ஊர்ப்புதினம்

எழுத்தாளர் தீபச்செல்வனிடம் பயங்கரவாத விசாரணை பிரிவினர் விசாரணை

1 week 1 day ago
11 APR, 2024 | 03:53 PM
image
 

எழுத்தாளர் தீபச்செல்வனை பயங்கரவாத விசாரணை பிரிவினர்  இன்று விசாரணைக்குஉட்படுத்தியுள்ளனர்.

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதனின் நாவல் வெளியீட்டு நிகழ்வை நடாத்தியமைக்காகவே இவ்வாறு விசாரணை இடம்பெற்றது. புத்தகம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்கும் நோக்கில் எழுதப்பட்டதா என்றும் விசாரணையின் போது கேட்கப்பட்டது. இதேவேளை குறித்த புத்தகத்தின் வெளியீட்டு விழாவை நீங்கள் ஏன் நடத்தீனர்கள் என்று கேட்டார்கள்.

neenthikadantha.jpg

கிளிநொச்சியின் மூத்த எழுத்தளார் நா. யோகேந்திரநாதனை மதிப்பளிப்பு செய்யும் நோக்கிலேயே வெளியீட்டு விழாவை நடாத்தியதாக கூறினேன். இன்று காலை 11மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட விசாரணை சுமார் இரண்டறை மணிநேரத்திற்கும் மேலாக இடம்பெற்றதுஎன தீபச்செல்வன் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/180988

சீனாவுடன் இணைந்து இலங்கை ஆய்வகம் ஒன்றை நிறுவுவதற்கு தீர்மானம்

1 week 1 day ago
china-sri-lanka-flag-300x200.jpg

பசுமை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்களை பிரபலப்படுத்துதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டு சீனாவுடன் இணைந்து இலங்கை, ஆய்வகம் ஒன்றை நிறுவுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, கிருமிநாசினி பாவனையை குறைத்தல், தேயிலை தோட்டத்திற்கான உயிரியல் கட்டுப்பாட்டு தொழில்நுட்பம், தேயிலை கிருமிநாசினி எச்சங்களை இலக்காகக் கொண்ட இடர் கண்காணிப்பு ஆகியவற்றைக் கொண்டு அந்த ஆய்வகம் நிறுவப்படவுள்ளதாக சீன ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த முயற்சிகளின் மூலம், தேயிலை பயிர்ச்செய்கையில் சிறந்த விளைச்சளைப் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

https://thinakkural.lk/article/298791

ஸ்கேன் இயந்திரங்களை வழங்கியது ஜப்பான்!

1 week 1 day ago
japan-sri-lanka-flag-300x200.jpg

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்திற்கு 8.4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உயர் தொழில்நுட்ப ஸ்கேன் இயந்திரங்களை ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ளது.

வெளிநாட்டவர்கள் மூலமாக இலங்கையில் பரவும் வைரஸ் மற்றும் தொற்றுநோய்கள் போன்ற பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் நிலைமைகளை கண்காணிப்பதற்காகவே இந்த ஸ்கேன் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் MIZUKOSHI Hideaki துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் இவற்றை கையளித்துள்ளார்.

இதனை தவிர, புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான சர்வதேச அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், முழு உடல் ஸ்கேனர்கள், வெளிநாட்டு கடவுச்சீட்டு ஸ்கேனர்கள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன், கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் 150 அலகுகளைக் கொண்ட மலசலகூட அமைப்பும் நிறுவப்படவுள்ளது.

https://thinakkural.lk/article/298825

தமிழ் மக்களிற்கான உங்கள் தீர்வுகள் என்ன? - ஜனாதிபதி வேட்பாளர்களிற்கு விக்னேஸ்வரன் வேண்டுகோள்

1 week 2 days ago
தமிழ் மக்களிற்கான உங்கள் தீர்வுகள் என்ன ? வெளிநாட்டு இராஜதந்திரிகள் முன்னிலையில் எழுத்தில் தெரிவியுங்கள் - பெரும்பான்மையின ஜனாதிபதி வேட்பாளர்களிற்கு விக்னேஸ்வரன் வேண்டுகோள்

Published By: RAJEEBAN   11 APR, 2024 | 12:04 PM

image
 

பெரும்பான்மையினத்தை சேர்ந்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிற்கான தங்களின் தீர்வுகளை வெளிநாட்டு இராஜதந்திரிகள் முன்னிலையில் வெளிப்படுத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமிழ் மக்களின் ஆதரவை பெறவிரும்பினால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிற்கான தங்களின் தீர்வுகளை வெளிநாட்டு இராஜதந்திரிகள் முன்னிலையில் வெளிப்படுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மையினத்தை சேர்ந்த வேட்பாளர்கள் தமிழ் மக்களின் ஆதரவை பெறவிரும்பினால் தங்களிடம்  தமிழ் மக்களின் பிரச்சினைகளிற்கு உள்ள தீர்வு என்னவென்பதை தெரிவிக்கவேண்டும் என வி;க்னேஸ்வரன் மோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார்.

தாங்;கள் ஆட்சிக்கு வந்ததும் தமிழ் மக்களின் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு என்ன செய்வார்கள் என்பதை தெரிவிக்கின்ற துணிவு எவருக்காவது இருந்தால் நாங்கள் அந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது குறித்து சிந்திப்போம் என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எனினும் அவர்கள் மேடையில் எதனையாவது தெரிவித்துவிட்டு பின்னர் அந்த வாக்குறுதியை கைவிடலாம் என்பதால் அவர்கள் தங்கள் வாக்குறுதிகளை எழுத்துமூலம் தெரிவிக்கவேண்டும் அமெரிக்க பிரிட்டன் போன்ற நாடுகளின் வெளிநாட்டு இராஜதந்திரிகள் முன்னிலையில் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை எழுத்துமூலம்தரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்கள் பல வாக்குறுதிகளை கடந்தகாலங்களில் வழங்கியிருந்த போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளிற்கு அவர்கள் எவரும் முற்போக்கான தீர்வை முன்வைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ள விக்னேஸ்வரன் 2000 ம் ஆண்டு அரசமைப்பு மாற்றங்கள் ஊடாக தீர்வை முன்வைப்பதற்கு அவ்வேளை ஜனாதிபதியாக பதவிவகித்த சந்திரிகா குமாரதுங்க  மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டியுள்ளார்.

அவர்கள் அதனை செய்வோம் இதனை செய்வோம் என தெரிவிக்கின்றார்கள் ஆனால் இறுதியில் ஒன்றும் செய்யமாட்;டார்கள் என குறிப்பிட்டுள்ள விக்னேஸ்வரன் பெரும்பான்மையினத்தை சேர்ந்த ஒரு தலைவர் எதனையாவது வழங்க முயற்சித்தால் ஏனையவர்கள் அதற்கு எதிராக செயற்படுவார்கள் அதனை சீர் குலைப்பதற்கு அவர்கள் அனைத்தையும் செய்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அதிகமாக எதனையும் கேட்கவில்லை தற்போதும் யாராவது அனுராதபுரத்தை கடந்து வவுனியா சென்றால் தமிழில் பேசுவார்கள் அவர்களே உண்மையான தமிழர்கள் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் நாங்கள் தமிழ்பேசும் பகுதிகளை அங்கீகரிக்குமாறே கேட்டுக்கொள்கின்றோம் இதன் மூலம் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/180971

நெடுந்தீவின் சுற்றுலாத்துறையை முன்னேற்ற விசேட நிதி - அமைச்சர் டக்ளஸ்

1 week 2 days ago
11 APR, 2024 | 01:12 PM
image
 

நெடுந்தீவு பிரதேசத்தில் சுற்றுலாத்துறையை விருத்தி செய்தல் மற்றும் பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளன.

நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் புதன்கிழமை  (10) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே குறித்த விடயங்கள் தொடர்பாக பேசப்பட்டன. 

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.

அதேபோன்று பிரதேசத்தின் முன்னேற்றத்துக்கு அத்தியாவசியமான கடல் போக்குவரத்து, வீதிப் போக்குவரத்து, விவசாயம், கடற்றொழில், கால்நடை அபிவிருத்தி, நீர்பாசனம் உட்பட பல்வேறு விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டன.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நெடுந்தீவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நிலைமைகளையும் மக்களின் எதிர்பார்ப்புக்களையும் அறிந்துகொண்டதாகவும், ஜனாதிபதியுடன் கலந்துரையாடி நெடுந்தீவுக்கான விசேட நிதி ஒதுக்கீட்டினை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் கூறியுள்ளார். 

1__4_.jpeg

1__1_.jpeg

1__5_.jpeg

1__6_.jpeg

1__2_.jpeg

1__3_.jpeg

https://www.virakesari.lk/article/180967

புதுவருட காலத்தில் போலி நோட்டுகளின் புழக்கம் அதிகரிப்பு!

1 week 2 days ago

Published By: DIGITAL DESK 7

11 APR, 2024 | 12:29 PM
image
 

இந்த வருடத்தில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், பணத்தை கையாள்வதில் கவனமாக இருக்குமாறும் பொலிஸாரினால்  பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும், நாட்டின்  பல பகுதிகளிலும் போலி நாணயத்தாள்களை  மாற்றுவதற்கு சிலர். முற்படலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்..

மேலும் பணக் கையாள்கையின்  போது நாணயத்தாள்களில் மாற்றம் இருந்தால் பொலிஸாருக்கு  தகவல் தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/180970

மத்திய வங்கி பிணை முறிமோசடியுடன் தொடர்புபட்டவர்களை உள்வாங்காமல் உருவாக்கப்பட்டதே ஐக்கிய மக்கள் சக்தி - சஜித் ரணிலுக்கு பதிலடி

1 week 2 days ago
11 APR, 2024 | 02:54 PM
image
 

ஐக்கிய மக்கள் சக்தி என்பது மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புபட்டவர்களை உள்வாங்காமல் உருவாக்கப்பட்ட கட்சி என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பிணைமுறி மோசடியில் ஈடுபட்டவர்களை கட்சி தவிர்த்துக்கொண்டது  அவர்களை உள்வாங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி சூத்திரதாரிகளை வெளியேற்றிய பின்னரே எங்கள் கட்சி தனது பயணத்தை ஆரம்பித்தது என தெரிவித்துள்ள சஜித் பிரேமதாச  எங்கள் கட்சியின் பயணம் ஜனாதிபதி பதவிக்கானதோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கானதோ இல்லை இலங்கை மக்களுக்கானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சமீபத்தைய குற்றச்சாட்டுகளிற்கு பதில் அளிக்கும் விதத்திலேயே சஜித்பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/180981

குடும்பத்தினருக்கும் காப்புறுதி வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை!

1 week 2 days ago
images-19.jpg குடும்பத்தினருக்கும் காப்புறுதி வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை!

தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்புறுதித் தொகையை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நாடாளுமன்றத் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகையின் மதிப்பு பத்து லட்சம் ரூபாய் ஆகும்.

இன்னிலையில் அந்த காப்புறுதித் தொகையில் இருந்து சில தொகையை குடும்ப உறுப்பினர்களுக்கு காப்பீட்டு தொகையயாக வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் வாரங்களில் நாடாளுமன்ற சபைக் குழுவின் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அங்கும் இது தொடர்பில் கலந்துரையாட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.

https://athavannews.com/2024/1377581

இராணுவ சேவையிலிருந்து 8000 வீரர்கள் தலைமறைவு!

1 week 2 days ago
இராணுவ சேவையிலிருந்து 8000 வீரர்கள் தலைமறைவு! இராணுவ சேவையிலிருந்து 8000 வீரர்கள் தலைமறைவு!

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 2024 ஆம் ஆண்டு வரை ஆயுதப்படையின் 197 அதிகாரிகள் உட்பட எண்ணாயிரத்து நூற்று நாற்பத்தாறு பேர் இராணுவ சேவையிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என தெரியவந்துள்ளது.

அதன்படி மார்ச் மாதத்தில் மட்டும், ஆயுதப்படைகளின் ஒன்பது அதிகாரிகளுடன் நானூற்று நாற்பத்திரண்டு பேர் ஆயுதப்படையை விட்டு வெளியேறியுள்ளனர்

மேலும் கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் இராணுவ சேவையை விட்டு வெளியேறியவர்களில் 137 இராணுவ அதிகாரிகள், 18 கடற்படை அதிகாரிகள் மற்றும் 19 விமானப்படை அதிகாரிகள் இராணுவ சேவையை விட்டு வெளியேறியுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் பொருளாதார பிரச்சனைகள் மற்றும் நிர்வாக பிரச்சனைகள் காரணமாக இராணுவத்தை விட்டு விலகியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

https://athavannews.com/2024/1377613

பிறப்புரிமையான சுதந்திரத்தை எவரும் எழுதித்தர வேண்டியதில்லை! யாழ். பல்கலை துணைவேந்தர் தெரிவிப்பு:

1 week 2 days ago

 
பிறப்புரிமையான சுதந்திரத்தை எவரும் எழுதித்தர வேண்டியதில்லை!
2034466636.jpeg

யாழ். பல்கலை துணைவேந்தர் தெரிவிப்பு:

சுதந்திரம் எங்களது பிறப்புரிமை. அதை இன்னொருவர் எமக்கு எழுதித் தரவேண்டிய அவசியமில்லை. அதை இன்னொருவர் பறிக்கவும் முடியாது. இவ்வாறு தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறையின் அரசறிவியல் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அரசறிவியலாளன் இதழ் 6 நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

சுதந்திரக் காற்றை நீங்களாகச் சுவாசிக்க முடியாது. முன்னெடுப்புகள் இல்லாமல் எதையும் சாதித்து விடமுடியாது. இந்தியா ஒரு பெரிய நாடு. எத்தனையோ மொழிகளையும், எல்லைகள் அனைத்திலும் யங்கரமான பிரச்சினைகளைக் கொண் தொரு நாடு. ஆனால் அங்கு எல்லாமிருக்கிறது.
தமிழ் மக்கள் தங்கள் பாதையை எவ்வாறு அமைத்துக் கொள்ளவேண்டும் என்பதில் கவனம் செலுத்தவேண்டும். அதற்காக புரட்சிதான் செய்யவேண்டுமென்று நான் சொல்லவில்லை. அவ்வாறு சொல்லி விட்டு நான் வீட்டுக்குச் செல்லமுடியாது. யூதர்கள் அல்லது பலஸ்தீனியர்கள் முன்னர் எங்கு கண்டாலும் தங்களின் அடுத்த சந்திப்பு ஜெருசலேமில் என்று கைதட்டுவார்கள். நாங்கள் எங்களின் அடுத்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் என்று கைதட்டுகின்றோமா? தற்போது தேசியம் கதைக்கிறவர்கள் ஆசியாவிலேயே பிஸியானவர்கள். வாழ்வதோ கொழும்பில். லண் டன் குடியுரிமையும் கொண்டுள்ள அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற சிறப்புரிமையையும் கொண்டுள்ளனர். பலஸ்தீனம் போன்று எமது மண் பறிபோகவில்லை. நாங்கள் தற்போது பலஸ்தீனியர்கள் போன்று அகதி முகாம்களிலிருக்கவில்லை. எங்கள் தாய்நிலத்தைப் பாதுகாப்பதற்கான போதிய அறிவு எம்மத்தியிலுள்ளது. ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் புரிந்துணர்வுப்பண்பு ஒவ்வொருவருக்கும் தேவையானதொன்று. ஆக்கிரமிக்கும் இனத்தின் செயற்பாடுகளைத் தமிழ்மக்கள் புரிந்து கொண்டு தங்களைப் பாதுகாக்கவேண்டும் என்றார்.

 

https://newuthayan.com/article/பிறப்புரிமையான_சுதந்திரத்தை_எவரும்_எழுதித்தர_வேண்டியதில்லை!

 

வட இந்து ஆரம்பப் பாடசாலை அதிபர் மற்றும் கல்விப் பணிப்பாளருக்கு விசாரணை;

1 week 2 days ago

 

அதிபர் மற்றும் கல்விப் பணிப்பாளருக்கு விசாரணை;
975970258.jpg
 

அதிபர் மற்றும் கல்விப் பணிப்பாளருக்கு விசாரணை; 
 

மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

மாதவன்.

வடமராட்சி இந்து ஆரம்பப் பாடசாலையின் அதிபர் மற்றும் வடமராட்சி வலயக்கல்வி பணிப்பாளர் ஆகியோரை எதிர்வரும் 24ஆம் திகதி  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் முன்னிலையாகி பாடசாலையில் நிதி சேகரிப்பு தொடர்பில் விளக்கமளிக்குமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட சிலர் வாட்ஸப் சமூக ஊடக குழு ஒன்றின் மூலம் மாணவர்களின் பெற்றோரிடம் பணம் பெற்று வந்துள்ளதாக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை செய்திகள் வெளியாகி இருந்தன. அந்தவகையில் குறித்த பாடசாலையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாக தெரிவித்து நேற்றையதினம் ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த நிதி சேகரிப்பு குறித்து விசாரணை நடாத்துவதற்காக இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)

 

https://newuthayan.com/article/அதிபர்_மற்றும்_கல்விப்_பணிப்பாளரை_விசாரணைக்கு_அழைத்த_மனித_உரிமைகள்_ஆணைக்குழு!

 

 

இலங்கையின் இறைமை, பாதுகாப்புக்கு அமெரிக்கா முழு ஆதரவு

1 week 2 days ago

 

இலங்கையின் இறைமை, பாதுகாப்புக்கு அமெரிக்கா முழு ஆதரவு

இலங்கையின் இறைமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அமெரிக்காவின் முழுமையான ஆதரவு கிடைக்குமென ஐக்கிய அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் (Jake Sullivan) உறுதியளித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுடன் இன்று (10) நடந்த தொலைபேசிக் கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பல முக்கிய விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன். விரைவான பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கான இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளைப் பாராட்டினார்.

அத்தோடு, சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் மூலம் சுட்டிக்காட்டப்பட்ட பொது நிதி, பணம் மற்றும் நிர்வாகம் ஆகிய துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

எதிர்காலத்தில் பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

பிராந்தியத்தில் சமாதானம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இலங்கையுடன் அர்பணிப்பாக பணியாற்றுவதாகவும் சலிவன் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடல் ஐக்கிய அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதோடு, இந்து-பசுபிக் வலயத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கான இருநாடுகளினதும் அர்பணிப்பையும் வலியுறுத்துகிறது.

 

http://www.samakalam.com/இலங்கையின்-இறைமை-பாதுகா/

 

 

ஸ்ரீலங்கன் விமான சேவையின் தரைவழி நிர்வாகப் பிரிவுக்கு மூன்று அதிநவீன பஸ்கள் கையளிப்பு!

1 week 2 days ago
10 APR, 2024 | 05:13 PM
image
 

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பயணிகளை விமானங்களுக்கு ஏற்றிச் செல்வதற்காக ஸ்ரீலங்கன் விமான சேவையின் தரைவழி நிர்வாகப்  பிரிவுக்கு மூன்று அதிநவீன பஸ்களை கையளிக்கும் நிகழ்வு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வளாகத்தில்  இன்று புதன்கிழமை (10) நடைபெற்றது.

சுமார் 5 வருடங்களாக முக்கிய தேவையாக இருந்த பஸ்கள் இன்று முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த பஸ்கள் சீனாவின் சைனா இன்டர்நேஷனல் மரைன் கொள்கலன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளன. 

அதுமட்டுமின்றி, மாற்றுத்திறனாளி விமானப் பயணிகள் தங்கள் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு இந்த பஸ்களில் செல்ல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  

இந்த நிகழ்வில் துறைமுகங்கள், விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன் சச்சந்திர, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் அதுல கல்கெட்டிய, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தலைவர் அசோக் பத்திரகே ஆகியோர் கலந்துகொண்டனர். 

20240410_101938.jpg

20240410_095007.jpg

20240410_093704.jpg

https://www.virakesari.lk/article/180926

போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் தினசரி 200 முறைப்பாடுகள்

1 week 2 days ago
10 APR, 2024 | 03:57 PM
image

தங்களது பெயரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் போலி முகநூல் கணக்குகளை அகற்றுமாறு கோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு தினசரி 200 முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாகக் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் தர்ஷிகா குமாரி ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த அவர், போலி முகநூல் கணக்குகளை அகற்றுமாறு கோரி கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இதற்கு முன்னர் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது தொடர்பில் கண்டறிய முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் சுமார் 1,500 முறைப்பாடுகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த முறைப்பாடுகளின் படி பெண்கள் மற்றும் சிறுவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/180910

ஏப்ரல் 15ஆம் திகதி பொது விடுமுறையாக அறிவிப்பு

1 week 2 days ago

Published By: VISHNU

10 APR, 2024 | 06:44 PM
image
 

ஏப்ரல் 15 ஆம் திகதி பொது விடுமுறையாக பொது நிர்வாக அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய எண்ணெய் அபிஷேகம் திங்கட்கிழமை (15) நடைபெறவுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/180935

நியாயம் இலங்கையில் இந்த வியாழன், வெள்ளி விடுமுறை. சனி, ஞாயிறு வாரவிடுமுறை. இது போதாது என்று ஒரு குரூப் திங்கள் அரசாங்கவிடுமுறை தேவை என போராடுதாம். அவரவர்ட்கு அவரவர் பிரச்சனை. 

ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் ஜனநாயகப் பலத்தை நிரூபிக்க வேண்டும் - சபா குகதாஸ்

1 week 2 days ago

Published By: DIGITAL DESK 7

10 APR, 2024 | 03:50 PM
image
 

யுத்த மௌனிப்பின் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மக்களின் அடிப்படை அபிலாசைகளை முன் நிறுத்தி ஒரு திரட்சியான ஜனநாயக பலம் 15 ஆண்டுகளை கடந்தும் வெளிப்படுத்தப்படவில்லை இதற்கான சரியான தேர்தல் களம் என்றால் அது ஜனாதிபதித் தேர்தல் மட்டும் தான் என ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஏனைய தேர்தல்களில் திரட்சியான முடிவை வெளிப்படுத்துவது தற்போதைய நிலையில் மிக இலகுவான விடயம் இல்லை.

கடந்த காலங்களில் ஜனாதிபதித் தேர்தல்களில் பல்வேறு முடிவுகளை எடுத்தாலும் அவை இன ரீதியாக சாதகமான அமையவில்லை ஆனால் யுத்தத்தின் பின்னரான சூழலில் ஒற்றுமையாக ஐனநாயகப் பலத்தை வெளிப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் இதனை நடைமுறைப்படுத்த தமிழர் தாயகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் ஒரே தளத்தில் ஒன்றிணைய வேண்டும் ஒரே முடிவை உறுதியாக எடுக்க வேண்டும்.

தமிழர்கள் எடுக்கும் முடிவுகளை பேரினவாதம் இனவாதமாக மாற்றிவிடும் என்கிற விமர்சனங்களை தாண்டி தந்திரோபாயமாக ஐனநாயக பலத்தை உறுதி செய்ய செயல் திறன்களை வடிவமைக்க வேண்டும்.

கடந்த காலங்களில் தமிழர்கள் எவ்வகையான முடிவுகளை எடுத்தாலும் தென்னிலங்கை அதனை இனவாதமாகவே மாற்றியது உதாரணமாக சமஷ்டி கேட்டாலும் பிரிவினைவாதம் பதின்மூன்றை கேட்டாலும் பிரிவினைவாதம் இதுதான் யதார்த்தம்.

எனவே இதனைத் தாண்டி இனத்தின் அபிலாசைகளை முன் நிறுத்தி ஒற்றுமையாக முடிவுகளை எடுப்பது அவ்வாறான ஜனநாயகப் பலத்தை சர்வதேச அரங்கிலும் பூகோள பிராந்திய நாடுகளின் உரையாடலிலும் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கு சாதகமாக பயன்படுத்த எதிர்வரும் சனாதிபதித் தேர்தலை எதிர் கொள்ள மாறுபட்ட கருத்துக்களை தாண்டி ஒன்றினைவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/180868

வடக்கில் இராணுவம் அமைத்த விகாரைக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு வருடம்

1 week 2 days ago

Published By: DIGITAL DESK 3   10 APR, 2024 | 02:06 PM

image

தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியார் காணிகளை அபகரித்து வடக்கில் பௌத்த விகாரை இராணுவத்தினரால் கட்டப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி ஒரு வருட காலமாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் தமிழ் மக்களின் பிரதிநிதி ஒருவர் அந்த காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வாறு செய்யாவிடின் அந்த காணிகளை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்படும் போராட்டங்களை மேலும் விரிவுபடுத்த வேண்டியிருக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கடந்த காங்கேசன்துறை திஸ்ஸ விகாரைக்கு முன்பாக நின்று நேற்று முன்தினம் (ஏப்ரல் 7) வெளியிட்ட காணொளியில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

“தனியாருக்கு சொந்தமான 120 பரப்பு காணிகள் இராணுவத்தின் உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்டு சட்டவிரோதமான முறையில் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த காணிகளை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று அந்த உரிமையாளர்கள் கடந்த பல வருடங்களாக கோரி வருகின்ற போதிலும் அவர்களிடம் கையளிக்கப்படவில்லை. இதனால் கடந்த ஒரு வருடமாக இந்த விகாரைக்கு முன்பாக தொடர்ச்சியான போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. எனினும் காணியை விடுவிப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. இந்த நிலைமைத் தொடருமானால் குடா நாடு முழுவதும் மக்களைத் திரட்டி போராட்டங்களை விரிவுப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும். மிக விரைவாக இந்த கட்டிடத்தை அகற்றி உரியவர்களிடம் காணியை கையளிப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். "

காங்கேசன்துறை, வலிகாமம் வடக்கு, தையிட்டி பிரதேசத்தில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு அருகாமையில் வீதியோரத்தில் ஓராண்டாக ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் தமிழர்கள் 'சட்டவிரோத விகாரையை உடனடியாக அகற்றுங்கள் எங்களின் காணி எமக்கு வேண்டும். அமைதியை குலைக்கும் பொலிஸாரை நாங்கள் விரும்பவில்லை,'' என கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

பிராந்திய காணி அதிகார சபையின் அனுமதியின்றி தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியார் காணிகளை சுவீகரித்து இராணுவத்தினரால் திஸ்ஸ விகாரை கட்டப்பட்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் மேலும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

காங்கேசன்துறையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸ விகாரையில் புனரமைக்கப்பட்ட ஸ்தூபி வைக்கும் பணி 27 ஏப்ரல் 2023 அன்று இடம்பெற்றது." என இலங்கை இராணுவம்  ஏப்ரல் 29ஆம் திகதி தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

"கி.பி. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றைக் கொண்ட இந்த விகாரை, தேவநம்பியதிஸ்ஸ மன்னனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது" என இராணுவம் கூறுகிறது.

14 தமிழ் குடும்பங்களின் 6.2 ஏக்கர் நிலத்தை இராணுவம் வலுக்கட்டாயமாக சுவீகரித்து திஸ்ஸ விகாரையை நிர்மாணித்துள்ளதாக தமது காணிகளை விடுவிக்கக் கோரி மாதந்தம் பௌர்ணமி தினத்தில் விகாரைக்கு அருகில் போராட்டம் நடத்தும் தமிழர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

விகாரையை நிர்மாணிப்பதற்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளரின் அனுமதி பெறப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழர்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/180909

நீதிமன்றம் உத்தரவிட்டும் இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்களை பொலிஸார் மீள வழங்கவில்லை

1 week 3 days ago

Published By: DIGITAL DESK 3

10 APR, 2024 | 04:22 PM
image
 

இந்த வருடம் சிவராத்திரி தினத்தன்று சைவ வழிபாட்டு சடங்குகளை சீர்குலைத்து, வவுனியாவில் உள்ள ஆலய வளாகத்தில் வைத்து கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரம் உள்ளிட்ட பல உபகரணங்களை நீதிமன்ற உத்தரவின் பேரில், பொலிசார் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க வேண்டி நிலைமை ஏற்பட்டுள்ளது.

வெடுக்குநாரி மலையில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வர் ஆலயத்தில் ஒரு மாதத்திற்கு முன்னர் கைப்பற்றப்பட்ட மூன்று இலட்ச ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய பூஜைப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை பொலிசார் இதுவரை மீள வழங்கவில்லை என ஆலய நிர்வாகத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பொலிஸாரால் எடுத்துச் செல்லப்பட்ட அனைத்துப் பொருட்களையும் விடுவிக்கக் கோரி, ஆலய நிர்வாகத்தினரும், கைது செய்யப்பட்ட எட்டு சைவத் தமிழர்களும் தாக்கல் செய்த மனுவை விசாரித்த வவுனியா மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, ஏப்ரல் 04ஆம் திகதி, டெய்லருடன் கூடிய டெக்டர், ஒரு தண்ணீர் பௌசர் மற்றும் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் அலுமினிய பாத்திரங்களை பொலிஸார் விடுவித்தனர்.

signal-2024-04-08-112103_002.jpeg

signal-2024-04-08-112103_003.jpeg

50 கிலோ அரிசி, 10 கிலோ உழுந்து உள்ளிட்ட சில உணவுப் பொருட்கள், பத்தி, கற்பூரம் உள்ளிட்ட பூஜைப் பொருட்கள் மற்றும் பூஜைக்கு பயன்படுத்தப்படும் விளக்கு, மணி உள்ளிட்ட சில பொருட்கள் என சுமார் மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் இன்னமும் பொலிஸாரிடமே காணப்படுவதாக, ஆதிலிங்கேஸ்வர ஆலய நிர்வாக சபையின் செயலாளர் துரைராசா தமிழ்ச்செல்வம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அவற்றை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் ஊடகவியலாளர்களிடம் மேலும் தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவை மீறி இரவு விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதாக தெரிவித்து, வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பகுதியில் உள்ள வெடுக்குநாரி மலையில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இரவு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த எட்டு சைவர்கள் மற்றும் பூஜை பொருட்கள் உள்ளிட்ட உபகரணங்களை மார்ச் 8 ஆம் திகதி இரவு பொலிசார் கைது செய்தனர்.  

இவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் பொலிசாரிடம் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்து அனைவரையும் விடுதலை செய்து மார்ச் 19ஆம் திகதி வவுனியா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தவறியதால், இராசரத்தினம் விநாயகமூர்த்தி (30), சுப்பிரமணியம் தவபாலசிங்கம் (35), துரைராசா தமிழ்ச்செல்வன் (28), மகேந்திரன் நரேந்திரன் (29), சிவம் லக்ஷான் (28), கந்தசாமி கௌரிகாந்தன் (24), திலகநாதன் கிந்துயன் (28) மற்றும் ஆலய பூசாரி தம்பிராசா மதிமுகராசா (45) ஆகியோரை நீதிமன்றம் விடுதலை செய்தது.

நீதிமன்ற உத்தரவை மீறி சைவ சமய வழிபாடுகளை நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமை தொடர்பாக கடந்த மார்ச் 27ஆம் திகதி, கொழும்பு தும்முல்லையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திலும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் 8 பேர் முறைப்பாடு செய்தனர்.

தவறு செய்த பொலிஸ் அதிகாரிகளை குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரும் அவர்கள், தங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் அவமானங்களுக்கு இழப்பீடு வழங்குமாறும் தமது முறைப்பாட்டில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

மேலும், வெடுக்குநாரி மலையில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர்  ஆலயத்தில் எதிர்காலத்தில் சுதந்திரமாக வழிபாடு நடத்த இடமளிக்குமாறும், ஆலயத்திலிருந்து பொலிஸார் எடுத்துச் சென்ற பூசை பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் மீள கையளிக்க ஏற்பாடு செய்யுமாறும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

https://www.virakesari.lk/article/180904

மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய வாகனகளில் 200 கோடி ரூபா மோசடி!

1 week 3 days ago

முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய அறுபதுக்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்களில் 200 கோடி ரூபாய்களுக்கும் அதிகமான வாடகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இரண்டு வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், குறித்த வாகனங்களின் பெறுமதி எட்டு கோடி ரூபாவுக்கும் அதிகமாகும் என அந்த அமைப்பின் அழைப்பாளரும், மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய அறுபதுக்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்களுக்கு செலுத்த வேண்டிய 200 கோடி ரூபாவுக்கும் அதிகமான வாடகை செலுத்தத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வாகனங்களுக்கு ஜனாதிபதி செயலர்களே பொறுப்பு என்பதால், இது தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சமரசிங்க,
மேலும், இந்த வாகனங்கள் இலங்கையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்திடம் இருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த ஜனாதிபதிகள் வாகனங்களை பயன்படுத்தினார்கள், எவ்வளவு பணம் செலுத்த வேண்டியிருந்தது, வாகன இலக்கங்கள் உள்ளிட்ட தகவல்கள் எதிர்காலத்தில் ஊடகங்கள் ஊடாக பகிரங்கப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/298667

யாழ். மாநகர சபை ஆணையாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்

1 week 3 days ago
10 APR, 2024 | 12:52 PM
image
 

யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் கிருஸ்னேந்திரனுக்கு எதிராக மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார். 

நீதிமன்றுக்கு தவறான தகவல்களை வழங்கி, மன்றை பிழையாக வழிநடத்தியதாக தெரிவித்தே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இவ்வழக்கின் மீதான விசாரணைக்காக எதிர்வரும் 17ஆம் திகதி புதன்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு ஆணையாளருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/180899

Checked
Sat, 04/20/2024 - 11:41
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr