ஊர்ப்புதினம்

தர்மலிங்கம் சுரேஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவில் முன்னிலை - ஐந்து மணிநேர விசாரணையின் பிறகு விடுவிப்பு

1 week 2 days ago

22 Oct, 2025 | 04:35 PM

image

கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் பணியகத்திற்கு வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்கு வரவழைக்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் இன்று புதன்கிழமை (22) ஆஜராகி 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறியுள்ளார்.

மட்டக்களப்பைச் சேர்ந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் வீட்டிற்கு கடந்த 18ஆம் திகதி சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர், முகநூலில் கட்சியின் தலைவர், விடுதலைப் புலிகளின் தலைவர் ஆகிய இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றியதாகவும் அது தொடர்பான விசாரணைக்கு கொழும்புக்கு வருமாறும் கடிதத்தை வழங்கினர்.

இந்நிலையில் கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணியகத்துக்கு இன்று காலை சென்ற அவரிடம் சுமார் 5 மணித்தியாலங்களுக்கு மேலாக விசாரணை இடம்பெற்றதாகவும் வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் அங்கிருந்து மாலை 3 மணியளவில் வெளியேறியுள்ளதாக தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

தர்மலிங்கம் சுரேஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவில் முன்னிலை - ஐந்து மணிநேர விசாரணையின் பிறகு விடுவிப்பு | Virakesari.lk

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு!

1 week 2 days ago

New-Project-226.jpg?resize=750%2C375&ssl

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு!

வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் இன்று காலை (22) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) உறுப்பினரும் வெலிகம பிரதேச சபையின் தலைவருமான லசந்த விக்ரமசேகர உயிரிழந்தார்.

வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் வைத்து துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடாத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள், தவிசாளரிடம் கையொப்பம் பெற வந்ததாகக் கூறி, பிரதேச சபை வளாகத்திற்குள் பிரவேசித்துள்ளமை தெரியவந்துள்ளது.

பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகர நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடாத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து அவர் உடனடியாக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

https://athavannews.com/2025/1450861

கெஹெல்பத்தர பத்மேவின் 50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்!

1 week 2 days ago

download-1-11.jpg?resize=274%2C184&ssl=1

கெஹெல்பத்தர பத்மேவின் 50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்!

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு தலைவரான ‘கெஹெல்பத்தர பத்மே’ வின் 29 பேர்ச்சஸ் காணியும், 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வு பிரிவினரால் இன்று(22) இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, கெஹெல்பத்தர பத்மேவிற்கு சொந்தமானதாக அடையாளம் காணப்பட்ட சொத்துக்களான
மடெல்கமுவ, படபொத்த, உடுகம்பொல என்ற முகவரியில் உள்ள விடுதிக்குப் பின்னால் அமைந்துள்ள 20 பரப்பு காணி, அதே முகவரியில் உள்ள அதே விடுதி வளாகத்தில் அமைந்துள்ள ஆறு அறைகளைக் கொண்ட பகுதியளவு முடிக்கப்பட்ட கட்டிடம் என்பனவே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சொத்துக்கள் தொடர்பான தொடர்புடைய உண்மைகள் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்புடைய சொத்துக்கள் இன்று (22) அதிகாரப்பூர்வமாக பறிமுதல் செய்யப்பட்டன.

அண்மையில், இந்தோனேசியாவில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகயில் கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட பாதாள உலக குழுவின் செயல்பாட்டாளர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களிடம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளுக்கமைய, பல்வேறு நடவடிக்கைகளை பொலிஸாரும் குற்றப் புலனாய்வு பிரிவினரும் முன்னெடுத்து வருகின்றனர்.

https://athavannews.com/2025/1450875

போதைப் பொருள் கடத்தலின் பின்னணியில் உயர் அதிகாரிகள்? – விசாரணை சி.ஐ.டி.யிடம்!

1 week 2 days ago

New-Project-235.jpg?resize=750%2C375&ssl

போதைப் பொருள் கடத்தலின் பின்னணியில் உயர் அதிகாரிகள்? – விசாரணை சி.ஐ.டி.யிடம்!

போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் முன்னாள் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் உயர் அதிகாரிகள் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிஐடி) விசாரணையை ஆரம்பித்துள்ளது.

வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பில் உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான ஏஎஸ்பி எஃப்.யு. வுட்லர் இந்த விடயத்தை வெளிப்படுத்தினார்.

தவறான செயல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட எந்தவொரு நபரும், தகுதி அல்லது பதவியைப் பொருட்படுத்தாமல் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் உறுதிபடுத்தினார்.

கடல் வழியாக அதிக அளவில் மெத்தம்பேட்டமைன் (ICE) மற்றும் ஹாஷிஷ் கடத்தப்படுவது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த விசாரணை நடத்தப்பட்டது.

முன்னாள் சிரேஷ்ட போதைப்பொருள் அதிகாரிகள் இந்த சட்டவிரோத பொருட்களை கொண்டு செல்வதற்கு உதவியதாக ஒரு நபர் குற்றம் சாட்டியதாக சமூக ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டி ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

https://athavannews.com/2025/1450897

கிண்ணியாவில் நிலத் தகராறில் 30 மாடுகள் மீது வாள்வெட்டு!

1 week 2 days ago

Screenshot-2025-10-22-112729.jpg?resize=

கிண்ணியாவில் நிலத் தகராறில் 30 மாடுகள் மீது வாள்வெட்டு!

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக கிண்ணியா பிரதேசத்தில் நிலவும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் வேளாண்மை விவசாயிகளுக்கும் இடையேயான நீண்டகால நில மீட்புப் போராட்டத்தின் உச்சகட்டமாக,
30 மாடுகள் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிண்ணியா குரங்குபாஞ்சான் இரட்டைக்குளம் பகுதியில் வைத்து நேற்று காலை(21) இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, கிண்ணியா பிரதேச கால்நடை விவசாயிகளுக்கும் வேளாண்மை விவசாயிகளுக்கும் இடையிலான நில மீட்புப் போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

சுமார் 2876 ஹெக்டேயர் நிலம் மேய்ச்சல் தரைக்கு உரியது என மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த மே மாதம் 28 ஆம் திகதி தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பானது, கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரையின்றிப் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வந்த கிண்ணியா கால்நடை விவசாயிகளுக்கு வாழ்வில் விடிவை ஏற்படுத்தியிருப்பதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

எனினும், இத்தீர்ப்பைத் தொடர்ந்து, கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி கமநல சேவை நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள், தங்களுக்குரிய விவசாய நிலங்களில் பயிர் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கித் தொடர்ந்து விவசாயம் செய்ய அனுமதிக்குமாறு கோரி தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்க, நீதிமன்றத்தால் அடையாளப்படுத்தப்பட்ட குறித்த பகுதிக்குள் விவசாயிகளை வேளாண்மை செய்ய அனுமதிக்க வேண்டாம் என கமநல சேவை திணைக்களங்களுக்கு கிண்ணியா பிரதேச செயலாளரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையிலேயே இரு தரப்பினருக்கும் இடையில் தொடர்ந்து முரண்பாடு ஏற்பட்டு வருகின்ற நிலையில்
இந்த பின்னணியில் நேற்றையதினம் 30 மாடுகள் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் இது குறித்து கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதன்படி, 30 மாடுகள் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளதுடன் 12 மாடுகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் நான்கு மாடுகளைக் காணவில்லை எனவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாள் வெட்டுக்கு இலக்கான மாடுகள், கால்நடைகள் பராமரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து கால்நடை வளர்ப்பாளர்கள் மிகுந்த கவலை தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணியிலும் பதற்ற நிலை நீடிப்பதை இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

இதேவேளை, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://athavannews.com/2025/1450852

வன்முறையைத் தூண்டும் பிறந்த நாள் கொண்டாட்ட காணொளி பதிவேற்றம் - வீடு சுற்றிவளைப்பு

1 week 2 days ago

இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டியவரின் வீடு பொலிஸாரால் சுற்றிவளைப்பு

Published By: Digital Desk 1

22 Oct, 2025 | 10:01 AM

image

இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டும் வகையில் செயற்பட்ட நபர் ஒருவரின் வீடு இன்று (22) யாழ்ப்பாணத்தில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய யாழ்ப்பாணம் முளவை சந்தி அருகில் உள்ள வீடொன்றிலேயே இன்று அதிகாலை சோதனை நடத்தப்பட்டது.

அண்மைக்காலத்தில் இளைஞர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் தனது பிறந்த நாள் கொண்டாட்ட காணொளியை பதிவேற்றம் செய்தமை, சட்டவிரோத சொத்துக் குவிப்பு போன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அந்நபரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

சோதனை நடவடிக்கையின்போது குறித்த நபர் வீட்டில் இல்லாத நிலையில், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் பொலிஸ் நிலையத்தில்  தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/228345

யாழில் போதைக்கு அடிமையான யுவதி உயிர்மாய்ப்பு!

1 week 2 days ago

யாழில் போதைக்கு அடிமையான யுவதி உயிர்மாய்ப்பு!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 20 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த யுவதியும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவருகிறது.

இவர் கடந்த 15ஆம் திகதி தனக்கு தானே தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதன்போது தீயை அணைத்த காதலன், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த யுவதி நேற்றைய தினம் (20) உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

சாட்சிகளை சாவகச்சேரி பொலிஸார் நெறிப்படுத்தினர்.

https://akkinikkunchu.com/?p=345520

வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார்? – தேசிய மக்கள் சக்தி தீவிர ஆலோசனை…

1 week 2 days ago

வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார்? – தேசிய மக்கள் சக்தி தீவிர ஆலோசனை…

October 22, 2025

முதலமைச்சர் வேட்பாளர் யார் என பிரதான கட்சிகள் தீவிர ஆலோசனை நடாத்தி வரும் நிலையில், வரும் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாகக் களமிறங்கக்கூடிய நபர்கள் தொடர்பிலும் பிரதான கட்சிகள் தீவிர கவனம் செலுத்தியுள்ளன.

அந்த வகையில் ஆளும் தேசிய மக்கள் சக்தி, 9 மாகாணங்களிலும் தேசிய மக்கள் சக்தியாக திசைக்காட்டி சின்னத்தின் கீழ் களமிறங்கவுள்ளது.

