உலக நடப்பு

மிகப்பெரிய நெருக்கடியில் நாசா - 40 திட்டங்கள் நிறுத்தப்படும் ஆபத்து

2 days 9 hours ago

டிரம்ப் - மஸ்க் மோதல்: மிகப்பெரிய நெருக்கடியில் நாசா - 40 திட்டங்கள் நிறுத்தப்படும் ஆபத்து

புளூட்டோவில் உள்ள இதய வடிவிலான படம்

பட மூலாதாரம்,NASA/JOHNS HOPKINS

படக்குறிப்பு, புளூட்டோவில் உள்ள இதய வடிவிலான படம்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், பல்லப் கோஷ்

  • பதவி, அறிவியல் செய்தியாளர்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

டொனால்ட் டிரம்புக்கும் ஈலோன் மஸ்கிற்கும் இடையிலான மோதலின் எதிரொலி, நாசாவின் பட்ஜெட் மற்றும் அதன் எதிர்காலம் குறித்த பல கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது.

டிரம்பின் "பிக், பியூட்டிஃபுல்" மசோதா தொடர்பாக, அவருக்கும் ஈலோன் மஸ்க்கிற்கும் இடையிலான கருத்து வேறுபாடு மோதலாக மாறியுள்ளது.

நாசா தனது புதிய பட்ஜெட் திட்டத்தை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளது. இதில் அறிவியல் திட்டங்களுக்கான நிதி கிட்டத்தட்ட பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது மேம்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் அல்லது ஏற்கனவே விண்வெளியில் இருக்கும் அறிவியல் பயணங்கள் என கிட்டத்தட்ட நாற்பது திட்டங்கள் நிறுத்தப்பட உள்ளன.

ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் உடனான அரசு ஒப்பந்தங்கள் திரும்பப் பெறப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பணியாளர்கள் மற்றும் பொருட்களை வழங்குவதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட்களை நாசா நம்பியுள்ளது. ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப் ராக்கெட்டைப் பயன்படுத்தி சந்திரனுக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.

ஓபன் யுனிவர்சிட்டியின் விண்வெளி விஞ்ஞானி முனைவர் சிமியோன் பார்பர், தற்போதைய நிச்சயமற்ற தன்மையின் தாக்கம் மனித விண்வெளித் திட்டத்தில் "எதிர்மறையான தாக்கத்தை" ஏற்படுத்தி வருவதாகக் கூறினார்.

"கடந்த வாரத்தில் நாம் பார்த்த வியக்கத்தக்க வார்த்தை பரிமாற்றங்கள், திடீர் முடிவுகள் மற்றும் யூ-டர்ன்கள், நமது லட்சியங்களைக் கட்டியெழுப்பும் அடித்தளத்தையே குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன.

விண்வெளி அறிவியல் மற்றும் ஆய்வு போன்றவை, நீண்ட கால திட்டமிடல், அரசாங்கம், நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பைச் சார்ந்துள்ளது" என்று அவர் கூறுகிறார்.

பூமியின் சுற்றுச்சூழலை கண்காணிக்கும்பல திட்டங்கள் மூடப்படக்கூடும்

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு, நிறுத்தப்படும் ஆபத்தில் உள்ள சில விண்வெளி திட்டங்கள்

அமெரிக்க அதிபருக்கும் ஈலோன் மஸ்க்குக்கும் இடையிலான முரண்பாடுகளைத் தவிர, நாசாவின் பட்ஜெட்டை குறைக்குமாறு வெள்ளை மாளிகையில் இருந்து வரும் அழுத்தமும் கவலைகளை அதிகரித்துள்ளன.

செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் 100 மில்லியன் டாலர் திட்டத்தைத் தவிர, நாசாவின் அனைத்து திட்டங்கள் மற்றும் துறைகளுக்கான செலவினங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

விண்வெளி ஆய்வை ஊக்குவிக்கும் பசடேனாவை தளமாகக் கொண்ட பிளானட்டரி சொசைட்டியின் விண்வெளிக் கொள்கைத் தலைவர் கேசி ட்ரேயரின் கூற்றுப்படி, இந்த பட்ஜெட் குறைப்புகள் "அமெரிக்க விண்வெளித் திட்டம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய நெருக்கடியை" குறிப்பதாக கருதுகிறார்.

மொத்த பட்ஜெட்டை சுமார் 25% குறைக்க விரும்புவதாக நாசா தெரிவித்துள்ளது. இதனால் சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் பயணிக்கும் முக்கிய திட்டங்களில் அதிக கவனம் செலுத்த முடியும் என கூறியுள்ளது.

இந்த முன்மொழிவுகளை நாடாளுமன்றம் அங்கீகரித்தால், அது நாசாவின் கவனத்தை அடிப்படையிலேயே மாற்றிவிடும் என்று கிரான்ஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வாளர் முனைவர் ஆடம் பேக்கர், பிபிசியிடம் தெரிவித்தார்.

"அதிபர் டொனால்ட் டிரம்ப் நாசாவை இரண்டு விஷயங்களுக்காக மீண்டும் உருவாக்குகிறார். அது, சீனர்களுக்கு முன்பாக சந்திரனில் விண்வெளி வீரர்களை தரையிறக்குவது மற்றும் செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் அமெரிக்கக் கொடியை நடுவது. இந்த இரண்டைத்தவிர வேறு அனைத்துமே இரண்டாம் பட்சம்தான்" என்கிறார் அவர்.

ஈலோன் மஸ்க், டொனால்ட் டிரம்ப், உலக செய்திகள், அமெரிக்க செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட பிறகு மக்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு குறைந்தது.

1960கள் மற்றும் 70களில் நிலவில் அப்போலோ தரையிறங்கிய பிறகு, சந்திர கிரக பயணத்தில் சோவியத் யூனியனை வீழ்த்துவதே நோக்கமாக இருந்தது. அதற்குப் பிறகு, தற்போதுதான், வெள்ளை மாளிகையின் பட்ஜெட் நாசாவிற்கு தெளிவான இலக்கை அளித்துள்ளது என்று இந்த திட்டங்களை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர்.

அப்போதிருந்து, நாசா விண்வெளி நிறுவனம் கவனம் செலுத்தப்படாத அமைப்பாக மாறிவிட்டது எனவும் வழக்கமாக அதன் விண்வெளி பயணங்களில் பட்ஜெட்டை விட அதிகமாக செலவு செய்து வரி செலுத்துவோரின் பணத்தை வீணடித்து வருவதாகவும் நாசாவின் விமர்சகர்கள் கூறுகின்றனர் .

இதற்கு மிகவும் மோசமான உதாரணங்களில் ஒன்று என, அமெரிக்க விண்வெளி வீரர்களை சந்திரனுக்குத் திருப்பி அனுப்பும் திட்டங்களுக்கான நாசாவின் புதிய ராக்கெட், விண்வெளி ஏவுதள அமைப்பு (SLS) பற்றி குறிப்பிடும் விமர்சகர்கள் இதன் வளர்ச்சி தாமதமாகி வருவதை சுட்டிக் காட்டுகின்றனர்.

செலவுகள் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளதால், ஒவ்வொரு ஏவுதலுக்கும் 4.1 பில்லியன் டாலர்கள் செலவாகிறது.

இதற்கு நேர்மாறாக, SpaceX இன் சமமான ராக்கெட் அமைப்பான ஸ்டார்ஷிப், மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு, ஒரு ஏவுதலுக்கு சுமார் $100 மில்லியன் மட்டுமே செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் விண்வெளி நிறுவனத்தின் முன்மொழியப்பட்ட நியூ க்ளென் ராக்கெட்டும் செலவும் குறைவுதான்.

SLSக்கு பதிலாக ஸ்டார்ஷிப் மற்றும் நியூ க்ளென் ஆகியவற்றை பயன்படுத்தப்படலாம் என்றும், வெள்ளை மாளிகை SLS திட்டத்தை படிப்படியாக கைவிட்டுவிடும் என்றும் நம்பப்படுகிறது. இருப்பினும், ஸ்டார்ஷிப்பின் கடந்த மூன்று ஏவுதல்கள் தோல்வியடைந்தன என்பதையும், ப்ளூ ஆரிஜின் அண்மையில்தான் அதன் சந்திர பயணத்துக்கான ராக்கெட்டை பரிசோதிக்கத் தொடங்கியுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

"கொதிக்கும் வாணலியில் இருந்து தப்பித்து, நாசா நெருப்பில் குதித்துக்கொண்டிருக்கிறதோ என்று அச்சம் தோன்றுகிறது," என்கிறார் பார்பர்.

"SLS-க்கு மாற்றாக இந்த மாற்றுகளை உருவாக்குவதற்கு ஈலோன் மஸ்க் மற்றும் ஜெஃப் பெசோஸ் நிதியளிக்கின்றனர். இந்த முயற்சியில் அவர்களின் ஆர்வம் குறைந்துவிட்டாலோ, ஸ்பேஸ்எக்ஸ் அல்லது ப்ளூ ஆரிஜின் தங்கள் அமைப்புகளை உருவாக்க அதிக பணம் தேவை என்று கூறிவிட்டாலோ, அதற்கான நிதியை நாடாளுமன்றம் கொடுக்க வேண்டியிருக்கும்" என்று பார்பர் கூறுகிறார்.

பிற கிரகங்களை ஆராய்வதற்கும், விண்வெளியில் இருந்து பூமியின் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை கண்காணிப்பதற்குமான 40 திட்டங்களை கைவிடுவது என்பது மிகவும் கவலைக்குரியது என்று பார்பர் கூறுகிறார். கைவிடப்படும் திட்டங்களில் பல, சர்வதேச கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது.

"இவ்வளவு காலம் எடுத்து கட்டியெழுப்பப்பட்ட ஒன்றை, மீண்டும் கட்டியெழுப்புவதற்கான திட்டம் எதுவுமே இல்லாமல், ஒரு சிதைந்த பந்தால் இவ்வளவு சுலபமாக இடித்துத் தள்ள முடியும் என்பது மிகவும் வருத்தமளிக்கிறது" என்று கவலை தெரிவிக்கிறார் பார்பர்.

ஏற்கனவே விண்வெளியில் செயல்படுத்தப்பட்டு வரும் டஜன் கணக்கான கிரக பயணங்களும் கைவிடப்படும் திட்டங்களில் அடங்கும். இவற்றுக்காக ஏற்கனவே மேம்பாடு மற்றும் ஏவுதல் செலவுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றை இயக்குவதற்காக ஒப்பீட்டளவில் சிறிய அளவிலான தொகைதான் முன்மொழியப்பட்டுள்ளது.

பூமியின் சுற்றுச்சூழலை கண்காணிக்கும்பல திட்டங்கள் மூடப்படக்கூடும்

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு, பூமியின் சுற்றுச்சூழலை கண்காணிக்கும் பல திட்டங்கள் நிறுத்தப்படும்

ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்துடனான இரண்டு கூட்டுத் திட்டங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. நாசாவின் பெர்செவரன்ஸ் ரோவர் சேகரித்த செவ்வாய் கிரகப் பாறைகளை பூமிக்குக் கொண்டுவருவதற்கான லட்சியத் திட்டம் மற்றும் கடந்த கால வாழ்க்கையின் எச்சங்களை தேடுவதற்காக ஐரோப்பாவின் ரோசாலிண்ட் பிராங்க்ளின் ரோவரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் முக்கியமான திட்டம் ஆகியவையே இந்த இரண்டு திட்டங்கள் ஆகும்.

பிரிட்டன் விண்வெளி நிறுவனமான சர்ரே சேட்டிலைட் டெக்னாலஜி லிமிடெட்டின் தலைவரும், விண்வெளியின் எதிர்காலம் குறித்த ராயல் சொசைட்டி ஆய்வு அறிக்கையின் இணை ஆசிரியருமான பேராசிரியர் சர் மார்ட்டின் ஸ்வீட்டிங்கின் கருத்துப்படி , தற்போதைய நிலைமை "வரவேற்கத்தக்கதல்ல" என்றாலும், ஐரோப்பா தனது சொந்த விண்வெளி ஆய்வுத் திட்டத்திற்கு அதிக பொறுப்பை ஏற்றுக்கொள்வதால் அதன் ஆதிக்கம் அதிகரிக்கக்கூடும் என்று கூறுகிறார்.

''ஒருவேளை, விண்வெளித் துறையில் நாம் நாசாவிற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து நம்பியிருந்துவிட்டோமோ என தோன்றுகிறது," என்று அவர் பிபிசி செய்தியிடம் கூறினார்.

"ஐரோப்பா தனது விண்வெளி நடவடிக்கைகளில் சிறந்த சமநிலையைப் பெற விரும்புவதைப் பற்றி சிந்திக்க இதுவொரு வாய்ப்பாகவும் இருக்கலாம்."

ஆனால், உடனடியாக ஐரோப்பாவிற்கு மேலும் பல பாதகங்கள் ஏற்படலாம். செவ்வாய் கிரக மாதிரிகள் மற்றும் ரோவரை மீட்டெடுக்கும் திட்டம் தவிர, சர்வதேச விண்வெளி நிலையத்தை நிறுத்தும் நிலை வந்தால், அதற்கான அணுகலும் குறைய வாய்ப்பு உள்ளது.

மேலும் பட்ஜெட்டை குறைப்பதால், அதன் லூனார் கேட்வே திட்டத்திற்கு நாசாவின் விரிவான பங்களிப்புகளும் முடிந்து போகும். லூனார் கேட்வே திட்டம் என்பது, சந்திரனைச் சுற்றி சுற்றுப்பாதையில் செல்ல திட்டமிடப்பட்டுள்ள ஒரு பன்னாட்டு விண்வெளி நிலையமாகும்.

நாசாவின் மூன் ராக்கெட் (SLS) படிப்படியாக அகற்றப்பட்டு, தனியார் துறையால் உருவாக்கப்பட்ட மாற்றுகளால் மாற்றப்பட உள்ளது

பட மூலாதாரம்,NASA

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அதன் திட்டத்தில், "விண்வெளியில் தன்னாட்சியுடன் செயல்படும் திறனை உருவாக்கவும், உலகெங்கிலும் உள்ள விண்வெளி நிறுவனங்களுடன் நம்பகமான, வலுவான மற்றும் விரும்பத்தக்க கூட்டாளியாகத் தொடரவும் முயற்சிக்கும்" என்று தெரிவித்துள்ளது. இது, நாசாவுடன் இணைந்தோ அல்லது இணையாமலோ அவ்வாறு செய்யும் என்ற உட்குறிப்பையும் அடக்கியுள்ளது.

முனைவர் பேக்கரின் கூற்றுப்படி, தற்போதைய மற்றும் முன்மொழியப்பட்ட ஏராளமான பூமி கண்காணிப்பு திட்டங்களுக்கு பட்ஜெட் குறைக்கப்படும்.

நாசாவுடன் கூட்டு சேர்ந்துள்ள ஸ்பேஸ்எக்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நாசாவுடன் கூட்டு சேர்ந்துள்ள ஸ்பேஸ்எக்ஸ்

நாசாவின் பட்ஜெட் முன்மொழிவுகளை நாடாளுமன்றம் இன்னும் அங்கீகரிக்கவில்லை. பட்ஜெட் குறைப்புக்கு எதிராக வாக்களிக்கத் தயாராக இருப்பதாக, பல குடியரசுக் கட்சியினர் தனிப்பட்ட முறையில் கூறியதாக பிளானெடரி சங்கத்தின் கேசி ட்ரேயர் பிபிசி செய்தியிடம் தெரிவித்தார்.

ஆனால் அரசியல் மோதலால் பட்ஜெட் குறித்து ஒரு முடிவிற்கு வர முடியாமல் போகும் நிலை ஏற்படலாம் என டிரேயர் கவலைப்படுகிறார்.

வெள்ளை மாளிகையின் குறைக்கப்பட்ட பட்ஜெட் தற்காலிக திட்டமாக அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பின்னர் அதை எளிதில் மாற்றியமைக்க முடியாது. ஏனெனில், விண்வெளிப் பயணங்கள் நிறுத்தப்பட்டால் அவற்றை மீண்டும் தொடங்குவது கடினம் அல்லது அசாத்தியம் என்றே சொல்லலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cly394j5k28o

ஒவ்வொரு 7 நிமிடத்திற்கும் ஒரு தாய் மரணம் - பிரசவத்திற்கு உலகிலேயே மிக மோசமான நாடு!

2 days 10 hours ago

மகப்பேறு மருத்துவம், ஆரோக்கியம், பெண்களின் ஆரோக்கியம்,

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், மக்கோச்சி ஒகாஃபோர்

  • பதவி, பிபிசி ஆப்ரிக்கா, லாகோஸ்

  • 58 நிமிடங்களுக்கு முன்னர்

நைஜீரியாவில் சராசரியாக ஒவ்வொரு ஏழு நிமிடங்களுக்கும் ஒரு பெண் பிரசவத்தின் போது உயிரிழக்கிறார். தனது 24 வது வயதில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நஃபிசா சலாஹுவும் இந்த புள்ளிவிவரத்தில் இடம் பெற்றிருப்பார்.

அவர் அப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். துரதிர்ஷ்டவசமாக மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கியிருந்த காலகட்டம் அது. மருத்துவமனையில் இருந்த போதும் கூட, சிக்கலான சூழல் எழும் போது எந்த நிபுணர்களின் உதவியும் சரியான நேரத்திற்கு அவருக்கு கிடைக்கவில்லை.

பிரசவத்தின் போது அவருடைய குழந்தையின் தலை சிக்கிக் கொண்டது. பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த அவரை அப்படியே படுத்திருக்கும்படி கூறியிருக்கின்றனர் அங்கிருந்த மருத்துவப் பணியாளர்கள். அவரின் பிரசவ வலியானது மூன்று நாட்களுக்கு நீடித்தது.

இறுதியில் அறுவை சிகிச்சை மூலமாக குழந்தையை வெளியே எடுக்க முடிவெடுக்கப்பட்டது. மருத்துவரை தேடி கண்டுபிடித்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

"நான் கடவுளுக்குத்தான் நன்றி கூற வேண்டும். ஏன் என்றால் நான் அப்போது இறக்கும் தருவாயில் இருந்தேன். என்னிடம் துளியும் பலம் இல்லை. என்னிடம் எதுவுமே இல்லை," என்று பிபிசியிடம் பேசிய போது நஃபிசா கூறுகிறார்.

நைஜீரியாவின் வடக்குப் பிராந்தியத்தில் இருக்கும் கனோ மாகாணத்தில் அவர் வசித்து வருகிறார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் உயிர் பிழைத்தார். ஆனால் அவருடைய குழந்தைக்கு அத்தகைய வாய்ப்பு கிடைக்கவில்லை.

மரணத்தின் வாசல் வரை நஃபிசா சென்று திரும்பி 11 வருடங்கள் ஆகிவிட்டன. அதன் பின்னரும் சில முறை குழந்தைப்பேறுக்காக அவர் மருத்துவமனை சென்றிருக்கிறார். மரண தருவாய் அனுபவத்தில் மாற்றம் ஏதுமில்லை.

"ஒவ்வொரு முறையும் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே நான் இருந்தேன் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் இப்போது அச்சப்படுவதில்லை," என்று அவர் கூறினார்.

நஃபிசாவின் அனுபவம் ஒன்றும் வழக்கத்திற்கு மாறானது அல்ல.

குழந்தை பெற்றெடுக்க மிகவும் மோசமான சூழலைக் கொண்ட நாடாக நைஜீரியா அறியப்படுகிறது.

2023 தரவுகளை அடிப்படையாகக் கொண்டு சமீபத்தில் ஐ.நா. வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி, நூற்றில் ஒரு பெண் பிரசவத்தின் போதோ அதற்கு பிறகான நாட்களிலோ உயிரிழக்கிறார்.

இதுவே இந்த பட்டியலில் அந்த நாட்டை முதலிடத்தில் வைக்கிறது.

2023-ஆம் ஆண்டு உலக அளவில் பிரசவகாலத்தில் நிகழும் மரணத்தில் கால்வாசிக்கும் அதிகமான மரணங்கள் நைஜீரியாவில் பதிவானது. உலக அளவில் பிரசவத்தின் போது மரணிக்கும் பெண்களில் 29% பேர் நைஜீரியாவில் இறக்கின்றனர்.

அதாவது ஒவ்வொரு ஆண்டும் 75, 000 பெண்கள் பிரசவத்தின் போது உயிரிழக்கின்றனர். இதனை மீண்டும் துல்லியமாக கணக்கிட்டால் ஒவ்வொரு ஏழு நிமிடத்திற்கு ஒரு பெண் பிரசவத்தின் போது உயிரிழக்கிறார்.

மரணத்திற்கான காரணங்கள் என்ன?

அதிக எண்ணிக்கையில் நிகழும் மரணங்கள் பலருக்கும் கவலை அளித்துள்ளது. பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் அதீத உதிரப்போக்கு காரணமாகவும் மரணங்கள் நிகழ்கின்றன. முறையான சிகிச்சைகள் மூலம் இத்தகைய மரணங்கள் நிகழ்வதை தடுக்க இயலும்.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு நைஜீரியாவின் தென்கிழக்கு பிராந்தியத்தில் இருக்கும் ஒனித்ஷா நகரத்தில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் சினேன்யே வேஸே. அவருக்கு அப்போது வயது வெறும் 36. ஆனால் பிரசவத்திற்கு பிறகு ஏற்பட்ட அதீத உதிரப் போக்கின் காரணமாக அவர் உயிரிழக்க நேரிட்டது.

அவரின் மரணம் குறித்து பேசும் அவருடைய சகோதரர் ஹென்றி எடா, "மருத்துவர்களுக்கு இரத்தம் தேவைப்பட்டது. ஆனால் மருத்துவமனையில் தேவையான இரத்தம் இருப்பில் இல்லை. அவர்கள் இரத்தத்தை பெறுவதற்காக இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். நல்ல நண்பராக இருந்த என் சகோதரியை நான் இழந்து தவித்த நிலையை என் எதிரியும் கூட அனுபவிக்கக் கூடாது. அது தாங்கிக் கொள்ள இயலாத வலி," என்று கூறினார்.

பெண்கள் அங்கே இறந்து போவதற்கான இதர காரணங்கள்: பிரசவத்தின் போது குழந்தை வெளியே வராமல் இருப்பது, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறைகள்.

யுனிசெஃபின் நைஜீரிய அலுவலகத்தில் பணியாற்றும் மார்டின் தோல்ஸ்டென் இது குறித்து பேசும் போது, நைஜீரியாவில் ஏற்படும் அதிகப்படியான மகப்பேறு தொடர்பான மரணங்கள் பல காரணங்களின் ஒன்றுபட்ட விளைவாக உள்ளது என்று குறிப்பிடுகிறார்.

அத்தகைய காரணங்களில் ஒன்று மோசமான மருத்துவ வசதி. மருத்துவர்கள் பற்றாக்குறை, விலையுயர்ந்த சிகிச்சைகள், கலாசார பழக்கவழக்கங்கள் போன்றவை நம்பகத்தன்மையற்ற மருத்துவ பணியாளர்களை நாட வழிவகுக்கிறது. மேலும் இது பாதுகாப்பற்ற தன்மையை உருவாக்குகிறது.

"பிரசவத்தின் போது எந்த பெண்ணுக்கும் இத்தகைய நிலை ஏற்படக் கூடாது," என்று மாபெல் ஒன்வுயேமேனா தெரிவிக்கிறார். அவர் வுமென் ஆஃப் பர்பஸ் டெவெலப்மெண்ட் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

"கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்கள் சிலர், மருத்துவமனைக்கு செல்வது நேர விரயம் என்று கருதுகின்றனர்," என்று அவர் விளக்குகிறார்.

"அப்பெண்கள் மருத்துவ உதவிகளை நாடுவதற்கு பதிலாக பாரம்பரிய மருத்துவமுறைகளை நாடிச் செல்கின்றனர். அப்போது ஏதேனும் சிக்கல் ஏற்படும் பட்சத்தில், அது அவர்களின் உயிர் காக்கும் சேவைகளை அணுகுவதை தாமதப்படுத்திவிடுகிறது," என்று தெரிவிக்கிறார்.

சிலருக்கோ உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்வது என்பது சாத்தியமற்றதாக இருக்கிறது. ஏன் என்றால் போதுமான போக்குவரத்து வசதி இல்லை. ஆனால் சரியான நேரத்திற்கு அவர்கள் மருத்துவமனைக்கு வந்தாலும் கூட அவர்களின் பிரச்னைகளுக்கு முடிவென்பதே கிடையாது என்று மாபெல் கூறுகிறார்.

"பல சுகாதார மையங்களில் அடிப்படை வசதிகள், பயிற்சி பெற்ற நிபுணர்கள், மருத்துவ விநியோகம் போன்றவை இல்லாத காரணத்தால் தரமான சேவைகளை வழங்குவதில் பிரச்னை ஏற்படுகிறது."

நைஜீரிய மத்திய அரசாங்கமானது தன்னுடைய வருடாந்திர பட்ஜெட்டில் 5% மட்டுமே மருத்துவ சேவைகளுக்கு ஒதுக்குகிறது. 2001-ஆம் ஆண்டு ஆப்பிரிக்க ஒன்றிய ஒப்பந்தத்தில், 15% என்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் இருந்து நைஜீரியா மிகவும் பின்தங்கியுள்ளது.

மகப்பேறு மருத்துவம், ஆரோக்கியம், பெண்களின் ஆரோக்கியம்,

பட மூலாதாரம்,HENRY EDEH

படக்குறிப்பு, ஐந்தாண்டுகளுக்கு முன்பு பிரசவத்தின் போது மரணித்த சினேன்யே வேஸே

தரவுகள் கூறுவது என்ன?

2021-ஆம் ஆண்டில், 21.8 கோடி மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டில் 1,21,000 செவிலியர்கள் (பிரசவம் பார்க்க) இருந்தனர். அந்த நாட்டில் நடைபெற்ற பாதிக்கும் மேற்பட்ட பிரசவங்கள் பயிற்சி பெற்ற மருத்துவ பணியாளர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது.

இந்த மக்கள் தொகைக்கு, உலக சுகாதார மையத்தின் பரிந்துரை விகிதத்தை பூர்த்தி செய்ய, மொத்தமாக 7 லட்சம் செவிலியர்கள் கூடுதலாக தேவைப்படுகின்றனர். மருத்துவர்களின் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

மருத்துவ வசதி மற்றும் மருத்துவர்களின் பற்றாக்குறை காரணமாக சிலர் மருத்துவ உதவியை நாடுவதை நிறுத்திவிடுகின்றனர்.

"உண்மையில் நான் மருத்துவமனைகளை அதிகமாக நம்புவது கிடையாது. பொது மருத்துவமனைகளில் நிகழும் அலட்சியமான போக்கு குறித்து நான் அதிகம் கேள்விப்படுகிறேன்," என்று ஜமீலா இஷாக் கூறுகிறார்.

"நான் நான்காவது முறையாக கர்ப்பமுற்றேன். பிரசவத்தின் போது சிக்கல்கள் ஏற்பட்டது. உள்ளூரில் பிரசவத்தை மேற்பார்வையிட்ட நபர் என்னை மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினார். நாங்கள் அங்கே சென்ற போது அங்கே ஒரு சுகாதாரப் பணியாளரும் இல்லை. வீட்டுக்குச் சென்ற நான் அங்கேயே குழந்தையைப் பெற்றெடுத்தேன்," என்று அவர் விளக்கினார்.

28 வயதான, கனோ மாகாணத்தைச் சேர்ந்த இஷாக் தற்போது ஐந்தாவது முறையாக கர்ப்பமடைந்துள்ளார். தனியார் மருத்துவமனைக்கு செல்ல விரும்புவதாக அவர் கூறினாலும் அங்கே கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது என்று அவர் தெரிவிக்கிறார்.

தன்னுடைய மூன்றாவது குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சின்வெண்டு ஒபியேஜெசியால் தனியார் மருத்துவமனையில் கட்டணம் கட்டி பிரசவம் பார்த்துக் கொள்ளும் பொருளாதார நிலையைப் பெற்றுள்ளார். "வேறெங்கும் பிரசவத்திற்காக செல்வதை நினைத்தும் கூட பார்க்க மாட்டேன்," என்று அவர் தெரிவித்தார்.

அவரின் குடும்பத்திலோ, நட்பு வட்டாரத்திலோ மகப்பேறு மரணங்கள் மிகவும் அரிதாகவே நடைபெறுவதாக தெரிவிக்கும் அவர், தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் இருந்து மகப்பேறு மரணங்கள் குறித்து கேள்விப்படுவதாக தெரிவிக்கிறார்.

மிகவும் செல்வ செழிப்பான அபுஜாவின் புறநகர் பகுதியில் அவர் வசித்து வருகிறார். அங்கிருந்து மருத்துவமனைகள் செல்வது எளிமையாக இருக்கும். சாலை வசதிகள் சிறப்பாக உள்ளது. அவசர சேவைகளும் சிறப்பாக செயல்படுகிறது. நகரத்தில் வாழும் பெண்கள் பெரும்பாலும் படித்தவர்களாக இருப்பதால் மருத்துவமனை செல்வதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர்.

"பிரசவத்திற்கு முந்தைய மருத்துவ உதவிகள் மற்றும் ஆலோசனைகளை நான் எப்போதும் பெறுகிறேன். தொடர்ச்சியாக மருத்துவர்களிடம் பேசவும், தேவையான முக்கியமான பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன்களை செய்யவும் இது எனக்கு உதவுகிறது. மேலும் என்னுடைய மற்றும் என் குழந்தையின் ஆரோக்கியத்தை தொடர்ச்சியாக கண்காணிக்கவும் இது உதவுகிறது," என்று ஒபியேஜெசி கூறுகிறார்.

"உதாரணத்திற்கு என்னுடைய இரண்டாம் கர்ப்ப காலத்தின் போது எனக்கு அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்படும் என்று அவர்கள் நினைத்தனர். எனவே அதனை ஈடுகட்டுவதற்காக கூடுதலான இரத்தத்தை தயார் நிலையில் வைத்திருந்தனர். நல்ல வேளையாக, எனக்கு தேவைப்படவில்லை. அனைத்தும் சரியாக நடந்தது," என்று அவர் கூறினார்.

இருப்பினும் கூட, அவருடைய குடும்ப நண்பர் ஒருவர் ஒபியேஜெசியைப் போன்று அதிர்ஷ்டத்துடன் இல்லை.

அவரின் இரண்டாவது பிரசவத்தின் போது, "பிரசவம் பார்க்கும் செவிலியரால் குழந்தையை வெளியே எடுக்க இயலவில்லை. அதனால் வலுக்கட்டாயமாக பிரசவிக்கும் வழியை தேர்வு செய்தார். ஆனால் குழந்தை இறந்துவிட்டது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அதிக கால தாமதம் ஏற்பட்டது. இறந்த குழந்தையின் உடலை வெளியே எடுக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இது மிகவும் கவலை அளிக்கக் கூடியது," என்று விவரிக்கிறார் ஒபியேஜெசி.

மகப்பேறு மருத்துவம், ஆரோக்கியம், பெண்களின் ஆரோக்கியம்,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பிரசவம் போன்றவற்றை முறையாக மருத்துவமனைகளில் மேற்பார்வையிட போதுமான சுகாதார ஊழியர்கள் இல்லை

குறைகளை நிவர்த்தி செய்யுமா அரசு?

மருத்துவர் நானா சந்தா - அபுபக்கர் நைஜீரியாவின் தேசிய ஆரம்ப சுகாதார சேவை மேம்பாட்டு முகமையின், கம்யூனிட்டி ஹெல்த் சர்வீஸ் பிரிவின் தலைவராக பணியாற்றுகிறார். பிபிசியிடம் பேசும் போது அங்கே நிலவும் அவல நிலையை ஒப்புக் கொண்டார். மேலும் பிரசவ காலங்களில் ஏற்படும் இறப்புகளுக்கான காரணங்களை நிவர்த்தி செய்ய அரசாங்கம் திட்டம் ஒன்றை அமல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம் நைஜீரிய அரசாங்கம், மம்மி (Maternal Mortality Reduction Innovation Initiative (Mamii)) என்ற திட்டத்தை அமல்படுத்தியது. நாடு முழுவதும் உள்ள 33 மாகாணங்களில், குழந்தை பிறப்பு தொடர்பாக ஏற்படும் இழப்புகளில் பாதிக்கும் மேற்பட்ட இழப்புகளை பதிவு செய்துள்ள, 172 உள்ளாட்சி அமைப்புகளை இலக்குகளாகக் கொண்டு செயல்படுகிறது.

"ஒவ்வொரு கர்ப்பிணியையும் கண்டறிந்து அவரின் மகப்பேறு காலம், குழந்தை பிறப்பு மற்றும் அதற்கு பிறகான நாட்களில் அவருக்குத் தேவைப்படும் ஆதரவை வழங்க இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது," என்று சந்தா தெரிவிக்கிறார்.

''இதுவரை ஆறு மாகாணங்களில், வீடு வீடாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 4 லட்சம் கர்ப்பிணி பெண்களை கண்டறிந்துள்ளோம். மேலும் அவர்கள் மருத்துவ ஆலோசனைப் பெறுகிறார்களா இல்லையா என்பதையும் ஆய்வுக்குட்படுத்தியுள்ளோம். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் கிடைப்பதையும், பாதுகாப்பான முறையில் குழந்தைகளை பெற்றெடுப்பதையும் உறுதி செய்யும் வகையில் அவர்களை இந்த மம்மி சேவையில் இணைப்பதே இந்த திட்டம்."

உள்ளூர் போக்குவரத்து அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றும் 'மம்மி', நிறைய பெண்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கிறது. மேலும் குறைந்த செலவிலான பொது சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில் இணையவும் ஊக்குவிக்கிறது.

இந்த திட்டம் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா என்பதை தற்போது கூறிவிட இயலாது. உலக நாடுகளில் இருக்கும் போக்கை நைஜீரியாவும் பின்பற்றும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

2000-ஆம் ஆண்டு துவங்கி, பிரசவத்தின் போது ஏற்படும் மரணங்கள் 40% வரை குறைந்துள்ளது. சுகாதார சேவைகளை அணுகுவதை எளிமையாக்கியது இதற்கு ஒரு முக்கிய காரணம். நைஜீரியாவிலும் இத்தகைய மரணங்கள் குறைத்து வருகிறது. ஆனால் 13% மட்டுமே குறைந்துள்ளது.

மம்மி மற்றும் இதர திட்டங்கள் நடைமுறையில் இருப்பினும் கூட, அதிக அளவு முதலீடு செய்தல் உட்பட பல முக்கிய விசயங்களை மேற்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

"இத்தகைய திட்டங்களின் வெற்றியானது நிலையான நிதி, திறம்பட மேம்படுத்தும் தன்மை மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது," என்று தோல்ஸ்டென் கூறுகிறார்.

அதே நேரத்தில், நாள் ஒன்றுக்கு 200 என்ற அளவில் பெண்கள் இறப்பது என்பது அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு பெரிய சோகத்தையே ஏற்படுத்தும்.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு சகோதரியை இழந்தது எடாவுக்கு பேரடியாக இருந்தது.

"சிறு வயதிலேயே எங்களின் பெற்றோர்களை நாங்கள் இழந்ததால், அவள் எங்கள் குடும்பத்தை தலைமை தாங்கி நடத்தினாள். அவள் இறந்து நீண்ட காலம் ஆனாலும் கூட, அவளை நினைக்கும் போதெல்லாம் அழுகிறேன்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c9vg312yxpzo

குடியேற்றவாசிகள் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து லொஸ் ஏஞ்சல்சில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் - வாகனங்கள் தீக்கிரை - ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த தேசிய காவல்படையினரை அழைத்தார் டிரம்ப்

2 days 20 hours ago

Published By: RAJEEBAN

08 JUN, 2025 | 11:17 AM

image

அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் வெள்ளிக்கிழமை பெருமளவு குடியேற்றவாசிகள் கைதுசெய்ய்பட்டதை தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் மூண்டுள்ள நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி டிரம்ப் தேசிய காவல்படையினரை நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் சட்ட அமுலாக்கல் பிரிவினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவேளை சனிக்கிழமை பாரமவுண்ட் நகரில் மற்றுமொரு ஆர்ப்பாட்டம் வெடித்தது என லொஸ் ஏஞ்சல்ஸின் ஷெரீவ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

los_angeles_pro2.jpg

பராமன்ட் பவுல்வார்டின் ஒரு பகுதியில் மதியம் 12.42 மணியளவில் பெருமளவானவர்கள் போக்குவரத்தை தடை செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 400 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ள ஷெரீவ் ரொபேர்ட் லூனா, இதனை தொடர்ந்து அதிகாரிகள் அதனை சட்டவிரோதமான ஒன்றுகூடல் என அறிவித்து அனைவரையும் அமைதியாக கலைந்துபோகுமாறு கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் உயிராபத்தை ஏற்படுத்தாத வெடிபொருட்களை பயன்படுத்தி அவர்களை கலைக்க முயன்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் காயவிபரங்கள் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாரமவுண்டின் வீதிகளில் பெருமளவு ஆர்ப்பாட்டக்காரர்கள் காணப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. சிலர் சட்டஅமுலாக்கல் பிரிவினரின் பேருந்துகளில் ஏற முயன்றனர், சிலர் கற்களையும் ஏனைய பொருட்களையும் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளின் வாகனங்களை நோக்கி எறிந்தனர் என சிபிஎஸ் தெரிவித்துள்ளது.

los_angeles_pro_1.jpg

பாரமவுண்டிலும் கொம்டன் நகாலும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கார் ஒன்றின் அருகில் கூடிநின்று அதனை தீயிட்டு கொழுத்தினார்க்ள் என சிபிஎஸ் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் தூரத்திலிருந்து பார்த்தனர், அவர்களில் சிலர் கலவரங்களை கட்டுப்படுத்துவதற்கான உடைகளை அணிந்திருந்தனர், அந்த கார் தீப்பிடித்த பத்து நிமிடங்களிற்கு பின்னர் தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்தன என சிபிஎஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை குடியேற்றவாசிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையத்திற்கு வெளியே மீண்டும் சிறிய கூட்டமொன்று கூடியது, 8.30 மணிவரை அவர்கள் அங்கேயே நின்றனர், பின்னர் திடீரென அங்கு தோன்றிய சட்டஅமுலாக்கல் அதிகாரிகள் கண்ணீர் புகை குண்டுபிரயோகத்தில் ஈடுபட்டனர் என சிபிஎஸ் நியுஸ் தெரிவித்துள்ளது.

los_angeles_pro.jpg

https://www.virakesari.lk/article/216911

இஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த நீதிபதி உட்பட நான்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகளிற்கு எதிராக தடைகள் - அமெரிக்கா அறிவிப்பு

4 days 14 hours ago

Published By: RAJEEBAN

06 JUN, 2025 | 11:19 AM

image

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு எதிராக  பிடியாணை பிறப்பித்த நீதிபதி உட்பட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகளிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தடைகளை விதித்துள்ளது.

நால்வரில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினரின் நடவடிக்கைகளை இலக்குவைத்து செயற்பட்ட நீதிபதியொருவரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதிகளான இந்த நால்வரும் அமெரிக்காவையும் அதன் நெருங்கிய சகாவான இஸ்ரேலையும் இலக்குவைத்து ஐசிசியின் சட்டவிரோத ஆதாரமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அரசியல்மயமாக்கப்பட்டுள்து என அவர் தெரிவித்துள்ளார்.

icc.jpg

கடந்த ஆண்டு நீதிமன்றத்தின் முன் விசாரணை மற்றும் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த நீதிபதிகள் ரெய்ன் அடிலெய்ட் சோஃபி அலபினி கன்சோ மற்றும் பெட்டி ஹோஹ்லர் ஆகியோர் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோரை குறிவைத்து 

பிடியாணைகளை பிறப்பிப்பதற்கு அனுமதி வழங்கினார்கள் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச நீதித்துறை நிறுவனத்தின் சுதந்திரத்தை  குறைமதிப்பிற்கு உட்படுத்தும் தெளிவான முயற்சி என தெரிவித்துள்ள ஐசிசி பொறுப்புக்கூறலிற்காக பாடுபடுபவர்களை இலக்குவைப்பதுமோதலில் சிக்குண்டுள்ள மக்களிற்கு எந்த வகையிலும் உதவாது என தெரிவித்துள்ளது.

 ஐ.சி.சியின் மேல்முறையீட்டுப் பிரிவைச் சேர்ந்த நீதிபதிகள் உகாண்டாவைச் சேர்ந்த சோலோமி பலுங்கி போசா மற்றும் பெருவைச் சேர்ந்த லஸ் டெல் கார்மென் இபனெஸ் கார்ரான்சா ஆகியோர் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் அமெரிக்க படையினர் இழைத்ததாக தெரிவிக்கப்படும் யுத்த குற்றங்கள் குறித்து  ஐ.சி.சி விசாரணையைத் தொடங்க வழி வகுத்த குழுவில் இடம்பெற்றனர்

நவம்பர் 2024 இல் ஐ.சி.சி தலைமை வழக்கறிஞர் கரீம் கான் நெதன்யாகு மற்றும் கேலன்ட் மற்றும் மூன்று மூத்த ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக கைது வாரண்டுகளை பிறப்பித்தார். இந்த நடவடிக்கை பைடன் நிர்வாகத்திடமிருந்து எதிர்ப்புகளைப் பெற்றது முன்னாள் ஜனாதிபதி இதை "மூர்க்கத்தனமானது" என்று அழைத்தார். 

ஐ.நா தலைமையிலான பாலியல் துஷ்பிரயோக விசாரணைக்கு மத்தியில் கான் கடந்த மாதம் தனது பதவியில் இருந்து விலகினார்

ஜனாதிபதி டிரம்பின் முதல் பதவிக் காலத்தில் அமெரிக்க அரசாங்கம் ஐ.சி.சி வழக்கறிஞர் ஃபடோ பென்சவுடா மற்றும் மூத்த அதிகாரி ஃபாகிசோ மோச்சோச்சோகோ ஆகியோர் மீது ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத்தால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களை விசாரித்ததற்காக தடைகளை விதித்தது - பின்னர் பைடன் நிர்வாகத்தால் நீக்கப்பட்டது. 

அப்போதைய வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ மற்ற ஐ.சி.சி அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு விசா கட்டுப்பாடுகளை விதித்தார்.

இந்த நடவடிக்கையை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வரவேற்க வாய்ப்புள்ளது - மார்ச் 2023 இல் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது.

ஐ.சி.சி-யை நிறுவிய ரோம் சட்டத்தில் அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ கைச்சாத்திடவில்லை..

https://www.virakesari.lk/article/216747

நன்றி இல்லாதவர்’... ட்ரம்ப் - எலான் மஸ்க் நட்பு முறிவும் பரஸ்பர சாடல்களும்!

4 days 20 hours ago

06 JUN, 2025 | 10:29 AM

image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் - தொழிலதிபர் எலான் மஸ்க் இடையேயான மோதல் பொதுவெளியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

“எலான் மஸ்க் உடன் எனக்கு சிறந்த நட்பு ரீதியிலான உறவு இருந்தது. ஆனால் இனியும் நாங்கள் அப்படி இருப்போமோ இதை தொடருவோமோ என எனக்கு தெரியவில்லை. மஸ்க் மீது நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன்” என ‘தி ஓவல்’ அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது  ட்ரம்ப் தெரிவித்தார். இது நேரலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

“எல்லோரையும் விட இந்த புதிய சட்டமூலம் மசோதா குறித்து மஸ்க் முழுவதுமாக அறிவார். அதன் உள் விவரங்களையும் அவர் நன்கு தெரியும். இந்தச் சூழலில் திடீரென்று இப்போது அவருக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. மஸ்க் எனக்கு எதிராக இருப்பது குறித்து நான் பொருட்படுத்தவில்லை. ஆனால் அவர் இதை முன்பே செய்திருக்க வேண்டும்” என ட்ரம்ப் கூறினார். 

உடனடியாக நிகழ்நேரத்தில் எக்ஸ் வலைதளத்தில் ட்வீட் மூலம் மஸ்க் பதிலடி கொடுத்தார்.

trump_musk11.jpg

ட்ரம்ப்பின் புதிய வரி மசோதாவுக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார் மஸ்க். தொடர்ந்து அமெரிக்க அரசு செயல்திறன் துறையின் (டிஓஜிஇ) சிறப்பு ஊழியர் பொறுப்பில் இருந்து அண்மையில் அவர் விலகினார். “நான் மட்டும் இல்லையென்றால் 2024  தேர்தலில் ட்ரம்ப் தோற்றிருப்பார். அவர் நன்றி இல்லாதவர். ட்ரம்ப் பொய் சொல்கிறார். அந்த மசோதா எனது பார்வைக்கு கிடைக்கவில்லை. இது இந்த ஆண்டின் பிற்பாதியில் பொருளாதார மந்த நிலையை உருவாக்கும்.

ட்ரம்ப் எனது நிறுவனங்களின் அரசு ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து பேசினார். அந்த வகையில் ஸ்பேஸ்-எக்ஸின் டிராகன் விண்கலன் திட்டம் சார்ந்த செயல்பாடுகளை உடனடியாக நிறுத்துகிறது” என மஸ்க் எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.

இதோடு  ட்ரம்ப்பை நீக்கிவிட்டு துணை அதிபர் ஜே.டி.வான்ஸை அதிபராக நியமிக்க வேண்டும் என எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர் தெரிவித்திருந்தார். ‘ஆம்’ என அதற்கு பதில் கொடுத்துள்ளார் மஸ்க்.

மேலும் அமெரிக்காவில் புதிய கட்சியை உருவாக்க வேண்டுமா என்பது குறித்து எக்ஸ் தளத்தில் வாக்கெடுப்பு ஒன்றையும் மஸ்க் முன்னெடுத்துள்ளார். எப்ஸ்டீன் ஃபைல்ஸ் வெளியிடாதது குறித்தும் மஸ்க் கேள்வி எழுப்பியுள்ளார். இதில் ட்ரம்ப் சம்மந்தப்பட்டு இருப்பது தான் காரணம் என தெரிவித்துள்ளார்.

பின்னணி என்ன? - அமெரிக்காவின் பட்ஜெட் திட்டம் ஏமாற்றம் அளித்ததால்ர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து தொழிலதிபர் எலான் மஸ்க் கடந்த வாரம் வெளியேறினார்.  அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் 2-வது முறையாக பதவியேற்றதும் அரசு செலவினங்களை குறைப்பதற்காக தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையில் அரசு செயல்திறன் துறை (டிஓஜிஇ) என்று உருவாக்கப்பட்டது.

ஆண்டுதோறும் எலான் மஸ்க் 130 நாட்கள் சிறப்பு அரசு ஊழியராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டது. இத்துறை அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது உட்பட பல ஆலோசனைகளை அமெரிக்க அரசுக்கு வழங்கி வந்தது. இதற்கு அமெரிக்காவில் எதிர்ப்பும் கிளம்பியது.

இந்நிலையில் அமெரிக்க அரசின் பட்ஜெட் தயார் செய்யப்பட்டது. இது எலான் மஸ்க் தலைமையிலான அரசு செயல்திறன் துறை தெரிவித்த பரிந்துரைகளுக்கு மாறாக இருந்துள்ளது. மக்களுக்கு ஏராளமான வரிச்சலுகைகளுடன்இ ராணுவ பட்ஜெட் செலவினங்களும் அதிகமாக இருந்தது.

கடந்த 2017-ம் ஆண்டு அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் பல வரிச்சலுகைகளை அளித்தது. அதேபோல் தற்போதும் 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு 1இ300 டாலர் கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் பயனடைவர். பட்ஜெட்  அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.  ட்ரம்பின் மிகப் பெரிய மற்றும் அருமையான பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக தொழிலதிபர் எலான் மஸ்க் கூறினார்.

‘‘சிறப்பு அரசு ஊழியராக எனக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிவுக்கு வருகிறது. வீண் செலவினங்களை குறைக்க வாய்ப்பளித்த  டொனால்டு ட்ரம்ப்புக்கு நன்றி. அமெரிக்க அரசின் மிகப் பெரிய பட்ஜெட் நிதி பற்றாக்குறையை அதிகரித்துள்ளது. அரசு செயல்திறன் துறையின் பணிகளை குறைத்து மதிப்பிட்டுள்ளது. இந்த பட்ஜெட் பெரியதாக இருக்கலாம் அல்லது அருமையானதாக இருக்கலாம். ஆனால் இரண்டும் சேர்ந்ததாக இருக்குமா என தெரியவில்லை’’ என மஸ்க் அப்போது தெரிவித்தார். அரசுப் பணி காலத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக மஸ்க் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதை அவர் மறுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/216740

காசாவில் உடனடி நிபந்தனையற்ற நிரந்தரயுத்த நிறுத்தத்தை கோரும் பாதுகாப்பு சபை தீர்மானம் - வீட்டோவை பயன்படுத்தியது அமெரிக்கா

4 days 20 hours ago

Published By: RAJEEBAN

05 JUN, 2025 | 11:16 AM

image

காசாவில் உடனடி நிபந்தனையற்ற நிரந்தரயுத்த நிறுத்தத்தை கோரும் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின்  தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது.

14 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ள நிலையிலேயே அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது.

இஸ்ரேலை பாதுகாப்பதற்காக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளமை இது ஐந்தாவது தடவையாகும்.

யுத்தநிறுத்த கோரிக்கைக்கும் ஹமாஸ் தன்னிடமுள்ள பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்கும் நேரடி தொடர்பில்லை என தெரிவித்து கடந்த நவம்பரில் ஜோபைடன் நிர்வாகமும் யுத்தநிறுத்த தீர்மானத்திற்கு எதிராக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியிருந்தது.

காசாவின் நிலைமையை பேரழிவு என வர்ணித்து காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் உடனடியாக சென்றடைவதற்காக அனைத்து கட்டுப்பாடுகளையும் உடனடியாக நீக்கவேண்டும்,என கோரும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டனும் பிரான்சும் வாக்களித்திருந்தன.

இஸ்ரேலை இலக்குவைத்து பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நிராகரித்தன் மூலம் அமெரிக்கா ஒரு வலுவான செய்தியை தெரிவித்துள்ளது என அந்த நாட்டின் இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையில் ஒரு தவறான தவறான ஒரு சமாந்திரத்தை வரையும் இஸ்ரேல் தன்னை தானே பாதுகாப்பதற்காக உள்ள உரிமையை புறக்கணிக்கும் எந்த தீர்வையும் அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாது என தெரிவித்துள்ள அவர் ஐநாவில் தொடர்ந்தும் அமெரிக்கா இஸ்ரேலிற்கு ஆதரவாகயிருக்கும் என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/216640

அதானி நிறுவனம் மீது அமெரிக்காவில் மேலும் ஒரு புகார் - குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் என்ன நடந்தது?

4 days 21 hours ago

கௌதம் அதானி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி

5 ஜூன் 2025

இந்தியத் தொழிலதிபர் கௌதம் அதானியின் நிறுவனங்கள், முந்த்ரா துறைமுகம் வழியாக இரானிய திரவ பெட்ரோலிய எரிவாயுவை (எல்பிஜி) இந்தியாவிற்கு இறக்குமதி செய்தாரா இல்லையா என்பது குறித்து அமெரிக்க அதிகாரிகள் விசாரித்து வருவதாக, 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' என்ற அமெரிக்க செய்தித்தாள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆனால் அதானி எண்டர்பிரைசஸ், இந்த அறிக்கையை "ஆதாரமற்றது" என்று கூறி மறுத்துள்ளது.

"இந்த விஷயத்தில் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறித்து எங்களுக்குத் தெரியாது" என அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்துக்கும், பாரசீக வளைகுடாவுக்கும் இடையில் பயணித்த சில சரக்கு கப்பல்களின் நடவடிக்கைகள், பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்கும் கப்பல்கள் வழக்கமாக பயன்படுத்துவதை ஒத்ததாக இருந்தது என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. இவை, தடையில் இருந்து தப்பிக்க பயன்படுத்தப்படும் வழிமுறைகள் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்த விவகாரத்தை நன்கு அறிந்தவர்களின் தகவலை மேற்கோளாகக் கொண்டு, அதானி குழுமத்தின் முக்கியப் பிரிவான அதானி எண்டர்பிரைசஸுக்கு பொருட்கள் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட பல எல்பிஜி சரக்கு கப்பல்களின் செயல்பாடுகளை அமெரிக்கா ஆய்வு செய்து வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இரானில் இருந்து எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருட்களை வாங்குவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மே மாதம் முழுமையான தடை விதித்து உத்தரவிட்டார்.

இரானுடன் வர்த்தகம் செய்யும் எந்த நாடும் அல்லது நபரும் உடனடியாக இரண்டாம் நிலை தடைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அவர் அறிவித்த நேரத்தில் இந்த விசாரணை நடைபெறுகிறது.

அறிக்கை என்ன சொல்கிறது?

முந்த்ரா துறைமுகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,முந்த்ரா துறைமுகம் அதானி குழுமத்தால் இயக்கப்படுகிறது.

ஆசியாவின் இரண்டாவது பணக்காரரான கௌதம் அதானி, தன் மீதான கடந்த கால குற்றச்சாட்டுகளை நிராகரிக்க முயற்சிப்பதாக அமெரிக்கன் ஜர்னல் தனது அறிக்கையின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில், அமெரிக்காவில் கௌதம் அதானி மீது மோசடி மற்றும் லஞ்ச வழக்கு பதிவு செய்யப்பட்டது.

புரூக்ளினில் உள்ள அமெரிக்க அட்டர்னி அலுவலகம் நடத்தும் விசாரணை அதானிக்கு பெரும் சவாலானதாக மாறக்கூடும் என்று அந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

அதானி இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு நெருக்கமானவர் என்றும் செய்திகளில் விவரிக்கப்பட்டுள்ளது.

வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு தொடக்கத்தில் முந்த்ரா துறைமுகத்திலிருந்து பாரசீக வளைகுடாவிற்குச் செல்லும் கப்பல்களின் நகர்வுகள் குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர்.

கப்பல்களை கண்காணிக்கும் நிபுணர்கள் கூறுகையில், கப்பல்களின் நகர்வுகளைக் கண்காணிக்கும் போது, பொதுவாக தங்களது அடையாளத்தை மறைத்து இயக்கும் கப்பல்கள் பயன்படுத்துவதைப் போன்ற சில நடவடிக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எல்பிஜி சரக்கு கப்பல்களைக் கண்காணிக்கும் லாயிட்ஸ் லிஸ்ட் இன்டலிஜென்ஸில் கடல்சார் ஆபத்து ஆய்வாளராக இருக்கும் டோமர் ரானன், கப்பலின் உண்மையான இருப்பிடம் அல்லது அடையாளத்தை மறைக்க, கப்பலின் தானியங்கி அடையாள அமைப்பு (AIS) மீது குறுக்கீடு செய்வது பொதுவான முறை என்று விளக்குகிறார்.

கப்பலின் நிலை குறித்த தகவல்களை வழங்கும் அமைப்பு தான் இந்த தானியங்கி அடையாள அமைப்பு (AIS).

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதானிக்காக எல்பிஜியை எடுத்துச் சென்ற பனாமா கொடியுடன் கூடிய எஸ்எம்எஸ் பிரதர்ஸ் சரக்குக் கப்பலில் இதேபோன்ற செயல்முறை காணப்பட்டதாக அந்த அறிக்கை கூறியது.

லாயிட்ஸ் லிஸ்டின் கடல் தேடல் தளத்தைப் பயன்படுத்தி கப்பலின் தானியங்கி அடையாள அமைப்பை (AIS) ஆய்வு செய்த இந்த இதழ், அந்தக் கப்பல் 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் 3-ஆம் தேதி தெற்கு இராக்கில் உள்ள கோர் அல்-ஜுபைரில் நங்கூரமிட்டிருப்பதைக் கண்டறிந்தது.

அன்றைய தினம் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களில், இராக்கில் எஸ்எம்எஸ் ப்ரோஸ் (SMS Bros) அதன் இருப்பிடத்தில் காணப்படவில்லை என அறிக்கை கூறுகிறது.

எனினும், இராக்கின் டோன்புக் பகுதியில் உள்ள எல்பிஜி முனையத்தில் நிறுத்தப்பட்டிருந்த, எஸ்எம்எஸ் ப்ரோஸுடன் பொருந்தக் கூடிய ஒரு கப்பலின் படங்களை செயற்கைக்கோள் பதிவு செய்துள்ளது.

இந்தச் செய்தி அறிக்கையில், செயற்கைக்கோள் படங்களைப் பகுப்பாய்வு செய்வதில் நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளனர். இரானில் நின்ற கப்பல் உண்மையில் எஸ்எம்எஸ் ப்ரோஸ் (SMS Bros) தான் என்பதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதானி குழுமம் பதில்

அதானி குழுமம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கை ஆதாரமற்றது என்று அதானி குழுமம் கூறியுள்ளது.

வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் அறிக்கை குறித்து, அதானி குழுமம் மும்பை பங்குச் சந்தைக்கு தகவல் அளித்துள்ளது.

"அதானி குழும நிறுவனங்களுக்கும், இரானிய எல்பிஜிக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் கூறும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கை ஆதாரமற்றது. இரானிய எல்பிஜி தொடர்பான தடைகளைத் தவிர்க்க அல்லது அதில் ஈடுபட திட்டமிட்டு எதுவும் செய்யவில்லை என்றும், இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிகாரிகள் நடத்தும் எந்த விசாரணையும் எங்களுக்குத் தெரியாது" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கை முற்றிலும் தவறான கணிப்புகள் மற்றும் ஊகங்களை அடிப்படையாகக் கொண்டது என்று அந்த அறிக்கை கூறுகிறது.

"அதானி குழுமம் இரான் மீதான அமெரிக்கத் தடைகளை வேண்டுமென்றே மீறுகிறது என்ற கூற்றை நாங்கள் மறுக்கிறோம். கொள்கை ரீதியாக, அதானி குழுமம் அதன் எந்த துறைமுகத்திலும் இரானிய சரக்குகளைக் கையாளுவதில்லை. இதில் இரானில் இருந்து வரும் எந்தவொரு பொருளோ அல்லது இரானியக் கொடியின் கீழ் இயங்கும் கப்பல்களும் அடங்கும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

"இரானியர்களுக்குச் சொந்தமான எந்தவொரு கப்பலையும் அதானி குழுமம் நிர்வகிக்கவோ அல்லது எந்த வசதிகளையும் வழங்கவோ இல்லை. இந்தக் கொள்கை எங்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து துறைமுகங்களிலும் கண்டிப்பாகப் பின்பற்றப்படுகிறது."

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கப்பல், நேரடியாக தங்களால் கையாளப்படவில்லை, மூன்றாம் தரப்பு நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டது என்றும் அதானி குழுமம் அதன் அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கப்பல் ஓமனின் சோஹர் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது என்பதை காட்டும் ஆவணங்களால் இந்தக் கூற்றை அக்குழுமம் உறுதிப்படுத்துகிறது.

எஸ்எம்எஸ் ப்ரோஸ் உள்ளிட்ட எந்தக் கப்பலையும் இயக்கவில்லை என்றும், அவை எங்களுடைய சொத்துகள் அல்ல என்று அதானி எண்டர்பிரைசஸ் தெரிவித்துள்ளது. எனவே, இந்தக் கப்பல்களின் தற்போதைய அல்லது கடந்த கால நடவடிக்கைகள் குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்க முடியாது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

அமெரிக்காவில் அதானிக்கு எதிரான பழைய வழக்குகள்

கௌதம் அதானி

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கையில், கௌதம் அதானி இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் நெருங்கிய கூட்டாளி என்று விவரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, அமெரிக்காவில் தனது நிறுவனங்களில் ஒன்றுக்கு ஒப்பந்தம் பெறுவதற்காக அதானி 250 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சம் வழங்கி, அந்த விஷயத்தை மறைத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து ஒரு அறிக்கையை வெளியிட்ட அதானி குழுமம், அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை என்றும் கூறியது.

அமெரிக்காவில் இதுபோன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முதல் இந்தியத் தொழிலதிபர் அதானி தான்.

கௌதம் அதானி, அவரது மருமகன் சாகர் மற்றும் மேலும் 6 பேர் மீது , சூரிய மின்சக்தி ஒப்பந்தத்தைப் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர் லஞ்சம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டதாக, நியூயார்க்கின் கிழக்கு மாகாணத்துக்கான அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் தனது அறிக்கையில் கூறியிருந்தது.

கௌதம் அதானியின் சில பிரதிநிதிகள் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் சில அதிகாரிகளைச் சந்தித்ததாகவும், அதில் கௌதம் அதானி மீதான குற்றவியல் வழக்குகளைத் தள்ளுபடி செய்வது குறித்து விவாதம் நடந்ததாகவும், கடந்த மாதம் தான் புளூம்பெர்க் தனது அறிக்கைகளில் ஒன்றில் கூறியது.

வால் ஸ்ட்ரீட் ஜர்னலும் தனது அறிக்கையில் இந்த சந்திப்பைக் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் அதானி குறித்து ஓர் அறிக்கையை வெளியிட்டது.

இதில், அதானி குழும உரிமையாளர்களான கௌதம் அதானி மற்றும் வினோத் அதானி மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அதானி குழுமத்தின் உரிமையாளர் கௌதம் அதானி, 2020 முதல் தனது 7 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை மோசடி செய்து 100 பில்லியன் டாலர்கள் சம்பாதித்ததாக அந்த அறிக்கை குற்றம்சாட்டியது.

கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி மீதும் அறிக்கையில் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. அவர் 37 போலி நிறுவனங்களை நடத்தி வருவதாகவும், அவை பண மோசடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அறிக்கை வெளியான ஒரு மாதத்திற்குள், அதானியின் நிகர சொத்து மதிப்பு 80 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக அல்லது ரூ.6.63 லட்சம் கோடிக்கு மேல் சரிந்தது. உலகின் முதல் 20 பணக்காரர்கள் பட்டியலில் இருந்தும் கௌதம் அதானி வெளியேறினார்.

ஆனால், இந்த ஆண்டு ஜனவரியில் ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2lk2e27xj1o

உலகம் முழுவதும் கடல்கள் கருமையானதாக மாறி வருவது ஏன்?

5 days 9 hours ago

உலகப் பெருங்கடலின் 21% பகுதி, அடர் நிறம் அடைந்திருந்தது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,உலகப் பெருங்கடலின் 21% பகுதி, அடர் நிறம் அடைந்திருந்தது என்று 'குளோபல் சேஞ்ச் பயாலஜி' என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது

கட்டுரை தகவல்

  • எழுதியவர், எல்லியட் பால்

  • பதவி, பிபிசி நியூஸ்

  • 5 ஜூன் 2025, 03:00 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

பிரிட்டனில் உள்ள பிளைமவுத் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வின் படி, கடந்த இருபது ஆண்டுகளில் உலகப் பெருங்கடலின் ஐந்தில் ஒரு பகுதி கருமையானதாக (darker) மாறியுள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

"கடல் அடர் நிறமடைதல்" என்று இந்தச் செயல்முறை அழைக்கப்படுகின்றது.

கடலின் மேல் அடுக்கில் ஏற்படும் மாற்றங்கள், நீருக்குள் ஒளி ஊடுருவுவதை கடினமாக்கும் போது இந்த நிலை உருவாகிறது.

இந்த மேல் பகுதி, 'ஃபோட்டிக் மண்டலம்' (photic zone) என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்டலத்தில் தான் கடல் உயிரினங்களில் 90% உயிர்கள் வசிக்கின்றன.

உலகளாவிய உயிர் வேதியியல் சுழற்சி ஆரோக்கியமாக இயங்குவதற்கும் இந்த மண்டலம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

2003 முதல் 2022க்கு இடைபட்ட காலத்தில், உலகப் பெருங்கடலின் 21% பகுதி, அடர் நிறம் அடைந்திருந்தது என்று 'குளோபல் சேஞ்ச் பயாலஜி' ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டது.

கடல்கள் கருமையானதாக மாறி வருவது ஏன்?

இந்த ஆய்வின் படி, பாசித் திரள் பரவலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் கடல் மேற்பரப்பு வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களே, கடல் கருமையானதாக மாறுவதற்கு முக்கிய காரணங்கள் என நம்பப்படுகிறது.

பெரும்பாலும், ஊட்டச்சத்து நிறைந்த நீர், கடலோரப் பகுதிகளின் மேற்பரப்புக்கு எழும்பும் இடங்களில், கடல் அடர் நிறமடையும் தன்மை காணப்படுகிறது.

மழைப் பொழிவு அதிகரிக்கும் போது, நிலத்திலிருந்து விவசாயக் கழிவுகள் மற்றும் மண்ணில் படிந்துள்ள அடர்த்தியான பகுதிகள் கடலுக்குள் செல்லும். இவை பிளாங்க்டன்களுக்கு உணவளிக்கிறது.

காலநிலை மாற்றத்தின் காரணமாக, உலகின் பல பகுதிகளில் மழைப்பொழிவு அதிகமாகவும், கடுமையாகவும் நிகழும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

திறந்த கடல் பரப்புகளில், கடல் மேற்பரப்பின் வெப்பநிலை அதிகரித்ததால், ஒளியைத் தடுக்கும் வகையில் பிளாங்க்டன்களின் அளவு அதிகரித்திருக்கலாம். இதுவும் கடல் கருமையடைய ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படுகின்றன?

உலகளவில் கடலின் மேற்பரப்பு 2003 மற்றும் 2022ம் ஆண்டுகளுக்கு இடையில் எவ்வாறு மாறியுள்ளது என்பதை விளக்கும் படம். கடல் அடர் நிறமாவதை சிகப்பு நிறமும் அதன் பொலிவு குறைவதை நீல நிறமும் குறிக்கின்றன

பட மூலாதாரம்,UNIVERSITY OF PLYMOUTH

படக்குறிப்பு,உலகளவில் கடலின் மேற்பரப்பு 2003 மற்றும் 2022-ம் ஆண்டுகளுக்கு இடையில் எவ்வாறு மாறியுள்ளது என்பதை விளக்கும் படம். கடல் அடர் நிறமாவதை சிகப்பு நிறமும் அதன் சூரிய ஒளி அதிகரிப்பதை (lightening) நீல நிறமும் குறிக்கின்றன

கடலின் 9%க்கும் அதிகமான பகுதியில், அதாவது ஆப்பிரிக்கக் கண்டத்தின் பரப்பளவுக்குச் சமமான அளவில், 164 அடி (50 மீட்டர்) வரை ஒளி குறைந்திருப்பது குறித்து ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடலின் 2.6% பகுதியில், 328 அடி (100 மீ) வரை ஒளி குறைந்துள்ளது.

வளைகுடா நீரோடையின் மேற்பகுதியிலும், ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் ஆகிய மூன்று பகுதிகளிலும் ஃபோடிக் மண்டலத்தின் ஆழம் (கடலின் சூரிய ஒளி படரும் மேல் அடுக்கு) மாறிவிட்டது என்று அந்த ஆய்வு கூறுகிறது.

இந்த பகுதிகள் காலநிலை மாற்றத்தின் காரணமாக பெரியளவில் விளைவுகளை எதிர்கொள்கின்றன.

கரையோரப் பகுதிகள் மற்றும் பால்டிக் கடல் உட்பட சுற்றிலும் நிலப்பகுதிகளால் சூழப்பட்ட கடல்களிலும் கடல் அடர் நிறமடைந்துள்ளது.

ஆனால், கடலின் எல்லாப் பகுதிகளும் அடர் நிறமடையவில்லை என்று ஆய்வு கூறுகிறது.

அதே காலகட்டத்தில், சுமார் 10% கடல்பரப்பு அதிகமாக நிறம் மங்கியுள்ளது.

இந்த கலவையான சூழல், கடல் அமைப்புகளின் சிக்கலான தன்மையையும், நீரின் தெளிவை பாதிக்கும் பல காரணிகளையும் பிரதிபலிக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

துருக்கியின் இஸ்மிரில் பிளாங்க்டன் எனப்படும் தாவரங்களைப் போன்ற நுண்ணுயிர்கள் படர்ந்திருக்கும் காட்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,துருக்கியின் இஸ்மிரில் பிளாங்க்டன் எனப்படும் தாவரங்களைப் போன்ற நுண்ணுயிர்கள் படர்ந்திருக்கும் காட்சி

கடல் வாழ் உயிரினங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன?

இந்த மாற்றங்கள் எதற்கு வழிவகுக்கின்றன என்பது குறித்து துல்லியமாக கூற முடியாத நிலையிலும், உலகின் பல கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல்சார் சூழல்கள் பாதிக்கப்படக்கூடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

"கடந்த 20 ஆண்டுகளில் கடலின் மேற்பரப்பு எவ்வாறு நிறம் மாறியுள்ளது என்பதைக் காட்டும் ஆராய்ச்சி உள்ளது. இது பிளாங்க்டன் மாற்றங்களின் விளைவாக இருக்கலாம்" என்று பல்கலைக்கழகத்தின் கடல் பாதுகாப்பு இணைப் பேராசிரியர் முனைவர் தாமஸ் டேவிஸ் தெரிவித்தார்.

"இதுபோன்ற மாற்றங்கள் பரவலான இருளை ஏற்படுத்துகின்றன என்பதற்கான ஆதாரங்களை எங்கள் முடிவுகள் வழங்குகின்றன. இதனால், சூரியன் மற்றும் சந்திரனைச் சார்ந்து உயிர்வாழ்ந்து, இனப்பெருக்கம் செய்யும் விலங்குகளுக்கு தேவைப்படும் கடலின் பரப்பளவு குறைகிறது".

நீரின் இந்த மேல் அடுக்கு பெரும்பாலான கடல்வாழ் உயிரினங்களின் வாழிடமாக இருக்கிறது.

இங்கு பைட்டோபிளாங்க்டன் எனப்படும் தாவரங்களைப் போன்ற நுண்ணுயிர்கள் ஒளிச்சேர்க்கை செய்கின்றன.

இவை உணவுச் சங்கிலியின் அடித்தளத்தை உருவாக்கும் முக்கிய உயிரினங்கள். ஒளிச்சேர்க்கைக்கு போதுமான சூரிய ஒளி தேவைப்படுவதால் அவை நீரின் மேற்பரப்புக்கு அருகில் காணப்படுகின்றன.

இதனால் பல கடல்வாழ் உயிரினங்கள் உணவு கிடைக்கும் ஒளி மண்டலங்களில் வேட்டையாடி இனப்பெருக்கம் செய்கின்றன.

வளிமண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜனின் பாதியை உருவாக்கும் பைட்டோபிளாங்க்டன்கள், கார்பன் சுழற்சி மற்றும் கடல் உயிர்வளத்துக்கும் அவசியமானவையாக உள்ளன.

'கவலைக்கு உண்மையான காரணம்'

ஜப்பானின் கனகாவா மாகாணத்தில் பசிபிக் பெருங்கடலில் பைட்டோபிளாங்க்டன் நிகழ்வு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஜப்பானின் கனகாவா மாகாணத்தில் பசிபிக் பெருங்கடலில் பைட்டோபிளாங்க்டன் நிகழ்வு

கடல் அடர் நிறமாவதால், மனிதர்கள் சுவாசிக்கும் காற்றுக்கும், அவர்கள் உண்ணும் மீனுக்கும், உலகின் காலநிலை மாற்றத்தை சரிசெய்யும் போராட்டத்துக்கும் பாதிப்பு உண்டாகும் என்று டேவிஸ் கூறுகிறார்.

"எங்கள் கண்டுபிடிப்புகள் கவலைக்கான உண்மையான காரணத்தைக் குறிக்கின்றன".

பிளைமவுத் மரைன் ஆய்வகத்தின் கடல் உயிரி வேதியியல் மற்றும் கண்காணிப்புகளுக்கான அறிவியல் தலைவரான பேராசிரியர் டிம் ஸ்மித் கூறுவதன் படி, அங்கு ஏற்படும் மாற்றங்களால் ஒளி தேவைப்படும் சில கடல் விலங்குகள் மேற்பரப்புக்கு நெருக்கமாக வரலாம். இதனால் உணவு மற்றும் பிற வளங்களுக்கான போட்டி அதிகரிக்கும்.

"இது முழு கடல் சுற்றுச்சூழல் அமைப்பில் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும்" என்று பேராசிரியர் ஸ்மித் கூறினார்.

ஆய்வு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது?

'Darkening of the global Ocean' என்ற ஆய்வுக்காக, ஆராய்ச்சியாளர்கள் மேம்பட்ட கடல் மாதிரியுடன் சேர்ந்து, சுமார் இருபது ஆண்டுகளுக்கான செயற்கைக்கோள் தரவுகளை ஆய்வு செய்தனர்.

நாசாவின் ஓஷன் கலர் வெப் தரவு, உலகப் பெருங்கடலை 9 கிலோமீட்டர் அளவுடைய பிக்சல்களாகப் பிரிக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு பிக்சலிலும் கடல் மேற்பரப்பில் நிகழும் மாற்றங்களை கண்காணிக்க, அந்தத் தரவு உதவியது.

அதே சமயம், கடல் நீரில் ஒளியை அளவிட உருவாக்கப்பட்ட அல்காரிதம் ஒவ்வொரு இடத்திலும் ஒளி மண்டலத்தின் ஆழத்தை கணக்கிட பயன்படுத்தப்பட்டது.

சூரிய மற்றும் சந்திர கதிர்வீச்சு மாதிரிகள் பகலிலும் இரவிலும் ஒளி நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் கடல் உயிரினங்களை எப்படி பாதிக்கக்கூடும் என்பதைக் கண்டறிய பயன்படுத்தப்பட்டன.

இரவு நேரத்தில் ஒளி அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் பகல் நேரத்தை விட குறைவாக இருந்தன, ஆனால் அதுவும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5yx7d0yr10o

ஈரான், ஆப்கான் உட்பட 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை – டிரம்ப்

5 days 20 hours ago

ஈரான், ஆப்கான் உட்பட 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை – டிரம்ப்

05 JUN, 2025 | 07:47 AM

image

ஈரான், ஆப்கானிஸ்தான், மியன்மார் உட்பட 12 நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கும் அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான், பர்மா, சாட், கொங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹெய்ட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.

கியுபா உட்பட பல நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்வது தொடர்பில் பல கட்டுப்பாடுகளையும் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவினதும் அதன் மக்களினதும் தேசிய பாதுகாப்பு நலன்கள் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதிசெய்யும்  எனது கடமையை நான் நிறைவேற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/216626

200 பில்லியன் டொலர்களை ஆபிரிக்காவிற்கு வழங்கும் பில் கேட்ஸ்

1 week ago

Published By: DIGITAL DESK 3

03 JUN, 2025 | 11:04 AM

image

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகரான 69 வயதுடைய பில் கேட்ஸ் தனது சொத்தில் பெரும்பகுதியை அடுத்த 20 ஆண்டுகளில் ஆபிரிக்காவில் சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகளை அபிவிருத்தி செய்யப் பயன்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.

சுகாதாரம், கல்வி முன்னேற்றம் முதலியவற்றின் மூலம் ஆப்பிரிக்காவில் உள்ள ஒவ்வொரு நாடும் செழிப்பை நோக்கிச் செல்ல வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு மூலம் சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்தும் வழிகளைச் சிந்திக்கும்படி அவர் இளையர்களைக் கேட்டுக்கொண்டார்.

அடுத்த 20 ஆண்டுகளில் தமது சொத்தில் 99 சதவீதத்தை நன்கொடையாக வழங்கபோவதாகவும், 2045 ஆம் ஆண்டுக்குள் தமது சொத்தின் மதிப்பு 200 பில்லியன் டொலரை எட்டிவிடும் எனவும் கேட்ஸ் சென்ற மாதம் தெரிவித்திருந்தார்.

20 ஆண்டுகளின் இறுதியில் தமது அறக்கட்டளையின் செயல்பாடுகள் நிறுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/216416

பாலஸ்தீன ஆதரவு: அமெரிக்க எம்ஐடி-யில் இந்திய வம்சாவளி மாணவி மேகா மீதான நடவடிக்கையும் பின்னணியும்

1 week ago

பாலஸ்தீன ஆதரவு: அமெரிக்க எம்ஐடி-யில் இந்திய வம்சாவளி மாணவி மேகா மீதான நடவடிக்கையும் பின்னணியும்

bea0851927f9fed074926f9e58fb52f6?s=32&d=Posted on June 3, 2025 by தென்னவள்

1363985-300x171.jpg

காசா போரை கண்டித்து உரையாற்றியதால், அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்ஐடி – MIT) படிக்கும் இந்திய வம்சாவளி மாணவி மேகா வெமுரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

எம்ஐடி-யின் 2025-ம் ஆண்டு வகுப்புத் தலைவரான மேகா வெமுரி வியாழக்கிழமை (மே 29) மாசசூசெட்ஸின் கேம்பிரிட்ஜில் நடைபெற்ற ‘ஒன்-எம்ஐடி’ (OneMIT) தொடக்க விழாவில் கலந்து கொண்டு பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் இஸ்ரேலை கண்டித்தும் உரையாற்றினார். மேலும், காசா போரை எதிர்த்துப் போராடியதற்காக தனது சகாக்களைப் பாராட்டிய அவர், இஸ்ரேலுடனான பல்கலைக்கழகத்தின் உறவுகளை விமர்சித்தார். இதையடுத்து, மேகா வெமுரி மீது பல்கலைக்கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை (மே 30) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அவர் அனுமதிக்கப்படவில்லை. மேலும், பட்டமளிப்பு விழா முடியும் வரை பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது.

“எம்ஐடி கருத்து சுதந்திரத்தை ஆதரிக்கிறது. அதேநேரத்தில், மேகா வெமுரி மீதான நடவடிக்கையில் பல்கலைக்கழகம் உறுதியாக உள்ளது. ஏனெனில், அந்த நபர் வேண்டுமென்றே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை தவறாக வழிநடத்தி மேடையில் இருந்து போராட்டத்தை வழிநடத்தி இருக்கிறார்” என்று பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். எனினும், மேகா வெமுரி தனது பட்டத்தைப் பெறுவார் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மேகா வெமுரி, “இனப்படுகொலைக்கு உடந்தையாக இருக்கும் ஒரு நிறுவனத்தின் மேடையைக் கடந்து செல்ல வேண்டிய அவசியமில்லை என்று நான் கருதுகிறேன். எனினும், எம்ஐடி அதிகாரிகள் உரிய நடைமுறை இல்லாமல் என்னைத் தண்டிக்க முயன்றதால் பெருமளவில் நான் ஏமாற்றமடைந்துள்ளேன். நான் உரையாற்றியதால் பல்கலைக்கழகத்தின் எந்தவொரு விதியும் மீறப்படவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், பேச்சு சுதந்திரத்திற்கு எம்ஐடி ஆதரவு அளிப்பதாகக் கூறுவது பாசாங்குத்தனம் என்றும் அவர் விமர்சித்தார்.

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள மேகா வெமூரி தடை விதிக்கப்பட்டதற்கு அமெரிக்க – இஸ்லாமிய உறவுகள் கவுன்சில் (CAIR) கண்டனம் தெரிவித்துள்ளது. “எம்ஐடி கல்வி சுதந்திரத்தை மதிக்க வேண்டும், அதன் மாணவர்களின் குரல்களை மதிக்க வேண்டும், இனப்படுகொலைக்கு எதிராகவும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் பேசுபவர்களைத் தண்டிக்கவோ மிரட்டவோ கூடாது,” என்று சிஏஐஆர் – மாசசூசெட்ஸ் நிர்வாக இயக்குனர் தஹிரா அமதுல்-வதூத் தெரிவித்துள்ளார்.

https://www.kuriyeedu.com/?p=677701

கப்பலில் காசாவிற்கு புறப்பட்டார் கிரெட்டா தன்பேர்க் - இனப்படுகொலை குறித்த உலகின் மௌனத்தை விட இந்த பயணம் ஆபத்தானதில்லை என தெரிவிப்பு

1 week ago

03 JUN, 2025 | 11:01 AM

image

இஸ்ரேலின் முற்றுகையை உடைப்பதற்காக புறப்பட்டுள்ள கப்பலில் காலநிலை செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பேர்க்கும் பயணிக்கின்றார்.

காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக தனது கப்பல் சிசிலியிலிருந்து புறப்பட்டுள்ளது என சர்வதேச இலாபநோக்கமற்ற அமைப்பான பீரிடம் புளோட்டிலா கூட்டணி தெரிவித்துள்ளது.

gaza_ship.jpg

இந்த அமைப்பு முன்னர் இதேபோன்றதொரு முயற்சியில் ஈடுபட்டபோதும் அது மத்தியதரை கடலில் இடம்பெற்ற ஆளில்லா விமான தாக்குதலால் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த கப்பலில் கிரெட்டாவுடன் பிரான்ஸின் பாலஸ்தீனத்தை பூர்வீகமாக கொண்ட அரசியல்வாதி ரிமா ஹசனும் பயணம் செய்கின்றார்.

இந்த கப்பல் கட்டானியா துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளது.

gretta_gaza_1.jpg

மட்டுப்படுத்தப்பட்ட அளவு நிவாரணங்களையே கொண்டு செல்கின்றோம். ஆனால் இது குறியீட்டு அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரீடம் புளோட்டிலா கூட்டணி தெரிவித்துள்ளது.

நாங்கள் எவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும் என்பதால் இதனை செய்கின்றோம், ஏனென்றால் நாம் முயற்சிப்பதை இழக்கும் தருணம் நம் மனித நேயத்தை இழக்கும் தருணம் என புறப்படுவதற்கு முன்னர் கிரெட்டா தன்பேர்க் தெரிவித்துள்ளார்.

இந்த பணி எவ்வளவு ஆபத்தானதாகயிருந்தாலும் இனப்படுகொலை செய்யப்படும் மக்கள் குறித்து முழு உலகமும் மௌனமாகயிருப்பது போல இது ஆபத்தானது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

gaza_ship_1.jpg

இடைநடுவில் தடுத்துநிறுத்தப்படாவிட்டால் ஏழு நாட்களிற்குள் நாங்கள் காசாவை சென்றடைவோம் என செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/216420

அமெரிக்கா நாடு கடத்திய விஞ்ஞானி சீனா விண்வெளித் துறையில் சாதிக்க உதவியது எப்படி?

1 week ago

சியான் சேசென், சீன விஞ்ஞானி, மக்கள் விஞ்ஞானி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், கவிதா பூரி

  • பதவி, பிபிசி நியூஸ்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஷாங்காயில், சியான் சேசென் (Qian Xuesen) என்ற "மக்கள் விஞ்ஞானிக்கு" 70,000 கலைப்பொருட்களைக் கொண்ட ஒரு முழு அருங்காட்சியகம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் விண்வெளி மற்றும் ஏவுகணைத் திட்டத்தின் தந்தை என சியான் சேசென் போற்றப்படுகிறார்.

சீனாவின் முதல் செயற்கைக்கோளை விண்வெளியில் செலுத்தியவரும், ராக்கெட்டுகளை உருவாக்க உதவிய ஆய்வை மேற்கொண்டவருமான சியான் சேசென், அணு ஆயுதக் களஞ்சியத்தின் ஒரு பகுதியாக மாறிய ஏவுகணைகளையும் உருவாக்கத் தனது ஆய்வுகள் மூலம் உதவியவர்.

அவரது அளப்பறிய அறிவுக்காக, அவர் சீனாவின் கதாநாயகனாகப் போற்றப்படுகிறார். ஆனால் அமெரிக்காவுக்காக பணிபுரிந்த அவர், சீனாவின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் முக்கியமான நபராக மாறியது எப்படி?

அமெரிக்காவில் மேற்படிப்பு படித்து, அங்கேயே பணி புரிந்தார். அங்கு பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அவரை அமெரிக்கா நாட்டை விட்டு வெளியேற்றியது.

அண்மையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு கொண்டவர்கள் அல்லது "முக்கியமான துறைகளில்" படிப்பவர்கள் உள்பட சீன மாணவர்களுக்கான விசாக்களை அமெரிக்க நிர்வாகம் "திரும்பப் பெறுவதில் தீவிரம் காட்டும்" என்று அறிவித்தார்.

டொனால்ட் டிரம்பின் சட்டவிரோத குடியேற்றக் கொள்கைக்கு மத்தியில், நியூயார்க் டைம்ஸ் போன்ற ஊடகங்கள், விஞ்ஞானி சியான் சேசென் தொடர்பான செய்திகளை வெளியிட்டன. அமெரிக்கா பல தசாப்தங்களுக்கு முன்பு செய்த தவறைச் சுட்டிக் காட்டும் விதமாக இந்தச் செய்திகள் வெளியாகின.

சியான் சேன்சென் போன்ற திறமையாளர்களை வரவேற்பதற்குப் பதிலாக வெளியேற்றுவதன் அபாயங்கள் ஏற்கெனவே ஒரு காலத்தில் அமெரிக்காவை பாதித்துள்ளன.

அமெரிக்கா மீண்டும் தடுமாறி தவறு செய்கிறதா? சீன விஞ்ஞானி சியான் சேசென் போன்ற புத்திசாலித்தனமான நபர்களை வெளியேற்றியது, அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான தவறு என்று கூறப்பட்டது. இந்நிலையில், முந்தைய கால தவறையே அமெரிக்கா மீண்டும் தொடருமா என்ற கேள்வி தற்போது எழுப்பப்படுகிறது.

அறிவுத் திறனால் அமெரிக்காவில் கிடைத்த வாய்ப்பு

சியான் சேசென், சீன விஞ்ஞானி, மக்கள் விஞ்ஞானி, வரலாறு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தனது திறமையின் பயனாக அவர் எம்.ஐ.டியில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றார்

சீனாவின் ஏகாதிபத்திய வம்சம் முடிவடைந்து, அந்நாடு குடியரசாக மலரக் காத்துக் கொண்டிருந்த தருணத்தில் 1911ஆம் ஆண்டு சியான் சேசென் பிறந்தார்.

கல்வியில் சிறந்து விளங்கிய குடும்பத்தில் பிறந்த சியான் சேசென்னின் தந்தை ஜப்பானில் பணிபுரிந்து அங்கு பெற்ற அனுபவங்கள் மற்றும் தனது அறிவாற்றலால், சீனாவின் தேசிய கல்வி முறையை நிறுவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திறமை மிக்க மாணவரான சியான் சேசென், ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் முதலிடம் பிடித்தார். அது அவருக்கு அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) சிறப்பு உதவித்தொகையைப் பெற உதவியது.

கடந்த 1935ஆம் ஆண்டில் அவர் பாஸ்டனுக்கு மேற்படிப்புக்காக வந்தார். அமெரிக்காவுக்கு மெலிதான உடல்வாகு கொண்ட, கண்ணியமான நபராக வந்து சேர்ந்தார்.

அமெரிக்காவில் அவர், அந்நிய வெறுப்பு மற்றும் இனவாத பிரச்னைகளை எதிர்கொண்டிருக்கலாம் என்று வடக்கு ஜார்ஜியா பல்கலைக் கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் கிறிஸ் ஜெஸ்பர்சன் கூறுகிறார்.

ஆனால், "சீனா (அடிப்படையில்) குறிப்பிடத்தக்க வழிகளில் மாறிக் கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கை அந்தக் காலகட்டத்தில் நிலவியது." மேலும் அறிவுக்கு மதிப்பு கொடுத்தவர்களும் நிச்சயமாக இருந்திருப்பார்கள் என்று அவர் நம்புகிறார்.

கால்டெக் அனுபவங்கள்

சியான் சேசென், சீன விஞ்ஞானி, மக்கள் விஞ்ஞானி, வரலாறு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த 1960இல் எடுக்கப்பட்ட வில்லியம் பிக்கரிங், தியோடர் வான் கர்மா மற்றும் பிராங்க் மலினாவின் புகைப்படம்

எம்ஐடியில் இருந்து கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (கால்டெக்) குடிபெயர்ந்த சியான் சேசென், அன்றைய மிகவும் செல்வாக்கு மிக்க விமானப் பொறியாளர்களில் ஒருவரான ஹங்கேரிய குடியேறி தியோடோர் வான் கர்மானிடம் படிக்கச் சென்றார்.

அங்கு அவர், மற்றொரு முக்கிய விஞ்ஞானியான பிராங்க் மலினாவுடன் இணைந்தார். 'சூசைட் ஸ்குவாட்' என்ற கண்டுபிடிப்பாளர்களின் சிறிய குழுவின் முக்கிய உறுப்பினராக பிராங்க் மலினா இருந்தார்.

பல்கலைக்கழக வளாகத்தில் ராக்கெட்டை உருவாக்க முயன்ற இந்தக் குழுவினரின் சில பரிசோதனைகள், ஆவியாகும் ரசாயனங்கள் மூலம் தவறாகிப் போனதால், அவர்களின் குழுவை தற்கொலைப் படை என்று அழைத்ததாக "Escape from Earth: A Secret History of the Space Rocket" என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஃப்ரேசர் மெக்டொனால்ட் பிபிசியிடம் தெரிவித்தார். அவர்களின் அந்தப் பரிசோதனையில் யாரும் இறக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு நாள், மலினா மற்றும் அவரது குழுவின் பிற உறுப்பினர்களுடன் ஒரு சிக்கலான கணிதப் பிரச்னை பற்றிய விவாதத்தில் ஈடுபட்ட சியான், விரைவில் 'தற்கொலைப் படை' குழுவில் ஒருவராக மாறிவிட்டார். அவரும், ராக்கெட் உந்துவிசை குறித்த அடிப்படை ஆராய்ச்சியில் பங்களித்தார்.

அந்தக் காலகட்டத்தில், ராக்கெட் அறிவியல் என்பது "முட்டாள்கள் மற்றும் கற்பனையாளர்களின் பொருளாக" இருந்தது என்று மெக்டொனால்ட் கூறுகிறார்.

"ராக்கெட் அறிவியலை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கணிதத்தில் விருப்பம் இருந்த பொறியாளர்களில் யாருமே அதுதான் எதிர்காலம் என்று கூறி தனது நற்பெயருக்கு ஆபத்தை விளைவித்திருக்க மாட்டார்கள்." ஆனால் இரண்டாம் உலகப் போர் தொடங்கியவுடன், நிலைமை துரிதகதியில் மாறியது.

போர் படைப்பிரிவு

'தற்கொலைப் படை' அமெரிக்க ராணுவத்தின் கவனத்தை ஈர்த்தது, ஜெட் உதவியுடன் கிளம்புவது தொடர்பான ஆராய்ச்சிக்கு நிதியுதவி கிடைத்தது. குறுகிய ஓடுபாதைகளில் இருந்து விமானங்கள் புறப்பட ஏதுவாக ப்ரொப்பல்லர்கள் இணைக்கப்பட்டன.

கடந்த 1943ஆம் ஆண்டில் தியோடோர் வான் கார்மனின் வழிகாட்டுதலின் கீழ் ஜெட் புராபல்ஷன் ஆய்வகத்தை (JPL) நிறுவ ராணுவ நிதியும் கிடைத்தது. சியான் சேன்சென் மற்றும் ஃபிராங்க் மலினா இருவருமே திட்டத்தில் முக்கியமானவர்களாக இருந்தனர்.

அப்போதைய சீன குடியரசு அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்ததால், அமெரிக்க விண்வெளித் திட்டத்தில் சீன விஞ்ஞானி முக்கியப் பங்கு வகிப்பதில் எந்தச் சிக்கலும் எழவில்லை.

ரகசிய ஆயுத ஆராய்ச்சியில் பணியாற்ற பாதுகாப்பு அனுமதி பெற்ற சியானுக்கு, அமெரிக்க அரசின் அறிவியல் ஆலோசனைக் குழுவிலும் இடம் கொடுக்கப்பட்டது.

போரின் முடிவில், உலகின் முன்னணி ஜெட் உந்துவிசை நிபுணர்களில் ஒருவராக உயர்ந்தார். தியோடோர் வான் கார்மனுடன் ஜெர்மனிக்கு ஒரு முக்கியமான பணிக்காக அனுப்பப்பட்ட சியான் சேன்சென் அங்கு தற்காலிக லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றினார்.

ஜெர்மனியின் முன்னணி ராக்கெட் விஞ்ஞானியான வெர்ன்ஹர் வான் பிரவுன் உள்பட நாஜி பொறியாளர்களைச் சந்தித்துப் பேசுவதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது. ஜெர்மனியர்களுக்கு தெரிந்த அனைத்தையும் சரியாக அறிய அமெரிக்கா விரும்பியது.

அந்த தசாப்தத்தின் இறுதியில், அமெரிக்காவில் சியானின் வாழ்க்கை திடீரென நிலைதடுமாறியது. அவரது வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படத் தொடங்கின.

சர்வதேச அரசியலில் மாற்றம்

சியான் சேசென், சீன விஞ்ஞானி, மக்கள் விஞ்ஞானி, வரலாறு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சியானின் அளப்பறிய அறிவுக்காக, அவர் சீனாவின் கதாநாயகனாக போற்றப்படுகிறார்

கடந்த 1949இல் சீனாவில் கம்யூனிஸ்ட் மக்கள் குடியரசு உருவாக்கப்பட்டதாக அதன் தலைவர் மாவோ அறிவித்தார். அந்தப் பின்னணியில், சீனர்கள் என்றாலே "கெட்டவர்கள்" என்று பார்க்கும் போக்கு அமெரிக்காவில் தொடங்கிவிட்டதாக கிறிஸ் ஜெஸ்பர்சன் கூறுகிறார்.

"அமெரிக்காவில், சீனாவை நேசித்த காலகட்டம் முடிவுக்கு வந்தது. ஏதோ நடந்தது, திடீரென நாம் அந்நாட்டை இழிவாகப் பார்க்கத் தொடங்கி விட்டோம்," என்று வரலாற்றாசிரியர் பிபிசியிடம் கூறுகிறார்.

JPL-இன் புதிய இயக்குநர், தங்கள் ஆய்வகத்தில் உளவாளிகள் இருப்பதாக நம்பினார். சில ஊழியர்கள் குறித்த தனது சந்தேகங்களை எஃப்.பி.ஐ உடன் பகிர்ந்து கொண்டார். "அவர்கள் அனைவரும் சீனர்கள் அல்லது யூதர்கள் என்பதை அவர் கவனித்தார்," என்கிறார் ஃப்ரேசர் மெக்டொனால்ட்.

பனிப்போர் நடந்து கொண்டிருந்தது, மெக்கார்த்தி சகாப்தம் தொடங்கிய அந்த வேளை கம்யூனிச எதிர்ப்பு வீரியமடையத் தொடங்கிய காலம்.

இந்தக் காலகட்டத்தில்தான் எஃப்.பி.ஐ., சியான், ஃபிராங்க் மலினா மற்றும் பிறரை கம்யூனிஸ்டுகள் என்றும், தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்கள் என்றும் குற்றம் சாட்டியது.

சியான் சேன்சென் செய்த தவறு என்ன?

சியான் சேசென், சீன விஞ்ஞானி, மக்கள் விஞ்ஞானி, வரலாறு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த 1949இல் சீனாவில் கம்யூனிஸ்ட் மக்கள் குடியரசு உருவாக்கப்பட்டதாக அதன் தலைவர் மாவோ அறிவித்தார்

கடந்த 1938ஆம் ஆண்டு அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணத்தின் அடிப்படையில் சியானுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அமைந்தன. அவர் ஒரு சமூகக் கூட்டத்தில் கலந்து கொண்டார் என்பதை அது காட்டுகிறது. பசடேனா கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டமாக அது இருக்கலாம் என்று எஃப்.பி.ஐ சந்தேகித்தது.

கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இல்லை என்று சியான் கூறினாலும், அவர் 1938இல் பிராங்க் மலினாவுடன் இணைந்திருந்தார் என்பதை புதிய ஆராய்ச்சி உறுதி செய்தது.

ஆனால் இதனால் மட்டுமே அவர் ஒரு மார்க்சியவாதி என்று கூறிவிட முடியாது. இருப்பினும், அந்த நேரத்தில் கம்யூனிஸ்டாக ஒருவர் இருப்பது இனவெறிக்கு எதிரானது என்ற எண்ணம் நிலவியது என ஃப்ரேசர் மெக்டொனால்ட் தெளிவுப்படுத்துகிறார். இந்தக் குழு, பாசிசத்தின் அச்சுறுத்தலையும், அமெரிக்காவில் இனவெறியின் பயங்கரத்தையும் முன்னிலைப்படுத்த விரும்பியதாக அவர் கூறுகிறார்.

பிரிவினைக்கு எதிரான பிரசாரங்களைப் பற்றி விவாதிக்க அவர்கள் கம்யூனிஸ்ட் கூட்டங்களைப் பயன்படுத்தினார்கள். எடுத்துக்காட்டாக உள்ளூர் பசடேனா நீச்சல் குளத்தில் மதிய வேளையில் கறுப்பினத்தவர்கள் குளித்தால், அவர்கள் பயன்படுத்திய குளத்தை, வெள்ளையர்கள் பயன்படுத்தும் வகையில் சுத்தம் செய்வார்கள்.

பொமோனாவில் அமைந்திருக்கும் கலிபோர்னியா மாநில பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியரான சூயோயு வாங், சியான் அமெரிக்காவில் இருந்தபோது சீனாவுக்காக உளவு பார்த்ததாகவோ அல்லது உளவுத்துறை முகவராக இருந்ததற்கோ எந்தவித ஆதாரமும் இல்லை என்று குறிப்பிடுகிறார்.

இருப்பினும் சந்தேகத்தின் அடிப்படையில் சியான் சேசெனின் பாதுகாப்பு அனுமதி பறிக்கப்பட்டது. அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். சியான் குற்றமற்றவர் என தியோடோர் வான் உள்பட சியானின் கால்டெக் சகாக்கள் அரசுக்கு எழுதிய கடிதங்களால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

ஐந்து ஆண்டுகள் வீட்டுக் காவலில் இருந்த பிறகு, அன்றைய அமெரிக்க அதிபர் ஐசனோவர், சியானை சீனாவுக்கு நாடு கடத்த முடிவு செய்தார். 1955ஆம் ஆண்டில், தனது மனைவி மற்றும் அமெரிக்காவில் பிறந்த இரண்டு குழந்தைகளுடன் சீனாவுக்கு கிளம்பிய சியான் சேன்சென், மீண்டும் ஒருபோதும் அமெரிக்க மண்ணில் கால் வைக்க மாட்டேன் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இறுதி வரை தனது வாக்குறுதியை சியான் சேன்சென் காப்பாற்றினார்.

வேறொரு இலக்கை நோக்கி

சியான் சேசென், சீன விஞ்ஞானி, மக்கள் விஞ்ஞானி, வரலாறு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த 1950இல் நாடு கடத்தப்படுவது தொடர்பாக நடந்த வழக்கின்போது தனது வழக்கறிஞர் கிராண்ட் கூப்பருடன் சியான்

"அமெரிக்காவின் மிக முக்கியமான விஞ்ஞானிகளில் ஒருவராகத் திகழ்ந்த சியான் சேன்சென், அறிவியலுக்கு மகத்தான பங்களிப்பைச் செய்திருந்தார். அவரால் இன்னும் அதிகமாகப் பங்களித்திருக்க முடியும். ஆனால், அவர் இவ்வாறு அவமதிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டது அவருக்கு அவமானம் மட்டுமல்ல, துரோகமும்கூட" என்று பத்திரிகையாளரும் எழுத்தாளருமான தியான்யு ஃபாங் கூறுகிறார்.

அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு கதாநாயகனைப் போல் சியான் சேன்சென் வந்தார். ஆனால் அவர் உடனடியாக சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்க்கப்படவில்லை.

அதற்குக் காரணம், சியானின் மனைவி ஒரு தேசியவாதத் தலைவரின் செல்வ மகள். அதுமட்டுமல்ல, பதவி விலகும் வரை சியான் அமெரிக்காவில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார். மேலும், அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான முதல்கட்ட ஏற்பாடுகளையும் செய்யத் தொடங்கியிருந்தார்.

கடந்த 1958இல் சியான் சேன்சென் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானபோது, ஆட்சியின் நம்பிக்கைக்கு உரியவராகவே இருந்தார். இதனால் அவர் சுத்திகரிப்பு மற்றும் கலாசாரப் புரட்சியில் இருந்து தப்பிப் பிழைத்தார். சீனாவில் அவரது வாழ்க்கை நிம்மதியாகவும் மேம்பட்டதாகவும் இருந்தது.

அவர் சீனாவுக்கு வந்தபோது, அங்கு விண்வெளி அறிவியலைப் பற்றிய புரிதல் குறைவாகவே இருந்தது. ஆனால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவில் இருந்து ஏவப்பட்ட முதல் செயற்கைக்கோளுக்கான பணிகளை அவர் மேற்பார்வையிட்டார்.

பல தசாப்தங்களாக, அவர் புதிய தலைமுறை விஞ்ஞானிகளுக்கு பயிற்சி அளித்தார். அவரது சீரிய முயற்சியால், சீனா தனது சொந்த விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்புவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.

ஏவுகணைத் திட்டம்

சியான் சேசென், சீன விஞ்ஞானி, மக்கள் விஞ்ஞானி, வரலாறு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சியானின் சீரிய முயற்சியால், சீனா தனது சொந்த விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்புவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.

சியான் உதவியுடன் சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் திட்டம்தான், பின்னொரு காலத்தில் அமெரிக்காவை நோக்கி ஏவப்பட்ட ஆயுதங்களை உருவாக்க வழிவகுத்தது என்பது சரித்திரம் சொல்லும் உண்மை.

சியானின் "silkworm" ஏவுகணைகள் 1991 வளைகுடா போரில் அமெரிக்கர்கள் மீதும், 2016இல் ஏமனில் ஹுட்டு கிளர்ச்சியாளர்களால் யுஎஸ்எஸ் மேசன் மீதும் ஏவப்பட்டதாக ஃப்ரேசர் மெக்டொனால்ட் குறிப்பிடுகிறார்.

"இது காலத்தின் விசித்திரமான சுழற்சி: அமெரிக்கா வெளியேற்றிய சக்தி, திரும்ப அதையே தாக்கியது."

f41af710-3f8a-11f0-b6e6-4ddb91039da1.jpg

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சீனாவின் சாங்க்-4 2019ஆம் ஆண்டு நிலவின் வெகு தூரத்தில் கால் பதித்த முதல் செயற்கைக்கோளாக மாறியது

சியான் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் வாழ்ந்தார்.

அன்று பல விஷயங்களில் பின்தங்கியிருந்த சீனா, தற்போது பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, பூமியிலும் விண்வெளியிலும் வல்லரசாக வளர்ந்துள்ளது. அந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக சியான் இருந்தார்.

ஆனால் அவரது கதை அமெரிக்காவை பெருமைப்படுத்தும் ஒன்றாகவும் இருந்திருக்கக்கூடும். திறமையுள்ள ஒருவர் எங்கு இருந்தாலும் செழித்து வளர முடியும் என்பதை நிரூபித்துவிட்டார் சியான் சேன்சென்.

கடந்த 2019ஆம் ஆண்டில், சந்திரனின் தொலைதூரப் பகுதியில் சீனா தரையிறங்கிய இடத்திற்கு, அமெரிக்காவில் சியானுக்கு வழிகாட்டியாய் திகழ்ந்த விமானப் பொறியாளர் வான் கார்மனின் பெயர் சூட்டப்பட்டது.

அமெரிக்காவின் கம்யூனிச எதிர்ப்பானது, சீனாவை விண்வெளிக்கு கொண்டு செல்ல உதவியது என்று கூறப்படுகிறது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c14km2jxlzvo

சூப்பர் பக்: மருந்துகளுக்கு கட்டுப்படாத கிருமிகள் - ஆன்டிபயாடிக்குகளை கையாளுவதில் அதிகரிக்கும் முரண்பாடு

1 week 1 day ago

"நுண்ணுயிர் எதிர்ப்பு"

பட மூலாதாரம்,CORBIS VIA GETTY IMAGES

படக்குறிப்பு, "நுண்ணுயிர் எதிர்ப்பு" நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ்

  • பதவி, பிபிசி செய்தியாளர்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆரோக்கியம் மற்றும் சிகிச்சையில் மோசமான முரண்பாடு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஒருபுறம், ஒருவரின் உடலில் ஆன்டிபயாடிக்ஸ் வேலை செய்யாமல் போகும் அளவுக்கு தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது, அந்த மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்பைத் தூண்டுகிறது மற்றும் கொடிய சூப்பர் பக் கிருமிகள் எழுச்சியடைய ஊக்கமளிக்கிறது. ஆனால் மறுபுறம், இந்த உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்காததால் மக்கள் உயிரிழக்கின்றனர்.

Global Antibiotic Research and Development Partnership (GARDP) என்ற லாப நோக்கற்ற அமைப்பு நடத்திய ஒரு புதிய ஆய்வு, இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட பெரிய நாடுகளில் எட்டில், கிட்டத்தட்ட 1.5 மில்லியன் கார்பபெனெம்-எதிர்ப்பு கிராம்-எதிர்மறை (CRGN) தொற்றுகளுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகளின் தாக்கம் குறித்து ஆய்வு செய்தது.

CRGN பாக்டீரியாக்கள் கடைசி வரிசை நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கும் எதிர்ப்புத் திறன் கொண்ட சூப்பர் பக் கிருமிகள் ஆகும். இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நாடுகளில் 6.9% நோயாளிகள் மட்டுமே பொருத்தமான சிகிச்சையைப் பெற்றனர் என்று தெரிய வந்துள்ளது. ஆன்டிபயாடிக் மீதான பாக்டீரியாவின் எதிர்ப்பு நிலை (antibiotic resistance) அதிகரித்து வருகிறது.

CRGN தொற்றுகள் மற்றும் அதற்கான சிகிச்சைகளில் இந்தியா பெரும் பங்கைக் கொண்டிருந்தது, ஆய்வு செய்யப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் முழு ஆய்வில் 80% இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், அதில் 7.8% நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சையளிக்க முடிந்தது என்று தி லான்செட் தொற்று நோய்கள் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. (ஆன்டிபயாடிக் மருந்துகளின் முழுமையான ஒரு கோர்ஸ் என்பது, ஒரு நோயாளி ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு தொற்று பூரண குணமாக எடுத்துக்கொள்ள வேண்டிய முழுமையான அளவுகளைக் குறிக்கிறது.)

நீர், உணவு, சுற்றுச்சூழல் மற்றும் மனித குடலில் பொதுவாகக் காணப்படும் எதிர்மறை பாக்டீரியாக்கள், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (UTIs), நிமோனியா மற்றும் உணவு நஞ்சாதல் என பல உடல்நலக் கோளாறுகளையும், நோய்த்தொற்றுகளையும் ஏற்படுத்துகின்றன.

இவை, புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவர்கள் மோசமாக பாதிக்கப்படுவார்கள். பெரும்பாலும் ICUக்களில் இருப்பவர்களுக்கு வேகமாகப் பரவி, அவர்களுக்கு சிகிச்சையளிப்பது கடினமாகிவிடும்.

அதுமட்டுமல்ல, சில சமயங்களில் சிகிச்சையே சாத்தியமற்றதாகிவிடுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அதிலும் கார்பபெனெம்-எதிர்ப்பு கிராம்-எதிர்மறை பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பது இரட்டிப்பு சிக்கலாகிறது. ஏனெனில், அந்த பாக்டீரியாக்கள் மிகவும் சக்திவாய்ந்த சில ஆன்டிபயாடிக்குகள் மீதான எதிர்ப்பு நிலையை அதிகரித்து விடுகின்றன.

ஆன்டிபயாடிக் மருந்துகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,நமது குடலில் காணப்படும் பாக்டீரியாக்கள் நமது ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

சூப்பர்பக்ஸ் என்றால் என்ன?

சூப்பர்பக்ஸ் என்பது பாக்டீரியா, வைரஸ்கள் அல்லது பிற கிருமிகள் ஆகும். அவை பொதுவாக அவற்றைக் கொல்லும் மருந்துகளுக்கு ஏற்றவாறு மாறிவிடுகின்றன. அவை மருந்துகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு வளர்கின்றன. ஒரு கட்டத்தில், சிகிச்சைக்காக கொடுக்கப்படும் ஆன்டிபயாடிக் வேலை செய்யாமல் போக வாய்ப்பு உள்ளது.

"இந்த பிரச்னை, வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து வயதினரிடமும் காணப்படுவதை தினமும் பார்க்கிறோம்" என்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் தொற்றுநோய் ஆலோசகர் டாக்டர் அப்துல் கஃபூர் கூறுகிறார். "எந்தவித ஆன்டிபயாடிக்கும் வேலை செய்யாத நோயாளிகளை நாம் அடிக்கடி பார்க்க நேரிடுகிறது- அவர்கள் உயிரிழக்கிறார்கள்."

ஆனால், இதிலுள்ள முரண்பாடு கொடூரமானது. உலகம் ஆன்டிபயாடிக் மருந்துகளின் அதிகப்படியான பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் அதே வேளையில், ஏழை நாடுகளில் அதற்கு எதிர்மறையான நிலை காணப்படுகிறது. சிகிச்சையளிக்கக்கூடிய தொற்றுநோயாக இருந்தாலும், உரிய மருந்துகள் கிடைக்காததால், அவை மக்களின் உயிரை பறிக்கின்றன.

"பல ஆண்டுகளாக, ஆன்டிபயாடிக் மருந்துகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதாகவே பேசப்பட்டு வருகிறது. ஆனால் நிதர்சனத்தில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில், நோயாளிகளுக்குத் தேவையான ஆன்டிபயாடிக் மருந்துகள் கிடைக்கவில்லை," என்று GARDP இன் குளோபல் அக்சஸ் இயக்குநரும் ஆய்வின் மூத்த ஆசிரியருமான டாக்டர் ஜெனிஃபர் கோன் கூறுகிறார்.

இந்த ஆய்வில், கார்பபெனெம்-எதிர்ப்பு பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படும் 8 நரம்பு வழி மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன. கொலிஸ்டின் உள்ளிட்ட பழைய நுண்ணுயிர் எதிர்ப்பிகள் முதல் செஃப்டாசிடைம்-அவிபாக்டம் போன்ற புதிய மருந்துகளும் ஆய்வு செய்யப்பட்டன. கிடைக்கக்கூடிய சில மருந்துகளில், டைஜெசைக்ளின் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.

கிராம் நெகட்டிவ் பாக்டீரியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மருத்துவமனை ஐசியுக்கள் போன்ற இடங்களில் கிராம் நெகட்டிவ் பாக்டீரியா வேகமாகப் பரவுகிறது.

பலவீனமான சுகாதார அமைப்புகள் மற்றும் பயனுள்ள ஆன்டிபயாடிக் மருந்துகள் போதுமான அளவு கிடைக்காததே சிகிச்சைகளில் ஏற்படும் இடைவெளிக்குக் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உதாரணமாக, 8 நாடுகளில் 15 லட்சம் நோயாளிகளுக்கு டைஜெசைக்ளின் தேவைப்பட்ட நிலையில், 103,647 பேருக்கு மட்டுமே முழு சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் கிடைத்தது என்பது கவலையளிப்பதாக ஆய்வு கண்டறிந்துள்ளது. இது, தொற்றுக்களை குணப்படுத்தும் ஆன்டிபயாடிக்குகளின் உலகளாவிய தேவைக்கும் விநியோகத்துக்கும் இருக்கும் இடைவெளியை காட்டுகிறது.

இந்தியாவில், மருந்து கொடுத்தால் குணமாகக்கூடிய தொற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களுக்குத் தேவையான ஆன்டிபயாடிக் கிடைக்காமல் போவதற்கு காரணம் என்ன?

இதற்கு மருத்துவர்கள் பல தடைகளை சுட்டிக்காட்டுகின்றனர், சரியான சிகிச்சையைப் பெறுவது, துல்லியமான நோயறிதல் சோதனைகளை மேற்கொள்வது மற்றும் பயனுள்ள மருந்துகள் கிடைப்பது என பல காரணங்கள் உள்ளன. மருந்துகளின் விலையும் ஒரு பெரிய தடையாக உள்ளது, ஏனெனில் இந்த ஆன்டிபயாடிக்குகளில் பல. ஏழை நோயாளிகள் வாங்க முடியாத அளவு அதிக விலையுள்ளவையாக இருக்கின்றன.

"இந்த நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகளை வாங்கக்கூடியவர்கள் பெரும்பாலும் அவற்றை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்; வாங்க முடியாதவர்களுக்கு போதுமான அளவில்கூட வாங்க முடிவதில்லை" என்று டாக்டர் கஃபூர் கூறுகிறார். "ஏழைகளுக்கு இந்த மருந்துகள் கிடைப்பதை உறுதிசெய்து, வசதி படைத்தவர்கள் இவற்றை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் ஒரு அமைப்பு நமக்குத் தேவை" என்று அவர் கூறுகிறார்.

ஆன்டிபயாடிக்குகளை பயன்படுத்தும் அளவில், இந்த மருந்துகளின் விலை மலிவாக்கப்பட வேண்டும். மேலும், தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, வலுவான ஒழுங்குமுறை முக்கியமானது.

"மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படும் ஒவ்வொரு ஆன்டிபயாடிக் மருந்துச் சீட்டிலும், ஒரு தொற்று நிபுணர் அல்லது நுண்ணுயிரியலாளரின் ஒப்புதலும் இரண்டாவதாக இருக்க வேண்டும்" என்று டாக்டர் கஃபூர் கூறுகிறார். "சில மருத்துவமனைகள் இரண்டாவது ஒப்புதல் நடைமுறையை பின்பற்றுகின்றன, ஆனால் பெரும்பாலானவை அவ்வாறு செய்வதில்லை. சரியான மேற்பார்வையுடன், இது நிலையான நடைமுறையாக மாறுவதை கட்டுப்பாட்டாளர்கள் தான் உறுதிசெய்ய முடியும்."

ஆன்டிபயாடிக் மருந்துகள் கிடைப்பதில் உள்ள சிக்கலைச் சரிசெய்யவும், மருந்துகள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், சிறந்த கொள்கைகள் மற்றும் வலுவான பாதுகாப்புகள் இரண்டும் அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் மருந்துக்கான அணுகல் மட்டுமே நெருக்கடியைத் தீர்க்காது. புதிய நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கண்டுபிடிக்கப்படுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், ஆன்டிபயாடிக் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், தற்போதுள்ள மருந்துகளே குறைவாக கிடைப்பது என பல உலகளாவிய பிரச்னைகள் உள்ளன.

இந்தியா உலகின் மிகப்பெரிய ஆன்டிமைக்ரோபியல் எதிர்ப்பு (AMR) பிரச்னைகளை எதிர்கொள்கிறது. ஆனால் உள்நாட்டிலும் உலக அளவிலும் அதை எதிர்த்துப் போராடுவதற்கான திறவுகோலும் அதனிடம் இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

"புதிய ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கான மிகப்பெரிய சந்தைகளில் இந்தியாவும் ஒன்றாகும், மேலும் புதிய ஆன்டிபயாடிக் மருந்துகளின் வளர்ச்சி மற்றும் அணுகலை இந்தியா வெற்றிகரமாக ஆதரிக்க முடியும்" என்று டாக்டர் கோன் கூறுகிறார். வலுவான மருந்துத் தளத்துடன், புதிய ஆன்டிபயாடிக் மருந்துகளை உருவாக்குவது முதல் மேம்பட்ட நோயறிதல் வரை AMR கண்டுபிடிப்புகளுக்கான மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது.

உள்ளூர் தரவுகளை உருவாக்குவதன் மூலம், தேவைகளை சிறப்பாக மதிப்பிடுவதற்கும், மருந்து விநியோகப் பாதையில் உள்ள இடைவெளிகளைக் கண்டறிவதற்கும் இந்தியா தனது ஆன்டிபயாடிக் ஆராய்ச்சியை வலுப்படுத்த முடியும் என்று டாக்டர் கோன் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

இது சரியான மருந்துகளுக்கான அணுகலை மேம்படுத்துவதற்கு அதிக இலக்குகள் கொண்ட தலையீடுகளை அனுமதிக்கும் என்றும் அவர் கருதுகிறார்.

கார்பபெனெம்-எதிர்ப்பு பாக்டீரியா

பட மூலாதாரம்,UNIVERSAL IMAGES GROUP VIA GETTY IMAGES

படக்குறிப்பு,கார்பபெனெம்-எதிர்ப்பு பாக்டீரியாவின் எலக்ட்ரான் நுண் வரைபடம்

புதுமையான மாதிரிகள் ஏற்கெனவே உருவாகி வருகின்றன. உதாரணமாக, கேரள மாநிலம், கடுமையான தொற்றுநோய்களை நிர்வகிப்பதில் கீழ்மட்ட வசதிகளை ஆதரிக்கும் வகையில், "ஹப்-அண்ட்-ஸ்போக் அணுகுமுறையை" பயன்படுத்துகிறது. புற்றுநோய் மருந்து திட்டங்களில் காணப்படுவது போல், மருத்துவமனைகள் அல்லது மாநிலங்களில் ஒருங்கிணைந்த அல்லது தொகுக்கப்பட்ட கொள்முதல் திட்டம் மூலம், புதிய ஆன்டிபயாடிக் விலையையும் குறைக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சரியான ஆன்டிபயாடிக் மருந்துகள் கிடைக்காவிட்டால், நவீன மருத்துவம் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். மருத்துவர்கள் பாதுகாப்பாக அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் போவது, புற்றுநோய் நோயாளிகளின் சிக்கல்களுக்கு சிகிச்சையளிப்பதில் சிக்கல் அல்லது அன்றாட தொற்றுகளை நிர்வகிக்கும் திறனை இழப்பது என பல அபாயங்களை மருத்துவம் எதிர்கொள்ளலாம்.

"ஒரு தொற்று நோய் மருத்துவராக, ஆன்டிபயாடிக்கின் பொருத்தமான பயன்பாட்டை, அதன் அணுகலின் ஒரு பகுதியாக பார்க்கிறேன் என்றாலும், அதை ஒரு பகுதியாக மட்டுமே நான் பார்க்கிறேன்," என்று டாக்டர் கஃபூர் கூறுகிறார். "புதிய ஆன்டிபயாடிக் மருந்துகள் வந்தால், அவற்றை சேமிப்பதும் முக்கியமானது, அதாவது உரிய நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக அவற்றைச் சேமிப்பது முக்கியம்."

தற்போது நம் முன்னிருக்கும் தெளிவான சவால் என்னவென்றால், ஆன்டிபயாடிக் மருந்துகளை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவது மட்டுமல்ல, அவை உண்மையிலுமே அவசியமாக தேவைப்படுபவர்களை சென்றடைவதை உறுதி செய்வதும் தான்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn9je4x5859o

பிரான்ஸில் வன்முறை ; 2 பேர் பலி ; 192 பேர் காயம்

1 week 1 day ago

Published By: DIGITAL DESK 3

02 JUN, 2025 | 10:51 AM

image

பிரான்ஸில் பாரீஸ் செயின்ட்-ஜேர்மைன் (பி.எஸ்.ஜி.)  சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தின் பின்னர் இடம்பெற்ற வன்றை சம்பவத்தால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு, 192 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜேர்மனியின் முனிச் நகரில், பாரீஸ் செயின்ட்-ஜேர்மைன் (பி.எஸ்.ஜி.) மற்றும் இன்டர் மிலன் அணிகளுக்கு இடையே சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதி போட்டி நடந்தது. இந்த போட்டியில், பி.எஸ்.ஜி. அணி 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை இல்லாத வகையில் இது மிக பெரிய வெற்றியாகும்.

இதனை தொடர்ந்து, பிரான்ஸின் பாரீஸ் நகரின் வீதிகளில் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது திடீரென வன்முறை பரவியது. அப்போது டாக்ஸ் நகரில், 17 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொல்லப்பட்டு உள்ளான் என தேசிய பொலிஸ் படை தெரிவித்தது. இதேபோன்று பாரீஸ் நகரில் நடந்த கொண்டாட்டத்தின்போது, கார் ஒன்று ஸ்கூட்டர் மீது மோதியது.

இதில், ஸ்கூட்டரில் வந்த நபர் பலியானார். 20 வயதுடைய அந்த நபர், வன்முறையால் பலியானாரா? என்பது உறுதி செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இதனால் வன்முறைக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த, பாரீஸ் நகர் முழுவதும் 5,400 பொலிஸார் குவிக்கப்பட்டனர். பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

இதனால் ஏற்பட்ட வன்முறையில், 192 பேர் காயம் அடைந்தனர். 264 வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. 692 தீ வைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. 560 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த மோதலில் சிக்கிய பொலிஸார் ஒருவர் சுயநினைவற்ற நிலைக்கு சென்று விட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இங்கிலாந்து நாட்டில் கால்பந்து பிரீமியர் லீக் போட்டியில் சமீபத்தில் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து வெற்றி கொண்டாட்டத்திற்காக லிவர்பூல் நகரத்தின் பல்வேறு வீதிகளில் இலட்சக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

அவர்கள் பேரணியாக திரண்டு சென்றனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கார் ஒன்று மக்கள் கூட்டத்திற்குள் திடீரென புகுந்தது. இதில், 4 குழந்தைகள் உட்பட 70 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில், பாரீஸ் நகரில் நடந்த கால்பந்து வெற்றி கொண்டாட்டத்தில் வன்முறை பரவியதில் 2 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

https://www.virakesari.lk/article/216311

பிரான்ஸில் கருணைக் கொலை மசோதா; நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

1 week 2 days ago

பிரான்ஸில் கருணைக் கொலை மசோதா; நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

உடல் நலக்குறைவோடு நீண்டநாட்கள் வாழ விருப்பம் இல்லாதவர்கள் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்ளும் வகையில் மரணத்தை விரும்பி தேர்வு செய்தவற்கு வழி வகுக்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் முழுவதும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து பிரான்ஸ் நாட்டில் கீழவையில் நேற்று, குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்டோர் மரணத்தை விளைவிக்கும் மருந்தை எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கும் மசோதா அதாவது கருணைக் கொலையை அனுமதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஐரோப்பாவில் இதர நாடுகள் இது போன்ற சட்டத்தை இன்னும் நிறைவேற்றாத நிலையில் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் இந்த முக்கியமான மசோதா ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து எம்பிக்களின் பலத்த கரவொலிக்கு இடையே பேசிய பிரான்ஸ் நாடாளுமன்ற துணை தலைவர் ஆலிவர் ஃபலோர்னி, “கடந்த ஒரு தசாப்தமாக குணப்படுத்த முடியாத நிலையில் நோயுற்று இருப்போர், அவரது உறவினர்களை சந்தித்திருக்கின்றேன். பலர் நீண்ட நாட்கள் வாழவில்லை. அவர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றோம் என்று என்னிடம் எப்போதுமே சொல்லி இருக்கின்றனர்” என்றார்.

இந்த மசோதாவின் படி, மரணத்துக்கு உதவக் கூடிய மருந்து என்று வகைப்படுத்தபட்ட மருந்தை, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பொதுமக்கள் தங்களுக்கு தாங்களே எடுத்துக் கொள்வதை அனுமதிக்கிறது. நோயுற்றோர் தனியாக இதனை போட்டுக்கொள்ள முடியாத நிலையில் இருந்தால், அத்தகையோருக்கு ஒரு மருத்துவர் அல்லது செவிலியர் மரணத்துக்கான மருந்தைக் கொடுக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 305 வாக்குகளும், எதிராக 199 வாக்குகளும் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து இந்த மசோதா செனட் அவைக்கும் அனுப்பப்படும். அங்கு கன்சர்வேட்டிவ் கட்சியினர் பெரும்பான்மையாக இருப்பதால் இதில் சட்டத்திருத்தம் கோரப்படும் என்ற தெரிகிறது. எனினும், செனட்டை விடவும் தேசிய அவையே பிரான்ஸ்சில் அதிகாரம் மிக்கதாகும்.

மசோதாவில் உள்ள நிபந்தனைகள்

  • குணப்படுத்த முடியாத நோயால் அவதிப்படும் நபர் 18 வயதுக்கும் மேற்பட்டவராக இருக்க வேண்டும்.

  • பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவராக பிரான்சில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

  • நோயாளி உண்மையிலேயே குணப்படுத்த முடியாத நோயால் துன்படுகிறார் என்பதை அறிய நோயாளியை மருத்துவக் குழு பரிசோதிக்கும். அதன் பின்னரே இந்த விருப்பத்தை தேர்ந்தெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ளும் மருந்தை எடுத்துக் கொள்ள முடியும்.

  • தீவிர மனநலன் பாதிப்புக்கு உள்ளான நோயாளிகள், அல்சமீர் போன்ற நரம்புச் சிதைவு கோளாறுகளால் அவதிப்படும் நோயாளிகள் இந்த விருப்பத்தை தேர்வு செய்ய முடியாது.

  • ஒரு நோயாளியை பரிசோதித்து மருத்துவ குழு ஒப்புதல் வழங்கிய பின்னர், எந்த மருந்தை எடுத்துக் கொண்டு அந்த நோயாளி மரணிக்க வேண்டும் என்பதற்கான மருந்தை மருத்துவர் எழுதிக் கொடுப்பார். இதனை வாங்கி வீட்டிலேயோ அல்லது மருத்துவமனைக்கு சென்றோ செலுத்திக் கொண்டு உயிரிழக்கலாம் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

2023 ஆம் ஆண்டு அறிக்கையின்படி பெரும்பாலான பிரான்ஸ் மக்கள், உயிரை மாய்த்துக்கொள்ளும் விருப்பத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு மத தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இது போன்ற சட்டமானது மானுடவியல் வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறி உள்ளனர்.

இது போன்ற சட்டங்கள் ஏற்கனவே சுவிட்சர்லாந்து, அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் அமலுக்கு வந்துள்ளன. இதே போல நெதர்லாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, ஆஸ்திரேலியா, கொலம்பியா, பெல்ஜியம், லக்சம்பர்க் ஆகிய நாடுகள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு கருணைக் கொலை செய்ய அனுமதிக்கும் சட்டத்தை நிறைவேற்றி உள்ளன.

https://thinakkural.lk/article/318600

ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்

1 week 2 days ago

இதுவரை ரஸ்யாவினுள் உக்ரேன் மேற்கொண்ட தாக்குதல்களில் இருந்து வேறுபட்டதும், வீரியம் கூடியதுமான தாக்குதல் ஒன்றை உக்ரேன் நடத்தியுள்ளதாக தெரிகிறது.

இதன் மூலம் மூலோபாய விமானங்கள் என அழைக்கப்படும் நீண்ட தூரம் பறக்க கூடிய, அதிக எடையான வெடிபொருட்களை காவக்கூடிய ரஸ்யாவின் 41 விமானங்கள் குறிவைக்கப்பட்டதாக/அழிக்கப்பட்டதாக உக்ரேன் கூறுகிறது.

BBC News
No image previewUkraine drone attack hits more than 40 Russian bomber pla...
A major operation has been launched by Ukraine using drones to destroy Russian bomber planes, according to the Ukrainian security service.

பார ஊர்திகளின் கூரையில் டிரோன்கள் பதுக்கி வைக்கப்பட்டு - தாக்குதலில் ஈடுபடுத்தபட்டனவாம்.

தாக்குதல் முடிவில் பார ஊர்திகள் தானியங்கியாக அழிந்தனவாம்.

'கிலி' கொடுக்கும் கிம்: தென் கொரியாவுடனான மறைமுக போரில் முந்தும் வட கொரியா

1 week 2 days ago

வட கொரியா - தென் கொரியா, கிம் ஜாங் உன்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ஜீன் மெக்கன்ஸி

  • பதவி, சியோல் பத்திரிகையாளர்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

அடர்த்தியாக இருக்கும் முள்கம்பி வேலிகளாலும், நூற்றுக்கணக்கான பாதுகாப்புப் படையினராலும் வட மற்றும் தென்கொரியாவின் எல்லை பிரிக்கப்பட்டுள்ளது. அந்த எல்லையின் நடுவே ஆங்காங்கே வழக்கத்திற்கு மாறாக பெரிய, பச்சை நிறத்தில் ஒலிபெருக்கிகளும் இடம் பெற்றுள்ளன.

கடந்த மாதம் ஒரு மதிய வேளையில் நான் வட கொரியாவில் நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லையில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிபெருக்கியில் இருந்து புரட்சிகரமான கருத்துகளை உதிர்க்கும் பாடல்கள் இடையிடையே ஒலித்துக் கொண்டிருந்தன.

"நாங்கள் வெளிநாடு சென்றால், அது உத்வேகம் அளிக்கும்," என்று பொருள் தரக் கூடிய பாடல் ஒன்று பெண் ஒருவரின் குரலில் ஒலித்துக் கொண்டிருந்தது. வட கொரியர்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை என்ற அரசு முடிவை சுட்டிக்காட்டும் வகையில் அந்த பாடல் இருந்தது.

வட கொரியாவில் இசைக்கப்படும் ராணுவ பிரசார பாடலின் இசையையும் என்னால் கேட்க முடிந்தது.

வட கொரியாவும் தென் கொரியாவும் இன்னும் போரில் தான் இருக்கின்றன. ஆனால் ஆயுதங்கள் ஏந்தி நடத்தப்படும் போர் அல்ல. அமைதியான முறையில் அங்கே ஒரு மறைமுக போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தென் கொரியா, வட கொரியாவுக்கு தகவல்களை அனுப்ப முயல்கிறது. ஆனால், வெளியில் இருந்து வரும் தகவல் மக்களிடம் சேராத வகையில் வட கொரியத் தலைவர் கிம்-ஜோங்-உன் தடுக்க தீவிரமாக முயற்சித்து வருகிறார்.

உலகிலேயே இணையம் ஊடுருவாத ஒரே ஒரு நாடாக வட கொரியா உள்ளது. தொலைக்காட்சிகள், ரேடியோ நிலையங்கள் மற்றும் செய்தித்தாள்கள் அனைத்தும் அரசாங்கத்தால் நடத்தப்படுகின்றன.

மறைமுக போர்

"கிம் குடும்பம் குறித்து பரவி வரும் செய்திகளை கட்டுப்படுத்தவே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக காரணம் கூறப்படுகிறது. ஆனால் மக்களிடம் அவர்கள் கூறும் பெரும்பாலான தகவல்கள் பொய்யாகவே உள்ளன," என்று கூறுகிறார் மார்டின் வில்லியம்ஸ்.

அவர் வாஷிங்டனை மையமாக கொண்டு செயல்படும் ஸ்டிம்சன் மையத்தில், வட கொரிய தகவல் மற்றும் தொழில்நுட்ப நிபுணராக இருக்கிறார்.

வடகொரியாவில் இத்தகைய பொய்களை மக்களிடம் வெளிச்சமிட்டால், அங்கு ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற எண்ணம் தென் கொரியாவில் உள்ளது.

இதற்காக தென்கொரிய அரசாங்கம் பயன்படுத்தும் கருவிகளில் ஒன்று தான் ஒலிபெருக்கி. ஆனால் இதற்கு பின்னால், மிகவும் மேம்படுத்தப்பட்ட ஒரு இயக்கம் உருவாகியுள்ளது.

தகவல் ஒளிபரப்பும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் லாப நோக்கமற்ற அமைப்புகள் மூலமாக தகவல்கள் வட கொரியாவுக்குள் நள்ளிரவில் அனுப்பப்படுகிறது. இவை குறு மற்றும் நடுத்தர ரேடியோ அலைகள் வழியாக, வட கொரியர்கள் ரகசியமாக கேட்கும் வகையில் செய்திகளாக ஒலிபரப்பப்படுகின்றன.

ஆயிரக்கணக்கான யூ.எஸ்.டி. டிவைஸ்கள், மைக்ரோ எஸ்-டி கார்டுகள் ஒவ்வொரு மாதமும் எல்லையில் கடத்தப்படுகின்றன. தென்கொரிய படங்கள், டிவி நாடகங்கள், பாப் பாடல்கள், செய்திகள் உள்ளிட்ட வெளியுலக தகவல்கள் பலவும் அந்த கருவிகள் மூலம் வட கொரியாவுக்குள் அனுப்பப்படுகின்றன. இவை அனைத்தும் வட கொரியாவின் பிரசாரங்களை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டவை.

இந்த விவகாரத்தில் வடகொரியாவின் கைகள் தற்போது ஓங்கி வருவதால், களத்தில் பணியாற்றும் நபர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த தகவல்களுடன் பிடிபடுபவர்களை கிம் கடுமையாக தண்டிக்கிறார். வருங்காலத்தில் இப்பணியை மேற்கொள்வதும் சிக்கலாகியுள்ளது. இந்த பணிக்கான நிதியை அமெரிக்க அரசாங்கம் வழங்கி வந்தது. தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நிதி அளிப்பை குறைத்துள்ள காரணத்தால் இப்பணி சிக்கலாகியுள்ளது.

அப்படியென்றால், நீண்ட காலமாக தொடரும் தகவல் போரில் இரு தரப்புகளின் நிலை என்ன?

e255f4f0-3ea7-11f0-bace-e1270fc31f5e.jpg

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பி.டி.எஸ். இசைக்குழுவினர்

பாப் பாடல்கள், சினிமா

ஒவ்வொரு மாதமும், தென்கொரியாவில் இயங்கி வரும் யூனிஃபிகேஷன் மீடியா குழு (UMG) என்ற லாப நோக்கமற்ற அமைப்பானது, சமீபத்திய செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை தரம் பிரித்து, வட கொரியாவின் அரசியல் சூழலுக்கு ஏற்ற உள்ளடக்கங்களை தயார் செய்கிறது.

பிறகு அவற்றை முறையே தகவல் பரிமாற்ற கருவிகளில் ஏற்றி, ஆபத்தின் தன்மைக்கு ஏற்ற வகையில் வகைப்படுத்துகிறது. ஆபத்து குறைவான கருவி என்றால், அதில் தென் கொரிய படங்களும், பாப் பாடல்களும் இருக்கும் என்று அர்த்தம். சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில், தென் கொரிய பாடகர் மற்றும் ராப் இசைக்கலைஞர் ஜெனி நடிப்பில் வெளியான "வென் லைஃப் கிவ் யூ டேங்கரின்ஸ்" என்ற வலைத்தொடரையும் இந்த பட்டியலில் இணைத்துள்ளனர்.

அதிக ஆபத்து கொண்ட அல்லது அதிக எச்சரிக்கையுடன் அணுக வேண்டிய கருவிகள் என்று வகைப்படுத்தப்பட்டிருந்தால், அதில் கற்றல் திட்டங்கள் இடம் பெற்றிருக்கும். வட கொரியர்களுக்கு ஜனநாயகம், மனித உரிமைகள் தொடர்பான உள்ளடக்கங்கள் அதில் வழங்கப்படுகின்றன. இது தான் கிம்மிற்கு அதிக அச்சத்தை அளிக்கும் உள்ளடக்கமாக கருதப்படுகிறது.

வகைப்படுத்தப்பட்ட கருவிகள், பிறகு சீன எல்லைக்கு அனுப்பப்படுகின்றன. அங்கே இந்த நிறுவனத்தின் நம்பிக்கைக்குரிய கூட்டாளிகள் மூலமாக, ஆற்றைக் கடந்து, அதிக ஆபத்துகளை தாண்டி வடகொரியாவுக்குள் அவை கொண்டு செல்லப்படுகின்றன.

தென் கொரிய டிவி நாடகங்கள் மிகவும் இயல்பானவை. சராசரி மனிதர்களின் சாதாரண வாழ்க்கையை வெளிப்படுத்தும் ஒன்றாக இருக்கும். அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழும் மக்கள், வேகமாக இயக்கப்படும் கார்கள், உணவகங்களில் பரிமாறப்படும் உணவுகள் என்று இயல்பான காட்சிகளைக் கொண்டவை அவை. ஆனால் இது அவர்களின் சுதந்திரமாக செயல்படுவதைக் காட்டுகிறது. வடகொரியா எவ்வளவு தூரம் பின்தங்கியுள்ளது என்பதையும் வெளிப்படுத்துகிறது.

தென் கொரியா மிகவும் ஏழ்மையான நாடு, அங்கு மக்கள் ஒடுக்கப்படுகின்றனர் என்று கிம் தன் நாட்டு மக்களிடம் உருவாக்கியுள்ள தவறான பிம்பத்தை இந்த படங்களும் நாடகங்களும் கேள்விக்குள்ளாக்குகின்றன.

"இந்த நிகழ்ச்சிகளை பார்த்து கண்ணீர் விட்ட சில மக்கள், முதல்முறையாக அவர்களின் வாழ்க்கை குறித்த சொந்த கனவுகள் பற்றி சிந்தித்ததாக தெரிவித்தனர்," என்று யூனிஃபிகேஷன் மீடியா குழுவின் இயக்குநர் லீ க்வாங்க்-பீக் தெரிவிக்கிறார்.

எத்தனை நபர்களுக்கு இந்த தகவல்கள் சென்று சேர்கின்றன என்பதை கண்டறிவது மிகவும் கடினம். ஆனால் அந்த நாட்டைவிட்டு வெளியேறியவர்களிடம் இருந்து சமீபத்தில் கிடைத்த தகவலின் படி, தென் கொரியாவில் இருந்து அனுப்பும் தகவல்கள் பரவுகின்றன. அதன் தாக்கம் உணரப்படுகிறது என்று தெரிய வந்துள்ளது.

"நாட்டைவிட்டு வெளியேறியவர்கள் மற்றும் அகதிகள், இந்த உள்ளடக்கங்கள் தான் அவர்களை நாட்டு விட்டு வெளியேறுவதற்கு உத்வேகம் அளித்தது என்று கூறுகின்றனர்," என்கிறார் சொகீல் பார்க். அவருடைய 'லிபர்டி இன் நார்த் கொரியா' என்ற அமைப்பு, தென் கொரியாவில் இருந்து கடத்தப்பட்ட தகவல்களை வட கொரிய மக்களுக்கு பரப்பும் பணியில் ஈடுபட்டிருக்கிறது.

எதிர்க்கட்சிகளோ, மாற்றுக் கருத்து கொண்டவர்களோ வட கொரியாவில் இல்லை. அங்கே ஒன்று கூடி போராட்டம் நடத்துவதும் அபாயகரமானது. ஆனால் சிலர் தனிமனித நடவடிக்கைகள் மூலம் எதிர்ப்பை காட்டுவார்கள் என்று நம்புவதாக பார்க் கூறுகிறார்.

வட கொரியா - தென் கொரியா, கிம் ஜாங் உன்

பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு,தென் கொரிய டிவி நாடகங்கள் மிகவும் இயல்பானவை. சராசரி மனிதர்களின் சாதாரண வாழ்க்கையை வெளிப்படும் ஒன்றாக இருக்கும்.

வட கொரியாவில் இருந்து தப்பிப் பிழைத்தல்

24 வயதான காங்க் க்யூரி வட கொரியாவில் வளர்ந்தவர். அவர் அங்கே மீன்பிடி தொழில் செய்து வந்தார். 2023-ஆம் ஆண்டு அவர் தென் கொரியாவுக்கு படகு மூலம் தப்பித்து வந்தார்.

"மிகவும் அழுத்தமாக உணர்ந்தேன். பிறகு ஒரு நாள் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது," என்று கூறும் அவர், வெளிநாடுகளில் எடுக்கப்படும் டிவி நிகழ்ச்சிகள் அந்த முடிவை எடுக்க ஒரு உந்து சக்தியாக இருந்தன என்று கூறுகிறார்.

சியோலில் ஒரு பூங்காவில் அவரை கடந்த மாதம் சந்தித்த போது, சிறு வயதில் அவர் அம்மாவுடன் அமர்ந்து ரேடியோ நிகழ்ச்சிகளை கேட்டு மகிழ்ந்ததை நினைவு கூறுகிறார். 10 வயது இருக்கும் போது கொரிய நாடகங்களை பார்க்கும் வாய்ப்பைப் பெற்றார் க்யூரி. பிற்காலத்தில் பழங்களை ஏற்றி வரும் அட்டைப் பெட்டிகளில் யூ.எஸ்.பி மற்றும் எஸ்.டி. கார்டுகள் கடத்தி வரப்படுவதை அறிந்தார்.

அவர் அதில் இருந்து கிடைத்தவற்றை அதிகமாக பார்க்க நேர்ந்த போது, அவருடைய அரசாங்கம் அவரிடம் பொய் கூறுகிறது என்பதை உணர்ந்தார்.

"அரசாங்கம் எங்களை ஒடுக்குவது என்பது மிகவும் இயல்பானது என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். மற்ற நாட்டினரும் இப்படியான கட்டுப்பாடுகளுடன் தான் வாழ்கின்றனர் என்று நினைத்தேன். ஆனால் வட கொரியாவில் மட்டுமே அந்த நிலை நிலவுகிறது என்பது பின்னர் புரிந்தது," என்று அவர் விளக்கினார்.

அவருக்குத் தெரிந்த அனைவரும் தென்கொரிய நாடகங்களை பார்த்து ரசித்துள்ளனர். அவரும் அவருடைய நண்பர்களும் தங்களிடம் இருக்கும் படங்களை கைமாற்றிக் கொள்வார்கள்.

"நாங்கள் பிரபலமடைந்த நாடகங்கள், நடிகர்கள், அழகாக இருக்கும் பி.டி.எஸ். இசைக்குழுவின் சில உறுப்பினர்கள் பற்றியும் பேசிக் கொள்வோம்."

"தென்கொரியாவின் பொருளாதாரம் எப்படி வளர்ந்துவிட்டது என்பது குறித்தும், வட கொரிய அரசை எங்களால் விமர்சிக்க இயலவில்லை என்பது குறித்தும் நாங்கள் நிறைய பேசியதுண்டு."

இந்த நாடகங்கள் க்யூரி மற்றும் அவரின் நண்பர்கள், பேசுவது நடந்து கொள்வது உட்பட அனைத்திலும் தாக்கம் செலுத்தியுள்ளது.

"வடகொரிய இளைஞர்கள் வேகமாக மாறி வருகின்றனர்."

வட கொரியா - தென் கொரியா, கிம் ஜாங் உன்

படக்குறிப்பு,நாட்டை விட்டு வெளியேறும் உத்வேகத்தை தென் கொரிய படங்கள் மற்றும் நாடகங்கள் அளிக்கின்றன என்று இளைஞர்கள் கருதுகின்றனர்

தண்டனைகள்

இத்தகைய நடவடிக்கையால் தன்னுடைய ஆட்சிக்கு ஆபத்து வரலாம் என்று கிம்-ஜோங் -உன் உணர்ந்திருக்கிறார். அதனால் இத்தகைய போக்குகளுக்கு எதிராக அவர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

கொரோனா பொதுமுடக்கத்தின் போது சீனாவுடனான எல்லைப் பகுதியில் மின்சார வேலி அமைத்து, தகவல் கடத்தப்படுவதை கடினமாக்கினார்.

வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் நிகழ்ச்சிகளை பார்ப்பது மற்றும் பகிர்வது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை அதிகரித்து 2020-ஆம் ஆண்டில் சட்டம் இயற்றினார். இத்தகைய உள்ளடக்கத்தை விநியோகிக்கும் நபர்கள் சிறையில் அடைக்கப்படலாம், அல்லது கொல்லப்படலாம் என்று கூறப்படுகிறது.

இது உடலை சில்லிட வைக்கும் தாக்கத்தை கொண்டுள்ளது. "இந்த படங்கள் பொதுவாக சந்தைகளில் கிடைக்கும். மக்கள் அதனை விற்பனை செய்வார்கள். ஆனால் தற்போது, இத்தகைய உள்ளடக்கங்களை நீங்கள் நம்பும் நபர்களிடம் இருந்தே வாங்குவீர்கள்," என்று கூறுகிறார் லீ.

இந்த சட்டமும், தேடுதல் நடவடிக்கையும் அமலுக்கு வந்த பிறகு க்யூரியும் அவருடைய நண்பர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டனர். "இந்த விவகாரம் குறித்து மேற்கொண்டு நாங்கள் பேசிக் கொள்வதில்லை. நாங்கள் மிகவும் நெருக்கமாக இருந்தாலும் கூட, இது மிகவும் ரகசியமாக இருந்தது," என்று அவர் ஒப்புக்கொண்டார்.

தென் கொரிய உள்ளடக்கங்களுடன் பிடிபட்ட வட கொரிய இளைஞர்கள் கொல்லப்பட்டது குறித்து நன்றாக அறிந்திருப்பதாக கூறுகிறார் அவர்.

சமீபத்தில் கொரிய நாடகங்கள் பார்ப்பது மட்டுமின்றி அது தொடர்புடைய நடவடிக்கைகளையும் கிம் கண்டித்துள்ளார். 2023-ஆம் ஆண்டு தென் கொரிய பேச்சுவழக்கில் இருக்கும் சொற்றொடர்களை பேசுவதையும், அவர்களின் உச்சரிப்பில் பேசுவதையும் குற்றம் என்று அறிவித்தார் கிம்.

தென் கொரிய உள்ளடக்கங்களை பார்ப்பது மற்றும் பகிர்வது தொடர்பாக சோதனை மேற்கொள்ள படைகள் உருவாக்கப்பட்டன. அவர்கள் சாலைகளில் ரோந்து பணிகளை மேற்கொள்வார்கள். இளைஞர்களின் நடவடிக்கைகளை அவர்கள் கண்காணிப்பார்கள். நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன்பு, தென் கொரிய பெண்களைப் போன்று சிகை அலங்காரம் மற்றும் உடைகள் உடுத்தியிருப்பது தொடர்பாக பலமுறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக க்யூரி பிபிசியிடம் தெரிவித்தார்.

தென் கொரிய உள்ளடக்கங்களை பயன்படுத்தவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள இப்படையினர் அவரின் போனை வாங்கி சோதனை நடத்தினார்கள் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

2024-ஆம் ஆண்டு வடகொரிய செல்போன் ஒன்று அந்த நாட்டில் இருந்து டெய்லி என்.கே என்ற செய்தி சேவை நிறுவனத்தால் கடத்தப்பட்டது. இந்த செய்தி நிறுவனம் சியோலைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் யூனிஃபிகேஷன் மீடியா குழுவின் செய்தி சேவைப் பிரிவாகும்.

அந்த போனை சோதனைக்கு உட்படுத்திய போது, தென்கொரிய வார்த்தை ஒன்றை உள்ளீடாக செலுத்தினால் அது திரையில் தோன்றாமல் மறைந்து வட கொரிய வார்த்தை தெரியும் வகையில் போன் வடிவமைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

வடகொரிய மக்களுக்கு போதிக்கும் வகையில் எடுக்கப்படும் முயற்சிகளில் ஸ்மார்ட்போன்கள் ஒன்றாகிவிட்டன என்று வில்லியம்ஸ் கூறுகிறார்.

தகவல் பரிமாற்றத்தை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை வட கொரியா தீவிரமாக மேற்கொண்டு வருவதால் இந்த தகவல் போரில் வட கொரியாவின் ஆதிக்கம் தற்போது அதிகமாகியுள்ளது என்று அவர் நம்புகிறார்.

வட கொரியா - தென் கொரியா, கிம் ஜாங் உன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வட மற்றும் தென்கொரியாவின் எல்லை கம்பி வேலிகளால் பிரிக்கப்பட்டு, ராணுவ வீரர்களின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது

டிரம்ப் ஆட்சியின் தாக்கம்

டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி நிறுத்தப்பட்டது. இதனால் பாதிப்புக்கு ஆளான அமைப்புகளில், வட கொரிய மக்களுக்கு தகவல் பரிமாறும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட அமைப்புகளும் அடங்கும். இரண்டு செய்தி சேவைகளான ரேடியோ ஃப்ரீ ஏசியா மற்றும் வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவுக்கான நிதிகளும் நிறுத்தி வைக்கப்பட்டன.

வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா "தீவிரமாக" இருப்பதாகவும், டிரம்பிற்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருப்பதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டினார். தீவிர பிரசாரம் செய்பவர்களுடன் வரி செலுத்துபவர்களின் தொடர்பு துண்டிக்கப்படுவதை அரசு உறுதி செய்யும் என்று மீண்டும் ஆட்சிக்கு வந்த போது டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

ஆனால் சியோலைச் சேர்ந்த வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஹெர்மன், "வட கொரிய மக்களுக்கு வெளியுலகத்தைக் காண கிடைத்திருக்கும் வெகு சில வாய்ப்புகளில் இதுவும் ஒன்று. தற்போது எந்தவிதமான விளக்கமும் இன்றி இது அமைதியாக்கப்பட்டது," என்று அவர் கூறினார்.

யூனிஃபிகேஷன் மீடியா குழு, தங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த நிதி நிறுத்தப்பட்டிருப்பது நிரந்தர முடிவா என்பதை அறிந்து கொள்ள இன்னும் காத்துக் கொண்டிக்கிறது.

லிபர்டி இன் நார்த் கொரியாவின் பார்க் இது குறித்து பேசும் போது, டொனால்ட் டிரம்ப் 'தற்செயலாக' கிம்மிற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார் என்று கூறுகிறார். இது குறுகிய பார்வை கொண்ட ஒரு நடவடிக்கை என்றும் அவர் விமர்சித்தார்.

வடகொரியாவில் அணு ஆயுதங்களை குவிப்பது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று வாதிடும் அவர், தற்போது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதார தடை, ராஜாங்க மற்றும் ராணுவ அழுத்தம் போன்றவை, அணு ஆயுத குறைப்பை ஊக்குவிக்கவும் தகவல் பரிமாற்றமே சிறந்த கருவி என்பதை நிரூபிக்கவும் தவறிவிட்டது என்று விளக்குகிறார்.

நாங்கள் வட கொரியாவின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை. அதற்கான தீர்வைக் காண விரும்புகிறோம். "அதனை செய்ய நாட்டின் தன்மையை மாற்ற வேண்டும்," என்று கூறுகிறார் அவர்.

"நான் அமெரிக்காவின் ஜெனரலாக இருந்திருந்தால், "இதற்கு ஆகும் விலை என்ன? நம்முடைய வளத்தை இப்படி ஒரு நல்ல காரியத்திற்காக பயன்படுத்தலாம் என கூறியிருப்பேன்."

வட கொரியா - தென் கொரியா, கிம் ஜாங் உன்

பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு,வட கொரிய மக்களுக்கு வெளியுலகத்தைக் காண கிடைத்திருக்கும் வெகு சில வாய்ப்புகளையும் டிரம்பின் நிர்வாகம் மூடிவிட்டது என்று குற்றம்சாட்டுகிறார் ஸ்டீவ் ஹெர்மன்

இனி யார் நிதி அளிப்பார்?

இந்த பணிகளுக்கான நிதியை யார் வழங்குவார் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. இதை ஏன் அமெரிக்கா மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது.

தென்கொரியா இதற்கான நிதியை வழங்கலாம் என்று கூறினாலும், வட கொரிய விவகாரம் அதிகமாக அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவின் தாராளவாத எதிர்க்கட்சி வட கொரியாவுடனான உறவுகளை மேம்படுத்த முயற்சிக்கிறது. இது தகவல் பரிமாற்ற போருக்கான தடையாக பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் இக்கட்சியின் வேட்பாளர், தேர்தலில் வெற்றி பெற்றால் எல்லையில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிபெருக்கிகள் நீக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இருப்பினும் பார்க் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார். "நல்ல விசயம் என்னவென்றால் தற்போது வட கொரிய அரசு, ஏற்கனவே மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்கப்பட்ட தகவல்களை திரும்பப் பெற இயலாது," என்று சுட்டிக்காட்டுகிறார்.

தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருவதால், தகவல்களை பரப்புவது இனி எளிமையாகிவிடும் என்று நம்புகிறார் அவர். "நீண்ட காலத்தை கருத்தில் கொண்டால், இது வட கொரியாவை மாற்றும் ஒரு அம்சமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்."

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/czj41y8ve7no

எவரெஸ்ட் உச்சியில் ஹிலாரி, டென்சிங் எவ்வளவு நேரம் இருந்தனர்? என்ன செய்தனர்?

1 week 2 days ago

எவரெஸ்ட், மலையேற்றம், நேபாள், திபெத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் நோர்கே.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், மைல்ஸ் பர்க்

  • பதவி,

  • 1 ஜூன் 2025, 02:13 GMT

உலகின் மிகவும் சவாலான விஷயங்களுள் ஒன்று, எவரெஸ்ட் மலை உச்சியை ஏறி அடைவது. தற்போது வரை வெகு சிலரே இதனைச் சாதித்துள்ள நிலையில் பலர் இந்த ஆபத்தான மற்றும் சவால் நிறைந்த பயணத்தில் உயிரிழந்தும் உள்ளனர். தற்போது வரை அதிகாரப்பூர்வமாக 330-க்கும் அதிகமானோர் இத்தகைய பயணங்களில் உயிரிழந்துள்ளதாக நேபாள அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

1953-ம் ஆண்டு தான் முதல் முறையாக மனிதர்களால் எவரெஸ்ட் உச்சியை அடைய முடிந்தது. இதனைச் சாதித்தவர்கள் நியூசிலாந்தைச் சேர்ந்த எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளியரான டென்சிங் நோர்கே.

உலகம் முழுவதும் உள்ள மலையேற்ற வீரர்களுக்கு எவரெஸ்ட் ஏன் சொர்க்கபுரியாக உள்ளது, அங்கு அவ்வாறு என்ன தான் உள்ளது, அதன் உச்சியை முதலில் அடைந்த இருவர் எவ்வாறு அதனைச் சாதித்தனர்?

உலகத்தின் உச்சியை அடைந்தபோது எப்படி இருந்தது?

எவரெஸ்ட், மலையேற்றம், நேபாள், திபெத்

படக்குறிப்பு,எட்மண்ட் ஹிலாரி பிபிசிக்கு அளித்த பேட்டி

எவரெஸ்ட் உச்சியை அடைய எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் நோர்கே உலகின் ஆபத்தான மலைப்பகுதியில் கடினமான பாறைகளை ஏறி, உறைய வைக்கும் பனி மற்றும் ஆக்சிஜன் போதாமை போன்றவற்றை சமாளிக்க வேண்டியிருந்தது. 72 ஆண்டுகள் முன்பு நிகழ்ந்த இந்த சாதனை பற்றி இருவரும் பிபிசியிடம் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

உலகின் உயரமான புள்ளியை அடைந்த போது ஏற்பட்ட உணர்வை விவரித்த ஹிலாரி, "நான் முதலில் நிம்மதியாக உணர்ந்தேன்" என்று 1953-ம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். "நாங்கள் மலை உச்சியை கண்டுபிடித்தோம் என்பதும் அந்த இடத்தை அடைந்தோம் என்பதும் நிம்மதி அளிக்கக் கூடியதாக இருந்தது" என டென்சிங் தனது மொழிபெயர்ப்பாளர் மூலம் தெரிவித்தார்.

கர்னல் ஜான் ஹண்ட் தலைமையிலான குழு இந்தப் பயணத்தை மேற்கொண்டது. "முதலில் பெரு நிம்மதி அடைந்தோம், மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தோம்" எனத் தெரிவித்தார். இருவரும் நிம்மதி அடைந்ததற்கு நியாயமில்லாமல் இல்லை, ஏனெனில் எவரெஸ்ட் உச்சியை அடைவதற்குள் இவர்கள் மலையின் ஆபத்தான பகுதியில் ஏறவே முடியாத 40அடி உயரமுள்ள பாறையை ஏறி கடந்து தான் செல்ல வேண்டும். இந்த இடம் மரணப் பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது.

கடல் மட்டத்தில் இருந்து 8,849மீட்டர் (29,032 அடி) உயரத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரம் நேபாளம் மற்றும் திபெத் எல்லையில் அமைந்துள்ளது. இதற்குப் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. பிரிட்டன், இந்த மலைக்கு 1856-ல் சர்வேயர் ஜார்ஜ் எவரெஸ்டின் பெயரை வைத்தது. நேபாளில் இது சாகர்மாதா என்றும் திபெத்தில் சோமோலுங்மா (பூமாதேவி) என்றும் அழைக்கப்படுகின்றது.

மரணப் பிரதேசத்தில் என்ன நடக்கும்?

எவரெஸ்ட், மலையேற்றம், நேபாள், திபெத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மரணப் பிரதேசம் என்கிற பெயர் எவரெஸ்ட் மலையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு 1952ம் ஆண்டு பயணம் செய்த சுவிட்சர்லாந்து குழுவிற்கு தலைமை தாங்கிய எட்வார்ட் வைஸ்-டுனன்ட்டால் வழங்கப்பட்டது.

மரணப் பிரதேசம் என்கிற பெயர் எவரெஸ்ட் மலையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு 1952ம் ஆண்டு பயணம் செய்த சுவிட்சர்லாந்து குழுவிற்கு தலைமை தாங்கிய எட்வார்ட் வைஸ்-டுனன்ட்டால் வழங்கப்பட்டது. டென்சிங் இந்தக் குழுவிலும் இடம்பெற்றிருந்தார். இந்தப் பெயர் 8000 மீட்டருக்கு (26,000 அடி) மேல் மலையேறுபவர்கள் அடைகின்ற இடத்தைக் குறிக்கின்றது. அங்கு நிலவும் குறைந்த ஆக்சிஜன் சூழ்நிலையானது உடலில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும், உடலில் உள்ள அணுக்கள் சாகத் தொடங்கும். எவரெஸ்ட் மலையில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த மரணப் பிரதேசத்தில் தான் உயிரிழந்துள்ளனர்.

இத்தகைய குளிர்ந்த வெப்பநிலை, பலத்த காற்று மற்றும் குறைவான ஆக்சிஜனில் பிழைப்பதற்கு மனிதர்கள் பழக்கப்படவில்லை. மலையேறுபவர்கள் ஹைபோக்ஸியாவால் பாதிக்கப்படுவார்கள். இதில் முக்கியமான உறுப்புகளுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் உடல் மெல்ல மெல்ல சிதைய ஆரம்பிக்கும். மூளைக்கும் நுரையீரலுக்கும் ஆக்சிஜன் குறைவதால் இதய துடிப்பு அதிகரித்து மாரடைப்பிற்கான ஆபத்துகள் அதிகமாகும். மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனின் அளவு குறைவதால் அது வீங்கி தலைவலியை, குமட்டலை உண்டாக்கும். இதனால் பதற்றம் உருவாவதால் மலையேறுபவர்களின் முடிவெடுக்கும் திறன் மட்டுப்படும். மூளை வீக்கம் அடைவதால் மலையேற்ற வீரர்கள் மயக்க நிலையை உணர்வார்கள். இதனால் இல்லாத நபர்களிடம் பேசுவது, பனியில் தோண்டுவது அல்லது துணிகளைக் கழற்றுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

எவரெஸ்ட் மலையேற்றத்திற்கு எப்படி தயாராகினர்?

எவரெஸ்ட், மலையேற்றம், நேபாள், திபெத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, எவரெஸ்ட் மலையேற்றம்

டென்சிங் மற்றும் ஹிலாரி இந்தப் பயணத்தில் உள்ள மற்றவர்களுடன் இமயமலையில் உள்ள கடினமான சூழ்நிலைகளுக்குப் பழகிக் கொள்ள உயரமான இடங்களில் தொடர்ந்து முகாமிட்டனர். அதன் பின்னர், 1953ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் படிப்படியாக ஏறத் தொடங்கினர். இது அவர்களின் நுரையீரல் திறனை அதிகரிக்கவும் நுரையீரலில் இருந்து உடலின் மற்ற இடங்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்ல உதவும் ரத்தத்தில் உள்ள புரதமான ஹீமோகுளோபினை அதிகமாக உற்பத்தி செய்யவும் அனுமதிக்கிறது. இதன்மூலம் எவரெஸ்ட் உச்சியை நோக்கி செல்ல செல்ல ஏற்படும் ஆக்சிஜன் குறைபாட்டை ஈடு செய்ய முடிகிறது. இவ்வாறு புதிய தட்பவெட்ப நிலைக்குப் பழக்கப்படுவதில் சிக்கல்களும் உள்ளன, ஏனென்றால் கூடுதல் ஹீமோகுளோபின் அளவு என்பது ரத்தத்தை தடிமனாக்கும். இது சுழற்சியை மேலும் கடினமாக்கும், இதனால் மாரடைப்புக்கான சாத்தியங்கள் மற்றும் நுரையீரலுல் திரவங்கள் சேர்வதை அதிகரிக்கிறது.

ஆனால் கடல் மட்டத்தில் இருந்து 6000மீட்டருக்கு (19,700 அடி) அதிகமான உயரத்தில் நிலவும் தட்பவெட்ப நிலைக்கும் 8,790 மீட்டர் (28,839) உயரத்திற்கு மேல் அமைந்திருக்கும் அவர்கள் கடக்க வேண்டிய செங்குத்தான பாறையை கடப்பதற்கும் உடலை பழக்கப்படுத்துவதும் என்பது சாத்தியமற்றது. எனவே அந்த உயரத்தில் நிலவும் தட்பவெட்ப நிலையின் தாக்கங்களை சமாளிப்பதற்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆக்சிஜன் உபகரணங்களை அவர்கள் எடுத்து வந்திருந்தனர். ஆனால் அவர்களை எதிர்நோக்கி இருக்கும் சவால்களை பற்றி அவர்கள் எந்த கற்பனையும் கொண்டிருக்கவில்லை. இதற்கு மூன்று நாட்கள் முன்பு தான் அதே குழுவைச் சேர்ந்த டாம் போர்டில்லன் மற்றும் சார்லஸ் எவன்ஸ் உச்சியை அடைவதற்கு 100 மீட்டர் இருக்கும்போது செயலிழந்த ஆக்சிஜன் உபகரணங்கள் மற்றும் நடுங்க வைக்கும் குளிர்ந்த காற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஏற முடியாமல் திரும்பினர்.

குழு முயற்சி

எவரெஸ்ட், மலையேற்றம், நேபாள், திபெத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டென்சிங் மற்றும் ஹிலாரியின் குழு

29 மே 1953 அன்று டென்சிங் மற்றும் ஹிலாரி குழுவின் இரண்டாவது முயற்சியை தொடங்கினர். பனிக்கு நடுவே மலை முகடுகளைக் கடந்து உச்சியை நோக்கிச் சென்றனர். பனியைக் கடந்து பயணித்தபோது தங்களால் தொடர்ந்து செல்ல முடியுமா என ஹுல்லாரிக்கு சந்தேகங்கள் எழுந்ததாக அவரின் மகன் பீட்டர் 2023-ல் பிபிசி விட்னஸ் ஹிஸ்டரி நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

"எனக்கு நினைவில் இருக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் அந்த சறுக்கலான பனி மற்றும் பாதையைக் கடந்தது பற்றி அவருடைய விவரிப்புகள் தான். அவர் அந்தப் படிகள், பனிப் போர்வை மற்றும் உடைந்துவிழும் பனிக்கட்டிகளைக் கடந்து திபெத்தை நோக்கியுள்ள எவரெஸ்டின் காங்ஷுங் பக்கத்தை நோக்கி (கிழக்கு பக்கம்) சென்றார். அவர் இதைக் கூறியுள்ளார், நான் அவரின் நாட்குறிப்பிலும் பார்த்துள்ளேன். அங்குள்ள சூழ்நிலைகள் மற்றும் தொடர்ந்து செல்வது பாதுகாப்பாக இருக்குமா ஆகியன குறித்து சந்தேகம் வரத் தொடங்கியதாக குறிப்பிட்டுள்ளார்" என்றார் பீட்டர். மேலும், "அவர் இந்தக் கதையை கண்களில் பிரகாசத்துடனும் ஒரு புன்னகையுடனும் சொன்னது எனக்கு நினைவிக்கிறது. தானும் டென்சிங்கும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தபடியே அந்தச் சூழ்நிலைகளையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சென்றோம் எனக் கூறினார்" என்றார்.

ஹிலாரி உடன் சென்ற டென்சிங் இதனை விதி என உணர்ந்தார், "அவருக்கு மலைகள் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. இது அவருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு மலையாகும்" என அவரின் மகன் ஜாம்லிங் நோர்கே 2023-ல் பிபிசி விட்னஸ் ஹிஸ்டரி நிகழ்ச்சியில் தெரிவித்தார். "ஏற்கெனவே 21 வருடங்களில் 6 முறை இந்த மலையை ஏற முயற்சித்திருந்தார். சுவிஸ் அணியுடன் செல்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு உச்சிக்கு 400 மீட்டர் வரைச் சென்று திரும்ப வேண்டியதாயிற்று. அவர் எப்போதுமே அது தான் ஏற வேண்டிய மலை என்றே உணர்ந்தார்" என்றார்.

செங்குத்தான பாறையை கடந்தது எப்படி?

எவரெஸ்ட், மலையேற்றம், நேபாள், திபெத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்த செங்குத்தான பாறை தான் இந்த இரு மலையேறுபவர்களுக்கும் அவர்களின் இலக்குக்கும் இடையே மிகப்பெரிய தடையாக இருந்தது.

இந்த செங்குத்தான பாறை தான் இந்த இரு மலையேறுபவர்களுக்கும் அவர்களின் இலக்குக்கும் இடையே மிகப்பெரிய தடையாக இருந்தது. கை அல்லது கால் பிடிமானத்திற்கு எதுவுமே இல்லாத அதன் மென்மையான மேற்பரப்பு ஏறுவதற்கு சாத்தியமற்றதாகத் தெரிந்தது. டென்சிங் பிடியில் இருந்த கயிற்றை தன் மீது கட்டிக் கொண்டு ஹிலாரி தன்னுடைய உடலை பாறை முகடு மற்றும் அருகில் உள்ள பனி மேட்டிற்கு இடையே உள்ள ஒரு குறுகிய விரிசலான பகுதிக்குச் சென்றார், பனிக்கட்டி உடைந்து செல்லக்கூடாது என வேண்டிக் கொண்டே இருந்தார். அதன் பின்னர் வலியுடனே மெல்ல மேல்நோக்கிச் சென்றார். அவர் மேலே சென்ற பிறகு கயிற்றை கீழே விட அவரைப் பின் தொடர்ந்து டென்சிங்கும் சென்றார். அவர் கடந்து சென்ற பாறை, அவர் நினைவாக பிற்காலத்தில் ஹிலாரி ஸ்டெப் (Hillary step) எனப் பெயரிடப்பட்டது. இது 2015-ம் ஆண்டு நிகழ்ந்த மிக பயங்கரமான நிலநடுக்கத்தால் அழிந்துபோனது.

"கடைசி தருணங்களில் நாங்கள் அந்த மேட்டில் சென்றபோது அதன் உச்சியை காண முடியவில்லை" என 1953-ல் பிபிசியிடம் ஹிலாரி தெரிவித்தார். "அது எங்களிடமிருந்து வலதுபக்கம் விலகிச் சென்றுகொண்டே இருந்தது. நாங்கள் அதைக் கடந்து வடக்கு பக்கம் உச்சி இருப்பதைப் பாரத்ததும் நிம்மதி அடைந்தோம். எங்களுக்கு மேல் 30, 40 அடி தூரத்தில் தான் உச்சி இருந்தது. நாங்கள் உச்சி மீது ஏறி நின்றோம்" என்றார் ஹிலாரி.

உலகத்தின் உச்சியை அடைந்ததும் இரு மலையேற்ற வீரர்களும் உற்சாக மிகுதியில் ஒருவரையொருவர் அரவணைத்துக் கொண்டனர். ஹிலாரி தன்னுடைய கேமராவை எடுத்து புகைப்படம் எடுக்கத் தொடங்கினார். இந்தியா, நேபாளம், ஐ.நா மற்றும் பிரிட்டன் கொடிகள் அடங்கிய கோடாரியை டென்சிங் அசைத்துக் காண்பித்துக் கொண்டிருந்தார். உலகத்தின் உச்சியிலிருந்து தெரிகின்ற காட்சிகளை அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அவர் பனியில் ஒரு குழியை ஏற்படுத்தி சில இனிப்புகள் மற்றும் பிஸ்கட்டுகளை பௌத்த முறை படி புதைத்தார்.

"அங்கு எப்போதும் இருக்கக் கூடியது மாதிரியான பொருள் எங்களிடம் எதுவும் இல்லை" என ஹிலாரி பிபிசியிடம் தெரிவித்திருந்தார். "அங்கு ஒரு கற்குவியலை ஏற்படுத்துவது சாத்தியமற்றதாக இருந்தது. ஏனென்றால் பாறைகள் உச்சியில் இருந்து 30, 40 அடிக்கு கீழ் இருந்தன. டென்சிங் சில உணவுகளை பௌத்த கடவுள்களுக்கு காணிக்கையாக விட்டுச் சென்றார். நாங்கள் நான்கு கொடிகளை உச்சியில் விட்டுச் சென்றோம், ஆனால் அவை நிலைத்திருக்க வாய்ப்பில்லை" என்றார்.

மலையேற்றமும் உயிரிழப்புகளும்

எவரெஸ்ட், மலையேற்றம், நேபாள், திபெத்

படக்குறிப்பு, எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் நோர்கே பேட்டி

இருவரும் 1924-ல் காணாமல் போன மலையேற்ற வீரர்களான ஜார்ஜ் மல்லோரி மற்றும் ஆண்ட்ரூ "சாண்டி" இர்வின் ஆகியோர் பற்றிய தடயங்களைத் தேடினர். மல்லோரி தான் எவரெஸ்ட் மலையை ஏன் ஏற வேண்டும் என பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு "ஏனென்றால் அது அங்கு உள்ளது" என்கிற பிரபலமான பதிலை அளித்திருந்தார். இருவர் தேடியும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. மல்லோரியின் உடல் 1999-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது அவரின் கூட்டாளி இர்வினின் உடலின் சில பகுதிகள் 2024-ல் உருகிய பனிப்பாறையால் வெளிப்பட்டது.

டென்சிங்கும் ஹிலாரியும் 15 நிமிடங்கள் தான் உச்சியில் இருந்தனர். "ஆக்சிஜன் குறைந்து கொண்டே வந்ததால் நாங்கள் திரும்பி கீழே வருவதில் குறியாக இருந்தோம்" என்றார் ஹிலாரி. எவரெஸ்ட் உச்சியை அவர்கள் ஒரு குழுவாகத் தான் அடைந்தார்கள் என்பதால் யார் முதலில் உச்சியால் ஏறினார் என்பதை தெரிவிக்கக்கூடாது என இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஆனால் 1955-ல் வெளியான டைகர் ஆப் தி ஸ்னோஸ் (Tiger of the Snows) என்கிற தனது சுயசரிதையின் மூலம் ஹிலாரி தான் முதலில் ஏறினார் என்பதை வெளிப்படுத்தி யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் டென்சிங்.

அவர்கள் சோர்வுடன், கீழறங்கி முகாமை அடைந்தபோது அந்தக் குழுவைச் சேர்ந்த ஜார்ஜ் லோவிடம் "நாங்கள் அந்த இடத்தை எட்டி விட்டோம்" எனத் தெரிவித்தார் ஹிலாரி. அவர்களின் சாதனை பற்றிய செய்தி ராணி இரண்டாம் எலிசபெத் முடிசூடிய ஜூன் 2-ம் தேதி வரை வெளியுலகத்திற்குத் தெரியவில்லை. எட்மண்ட் மற்றும் கர்னல் ஹண்டுக்கு அரச பதக்கங்கள் வழங்கிய ராணி, டென்சிங்கிற்கு ஜார்ஜ் பதக்கத்தை வழங்கினார். இது அவர்களுக்கு ஒரே மாதிரியான மரியாதை ஏன் வழங்கப்படவில்லை என்கிற சர்ச்சையை உருவாக்கியது.

அடுத்தடுத்த வருடங்களில் அதிக அளவிலான சாகச வீரர்கள் அவர்களின் சாதனையை மீண்டும் செய்ய முயற்சித்துள்ளனர். இந்த மலையேற்றம் நேபாள அரசுக்கு முக்கியமான வருமான ஆதாரமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 800 பேர் உச்சியை அடைய முயற்சித்தாலும் அது ஆபத்தான பயணமாகவே இருந்து வருகிறது. 2024-ல் ஒன்பது பேர் உயிரிழந்தனர் அல்லது காணாமல் போயினர் என்றும் அதற்கு முந்தைய வருடம் 18 உயிரிழந்துள்ளனர் என்றும் நேபாள சுற்றுலாத் துறை தெரிவிக்கிறது. நூற்றாண்டுக்கு முன்பு இந்தத் தரவுகள் எல்லாம் பதிவு செய்யத் தொடங்கியதில் இருந்து சுமார் 330-க்கும் அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்த உறைந்த உடல்கள் பல வருடங்களாக மலையிலே இருந்துள்ளன. ஆனால் புவிவெப்பமடைதலால் பனிப் பாறைகள் மற்றும் போர்வைகள் உருக இந்த உடல்கள் வெளிப்படத் தொடங்கியுள்ளன.

2019-ஆம் ஆண்டு நேபாள அரசு மலையேற்ற வீரர்களின் உடல்களை மீட்கும் முடிவை எடுத்தது. கடந்த ஆண்டு மீட்பாளர்கள் தங்களின் உயிரைப் பணயம் வைத்து மலையின் ஆபத்தான மரணப் பிரதேசத்தில் இருந்து ஐந்து உடல்களை மீட்டு வந்தனர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn0gyz7g9l4o

Miss World 2025 பட்டம் தாய்லாந்து வசமானது

1 week 3 days ago

Miss World 2025 பட்டம் தாய்லாந்து வசமானது

2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓபல் சுசதா சுவாங்ஸ்ரி வென்றுள்ளார்.

72வது உலக அழகி போட்டி இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் சம்மேளன மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்றுது. 

இந்த ஆண்டு, 108 போட்டியாளர்கள் உலக அழகி போட்டியில் பங்கேற்கின்றதுடன், அவர்கள் 4 கண்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் 10 போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை ஓபல் சுசதா சுவாங்ஸ்ரி வென்றுள்ளார்.

Opal_Suchata_Chuangsri_Miss_World_2025__

https://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/Miss-World-2025-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/50-358326

Checked
Wed, 06/11/2025 - 01:54
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe