உலக நடப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் 31 அமைப்புகளில் இருந்து வெளியேறுகிறது அமெரிக்கா : ட்ரம்ப்பின் அதிரடி உத்தரவு

6 hours 45 minutes ago

ஐக்கிய நாடுகள் சபையின் 31 அமைப்புகளில் இருந்து வெளியேறுகிறது அமெரிக்கா : ட்ரம்ப்பின் அதிரடி உத்தரவு

08 January 2026

5964.jpg?width=980&dpr=2&s=none&crop=non

அமெரிக்காவின் தேசிய நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதாகக் கூறி, ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய பிரிவுகள் உட்பட 66 சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்கா உடனடியாக வெளியேறுவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். 

ட்ரம்பினால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, அமெரிக்கா பின்வரும் அமைப்புகளில் இருந்து விலகுகிறது. 

1. ஐநா சார்ந்த அமைப்புகள்: ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு (UN Women), ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) உள்ளிட்ட 31 ஐ.நா அமைப்புகள். 

2. ஏனைய சர்வதேச அமைப்புகள்: சர்வதேச சூரியசக்தி கூட்டணி (International Solar Alliance), கொழும்புத் திட்டம் (Colombo Plan) உள்ளிட்ட 35 ஐ.நா அல்லாத அமைப்புகள். 

அமெரிக்க வரி செலுத்துவோரின் பணம் வீணடிக்கப்படுவதாகவும், இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் "அமெரிக்கா முதலில்" (America First) என்ற கொள்கைக்கும் தேசிய நலனுக்கும் முரணாக இருப்பதாகவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். 

குறிப்பாக, சர்வதேச நிதியுதவிகள் அமெரிக்காவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக அமைவதை அனுமதிக்க முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார். 

இந்த முடிவினால் சர்வதேச அளவில் சுகாதாரம், கல்வி, மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களுக்கு அமெரிக்கா வழங்கி வந்த பெருமளவிலான நிதியுதவி நிறுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. 

குறிப்பாக, இலங்கையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் கொழும்புத் திட்டம் (Colombo Plan) போன்ற அமைப்புகளில் அமெரிக்காவின் விலகல் ஆசிய பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The White House
No image previewWithdrawing the United States from International Organiza...
MEMORANDUM FOR THE HEADS OF EXECUTIVE DEPARTMENTS AND AGENCIES By the authority vested in me as President by the Constitution and the laws of the United

https://hirunews.lk/tm/439619/us-withdraws-from-31-united-nations-organizations-trumps-executive-order

காயங்களுடன் நியூயார்க் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட மதுரோவின் மனைவி சிலியா புளோரஸ்!

6 hours 58 minutes ago

காயங்களுடன் நியூயார்க் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட மதுரோவின் மனைவி சிலியா புளோரஸ்!

adminJanuary 7, 2026

Global-10.png?fit=940%2C788&ssl=1

வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் அமெரிக்க சிறப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் நியூயார்க் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இந்த நிகழ்வு உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிலியாவின் வழக்கறிஞர் மார்க் டோனெல்லி (Mark Donnelly), கைது நடவடிக்கையின் போது (Abduction) தனது கட்சிக்காரருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவித்தார். குறிப்பாக, அவரது விலா எலும்பு (Rib) முறிந்திருக்கலாம் அல்லது பலத்த சேதமடைந்திருக்கலாம் என அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

அவருக்கு உடனடியாக எக்ஸ்ரே (X-ray) மற்றும் முழுமையான மருத்துவப் பரிசோதனைகள் வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரோ மற்றும் சிலியா மீது போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இருப்பினும், தாங்கள் நிரபராதிகள் என இருவரும் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளனர்.

மதுரோ தன்னை ஒரு “போர்க்கைதி” (Prisoner of War) என்று அறிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் சர்வதேச அரசியலில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது. அடுத்தக்கட்ட விசாரணை மார்ச் 17-ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

https://globaltamilnews.net/2026/225910/

அமெரிக்காவின் வரி விதிப்புகளால் மோடி என் மீது வருத்தத்தில் இருக்கிறார் - ட்ரம்ப்

23 hours 20 minutes ago

அமெரிக்காவின் வரி விதிப்புகளால் மோடி என் மீது வருத்தத்தில் இருக்கிறார் - ட்ரம்ப்

07 Jan, 2026 | 04:29 PM

image

“அமெரிக்காவின் வரி விதிப்புகளால் மோடி என் மீது வருத்தத்தில் இருக்கிறார்” என்று கூறும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “இந்தியப் பிரதமர்  மோடி ஒரு மிகச் சிறந்த மனிதர். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது அவருக்குத் தெரியும். என்னை மகிழ்ச்சிப்படுத்துவது முக்கியம்” என்றும் கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு தொடர்ச்சியான எதிர்ப்பினை வெளிப்படுத்தி வரும் அமெரிக்கா இந்திய பொருட்கள் மீதான வரியை 50 வீதமாக உயர்த்தியது. இதை இந்தியா மிகக் கடுமையாக எதிர்த்தது. 

இந்நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையே அவ்வப்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையே ரஷ்ய கச்சா எண்ணெய் விவகாரத்தில் இந்தியா மீது அதிக வரியை அறவிட என்னால் முடியும் என்று ட்ரம்ப், குடியரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் திங்கட்கிழமை (5) தெரிவித்துள்ளார். 

மேலும் அவர், நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது மோடிக்குத் தெரியும் என்றும் கூறியுள்ளார்.

எனக்கும் இந்தியப் பிரதமர் மோடிக்கும் இடையே மிகச் சிறந்த நட்புறவு உள்ளது. ஆனால், இந்தியா அதிக வரி செலுத்துவதால் மோடி என் மீது வருத்தத்தில் இருக்கிறார். ஆனால், இப்போது இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது கனிசமாகக் குறைந்துள்ளது. 

அமெரிக்காவின் வரிக் கொள்கைகள் காரணமாக நாம் பணக்காரர்களாகி வருகிறோம். இதை அனைவரும் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன். இந்த வரி விதிப்புகளால் அமெரிக்கா முன்பை விட பொருளாதார ரீதியாகவும் தேசிய பாதுகாப்பு ரீதியாகவும் வலிமையானதாகவும் மரியாதைக்குரிய நாடாகவும் விளங்குகிறது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். 

https://www.virakesari.lk/article/235450

அட்லாண்டிக் கடலில் பெரும் பதற்றம்: ரஷ்யா – அமெரிக்கா கடும் போட்டி

1 day ago

images.jpg?resize=275%2C183&ssl=1

அட்லாண்டிக் கடலில் பெரும் பதற்றம்: ரஷ்யா – அமெரிக்கா கடும் போட்டி.

அமெரிக்கப் படைகளால் தீவிரமாகத் துரத்தப்படும் ‘மரினேரா’ எனப்படும் எண்ணெய் கப்பலுக்குப் பாதுகாப்பாக ரஷ்யா தனது நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் பிற கடற்படை கப்பல்களை அனுப்பியுள்ளதாக அதிர்ச்சித் தகவலை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

ஆரம்பத்தில் ‘Bella 1’ என்று அழைக்கப்பட்ட இக்கப்பல், வெனிசுலா மீது அமெரிக்கா விதித்துள்ள தடையை மீறி எண்ணெய் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த மாதம் கரீபியன் கடலில் அமெரிக்க கடலோரக் காவல்படை இதனை மறிக்க முயன்றபோது, கப்பல் பணியாளர்கள் அதில் ஏற அனுமதி மறுத்து அட்லாண்டிக் கடலை நோக்கித் தப்பினர்.

தப்பியோடும் வழியில் கப்பல் பணியாளர்கள் அதன் மேல்பகுதியில் ரஷ்யக் கொடியைப் பெயிண்ட் செய்ததுடன், கப்பலின் பெயரை ‘மரினேரா’ என மாற்றினர்.

தற்போது இது உத்தியோகபூர்வமாக ரஷ்யாவின் சோச்சி துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இக்கப்பல் தற்போது ஸ்கொட்லாந்து மற்றும் ஐஸ்லாந்துக்கு இடையிலான வடக்கு அட்லாண்டிக் பகுதியில் கடும் குளிரிலும் மோசமான வானிலையிலும் பயணித்து வருகிறது.

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கடந்த சனிக்கிழமை அமெரிக்க விசேட படைகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ட்ரம்ப் நிர்வாகம் தனது கடல்சார் முற்றுகையைத் தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்கா இக்கப்பலை மூழ்கடிப்பதை விட, அதைக் கைப்பற்றவே விரும்புகிறது.

இதற்காக பிரித்தானியாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு சுமார் 10 போக்குவரத்து விமானங்கள் மற்றும் சிறப்பு உலங்கு வானூர்திகள் வந்து சேர்ந்துள்ளன. கப்பலின் பெயர் மாறினாலும், அதன் தனித்துவமான அடையாள எண் மாறாததால், சர்வதேச சட்டப்படி அதைக் கைப்பற்ற தமக்கு அதிகாரம் இருப்பதாக அமெரிக்கா வாதிடுகிறது.

சர்வதேச கடற்பரப்பில் ரஷ்யக் கொடியுடன் பயணிக்கும் கப்பலுக்கு அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் தேவையற்ற நெருக்கடியைக் கொடுப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சு சாடியுள்ளது

“கடல் வழிப் பயணச் சுதந்திரம்” பற்றிப் பேசும் நாடுகள், அதனைத் தாமும் கடைப்பிடிக்க வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.

இந்த விவகாரம், யுக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதி ட்ரம்ப் எடுத்து வரும் ராஜதந்திர முயற்சிகளுக்குப் பெரும் சவாலாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஒருபுறம் சமாதானப் பேச்சுக்கள் நடக்கையில், மறுபுறம் நடுக்கடலில் இரு நாட்டுப் படைகளும் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவாகியுள்ளது.

https://athavannews.com/2026/1458682

ஐரோப்பா முழுவதுமான பனிப்பொழிவில் ஆறு பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து!

1 day 8 hours ago

SNOW.jpg?resize=750%2C375&ssl=1

ஐரோப்பா முழுவதுமான பனிப்பொழிவில் ஆறு பேர் உயிரிழப்பு;  நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து! 

கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டமான வானிலை காரணமாக ஐரோப்பா முழுவதும் பரவலான பயணத் தடை ஏற்பட்டுள்ளது.

கண்டத்தில் வானிலை தொடர்பான அசம்பாவித சம்பவங்களில் மொத்தம் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்சின் இரண்டு தனித்தனி பகுதிகளில் பனிமூட்டமான வானிலையால் இடம்பெற்ற வாகன விபத்தில் 05 பேர் உயிரிழந்தனர். 

அதே நேரத்தில் போஸ்னியாவின் தலைநகர் சரஜெவோவில் 16 அங்குலம் (40 செ.மீ) பனிப்பொழிவு ஏற்பட்டதில் ஒரு பெண் உயிரிழந்தார்.

இதேவ‍ேளை, கடுமையான பனி மூட்டமன வானிலையால் ஐரோப்பா முழுவதும் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கான பயணிகள் பாரிஸ் மற்றும் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கின்றனர்.

புதன்கிழமை (07) வரை இடையூறு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://athavannews.com/2026/1458633

அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால் உக்ரேனுக்கு படைகளை அனுப்ப இங்கிலாந்து, பிரான்ஸ் முடிவு!

1 day 8 hours ago

Venezuela-1.jpg?resize=750%2C375&ssl=1

அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால் உக்ரேனுக்கு படைகளை அனுப்ப இங்கிலாந்து, பிரான்ஸ் முடிவு!

ரஷ்யாவுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால், உக்ரேனில் படைகளை நிலைநிறுத்துவதற்கான பிரகடனத்தில் பிரான்சுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) அறிவித்துள்ளார்.

பாரிஸில் உக்ரேனின் நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், எதிர்கால படையெடுப்பைத் தடுக்க இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் “உக்ரேன் முழுவதும் இராணுவ மையங்களை நிறுவும்” என்றும் அவர் கூறினார்.

அதேநேரத்தில், பின்னர் உக்ரேனில் ஆயிரக்கணக்கான படையினர் நிறுத்தப்படலாம் என்று பிரான்ஸ்  ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்  கூறினார்.

உக்ரேனுக்கான வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களை நேச நாடுகள் பெரும்பாலும் ஒப்புக்கொண்டன.

மேலும் ஒரு போர் நிறுத்தத்தைக் கண்காணிப்பதில் அமெரிக்கா முன்னணியில் இருக்கும் என்று முன்மொழிந்தன. 

ஆனால் பிரதேசத்தின் முக்கிய பிரச்சினை இன்னும் விவாதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் பிரான்ஸ் தலைநகரில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்புகள் குறித்து மொஸ்கோ இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்ன் 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கினார்.

மேலும் மாஸ்கோ தற்போது உக்ரேன் பிரதேசத்தில் சுமார் 20% கட்டுப்பாட்டில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2026/1458630

அமெரிக்காவுக்கு 2 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெயை ஏற்றுமதி செய்யவுள்ள வெனிசுலா!

1 day 8 hours ago

Trump.jpg?resize=750%2C375&ssl=1

அமெரிக்காவுக்கு 2 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெயை ஏற்றுமதி செய்யவுள்ள வெனிசுலா!

கராகஸ் மற்றும் வொஷிங்டன் இடையே 2 பில்லியன் டொலர் மதிப்புள்ள வெனிசுலா மசகு எண்ணெய் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (06) தெரிவித்தார்.

இது சீனாவிலிருந்து விநியோகங்களைத் திசைதிருப்பும் அதே வேளையில் வெனிசுலாவுக்கு எண்ணெய் உற்பத்தியில் ஆழமான குறைப்புகளைத் தவிர்க்க உதவும் ஒரு முக்கிய பேச்சுவார்த்தையாகும்.

அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்குத் சந்தையை திறந்துவிடவும் இல்லையெனில் இராணுவத் தலையீட்டை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்படும் என்றும் ட்ரம்பின் கோரிக்கைக்கு வெனிசுலா அரசாங்கம் பதிலளிக்க ஆரம்பித்துள்ளது என்பதற்கான வலுவான அறிகுறியாக இந்த ஒப்பந்தம் உள்ளது. 

வெனிசுலாவின் எண்ணெய் துறையில் அமெரிக்க மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு “முழுமையான அணுகலை” வழங்க இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் விரும்புவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

கடந்த டிசம்பர் நடுப்பகுதியில் இருந்து ட்ரம்ப் விதித்த ஏற்றுமதி தடை காரணமாக வெனிசுலாவில் மில்லியன் கணக்கான பீப்பாய்கள் எண்ணெய் கப்பல்களிலும் சேமிப்பு தொட்டிகளிலும் நிரப்பப்பட்டுள்ளன. 

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கத்தின் மீது அதிகரித்து வரும் அமெரிக்க அழுத்தத்தின் ஒரு பகுதியாக இந்த முற்றுகை இருந்தது.

இது கடந்த வார இறுதியில் அமெரிக்கப் படைகள் அவரைக் கைப்பற்றுவதில் உச்சக்கட்டத்தை அடைந்தது. 

வெனிசுலாவின் உயர் அதிகாரிகள் மதுரோவின் கைதினை ஒரு கடத்தல் என்று கூறியுள்ளனர் – மேலும் அமெரிக்கா நாட்டின் பரந்த எண்ணெய் இருப்புக்களை திருட முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் புதிய உடன்பாடு மூலமாக வெனிசுலா 30 முதல் 50 மில்லியன் பீப்பாய்கள் வரை அனுமதிக்கப்பட்ட மசகு எண்ணெயை அமெரிக்காவிற்கு ஒப்படைக்கும் என்று ட்ரம்ப் ஒரு சமூக ஊடகப் பதிவில் செவ்வாயன்று தெரிவித்தார்.

இது குறித்து மேலும் குறிப்பிட்ட ட்ரம்ப், 

இந்த எண்ணெய் அதன் சந்தை விலையில் விற்கப்படும், மேலும் அந்த பணம் அமெரிக்க ஜனாதிபதியாக என்னால் கட்டுப்படுத்தப்படும், இதனால் அது வெனிசுலா மற்றும் அமெரிக்க மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்படுவது உறுதிபடுத்தப்படும் – என்று கூறினார்.

மேலும் எண்ணெய் கப்பல்களில் இருந்து எடுக்கப்பட்டு நேரடியாக அமெரிக்க துறைமுகங்களுக்கு அனுப்பப்படும் என்றும் ட்ரம்ப் கூறினார்.

இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் பொறுப்பேற்றுள்ளார்.

Getty Images President Donald Trump confirms a US military operation in Venezuela during a press conference on 3 January

இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் வெனிசுலா எண்ணெயின் அளவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அமெரிக்க மசகு எண்ணெய் விலை 1.5% க்கும் அதிகமாக சரிந்தது.

இதேவ‍ேளை, 2020 இல் வெனிசுலாவுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடைகளை விதித்ததிலிருந்து கடந்த பத்தாண்டுகளில் வெனிசுலாவின் எண்ணெயை வாங்குபவர்களில் சீனா முன்னணியில் இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2026/1458627

அமெரிக்காவின் அடுத்த இலக்காக வாய்ப்புள்ள 5 நாடுகள் எவை?

1 day 22 hours ago

கியூபா உள்பட அமெரிக்காவின் அடுத்த இலக்காக வாய்ப்புள்ள 5 நாடுகள் எவை?

அமெரிக்கா - வெனிசுவேலா, டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • டாம் பென்னட்

  • 6 ஜனவரி 2026, 07:22 GMT

    புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலம், அவரது வெளியுறவுக்கொள்கையின் லட்சியங்களால் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

வெனிசுவேலா அதிபர் மற்றும் அவரது மனைவியை அந்நாட்டின் தலைநகர் கரகாஸில் இருந்து ஓர் அதிரடி இரவு நேரத் தாக்குதல் மூலம் கைது செய்ததன் வழியாக, வெனிசுவேலாவுக்கு எதிராக விடுத்த எச்சரிக்கைகளை டிரம்ப் நிஜமாக்கியுள்ளார்.

இந்த நடவடிக்கை குறித்து விவரிக்கும்போது, டிரம்ப் 1823-ஆம் ஆண்டின் 'மன்றோ கோட்பாட்டையும்', மேற்கு அரைக்கோளத்தில் (வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களை உள்ளடக்கிய பகுதி) அமெரிக்காவின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் அதன் வாக்குறுதியையும் மீண்டும் கையில் எடுத்தார். மேலும், அதற்கு "டான்றோ கோட்பாடு" என்று மறுபெயரிட்டார்.

சமீப நாட்களில் பிற நாடுகளுக்கு எதிராக அவர் விடுத்துள்ள சில எச்சரிக்கைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

கிரீன்லாந்து

கிரீன்லாந்தில் பிட்டுஃபிக் விண்வெளித் தளம் என்ற ஒரு ராணுவத் தளம் அமெரிக்காவுக்கு ஏற்கெனவே உள்ளது. ஆனால், டிரம்ப் அந்த முழுத்தீவையும் கைப்பற்ற விரும்புகிறார்.

"தேசிய பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் நமக்கு கிரீன்லாந்து தேவை" என்று செய்தியாளர்களிடம் கூறிய அவர், அந்தப் பிராந்தியம் முழுவதும் "ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்கள் நிறைந்துள்ளன" என்றும் குறிப்பிட்டார்.

டென்மார்க் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியான இந்த பரந்த தீவு, அமெரிக்காவுக்கு வடகிழக்கே சுமார் 2,000 மைல் (3,200 கி.மீ) தொலைவில் அமைந்துள்ளது.

ஸ்மார்ட்போன்கள், மின்சார வாகனங்கள் மற்றும் ராணுவத் தளவாடங்களின் உற்பத்திக்குத் தேவையான அரிய வகை கனிமங்கள் கிரீன்லாந்தில் அதிகளவில் உள்ளன.

தற்போது, இந்த கனிமங்களின் உற்பத்தியில் அமெரிக்காவை விட சீனா வெகுவாக முன்னிலையில் உள்ளது.

வட அட்லாண்டிக் பகுதியில் கிரீன்லாந்து ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இது ஆர்க்டிக் வட்டத்திற்குள் நுழைவதற்கான வழியாக திகழ்கிறது. வரும் ஆண்டுகளில் துருவப் பனிக்கட்டிகள் உருகுவதால், புதிய கப்பல் போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீவை அமெரிக்கா கட்டுப்படுத்துவது என்பது ஒரு "கற்பனை" என்று டிரம்புக்கு கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ் ஃப்ரெடெரிக் நீல்சன் பதிலடி கொடுத்துள்ளார்.

"இனி அழுத்தங்கள் வேண்டாம். மறைமுகக் குறிப்புகள் வேண்டாம். இணைத்துக்கொள்வது போன்ற கற்பனைகள் வேண்டாம். நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம். ஆனால், அது முறையான வழிகளிலும், சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்தும் நடக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

கொலம்பியா

வெனிசுவேலாவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு சில மணிநேரங்களுக்குப் பிறகு, கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோவை டிரம்ப் எச்சரித்துள்ளார்.

வெனிசுவேலாவின் மேற்கு அண்டை நாடான கொலம்பியாவும் கணிசமான எண்ணெய் வளங்களைக் கொண்டுள்ளது. இது தங்கம், வெள்ளி, மரகதம், பிளாட்டினம் மற்றும் நிலக்கரி ஆகியவற்றின் முக்கிய உற்பத்தியாளராகவும் உள்ளது.

இப்பிராந்தியத்தின் போதைப்பொருள் வர்த்தகத்தில், குறிப்பாக 'கோகைன்' கடத்தலில் இது ஒரு முக்கிய மையமாகத் திகழ்கிறது.

கடந்த செப்டம்பர் மாதம் முதல், கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கூறி படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தத் தொடங்கியது.

இதன் விளைவாக, கொலம்பியாவின் இடதுசாரி அதிபருடன் டிரம்ப் தொடர் மோதலில் ஈடுபட்டுள்ளார்.

போதைப்பொருள் கும்பல்கள் "செழிக்க" பெட்ரோ அனுமதிக்கிறார் எனக் கூறி, கடந்த அக்டோபரில் அமெரிக்கா அவர் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது.

"கோகைன் தயாரிப்பதையும் அதை அமெரிக்காவுக்கு விற்பதையும் விரும்பும் ஒரு மனிதனால் கொலம்பியா வழிநடத்தப்படுகிறது. அவர் அதை நீண்ட காலத்திற்குச் செய்யப் போவதில்லை" என்று ஞாயிற்றுக்கிழமை ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பேசும்போது டிரம்ப் கூறினார்.

கொலம்பியாவைக் குறிவைத்து அமெரிக்கா ஒரு ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளுமா என்று கேட்டதற்கு, டிரம்ப், "அது எனக்கு நன்றாகத் தோன்றுகிறது" என்று பதிலளித்தார்.

வரலாற்று ரீதியாக, அமெரிக்காவின் போதைப்பொருள் ஒழிப்புப் போரில் கொலம்பியா ஒரு நெருங்கிய கூட்டாளியாக இருந்து வருகிறது. போதைப்பொருள் கும்பல்களை எதிர்கொள்ள ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை ராணுவ உதவியாக அந்நாடு அமெரிக்காவிடமிருந்து பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இரான்

இரானில் தற்போது அரசுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

அங்கு போராட்டக்காரர்கள் மேலும் கொல்லப்பட்டால், அந்த நாட்டு அதிகாரிகள் மீது "மிகக் கடுமையான தாக்குதல்" நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

"நாங்கள் இதை மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். கடந்த காலத்தைப் போலவே அவர்கள் மக்களைக் கொல்லத் தொடங்கினால், அமெரிக்காவிடமிருந்து அவர்கள் மிகக் கடுமையான பதிலடியைச் சந்திப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்," என்று ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

கோட்பாட்டு ரீதியாக, இரானானது "டான்றோ கோட்பாட்டின்" எல்லைக்கு வெளியே இருந்தாலும், கடந்த ஆண்டு அதன் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இரான் ஆட்சிக்கு எதிராக மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாக டிரம்ப் ஏற்கெனவே எச்சரித்துள்ளார்.

அணு ஆயுதங்களை உருவாக்கும் இரானின் திறனை அழிப்பதை நோக்கமாகக் கொண்டு இஸ்ரேல் ஒரு பெரிய அளவிலான நடவடிக்கையைத் தொடங்கியது.

இதன் உச்சக்கட்டமாக 12 நாட்கள் நீடித்த இஸ்ரேல்-இரான் போர் நடந்தது. அமெரிக்காவும் இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்களை நடத்தியது.

கடந்த வாரம் மார்-ஏ-லாகோ இல்லத்தில் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே நடந்த சந்திப்பில், இரான் விவகாரமே முதன்மையானதாக இருந்ததாகக் கூறப்பட்டது.

2026-ஆம் ஆண்டில் இரான் மீது புதிய தாக்குதல்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நெதன்யாகு ஆலோசித்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மெக்சிகோ

2016-ஆம் ஆண்டில் டிரம்ப் ஆட்சிக்கு வந்தபோது, மெக்சிகோவுடனான தெற்கு எல்லையில் "சுவர் எழுப்பப்படும்"என்ற முழக்கம் மிக முக்கியமானதாக இருந்தது.

2025-ஆம் ஆண்டு மீண்டும் பதவியேற்ற முதல் நாளிலேயே, மெக்சிகோ வளைகுடாவை , "அமெரிக்க வளைகுடா" என்று பெயர் மாற்றுவதற்கான நிர்வாக ஆணையில் அவர் கையெழுத்திட்டார்.

அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதையோ அல்லது சட்டவிரோத குடியேற்றத்தையோ தடுப்பதற்கு மெக்சிகோ அதிகாரிகள் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அவர் அடிக்கடி குற்றம் சாட்டி வருகிறார்.

ஞாயிற்றுக்கிழமை பேசிய அவர், மெக்சிகோ வழியாக போதைப்பொருள் "பெருக்கெடுத்து ஓடுவதாகவும்", நாம் "நிச்சயமாக ஏதாவது செய்ய வேண்டியிருக்கும்" என்றும் கூறினார்.

அங்குள்ள போதைப்பொருள் கும்பல்கள் "மிகவும் வலிமையாக" இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷைன்பாம், அமெரிக்கா மெக்சிகோ மண்ணில் எந்தவொரு ராணுவ நடவடிக்கையையும் மேற்கொள்வதை வெளிப்படையாக நிராகரித்துள்ளார்.

கியூபா

புளோரிடாவுக்கு தெற்கே 90 மைல் (145 கி.மீ) தொலைவில் அமைந்துள்ள இந்த தீவு நாடு, 1960-களின் தொடக்கத்தில் இருந்தே அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டு வருகிறது.

இது நிக்கோலஸ் மதுரோவின் வெனிசுவேலாவுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தது.

கியூபா "வீழ்வதற்குத் தயாராக" இருப்பதால், அங்கு அமெரிக்க ராணுவத் தலையீடு தேவைப்படாது என்று டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

"நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். அது தானாகவே வீழ்வது போல் தெரிகிறது," என்று அவர் கூறினார்.

மேலும், "அவர்களால் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் கியூபாவுக்கு இப்போது வருமானம் இல்லை," என்று தெரிவித்த டிரம்ப் , "அவர்கள் தங்களுடைய வருமானம் முழுவதையும் வெனிசுவேலாவிடமிருந்து, குறிப்பாக வெனிசுவேலாவின் எண்ணெயிலிருந்து பெற்றனர்," என்றும் குறிப்பிட்டார்.

கியூபாவுக்குத் தேவையான எண்ணெயில் சுமார் 30% வெனிசுவேலாவால் வழங்கப்படுவதாகத் தெரிகிறது. இப்போது மதுரோ பதவியில் இல்லாததால், அந்த விநியோகம் முடங்கும்பட்சத்தில் ஹவானா (கியூபாவின் தலைநகரம்) பெரும் பாதிப்புக்குள்ளாகும்.

கியூப குடியேறிகளின் மகனும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருமான மார்கோ ரூபியோ, கியூபாவில் ஆட்சி மாற்றத்தை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்.

சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் ஹவானாவில் வசிப்பவராகவோ அல்லது அங்குள்ள அரசாங்கத்தில் இருப்பவராகவோ இருந்தால், நான் கவலைப்படுவேன். குறைந்தபட்சம் ஒரு சிறிய அளவாவது கவலை கொள்வேன்"என்றார்.

மேலும், "அதிபர் பேசுகிறார் என்றால், நீங்கள் அதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்," என்றும் அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cje1952wzwvo

'நான் ஒரு போர்க்கைதி': அமெரிக்க நீதிமன்றத்தில் மதுரோ பேசியது என்ன?

2 days 7 hours ago

'நான் ஒரு போர்க்கைதி': அமெரிக்க நீதிமன்றத்தில் மதுரோ பேசியது என்ன?

வெனிசுவேலா - அமெரிக்கா, மதுரோ, டிரம்ப், நியூயார்க் நீதிமன்றம்

பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,நியூயார்க் நீதிமன்றத்தில் மதுரோவும் அவரது மனைவியும் ஆஜர்படுத்தப்பட்டதை சித்தரிக்கும் வரைபடம்

கட்டுரை தகவல்

  • மெடலின் ஹால்பெர்ட்

  • நியூயார்க் நீதிமன்றத்தில் இருந்து

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்காவில் வெனிசுவேலா தலைவர் நிக்கோலஸ் மதுரோ முதன்முறையாக நியூயார்க் நகர நீதிமன்ற அறைக்குள் நுழைவதற்குச் சில கணங்களுக்கு முன்பு, அவரது கால்களில் பூட்டப்பட்டிருந்த விலங்குகள் உரசிக்கொள்ளும் சத்தம் கேட்டது.

பின்னர் அவர், நிரம்பி வழிந்த செய்தியாளர்களிடமும் பொதுமக்களிடமும் தான் இப்போதுதான் "கடத்தப்பட்டதாக" கூறினார்.

அவர் நுழைந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, நீதிபதி ஆல்வின் ஹெல்லர்ஸ்டைன், விசாரணை நடவடிக்கைகளைத் தொடங்குவதற்காக மதுரோவிடம் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு கேட்டார்.

"நான் நிக்கோலஸ் மதுரோ. நான் வெனிசுவேலா குடியரசின் அதிபர், நான் ஜனவரி 3ஆம் தேதி முதல் இங்கு கடத்தப்பட்டு இருக்கிறேன்," என்று அவர் நீதிமன்றத்தில் ஸ்பானிய மொழியில் அமைதியாக கூறினார்.

பின்னர் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் நீதிமன்றத்திற்காக அதை மொழிபெயர்த்தார். "நான் வெனிசுவேலாவின் கராகஸில் உள்ள எனது வீட்டில் வைத்து சிறைபிடிக்கப்பட்டேன்." என்றார் மதுரோ.

மதுரோ பேசுகையில் விரைந்து குறுக்கிட்ட 92 வயதான நீதிபதி, "இவை அனைத்தையும் பற்றிப் பேசுவதற்கு ஒரு நேரமும் இடமும் வரும்" என்று கூறினார்.

திங்கட்கிழமை பிற்பகல் நடந்த அந்த பரபரப்பான 40 நிமிட குற்றவியல் விசாரணையின் போது, மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸும் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று வாதிட்டனர்.

"நான் நிரபராதி. நான் ஒரு கண்ணியமான மனிதன்," என்று மதுரோ கூறினார். ஃபுளோரஸ் தானும் "முற்றிலும் நிரபராதி" என்று கூறினார்.

வெனிசுவேலா - அமெரிக்கா, மதுரோ, டிரம்ப், நியூயார்க் நீதிமன்றம்

பட மூலாதாரம்,XNY/Star Max/GC Images

63 வயதான மதுரோவும் அவரது மனைவியும் சனிக்கிழமை வெனிசுவேலாவில் அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்ட பின்னர், நியூயார்க் கொண்டு செல்லப்பட்டனர். இது ராணுவத் தளங்கள் மீதான தாக்குதல்களையும் கொண்ட ஒரு திடீர் இரவு நேர நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.

நீலம் மற்றும் ஆரஞ்சு நிற சட்டைகள் மற்றும் காக்கி நிற பேன்ட் அணிந்திருந்த அவர்கள், விசாரணை நேரத்தில் ஸ்பானிய மொழிபெயர்ப்பைக் கேட்பதற்காக ஹெட்ஃபோன் அணிந்திருந்தனர்; அவர்களுக்கு இடையில் ஒரு வழக்கறிஞர் அமர்ந்திருந்தார். மதுரோ ஒரு மஞ்சள் நிற சட்டப் புத்தகத்தில் நுணுக்கமாகக் குறிப்புகள் எடுத்துக்கொண்டார். விசாரணைக்குப் பிறகு அதைத் தன்னுடன் வைத்துக்கொள்ளலாமா என்று நீதிபதியிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்.

மதுரோ அறைக்குள் நுழைந்த போது, பார்வையாளர்களில் இருந்த பலரை நோக்கித் தலையசைத்து அவர்களை வாழ்த்தினார்.

விசாரணை நடவடிக்கைகள் முழுவதும் அவர் இந்த அமைதியான மற்றும் உணர்ச்சியற்ற தன்மையை தொடர்ந்தார். பொதுமக்கள் பகுதியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் திடீரென்று மதுரோ தனது குற்றங்களுக்காக "விலை கொடுக்க நேரிடும்" என்று கத்திய போதும் அவர் அதே அமைதியைக் கடைப்பிடித்தார்.

"நான் அதிபர் மற்றும் போர்க்கைதி," என்று அவர் பார்வையாளர்களில் இருந்த அந்த நபரை நோக்கி ஸ்பானிய மொழியில் உரக்க கூறினார். பின்னர் அந்த நபர் அறையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

நீதிமன்றத்தில் இருந்த மற்றவர்களுக்கும் இந்த நடவடிக்கைகள் உணர்ச்சிப்பூர்வமானவையாக இருந்தன. வெனிசுவேலாவைச் சேர்ந்த செய்தியாளர் மைபோர்ட் பெட்டிட், மதுரோ கைது செய்யப்பட்டபோது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்கள் கராகஸில் உள்ள ஃபியூர்டே டியுனாவுக்கு அருகிலுள்ள தனது குடும்பத்திற்கு சொந்தமான வீட்டை சேதப்படுத்தியதாகக் கூறினார்.

தனது முன்னாள் தலைவர் அமெரிக்க மார்ஷல்களால் சிறைச்சாலை உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதைப் பார்ப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது என்று அவர் கூறினார்.

வெனிசுவேலா - அமெரிக்கா, மதுரோ, டிரம்ப், நியூயார்க் நீதிமன்றம்

பட மூலாதாரம்,TRUTH SOCIAL/DONALD TRUMP

மதுரோவின் மனைவி ஃபுளோரஸ், வார இறுதியில் கைது செய்யப்பட்ட போது ஏற்பட்ட காயங்களுக்காக கண்கள் மற்றும் நெற்றியில் கட்டுகளுடன் மிகவும் அமைதியாக இருந்தார்.

அவர் மெதுவாகப் பேசினார், அதே நேரத்தில் அவரது வழக்கறிஞர்கள் அவருக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

வழக்கு விசாரணையின் போது மதுரோவும் அவரது மனைவியும் பிணை கோரவில்லை. ஆனால் பின்னர் அவ்வாறு செய்யலாம்.

போதைப்பொருள் பயங்கரவாத சதி, கோகெயின் இறக்குமதி சதி, இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருத்தல் மற்றும் இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருக்க சதி செய்ததாக மதுரோ மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

மதுரோவின் மனைவி, மகன் மற்றும் பலருடன் சேர்த்து அவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த நீதிமன்ற விசாரணை மார்ச் 17ஆம் தேதி நடக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cz7yq5ddzjno

போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் தான் குற்றவாளி அல்ல – நிக்கோலஸ் மதுரோ தெரிவிப்பு!

2 days 7 hours ago

Nicolas-Maduro.jpg?resize=750%2C375&ssl=

போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் தான் குற்றவாளி அல்ல – நிக்கோலஸ் மதுரோ தெரிவிப்பு!

வெனிசுலா தலைநகர் கராகஸில் ஒரு இராணுவ நடவடிக்கையில் அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வெளியேற்றப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும் திங்களன்று (05) மன்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் முதன்முதலாக முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் தான் குற்றவாளி அல்ல என்று நிக்கோலஸ் மதுரோ கூறினார்.

அதேநேரம், மதுரோவின் மனைவி சிலியா புளோரஸும் குற்றமற்றவர் என்று வாதிட்டார். 

அரை மணி நேர விசாரணைக்கு முன்னதாக, மதுரோவுக்கு ஆதரவான மற்றும் எதிரான டஜன் கணக்கான போராட்டக்காரர்கள் நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்தனர்.

அவர் கணுக்கால்களில் விலங்கிடப்பட்டு ஆரஞ்சு மற்றும் பழுப்பு நிற சிறைச்சாலை உடையுடன் நீதிபதி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, நான் நிரபராதி. நான் குற்றவாளி இல்லை. நான் ஒரு ஒழுக்கமான மனிதன். நான் இன்னும் என் நாட்டின் ஜனாதிபதிதான் என்று 63 வயதான மதுரோ ஒரு மொழிபெயர்ப்பாளரின் மூலம் நீதிபதி ஆல்வின் ஹெல்லர்ஸ்டீனிடம் வலியுறுத்தினார்.

விசாரணைகளின் பின்னர் வழக்கு மார்ச் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும்மன்ஹாட்டனில் உள்ள நீதிமன்றத்தில் உரையாற்றியபோது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வடக்கே சில மைல்கள் தொலைவில் ஒரு அவசரக் கூட்டத்தை நடத்தியது.

அங்கு ஒரு டஜன் நாடுகள் அமெரிக்காவின் “ஆக்கிரமிப்பு குற்றத்தை” கண்டித்தன.

மேலும் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டத்தை மீறுவதாகக் கூறினார்.

உலகெங்கிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்ட ஒரு நடவடிக்கையில் அமெரிக்க சிறப்புப் படைகளால் கைது செய்யப்பட்ட நிக்கோலஸ் மதுரோ 

போதைப்பொருள் பயங்கரவாதம், சதி, கொக்கெய்ன் இறக்குமதி சதி மற்றும் இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.

https://athavannews.com/2026/1458497

கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கு அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை – டென்மார்க் பிரதமர்

3 days 5 hours ago

கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கு அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை – டென்மார்க் பிரதமர்

05 January 2026

1767590181_376108_hirunews.jpg

"கிரீன்லாந்தை கைப்பற்றுவது தொடர்பான அச்சுறுத்தல்களை நிறுத்துங்கள்" என்று டென்மார்க் பிரதமர் டொனால்ட் ட்ரம்பிடம் கூறியுள்ளார். 

மேலும் "அமெரிக்கா கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டிய அவசியம் பற்றி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை" என்றும் , டென்மார்க் இராச்சியத்தில் உள்ள மூன்று நாடுகளில் எதையும் இணைக்க அமெரிக்காவிற்கு எந்த உரிமையும் இல்லை" என்றும் டென்மார்க் பிரதமர் தெரிவித்துள்ளார். 

கிரீன்லாந்தின் இயற்கை வளங்கள் மற்றும் அதன் முக்கியமான புவியியல் இருப்பிடம் காரணமாக அமெரிக்கா அதன் மீது ஆர்வம் காட்டினாலும், அங்குள்ள மக்கள் அமெரிக்காவுடன் இணைவதை விரும்பவில்லை. 

அமெரிக்காவின் இத்தகைய அழுத்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை பாதிக்கும் என டென்மார்க் எச்சரித்துள்ளது. 

அதேசமயம், வெனிசுலாவில் அமெரிக்கா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் மற்றும் அதன் ஆதிக்க மனப்பான்மை சர்வதேச அரசியலில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

https://hirunews.lk/tm/439137/us-has-no-right-to-annex-greenland-danish-prime-minister

வெனிசுவேலா மீதான தாக்குதல் அமெரிக்காவுக்கே பிரச்னையாக மாறுமா? உள்நாட்டிலேயே கிளம்பும் எதிர்ப்பு

3 days 6 hours ago

வெனிசுவேலா மீதான தாக்குதல் அமெரிக்காவுக்கே பிரச்னையாக மாறுமா? உள்நாட்டிலேயே கிளம்பும் எதிர்ப்பு

அமெரிக்கா - வெனிசுவேலா, டிரம்ப், மதுரோ

பட மூலாதாரம்,US government

படக்குறிப்பு,அதிபர் டிரம்ப் மற்றும் சிஐஏ இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப் ஆகியோர் வாஷிங்டனில் இருந்து வெனிசுவேலா மீதான அமெரிக்கத் தாக்குதலைப் பார்வையிட்டனர்.

கட்டுரை தகவல்

  • ஆண்டனி ஸூர்ச்சர்

  • வட அமெரிக்க செய்தியாளர்

  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

வெனிசுவேலாவில் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியப்படுத்தும் ரகமான ஒரு இரவு நேரத் தாக்குதலைத் தொடங்கிய பிறகு, டொனால்ட் டிரம்ப் இப்போது ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பும் செயலில் இறங்குவது போல் தெரிகிறது.

சனிக்கிழமை காலை தனது மார்-ஏ-லகோ ஓய்வு விடுதியில் நடைபெற்ற ஒரு குறிப்பிடத்தக்கச் செய்தியாளர் சந்திப்பில், கராகஸில் இரவு நேர நடவடிக்கையில் வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கப் படைகள் வெற்றிகரமாகப் பிடித்ததாக அதிபர் அறிவித்தார்.

அதன்பிறகு, வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்சேத் உள்ளிட்ட குழுவினர், வெனிசுவேலா மக்களுடன் இணைந்து, சிக்கலில் தவிக்கும் அந்த நாட்டின் நிர்வாகத்திற்கு பொறுப்பேற்பார்கள் என்று டிரம்ப் கூறினார்.

"ஒரு பாதுகாப்பான, முறையான மற்றும் விவேகமான அதிகார மாற்றத்தைச் செய்யும் வரை நாங்கள் அந்த நாட்டை நிர்வகிப்போம்," என்று அவர் கூறினார்.

"நாட்டை நிர்வகிப்பது" என்பது உண்மையில் எதைக் குறிக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இந்த வாக்குறுதி அதிபரின் போக்கில் முரண்பாடுகளும் அச்சுறுத்தும் தடைகளும் நிறைந்த ஒரு திடீர் மாற்றத்தைக் காட்டுகிறது

"முடிவில்லாப் போர்களுக்கு" எதிராகப் பிரசாரம் செய்த, ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்காவின் கடந்த கால முயற்சிகளைக் கடுமையாக விமர்சித்த மற்றும் "அமெரிக்க நலனுக்கு முன்னுரிமை" என்ற வெளியுறவுக் கொள்கையைச் செயல்படுத்துவதாக உறுதியளித்த ஒரு அதிபர், இப்போது தனது அதிபர் பதவியையே பொருளாதாரம் சீர்குலைந்துள்ள மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை பல தசாப்த கால சர்வாதிகாரத்தால் சிதைக்கப்பட்டுள்ள ஒரு தென் அமெரிக்க நாட்டை மறுசீரமைப்பதில் பணயம் வைத்துள்ளார்.

இருப்பினும் டிரம்ப் இடைவிடாத நம்பிக்கையுடன் இருந்தார்.

தனது நிர்வாகம் "வெற்றி பெறுவதில் ஒரு சரியான சாதனை தடத்தை கொண்டுள்ளது" என்றும் - இதுவும் அதற்கு விதிவிலக்கல்ல என்றும் அவர் கூறினார். வெனிசுவேலாவின் சிதைந்து வரும் தொழில்முறை உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் அமெரிக்க எரிசக்தி நிறுவனங்கள் ஈடுபடும் என்று அவர் உறுதியளித்தார். இது அமெரிக்காவின் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு நிதி வழங்கும் மற்றும் வெனிசுவேலா மக்களுக்குப் பயனளிக்கும் என்றார் அவர்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இந்த முயற்சிகளை முன்னெடுக்க அமெரிக்க வீரர்களை வெனிசுவேலாவிற்கு அனுப்பும் வாய்ப்பை அவர் நிராகரிக்கவில்லை. "நாங்கள் தரைப்படையைப் பயன்படுத்த அஞ்சவில்லை... நேற்றிரவு எங்கள் வீரர்கள் அங்கே இருந்தார்கள்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

அமெரிக்கா - வெனிசுவேலா, டிரம்ப், மதுரோ

பட மூலாதாரம்,Getty Images

இராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பைக் கடுமையாக விமர்சித்த டிரம்ப், இப்போது இராக் போரை வடிவமைத்தவர்களில் ஒருவரான வெளியுறவுத்துறை செயலாளர் காலின் பவலின் இந்த வார்த்தைகளுக்குச் செவிசாய்க்க வேண்டியிருக்கும்: "நீங்கள் ஒன்றை உடைத்தால், அதற்கு நீங்களே உரிமையாளர்"

நன்மையோ, தீமையோ அமெரிக்கா வெனிசுவேலாவின் எதிர்காலத்தை மாற்றி அமைத்துள்ளது.

கிட்டத்தட்ட ஓராண்டிற்கு முன்பு அமைதியை நிலைநாட்டுபவராக இருப்பேன் என கூறி டிரம்ப் பதவியேற்றார். ஆனால் உலகம் முழுவதும் ராணுவ பலத்தைப் பயன்படுத்த தயாராக இருப்பதை கடந்த ஒரு ஆண்டில் அவர் நிரூபித்துள்ளார்.

கடந்த வாரத்தில், சிரியா மற்றும் நைஜீரியா மீது வான்வழித் தாக்குதல்களை நடத்த உத்தரவிட்டார். 2025-இல் அவர் இரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள், கரீபியனில் போதைப்பொருள் கடத்தப்படுவதாகச் சந்தேகிக்கப்படும் படகுகள், ஏமனில் உள்ள கிளர்ச்சிப் படைகள், சோமாலியாவில் உள்ள ஆயுதக் குழுக்கள் மற்றும் இராக்கில் உள்ள ஆயுதக்குழுக்களைத் தாக்க உத்தரவிட்டார்.

கடந்தகால நடவடிக்கைகள் பெரும்பாலும் ஏவுகணைகள் மற்றும் விமானங்களை உள்ளடக்கியவை, அவை அமெரிக்கப் படைகளுக்கு ஏற்படும் ஆபத்தைக் குறைத்தன. ஆனால் டிரம்பின் வெனிசுவேலா தாக்குதல் - மற்றும் அந்த நாட்டின் எதிர்காலம் குறித்த அவரது உறுதிப்பாடுகள் - குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டவை.

அவரது குறிக்கோள், வெனிசுவேலாவை "மீண்டும் சிறந்ததாக்குவது" (Make Venezuela great again) என்று அவர் தனது செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

டிரம்பின் "அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குவோம்" என்ற முழக்கத்தின் இந்த தாக்கம், டிரம்பின் சில ஆதரவாளர்களுக்கு ஜீரணிக்க கடினமாக இருக்கலாம்.

அமெரிக்கா - வெனிசுவேலா, டிரம்ப், மதுரோ

பட மூலாதாரம்,TRUTH SOCIAL

படக்குறிப்பு,நிக்கோலஸ் மதுரோ

டிரம்ப் ஆதரவாளராக இருந்து, அவர் தனது அரசியல் தளத்தைக் கைவிட்டுவிட்டதாகக் குற்றம் சாட்டி அவரிடமிருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர் மார்ஜரி டெய்லர் கிரீன், அதிபரின் நடவடிக்கைகளைக் கண்டித்து தனது எக்ஸ் பக்கத்தில் உடனடியாக பதிவிட்டார்.

"முடிவே இல்லாத ராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் வெளிநாட்டுப் போர்களுக்கான நமது அரசின் ஆதரவு மீது அமெரிக்கர்களுக்கு இருக்கும் வெறுப்பு நியாயமானது; ஏனெனில் அதற்குப் பணம் செலுத்த நாம் கட்டாயப்படுத்தப்படுகிறோம். குடியரசுக் கட்சியினர் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் ஆகிய இரு தரப்புமே வாஷிங்டனின் ராணுவ இயந்திரத்திற்கு எப்போதும் நிதி வழங்கி அதனைத் தொடர்ந்து இயங்க வைக்கின்றனர்," என்று அவர் குறிப்பிட்டார்.

"இதனை முடிவுக்குக் கொண்டு வரத்தான் தாங்கள் வாக்களித்ததாக பல MAGA ஆதரவாளர்கள் நினைத்தனர். ஆனால் நாங்கள் தவறாக கணித்துவிட்டோம்."

டிரம்பின் மற்றொரு முக்கிய விமர்சகரான கென்டக்கியைச் சேர்ந்த குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தாமஸ் மாஸி, மதுரோ மீது ஆயுதங்கள் மற்றும் கோகெயின் கடத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதையும், பறிமுதல் செய்யப்பட்ட அமெரிக்க எண்ணெயை மீட்டெடுப்பது மற்றும் ஃபென்டானில் உற்பத்தியை தடுத்து நிறுத்துவது ஆகியவற்றிற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டிரம்ப் கூறிய விளக்கத்தையும் ஒப்பிட்டு விமர்சித்தார்.

பெரும்பாலான குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபருக்குப் பின்னால் அணி திரண்டுள்ளனர். சபாநாயகர் மைக் ஜான்சன், ஒரு "குற்றவியல் ஆட்சிக்கு" எதிரான இந்த ராணுவ நடவடிக்கையை "தீர்க்கமானது மற்றும் நியாயமானது" என்றார்.

செய்தியாளர் சந்திப்பின் போது, வெனிசுவேலா நடவடிக்கை தனது "அமெரிக்க நலனுக்கு முன்னுரிமை" என்ற கொள்கையையே முன்னெடுத்துச் செல்வதாக டிரம்ப் கூறினார். ஏனெனில் இது அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், எண்ணெய்க்கான நிலையான ஆதாரத்தையும் வழங்கும் என்பது அவரது கருத்து.

மேற்கத்திய அரைக்கோளம் (வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்கள்) ஐரோப்பிய சக்திகளின் செல்வாக்கிலிருந்து விடுபட வேண்டும் என்று வலியுறுத்தும் 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கால அமெரிக்க வெளியுறவுக் கொள்கையான 'மன்றோ கோட்பாட்டை' அவர் மீண்டும் கையில் எடுத்து, அதற்கு "டான்ரோ கோட்பாடு" என்று டிரம்ப் புதிய பெயரிட்டார்.

அமெரிக்கா - வெனிசுவேலா, டிரம்ப், மதுரோ

பட மூலாதாரம்,Jeenah Moon/Reuters

படக்குறிப்பு,மதுரோவை ஏற்றிச் சென்றதாக கருதப்படும் ஹெலிகாப்டர் மன்ஹாட்டனில் தரையிறங்கிய போது எடுத்த படம்

வெனிசுவேலாவில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, "மேற்கத்திய அரைக்கோளத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் இனி ஒருபோதும் கேள்விக்குள்ளாக்கப்படாது" என்பதைக் காட்டுகிறது என்று டிரம்ப் கூறினார்.

புதிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு உத்தியின் குறிக்கோள், "நமது தேசிய பாதுகாப்பிற்கு முக்கியமாக விளங்கும் வர்த்தகம், நிலப்பரப்பு மற்றும் வளங்களைப் பாதுகாப்பதாகும்" என்று அவர் கூறினார். அவர் மேற்கத்திய அரைக்கோளத்தை அமெரிக்காவின் "சொந்த பிராந்தியம்" என்று வர்ணித்தார்.

மதுரோவை சிறைபிடிக்க டிரம்ப் எடுத்த முடிவு, உலகளாவிய அரசியலில் பெரிய கவலைகளை எழுப்பும். உலகின் பிற முக்கிய ராணுவ வல்லரசுகளுடனான அமெரிக்காவின் உறவுகளையும் பாதிக்கும்.

ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது நடத்தப்பட்ட இந்த பொறுப்பற்ற தாக்குதலுக்கு அதிர்ச்சியையும் கண்டனத்தையும் தெரிவித்து சீன வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

பைடன் நிர்வாகத்தின் போது, யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து அமெரிக்கா இதேபோன்ற கண்டனங்களைத் தெரிவித்தது. இப்போது டிரம்ப் நிர்வாகம் அந்த இரு நாடுகளுக்கும் இடையே பல நேரங்களில் ரஷ்ய தரப்பிற்கு சாதகமாக இருப்பதாகத் தெரியும் ஒரு அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்த முயற்சிக்கிறது.

அமெரிக்கா - வெனிசுவேலா, டிரம்ப், மதுரோ

பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,நிக்கோலஸ் மதுரோ

டிரம்பை விமர்சிக்கும் ஜனநாயகக் கட்சியினர் இன்னும் நேரடியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

"அமெரிக்கா எந்தக் காரணத்திற்காகவும் மற்ற நாடுகளை நிர்வகிக்க கூடாது," என்று செனட் வெளியுறவு குழுவில் இடம்பெற்றுள்ள ஹவாயைச் சேர்ந்த பிரையன் ஷாட்ஸ் கூறினார்.

"அமெரிக்கர்களுக்குப் பேரழிவைத் தரும் விளைவுகளைக் கொண்ட முடிவில்லா போர்கள் மற்றும் ஆட்சி மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பதை நாம் இந்நேரம் கற்றிருக்க வேண்டும்."

நவம்பர் இடைத்தேர்தலுக்குப் பிறகு ஜனநாயகக் கட்சியினர் பிரதிநிதிகள் சபையைக் கைப்பற்றினால் சபாநாயகராக வாய்ப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினரான ஹக்கீம் ஜெப்ரீஸ் கூறுகையில், "மதுரோ ஒரு குற்றவாளி மற்றும் மனித உரிமை மீறல்கள் செய்த சர்வாதிகாரி" என்றார். ஆனால் தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்பு நாடாளுமன்றத்தை கலந்தாலோசிக்காத டிரம்பின் முடிவைக் கண்டித்தார்.

"டொனால்ட் டிரம்ப் சட்டத்தைப் பின்பற்றவும், அமெரிக்காவில் ஜனநாயக நெறிமுறைகளைப் பாதுகாக்கவும் அரசியலமைப்பு ரீதியான பொறுப்பைக் கொண்டுள்ளார்," என்று அவர் கூறினார். "அமெரிக்க நலன்களுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு அதுவே தேவை."

தாக்குதலுக்கு முன்னதாகவே நடவடிக்கை விவரம் "கசியவிடப்படலாம்" என்ற கவலையாலேயே நாடாளுமன்றத்திற்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று டிரம்ப் தனது செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

அந்த ராணுவ நடவடிக்கை ஒரு வெற்றியாக அமைந்தது - அமெரிக்கர்கள் யாரும் உயிரிழக்கவில்லை மற்றும் அமெரிக்க உபகரணங்களுக்குச் சேதம் குறைவாகவே ஏற்பட்டது. டிரம்ப் தனது வழக்கமான பாணியில், இந்த நடவடிக்கையை ஒரு "அற்புதமான தாக்குதல்" என்றும், "அமெரிக்க வரலாற்றிலேயே அமெரிக்க ராணுவ பலம் மற்றும் திறமையின் மிகவும் ஆச்சரியப்படுத்தும், பயனுள்ள மற்றும் சக்திவாய்ந்த வெளிப்பாடுகளில் ஒன்று இது" என்றும் விவரித்தார்.

இப்போது அவர் அந்த வெற்றி தொடரும் என்பதில் தனது அதிபர் பதவியையே பணயம் வைத்துள்ளார். வெனிசுவேலாவை நிர்வகிப்பதையும் புனரமைப்பதையும் ஏற்பதாக அமெரிக்கா கூறுகிறது அதன் உண்மையான பொருள் என்னவென்று நமக்குத் தெரியவில்லை. டிரம்பும் அவரது குழுவினரும் பல தசாப்தங்களாகக் குழப்பத்தில் இருந்த ஒரு தேசத்தை வலுப்படுத்தும் அதே நேரத்தில் டிரம்பின் வெளியுறவுக் கொள்கை தங்களுக்கு என்ன வைத்திருக்கிறது என்று எண்ணும் ஒரு பிராந்தியத்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்த வேண்டும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cm2xmd7klrlo

வெனிசுலா ஜனாதிபதி மற்றும் மனைவியை விடுவிக்குமாறு அமெரிக்காவை சீனா வலியுறுத்தியுள்ளது

3 days 23 hours ago

வெனிசுலா ஜனாதிபதி மற்றும் மனைவியை விடுவிக்குமாறு அமெரிக்காவை சீனா வலியுறுத்தியுள்ளது

Published By: Vishnu

04 Jan, 2026 | 06:48 PM

image

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிசெய்து உடனடியாக அவர்களை விடுவிக்குமாறு சீனா அமெரிக்காவை வலியுறுத்துகிறது.

குறித்த சம்பவத்தை சீனா கடுமையாக எதிர்க்கிறது என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் நடவடிக்கையை கண்டித்து பிரேசில், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

இராணுவ இலக்குகள் உட்பட பல இடங்களில் அமெரிக்கா நடத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும் 3ஆம் திகதி சனிக்கிழமை அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டனர், மேலும் அவர்கள் இப்போது நியூயார்க்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/235212

வெனிசுலாவில் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ்

4 days 4 hours ago

வெனிசுலாவில் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ்

image_2a8ee326fa.jpg

வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கா நாட்டால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார். வெனிசுலாவை நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். வெனிசுலாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்பான நிலையில், வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகவும், இதற்கு அந்த நாட்டின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவுக்கு தொடர்பு இருப்பதாகவும் சொல்லி அமெரிக்கா அவரை சிறைபிடித்துள்ளது. அவர் சிறைபிடிக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு, இனிமேல் வெனிசுலாவை நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

வெனிசுலாவில் வான்வழி தாக்குதல் நடத்தி நிகோலஸ் மற்றும் அவரின் மனைவியை அமெரிக்கா சிறை பிடித்துள்ளது. இது அந்த நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலா மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டது. நிகோலஸ் மதுரோ நாடு கடத்தப்பட்டுள்ளார். அமெரிக்க சட்ட அமலாக்கத்துறையுடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று டிரம்ப் கூறியிருந்தார்.

இந்த தாக்குதலில் வெனிசுலா மக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தொடர்ந்து மதுரோ மற்றும் அவரின் மனைவி ஆகியோர் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அந்த நாட்டின் அரசு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. வெனிசுலா நாட்டின் துணை அதிபராக இருந்து வரும் டெல்சி ரோட்ரிக்ஸ், அந்த நாட்டின் எண்ணெய் வளம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளை கண்காணித்து வருகிறார்.

https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/வெனிசுலாவில்-இடைக்கால-ஜனாதிபதி-டெல்சி-ரோட்ரிக்ஸ்/50-370499

வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!

5 days 1 hour ago

வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!

03 Jan, 2026 | 03:36 PM

image

வெனிசுலா நாட்டின் தலைநகரான கராகஸில் இன்று சனிக்கிழமை (3) அதிகாலை பல இடங்களில் சக்திவாய்ந்த வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதையடுத்து வெனிசுலா ஜனாதிபதி  நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது Xதளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவில் குறிப்பிடப்படுவதாகவது, 

வெனிசுலா நாட்டிற்கும் அதன்  ஜனாதிபதி மதுரோவிற்கும் எதிராக அமெரிக்கா பெரிய அளவிலான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியது. 

வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத்துடன் இணைந்து செய்யப்பட்டது. 

இன்று காலை 11 மணிக்கு மார் ஏ லாகோவில் செய்தி மாநாடு நடைபெறும் என பதிவிட்டுள்ளார். 

https://www.virakesari.lk/article/235120

சீனாவுடன் தாய்வான் இணைவதை எவராலும் தடுக்க முடியாது – சீன ஜனாதிபதி!

5 days 5 hours ago

download.jpg?resize=275%2C183&ssl=1

சீனாவுடன் தாய்வான் இணைவதை எவராலும் தடுக்க முடியாது – சீன ஜனாதிபதி!

சீனாவுடன் தாய்வான் இணைவதை எவராலும் தடுக்க முடியாது என தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

அத்துடன் விரைவில் சீனாவுடன் தாய்வான் இணைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சூளுரை விடுத்துள்ளார். கடந்த வாரம் சீனா மற்றும் தாய்வான் எல்லையைச் சுற்றிலும் கூட்டு ராணுவ பயிற்சியை சீன இராணுவம் முன்னெடுத்துள்ளது.

அத்துடன் தாய்வானுடன் வேறு எந்த நாடும் தூதரக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என சீனா தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றது.

இதேவேளை சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தாய்வான் கடந்த 1949ஆம் ஆண்டு தனி நாடாக பிரிந்து சென்றிருந்தது.

எனினும் தாய்வான்இன்னும் தனது நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா கருதி வருகிறது.

எனவே அதனை மீண்டும் தன்னுடன் இணைப்பதற்காக சீனா போர்ப்பயிற்சிகளை நடத்தி வருகிறது.

இதனால் அப்பகுதியில் சீனா பதற்றத்தைத் தூண்டுவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

மேலும், தாய்வான் எல்லைக்குள் போர்க்கப்பல் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தையும் சீனா அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் நாட்டு மக்களிடம் உரையாற்றியுள்ளார்.

தாய்வானை சீனாவின் தன்னாட்சி பிராந்தியமாகவே கருதுவதாகவும்
அதனை மீண்டும் சீனாவுடன் இணைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் புதிய ஆண்டில் அறிவித்துள்ளார்.

அத்துடன் விரைவில் சீனாவுடன் தாய்வான் இணைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சூளுரை விடுத்துள்ளார்.

https://athavannews.com/2026/1458169

வெனிசுலா தலைநகரில் வெடிப்புச் சம்பவங்கள்

5 days 5 hours ago

வெனிசுலா தலைநகரில் வெடிப்புச் சம்பவங்கள்

செய்திகள்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

வெனிசுலாவின் தலைநகரான கெரகஸில் அந்நாட்டு நேரப்படி இன்று (3) அதிகாலை பல வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இதன் காரணமாகப் பாரிய சத்தத்துடன் அப்பகுதி புகை மண்டலத்தால் சூழப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. 

இந்த வெடிப்புச் சம்பவங்களுடன் நகரின் பல பகுதிகளுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

முதலாவது வெடிப்புச் சம்பவம் அந்நாட்டு நேரப்படி அதிகாலை 1.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmjxzfirb03gzo29ndt385qql

அமெரிக்காவின் டெஸ்லாவை முந்தியது சீனாவின் BYD!

5 days 7 hours ago

அமெரிக்காவின் டெஸ்லாவை முந்தியது சீனாவின் BYD!

Published By: Digital Desk 1

03 Jan, 2026 | 11:05 AM

image

சீனாவின் BYD நிறுவனம் 2025ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய மின்சார வாகன உற்பத்தியாளராக மாறியுள்ளது.

இதுவரை, அமெரிக்க நிறுவனமான டெஸ்லா முன்னனி நிறுவனமாக திகழ்ந்தது.

டெஸ்லாவின் வாகன விற்பனை தொடர்ந்தும் இரண்டாவது ஆண்டாக சரிந்துள்ள நிலையில், BYD நிறுவனம் வலுவான போட்டியாளராக மாறியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

https://www.virakesari.lk/article/235099

ஜெர்மன் மின் கட்டக் கட்டணங்கள் 2026 ஆம் ஆண்டில் பாதிக்கும் மேல் குறைய உள்ளன.

5 days 17 hours ago

ஜெர்மன் மின் கட்டக் கட்டணங்கள் 2026 ஆம் ஆண்டில் பாதிக்கும் மேல் குறைய உள்ளன.

ராய்ட்டர்ஸ் மூலம்

அக்டோபர் 1, 2025 7:52 PM GMT+10 அக்டோபர் 1, 2025 அன்று புதுப்பிக்கப்பட்டது

ஜெர்மனியில் லுட்டோ-வல்லுன் அருகே மின்சாரக் கோபுரங்கள்

ஜனவரி 31, 2025 அன்று ஜெர்மனியின் லுயெட்டோ-வல்லுன் அருகே A24 மோட்டார் பாதைக்கு அருகில் உயர் மின்னழுத்த மின் இணைப்புகள் மற்றும் மின்சார தூண்கள் படத்தில் காட்டப்பட்டுள்ளன. REUTERS/Annegret Hilse/கோப்பு புகைப்படம் உரிமம் வாங்கும் உரிமைகள், புதிய தாவலைத் திறக்கிறது

  • நிறுவனங்கள்

பெர்லின், அக்டோபர் 1 (ராய்ட்டர்ஸ்) - ஜெர்மனியின் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் ஆபரேட்டர்கள் 2026 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட மின்சார கட்டக் கட்டணங்களை அறிவித்தனர், இது அரசாங்க மானியங்களைப் பொறுத்து 57% குறைப்பைக் கணித்துள்ளது.

இந்தக் குறைப்பு, ஐரோப்பாவிலேயே மிக உயர்ந்த மின்சாரச் செலவுகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர் மற்றும் தொழில்துறை வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.

ராய்ட்டர்ஸ் பவர் அப் செய்திமடல் உலகளாவிய எரிசக்தி துறையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் வழங்குகிறது. இங்கே பதிவு செய்யவும் .

நாட்டின் தேசிய காலநிலை நிதியிலிருந்து 6.5 பில்லியன் யூரோக்கள் ($7.6 பில்லியன்) மானியம் மூலம், ஒரு கிலோவாட் மணிக்கு (kWh) 6.65 சென்ட்கள் / kWh ஆக கட்டணம் குறைக்கப்படும் என்று கிரிட் ஆபரேட்டர்கள் 50Hertz, Amprion, TenneT மற்றும் TransnetBW ஆகியவை புதன்கிழமை ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்தன.

டிசம்பர் 5 ஆம் தேதிக்குள் நாடாளுமன்றம் சட்டத்தை அங்கீகரிப்பதைப் பொறுத்து இந்தக் குறைப்பு சாத்தியமாகும் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

ஜெர்மனியின் மின்சார விலைகள் பரிமாற்றக் கட்டணங்கள், வரிகள் மற்றும் வரிகளால் உயர்த்தப்படுகின்றன, இது ஆற்றல் மிகுந்த தொழில்கள் மற்றும் பரந்த பொருளாதாரத்தின் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது.

சராசரியாக, தனியார் நுகர்வோர் தற்போது ஒரு கிலோவாட் மணிநேரத்திற்கு சுமார் 40 காசுகள் செலுத்துகிறார்கள் என்று எரிசக்தி தொழில் சங்கமான BDEW கூறுகிறது, இது ரஷ்யாவின் உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பால் தூண்டப்பட்ட எரிசக்தி நெருக்கடிக்கு முந்தைய நிலைகளை விட 20% அதிகமாகும்.

மின்சார பரிமாற்றக் கட்டணங்களில் திட்டமிடப்பட்ட குறைப்புக்கு கூடுதலாக, சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸின் கூட்டணி அரசாங்கம், தொழில்துறை மற்றும் விவசாயத் துறைகள் உள்ளிட்டவற்றிற்கான மின்சார வரியை ஐரோப்பிய குறைந்தபட்சத்திற்குக் குறைக்க திட்டமிட்டுள்ளது.

($1 = 0.8509 யூரோக்கள்)

தாமஸ் சேத்தல் அறிக்கை செய்தல்

https://www.reuters.com/business/energy/german-power-grid-fees-set-drop-by-more-than-half-2026-2025-10-01/#:~:text=BERLIN%2C%20Oct%201%20(Reuters),and%20agricultural%20sectors%20among%20others.

இது ஒக்டோபரில் வெளியான செய்தி, இந்த செய்தி பிரகாரம் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மின்சார கட்டணம் பாதியாக குறையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது, இன்னொரு செய்தி ஒரு கிலோவாட்டிற்கு 5 சதத்திற்கு மின் கட்டணம் அறவிடப்படும் என கூறப்படுகிறது, இது சீனாவின் மின் கட்டணத்தினை விட குறைவானது, அண்மையில் சில நிறுவனங்கள் எரிபொருள் விலையேற்றத்தினை குற்றம் கூறி வெளியேறியுள்ளன அதில் ஒரு நிறுவனம் (BASF) சீனாவிற்கு இடமாறவுள்ளதாக கூறப்படுகிறது.

ஜேர்மன் கள உறவுகளே!

இந்த மின்சார கட்டண குறைப்பு அமுலுக்கு வந்து விட்டதா? அது எவ்வாறான தாக்கத்தினை பொதுச்செலவில் ஏற்படுத்துகிறது?

2025இல் உலகளவில் 128 ஊடகவியலாளர்கள் கொலை! - பட்டியல் வெளியிட்டது சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு

5 days 22 hours ago

2025இல் உலகளவில் 128 ஊடகவியலாளர்கள் கொலை! - பட்டியல் வெளியிட்டது சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு 

02 Jan, 2026 | 05:02 PM

image

2025ஆம் ஆண்டில் உலகளவில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய பட்டியலொன்றை சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு (International Federation of Journalists - IFJ) வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் 128 ஊடகவியலாளர்கள் ஊடக சேவையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது கொல்லப்பட்டதாக IFJ குறிப்பிட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட 128 ஊடகவியலாளர்களில் 119 பேர் ஆண்கள், 9 பேர் பெண்கள் ஆவர்.

கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களில் 74 பேர் மேற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் 56 பேர் காசாவில் இஸ்ரேல் - ஹமாஸ் போர்க்காலச் சூழலில் கொல்லப்பட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

மேலும், ஆபிரிக்காவில் 18 பேர், சீனா உள்ளிட்ட ஆசியா - பசுபிக் நாடுகளில் 15 பேர், அமெரிக்காவில் 11 பேர், ஐரோப்பிய நாடுகளில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தியாவில் 4 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உலகளவில் 533 ஊடகவியலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

par.jpg

https://www.virakesari.lk/article/235055

Checked
Thu, 01/08/2026 - 14:45
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe