உலக நடப்பு

வியட்நாமில் வெள்ளப்பெருக்கு; 43 பேர் உயிரிழப்பு

1 hour 49 minutes ago

Published By: Digital Desk 3

21 Nov, 2025 | 12:59 PM

image

மத்திய வியட்நாமில் வார இறுதியில் பெய்த தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், காணாமல் போன ஒன்பது பேரைத் தேடும் பணி தொடர்வதாக  அந்நாட்டு மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேவேளை, 52,000 க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. அரை இலட்சம் வீடுகள் மற்றும் வணிக் நிறுவனங்களுக்கு மின்சாரம் துண்டிக்கபட்டுள்ளது.

கடந்த மூன்று நாட்களில் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி 1.5 மீற்றரை கடந்துள்ளது. சில இடங்களில் 1993 ஆம் ஆண்டின் அதிகபட்ச வெள்ள உயரமான 5.2 மீட்டரையும் கடந்ததுள்ளதாக கூறப்படுகிறது.

22.jpg

வியட்நாமின் கடலோர நகரங்களான ஹோய் ஆன் மற்றும் நா ட்ராங் ஆகியவை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோல் மத்திய மலைப்பகுதிகளில் உள்ள ஒரு முக்கிய கோப்பி உற்பத்திப் பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சூறாவளியினால் ஏற்கனவே விவசாயிகளின் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களாகவே வியட்நாமில் சீரற்ற வானிலை நிலவுகிறது. கல்மேகி மற்றும் புவாலோய் ஆகிய இரண்டு சூறாவளிகள் ஒன்றன் பின் ஒன்றாக  தாக்கி பல உயிரிழப்புகள் மற்றும் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை வியட்நாமில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகள் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

மண்சரிவுகள் முக்கிய வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளை சேதப்படுத்தியதை அடுத்து அவசரகால நிலையை அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபலமான சுற்றுலா நகரமான டா லாட்டுக்கான முக்கிய நுழைவுப் பாதையான மிமோசா கணவாயின் ஒரு பகுதி பள்ளத்தில் இடிந்து விழுந்துள்ளமையினால் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இடிந்த பகுதியில் உருவான பெரிய இடைவெளியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாவது தவிர்க்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பதற்கு அவசரகால தங்குமிடங்களை அமைக்கும் பணிகளில் இராணுவப் படையினரும் பொலிஸாரும் ஈடுப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வியட்நாமில் ஞாயிற்றுக்கிழமை வரை மிதமானது முதல் கடும் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

8.jpg

2.jpg

https://www.virakesari.lk/article/230996

துபை விமானக் கண்காட்சியில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் போர் விமானம் - என்ன நடந்தது?

4 hours 42 minutes ago

துபை விமானக் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய போர் விமானம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, துபையின் இரண்டாவது பெரிய விமான நிலையமான அல்-மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் கண்காட்சி நிகழ்வின்போது தேஜஸ் விமானம் (நவம்பர் 20ஆம் தேதி எடுக்கப்பட்ட படம்)

24 நிமிடங்களுக்கு முன்னர்

(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)

துபையில் நடைபெற்ற விமானக் கண்காட்சியில் இந்திய விமானப் படையின் தேஜஸ் போர் விமானம் இன்று (நவம்பர் 21) பிற்பகல் விபத்திற்குள்ளானது.

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த விமானம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:10 மணியளவில் பார்வையாளர்கள் முன்னிலையில் வான் நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்கு உள்ளானதாக பி.டி.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இந்தத் தகவலை உறுதி செய்துள்ள இந்திய விமானப் படை, இந்த விபத்தில் விமானி உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

"விமானியின் உயிரிழப்புக்கு இந்திய விமானப்படை ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்தத் துயரமான நேரத்தில் விமானியின் குடும்பத்தினருடன் துணை நிற்கிறோம்," என்று விமானப்படை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அதோடு, விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த செய்தியில், ஏபி செய்தி முகமை, "துபையின் இரண்டாவது பெரிய விமான நிலையமான அல்-மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் இந்தக் கண்காட்சி நடைபெற்றது. விபத்து நடந்தபோது, விமான நிலையத்தில் புகைமூட்டம் எழுந்தது, சைரன்கள் ஒலித்தன," என்று குறிப்பிட்டுள்ளது.

துபை விமானக் கண்காட்சியில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் போர் விமானம் - என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

தேஜஸ் போர் விமானத்தின் சிறப்பு

தேஜஸ் போர் விமானம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தால் முற்றிலுமாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது.

இது எதிரி விமானங்களைத் தொலைவில் இருந்தே குறிவைத்து தாக்கும் மற்றும் எதிரி ரேடாரை தவிர்க்கும் திறன் கொண்டது. இது சுகோய் விமானத்தைப் போலவே, அதே எண்ணிக்கையிலான ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் சுமந்து செல்லக்கூடியது.

இந்த ஆண்டு செப்டம்பரில், இந்திய பாதுகாப்பு அமைச்சகம் 97 தேஜஸ் விமானங்களை வாங்குவதற்காக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அவை 2027இல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக 2021ஆம் ஆண்டு, இந்திய அரசு 83 தேஜஸ் விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துடன் கையெழுத்திட்டது. கடந்த 2024ஆம் ஆண்டு அவை வழங்கப்படும் எனத் திட்டமிடப்பட்டது. ஆனால் அமெரிக்காவில் இருந்து என்ஜின்களை இறக்குமதி செய்வதில் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக இது தாமதமானது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn8el5nzp22o

ஜி 20 மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை – USA உறுதி!

10 hours 26 minutes ago

download-25.jpg?resize=275%2C183&ssl=1

ஜி 20 மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை – USA உறுதி!

தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்கவில்லை என வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று  முதல் நவ.23ம் திகதி வரை ஜி 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெறுகிறது.

தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்காது எனவும் தென் ஆப்ரிக்கா ஜனாதிபதி சிரில் ராமபோசா அமெரிக்காவை பற்றி எதிர்மறையாக பேசுகிறார் எனவும் இதனை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்ளிட்ட எங்களது குழுவினர் ஏற்கவில்லை எனவும் இதனால் ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்காது எனவும் வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட்  கூறியுள்ளார்.

இதேவேளை, ஏற்கனவே, ”தென் ஆப்ரிக்காவில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக கூறி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜி 20 உச்சி மாநாட்டில் எந்த அமெரிக்க அதிகாரியும் பங்கேற்க மாட்டார்கள்” என்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1453416

தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை!

17 hours 27 minutes ago

கனடா- பிரம்டன் நகரசபை  தமிழீழத் தேசியக் கொடியை அங்கீகரித்துள்ளது.

பிரம்டன் நகரில் ஏற்கனவே முள்ளிவாய்க்கால் முற்றம் போன்ற தாயக சார்ப்பு நகர்வுகள் இடம்பெற்ற நிலையில் இந்த புதிய முன்னெடுப்பு வந்துள்ளது.

இந்த அங்கீகாரத்தின் அடிப்படையில் நாளை நவம்பர் 21 ஆம் திகதி காலை 9.30 க்கு பிரெம்ரன் நகரமுதல்வர் பற்றிக் பிறவுண் (Patrick Brown) தலைமையில் கென் வலன்ஸ் சதுக்கத்தில் (Ken Whillans Square) உள்ள கொடிக்கம்ப முற்றத்தில் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்படும் என பிரம்டன் நகர சபை அறிவித்துள்ளது.

பிரித்தானிய கடல் எல்லைக்குள் ரஷ்ய உளவு கப்பல் : தீவிர கண்காணிப்பில் பிரிட்டிஷ் கடற்படை

தமிழீழத் தேசியக் கொடி

முன்னதாக தமிழீழத் தேசியக் கொடி நாளை அங்கீகரித்து பிரம்டன் நகர சபை சுற்றுநிருபம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை! | Recognition Of Tamil Eelam National Flag In Canada

தமது விடாமுயற்சி மற்றும் முன்னகர்வுகளால் தமிழீழத் தேசியக் கொடி நாளுக்குரிய இந்த அங்கீகாரம் கிட்டியதாக உலகத் தமிழர் உரிமைக் குரல் என்ற கனேடிய புலம்பெயர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

கனடாவில் இருந்து வெளியேறிச் செல்லும் மக்கள்

கனடாவில் இருந்து வெளியேறிச் செல்லும் மக்கள்

GalleryGalleryGalleryGalleryGallery


https://tamilwin.com/article/recognition-of-tamil-eelam-national-flag-in-canada-1763634312

உக்ரைன் மீது ரஷ்யா கடும் தாக்குதல் - 3 சிறுவர்கள் உட்பட 26 பேர் உயிரிழப்பு

1 day 5 hours ago

20 Nov, 2025 | 12:15 PM

image

உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைக் கொண்டு நடத்திய பாரிய தாக்குதலில் 3 சிறுவர்கள் உட்பட குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

ரஷ்யா 476 ட்ரோன்கள்  மற்றும் 48 ஏவுகணைகளை பிரயோகித்து உக்ரைனின் மேற்கு நகரான டெர்னோபிலில் (Ternopil) உள்ள இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை நோக்கித் தாக்குதல் நடத்தியதில் உயிரிழப்புகள் ஏற்பட்டதோடு, 93 பேர் படுகாயமடைந்ததாகவும் அவர்களில் 18 பேர் சிறுவர்கள் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

ரஷ்ய X-101 குரூஸ் ஏவுகணைகளே இந்தத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டிருப்பதாக உக்ரைன் விமானப் படையினர் கூறுகின்றனர். 

ரஷ்யாவால் ஏவப்பட்ட 476 ட்ரோன்கள் மற்றும் 48 ஏவுகணைகளில் 442 ட்ரோன்கள், 41 ஏவுகணைகளை உக்ரைன் விமானப்படை சுட்டு வீழ்த்தியதாக அப்படையினர் தெரிவித்துள்ளனர். 

மேலும், உக்ரைனின் வடகிழக்கு நகரமான கார்கிவிலும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் அதேவேளை அங்கும் 30க்கு மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். 

உக்ரைன் - ரஷ்யா இடையே நீடித்து வரும் போரானது 1,364வது நாளாக இன்றும் (20) தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

73e6faea-f15f-450c-b080-1e108e84e145.jpg

https://www.virakesari.lk/article/230869

இந்தோனேஷியாவில் வெடித்துச் சிதறிய எரிமலை!

1 day 7 hours ago

New-Project-157.jpg?resize=750%2C375&ssl

இந்தோனேஷியாவில் வெடித்துச் சிதறிய எரிமலை!

நாட்டின் மிக உயரமான மலைகளில் ஒன்றான செமெரு எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து இந்தோனேசிய அதிகாரிகள் 900க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றியுள்ளதுடன், 170 மலையேறுபவர்களை வியாழக்கிழமை (20)  பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

ஜாவா தீவில் உள்ள செமேரு எரிமலை புதன்கிழமை 10 முறை வெடித்து, பாரிய சாம்பல் புகைகளை வான் நோக்கி வெளியிட்டது.

பாறையின் சரிவுகளில் 13 கிலோ மீற்றர் வரை எரிமலைக் குழம்புகள் வழிந்தோடியதைத் தொடர்ந்து  எச்சரிக்கை நிலை மிக உயர்ந்த அளவில் பராமரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேநேரம், கிழக்கு ஜாவாவின் மீட்பு நிறுவனம் வெளியேற்றத்திற்கு உதவ நூற்றுக் கணக்கான பணியாளர்களை அனுப்பியது.

எரிமலைக்கு அருகில் வசிக்கும் 956 பேர் ஏற்கனவே பாடசாலைகள், மசூதிகள் மற்றும் அரசு கட்டிடங்களுக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

3,676 மீற்றர் உயரமுள்ள செமெரு எரிமலை, இந்தோனேசியாவில் உள்ள சுமார் 130 செயலில் உள்ள எரிமலைகளில் ஒன்றாகும்.

இது இறுதியாக 2021 டிசம்பர் மாதம் வெடித்தது, இதன்போது குறைந்தது 51 பேர் உயிரிழந்துடன், அருகிலுள்ள கிராமங்கள் சாம்பலால் மூடப்பட்டிருந்தன. 

https://athavannews.com/2025/1453381

நைஜீரியாவில் 25 பாடசாலை மாணவிகள் கடத்தல்.

1 day 7 hours ago

download.webp?resize=750%2C375&ssl=1

நைஜீரியாவில் 25 பாடசாலை மாணவிகள் கடத்தல்.

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு எதிரான தாக்குதல்கள், கடத்தல்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றன. இதில், சில குழுக்கள் அங்குள்ள வெளிநாட்டினரையும், பாடசாலைப் பிள்ளைகளையும் கடத்தி பணப்பறிப்பிலும் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கெப்பி மாநிலத்தின் உயர்நிலை பாடசாலை விடுதியில் இருந்து (17) அதிகாலையில் சுமார் 25 மாணவிகளை ஆயுதம் ஏந்திய குழுவொன்று கடத்தி சென்றுள்ளது.

இச்சமயம் பாடசாலை மீது தாக்குதல் நடத்திய கடத்தல்காரர்கள் அங்குள்ள பாதுகாவலரை சுட்டுக்கொன்றுள்ளனர்.

இக்கடத்தலுக்கு நைஜீரியாவில் செயல்படும் போகோ ஹராம் உள்ளிட்ட எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

சம்பவ இடத்துக்கு விரைந்த நைஜீரிய பாதுகாப்புப் படையினர் அருகிலுள்ள காடுகள் உள்ளிட்ட பதுங்குமிடங்களில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://athavannews.com/2025/1453360

இராஜதந்திர மோதல்; ஜப்பானிய கடல் உணவு இறக்குமதியை தடை செய்யும் சீனா

2 days ago

இராஜதந்திர மோதல் ; ஜப்பானிய கடல் உணவு இறக்குமதியை தடை செய்யும் சீனா 

Published By: Digital Desk 3

19 Nov, 2025 | 03:55 PM

image

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மோதல் தீவிரமடைந்து வருவதால், ஜப்பானிய கடல் உணவுகளின் அனைத்து இறக்குமதியையும் சீனா மீண்டும் தடை செய்யும் என ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பசிபிக் கடலில் விடப்பட்டுவரும் புக்குஷிமா அணு நிலையத்தின் சுத்திகரிக்கப்பட்ட நீரை மேலும் கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக சீனா ஜப்பானுக்கு அறிவித்துள்ளது. இதனையடுத்து, சீனாவால் ஜப்பான் கடல் உணவுகளுக்கு மீண்டும் இறக்குமதி தடைவிதிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தத் தடை நடைமுறைக்கு வரும் நிலையில், பீஜிங் –டோக்கியோ இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.

ஜப்பான் பிரதமர் சனே தகாய்சி நவம்பர் மாதம் 7-ஆம் திகதி பாராளுமன்றத்தில் பேசியபோது, “தாய்வானின் மீது சீனா தாக்குதல் நடத்தி, அது ஜப்பானின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிலையை உருவாக்கினால், டோக்கியோ இராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும்” என தெரிவித்துள்ளார்.

இந்தக் கருத்துக்கள் சீனாவில் கடும் எதிர்ப்பு அலையை ஏற்படுத்தியுள்ளதால் இரு நாடுகளின் உறவில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

ஜப்பான் பிரதமர் தகாய்சியின் கருத்துகள் சீன அதிகாரிகள் மற்றும் அந்நாட்டு அரச ஊடகங்களின் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதன் பின்னர், சீனாவில் உள்ள ஜப்பான் பிரஜைகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை எடுக்கவும், கூட்டம் அதிகமாகும் பகுதிகளைத் தவிர்க்கவும் டோக்கியோ அரசு அறிவுறுத்தியது.

தகாய்சியின் கருத்துகளுக்குப் பின்னர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ஓசாகாவில் உள்ள சீனத் தூதரகத்தின் தூதர் சுஏ ஜியான், ஜப்பான் பிரதமரை குறிக்கும் விதத்தில் “அந்த அசுத்தமான கழுத்தை வெட்டி எறிவோம்” என மிரட்டல் விடுத்தார். 

பின்னர் அந்தப்பதிவு அழிக்கப்பட்டதை தொடர்ந்து, சீன தூதரை அழைத்து விளக்கம் கோரப்பட்டதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

ஜப்பானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என சீன குடிமக்களுக்கு  பீஜிங் அறிவுறுத்தியுள்ளது. மேலும், தகாய்சி தனது கருத்துக்களை திரும்பப்பெற வேண்டும் என்றும் கோரியுள்ளது. இதற்கு பதிலாக, டோக்கியோ அரசு, அந்த கருத்துக்கள் அரசின் நிலைப்பாட்டிற்கு ஏற்பவே உள்ளதாக தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/230811

பிரான்ஸிடமிருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன்

2 days 2 hours ago

18 Nov, 2025 | 06:33 PM

image

பிரான்ஸிடமிருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் ஒப்பந்தத்தில் உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி மற்றும் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் ஆகிய இருவரும் கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியதன் மூலம் தனது நாட்டின் வான்பாதுகாப்பை மேலும் பலப்படுத்த முடியும் என உக்ரைன் தூதரகம் தெரிவித்துள்ளது. 

2022ஆம் ஆண்டு  உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் தற்போதும் நீடித்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் செயற்படுகின்றன. அந்நாடுகளின் ஆயுத விநியோகம் மற்றும் பொருளாதார உதவியால் உக்ரைன் தொடர்ந்து போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது. 

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும், அந்தப் பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை. 

உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா மேலும் தீவிரப்படுத்தியது. உக்ரைன் எல்லைக்குள் ரஷ்யா டிரோன், ஏவுகணைத் தாக்குதல்களில் ஈடுபட்டது. 

இந்நிலையில், தற்போது உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ரஷ்யா போர் தொடங்கிய பிறகு ஸெலன்ஸ்கி மேற்கொள்ளும் 9வது பிரான்ஸ் சுற்றுப்பயணம் இதுவாகும். 

இந்த சுற்றுப்பயணத்தின்போது ஸெலன்ஸ்கி பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனை சந்தித்துப் பேசினார். 

அவ்வேளை பிரான்ஸிடமிருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/230743

ஜப்பானில் ஏற்பட்ட தீ விபத்தில் 170 கட்டிடங்கள் தீக்கிரை!

2 days 11 hours ago

New-Project-131.jpg?resize=750%2C375&ssl

ஜப்பானில் ஏற்பட்ட தீ விபத்தில் 170 கட்டிடங்கள் தீக்கிரை!

தெற்கு ஜப்பானிய கடலோர நகரமான ஒரு பகுதியில் 170க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இரவு முழுவதும் எரிந்தும் இன்னும் முழுமையாக அணையவில்லை என்று தேசிய தீயணைப்பு நிறுவனம் புதன்கிழமை (19) தெரிவித்துள்ளது.

டோக்கியோவிலிருந்து தென்மேற்கே சுமார் 770 கிமீ (478 மைல்) தொலைவில் உள்ள ஒய்டா நகரின் சாகனோசெக்கி மாவட்டத்தில் சுமார் 175 குடியிருப்பாளர்கள், செவ்வாய்க்கிழமை மாலை 5:40 மணியளவில் (0840 GMT) தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அவசரகால தங்குமிடத்திற்கு ஓடிவிட்டதாக தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஒருவர் இன்னும் காணவில்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2025/1453180

போர் கப்பலை அனுப்பிய அமெரிக்கா: படைகளை திரட்டும் வெனிசுவேலா - என்ன நடக்கிறது?

3 days 4 hours ago

வெனிசுலாவின் ராணுவம் அமெரிக்க தாக்குதலைத் தாங்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • நோபெர்டோ பரெதஸ்

  • பிபிசி

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

லத்தீன் அமெரிக்காவுக்கு அருகில் உள்ள கடல் பகுதிக்கு அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டு விமானந்தாங்கி போர்க்கப்பல் வந்தடைந்துள்ளது. இது அமெரிக்கா மற்றும் வெனிசுவேலாவுக்கு இடையிலான அதிகரிக்கும் பதற்றத்தில் ஒரு திருப்புமுனையாகும்.

1989 பனாமா மீதான படையெடுப்புக்கு பிறகு, இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் பெரிய அளவிலான நடவடிக்கையை இது குறிக்கிறது.

மூன்று தசாப்தங்களுக்கு முன்பு போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை மானுவல் நோரிகா எதிர்கொண்டதைப் போல இப்போது வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அதே போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். அந்த குற்றச்சாட்டுகளை அவர் உறுதியாக மறுக்கிறார்.

வெனிசுவேலாவின் கரையோரங்களுக்கு அருகில் உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் அதிநவீன விமானந்தாங்கி கப்பலை நிலைநிறுத்தினாலும், அமெரிக்கா அதன் நோக்கங்களை தெளிவாக வெளிப்படுத்தவில்லை.

எவ்வாறாயினும், வெனிசுவேலா எதையும் எதிர்கொள்ளும் நிலைக்கு தயாராக இருப்பதாகத் தெரிகிறது.

கடந்த வாரம், பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பாட்ரினோ லோபஸ், மதுரோவின் அரசாங்கத்துக்கான (வெனிசுவேலா அதிபர்) அச்சுறுத்தலை எதிர்கொள்ள, நாடு முழுவதும் பொதுமக்கள் படைகளுடன் சேர்ந்து நிலம், கடல், வான்வழி, நதி மற்றும் ஏவுகணை படைகளை "பெரியளவில் நிலைநிறுத்த" இருப்பதாக அறிவித்தார்.

ஒரு தொலைக்காட்சி உரையில், இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக கிட்டத்தட்ட 200,000 துருப்புக்களை அணி திரட்ட மதுரோ உத்தரவிட்டுள்ளார் என்று பாட்ரினோ லோபஸ் கூறினார்.

அமெரிக்க விமானந்தாங்கி கப்பலின் வருகை என்பது, வெனிசுவேலாவில் செயல்படுவதாக டிரம்ப் குற்றம் சாட்டும் போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிரான அவரது ராணுவ நடவடிக்கையின் தீவிரப்படுத்தலாகப் பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை, படகு மற்றும் கப்பல்களில் பயணித்த 80க்கும் அதிகமான உயிர்களை ஏற்கனவே பறித்துள்ளது.

ஆனால் சில ஆய்வாளர்கள் இந்த நடவடிக்கை மதுரோவை பலவீனப்படுத்துவதற்கான அல்லது கவிழ்ப்பதற்கான பரந்த உத்தியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று வாதிடுகின்றனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற வெனிசுவேலா அதிபர் தேர்தல் ஒரு மோசடி என எதிர்க்கட்சிகள் மற்றும் சர்வதேச பார்வையாளர்களால் முத்திரை குத்தப்பட்டது. அமெரிக்கா மதுரோவின் அரசாங்கம் சட்டவிரோதமானது என்று கருதுகிறது.

'பலவீனமான படைப்பலம்'

மதுரோவின் படைகள் உலகின் மிக சக்திவாய்ந்த ராணுவத்தின் தாக்குதலைத் தாங்க முடியுமா?

செப்டம்பரில், மதுரோ வெனிசுவேலாவைப் பாதுகாக்க 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தயாராக இருப்பதாகக் கூறினார். அத்தகைய எண்ணிக்கையிலான ஒரு படைக்கு ஆயுதம் வழங்கும் வாய்ப்பும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

நிபுணர்கள் அந்த எண்ணிக்கையை கடுமையாக மறுக்கின்றனர்.

"அது உண்மை இல்லை. உண்மையான எண்ணிக்கை மிகக் குறைவு. மதுரோ கடந்த ஆண்டு 40 லட்சம் வாக்குகளை கூட பெற முடியவில்லை," என்று 2020 முதல் 2023 வரை கொலம்பியாவில் அமெரிக்க மூத்த தூதரக அதிகாரியாக இருந்த ஜேம்ஸ் ஸ்டோரி பிபிசியிடம் கூறினார்.

"ராணுவத்திலிருந்து வெளியேறும் விகிதம் அதிகமாக உள்ளது," என்றார் அவர்.

உத்தி ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் (ஐஐஎஸ்எஸ்) ஓர் அறிக்கை, வெனிசுவேலாவில் 123,000 துருப்புக்கள், அத்துடன் 220,000 பொதுமக்கள் படை மற்றும் 8,000 ரிசர்வ் படையினர் இருப்பதாக மதிப்பிடுகிறது.

வெனிசுலாவின் ராணுவம் அமெரிக்க தாக்குதலைத் தாங்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

வெனிசுவேலா வீரர்கள் அரிதாகவே பயிற்சி பெறுகிறார்கள், மேலும் சாவிஸ்டா படையில் உள்ள பல உறுப்பினர்களிடம் ஆயுதம் இல்லை என்று ஜேம்ஸ் ஸ்டோரி கூறினார்.

"ஒருவேளை ராணுவத்தில் ஒரு சில திறமையான பிரிவுகள் இருக்கலாம், ஆனால் ஒரு போரிடும் சக்தியாக, அவை குறிப்பாக திறமையானவை அல்ல."

வெனிசுவேலாவின் ராணுவம் முன்பு இருந்ததைப்போல் இல்லை என்று கூறும் அவர், ஆனால் பிராந்தியத்தில் சில தனித்துவமான வளங்கள் இன்னும் அதற்கு உள்ளன எனத் தெரிவித்தார்.

2006-இல் முன்னாள் அதிபர் ஹ்யூகோ சாவேஸ் ரஷ்யாவிடமிருந்து வாங்கிய சுமார் 20 சுகோய் போர் விமானங்களைத் தவிர, வெனிசுவேலா 1980-களில் அமெரிக்காவின் முக்கிய பிராந்திய கூட்டாளியாக இருந்தபோது, ஒரு டஜனுக்கும் அதிகமான அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட F-16 விமானங்களையும் வாங்கியது.

"சுகோய் தாக்குதல் ஜெட் விமானங்கள் பிராந்தியத்தில் உள்ள வேறு எதையும் விட உயர்ந்தவை, சில இன்னும் செயல்படுகின்றன. F-16 களைப் பொறுத்தவரை, ஒன்று அல்லது இரண்டு இன்னும் வேலை செய்கின்றன என்று நான் நினைக்கிறேன்," என்று ஜேம்ஸ் ஸ்டோரி குறிப்பிட்டார்.

விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள்

அக்டோபர் பிற்பகுதியில், அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், வெனிசுவேலா ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 5,000 இக்லா-எஸ் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை "முக்கிய வான் பாதுகாப்பு நிலைகளில்" நிலைநிறுத்தியுள்ளதாக மதுரோ அறிவித்தார்.

"உலகில் உள்ள எந்த ராணுவ சக்தியும் இக்லா-எஸ் இன் சக்தியை அறிந்திருக்கும்," என்று மதுரோ ஒரு தொலைக்காட்சி ராணுவ நிகழ்வின் போது கூறினார்.

வெனிசுலாவின் ராணுவம் அமெரிக்க தாக்குதலைத் தாங்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

இக்லா-எஸ் (Igla -S) என்பது குறுகிய தூர, குறைந்த உயரத்தில் செயல்படும் வான் பாதுகாப்பு அமைப்பாகும், இது க்ரூஸ் ஏவுகணைகள், டிரோன்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்களை சுட்டு வீழ்த்தும் திறன் கொண்டது.

வெனிசுவேலா சீனாவால் தயாரிக்கப்பட்ட VN-4 கவச வாகனங்களையும் கொண்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், தாக்குதல்களை நடத்தும் திறன் கொண்ட ஆயுதமேந்திய டிரோன்களைக் கொண்ட ஒரே தென் அமெரிக்க நாடாக வெனிசுவேலா உள்ளது. இதை மதுரோ 2022-இல் ஒரு ராணுவ அணிவகுப்பின் போது காட்சிப்படுத்தினார்.

வெனிசுவேலா இரானிடமிருந்து கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை ஏவும் வசதி கொண்ட பேகாப்-III எனும் வேகமான தாக்குதல் படகுகளையும் பெற்றுள்ளது.

அன்டோனியோ ஜோஸ் டி சுக்ரே 100 மற்றும் 200 (ANSU-100 மற்றும் ANSU-200) ஆகியவை இரானிய மாடல்களின் மேம்படுத்தப்பட்ட பதிப்புகளை அடிப்படையாகக் கொண்ட வெனிசுவேலாவில் தயாரிக்கப்பட்ட டிரோன்கள் ஆகும்.

கூடுதலாக, ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸி ஜுராவ்லெவின் கூற்றுப்படி, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பான்ட்சிர்-எஸ் 1 மற்றும் புக்-எம் 2 இ ஏவுகணை அமைப்புகள் சமீபத்தில் ஐஎல் -76 போக்குவரத்து விமானங்களில் வெனிசுவேலாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

'எளிதாக' வீழ்த்தக்கூடிய ஓர் அமைப்பு

ஆனால் "வெனிசுவேலா இருப்பதாகக் கூறுவதற்கும் உண்மையில் செயல்படுவதற்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது" என்று 100-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மையங்களின் நெட்வொர்க்கான பொருளாதார மற்றும் சமூக ஆராய்ச்சிக்கான பிராந்திய ஒருங்கிணைப்பாளர் அமைப்பில் (CRIES) வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச ஆய்வாளர் ஆண்ட்ரே செர்பின் பாண்ட் கூறுகிறார்.

வெனிசுவேலாவுக்குள் நேரடி தாக்குதல்கள் மேலும் தீவிரமடையக்கூடும் என்று வரும் அறிக்கைகளுக்கு மத்தியில், நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளன.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பெச்சோரா எனும் தரையிலிருந்து வானில் ஏவப்படும் ஏவுகணை அமைப்புகள் போன்றவை, இப்போது பயன்பாட்டில் இல்லாத 1960-களுக்கு முந்தைய வடிவமைப்பை கொண்டவை. அவை அமெரிக்க தொழில்நுட்பத்தால் "எளிதாக வீழ்த்தப்படலாம்" என்று செர்பின் பாண்ட் பிபிசியிடம் கூறினார்.

வெனிசுலாவின் ராணுவம் அமெரிக்க தாக்குதலைத் தாங்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

கொரில்லா போர்

மதுரோவும் அவரது நெருக்கமான வட்டமும் ஒரு கொரில்லா போரை நடத்த தயாராகி வருவதாக பல ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

செப்டம்பரில், வெனிசுவேலாவின் உள்துறை அமைச்சர் டியோஸ்டாடோ கபெல்லோ நாடு ஒரு "நீடித்த போருக்கு" தயாராக இருப்பதாக எச்சரித்தார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, மதுரோவின் அரசாங்கம் பொலிவேரியன் தேசிய ஆயுதப் படையிடம், ஏழை சமூகங்களைச் சேர்ந்த தன்னார்வலர்களுக்கு ஆயுதங்களைப் பயன்படுத்த பயிற்சி அளிக்க உத்தரவிட்டது.

வெனிசுவேலா மக்கள் மதுரோவின் பின்னால் அணிதிரள்வார்கள் என்ற கருத்தை ஜேம்ஸ் ஸ்டோரி நிராகரிக்கிறார்.

"மதுரோ ராணுவத்தாலோ அல்லது மக்களாலோ நன்கு விரும்பப்படவில்லை, அதனால்தான் மக்கள் அவரைப் பின்தொடர்வார்கள் அல்லது ஒரு கொரில்லா போரில் அவரை ஆதரிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை," என்று அவர் கூறினார்.

''வெனிசுவேலா ராணுவம் அமெரிக்காவுடன் ஓர் உண்மையான மோதலுக்கு தயாராக இல்லை,'' என்று கூறுகிறார்.

"ஒரு அண்டை நாடான கொலம்பியா அல்லது பிரேசில் உடனான மோதலில் வெனிசுவேலாவின் வழக்கமான ஆயுத அமைப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்," என்று அவர் விளக்கினார், ''ஆனால் அவை அமெரிக்காவிற்கு உண்மையான அச்சுறுத்தலை ஏற்படுத்தாது'' என்றும் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx2lekv1dn8o

ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் - ட்ரம்ப் மிரட்டல்

3 days 5 hours ago

18 Nov, 2025 | 04:41 PM

image

ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோதே இதனைத் தெரிவித்துள்ள ட்ரம்ப், “குடியரசு கட்சி எம்.பிக்கள் செனட் சபையில் பொருளாதார தடைகளுக்கான சட்ட மசோதாக்களை தாக்கல் செய்துகொண்டே இருப்பார்கள். இதுதான் அவர்களுடைய பணி. 

ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை மேற்கொள்ளும். இதில் பாரபட்சம் இல்லை. அது எந்த நாடாக இருந்தாலும் சரி. இந்த பட்டியலில் ஈரானையும் சேர்க்கச் சொல்லியிருக்கிறேன்” என்றார். 

ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் கடுமையான பல அறிவிப்புகளை அடிக்கடி வெளியிட்டு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக, பிற நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பதாக அவர் தொடர்ந்து மிரட்டி வருவதோடு, உலக நாடுகளிடையே நிலவி வரும் யுத்தங்களை நிறுத்துவதற்காக வரி விதிப்பை தான் கடுமையாக்கி வருவதாகவும் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்திருக்கிறார். 

2022இல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து அந்நாட்டின் மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்தன. குறிப்பாக, ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்குவதற்காக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. 

இந்நிலையில், ட்ரம்ப் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது அதிகப்படியான வரியை விதித்து, ரஷ்யா மீதான தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்.

இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே, மீண்டும்,  ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் என ட்ரம்ப் மிரட்டலான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/230718

இங்கிலாந்தில் ஆதரவை இழக்கும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்!

3 days 9 hours ago

skynews-keir-starmer-labour_7084631.jpg?

இங்கிலாந்தில் ஆதரவை இழக்கும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்!

இங்கிலாந்து பிரதமர்  (Keir Starmer ) கீர் ஸ்டார்மரின் தலைமை மற்றும் வரவிருக்கும் வரவு செலவு திட்டம் குறித்து இங்கிலாந்தில் அரசியல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது வாக்காளர்களின் விருப்பங்களை மீறியும் ஸ்டார்மர் அடுத்த 2029 ஆண்டு வரவிருக்கும் பொதுத் தேர்தலில் தொழில் கட்சியினரை வழிநடத்தப் போவதாக வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, ஸ்டார்மரை ஆதரித்த வாக்காளர்களில் சுமார் 23% பேர் அவர் தற்போது ராஜினாமா செய்ய வேண்டும் என்று நினைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வரவிருக்கும் வரவுசெலவு திட்டம் மற்றும் மே மாதத் தேர்தல்கள் அவரது புகழுக்கு மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்றும், பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இதற்கிடையில், கன்சர்வேடிவ் மற்றும் சீர்திருத்தக் கட்சிகளின் தலைவர்கள் வரவு செலவு திட்டம் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து விமர்சனங்களைத் தயார் செய்துவருக்கின்றனர்.

குறிப்பாக, வரவிருக்கும் வரவு செலவு திட்டம் வருமான வரி விலக்குகளை முடக்குவது குறித்து பற்றி ஒரு கன்சர்வேடிவ் கட்சி தலைவர் எச்சரிக்கை விடுக்க உள்ளார்.

https://athavannews.com/2025/1453088

இங்கிலாந்தில் நிரந்தர குடியிருப்பு பெற 20 ஆண்டுகள் காத்திருப்பு!

4 days 10 hours ago

download-1-9.jpg?resize=308%2C164&ssl=1

இங்கிலாந்தில் நிரந்தர குடியிருப்பு பெற 20 ஆண்டுகள் காத்திருப்பு!

இங்கிலாந்தில் அகதி அந்தஸ்து பெறுபவர்களுக்கு, நிரந்தர குடியிருப்பு பெற 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று புதிய திட்டத்தை உள்துறை செயலாளர் Shabana Mahmood அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறிய படகுகளின் வழியாக நடக்கும் குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் முயற்சியின் பகுதியாக இந்த பெரிய மாற்றம் கொண்டு வரப்படுகிறது.

தற்போது அகதிகள் ஐந்து ஆண்டுகள் அந்தஸ்துடன் தங்கி, பின்னர் Indefinite Leave to Remain — அதாவது நிரந்தரமாக குடியிருக்கும் அனுமதிக்காக விண்ணப்பிக்க முடியும்.

ஆனால் புதிய திட்டத்தின் கீழ் — அந்த ஆரம்ப காலம் ஐந்து ஆண்டில் இருந்து இரண்டு-அரை ஆண்டுகளாக குறைக்கப்படும்.

அந்த காலம் முடிந்ததும், அகதி அந்தஸ்து தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படும்.

அதிலும் குறிப்பாக — நிரந்தர குடியிருப்புக்கான காத்திருப்பு காலம் 5 ஆண்டிலிருந்து 20 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட உள்ளது.

இதன்படி, அகதி அந்தஸ்துடன் இருக்கும் காலத்தில் ஒருவரின் சொந்த நாடு பாதுகாப்பானதாக கருதப்பட்டால், அவர் பிரித்தானியாவை விட்டு நாடு திரும்ப வேண்டும் என உத்தரவிடப்படும்.

இந்த கொள்கை, டென்மார்க் நாட்டின் கடுமையான குடியேற்ற மாதிரியை பின்பற்றுவதாகவும் கூறப்படுகிறது.

டென்மார்கில் அகதிகளுக்கு பொதுவாக 2 ஆண்டுகள் மட்டுமே தற்காலிக அனுமதி வழங்கப்படுகின்றது.

இந்நிலையில், Labour கட்சியின் சில எம்.பிக்களிடமிருந்து இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு எழும் வாய்ப்பும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மார்ச் மாதம் முடியும் 12 மாதங்களில், பிரித்தானியாவில் 1 லட்சத்து 9,343 பேர் அகதி விண்ணப்பம் செய்துள்ளனர்.

இது கடந்த ஆண்டை விட 17% அதிகம். இந்த ஆண்டு இதுவரை சிறிய படகுகள் மூலம் 39,000-க்கும் மேற்பட்டோர் பிரித்தானியா வந்துள்ளனர்.

இது 2024 மற்றும் 2023 ஆண்டுகளை ஏற்கனவே தாண்டியுள்ளது.

https://athavannews.com/2025/1452942

சீனாவுடன் பதற்றத்திற்கு நடுவே தென்கொரியா அணுசக்தி நீர்மூழ்கி தயாரிக்க அமெரிக்கா உதவுவது ஏன்?

5 days ago

அமெரிக்கா - தென் கொரியா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல், சீனா, வட கொரியா, சீனா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலின் கோப்புப் படம்

கட்டுரை தகவல்

  • ஜேக் க்வோன்

  • சியோல்

  • கேவின் பட்லர்

  • சிங்கப்பூர்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்காவுடன் இணைந்து அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை கட்டும் ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளதாகத் தென் கொரிய அரசு அறிவித்துள்ளது.

இந்த "தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு" அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாகவும், எரிபொருள் ஆதாரங்களில் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டதாகவும் வெள்ளை மாளிகை வியாழக்கிழமை வெளியிட்ட தகவல் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த ஒப்பந்தம் தென் கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு முக்கியமான படியைக் குறிக்கிறது. அணு ஆயுதம் தாங்கிய வட கொரியா மற்றும் மேற்கில் விரிவாக்கக் கொள்கையைக் கொண்ட சீனாவுடனான தென் கொரிய எல்லையில் பதற்றங்கள் அதிகரித்து வரும் ஒரு காலகட்டத்தில் இது வந்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை இங்கே.

ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது என்ன?

அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான இந்த ஒப்பந்தம், இரு நாடுகளி சதவீதமாக குறைக்க ஒரு பரந்த வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென் கொரியா மீது 25% வரியை விதித்திருந்தார். தென் கொரியா அமெரிக்காவில் 350 பில்லியன் டாலர் (265 பில்லியன் பவுண்ட்) முதலீடு செய்வதாகக் கூறிய பிறகு, தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங்கால் பேச்சுவார்த்தை மூலம் அதை 15% ஆக குறைக்க முடிந்தது. இதில் 200 பில்லியன் டாலர் பண முதலீடும் கட்டுமானத்தில் 150 பில்லியன் டாலர் முதலீடும் அடங்கும்.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட வெள்ளை மாளிகை அறிக்கையில், "தென் கொரியா அணுசக்தி மூலம் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. [மற்றும்] எரிபொருள் ஆதாரங்களுக்கான வழிகள் உட்பட இந்தத் திட்டத்திற்கான தேவைகளை மேம்படுத்த நெருக்கமாகச் செயல்படும்." என்று அமெரிக்கா கூறியுள்ளது.

டிரம்ப் தனது சமூக ஊடக தளமான 'ட்ரூத் சோஷியல்'-இல் வெளியிட்ட ஒரு முந்தைய பதிவில், இந்த கப்பல்கள் தென் கொரிய நிறுவனமான ஹன்வா (Hanwha), பிலடெல்பியாவில் நடத்தும் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்படும் என்று கூறியிருந்தார்.

தற்போது அணுசக்தி மூலம் இயங்கும் மூலோபாய நீர்மூழ்கிக் கப்பல்களை வைத்திருக்கும் நாடுகள் ஆறு மட்டுமே. அவை அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இந்தியா.

தென் கொரியாவிடம் ஏற்கனவே சுமார் 20 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் டீசல் மூலம் இயக்கப்படுவதால், அடிக்கடி கடலின் மேற்பரப்புக்கு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் அதிக தொலைவு மற்றும் வேகத்தில் செயல்பட முடியும்.

"அவர்களிடம் இப்போது இருக்கும் பழைய பாணியிலான, வேகமற்ற டீசல் மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்குப் பதிலாக, அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலைக் கட்ட ஒப்புதல் அளித்துள்ளேன்," என்று டிரம்ப் 'ட்ரூத் சோஷியல்'-இல் எழுதினார்.

தென் கொரியா சிவிலியன் அணுசக்தித் துறையில் ஒரு முக்கியமான நாடாகத் திகழ்கிறது. இது 1970களில் அணு ஆயுதத் திட்டத்தைக் கொண்டிருந்தது, ஆனால் அமெரிக்க அழுத்தத்திற்குப் பிறகு அதைக் கைவிட்டது.

தென் கொரியா இறக்குமதியை முழுமையாகச் சார்ந்திருப்பதால், அதன் யுரேனியத்தைச் செறிவூட்டும் அல்லது மறுசுழற்சி செய்யும் திறன் அமெரிக்காவால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தென் கொரியா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை விரும்புவது ஏன்?

வட கொரியா சமீபத்தில் தனது சொந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தைத் தொடர்வதாக அறிவித்ததற்கு பதிலடியாக, இந்த சமீபத்திய கப்பல் திட்டம் வட கொரியாவை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கடந்த மாதம் நடந்த ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு (APEC) உச்சி மாநாட்டில் அதிபர் லீ, தென் கொரியாவிற்கு இந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் அந்த குறிப்பிட்ட நோக்கத்திற்காகத் தேவை என்று டிரம்பிடம் கூறியிருந்தார்.

தென் கொரிய பாதுகாப்பு அமைச்சரான ஆன் கியு-பேக் கடந்த வாரம் அளித்த தொலைக்காட்சி நேர்காணலில், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் தென் கொரியாவுக்கு ஒரு "பெருமைக்குரிய சாதனை" என்றும், வட கொரியாவுக்கு எதிராக நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் ஒரு பெரிய பாய்ச்சல் என்றும் கூறினார்.

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களின் மறைந்து செயல்படும் தன்மை (stealth) வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை "இரவில் விழித்திருக்க வைக்கும்" என்றும் அவர் மேலும் கூறினார்.

அமெரிக்கா - தென் கொரியா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல், சீனா, வட கொரியா, சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் தென் கொரியாவில் அந்நாட்டு அதிபரை சந்தித்தார்.

வட கொரியாவிடம் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளனவா?

வட கொரியாவும் ஒரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தைத் தொடர்கிறது என்றும் அது ரஷ்யாவின் உதவியுடன் இருக்கலாம் என்றும் தென் கொரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தான் தயாரித்து வருவதாகக் கூறும் ஒரு அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் தளத்தை வடகொரிய அதிபர் கிம் பார்வையிடுவதைக் காட்டும் வகையிலான படங்களை மார்ச் 2025 இல் வடகொரியா வெளியிட்டது.

வடகொரியா அடுத்த சில ஆண்டுகளில் இந்த நீர்மூழ்கிக் கப்பலைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வட கொரியா தனது பரந்த அணு ஆயுதத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தோராயமாக 50 அணு ஆயுதங்களைக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தென் கொரியா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறுவது, கிழக்கு ஆசியாவில் அதிகரித்து வரும் ஆயுதப் போட்டியில் அது தொடர்ந்து முன்னேற உதவும் என்று சேஜோங் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் ஜோ பீ-யூன் கருத்துத் தெரிவித்தார்.

"வட கொரியாவின் அணு ஆயுதம் ஒரு உறுதி செய்யப்பட்ட உண்மை" என்று அவர் பிபிசியிடம் கூறினார். "[தென் கொரியா] அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறுவது அதிகரித்து வரும் பதற்றமான போக்கின் ஒரு படி மட்டுமே."

கொரிய தீபகற்பத்தில் இது பதற்றத்தை தூண்டுமா?

அணுசக்தி மூலம் இயக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பல்கள் தென் கொரியாவின் பாதுகாப்புக் திறன்களுக்கு எவ்வளவு பங்களிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. சில நிபுணர்களின் கூற்றுப்படி, அவை மிகவும் விலை உயர்ந்தவை என்றாலும், கொரிய தீபகற்பத்தில் உள்ள அதிகார சமநிலையை அவை பெரிதாக மாற்றப் போவதில்லை.

அசன் கொள்கை ஆய்வுகள் நிறுவனத்தின் (Asan Institute for Policy Studies) ஆராய்ச்சியாளரான யாங் உக், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களின் முதன்மை நோக்கம், வட கொரியாவின் அணு அச்சுறுத்தலுக்குத் தங்கள் அரசு பதிலளிக்கிறது என தென் கொரிய வாக்காளர்களுக்கு உறுதியளிப்பதே என்று பிபிசியிடம் கூறினார்.

"வட கொரியாவை எதிர்கொள்ளத் தென் கொரியாவால் அதன் சொந்த அணு ஆயுதங்களை உருவாக்க முடியாது," என்று யாங் கூறினார். "அவர்களால் என்ன செய்ய முடியும்? அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைக் களமிறக்க முடியும்."

இது அணு ஆயுதங்களைத் தக்க வைத்துக் கொள்வதற்கான அவர்களின் நியாயத்தை வலுப்படுத்துவதால் வட கொரியா இந்த மாற்றத்தில் மகிழ்ச்சியடையக்கூடும் என்று யாங் நம்புகிறார், அதாவது வடகொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று கோருவது மிகவும் கடினமாகிவிடும்.

இருப்பினும், இந்த புதிய நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் மூலம் தென் கொரியா பெறும் உத்தி ரீதியான நன்மையை ஜோ வலியுறுத்தினார், இது ஒரு "பெரிய மாற்றம்" என்று விவரித்தார், இதன் பொருள் "தென் கொரியா இப்போது ஒரு பிராந்திய சக்தி." என்றார்.

"ஒரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலின் சிறந்த அம்சம் அதன் வேகம்" என்று அவர் கூறினார். "அது இப்போது வேகமாகவும் தூரமாகவும் செல்ல முடியும், மேலும் தென் கொரியா அதிக நாடுகளுடன் இணைந்து செயல்பட முடியும்."

அமெரிக்காவிற்கு என்ன பலன்?

அமெரிக்காவைப் பொறுத்தவரை, தென் கொரியாவின் அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்திற்கான ஆதரவு வட கொரியா மற்றும் சீனா ஆகிய இரண்டின் மீதும் அழுத்தம் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

"பாதுகாப்பிற்கான செலவினச் சுமையை டிரம்ப் தென் கொரியாவின் முதுகில் வைத்துள்ளார்," என்று யாங் விளக்கினார். "தென் கொரியா தனது பாதுகாப்புச் செலவினத்தை மிகவும் அதிகரிக்கும். அவர்கள் சீனா மற்றும் வட கொரியா மீது அழுத்தம் கொடுப்பதில் அமெரிக்காவின் பினாமியாக செயல்படுவார்கள்."

அமெரிக்கா - தென் கொரியா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல், சீனா, வட கொரியா, சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தென் கொரியாவில் பிற நாடுகளின் செல்வாக்கை எதிர்கொள்ள டொனால்ட் டிரம்ப் முயன்று வருகிறார் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தென் கொரியாவில் உத்தி ரீதியாக செல்வாக்கு செலுத்துவதற்காக அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரண்டுமே நீண்ட காலமாகப் போட்டியிட்டு வருகின்றன, இதனால் தென் கொரியா ஒரு புவிசார் அரசியல் நெருக்கடியான சூழ்நிலையில் செயல்பட வேண்டியுள்ளது.

சமீப காலமாக, சீனா தென் கொரியாவின் கடல் எல்லைக்கு அருகில் தனது கடற்படை நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறது. இது தென் சீனக் கடலில் காணப்படுவதைப் போன்ற ஒரு நடவடிக்கைதான்.

தென் கொரியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் குறித்து சீனா "மிகவும் கோபமாக" இருக்க வேண்டும் என்று யாங் கூறினார்.

இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தென் கொரியாவிற்கான சீனத் தூதர் டாய் பிங், "தென் கொரியா அனைத்து தரப்பினரின் கவலைகளையும் கருத்தில் கொண்டு, இந்தப் பிரச்னையை விவேகத்துடன் கையாளும்" என்று நம்புவதாகக் கூறினார்.

டாய் மேலும் கூறுகையில், சீனா இந்த விஷயத்தில் ராஜதந்திர வழிகளை கடைபிடித்து வருவதாகவும், "கொரிய தீபகற்பத்திலும் பிராந்தியத்திலும் உள்ள (பாதுகாப்பு) நிலைமை இன்னும் சிக்கலானதாக உள்ளது." என்றும் கூறினார்.

அடுத்தது என்ன?

இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் பிலடெல்பியாவில் கட்டப்படும் என்றும், அமெரிக்காவிற்கு வேலைகளைக் கொண்டு வரும் என்றும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஆனாலும், மிகக் குறுகிய காலக்கெடுவுக்குள் கட்டிவிடமுடியும் என்பதால் தென் கொரியாவிலேயே கட்டப்பட வேண்டும் என்று அந்நாட்டு அதிகாரிகள் வலியுறுத்தினர்.

கப்பல் கட்டும் தளத்தை வைத்திருக்கும் ஹன்வா இதுவரை இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்கவில்லை.

அறிக்கைகளின்படி, தென் கொரியப் பிரதமர் கிம் மின்-சியோக் ஒரு நாடாளுமன்ற விசாரணையின் போது, பிலடெல்பியாவில் உள்ள தென் கொரியாவிற்குச் சொந்தமான கப்பல் கட்டும் தளத்தில் அத்தகைய கப்பல்களைக் கட்டும் "திறன் இல்லை" என்று கூறியிருந்தார்.

ஆனால் இப்போது ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதால், அடுத்த கட்டம் இரு நாடுகளுக்கும் இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தை சரிசெய்வதுதான். இது அமெரிக்கா அணு எரிபொருளை வழங்குவதற்கும், அதன் ராணுவ பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகளை விதிக்கவும் அனுமதிக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4gp1w81p8go

ஹிட்லரின் ரத்தக்கறை படிந்த துணியை மரபணு ஆய்வு செய்ததில் கிடைத்த முடிவு என்ன?

5 days 10 hours ago

அடால்ஃப் ஹிட்லரின் ரத்தத்தில் செய்யப்பட்ட டிஎன்ஏ ஆய்வு, அவரது வம்சாவளி மற்றும் உடல்நிலை பற்றிய சில ஆச்சர்யமூட்டும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அடால்ஃப் ஹிட்லர்

கட்டுரை தகவல்

  • டிஃப்பனி வெர்தைமர்‎

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

அடால்ஃப் ஹிட்லரின் ரத்த மாதிரியில் மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ ஆய்வு, அவரது வம்சாவளி மற்றும் உடல்நிலை பற்றிய சில ஆச்சர்யமூட்டும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

சர்வதேச நிபுணர்கள் குழு, அவரது ரத்தக் கறை படிந்த பழைய துணியைப் பயன்படுத்தி கடினமான விஞ்ஞான பரிசோதனைகளை மேற்கொண்டது. இதில், ஹிட்லருக்கு யூத வம்சாவளி இருந்ததாகப் பரவிய வதந்தி உண்மையில்லை என நிரூபிக்கப்பட்டது. அதோடு அவருக்கு பாலியல் உறுப்புகளின் வளர்ச்சியை பாதிக்கும் ஒரு மரபணுக் கோளாறு இருந்திருக்கலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

ஹிட்லருக்கு சிறிய ஆணுறுப்பு இருந்ததா அல்லது ஒரே ஒரு விதைப்பை மட்டுமே இருந்ததா என்பன போன்ற பரபரப்பூட்டும் தலைப்புகளில் ஒருபுறம் கவனம் செலுத்தப்பட்டது.

ஆனால், ஹிட்லரின் டிஎன்ஏ-வில் ஆட்டிசம், ஸ்கிசோஃப்ரினியா, பைபோலார் டிஸ்ஆர்டர் போன்றவை மரபணு மூலம் ஏற்படுவதற்கான சாத்தியம் மிக உயர்ந்த அளவில் இருந்தது என்பதுதான் இதில் மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பு.

அப்படியென்றால் அவருக்கு இந்த நரம்பியல் பிரச்னைகள் இருந்ததாகக் கூற முடியுமா என்று கேள்வி எழுப்பினால், இல்லை, அவருக்கு இந்த நோய்கள் இருந்தன என்று அர்த்தமல்ல என்று நிபுணர்கள் தெளிவுபடுத்துகின்றனர்.

அதே நேரம், இந்த ஆராய்ச்சி எதிர்மறையான பார்வைக்கு வழிவகுக்குமா, அது நெறிமுறை ரீதியாக சரியானதா என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. இதனால், இதுகுறித்த ஆய்வு செய்யப்பட்டிருக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது.

"இந்த ஆய்வை செய்ய வேண்டுமா என்று நிறைய யோசித்தேன்"என சேனல் 4இன் 'ஹிட்லரின் டிஎன்ஏ: ஒரு சர்வாதிகாரியின் ப்ளூபிரின்ட் (Hitler's DNA: Blueprint of a Dictator)' என்னும் ஆவணப்படத்தின் தொடக்கத்தில் பேராசிரியர் துரி கிங் கூறுகிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டத்தில் பங்கேற்க அவரை அணுகியபோது, ஹிட்லர் போன்ற சர்ச்சைக்குரிய நபரை ஆய்வு செய்வதில் ஏற்படும் விளைவுகளை அவர் நன்கு அறிந்திருந்தார். "பரபரப்பை உருவாக்குவதில் எனக்கு எந்த விருப்பமும் இல்லை," என்று அவர் பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்.

ஆனால், இந்த ஆய்வு ஒருநாள் யாராவது ஒரு நபரால் செய்யப்படும். குறைந்தது தனது கண்காணிப்பின் கீழ் நடந்தால், அறிவியல் தரநிலைகளுடனும், "முழு எச்சரிக்கைகளுடனும்" நடைபெறும் என்பதை உறுதிசெய்ய முடியும் என்பதால் இதைச் செய்ய விரும்பினேன் என்கிறார்.

பேராசிரியர் கிங் இத்தகைய முக்கியமான மற்றும் கவனமாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஆய்வுகளில் அனுபவம் வாய்ந்தவர். இவர் 2012இல் லெஸ்டரில் கார் நிறுத்துமிடத்தின் கீழ் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது ரிச்சர்டின் எலும்புக்கூட்டினுடைய அடையாளத்தை உறுதிப்படுத்திய மரபணு ஆய்வை வழிநடத்தியவர்.

ஹிட்லரின் பதுங்கு குழியிலிருந்த சோபாவில் இருந்து வெட்டப்பட்ட துணி .

பட மூலாதாரம், Gettysburg Museum of History

படக்குறிப்பு, ஹிட்லரின் பதுங்கும் இடத்தில் இருந்த சோபாவில் இருந்து வெட்டப்பட்ட துணி. ரத்தக் கறையை கீழ்-இடது புறத்தில் தெளிவாகக் காணலாம்.

ஹிட்லரின் ரத்தக் கறை படிந்த துணி

ரத்தக் கறை படிந்த அந்தத் துணி, 80 ஆண்டுகள் பழமையானது.

அது இரண்டாம் உலகப் போரின் முடிவில், நேச நாட்டுப் படைகள் பெர்லினை நோக்கி முன்னேறியபோது, ஹிட்லர் தற்கொலை செய்து கொண்ட அவரது நிலத்தடி மறைவிடத்தில் இருந்த சோபாவில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டது.

அந்தப் மறைவிடத்தை ஆய்வு செய்த அமெரிக்க ராணுவ கர்னல் ரோஸ்வெல் பி. ரோஸென்கிரென், இந்தத் துணியை ஓர் அபூர்வமான போர் நினைவுச் சின்னமாகக் கருதி எடுத்துச் சென்றார். இப்போது அந்தத் துணி அமெரிக்காவின் கெட்டிஸ்பர்க் வரலாற்று அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் துணியில் உள்ள ரத்தம் உண்மையாகவே ஹிட்லருடையதுதான் என்று விஞ்ஞானிகள் உறுதியாகக் கருதுகிறார்கள்.

ஏனெனில், பத்து ஆண்டுகளுக்கு முன் ஹிட்லரின் ஆண் உறவினரிடம் இருந்து எடுத்த டிஎன்ஏ மாதிரியுடன் Y-குரோமோசோம் சரியாகப் பொருந்தியதால், இது ஹிட்லரின் ரத்தம் என்பதை விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகிறார்கள்.

தற்போது சக மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இந்த ஆய்வின் முடிவுகள், ஆச்சர்யம் அளிக்கக் கூடியவை. வரலாற்றில் முதல் முறையாக ஹிட்லரின் டிஎன்ஏ அடையாளம் காணப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகள் ஆய்வில், மிக மோசமான சர்வாதிகாரிகளில் ஒருவருடைய மரபணு அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அதில், ஹிட்லர் யூத வம்சாவளியைச் சேர்ந்தவர் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த ஆய்வு முடிவு முக்கியமானது. ஏனென்றால், 1920களில் இருந்து அவர் யூத மரபுகளின் வேர்களைக் கொண்டிருக்கலாம் என்று ஒரு வதந்தி பரவியிருந்தது.

ஹிட்லரின் ரத்தக்கறை படிந்த துணியை வைத்து நடந்த மரபணு ஆய்வு

பட மூலாதாரம், Hulton Archive/Getty Images

மேலும், அவருக்கு கால்மன் சிண்ட்ரோம் (Kallmann syndrome) எனப்படும் மரபணுக் கோளாறு இருந்திருக்கலாம் என்றும் ஆய்வு கூறுகிறது. இதனால் பருவமடைதல் மற்றும் பாலியல் உறுப்புகள் உருவாகும் முறை பாதிக்கப்படலாம். குறிப்பாக, சிறிய ஆணுறுப்பு மற்றும் விதைப்பை இறங்காமல் இருப்பது போன்ற நிலைகளுக்கு இது காரணமாக இருக்கலாம். இதுகுறித்து போர்க்கால பிரிட்டிஷ் பாடல்களில் கூறப்பட்ட வதந்திகளும் இருந்தன.

கால்மன் சிண்ட்ரோம் பாலியல் உணர்வையும் பாதிக்கக்கூடும். இது மிகவும் சுவாரஸ்யமான கோணமாக இருப்பதாக, ஆவணப் படத்தில் இடம்பெற்றுள்ள வரலாற்று ஆசிரியரும் போட்ஸ்டாம் பல்கலைக்கழக விரிவுரையாளருமான அலெக்ஸ் கே குறிப்பிடுகிறார்.

"இது அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி நிறைய சொல்கிறது. சரியாகச் சொன்னால், அவருக்கு தனிப்பட்ட வாழ்க்கை எதுவும் இல்லையென்பதை வெளிப்படுத்துகிறது," என்று அவர் விளக்குகிறார்.

ஹிட்லர் வாழ்நாள் முழுவதும் அரசியலுக்காகத் தன்னை அர்ப்பணித்தது ஏன் என்பது குறித்தும், "அவருக்கு ஏன் தனிப்பட்ட வாழ்க்கை இல்லை" என்பது குறித்தும் வரலாற்றாசிரியர்கள் பல ஆண்டுகளாக விவாதித்து வருகிறார்கள். மரபணு சார்ந்த இந்தக் கண்டுபிடிப்புகள் அதற்கான விளக்கத்தை வழங்கக்கூடும்.

இத்தகைய கண்டுபிடிப்புகளே இந்த ஆய்வை சுவாரஸ்யமானதாகவும் பயனுள்ளதாகவும் ஆக்குவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். பேராசிரியர் துரி கிங் சொல்வது போல, இது "வரலாற்றையும் மரபியலையும் பிணைக்கும்" முயற்சி.

பேராசிரியர் துரி கிங் மற்றும் வரலாற்றாசிரியர் அலெக்ஸ் கே

பட மூலாதாரம், Tom Barnes/Channel 4

படக்குறிப்பு, மரபியல் நிபுணர் பேராசிரியர் துரி கிங் மற்றும் வரலாற்றாசிரியர் அலெக்ஸ் கே

கவலை தெரிவிக்கும் மரபணு நிபுணர்கள்

ஹிட்லருக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நரம்பியல் அல்லது மனநலக் குறைபாடுகள் இருந்திருக்கலாம் என்று கூறும் முடிவுகள் மேலும் சிக்கலானவையாக, சர்ச்சைக்குரியவையாக உள்ளன.

அவருடைய மரபணுவைப் பரிசோதித்து, பாலிஜெனிக் மதிப்பெண்களுடன் ஒப்பிட்டபோது, ஹிட்லருக்கு ஆட்டிசம், ஏடிஹெச்டி, ஸ்கிசோஃப்ரினியா, பைபோலார் டிஸ்ஆர்டர் போன்றவை இருப்பதற்கான சாத்தியம் அதிகம் இருந்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

இங்குதான் அறிவியல் ரீதியான சிக்கல் ஏற்படுகிறது.

பாலிஜெனிக் மதிப்பெண் என்பது ஒருவரின் டிஎன்ஏ-வை ஆராய்ந்து, அவருக்கு ஒரு நோய் உருவாகும் சாத்தியம் என்ன என்பதை மதிப்பிடும் முறை. இதய நோய் அல்லது பொதுவான புற்றுநோய் போன்ற பிரச்னைகளுக்கான முன்கணிப்பை அறிய இது உதவுகிறது.

ஆனால் இது ஒரு பெரிய மக்கள் தொகையின் தரவுகளுடன் ஒப்பிட்டு மதிப்பிடப்படுவதால், ஒரு தனிநபருக்கான முடிவுகளை வழங்கும்போது அது எப்போதும் துல்லியமானதாக இருக்காது.

பிபிசி பார்த்த இந்த ஆவணப்படம் முழுக்க தொடர்ச்சியாக, இந்த டிஎன்ஏ ஆய்வு ஒரு நோயறிதல் அல்ல, மாறாக முன்கூட்டியே இருந்த சாத்தியத்தை வெளிப்படுத்தும் ஓர் அறிகுறி மட்டுமே என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

அதாவது, ஹிட்லருக்கு இந்தப் பிரச்னைகள் அனைத்தும் இருந்தன என்று அர்த்தமில்லை, இருந்திருக்க வாய்ப்புள்ளது என்பதை மட்டுமே ஆய்வு முடிவு காட்டியுள்ளது.

ஆனால் சில மரபணு நிபுணர்கள் இந்தக் கண்டுபிடிப்புகள் குறித்துக் கவலை தெரிவித்துள்ளனர்.

ஹிட்லர் மற்றும் அவரது மனைவி ஈவா பிரௌன் தற்கொலை செய்துகொண்டதாக கருதப்படும் பங்கர்

பட மூலாதாரம், Haacker/Hulton Archive/Getty Images

படக்குறிப்பு, ஹிட்லர் மற்றும் அவரது மனைவி ஈவா பிரௌன் தற்கொலை செய்துகொண்டதாக கருதப்படும் பங்கர்

கடந்த 2018இல் இதே ரத்த மாதிரியை ஆய்வு செய்த லண்டன் கிங்ஸ் கல்லூரியின் தடயவியல் மரபியல் பேராசிரியர் டெனிஸ் சின்டர்கோம்ப் கோர்ட், இந்த முடிவுகள் "மிகைப்படுத்தப்பட்டவை" என்று கருதுகிறார்.

"ஒருவரின் குணநலன்கள் அல்லது நடத்தையை இதன் மூலம் தீர்மானிப்பது பயனற்றது," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

"மரபணுவில் சாத்தியம் இருந்தாலும், அது எல்லோரிடமும் நோயாக வெளிப்படாது (incomplete penetrance). அதனால், இந்த ஆய்வு முடிவுகளை வைத்து ஒருவருக்கு நோய் இருக்கிறதா என்று நான் கணிக்க விரும்பவில்லை" என்று அவர் விளக்கினார்.

இதையே மரபணு விஞ்ஞானி சுந்தியா ராமன் எளிமையாகச் சொல்கிறார். அதாவது, "உங்கள் டிஎன்ஏவில் குறிப்பிடப்பட்டு இருப்பதாலேயே, அது உங்கள் உடலில் வெளிப்பட்டுவிடும் என்று அர்த்தமில்லை."

ஆவணப் படத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆட்டிசம் ஆராய்ச்சி மைய இயக்குநர் பேராசிரியர் சைமன் பாரன்-கோஹனும் இதே கருத்தை முன்வைக்கிறார்.

"உடலியல் (மரபணு) தகவல்களில் இருந்து ஒருவரின் நடத்தை பற்றிய நேரடி முடிவுக்கு வருவது சரியானதாக இருக்காது" என்கிறார் அவர்.

"இவ்வாறான மரபணு முடிவுகளை வெளியிடும்போது எதிர்மறை கருத்து உருவாக வாய்ப்புண்டு. 'எனக்கு இருக்கும் மருத்துவ நிலை, இத்தகைய கொடூர செயல்களைச் செய்த ஒருவருடன் இணைக்கப்படுகிறதா?' என்று மக்கள் தவறாக நினைக்கக்கூடும்" என்று குறிப்பிடுகிறார்.

அதேபோல்,"எல்லாவற்றையும் மரபணுவோடு மட்டும் சுருக்கிப் பார்க்கும் மனப்பான்மை இதிலுள்ள ஒரு பெரிய ஆபத்து" எனக் கூறும் அவர், ஏனென்றால் பரிசீலிக்க வேண்டிய பல்வேறு காரணிகள் இன்னும் உள்ளன என்றார்.

கடந்த 1889ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டதாகக் கருதப்படும் அடால்ஃப் ஹிட்லரின் குழந்தைப் பருவ புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த 1889ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டதாகக் கருதப்படும் அடால்ஃப் ஹிட்லரின் குழந்தைப் பருவ புகைப்படம்

'இதுவொரு மலிவான செயல்'

இந்தக் கண்டுபிடிப்புகளை "ஒரு மலிவான செயல்" என்று கூறி, பிரிட்டனின் தேசிய ஆட்டிசம் சங்கம் இந்த ஆய்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

"மேலும், தரமற்ற அறிவியல் ஆய்வைவிட, இந்த ஆவணப்படம் ஆட்டிசம் உள்ளவர்களின் உணர்வுகளைப் பொருட்படுத்தாத விதம்தான் எங்களை அதிர்ச்சியடையச் செய்தது," என்று ஆராய்ச்சி உதவி இயக்குநர் டிம் நிக்கல்ஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும், "ஆட்டிசம் உள்ளவர்கள் இதைவிடச் சிறந்த அணுகுமுறைக்குத் தகுதியானவர்கள்," என்றும் அவர் வலியுறுத்தினார். பிபிசி இந்த விமர்சனங்களை சேனல் 4 மற்றும் ஆவணப்படத்தை தயாரித்த ப்ளிங்க் பிலிம்ஸ் நிறுவனத்திடம் முன்வைத்தது.

அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், பேராசிரியர் சைமன் பாரன்-கோஹன் உள்ளிட்ட நிபுணர்கள் இது குறித்து தெளிவாக விளக்கியிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

"ஒருவரின் நடத்தை பல காரணிகளின் விளைவாக உருவாகிறது. அது மரபணுவால் மட்டுமே உருவாவதில்லை. மாறாக, குழந்தைப் பருவம், வாழ்க்கை அனுபவங்கள், வளர்ப்பு, கல்வி, கிடைக்கும் வாய்ப்புகள், சமூகம், கலாசாரம் உள்ளிட்ட பல அம்சங்களால் உருவாகிறது."

"இந்த ஆவணப்படம் ஹிட்லரை பற்றி சில மரபணு சார்ந்த தகவல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தாலும், அவர் ஒரு குறிப்பிட்ட முறையில் நடந்து கொள்வது 'முன்பே உயிரியல் ரீதியாக நிர்ணயிக்கப்பட்டது' என்று சொல்லவில்லை."

பேராசிரியர் தாமஸ் வெபர்

பட மூலாதாரம், Stephanie Bonnas

படக்குறிப்பு, "ஆராய்ச்சி முடிவுகளைப் பார்த்தபோது, நான் ஒரே நேரத்தில் உற்சாகத்துடனும் கவலையுடனும் இருந்தேன்," என்று பேராசிரியர் தாமஸ் வெபர் கூறினார்.

ஆவணப்படத்தின் பெயரே, குறிப்பாக "Blueprint of a Dictator" என்ற இரண்டாம் பகுதி பலரின் கவனத்தையும் விமர்சனத்தையும் பெற்றுள்ளது.

இந்தப் பெயரை "நான் தேர்ந்தெடுத்திருக்க மாட்டேன்" என்று பேராசிரியர் துரி கிங் கூறுகிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ள வரலாற்றாசிரியர் பேராசிரியர் தாமஸ் வெபர், "சர்வாதிகாரி மரபணு என்ற ஒன்றே இல்லை" என்று தாங்கள் வலியுறுத்தி இருந்தபோது, இப்படிப்பட்ட தலைப்பு பயன்படுத்தப்பட்டதைப் பார்த்து ஆச்சரியப்பட்டதாக பிபிசியிடம் தெரிவித்தார்.

பிபிசியிடம் பேசுவதற்கு முன்பு வரை, அந்த ஆவணப்படத்தைப் பார்க்காத பேராசிரியர், டிஎன்ஏ பகுப்பாய்வு உற்சாகமூட்டுவதாகவும் கவலையளிப்பதாகவும் இருப்பதாகக் கூறினார்.

"ஹிட்லரை பற்றி நான் முன்பே சந்தேகித்த பல விஷயங்களை இந்த மரபணு ஆய்வு உறுதிப்படுத்தியதால், உற்சாகமாக இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில், ஒருவரை தவறான பண்பு கொண்டவராக மாற்றும் ஒரு 'தீய மரபணு' இருப்பதாக நினைத்து, மக்கள் மரபியலை தவறாக அல்லது மிகையாகப் புரிந்துகொள்வார்களோ" என்று அவர் கவலை தெரிவித்தார்.

குறிப்பாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்டிசம் மற்றும் பிற சிக்கல்களுடன் வாழும் நபர்களால் இது எவ்வாறு புரிந்துகொள்ளப்படும் என்பது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். பொது மக்களுக்கு சிக்கலான அறிவியலை விளக்கும் ஒரு துல்லியமான ஆவணப்படத்தை உருவாக்குவதில் பல சிரமங்களும் ஆபத்துகளும் உள்ளன.

"இது தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பதால், சில நேரங்களில் விஷயங்களை எளிமைப்படுத்த வேண்டியிருக்கும்," என்று பேராசிரியர் கிங் கூறுகிறார். ஒரு விஞ்ஞானியாகத் தனது பொறுப்புகளையும் ஊடக உலகின் எதார்த்தங்களையும் சமநிலைப்படுத்துவதில் அவர் அனுபவம் வாய்ந்தவர்.

"ஆவணப்படத்தை தயாரிப்பவர்கள் வேறொரு வழியில் எடுத்திருந்தால், இது மிகப் பரபரப்பானதாக மாறியிருக்கும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. சில நுணுக்கங்களைப் பாதுகாக்க முயன்றுள்ளனர். மேலும் நாங்களும் தேவையான பாதுகாப்பு வரம்புகளைச் சேர்த்துள்ளோம்" என்று அவர் கூறினார்.

சேனல் 4, இந்த ஆவணப் படத்தின் பெயரைப் பாதுகாத்து, "டிஎன்ஏ-வை பொதுவாக 'வாழ்க்கையின் வரைபடம்' (blueprint of life) என்று மக்கள் குறிப்பிடுகிறார்கள்" என விளக்கியது.

மேலும், தங்களின் பணி "பெரிய பார்வையாளர் வட்டத்தைச் சென்றடையும் நிகழ்ச்சிகளை உருவாக்குவதுதான். இந்த ஆவணப்படம் சிக்கலான அறிவியல் கருத்துகளையும் வரலாற்று ஆய்வுகளையும் அனைவருக்கும் எளிதாகக் கொண்டு சேர்க்க முயல்கிறது" எனவும் தெரிவித்தது.

1945-ல் நேச நாட்டுப் படைகளின் செய்தியாளர்கள் ஹிட்லரின் பதுங்கு குழியிலுள்ள சோபாவை ஆய்வு செய்கிறார்கள்.

பட மூலாதாரம், Alamy

படக்குறிப்பு, கடந்த 1945இல் நேச நாட்டுப் படைகளின் செய்தியாளர்கள் ஹிட்லரின் பதுங்கும் மறைவிடத்தில் சோபாவை ஆய்வு செய்கிறார்கள். நாற்காலியின் கைப்பிடியில் காணப்படும் கறை ரத்தக்கறை என்று கூறப்படுகிறது.

நெறிமுறைகள் குறித்து எழும் கேள்விகள்

இந்தத் திட்டத்தின் நெறிமுறைகள் குறித்தும் பல கேள்விகள் உள்ளன.

'ஹிட்லரின் அனுமதியையோ அல்லது அவரது நேரடி வாரிசின் அனுமதியையோ பெற முடியாத நிலையில், அவரது டிஎன்ஏ-வை ஆய்வு செய்ய வேண்டுமா? அவர் வரலாற்றின் மிகக் கொடூரமான குற்றங்களுக்குக் காரணமானவர் என்பதால், அது அவருக்கு தனியுரிமை என்ற ஒன்று இல்லாமல் போகிறதா?' என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

"இவர் ஹிட்லர். யாராலும் அணுக முடியாத மாய மனிதர் அல்ல. அவரின் டிஎன்ஏ-வை ஆய்வு செய்யக்கூடாது என்று யார் முடிவெடுக்கிறார்கள்?" என்று பேராசிரியர் கிங் கேட்கிறார்.

"விஞ்ஞானிகள் இதைத்தான் செய்கிறார்கள். இறந்த நூற்றுக்கணக்கான மனிதர்களின் டிஎன்ஏ ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அறிவியல் மற்றும் தொல்பொருள் துறையில் இது சாதாரண நடைமுறைதான். அதை நாம் எவ்வாறு விளக்குகிறோம் என்பதில்தான் சிக்கல் உருவாகிறது" என்று வரலாற்றாசிரியர் சுபத்ரா தாஸ் குறிப்பிடுகிறார்.

"உண்மைகள் சரியாக இருக்க வேண்டும், அனைத்தும் இருமுறை சரிபார்க்கப்பட வேண்டும்" என்றும் நெறிமுறை கோணத்தைப் பற்றித் தனக்கு கவலை இல்லை என்றும் கூறுகிறார் வரலாற்றாசிரியர் முனைவர் கே (Kay).

ஹிட்லரின் டிஎன்ஏ ஆய்வு செய்யப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், "ஹிட்லர் இறந்து 80 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவருக்கு நேரடி வாரிசுகளும், குழந்தைகளும் இல்லை. அவர் அளித்த துன்பம் அளவிட முடியாதது. அதை, அவரது டிஎன்ஏ ஆய்வில் உள்ள நெறிமுறை சிக்கலோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்" என்கிறார்.

சுவாரஸ்யமான விஷயமாக, ஐரோப்பாவின் பல ஆய்வகங்கள் இந்தத் திட்டத்தில் பங்கேற்க மறுத்துவிட்டன. இறுதியில் அமெரிக்காவில் உள்ள ஓர் ஆய்வகம்தான் சோதனையை மேற்கொண்டது.

இந்த ஆய்வு "கல்வித்துறையில் தேவையான அனைத்து நெறிமுறை மதிப்பாய்வு செயல்முறைகளையும் கடந்து முடிக்கப்பட்டது. மேலும் இது இரண்டு நாடுகளில் நடந்த மதிப்பாய்வுகளையும் உள்ளடக்கியது" என்று ஆவணப்பட தயாரிப்பாளர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

ஹிட்லர்

பட மூலாதாரம், General Photographic Agency/Hulton Archive/Getty Images

படக்குறிப்பு, 1933ஆம் ஆண்டில் ஹிட்லர்...

இந்த ஆய்வு அவசியமா?

இந்த ஆய்வு நடத்தப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு ஒரே மாதிரியான பதில் இல்லை.

பிபிசி பல மரபணு விஞ்ஞானிகளிடமும் வரலாற்றாளர்களிடமும் பேசியது. இந்தக் கேள்விக்கான பதில், நீங்கள் யாரிடம் கேட்கிறீர்கள் என்பதையே சார்ந்துள்ளது.

ஆவணப் படத்தில் இடம்பெற்ற நிபுணர்கள், ஆம், இந்த ஆய்வு அவசியம் என்று சொல்வார்கள்.

"இந்த ஆய்வு ஹிட்லரின் தன்மையை முழுமையாகப் புரிந்துகொள்ள உதவுகிறது, அவர் இன்னமும் நம்மை ஈர்ப்பவராகவும், பயமுறுத்தும் ஒரு நபராகவும் உள்ளார்" என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.

"கடந்த காலத்தின் பயங்கரவாதத்தைப் புரிந்துகொள்ள நம்மால் செய்ய முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்," என்கிறார் பேராசிரியர் வெபர்.

ஹிட்லர்- ஈவா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹிட்லர், பதுங்குமிடத்தில் தற்கொலை செய்து கொள்வதற்கு சற்று முன்பு ஈவா பிரௌனை மணந்தார்.

"நேர்மையாகச் சொல்ல வேண்டுமெனில், இந்த விவாதங்கள் புதியவை அல்ல. நாம் திடீரென்று இந்தக் கருத்தை மக்களின் மனதில் விதைக்கவில்லை. ஹிட்லருக்கு சில மனநலக் கோளாறுகள் இருந்ததா என்பது குறித்து மக்கள் பல தசாப்தங்களாகப் பேசி வந்துள்ளனர்"என்கிறார் முனைவர் கே.

ஆனால் எல்லா வரலாற்றாசிரியர்களும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

"ஹிட்லரின் செயல்களைத் தூண்டியது எது என்பதை விளக்க இதுவொரு சந்தேகத்திற்குரிய வழி என்று நான் நினைக்கிறேன்," என்கிறார் உட்ரெக்ட் பல்கலைக்கழக சர்வதேச வரலாற்று உதவிப் பேராசிரியர் இவா வுகுசிக்.

வெகுஜன வன்முறை எவ்வாறு நிகழ்கிறது என்பது குறித்து ஆய்வு செய்யும் வுகுசிக், மக்கள் ஏன் இதில் ஆர்வம் கொள்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது என்கிறார். ஆனால் "நாம் தேடும் பதில்கள் டிஎன்ஏ சோதனையிலிருந்து கிடைக்கப் போவதில்லை"என்று அவர் பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்.

மேலும், இந்த ஆய்வு சுவாரஸ்யமானது என்றாலும், இது வரலாற்றின் உண்மையான பாடங்களை மறைக்கும் அபாயம் இருப்பதாக வரலாற்றாசிரியர் ஆன் வான் மௌரிக் குறிப்பிடுகிறார்.

அதாவது, "சில சூழ்நிலைகளில் சாதாரண மனிதர்களே கொடூரமான வன்முறைகளில் ஈடுபடலாம், அதைத் தூண்டலாம் அல்லது அதைப் பொறுத்துக் கொள்ளலாம்" என்பதுதான் அந்தப் பாடம்.

ஹிட்லரின் (சாத்தியமுள்ள) சிறிய ஆணுறுப்பு போன்ற விவரங்களில் கவனம் செலுத்துவது, இனப்படுகொலை, வெகுஜன வன்முறை எப்படி செயல்படுகிறது, ஏன் நிகழ்கிறது என்பதைப் பற்றிய எந்தப் புரிதலையும் நமக்குக் கொடுக்காது என அவர் கூறுகிறார்.

இந்த ஆய்வு முடிந்து, தற்போது சக நிபுணர்கள் மதிப்பாய்வு செய்து வரும் நிலையில், ஒரு கட்டத்தில் இந்தக் கண்டுபிடிப்புகள் முழுமையாக வெளியே வரும்.

பேராசிரியர் வெபர் கூறுகையில், இந்த முடிவுகளை "மிகவும் கவனத்துடனும் நிதானத்துடனும்" பயன்படுத்த வேண்டும். ஆனால், இவை ஏதாவது ஒரு வகையில் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் என அவர் நம்புகிறார்.

"ஆராய்ச்சி முடிவுகளின் சிறப்பு அதுதான். அதன் மதிப்பு 5 ஆண்டுகளுக்குப் பிறகோ, 150 ஆண்டுகளுக்குப் பிறகோ, 500 ஆண்டுகளுக்குப் பிறகோ தெரியலாம். இந்த ஆய்வு எதிர்காலத்திற்காக பாதுகாக்கப்பட்டுள்ளது. அதை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்" என்று அவர் கூறுகிறார்.

ஆனால் இந்த முடிவுகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதில் நம் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது.

"அறிவியலைப் பின்பற்ற வேண்டும். நமக்கு என்ன தெரியும், என்ன தெரியாது என்பதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும்" என்று முனைவர் கே கூறுகிறார்.

இது ஊடகங்களுக்கும் பொருந்தும். இந்த ஆய்வு எப்படி வெளியிடப்படுகிறது என்பதும் அதில் அடங்கும்.

"இந்த ஆவணப்படத்தைப் பார்ப்பவர்கள் துல்லியமாக எழுத வேண்டும். அவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளும் சூழல் உருவாவதற்கோ அல்லது எதிர்மறை கருத்து உருவாவதற்கோ பங்களிக்கக்கூடாது" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

"இதுபோன்ற ஆவணப்படங்கள் சமூகத்தில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாதவை. மக்களையும் நிகழ்வுகளையும் பாதிக்கக் கூடியது" என்று முனைவர் கே வலியுறுத்துகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3dn7zm733vo

வெனிசுலா இராணுவ நடவடிக்கைகள் குறித்து தான் ஒரு முடிவை எடுத்துவிட்டதாக டிரம்ப் கூறியுள்ளார்.

5 days 14 hours ago

இந்த வாரம் பல உயர்மட்ட விளக்கங்கள் மற்றும் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் அமெரிக்க படைபலத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, வெனிசுலாவில் ஒரு நடவடிக்கை எடுப்பது குறித்து தனது முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

வெனிசுலாவிற்குள் இராணுவ நடவடிக்கைகளுக்கான விருப்பங்கள் குறித்து இந்த வாரம் டிரம்பிற்கு அதிகாரிகள் விளக்கினர், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை வெளியேற்றுவதற்கான ஒரு பரந்த பிரச்சாரத்தைத் தொடங்குவதன் அபாயங்கள் மற்றும் நன்மைகளை அவர் எடைபோடுகையில், நான்கு ஆதாரங்கள் CNN இடம் தெரிவித்தன. இதற்கிடையில், பென்டகன் "ஆபரேஷன் சதர்ன் ஸ்பியர்" என்று முத்திரை குத்தியதன் ஒரு பகுதியாக, அமெரிக்க இராணுவம் ஒரு டஜன் போர்க்கப்பல்களையும் 15,000 துருப்புக்களையும் பிராந்தியத்தில் குவித்துள்ளது.

சட்டவிரோத குடியேறிகள் மற்றும் போதைப்பொருட்களின் ஓட்டத்தைக் குறைப்பதற்கான தனது முயற்சிகள் மற்றும் ஆட்சி மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முன்னோக்கிச் செல்லும் பாதையை நெருங்கி வருவதாக ஜனாதிபதி வெள்ளிக்கிழமை சுட்டிக்காட்டினார்.

"நான் ஒருவிதத்தில் முடிவு செய்துவிட்டேன் - ஆம். அதாவது, அது என்னவாக இருக்கும் என்று என்னால் உங்களுக்குச் சொல்ல முடியாது, ஆனால் நான் ஓரளவுக்குச் சொல்லியிருக்கிறேன்," என்று ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களிடம் அந்தக் கூட்டங்கள் குறித்தும், அவர் ஒரு முடிவை எடுத்துவிட்டாரா என்பது குறித்தும் நேரடியாகக் கேட்டபோது டிரம்ப் கூறினார்.

https://www.cnn.com/2025/11/15/politics/venezuela-trump-military-what-we-know

Epstein பிரச்சனை நாளாந்தம் கொழுந்துவிட்டு எரியும் போது

இன்னுமொரு பெரிய கோட்டை கீறி Epstein கோட்டை சிறியதாக்க முனைகிறார்.

லெபனான் எல்லையை இஸ்ரேல் மீறியுள்ளதாக ஐ.நா குற்றச்சாட்டு

6 days 11 hours ago

Nov 15, 2025 - 08:58 AM

லெபனான் எல்லையை இஸ்ரேல் மீறியுள்ளதாக ஐ.நா குற்றச்சாட்டு

ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்காலப் படை லெபனானில் கடந்த மாதம் நடத்திய ஆய்வில், இஸ்ரேலிய இராணுவத்தால் கட்டப்பட்ட ஒரு சுவர், டி ஃபேக்டோ எல்லையாக கருதப்படும் நீலக் கோட்டை கடந்து செல்வது கண்டறியப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றஞ்சாட்டியுள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் இந்த தகவலை வௌியிட்டுள்ளார். 

நீலக் கோடு என்பது லெபனானை இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்றுகளில் இருந்து பிரிக்கும் ஐ.நா.வால் வரையறுக்கப்பட்ட கோடாகும். 

ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் (Stephane Dujarric) கூறுகையில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையால் எழுப்பப்பட்ட கொன்கிரீட் 'T-சுவர்' சுமார் 4,000 சதுர மீட்டரால் லெபனான் நிலப்பரப்பை உள்ளூர் மக்கள் அணுக முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

யருன் பகுதிக்கு தென்கிழக்கே, நீலக் கோட்டைக் கடந்து செல்லும் மேலதிக சுவர் ஒன்றின் ஒரு பகுதியும் எழுப்பப்பட்டு வருவதாக ஐ.நா அமைதிகாக்கும் படையினரை மேற்கோள் காட்டி அவர் கூறினார். 

இந்த ஆய்வுக் கண்டுபிடிப்புகள் குறித்து இஸ்ரேலிய இராணுவத்திற்கு UNIFIL தகவல் அளித்து, அந்தச் சுவரை அகற்றக் கோரியதாகவும் டுஜாரிக் தெரிவித்தார். 

"லெபனான் பிரதேசத்தில் இஸ்ரேலின் இருப்பு மற்றும் கட்டுமானம் ஆகியவை ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் தீர்மானம் 1701 மற்றும் லெபனானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றின் மீறல்கள் ஆகும்" என்று UNIFIL அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. 

எவ்வாறாயினும் இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர், அந்தச் சுவர் நீலக் கோட்டைக் கடக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். 

"இந்தச் சுவர் 2022-இல் தொடங்கப்பட்ட பரந்த இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் திட்டத்தின் ஒரு பகுதியாகும். 

போர் தொடங்கியதிலிருந்தும், அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் ஒரு பகுதியாகவும், வடக்கு எல்லையில் உள்ள பௌதீகத் தடையை வலுப்படுத்துவது உட்பட பல நடவடிக்கைகளை IDF மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmhzq8ngy01mio29ndjtrlytc

சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான யோங்கிங் கோயிலில் தீ!

1 week ago

14 Nov, 2025 | 06:01 PM

image

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் அமைந்துள்ள 1,500 ஆண்டுகள் பழமையான யோங்கிங் கோயிலில் (Yongqing temple) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இக்கோயிலுக்குள் அமைந்துள்ள மூன்று மாடி மண்டபத்தில் புதன்கிழமை (12) காலை 11.24 மணியளவில் தீ பரவத் தொடங்கியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆலயத்தில் நபரொருவர் மெழுகுவர்த்தி தூபத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாலேயே அங்கு தீ பரவியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. 

கோயில் மண்டபத்தில் பரவிய தீ, மண்டபத்தின் மரக் கூரைகள் வரை பற்றியெரிந்ததால் பாரிய கறுப்பு நிற புகை கிளப்பியது. 

இந்நிலையில், அப்பகுதியிலிருந்த மக்கள் பாதுகாப்பு தேடி கோயில் வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளனர். 

அதனைத் தொடர்ந்து. தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. 

WhatsApp_Image_2025-11-14_at_5.40.24_PM.

WhatsApp_Image_2025-11-14_at_5.40.52_PM.

WhatsApp_Image_2025-11-14_at_5.40.41_PM.

https://www.virakesari.lk/article/230378

உக்ரைனிய தலைநகர் மீதான ரஷ்யாவின் தாக்குதலில் 9 பேர் படுகாயம்!

1 week ago

New-Project-89.jpg?resize=600%2C300&ssl=

உக்ரைனிய தலைநகர் மீதான ரஷ்யாவின் தாக்குதலில் 9 பேர் படுகாயம்!

உக்ரைனிய தலைநகர் கீவ் மீதான ரஷ்யாவின் பாரிய தாக்குதல்களில் , குறைந்தது ஒன்பது பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கீவ் மேயர் வித்தாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்களில் ஒரு கர்ப்பிணிப் பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் அடங்குதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த தாக்குதலில் மருத்துவமனை வசதிகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் உட்பட பல மாவட்டங்களில் தீ விபத்துக்கள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

தாக்குதலின் விளைவாக ஏற்பட்ட மின்சாரத் தடைகள் சரிசெய்யப்பட்டாலும், வெப்பமூட்டும் வசதிகளில் தடைகள் இன்னும் நீடிப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும், மேயர் மருத்துவர்களும் அவசரகால சேவைகளும் எல்லா இடங்களிலும் செயல்படுவதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.

https://athavannews.com/2025/1452777

Checked
Fri, 11/21/2025 - 16:47
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe