விளையாட்டுத் திடல்

19இன் கீழ் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர்

2 days 19 hours ago

வெற்றியுடன் தொடங்கிய இலங்கை இளையோர் அணி

Dec 13, 2025 - 07:56 PM

வெற்றியுடன் தொடங்கிய இலங்கை இளையோர் அணி

டுபாயில் இடம்பெற்று வரும் 19 வயதிற்கு உட்பட்ட ஆசிய இளையோர் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை இளையோர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய 28.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 82 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. 

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் செத்மிக செனவிரட்ன 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

இந்நிலையில் 83 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை இளையோர் அணி 14.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து போட்டியில் வெற்றிபெற்றது. 

போட்டியின் சிறப்பாட்டக்காரராக செத்மிக செனவிரட்ன தெரிவானார். 

இதன்மூலம் 19 வயதிற்கு உட்பட்ட ஆசிய இளையோர் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை இளையோர் அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

https://adaderanatamil.lk/news/cmj4e2sqv02pio29nfkybudml

மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி 2025-27 டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் முதல் வெற்றியை பதிவு செய்தது நியூஸிலாந்து

2 days 19 hours ago

மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி 2025-27 டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் முதல் வெற்றியை பதிவு செய்தது நியூஸிலாந்து

12 Dec, 2025 | 02:05 PM

image

(நெவில் அன்தனி)

வெலிங்டன் பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (12) நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜேக்கப் டபியின் துல்லியமான பந்துவீச்சின் உதவியுடன் மேற்கிந்தியத் தீவுகளை 9 விக்கெட்களால் மிக இலகுவாக  நியூஸிலாந்து  வெற்றிகொண்டது.

1112_jacob_tuffy.__2_.png

2025- 27 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சியில் நியூஸிலாந்து ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும்.

இந்த வருடம் தனது 31ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடிய பின்னர் நியூஸிலாந்தின் டெஸ்ட் அணியில் அறிமுகமான ஜேக்கப் டவி, இந்தத் தொடரில் இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்து மேற்கிந்தியத் தீவுகளை இரண்டாவது இன்னிங்ஸில் 128 ஓட்டங்களுக்கு சுருட்ட உதவினார்.

முதலாவது இன்னிங்ஸிலும் மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாட்டம் எதிர்பார்த்த அளவு சிறப்பாக இருக்கவில்லை.

கிறைஸ்ட்சேர்ச் ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் முதலாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 400 ஓட்டங்களுக்கு மேல் குவித்து அப் போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட மேற்கிந்தியத் தீவுகள், இரண்டாவது போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் பிரகாசிக்கத் தவறி தோல்வியைத் தழுவியது.

கடந்த புதன்கிழமை ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 205 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

1112_michael_ray__1_.png

ப்ளயா டிக்னர், மைக்கல் ரே ஆகிய இருவரும் திறமையாகப் பந்துவீசி மேற்கிந்தியத் தீவுகளைக் கட்டுப்படுத்தினர்.

களத்தடுப்பின்போது உபாதைக்குள்ளான ப்ளயா டிக்னர் அதன் பின்னர் இந்தப் போட்டியில் பங்குபற்றவில்லை.

ஷாய் ஹோப், ஜோன் கெம்பல், ப்றண்டன் கிங் ஆகிய மூவரே 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 9 விக்கெட்களை இழந்து 278 ஓட்டங்களைப் பெற்று தனது முதலாவது இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.

1112_devon_convay__2_.png

1112_mitchell_hay__1_.png

டெவன் கொன்வே, மிச்செல் ஹே ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்து நியூஸிலாந்தின் மொத்த எண்ணிக்கைக்கு உரமூட்டினர்.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பின்னிலையில் இருந்த மேற்கிந்தியத் தீவுகள், இரண்டாவது இன்னங்ஸில் ஜெக்கப் டபியின் துல்லியமான பந்துவீச்சில் சின்னாபின்னமாகி 128 ஓட்டங்களுக்கு சுருண்டனது.

மேற்கிந்தியத் தீவுகளின், இண்டாவது இன்னிங்ஸில் மூவர் மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

தொடர்ந்து 56 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து ஒரு விக்கெட்டை இழந்து 58 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

எண்ணிக்கை சுருக்கம்

மேற்கிந்தியத் தீவுகள் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 205 (ஷாய் ஹோப் 47, ஜோன் கெம்பல் 44, ப்றண்டன் கிங் 33, ரொஸ்டன் சேஸ் 29, ப்ளயா டிக்னர் 32 - 4 விக்., மைக்கல் ரே 66 - 3 விக்.)

நியூஸிலாந்து 1ஆவது இன்: 278 - 9 விக்;. டிக்ளயார்ட் (மிச்செல் ஹே 61, டெவன் கொன்வே 60, கேன் வில்லியம்சன் 37, அண்டர்சன் பிலிப் 70 - 3 விக்., கெமர் ரோச் 43 - 3 விக்.)

மேற்கிந்தியத் தீவுகள் 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 128 (கவெம் ஹொஜ் 35, ஜஸ்டின் க்றீவ்ஸ் 25, ப்றெண்டன் கிங் 22, ஜேக்கப் டவி 38 - 5 விக்., மைக்கல் ரே 45 - 3 விக்.)

நியூஸிலாந்து - வெற்றி இலக்கு 56 ஓட்டங்கள் - 2ஆவது இன்: 57 - 1 விக். (டெவன் கொன்வே 26 ஆ.இ., கேன் வில்லியம்சன் 16 ஆ.இ.)

ஆட்டநாயகன்: ஜேக்கப் டபி.

https://www.virakesari.lk/article/233177

இருபதுக்கு இருபது

4 days 13 hours ago

சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆண்களுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை இன்று (11) ஆரம்பமானது.

ஆரம்ப விலை 

இந்தியா மற்றும் இலங்கையில் 2026 பெப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறும் இத்தொடரின் டிக்கெட்டுகளின் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்குக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

@கிருபன் @கந்தப்பு போட்டியை இருவரில் ஒருவர் முன்வந்து நடத்தலாமே.

அடுத்து ஐபிஎல் லும் வருகிறது.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை ஆரம்பம்

சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆண்களுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை இன்று (11) ஆரம்பமானது.

ஆரம்ப விலை 

இந்தியா மற்றும் இலங்கையில் 2026 பெப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறும் இத்தொடரின் டிக்கெட்டுகளின் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்குக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை ஆரம்பம் | Ticket Sales For Twenty20 World Cup Begin

ஆரம்ப விலை (இந்தியா): 100 இந்திய ரூபா,

ஆரம்ப விலை (இலங்கை): 1000 ரூபா ஆகும்.

ஐ.சி.சி.யின் இந்த நடவடிக்கை, கிரிக்கெட் ஆர்வலர்கள் அனைவரும் குறைந்த செலவில் உலகத் தரம் வாய்ந்த போட்டிகளை மைதானத்தில் சென்று பார்ப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Tamilwin
No image previewஇருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு...
சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆண்களுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை இன்று (11) ஆரம்பம...

19 வயதுக்குட்பட்ட வீரர்கள் விளையாடும் உலககிண்ண துடுப்பாட்ட போட்டியில் அவுஸ்திரேலியா அணியில் நிதேஷ் சாமுவேல் என்ற ஈழத்து வம்சாவளி தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

5 days 7 hours ago

சிம்பாவே, நபீபியா நாட்டில் நடைபெற இருக்கும் 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் விளையாடும் உலககிண்ண துடுப்பாட்ட போட்டியில் அவுஸ்திரேலியா அணியில் நிதேஷ் சாமுவேல் என்ற ஈழத்து வம்சாவளி தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரின் பெற்றோர் யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாக கொண்டவர்கள்.

https://www.icc-cricket.com/news/peake-to-lead-as-australia-unveil-under-19-world-cup-squad

தமிழ் யூனியன் வீரர்கள் ஷாருஜன், வியாஸ்காந்த் அபார ஆற்றல்கள்

5 days 22 hours ago

தமிழ் யூனியன் வீரர்கள் ஷாருஜன், வியாஸ்காந்த் அபார ஆற்றல்கள்

Published By: Digital Desk 3 09 Dec, 2025 | 03:16 PM

image

(நெவில் அன்தனி)

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் (SLC) நடத்தப்பட்டுவரும் முதல்தர கழகங்களுக்கு இடையிலான மேஜர் லீக் கிரிக்கெட் 2025-26 ஆரம்பப் போட்டியில் தமிழ் யூனியன் வீரர்களான சண்முகநாதன் ஷாருஜன் துடுப்பாட்டத்திலும் விஜயகாந்த் வியாஸ்காந்த் பந்துவீச்சிலும் திறமையை வெளிப்படுத்தி அசத்தினர்.

தமிழ் யூனியன் அண்ட் அத்லெட்டிக்ஸ் க்ளப் அணிக்காக இந்த வருடத்திலிருந்து முழுமையாக விளையாட ஒப்பந்தமாகியுள்ள 19 வயதுடைய சண்முகநாதன் ஷாருஜன் அக் கழகத்துக்கான தனது முதலாவது போட்டியிலேயே முதல் தர கிரிக்கெட்டுக்கான சதத்தைக் குவித்து பலத்த பாராட்டைப் பெற்றார்.

இதில் விசேஷம் என்னவென்றால், ஷாருஜன் தனது முன்னாள் கழகமான பதுரெலியா விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக கன்னி சதத்தைக் குவித்தாகும்.

தொலைக்காட்சி நேர்முக வர்ணனையாளர் மறைந்த டோனி க்ரெய்கினால் 'லிட்ல் சங்கா' (குட்டி சங்கா) என வருணிக்கப்பட்ட சண்முகநாதன் ஷாருஜன் இப்போது அந்தப் பெயரை மெய்ப்பிக்கும் வகையில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தொடங்கியுள்ளார்.

எஸ்எஸ்சி மைதானத்தில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது ஷாருஜனுக்கு இந்தப் புனைப்பெயரை எதேச்சையாக டோனி க்ரெய்க் சூட்டினார்.

அவுஸ்ரேலிய துடுப்பாட்ட வீரர் பிலிப் ஹயூஸ் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தபோது எஸ்எஸ்சி மைதானத்தின் பார்வையாளர் பகுதியில் ஷாருஜன் ஒரு துடுப்பைக் கொண்டு (Bat) விதவிதமான அடிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது தொலைக்காட்சி கமராவில் 5 வயது சிறுவனின் துடுப்பாட்ட பாணியும் காட்டப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில்தான் சிறுவன் ஷாருஜனின் துடுப்பாட்ட பாணியைப் பார்த்து இரசித்த டோனி க்ரெய்க் அவருக்கு 'லிட்ல் சங்கா' என்ற புனைப்பெயரை சூட்டினார்.

இப்போது தமிழ் யூனியன் கழகத்திற்காக தனது 19ஆவது வயதில் விளையாடிவரும் சண்முகநாதன் ஷாருஜன் சதம் குவித்து அதனை மெய்ப்பித்து வருகிறார்.

sharujan_taking_runs_with_his_partner.jp

கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சன்முகநாதன் ஷாருஜன், வார இறுதியில் சிசிசி மைதானத்தில் நடைபெற்ற பதுரெலியா கழகத்துக்கு எதிரான பி குழு  போட்டியில் மிகுந்த அனுபவசாலிபோல் 230 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 123 ஓட்டங்களைக் குவித்தார்.

இந்த வருடம் மேஜர் லீக் கிரிக்கெட் போட்டிகள் யாவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தீர்மானத்திற்கு அமைய நடுநிலையான மைதானங்களில் நடைபெற்றுவருகின்றன.

ஒரு கட்டத்தில் தமிழ் யூனியன் கழகம் 5 விக்கெட்களை இழந்து 112 ஓட்டங்களை மாத்திரம் பெற்று மிக மோசமான நிலையில் இருந்தது.

ஆனால், பொறுப்புணர்வுடனும் நிதானத்துடனும் துடுப்பெடுத்தாடிய ஷாருஜன், 3 சிறந்த இணைப்பாட்டங்கள் உட்பட கடைசி 5 விக்கெட்களில் மொத்தமாக 235 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார்.

51 ஓட்டங்களைப் பெற்ற சச்சித்த ஜயதிலக்கவுடன் 6ஆவது விக்கெட்டில் 97 ஓட்டங்களையும் 35 ஓட்டங்களைப் பெற்ற தரிந்து ரத்நாயக்கவுடன் 8ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களையும் 21 ஓட்டங்களைப் பெற்ற கலன பெரேராவுடன் 9ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களையும் கொண்ட சிறந்த இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி அணியை பலமான நிலையில் இட்ட ஷாருஜன் கடைசி வீரராக ஆட்டம் இழந்தார்.

இதன் பலனாக தமிழ் யூனியன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 347 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பதுரெலியா விளையாட்டுக் கழகம் சகல விக்கெட்களையும் இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றது.

யாழ். மத்திய கல்லூரி கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் விஜயகாந்த் வியாஸ்காந்த் மிகத் துல்லியமாக பந்துவீசி 4 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 19 ஓவர்களில் 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்தப் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸில் 9 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது தமிழ் யூனியன் தனது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.

240 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பதுரெலியா கழகம் திங்கட்கிழமை (08) மாலை ஆட்டம் முடிவுக்கு வந்தபோது 2 விக்கெட்களை இழந்து 56 ஓட்டங்ளைப் பெற்றிருந்தது.

இப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தபோதிலும் முதல் இன்னிங்ஸுக்கான வெற்றிப் புள்ளிகளை தமிழ் யூனியன் பெற்றுக்கொண்டது. 

https://www.virakesari.lk/article/232873

பீபா(FIFA) உலகக் கிண்ணம் 2026 - செய்திகள்

1 week 2 days ago

வரலாற்றில் மிகப் பெரிய பீபா உலகக் கிண்ணத்துக்கான அணிகளுக்குரிய பகிரங்க குலுக்கல் இன்று

05 Dec, 2025 | 08:17 PM

image

(நெவில் அன்தனி)

கால்பந்தாட்ட வரலாற்றில் முதல் தடவையாக 48 நாடுகள் பங்குபற்றும் மிகப் பெரிய FIFA உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி அமெரிக்க கண்டத்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ளது.

உலகக் கிண்ணப் போட்டிக்கான அணிகளைக் குழுநிலைப் படுத்தும் பகிரங்க குலுக்கல் வொஷிங்டன் டிசியில் அமைந்துள்ள கென்னடி நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (05) இரவு நடைபெறவுள்ளது.

1_flags_of_canada_mexico_and_usa.png

ஐக்கிய அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் கூட்டாக  உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியை நடத்தவுள்ளன.

உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் மூன்று நாடுகள் கூட்டு சேர்ந்து நடத்துவது இதுவே முதல் தடவையாகும்.

2002 உலகக் கிண்ணப்  போட்டியை ஜப்பான், தென் கொரியா ஆகிய இரண்டு நாடுகள் கூட்டாக நடத்தியிருந்தன. அதுவே கூட்டாக நடத்தப்பட்ட முதலாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியாகும்.

நான்கு ஜாடிகளில் தலா 12 நாடுகள்

உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட இதுவரை 42 நாடுகள் தகுதிபெற்றுள்ளதுடன் இன்னும் 6 நாடுகள் தகுதிபெறவுள்ளன.

இந்த 48 நாடுகளும் நான்கு ஜாடிகளில் நிரல்படுத்தல் பிரகாரம் இடம்பெறுகின்றன.

3_fifa_draw_procedere..jpg

ஜாடி 1: கனடா, மெக்சிகோ, ஐக்கிய அமெரிக்கா (இந்த மூன்றும் கூட்டு வரவேற்பு நாடுகள்), ஸ்பெய்ன், நடப்பு உலக சம்பியன் ஆர்ஜன்டீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, பிறேஸில், போர்த்துக்கல், நெதர்லாந்து, பெல்ஜியம், ஜேர்மனி.

ஜாடி 2: குரோஷியா, மொரோக்கோ, கொலம்பியா, உருகுவே, சுவிட்சர்லாந்து, ஜப்பான், செனகல், ஈரான், தென் கொரியா, ஈக்வடோர், ஆஸ்திரியா, அவுஸ்திரேலியா.


ஜாடி 3: நோர்வே, பனாமா, எகிப்து, அல்ஜீரியா, ஸ்கொட்லாந்து, பரகுவே, டியூனிசியா, கோட் டி'ஐவொயர் (ஐவரி கோஸ்ட்), உஸ்பெகிஸ்தான், கத்தார், சவூதி அரேபியா, தென் ஆபிரிக்கா.

ஜாடி 4: ஜோர்தான், கபோ வேர்டே, கானா, கியூராகாவோ, ஹெய்ட்டி, நியூஸிலாந்து, ஐரோப்பிய ப்ளே ஓவ் ஏ, பி, சி, டி, FIFA ப்ளே ஓவ் சுற்றுப் போட்டி 1, 2.

ஜாடி 1இல் இடம்பெறும் 12 அணிகளும் A இலிருந்து L வரை 12 குழுக்களில் முதல் அணிகளாக குலுக்கல் மூலம் நிரல்படுத்தப்படும்.

4_fifa_word_cup_qualified_teams.png

2026 உலகக் கிண்ணப் போட்டிகளை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடுகள் என்ற வகையில் ஜாடி 1இல் (Pot 1) இடம்பெறும் மெக்சிகோ, கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகியன வெவ்வேறு நிறங்களிலான பந்துகளைக் கொண்டு முதல் அணிகளாக நிரல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று அணிகளும் ஏ 1 - மெக்சிகோ (பச்சை பந்து), பி 1 - கனடா (சிவப்பு பந்து), டி 1 - ஐக்கிய அமெரிக்கா (நீல பந்து) என நிரல்படுத்தப்படும்.

ஜாடி 2இல் இடம்பெறும் அணிகள் 12 குழுக்களில் 2ஆவது அணிகளாகவும் ஜாடி 3இல் இடம்பெறும் அணிகள் 3ஆவது அணிகளாகவும் ஜாடி 4இல் இடம்பெறும் அணிகள் 4ஆவது அணிகளாகவும் குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்படும்.

சம அளவிலான போட்டித் தன்மை  

சம அளவிலான போட்டித் தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் அரை இறுதிகளுக்கு நான்கு வெவ்வேறு குழுக்களிலிருந்து அணிகள் தெரிவாகும்.

அதாவது பீபா தரவரசையில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் ஸ்பெய்ன், ஆர்ஜன்டீனா ஆகியன ஒரு பகுதியில் மேல் பாதி மற்றும் கீழ் பாதியாக  (Top half and Bottom half) விளையாடும்.  அதேபோன்று தரவரிசையில் 3ஆம், 4ஆம் இடங்களில் உள்ள பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியன மற்றொரு பகுதியில் மேல் பாதி மற்றும் கீழ் பாதியாக விளையாடும். 

5_pathway_for_fifa_groupings.png

இந்த அணிகள் தத்தம் குழுக்களில் முதலிடத்தைப் பெற்றால் அரை இறதிவரை ஒன்றை ஒன்று எதிர்கொள்ள மாட்டாது.

12 குழுக்களில் நடத்தப்படும் உலகக் கிண்ணப் போட்டியில் ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கத்தைத் தவிர்ந்த ஏனைய கூட்டு சம்மேளனங்களை சேர்ந்த இரண்டு அணிகள் ஒரு குழுவில் இடம்பெறாது என கொள்கை அளவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு இது பொருந்தாது.


ஏனெனில் ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கத்தைப் பிரதிநிதித்தவப்படுத்தும் 16 அணிகள் உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ளன. அதேவேளை, ஒரே குழுவில் இரண்டு ஐரோப்பிய அணிகளுக்கு மேல் இடம்பெறாது.

பீபா உலகக் கிண்ண குலுக்கலில் பங்குபற்றும் உலகத் தலைவர்கள்

வொஷிங்டன் டி சி கென்னடி நிலையத்தில் இலங்கை நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள 42 அணிகளுக்கான பகிரங்க குலுக்கலின் போது வரவேற்பு நாடுகளின் தலைவர்கள் உட்பட இன்னும் பல நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

6_pm_of_canada_march_carney.jpg

7_mexico_president_claudia.png

8_us_president_donald_trump...JPG

கனடா பிரதமர் மார்க் கார்னி, மெக்சிகோ ஜனாதிபதி குளோடியா ஷெய்ன்போம், அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் ஆகிய மூவரும் இறுதி குலுக்கலின்போது அரங்கில் பிரசன்னமாகி இருப்பர்.

உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ள 16 நகரங்களில் உள்ள இலட்சக்கணக்கான இரசிகர்களிடம் போட்டிகளைக் கண்டு களிக்க வருகை தருமாறு மூன்று தலைவர்களும் அழைப்பு விடுக்கவுள்ளனர்.

அத்துடன் கால்பந்தாட்ட கூட்டு சம்மேளனங்களின் தலைவர்கள் உட்பட பிரதிநிதிகளும் கலந்து இன்றைய வைபவத்தில் பங்குபற்றவுள்ளனர்.

ஈரான் கால்பந்தாட்ட சங்கத் தலைவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த சங்கத்தைச் சேர்ந்த நான்கு பிரதிநிதிகள் ஏற்கனவே அமெரிக்கா சென்றுள்ளதாக அறியக்கிடைக்கிறது.

பீபா உலகக் கிண்ணம் 2026

பீகா உலகக் கிண்ணப் போட்டிகள் 2026 ஜூன் 11ஆம் திகதி முதல் ஜூலை 19ஆம் திகதிவரை நடைபெறும்.

72 குழுநிலைப் போட்டிகள், இறுதிப் போட்டி மற்றும் 3ஆம் இடத்துக்கான போட்டிகள் உட்பட 32 நொக் அவுட் போட்டிகளுளுடன் மொத்தம் 104 போட்டிகள் நடைபெறும்.

உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தை மூன்றாவது தடவையாக அரங்கேற்றவுள்ள மெக்சிக்கோ முதலாவது போட்டியை ஜூன் 11ஆம் திகதி தனது அணியின் பங்கேற்புடன் மெக்சிகோ சிட்டி விளையாட்டரங்கில் அரங்கேற்றும்.

மெக்சிகோவில் மொத்தம் 13 போட்டிகள் நடத்தப்படும்.

கனடா முதல் தடவையாக உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்துகின்றது. அந்த நாட்டிலும் 13 போட்டிகள் நடத்தப்படும். கனடா தனது ஆரம்பப் போட்டியை டொரொன்டோ விளையாட்டரங்கில் ஜூன் 12ஆம் திகதி நடத்தும்.

ஐக்கிய அமெரிக்காவில் மொத்தம் 78 போட்டிகள் நடைபெறும். ஐக்கிய அமெரிக்காவின் ஆரம்பப் போட்டி லொஸ் ஏஞ்சலிஸில் ஜூன் 12ஆம் திகதி நடைபெறும்.

9_new_york_new_jersey.jpg

உலக சம்பியனைத் தீர்மானிக்கும் மாபெரும் இறுதிப் போட்டி நியூ யோர்க் நியூ ஜேர்சி விளையாட்டரங்கில் ஜூலை 19ஆம் திகதி அரங்கேற்றப்படும்.

இப் போட்டிகளை முன்னிட்டு 60 இலட்சம் டிக்கெட்கள் விற்பனை செய்யப்படவுள்ளதுடன் அவற்றில் 2 இலட்சம் டிக்கெட்கள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன.

2_fifa_world_cup_2026.png

10_fifa_world_cup_2026_players.png

https://www.virakesari.lk/article/232570

வருடத்தின் அதிசிறந்த மெய்வல்லுநர்களுக்கான விருதுகளை மொண்டோ டுப்லான்டிஸ், சிட்னி மெக்லோலின் வென்றனர்

1 week 4 days ago

வருடத்தின் அதிசிறந்த மெய்வல்லுநர்களுக்கான விருதுகளை மொண்டோ டுப்லான்டிஸ், சிட்னி மெக்லோலின் வென்றனர்

02 Dec, 2025 | 03:11 PM

image

(நெவில் அன்தனி)

சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் உலக சம்பியன்களான மொண்டோ டுப்லான்டிஸ் மற்றும் சிட்னி மெக்லோலின் - லெவ்ரோன் ஆகிய இருவரும் இந்த வருடம் நிலைநாட்டிய சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் அவர்கள் இருவரையும் வருடத்தின் அதிசிறந்த மெய்வல்லுநர்களாக வேர்ல்ட் அத்லெட்டிக்ஸ் (உலக மெய்வல்லுநர் நிறுவனம்) தெரிவுசெய்து உயர் விருதுகளை வழங்கியது.

1222.PNG

மொனோக்கோவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற உலக மெய்வல்லுநர் விருது விhழவின்போது இந்த உயர் விருதுகளுடன் இன்னும் சில விருதுகள் வழங்கப்பட்டன.

சுவடு, மைதானம், மற்றும் வெளிக்களம் ஆகிய மூன்று பிரிவுகளில் ஆண், பெண் இருபாலாரிலும் ஆறு பேர் வருடத்தின் சிறந்த மெய்வல்லுநர் விருதுளை வென்றெடுத்துள்ளனர்.

அவர்களில் கோலூன்றிப் பாய்தலில் தனது சொந்த உலக சாதனையை இந்த வருடம் நான்கு தடவைகள் புதுப்பித்த சுவீடனின்  கோலூனறிப் பாய்தல் ஜாம்பவான் ஆர்மண்ட் (மொண்டோ) கஸ்டவ் டுப்லான்டிஸ் வருடத்தின் அதிசிறந்த ஆண் மெய்வல்லுநர் விருதை வென்றெடுத்தார்.

இந்த விருதை டுப்லான்டிஸ் மூன்றாவது தடவையாக வென்றெடுத்துள்ளமை விசேட அம்சமாகும்.

கடந்த ஐந்து வருடங்களாக சரவ்தேச அரங்கில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அசாத்திய திறமையை வெளிப்படுத்தி வரும் டுப்லான்டிஸ், 2014ஆம் ஆண்டு பிரான்ஸ் வீரர் ரெனோல்ட் லெவிலெனி நிலைநாட்டிய 6.16 மீற்றர் உலக சாதனையை போலந்தில் 2020 இல் நடைபெற்ற மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 6.17 மீற்றர் உயரம் தாவியதன் மூலம் முறியடித்து புதிய உலக சாதனை நிலைநாட்டி இருந்தார்.

அன்றிலிருந்து ஒவ்வொரு சென்றி மீற்றரால் தனது சொந்த உலக சாதனையை புதுப்பித்துவரும் டுப்லான்டிஸ், கடந்த செப்டெம்பர் மாதம் வரை 13 தடவைகள் தனது சொந்த சாதனையைப் புதுப்பித்துள்ளார்.

கடைசியாக ஜப்பான், டோக்கியோ தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 6.30 மீற்றர் உயரத்தைத் தாவி ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் உலக சாதனை நிலைநாட்டினார்.

வருடத்தின் அதிசிறந்த சிறந்த ஆண் மெய்வல்லுநர் விருதுடன் இந்த வருடம் ஆண்களுக்கான மைதான போட்டிகளில் அதிசிறந்த மெய்வல்லுநர் விருதையும் டுப்லான்டிஸ் வென்றெடுத்தார்.

duplantis_and_maclauglin_lavrone.jpg

பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் மீண்டும் உலக சம்பியனான ஐக்கிய அமெரிக்க வீராங்கனை சிட்னி மெக்லோலின் - லெவ்ரோன், வருடத்தின் அதிசிறந்த பெண் மெய்வல்லுநர் விருதை தனதாக்கிக்கொண்டார்.

ஜப்பானில் செப்டெம்பர் மாதம் நடைபெற்ற உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியை 47.78 செக்கன்களில் நிறைவுசெய்து 42 வருடங்களாக நீடித்த போட்டி சாதனையை மெக்லோலின் - லெவ்ரோன் முறிடித்து தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.

அத்துடன் அப் போட்டியில் வட அமெரிக்க, மத்திய அமெரிக்க மற்றும் கரிபியன் மெய்வல்லுநர் சங்க சாதனையையும் மெக்லோலின் - லெவ்ரோன் முறியடித்தார்.

அதன் மூலம் உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் வரலாற்றில் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இரண்டாவது அதிசிறந்த நேரப் பெறுதியை அவர் பதிவுசெய்தார்.

டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிலும் பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவி லும்   400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை சுவீகரித்த 26 வயதுடைய மெக்லோலின் - லெவ்ரோன் தற்போது 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் அசத்தி வருகிறார்.

இயூஜினில் 2022இல் நடைபெற்ற உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 400 மீற்றர் சட்டவேலி இறுதி ஓட்டப் போட்டியை 50.68 செக்கன்களில் நிறைவுசெய்து உலக சாதனை நிலைநாட்டியிருந்தார்.

இந்த சாதனை அந்த வருடத்துக்கான உலகின் அதிசிறந்த பெண் மெய்வல்லுநர் விருதை அவருக்கு வென்றுகொடுத்திருந்தது.

அதன் பின்னர் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியிலிருந்து ஒதுங்கி வெறும் 400 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றிவரும் மெக்லோலின் - லெவ்ரோன் இந்த வருடம் டோக்கிய உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் வெற்றிபெற்றதன் மூலம் இரண்டாவது தடவையாய உலகின் அதிசிறந்த பெண் மெய்வல்லுநர் விருதை வென்றெடுத்தார்.

இந்த வருடம் பெண்களுக்கான சுவட்டு போட்டிகளில் அதிசிறந்த மெய்வல்லுநர் விருதையும் சிட்னி மெக்லோலின் - லெவ்ரோன் வென்றெடுத்தார்.

nicola_olylagers.jpg

emmanuel.jpg

பெண்களுக்கான மைதான போட்டிகளில் அதிசிறந்த மெய்வல்லுநர் விருதை அவுஸ்திரேலியாவின் நிக்கோலா ஒலிஸ்லேஜர்ஸ் வென்றெடுத்தார்.

ஆண்களுக்கான சுவட்டு போட்டிகளில் அதிசிறந்த மெய்வல்லுநர் விருதை கென்ய வீரர் இம்மானுவேல் வனியொயன்யி வென்றெடுத்தார்.

maria_peres.jpg

sabastian_sawe.jpg

வருடத்தின் அதிசிறந்த வெளிக்கள பெண் மெய்வல்லுநராக ஸ்பெய்ன் வீராங்கனை மரியா பெரெஸ் தெரிவானதுடன் ஆண் மெய்வல்லுநராக கென்ய வீரர் செபஸ்டியன் சோவ் தெரிவானார்.

rising_stars_ed_serem_and_zang_giale.jpg

பெண்களில் வளர்ந்துவரும் நட்சத்திர வீராங்கனை விருதை சீன வீராங்கனை ஸாங் ஜியேல் வென்றெடுத்தார்.

ஆண்களில் வளர்ந்துவரும் நட்சத்திர வீரர் விருதை கென்ய வீரர் எட்மண்ட் சேரம் வென்றெடுத்தார்.

https://www.virakesari.lk/article/232249

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸ்கள், ஷஹித் அப்றிடியின் 15 வருட சாதனையை ரோஹித் ஷர்மா முறியடித்தார்

2 weeks 1 day ago

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸ்கள், ஷஹித் அப்றிடியின் 15 வருட சாதனையை ரோஹித் ஷர்மா முறியடித்தார்.

Published By: Vishnu

30 Nov, 2025 | 10:06 PM

image

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ரன்ச்சி சர்வதேச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் ஷஹித் அப்றிடியின் அதிக சிக்ஸ்களுக்கான 15 வருட சாதனையை ரோஹித் ஷர்மா முறியடித்து புதிய சாதனை நிலைநாட்டினார்.

அப் போட்டியில் 3 சிக்ஸ்களை அடித்த ரோஹித் ஷர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 352ஆவது சிக்ஸை அடித்து அதிக சிக்ஸ்கள் குவித்த வீரர் என்ற சாதனையை நிலைநாட்டினார்.

இதன் மூலம் பாகிஸ்தான் வீரர் ஷஹித் அப்றிடிக்கு 15 வருடங்கள் சொந்தமாக இருந்த 351 சிக்ஸ்கள் என்ற சாதனை ரோஹித் ஷர்மாவினால் முறியடிக்கப்பட்டது.

தென் ஆபிரிக்காவுடனான அப் போட்டியில் ரோஹித் ஷர்மா 57 ஓட்டங்களைப் பெற்றார்.

https://www.virakesari.lk/article/232088

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2025

3 weeks 2 days ago

ட்ரவிஸ் ஹெட் அசத்தலான சதம், முதலாவது ஆஷஸ் டெஸ்டில் 2 நாட்களில் அவுஸ்திரேலியா  வெற்றி; கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியாவுக்கு வருவாயில் பெரு நட்டம் 

Published By: Digital Desk 3

23 Nov, 2025 | 11:47 AM

image

(நெவில் அன்தனி)

பேர்த் விளையாட்டரங்கில் இரண்டே நாட்களில் நிறைவுக்கு வந்த முதலாவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ட்ரவிஸ் ஹெட் குவித்த ஆட்டம் இழக்காத அதிரடி சதத்தின் உதவியுடன் இங்கிலாந்தை 8 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றிகொண்டது.

இந்த டெஸ்ட் போட்டியின் ஆரம்ப நாளான வெள்ளிக்கிழமையன்று பலம் வாய்ந்த நிலையில் இருந்த இங்கிலாந்து மிக மோசமாக தோல்வி அடைந்தது.

மிச்செல் ஸ்டார்க் மிகத் துல்லியமாக பந்துவீசி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து (58 - 7 விக்.) அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு வித்திட்டிருந்தார்.

2211_travis_head.png

2211_mitchell_starc.png

இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்டு டெஸ்ட் தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் அவுஸ்திரேலியா முன்னிலை அடைந்துள்ளது.

இது இவ்வாறிருக்க, இரண்டு நாட்களில் டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்தால் கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியாவுக்கு மில்லியன் கணக்கில் நட்டம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வரவு, செலவுகளை சமநிலைப்படுத்தும் வகையில் இங்கிலாந்துடான ஆஷஸ் டெஸ்ட் தொடரை கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியா ஒதுக்கியிருந்தது. ஆனால், குறுகிய டெஸ்ட் போட்டிகள் கருப்பொருளாக மாறினால் அது மிகவும் கடினமான சூழலை தோற்றுவிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் போட்டி 2 நாட்களில் முடிவடைந்ததால் அவுஸ்திரேலியாவுக்கு 3ஆம், 4ஆம் நாட்களில் கிடைக்கவிருந்த 3 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் வருவாய் இல்லாமல் போய் நட்டம் ஏற்பட்டுள்ளது.

வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய முதலாம் நாளன்று 19 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றதுடன் அவுஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்களை இழந்து 123 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

2211_ben_stokes.png

பென் ஸ்டோக்ஸ் திறமையாக பந்துவீசி 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்திருந்தார்.

இரண்டாம் நாள் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த அவுஸ்திரேலியா மேலதிகமாக 9 ஓட்டங்களைப் பெற்று கடைசி விக்கெட்டை இழந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 164 ஓட்டங்களைப் பெற்று அவுஸ்திரேலியாவுக்கு 205 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடிய ட்ரவிஸ் ஹெட் 83 பந்துகளில் 16 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் அடங்கலாக 123 ஓட்டங்களைப் பெற்று அவுஸ்திரேலியாவை இரண்டு நாட்களுக்குள் வெற்றி அடையச் செய்தார்.

ட்ரவிஸ் ஹெட், மானுஸ் லபுஷேன் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 117 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

எண்ணிக்கை சுருக்கம்

இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம்  இழந்து  172 (ஹெரி ப்றூக் 52, ஒலி போப் 46, ஜமி ஸ்மித் 33, மிச்செல் ஸ்டார்க் 58 - 7 விக்., ப்றெண்டன் டொகெட் 27 - 2 விக்.)

அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 132 (அலெக்ஸ் கேரி 26, கெமரன் க்றீன் 24, ட்ரவிஸ் ஹெட் 21, பென் ஸ்டோக்ஸ் 23 - 5 விக்., ப்றைடன் கார்ஸ் 45 - 3 விக்., ஜொவ்ரா ஆச்சர் 11 - 2 விக்.)

இங்கிலாந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 164 (கஸ் அட்கின்சன் 37, ஒலி போப் 33, பென் டக்கட் 28, ப்றைடன் கெயார் 20, ஸ்கொட் போலண்ட் 33 - 4 விக்., ப்றெண்ட்ன் டொகெட் 51 - 3 விக்., மிச்செல் ஸ்டாக் 55 - 3 விக்.)

அவுஸ்திரேலியா (வெற்றி இலக்கு 205 ஓட்டங்கள்) 2ஆவது இன்: 205 - 2 விக். (ட்ரவிஸ் 123, மானுஸ் லபுஷேன் 51 ஆ.இ., ஜேக் வெதரோல்ட் 23, ப்றைடன் கெயார் 44 - 2 விக்.)

https://www.virakesari.lk/article/231189

பாகிஸ்தான் - ஸிம்பாப்வே - இலங்கை மும்முனை ரி20 கிரிக்கெட் தொடர்

3 weeks 4 days ago

பரபரப்பை ஏற்படுத்திய மும்முனை ரி20 தொடரின் ஆரம்பப் போட்டியில் ஸிம்பாப்வேயை வென்றது பாகிஸ்தான்

Published By: Vishnu

18 Nov, 2025 | 11:25 PM

image

(நெவில் அன்தனி)

ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (18) மிகவும் பரபரப்பை எற்படுத்திய மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரின் ஆரம்பப் போட்டியில் ஸிம்பாப்வேயை 4 பந்துகள் மீதம் இருக்க 5 விக்கெட்களால் பாகிஸ்தான் வெற்றிகொண்டது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஸிம்பாப்வே 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது.

பிறயன் பெனெட் (49), டடிவான்ஸே மருமணி (30) ஆகிய இருவரும் 48 பந்துகளில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்த வண்ணம் இருந்தன.

மத்திய வரிசையில் அணித் தலைவர் சிக்கந்தர் ராசா ஆட்டம் இழக்காமல் 34 ஓட்டங்களைப் பெற்றார். இந்த மூவரை விட ப்றெண்டன் டெய்லர் (14) மாத்திரம் இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார்.

1811_mhd_nawaz.png

பந்துவீச்சில் மொஹம்மத் நவாஸ் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 19.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

முன்வரிசை வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காதது பாகிஸ்தானுக்கு நெருக்கடியைக் கொடுத்தது.

ஷிப்ஸதா பர்ஹான் (16), பாபர் அஸாம் (0), சல்மான் அகா (1), சய்ம் அயூப் (22) ஆகியோர் கவனக் குறைவான அடி தெரிவுகளால் முதல் 10 ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்தனர்.

எனினும் மத்திய வரிசை வீரர்கள் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி பாகிஸ்தானின் வெற்றியை உறுதிசெய்தனர்.

பக்கார் ஸமான் (44), உஸ்மான் கான் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகம் ஊட்டினர்.

தொடர்ந்து உஸ்மான் கான், மொஹம்மத் நவாஸ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 36 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானை வெற்றி அடையச் செய்தனர்.

உஸ்மான் கான் 37 ஓட்டங்களுடனும் மொஹ்ஹமத் நவாஸ் 21 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் ப்றட் இவேன்ஸ் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: மொஹம்மத் நவாஸ்

இந்த மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் பங்குபற்றும் தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை அணி நாளைமறுதினம் ஸிம்பாப்வேயை எதிர்த்தாடவுள்ளது.

https://www.virakesari.lk/article/230747

19 வயதின்கீழ் ஆண்களுக்கான உலகக் கிண்ணம் - அட்டவணை வெளியீடு

3 weeks 4 days ago

நமிபியாவிலும் ஸிம்பாப்வேயிலும் 19 வயதின்கீழ் ஆண்களுக்கான உலகக் கிண்ணம் : சி  குழுவில் இலங்கை, அட்டவணை வெளியீடு

19 Nov, 2025 | 07:41 PM

image

(நெவில் அன்தனி)

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 16ஆவது அத்தியாயம் இணை வரவேற்பு நாடுகளான ஸிம்பாப்வே, நமிபியா ஆகியவற்றில் நடத்தப்படவுள்ளது.

இந்த சுற்றுப் போட்டியில் சற்று இலகுவான  சி  குழுவில் இலங்கை இடம்பெறுகிறது.

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2026 ஜனவரி 15ஆம் திகதியிலிருந்து பெப்ரவரி 6ஆம் திகதிவரை நடைபெறும்.

போட்டியில் பங்குபற்றும் அணிகள் ஸிம்பாப்வே, நமிபியா நாடுகளை 2026 ஜனவரி 8ஆம் திகதி சென்றடையும்.

தொடர்ந்து 9ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதிவரை பயிற்சிப் போட்டிகள் நடைபெறும்.

அதிக தடவைகள் சம்பியனான இந்தியா (5), 2020இல் சம்பியனான பங்களாதேஷ், ஐக்கிய அமெரிக்கா, நியூஸிலாந்து ஆகிய அணிகள் ஏ குழுவில் மோதும்.

இணை வரவேற்பு நாடான ஸிம்பாப்வே, 2 தடகைகள் சம்பியனான பாகிஸ்தான், ஒரு தடவை சம்பியனான இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து ஆகிய அணிகள் பி குழுவில் இடம்பெறுகின்றன.

நடப்பு சம்பியனும் 4 தடவைகள் சம்பியனானதுமான அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஜப்பான், இலங்கை ஆகிய அணிகள் சி குழுவில் ஒன்றை ஒன்று எதிர்த்தாடும்.

தன்ஸானியா, தலா ஒரு தடவை சம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென் ஆபிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் டி குழுவில் விளையாடும்.

சி குழுவில் இடம்பெறும் இலங்கை தனது முதலாவது போட்டியில் ஜப்பானை 2024 ஜனவரி 17ஆம் திகதி எதிர்த்தாடும்.

தொடர்ந்து அயர்லாந்தை 19ஆம் திகதியும் அவுஸ்திரேலியாவை 23ஆம் திகதியும் இலங்கை சந்திக்கும்.

இக் குழுவுக்கான லீக் போட்டிகள் யாவும் விண்ட்ஹோக், நமிபியா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.

இதனைவிட ஹராரே விளையாட்டுக் கழக மைதானம், ஹராரே டக்காஷிங்கா விளையாட்டுக் கழக மைதானம், ஹராரே குவீன்ஸ் விளையாட்டுக் கழக மைதானம், நமிபியா விண்ட்ஹோக் HP ஓவல் மைதானம் ஆகிய மைதானங்களிலும் போட்டிகள் நடைபெறும்.

இந்த நான்கு குழுக்களிலும் மொத்தமாக 24 லீக் போட்டிகள் ஜனவரி 15இலிருந்து 24வரை நடைபெறும்.

லீக் போட்டிகள் முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் 3 இடங்களைப் பெறும் 12 அணிகள் இரண்டு குழுக்களாக சுப்பர் சிக்ஸ் சுற்றில் விளையாடும்.

சுப்பர் சிக்ஸ் போட்டிகள் ஜனவரி 26இலிருந்து 31வரை நடைபெறும்.

சுப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் குறுக்கு முறையிலான அரை இறுதிகளில் விளையாடும்.

முதலாவது அரை இறுதிப் போட்டி பெப்ரவரி 3ஆம் திகதியும் இரண்டாவது அரை இறுதிப் போட்டி பெப்ரவரி 4ஆம் திகதியும் நடைபெறும்.

அரை இறுதிகளில் வெற்றிபெறும் அணிகள் ஹராரேயில் பெப்ரவரி 6ஆம் திகதி 19 வயதுக்குட்பட்ட உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும்.

அரை இறுதிப் போட்டிகளுக்கும் இறுதிப் போட்டிக்கும் மேலதிக தினங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

under_19_world_cup_schedule.png

https://www.virakesari.lk/article/230840

அமைதியாக ஆனால் 'அதிரடியாக' நீக்கப்பட்ட சரித் அசலன்க

3 weeks 5 days ago

19 Nov, 2025 | 04:04 PM

image

பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் மும்முனை ரி20 கிரிக்கெட் தொடரில் இருந்து இலங்கையின் ரி20 அணித் தலைவர் சரித் அசலன்க ஓசையின்றி நீக்கப்பட்டபோது ஆரம்ப கிசுகிசுக்கள் சுகவீனம் என முணுமுணுத்தன. ஆனால், அதற்கு அப்பால் ஒரு கீறல் வீழ்ந்துள்ளதுடன் ஒரு வித்தியாசமான தோற்றம் வெளிப்படுகிறது.  

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைத் தொடர்வதில் ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதத்தின்போது அணித் தலைவர் வெளிப்படுத்திய அதிருப்தியானது விரிசல்கள் நிறைந்த ஆடுகளத்தில் ஒரு மோசமான எகிறிபாயும் பந்து போன்று அவரைத் திருப்பித் தாக்கியுள்ளது..

தாயகம் திரும்பத் துடித்த மற்றொரு பிரதான வீரரான வேகப்பந்து வீச்சாளர் அசித்த பெர்னாண்டோவும் இதே போன்ற ஒரு இக்கட்டான நிலையை சந்தித்துள்ளார்.

இவர்கள் இருவரின் கிரிக்கெட் பயணத்தைப் மீட்டுப்பார்த்தால் அவர்கள் இருவரும் மிக நீண்ட தூரம் ஒன்றாக பயணித்துள்ளதை அறிந்துகொள்ளலாம்.

முன்னாள் இலங்கை அணியின் உப தலைவர் ரோய் டயஸின் பயிற்றுவிப்பின் கீழ் அவர்கள் இருவரும் 19 வயதுக்குட்பட்ட அணியில் சகாக்களாக இருந்தவர்கள்.

ரோய் டயஸின் பயிற்றுவிப்பிலேயே சரித் அசலன்க தலைமையிலான 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 2016இல் நான்கு நாள் இளையோர் டெஸ்ட் தொடரிலும் (1 - 0) இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் (3 - 0) 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணியை வெற்றிகொண்டிருந்தது. அந்த அணிகளில் அசித்த பெர்னாண்டோ விளையாடாதபோதிலும் குழாத்தில் இடம்பெற்றிருந்தார்.

இப்போது அவர்கள் இருவரும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்குப் பின்னர் தாயகம் திரும்பிவிட்டனர். பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் முத்தரப்பு தொடருக்கான குழாத்தில் பெயரிடப்பட்டிருந்த அவர்கள் இருவரும் இப்போது அதில் பங்குபற்றவில்லை.

ரிச்மண்ட் கல்லூரி அணியிலும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியிலும் ஒரு சிறந்த தலைவராக செயற்பட்ட அசலன்க, தலைமைத்துவத்திற்காக மிகக் கவனமாக வளர்க்கப்பட்டதுடன் அதற்காக மிக நீண்டகாலமாக காத்திருந்தார்.

காலி ரிச்மண்ட் கல்லூரி அணியை மிகுந்த துணிச்சலுடன் வழிநடத்திய அவர் தொடர்ந்து 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக செயற்பட்டபோது அந்த நற்சான்றிதழ்கள் மேலும் மெருகூட்டப்பட்டது.

தனது 23ஆவது வயதில் அவர் இலங்கை அணியில் அறிமுகமானபோது அவரது தோள்களில் தலைமைப்பதவி சுமத்தப்படும் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக அப்போது இருந்தது.

சரித் அசலன்க அணித் தலைவரானபோது மஹேல ஜயவர்தனவின் அமைதியான சுபாவத்தைப் பிரதிபலிப்பதுபோல் அமைதியான மன உறுதியுடன் அணியை வழிநடத்தினார்.

அவரது தலைமையில் இருதரப்பு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் அவுஸ்திரேலியாவையும் இந்தியாவையும் இலங்கை வெற்றிகொண்டு உலக தரவரிசையில் நான்காவது இடத்திற்கு முன்னேறியது.

சம்பியன்ஸ் கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காத நிலையில் இந்த வெற்றிகள் இலங்கைக்கு தெம்பூட்டுவதாக அமைந்தன.

கையில் துடுப்பை ஏந்தியவராக அசலன்க அமைதியாக போட்டிகளை வெற்றியுடன் முடித்துவைத்து புகழ்ச்சியைப் பெற்றார். பெரும்பாலும் கடினமான வெற்றி இலக்குகளை சாதுரியமாக கையாண்டு  அவற்றைக் கடக்கச் செய்ததுடன் கணிசமான மொத்த எண்ணிக்கைகளை அணி பெறுவதற்கும் பெரும் பங்காற்றி இருந்தார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் ஏழாவது இடத்திற்கு அவர் முன்னேறினார். அதனைடன் ஒரு தற்செயல் நிகழ்வு என்று கூறிவிட முடியாது.

ஆனால், டி20 கிரிக்கெட்டில் அவரது ஆட்டத் திறன் மன்னிக்க முடியாத தன்மையைக் காட்டியது. துடுப்பாட்டத்தில் அவரது திறமை வெகுவாக சரிவடைந்தது. மேலும் ஆசிய கிண்ண கிரிக்கெட்டின் இரண்டாவது சுற்றில் இலங்கையினால் ஒரு வெற்றியைக்கூட பெறமுடியாமல் போனது. அத்துடன் அவரது சில பந்துவீச்சு மாற்றங்கள் ஆச்சரியம் அடையச் செய்தன.

அதிரடி வீரர் மொஹம்மத் நபி துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தபோது துனித் வெல்லாலகேவை கடைசி ஓவரை வீசுமாறு அசலன்க அழைத்தார். அந்த ஓவரில் இளம் வீரரின் 5 பந்துளை நபி சிக்ஸ்களாக விளாசினார். நல்லவேளை அந்தப் போட்டியில் இலங்கை தோல்வியிலிருந்து தப்பியதுடன் ஆப்கானிஸ்தானையும் வெளியேற்றியது.

ஆனால், அவரது மற்ற தவறுகளை அவ்வளவு எளிதில் மறைக்க முடியவில்லை. முன்னாள் அணித் தலைவர் தசுன் ஷானக்கவை கருத்தில் கொள்ளாமால் ஒரு தீர்மானம் மிக்க ஓவரை கமிந்து மெண்டிஸிடம் ஒப்படைத்தபோது பங்களாதேஷ் அணி 169 ஓட்டங்களை கடினமான ஆடுகளத்தில விரட்டிக் கடப்பதை கமிந்துவின் இரண்டு கைகளின் பந்துவீசும்திறமைகளால் தடுக்க முடியவில்லை.

இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் அசலன்க ஒரு களங்கமற்ற ஒழுக்கத்தை கடைப்பிடித்தார். அவர் தன்னை கண்ணியமாக நடத்திக்கொண்டதுடன் ஒருபோதும் ஆட்டத்தை களங்கப்படுத்தவில்லை.

ஆனால், அண்மையில் அணிக்குள் ஒரு சிறிய குழுவினர் - முக்கியமாக அவரது சகாக்கள் - பற்றிய முணுமுணுப்புகள் எழுந்தன. அணியின் ஹோட்டலில் இருந்து 20 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இஸ்லாமாபாத்தில் குண்டுவெடிப்பு வரை அந்த முணுமுணுப்பு ஈசல்போல் தொடர்ந்தது.

பாகிஸ்தான் அதிகாரிகளிடமிருந்து உத்தரவாதங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புத் திட்டங்கள் இருந்தபோதிலும், அசலன்க உட்பட ஒரு சிறிய குழுவினர் சுற்றுப்பயணத்தை கைவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். 

ஸ்ரீலங்கா கிரிக்கெட நிறுவனம் மசியவில்லை. மாற்று வீரர்களைத் தயார்படுத்தத் தொடங்கியது. இரவு நேர வற்புறுத்தலுக்குப் பின்னர் வீரர்கள் இறுதியில் தங்க ஒப்புக்கொண்டனர். ஆனால், சேதம் ஏற்கனவே ஏற்படத்தப்பட்டுவிட்டது.

உயரிடத்திலிருந்து வந்த செய்தி சந்தேகத்திற்கு இடமின்றி இருந்தது. போட்டியை விட யாரும் பெரியர்வர்கள் அல்லர் என்பது போல் அந்த செய்தி இருந்தது.  

இந் நிலையில் இலங்கை அணி ஒருநாள் தொடரை ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் இழந்தது. இறுதிப் போட்டியில் அசலன்க ஒரு ஓரமாக இருந்தார். முத்தரப்பு தொடர் தொடங்குவதற்கு முன்பு அவர் ஓசையின்றி வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

தசுன் ஷானக்கவை ரி20 உதவித் தலைவராக தேர்வாளர்கள் நியமித்தபோது எல்லாம் எழுதப்பட்டுவிட்டது போல் தோன்றியது. அசலன்க களநிலைமையைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார். இப்போது சொந்த மண்ணில் நடைபெறப் போகும் ரி20 உலகக் கிண்ணத்தில் அணித் தலைவர் பதவியை தசுன் ஷானக்க தக்கவைத்துக்கொள்வார் என்று தெரிகிறது. அசலன்கவைப் பொறுத்தமட்டில் திடீரென்று தலைமைக்காகப் போராடாமல் முதல் பதினொருவரில் தனது இடத்திற்காகப் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்.

வாழ்க்கையைப் போலவே, கிரிக்கெட்டில் தவறான அடி ஒரு போட்டியை தலைகீழாக மாற்றிவிடும். 

சரித் அசலன்கவைப் பொறுத்தவரை, இது அவர் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய கடினமான இன்னிங்ஸாக அமையக்கூடும்.

(நன்றி: டெலிகொம் ஏசியா ஸ்போர்ட்)

https://www.virakesari.lk/article/230820

முதலாவது பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர்

4 weeks ago

இந்தியா, பாகிஸ்தான் பார்வையற்ற பெண்கள் கைகுலுக்கி கிரிக்கெட் உணர்வை வெளிப்படுத்தினர்

Published By: Digital Desk 3

17 Nov, 2025 | 02:04 PM

image

(நெவில் அன்தனி)

உலகின் முதலாவது பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய - பாகிஸ்தான் வீராங்கனைகள் கைகுலுக்கி கிரிக்கெட் ஆர்வத்தின் பண்பாட்டை வெளிப்படுத்தினர். 

அவர்கள் குறைபார்வை உடையவர்களாக இருந்தபோதிலும் விளையாட்டில் ஆழமான பற்றுடன்கூடிய பண்பான பார்வை இருப்பதை எடுத்துக் காட்டினர்.

பார்வையற்ற இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப் போட்டி நடுநிலையான கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக நிலைய  மைதானத்தில் நடைபெற்றது.

இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா, நேபாளம், வரவேற்பு நாடான இலங்கை ஆறு நாடுகள் முதலாவது பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றுகின்றன. 

போட்டிகள் யாவும் இலங்கையில் நடைபெற்றுவருகின்றன.

இந்திய - பாகிஸ்தான் போட்டி முடிவில் இரண்டு அணிகளினதும் வீராங்கனைகள் அரசியல் பதட்டங்களை புறந்தள்ளி வைத்துவிட்டு கைலாகு கொடுத்து தங்களது அதிசிறந்த விளையாட்டுப் பண்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டனர்.

கடந்த மே மாதம் இரண்டு நாடுகளுக்கு இடையில் கொடிய இராணுவ மோதல்  இடம்பெற்ற பின்னர் கிரிக்கெட் மைதானத்திற்கு வேளியேயும் களத்திலும் பதற்றம் அதிகமாக இருந்துவருகிறது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஆடவர் ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் இறுதிப் போட்டி உட்பட மூன்று தடவைகள் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றையொன்று எதிர்த்தாடிய போதிலும் அந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் இரண்டு அணியினரும் கைகுலுக்கல்களைத் தவிர்த்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியின்போதும் தோஹாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசிய கிண்ண உதய தாரகைகள் போட்டியின்போதும் இரண்டு அணியினரும் வாழ்த்துக்களைப் பரிமாறாததுடன் கைகுலுக்கவும் இல்லை.

இந் நிலையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பார்வையற்ற மகளிர் ரி20 கிரிக்கெட் போட்டிக்கான நாணய சுழற்சி நடைபெற்றபோது கைகுலுக்கல் இடம் பெறாததால் இரண்டு அணிகளினதும் வீராங்கனைகள் போட்டி முடிவில் பார்வை உடைய தங்களது வீர, வீராங்கனைகளின் நடத்தையைப் பிரதிபலிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், போட்டி முடிவில் பார்வையற்ற இரண்டு அணிகளினதும் வீராங்கனைகள் அன்பை பரிமாறிக்கொண்டதுடன் கைகளை குலுக்கி பாராட்டுதல்களையும் பகிர்ந்து சிறந்த குணாம்சங்களை வெளிப்படுத்தினர்.

கட்டுநாயக்க, சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் நடைபெற்ற பார்வையற்ற மகளிர் ரி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு இந்தியா 10.2 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து பார்வையற்ற பாகிஸ்தான் மகளிர் அணித் தலைவி நிம்ரா ரஃபீக் இந்தியாவின் பெரிய வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார், அதே நேரத்தில் பார்வையற்ற இந்திய மகளிர் அணித் தலைவி ரி.சி. தீபிகா, பாகிஸ்தான் சிறப்பாக விளையாடியதாகக் கூறினார்.

பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றும் அணிகள் களம் இறங்கும்போது ஒவ்வொரு அணியிலும் முழுமையான பார்வையற்ற நான்கு வீராங்கனைகள் இடம்பெறுவர். மற்றைய ஏழு வீராங்கனைகள் குறைபார்வை உடையவர்களாவர்.

https://www.virakesari.lk/article/230567

ஆசிய கிண்ண உதய தாரகைகள் ரி20 போட்டியில் வியாஸ்காந்த் பந்துவீச்சில் பிரகாசிப்பு; ஆனால் இலங்கை ஏ அணிக்கு ஏமாற்றம்

1 month ago

Published By: Vishnu

16 Nov, 2025 | 01:41 AM

image

(நெவில் அன்தனி)

கத்தார், தோஹா வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (15) நடைபெற்ற ஆசிய கிண்ண உதய தாரகைகள் ரி20 கிரிக்கெட்டின் ஏ குழு போட்டியில் ஆப்கானிஸ்தான் ஏ அணியிடம் 3 விக்கெட்களால் இலங்கை ஏ அணி தோல்வி அடைந்து ஏமாற்றம் அடைந்தது.

யாழ். மைந்தன், மத்திய கல்லூரியின் முன்னாள் தலைவர் விஜயகாந்த் வியாஸ்காந்த் பந்துவீச்சில் 3 விக்கெட் குவியலைப் பதிவுசெய்து பிரகாசித்தபோதிலும் அது பலனற்றுப் போனது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது.

மிலன் ரத்நாயக்க (41), நுவனிது பெர்னாண்டோ (39), அணித் தலைவர் துனித் வெல்லாலகே (33), விஷேன் ஹலம்பகே (28) ஆகிய நால்வரே துடுப்பாட்டத்தில் அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர்.

dunith_wellalage.jpg

ஆப்கான் பந்துவீச்சில் பிலால் சமி 45 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஏ.எம். கஸன்பார் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் ஏ அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இதில் சிதிக்குல்லா அத்தல் 54 ஓட்டங்களையும் இம்ரான் 34 ஓட்டங்களையும் அணித் தலைவர் தார்விஷ் ரசூலி 32 ஓட்டங்களையும் காய்ஸ் அஹ்மத் ஆட்டம் இழக்காமல் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் விஜயகாந்த் வியாஸ்காந்த் 4 ஓவர்களில் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: பிலால் சமி

https://www.virakesari.lk/article/230450

இந்தியா சார்பாக இரண்டாவது அதிவேக ரி20 கிரிக்கெட் சதமடித்தார் 14 வயது சூரியவன்ஷி

1 month ago

'எல்லா புகழும் என் தந்தைக்கே, அவர் இல்லாமல் இந்தளவு உயர்ந்திருக்கமாட்டேன்' - 14 வயது இந்திய வீரர் சூரியவன்ஷி

Published By: Vishnu 15 Nov, 2025 | 07:29 PM

image

(நெவில் அன்தனி)

எல்லா புகழும் என் தந்தைக்கே, அவர் என்னை கண்டிப்புடன் வளர்திராவிட்டால் நான் கிரிக்கெட்டில் இந்தளவு உயர்ந்திருக்கமாட்டேன்' என இந்தியாவின் 14 வயதுடைய இளம் கிரிக்கெட் நட்சத்திரம் வைபவ் சூரியவன்ஷி தெரிவித்துள்ளார்.

கத்தாரின் தோஹாவில் நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண உதய தாரகைகள் (Rising Stars) கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிராக  இந்தியா சார்பாக இரண்டாவது அதிவேக ரி20 கிரிக்கெட் சதத்திற்கான இணை சாதனையை ஏற்படுத்திய  பின்னர் வைபவ் சூரியவன்ஷி இதனைத் தெரிவித்தார்.

அப் போட்டியில் 32 பந்துகளில் 100 ஓட்டங்களைப் பூர்த்தி செய்து இந்தியா சார்பாக ரி20 போட்டிகளில் இரண்டாவது அதிவேக சதத்தைக் குவித்த ரிஷாப் பான்டின் சாதனையை சமப்படுத்தினார்.

இந்தியாவில் நடைபெற்றுவரும் முஷ்தாக் அலி கிண்ணத்துக்கான ரி20 கிரிக்கெட் போட்டியில் கடந்த வருடம் குஜராத் அணிக்காக உர்வில் பட்டேலும் பஞ்சாப் அணிக்காக அபிஷேக் ஷர்மாவும் 28 பந்துகளில் சதங்களைப் பூர்த்தி செய்து இந்தியாவுக்கான அதிவேக சதங்களைப் பெற்ற சம சாதனையாளர்களாக இருக்கின்றனர்.

ரிஷாப் பான்ட் 2018இல் டெல்ஹி அணிக்காக 32 பந்துகளில் ரி20 சதத்தைப் பூர்த்திசெய்திருந்தார்.

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆசிய கிண்ண உதய தாரகைகள் ரி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய ஏ அணி சார்பாக  சூரியவன்ஷி   42 பந்துகளில் 11 பவுண்டறிகள், 15 சிக்ஸ்களுடன் 142 ஓட்டங்களைக் குவித்து 13ஆவது ஓவரில் ஆட்டம் இழந்தார்.

இதன் மூலம் 14 வயது 232 நாட்களில் இந்திய தேசிய பிரதிநிதித்துவ அணிக்காக சதம் குவித்த மிகவும் இளைய வீரர் என்ற சாதனையைப் படைத்து சூரியவன்ஷி பெருமை பெற்றார்.

இதற்கு முன்னர் மிக இளம் வயதில் சதம் குவித்த வீரர் என்ற சாதனையை 2005இல் ஸிம்பாப்வே ஏ அணிக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் ஏ அணி வீரர் முஷ்பிக்குர் ரஹிம்  (ஆட்டம் இழக்காமல் 111) நிலைநாட்டி இருந்தார். அப்போது அவருக்கு 16 வயது 171 நாட்கள் ஆகும்.

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான போட்டியில் சூரியவன்ஷி முதலாவது பந்தில் கொடுத்த பிடி தவறவிடப்பட்டது. அதனை சாதகமாக்கிக்கொண்ட சூரியவன்ஷி அதன் பின்னர் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி சதம் குவித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 342.85 ஆக இருந்தது. ரி20 போட்டிகளில் சதம் அடித்தவர்களில் நான்காவது அதி கூடிய ஸ்ட்ரைக் ரேட் இதுவாகும்.

இந்த வருடம் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் சார்பாக 35 பந்துகளில் சதம் குவித்து மிக இளைய வயதில் (14 வயது, 32 நாட்கள்) ரி20 சதம் குவித்தவர் என்ற சாதனைக்கு  சூரியவன்ஷி  சொந்தக்காரரானார்.

இது ஐபிஎல் இல் பெறப்பட்ட இரண்டாவது அதிவேக சதமாகும். பூனே வொரியர்ஸ் அணிக்கு எதிராக றோயால் செலஞ்சர்ஸ் பெங்களூரு  அணி  சார்பாக கிறிஸ் கேல் 2013இல் 30 பந்துகளில் குவித்த சதமே ஐபிஎல் இல் பதிவான அதிவேக சதமாகும்.

1511_file_photo_vaibav_suriyavanshi_u_19

'இது எனது இயல்பான துடுப்பாட்ட பாணியாகும். இது ரி20 வடிவ கிரிக்கெட் ஆகும். எனவே எனது சொந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பினேன். முதலாவது பந்தில் எனது பிடி தவறவிடப்பட்டது. ஆனால், எனது எண்ணத்தை நான் மாற்ற விரும்பவில்லை. இந்த மைதானத்தில் எங்களுக்கு கணிசமான மொத்த எண்ணிக்கை தேவைப்பட்டது. ஆடுகளம் துடுப்பாட்டத்திற் கு   சிறப்பாக இருந்தது. அத்துடன் பவுண்டறி எல்லைகள் குறைந்த தூரங்களைக் கொண்டிருந்தது. எனவே நான் விளாசி அடித்தேன்' என போட்டியின் பின்னர் வைபவ் சூரியவன்ஷி கூறினார்.

அப் போட்டியில் இந்திய ஏ அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 297 ஓட்டங்களைக் குவித்தது. ஐக்கிய அரபு இராச்சியம் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

1511_14yr_old__vaibav_suriyavanshi.png

'எனது இந்த ஆற்றல் வெளிப்பாடுகளுக்கு எல்லா புகழும் எனது தந்தைக்கே உரித்தாகும்' என அவர் மேலும் கூறினார்.

'சிறு பராயத்திலிருந்தே எனது தந்தை என்னைக் கண்டிப்புடன் வளர்த்தார். அப்போதெல்லாம் அவர் ஏன் இவ்வளவு கண்டிப்பாக இருக்கிறார் என நான் சிந்திப்பேன். ஆனால், அதன் பலாபலன்களை மைதானத்தில் இப்போது நான் உணர்கிறேன். எனது கவனத்தை சிதறடிக்கவிடாமல் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வைத்தார். அத்துடன் நான் கடினமாக உழைக்க வேண்டும் என்பதிலும் குறியாக இருந்தார். எனவே எனக்கு கிடைக்கும் எல்லா விடயங்களுக்கும் எனது தந்தைக்கே நன்றி கூறுவேன். ஏனேனில் அவர் இல்லாமல் நான் இந்தளவு உயர்ந்திருக்க மாட்டேன்' என்றார் சூரியவன்ஷி.

https://www.virakesari.lk/article/230448

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்

1 month ago

ஜடேஜாவுக்கு பதில் சஞ்சு சாம்சன் : சிஎஸ்கே முடிவால் யாருக்கு லாபம்?

ஐபிஎல் டிரேட்: சாம்சன் - ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • பிரதீப் கிருஷ்ணா

  • பிபிசி தமிழ்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த சஞ்சு சாம்சன் - ரவீந்திர ஜடேஜா 'ஐபிஎல் டிரேட்' உறுதியாகியிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய அங்கமாக விளங்கிய ஜடேஜாவையும், ஆல்ரவுண்டர் சாம் கரண் இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அதற்குப் பதிலாக ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்திருக்கிறார்.

ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை ஏலத்தைத் தவிர்த்து 'டிரேட்' மூலமாகவும் வீரர்களை வாங்க முடியும். 2009ம் ஆண்டு முதலே ஐபிஎல் டிரேட்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பல அணிகள் இதில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் இதில் ஆர்வம் காட்டியதில்லை.

16 சீசன்களில் அந்த அணி ஒரேயொரு முறை ராபின் உத்தப்பாவை டிரேட் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வாங்கியது. இப்போது அதே அணியிலிருந்து சாம்சனையும் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

தங்கள் அணிகளின் முக்கிய அங்கமாகக் கருதப்பட்ட வீரர்கள் மாறியது ஏன்? இந்த டிரேட் யாருக்கு பெரிய அளவில் லாபகரமாக அமைந்திருக்கிறது? இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாதகமாக அமைந்திருக்கும் விஷயங்கள் என்ன?

ஐபிஎல் டிரேட்: சாம்சன் - ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

இரு அணிகளின் முக்கிய அங்கமாக இருந்த வீரர்கள்

ஜடேஜா, சாம்சன் இருவருமே தங்கள் அணிகளில் நெடுங்காலம் முக்கிய வீரர்களாக இருந்தவர்கள். 2012ம் ஆண்டு முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த ஜடேஜா, 12 சீசன்கள் அந்த அணிக்காக ஆடியிருக்கிறார். ஐபிஎல், சாம்பியன்ஸ் லீக் என 200 போட்டிகளில் சூப்பர் கிங்ஸுக்காக ஆடியிருக்கிறார் அவர்.

இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுகள்படி அந்த அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அவர் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மேலும், அந்த அணியோடு மூன்று முறை (2018, 2021, 2023) ஐபிஎல் பட்டமும் வென்றிருக்கிறார் அவர்.

அதேசமயம் சஞ்சு சாம்சன் 11 ஆண்டுகள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியிருக்கிறார். 155 போட்டிகளில் அந்த அணிக்காக விளையாடிய அவர், இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுகள்படி சுமார் 32 என்ற சராசரியில் 4219 ரன்கள் (அனைத்து போட்டிகளிலும்) எடுத்திருக்கிறார். அந்த அணிக்காக அதிக ரன்கள் எடுத்திருப்பவர் அவர்தான்.

மேலும், 2021ம் ஆண்டு முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுவந்த சாம்சன், 2022 சீசனில் அந்த அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். 2024ல் அவர் தலைமையில் அந்த அணி மூன்றாவது இடம் பிடித்தது.

இப்படி அந்த அணிகளின் பெரிய அங்கமாக இருந்த வீரர்களை இரு அணிகளும் டிரேட் செய்ய முன்வந்தது பலருக்கும் ஆச்சர்யமளிப்பதாக உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் சொன்ன காரணம் என்ன?

இந்த டிரேட் உறுதியான பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதளப் பக்கத்தில், அந்த அணியின் நிர்வாக இயக்குநர் காசி விஸ்வநாதன் பேசிய வீடியோ வெளியிட்டிருந்தனர். அதில் இது மிகவும் கடினமான முடிவாக இருந்ததாகக் கூறிய அவர், தரமான இந்திய டாப் ஆர்டர் பேட்டர்களை மினி ஏலத்தில் எடுப்பது கடினம் என்பதால் இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்தார்.

"ஒரு டாப் ஆர்டர் இந்திய பேட்டரின் தேவையை அணி உணர்ந்தது. ஏலத்தில் அதிக இந்திய பேட்டர்கள் இருக்கமாட்டார்கள் என்பதால் இந்த 'டிரேட் விண்டோவில்' ஒருவரை கொண்டுவருவது என்று முடிவு செய்தோம்.

சிஎஸ்கேவின் வெற்றிப் பயணத்தில் முக்கிய அங்கமாக இருந்த ஜடேஜாவை விடுவது எளிதான முடிவாக இருக்கவில்லை. சிஎஸ்கே நிர்வாகம் எடுத்த முடிவுகளிலேயே இதுதான் கடினமானது என்றுகூட சொல்லலாம்.

இந்த சமயத்தில் அணியின் எதிர்கால மாற்றத்தை (transition) கருத்தில் கொண்டு இந்த கடினமான முடிவை எடுத்திருக்கிறோம். ஜடேஜாவோடு கலந்துபேசி சுமுகமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார் காசி விஸ்வநாதன்.

அதுமட்டுமல்லாமல், அணியின் பல வீரர்கள் தங்கள் கரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதால், எதிர்காலத்துக்கான ஓர் அணியைக் கட்டமைக்கும் நோக்கோடு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதுபற்றிப் பேசிய அவர், "தன் 'வைட் பால்' கரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதால் ஜடேஜாவும் மாற்றம் தரும் வேறு வாய்ப்புகளுக்குத் தயாராகத்தான் இருந்தார். சாம் கரணும் எங்களுக்கு சீரான செயல்பாட்டைக் கொடுத்திருக்கிறார்.

நான் முன்பே சொன்னதுபோல் இவர்கள் இருவரையும் விடுவது மிகவும் கடினமான முடிவுகளுள் ஒன்று. அணியின் பல வீரர்கள் தங்கள் கரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதால், எதிர்காலத்துக்கான ஒரு அணியை அடுத்த ஒருசில ஆண்டுகளில் கட்டமைப்பது மிகவும் முக்கியம்." என்றார்.

இந்நிலையில், சாம்சனை எதிர்காலத்துக்கான ஒரு வீரர் என அவர் குறிப்பிட்டார். "சஞ்சு சாம்சன் சுமார் 4500 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கும் ஒரு அனுபவ ஐபிஎல் பேட்டர். அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டிருக்கிறார். அவருக்கு கிட்டத்தட்ட 30 வயது தான் (31 வயது) ஆகிறது. அதனால் எதிர்காலத்துக்கு இது நல்ல முடிவாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம்" என்று சாம்சனை டிரேட் செய்ததற்கான காரணத்தை அவர் தெரிவித்தார்.

ஐபிஎல் டிரேட்: சாம்சன் - ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தோனி, ரெய்னா தவிர்த்து சூப்பர் கிங்ஸுக்காக 200 போட்டிகள் ஆடிய ஒரே வீரர் ஜடேஜா தான்

ராஜஸ்தான் ராயல்ஸ் & ஜடேஜா சொன்னது என்ன?

இந்த டிரேட் பற்றிப் பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநர் குமார் சங்கக்காரா, "ஜடேஜா மீண்டும் அணிக்குத் திரும்புவது சிறப்பான தருணம். அவருக்கு இந்த அணியை, ரசிகர்களை நன்கு தெரியும். கடந்த சில ஆண்டுகளில் அனைத்து ஏரியாவிலும் பங்களிக்கக்கூடிய ஒரு சிறந்த வீரராக அவர் உருவெடுத்திருக்கிறார். அவருடைய அனுபவம், அமைதியான தன்மை, போட்டித்தன்மை ஆகியவை ஒரு நல்ல எதிர்காலத்தை நாங்கள் கட்டமைக்க உதவும்" என்று கூறினார்.

சாம் கரண், ஜடேஜா இருவரும் தங்களுக்கு பல பரிமாணங்களில் உதவுவதாக அவர் தெரிவித்தார். "சாம் கரண் கொஞ்சம் வேறு மாதிரியான வீரர் என்றாலும், அவரும் முக்கியமான சில பரிமாணங்கள் கொண்டுவருகிறார். அவர் பயமறியாத வீரர். எளிதில் தன்னை தகவமைத்துக்கொள்பவர். நெருக்கடியான சூழ்நிலைகளை சமாளிக்கக்கூடியவர். பேட்டிங், பௌலிங் இரண்டிலும் பங்களிக்கக்கூடியவர்" என்றும் அவர் கூறினார்.

2008 மற்றும் 2009 சீசன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஜடேஜா, முதல் ஐபிஎல் சீசனில் அந்த அணியோடு சாம்பியன் பட்டமும் வென்றார்.

அந்த அணியோடு மீண்டும் இணைவது பற்றிப் பேசிய ஜடேஜா, "எனக்கு முதல் மேடையும், முதல் வெற்றிச் சுவையையும் கொடுத்த அணி ராஜஸ்தான் ராயல்ஸ். இங்கு மீண்டும் வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இது எனக்கு ஒரு அணி மட்டுமல்ல. இது என் வீடு. இங்குதான் என் முதல் ஐபிஎல் கோப்பையை வென்றேன். இப்போது இருக்கும் வீரர்களோடு இணைந்து இன்னும் நிறைய கோப்பைகள் வெல்ல ஆசைப்படுகிறேன்" என்றார்.

இந்த டிரேட் மூலம் யாருக்கு வெற்றி?

இரண்டு அணிகளுமே பெரிய வீரர்களை டிரேட் செய்திருந்தாலும், இதனால் யாருக்கு அதிக லாபம் என்ற விவாதங்களும் எழவே செய்திருக்கின்றன. இதுபற்றிப் பேசிய தமிழ்நாடு ஆண்கள் அண்டர் 19 அணியின் தலைமைப் பயிற்சியாளரும் முன்னாள் சிஎஸ்கே வீரருமான யோ மஹேஷ், சூப்பர் கிங்ஸுக்கு சற்று கூடுதல் லாபம் என்று தெரிவித்தார்.

"இந்த டிரேடைப் பொறுத்தவரை இரண்டு அணிகளுக்குமே வெற்றி தான். இரு அணிகளுமே அவர்களுக்கு இருந்த வெற்றிடத்தை நிரப்பியிருக்கிறார்கள். ஏனெனில், சாம்சன் பல கட்டங்களை நிரப்புகிறார். அவர் ஒரு நீண்ட காலத்துக்கான வீரர், ஒரு நல்ல டாப் ஆர்டர் பேட்டர், சிறந்த கீப்பர், அதுமட்டுமல்லாமல் கேப்டன்ஸி அனுபவம் கொண்ட வீரரும் கூட. சூப்பர் கிங்ஸுக்கு தேவையாக இருந்த பல வெற்றிடங்களை அவர் நிரப்புகிறார்" என்று கூறினார் யோ மஹேஷ்.

நீண்ட நாள்களாக ஒரு தரமான கீப்பரை சூப்பர் கிங்ஸால் வாங்க முடியாமல் இருந்த நிலையில், இந்த டிரேட் அவர்களுக்கு சாதமாக அமைந்திருப்பதாகக் கூறினார் அவர். மேலும், இவ்விரு வீரர்களின் வயதைக் கணக்கில் கொள்ளும்போது, சூப்பர் கிங்ஸுக்கு இந்த ஒப்பந்தம் சற்று கூடுதல் சாதகமாக அமைந்திருப்பதாக அவர் கூறினார்.

சாம்சனுக்கு 31 வயதாகும் நிலையில், ரவீந்திர ஜடேஜா அடுத்த மாதம் 37 வயதில் அடியெடுத்து வைப்பார்.

"சாம்சன் - சூப்பர் கிங்ஸ் எதிர்காலத்துக்கான அடித்தளம்"

சாம்சனை மையமாக வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஒரு அணியைக் கட்டமைக்க நல்ல வாய்ப்பு கிடைத்திருப்பதாகக் கூறுகிறார் யோ மகேஷ்.

"சாம்சன் ஒரு சிறந்த வீரர் என்பதைத் தாண்டி, அவர் ஒரு பெரிய 'பிராண்ட்'. அவருக்கு நல்ல பெயரும் மதிப்பும் இருக்கிறது. மார்க்கெட்டிங் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் அது சூப்பர் கிங்ஸுக்கு பெரிய சாதகம். அதுமட்டுமல்லாமல் சாம்சன் தமிழ் பேசக்கூடியவர். ரஜினிகாந்த் ரசிகர் வேறு. இதெல்லாம் நம் ரசிகர்களுக்குப் பிடித்துப்போகும். சாம்சனை நம்முள் ஒருவனாக அவர்கள் பார்க்கத் தொடங்குவார்கள். அது ருதுராஜ் கெய்க்வாடுக்கு நடக்கவில்லை" என்றார் அவர்.

அதுமட்டுமல்லாமல் சாம்சனை உடனடியாக கேப்டனாக்குவது நல்லது என்றும் அவர் கருதுகிறார். "18 கோடி ரூபாய் கொடுத்து ஒரு பெரிய வீரரை வாங்கிவிட்டு, சிஎஸ்கே தாமதம் செய்யக்கூடாது. அவரை உடனடியாக கேப்டனாக்கவேண்டும். ருதுராஜ் போன்று அவருக்கு அந்த ரோலில் செட் ஆக அவகாசம் எடுத்துக்கொள்ளாது. அவர் ஏற்கெனவே ஒரு அணியை பல ஆண்டுகளாக வழிநடத்தியிருக்கிறார். சொல்லப்போனால் அவர் தலைமையில் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரு சீரான முன்னேற்றத்தைக் கண்டிருந்தது. அதனால், அவர் எளிதாக அந்த இடத்தை நிரப்பிவிடுவார்" என்கிறார் யோ மகேஷ்.

சாம்சனை கேப்டனாக்கும் முடிவு ருதுராஜ் கெய்க்வாட் மீதான நெருக்கடியையும் குறைக்கும் என்கிறார் அவர். 2022, 2023 சீசன்களில் ஒரு பேட்டராக அவர் எப்படி சோபித்தாரோ, அதே மாதிரியான செயல்பாட்டை கேப்டன் பதவி இல்லாதபோது அவரால் நெருக்கடியின்றி கொடுக்கமுடியும் என்பது அவரது வாதமாக இருக்கிறது.

ஐபிஎல் டிரேட்: சாம்சன் - ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சூப்பர் கிங்ஸ் அணியின் கீப்பராக யார் செயல்படுவார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது

கீப்பர் யார்? தோனியா, சாம்சனா?

இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டுவரும் சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்திருப்பதன்மூலம், கீப்பராக யார் செயல்படுவார் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

ஒருசில வல்லுநர்கள், இது தோனி 'இம்பேக்ட்' வீரராக விளையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் என்றார்கள். அவர் முழங்கால் பிரச்னையால் தொடர்ந்து அவதிப்படுவதால் இப்படியொரு வாதத்தை சிலர் முன்வைத்தனர்.

அதேசமயம் தோனியின் சிறப்பே அணி ஃபீல்டிங் செய்யும்போது அவர் கொடுக்கும் பங்களிப்புதான் என்பதால், அவர் ஃபீல்டிங்கில் இருக்கவேண்டும் என்றும் சிலர் கூறுகின்றனர்.

இந்த விஷயம் பற்றிப் பேசிய யோ மகேஷ், "சொல்லப்போனால் தோனி அறிவிக்கப்படாத ஒரு 'இம்பேக்ட்' வீரராகத்தான் ஆடிக்கொண்டிருக்கிறார். கடைசி 10 பந்துகள் இருக்கும்போதுதான் ஆடவருகிறார். அவருடைய பெரிய பங்களிப்பு என்பது ஃபீல்டிங்கில் இருக்கும்போதுதான். அதேசமயம் வேறு கேப்டன்கள் இருக்கும்போது அவரும் மெல்ல தலையீட்டைக் குறைத்துக்கொண்டிருக்கிறார். இப்போதும் அதுதான் நடக்கும் என்று நம்புகிறேன். ஒருசில போட்டிகள் சாம்சன் செட் ஆகும் வரை அவர் கீப்பிங் செய்துவிட்டு, மெல்ல அவர் அந்த பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்" என்றார்.

சாம்சன் தற்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டுவருவதால் அவர் நிச்சயம் கீப்பிங் செய்யவே விரும்புவார் என்று குறிப்பிட்டார் யோ மகேஷ்.

ஐபிஎல் டிரேட்: சாம்சன் - ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2023 ஐபிஎல் இறுதிப் போட்டியில் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் அடித்து சிஎஸ்கேவை வெற்றி பெற வைத்தார் ஜடேஜா

ஜடேஜா: சென்னையின் இழப்பும், ராயல்ஸின் லாபமும்

ரவீந்திர ஜடேஜா சென்னையில் இருந்து சென்றிருப்பது உணர்வுபூர்வமாக ரசிகர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்று தெரிவித்தார் யோ மகேஷ்.

"இத்தனை ஆண்டுகள் ரசிகர்கள் அவரை தங்களுள் ஒருவராகப் பார்த்திருக்கிறார்கள். அவரும் அதை திரும்ப வெளிப்படுத்தியிருக்கிறார். இதை ஒரு வீடு என்றே கருதியிருக்கிறார். அவரும், அஷ்வினும் ஒன்றாகப் பந்துவீசி எதிரணிகளை தடுமாற வைத்த தருணங்கள், ஜடேஜா பாய்ந்து பிடித்த கேட்ச்கள், 2023 ஐபிஎல் இறுதிப் போட்டியின் கடைசி 2 பந்துகளில் பௌண்டரிகள் அடித்து அவர் வெற்றி பெறவைத்த அந்தத் தருணம்... இப்படி பல்வேறு தருணங்கள் சென்னை ரசிகர்களுக்கு அவரை மிகவும் நெருக்கமாகக் கொண்டுவந்து வைத்துள்ளன" என்றார் அவர்.

கடந்த 2 சீசன்களாக ஜடேஜாவின் பந்துவீச்சில் ஏற்பட்ட சிறு சரிவு அணி நிர்வாகம் இந்த முடிவை எடுப்பதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்றும் கூட அவர் கருதுகிறார். கடந்த சீசன் 32.40 என்ற சராசரியில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த ஜடேஜா, 2024 சீசனில் 46.13 என்ற சராசரியில் 8 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியிருந்தார்.

அதேசமயம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அவரால் சிறப்பாக செயல்படமுடியும் என்று சொல்லும் யோ மகேஷ், அதற்கான காரணத்தையும் கூறுகிறார்.

"கடந்த 2 ஆண்டுகளாக சேப்பாக்க ஆடுகளம் முன்பு போல் சுழலுக்கு ஒத்துழைக்கவில்லை. அது ஜடேஜாவின் செயல்பாட்டில் பிரதிபலித்தது. ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸின் ஹோம் கிரவுண்டான சவாய் மான்சிங் ஸ்டேடியம் அவருக்கு உகந்ததாக இருக்கும். அது பெரிய மைதானம். பந்து கொஞ்சம் மெதுவாகவும், கீழ் தங்கியும் செல்லும். அங்கு சராசரி ஸ்கோரே 160 - 170 போலத்தான் இருக்கும். அங்கு ஜடேஜாவால் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியும்" என்று யோ மகேஷ் கூறினார்.

கடந்த சீசன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சுழற்பந்துவீச்சே பிரதான பிரச்னையாக இருந்ததாகவும், அதை ஜடேஜா மூலம் அவர்கள் ஓரளவு தீர்த்திருப்பதாகவும் யோ மகேஷ் நம்புகிறார். அதுமட்டுமல்லாமல், சமீப ஆண்டுகளாக ஆல்ரவுண்டர்கள் இல்லாமல் அந்த அணி பல போட்டிகளில் 5 பிரதான பௌலர்களை மட்டுமே வைத்து களமிறங்கும் சூழ்நிலை பல போட்டிகளில் ஏற்பட்டிருக்கிறது. ஜடேஜா, சாம் கரண் ஆகியோரின் வருகை மூலம் அந்த பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது என்கிறார் அவர்.

இதனால் தான் இந்த டிரேட் இரண்டு அணிகளுக்குமே வெற்றிகரமானது என்று குறிப்பிடுகிறார் யோ மகேஷ். எதிர்காலத்தை கணக்கில் கொள்ளும்போது சூப்பர் கிங்ஸுக்கு கூடுதல் லாபம் என்று சொல்லும் அவர், சாம்சனை ராயல்ஸ் இழந்ததை விட, ஜடேஜாவை சூப்பர் கிங்ஸ் இழந்தது உணர்வுபூர்வமாக பெரிய இழப்பு என்றும் கூறினார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8ey35nwwlpo

இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்

1 month ago

இந்தியாவில் கடினமான டெஸ்ட் தொடரை சந்திக்கவுள்ள உலக டெஸ்ட் சம்பியன் தென் ஆபிரிக்கா

Published By: Vishnu 13 Nov, 2025 | 07:51 PM

image

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட சுதந்திரக் கிண்ணத்துக்கான இருதரப்பு டெஸ்ட் தொடரும், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரும் கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (14) ஆரம்பமாகவுள்ளது.

shubman_gil_and_temba_bavuma.jpg

இந்தியாவில் மிகவும் கடினமான தொடர் தென் ஆபிரிக்காவுக்கு காத்திருக்கிறது என்று கூறினால் அது தவறாகாது.

கடந்த 10 வருடங்களில் இந்தியாவுக்கு இரண்டு தடவை டெஸ்ட் கிரிக்கெட் விஜயம் செய்த தென் ஆபிரிக்கா, அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் படுதோல்விகளை சந்தித்தது.

india.png

2015இல் நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட தொடரில் 0 - 3 என இளம் வீரர்களைக் கொண்ட இந்தியாவிடம் தென் ஆபிரிக்கா தோல்வி அடைந்தது. அந்த தொடரில் 2ஆவது டெஸ்ட் போட்டி மழையினால் கழுவப்பட்டது.

அந்த சந்தர்ப்பத்தில் எதிர்கால டெஸ்ட் அணியைக் கட்டி எழுப்பும் குறிக்கோளுடன் இளம் வீரர்களை இந்தியா களம் இறக்கி அதில் வெற்றியும் கண்டது.

தொடர்ந்து 2019இல் உப கண்டத்துக்கு பயணித்த தென் ஆபிரிக்கா, அனுபவம் வாய்ந்த வீரர்களைக் கொண்ட இந்தியாவிடம்  0 - 3 என தோல்வி அடைந்தது.

எவ்வாறாயினும் நடப்பு உலக டெஸ்ட் சம்பியன் தென் ஆபிரிக்கா, இம்முறை அனுப வசாலிகளுடன இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது.

இந்தியா இந்த வருடம் விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளில் 4 வெற்றிகள், 3 தோல்விகள், ஒரு வெற்றி தோல்வியற்ற முடிவு என்ற பெறுபேறுகளைக் கொண்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 0 என்ற ஆட்டங்கள் கணக்கில் முழுமையாக வெற்றியீட்டிய இந்தியா, நாளை ஆரம்பமாகவுள்ள தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற முயற்சிக்கும்.

இந்தத் தொடர் இரண்டு அணிகளினதும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இடையிலான போட்டியாக அமையலாம் என எதிர்வுகூறப்படுகிறது. ஆனால், இந்தியா தனது சொந்த மண்ணில் சுழல்பந்துவீச்சாளர்களைக் கொண்டு பல சந்தர்ப்பங்களில் வெற்றியீட்டியதை மறந்துவிடலாகாது.

தென் ஆபிரிக்கா இந்த வருடம் விளையாடிய 6 போட்டிகளில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி உட்பட 5இல் வெற்றிபெற்றிருந்தது.

பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆபிரிக்கா தோல்வி அடைந்திருந்தது,

தென் ஆபிரிக்கா 1989ஆம் ஆண்டிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வருகின்றபோதிலும் இந்தியாவுக்கு எதிராக 1992இலிருந்தே டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

அதற்கு முன்னர் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளுடன் மாத்திரம் தென் ஆபிரிக்கா விளையாடி இருந்தது. இன ஒடுக்கல் காரணமாக 1970இலிருந்து 1991வரை தென் ஆபிரிக்காவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

1991இல் தடை நீக்கப்பட்ட பின்னரே மற்றைய நாடுகளுடன் டெஸ்ட் விளையாட்டில் தென் ஆபிரிக்கா ஈடுபட ஆரம்பித்தது.

இந்தியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் இதுவரை நடைபெற்றுள்ள 44 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தென் ஆபிரிக்கா 18 - 16 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. 10 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தன.

அணிகள்

இந்தியா: ஷுப்மான் கில் (தலைவர்), ரிஷாப் பான்ட் (உப தலைவர்), ஆகாஷ் தீப், ஜஸ்ப்ரிட் பும்ரா, ரவிந்த்ர ஜடேஜா, யஷஸ்வி ஜய்ஸ்வால், த்ருவ் ஜுரெல், குல்தீப் யாதவ், மொஹம்மத் சிராஜ், தேவ்டத் படிக்கல், அக்சார் படிக்கல், கே. எல். ராகுல், சாய் சுதர்ஷன், வொஷிங்டன் சுந்தர்.

தென் ஆபிரிக்கா: டெம்பா பவுமா (தலைவர்), கோபின் பொஷ், டிவோல்ட் ப்ரவிஸ், டோனி டி ஸோர்ஸி, சைமன் ஹாமர், மாக்கோ ஜென்சன், கேஷவ் மஹாராஜ், ஏய்டன் மார்க்ராம், வியான் முல்டர், சேனுரன் முத்துசாமி, கெகிசோ ரபடா, ரெயான் ரிக்ள்டன், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், கய்ல் வெரின், ஸுபய்ர் ஹம்ஸா.

https://www.virakesari.lk/article/230282

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் - பேட்டிங் மூலம் கீப்பர்கள் மீதான பார்வையை மாற்றியவர்

1 month ago

'பல விக்கெட் கீப்பர்களுக்கு இவரை பிடிக்காது' - கில்கிறிஸ்ட் செய்த மாற்றம் என்ன?

ஆடம் கில்கிறிஸ்ட்

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • பிரதீப் கிருஷ்ணா

  • பிபிசி தமிழ்

  • 13 நவம்பர் 2025

''முன்பெல்லாம் கீப்பர் என்று சொன்னாலே தோனி, பவுச்சர் பேருக்கெல்லாம் முன்பு இவர்தான் ஞாபகம் வருவார்'' - ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் பற்றிப் பேசும்போது தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் பாபா இந்திரஜித் சொன்னது இது.

நவம்பர் 14, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முக்கியமான அங்கமாக இருந்த (1996 முதல் 2008 வரை) ஆடம் கில்கிறிஸ்ட்டின் பிறந்த நாள்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக 905 ஆட்டமிழப்புகளைச் செய்திருக்கும் கில்கிறிஸ்ட் பற்றி சென்டர் ஆஃப் எக்சலன்ஸ் (முன்பு - தேசிய கிரிக்கெட் அகாடெமி) பயிற்சியாளர் ஆர்த்தி சங்கரன், பாபா இந்திரஜித் என விக்கெட் கீப்பிங் அனுபவம் கொண்ட இருவரிடம் பேசினோம்.

'வெகுதூரம் பாய்ந்த கீப்பர்'

தான் கிளவுஸ் வாங்க நினைத்தபோது, கில்கிறிஸ்ட் என்ன கிளவுஸ் வைத்திருந்தாரோ அதேபோல வாங்க வேண்டுமென பாபா இந்திரஜித் யோசித்திருக்கிறார்.

ஆடம் கில்கிறிஸ்டை மிகவும் ஸ்டைலிஷான, அதேநேரம் டெக்னிக்கலாக சிறந்த கீப்பர் என்கிறார் அவர்.

"அவர் ஒரு முழுமையான கீப்பர். ஸ்டம்புக்கு நெருக்கமாக இருக்கும் போதும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பந்து வீசும்போதும் நன்றாகச் செயல்படுவார். சொல்லப்போனால் வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போதுகூட ஸ்டம்புக்கு பின்னாலேயே நின்று பந்துகளைப் பிடித்திருக்கிறார்.

அதேபோல் பெரியளவு திரும்பும் ஷேன் வார்னேவின் பந்துகளைப் பிடிப்பது எளிதான காரியம் இல்லை. அதையும் அவர் நன்றாகக் கையாண்டிருக்கிறார். பந்தைப் பிடிக்க நெடுந்தூரம் அவரால் பறக்கவும் பாயவும் முடியும்" என்றார்.

ஆடம் கில்கிறிஸ்ட்

பட மூலாதாரம், Getty Images

கில்கிறிஸ்ட்டின் இந்தப் பாயும் திறன், ஆஸ்திரேலிய அணியின் ஸ்லிப் ஃபீல்டிங்கையும் பலப்படுத்தியது என்கிறார் ஆர்த்தி சங்கரன்.

இதுபற்றிப் பேசிய அவர், "கில்கிறிஸ்ட்டின் பவர் ஜம்ப் (power jump) அவருக்குப் பெரிய பலம். அதன் மூலம் அவரால் அதிக தூரம் போக முடியும். இது ஒரு வகையில் அந்த அணியின் ஸ்லிப் யூனிட்டையே பலப்படுத்தியது.

பொதுவாகவே கீப்பர் திறமையாகச் செயல்படும்போது அது அந்த ஸ்லிப் யூனிட்டை பலப்படுத்தும். இதனால் அந்த ஸ்லிப் ஃபீல்டர்கள் கொஞ்சம் பின்னால் நிற்கலாம், சற்று இடைவெளி விட்டு விலகி நிற்கலாம். உதாரணமாக முதல் ஸ்லிப்பில் நிற்கும் வீரர் "one and a half slip" (முதல் ஸ்லிப்புக்கும் இரண்டாவது ஸ்லிப்புக்கும் நடுவில்) பொசிஷனில் நிற்கலாம்.

இவ்வாறாக நிற்பது அவர்களுக்கு கேட்ச் பிடிப்பதற்கு சற்று கூடுதல் அவகாசத்தைப் பெற்றுக் கொடுக்கும். அதனால் ஒட்டுமொத்தமாக அந்த ஸ்லிப் யூனிட் சிறப்பாகச் செயல்படும்" என்றார்.

ஆஸ்திரேலிய அணியில் கில்கிறிஸ்ட் போன்ற சிறந்த கீப்பர் மற்றும் சில சிறந்த ஃபீல்டர்கள் இருந்ததால், அவர்களின் ஸ்லிப் யூனிட் எப்போதும் அச்சுறுத்துவதாகவே இருந்தது என்று கூறுகிறார் ஆர்த்தி.

ஆடம் கில்கிறிஸ்ட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு சிறந்த கீப்பர் இருக்கும்போது ஸ்லிப் யூனிட் மேலும் வலுப்பெறுகிறது என்கிறார் ஆர்த்தி

அதுமட்டுமல்லாமல் கில்கிறிஸ்ட்டின் தினசரி பயிற்சி முறை தனக்குமே உதவிகரமாக இருந்தது என்று அவர் கூறினார்.

"போட்டிகளுக்கு முன்பு ஒரு சிலர் பாய்ந்து பாய்ந்து கேட்ச் பிடிப்போம். ஆனால், கில்கிறிஸ்ட் அப்படியல்ல. அவர் எளிதாக சில கேட்ச்கள் பிடிக்க வேண்டும் என்று நினைப்பார். அவருடைய காலும், கையும் நன்கு நகர வேண்டும், பந்து அவர் கிளவுஸ்களில் நன்கு அமர வேண்டும் என்பதுதான் அவருடைய தேவையாக இருக்கும். இதெல்லாம் சிறிய விஷயங்கள்தான். ஆனால், அதையெல்லாம் தன்னுடைய வழக்கமாக மாற்றியிருந்தார் கில்கிறிஸ்ட்" என்றார் ஆர்த்தி.

டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று ஃபார்மட்களிலும் சேர்ந்து மொத்தம் 905 ஆட்டமிழப்புகளுக்குக் காரணமாக இருந்திருக்கிறார் கில்கிறிஸ்ட். இதன் மூலம் அதிக ஆட்டமிழப்புகளுக்குக் காரணமான வீரர்களின் பட்டியலில் மார்க் பவுச்சருக்கு பிறகு இரண்டாவது இடத்தில் இருக்கிறார். சராசரியாக ஒரு போட்டிக்கு 1.865 ஆட்டமிழப்புகள் செய்திருக்கிறார் அவர்.

பேட்டிங் மூலம் கீப்பர்கள் மீதான பார்வையை மாற்றியவர்

விக்கெட் கீப்பர்களின் ரோலை கில்கிறிஸ்ட் மறுவரையறை செய்ததாகச் சொல்கிறார் இந்திரஜித். "அப்போதெல்லாம் கீப்பர்களின் வேலை கீப்பிங் செய்வது மட்டும்தான். அவர்களிடம் பேட்டிங்கில் அதிகம் எதிர்பார்ப்பு இருக்காது. ஆனால், கில்கிறிஸ்ட் அதை மாற்றினார்" என்கிறார் அவர்.

"டி20 போட்டிகள் இல்லாத காலகட்டத்தில் ஒருநாள் போட்டிகளையே அவர் அப்படித்தான் எதிர்கொண்டார். அவருடைய அதிரடியான ஆட்டம் பார்ப்பதற்கு ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்தது. அவர் ஹெய்டன் போல் கட்டுமஸ்தான் ஆள் கிடையாது. இருந்தாலும் அவரால் எளிதாக பௌண்டரிக்கு வெளியே பந்தை அடிக்க முடிந்தது" என்றார் இந்திரஜித்.

அவரால் பிரத்யேகமாக ஒரு பேட்டராகவும் அணியில் ஆட முடியும், பிரத்யேகமாக கீப்பராகவும் அணியில் ஆட முடியும் என்றும் அவர் கூறினார்.

"ஆஸ்திரேலிய அணி என்றாலே அனைவருக்கும் தோன்றும் ஒரு விஷயம் அவர்கள் அக்ரஸிவான வீரர்கள் என்பதுதான். ஆனால், அதற்கு மத்தியில் இவரை எல்லோருக்கும் பிடிக்கும். இவரிடம் ஒரு அமைதியான அக்ரஸன் இருக்கும். பேட்டிங்கில் அக்ரஸன் காட்டுவார். ஆனால், அவருடைய குணம் அப்படி இருக்காது" என்றார் இந்திரஜித்.

கீப்பர்கள் தங்கள் அதிரடி ஆட்டம் மூலம் பேட்டிங்காலும் பங்களிக்க முடியும் என்று ரொமேஷ் கலுவிதரனா முதலில் தொடங்கி வைத்ததை, கில்கிறிஸ்ட் அனைத்து ஃபார்மட்களுக்கும் எடுத்துச் சென்றார் என்கிறார் ஆர்த்தி.

மேலும், "பொதுவாக கீப்பர்கள் கட் மற்றும் ஸ்வீப் ஷாட்களை நன்றாக அடிப்பார்கள் என்பார்கள். ஆனால், கில்கிறிஸ்ட் தன்னுடைய 'பவர் ஹிட்டிங்' மூலம் அதை மாற்றி அமைத்தார். ஒருநாள் போட்டிகளை அவர் அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்றார் என்று கண்டிப்பாக சொல்லலாம். நானுமே கூட அவரைப் போல் அதிரடியாக ஆடவேண்டும் என்று எவ்வளவோ முயற்சி செய்திருக்கிறேன். ஆனால், என்னால் அது முடியவில்லை" என்றும் ஆர்த்தி கூறினார்.

ஆடம் கில்கிறிஸ்ட்

பட மூலாதாரம், Getty Images

அவருக்குக் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு ரோலையும் சிறப்பாகச் செய்த ஆல்ரவுண்டர் என்றே கில்கிறிஸ்ட்டை சொல்லலாம் என்றும் ஆர்த்தி சொல்கிறார்.

ஒருநாள் போட்டிகளில் 9619 ரன்கள் எடுத்திருக்கும் கில்கிறிஸ்ட், 96.94 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடியிருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் கூட அவரது ஸ்டிரைக் ரேட் 81.95!

விக்கெட் கீப்பர்களின் பேட்டிங் திறன் பற்றிய பார்வையை கில்கிறிஸ்ட் மாற்றியது பற்றி இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி விக்கெட் கீப்பருமான குமார் சங்கக்காரவுமே ஒருமுறை பேசியிருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் இ.எஸ்.பி.என் கிரிக் இன்ஃபோவிடம் பேசியபோது, "என்னிடம் மட்டுமல்ல, அணிகளின் தேர்வாளர்கள் மத்தியிலும் கூட அவர் தாக்கம் ஏற்படுத்தினார். கீப்பர்கள் பேட்டிங்கில் பங்களிக்காவிட்டால் அவர்கள் இடம் கேள்விக்குறி என்ற சூழலை அவர் ஏற்படுத்தினார். அதனால் கீப்பர்கள் தங்கள் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்ற சவாலை அனைவரின் முன்பும் அவர் வைத்தார். பல ஸ்பெஷலிஸ்ட் விக்கெட் கீப்பர்களுக்கு நிச்சயம் கில்கிறிஸ்ட்டைப் பிடிக்காது. ஏனெனில், அந்த ரோலுக்கு முடிவுரை எழுதியவர் அவர். ஆனால், நான், தோனி போன்றவர்கள் அவர் ஏற்படுத்திய இந்த மாற்றத்துக்கு கடமைப்பட்டிருக்கிறோம்" என்று கூறினார் சங்கக்காரா.

ஆடம் கில்கிறிஸ்ட்

பட மூலாதாரம், Getty Images

ஆச்சர்யப்பட வைத்த கில்கிறிஸ்ட்டின் குணம்

"பேட்டிங், கீப்பிங் எல்லாவற்றையும்விட, கில்கிறிஸ்ட் என்றாலே நினைவுக்கு வருவது உலகக் கோப்பை போட்டியில் அம்பயர் அவுட் கொடுக்காதபோதும் அவர் வெளியேறியதுதான்" என்கிறார் ஆர்த்தி.

2003 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. அரவிந்த் டி சில்வா வீசிய ஒரு பந்தை கில்கிறிஸ்ட் ஸ்வீப் ஆடுவார். அதை இலங்கை கீப்பர் சங்கக்காரா பிடித்துவிட்டு அப்பீல் செய்வார். ஆனால், நடுவர் ரூடி கோர்ட்ஸன் அவுட் கொடுக்கமாட்டார்.

இலங்கை வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்க, கில்கிறிஸ்ட் பெவிலியன் நோக்கி நடக்கத் தொடங்கிவிடுவார்.

இதைக் குறிப்பிட்டுப் பேசிய ஆர்த்தி, "அவர் மிகவும் நேர்மையானவர் என்றெல்லாம் நான் சொல்லவரவில்லை. அந்த இடத்தில் தன் மனதுக்கு என்ன தோன்றியதோ அதைச் செய்திருக்கிறார். இதுபோன்ற தருணங்களில் தான் ஒரு நபரின் அடிப்படை குணங்கள் தெரியவரும்" என்றார்.

ஆடம் கில்கிறிஸ்ட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2003 உலகக் கோப்பை அரையிறுதியில் நடுவர் அவுட் கொடுக்காதபோதும் வெளியேறினார் கில்கிறிஸ்ட்

மேலும், "அப்படியொரு தருணத்தில் யாரும் அவ்வளவு எளிதாக அப்படிச் செய்துவிடமாட்டார்கள். ஆனால், அவர் தன்னுடைய மதிப்பை உலகின் மிகப் பெரிய அரங்கில் செய்யத் துணிந்திருந்தார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது" என்றும் ஆர்த்தி தெரிவித்தார்.

கில்கிறிஸ்ட்டிடம் தனக்குப் பிடித்த இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டார் ஆர்த்தி.

"அவர் இயான் ஹீலியின் மிகப் பெரிய இடத்தை ஆஸ்திரேலிய அணியில் நிரப்பினார். அவ்வளவு பெரிய வீரரின் இடத்தை நிரப்புவது எளிதான விஷயமில்லை. கில்கிறிஸ்ட் அதை ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல் அமைதியாகவும் செய்தார். அதுவும் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்" என்று அவர் கூறினார்.

ஆடம் கில்கிறிஸ்ட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2008ஆம் ஆண்டு அடிலெய்ட் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக தன் கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடினார் கில்கிறிஸ்ட்

விமர்சனங்களும் சர்ச்சைகளும்

தன்னுடைய குணத்துக்காக கில்கிறிஸ்ட் கொண்டாடப்பட்டாலும், சில தருணங்களில் அவர்மீது விமர்சனங்களும் சர்ச்சைகளும் ஏற்பட்டிருக்கின்றன.

அவர் இலங்கைக்கு எதிரான அந்த அரையிறுதியில் வெளியேறியதே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஒரு வீரர் அப்படிச் செல்வது என்பது தனிப்பட்ட முடிவாக இருக்கக்கூடாது, அது அணியின் ஒருமித்த கருத்தாக இருக்கவேண்டும் என்று முன்னணி வீரர்கள் சிலர் கருதினார்கள். மேலும், இப்படி செய்வதன்மூலம், அது அப்படி வெளியே செல்லாத மற்ற வீரர்கள் நேர்மை இல்லாதவர்கள் என்ற தவறான ஒரு பிம்பத்தை ஏற்படுத்தும் என்றும் சிலர் அப்போது வாதிட்டார்கள்.

அதேபோல், கில்கிறிஸ்ட் தன்னுடைய சுயசரிதையில் சச்சின் டெண்டுல்கர், முத்தையா முரளிதரன் போன்றவர்கள் பற்றி எழுதியிருந்த கருத்துகளும் கடும் விமர்சனங்களை சந்தித்திருக்கின்றன.

கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த 'மன்கி-கேட்' (Monkey-Gate) பிரச்னையின் விசாரணைகளின்போது சச்சின் தன்னுடைய அறிக்கைகளை மாற்றியதாக 'ட்ரூ கலர்ஸ்' (True Colours) எனும் தன் சுயசரிதையில் குறிப்பிட்டார் அவர்.

அதுமட்டுமல்லாமல் போட்டி முடிந்த பிறகு வீரர்கள் கைகுலுக்கச் சென்றபோது சச்சின் அங்கு இல்லை என்று குறிப்பிட்டு அவருடைய ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் மீது கேள்வி எழுப்பியிருந்தார் கில்கிறிஸ்ட்.

இது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

முத்தையா முரளிதரனின் பந்துவீச்சையும் தன் சுயசரிதையில் விமர்சித்திருந்த கில்கிறிஸ்ட், அவர் மீண்டும் பந்துவீச அனுமதிக்க ஐ.சி.சி விதிகளை மாற்றியதாக அந்த அமைப்பின் மீதும் குற்றம் சுமத்தினார்.

இப்படி பெரிய வீரர்களின் மதிப்பைக் கேள்வி கேட்டு கில்கிறிஸ்ட் தன்னுடைய மதிப்பைத்தான் கெடுத்துக்கொண்டிருக்கிறார் என்று அப்போது பேசியிருந்தார் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மார்வன் அட்டப்பட்டு.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c70jyp73kd0o

பாகிஸ்தான் இலங்கை கிரிக்கெட் தொடர்

1 month ago

பரபரப்பை ஏற்படுத்திய முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 6 ஓட்டங்களால் பாகிஸ்தான் வென்றது

12 Nov, 2025 | 01:04 AM

image

(நெவில் அன்தனி)

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (11) மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 ஓட்டங்களால் பாகிஸ்தான் வெற்றிபெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை அடைந்துள்ளது.

பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 300 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 293 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

1111_wanindu_hasaranga.png

ஆறு வீரர்கள் 25க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றபோதிலும் அவர்களில் வனிந்து   ஹசரங்கவைத் தவிர மற்றையவர்களால் பெரிய எண்ணிக்கைகளைப் பெற முடியாமல் போனது. அது இலங்கையின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

மத்திய வரிசையில் தனித்து போராடிய வனிந்து ஹசரங்க அரைச் சதம் குவித்த போதிலும் அவரால் இலங்கையை வெற்றிக்கு இட்டுச் செல்ல முடியாமல் போனது.

பெத்தும் நிஸ்ஸன்க, அறிமுக வீரர் ஆகிய இருவரும் 85 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

1111_kamil_mishara.png

ஆனால்,காமில் மிஷார (38), பெத்தும் நிஸ்ஸன்க (29), குசல் மெண்டிஸ் (0) ஆகிய மூவரும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்ததால் இலங்கை ஆட்டம் கண்டது. (90 - 3 விக்.)

அந்த மூவரையும் ஹரிஸ் ரவூப் ஆட்டம் இழக்கச் செய்தார்.

அதன் பின்னர் சதீர சமரவிக்ரம, அணித் தலைவர் சரித் அசலன்க ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்ளைப் பகிர்ந்து அணிக்கு சிறு நம்பிக்கையை ஊட்டினர்.

சதீர சமரவிக்ரம 39 ஓட்டங்களுடனும் சரித் அசலன்க 32 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.

சரித் அசலன்க 5ஆவது விக்கெட்டில் ஜனித் லியனகேவுடன் 36 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

மொத்த எண்ணிக்கை 191 ஓட்டங்களாக இருந்தபோது ஜனித் லியனகே 28 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

கமிந்து மெண்டிஸ் (9) ஒற்றை இலக்க எண்ணிக்கையுடன் வெளியேறினார்.

சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய வனிந்து ஹசரங்கவுடன் 8ஆவது விக்கெட்டில் 37 ஓட்டங்களைப் பகிர்ந்த துஷ்மன்த சமீர 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து போராடிய வனிந்து ஹசரங்க 49ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 279 ஓட்டங்களாக இருந்தபோது 59 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

மஹீஷ் தீக்ஷன 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

1111_haris_rauf_3_quick_wkts.png

பந்துவீச்சில் ஹரிஸ் ரவூப் 61 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் பாஹீம் அஷ்ரப் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நசீம் ஷா 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 299 ஓட்டங்களைக் குவித்தது.

சல்மான் அகா மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அபார சதம் குவித்தார். அவர் 87 பந்துகளில் 9 பவுண்டறிகள் அடங்கலாக 105 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

1111_salman_agah.png

ஹுசெய்ன் தலாத் 62 ஓட்டங்களையும் மொஹம்மத் நவாஸ் ஆட்டம் இழக்காமல் 36 ஓட்டங்களையும் பக்கார் ஸமான் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

போட்டியின் 24ஆவது ஓவர்வரை பாகிஸ்தானை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இலங்கை அதன் பின்னர் ஆட்டத்தின் பிடியைத் தளரவிட்டது.

அப்போது 4 விக்கெட்களை இழந்து 95 ஓட்டங்களை மாத்திரம்  பெற்றிருந்த பாகிஸ்தான் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

ஆனால், சல்மான் அகா, ஹுசெய்ன் தலாத் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 138 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானை பலமான நிலையில் இட்டனர்.

1111_hussain_talat.png

அதனைத் தொடர்ந்து சல்மான் அகா, மொஹம்மத் நவாஸ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் மேலும் 66 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

இலங்கை பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: சல்மான் அகா

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இதே விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (13) நடைபெறவுள்ளது.

https://www.virakesari.lk/article/230131

Checked
Tue, 12/16/2025 - 10:49
விளையாட்டுத் திடல் Latest Topics
Subscribe to விளையாட்டுத் திடல் feed