குறிப்பாக வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக யாரை களமிறக்குவது என்பது பற்றி தேசிய மக்கள் சக்தி தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது. உத்தேச முதலமைச்சர் பட்டியலில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் சுந்தரமூர்த்தி கபிலனின் பெயர் முன்னணியில் இருப்பதாகத் தெரியவருகின்றது. ஏனைய சிலரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன.

உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது இவர், யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு மாகாண முதலமைச்சரைத் தெரிவு செய்யும் பொறுப்பு அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் இராமலிங்கம் சந்திரசேகரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கட்சி தீர்மானிக்கும் பட்சத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்குத் தயார் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளார்.

https://www.ilakku.org/வட-மாகாண-முதலமைச்சர்-வேட-2/

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்!

1 week 2 days ago

New-Project-224.jpg?resize=750%2C375&ssl

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்!

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த  தனியார் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தானது மன்னார்-மதவாச்சி பிரதான வீதியின் வவுனியா, பரையநாளன் குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகட்டு பகுதியில் இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக செட்டிக்குளம் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

குறித்த சொகுசு பேருந்து  வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிய வருகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பரையநாளன் குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://athavannews.com/2025/1450843

தனியார் காணியில் இராணுவத்தினரின் வைத்தியசாலை – சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் சுமந்திரன்

1 week 2 days ago

தனியார் காணியில் இராணுவத்தினரின் வைத்தியசாலை – சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் சுமந்திரன்

adminOctober 21, 2025

00112-1.jpg?fit=1170%2C658&ssl=1

யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் உள்ள தனியார் காணியில் எவ்வித அனுமதியின்றி அமைக்கப்படும் இராணுவ வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வசாவிளானில் உயர் பாதுகாப்பு வலயம் என இராணுவத்தினரால் கையகப்படுத்தி வைத்திருக்கும் தனியார் காணியில் சட்ட விரோதமான முறையில் இராணுவ வைத்தியசாலை அமைக்கப்பட்டு வரும் நிலையில் காணி உரிமையாளரின் கோரிக்கையை அடுத்து தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் , ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடமாகாண சபை அவைத்தலைவருமான  சி.வீ.கே சிவஞானம் மற்றும் வலி வடக்கு தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோர் காணி உரிமையாளருடன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காணி அமைந்துள்ள பகுதிக்கு நேரில் சென்று , உயர் பாதுகாப்பு வலய எல்லையுடன் நின்று , வைத்தியசாலையின் கட்டட வேலைகளை நேரில் பார்வையிட்டனர்.

அதன் பின்னர்  காணி உரிமையாளருடன் கலந்துரையாடிய எம்.ஏ. சுமந்திரன் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் வைத்தியசாலை கட்டட வேலைக்கு எதிராக மிக விரைவில் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக  உறுதியளித்தார்.

00112-2.jpg?resize=800%2C450&ssl=1

https://globaltamilnews.net/2025/221808/

கிண்ணியாவில் மேய்ச்சல் தரைக்கான தகராறில் 30 மாடுகள் வாள்வெட்டுக்கு இலக்கு

1 week 3 days ago

கிண்ணியா பிரதேசத்தில் நிலவும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் வேளாண்மை விவசாயிகளுக்கும் இடையேயான நீண்டகால நில மீட்புப் போராட்டத்தின் உச்சகட்டமாக, இன்று (ஒக்டோபர் 21) காலை 30 மாடுகள் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ள அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கிண்ணியா - குரங்குபாஞ்சான், இரட்டைக்குளம் பகுதியில் வைத்து இன்று காலை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் இது குறித்து கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பாதிப்புகளின் விவரங்கள்

30 மாடுகள் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளன.

12 மாடுகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் நான்கு மாடுகளைக் காணவில்லை எனவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிண்ணியாவில் மேய்ச்சல் தரைக்கான தகராறில் 30 மாடுகள் வாள்வெட்டுக்கு இலக்கு | 30 Cows Targeted Slaughter Grazing Land In Kinniya

வாள் வெட்டுக்கு இலக்கான மாடுகள், கால்நடைகள் பராமரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கிண்ணியா போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

நீண்டகால நிலப் போராட்டம்

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, கிண்ணியா பிரதேச கால்நடை விவசாயிகளுக்கும் வேளாண்மை விவசாயிகளுக்கும் இடையிலான நில மீட்புப் போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில், 2876 ஹெக்டேயர் நிலம் மேய்ச்சல் தரைக்கு உரியது என மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த மே மாதம் 28 ஆம் திகதி தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பானது, கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரையின்றிப் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வந்த கிண்ணியா கால்நடை விவசாயிகளுக்கு வாழ்வில் விடிவை ஏற்படுத்தியிருப்பதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

கிண்ணியாவில் மேய்ச்சல் தரைக்கான தகராறில் 30 மாடுகள் வாள்வெட்டுக்கு இலக்கு | 30 Cows Targeted Slaughter Grazing Land In Kinniya

எனினும், இத்தீர்ப்பைத் தொடர்ந்து, கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி கமநல சேவை நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள், தங்களுக்குரிய விவசாய நிலங்களில் பயிர் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கித் தொடர்ந்து விவசாயம் செய்ய அனுமதிக்குமாறு கோரி தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்க, நீதிமன்றத்தால் அடையாளப்படுத்தப்பட்ட குறித்த பகுதிக்குள் விவசாயிகளை வேளாண்மை செய்ய அனுமதிக்க வேண்டாம் என கமநல சேவை திணைக்களங்களுக்கு கிண்ணியா பிரதேச செயலாளரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையிலேயே இன்றைய தினம் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து கால்நடை வளர்ப்பாளர்கள் மிகுந்த கவலை தெரிவித்துள்ளனர். நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணியிலும் பதற்ற நிலை நீடிப்பதை இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


Tamilwin
No image previewகிண்ணியாவில் மேய்ச்சல் தரைக்கான தகராறில் 30 மாடுகள் வாள்வ...
கிண்ணியா பிரதேசத்தில் நிலவும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் வேளாண்மை விவசாயிகளுக்கும் இடையேயான நீண்டகால நில மீட்புப் போர...

பாடசாலைப் புத்தகங்களை அச்சிடும் பணிகள் நிற்கவில்லை! ; புதிய கல்வி சீர்திருத்தங்களால் சில தரங்களில் மாற்றம் - கல்வி அமைச்சு

1 week 3 days ago

Published By: Digital Desk 1

21 Oct, 2025 | 04:01 PM

image

பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகள் நிறுத்தப்படவில்லை எனவும், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின் கீழ் சில தரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2 முதல் 5 மற்றும் 7 முதல் 11ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் ஜனவரியில் நடைமுறைக்கு வரும் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் வராததால், அவை வழங்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவ தெரிவித்துள்ளார்.

இருப்பினும், கல்வி சீர்திருத்தங்களின்படி, 1 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்றும், அதற்கு பதிலாக, அவை எளிமைப்படுத்தப்பட்ட வகையில் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர் கையேடுகளை அச்சிடும் பணிகளும் நிறுத்தப்படவில்லை எனவும், புதிய கல்வி சீர்திருத்தங்களின் தேவைகளுக்கு ஏற்ப, அவை அச்சிடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

2 முதல் 5 மற்றும் 7 முதல் 11ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களையும் 1 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கான தொகுதிப் பொருட்களை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2025 நவம்பர் 15ஆம் திகதிக்குள் பணிகள் நிறைவடையவுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவ தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு, அவற்றை விநியோகிக்கும் பணிகளை டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/228283

யாழில் மழையுடன் சேர்ந்து விழுந்த மீன்கள்!

1 week 3 days ago

Published By: Vishnu

21 Oct, 2025 | 07:48 PM

image

யாழில் பொழிந்த மழையுடன் மீன்களும் சேர்ந்து விழுந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் தொடர்ச்சியாக யாழில் மழை பொழிந்தது. இந்த மழையுடன் சேர்ந்து மீன்களும் விழுந்தன. அந்த மீன்களை மக்கள் பிடிப்பதை அவதானிக்க முடிந்தது. 

கடந்த காலங்களிலும் இவ்வாறு மழையுடன் மீன்கள் விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VID-20251021-WA0085_1_.jpg

VID-20251021-WA0085.jpg

VID-20251021-WA0086.jpg

https://www.virakesari.lk/article/228328

LGBTQI சட்டத் திருத்தம் குறித்து அமைச்சர் விளக்கம்

1 week 3 days ago

Simrith   / 2025 ஒக்டோபர் 21 , பி.ப. 02:36 - 0     - 24

messenger sharing button

facebook sharing button

digg sharing button

email sharing button

தேசிய மக்கள் சக்தி (NPP) கொள்கைப் பிரகடனத்தில் LGBTQI சமூகத்தை குறிவைக்கும் சட்டங்களைத் திருத்துவதற்கான காலக்கெடுவை அரசாங்கம் நிர்ணயிக்கவில்லை என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

"இயற்கைக்கு மாறான குற்றங்கள்" மற்றும் "நபர்களுக்கு இடையேயான மொத்த அநாகரீக செயல்கள்" என்ற தலைப்பில் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 365 மற்றும் 365A ஆகியவை வரலாற்று ரீதியாக LGBTQI சமூகத்தை குறிவைத்து துன்புறுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

NPP தேர்தல் அறிக்கையில், ஒருமித்த ஒரே பாலின நடத்தையைத் தண்டிக்கும் பிரிவு 365A ஐ ரத்து செய்வதற்கான உறுதிமொழியும் அடங்கும். பெண்கள், குழந்தைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட குழுக்களை ஒடுக்குவதாக ஆர்வலர்கள் கூறும் பிரிவுகள் 365 மற்றும் 365A உள்ளிட்ட பிற பாகுபாடான சட்டங்களைத் திருத்துவதற்கும் இது உறுதியளிக்கிறது.

2023 ஆம் ஆண்டில், இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான பிரேம்நாத் சி. டோலவத்தே, தண்டனைச் சட்டத்தின் இந்தப் பிரிவுகளை குற்றமற்றதாக்குவதற்காக ஒரு தனிநபர் உறுப்பினர் சட்டமூலத்தை அறிமுகப்படுத்தினார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நாணயக்காரவிடம், இந்தச் சட்டங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் ஏதேனும் உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளதா என்று கேட்கப்பட்டது.

"இந்தச் சட்டங்களைத் திருத்துவதற்கு இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாலினம் காரணமாக ஒரு நபர் ஓரங்கட்டப்பட வேண்டும் என்று நாங்கள் நம்பாததால், அது எங்கள் அறிக்கையில் உள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். எங்கள் கொள்கை அப்படியே உள்ளது, ஆனால் இது எப்போது கொண்டு வரப்படும் என்பதற்கான காலக்கெடுவை நாங்கள் வகுக்கவில்லை," என்று அவர் கூறினார்.

கொள்கை தெளிவாக இருந்தாலும், சட்டமன்ற மாற்றங்களை இயற்றுவதற்கு முன் பொதுமக்களின் எதிர்வினையை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நாணயக்கார மேலும் கூறினார்.

"LGBT சமூகத்தினர் என்னுடன் பேசியுள்ளனர், இலங்கை மனித உரிமைகள் ஆணையரும் அப்படித்தான். எங்கள் கொள்கை மாறாமல் உள்ளது என்பதே எனது பதிலாக இருந்தது. இருப்பினும், எந்தவொரு சட்டத்தையும் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, இந்த விவகாரம் குறித்து நன்கு அறியப்பட்ட மற்றும் உண்மை நிறைந்த பொது விவாதம் நடத்தப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.

அரசியலில் நேரம் மிக முக்கியமானது என்றும், இது தொடர்பான எந்தவொரு முடிவும் இறுதியில் அமைச்சரவையிடமிருந்து வரும் என்றும் அவர் கூறினார்.

"அமைச்சரவையே இதற்கான நேரத்தை முடிவு செய்யும். எனவே, அடுத்த 6 மாதங்களுக்குள் இது கொண்டு வரப்படும் என்று நான் மட்டும் ஒரு அறிக்கையை வெளியிட முடியாது," என்று நாணயக்கார கூறினார். 

Tamilmirror Online || LGBTQI சட்டத் திருத்தம் குறித்து அமைச்சர் விளக்கம்

யாழ். போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை சேவைகள் விரிவாக்கம்! - பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி

1 week 3 days ago

21 Oct, 2025 | 12:02 PM

image

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை பிரிவின் சேவைகள் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நீரிழிவு சிகிச்சை மையத்தை வெளிநோயாளர் கட்டடத் தொகுதியின் முதலாம் மாடியில் திறந்துவைத்த பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

இந்த பிரிவின் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், தற்போது இது வெளிநோயாளர் மற்றும் விபத்து சிகிச்சை கட்டடத் தொகுதிகளுக்கு இடையிலான பகுதியில் இரத்தப் பரிசோதனை மாதிரிகளை வழங்கும் பகுதி இடமாற்றம் செய்யப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளது.

இந்த மாற்றத்தின் மூலம் நோயாளர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறைக்கப்படுவதுடன், பரிசோதனைகளுக்காக இரத்த மாதிரிகளை வழங்கும் நபர்கள் இலகுவாக இப்பகுதியில் சேவைகளை பெற முடியும்.

தினசரி 200க்கும் மேற்பட்ட நோயாளர்கள் இலகுவாகவும் முறையாகவும் சேவைகளை பெறக் கூடிய சூழல் இங்கு உருவாகியுள்ளது.

எனவே, இரு இடங்களில் சேவைகள் வழங்கப்படுகிறது.

மேற்படி நீரிழிவு சிகிச்சை நிலையத்தில் இதுவரை 40,000 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

புதிதாக பதிவாகும் நோயாளர் ஒருவருக்கு அனைத்து விதமான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் சிகிச்சை வழங்கப்படுகிறது.

பின்னர், வருடந்தோறும் நடைபெறும் பரிசோதனையின் மூலம் வளர்ச்சி நிலை மதிப்பீடு செய்யப்படுகின்றது. தேவைப்பட்டால் சிகிச்சை முறையிலும் மாற்றங்கள் செய்யப்படும்.

கடந்த 15 வருடங்களாக, இந்த சிகிச்சை மையத்திற்கு சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் தொடர்ந்து மேலதிக அனுசரணைகளும் ஆதரவுகளும் வழங்கி வருகின்றது.

இவ்வாறு நீடித்த பங்களிப்புகள், இந்நிலையின் வளர்ச்சிக்கும் நோயாளர்களுக்கான தரமான சேவைகளுக்கும் பெரும் பங்களிப்பாக உள்ளதாக வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

1__1_.jpg

1__5_.jpg

1__3_.jpg


யாழ். போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை சேவைகள் விரிவாக்கம்! - பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி | Virakesari.lk

இஷாரா செவ்வந்திக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் தொடர்பிருப்பதாக சமூக ஊடகங்களில் பரவும் போலி பதிவுகள் குறித்து சி.ஐ.டிக்கு முறைப்பாடு!

1 week 3 days ago

21 Oct, 2025 | 03:16 PM

image

இஷாரா செவ்வந்திக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் தொடர்பிருப்பதாக சமூக ஊடகங்களில் பரவும் போலி பதிவுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பசன் கஸ்தூரி பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பசன் கஸ்தூரி பெர்னாண்டோ இது தொடர்பில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இஷாரா செவ்வந்திக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் தொடர்பிருப்பதாக சமூக ஊடகங்களில் போலி பதிவுகள் பரவி வருகின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பெயரை இழிவுபடுத்தும் நோக்கத்தில் இந்த பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளன.

இஷாரா செவ்வந்தி குறித்த பல கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பரவி வுருகின்றன. 

இதன் மத்தியில் கடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பயன்படுத்திய தேர்தல் சுவரொட்டிகளில் இஷாரா செவ்வந்தியின் படத்தை பயன்படுத்தி இஷாரா செவ்வந்திக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் தொடர்பிருப்பதாக சமூக ஊடகங்களில் போலி பதிவுகள் பரவி வருகின்றன.

குற்றச் செயல்களுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உருவாக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் சித்தரிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான போலி தகவல்களை பரப்பும் சமூக ஊடக கணக்குகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இஷாரா செவ்வந்திக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் தொடர்பிருப்பதாக சமூக ஊடகங்களில் பரவும் போலி பதிவுகள் குறித்து சி.ஐ.டிக்கு முறைப்பாடு! | Virakesari.lk

இந்திய இராணுவத்தினரால் யாழ். போதனா வைத்தியசாலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களது 38வது நினைவுதினம்

1 week 3 days ago

யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலை - வைத்தியசாலைக்கு முன் நினைவேந்தல் அனுஷ்டிப்பு 

21 Oct, 2025 | 03:31 PM

image

இந்திய இராணுவத்தினரால் யாழ். போதனா வைத்தியசாலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களது 38வது நினைவுதினம் இன்று செவ்வாய்க்கிழமை (21) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது.

1987ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து, வைத்தியசாலையில் கடமையாற்றிய 21 பணியாளர்கள் உட்பட 68 பேரை சுட்டுப் படுகொலை செய்ததோடு, இந்த தாக்குதலில் பலரும் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 38ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நடைபெற்றது. 

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களது உறவினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நினைவேந்தலின்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்தோருக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி, நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது. 

VID-20251021-WA0037.jpg

VID-20251021-WA0037_2_.jpg

VID-20251021-WA0035.jpg

VID-20251021-WA0039.jpg

https://www.virakesari.lk/article/228274

தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்

1 week 3 days ago

Picsart_25-10-21_11-21-08-175-780x899.jpg

பாறுக் ஷிஹான்

தங்கத்தின் பெறுமதியை அறிந்து ஆயுதங்களை வாங்குவதற்காக வடக்கு முஸ்லீம் மக்கள் ஆயுத முனையில் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்ற ஒரு ஆய்வும் தற்போது வெளியாகியுள்ளதாக வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்கள் அமைப்பு ஆய்வாளர் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.

கறுப்பு ஒக்டோபர் எனும் தொனிப்பொருளில் எக்ஸத் ஊடக வலையமைப்பு பணிப்பாளர் ஜே.எல்.எம் ஷாஜஹான் தலைமையில் நடைபெற்ற விடுதலைப் புலிகளால் வடக்கில் இருந்து இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரும் நிகழ்வு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன அஷ்-ஷஹீத் அஹமட் லெப்பை ஹாஜியார் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றபோது அதில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

1990 ஆண்டு எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும்.இந்த காலகட்டத்தில் தான் விடுதலைப் புலிகள் தங்களது செயற்பாடுகளை உற்சாகமாக மேற்கொண்டு சென்ற காலம்.அவர்கள் தங்களை வளர்த்துக்கொள்வதற்காக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்த காலம்.1987 ஆண்டு முதல் 1990 ஆண்டு வரை இந்திய இராணுவம் இலங்கையில் நிலை கொண்டிருந்த காலம்.அதே நேரம் தங்களை மேலும் எவ்வாறு வளப்படுத்தலாம் என்று யோசனை செய்கின்றார்கள்.அவ்வாறு யோசிக்கின்ற போது தற்போது உள்ளது போன்று 1990 ஆண்டு ஒக்டோபர் மாதம் உள்ள காலப்பகுதியில் தங்கத்திற்காக விலை அதிகமாக இருந்தது.

எனவே தங்கத்தின் ஊடாக தங்களது அமைப்பினை பலப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் எவ்வாறு தங்கத்தை மீட்டெடுத்தல் என்ற எண்ணத்தில் ஈடுபட்டார்கள்.வட மாகாண முஸ்லீம்கள் விடுதலைப் புலிகளால் ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என்று பல ஆய்வுகள் நடைபெறுகின்றன.அதில் ஒன்று அன்று இருந்த தங்கத்தின் விலை காரணமாக தங்கத்தை சர்வதேசத்தின் ஊடாக கொண்டு சென்று அதனூடாக பணத்தை திரட்டி அதனூடாக ஆயுத கொள்வனவில் ஈடுபடலாம் என்ற ஒரு ஆய்வும் அவர்கள் மத்தியில் இருந்துள்ளது.

அந்த ஆய்வின் ஊடாக தான் வட மாகாண முஸ்லீம்களுக்கு தெரியும் என்று நினைக்கின்றேன்.வடக்கில் யாழ்ப்பாணம் மன்னார் பகுதியில் காத்தான்குடி பிரதேசம் போன்று அதிகளவானவர்கள் வியாபாரிகள்.அதாவது இவ்வாறான வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து அந்த தங்கங்களை எடுத்தால் ஆயுத கொள்வனவிற்காக பணம் திரட்டி கொள்ளலாம் என்று தான் அந்த வெளியேற்றம் நடைபெற்றதாக ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என பலரும் இன்றும் கேட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.

பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் இருக்கின்ற போது வருகின்ற ஒவ்வொரு அரசாங்கத்திடமும் வடக்கு மாகாண முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்ட விடயம் தொடர்பில் ஓர் ஆணைக்குழுவினை நியமித்து முக்கியமாக இவர்கள் ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என்பது தொடர்பான அறிக்கையினை செய்து தருமாறு கோரியிருந்தோம்.ஆனால் இதுவரை அந்த ஆணைக்குழுவானது நியமிக்கப்படவில்லை.அவ்வாறான ஆய்வும் மேற்கொள்ளப்படவும் இல்லை.உண்மையில் அது வேதனைக்குரிய விடயம்.நான் இன்றும் கூட மகஜர் ஒன்றினை எழுதி கொண்டு வந்திருக்கின்றேன்.இந்த மகஜர் ஜனாதிபதிக்கு சமர்ப்பிப்பதற்காக ஆளுநர் ஊடாக அனுப்புவதற்கு எழுதப்பட்டுள்ளது.இந்த மகஜரில் அதே விடயத்தை மீண்டும் போட்டிருக்கின்றேன்.சுமார் 35 வருடங்களுக்கு பிறகும் ஒரு விடயத்தை நாங்கள் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டு வருகின்றோம்.

எனவே அந்த அடிப்படையில் வட மாகாண முஸ்லீம்கள் தங்கத்திற்காக அல்லது தங்கத்தை கொள்ளையடிப்பதற்காக வேண்டி வெளியேற்றப்பட்டார்கள்.என்ற மிகவும் வேதனையான நிகழ்வு ஒன்று இருக்கின்றது.அவ்வாறு வெளியேற்றப்பட்டவர்கள் 1990 ஆண்டு ஒக்டோபர் மாதம் என்பது அந்த பிரதேசத்தில் வியாபாரிகள் மீனவர்கள் விவசாயிகள் என சுமார் 75 ஆயிரம் முதல் 1 இலட்சம் பேர் வரை வெளியெற்றப்பட்டார்கள் என தெரிவித்தார்.

Madawala News
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை வ...
பாறுக் ஷிஹான் தங்கத்தின் பெறுமதியை அறிந்து ஆயுதங்களை வாங்குவதற்காக வடக்கு முஸ்லீம் மக்கள் ஆயுத முனைய
Madawala News
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை வ...
பாறுக் ஷிஹான் தங்கத்தின் பெறுமதியை அறிந்து ஆயுதங்களை வாங்குவதற்காக வடக்கு முஸ்லீம் மக்கள் ஆயுத முனைய

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனேகமான பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை-மூவர் மரணம் -144 குடும்பங்கள் பாதிப்பு!

1 week 3 days ago

images-7.jpg?resize=340%2C148&ssl=1

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனேகமான பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை-மூவர் மரணம் -144 குடும்பங்கள் பாதிப்பு!

இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை எதிர்வரும் மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

இதன் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதுடன் இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றிரவு 8.30 வரை அமுலில் காணப்படும் வகையில் குறித்த மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிலையில் சீரற்ற வானிலைக் காரணமாக மூன்று ;மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் பலத்த மழைக் காரணமாக 144 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த குடும்பங்களைச் சேர்ந்த 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக தொடருந்து மார்க்கத்தில் திட்டமிடப்பட்டிருந்த 04 தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கோட்டை தொடருந்து மார்க்கத்தில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையால் தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி கண்டி, மாத்தளையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் மாத்தறை வரையிலான 04 தொடருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

https://athavannews.com/2025/1450782

கணேமுல்ல சஞ்சீவ கொலை: Dead Cat Theoryயை கடைபிடித்த தெற்கின் அரசியல் கட்சி!

1 week 4 days ago

மீகஸ்ஆரே கஜ்ஜா மற்றும் அவருடைய இரு பிள்ளைகள், கணேமுல்ல சஞ்ஜீவ ஆகியோரின் கொலைகள் Dead Cat Theory என்ற அரசியல் கோட்பாட்டின் வெளிப்பாடுகள் என தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கஜ்ஜா மற்றும் அவருடைய இரு பிள்ளைகளின் கொலையில் ஜே.சி.பி சமன் அல்லது பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகியோர் வழங்கிய வாக்குமூலத்தில் பெரும் குழப்பங்கள், சந்தேகங்கள் வலுவடைந்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவ கொலை

கணேமுல்ல சஞ்ஜீவவை கொலை செய்வது நீண்ட நாள் திட்டம் என தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கணேமுல்ல சஞ்சீவ கொலை: Dead Cat Theoryயை கடைபிடித்த தெற்கின் அரசியல் கட்சி! | Popular Political Party In South Dead Cat Theory

கணேமுல்ல சஞ்ஜீவவை கொலை செய்வதற்கான சந்தர்ப்பம் வரும் வரை கெஹெல்பத்தர பத்மே காத்திருந்தார்.

கார் ஒன்றை ஜே.சி.பி சமனுக்கு வாடகைக்கு வழங்கி அதில் பொருத்தப்பட்டிருந்த GPS தொடர்பிலேயே முறுகல் ஏற்பட்டதாக கஜ்ஜாவின் மகன் அண்மையில் நேர்காணலொன்றில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இவ்வாண்டு பெப்ரவரி 19 ஆம் திகதி கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை நீதிமன்ற வளாகத்திலுள்ள இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்தில் கொலை செய்யப்படுகிறார்.

அதற்கு முன்தினம் அதாவது பெப்ரவரி 18 ஆம் திகதி இரவு தனது இரு பிள்ளைகளுடன் கஜ்ஜா கொலை செய்யப்படுகிறார்.

துப்பாக்கிச் சூட்டு கலாச்சாரம்

குறித்த இரு கொலைகளும் துப்பாக்கிச் சூட்டு கலாச்சாரம் தலையோங்கி காணப்பட்ட போது நடத்தப்பட்ட நிலையில், கஜ்ஜாவின் கொலை சாதாரண கொலைச் சம்பவமாகவும், கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலை பெரும் பரபரப்பையும் உண்டாக்கியது.

கணேமுல்ல சஞ்சீவ கொலை: Dead Cat Theoryயை கடைபிடித்த தெற்கின் அரசியல் கட்சி! | Popular Political Party In South Dead Cat Theory

இவ்வாறான பின்னணியில், கஜ்ஜா ஒரு யூடியூப் தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், தான் கொலை செய்யப்பட்டால் அதற்கு ராஜபக்சர்களே பொறுப்பாளிகள் எனவும் தெரிவித்திருந்தார்.

கஜ்ஜா கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கணேமுல்ல சஞ்சீவ கொலை இடம்பெற்றதால் கஜ்ஜா, தனது மரணத்திற்கு யார் காரணம் என தெரிவித்த கருத்து வலுவிழக்கப்பட்டு மறக்கடிக்கப்பட்டது.

எந்தவொரு ஊடகத்திலும் அது பேசு பொருளாக்கப்படவில்லை. இங்கு தான் இந்த Dead Cat Theory என்ற அரசியல் கோட்பாடு பயன்படுத்தப்பட்டுள்ளது.

Dead Cat Theory

Dead Cat Theory (டெட் கேட் தியரி) என்பது அரசியல் மற்றும் ஊடகங்களில் சாதகமற்ற செய்திகள் அல்லது சூழ்நிலைகளிலிருந்து திசை திருப்பப் பயன்படுத்தப்படும் ஒரு தந்திரமாகும்.

கணேமுல்ல சஞ்சீவ கொலை: Dead Cat Theoryயை கடைபிடித்த தெற்கின் அரசியல் கட்சி! | Popular Political Party In South Dead Cat Theory

இதனை, அரசியல்வாதியொருவர் ஒரு வாதத்தில் தோல்வியடையும் போது அல்லது எதிர்மறையான ஆய்வுக்கு உள்ளாகும் போது, அதிர்ச்சியூட்டும் அல்லது பொருத்தமற்ற தகவலை வௌியிட்டு ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை அசல் பிரச்சினையிலிருந்து திசைதிருப்பக்கூடிய செயற்பாடு என அவுஸ்திரேலிய அரசியல் மூலோபாய நிபுணர் லிண்டன் கிராஸ்பி விளக்கியுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி இரவு மித்தெனியவில் இரு பிள்ளைகளுடன் கஜ்ஜா கொலை செய்யப்படுகிறார். அதற்கு அடுத்த நாளான பெப்ரவரி 19 ஆம் திகதி காலை கணேமுல்ல சஞ்ஜீவ நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்படுகிறார்.

பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி காலை, கஜ்ஜாவின் கொலை தொடர்பில் அவர் முன்கூட்டியே ஊடகங்களில் கூறிய விடயங்கள் ஆழமாக அலசப்பட்டிருக்க வேண்டும்.

எனினும், அந்த கொலையும் அதற்கான பிரதான காரணங்கள் மறைக்கப்பட்டு கணேமுல்ல சஞ்ஜீவ கொலை பரபரப்பான செய்தியாக்கப்பட்டது.

தற்போது இவ்விரு கொலைகள் தொடர்பிலும் பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

அவற்றின் அடிப்படையில், இவ்விரு கொலைகளுக்கும் உதவியவர் சம்பத் மனம்பேரி. அவர் மொட்டுக் கட்சியில் அரசியல் செயற்பாட்டாளராக இருந்துள்ளார்.

ஆக, இந்த விடயங்களில் தெற்கின் பிரதானமான ஒரு கட்சி Dead Cat Theory யின் அடிப்படையில் செயற்பட்டுள்ளதை இவ்விடயங்களால் ஓரளவுக்கு ஊகிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/popular-political-party-in-south-dead-cat-theory-1760879786

Checked
Fri, 10/31/2025 - 23:27
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr