ஊர்ப்புதினம்

விசேட தேவையுடையவர்களுக்கான அணுகல் வசதி தொடர்பான ஆய்வு அறிக்கை யாழில் வெளியீடு

3 hours 30 minutes ago

25 APR, 2025 | 11:19 AM

image

தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) ஏற்பாட்டில், இலங்கைக்கான ஆஸ்திரேலியா உயர்ஸ்தானியராலயத்தின் நிதி அனுசரணையுடன் பங்குபற்றல், பரிந்துரைத்தல், குரல் கொடுத்தல், வலுவூட்டல் (PAVE) எனும் தொனிப்பொருளில், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் இயலாமைகளைக் கொண்ட நபர்களுக்கான அணுகல் வசதி தொடர்பான ஆய்வு அறிக்கை வெளியீடு புதன்கிழமை (23)  யாழ்ப்பாண நகர்ப்பகுதியிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இச் செயற்பாடு PAVE செயற்திட்ட இளைஞர் குழுவின் ஒர் சமூக பரிந்துரை முன்னெடுப்பு முயற்சியாகும். ஆய்வறிக்கையின் முதற்பிரதியினை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பெற்றுக்கொண்டு உரையாற்றுகையில்,

யாழ். மாவட்டத்தில் தேர்தல்களின் போது இயலாமைகளைக் கொண்ட நபர்களுக்கான விசேட ஆயத்தங்கள் துறை சார் திணைக்களங்கினால் மேற்கொள்ளப்பட்டு வருவதனையும், மேலும் எவ்வாறு மாற்றுத்திறனாளிகளின் சமூக பொருளாதார உள்ளடக்கம் பற்றியும் கருத்துக்களை வழங்கியிருந்தார்.

விசேட தேவையுடைய நபர்களுக்கான உள்ளடங்கலான தேர்தல் வசதிப்பாடுகளின் முன்னேற்றம் குறித்து பங்குதாரர்களால் கலந்துரையாடப்பட்டது. மேலும் ஆய்வின் முக்கிய பரிந்துரைகள் துறை சார் அதிகாரிகளிடம் இளைஞர் குழுவினால் முன்வைக்கப்பட்டு அதற்கான தீர்வுகள் சாத்தியக்கூறுகள் பற்றியும் ஆராயப்பட்டன.

இந் நிகழ்வில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர், ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதியின் வட பிராந்திய அலுவலகத்தின் கள ஒருங்கிணைப்பு அலுவலர், யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர், யாழ் மாவட்ட தேர்தல் ஆணைக்குழுவின் உதவி ஆணையாளர், இயலாமைகளை கொண்ட நபர்களுக்காக பணிபுரியும் அமைப்புக்கள், IFES நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட அலுவலர் துறைசார் அரச அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

01__4_.jpg

01__2_.jpg

01__6_.jpg

01__7_.jpg

https://www.virakesari.lk/article/212878

சாவகச்சேரி பிரதேச சபையினரின் அநாகரிகமான செயற்பாடுகள் - கொந்தளிக்கும் மக்கள்!

3 hours 41 minutes ago

Published By: DIGITAL DESK 2

25 APR, 2025 | 10:18 AM

image

கொடிகாமம் சந்தைக்கு அருகாமையில் உள்ள மரத்தை வெட்டியதால் வியாபாரிகள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

புதன்கிழமை (23) இரவு வந்த சாவகச்சேரி பிரதேச சபையினர் இந்த நாசகார வேலையை செய்ததாக வியாபாரிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

தற்போது வெப்பமானது மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. ஆகையால் மரங்கள் நிற்பதன் மூலம்தான் ஓரளவேனும் வெப்பத்தின் தாக்கம் குறைவாக உள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் மக்களின் கருத்தையும் மீறி மரத்தை வெட்டியதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

சந்தையில் உள்ள மலசல கூடங்களும் பயன்படுத்த முடியாமல் மிகவும் அசுத்தமான முறையில் காணப்படுகின்றதாகவும் அவற்றினை சாவகச்சேரி பிரதேச சபையினர் சுத்தம் செய்வதில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன் சந்தையில் சேருகின்ற கழிவுப் பொருட்களை உரிய முறையில் பிரதேச சபையினர் அகற்றுவதில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

மக்களுக்கு சரியான முறையில் சேவைகளை வழங்காத உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் கூறியுள்ளார். எமது இந்த பிரச்சினைக்கு அவர் எடுக்கப்போகின்ற நடவடிக்கை என்ன என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி இல்லாத நிலையில் இவ்வாறான விரும்பத்தகாத விடயங்கள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

VideoCapture_20250425-085614.jpgVideoCapture_20250425-085629.jpg

https://www.virakesari.lk/article/212873

ஜே.வி.பி உடன் தமிழரசு கட்சி இரகசிய உடன்படிக்கை என்கிறார் சிறிகாந்தா

3 hours 46 minutes ago

கனகராசா சரவணன்

தமிழரசு கட்சி மைத்திரிபால சிறிசேன காலத்தில் எவ்வாறு செயற்பட்டார்களோ அவ்வாறே ரணிலுக்கு ஆதரவாக செயற்பட்டது போல அனுரகுமார அரசாங்கத்துடன் இரகசியமான ஒரு உடன்பாட்டின் அடிப்படையிலே செயற்பட தொடங்கியுள்ளதுடன், ஜே.வி.பி தமிழ் எம்.பி.க்களின் பேச்சாளர்களாக சிலர் இயங்கி வருகின்றனர். எனவே சுமந்திரன் கட்சியில் இருக்கும் வரையும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை எதிர்பார்க்க முடியாது. மக்கள் சிந்தித்து செற்பட வேண்டும் என தமிழ் தேசிய கட்சி தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான நல்லதம்பி சிறிகாந்தா தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்குடா தேர்தல் தொகுதியில் ஏறாவூர்பற்று பிரதேச சபைக்கான வேட்பாளர் அறிமுக கூட்டம் களுவன்கேணியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி மற்றும் தமிழ் மக்கள் பேரவை என்பன இணைந்து சைக்கிள் சின்னத்தில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் செவ்வாய்க்கிழமை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்றுது.

இதில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிரேஸ்ட சட்டத்தரணி ந.சிறிகாந்தா, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன், முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி சுகாஸ் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். இதன்போது உரையாற்றிய நல்லதம்பி சிறிகாந்தா இவ்வாறு தெரிவித்தார்

இலங்கை சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து திட்டம் தீட்டி தொடர்ச்சியாக செயற்பட்டு வந்த பௌத்த சிங்கள பேரினவாத அரசாங்கங்களை விட இப்போது அனுரா குமார திசநாயக்கா தலைமையில் இயங்கி கொண்டிருக்கின்ற தேசிய மக்கள் சக்தி என அழைக்கப்படுகின்ற ஜே.வி.பி அரசாங்கம் மிக தீவிரமாக இராஜதந்திர ரீதியாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஜே. ஆர் ஜெயவர்தன, பிறேமதாஸா, மகிந்த ராஜபக்ஷ, சந்திரிக்கா யார் என்பது மக்களுக்கு தெரியும் ஆனால் இப்போது வந்திருக்கின்ற இந்த ஜனாதிபதி இனவாதத்தின் அழகு முகமாக தமிழ் மக்களை வழைத்துப் போடலாம் என திட்டம் தீட்டி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

கடந்த பொது தேர்தலிலே சிங்கள மக்களின் அதிக வாக்குகளால் ஆட்சிக்கு வந்த இவர்கள் தமிழ் மண்ணில் தேர்தல் நுணுக்கங்களையும் நுட்பங்களையும் பயன்படுத்தி சில ஆசனங்களை பெற்று கொண்டிருக்கும் சூழ்நிலையலே உலகத்துக்கு பாருங்கள் உள்ளுராட்சி முடிவுகளை நாங்கள் கனிசமான ஆசனங்ககளை வென்றிருக்கின்றோம் என காட்டமுடியும் என்ற நம்பிக்கையோடு அவர்களது வேட்பாளர்களை தமிழ் மாநிலம் முழுவதும் நிறுத்தியுள்ளனர்.

இலங்கையின் முதல் பிரதமர் டட்லிசேனநாயக்கா, டட்லி, சேர்ஜோன் கொத்தலாவ, மற்றும் சிங்கள சட்டத்தை கொண்டு வந்து இந்த நாட்டிலே தமிழர்களுக்கு அடிபோட்டு உதைபோட்ட பண்டாரநாயக்கா அரசாங்கம் அதன் பின்னர் ஆட்சி செய்த அனைவரும்; பௌத்த சிங்கள பேரினவாதத்தை முழு இலங்கை தீவையும் அரசியல் ரீதியாக கொண்டுவருகின்ற ஒரே நிகழ்சி நிரலில் செயற்பட்டனர்.

அந்த நிகழ்சி நிரலை இப்போதைய அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது இதை தோற்கடிக்க வேண்டும் எனவே எங்கள் தீர்ப்பு எங்கள் முடிவு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தீர்க்கமாக தெரிவிக்கப்பட வேண்டும். என்பதற்காக தமிழ் மக்கள் பேரவை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சைக்கிள் சின்னத்தில் தமிழ் ஈழம் முழுவதும் சிங்கள இனவெறி கும்பலின் வேட்பாளர்களுக்கு எதிராக சுயமரியாதை கொண்ட தமிழர்களான ஆண்களையும் பெண்களையும் இளைஞர்களையும் களத்தில் இறக்கியுள்ளோம்.

இது ஒரு சத்திய போராட்டம் இந்த போரட்டத்தில்; எங்களுடன் இணைந்திருக்க வேண்டிய தமிழ் கட்சிகள் தங்களுடைய சொந்த காரணங்களுக்காக தனித்து போட்டியிடுகின்றனர் காலப்போக்கிலே இந்த கொடியின் கீழ் வருவார்கள.; ஆனால் தமிழரசு கட்சி கடந்த தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கின்றோம் என்று மார்தட்டிக் கொண்டிருக்கின்றது.

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் இந்த தேசிய மக்கள் சக்தியில் தமிழர்களாக போட்டியிட்டு தெரிவாகியவாகிய எம் பிக்களை அரசாங்கம், ஜனாதிபதி, மந்திரிகள் கண்டு கொள்ள வில்லை அவர்கள் குறைகளை அல்லது கோரிக்கைகளை நேரடியாக அரசாங்க தரப்பிடம் சமர்ப்பிக்க முடியாமல் திண்டாடுகின்றனர் எனவே அவர்களுக்காக நாங்கள் அவர்களுடைய கோரிக்கையை அரசாங்கத்துக்கு எடுத்து சொல்ல வேண்டியுள்ளது என பேசினார் இது எவ்வளவு வெட்ககேடு.

எமது மக்களுக்காக பேச வேண்டியவர்கள் இன்று தமிழர்களின் தேசிய அபிலாசைகளுக்கு எதிரா செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற சிங்கள இனவாதிகளின் எடுபிடிகளான இந்த ஜே.வி.பி தமிழ் எம்பிக்களுக்கு பேச்சாளர்களாக தமிழரசு கட்சி சில உறுப்பினர்கள் இயங்கி கொண்டிருக்கின்றனர் எவ்வளவு வெட்கம் கெட்ட நிலமை யாருடைய சார்பிலே இப்போது அரசாங்க தரகர்களாக சிங்கள இனவெறிக்கும்பலின் எம்பிக்களின் பேச்சாளர்களாக தங்களை மாற்றிக் கொண்டிருக்கின்றனர். என்;பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

இவர்கள் அரசியல் தரகர்கள் இவர்களை நம்பி எமது மக்கள் வாக்களிக்கின்ற போது ஒவ்வொரு வாக்கும் உரிமைக்காக உணர்வுக்காக விடுதலைக்காக அளிக்கப்படுகின்றது ஆனால் அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் இன்று தமிழரசு கட்சி தமிழ் மக்களின் அரசில் கோரிக்கையை வலியுறுத்துகின்ற உரிமையை இழந்துள்ளது அவர்;களது கோரிக்கை எல்லாம் தமிழ் இனத்தின் விடுதலை அல்ல.

நாங்களும் நீங்களும் அர்தமற்றுப் போய்விட்டது என கருதுகின்ற இந்திய இலங்கை 13 வது திருத்தத்தை பேசுகின்றனர் இந்த ஒப்பந்தம் தொடர்பாக இலங்கைக்கு இந்தியா தலைவர்கள் வரும் போது அதனை அமுல்படுத்துமாறு கோரியதாக ஊடகங்களில் சொல்லிவிட்டு போகின்றனர். அது என்ன நடக்கின்றது இலங்கை அரசு ஒரு காதால் கேட்டு மறு காதால் விட்டுவிடுகின்றனர்.

இந்தியா விரும்பினால் இந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்த நிர்ப்பந்திக்க முடியும் அதை இந்தியா செய்யமாட்டாது 13 வதை பேசி பேசியே தமிழ் மக்களின் காலம் நீர்த்து போகும் என இந்தியா கணக்கு போடுகின்றது இது யதார்தமான நிலமை

தமிழரசு கட்சி ஆளும் அரசாங்கத்தினுடைய ஏவல் படையாக மாற்றிக் கொண்டிருக்கின்றது இந்த பின்னணியில் தான் தமிழ் மக்களின் அடிப்படை இலச்சியத்தை குறிக்கோளை வலியுறுத்த கூடிய எங்களுக்கு ஒரு உறுதியான அரசியல் தலைமை தேவைப்படுகின்றது என உணர்ந்த காரணத்தினனால் நாங்கள் எல்லோரும் ஓர் அணி திரண்டுள்ளோம்.

நாங்கள் எல்லோரும் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு இருந்தாலும் தமிழ் மக்கள் விடுதலையை விரும்புவது உண்மை என்றால் ஓர் அணி திரண்டு தமிழ் மக்கள் விடுதலை பெறவேண்டும் என்ற உறதியான நிலைப்பாட்டில் நிற்கின்றனர் என்பதை கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் உலகம் அறிய உரத்து சொல்லவேண்டும். அதற்கான சந்தர்பம் தான் இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலை தமிழ் தேசி பேரவை பார்கின்றது.

கடந்த தேர்தலில் தட்டி தவறி கிடைத்த சில ஆசனங்களை வைத்து தமிழ் மக்கள் மாறிவிட்டதாக வெளி உலகத்துக்கு காட்டுகின்றது சுமந்திரனுடைய காருக்கு ஒரு சின்ன பிரச்சனை நடந்தால் அன்றைய ஜனாதிபதி மகிந்த விசாரிப்பார் சுமந்திரன் தமிழினத்தின் சாபக்கேடு அவரை கொண்டு வந்த சிலர் இன்று உயிரோடு இல்லை

கடந்த தேர்தலில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட பின்னர் கூட தமிழரசு கட்சியை தொடர்ந்து நாசப்படுத்தி கொண்டிருக்கின்றார் அவர் தமிழரசு கட்சியில் இருந்து ஆட்டம் போடும்வரை நீங்களும் நாங்களும் எதையும் எதிர்பார்க முடியாது அந்த நிலமை மாற்றப்படக் கூடுமா என்பதை தமிழரசு கட்சி உறுப்பினர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் தமிழரசு கட்சிக்கு எதிராக இந்த தேர்தலிலே வாக்குகள் விழுமாக இருந்தால் அந்த நிலமை மாறும் என்றார்.

https://thinakkural.lk/article/317302

ஊழல் மோசடியற்ற அரச நிர்வாகம் தொடர்பில் நாமல் அறிவுரை வழங்குவது நகைப்புக்குரியது - சுனில் ஹந்துனெத்தி

3 hours 53 minutes ago

24 APR, 2025 | 09:56 PM

image

(இராஜதுரை ஹஷான்)

ஊழல் மோசடியால் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய ராஜபக்ஷர்கள் இன்று ஊழலற்ற வகையில் நாட்டை எவ்வாறு நிர்வகிப்பது என்று எமக்கு குறிப்பிடுகிறார்கள். ஊழல் மோசடியான அரச நிர்வாகத்தை நாங்கள் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம். மீண்டும் அவ்வாறான முறையற்ற நிர்வாகத்தை மக்கள் தோற்றுவிக்கமாட்டார்கள் என கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.

தங்காலை பகுதியில் வியாழக்கிழமை (24) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி, பிரதமர் உட்பட அமைச்சர்கள் எளிமையாக இருப்பதையும் எதிர்கட்சியினர் இன்று  விமர்சிக்கிறார்கள். கடந்த கால ஆட்சியாளர்கள்  மற்றும் அரசாங்கங்கள் சுகபோகமாக செயற்பட்ட காரணத்தால் தான் இந்த நாடு வங்குரோத்து நிலையடைந்தது, ஊழல் மோசடியால் பாதிக்கப்பட்டது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஜனாதிபதி மாளிகையிலோ, அலரிமாளிகையிலோ வசிப்பதில்லை. ஏனெனில் இவற்றை பராமரிப்பதற்கு பல மில்லியன் ரூபா மாதாந்தம் செலவாகும். நாடு வங்குரோத்து நிலையடைந்து மக்கள் கடினமான நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் சுகபோகமாக வாழவில்லை.

ஊழல் மோசடியால் நாட்டை வங்குரோத்துக்கு தள்ளிய ராஜபக்ஷர்கள் இன்று ஊழலற்ற வகையில் அரச நிர்வாகத்தை முன்னெடுப்பது குறித்து எமக்கு குறிப்பிடுகிறார்கள். நாமல் ராஜபக்ஷ ஊழலற்ற வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்குகிறார். இது நகைப்புக்குரியது. இவர்கள் கடந்த காலங்களில் எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

சுகபோகம் மற்றும் ஊழல் மிகுந்த அரசியல் கட்டமைப்பை மக்கள் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்கள். ஆகவே முறையற்ற அந்த நிர்வாக கட்டமைப்பை மீண்டும் தோற்றுவிக்கமாட்டார்கள். அரச செலவுகளை குறைத்துக் கொண்டு நாட்டை நிர்வகிக்கிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/212854

டக்ளஸ் தொடர்பில் சகல விடயங்களும் விசாரிக்கப்படும் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

4 hours 27 minutes ago

டக்ளஸ் தொடர்பில் சகல விடயங்களும் விசாரிக்கப்படும் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

April 25, 2025

‘ஷொப்பிங் பையுடன்’ புத்தளத்துக்கு வந்தவர்கள் இன்று பத்துக் கப்பல்களை வாங்கும் நிலைக்கு வந்துள்ளனர். டக்ளஸ் தேவானந்தா அனைத்து அரசாங்கத்திலும் அமைச்சராக இருந்தார். நாங்கள் எவரையும் பாரபட்சம் பார்க்கமாட்டோம். அனைத்து விடயங்களையும் விசாரிப்போம் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரையொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து எமது பிரச்சனைக்கு தீர்வு காண்பதே உண்மையான அரசியல். உங்களுக்குத் தெரியும் இலங்கையில் சட்டமும் ஒழுங்கும் அதிகாரம் படைத்த சிலருக்கு விதிவிலக்காக இருந்தன. அது சாதாரண மக்களுக்காகவே இருந்தது.

ஆனால், இன்று அந்த நிலை இல்லை. அனைத்தையும் மாற்றியுள்ளோம். உங்களின் வாக்குகளால் அனைத்து விடயங்களும் மாற்றப்பட்டுள்ளன. லஞ்சத்திலும் ஊழலிலும் ஈடுபட்ட பெரும் பணமுதலைகளைப் பிடித்து, அவர்களைத் தண்டிக்கும் வேலைத்திட்டங்கள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முன்னொரு காலத்தில், அமைச்சர்களைக் கண்டு பொலிஸார் ஓடியொழிந்தார்கள். இன்று பொலிஸாருக்குப் பயந்து அமைச்சர்கள் ஓடியொளிகின்றனர்.

ராஜபக்சவே பெரிய முதலை

‘வடமாகாணத்தில் இருக்கின்ற கள்வர்களை நீங்கள் பிடிக்கமாட்டீர்களா? என்று கிளிநொச்சியில் வைத்து ஒருவர் என்னிடம் கேட்டார். நிச்சயமாகப் பிடிப்போம். கள்வர்களைப் பிடிப்பதில் வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற வேறுபாடு எமக்கில்லை.

இங்கும் மன்னாரில் இருந்து புத்தளத்துக்குச்  சொப்பின் பையுடன் வந்தவர்கள் இருக்கின்றனர். இப்போது அவர்களது சொத்துக்கள் மூலம் பத்து கப்பல்களை வாங்க முடியும். டக்ளஸ் எல்லா அரசாங்கத்திலும் அமைச்சராக இருந்தார்.

நாங்கள் யாரையும் பாரபட்சம் பாக்கமாட்டோம். பொதுமக்களின் பணத்தை ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். பெரிய முதலைகள் கொழும்பிலே தான் இருக்கிறார்கள்.

ராஜபக்ச மிகப்பெரிய முதலை. நாமல், யோஷித ஆகியோருக்கு எதிராகப் பொதுமக்களின் பணத்தை சூறையாடியதற்காக வழக்குகள் பதிவுசெய்துள்ளோம்.

எனவே உங்கள் வாக்குகள் மூலம் நாட்டின் சட்டமும் ஒழுங்கும் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது என்று பெருமைகொள்ளுங்கள். நாட்டின் பாதாளக் குழுக்களை உருவாக்கியது ராஜபக்சக்களும், விக்கிரமசிங்கக்களும், பிரேமதாஸக்களுமே.

பொட்டுவைத்தாலும் சோதனை

முன்பு சோதனைச் சாவடிகளில் பெண்கள் பொட்டு வைத்துச்சென்றால் இருமுறை சோதனை செய்வார்கள். பொட்டு இல்லாவிடில் ஒருதரம் செய்வார்கள், முஸ்லிம் மக்கள் என்றால் மூன்றுதரம் சோதனை செய்வார்கள், அதை மாற்றும் செயற்பாட்டை நாம் முன்னெடுத்துள்ளோம்.

நாங்கள் இந்த அரசை பொறுப்பெடுத்து 5 மாதங்களே ஆகின்றது. ஓட்டோவை வேகமாகத் திருப்பலாம் பேருந்தையும் கப்பலையும் வேகமாகத் திருப்புவது கடினமே. பிழையான வழியில் சென்ற தேசத்தையே திருப்ப நாம் முற்பட்டுள்ளோம்.

உங்களுக்கும் எனக்கும் கிடைத்தது சொர்க்கமான பூமி அல்ல. வங்குரோத்தான ஒரு நாடு. ரணில் இந்த நாட்டை ஆண்டபோது டொலரின் பெறுமதி காலை ஒரு விலையிலும் மாலை ஒரு விலையிலும் (?) இருந்தது. இன்று அதில் ஒரு உறுதித்தன்மை காணப்படுகின்றது. உங்கள் பொருளாதார பிரச்சனைகள் தீர்வதற்குக் கொஞ்சகாலம் எடுக்கும். ஆனால், நிச்சயம் தீர்த்துவைப்போம்.

கம்பன்பில ராஜபக்சவின் கோளையாள்

தெற்கின் கம்மன்பில போன்றோர் வடக்கிலும் உள்ளனர். அரசியல் அநாதைகளாக அவர்கள் மாறியுள்ளனர். அவர்கள் இனவாதத்தை விதைக்கிறார்கள்.

ஈஸ்ரர் தாக்குதலில் சந்தேகத்தின் பெயரில்தான் பிள்ளையானைக் கைதுசெய்திருக்கிறோம். அவரைக் கைதுசெய்தவுடன் அவருடன் தொலைபேசி அழைப்பில் கதைக்கவேண்டும் என முதலாவதாக முற்பட்டவர் யார் என்று தெரியுமா? பிள்ளையானின் மனைவி அல்ல. ரணில் விக்கிரமசிங்க.

அவர்கள் இருவரும் நண்பர்களா? ஒருபோதும் இல்லை. கம்மன்பில பிள்ளையானின் சட்டத்தரணியாக ஏன் மாறுகிறார்? அவர் ராயபக்சவின் கோளையாள்.

உயிர்த்தஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளை கண்டறிய விசாரணை நடத்தப்படும்போது ராஜபக்ச, ரணில், சஜித் அனைவரும் குழப்பம் அடைந்துள்ளனர். நாட்டை வளப்படுத்த முற்படும்போது கள்வர்கள் குழப்பமடைந்துள்ளனர்-என்றார்.

https://www.ilakku.org/டக்ளஸ்-தொடர்பில்-சகல-விட/

செம்மணிப் படுகொலை நினைவு முற்றம் - தமிழ் தேசியப் பேரவை திட்டம்

4 hours 33 minutes ago

செம்மணிப் படுகொலை நினைவு முற்றம் - தமிழ் தேசியப் பேரவை திட்டம்

1884061025.jpg

தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த பேரவலங்களை, எதிர்காலச் சந்ததியினருக்குக் கடத்தும் வகையில் செம்மணிப் படுகொலை நினைவு முற்றம் உருவாக்கப்படும். அத்துடன், தமிழின வரலாற்றுடன் தொடர்புடைய விடயங்கள் புனரமைக்கப்படும் என்று தமிழ் தேசியப் பேரவை தெரிவித்துள்ளது.

உள்ளுராட்சித் தேர்தலை முன்னிட்டு தமிழ்த்தேசியப் பேரவை யாழ்.மாநகர சபைக்கான முன்மொழிவுகளை உள்ளிடக்கிய செயற்றிட்ட ஆவணத்தை நேற்று வியாழக்கிழமை காலை  யாழ்ப்பாணத்தில் வெளியிட்டது. அந்த அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், ந.ஸ்ரீகாந்தா ஆகியோரும் முன்னாள் வடமாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன், தென்மராட்சி சிவில் சமூக செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன், வேலணை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் க.நாவலன், யாழ் மாநகர சபை வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

https://newuthayan.com/article/செம்மணிப்_படுகொலை_நினைவு_முற்றம்_-_தமிழ்_தேசியப்_பேரவை_திட்டம்

மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு : நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா? -நாமல் கேள்வி

17 hours 47 minutes ago

Published By: DIGITAL DESK 2 24 APR, 2025 | 05:52 PM

image

(இராஜதுரை ஹஷான்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியதன் பின்னரா அரசாங்கம் இவ்வாறான தீர்மானங்களை எடுக்கிறது என்ற  சந்தேகம் காணப்படுகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை (24) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளோம். பொதுமக்கள் அச்சமில்லாமல் இருக்கலாம் என்று அரசாங்கம் குறிப்பிகிறது. ஆனால் பகிரங்கமாக தற்போது துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இந்த நான்கு மாத காலப்பகுதியில் மாத்திரம் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களால் மாத்திரம் 26 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. கடிதம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தி செய்த மஹிந்த ராஜபக்ஷவை அரசாங்கம் ஏன் இலக்காகக் கொண்டு செயற்படுகிறது.

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி விட்டா அரசாங்கம் இவ்வாறான தீர்மானங்களை எடுக்கிறது. புதுக்கடை நீதிமன்றத்தில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக தேடப்படும் பெண் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.

பாதாள குழுக்களுக்கு இடையிலான முரண்பாடுகள் என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் தேசிய பாதுகாப்பை அலட்சியப்படுத்துகிறது. பாதாள குழுவினராக இருந்தாலும் அவர்களை கொலை செய்யும் உரிமை எவருக்கும் கிடையாது. சட்டத்தின் பிரகாரமே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/212848

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அனைவருக்கும் ஒரே சட்டம்! -ஜனாதிபதி உறுதி

19 hours 59 minutes ago

anura-kumara-dissanayake.jpg?resize=750%

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அனைவருக்கும் ஒரே சட்டம்! -ஜனாதிபதி உறுதி.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அனைவருக்கும் சட்டம் ஒரேமுறையில் நடைமுறைப்படுத்தப்படும்” என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்

இரத்தினபுரியில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர்  இதனைத் தெரிவித்தார். இதன்போது ” தீர்வை வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்காவுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்  வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது எனவும்,  அதன்முதலாவது கூட்டு அறிக்கை விரைவில் வெளியாகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 2025 ஆம் ஆண்டி அதிகளவான ஏற்றுமதி வருமானத்தினை பெறுவதற்கு தாம் எதிர்ப்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அனைவருக்கும் சட்டம் ஒரேமுறையில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், அனைவரும்  சட்டத்திற்கு மதிப்பளித்து  செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்த ஜனாதிபதி  தாம்  செல்வந்தர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கமாட்டோம் எனவும்,  அரசியல் பழிவாங்கல்களை மேற்கொள்ளப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1429399

வட்டுக் கோட்டை பெண் மரணம்: 10 வருடங்களின் பின்னர் குற்றவாளிக்கு மரணதண்டனை விதிப்பு!

20 hours 6 minutes ago

lady.jpg?resize=711%2C375&ssl=1

வட்டுக் கோட்டை பெண் மரணம்: 10 வருடங்களின் பின்னர் குற்றவாளிக்கு மரணதண்டனை விதிப்பு!

கடந்த 2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதுடைய பெண், கொழும்பில் கொலை செய்யப்பட்ட வழக்கில், 10 வருடங்களின் பின்னர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றவாளிக்கு  மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு கொழும்பு செட்டியார் தெருவில் அமைந்துள்ள விடுதியில் பெண்ணொருவரை கொலை செய்து, அவரது உடலை பயணப் பைக்குள் அடைத்து, பின்னர் அதனை கொழும்பு பெஸ்டியன் வீதியில் உள்ள பேருந்து நிறுத்தமொன்றில் விட்டுச் சென்றிருந்த கொலைச் சம்பவம் தொடர்பான தீர்ப்பு இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது.

வழக்கின் சந்தேக நபர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது. சுமார் 10 வருடங்களாக இடம்பெற்று வந்த குறித்த வழக்கின் இறுதி தீர்ப்பினை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இன்று அறிவித்தார்.

சந்தேக நபரான பேட்ரிக் கிருஷ்ணராஜாவிக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கினை தாக்கல் செய்திருந்தது. நீண்ட விசாரணைக்குப் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே தீர்ப்பை அறிவித்து, குற்றச்சாட்டுகளில் பிரதிவாதி குற்றவாளி எனக் கண்டறிந்தார்.

தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்னர் நீதிமன்றத்தில் ஆஜரான பிரதிவாதி, குற்றச்சாட்டுகளில் தான் நிரபராதி என்று குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர் மீது அரசாங்கத் தரப்பால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர் குறித்த குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு, அதன்படி மரண தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

…..

இந்த சம்பவம் 2015ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்ததுடன் பெண்ணின் சடலம் 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டது.

யாழ். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதுடைய கார்த்திகா என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார். சடலமாக மீட்கப்பட்ட பெண் கடந்த 3 வருடங்களாக கொழும்பிலேயே வசித்து வந்திருந்தாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

செட்டியார் தெருவில் உள்ள தங்குமிடத்தில் வைத்தே கார்த்திகா கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் 3 அடி நீளம், 2 அடி அகலம் மற்றும் ஒரு அடி உயரமான கறுப்பு நிற பெட்டியொன்றை சிரமத்துக்கு மத்தியில் சந்தேக நபர் சுமந்துகொண்டு விடுதியில் இருந்து வெளியேறும் CCTV காட்சிகளும் வெளியிடப்பட்டிருந்தன.

சந்தேக நபர் பயணப் பெட்டியுடன் பஸ்டியன் மாவத்தை பஸ் நிலையத்துக்கு சென்றமைக்கான ஆதாரங்களாக CCTV காட்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தன. குறித்த வழக்கின் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் சந்தேச நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

https://athavannews.com/2025/1429429

பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பாகப் பகிரப்படும் போலிச்செய்தி!

20 hours 13 minutes ago

malcolm-cardinal-ranjith.jpg?resize=600%

பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பாகப் பகிரப்படும் போலிச்செய்தி!

பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக, கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானுக்கு விஜயம் செய்துள்ள இந்நிலையில், “பேராயர் மல்கம் ரஞ்சித் அரசியலில் ஈடுபட்டதால், அவரை தமது எதிர்கால நடவடிக்கைகளில் புறக்கணிக்க வத்திக்கான் முடிவெடுத்துள்ளதாக” செய்திகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன.

சகோதர செய்தித்தளமொன்றில்  இச் செய்தி வெளியாகியுள்ளதாக, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும்  நிலையில், குறித்த இணையதளம் அவ்வாறான செய்தியை பிரசுரிக்கவில்லை என  factseeker உறுதிப்படுத்தியுள்ளதுடன், குறித்த இணையதளத்தின் லோகோவை பயன்படுத்தி போலியாக இவ்வாறான ஒரு செய்தி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், இது குறித்து இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் ஊடக பணிப்பாளர் பாதிரியார் ஜூட் கிருஷாந்திடம் FactSeeker வினவியத்தில், “சமூக வலைதளத்தில் பகிரப்படுகின்ற அந்த செய்தியில் எந்தவொரு உண்மையும் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.

அதேபோல், வத்திக்கானின் உத்தியோகபூர்வ இணையதளத்திலோ அல்லது வத்திக்கானுடன் நெருக்கமாக செயற்படும் ஊடகங்கள், நிறுவனங்களோ இவ்வாறான எந்தவொரு செய்தியையும் வெளியிட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1429445

யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவத்துவ பீடக்கற்கை நெறியின் தமிழ் மொழி மூல கற்பித்தலை மாற்றம் செய்யக் கூடாது - ஆறு.திருமுருகன் வேண்டுகோள்

21 hours 30 minutes ago

Published By: DIGITAL DESK 2 24 APR, 2025 | 05:11 PM

image

யாழ் பல்கலைக்கழக சித்தமருத்துவத்துறையை ஆங்கிலமொழி மூலமான  கற்றல் நடவடிக்கையை  மேற்கொள்வதற்கு திட்டமிடுவதாக அறிகிறோம். இது ஆபத்தானது. எமது சுதேசிய மருத்தவப் பாரம்பரியம் பேணிப்பாதுகாப்பதற்காக சித்தமருத்துவ பீட கற்கை நெறி தமிழ்மொழியில் தொடரவேண்டும். இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு  யாழ் பல்கலைக்கழக சமூகம் உறுதிப்படுத்த வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார். 

இது தொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவபீடம் பல சான்றோர். பெருமக்களின் முயற்சியால்  ஆரம்பிக்கப்பட்டது. 

எமது பிரதேசப் பல்கலைக்கழகம் எமது பிரதேச சுதேசிய பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் பெரும் கடமையாகும். எமது சுதேசிய மருத்தவப் பாரம்பரியம் பேணிப்பாதுகாப்பதற்காக யாழ் பல்கலைக் கழக கல்விச் சமூகம் 70 களின் பிற்பகுதியில் எடுத்த முயற்சியின் விளைவாக சித்தமருத்துவத் துறை ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

ஆரம்பத்தில் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள் அயராத முயற்சியால் சித்த மருத்தவ நுல்கள் ஏடுகள் சேகரிக்கப்பட்டு பாரம்பரிய வைத்தியர்களிடம் ஆலோசனை பெற்று பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு இத்துறை ஆரம்பிக்கப்பட்டது. 

இணுவில், வட்டுக்கோட்டை, சில்லாலை, ஏழாலை, பருத்தித்துறை, அளவெட்டி போன்ற ஊர்களில் இருந்து சித்த வைத்தியர்களின் நுல்கள், உதவிகள் பெறப்பட்டன. பல்கலைக் கழக நூலகர் முருகவேள், பதிவாளர் சிவராஜா போன்ற பெருமக்கள் சித்த மருத்துவத் துறைக்கான  வளர்ச்சியில் அருந்துணை செய்துள்ளனர்.

சித்த மருத்துவ பீடம் முற்றுமுழுதாக சுதேசிய வைத்தியப் பாரம்பரியத்தை சிறப்பாக வளர்த்தெடுத்துள்ளார்கள். மேலும் கைதடியிலுள்ள சித்தவைத்திய போதனா வைத்தியசாலையின் வளச்சிக்கும் பெரும்பங்காற்றி வருகின்றார்கள்.  பல நூறு சித்த மருத்துவர்களை தொடர்ந்து உருவாக்கியுள்ளார்கள். 

துறை சார் விரிவுரையாளர்கள் பட்டப்பின் படிப்புகளை மேற்கொண்டு இன்று நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக விளங்குகிறார்கள். 

சகல கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளும் தமிழ்மொழி மூலம் சிறப்பாக நடைபெறுகின்றது. நீண்ட காலமாக எடுத்த முயற்சியின் பயனாக சித்த மருத்துவத் துறை தனிப்பீடமாக உயர்வுபெற்றுள்ளது மேலும் சித்தமருத்துவபீடம் விஸ்தரிப்பதற்காக புதிய நிலம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. 

இந் நிலையில் உயர்கல்வி அமைச்சு யாழ் பல்கலைக்கழக சித்தமருத்துவத்துறையை ஆங்கிலமொழி மூலமான  கற்றல் நடவடிக்கையை  மேற்கொள்வதற்கு திட்டமிடுவதாக  அறிகிறோம். இது ஆபத்தானது.

இது பாரம்பரிய சித்த மருத்துவத்துறையை  அருகிப்போகச் செய்யும் முயற்சியாகும். அகத்தியர் பதிணென் சித்தர்கள், திருமூலர், திருக்குறள், பரராஜசேகரம்  போன்ற மூல நுல்களை மொழி பெயர்ப்பதென்பது முடியாத விடயம். 

இதை அனைவரும் அறிவர். இந் நிலையில் சித்த மருத்துவத்தை ஆங்கில மொழியில் எவ்வாறு கற்பிக்கப் போகிறார்கள்? இவ் விடயம் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக மூதவை, பேரவை மற்றும் தூறைசார்ந்த அறிஞர்கள் விழிப்புடன் செயற்படவேண்டும். 

எக்காரணம் கொண்டும் தமிழ் மொழி மூல கற்பித்தலை மாற்றம் செய்யக் கூடாது. இதனைம் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவிற்கு  யாழ் பல்கலைக்கழக சமூகம் தெளிவுபடுத்த வேண்டும் என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/212837

இராணுவத்தினர் வசமுள்ள யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சொந்தமான காணியை விடுவித்துத் தாருங்கள் - பதில் பணிப்பாளர் யமுனானந்தா

21 hours 44 minutes ago

24 APR, 2025 | 04:46 PM

image

(எம்.நியூட்டன்)

யாழ்ப்பாணம் கொட்டடி - மீனாட்சிபுரத்தில் உள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான காணியை விடுவித்துத் தருமாறு வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் சி.யமுனானந்தா தெரிவித்தார். 

இக்காணி தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 

கொட்டடி - மீனாட்சிபுரம் பகுதியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான 1.4 ஏக்கர் பரப்பளவுள்ள காணி  இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

2010ஆம் ஆண்டு தொடக்கம் இந்த காணியை விடுவித்து தரும்படி கோரிக்கை விடுத்துவருகிற  போதும் இன்று வரை காணி விடுவிக்கப்படவில்லை. 

இக்காணி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மேலதிக அபிவிருத்தி தேவைக்காக ஒதுக்கப்பட்டிருந்த காணியாகும். 

இந்த காணியில் பல வருடங்களாக இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதால் காணியை யாழ். போதனா வைத்தியசாலையின் தேவைக்காக பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. 

இக்காணியை உடனடியாக விடுவித்து தருவதற்கு வட மாகாண ஆளுநரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

யாழ். போதனா வைத்தியசாலையின் தேவைகள் அதிகரித்துவரும் தற்போதைய சூழ்நிலையில் இந்த காணி அவசியமானது எனவும் துரித நடவடிக்கை எடுத்து காணியை விடுவித்து,  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு கைகொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/212828

மக்களை அலைக்கழிக்கும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை! - ஆளுநர் நா.வேதநாயகன்

21 hours 48 minutes ago

Published By: DIGITAL DESK 2 24 APR, 2025 | 04:16 PM

image

ஒரு சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மக்களை அலைக்கழிப்பதை, பழிவாங்குவதை நிறுத்தாவிடின் எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்து தண்டனையை வழங்குவதைத்தவிர வேறுவழியில்லை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் எச்சரிக்கைவிடுத்தார். 

வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுடனான ஏப்ரல் மாதத்துக்கான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை இடம்பெற்றது. 

இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆளுனர், 

தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றபோதும் இங்கு எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது மந்தமாக இருக்கின்றது. இதற்கும் அப்பால் சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்கள் தொடர்பில் மக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன. 

மக்களை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே பதவிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதனை மறந்து சில உள்ளூராட்சி மன்றங்கள் செயற்படுகின்றன. உள்ளூராட்சி மன்றங்கள் சிலவற்றின் செயலர்கள் இழைக்கின்ற தவறுகளால் ஒட்டுமொத்தமாக எல்லோருக்குமே பாதிப்பு ஏற்படுகின்றது. 

எமது நிர்வாகக் கட்டமைப்பிலிருக்கின்ற இவர்களின் தவறுகளுக்காக பாதிக்கப்பட்ட மக்களிடம் எனது மனவருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன்.  முன்னைய ஆட்சிக் காலங்களில் எமது மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு முன்வந்த பலர் பல்வேறு காரணங்களால் குறிப்பாக இலஞ்சம் கோரியமையால் திரும்பிச் சென்றனர். அவர்கள் இப்போதும் மீண்டும் வருகின்றனர். அவர்களுக்குரிய ஒழுங்குகளை நேரிய சிந்தனையுடன் அதிகாரிகள் செய்துகொடுக்கவேண்டும் என ஆளுனர் குறிப்பிட்டார்.

கடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட விடயங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆளுநர் இதன் பின்னர் ஆராய்ந்தார். விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான 10 சதவீதக் கழிவு தொடர்பான விவகாரத்தில் ஒவ்வொரு சந்தையாக நடவடிக்கை எடுக்க தீர்மானித்திருப்பதாக வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் குறிப்பிட்டார். 

அந்தச் சந்தையுடன் தொடர்புடைய விவசாய அமைப்புக்களை முதல் கட்டமாக சந்திக்கவுள்ளதாகத் தெரிவித்தார். வீதிகளில் குப்பைகள் போடும் செயற்பாடு தொடர்கின்ற நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு சி.சி.ரி.வி. கமெராக்களை பொருத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தினார்.

சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக உள்ளூராட்சிமன்றங்களின் செயலர்கள் நடவடிக்கை எடுப்பதற்கு தயக்கம் காண்பிக்கும் நிலைமை காணப்படுவதாக ஆளுநர் குறிப்பிட்டார். 

கடந்த காலங்களில் சட்டவிரோத கட்டுமானங்களை உள்ளூராட்சி மன்றங்கள் நேரடியாக இடித்தழிக்கக் கூடியதாக இருந்ததாகவும் தற்போது நகர அபிவிருத்தி அதிகார சபையின் கட்டுப்பாட்டினுள் உள்ளமையால் தம்மால் வழக்குத் தாக்கல் செய்யக் கூடியதே ஒரே வழி எனக் குறிப்பிட்டனர். 

இதன்போது தொடரப்பட்ட பல வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதாகவும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்கள் தெரிவித்தனர். குறிப்பாக யாழ். மாநகர சபையால் சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு பின்னர் யாழ். மாநகர சபையாலேயே வழக்கு மீளப் பெறப்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன என ஆணையாளர் குறிப்பிட்டார். 

அவ்வாறு மீளப்பெறப்பட்ட வழக்குகள் தொடர்பில் தனித்தனியாக ஆராய்ந்து மீளவும் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார். அதேபோல வெள்ளவாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கட்டடங்கள் சட்டவிரோதமானவையே. அதனை அகற்றுவதற்கான தொடர் நடவடிக்கை உள்ளூராட்சி மன்றங்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் ஆளுநர் அறிவுறுத்தினார். 

மேலும், இந்த விடயங்களில் உள்ளூராட்சி மன்றங்களால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என ஆளுநர் சுட்டிக்காட்டினார். மரம் நடுகையை ஒவ்வொரு உள்ளூராட்சிமன்றங்களும் ஊக்குவித்து செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆளுநர் வலியுறுத்தினார். 

இதனைத் தொடர்ந்து வடக்கின் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களும் கட்டட அனுமதி, ஆதனப் பெயர் மாற்றம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் அவற்றில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை என்பன தொடர்பில் ஆராயப்பட்டன. இவற்றுக்கான அனுமதி வழங்குவதில் உள்ள தாமதங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அவற்றைக் களைவதற்கு தொடர்புடைய திணைக்களங்களை எதிர்காலத்தில் அழைத்து ஆராயவும் தீர்மானிக்கப்பட்டது.

வவுனியா நகர சபை மாநகர சபையாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதற்குரிய ஆளணிகள் வழங்குவது மற்றும் கட்டடங்கள் அமைப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது. 

மேலும், வீதிப் போக்குவரத்துத் தொடர்பில் கடந்த கூட்டத்தில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியிருந்த நிலையில் அது தொடர்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக உள்ளூராட்சிமன்றங்களின் செயலர்கள் தெரிவித்தனர். அதேபோல நகர அபிவிருத்தி அதிகார சபையுடனான விவகாரங்களிலும் முன்னேற்றம் உள்ளதாகவும் குறிப்பிட்டனர். 

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் மூத்த உதவிச் செயலாளர், ஒவ்வொரு மாவட்டங்களினதும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் பங்கேற்றனர்.

https://www.virakesari.lk/article/212824

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராயும் பொலிஸ் குழுவில் ஷானி அபயசேகரவா?நாமல் கடும் எதிர்ப்பு

22 hours 17 minutes ago

Published By: RAJEEBAN 24 APR, 2025 | 11:33 AM

image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளில் ஈடுபட்ட ஒருவரை - ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்ட ஒருவரை, சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட ஒருவரை உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பொலிஸ் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக நியமித்துள்ளமை முற்றிலும் பொருத்தமற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பொலிஸ் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக ஷானி அபயசேகரவை நியமித்த கடும் கேள்விகளை எழுப்புகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளில் ஈடுபட்ட ஒருவரை - ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்ட ஒருவரை, சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட ஒருவரை இந்த குழுவின் முக்கிய பொறுப்பிற்கு நியமித்துள்ளமை முற்றிலும் பொருத்தமற்றது.

இது வெறுமனே நடைமுறை ரீதியாக தவறான நடவடிக்கை மாத்திரமல்ல, இது ஒவ்வொரு நெறிமுறை தரத்தையும் மீறுவதாகும், இது செயல்முறையின் நம்பகதன்மை மீது இருண்ட நிழலை போர்த்துகின்றது.

சட்டரீதியான முடிவுகள் நியாயமான விதத்தில் எடுக்கப்படுவது மாத்திரம் முக்கியமானதல்ல, நீதித்துறையின் மீது மக்களிற்கு நம்பிக்கை ஏற்படுதவற்கு அவ்வாறான முடிவுகள் வெளிப்படையானதாக நியாயமானதாக எடுக்கப்பட்டதாக மக்கள் உணர்வதும் அவசியம்.

மக்களின் நம்பிக்கை ஏற்கனவே மிகவும் பலவீனமான நிலையில் உள்ள சூழலில் இவ்வாறான தீர்மானங்கள் சந்தேகம் மற்றும் ஏமாற்றத்தை ஆழப்படுத்தும்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் இடம்பெற்ற தருணத்தில் ஷானி அபயசேகர சிஐடியின் இயக்குநராக பணியாற்றிக்கொண்டிருந்தார். இந்த தாக்குதல் குறித்த விசாரணைகளில் முக்கியமானவராக காணப்பட்டார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராயும் பொலிஸ் குழுவில் அவரையும் இணைத்திருப்பது, நியாயபூர்வமான கரிசனைகளை எழுப்புகின்றது, குறிப்பாக அறிக்கையில் அவரின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும்போது.

ஷானி அபயசேகரவின் சமீபத்தைய அரசியல் அறிக்கைகள் இந்த விடயத்தை மேலும் குழப்பகரமானதாக்குகின்றது, அவரது பக்கச்சார்பினை தெளிவாக வெளிப்படுத்துகின்றது.

இந்த விசாரணையை மேற்பார்வை செய்யும் அதிகாரிக்கு அரசியல் தொடர்புகள் இருக்கும் சந்தர்ப்பத்தில் பொதுமக்களிற்கு எவ்வாறு நம்பிக்கை ஏற்படும்.

இது ஒரு கட்சி சார்ந்த விடயமல்ல, இது தார்மீக தெளிவு மற்றும் நிறுவன ஒருமைப்பாடு சார்ந்த விடயம். 

உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு வெளிப்படையான நம்பகமான நியாயமான செயல்முறை தேவை.

இதற்கு குறைவான எதுவும் பாதிக்கப்பட்டவர்களிற்கு மாத்திரமல்ல பொறுப்புக்கூறல் என்ற கருத்திற்கே அநீதி இழைப்பதாக அமையும் என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/212790

GjplPbgWwAAwzCl.png

இந்த ஆண்டு 26 பேர் சுட்டுக்கொலை!

1 day 1 hour ago

இந்த ஆண்டு 26 பேர் சுட்டுக்கொலை!

[Thursday 2025-04-24 05:00]

http://seithy.com/siteadmin/upload/gun-240425-seithy.jpg

இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று (22) வரையில் 112 நாட்களில், நாடு முழுவதும் 37 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 26பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த 37 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 23 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் நடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மீதமுள்ள 14 சம்பவங்கள் தனிப்பட்ட தகராறுகள் காரணமாக நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://seithy.com/listAllNews.php?newsID=332400&category=TamilNews&language=tamil

வௌ்ளி, சனி மற்றும் சந்திரனை வெற்றுக்கண்களால் பார்க்கும் அரிய வாய்ப்பு !

1 day 3 hours ago

வௌ்ளி, சனி மற்றும் சந்திரனை வெற்றுக்கண்களால் பார்க்கும் அரிய வாய்ப்பு !

ShanaApril 24, 2025

1745472286-ms-smiley-face-alignment-ccd0de14f074438781bd1f1b896dcc25.jpg

வௌ்ளி, சனி மற்றும் சந்திரன் ஆகிய கோள்கள் பூமிக்கு மிக அருகில் தோன்றும் அரிய வாய்ப்பை நாளை (25) பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரிய காட்சியை நாளை அதிகாலை கிழக்கு வானில் காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பிரிவின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜனக அடஸ்சூரிய, தெரிவித்தார்.

இலங்கையர்கள் இதை தங்கள் வெற்று கண்களால் பார்க்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

"அதிகாலை 5.30 மணியளவில் கிழக்கு வானத்தைப் பார்க்கும்போது, இந்த மூன்று கோள்களும் மிக அருகில் தெரியும்.

இது ஒரு அரிய சந்தர்ப்பம். வெற்றுக் கண்களால் இவ்வளவு நெருக்கமாக அணுகுவதைக் காண்பதும் அரிது. கிழக்கு அடிவானம் தெளிவாக இருக்கும் இடத்தில் இது தெரியும்." என்றார்.

https://www.battinews.com/2025/04/blog-post_100.html

யாழ்.முஸ்லிம் மக்கள் ஒன்றியம் கஜேந்திரகுமாருக்கு ஆதரவு

1 day 3 hours ago

யாழ்.முஸ்லிம் மக்கள் ஒன்றியம் கஜேந்திரகுமாருக்கு ஆதரவு

adminApril 23, 2025

c28a8227-c1c7-49d4-834d-59eda52a9c97.jpe

தேசிய மக்கள் சக்தியின் பொறிக்குள் வீழாது காலச் சூழலுக்கு ஏற்ப தமிழ் தேசியப் பரப்பில் பயணிக்கும் கட்சிகளுடன் ஒன்றிணைந்து  பயணிக்கும் நோக்கில் இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய பேரவைக்கு ஆதரவை வழங்கவுள்ளதாக யாழ்.முஸ்லிம் மக்கள் ஒன்றியம் தலைவர் அப்துல் பரீக் ஆரீப் தெரிவித்துள்ளர்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் பேரவைக்கு ஆதரவு வழங்கும் அறிவிப்பை விடுத்திருந்த யாழ்.முஸ்லிம் மக்கள் ஒன்றியம் அது தொடர்பில் ஊடக சந்திப்பொன்றை இன்றையதினம் புதன்கிழமை யாழ் ஊடக மையத்தில் மேற்கொண்டு இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

அகில இலங்கை தமிழ் காங்கிரசுடன் யாழ் முஸ்லிம் மக்களுக்கு நெருங்கிய தொடர்பும் நட்பும் இருந்துவருகின்றது. அதுமட்டுமல்லாது கொள்கையில் தடுமாறா நிலையுடன் பயணிக்கும் கஜேந்திரகுமார் தலைமையிலான கட்சி எமது மக்களின் நலன்களில் அதிக அக்கறையுடன் பயணித்து வருகின்றது. இவ்வாறான நிலையில் காலத்தின் சூழ்நிலைக்கேற்ப கொள்கையுடன் தமிழ் தேசிய பேரவை இருக்கின்றது.

அதனடிப்படையில் இம்முறை நடைபெறும் உள்ளூராட்சி தேர்தலில் எமது அமைப்பின் ஆதரவை தமிழ் தேசிய பேரவைக்கு வழங்குவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்த அவர் தமது முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு ஆதரவை வழங்கவேண்டும்  என தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பின் போது யாழ்.முஸ்லிம் மக்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் M.S.ரஹீம் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://globaltamilnews.net/2025/214635/

தையிட்டியில் அரசியல் செய்யும் குழுக்களை அகற்ற வேண்டுமெனக் கூறுவது பகிரங்க கொலை அச்சுறுத்தல் - அருட்தந்தை மா.சத்திவேல்

1 day 16 hours ago

23 APR, 2025 | 09:34 PM

image

அரச பயங்கரவாதத்தால் எத்தனையோ பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கான நீதி கிட்ட எந்தவிதமான அறிகுறியும் தென்படாத நிலையில் தையிட்டியில் அரசியல் செய்யும் குழுக்களை அகற்ற வேண்டும் எனக் கூறுவது பகிரங்க கொலை அச்சுறுத்தலாகவே கொள்ளல் வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை  தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"நாட்டில் இனி இனவாதமும் மதவாதமும் இல்லை" எனக் கூறும் தற்போதைய ஜனாதிபதி தையிட்டியில் பேரினவாத மேலாதிக்க மனப்பான்மையுடனும் ஆக்கிரமிப்பு சிந்தனையுடனும் சட்டத்துக்கு விரோதமாக மக்கள் காணிகளில் கட்டப்பட்டுள்ள கட்டட பிரச்சினையை பேரினவாத பிக்குகளின் கைகளில் ஒப்படைத்து பாதிக்கப்பட்ட மக்களை அவர்களின் காலடியில் விழவைப்பதற்கு நினைப்பதும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கடந்த இரண்டு வருட காலமாக போராடும் அரசியல் சக்திகளை அகற்றிட திட்டமிடுவதும் இனவாதமே, மதவாதமே. 

தையிட்டியில் எழுந்துள்ள மக்களின் பிரச்சினை பேரினவாத அரசியலில் ஆணிவேரினால் தோற்றுவிக்கப்பட்டதே. அதனை மூடி மறைத்து அரசியல் பேசும் தற்போதைய ஜனாதிபதி, பண்டாரநாயக்க, ஜெயவர்தன, சந்திரிகா, ராஜபக்ஷ வழியில் வந்த தமிழர்களுக்கு எதிரான அரசியல்வாதி என்பதில் மாற்றுக் கருத்தில்லை எனலாம்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் அண்மித்து கொண்டிருக்கையில் கண்டி தலதா மாளிகையில் வைக்கப்படுள்ள புனித தந்தத்தினை பௌத்த மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தி அரசியல் செய்யும் ஜனாதிபதி வடக்கில் தையிட்டியில் அரசியல் நீதிக்காக போராடுபவர்களை குறுகிய அரசியல் நோக்கமும் கொண்ட அரசியல்வாதிகள் என அடையாளப்படுத்தி குறிப்பாக தெற்கின் மக்களுக்கு அவர்களை இனவாதிகள், மதவாதிகள் என காட்ட நினைப்பது அரசியல் வஞ்சக நோக்கத்துடனாகும்.

தமிழர்களின் குரலாக கொழும்பு தலைநகரில் ஓங்கி குரல் கொடுத்த குமார் பொன்னம்பலம் அவர்கள் பட்டப்பகலில் கொழும்பு நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கான நீதி இன்னும் கிட்டவில்லை. அதே அரச பயங்கரவாதத்தால் எத்தனையோ பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கான நீதி கிட்டும் என்பதற்கான எந்த விதமான அறிகுறியும் தென்படாத நிலையில் தையிட்டியில் அரசியல் செய்யும் குழுக்களை அகற்ற வேண்டும் எனக் கூறுவது பகிரங்க கொலை அச்சுறுத்தலாகவே கொள்ளல் வேண்டும்.

தையிட்டி சட்ட விரோத கட்டடத்துக்கு எதிராகவும் நில மீட்புக்காகவும் கடந்த இரண்டு வருட காலமாக போராடுபவர்களை கடந்த காலங்களில் பொலிஸார் அச்சுறுத்தி அடாவடித்தனம் புரிந்ததோடு, விசாரணை என பொலிஸ் நிலையங்களுக்கும் அழைத்ததுடன் நின்றுவிடாது நீதிமன்றத்திலும் நிறுத்தி போராட்டத்தை தொடருவதற்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தினர். எனினும் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அதற்கு எதிரான உச்சக்கட்ட தொனியாகவே ஜனாதிபதியின் கூற்று அமைந்துள்ளது.

இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் நிகழ்த்திய இனப்படுகொலையோடு தமிழர் தாயக அரசியல் அழிந்து ஒழிந்துவிட்டது என நினைக்கும் பேரினவாதிகளுக்கு வடக்கு மற்றும் கிழக்கில் பேரினவாதத்துக்கு எதிராக நடக்கும் அரசியல் போராட்டங்களும் நீண்ட நாட்களாக தொடரும் காணாமலாக்கப்பட்டோரின் போராட்டத்தை முழுமையாக அடக்கி ஒடுக்குவதற்கு தையிட்டி போராட்டத்தில் தெரியும் அரசியல் தலைமைத்துவத்தையும், அது நாடாளுமன்றத்தில் எழுப்பும் குரலையும் பயங்கரவாத குரலாக சித்திரிக்க எடுக்கும் முயற்சிக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நன்கு பாடம் புகட்ட வேண்டும்.

தமிழர்களின் அரசியலை அழிக்க பல்வேறு வடிவங்களில் இன அழிப்பை தொடர்ந்து இறுதியில் இனப்படுகொலை புரிந்தவர்கள் தொடர்ந்தும் தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்க படை தளங்களை விரிவாக்கி பலப்படுத்தியவர்கள் இறுதியில் தமது ஆக்கிரமிப்பு நோக்கத்தினை நிறைவேற்ற படையினரின் பாதுகாப்போடு பௌத்த சிங்கள அடையாளங்களை விதைக்கத் தொடங்கிவிட்டனர்.

இது விடயங்களில் கடந்த காலங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அங்கீகாரம் அளித்து ஆதரித்த மக்கள் விடுதலை முன்னணியினர் தற்போது தேசிய மக்கள் சக்தி முகத்தோடு வடக்கு, கிழக்கு தமிழர்களின் அரசியலை அழித்திடும் அரசியலை வேகப்படுத்திட முகாம் அமைத்து அரசியல் யுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். இவர்கள் தமது அரசியலுக்கு எதிரானவர்கள் என நினைப்பவர்களை அடக்குவதற்கு இனவாத சாயம் பூச முற்படுவதோடு இவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தையும் பாவிக்க தயங்க மாட்டார்கள். இதன் மூலம் தமிழர்களை அரசியல் நீக்கம் செய்வதே இவர்களது நோக்கம் எனலாம்.

நீண்ட கால இன அழிப்புக்கும், இறுதி இனப்படுகொலைக்கும், நில ஆக்கிரமிப்புக்கும், வலிந்து காணாமல் ஆக்கப்படுவதற்கும், பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்வதற்கும், பேரினவாத மதவாதிகள் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதற்கும் காரணமாக இருந்தவர்கள் தற்போது மேடை அமைத்து நீலிக்கண்ணீர் வடித்து எங்களுக்கு வாக்களித்தால் உங்களின் கண்ணீரை துடைப்போம் என்று கூறுவது மீண்டும் மீண்டும் தமிழர்களை அழிவுக்குள் தள்ளுவதற்கே.

எனவே எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முதலை கண்ணீர் வடிப்பவர்களையும், தனது கட்சிக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் அரசியல் துரோகம் செய்பவர்களையும், அற்ப சலுகைகளுக்காக மறைமுகமாக தமிழர்களின் தேசியத்துக்கு எதிராகவும் செயல்படும் அரசியல் துரோகிகளையும் அடையாளம் கண்டு துடைத்தெறிந்து தமிழர் நிலம் காக்கவும் தேசியம் காக்கவும் துணிச்சலோடு குரல் எழுப்புவோர்க்கு எமது வாக்கு பலத்தை வெளிப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். தேசத்தின் ஒற்றுமையே தேசியத்தின் வலிமை என்பதை நினைவில் கொள்வோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/212759

வலி.வடக்கில் விவசாயம் செய்ய இராணுவத்தினரின் பாதுகாப்பு வேலிகள் இடையூறாக இருக்கின்றன - வடக்கு ஆளுநர் 

1 day 17 hours ago

23 APR, 2025 | 02:26 PM

image

(எம்.நியூட்டன்)

விடுவிக்கப்பட்ட  இடங்களில் விவசாயம் செய்ய இராணுவத்தினரின் பாதுகாப்பு வேலிகள் இடையூறாக இருக்கின்றன. இவை தொடர்பாக ஆய்வுகள் செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் வலி.வடக்கு பிரதேச செயலர் பிரிவில் கடந்த ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்ட காணிகளில் விவசாயச் செய்கையை விரைவுபடுத்துவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (22)  நடைபெற்றது. 

இந்த கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர் வேதநாயகன், கடந்த ஆண்டு ஆரம்பத்தில் மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்கென காணிகள் அனுமதிக்கப்பட்டிருந்தன. ஆனால், அந்தக் காணிகளில் மக்கள் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பல இடர்ப்பாடுகளை எதிர்கொள்கின்றனர். இது தொடர்பாக விவசாயிகளால் எமக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. குறிப்பாக, அவர்களுக்கான மின்சார வசதி இன்னும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. மின்சார வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு பாதைகள் அமைக்கப்பட வேண்டும் என மின்சார சபையினர் கோருவதாகத் தெரிவித்தார். 

download__3_.jpg

பாதைகள் அமைப்பதற்கு சில இடங்களில் இராணுவத்தினரின் பாதுகாப்பு வேலிகள் இடையூறாக இருக்கின்றன. எனவே, இந்த விடயங்களைக் களைந்து விவசாயிகள் முழுமையாக விவசாயம் மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

வீதிகள் செப்பனிடுவதற்கு இடையூறாக உள்ள பாதுகாப்பு வேலிகளை அகற்றுவது தொடர்பில் உரிய இடங்களுக்கு இராணுவத்தினருடன் நேரில் சென்று பார்வையிடுவதற்கும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

அதற்கு அமைய, விரைவில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வீதி, வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான வீதிகள், பிரதேச சபையின் வீதிகள் என்பவற்றை உடனடியாக செப்பனிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளன என்று இதன்போது யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன் குறிப்பிட்டார். 

மேலும், மின்சார இணைப்புக்கான கோரிக்கை கடிதத்தை முன்வைக்குமாறு மின்சார சபையினர் கேட்டுக்கொண்டனர். அதேவேளை பயனாளிகளின் மின்சார இணைப்புக் கட்டணத்தை வழங்குவதற்கும் யாழ். மாவட்டச் செயலர் இணக்கம் தெரிவித்தார். 

இதேவேளை, பயனாளிகள் விவசாயப் பணிகளில் ஈடுபடுவதற்காக காலையில் வந்து மாலையில் செல்ல வேண்டும் என்ற நிலைமை காணப்படுகிறது எனவும், அவர்கள் அங்கு கட்டுமானப் பணிகளில் ஈடுபட அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் இராணுவத்தினரிடம் முன்வைக்கப்பட்டது. அந்த மனிதாபிமானக் கோரிக்கை தொடர்பாகவும் கலந்துரையாடி பதிலளிப்பதாக இராணுவத்தினர் குறிப்பிட்டனர். 

மேலும், விவசாயக் கிணறுகளை புனரமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொடர் நடவடிக்கைகளை இராணுவத்தினருடனும் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடனும் வலி. வடக்கு பிரதேச செயலர் தலைமையில் கலந்துரையாடுமாறு ஆளுநர் சபையில் பணிப்புரை விடுத்தார். 

இந்தக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், யாழ். மாவட்டச் செயலர், வலி.வடக்கு பிரதேச செயலர், வலி.வடக்கு பிரதேச சபைச் செயலரின் பிரதிநிதி, வீதி அபிவிருத்தி அதிகார சபையினர், வீதி அபிவிருத்தித் திணைக்கள மாகாணப் பணிப்பாளர், இராணுவத்தினர் ஆகியோர் பங்கேற்றனர்.

https://www.virakesari.lk/article/212720

ஆயுதங்கள், இராணுவ சீருடையை ஒத்த ஆடைகளுடன் சந்தேகநபர் கைது!

1 day 17 hours ago

23 APR, 2025 | 03:09 PM

image

தம்பகல்ல பொலிஸ் பிரிவின் பஹலவத்த பகுதியில் வீடொன்றை பொலிஸார் சோதனையிட்டபோது, ஆயுதங்கள் மற்றும் இராணுவ சீருடையை ஒத்த ஆடைகளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பஹலவத்த, தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடமிருந்து கைக்குண்டு, 09 மிமீ வகை 05 வெடிமருந்துகள், 25 T56 வெடிமருந்துகள், 03 T56 வெடிமருந்துகள், 01 M16 வெடிமருந்துகள், 04 வெடிமருந்து பைகள், 03 பெல்ட் ஆர்டர்கள் மற்றும் இராணுவ சீருடையை ஒத்த ஆடைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தம்பகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/212719

Checked
Fri, 04/25/2025 - 09:17
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr