலையில் சந்தேகநபர்கள் மூவரும் , கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பி சென்ற நிலையில் ,  கடந்த 15 நாட்களுக்கு முன்னர் , இந்தியாவில் தங்கி நிற்பதற்கான ஆவணங்கள் , விசா என்பவை இல்லாத நிலையில் ,இந்திய காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தினர்.

அந்நிலையில் குறித்த  மூவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய வேளை மூவரையும் விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://globaltamilnews.net/2025/222073/

அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்

1 day 20 hours ago

Picsart_25-10-30_08-46-33-152-780x927.jpg

கலாபூஷணம் பரீட் இக்பால்

யாழ் மண்ணில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த நாம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்று பிரிந்து,   சிதறி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாழ் மண்ணின் முஸ்லிம் மைந்தர்களாகிய நாம் அம்மண்ணை விட்டு விரட்டியடிக்கப்பட்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதியன்று 35 ஆண்டுகளாகின்றன.

35 ஆண்டுகள் கடந்த நிலையிலும்கூட அந்த துரதிர்ஷ்டமான கோரச் சம்பவம் யாழ் முஸ்லிம் மக்களின் மனதில் அழியாத வடுக்களாக என்றுமே நிலைத்திருக்கின்றன. சொந்த வீட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு எதிர்காலமே சூனியமான நிலையில் வெறுங்கைகளோடு பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட கோரச்சம்பவத்தை நினைத்துப் பார்த்தால் எம் உள்ளம் கொதிக்கிறது. உடல் சிலிர்த்து கண்கள் நனைகின்றன.

எனினும், அத்துரதிர்ஷ்ட நினைவுகளை கொஞ்சம் மீட்டிப் பார்க்கிறோம்.

“யாழ்ப்பாணம் என்று சொன்னால் தேன்சுவை ஊறும்” என்ற இனிய பாடல் வரிகளே யாழ் மண்ணின் இனிமைக்கு சான்றாகும்

1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி அதுதான் எம் வாழ்வின் துரதிர்ஷ்ட நாள். இப்படியானதொரு கோரச்சம்பவத்தை எதிர்பார்க்காத எம் முஸ்லிம் மக்கள் அனைவரும் தம் அன்றாட வேலைகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சுமார் காலை 8 மணியளவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கட்டளைப்படி 1000 இற்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய புலிகள் யாழ்ப்பாணம் சோனகத் தெருவை சுற்றி வளைத்தனர்.

முஸ்லிம் மக்கள் செறிவாக வாழும் பகுதிதான் சோனகத் தெரு. புலிகளின் திட்டத்தை அறியாத அப்பாவி மக்களாகிய நாம் அனைவரும் அதிகூடிய புலிகளின் வருகையைப் பார்த்துத் திகைத்தோம். சோனகத் தெருவை சுற்றியிருந்த அயல் கிராமங்களுக்கு வியாபாரத்திற்காக சென்ற எம் முஸ்லிம் சகோதரர்களை அவசரமாக சோனகத் தெருவிற்கு செல்லுமாறு புலிகள் அக்கிராமங்களுக்குச் சென்று ஒலிபெருக்கியில் அறிவிப்பு விடுத்தார்கள். வியாபாரத்திற்கு சென்ற எம் சகோதரர்கள் நிகழவிருக்கும் விபரீதம் தெரியாமல் உடனே சோனகத் தெருவிற்கு விரைந்தார்கள்.

புலி உறுப்பினர்கள் வாகனங்களில் ஏறிக்கொண்டு ஒலிபெருக்கியை கையில் வைத்துக்கொண்டு வீதி வீதியாக சென்று அழைப்பு விடுத்தார்கள். “முஸ்லிம்களே! ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் உடனடியாக ஒருவர் ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்திற்கு இப்போதே வர வேண்டும்” என்று கட்டளையிட்டுச் சென்றனர். நாம் அனைவரும் ஜின்னா மைதானத்திற்கு விரைந்து ஓடினோம். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என ஜின்னா மைதானம் நிரம்பி வழிந்தது. எம்மை ஆயிரக்கணக்கான புலிகள் ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தனர். நாம் அனைவரும் என்ன ஏதென்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்துக் கொண்டிருந்தோம். அப்போது இளம்பருதி என்ற புலி உறுப்பினர் ஒருவன் மைதானத்தின் நடுவே மோட்டார் சைக்கிள் ஒன்றின் மேல் ஏறி நின்று கொண்டு கையில் ஒலிபெருக்கியுடன் பேசத் தொடங்கினான். “முஸ்லிம் மக்களே! உங்களுக்கொரு துயரச் செய்தி. நீங்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தை விட்டு உடனடியாக இன்னும் 2 மணித்தியாலங்களில் வெளியேற வேண்டும். இது எம் தலைவரின் உத்தரவு. தமிழீழத்தில் உழைத்தவை எல்லாம் தமிழீழத்திற்கே சொந்தம். உங்கள் சொத்துக்கள் அனைத்தையும் இங்கே விட்டு விட்டு நீங்கள் உடனே வெளியேறுங்கள்” என்று “இளம்பருதி” கூறியதுதான் தாமதம் எமக்கு தலைசுற்றி உலகமே ஒருகணம் இருண்டு விட்டது. இது கனவா? இல்லை நனவா? என்று உணர முடியாமல் தடுமாறி விட்டோம். அடுத்தது என்ன செய்வதென்று புரியாமல் எதிர்காலமே எம் கண்களுக்கு சூனியமாக தென்பட்டது. ஜின்னா மைதானமே கதிகலங்கியது. எம் பெண்கள், ஆண்கள் அனைவரினதும் கண்களிலிருந்தும் கண்ணீர் மாலை மாலையாக ஓடத் தொடங்கியது. செய்வதறியாது அனைவரும் திண்டாடினோம். எம் சகோதரர்கள் சிலர் புலிகளிடம் நியாயம் கேட்டார்கள். வாதாடினார்கள். “எம் பிறந்த மண்ணை விட்டு நாம் ஏன் போக வேண்டும்? இது எங்களுடைய சொந்த இடம்.நாங்கள் போக மாட்டோம்” என கூச்சலிட்டார்கள். பெண்கள் கதறியழுது கண்ணீர் விட்டு கெஞ்சினார்கள்.

புலிகள் மனமிரங்கவில்லை. “இது எங்கள் தலைவரின் உத்தரவு. நீங்கள் அனைவரும் வெளியேறித்தான் ஆக வேண்டும். ஊரை விட்டு நீங்கள் செல்லாவிட்டால் அநியாயமாக அனைவரும் சுட்டுக் கொல்லப்படுவீர்கள்” என்று கூறிக்கொண்டு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து புலி உறுப்பினர்கள் அனைவரும் வானத்தை நோக்கி வேட்டுக்களை தீர்த்தனர். ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானமே வெடிச் சப்தத்தினால் அதிர்ந்தது. நாம் அனைவரும் பயந்து நடுநடுங்கி விட்டோம். வீட்டில் இருந்தவர்களும் ஜின்னா மைதான துப்பாக்கி வேட்டுச் சப்தத்தை கேட்டு எம்மவர்களுக்கு என்ன நேர்ந்ததோ என தெரியாது அல்லோல கல்லோலப்பட்டு ஜின்னா மைதானத்தை நோக்கி நடுநடுங்கி விரைந்தனர். ஜின்னா மைதானம் மேலும் நிறைந்து வழிந்தது. இனி இங்கிருந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று நன்றாக புரிந்து விட்டது. மனைவி, மக்கள், குழந்தைகளை உயிருடன் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் அனைவரின் உள்ளங்களிலும் நிலைத்திருந்தன. பயந்து, நடுங்கி, அழுது வீங்கிய முகங்களுடன் இனி என்ன நடக்கப் போகிறது என்ற எண்ணத்துடன் ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்தை விட்டு அனைவரும் அவரவர் வீடுகளுக்கு சென்றோம். எமக்கு நடந்த அநியாயத்தைப்போல இனி யாருக்குமே நடக்கக் கூடாது. சொந்த ஊரை விட்டு, சொந்த வீட்டை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு எங்கே போவது? என்ன செய்வது? என்று தெரியாமல் நடைபிணமாக ஊரை விட்டு வெளியேறுவது என்றால் சும்மாவா?

ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்திலிருந்து வீடுகளுக்கு சென்றதுதான் தாமதம் புலி உறுப்பினர்கள் வீடுகளினுள் புகுந்து எம் சொத்துக்களை சூறையாடத் தொடங்கினார்கள். 2 மணித்தியாலங்களில் வெளியேறுங்கள் என்று மைதானத்தில் வைத்துக் கூறிவிட்டு வீடுகளினுள் புகுந்து உடனே வெளியேறும்படி அவசரப்படுத்தினார்கள். இனி இங்கிருந்து பயனில்லை, மீறி இருந்தால் உயிர்தான் போகும், எங்கேயாவது போய் உயிரோடாவது இருப்போம், பிள்ளைகளைக் காப்பாற்றுவோம் என்ற நோக்கில் நாம் அனைவரும் பிறந்த மண்ணை விட்டு பிரிய ஆயத்தமானோம். கண்ணில் நீருடனும் நெஞ்சில் கனச் சுமைகளுடனும் நடைபிணமாக வெளியேறினோம்.

பெண்கள் சிலர் தமது பணம், நகைகளை மறைத்துக்கொண்டு ஊரை விட்டு வெளியேற முனைந்தனர். பெண் புலி உறுப்பினர்கள் பெண்களையும் ஆண் புலி உறுப்பினர்கள் ஆண்களையும் உடல் பரிசோதனை செய்து அவர்களின் உடமைகளை பறித்தெடுத்தனர். பெண்களின் நகைகளை கழற்றினார்கள். காதணிகளைக்கூட விடவில்லை. நகைகளுடன் காணப்பட்ட பெண்கள் ஒரு மஞ்சாடி நகை கூட உடலில் இல்லாத நிலையைப் பார்க்கும்போது மிகுந்த கவலை ஏற்பட்டது.

பிறந்து ஓரிரு நாட்கள் கூட கடக்காத பச்சிளம் பாலகர்களை கையில் ஏந்திக்கொண்டு கண்ணீரோடு நின்ற எம் சகோதரிகளையும் கட்டிலோடு படுக்கையில் கிடந்த வயதான நோயாளர்களை கையில் ஏந்தி நின்ற எம் இளைஞர் சமூகமும் தத்தளித்து நின்ற அந்த அவலக் காட்சி எம் மனக்கண் முன் தோன்றி மறைகின்றது. அந்த கசப்பான அனுபவத்தை மறக்க முயன்றாலும் அன்றைய நினைவுகள் எம் மனதில் ஒன்றன் பின் ஒன்றாக நிழற்படங்களாக ஓடிக்கொண்டே இருக்கின்றது……

ஈவிரக்கமற்ற விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் எண்ணத்தில் இக்காட்சிகள் எவ்வாறு தோன்றினவோ தெரியவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் பேசும் தமிழே எங்களின் தாய்மொழியும்கூட. எங்களுக்கு இந்தக் கதியா? சிறுகுழந்தைகளின் கையில், கழுத்தில், காதில் இருந்த நகையைக்கூட பிடுங்கி எடுத்துக் கொண்டனர். கழற்ற முடியாத நகைகளை வெட்டி எடுத்தனர். ஆண்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கினார்கள். செலவுக்குப் பணம் வேண்டுமே என கெஞ்ச, ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருநூறு ரூபா மட்டுமே கொண்டு செல்ல அனுமதித்தனர். இப்படியான ஓர் அவலநிலை இனி இந்த நாட்டில் யாருக்குமே வரக்கூடாது. சொந்த ஊரில் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பெருமிதமாக வாழ்ந்துகொண்டிருந்த எம்மை வெளியூர்களில் அகதி எனும் பட்டத்தோடு கூனிக்குறுகி நாலாபுறமும் சிதறி வாழ வைத்துவிட்டார்கள் இந்த தமிழீழ விடுதலைப் புலிகள்.

வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கும் தமிழ் மக்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு புலிகள் மாத்திரமே காரணம். முஸ்லிம்களை வெளியேற்றும்போது தமிழ் மக்களின் முக்கியமானவர்கள், இந்து சமய குருக்கள், கிறிஸ்தவ பாதிரிமார்கள் முஸ்லிம்களின் வெளியேற்றத்தினை தடுத்து நிறுத்த விடுதலைப் புலிகளிடம் உடனடி அவசரப் பேச்சுவார்த்தைகளை நடாத்தியும்கூட அவை தோல்வியிலேயே முடிவடைந்தன.

2002 ஆம் ஆண்டு வட்டக்கச்சியில் நடந்த புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் பங்குபற்றிய மதியுரைஞரான அன்டன் பாலசிங்கம் முஸ்லிம்களின் வெளியேற்றம் ஒரு துன்பியல் சம்பவம் என்று சாதாரணமாக கூறி இதுதொடர்பில் முஸ்லிம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

காலம் தாழ்த்தியாவது வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியமை தவறு என உணர்ந்தனர் புலிகள். இது எமக்கு ஓரளவு ஆறுதல் அளித்தாலும் பலவந்த வெளியேற்றத்தை நினைத்ததும் உள்ளங்கள் கொதித்தன.

முஸ்லிம் மக்களை மீளக் குடியமர்த்த காத்திரமான, அர்த்தபுஷ்டியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
35 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் முஸ்லிம்களாகிய நாங்கள் உற்றார், உறவினர், நண்பர்கள் என்று எவ்வாறு ஒன்றாக இருந்தோமோ அந்நிலைமை ஏற்பட வேண்டும்.

தற்போது வடக்கில் முஸ்லிம்கள் தன்மானத்துடனும் சுயமரியாதையுடனும் பாதுகாப்புடனும் எமது சமய, கலாசாரத்துடனும் வாழ நல்ல சூழல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் காத்திரமான, அர்த்தபுஷ்டியான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுகிறோம்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசியல் பேதமின்றி ஒற்றுமையுடன் செயற்பட்டு எமது யாழ் முஸ்லிம்களுக்கு நஷ்ட ஈட்டுடன் கூடிய மீள்குடியேற்ற திட்டத்தில் கூடிய கவனம் எடுக்குமாறு வேண்டுகிறோம்.

யாழ் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மீள்குடியேற்றம் நிகழ அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம். ஆமீன்…!!
கலாபூஷணம் பரீட் இக்பால்-


யாழ்ப்பாணம்.

https://madawalaenews.com/30874.html

சீனாவின் அடுத்த 5 வருடகால வளர்ச்சி இலங்கையின் சுபீட்சத்துக்கான கதவுகளைத் திறக்கும் - இலங்கைக்கான சீனத் தூதுவர்

2 days 6 hours ago

29 Oct, 2025 | 06:48 PM

image

(நா.தனுஜா)

சீனாவின் நீண்டகால ஒத்துழைப்புப் பங்காளி என்ற ரீதியில், அடுத்த 5 வருடகாலத்தில் சீனா அடையவிருக்கும் வளர்ச்சியானது இலங்கையின் அபிவிருத்திக்கும், சுபீட்சத்துக்கும் அவசியமான வாய்ப்புக்களை வழங்கும் என இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

15ஆவது தடவையாக நடைமுறைப்படுத்தப்படும் ஐந்தாட்டுத் திட்ட அமுலாக்கத்தை அடுத்து 'புத்தாக்கம் பகிரப்பட்ட அபிவிருத்திக்கு வாய்ப்பளிக்கிறது' எனும் தலைப்பில் செவ்வாய்க்கிழமை (28) கொழும்பிலுள்ள மரினோ ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகையிலேயே சீனத்தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

1949ஆம் ஆண்டு  மக்கள் சீனக்குடியரசு ஸ்தாபிக்கப்பட்ட வேளையில், தனியொரு கார், விமானம், கனரக வாகனத்தைக் கூட சீனாவினால் உற்பத்தி செய்யமுடியவில்லை. அதனைத்தொடர்ந்து 1953 ஆம் ஆண்டு முதன்முதலாக ஐந்தாண்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது சீனாவினால் வடிவமைக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்ட 14 திட்டங்கள் இப்போதும் அமுலில் உள்ளன. அதன்மூலம் விவசாய நாடாகத் திகழ்ந்த சீனா உலகளாவிய ரீதியில் பாரிய கைத்தொழில் உற்பத்தியாளராகவும், பாரிய வர்த்தக நாடாகவும், மிக உயர்ந்தளவு வெளிநாட்டுக்கையிருப்பை வைத்திருக்கும் நாடாகவும், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகும் நிலைமாற்றமடைந்தது. அதுமாத்திரமன்றி உலகளாவிய ரீதியில் மிக அரிதாகவே எட்டப்பட்டிருக்கும் அடைவுகளான தொடர் பொருளாதார வளர்ச்சி மற்றும் நீண்டகால சமூக ஸ்திரத்தன்மை ஆகிய இரண்டையும் சீனா அடைந்துள்ளது.

சீனப் பொருளாதாரமானது வலுவான அடித்தளம், பல்வகை வாய்ப்புக்கள், மீண்டெழும் தன்மை மற்றும் ஆழமான இயலுமை என்பவற்றைக் கொண்டமைந்திருக்கின்றது. அத்தோடு பல்வேறு உள்ளக மற்றும் வெளியக அச்சுறுத்தல்களையும், சவால்களையும் கையாள்வதற்கான தகைமையும், தன்னம்பிக்கையும் சீனாவிடம் உள்ளன.

சீனாவின் நீண்டகால ஒத்துழைப்புப் பங்காளி என்ற ரீதியில், அடுத்த 5 வருடகாலத்தில் சீன அடையவிருக்கும் வளர்ச்சியானது இலங்கையின் அபிவிருத்திக்கும், சுபீட்சத்துக்கும் அவசியமான வாய்ப்புக்களை வழங்கும். இவ்வருடத்தின் தொடக்கத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சீனாவுக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது இருநாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் பரஸ்பர அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்புசார் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. அதேபோன்று இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரதமர் ஹரினி அமரசூரிய சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் எமது பரஸ்பர அபிவிருத்தித்திட்டங்கள்சார் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதை முன்னிறுத்தி இலங்கையுடன் நெருக்கமாகப் பணியாற்றத் தயாராக இருக்கின்றோம் என்றார். 

download.jpg

https://www.virakesari.lk/article/229006

இந்திய விசா தொடர்பான விசேட அறிவிப்பு

2 days 6 hours ago

Oct 29, 2025 - 05:20 PM -

இந்திய விசா தொடர்பான விசேட அறிவிப்பு

எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி முதல் இந்தியாவுக்கான விசா, கடவுச்சீட்டு மற்றும் அனைத்து தூதரக சேவைகளும் நேரடியாக கையாளப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. 

இதன்படி இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், கண்டி உதவி உயர்ஸ்தானிகராலயம் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள துணைத் தூதரகம் ஆகியவற்றினால் குறித்த சேவைகள் நேரடியாக கையாளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், விசா தொடர்பான விடயங்களை தற்போது கையாளும் சேவை வழங்குநர் எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை மட்டுமே இயங்கும் எனக் குறிப்பிட்டுள்ளது. 

இதன்படி, அடுத்த திங்கட்கிழமை முதல் அனைத்து விசா, கடவுச்சீட்டு மற்றும் தூதரக தொடர்பான சேவைகளும் உயர்ஸ்தானிகராலயத்தால் நேரடியாகக் கையாளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmhbxpguf01aeqplprg899ifh

கூட்டாட்சி முறைமை தொடர்பில் தமிழ்த்தரப்புக்களுடன் பேசத்தயார் - ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் கூறியதாக சுவிஸ் தூதுவர் சுமந்திரனிடம் தெரிவிப்பு

2 days 6 hours ago

29 Oct, 2025 | 05:25 PM

image

(நா.தனுஜா)

இலங்கையில் கூட்டாட்சி முறைமையை (பெடரல்) அறிமுகப்படுத்துவது குறித்து தமிழ்க்கட்சிகளுடன் பேசுவதற்குத் தயாராக இருப்பதாக அண்மையில் சுவிற்ஸர்லாந்தில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த செயலமர்வில் கலந்துகொண்ட ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் கூறியதாக இலங்கைக்கான சுவிற்ஸர்லாந்து தூதுவர் சிறி வோல்ற் சுமந்திரனிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கை - சுவிற்ஸர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்துடன் கூட்டிணைந்து சுவிற்ஸர்லாந்து அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அந்நாட்டின் கூட்டாட்சி அரசியல் முறைமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு வலுவாக்கம் என்பன பற்றி இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்குத் தெளிவூட்டும் வகையிலான செயலமர்வொன்று கடந்த செப்டெம்பர் மாதம் 14 - 21 ஆம் திகதி வரை சுவிற்ஸர்லாந்தில் நடைபெற்றது.

அச்செயலமர்வில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, பிரதியமைச்சர் முனீர் முளப்பர், பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளருமான நிஹால் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம ஹெட்டியராச்சி, நிலாந்தி கொட்டஹச்சி, சமன்மலி குணசிங்க ஆகியோரும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவலவும், இல்ஙகைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கமும், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தலதா அத்துகோரளவும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரனும், மக்கள் விடுதலை முன்னிணியின் உறுப்பினர் டபிள்யூ.ரி.பத்மா மஞ்சுளவும், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருக்கான ஒருங்கிணைப்பு செயலாளருமான கபிலன் சுந்தரமூர்த்தியும் கலந்துகொண்டனர்.

இச்செயலமர்வின்போது சுவிற்ஸர்லாந்தின் அரசியல் முறைமை மற்றும் இருதரப்பு உறவுகள், சுவிற்ஸர்லாந்தின் கூட்டாட்சி (பெடரல்) முறைமையை ஆழமாகப் புரிந்துகொள்ளல் ஆகிய தலைப்புக்களில் இலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விரிவான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டதுடன் இதனுடன் தொடர்புடைய முக்கிய கட்டமைப்புக்களுக்கான கள விஜயங்கள் மற்றும் உயர்மட்ட சந்திப்புக்கள் என்பனவும் இடம்பெற்றன.

அதேவேளை இச்செயலமர்வின் ஓரங்கமாக நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துரைத்த தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நிஹால் அபேசிங்க, 2015 - 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவு மீளக்கொண்டுவரப்படும் எனவும், அதில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் என அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை வாசித்து ஆராயும் பணிகள் முடிவுறும் தருவாயில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இச்செயலமர்வு தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் இலங்கைக்கான சுவிற்ஸர்லாந்து தூதுவர் சிறி வோல்ற்றின் அழைப்பின்பேரில் புதன்கிழமை (29) கொழும்பிலுள்ள சுவிற்ஸர்லாந்து தூதரகத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுடன் நடைபெற்ற சந்திப்பின்போது மேற்படி செயலமர்வு குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அதன்படி இலங்கையில் கூட்டாட்சி முறைமையை (பெடரல்) அறிமுகப்படுத்துவது குறித்து தமிழ்க்கட்சிகளுடன் பேசுவதற்குத் தயாராக இருப்பதாக செயலமர்வில் கலந்துகொண்ட ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் கூறியதாக தூதுவர் சிறி வோல்ற் சுமந்திரனிடம் தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த சுமந்திரன், அரசியல் தீர்வு குறித்துப் பேசுவதற்கு நேரம் ஒதுக்கித்தருமாறு தாம் ஜனாதிபதியிடம் கோரியுள்ள போதிலும், அதற்கு இன்னமும் பதில் கிட்டவில்லை எனச் சுட்டிக்காட்டினார். இருப்பினும் இதுகுறித்து சுவிற்ஸலர்லாந்தில் நடாத்தப்பட்ட செயலமர்வில் கலந்துகொண்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுடன் பேசுவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

https://www.virakesari.lk/article/228993

Checked
Fri, 10/31/2025 - 23:27
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr