ஊர்ப்புதினம்

தையிடி விகாரையின் கட்டுமானத்துக்கு காரணமாக இருந்தவர்கள் தேசிய மக்கள் சக்தியினர்!

6 days 1 hour ago

தையிடி விகாரையின் கட்டுமானத்துக்கு காரணமாக இருந்தவர்கள் தேசிய மக்கள் சக்தியினர்!

adminApril 19, 2025

Gajan-scaled.jpg?fit=1170%2C878&ssl=1

தையிடி விகாரையின் கட்டுமானத்துக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் தேசிய மக்கள் சக்தி என்கிற ஜே.விபி யினர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இனவாதத்துக்கு இடமில்லை என்று கூறும் அனுர அரசே தையிட்டி விகாரையின் கட்டுமாணத்துக்கு முக்கிய கரணமாக இருந்தனர்.

இவர்களே அன்று இந்த திஸ்ஸ விகாரையின் கட்டுமாணம் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் குறித்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, விகாரையை அமைக்கும் நடவடிக்கைக்கு யாழ்ப்பாணத் தமிழர்கள் மதவாதம் பேசுவதாக கூறி சிங்கள மக்களை திசை திருப்பி விகாரையை கட்டிமுடிக்கச் செய்திருந்தனர்.

ஆனால் இன்று குத்துக்கரணம் அடித்து மக்களை ஏமாற்றி எமது மக்களின் நலன்களை முன்னிறுத்தி போராடும் தமிழ் அரசியல் கட்சிகள் மீது குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மீது குற்றச்சாட்டை சுமத்தி அரசியல் செய்கின்றனர்.

இனவாதத்தை தூண்டும் இந்த தேசிய மக்கள் சக்தி தமிழ் கட்சிகள் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை கூறி அவர்களது உச்சபட்ச இனவாதத்தின் வெளிப்பாட்டை காட்டுகின்றனர்.

முன்னைய அரச தலைவரான கோட்டாவுக்கு இரண்டு வருடம் தேவைப்பட்டது அவரது உண்மை முகத்தைக் காட்ட, ஆனால் இந்த ஜேவிபியின் உண்மையான முகம் 6 மாதங்களுக்கள் வெளிப்படுவிட்டது.

முன்னைய அரசாங்கத்தவர்கள் இனவாதிகள். அதை அவர்கள் வெளிப்படையாகவே காட்டினர். ஆனால் இவர்கள் அதைவிட மோசமனவர்கள். மக்களை நம்பவைத்து தம்வசப்படுத்தி கழுத்தறுக்க முயற்சிக்கின்றனர்.

இதேவேளை உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசார மேடைகளில் ஜனாதிபதியின் பிரசாரப் பேச்சுக்கள் தமிழ் மக்களின் இருப்பை சூட்சகமாக இல்லாதொழிக்கும் நிகழ்ச்சி திட்டங்களை உள்ளடக்கியதாகவே முன்னெடுப்பதாக உள்ளது.

இது அனுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் அச்சுறுத்தும் அரசியல் போக்காகவே இருக்கின்றது.

மக்களின் ஆதரவை பெறுவதற்காக பல வாக்குறுதிகளை அள்ளி வழங்கிய அனுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர் அந்த வாக்குறுதிகளுள் ஒன்றைக்கூட நிறைவேற்றாது மீண்டும் புதிய பல வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றது. இது தமிழ் மக்களின் வாக்குகளை சூறையாடும் முயற்சியாக இருக்கின்றதே தவிர தமிழ் மக்களின் நலன்களுக்கானதாக ஒருபோதும் இருக்கப் போவதில்லை. இதை எமது மக்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். அத்துடன் இதன் வெளிப்பாட்டை உள்ளூராட்சித் தேர்தலிலும் வெளிப்படுத்த வேண்டும்.

அந்தவகையில் தமக்கு வாக்களித்தால்தான் பிரதேச சபைகளுக்கு நிதி விடுவிக்கப்படும் என்ற ஜனாதிபதியின் கருத்தானது ஜனநாயக விரோதத்துக்கு இதைவிட வேறொரு உதாரணம் வேண்டுமா? என மேலும் தெரிவித்தார்.

https://globaltamilnews.net/2025/214483/

பிள்ளையான் உண்மைகளை வெளிப்படுத்துவதை தடுக்க சதி; அவருக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க வேண்டும் - ஹிருணிகா வலியுறுத்தல்

6 days 4 hours ago

18 APR, 2025 | 02:01 PM

image

(எம்.மனோசித்ரா)

பிள்ளையான் என்பவர் நாட்டில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் மிக முக்கிய சாட்சியாளராவார். எனவே அவர் அவற்றை வெளியளிடுவதைத் தடுப்பதற்கு ஒரு குழு முயற்சிக்கின்றது. அவருக்கு சுயாதீன சட்டத்தரணிகள் குழுவையும், சிறப்பு பாதுகாப்பையும் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர வலியுறுத்தினார்.

கடுவலையில் வியாழக்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடு;கையில்,

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படுவார் என தேர்தல் பிரசாரங்களின் போது தேசிய மக்கள் சக்தி கூச்சலிட்டுக் கொண்டிருந்தது. 

ஆனால் அதற்குரிய நடவடிக்கைகள் எவற்றையும் முன்னெடுக்காது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை அரசாங்கம் பெரிதுபடுத்திக் கொண்டிருக்கிறது.

இவ்வாறான நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என எவ்வாறு நம்ப முடியும்? பிள்ளையானின் கைது அனைவர் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் ஏன் இதனை சரியாகக் கையாளவில்லை? உதய கம்மன்பில பிள்ளையானை தேசிய வீரர் எனக் குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் அரசாங்கம் ஏன் பதிலளிக்கவில்லை?

இது தொடர்பில் விசாரணைகளேனும் முன்னெடுக்கப்பட வேண்டும். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா, பிள்ளையான் இராணுவத்துக்கு உளவுத் தகவல்களை வழங்கியமை பொய் எனக் குறிப்பிட்டுள்ளார். 

அவர் ஊடாக இராணுவத்துக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறிருக்கையில் கம்மன்பில போன்றோர் குறிப்பிடும் விடயங்கள் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளை தோற்றுவிக்கக் கூடியவையாகும்.

இது ஒரு பெரிய நாடகம் என்றே எமக்குத் தோன்றுகிறது. ஒருபுறம் பட்டலந்த குறித்து பேசப்பட்டது. மறுபுறம் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேசத்துக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது. பிள்ளையான் போன்றோரது குரலை முடக்குவதற்காக முன்னர் இருந்த ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர். 

பிள்ளையான் என்ற நபர் மிக முக்கிய சாட்சியாளராவார். எனவே அவருக்கு வழங்க வேண்டிய சகல பாதுகாப்புக்களை வழங்கி, அவருக்கு சுயாதீன சட்டத்தரணிகள் குழுவொன்றை வழங்க வேண்டும்.

பிள்ளையான் வாயைத் திறந்தால் எமது நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் குறித்த தகவல்கள் வெளிவரக் கூடும். 

எனவே அவற்றை தடுத்து நிறுத்துவதற்கான பணியாளராகவே கம்மன்பில தன்னை சட்டத்தரணியெனக் காண்பித்துக் கொண்டு பிள்ளையானை சந்திக்கின்றார். 

அவரை எவரேனும் இதற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். எனவே அரசாங்கம் இது தொடர்பில் விசேட அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/212285

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி யார்? – சரத் வீரசேகர

6 days 5 hours ago

1738928705-25-67a55b75388f7.jpg?resize=6

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி யார்? – சரத் வீரசேகர.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை ஜனாதிபதி  உரிய ஆதாரங்களுடன் வெளிப்படுத்தாவிடின் அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைக்கும் செயலாகும்” என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன்,  கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை ஏமாற்றுவதற்காக ஜனாதிபதி வழங்கிய போலி வாக்குறுதியாகவே இது கருதப்படும் எனவும்  சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் பிரதான சூத்திரதாரியை ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னதாக வெளிப்படுத்துவதாக   கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் வைத்து ஜனாதிபதி வாக்குறுதியளித்திருந்தார் எனவும், தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை ஜனாதிபதி  வெளிப்படுத்தாவிடின்  வீதிகளில்   போராட்டம் முன்னெடுக்கப்படும் என  கொழும்பு பேராயர் தெரிவித்திருந்தார் எனவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அரசாங்கத்தினை ஆட்சியில் அமர்த்துவதற்கு  கொழும்பு பேராயர்  குழுவினர் பாரிய  ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர் எனவும்  எனவே தற்போது  உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை அறிந்து கொள்ள அனைவரும் ஆவலாக உள்ளனர் எனவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன்  ஜனாதிபதி  வாக்குறுதியளித்தவாறு உரிய ஆதாரங்களுடன் உண்மையான சூத்திரதாரி அடையாளப்படுத்தப்படுவாரா இல்லையா என்பது தெரியவில்லை எனவும், சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி வாக்குறுதியை நிறைவேற்றாவிடின் அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைக்கும் செயலாகும் எனவும், அத்துடன்  கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை ஏமாற்றுவதற்காக ஜனாதிபதி செய்த செயலாகவே கருதப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1428809

ஸ்ரீ தலதா வழிபாடு; ஆரம்ப நிகழ்வுக்காக இராஜதந்திரிகள் புகையிரதத்தில் கண்டிக்குப் பயணம்!

6 days 5 hours ago

New-Project-214.jpg?resize=750%2C375&ssl

ஸ்ரீ தலதா வழிபாடு; ஆரம்ப நிகழ்வுக்காக இராஜதந்திரிகள் புகையிரதத்தில் கண்டிக்குப் பயணம்!

16 வருடங்களுக்குப் பின்னர் நடைபெறும் “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று (18) பிற்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதுடன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் இராஜதந்திரிகளும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர்.

வியட்நாம், பங்களாதேஷ், இந்தோனேசியா, நேபாளம், நெதர்லாந்து, இந்தியா, மியன்மார், பலஸ்தீன், பிரான்ஸ், நியூசிலாந்து, கியூபா, எகிப்து, ஜப்பான், பிரித்தானியா, தாய்லாந்து, கனடா மற்றும் கொரியா ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தக் குழு, இன்று காலை 7.00 மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து கண்டிக்கு புறப்பட்ட புகையிரதத்தின் சிறப்பு கண்காணிப்புப் பெட்டியில் பயணித்தது.

இலங்கை மீண்டும் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைந்து வருவதுடன், இதுவரை நாட்டைச் சூழ்ந்திருந்த அனைத்து தடைகளும் நீக்கப்பட்டு, நாட்டிற்குள் சகவாழ்வு நிலைநாட்டப்பட்டுள்ளது என்ற செய்தியை நட்பு நாடுகளுக்கு தெரிவிக்கவும், அந்தப் பயணத்திற்கு அவர்கள் அனைவரின் ஆதரவையும் பெறம் நோக்கத்துடனும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கண்டியை நோக்கிப் பயணித்த இக்குழு, முதலில் மகாவலி ரீச் ஹோட்டலை சென்றடைந்ததுடன், அங்கு ஹெல பாரம்பரியத்திற்கு ஏற்ப அவர்களுக்காக சிறப்பு சிங்கள-தமிழ் புத்தாண்டு விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அங்கு இந்தக் குழுவுடன் மற்றொரு இராஜதந்திரிகள் குழுவும் இணைய திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் 44 பேர் கொண்ட இந்தக் குழு “சிறி தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வில் பங்கேற்க தலதா மாளிகைக்குச் செல்லவுள்ளதோடு, அதன் பின்னர் அந்தக் குழு அதே புகையிரதத்தில் மீண்டும் கொழும்புக்கு நோக்கித் திரும்பும்.

ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில், மல்வத்து, அஸ்கிரி தேரர்களின் அனுசாசனையுடன் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையின் தியவடன நிலமேவின் வழிகாட்டுதலின் கீழ், ஏற்பாடு செய்யப்பட்ட “சிறி தலதா வழிபாடு” இன்று முதல் ஏப்ரல் 27 ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு நடைபெறும்.

ஆரம்ப நாளான இன்று (18) பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும், பக்தர்களுக்கு “தலதா” புனித தந்த தாதுவை வழிபடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், நாளை (19) முதல் தினசரி பிற்பகல் 12.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும் இந்த சந்தர்ப்பம் வழங்கப்படும்.

https://athavannews.com/2025/1428771

யாழ்பாணத்தில் சந்திரசேகர் குழுவினரின் சித்து விளையாட்டுக்கள் விரைவில் வெளியாகும்!

6 days 13 hours ago


யாழ்பாணத்தில் சந்திரசேகர் குழுவினரின் சித்து விளையாட்டுக்கள் விரைவில் வெளியாகும்!

தமது ஆட்சியில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துவோம், ஊழல் மோடிகளை இல்லாதொழிப்போம், சமூக சீர்திருத்தங்களை  செய்வோம் என்று கூறிவரும் சந்திரசேகர் குழுவினர் யாழ்பாணத்தில் பல கிராமங்களிலும் சமூக சீர்கேடாக பல விளையாட்டுக்களை செய்கின்றார்கள். அவர்களது இந்த சித்து விளையாட்டுக்கள்  விரைவில் புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் வெளியாகும் என வலிகாமம் கிழக்கின் முன்னாள் தவிசாளர் நிரோஸ் சவால் விடுத்துள்ளார்.

தமது ஆட்சியில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துவோம், ஊழல் மோடிகளை இல்லாதொழிப்போம், சமூக சீர்திருத்தங்களை செய்வோம் என்று கூறிவரும் சந்திரசேகர் குழுவினர் யாழ்பாணத்தில் பல கிராமங்களிலும் சமூக சீர்கேடாக பல விளையாட்டுக்களை செய்கின்றார்கள். அவர்களது இந்த சித்து விளையாட்டுக்கள் விரைவில் புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் வெளியாகும் என வலிகாமம் கிழக்கின் முன்னாள் தவிசாளர் நிரோஸ் சவால் விடுத்துள்ளார்.

  

யாழ். ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை (18) நடாத்திய ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசார மேடைகளில் ஜனாதிபதியின் பிரசாரப் பேச்சுக்கள் மிகவும் கீழ்த்தரமானதாகவும் மக்களை அச்சுறுத்துவதாகவும் இருக்கின்றன. குறிப்பாக தன்னுடைய அரசின் கீழ் உள்ளூராட்சி மன்றங்கள் வந்தால் தான் அபிவிருத்திக்கானான நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மிரட்டலாக கூறுகின்றார்.

இது அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் அச்சுறுத்தும் அரசியல் கலாசாரத்தை காட்டுகின்றது. அதுமட்டுமல்லாது மக்களையும் தனித்துவமான சபைகளினதும் அதிகாரங்களை அச்சுறுத்துவதாகவும் இருக்கின்றது. இவ்வாறு சிறுமைத்தனமாக ஜனாதிபதி செயற்படுவது வெட்கக் கேடானது.

உள்ளூராட்சி மன்றங்கள் அரசின் எடுபிடிகள் அல்ல. அவை உள்ளூர் வழங்களை கொண்டு மக்கள் தமது பிரதேசத்தின் ஆளுகையை முன்னெடுக்கும் ஒரு அபிவிருத்திக்கான அரசியல் கட்டமைப்பு.

மக்களிடம் பெறும் சோலை வரியாலும், முத்திரை தீர்வை வரியாலும், நீதிமன்ற குற்ற தண்டப் பணங்கள், சந்தை குத்தகைகளூடாக கிடைக்கும் வருமானங்கள் கடைத் தொகுதிகளின் வரிகளூடாக கிடைக்கும் பெரு நிதிகளே சபைகளின் நிதி பெறும் வழிகளாக இருக்கின்றன.

அந்த வகையில் உள்ளூராட்சி மன்றங்கள் தத்தமது வழங்களை கொண்டுதான் நிதியை ஈட்டி தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனவே தவிர மத்திய அரசின் தயவில் உள்ளூராட்சி மன்றங்களும் செயற்படவில்லை என்பதை அநுரவும், அவருடைய பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு உள்ளூர் அதிகார சபையின் ஆளுகைக்குள்ளேயே அப்பிரதேசத்தின் அனைத்து செயற்றிட்டங்களும் அவற்றை கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் கொண்டது.

உள்ளூராட்சி மன்றங்கள் தனித்துவம் கொண்டவை. சபைகள் ஒவ்வொன்றும் ஒரு குட்டி அரசாங்கம். அதன் தவிசாளருக்கு அப்பிரதேச சபையின் உச்ச அதிகாரம் இருக்கின்றது. இதில் மக்கள் தெளிவு பெற வேண்டும்.

மேலும் சமூக நலன்புரி திட்டங்களை வழங்குவதாக கூறி சர்வதேச நடுகளிடம் இருந்து வரும் பல நூறு மில்லியன்களை பெற்று வெளிவிவகார அமைச்சு என்ற போர்வையில் அதன்னூடாக கையாண்டு சபைகளுக்கு நிதிகளை விடுவிக்கும் முறையை கையாண்டு வருகின்றன.

அதன்படி தற்போது கிடைக்கும் நிதியை மத்திக்கு கையகப்படுத்தவே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.

இதேவேளை பல பொய்களை கூறி மக்களை ஏமாற்றிய அநுர அரசு, அதில் தோல்விகண்டு இயலாமல் போனதால் இப்போது அச்சுறுத்தும் செயற்பாடாக தன்னை முன்னெடுக்க முயல்கின்றது.

அதிமட்டுமல்லாது சந்திரசேகரர் குழுவினர் பலூன் ஊதிக்கொண்டிருக்கும் ஒரு சிறு பிள்ளைகள். இந்த பால்குடிகள் ராஜபக்சர்கள் கூட செய்யாத அடக்கு முறைகளையும், அநியாயங்களையும் அட்டூழியங்களையும் செய்கின்றனர்.

எனவே மக்கள் இதில் தெளிவாக இருப்பது அவசியம். அதுமட்டுமல்லது தமிழ் மக்களின் பிரதேசங்களில் காலூன்றினால் அது தமிழ் மக்களின் ஒட்டுமொத்த இருப்பையும் இல்லாது செய்துவிடும் என்றார்

https://seithy.com/breifNews.php?newsID=332168&category=TamilNews&language=tamil

மற்றவர்களிடம் களவாடிக் கொடுக்கும் நத்தார் பாப்பாவாக மாறியுள்ளார் அநுரகுமார!

6 days 18 hours ago

மற்றவர்களிடம் களவாடிக் கொடுக்கும் நத்தார் பாப்பாவாக மாறியுள்ளார் அநுரகுமார!

நத்தார் பாப்பா என்றால் தங்களிடம் உள்ள பரிசையே வழங்கவேண்டும். மற்றவர்களிடம் களவாடிக்கொடுக்கும் நத்தார் பாப்பாவாக அநுர குமார திசாநாயக்க மாறியுள்ளதாகவும் இதுதான் இன்றைய நாட்டின் நிலைமை என மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

நத்தார் பாப்பா என்றால் தங்களிடம் உள்ள பரிசையே வழங்கவேண்டும். மற்றவர்களிடம் களவாடிக்கொடுக்கும் நத்தார் பாப்பாவாக அநுர குமார திசாநாயக்க மாறியுள்ளதாகவும் இதுதான் இன்றைய நாட்டின் நிலைமை என மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

  

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபைக்கான வேட்பாளர் அறிமுகமும் தேர்தல் பிரச்சார கூட்டமும் நேற்று (17) விளாவெட்டுவான் ராஜா விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,

இந்த நாட்டின் ஜனாதிபதி தேர்தல் சட்டங்களை மீறுகின்றார் என்று நாட்டின் தேர்தல் ஆணைக்குழு கடிதம் எழுதிய முதலாவது சந்தர்ப்பம் இந்த தேர்தலில்தான் நடைபெற்றுள்ளது. ஒரு நாட்டின் ஜனாதிபதி தேர்தல் சட்டங்களை மீறுகின்றார், தேர்தல் சட்டங்களை மீறுவதை நிறுத்துங்கள் என்று ஜனாதிபதி ஒருவருக்கு கடிதம் எழுதிய சந்தர்ப்பம் 2025ஆம் ஆண்டு உள்ளுராட்சிமன்ற தேர்தலிலேயே நடைபெற்றுள்ளது.

தற்போது கிறிஸ்தவ மக்களின் ஈஸ்டர் பண்டிகை வருகின்றது. ஆனால் ஜனாதிபதி ஈஸ்டர் பண்டிகையினை நத்தார் பண்டிகை வருகின்றது என்று நினைத்துக்கொண்டிருக்கின்றாரோ தெரியாது. ஏன்னென்றால் நத்தார் பண்டிகை கொண்டாடப்படும் காலப்பகுதியில் நத்தார் பாப்பா வருவார், அவர் குழந்தைகளுக்கு பரிசுகள் எல்லாம் வழங்குவார். நத்தார் பாப்பா திரிவது போன்றுதான் இன்று ஜனாதிபதி வடகிழக்கு முழுவதும் திரிகின்றார்.

நத்தார் பாப்பாக மாறிவிட்ட அநுர குமார திசாநாயக்க கூறுகின்றார் மன்னாரையும் புத்தளத்தினையும் இணைக்கும் வீதியை உடனடியாக செய்யப் போகின்றேன் என்று. வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும்போது உங்களுக்கு தெரியாதா மன்னார் புத்தளம் வீதியை அமைக்கவேண்டும் என்று. உள்ளுராட்சிமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் நீங்கள் நத்தார் பாப்பாவாக மாறிய பின்னர்தானா உங்களுக்கு தெரியவந்தது.

ஜனாதிபதியின் சொந்த ஊரில் ரயில் நிலையம் ஒன்றை அமைப்பதற்காக ஆய்வு செய்வதற்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மன்னார் - புத்தளம் வீதியை அமைப்பதற்கான ஆய்வு செய்வதற்கு ஒரு 10 மில்லியன் ரூபாவினை அவர் ஒதுக்கியிருந்தால் அவர் கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளலாம்.

இவை அனைத்தும் தேர்தலுக்காக வழங்கப்படும் போலியான வாக்குறுதிகள். சில எருமை மாடுகளைப் போல் உள்ள அமைச்சர்கள்தான் ஜனாதிபதியை நத்தார் பாப்பா போல இழுத்துக்கொண்டு செல்கின்றார்கள். இன்னும் ஒரு கருத்தினையும் ஜனாதிபதி கூறியிருந்தார்.

சனத் ஜயசூரியவிடம் சொன்னாராம் யாழ்ப்பாணத்தில் ஒரு சர்வதேச கிரிக்கட் மைதானத்தை உருவாக்குங்கள் என்று. அவ்வாறானால் சனத் ஜயசூரிய நாட்டின் ஜனாதிபதியா? அல்லது அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியா?

இந்திய பிரதமர் இலங்கை வந்தபோது 1996ஆம் ஆண்டு உலக கிண்ணத்தினை கைப்பற்றிய இலங்கை அணியை சந்தித்திருந்தார். அதன்போது சனத் ஜயசூரிய வடக்கில் ஒரு சர்வதேச கிரிக்கட் மைதானத்தினை அமைக்கவேண்டும் என்று கோரிக்கையினை முன்வைத்திருந்தார். நத்தார் பாப்பா என்றால் தங்களின் பரிசினையே வழங்கவேண்டும். மற்றவரின் பரிசினை களவெடுத்துக் கொடுப்பவராக இன்று அநுரகுமார திசாநாயக்க மாறியுள்ளார். இதுதான் இந்த நாட்டின் நிலைமை என்றார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.ஸ்ரீநேசன் மற்றும் இ.சிறிநாத் ஆகியோர் கலந்து கொண்டதுடன் இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம், பட்டிப்பளை கிளையின் தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது இலங்கை தமிழரசு கட்சி சார்பில் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச சபைக்காக போட்டியிடும் வட்டார வேட்பாளர்கள் 10 நபர்களும் பட்டியல் வேட்பாளர்கள் 8 நபர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://seithy.com/breifNews.php?newsID=332170&category=TamilNews&language=tamil

இந்தியாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அரசாங்கம் நிறுத்தி வைப்பது பொதுமக்களின் சந்தேகத்தைத் தூண்டுகிறது - முஜிபுர் ரஹ்மான்

6 days 19 hours ago

Published By: VISHNU 18 APR, 2025 | 07:38 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்காமல் மறைத்துக்கொண்டிருப்பதால் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் சந்தேகங்களை தடுக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வியாழக்கிழமை (17) இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடு என்ற வகையில் உலகில் எங்களுக்கு தனித்து பயணிக்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தி நாங்கள் நம்புவதில்லை. அதனால் ஏனைய நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக்கருத்து இல்லை. அதனால் அரசாங்கம் வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதை நாங்கள் எதிராக பார்ப்பதில்லை. அனைத்து நாடுகளுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே நாங்கள் இருக்கிறோம்.

என்றாலும் தற்போது பிரச்சினையாக இருப்பது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டபோது, அரசாங்கம் அரசாங்கத்துடன் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் சைத்திட்டிருக்கிறது. ஆனால் அந்த ஒப்பந்தங்கள் எதனையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை. குறைந்தபட்சம் பாராளுமன்றத்துக்குகூட சமர்ப்பிக்கவில்லை. அதனால் ஒப்பந்தங்களில் இருக்கும் விடயங்கள் யாருக்கும் தெரியாது.அரசாங்கம் ஏன் இதனை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்காமல் இருக்கிறது என எங்களுக்கு தெரியாது.

அரசாங்கம் இந்த ஒப்பந்தங்களை நாட்டின் அரசியலமைப்புக்கு அமைய கைச்சாத்திட்டிருந்தால், இந்த ஒப்பந்தத்துக்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைக்கப்பெற்றிருந்தால் இதனை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அரசாங்கத்துக்கும் முடியும். என்றாலும் இந்த ஒப்பந்தங்களை சபைக்கு சமர்ப்பிப்பதை பிற்படுத்தி வருவதாலே சமூகத்துக்குள்ளும் எங்களுக்குள்ளும் இதுதொடர்பில் சந்தேகங்கள் எழுவது நியாயமானதாகும்.

அத்துடன் அரசாங்கம் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்களில் பாதுகாப்பு ஒப்பந்தமும் ஒன்றாகும். இலங்கையுடன் செய்துகொண்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் பாரிய வெற்றியாகவே இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.அவ்வாறு எதுவும் இல்லை என்றால் பாதுகாப்பு ஒப்பந்தத்தை அனைவருக்கும் பார்த்துக்கொள்ள முடியுமான வகையில் அரசாங்கத்துக்கு சபைக்கு சமர்ப்பிக்க முடியும்.அவ்வாறு இல்லாமல் தொடர்ந்தும் இதனை மறைக்க முற்படும்போதுதான் பிரச்சினை எழுகிறது.

அதேபோன்று அரசாங்கம் சுகாதாரம் தொடர்பாகவும் இரண்டு ஒப்பந்தங்களை இந்தியாவுடன் செய்துகொண்டுள்ளது.அது தொடர்பாகவும் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன.அதனால் அரசாங்கம் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தொடர்ந்தும் மறைத்துக்கொண்டு, இந்த ஒப்பந்தங்களில் நாட்டுக்கு நன்மை இருப்பதாக தெரிவித்துக்கொண்டு  முன்னுக்கு செல்ல முற்பட்டாலும், நிச்சியமாக மக்கள் மத்தியில் இந்த ஒப்பந்தங்கள் தொடர்பில் எழும் சந்தேகங்களை தடுக்க முடியாது என்றார்.

https://www.virakesari.lk/article/212326

மன்னாரில் ஜனாதிபதி உண்மைக்கு மாறான தகவலையே வழங்கிவிட்டுச் சென்றுள்ளார் - வி.எஸ்.சிவகரன்

6 days 19 hours ago

18 APR, 2025 | 03:38 PM

image

மன்னாரில் ஜனாதிபதி உண்மைக்கு மாறான தகவலையே வழங்கிவிட்டுச் சென்றுள்ளார். தேர்தல் மேடையில் வாக்கு பெறுவதற்காக நடைபெறுகின்ற சம்பவத்தை இல்லை என்று கூறுவது அரசின் ஆட்சி முறைமைக்கான அவமானம் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று வெள்ளிக்கிழமை (18) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

மன்னாருக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை (17) தேர்தல் பரப்புரை கூட்டத்துக்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க காற்றாலை விடயம் சம்பந்தமாக முன்னுக்குப் பின் முரணான தகவலை வழங்கிவிட்டுச் சென்றுள்ளார். அவருடைய தகவலை பார்க்கின்றபோது, கொய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம் உள்ளே இருப்பது ஈரும் பேனுமாம் என்கிற கிராமத்துப் பழமொழி ஞாபகத்துக்கு வருகிறது. அவரது கதையும் அவ்வாறே அமைந்துள்ளது.

காற்றாலை மின் உற்பத்தி திட்டம் மற்றும் கனிய மணல் அகழ்வு போன்ற திட்டங்கள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருக்கின்றன என்கிற செய்தியை அரசாங்கம் அரச  அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

அது மாத்திரமின்றி 16.01.2025 அன்று மாவட்டச் செயலகத்தில் காற்றாலை திட்டம் சம்பந்தமான கூட்டம் நடத்தப்பட்டு, தற்காலிகமாக அத்திட்டத்தை இடை நிறுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

அதன் பின்னர் 28.01.2025 அன்று நடைபெற்ற  மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இந்த தீர்மானங்கள் எவையும் நடைமுறைக்கு வரவில்லை. தற்போது கூட மன்னார் சௌத்பார் பகுதியில் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கான வேலைகள் இடம்பெற்று வருகின்றன.

ஆனால் ஜனாதிபதி நேற்றைய கூட்டத்தில் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பணிகள் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார்.

தற்போது நான்கு காற்றாலைகள் அமைக்கும் திட்டம் இடம்பெற்று வருகிறது. அதற்கான புகைப்பட ஆதாரங்கள் உள்ளன. தாழ்வு பாட்டில் 10 காற்றாலைகள் அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. அதற்கான சுற்றாடல் மதிப்பு அறிக்கை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மூன்று தடவை அவர்கள் கள ஆய்வுக்கு வந்தபோது திருப்பி அனுப்பப்பட்ட போதும் கூட அந்த திட்டத்தை அரசு கைவிடுவதாக இல்லை.

மூன்றாவது திட்டமான கரையோரத்தில் இருந்து மணல் அகழ்வு செய்வதற்கான நில அளவீடு செய்வதற்கு அரச திணைக்களங்கள், அனுமதி வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. அதனை வழங்குவதற்கான துரித நடவடிக்கை இடம்பெற்று வருவதாக அறிகின்றோம்.

இந்த மூன்று திட்டங்களும் மன்னாரில் நடைபெறுவதற்கும் நடைபெற்றுக் கொண்டிருப்பதற்குமான சூழலையே கொண்டுள்ள நிலையில், ஜனாதிபதிக்கு அவரது கட்சிக்காரர்கள் அல்லது அரச அதிகாரிகள் தவறான தகவல்களை வழங்குகின்றார்கள். அல்லது ஜனாதிபதி இதனை அரசியல் மேடையாக பயன்படுத்துகிறார் என தெரியவில்லை. 

மன்னாரில் வைத்து ஜனாதிபதி உண்மைக்கு மாறான தகவலையே வழங்கிவிட்டுச் சென்றுள்ளார். தேர்தல் மேடையிலே வாக்கு பெறுவதற்காக நடைபெறுகின்ற சம்பவத்தை இல்லை என்று கூறுவது அரசின் ஆட்சி முறைமைக்கான அவமானம்.

இடது சாரித்துவத்தில் ஆட்சி நடத்துகின்றோம் என கூறுகின்றவர்கள், களத்தில் ஒன்று இடம்பெற, வார்த்தைகளில் இன்னுமொன்றை உண்மைக்கு மாறாக பேசுவது என்பது ஜனநாயக விரோதம் ஆகும்.

எனவே, இவ்விடயங்களை ஜனாதிபதி உடனடியாக கவனத்தில் எடுத்து, அவர் கூறியது போல் இத்திட்டத்தை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறைத்தபட்ச சூழல் பாதிப்போடு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்றும் அவர்  கூறியிருந்தார். இவற்றை அரசு ஏமாற்றும் வார்த்தைகளாகவே பார்க்கின்றோம். இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது என கடந்த 2 வருடங்களுக்கு மேலாக போராடி வருகிறோம். மன்னார் மக்கள் இத்திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என  சிவகரன் தெரிவித்தார்.

மேலும், இந்த ஊடக சந்திப்பில் ஜனாதிபதியின் கருத்து தொடர்பாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார், மீனவ அமைப்புக்களின் பிரதிநிதி என்.எம்.ஆலம் ஆகியோரும் கருத்துக்களை தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/212298

இந்த ஆண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் 5 பேர் உயிரிழப்பு; 14,678 பேர் பாதிப்பு

6 days 19 hours ago

18 APR, 2025 | 01:59 PM

image

டெங்கு காய்ச்சல் காரணமாக இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 5 பேர் உயிரிழந்ததோடு, 14,678 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இதில், அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலேயே பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. 

தற்போது நாட்டில் டெங்கு நோய்ப் பரவல் அதிகரித்து வருவதனால் இவ்வார இறுதியில் பிராந்திய மட்டத்தில் டெங்கு ஒழிப்புத் திட்ட செயற்பாடுகளை பாடசாலைகளில் முன்னெடுக்கவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. 

அத்துடன் 2024ஆம் ஆண்டில் மொத்தமாக 49,870 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/212286

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த முக்கிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தவேளை இடம் மாற்றம் - கோட்டாபய ஆட்சியில் அநீதி இழைக்கப்பட்டதாக தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஜனாதிபதிக்கு கடிதம்

6 days 19 hours ago

Published By: RAJEEBAN 18 APR, 2025 | 11:26 AM

image

இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் அசங்க அபயகுணசேகர 2019 இல் தான் இடமாற்றப்பட்டமை குறித்தும் உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் குறித்த தனது ஆராய்ச்சிகளிற்கு தடுக்கப்பட்டது குறித்தும் சுட்டிக்காட்டி ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

2019 இல் விவரிக்கப்படாத இடமாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டது ஆனால் அதனை நடைமுறைப்படுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

2019 ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சிலிருந்து காரணம் தெரிவிக்கப்படாமல் உடனடியாக தான்  இடமாற்றப்பட்டதை  கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள அவர் அவர்இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் என்ற அடிப்படையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த முக்கியமான ஆய்வொன்றில் ஈடுபட்டிருந்தவேளை தான் இடமாற்றப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

எனது இடமாற்றம் திட்டமிட்ப்பட்ட ஆனால் முன்னெடுக்கப்படாத விதம்  அரசியல் தலையீடுகள் குறித்தும்நிறுவன சமரசம் குறித்தும் தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றது என தெரிவித்துள்ள அவர் என்னை ஜேர்மனியின் பேர்ளினின் துணை தூதரகத்திற்கு நியமிப்பதாக தெரிவித்திருந்தார்கள் அதுவும் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னால் உள்ள உண்மைகள் அதிகாரத்துவ குழப்பம் மற்றும் அரசியல் நோக்கம் காரணமாக புதைந்துபோகக்கூடாதுஎன தெரிவித்துள்ள  அசங்க அபயகுணசேகரஇ எனது திடீர் இடமாற்றம் குறித்து நீதி நிலைநாட்டப்ட்டால் நான் எனது நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் நேர்மையுடன் பணியாற்ற தயாராகயுள்ளேன்இஉத்தியோகபூர்வ வேண்டுகோள் விடுக்கப்பட்டால்உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/212272

அன்னை பூபதியின் நினைவு தினம் ; சிவில் சமூக செயற்பாட்டாளருக்கு அழைப்பாணை

1 week ago

அன்னை பூபதியின் நினைவு தினம் ; சிவில் சமூக செயற்பாட்டாளருக்கு அழைப்பாணை

18 Apr, 2025 | 12:32 PM

image

சிவில் சமூக செயற்பாட்டாளர் ச.சிவயோகநாதனுக்கு மட்டக்களப்பு கொக்குவில் பிரதேச பொலிஸாரினால் விசாரணைக்கான அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (17) பி.ப 4.25 மணிக்கு அவரது வீட்டுக்குச் சென்ற மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸார் இருவரினால் நாளை 19 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அன்னை பூபதியின்  நினைவு தினம் தொடர்பான விசாரணைக்கு வருமாறு காத்தான்குடி மற்றும் கொக்குவில் பொலிஸாரினால் கையொப்பமிடப்பட்ட கடிதமொன்று வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி கடிதமானது  சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ளது. எனவே இதன்மூலம் தனது மொழி உரிமை மீறப் பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவரான ச.சிவயோகநாதன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 19 ஆம் திகதி அன்னை பூபதியின்  நினைவு தின நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில் மேற்படி விசாரணைகள் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

7.jpg

https://www.virakesari.lk/article/212279

வடக்கு மாகாணத்தில் ஊடகவியலாளர்களைக் கொன்றோர் மிகவிரைவில் சிறைக்குச் செல்வர்! அமைச்சர் சந்திரசேகர் உறுதி

1 week ago

வடக்கு மாகாணத்தில் ஊடகவியலாளர்களைக் கொன்றோர் மிகவிரைவில் சிறைக்குச் செல்வர்!

அமைச்சர் சந்திரசேகர் உறுதி

186433983.JPG

வடமாகாணத்தில் ஊடகவியலாளர்களைக் கொன்றோரும், ஆட்கடத்தலில் ஈடுபடுவோரும், மணல் கடத்தலில் ஈடுபடுவோரும் மிக விரைவாக சிறைக்கு அனுப்பப்படுவார்கள் - இவ்வாறு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
'கடந்த காலங்களில் இலஞ்ச, ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராகச் சட்டம் செயற்படும். அவர்களின் முகவரி மகசின் சிறைச்சாலையென மாறுவது உறுதியாகும். முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்களும் கம்பியெண்ணி வருகின்றனர். அதேபோல படுகொலைகளில் ஈடுபட்டவர்கள், ஆட்கடத்தல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும் சட்டம் செயற்படும்.

நாம் இவ்வாறு செயற்படும்போது தேசிய மக்கள் சக்தியினர் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுவதாக கொக்கரிக்கின்றனர். எமக்கு எவருடனும் தனிப்பட்ட பிரச்சினைகள் கிடையாது. குற்றமிழைத்தவர்களுக்கு மன்னிப்பும் கிடையாது. சட்டத்தை நாம் கையில் எடுக்கமாட்டோம். நீதிமன்றம் ஊடாகவே அதற்குரிய பணிகள் இடம்பெறும்.

வடக்கிலும் மணல் கடத்தல்காரர்கள் உள்ளனர், ஆட்களை கடத்தியவர்கள் உள்ளனர், ஊடகவியலாளர்களை கொலை செய்தவர்கள் இருக்கின்றார்கள், மக்களின் காணிகளை அபகரித்தவர்கள் இருக்கின்றார்கள். இவர்களுக்கு எதிராகவும் வெகுவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களின் நிம்மதியை சீர்குலைத்தவர்கள், தற்போது நடுங்க ஆரம்பித்துள்ளனர். சந்திரசேகரன் ரௌடி எனவும் கூறத்தொடங்கியுள்ளனர். என்னை ரௌடி என அழைப்பது மகிழ்ச்சி. மக்களுக்காக செயற்படுகின்றபோது, மக்களுக்காக குரல் கொடுக்கின்றபோது, மக்களுக்காக எம்மை அர்ப்பணிக்கின்றபோது அதை பார்த்து ரௌடித்தனம் என்கின்றனர். இதுதான் ரௌடித்தனம் எனில் அதனை ஏற்றுக்கொள்ள நான் தயார். கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்கவின் பைல்களை தூக்கித் திரிந்தவர்கள்தான் இப்படிச் சொல்கின்றனர். புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டபோது அதனை வரவேற்றவர்கள், இன்றைக்கு தாங்கள்தான் புலிகள் அமைப்பின் அர்ப்பணிப்புமிக்க தலைவர்கள் எனக் கூறிக்கொள்கின்றனர். புலிகள் காலத்தில் துரோகி முத்திரை குத்தப்பட்டவர்கள் இவர்கள்' -என்றார். 

https://newuthayan.com/article/வடக்கு_மாகாணத்தில்_ஊடகவியலாளர்களைக்_கொன்றோர்_மிகவிரைவில்_சிறைக்குச்_செல்வர்!

யாழ். வரணியில் நீரில் மூழ்கி இறந்த காதலனின் செய்தி கேட்டு காதலி உயிர்மாய்ப்பு!

1 week ago

யாழ். வரணியில் நீரில் மூழ்கி இறந்த காதலனின் செய்தி கேட்டு காதலி உயிர்மாய்ப்பு!

jaffna-8.jpg

வரணி சிட்டிவேரம் (சுட்டிபுரம்) பகுதியில் உள்ள குளமொன்றில் நீராடிய இளைஞர், குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் - தவசிக்குளம் பகுதியைச் சேர்ந்த 23வயதுடைய சிவராசு சிலுசன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

புதுவருட கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலர் சிட்டிவேரம் கண்ணகை அம்மன் கோவில் பகுதியில் உள்ள திம்புருவில் குளத்தில் நீராடியுள்ளனர்.

அப்போது குறித்த இளைஞர் தாமரைக் கொடியில் சிக்குண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவர், வரணி பிரதேச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞனின் மரண செய்தியை அறிந்த 18 வயதான காதலி இன்று அதிகாலை வீட்டில் உயிர்மாய்த்துள்ளார். வரணி பகுதியை சேர்ந்த 18 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

https://newuthayan.com/article/யாழ்._வரணியில்_நீரில்_மூழ்கி_இறந்த_காதலனின்_செய்தி_கேட்டு_காதலி_உயிர்மாய்ப்பு!

காணிகளை விடுவிப்போம் – யாழில் ஜனாதிபதி உறுதி

1 week ago

காணிகளை விடுவிப்போம் – யாழில் ஜனாதிபதி உறுதி

adminApril 17, 2025

IMG_0885.jpeg?fit=1170%2C849&ssl=1

மீண்டுமொரு யுத்தம் தோன்ற அனுமதிக்க மாட்டோம். அதனால் பாதுகாப்பு காரணத்திற்காக என கையகப்படுத்தியுள்ள காணிகளை மீள பெற்று அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்போம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை வருகை தந்த ஜனாதிபதி சங்கிலியன் பூங்காவில் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்

அதன் போது உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்

நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்கள் மக்களை பிரித்துள்ளன. ஆனால் கடந்த பொது தேர்தலின் போது வடக்கு, கிழக்கு, தெற்கு, தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் என அனைவரும் ஒன்றுபட்டு வாக்களித்தனர்.

அப்படிப்பட்ட ஒன்றிணைந்த தேர்தல்களே வேண்டும். மீள பிரிய மக்கள் பிரிந்து வாக்களிக்க வேண்டாம்.  தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் என அனைவரும் ஒரு நாட்டு மக்களாக ஒன்றாக வாழ வேண்டும்.

சகல மக்களுககும் சமனான உரிமை வேண்டும். அவ்வாறான நாடு தான் எமக்கு தேவை.

கடந்த காலங்களில் போர் புரிந்தோம் அதனால் என்ன நடந்தது ? அழிவுகளை தான் சந்தித்தோம். எம் உறவுகளை இழந்தோம். வடக்கிலும் தெற்கிலும் அதே நடந்தது. மீள அப்படி ஒரு நிலை எமக்கு வேண்டாம்

எங்கள் தலைமுறைகள் போர் புரிந்தோம் அடுத்த தலைமுறைகள் போர் இல்லாது சமாதானமாக அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும்.

போர் இனவாத அரசியல்வாதிகளுக்கே தேவை எமக்கு தேவையில்லை.

அரசியல்வாதிகளின் தலையீடு இல்லை எனில் திஸ்ஸ விகாரை பிரச்சனையை தீர்ப்போம் 

யாழ்ப்பாணம் திஸ்ஸ விகாரை பிரச்சனை இருக்கின்றது. அதனை இலகுவாக தீர்க்க முடியும். அதற்கு அந்த விகாரையை வைத்து வடக்கில் அரசியல் செய்பவர்கள் அதில் இருந்து விலக வேண்டும். அதேபோன்று தெற்கிலும் அந்த விகாரையை வைத்து அரசியல் செய்பவர்கள். அந்த அரசியலை கைவிட வேண்டும்.

அவ்வாறு அரசியல்வாதிகள் விகாரை பிரச்சனையில் இருந்து விலகுவார்களாக இருந்தால் எம்மால் அந்த பிரச்னையை மிக இலகுவாக தீர்க்க முடியும்.

விகாரை காணி உரிமையாளர்கள் , விகாரைக்குரிய விகாராதிபதி , நாக விகாரை விகாராதிபதி ஆகியோர் இணைந்து பேசி அதற்கு ஒரு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும்.

நாட்டில் தொல்பொருள் எச்சங்கள் காணப்பட்டால் , அது தமிழா , சிங்களமா முஸ்லிமா , இந்துவா பௌத்தமா என பார்க்காது எமது நாட்டின் தொல்லியல் மரபு எமது பண்பாடு என ஒரு நாட்டு மக்களாக சிந்திக்க வேண்டும்

ஆனால் இனவாதிகள் அப்படி பார்ப்பதில்லை. அதன் ஊடாக இனவாதத்தை தூண்ட முயல்கின்றனர். அப்படியான இனவாத குழுக்களை மக்கள் இனம் கண்டு , அவர்களை தோற்கடித்துள்ளார்கள்.

இனி அவர்கள் எந்த வேடம் அணிந்து வந்தாலும் அவர்கள் இனவாதிகள் என்பதனை மக்கள் இனம்கண்டு அவர்களை தோற்கடிப்பார்கள். அதேவேளை தேசிய மக்கள் சக்தியும் இனியும் இனவாதம் நாட்டில் தோண்ட இடமளிக்க மாட்டாது.

யாழில் இருந்து புதிய அணி நாடாளுமன்றம் வந்துள்ளது. 

யாழ்ப்பாணத்தில் பல பாரம்பரிய கட்சிகள் உள்ளன. கடந்த பொது தேர்தலில் அவற்றினை தவிர்த்து எமது கட்சியை சார்ந்த மூவரை தெரிவு செய்துள்ளீர்கள். புதிய ஒரு அணி யாழில் இருந்து நாடாளுமன்றம் வந்துள்ளது.

யாழ்ப்பாண மக்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கையை நாம் வீணடிக்க மாட்டோம். இனவாதிகளுக்கு  அஞ்சி மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்யாது இருக்கமாட்டோம். நாம் தேசிய ஒருமைப்பாட்டுக்காக என்றும் உழைப்போம்.

காணிகளை விடுவிப்போம். 

பாதுகாப்பு காரணங்களுக்கு என தமிழ் மக்களின் காணிகள் கையகப்படுத்தபட்டுள்ளது. அந்த காணிகளை பாதுகாப்பு தரப்பிடம் இருந்து மீள பெற்று காணி உரிமையாளர்களுக்கு கையளிப்போம்.

இன்னொரு யுத்தம் நாட்டில் தோன்றும் என்ற அச்சத்தில் கையகப்படுத்தப்பட்ட காணிகளை கடந்த அரசாங்கம் மீள கையளிக்கவில்லை. ஆனால் நாங்கள் இன்னொரு யுத்தம் நாட்டில் தோன்ற அனுமதிக்க மாட்டோம். அதனால் பாதுகாப்பு காரணங்களுக்கு என காணிகள் தேவையில்லை. விரைவில் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்போம்.

மூடப்பட்ட வீதிகளையும் படிப்படியாக திறந்து மக்கள் பாவனைக்கு கையளிக்கிறோம். வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் மூடப்பட்டு இருந்த வீதிகளை திறந்துள்ளோம்.

கொழும்பில் பாதுகாப்பு காரணமாக என மூடப்பட்ட வீதிகளை திறக்கும் போது ஏன் யாழ்ப்பாணத்தில் வீதிகளை திறக்க கூடாது. நாட்டில் பாதுகாப்பு காரணமாக என மூட்டப்பட்ட வீதிகளை திறப்போம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என வெளிப்படுத்துவோம். 

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான தகவல்களையும் வெளிப்படுத்துவோம். அரசாங்கத்திடம் , பொலிசாரிடம் , இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை வெளிப்படுத்துவோம்.

ஒருவர் இறந்தால் அவருக்காக அழுது , அவருக்கு செய்ய வேண்டிய கிரியைகளை செய்து சில காலத்தில் ஆறுதல் அடைவோம். ஆனால காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது ? அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா ? இல்லையா ? என்பது தெரியாமல் படும் வேதனைகளை நான் நன்கு அறிவேன். எனது சகோதரர் கூட காணாமல் ஆக்கப்பட்டவரே. அதனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் வலி எனக்கு புரியும்.

எமக்கு அமைதி தேவை. அதற்காக அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை கண்டறிந்து வெளிப்படுத்துவோம்.   நாங்கள் நாட்டை பொறுப்பெடுத்த காலம் முதல் நாட்டை வளப்படுத்தி வருகின்றோம். எதிர்வரும் 5 வருடத்தில் அந்நிய செலவாணியை அதிகரிப்போம். கைவிடப்பட்ட பல செயற்திட்டங்களை தற்போது மீள ஆரம்பித்துள்ளோம்.

காவல்துறை முப்படைகளில் வேலை வாய்ப்பு 

அதேபோன்று பல வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளோம். குறிப்பாக தமிழ் இளையோர் 2 ஆயிரம் பேருக்கு காவல்துறை திணைக்களத்தில் வேலை வாய்ப்புக்களை வழங்கவுள்ளோம்.  அதேபோன்று இராணுவம் , கடற்படை விமான படையிலும் தமிழ் இளையோருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம் அதற்கு இங்குள்ள பெரியவர்கள் பெற்றோர்கள் இளையோர்களை இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த எடுத்து கூற வேண்டும்.

காங்கேசன்துறையில் ஒரு ஜனாதிபதி மாளிகை உள்ளது. அது எமக்கு தேவையில்லை. அதனை யாழ்ப்பாண மக்களுக்கு பயன்பட கூடியவாறு மக்களுக்காக அதனை வழங்கவுள்ளோம் யாழ்ப்பாண பொது நூலகத்தை எரித்தார்கள். அது எமது இதயங்களை காயப்படுத்தி உள்ளது. நூலகம் எரிக்கப்பட்டது இனவாதத்தின் உச்சமாகவே நாங்கள் பார்க்கின்றோம். அதற்காகவே நூலகத்தை புனரமைக்க நிதி ஒதுக்கியுள்ளோம் நாட்டிற்கு சுற்றுலா பயணிகள் பெருமளவில் வருகின்றார்கள் அவர்கள் வடக்கு செல்வது குறைவாக உள்ளது.

உள்ளூர் விமான சேவையை மேம்படுத்துவோம் 

அதனால் நாம் உள்ளூர் விமான சேவைகளை வலுப்படுத்த உள்ளோம். அதன் ஊடாக சுற்றுலா பயணிகளை வடக்குக்கு செல்ல வைக்க முடியும்.  வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அழகிய கடற்கரைகள் உள்ளன. அவற்றினை சுற்றுலா தளங்களாக மேம்படுத்துவோம்

அதேவேளை யாழ்ப்பாணத்தய் அதன் பாரம்பரியம்  கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றை பிரதிநிதித்துவ படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தை மீள கட்டி எழுப்புவோம்

வடக்கு கடல் வளத்தை பாதுகாப்போம் 

வடக்கு கடற்பரப்பில் உள்ள கடல் வளங்களை அழிக்க அனுமதிக்க மாட்டோம். அந்த கடல் வளங்களை நம்பி பெருமளவான கடற்தொழிலாளர்கள் உள்ள போது , அந்த வளங்களை அழித்து அவர்களின் வாழ்வாதாரத்தை அனுமதிக்க முடியாது.

வடக்கு கடல் வளங்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதனை எடுங்கள் என கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளோம்.

 

புலம்பெயர்ந்தோர் நாட்டிற்கு திரும்ப வர வேண்டும். 

வடக்கில் இருந்து பலர் புலம்பெயர் நாடுகளுக்கு சென்றுள்ளார்கள். அவர்கள் மீள நாட்டிற்கு வர வேண்டும். எமது நாட்டினை கட்டியொழுப்ப தங்கள் முதலீடுகளை நாட்டில் மேற்கொள்ள வேண்டும்.

கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து நாட்டை கட்டியொழுப்ப நாட்டிற்கு வருகை தர வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்.

இந்த நாட்டில் கடந்த காலங்களில் பணம் உள்ளவர்களுக்கு ஒரு சட்டம் இல்லாதவர்களுக்கு ஒரு சட்டம் என சட்டங்கள் நடைமுறைப்படுத்துவதில் பாகுபாடு இருந்தது. இனிஅவ்வாறு இருக்காது. அனைவருக்கு சட்டம் பொதுவானதாக இருக்கும்.

 

முதலமைச்சர்கள் சிறைகளில் 

தற்போது வடமத்திய மாகாணம் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்கள் சிறையில் உள்ளனர். பல அமைச்சர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குகள் நடைபெறுகின்றன. முன்னாள் ஜனாதிபதியின் இரு மகன்களுக்கு எதிராகவும் நீதிமன்றில் வழக்குகள் நடைபெறுகின்றன.

குற்றம் செய்த யாரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது. வெளியில் உள்ள முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன

நாம் ஒரு புது அத்தியாயத்தை தொடங்கியுள்ளோம். ஜனாதிபதி , நாடாளுமன்றில் அறுதி பெரும்பான்மை என்பன எங்கள் கைகளில் உண்டு ஆனால் கிராமத்தை கட்டியொழுப்ப எமக்கு மக்கள் ஆதரவு வேண்டும்.

உள்ளூர் சபைகளையும் எம்மிடம் தாருங்கள் 

பிரதேச சபைகளில் இருந்து வரும் முன் மொழிவுகளில் இருந்தே கிராமத்தை கட்டி எழுப்ப முடியும். பிரதேச சபைகள் நகர சபைகள் மாநகர சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி நடந்தால் அவர்களின் முன் மொழிவுகளை கண்களை மூடிக்கொண்டு ஏற்று அதற்கு நிதிகளை ஒதுக்குவோம்

வேறு யாருடைய கைகளில் சபைகள் சென்றால் அவர்களின் முன் மொழிவுகளை பத்து தடவைகளுக்கு மேல் யோசனை செய்தே நிதி ஒதுக்குவோம்.

ஏனெனில் கடந்த காலங்களில் பல ஊழல்கள் இடம்பெறுள்ளன. ஆனால் தேசிய மக்கள் சக்தி ஊழலற்ற அரசாங்கம். மத்தியில் ஊழலற்ற அரசாங்கமாக காணப்படும் போது , கிராம அபிவிருத்திகளில் ஊழல் செய்ய முடியாது.

எனவே தேசிய மக்கள் சக்திக்கு வாக்களியுங்கள். யாழ்ப்பாணத்தில் உள்ள 17 சபைகளையும் எமக்கு தாருங்கள்.

கடந்த காலங்களில் தெற்கு மக்களை சந்தித்து அவர்கள் பிரச்சனை தொடர்பில் அறிந்து கொண்ட அளவுக்கு வடக்கு மக்களை நாம் சந்தித்து அவர்கள் பிரச்சனைகளை அறியவில்லை எனும் உண்மையை நாம் ஏற்றுக்கொள்கிறோம்

ஆனால் வடக்கு மக்கள் எங்களை நம்பியுள்ளீர்கள். கடந்த பொது தேர்தலில் எங்கள் கைகளை பிடித்து பலப்படுத்தியுள்ளீர்கள்.  எந்த கைகளை மேலும் பலப்படுத்துங்கள். உங்கள் கைகளை நாம் இறுக பற்றிக்கொண்டுள்ளோம்.

உங்கள் பிரச்சனைகளை படிப்படியாக தீர்த்து வைத்து , நாட்டில் சகோதரத்துவத்தை ஏற்படுத்துவோம் என உறுதி அளிக்கிறேன் என தெரிவித்தார்

https://globaltamilnews.net/2025/214460/

வவுணதீவில் வாள்வெட்டு தாக்குதல்; பெண் ஒருவர் உட்பட இருவர் படுகாயம் - சிறைச்சாலை உத்தியோகத்தரும் மடக்கிப் பிடிப்பு

1 week ago

18 APR, 2025 | 10:47 AM

image

வவுணதீவு கொத்தியாவல பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (15) இரவு 11 மணியளவில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட “கோபு” வாள்வெட்டுக் குழுவினர் வீடொன்றில் நுழைந்து தாக்குதல் நடத்தி அட்டகாசம் செய்ததில் பெண் ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர். 

தாக்குதலை மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரை அங்கிருந்தவர்கள் மடக்கிப் பிடித்து கட்டி வைத்ததுடன் ஏனைய குழுவினர் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பியோடியுள்ளனர். 

இது பற்றி தெரியவருவதாவது,

மத்திய கிழக்கு நாடொன்றில் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வரும் ஒருவர் அந்த பணத்தை வைத்து வவுணதீவு பிரதேசத்தில்  “கோபு ரீம்” என்ற வாள்வெட்டு குழு ஒன்றை இயக்கிவருவதுடன் அந்த குழு பணத்தை பெற்று அவர்கள் சொல்லுபவர்களை தாக்குவது போன்ற அடியாட்கள் என்ற ரீதியில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சம்பவ தினமான செவ்வாய்க்கிழமை (15) இரவு கொத்தியாவல பிரதேசத்திலுள்ள சது என்பவருடன் முன்விரோதம் காரணமாக அவர் மீது தாக்குதல் நடாத்த கோபு வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த 6 பேர் 3 மோட்டர்சைக்கிள்களில் அவரின் வீட்டை தேடிச் சென்ற நிலையில் அவர் வீட்டுக்கு அருகிலுள்ள காணியில் மாடுகளை கட்டிக்கொண்டிருந்த போது அவர் மீது தாக்குதலை மேற்கொண்டதையடுத்து அவர் அங்கிருந்து தப்பியோடி அருகிலுள்ள அவனது மாமனார் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

இந்நிலையில் வாள்வெட்டு குழுவினர் அங்கு சென்று வீட்டினுள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தி தாக்குதலை மேற்கொண்டதில் சது மற்றும் அவரது மாமியார் படுகாயமடைந்ததையடுத்து அவர்கள் தாக்குதல் மேற்கொள்ளச் சென்ற சிறைச்சாலை உத்தியோகத்தரை மடக்கி பிடித்து கட்டிவைத்து பொலிஸாருக்கு அறிவித்தனர்.

இந்நிலையில் வாள் வெட்டு குழுவினர் கட்டிவைத்த சிறைச்சாலை உத்தியோகத்தரை மீட்டு கொண்டு மோட்டார் சைக்கிளை அங்கு விட்டுவிட்டு தப்பி ஓடினர். அதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார் 3 மோட்டார் சைக்கிள்களையும் மீட்டு கொண்டு சென்றதுடன், தாக்குதலில் காயமடைந்தவர்களை மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் தாக்குதலை மேற்கொண்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக  தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த வாள்வெட்டு குழுவினர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கசிப்பு உற்பத்தி செய்பவர்கள் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியவர் என ஒருவரின் வீட்டுக்கு வாள்களுடன் சென்று அவர் மீது தாக்குதல் நடாத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு நீதிமன்ற பிணையில் அண்மையில் வெளிவந்துள்ளதாகவும் இவர்கள் தொடர்ந்து பிரதேசத்தில் செய்துவரும் அட்டூழியத்தையடுத்து மக்கள் பயப் பீதியில் இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

02.JPG

03.JPG

004.JPG

05.JPG

https://www.virakesari.lk/article/212256

உள்ளூராட்சி தேர்தல் மீதான மக்களின் ஆர்வம் குறைந்து விட்டது – பெப்ரல்

1 week ago

New-Project-209.jpg?resize=750%2C375&ssl

உள்ளூராட்சி தேர்தல் மீதான மக்களின் ஆர்வம் குறைந்து விட்டது – பெப்ரல்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடங்கியதிலிருந்து எந்தவொரு பாரதூரமான சம்பவங்களும் பதிவாகவில்லை என்று தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள PAFFREL அமைப்பு தெரிவித்துள்ளது.

இருப்பினும், அரசு சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ததாக 20 முறைப்பாடுகளும், தனிப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக 15 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக PAFFREL அமைப்பு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மீதான பொதுமக்களின் ஆர்வமும் குறைவாக இருப்பதாக PAFFREL கண்காணிப்பாளர்களும் தமக்குத் தெரிவித்ததாக அதன் நிர்வாகப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.

இதற்கிடையில், தேர்தல்கள் பணிகளுக்காக சுமார் 4,000 கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தபால்மூல வாக்குகளிப்புகளை கண்காணிக்க 200 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2025/1428751

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் - உதவியவர்கள் யார் என்பதை வெளிப்படுத்துங்கள் - கத்தோலிக்க ஆயர் பேரவை வேண்டுகோள்

1 week ago

17 APR, 2025 | 06:56 PM

image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் மற்றும் அந்த கொடூரமான செயலிற்கு உதவியவர்கள் யார் என்பதை கண்டறிவது அவசரமான விடயம் என இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு குறித்த தனது விசேட செய்தியில் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை இதனை தெரிவித்துள்ளது.

2025ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறு வருடங்களாகின்றது என தெரிவித்துள்ள கத்தோலிக்க ஆயர் பேரவை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சுயாதீனமான, பக்கச்சார்பற்ற விசாரணைகளை உறுதி செய்வதற்காக அரசாங்கம் சில சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.

இதுவரை எடுக்கப்பட்ட முயற்சிகளை நாங்கள் வரவேற்கும் அதேவேளை விசாரணையின் இறுதி நோக்கம் குற்றவாளிகள் யார், அவர்களிற்கு உதவியவர்கள் யார் என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கவேண்டும் என வலியுறுத்துவதாக கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/212231

பார்வைக் குறைபாடு உடையவர்களை வலுவூட்டும் செயன்முறை பயிற்சி

1 week ago

17 APR, 2025 | 07:03 PM

image

பார்வைக் குறைபாடுடையவர்களை வலுவூட்டும் வகையில் நான்கு நாள் செயன்முறை பயிற்சியொன்று இடம்பெற்றது. 

இந்த உள்ளகப் பயிற்சிகள் குருதெனிய கல்வி வள மத்திய நிலையத்தில் வைத்து வழங்கப்பட்டன. 

பிறவியிலே முழு அளவில் பார்வைக்குறைபாடு உடையவர்களும், இடைப்பட்ட காலத்தில் பார்க்கும் திறனை இழந்தவர்களுக்கும் இந்த பயிற்சி வழங்கப்பட்டது.

Training-__1_.jpg

கண்டி புகையிரத நியைத்தில் புகையிரத மேடைகளைப் பயன்படுத்தல், கண்டி வாவிக்கரையில் நடத்தல் மற்றும் கண்டி நகர நடைபாதைகளில் பயணித்தல் போன்ற விடயங்களை பிரதானமாகக் கொண்டு இந்த செயன்முறைப் பயிற்சி வழங்கப்பட்டது.

மத்திய மாகாண சபை நலன்புரி மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களம் பார்வையற்றவர்களை வலுவூட்டும்  வகையில் இப்பயிற்சியை வழங்கியது.

விசேடமாக தயார்ப்படுத்தப்பட்ட உபகரணங்களைக் கொண்டு, அன்ரொய்ட் தொலைபேசி உபயோகம், கணினி ஸ்க்ரீன் வாசிப்பு, செஸ் விளையாட்டு, சதுரங்கம் (டாம்) விளையாட்டு, பிரேல் முறையில் தயாரிக்கப்பட்ட கடதாசி அட்டைகளைக் கொண்ட விளையாட்டு  போன்ற பல உள்ளக விளையாட்டுகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதற்கென தொடுகை மூலம் மற்றும் ஒலி மூலம் உணரக்கூடிய விசேட உபகரணங்கள் பாவிக்கப்பட்டன. 

இப்பயிற்சிகள் நாடளாவிய ரீதியில் பார்வைக் குறைபாடு இல்லாத அதிசிறந்த பயிற்றுவிப்பாளர்களைக் கொண்டு நடத்தப்பட்டன. 

Training-__2_.jpg

https://www.virakesari.lk/article/212237

தென்னிலங்கைக் கட்சிகளை நிராகரிக்கும் அதேசமயம் எதற்கு வாக்களிக்க வேண்டும் என்பதிலும் நிதானம் தேவை - பொ.ஐங்கரநேசன்

1 week ago

17 APR, 2025 | 01:28 PM

image

தமிழ்க் கட்சிகள் எல்லாமே உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மக்களைக் கேட்டுவருகின்றன. ஜே.வி.பியை மாத்திரம் அல்ல; தென்னிலங்கைக் கட்சிகள் எதையுமே நாம் ஆதரிக்க முடியாது. தென்னிலங்கைக் கட்சிகளை நிராகரிக்கும் அதேசமயம் எதற்கு வாக்களிக்க வேண்டும் என்பதிலும் எமக்கு நிதானம் தேவை. தமிழ்த் தேசிய அரசியலை வியாபாரப் பண்டமாக்கி மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் தமிழ் அரசியற் கட்சிகளையும் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வலி வடக்கு பிரதேச சபைக்கு சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்ற தமிழ்த் தேசியப் பேரவையின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம் புதன்கிழமை (16) மல்லாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஜனாதிபதித் தேர்தலின்போதும் பாராளுமன்றத் தேர்தலின்போதும் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களில் கணிசமானோர் ஜே.வி.பி என்னும் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்திருக்கிறார்கள், தமிழ்த் தேசிய அரசியற் பயணத்தில் ஒரு பின்னடைவாக வடக்கு, கிழக்கில் ஜே.வி.பி காலூன்றியமைக்கு எமது வாக்காளர்களைக் குற்றம் சாட்டுவது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல.

எங்கள் கைவிரல்களாலேயே எங்கள் கண்களைக் குத்துவது போன்று தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளே தென்னிலங்கைப் பேரினவாதக் கட்சிகளுக்குத் தமிழ் மக்களை வாக்களிக்கப் பழக்கினார்கள்.

முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுறுத்தப்பட்டவுடன் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் வரலாற்றுப் பிழையான முடிவை எடுத்தார்.

முள்ளிவாய்க்கால்வரை யுத்தத்தை முன்னின்று நடாத்திய சரத் பொன்சேகாவுக்கு தமிழ் மக்களை அவர் வாக்களிக்க வைத்தார். இதன் மூலம் போர்க்குற்றவாளி என்ற குற்றச்சாட்டிலிருந்து நாமே அவரை விடுதலை செய்தோம். இதன் விளைவாகவே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எப்போதுமே எதிரான நிலைப்பாடுகளை எடுத்து வந்த ஜே.வி.பிக்கு இன்று தமிழ் மக்கள் வாக்களிக்கத் தலைப்பட்டுள்ளார்கள்.

எம் மத்தியிலுள்ள பல தமிழ்க் கட்சிகள் உதட்டளவில் தமிழ்த் தேசியம் பேசுவனவாகவும் மனதளவில் பேரினவாதக் கட்சிகளை விசுவாசிப்பனவாகவுமே உள்ளன.

மதுபான விற்பனை அனுமதிப் பத்திரங்களை இலஞ்சமாகப் பெற்றும், பன்னாட்டு நிறுவனங்களிடம் பல கோடிகளைப் பெற்றும், மத்திய அரசின் பாதீடுகளை ஆதரித்தும் தமிழ்த் தேசிய விரோத நிலைப்பாடுகளை எடுப்பதற்கு இக்கட்சிகள் ஒருபோதும் தயங்கியதில்லை. தமிழ் மக்கள் இத்தேர்தலில் தென்னிலங்கைக் கட்சிகளோடு இப் போலித் தமிழ்த்தேசியக் கட்சிகளையும் சேர்த்தே நிராகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/212202

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க முயற்சிக்கிறோம்; இலங்கை கிரிக்கெட் அணியில் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் உள்ளடங்க வேண்டும் - ஜனாதிபதி

1 week ago

Published By: VISHNU 17 APR, 2025 | 09:14 PM

image

(இராஜதுரை ஹஷான்)

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கு முயற்சிக்கிறோம், இலங்கை கிரிக்கெட் அணியில் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் உள்ளடங்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது,

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கு முயற்சிக்கிறோம்; அண்மையில்  பிரதான கிரிக்கெட் வீரர் ஒருவர் என்னை சந்தித்தார். அவர் ஓரிரு நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்துக்கு வந்தார். அவர் தான் சனத் ஜயசூரிய,

சனத் ஜயசூரிய என்னிடம் 'ஜனாதிபதி என்ன செய்ய வேண்டும்' என வினவினார். அப்போது 'எவ்வாறாவது யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கி சர்வதேச கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும்' என்றேன்.

முதல் 10 ஆண்டு காலப்பகுதிக்குள் இலங்கை கிரிக்கெட் அணியில் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் உள்ளடங்க வேண்டும். அனைத்து துறைகளிலும் நாம் ஒன்றுப்பட வேண்டும். கல்வி, விளையாட்டு, கலாச்சாரம், உட்பட அனைத்து துறைகளிலும் திறமைக்கு மாத்திரமே முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/212243

Checked
Fri, 04/25/2025 - 09:17
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr