உலக நடப்பு

மீண்டும் நிலவுக்கு மனிதர்கள்! நாசாவின் வரலாற்றுப் பயணம்!

5 hours 3 minutes ago

மீண்டும் நிலவுக்கு மனிதர்கள்! நாசாவின் வரலாற்றுப் பயணம்!

written by admin February 22, 2026

Gtn2-8.png?fit=900%2C1200&ssl=1

அரை நூற்றாண்டு கால காத்திருப்பு முடிவுக்கு வருகிறது! நாசா (NASA) தனது அதிரடித் திட்டமான ஆர்டெமிஸ் (Artemis) திட்டத்தின் மூலம், நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பத் தயாராகி வருகிறது.

<span class=📍" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> இது நிலவில் தளம் அமைப்பதற்கான முதல் படியாகக் கருதப்படுகிறது. இந்தப் பயணத்தில் முதல் முறையாக ஒரு பெண் விண்வெளி வீரரும், ஒரு கறுப்பின விண்வெளி வீரரும் நிலவைச் சென்றடைய உள்ளனர்.

வெறும் தரையிறங்குவது மட்டுமல்லாமல், செவ்வாய் கிரகப் பயணத்திற்கான ஒரு முன்னோட்டமாகவும் இந்தத் திட்டம் அமையவுள்ளது.

உலகின் சக்திவாய்ந்த SLS (Space Launch System) ரொக்கெட் மற்றும் ஓரியன் (Orion) விண்கலம் இதில் பயன்படுத்தப்படுகின்றன.

பாதுகாப்பு காரணங்கள் மற்றும் தொழில்நுட்ப சோதனைகளைப் பொறுத்து ஏவுதளத் தேதிகளில் மாற்றங்கள் இருக்கலாம். இது விண்வெளி ஆய்வில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகும்! <span class=🚀" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;">

#NASA #Artemis #MoonMission #SpaceNews #ScienceTamil #Astronauts #MoonLanding #SpaceExploration #நாசா #விண்வெளி #நிலவு #ஆர்டெமிஸ்

மீண்டும் நிலவுக்கு மனிதர்கள்! நாசாவின் வரலாற்றுப் பயணம்! - Global Tamil News

ஆசிய நாடுகளில் இணையவழி மோசடி மையங்கள் : ஐ.நா வெளியட்ட அதிர்ச்சி அறிக்கை

9 hours 50 minutes ago

ஆசிய நாடுகளில் இணையவழி மோசடி மையங்கள் : ஐ.நா வெளியட்ட அதிர்ச்சி அறிக்கை

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேகமாகப பரவி வரும் இணையவழி மோசடி மையங்கள் (Cyber-enabled fraud compounds), மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாக அமைந்திருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் எச்சரித்துள்ளது.

கம்போடியா, மியான்மர், லாவோஸ் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இத்தகைய மையங்கள் ஒரு "தன்னிறைவு பெற்ற நகரங்கள்" போலச் செயல்படுவதாகவும், அங்கு சுமார் 3 இலட்சம் பேர் துப்பாக்கி ஏந்திய காவலர்களின் கண்காணிப்பில் கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விளம்பரங்கள்

குறிப்பாக மேகாங் (Mekong) பிராந்தியத்தில் மட்டும் இந்த மோசடித் தொழில் ஆண்டுக்கு சுமார் $43.8 பில்லியன் டொலர் மதிப்பிலான வருவாயை ஈட்டுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

ஆசிய நாடுகளில் இணையவழி மோசடி மையங்கள் : ஐ.நா வெளியட்ட அதிர்ச்சி அறிக்கை | Cyber Fraud Hubs In Southeast Asia Un Report

இங்கு பணிபுரியும் நபர்கள் பெரும்பாலும் அதிக சம்பளம் தரும் வேலைவாய்ப்பு விளம்பரங்கள் மூலம் ஏமாற்றப்பட்டு, ஆள் கடத்தல் முறையில் உள்ளே கொண்டு வரப்படுகின்றனர்.

அங்கு அவர்களின் கடவுச்சீட்டுகள் பறிக்கப்பட்டு, கம்பிவேலிகளால் சூழப்பட்ட வளாகங்களுக்குள் அடைத்து வைக்கப்படுகின்றனர்.

இலக்குகளை எட்டத் தவறுபவர்கள் கடுமையாகத் தாக்கப்படுவதாகவும், மின்சார அதிர்ச்சி, பாலியல் வன்கொடுமை மற்றும் பட்டினி போன்ற சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

குற்றவியல் மாநாட்டை

குறிப்பாக, சமூக ஊடகங்கள் மூலம் நபர்களைக் கண்டறியவும், போலி உரையாடல்களை உருவாக்கவும் தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை இந்தக் குற்றக் கும்பல்கள் பயன்படுத்துவது கவலையளிப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

ஆசிய நாடுகளில் இணையவழி மோசடி மையங்கள் : ஐ.நா வெளியட்ட அதிர்ச்சி அறிக்கை | Cyber Fraud Hubs In Southeast Asia Un Report

இந்த மோசடி மையங்கள் அரசு அதிகாரிகளின் பின்னணியுடன் செயல்படுவதால், சட்ட அமுலாக்கத் துறையினரால் இவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது.

தவிர்க்க மேற்கொள்ளப்படும் பல சோதனைகள் வெறும் "கண் துடைப்பு" நடவடிக்கைகளாகவே முடிந்துவிடுகின்றன.

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் குற்றவியல் மாநாட்டை (UN Crime Congress) முன்னிட்டு, உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து இதற்குப் தீர்வு காண வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களைக் குற்றவாளிகளாகக் கருதாமல் அவர்களை மீட்டெடுத்து மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்றும் இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

https://tamilwin.com/article/cyber-fraud-hubs-in-southeast-asia-un-report-1771740898

வேல்டெக் கலைக் கல்லூரி பட்டமளிப்பு விழா

10 hours 57 minutes ago

ஆவடி வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரியில் 23-ஆவது பட்டமளிப்பு விழா 07/02/2026 அன்று காலை 10.30 மணிக்கு மிகச்சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவைக் கல்லூரியின் நிறுவனத் தலைவர் கர்னல் டாக்டர் வேல் ஸ்ரீ ஆர்.ரங்கராஜன் அவர்கள் தலைமை தாங்கித் துவக்கி வைத்தார்.

கல்லூரி முதல்வர் டாக்டர் ஏ.வி.கே.சாந்தி அவர்கள் வரவேற்புரை நல்கிக் கல்லூரி ஆண்டறிக்கையினை வாசித்தார்.

அவர் பேசும்பொழுது, “கல்லூரி என்பது உலகின் “கல்லூரி என்பது உலகின் முன்னேற்றத்தோடு தனிநபர் வாழ்க்கையை ஒன்றிணைக்கும் மாபெரும் இடமாக இருக்கிறது. அதனை மாணவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

கல்லூரித் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் திருமதி.ரங்கராஜன் மகாலட்சுமி கிஷோர் அவர்கள் மற்றும் வேல்டெக் கல்விக் குழுமத்தின் துணை இயக்குநர் Ms.எஸ்கந்த கிஷோர் வேல் ஆகியோர் முன்னிலை உரையாற்றினார்.

சென்னை டி சி எஸ் நிறுவனத்தின் வணிக அலகு துறையின் பொதுமேலாளர் மற்றும் தலைவர் திரு.தீபக்நாதன் அவர்கள் விழாவில் கலந்து கொண்டு, பட்டமளிப்பு தினச் சிறப்புரை ஆற்றி, பட்டதாரிகளுக்குப் பட்டச் சான்றிதழ்களை வழங்கித் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

அவர் பேசும் பொழுது, “மாணவர்கள், ஸ்மார்ட் ஃபோனைப் போல காலத்திற்கு ஏற்றவாறு தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.“ என்றார்.

இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் 389 பேர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.

கணினியியல் துறை மாணவர்கள் 85 பேர்களுக்கும், கணினிப் பயன்பாட்டியல் துறை மாணவர்கள் 113 மாணவர்களுக்கும், வணிக நிர்வாகவியல் துறை மாணவர்கள் 43 பேர்களுக்கும், வணிகவியல் துறை மாணவர்கள் 132 பேர்களுக்கும் இளங்கலைப் பட்டங்கள் வழங்கப் பெற்றன.

முதுகலை வணிகவியல் துறை மாணவர்கள் 16 பேர்களுக்கு முதுகலைப் பட்டங்கள் வழங்கப்பட்டன.

விழாவில் பட்டம் பெற்ற மாணவர்களின் பெற்றோர்களும் கல்லூரிப் பேராசிரியர்களும் பெருமளவு கலந்து கொண்டனர்.

பேராசிரியர் டாக்டர் S.தீர்த்தமலை அவர்களும் பேராசிரியை டாக்டர் D.ஹேமலதா அவர்களும் பட்டமளிப்பு விழாவினை ஒருங்கிணைப்புச் செய்தனர்.

டிரம்பின் புதிய 10% உலகளாவிய வரி எப்படி செயல்படும்? - 4 கேள்விகள், பதில்கள்

1 day 3 hours ago

டிரம்பின் புதிய 10% உலகளாவிய வரி எப்படி செயல்படும்? - 4 கேள்விகள், பதில்கள்

டிரம்ப்

பட மூலாதாரம்,AFP via Getty Images

படக்குறிப்பு,

கட்டுரை தகவல்

  • கிரேஸ் எலிசா குட்வின்

  • 21 பிப்ரவரி 2026, 13:38 GMT

    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கடந்த ஆண்டு உலகளாவிய வரிகளை விதித்தபோது அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறியதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

IEEPA என அழைக்கப்படும் 1977ஆம் ஆண்டின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தை பயன்படுத்தி, அதிபர் டிரம்ப் வரிகளை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 6 பேர் டிரம்ப் விதித்த வரிகளுக்கு எதிராகவும், 3 பேர் ஆதரவாகவும் தீர்ப்பு வழங்கினர்.

இந்தத் தீர்ப்பு, நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்கு வரிகளால் ஏற்பட்ட 130 பில்லியன் டாலருக்கான பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கியது. ஆனால் நீதிமன்றம் இதில் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதேசமயம் இவை மற்றொரு நீதிமன்றப் போராட்டத்தின் மூலம் முடிவடையும் வாய்ப்பு உள்ளது.

இந்த தீர்ப்பு வெளியான சற்று நேரத்திலேயே அனைத்து நாடுகளின் பொருட்களுக்கு தற்காலிகமாக 10 சதவீத வரியை டிரம்ப் விதித்தார். இந்த வரி பிப்ரவரி 24 முதல் அமலுக்கு வர உள்ளது

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? நீதிமன்றம் விதித்த தடை எதற்கெல்லாம் பொருந்தாது? இதுவரை வசூலிக்கப்பட்ட வரிகள் திருப்பி அளிக்கப்படுமா? என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.

எந்த வரிகள் சட்டவிரோதமானவை?

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, டிரம்ப் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் விதித்த வரிகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்தச் சட்டம் அவசரகாலத்தில் வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தை அதிபருக்கு வழங்குகிறது.

டிரம்ப் முதன்முதலில் பிப்ரவரி 2025-ல் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, சீனா, மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து வரும் பொருட்களுக்கு வரி விதித்தார். இதற்கு அந்த நாடுகளிலிருந்து ஃபெண்டனில் கடத்தலுக்கு எதிரான அவசரநிலை என்று அவர் கூறினார்.

சில மாதங்களுக்குப் பிறகு, டிரம்ப் "விடுதலை நாள்" என்று அழைத்த, ஏப்ரல் 2ம் தேதி தனது வரிகளை விரிவுபடுத்தினார். கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுக்கும் 10 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை வரி விதித்தார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

தனது நடவடிக்கை வர்த்தக பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் என்றும் அமெரிக்காவுக்கான வருவாயை அதிகரிக்கும் என்றும் டிரம்ப் கூறினார்.

ஆனால், புதிய வரிகளை விதிக்கும் அரசமைப்பு அதிகாரம் அதிபருக்கு இல்லை, நாடாளுமன்றத்துக்கே உள்ளது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் நோக்கம் வருவாயை அதிகரிப்பது அல்ல என்றும் நீதிமன்றம் கூறி உள்ளது.

இருப்பினும், கடந்த ஆண்டில் டிரம்ப் விதித்த பல வரிகள், இந்த சட்டத்தின் கீழ் அவர் அறிவித்த அவசரநிலைகளின் ஒரு பகுதியாக இல்லை, எனவே உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பொருட்படுத்தாமல் அவை தொடரலாம்.

அதாவது எஃகு, அலுமினியம் மற்றும் ஆட்டோமொபைல் போன்ற துறைகள் மீதான தொழில்துறை சார்ந்த வரிகள் இதில் அடங்கும், இவற்றை 1962ஆம் ஆண்டு வர்த்தக விரிவாக்க சட்ட பிரிவு 232 இன் கீழ் தேசிய பாதுகாப்பு காரணங்களை கூறி டிரம்ப் விதித்தார்.

டிரம்ப்

பட மூலாதாரம்,AFP via Getty Images

படக்குறிப்பு,

புதிய வரியை எதன் அடிப்படையில் டிரம்ப் விதித்தார்?

உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் கிட்டத்தட்ட அனைத்துப் பொருட்களுக்கும் புதிய 10% வரியை விதிக்க 1974 ஆம் ஆண்டு Trade Act-ன் பிரிவு 122-ஐ டிரம்ப் பயன்படுத்தினார். இது அதிகம் அறியப்படாத பிரிவாகும்.

இந்தப் பிரிவு அதிபருக்கு 150 நாட்களுக்கு 15% வரை வரிகளை விதிக்க அதிகாரம் அளிக்கிறது, அதன் பிறகு நாடாளுமன்றத்தால் அது அங்கீகரிக்கப்பட வேண்டும். அதாவது இந்தத் தீர்வும் தற்காலிகமானது.

அதே நேரம், நாடாளுமன்றத்தை தவிர்ப்பதற்கான வழியை டிரம்ப் கண்டுபிடிக்கும் வாய்ப்பும் உள்ளதாக சிலர் கூறுகின்றனர்.

வலதுசாரி சிந்தனைக்குழுவான கேட்டோ இன்ஸ்ட்டிட்யூட்டின் கூற்றுப்படி, புதிய அவசரநிலையை அறிவித்து மீண்டும் 150 நாட்களுக்கு வரி விதிப்பதை இந்தப் பிரிவு தடுக்கவில்லை.

வெள்ளை மாளிகை கூற்றுப்படி, டிரம்ப் பிரிவு 122 ஐ "அடிப்படை சர்வதேச கொடுப்பனவு சிக்கல்களைத் தீர்க்க" மற்றும் "அமெரிக்க வர்த்தகத்தை மறுசீரமைக்கப் பயன்படுத்துகிறார்" , அதே நேரத்தில் 1974 ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 301 இன் கீழ் அவர் வரிகளை விதிக்க முடியுமா என்பதையும் ஆராய்கிறார் என்றது.

அந்தச் சட்டம், ஜேமிசன் கிரேர் தற்போது வகிக்கும் "அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி" ( USTR ) பதவியின் மூலம், நாடுகளின் வர்த்தக நடைமுறைகளை விசாரிக்க அனுமதிக்கிறது. பின்னர், நடைமுறைகள் பாரபட்சமானதாகவோ அல்லது நியாயமற்றவையாகவோ இருந்தால் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி வரிகளை விதிக்கலாம் என்று சொகிறது.

1962 ஆம் ஆண்டு வர்த்தக விரிவாக்கச் சட்டத்தின் பிரிவு 232 இன் கீழ் நிர்வாகம் தொடர்ந்து வரிகளை விதிக்க முடியும், இதை டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் பெரிதும் பயன்படுத்தினார். இது தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தும் இறக்குமதிகள் மீது வரிகளை விதிக்க நிர்வாகத்தை அனுமதிக்கிறது, ஆனால் விசாரணைக்குப் பிறகுதான் இதனை செய்ய முடியும் என்பதால், இது நேரம் எடுக்கக் கூடியது.

டிரம்ப்

பட மூலாதாரம்,AFP via Getty Images

படக்குறிப்பு,

சட்டவிரோத வரிகள் திரும்பப் கிடைக்குமா?

இந்த வரி அடிப்படையில் அமெரிக்க அரசாங்கம் இதுவரை பில்லியன் கணக்கான டாலர்களை வசூலித்துள்ளதாக பல அறிக்கைகள் கூறுகின்றன. இந்தத் தொகை சுமார் 130 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ் டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை என நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் வசூலித்த தொகையை திருப்பி அளிப்பது குறித்து எதுவும் விளக்கவில்லை.

செய்தியாளர்களிடம் பேசும் போது பணத்தை திருப்பித் தரும் விவகாரம் பல ஆண்டுகால சட்டப்போராட்டத்தில் சிக்க கூடும் என டிரம்ப் கூறி இருந்தார்.

அமெரிக்க கருவூலத்துறை செயலர் ஸ்காட் பெசண்ட் கூறும் போது இந்த விவகாரம் பல ஆண்டுகளுக்கு இழுக்கப்படலாம் என்றார். ஏனெனில், வசூலிக்கப்பட்ட பணத்தை திருப்பி அளிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவும் வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளிக்க வாய்ப்புள்ளது.

அதே நேரம், பணத்தைத் திரும்பச் செலுத்த உத்தரவிடப்பட்டால் அவை பெரும்பாலும் பெரிய நிறுவனங்களுக்கே செல்லும் என நிபுணர்கள் கூறுகின்றனர். சிறிய நிறுவனங்களிடம் இந்த சிக்கலான செயல்முறையை முடிக்க திறன் இல்லை என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

டிரம்ப்

பட மூலாதாரம்,AFP via Getty Images

படக்குறிப்பு,

இப்போது நடைமுறையில் உள்ள வரிகள் என்ன?

பிப்ரவரி 24 ஆம் தேதி மதியம் 12:01 EST மணிக்குத் தொடங்கி, அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் கிட்டத்தட்ட அனைத்துப் பொருட்களுக்கும், அவை எங்கிருந்து வந்தாலும், புதிய வரி 10 சதவீதம் விதிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்ட நாடுகள், இங்கிலாந்து, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட, முன்னர் பேச்சுவார்த்தை நடத்திய வரி விகிதத்திற்குப் பதிலாக, பிரிவு 122 இன் கீழ் உலகளாவிய 10 சதவீத வரியை எதிர்கொள்ள நேரிடும் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

வர்த்தக ஒப்பந்தங்களின் கீழ் அவர்கள் ஒப்புக்கொண்ட சலுகைகளை அந்த நாடுகள் தொடர்ந்து கடைப்பிடிக்கும் என்று டிரம்ப் நிர்வாகம் எதிர்பார்க்கிறது என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

"அமெரிக்க பொருளாதாரத்தின் தேவைகள் காரணமாக" சில பொருட்களுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். இவை முக்கிய வகைகளின் கீழ் வருகின்றன, இதனால் சில முக்கியமான கனிமங்கள், உலோகங்கள், எரிசக்தி பொருட்கள், இயற்கை வளங்கள், உணவுப் பயிர்கள், மருந்துகள், மின்னணுவியல், கார்கள் மற்றும் லாரிகள் மற்றும் விண்வெளிப் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.

மேலும், "புத்தகம் உள்ளிட்ட தகவல் பொருட்கள் , நன்கொடைகள் " ஆகியவற்றுக்கு வரி விதிக்கப்படாது என்று வெள்ளை மாளிகையின் உண்மைத் தகவல் தாளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலக்கு அளிக்கப்பட்ட பல வகைப் பொருட்களுக்கு, இந்தப் பிரகடனம் விரிவானது, ஆனால் எந்தெந்தப் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்படலாம் என்பதை குறிப்பாகக் கூறவில்லை.

மற்றொரு முக்கியமான விலக்கு யூஎஸ்எம்சிஏ-வின் ஒரு பகுதியாக இருக்கும் பொருட்கள் - அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா இடையேயான வர்த்தக ஒப்பந்தம்.

அந்தப் பொருட்களுக்கும் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்ட வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது, மேலும் USMCA விலக்கு காரணமாக உலகின் மிகக் குறைந்த வரி விகிதத்தைக் கொண்ட நாடுகளில் கனடாவும் ஒன்று என்று பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார்.

இதேபோல், கோஸ்டாரிகா, டொமினிகன் குடியரசு, எல் சால்வடார், குவாத்தமாலா, ஹோண்டுராஸ் மற்றும் நிகரகுவா ஆகிய நாடுகளிலிருந்து வரும் ஜவுளி மற்றும் ஆடைகள் டொமினிகன் குடியரசு-மத்திய அமெரிக்கா சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

அதே நேரத்தில், குறைந்த விலை பொருட்களுக்கான வரிகளைத் தொடர்ந்து விதித்து வருவதாக டிரம்ப் கூறினார். கடந்த ஆண்டு, 800 டாலர் அல்லது அதற்கும் குறைவான மதிப்புள்ள பொருட்கள் எந்த வரியும் செலுத்தாமல் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதித்த டி மினிமிஸ் விலக்கு என்று அழைக்கப்பட்டதை அவர் முடிவுக்குக் கொண்டு வந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx24r8ygm0do

சிம்பாப்வே முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயின் இளைய மகன் தென்னாபிரிக்காவில் கைது

2 days 3 hours ago

சிம்பாப்வே முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயின் இளைய மகன் தென்னாபிரிக்காவில் கைது

20 Feb, 2026 | 10:19 AM

image

சிம்பாப்வே நாட்டின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயின் இளைய மகன் பெல்லார்மைன் முகாபே (28), கொலை முயற்சி குற்றச்சாட்டின் பேரில் தென்னாபிரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜொஹன்னஸ்பேர்க் நகரின் உயர்நிலை வசதி பகுதியாகக் கருதப்படும் ஹைட் பார்க் பகுதியில் அமைந்துள்ள ஒரு இல்லத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாக தென்னாபிரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் 23 வயதுடைய ஒருவருக்கு துப்பாக்கிச்சூடு காயம் ஏற்பட்டுள்ளது. அவர் அங்கு தோட்டப்பணியில் ஈடுபட்டிருந்த தோட்டக்காரர் என தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவத்திற்குப் பின்னர் அந்நாட்டுப் பொலிஸார் மேற்கொண்ட சோதனையில், ஹைட் பார்க் இல்லத்திலிருந்து தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. எனினும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் துப்பாக்கி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் மேலும் ஒருவரும் பெல்லார்மைன் முகாபேவுடன் சேர்த்து கைது செய்யப்பட்டுள்ளார். இருவரும் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸார் இதுவரை அதிகாரபூர்வமாக கைது செய்யப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடவில்லை என்றாலும், சம்பவ இடத்தில் சர்வதேச ஊடகங்கள் பெல்லார்மைன் முகாபே கைதுசெய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.

பெல்லார்மைன் முகாபே, சிம்பாப்வே நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபே மற்றும் அவரது இரண்டாவது மனைவி கிரேஸ் முகாபே ஆகியோரின் இளைய மகன் ஆவார். ரொபர்ட் முகாபே, 37 ஆண்டுகள் சிம்பாப்வேவை ஆட்சி செய்த பின்னர் 2017 ஆம் ஆண்டு பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் 2019 ஆம் ஆண்டு 93 வயதில் காலமானார்.

https://www.virakesari.lk/article/239127

உலக நாடுகளுக்கு டிரம்ப் விதித்த வரியை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்

2 days 3 hours ago

உலக நாடுகளுக்கு டிரம்ப் விதித்த வரியை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம் - நேரலை தகவல்

உலக நாடுகளுக்கு டிரம்ப் விதித்த வரியை ரத்து செய்த அமெரிக்க உச்சநீதிமன்றம்

பட மூலாதாரம்,Getty Images

20 பிப்ரவரி 2026, 15:23 GMT

புதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

(இச்செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)

அமெரிக்காவின் உச்சநீதிமன்றம், அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு அமல்படுத்திய உலகளாவிய இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளது.

அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் என கூறி, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கடந்த ஆண்டு டிரம்ப் வரி விதித்தார்.

நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பதிலாக, 1977 ஆம் ஆண்டின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தைப் பயன்படுத்தி டிரம்ப் நிர்வாகம் இந்த வரிகளை விதித்தது.

ஆகஸ்ட் 2025 இல், அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் டிரம்பின் பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று தீர்ப்பளித்தது, ஆனால் அவை அமலில் இருக்க அனுமதிக்கப்பட்டன.

அந்த மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வெள்ளை மாளிகை கோரிக்கை வைத்ததால், விவகாரம் இறுதியில் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது.

நீதிபதிகள் கூறியது என்ன?

பட மூலாதாரம்,Getty Images

நீதிபதிகள் கூறியது என்ன?

அமெரிக்க உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், டிரம்ப் தனது அதிகாரங்களை மீறி தேசிய அவசரநிலைக்காக உருவாக்கப்பட்ட சட்டத்தைப் பயன்படுத்தியதாகக் கூறியது.

சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம் வரிகளை விதிக்க அனுமதிக்கவில்லை என நீதிபதிகள் கூறினர்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 6 பேர் வரி ரத்துக்கு ஆதரவாகவும், 3 பேர் இந்த தீர்ப்புக்கு எதிராகவும் இருந்தனர். ஆனால், பெரும்பான்மை நீதிபதிகளின் ஆதரவு இருந்ததால் வரி ரத்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட வரி

ஏப்ரல் மாதத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் உலகின் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலிருந்தும் வரும் பொருட்களுக்கு வரிகளை அறிவித்தார்.

இந்த வரிகள் மூலம், அரசுக்கு வரும் வரிவசூல் அதிகரிக்கும், அமெரிக்கர்கள் அதிகமாக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவார்கள், அமெரிக்காவில் முதலீடு அதிகரிக்கும் என டிரம்ப் கூறினார்.

ஆனால் விமர்சகர்கள், இதனால் பொருட்களின் விலை உயரக்கூடும் என்றும், உலக பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் கூறினர்.

பிற நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இருக்கும் வர்த்தக பற்றாக்குறையை குறைக்க தான் விரும்புதாக டிரம்ப் கூறினார்.

டிரம்பால்அறிவிக்கப்பட்ட பல வரிகள் பின்னர் திருத்தப்பட்டன அல்லது தாமதப்படுத்தப்பட்டன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cly1zx1nzgjo

ஐக்கிய நாடுகள் சபைக்கு 160 மில்லியன் டொலர்களை செலுத்தியுள்ள அமெரிக்கா!

2 days 7 hours ago

UN.jpg?resize=750%2C375&ssl=1

ஐக்கிய நாடுகள் சபைக்கு 160 மில்லியன் டொலர்களை செலுத்தியுள்ள அமெரிக்கா!

ஐக்கிய நாடுகள் சபைக்கு அமெரிக்கா செலுத்த வேண்டிய சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களில் சுமார் 160 மில்லியன் டொலர்களை செலுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வியாழக்கிழமை (19) தெரிவித்துள்ளது.

மேலும், ட்ரம்ப் நிர்வாகத்தினால் செலுத்தப்பட்டுள்ள பணம் ஐக்கிய நாடுகள் சபையின் வழக்கமான செயல்பாட்டு வரவு செலவுத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று ஐ.நா.வின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் (Stéphane Dujarric) குறிப்பிட்டுள்ளார்.

இதேவ‍ேளை, நிதி நெருக்கடியில் உள்ள உலக அமைப்புக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூடுதல் நிதியை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.

ஐ.நா. பட்ஜெட்டில் அமெரிக்கா மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கிறது.

எனினும், ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் அது வழக்கமான மற்றும் அமைதி காக்கும் பட்ஜெட்டுகளுக்கு பணம் செலுத்த மறுத்துவிட்டது.

மேலும் ஐ.நா. நிறுவனங்களுக்கு அவர்களின் சொந்த பட்ஜெட்டுகளுடன் தன்னார்வ நிதியைக் குறைத்துள்ளது.

2026 பெப்ரவரி தொடக்கத்தில் அமெரிக்கா வழக்கமான ஐ.நா. பட்ஜெட்டுக்கு 2.19 பில்லியன் டொலர்கள் கடன்பட்டுள்ளதாக ஐ.நா. அதிகாரிகள் கூறியுள்ளனர். 

இது உலகளவில் நாடுகள் செலுத்த வேண்டிய மொத்தக் கடனில் 95% க்கும் அதிகமாகும். 

தற்போதைய மற்றும் கடந்த கால அமைதி காக்கும் பணிகளுக்காக அமெரிக்கா மேலும் 2.4 பில்லியன் டொலர்களையும், ஐ.நா. அமைப்பின் கீழ் இயங்கும் சர்வதேச நீதிமன்றங்களுக்கு 43.6 மில்லியன் டொலர்களும் கடன்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

https://athavannews.com/2026/1465622

பிரித்தானியாவின் அதிரடிச் சட்டம்: அனுமதியின்றி பகிரப்படும் படங்களை 48 மணிநேரத்திற்குள் நீக்க உத்தரவு!

2 days 8 hours ago

பிரித்தானியாவின் அதிரடிச் சட்டம்: அனுமதியின்றி பகிரப்படும் படங்களை 48 மணிநேரத்திற்குள் நீக்க உத்தரவு!

Published By: Digital Desk 3

20 Feb, 2026 | 12:27 PM

image

இணையதளங்களில் பெண்களின் அந்தரங்கப் படங்களை அவர்களின் அனுமதியின்றிப் பகிர்வதை தடுக்கும் வகையில், சமூக ஊடக நிறுவனங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளை பிரித்தானிய அரசாங்கம் விதித்துள்ளது.

பிரித்தானியப் பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசாங்கம், 'குற்றவியல் மற்றும் பொலிஸ் சட்டமூலத்தில்' கொண்டு வந்துள்ள புதிய திருத்தத்தின்படி,

பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு அளித்தால், அந்தப் படத்தை அனைத்துத் தளங்களிலிருந்தும் 48 மணித்தியாலங்களுக்குள் தொழில்நுட்ப நிறுவனங்கள் அகற்ற வேண்டும்.

பாதிக்கப்பட்டவர் ஒவ்வொரு சமூக ஊடகத்தையும் தனித்தனியாகத் தொடர்பு கொள்ளத் தேவையில்லை. ஒருமுறை தளத்தில் முறைப்பாடளித்தால், ஏனைய அனைத்துத் தளங்களிலிருந்தும் அந்தப் படம் நீக்கப்படுவதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

ஒரு முறை நீக்கப்பட்ட படம், மீண்டும் அதே தளத்திலோ அல்லது வேறு தளங்களிலோ பதிவேற்றப்படுவதைத் தொழில்நுட்ப ரீதியாகத் தடுக்க வேண்டும்.

இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு அவர்களின் உலகளாவிய மொத்த வருமானத்தில் 10 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், விதிகளை மதிக்காத இணையதளங்களை பிரித்தானியாவில் முழுமையாக முடக்குவதற்கும் இச்சட்டம் வழிவகை செய்கிறது.

பிபிசி செய்திச் சேவையில் பேசிய பிரதமர் ஸ்டார்மர்,

"பயங்கரவாதம் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான காணொளிகளை நீக்குவதற்குத் தொழில்நுட்ப நிறுவனங்கள் காட்டும் அதே வேகத்தை, பெண்களின் அந்தரங்கப் படங்களை நீக்குவதிலும் காட்ட வேண்டும். இது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி. இதனைத் தடுக்க நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டில் அந்தரங்கப் படங்கள் தொடர்பான முறைப்பாடுகள் 20.9 சதவீதம் அதிகரித்துள்ளதாக கடந்த மே மாதம் வெளியான பாராளுமன்ற அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இம் மாத ஆரம்பத்தில் அனுமதியின்றி உருவாக்கப்பட்ட 'டீப்ஃபேக்' படங்களைப் பகிர்வது சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய சட்டமானது குறிப்பாக பெண்கள், சிறுமிகள் மற்றும் எல்ஜிபிடி சமூகத்தினரைப் பாதுகாப்பதில் ஒரு மைல்கல்லாக அமையும் எனப் பெண் உரிமை அமைப்புகள் வரவேற்றுள்ளன.

https://www.virakesari.lk/article/239141

ஏலியன்கள் பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிடுமாறு ட்ரம்ப் அதிரடி உத்தரவு

2 days 13 hours ago

ஏலியன்கள் பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிடுமாறு ட்ரம்ப் அதிரடி உத்தரவு

20 Feb, 2026 | 11:26 AM

image

ஏலியன்கள் என்கிற வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான தகவல்கள், பறக்கும் தட்டுக்கள் முதலான அடையாளம் காணப்படாத பறக்கும் வான்வெளிப் பொருட்கள் (unidentified flying objects - UFOs), அடையாளம் காணப்படாத வான்வெளி நிகழ்வுகள் (Unidentified aerial phenomena - UAP) பற்றிய ரகசிய ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுமாறு உரிய துறையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை (19) இந்த உத்தரவைப் பிறப்பித்த ட்ரம்ப், வேற்றுக்கிரகவாசிகளின் வாழ்க்கை, அடையாளம் காணப்படாத வான்வழி நிகழ்வுகள், பொருட்களைப பற்றிய சிக்கலான, ஆனால் மிகவும் சுவாரஸ்யமான தகவல்களை பொதுமக்கள் அறிய வெளியிடுமாறு உரிய அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

ட்ரம்ப் இவ்வாறு உத்தரவிட்ட பின்னர், வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட், ட்ரம்பின் அறிவிப்பை, “இந்த உலகத்துக்கு அப்பாற்பட்ட செய்திகள்” என எக்ஸ் தளத்தில் விபரித்துள்ளார்.

நீண்ட காலமாகவே அமெரிக்க பாதுகாப்புத்துறையும் நாசாவும் சேகரித்ததாக கூறப்படும் அடையாளம் தெரியாத வான்வெளிப் பொருட்கள் மற்றும் ஏலியன்கள் பற்றிய தகவல்களை ரகசியமாக வைத்திருப்பதாக சர்வதேச அளவில் பல்வேறு கருத்துக்கள் கிளம்பியிருந்தன.

இந்நிலையில், சமீபத்தில் இது தொடர்பாக பேசிய ட்ரம்ப், “ஏலியன்கள் இருப்பது உண்மைதான்” என்று முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியிருந்ததை சுட்டிக்காட்டி, “ஒபாமா பெரிய தவறிழைத்துவிட்டார்” என்றும் விமர்சித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்தே, தற்போது, ட்ரம்ப், மனித அனுபவங்களுக்கு அப்பாற்பட்ட வான்வெளி பொருட்கள், ஏலியன்கள் பற்றி இதுவரை சேகரித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/239136

காபோன் நாட்டில் முகநூல், டிக்டொக் ஆகிய சமூக வலைத்தளங்களுக்கு தடை

2 days 13 hours ago

காபோனில் முகநூல், டிக்டொக் ஆகிய சமூக வலைத்தளங்களுக்கு தடை

20 Feb, 2026 | 10:14 AM

image

மத்திய ஆபிரிக்க நாடான காபோனில் , சமூக ஒற்றுமையைக் சீர்குலைக்கும் வகையிலும் மோதல்களைத் தூண்டும் வகையிலும் தவறான செய்திகளை வெளியிடுவதாகக் கூறி, முகநூல் மற்றும் டிக்டொக் ஆகிய சமூக வலைத்தளங்கள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்நாட்டின் ஊடக ஒழுங்குமுறை ஆணையமான தகவல்தொடர்புக்கான உயர் அதிகாரசபை இந்தத் தடையை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காபோனில் ஜனாதிபதி பிரைஸ் ஒலிகுய் என்கியூமா பதவியேற்று ஓராண்டு நிறைவடைவதற்குள், அங்கு கடும் சமூக அமைதியின்மை நிலவி வருகிறது.

கடந்த டிசம்பர் மாதம் முதல் சம்பளம் மற்றும் பணிச்சூழல் கோரி ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த எதிர்ப்புப் போராட்டங்கள் தற்போது சுகாதாரத் துறை, உயர்கல்வி மற்றும் ஒளிபரப்புத் துறை உள்ளிட்ட ஏனைய அரச துறைகளுக்கும் பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், சமூக ஊடகங்கள் ஊடாக தேவையற்ற வதந்திகள் உருவாக்கப்படுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/239124

பிரித்தானியாவின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் கைது

3 days 3 hours ago

பிரித்தானியாவின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் கைது

Published By: Digital Desk 3

19 Feb, 2026 | 04:36 PM

image

அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் பிரித்தானிய மன்னர் சால்ள்ஸின் சகோதரரான முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட் பேட்டன் வின்ட்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று வியாழக்கிழமை (19) தனது 66-வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், இந்த அதிரடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நோர்போக் பகுதியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என தேம்ஸ் வேலி பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வமாக பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும், அது முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ தான் என்பதை சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, பெர்க்சையர் மற்றும் நோர்போக் பகுதிகளில் உள்ள அவரது இல்லங்களில் பொலிஸார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்றையதினம் காலை நோர்போக்கில் உள்ள 'சாண்ட்ரிங்ஹாம்' எஸ்டேட்டிற்கு பொலிஸ் வாகனங்கள் வருகை தந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கொண்டிருந்த தொடர்புகள் குறித்து நீண்டகாலமாக விசாரணைகள் நடந்து வந்தன.

2010 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் வர்த்தகத் தூதராக ஆண்ட்ரூ பணியாற்றியபோது, அரசாங்கத்தின் மிக ரகசியமான வர்த்தகத் தகவல்களை எப்ஸ்டீனுடன் பகிர்ந்து கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அண்மையில் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட 'எப்ஸ்டீன் ஆவணங்கள்' மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே தற்போது இந்த விசாரணை தீவிரமடைந்துள்ளது.

கடந்த ஆண்டு மன்னர் சார்ள்ஸ் தனது சகோதரர் ஆண்ட்ரூவிடமிருந்து 'இளவரசர்' மற்றும் 'டியூக் ஆஃப் யார்க்' ஆகிய கௌரவப் பட்டங்களை உத்தியோகபூர்வமாக பறித்தார். இதனால் அவர் தற்போது ஒரு சாதாரண குடிமகனாகவே சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்படுகிறார்.

தனது தரப்பு நியாயமாக, ஆண்ட்ரூ அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து மறுத்து வருகிறார். தற்போது அவர் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற விபரம் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை.

https://www.virakesari.lk/article/239064

நைஜீரியாவில் சுரங்கத்தில் நச்சு வாயு கசிந்து 37 தொழிலாளர்கள் பலி!

3 days 12 hours ago

நைஜீரியாவில் சுரங்கத்தில் நச்சு வாயு கசிந்து 37 தொழிலாளர்கள் பலி!

Published By: Digital Desk 1

19 Feb, 2026 | 12:26 PM

image

நைஜீரியாவின் மத்திய பகுதியின், பிளாட்டோ மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு சுரங்கத்தில், கார்பன் மோனாக்சைடு நச்சு வாயுவை சுவாசித்த சுமார் 37 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைவிடப்பட்ட நிலையில் இருந்த ஒரு ஈய சுரங்கத்திற்குள் அங்குள்ள சுரங்கத் தொழிலாளர்கள்; கனிமங்களை எடுக்கச் சென்றபோது இந்த சம்பவம் நேர்ந்துள்ளது. அங்கு தேங்கியிருந்த கனிமங்களிலிருந்து வெளியேறிய கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்ததால் அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த 37 பேர் தவிர, சுமார் 25ற்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 20 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து, நைஜீரியாவின் சுரங்கத்துறை அமைச்சர் டெலே அலகே, இந்தச் சம்பவம் நடந்த சுரங்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அனைத்து சுரங்க நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார். 

சம்பவம் நடந்த இடத்தை அந்தநாட்டு பாதுகாப்புப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நைஜீரியாவில் முறையற்ற மற்றும் சட்டவிரோத சுரங்கத் தொழில்கள் மிகப்பெரிய சவாலாக உள்ள நிலையில், முறையான பாதுகாப்பு வசதிகள் மற்றும் அரசின் கண்காணிப்பு இல்லாததால் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நிகழ்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், கடந்த வருடம் நைஜீரியாவின் ஜம்ஃபாரா மாநிலத்தில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் 18 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/239034

லண்டனில் சிறுமிகளைக் குறிவைக்கும் கொடூர கும்பல்கள் : அரங்கேறும் மனிதநேயமற்ற சம்பவங்கள்

3 days 12 hours ago

லண்டனில் சிறுமிகளைக் குறிவைக்கும் கொடூர கும்பல்கள் : அரங்கேறும் மனிதநேயமற்ற சம்பவங்கள்

19 February 2026

2ff23460-0ccc-11f1-b5e2-dd58fc65f0f6.jpg

லண்டனில் 13 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளையும், பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இளம்பெண்களையும் குறிவைத்து, அவர்களைப் பாலியல் ரீதியாகவும் குற்றச் செயல்களுக்காகவும் ஒரு கும்பல் சுரண்டி வருவதை பிபிசி (BBC) புலனாய்வு வெளிப்படுத்தியுள்ளது.

தனிமையில் இருக்கும் அல்லது வறுமையில் வாடும் சிறுமிகளை இனங்கண்டு, அவர்கள் மீது அன்பு காட்டுவது போலவும், விலையுயர்ந்த பொருட்களை வாங்கிக்கொடுத்தும் இந்தக் கும்பல்கள் வலைவிரிக்கும். பின்னர் அவர்களைத் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சித்திரவதை செய்கின்றன.

போதைப்பொருள் கடத்தல், ஆயுத வியாபாரம் மற்றும் அலைபேசித் திருட்டு போன்றவற்றில் இச்சிறுமிகள் ஈடுபடுத்தப்படுகின்றனர். கும்பல்களின் அதிகாரப் படி நிலையில் இவர்கள் மிகக் கீழ் மட்டத்தில் (Lowest Rung) வைக்கப்படுகின்றனர்.

கும்பல்கள் வாங்கிய போதைப்பொருள் கடனுக்காக அல்லது கும்பல் தலைவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக இச்சிறுமிகள் பல ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

லண்டனில் வெள்ளை இனத்தவர் உட்பட பல்வேறு இனப் பின்னணியைக் கொண்ட குழுக்கள் இத்தகைய கொடூரங்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சில பெண்கள் தங்களைச் சுரண்டியமை வெள்ளை இன ஆண்கள் எனக் குறிப்பிட்டுள்ள நிலையில், மற்ற சில தப்பிப்பிழைத்தவர்கள் தாங்கள் தெற்காசிய ஆண்களால் பாலியல் தொழிலுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

லண்டன் காவல்துறையின் (Met Police) தகவலின்படி, தற்போது குறைந்தது 60 சிறுமிகள் இத்தகைய கும்பல்களால் சுரண்டப்படுவது அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சுமார் 2,000 சிறுவர் சுரண்டல் தொடர்பான வழக்குகள் பதிவாகின்றன.

இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள லண்டன் நகர முதல்வர் சாதிக் கான், இத்தகைய அருவருக்கத்தக்க கும்பல்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதி பெற்றுத் தரப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

https://hirunews.lk/tm/447444/violent-gangs-targeting-girls-in-london-inhumane-incidents-unfolding

ஆஸ்திரியாவில் மலையேற்றத்தின் போது காதலி மரணம்; காதலனுக்கு எதிராக வழக்கு பதிவு

4 days 6 hours ago

ஆஸ்திரியாவில் மலையேற்றத்தின் போது காதலி மரணம் ; காதலனுக்கு எதிராக வழக்கு பதிவு

Published By: Digital Desk 3

18 Feb, 2026 | 05:10 PM

image

ஆஸ்திரியாவின் மிக உயர்ந்த மலைச்சிகரமான கிராஸ்க்ளோக்னரில் (3,798 மீ), கடந்த ஆண்டு குளிர்காலத்தில் தனது காதலியை கடும் குளிரில் தவிக்கவிட்டு உயிரிழக்கச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மலையேற்ற வீரர் மீதான விசாரணை வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் திகதி அதிகாலையில், 33 வயதுடைய பெண், கடும் பனிப்புயலில் சிக்கி உடல் உறைந்து உயிரிழந்தார். அவருடன் சென்ற 36 வயதுடைய காதலன், காதலி மிகவும் சோர்வடைந்த நிலையில் அவரை மலை உச்சியில் தனியே விட்டுவிட்டு உதவி தேடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்ப்ரூக் அரசாங்க தரப்பு சட்டதரணிகள் காதலன் மீது 'கடுமையான கவனக்குறைவால் நேரிட்ட கொலை' என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அவர் மீது 09 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அனுபவக் குறைவு: போதிய அனுபவமில்லாத காதலியை மிகக் கடினமான குளிர்கால மலையேற்றத்திற்கு அழைத்துச் சென்றது.

காலதாமதம்: திட்டமிட்ட நேரத்தை விட 2 மணிநேரம் தாமதமாக மலையேற்றத்தைத் தொடங்கியது.

தவறான காலணி: பாறைகளும் பனியும் நிறைந்த பகுதிக்கு, பனிச்சறுக்கு விளையாட்டில் பயன்படுத்தப்படும் மென்மையான 'Snowboard boots'-களை காதலி அணிய அனுமதித்தது.

எச்சரிக்கையை மீறியது: மணிக்கு 74 கி.மீ வேகத்தில் காற்று வீசியபோதும், -20 டிகிரி செல்சியஸ் குளிரிலும் மலையேற்றத்தைத் தொடர்ந்தது.

உதவியை மறுத்தது: இரவு 10:50 மணியளவில் உதவிக்கு வந்த பொலிஸ் ஹெலிகொப்டரை நோக்கி அவசர சமிக்ஞை எதையும் காட்டாமல் பயணத்தைத் தொடர்ந்தது.

தொலைபேசி மௌனம்: பொலிஸார் அவரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது தனது அலைபேசியை 'Silent' முறையில் வைத்தது.

பாதுகாப்பின்மை: காதலியை விட்டுப் பிரிவதற்கு முன் அவருக்கு முறையான பாதுகாப்பு உடைகளையோ அல்லது அவசர காலப் போர்வைகளையோ வழங்கத் தவறியது.

இந்த வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு, எதிர்காலத்தில் மலையேற்றத்தில் ஈடுபடும் கூட்டாளிகளுக்கு இடையிலான பொறுப்புணர்வை வரையறுக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்," என ஆஸ்திரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காதலன் தரப்பு சட்டதரணி, "இது ஒரு திட்டமிடப்படாத துயரமான விபத்து மட்டுமே. இருவரும் சரிசமமான அனுபவத்துடனும், முழு விருப்பத்துடனமே இந்த மலையேற்றத்தைத் ஆரம்பித்தனர்," என வாதிடுகிறார்.

https://www.virakesari.lk/article/238980

இரான் அருகே போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை குவிக்கும் அமெரிக்கா - பிபிசி புலனாய்வு

4 days 9 hours ago

இரான் அருகே போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை குவிக்கும் அமெரிக்கா - பிபிசி புலனாய்வு

அமெரிக்கா - இரான்

படக்குறிப்பு,உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டையும் அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன, இது அடுத்த மூன்று வாரங்களுக்குள் இப்பகுதிக்கு வரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

கட்டுரை தகவல்

  • ரிச்சர்ட் இர்வின்-பிரவுன்,

  • அலெக்ஸ் முர்ரே

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரானுக்கு அருகே அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் நிலை கொண்டிருப்பதை செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி பிபிசி வெரிஃபை உறுதிப்படுத்தியுள்ளது. இரானின் ராணுவத் திட்டம் மற்றும் போராட்டக்காரர்கள் மீதான அதன் ஒடுக்குமுறையைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

ஒரு தாக்குதல் குழுவை வழிநடத்தும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் எஃப்35 போர் விமானங்கள் உட்பட 90 விமானங்கள் மற்றும் 5,680 பணியாளர்களைக் கொண்டுள்ளது.

இது ஜனவரி பிற்பகுதியில் வளைகுடா பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது, ஆனால் இப்போது வரை செயற்கைக்கோள் படங்களில் காணப்படவில்லை. இது இரானில் இருந்து சுமார் 700 கிமீ தொலைவில் ஓமன் கடற்கரையில் உள்ளது.

உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டையும் அமெரிக்கா மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன, இது அடுத்த மூன்று வாரங்களுக்குள் இப்பகுதிக்கு வரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தற்போதைய ராணுவக் கட்டமைப்பைப் பற்றி நாம் அறிந்தவற்றோடு ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலின் வருகையும் இணைகிறது.

அங்கு அமெரிக்க போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களின் இருப்பு அதிகரித்துள்ளதை பிபிசி வெரிஃபை பின்தொடர்ந்துள்ளது.

அமெரிக்கா - இரான்

பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,பிப்ரவரியில் அமெரிக்க ராணுவம் அரபிக் கடலில் யுஎஸ்எஸ் ஆப்ரஹாம் லிங்கன் விமானந்தாங்கி போர்க்கப்பலின் படத்தை வெளியிட்டது.

மத்திய கிழக்கிற்கு அமெரிக்கா எத்தகைய ராணுவ உபகரணங்களை நகர்த்தியுள்ளது?

ஐரோப்பிய சென்டினல்-2 செயற்கைக்கோள்களில் இருந்து பொதுவில் கிடைக்கும் படங்கள், ஓமன் கடற்கரையிலிருந்து சுமார் 150 மைல் (240 கிமீ) தொலைவில் அரபிக்கடலில் ஆபிரகாம் லிங்கன் கப்பல் இருப்பதைக் காட்டுகின்றன.

ஜனவரி மாதம் இப்பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறப்பட்டதிலிருந்து இது தென்படவில்லை. ஆனால் செயற்கைக்கோள் கண்காணிப்பு குறைவாக உள்ள திறந்த கடற்பரப்பை இது கடந்து கொண்டிருந்தது. நிலத்தில் உள்ள ராணுவ தளவாடங்கள் மிகவும் தெளிவாகத் தெரிவதோடு, செயற்கைக்கோள்களில் அடிக்கடி படம்பிடிக்கப்படுகின்றன.

அதாவது, மத்திய கிழக்கில் 12 அமெரிக்க கப்பல்களை இப்போது செயற்கைக்கோள் படங்கள் மூலம் நாங்கள் கண்காணித்துள்ளோம். அணுசக்தியால் இயங்கும் நிமிட்ஸ்-வகை விமானந்தாங்கி கப்பலான ஆபிரகாம் லிங்கன் ஒரு தாக்குதல் குழுவை வழிநடத்துகிறது.

மேலும் நீண்ட தூர ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தும் திறன் கொண்ட கப்பல்கள் மற்றும் வளைகுடாவில் உள்ள பஹ்ரைன் கடற்படை தளத்தில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள மூன்று சிறப்புப் போர்க்கப்பல்களும் இதில் அடங்கும்.

இப்பகுதியில் அமெரிக்க போர் விமானங்களின் வருகையையும் நாங்கள் பின்தொடர்ந்து வருகிறோம். ஜோர்டானில் உள்ள முவாஃபக் சால்டி ராணுவத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள எஃப்-15 மற்றும் இஏ-18 போர் விமானங்களின் அதிகரிப்பையும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து மத்திய கிழக்கை நோக்கி நகரும் அமெரிக்க சரக்கு விமானங்கள், எரிபொருள் நிரப்பும் மற்றும் தகவல் தொடர்பு விமானங்களின் அதிகரிப்பையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம்.

இரான் எவ்வாறு பதிலளித்துள்ளது?

பிப்ரவரி 6-ஆம் தேதி அரபிக்கடலில் அமெரிக்க மத்திய கட்டளை மையம் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலுடன் பிற போர்க் கப்பல்கள், போர் விமானங்கள், கண்காணிப்பு விமானங்கள் மற்றும் கடலோர காவல்படை கப்பல்கள் சூழ்ந்திருக்கும் படங்களை வெளியிட்டது. இது ராணுவ வலிமையை வெளிப்படுத்தும் நடவடிக்கையாக கருதப்படுகிறது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் இரானும் தனது சொந்தப் படை பலத்தைக் காட்டியுள்ளது.

திங்களன்று இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), ஓமன் மற்றும் இரானுக்கு இடையே வளைகுடாவில் அமைந்துள்ள ஹோர்முஸ் நீரிணையில் ஒத்திகையைத் தொடங்கியது. இதில், ஒரு கப்பலில் இருந்து ஏவுகணைகள் ஏவப்படுவதற்கு முன்பாக ஐஆர்ஜிசி தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் முகமது பாக்பூர் ஆய்வு செய்ததாக ஐஆர்ஜிசி-யுடன் தொடர்புடைய தஸ்நிம் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இந்த நீரிணை உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாகவும், முக்கியமான எண்ணெய் போக்குவரத்து மையமாகவும் கருதப்படுகிறது.

இரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவு உட்பட, உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாகவே செல்கிறது.

இரானின் சமீபத்திய ராணுவ நடவடிக்கைகளைக் காட்டும் அந்த அறிக்கையில், பாக்பூர் அந்தத் தீவின் மீது ஹெலிகாப்டரில் பறப்பதைக் காண முடிந்தது.

அமெரிக்கா - இரான்

பட மூலாதாரம்,Getty Images

வெனிசுவேலா மற்றும் ஆபரேஷன் மிட்நைட் ஹேமருடன் தற்போதைய நடவடிக்கை எவ்வாறு ஒப்பிடப்படுகிறது?

கடந்த ஜனவரியில் முன்னாள் வெனிவேசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்வதற்கு முன்னரோ அல்லது கடந்த ஜூன் மாதம் இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்திய நடவடிக்கையின் போதோ இருந்ததை விட, மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்கா தற்போது மேற்கொண்டு வரும் ராணுவ முன்னெடுப்புகள், "அதிக தீவிரமும் நிலைத்தன்மையும்" கொண்டிருப்பதாக ராணுவப் புலனாய்வு நிபுணர் ஜஸ்டின் க்ரம்ப் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு வெனிசுவேலா மற்றும் இரானில் அமெரிக்கா தனது பலத்தை முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலைகளில் நிலைநிறுத்தியது.

வெனிசுவேலா மீதான தாக்குதல்களுக்கு முன்னதாக அமெரிக்கா யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டை கரீபியன் கடலுக்கு அனுப்பியது, அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் நாங்கள் கண்காணித்த எட்டு போர்க்கப்பல்களில் இதுவும் ஒன்று.

இருப்பினும், அது குறைவான விமானங்களையே பயன்படுத்தியது, ஏனெனில் அது அமெரிக்க நிலப்பரப்பில் உள்ள சுற்றியுள்ள அமெரிக்க தளங்களில் இருந்தோ அல்லது பியூர்டோ ரிக்கோவில் உள்ள அதன் தளத்திலிருந்தோ எளிதாக போர் விமானங்களை அனுப்ப முடியும்.

அமெரிக்கா கரீபியன் பகுதிக்குள் நீர்நில தாக்குதல் கப்பல்களையும் நிலைநிறுத்தியது. இவை மதுரோ பிடிபட்டபோது பார்த்தது போல ஹெலிகாப்டர் நடவடிக்கைகளுக்கான ஏவுதளங்களாகப் பயன்படுத்தப்படலாம்.

ஆனால் வெனிசுவேலாவின் ராணுவம் பொதுவாகத் தன்னைத் தற்காத்துக் கொள்ளவோ அல்லது அமெரிக்காவிற்கு எதிராகப் பதிலடி கொடுக்கவோ குறைந்த திறன் கொண்டதாகவே பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு இரானின் அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' மூலம் அமெரிக்கா இரானைத் தாக்கியபோது, வெனிசுவேலாவை விட மிகவும் சக்திவாய்ந்த ராணுவத்தைக் கொண்ட ஒரு நாட்டை அது தாக்கியது.

இரானின் ராணுவம் மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க தளங்களைத் தாக்கும் திறன் கொண்டது.

'மிட்நைட் ஹேமர்' நடவடிக்கையின் போது, அமெரிக்கா அந்தப் பிராந்தியத்தில் இரண்டு விமானந்தாங்கி போர்க்கப்பல் தாக்குதல் குழுக்களையும், மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடல்களில் போர்க் கப்பல்களையும், வளைகுடாவில் மூன்று போர் கப்பல்களையும் கொண்டிருந்தது.

இது அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு விமானப் படைகளையும் எரிபொருள் நிரப்பும் விமானங்களையும் நகர்த்தியது, ஆனால் ஃபோர்டோ, இஸ்பஹான் மற்றும் நடான்ஸ் அணுசக்தி தளங்களைத் தாக்கப் பயன்படுத்தப்பட்ட பி2 குண்டுவீச்சு விமானங்கள் உண்மையில் மிசௌரியில் உள்ள அமெரிக்கத் தளங்களிலிருந்தே புறப்பட்டன.

அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களின் அதிகரிப்பு, அத்துடன் அந்தப் பிராந்தியத்தில் உள்ள எட்டு விமானப்படை தளங்கள் ஆகியவை, இரானின் எந்தவொரு பதிலடியையும் "பயனற்றதாக" மாற்றும் நோக்கத்துடன், ஒரு நாளைக்கு சுமார் 800 வான்வழித் தாக்குதல்களை "மிகவும் தீவிரமான மற்றும் நீடித்த விகிதத்தில்" நடத்த அனுமதிக்கும் என்று ஆபத்து மற்றும் நுண்ணறிவு நிறுவனமான சிபிலைனின் தலைமை நிர்வாகி க்ரம்ப் கூறினார்.

"நாம் காண்பது வெறும் தாக்குதல் தயாரிப்பு மட்டுமல்ல, மாறாக அளவை கூட்டவோ குறைக்கவோ கூடிய ஒரு விரிவான தடுப்பு நடவடிக்கையாகும்," என்று அவர் கூறினார்.

"இதன் பொருள், கடந்த ஆண்டு வெனிசுவேலா அல்லது மிட்நைட் ஹேமர் ஆகியவற்றுக்காக செய்யப்பட்ட முன்தயாரிப்புகளை விட இது அதிக தீவிரமும் நிலைத்தன்மையும் கொண்டது.

இது ஒரு மோதலைத் தக்கவைத்து, அந்தப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கச் சொத்துகள் மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான அனைத்து சாத்தியமான பதிலடிகளையும் எதிர்கொள்ளவும் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் விவரித்தார்.

கூடுதல் அறிக்கை : பார்பரா மெட்ஸ்லர், கோன்சே ஹபிபியாசாத், தாமஸ் கோப்லேண்ட், யி மா

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2lrjl1gnrgo

சிரியாவிலுள்ள ஐ.எஸ் முகாமிலிருந்து நாடு திரும்ப முயற்சிக்கும் பிரஜைக்கு அவுஸ்திரேலியா தடை

4 days 10 hours ago

சிரியாவிலுள்ள ஐ.எஸ் முகாமிலிருந்து நாடு திரும்ப முயற்சிக்கும் பிரஜைக்கு அவுஸ்திரேலியா தடை

Published By: Digital Desk 3

18 Feb, 2026 | 02:38 PM

image

ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாகக் கருதப்படும் அவுஸ்திரேலியப் பிரஜை ஒருவர், சிரியாவிலிருந்து மீண்டும் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு அந்நாட்டு அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்குத் தடை விதித்துள்ளது.

சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள அல்-ரோஜ் தடுப்பு முகாமிலிருந்து 34 அவுஸ்திரேலியப் பிரஜைகள் (11 குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள்) இந்த வாரம் நாடு திரும்ப இருந்தனர்.

அவர்கள் டமஸ்கஸ் வழியாக அவுஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில், தொழிநுட்ப மற்றும் நடைமுறைச் சிக்கல்களைக் காரணம் காட்டி சிரிய அதிகாரிகள் அவர்களை மீண்டும் முகாமிற்கே திருப்பி அனுப்பினர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இன்று புதன்கிழமை (18) ஊடகவியலாளர்களிடம் பேசுகையில் மிகவும் காட்டமாகப் பதிலளித்தார்:

"தவறு செய்தவர்கள் அதற்கான விளைவுகளைச் சந்தித்தே ஆகவேண்டும். நமது வாழ்க்கை முறையையும் ஜனநாயகத்தையும் அழிக்க முற்பட்ட ஒரு கொடூரமான சித்தாந்தத்துடன் இணைய வேண்டும் என்று அவர்களாகவே விரும்பி வெளிநாடு சென்றனர். அவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கம் எந்தவித உதவியும் செய்யாது."

பாதுகாப்பு முகமைகளின் ஆலோசனையின் பேரில், அதிக ஆபத்தானவராகக் கருதப்படும் ஒருவருக்கு மட்டும் 02 ஆண்டுகள் வரை அவுஸ்திரேலியாவிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய 33 பேருக்கு அத்தகைய சட்டரீதியான தகுதிகள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 34 பேரில் 23 சிறுவர்கள் உள்ளனர். அவர்களின் பெற்றோரின் முடிவுகளால் குழந்தைகள் பாதிக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது எனப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு திரும்புபவர்கள் செல்லுபடியாகும் அவுஸ்திரேலிய கடவுச்சீட்டுகளை (Passports) வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச சட்டங்களின்படி பிரஜைகளைத் தடுப்பது கடினம் என்றாலும், அரசாங்கம் அவர்களுக்கு எவ்வித நிதி அல்லது பயண உதவிகளையும் வழங்கப்போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளது.

சிரியாவின் முகாம்களில் இன்னும் 2,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகள் (முக்கியமாக பெண்கள் மற்றும் சிறுவர்கள்) தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளும் தங்களது பிரஜைகளைத் திரும்பப் பெற இதே போன்ற தயக்கத்தையே காட்டி வருகின்றன.

https://www.virakesari.lk/article/238953

ட்ரம்பின் அமைதி திட்ட அமைப்பில் இணைந்து கொள்ள போவதில்லை - வத்திக்கான் அறிவிப்பு

4 days 12 hours ago

ட்ரம்பின் அமைதி திட்ட அமைப்பில் இணைந்து கொள்ள போவதில்லை - வத்திக்கான் அறிவிப்பு

Published By: Digital Desk 3

18 Feb, 2026 | 11:57 AM

image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்துள்ள 'அமைதி திட்டம்' என்ற அமைப்பில் இணைந்துக்கொள்ள போவதில்லை என வத்திக்கான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

சர்வதேச நெருக்கடிகளை ஐக்கிய நாடுகள் சபையே கையாள வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த தீர்மானத்தை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

காசா போர் நிறுத்தத்தைக் கண்காணிக்கவும், அதன் மறுசீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிடவும் ஜனாதிபதி ட்ரம்ப் இந்த 'அமைதி திட்ட அமைப்பை' உருவாக்கியுள்ளார்.

இந்த அமைப்பில் இணைந்துகொள்ளுமாறு அமெரிக்காவைச் சேர்ந்த முதலாவது பாப்பரசரான 14 ஆம் லியோவுக்கு கடந்த ஜனவரி மாதம் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த அமைப்பின் முதலாவது கூட்டம் வரும் வியாழக்கிழமை வொஷிங்டனில் நடைபெறவுள்ளது. இதில் காசா மறுசீரமைப்பிற்காக 05 பில்லியன் டொலர் நிதி திரட்டுவது தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளது.

வத்திக்கான் வெளிவிவகார செயலாளர் கர்தினால் பியட்ரோ பரோலின் இது குறித்துத் தெரிவிக்கையில்,

"வத்திக்கான் என்பது பிற நாடுகளைப் போன்ற ஒரு சாதாரண அரசு அல்ல, அதன் தன்மை வேறுபட்டது. சர்வதேச அளவில் நெருக்கடி நிலைகளை ஐக்கிய நாடுகள் சபையே முன்னின்று கையாள வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எனவே, இந்த அமைப்பில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்."

ட்ரம்ப்பின் இந்த அமைப்பானது ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் அமைந்துள்ளதாகப் பல நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

இத்தாலி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இணையாமல், வெறும் 'பார்வையாளர்களாக' மட்டுமே கலந்துகொள்ள தீர்மானித்துள்ளன.

காசா விவகாரம் குறித்துப் பேசும் இந்த அமைப்பில் பாலஸ்தீனப் பிரதிநிதிகள் எவரும் சேர்க்கப்படவில்லை என்பது மனித உரிமை செயற்பாட்டாளர்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

காசாவில் கடந்த அக்டோபர் முதல் நிலவி வரும் போர் நிறுத்தம் மிகவும் பலவீனமாக உள்ளது. இதுவரை நடந்த தாக்குதல்களில் 72,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அங்கு நிலவும் கடும் பஞ்சம் மற்றும் மனிதாபிமான நெருக்கடி தொடர்பில் பாப்பரசர் லியோ தொடர்ந்து தனது கவலையை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/238937

'இஸ்லாமிய நேட்டோ': அரபு - முஸ்லிம் நாடுகள் ராணுவ கூட்டணி குறித்து மீண்டும் விவாதம் ஏன்?

5 days 6 hours ago

'இஸ்லாமிய நேட்டோ': அரபு - முஸ்லிம் நாடுகள் ராணுவ கூட்டணி குறித்து மீண்டும் விவாதம் ஏன்?

அரபு-இஸ்லாமிய ராணுவக் கூட்டணி, இஸ்ரேல், இரான், அமெரிக்கா

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,துருக்கி அதிபர் எர்துவானின் சௌதி அரேபியா வருகையைத் தொடர்ந்து, இஸ்லாமிய நேட்டோவை உருவாக்குவது குறித்த விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.

கட்டுரை தகவல்

  • பிபிசி மானிடரிங்

  • 17 பிப்ரவரி 2026, 09:49 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரான் மீதான ஒரு சாத்தியமான தாக்குதலுக்குத் தயாராகும் வகையில் அமெரிக்கா தனது ராணுவ இருப்பை அதிகரிப்பதாக வரும் செய்திகளுக்கு மத்தியில், அரபு - இஸ்லாமிய அரசியல் மற்றும் ராணுவக் கூட்டணியை உருவாக்கும் விவகாரம் மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளது.

முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பு என்ற கருத்து முதன்முதலில் துருக்கி அதிபர் துருக்கி அதிபர் எர்துவானால் செப்டம்பர் 2024-இல் முன்மொழியப்பட்டது. அந்த நேரத்தில், இஸ்ரேலால் ஏற்படும் 'வளர்ந்து வரும் விரிவாக்க அச்சுறுத்தலுக்கு' எதிராக முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

செப்டம்பர் 2025-இல், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரும் 'இஸ்லாமிய நேட்டோ' அமைப்பை நிறுவுவது பற்றிப் பேசினார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி பாகிஸ்தானுக்கும் சௌதி அரேபியாவுக்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, 'இஸ்லாமிய நேட்டோ' அமைப்பை உருவாக்கும் யோசனை வேகம் பெற்றுள்ளது.

எர்துவானின் சமீபத்திய சௌதி அரேபியா மற்றும் எகிப்து பயணங்களைத் தொடர்ந்து, அரபு ஊடகங்களில் 'இஸ்லாமிய நேட்டோ' முன்மொழிவு மீண்டும் விவாதிக்கப்படுகிறது. முக்கிய அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளை உள்ளடக்கிய ஒரு பெரிய கூட்டணி உருவாகக்கூடும் என்று ஊகங்கள் உள்ளன.

இருப்பினும், துருக்கி மற்றும் பாகிஸ்தானை உள்ளடக்கிய சௌதி தலைமையிலான 'இஸ்லாமிய நேட்டோ'வை உருவாக்கும் திட்டம் தற்போது இல்லை என்று ஒரு சௌதி அதிகாரியின் கூற்றை மேற்கோள் காட்டி ஒரு செய்தி கூறுகிறது.

அரபு-இஸ்லாமிய ராணுவக் கூட்டணி, இஸ்ரேல், இரான், அமெரிக்கா

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி எகிப்துக்கு வருகை தந்த எர்துவானை வரவேற்க கெய்ரோ விமான நிலையத்திற்கு வந்தார்.

எந்த நாடுகள் சேர்க்கப்படலாம்?

அரபு ஊடக செய்திகள், இந்த சாத்தியமான கூட்டணியில் துருக்கி, எகிப்து, சௌதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் இந்தோனீசியா ஆகியவை இடம்பெறலாம் என்று தெரிவித்துள்ளன.

லண்டனைத் தளமாகக் கொண்ட ராய் அல்-யூம் செய்தி இணையதளம் பிப்ரவரி 5 அன்று வெளியிட்ட செய்தியின்படி, "எர்துவானின் ரியாத் மற்றும் கெய்ரோ பயணங்கள் 'மூன்று நாடுகளை மையமாகக் கொண்ட ஒரு அரசியல் மற்றும் ராணுவ இஸ்லாமியக் கூட்டணியை' உருவாக்கும் திட்டத்தின் பின்னணியில் வந்தவை. இது பின்னர் அணு ஆயுதம் கொண்ட பாகிஸ்தான் மற்றும் அதிக முஸ்லிம் மக்கள் தொகையைக் கொண்ட இந்தோனீசியாவையும் உள்ளடக்கி விரிவடையக்கூடும்".

துருக்கிய செய்தி வலைத்தளம் ஒன்றும், "முன்னெப்போதும் இல்லாத அரசியல் நெருக்கம் மற்றும் கருத்துகளின் ஒருங்கிணைப்புக்கு மத்தியில், எகிப்து, சௌதி அரேபியா மற்றும் துருக்கியை உள்ளடக்கிய ஒரு பிராந்திய கூட்டணிக்கான வரையறைகள் தென்படுகின்றன," என்று கூறியது.

இருப்பினும், எர்துவானின் பயணங்கள் எந்தவொரு கூட்டணியையும் குறிக்கவில்லை, மாறாக அந்தப் பிராந்தியம் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தில் உள்ளது என்ற அதிகரித்து வரும் புரிதலைப் பிரதிபலிக்கிறது என்று சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

"எகிப்து, சௌதி அரேபியா மற்றும் துருக்கி இடையே அதிகரித்து வரும் நெருக்கம், கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பது மற்றும் பொதுவான நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் அடிப்படையில் ஒரு புதிய அரசியல் இணக்கத்தை குறிக்கிறது. ஆனால் அது இன்னும் ஒரு விரிவான உத்தி கூட்டணியின் நிலையை எட்டவில்லை," என்று அரபிக் டிஃபென்ஸ் கூறியது.

"எகிப்து-துருக்கி கூட்டணி பிராந்திய சவால்களை எதிர்கொள்வதற்கான ஒரு பரந்த அரபு-இஸ்லாமிய கூட்டணிக்கு அடிப்படையாக அமையக்கூடும்," என்று சர்வதேச சட்டப் பேராசிரியர் முகமது மஹ்ரான், யூம் 7 என்ற எகிப்திய இணையதளத்திடம் தெரிவித்தார்.

அரபு-இஸ்லாமிய ராணுவக் கூட்டணி, இஸ்ரேல், இரான், அமெரிக்கா

பட மூலாதாரம்,US Department of Defense via Reuters

படக்குறிப்பு,அமெரிக்க கடற்படை, அரபிக் கடலில் தனது ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கிக் கப்பல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டது.

இந்தக் கூட்டணியின் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன?

காஸாவில் இஸ்ரேலின் போர் மற்றும் இரானுடனான 12 நாள் மோதலுக்குப் பிறகு, அரபு - இஸ்லாமியக் கூட்டணி விவாதம் அரபு ஊடகங்களில் மீண்டும் உருவெடுத்துள்ளது.

எகிப்திய தனியார் வலைத்தளமான அல்-ஒரூபா அல்-யூம், "அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள், சிரமங்கள் மற்றும் சூழ்ச்சிகள் காரணமாக, பிராந்தியத்தில் சமநிலையை மீட்டெடுக்கவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் சௌதி அரேபியா, எகிப்து, பாகிஸ்தான், துருக்கி மற்றும் கத்தாரை உள்ளடக்கிய ஓர் உத்தி கூட்டணியை உருவாக்குவது மிகவும் அவசியமாகிறது." என்று தெரிவித்துள்ளது.

முன்னாள் எகிப்திய தூதர் அலி அல்-அஷ்மாவி கத்தார் தொலைக்காட்சி சேனலான அல் ஜசீரா முபாஷரிடம், "சாத்தியமான இந்த கூட்டணி பிராந்தியத்தை துண்டாடுவதை நோக்கமாகக் கொண்ட 'மேலாதிக்கத் திட்டங்களை' முறியடித்து, பிராந்தியத்தின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையும்" என்றார்.

துருக்கிய ஆய்வாளர் அலி பகாரும் அந்த ஊடகத்திடம் பேசுகையில், "இஸ்ரேல் பெற்றுள்ள மிகப்பெரிய ராணுவ சக்தியை எதிர்கொள்ள இத்தகைய இஸ்லாமியக் கூட்டணிக்கு குறிப்பிடத்தக்க முயற்சிகள் தேவைப்படும்." என்றார்.

லண்டனைச் சேர்ந்த அல்-குட்ஸ் அல்-அரபி தளத்தில்,'' இந்த சாத்தியமான இஸ்லாமிய நேட்டோ அமைப்பு என்பது இந்த நாடுகளின் மீது தாக்குதலை தடுப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு கூட்டணி'' என்று லூத்ஃபி அல்-உபைதி விவரித்தார்.

இன்னும் பல ஊடக செய்திகள் இதே கருத்தை எதிரொலிக்கின்றன. "மெதுவாக உருவாகி வரும் ஒரு கூட்டணி, நேட்டோ என்று அழைக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் ஒரு தடுப்பு சக்தியாக செயல்படும்." என்று அவை தெரிவிக்கின்றன.

அரபு-இஸ்லாமிய ராணுவக் கூட்டணி, இஸ்ரேல், இரான், அமெரிக்கா

பட மூலாதாரம்,Getty Images

துருக்கியின் நிலைப்பாடு என்ன?

பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் எர்துவானின் சௌதி அரேபியா மற்றும் எகிப்து பயணத்திற்கு முன்னதாக, துருக்கிய ஊடகங்களில் ஒரு சாத்தியமான 'இஸ்லாமிய நேட்டோ' பற்றிய பேச்சுகள் நிறைந்திருந்தன.

இருப்பினும், கவனம் படிப்படியாக பரந்த பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை நோக்கி நகர்ந்தது.

துருக்கிய வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடன் ஜனவரி இறுதியில் அல் ஜசீராவுக்கு அளித்த பேட்டியில், நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கையை அதிகரிக்க 'பிராந்திய ஸ்திரத்தன்மைக்கான தளத்தை' உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

"ஐரோப்பிய ஒன்றியம் ஒன்றுமில்லாத நிலையில் இருந்து உருவாகி இன்று இந்த நிலைக்கு வளர்ந்துள்ளது எப்படி என்று பாருங்கள். பின் ஏன் நம்மால் அதைச் செய்ய முடியாது?" என்றும் ஃபிடன் கூறினார்.

அரசுக்கு ஆதரவான ஊடகங்கள், இப்படியான கூட்டணியை பிராந்தியத்துக்கான ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாகக் கூறுகின்றன. சிலர் இது இஸ்ரேலின் பிராந்திய குறிக்கோள்களை எதிர்கொள்ள உதவும் என்று வாதிடுகின்றனர்.

ஆய்வாளர் கெவ்ஹர் சலூல் பிப்ரவரி 9 அன்று, "இரான், சிரியா, காஸா மற்றும் பாலத்தீனம் போன்ற விவகாரங்களில் துருக்கி, சௌதி அரேபியா மற்றும் எகிப்து இடையே தெளிவான ஒருமித்த தன்மை வெளிப்பட்டுள்ளது'' என எழுதினார்.

இந்தக் கூட்டணி தற்போது பெரும்பாலும் பேச்சுவார்த்தைகளில் மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தாலும், துருக்கி, எகிப்து மற்றும் சௌதி அரேபியாவுடனான ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகிறது.

எகிப்திற்கு 350 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்யவும், அங்கு ஒரு வெடிமருந்து உற்பத்தி கட்டமைப்பை உருவாக்கவும் துருக்கி ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

துருக்கியின் 'கான்' போர் விமானத் திட்டத்தில் முதலீட்டாளராகவும் அதை வாங்கக்கூடிய நாடாகவும் பங்கேற்க சௌதி அரேபியா ஆர்வமாக உள்ளதாக துருக்கிய ஊடகங்களும் கூறுகின்றன.

அரபு-இஸ்லாமிய ராணுவக் கூட்டணி, இஸ்ரேல், இரான், அமெரிக்கா

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

கூட்டணியை உருவாக்குவதில் உள்ள சவால்கள் என்ன?

அரபு-இஸ்லாமியக் கூட்டணியை உருவாக்குவதும் பல சிக்கலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்களால் சூழப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

லண்டனைச் சேர்ந்த ராய் அல்-யூம் தளத்தின்படி, ''ஒரு முக்கிய சவால் என்னவென்றால், அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளுக்கு இடையிலான கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ஒருபோதும் களத்தில் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை மற்றும் அவை பெரும்பாலும் 'ஆவணங்களில்' மட்டுமே இருந்துள்ளன. இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டவர்களில் சிலர் ஒருவருக்கொருவர் ராணுவ மோதல்களில் கூட ஈடுபட்டுள்ளனர்.''

துருக்கி, எகிப்து மற்றும் சௌதி அரேபியா இடையிலான தற்போதைய ஒத்துழைப்பு ஒரு பாரம்பரிய அல்லது உத்தி கூட்டணியின் நிலையை எட்டவில்லை என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர், ஏனெனில் "பல விவகாரங்களில், குறிப்பாக பிராந்தியத்தின் அரசியல் மாற்றங்கள் தொடர்பானவற்றில் மூன்று நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன."

முன்னாள் எகிப்திய தூதர் அலி அல்-அஷ்மாவி அல் ஜசீராவிடம் பேசுகையில், "இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிலிருந்து வரும் சவால்களை எதிர்கொண்டு இந்தக் கூட்டணி எளிதாக முன்னேற முடியாது." என்றார்.

துருக்கிய ஆய்வாளர் அலி பகாரும், "இஸ்ரேல் இந்தக் கூட்டணி நடைமுறையில் உருவாக அனுமதிக்காது, ஏனெனில் அமெரிக்காவில் உள்ள அதன் இணைந்த லாபிகள் ஏற்கனவே அதைத் தடுக்கச் செயல்படத் தொடங்கிவிட்டன." என்றார்.

அரபு-யூரேசிய ஆய்வுகளுக்கான மையத்தின் ஆராய்ச்சியாளர் காதி கனில், இத்தகைய கூட்டணிக்கான சாத்தியமான எதிர்கால காட்சிகளை விளக்கினார். "மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் ஒரு ஒருங்கிணைப்பு ஏற்படவே அதிக வாய்ப்புள்ளது." என்றார்.

இந்த முகாம் ஒரு பெரிய நிறுவன ரீதியான கூட்டணியாக மாறுவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் அவர் குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/clyzd0v97y2o

டிரம்பின் புதிய உலக ஒழுங்கில் இணையுமாறு ஐரோப்பாவிற்கு ரூபியோ அழைப்பு விடுக்கிறார்.

6 days 1 hour ago

டிரம்பின் புதிய உலக ஒழுங்கில் இணையுமாறு ஐரோப்பாவிற்கு ரூபியோ அழைப்பு விடுக்கிறார்.

MAGA பேச்சுப் புள்ளிகளை மீண்டும் வலியுறுத்தும் போது, அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரி கண்டத்துடனான புதிய கூட்டாண்மையை ஆதரிக்கிறார்.

இலவச கட்டுரை பொதுவாக சந்தாதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

62வது மியூனிக் பாதுகாப்பு மாநாடு

கெட்டி இமேஜஸ் வழியாக ஹலீல் சாகிர்காயா/அனடோலு

பிப்ரவரி 14, 2026 காலை 10:23 CET

ஃபெலிசியா ஸ்வார்ட்ஸ் எழுதியது

முனிச் - இறையாண்மை, மறுதொழில்மயமாக்கல் மற்றும் இராணுவ வலிமையை மையமாகக் கொண்டு உலகளாவிய ஒழுங்கை மறுசீரமைக்க டிரம்ப் நிர்வாகம் உதவுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஐரோப்பாவிற்கு அழைப்பு விடுத்தார்.

சனிக்கிழமை மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், கிரீன்லாந்தை இணைக்க டிரம்ப் நிர்வாகம் மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்ததற்காகவோ அல்லது சில சமயங்களில் ஐரோப்பா மீதான கடுமையான விமர்சனங்களுக்காகவோ மன்னிப்பு கேட்கவில்லை, ஆனால் அவர் ஒரு சமரச தொனியை எடுத்தார் - "பழைய நட்பை மீண்டும் உயிர்ப்பிக்க" அமெரிக்கா ஐரோப்பாவுடன் ஒத்துழைக்க விரும்புகிறது என்பதை வலியுறுத்தினார்.

"நட்பு நாடுகள் உடைந்த நிலையை நியாயப்படுத்துவதை நாங்கள் விரும்பவில்லை, அதை சரிசெய்ய என்ன தேவை என்பதைக் கணக்கிடுவதை விட," என்று ரூபியோ கூறினார். "அமெரிக்காவில் உள்ள எங்களுக்கு மேற்கத்திய நாடுகளின் நிர்வகிக்கப்பட்ட வீழ்ச்சியின் கண்ணியமான மற்றும் ஒழுங்கான பராமரிப்பாளர்களாக இருப்பதில் எந்த ஆர்வமும் இல்லை." 

கடந்த ஆண்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவிக்கு வருவதற்கு வழிவகுத்த உலகளாவிய ஒழுங்கை விமர்சிப்பதில் பங்கேற்குமாறு கூடியிருந்த உலகத் தலைவர்களிடம் ரூபியோ கெஞ்சினார். சர்வதேச நிறுவனங்களின் தோல்வி, தடையற்ற வர்த்தகம் மற்றும் எரிசக்தி கொள்கைகள் "நமது மக்களை வறுமையில் ஆழ்த்துகின்றன" என்றும், "நமது சமூகங்களின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வெகுஜன இடம்பெயர்வு" என்றும் அவர் கூறியது குறித்து நிர்வாகத்தின் புகார்களை அவர் மீண்டும் வலியுறுத்தினார். 

"நாங்கள் இந்த தவறுகளை ஒன்றாகச் செய்தோம், இப்போது ஒன்றாக, அந்த உண்மைகளை எதிர்கொண்டு முன்னேற வேண்டியது எங்கள் மக்களின் கடமை" என்று அவர் கூறினார். "இது எங்கள் விருப்பம், ஐரோப்பாவில் உள்ள எங்கள் நண்பர்களான உங்களுடன் சேர்ந்து இதைச் செய்வதே எங்கள் நம்பிக்கை." 

"அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும், நாங்கள் ஒன்றாகச் சேர்ந்தவர்கள்," என்று அவர் கூறினார்.  

வெள்ளிக்கிழமை உயர்மட்ட ஐரோப்பிய தலைவர்கள் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளை மீண்டும் கட்டியெழுப்பத் தயாராக இருப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து அவரது உரை வந்தது , ஆனால் அந்தக் கண்டம் அதன் சொந்த மரபுகளைப் பற்றி பெருமை கொள்கிறது, அதன் சொந்த விதிகளை அமல்படுத்தும் மற்றும் அமெரிக்கா உட்பட வெளியாட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க அழுத்தம் கொடுக்கும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியது.

தனது உரையில், ரூபியோ அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான பொருளாதார, இராணுவ, கலாச்சார மற்றும் ஆன்மீக தொடர்புகளை வலியுறுத்தினார் - ஆனால் ஒரு காலத்தில் மேற்கத்திய கூட்டணியை ஆதரித்த பொதுவான மதிப்புகளை குறைத்து மதிப்பிட்டார்.

"ஐரோப்பா வலுவாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஐரோப்பா உயிர்வாழ வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் கூறினார்.

அவர் மேலும் கூறினார்: "எங்கள் விதி எப்போதும் உங்களோடு பின்னிப் பிணைந்திருக்கும், ஏனென்றால் ஐரோப்பாவின் விதி எங்கள் சொந்த தேசிய பாதுகாப்பிற்கு ஒருபோதும் பொருத்தமற்றதாக இருக்காது என்பதை நாங்கள் அறிவோம்."

இந்த ஆண்டு மாநாட்டில் உக்ரைனின் தலைவிதி எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்த போதிலும், ஐக்கிய நாடுகள் சபை எவ்வாறு தோல்வியடைந்துள்ளது என்பதற்கான ஒரு உதாரணமாக மட்டுமே ரூபியோ ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு பற்றி குறிப்பிடத்தக்க வகையில் எதுவும் குறிப்பிடவில்லை.

"உக்ரைனில் நடந்த போரை இது தீர்க்கவில்லை. இன்னும் எட்டிப் பார்க்க முடியாத அமைதியைத் தேடி இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவருவதற்கு இன்று இங்குள்ள பல நாடுகளுடன் அமெரிக்கத் தலைமையும் கூட்டாண்மையும் தேவைப்பட்டது," என்று அவர் கூறினார்.

இருப்பினும், ரூபியோவின் ஐரோப்பா மீதான விமர்சனம், கடந்த ஆண்டு துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் கண்டத்தின் மீதான கடுமையான தாக்குதலை விட மென்மையானதாக இருந்தது, இருப்பினும் அது இன்னும் சில டிரம்ப் உதவியாளர்கள் ஐரோப்பாவில் அதிகரித்து வரும் MAGA கலாச்சாரப் போர்களை சுட்டிக்காட்டியது. 

"பல நூற்றாண்டுகளின் பகிரப்பட்ட வரலாறு, கிறிஸ்தவ நம்பிக்கை, கலாச்சாரம், பாரம்பரியம், மொழி, வம்சாவளி மற்றும் நாம் வாரிசாகப் பெற்ற பொதுவான நாகரிகத்திற்காக நமது முன்னோர்கள் ஒன்றாகச் செய்த தியாகங்களால், நாடுகள் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஆழமான பிணைப்புகளால் நாம் ஒருவருக்கொருவர் பிணைக்கப்பட்டுள்ளோம்," என்று அவர் கூறினார்.

ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், "வெளியுறவுச் செயலாளரின் உரையால் மிகவும் உறுதியளிக்கப்பட்டதாக" கூறினார், அவரை "நல்ல நண்பர்" மற்றும் "வலுவான கூட்டாளி" என்று அழைத்தார்.

"நிர்வாகத்தில் சிலர் இந்த தலைப்புகளில் கடுமையான தொனியைக் கொண்டுள்ளனர் என்பது எங்களுக்குத் தெரியும்," என்று அவர் அமெரிக்க ஜனாதிபதி அல்லது துணை ஜனாதிபதியின் பெயரைக் குறிப்பிடாமல் ஒப்புக்கொண்டார்.

ஆனால் அனைத்து ஐரோப்பியர்களும் தொனியில் ஏற்பட்ட மாற்றத்தால் அசைக்கப்படவில்லை.

"உண்மையில் எதுவும் மாறவில்லை, ஐரோப்பா இப்போது மிகவும் சுதந்திரமாகி, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறையிலும் அதிக பொறுப்பை ஏற்க வேண்டும்," என்று ஆஸ்திரியாவின் வெளியுறவு அமைச்சர் பீட் மெய்ன்-ரைசிங்கர் POLITICO இடம் கூறினார்.

ரூபியோவின் உரை தொனியில் மாற்றத்தைக் குறிப்பதாகக் கூறினர், ஆனால் அது அட்லாண்டிக் கடல்கடந்த உறவின் சாரத்தை பாதிக்கும் என்பதில் அவர்கள் நிச்சயமற்றவர்களாக இருந்தனர் என்று முனிச்சில் உள்ள ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகள் தெரிவித்தனர்.

"அவர் ஜே.டி. வான்ஸின் அவதூறு பேயிலிருந்து தப்பிக்க முயற்சிப்பது தெளிவாக இருந்தது, அவர் அமைதிப்படுத்தவும் உறுதியளிக்கவும் முயன்றார், ஆனால் அது மிகவும் உள்ளடக்கம் மற்றும் குறிப்பிட்ட தன்மை இல்லாததால் இறுதியில், அதன் தாக்கம் மிகவும் குறைவாகவே இருக்கும்" என்று செனட் ஆயுத சேவைகள் குழுவில் கனெக்டிகட் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் ரிச்சர்ட் புளூமெந்தால் கூறினார். 

"[கிரீன்லாந்திற்குப் பிறகு] அந்தப் பேச்சு பக்கத்தைத் திருப்புவது பற்றியது என்று நான் நினைக்கவில்லை, ஆனால் அந்த தருணத்தை மறந்துவிடுவது, ஆம், அவர் விரோதம் மற்றும் விரோதப் போக்கிலிருந்து பின்வாங்குவதற்கான எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை," என்று அவர் மேலும் கூறினார்.

செனட் நேட்டோ பார்வையாளர் குழுவில் உயர்மட்ட குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் தாம் டில்லிஸ், ரூபியோவுக்கு அதிக மதிப்பெண்கள் அளித்தார், நேட்டோ நிலைத்திருக்கும் என்று நேச நாட்டுத் தலைவர்களுக்கு உறுதியளிக்கும் அவரது முயற்சிகளை இந்த உரை வலுப்படுத்தியதாகக் கூறினார். 

"அது மிகவும் சிறப்பாக இருந்தது என்று நான் நினைத்தேன்," என்று டில்லிஸ் கூறினார். "வெள்ளை மாளிகை அதை ஒப்புக் கொள்ளாவிட்டால் அந்த உரை நிகழ்த்தப்பட்டிருக்காது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆம். எனவே அது மார்கோவின் செய்தி மட்டுமல்ல, அது ஜனாதிபதியின் செய்தியும் கூட என்று நான் நினைக்கிறேன்."

ஜோ கோல்ட் மற்றும் கிறிஸ் லுண்டே ஆகியோர் அறிக்கையிடலில் பங்களித்தனர்.

https://www.politico.eu/article/marco-rubio-msc-europe-we-belong-together/

லண்டனில் தீவிரமாக பரவி வரும் தட்டம்மை ; 34 சிறுவர்கள் பாதிப்பு

6 days 4 hours ago

லண்டனில் தீவிரமாக பரவி வரும் தட்டம்மை ; 34 சிறுவர்கள் பாதிப்பு 

16 Feb, 2026 | 07:08 PM

image

வடக்கு லண்டனில் பல பாடசாலைகளில் தட்டம்மை நோய் வேகமாக பரவி வருவதாகவும் குறைந்தது 34 சிறுவர்கள் தட்டம்மையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நோய் காரணமாக ஐந்து சிறுவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் முழுமையாக தடுப்பூசி செலுத்தவில்லை என்றும் அங்குள்ள பொது மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடும் உடல் நல பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய இந்த தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசிகள் தங்கள் பிள்ளைகளுக்கு செலுத்தப்பட்டதை உறுதி செய்துகொள்ளுமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

என்ஃபீல்ட் மற்றும் ஹாரிங்கியில் குறைந்தது 7 பாடசாலைகளில் தட்டம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டின் (2026) முதல் மாதத்தில் இங்கிலாந்து முழுவதும் 96 பேர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டதாகவும் இதில் மூன்றில் ஒரு பங்காக, என்ஃபீல்ட்டில் 34 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தட்டம்மையில் பாரிய தாக்கம் கொண்ட தொற்றானது பெரும்பாலும் பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளில் கற்கும் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களையே அதிகமாக பாதிக்கிறது என இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/238831

Checked
Sun, 02/22/2026 - 19:24
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe