உலக நடப்பு

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழப்பு!

2 weeks 4 days ago

Indonesia.jpg?resize=750%2C375&ssl=1

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் திங்கட்கிழமை (22) அதிகாலை பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 16 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

34 பேருடன் பயணித்த குறித்த பேருந்து ஒரு சுங்கச்சாவடியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஒரு கொன்கிறீட் தடுப்பு சுவருடன் மோதி, பின்னர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தேடல் மற்றும் மீட்புக் குழுவின் தலைவர் புடியோனோ கூறியுள்ளார்.

தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து நாட்டின் பண்டைய அரச நகரமான யோககர்த்தாவுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து, மத்திய ஜாவாவின் செமராங் நகரில் உள்ள கிராப்யாக் சுங்கச்சாவடியின் வளைந்த வெளியேறும் பாதையில் நுழையும் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என்றும் அவர் கூறினார்.

விபத்து நடந்த சுமார் 40 நிமிடங்களுக்குப் பின்னர் காவல்துறை மற்றும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த ஆறு பயணிகளின் உடல்களை மீட்டனர். 

மேலும் 10 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது வழியிலும், சிசிக்கைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்தனர்.

சிகிக்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட 18 பேரில் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் புடியோனோ கூறினார்.

https://athavannews.com/2025/1456963

தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கி சூடு - ஏழு பேர் பலி

2 weeks 4 days ago

தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கி சூடு - ஏழு பேர் பலி

Published By: Digital Desk 2

21 Dec, 2025 | 05:03 PM

image

தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்க் பகுதியில்  நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலில் ஏழு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். 

பெக்கர்ஸ்டாலில் இரண்டு வாகனங்களில் வந்த சுமார் 12 அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள்,வாடிக்கையாளர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென்னாப்பிரிக்கா உலகிலேயே அதிக கொலை விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். 

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 63பேர்  கொல்லப்பட்டதாக பொலிஸாரின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

https://www.virakesari.lk/article/234033

வெனிசுலா கடற்பகுதியில் மற்றொரு எண்ணெய்க் கப்பலை இடைமறித்த அமெரிக்கா!

2 weeks 5 days ago

oil-tanker.jpg?resize=750%2C375&ssl=1

வெனிசுலா கடற்பகுதியில் மற்றொரு எண்ணெய்க் கப்பலை இடைமறித்த அமெரிக்கா!

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மீது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இரண்டு வாரங்களுக்குள் இரண்டாவது முறையாக அமெரிக்கப் படைகள் வெனிசுலா கடற்கரையில் ஒரு எண்ணெய்க் கப்பலை சனிக்கிழமை (20) தடுத்து நிறுத்தின.

தென் அமெரிக்க நாட்டிற்குள் வந்து வெளியேறும் அனைத்து தடைசெய்யப்பட்ட எண்ணெய்க் கப்பல்களையும் முற்றுகையிடுவதாக ட்ரம்ப் அறிவித்த சில நாட்களுக்குப் பின்னர் கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி வெனிசுலாவின் கடற்கரையில் ஒரு எண்ணெய் கப்பலை அமெரிக்கப் படைகள் கைப்பற்றியிருந்தன.

இந்த நிலையில் இரண்டாவது எண்ணெய்க் கப்பல் சனிக்கிழமை அதிகாலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

வெனிசுலாவில் இறுதியாக நிறுத்தப்பட்டிருந்த செஞ்சுரியஸ் (Centuries) என்ற எண்ணெய் டேங்கரை அமெரிக்க கடலோர காவல்படை பாதுகாப்புத் துறையின் உதவியுடன் தடுத்து நிறுத்தியதாக வொஷிங்டனின் உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் உறுதிப்படுத்தினார்.

அமெரிக்க ஹெலிகொப்டர் ஒன்று குறித்த கப்பலில் பணியாளர்களுடன் தரையிறக்கும் வீடியோவையும் அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.

எனினும், பனாமாவின் கொடியின் கீழ் இயங்கும் அந்தக் கப்பல், அமெரிக்கத் தடைகளின் கீழ் உள்ளதா என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை.

Image

https://athavannews.com/2025/1456871

கடும் நடவடிக்கையில் கனடா : 2025 இல் இதுவரை 19,000 பேர் நாடுகடத்தல்

2 weeks 5 days ago

கடும் நடவடிக்கையில் கனடா : 2025 இல் இதுவரை 19,000 பேர் நாடுகடத்தல்

21 December 2025

1766281060_6086270_hirunews.jpg

2025ஆம் ஆண்டில் 19,000 புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தியதாக, கனடாவின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 

2025ஆம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி, 18,785 புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தப்பட்டதாக கனேடிய எல்லை சேவைகள் முகவரகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. 

நவம்பர் மற்றும் டிசம்பர் மாத எண்ணிக்கையையும் கணக்கில் சேர்த்தால், அந்த எண்ணிக்கை 18,969ஐத் தாண்டும் எனக் கருதப்படுகிறது. 

2023இல் கனடா 15,207 பேரையும், 2024இல் 17,357 பேரையும், கனடா நாடுகடத்தியுள்ளது. 

கனடாவின் கடுமையான விசா கட்டுப்பாடுகளால், கனடாவுக்கு சட்டப்படி வரும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. 

ஒக்டோபர் 1ஆம் திகதி நிலவரப்படி, கனடாவின் மக்கள் தொகை 41,575,585 ஆக உள்ளது. 

இந்தநிலையில், 1971ஆம் ஆண்டுக்குப் பின் தற்பொழுது தான், தற்காலிக குடியிருப்போர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

https://hirunews.lk/tm/436880/canada-in-crackdown-19000-people-deported-so-far-in-2025

அதிகரிக்கும் போர் பதற்றம் - வானில் வட்டமிட்ட சீன போர் விமானங்கள் :எச்சரிக்கும் தாய்வான்

2 weeks 5 days ago

அதிகரிக்கும் போர் பதற்றம் - வானில் வட்டமிட்ட சீன போர் விமானங்கள் :எச்சரிக்கும் தாய்வான்

Published By: Digital Desk 2

21 Dec, 2025 | 11:46 AM

image

தாய்வான் எல்லையில் வலம் வரும் போர்கப்பல் மற்றும் போர் விமானங்களினால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும் தாய்வான் கடல் பகுதிகளை சீனாவின் விமானங்களும், கப்பல்களும் சுற்றி வளைத்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

கிழக்காசியாவில் தென் சீன கடல், கிழக்கு சீன கடல் மற்றும் பிலிப்பைன்ஸ் கடல் ஆகியவற்றிற்கு மத்தியில் இருக்கும் தீவுதான் தைவான்.

1949இல் சீனாவின் கட்டுப்பாட்டிலிருந்து தாய்வான் தனிநாடாக பிரிந்து சென்றது. ஆனாலும் சீனா தாய்வானை தனது ஒருங்கிணைந்த பகுதியாகவே பார்த்து வருகிறது.

ஆனாலும் தனி நாடாக தங்களுக்கென தனி இறையாண்மை உள்ளது எனக்கூறி தாய்வான் அதனை மறுத்து வருகிறது.

இவ்வாறான பின்னனியில் தாய்வான் எல்லையில் அவ்வப்போது போர்க்கப்பல்கள், விமானங்களை அனுப்பி சீனா பதற்றத்தைத் தூண்டுடியயுள்ளது.

இந்நிலையில் தைவான் பாதுகாப்புத்துறை வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில் , தாய்வானை சுற்றி சீனாவின் 7 விமானங்களும், 11 கடற்படை கப்பல்களும் ரோந்து வந்ததை உறுதி செய்துள்ளது.

மேலும் அவர்களின் ஆயுதப்படைகள் நிலவரத்தை கண்காணித்து உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

articles2FyhcQv2tc5mrONQG5EBIs.webp

சீனாவின் அத்துமீறலை தொடர்ந்து கண்காணித்து வரும் தாய்வான் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனாவின் இந்த செயலால் கிழக்காசியப் பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

சீனா தாய்வானை ஒருபோதும் பிரிக்க முடியாத பகுதி என்று கருதி வருகிறது.  எனவே தான் தாய்வானைஅடிக்கடி அச்சுறுத்தி, அதன் சுயாட்சியை மிரட்டுவதற்காக, அடிக்கடி தாய்வானைச் சுற்றி இராணுவப் பயிற்சிகளை நடத்துகிறது. 

இதில் விமானங்கள், போர்க்கப்பல்கள், ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் சுற்றி வளைப்பதும், அதன் விமான பாதுகாப்பு மண்டலத்தில் ஊடுருவுவதும், போர் ஒத்திகைகள் செய்வதுமாக அந்தப் பகுதியில் எப்போதும் பதற்றத்தை அதிகரித்து வருகிறது.

அதேவேளை, தீவு நாடான தாய்வானுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. தாய்வானுக்கு அதிக அளவில் அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்து வருவதுடன் சீனா படையெடுக்கும் பட்சத்தில் தாய்வானை பாதுகாப்போம் என அமெரிக்கா தெரிவித்துள்ளமையயும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/233980

செயற்கை நுண்ணறிவால் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு – இங்கிலாந்து வங்கி எச்சரிக்கை!

2 weeks 6 days ago

Andrew-Bailey.jpg?resize=750%2C375&ssl=1

செயற்கை நுண்ணறிவால் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு – இங்கிலாந்து வங்கி எச்சரிக்கை!

தொழில்துறை புரட்சியின் போது காணப்பட்டதைப் போலவே, செயற்கை நுண்ணறிவு (AI) பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுவது தொழிலாளர்களை வேலைகளிலிருந்து வெளியேற்றுவதற்கான வாய்ப்பாக அமையும் என்று இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் எச்சரித்துள்ளார்.

பொருளாதாரம் முழுவதும் செய்கை நுண்ணறிவு பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வரும் நிலையில், தொழிலாளர்களை அதிகளவில் தொழில்நுட்பத்தில் ஈடுபடுத்த உதவுவதற்காக ஐக்கிய இராஜ்ஜியம் செயற்கை நுண்ணறிவு பயிற்சி, கல்வி மற்றும் திறன்களில் முதலீடு செய்யவது அவசியம் என்றும் இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் ஆண்ட்ரூ பெய்லி கூறினார். 

அந்த அடித்தளங்கள் இல்லாமல் போனால் தொழிலாளர் சந்தை மேலும் துண்டு துண்டாக உடையும் அபாயத்தை எதிர்கொள்ளும் என்றும் அவர் எச்சரித்தார்.

அண்மைய ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.

மேலும் வணிகங்கள் மற்றும் பொதுத்துறையினரால் இது அதிகளவில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இந்த தொழில்நுட்பம் கணினிகள் அதிக அளவிலான தரவை செயலாக்கவும், வடிவங்களை அடையாளம் காணவும், அந்தத் தகவலை என்ன செய்வது என்பது குறித்த விரிவான வழிமுறைகளைப் பின்பற்றவும் அனுமதிக்கிறது.

இருப்பினும், இது ஏற்கனவே வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து இங்கிலாந்தில் கவலைகள் அதிகரித்துள்ளன.

இந்த வாரம் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள், ஒக்டோபர் மாதத்துடன் முடிவடைந்த கடந்த மூன்று மாதங்களில் ஐக்கிய இராஜ்ஜியத்தின் வேலையின்மை விகிதம் 5.1% ஆக உயர்ந்துள்ளதை வெளிக்காட்டியது.

இதில் அதிகளவானோர் இளைய தொழிலாளர்கள் ஆவர்.

ஒக்டோபர் மாதம் வரையிலான கடந்த மூன்று மாதங்களில் 18 முதல் 24 வயதுடைய வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 85,000 அதிகரித்துள்ளது.

இது நவம்பர் 2022 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகப்பெரிய வேலையின்மை உயர்வு என்று இங்கிலாந்தின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் (ONS) தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2025/1456759

சிரியாவில் உள்ள ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல்!

2 weeks 6 days ago

சிரியாவில் உள்ள ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல்!

20 Dec, 2025 | 10:16 AM

image

அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட  தாக்குதலுக்குப் பதிலடியாக, சிரியாவில் உள்ள ஐஎஸ் ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பு மீது அமெரிக்க இராணுவம் பாரிய தாக்குதலை  மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய சிரியாவில் உள்ள 70க்கும் மேற்பட்ட ஐஎஸ் ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பு குழுக்களை குறிவைத்து போர் விமானங்கள், தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் பீரங்கிகள் தாக்கியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 13 ஆம் திகதி பால்மைரா நகரில் நடந்த ஐஎஸ் ஐஎஸ் தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்களும் ஒரு அமெரிக்க சிவிலியன் மொழிபெயர்ப்பாளரும் கொல்லப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, ஐஎஸ் ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் இந்த தாக்குல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் இந்தோ-பசிபிக் பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளை நிர்வகிக்கும் அமெரிக்க மத்திய கட்டளைப்படையான சென்ட்காம் தனது எக்ஸ் தளத்தில் ஒபரேஷன் ஹாக்கி ஸ்டிரைக் வெள்ளிக்கிழமை கிழக்கு நேரப்படி 4:00 மணிக்கு (21:00 GMT) தொடங்கப்பட்டதாகக் தெரிவித்துள்ளது.

அதேநேரம், பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவிக்கையில், ஐஎஸ் போராளிகள், உட்கட்டமைப்பு மற்றும் ஆயுதத் தளங்களை அழிப்பதை நோக்கமாகக் கொண்டு குறித்த தாக்குதல் நடத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதி ட்ரம்பின் தலைமையிலான அமெரிக்கா, நமது மக்களைப் பாதுகாக்க ஒருபோதும் தயங்காது மற்றும் பின்வாங்காது என்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  


https://www.virakesari.lk/article/233910

இந்தியாவை உடைப்போம் என கோஷம்; மீண்டும் வெடித்த வன்முறை - வங்கதேசத்தில் நடப்பது என்ன?

2 weeks 6 days ago

வங்கதேசத்தில் இந்தியாவிற்கு எதிராக கோஷங்களும், மீண்டும் வன்முறையும் வெடித்துள்ளது.

வங்கதேசத்தில் தேர்தல்

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ராணுவத்தில் உள்ள இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் ஆட்சி கவிழ்ந்ததில் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. 

இந்தியாவை உடைப்போம் என கோஷம்; மீண்டும் வெடித்த வன்முறை - வங்கதேசத்தில் நடப்பது என்ன? | What Is Going On In Bangladesh Anti India Protest

வங்கதேச இடைக்கால அரசின் பிரதமர் முகமது யூனுஸ் தலைமையில், ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது.  

சமீபத்தில் இந்த வழக்கில் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை ஷேக் ஹசீனா நாடு கடத்தப்படாமல் இந்தியாவிலே இருந்து வருகிறார்.

வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தியாவிற்கு எதிராக கோஷம்

வங்கதேசத்தில் இந்தியாவிற்கு எதிரான கோஷங்கள் அதிகரித்து வருகிறது.

டிசம்பர் 15 ஆம் திகதி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய தேசிய குடிமக்கள் கட்சி தலைவர் ஹஸ்னத் அப்துல்லா, "இந்தியா பிரிவினைவாத சக்திகளுக்கு தங்குமிடம் அளித்தால், வங்கதேசமும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை பிரிக்கும்" என பேசினார். 

இந்தியாவை உடைப்போம் என கோஷம்; மீண்டும் வெடித்த வன்முறை - வங்கதேசத்தில் நடப்பது என்ன? | What Is Going On In Bangladesh Anti India Protest

இதனால் கவலையடைந்த இந்திய அரசு, டெல்லியில் உள்ள வங்கதேச உயர் ஆணையரை இந்திய வெளியுறவுத் துறை நேரில் அழைத்து விளக்கம் கேட்டது.

இதற்கு ஆட்சேபனை தெரிவித்த ஹஸ்னத் அப்துல்லா, "ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் அளித்து வருவதால், இந்திய உயர் ஆணையரை நமது நாட்டை விட்டு வெளியேற்றி இருக்க வேண்டும்" என பேசினார்.

மேலும், டாக்காவில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் நோக்கி சில அமைப்புகள் பேரணி நடத்த முயன்றது. 

இந்தியாவை உடைப்போம் என கோஷம்; மீண்டும் வெடித்த வன்முறை - வங்கதேசத்தில் நடப்பது என்ன? | What Is Going On In Bangladesh Anti India Protest

இதனையடுத்து, வங்கதேசத்தில் உள்ள 3 விசா மையங்களை இந்தியா மூடியது. வங்கதேசத்தில் மீண்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது.

ஷெரீப் உஸ்மான் ஹாதி உயிரிழப்பு

கடந்த ஆண்டு ஆட்சி கவிழ்ப்பிற்கு காரணமான போராட்டத்தில் "இன்கிலாப் மோன்சோ"( Inqilab Moncho) அமைப்பு முக்கிய வகித்தது. 

இந்தியாவை உடைப்போம் என கோஷம்; மீண்டும் வெடித்த வன்முறை - வங்கதேசத்தில் நடப்பது என்ன? | What Is Going On In Bangladesh Anti India Protest

இந்த அமைப்பின் தலைவரான 32 வயதான ஷெரீப் உஸ்மான் ஹாதி(sharif osman hadi), கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி, டாக்காவில் உள்ள ஒரு மசூதியிலிருந்து வெளியேறியபோது முகமூடி அணிந்த நபர்களால் சுடப்பட்டார்.

சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் அவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட திட்டமிட்டிருந்த நிலையில், தேர்தல் அறிவிப்பு வெளியான மறுநாள் அவர் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்தியாவை உடைப்போம் என கோஷம்; மீண்டும் வெடித்த வன்முறை - வங்கதேசத்தில் நடப்பது என்ன? | What Is Going On In Bangladesh Anti India Protest

அவரது மரண செய்தி வெளியானதும் ஆதரவாளர்கள் டாக்காவில் உள்ள சதுக்கத்தில் போராட்டத்தில் இறங்கினர்.

ஹிந்து இளைஞர் அடித்து கொலை இதனையடுத்து, போராட்டக்காரர்கள் வங்கதேசத்தின் முக்கிய நாளிதழ்களான 'தி டெய்லி ஸ்டார்' (The Daily Star), 'புரோதோம் ஆலோ' (Prothom Alo) ஆகிய அலுவலகங்களுக்கு தீ வைத்து சேதப்படுத்தினர். 

மேலும், சட்டகிராம் (Chattogram) நகரில் உள்ள இந்தியத் துணை உயர் ஆணையரின் இல்லம் மற்றும் இந்திய துணை தூதரகம் மீதும் கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உடனாடியாக விரைந்த காவல்துறையினர், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். 

இந்தியாவை உடைப்போம் என கோஷம்; மீண்டும் வெடித்த வன்முறை - வங்கதேசத்தில் நடப்பது என்ன? | What Is Going On In Bangladesh Anti India Protest

இதனையடுத்து, மைமென்சிங் மாவட்டத்தின் பல்லூகா உபஜிலா, துபாலியா பரா பகுதியில் ஜவுளி கடை ஒன்றில் பணியாற்றிய தீபு சந்திர தாஸ் என்பவர் முகமது நபி குறித்து அவதூறாக பேசியதாக கூறி அடித்து கொல்லப்பட்டார். மேலும், அவரை மரத்தில் கட்டி வைத்து தீ வைத்துள்ளனர்.   

இந்தியாவை உடைப்போம் என கோஷம்; மீண்டும் வெடித்த வன்முறை - வங்கதேசத்தில் நடப்பது என்ன? | What Is Going On In Bangladesh Anti India Protest


Lankasri News
No image previewஇந்தியாவை உடைப்போம் என கோஷம்; மீண்டும் வெடித்த வன்முறை -...
வங்கதேசத்தில் இந்தியாவிற்கு எதிராக கோஷங்களும், மீண்டும் வன்முறையும் வெடித்துள்ளது. வங்கதேசத்தில் தேர்தல் வங்கதேசத்தில்...

இமயமலையில் அணு ஆயுதம் ஒன்றைத் தொலைத்த அமெரிக்கா... 60 வருடங்களாக நீடிக்கும் மர்மம்

2 weeks 6 days ago

சீனாவை ரகசியமாக கண்காணிக்கும் பொருட்டு அணு ஆயுதத்தால் இயங்கும் கருவி ஒன்றை இமயமலையில் நிறுவ முயன்ற அமெரிக்கா, அதை அங்கேயே தொலைத்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.

அணுசக்தி கருவி

1965 ஆம் ஆண்டு பனிப்போர் உச்சத்தில் இருந்தபோது, சீனா அணுகுண்டு சோதனை ஒன்றை முன்னெடுத்தது. இதனையடுத்து சீனாவின் ஏவுகணை சோதனையைக் கண்காணிக்கும் பொருட்டு இமயமலையின் நந்தா தேவி சிகரத்தின் மீது அணுசக்தியால் இயங்கும் ஆண்டெனா ஒன்றை நிறுவ அமெரிக்கா முடிவு செய்தது.

இமயமலையில் அணு ஆயுதம் ஒன்றைத் தொலைத்த அமெரிக்கா... 60 வருடங்களாக நீடிக்கும் மர்மம் | Cia Lost Nuclear Device In Himalayas

அமெரிக்க மற்றும் இந்திய மலையேறுபவர்கள் தங்கள் சரக்குகளை தயார் செய்தனர். ஒரு ஆண்டெனா, கேபிள்கள் மற்றும் SNAP-19C எனப்படும் 13 கிலோ ஜெனரேட்டர். அதன் உள்ளே புளூட்டோனியம் இருந்தது.

மலையேறுபவர்கள் தங்கள் இலக்கை நெருங்கவிருந்த நேரம், திடீரென்று ஒரு பனிப்புயல் மலையை மூடியது. கீழே முகாமில், அதிர்ச்சியில் உறைந்துபோன அதிகாரிகள் குழு அவர்களைத் தொடர்புகொண்டு, எடுத்துச்சென்ற பொருட்களை தொலைக்க வேண்டாம், பத்திரப்படுத்துங்கள் என வேண்டுகோள் விடுத்த நிலையில், மொத்த கருவிகளையும் சிகரத்தின் ஒருபகுதியில் மறைத்துவிட்டு, உயிருடன் தப்பியுள்ளனர்.

நாகசாகியில் வீசப்பட்ட அணு குண்டில் பயன்படுத்தப்பட்ட புளூட்டோனியத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு கொண்ட அணுசக்தி கருவி ஒன்றை அவர்கள் இமயமலையில் விட்டுச் சென்றனர்.

அதன் பின்னர் அந்த அணுசக்தி கருவிகளை எவரும் பார்த்ததில்லை. சீனாவை உளவு பார்க்க, அப்படி ஒரு திட்டத்தை முன்னெடுத்ததை அமெரிக்கா இதுவரை ஒப்புக்கொண்டதில்லை.

அமெரிக்காவின் உளவு அமைப்பான CIA முதலில் அந்த அணுசக்தி கருவியை காஞ்சன்ஜங்கா சிகரத்தில் நிறுவவே திட்டம் தீட்டியுள்ளது. உலகின் மூன்றாவது உயரமான சிகரம் அது.

இமயமலையில் அணு ஆயுதம் ஒன்றைத் தொலைத்த அமெரிக்கா... 60 வருடங்களாக நீடிக்கும் மர்மம் | Cia Lost Nuclear Device In Himalayas

பின்னர் இந்திய இராணுவம் தரப்பில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், நந்தா தேவி சிகரத்தின் மீது அணுசக்தியால் இயங்கும் ஆண்டெனாவை நிறுவ முடிவானது.

மூடி மறைக்கப்பட்டது

செப்டம்பர் மாதம் மலையேறத் தொடங்கிய குழு, அக்டோபர் 16 ஆம் திகதி பனிப்புயலில் சிக்கியுள்ளது. 1965ல் நடந்த இச்சம்பவத்தில், தொலைத்த அணு ஆயுத கருவிகளை மீட்க மீண்டும் அதே குழு, ஓராண்டுக்குப் பிறகு மலையேறியுள்ளது.

ஆனால் அவை மாயமாகியிருந்தது. பனிக்கட்டி, பாறை, உபகரணங்கள் என அனைத்தும் அந்தப் பனிச்சரிவால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. 1978 வரையில் அமெரிக்காவின் அந்த ரகசிய திட்டம் மூடி மறைக்கப்பட்டது.

இமயமலையில் அணு ஆயுதம் ஒன்றைத் தொலைத்த அமெரிக்கா... 60 வருடங்களாக நீடிக்கும் மர்மம் | Cia Lost Nuclear Device In Himalayas

ஆனால் ஒரு பத்திரிகையாளர் மொத்தமாக அம்பலப்படுத்த, அமெரிக்காவிற்கு எதிராக இந்தியாவில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தது. சிஐஏ எங்கள் தண்ணீரை விஷமாக்குகிறது என ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் ஒலித்தன.

ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரும் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்ம் ரகசியமாக முன்னெடுத்த பேச்சுவார்த்தைகளின் முடிவில், ஆர்ப்பாட்டங்கள் கைவிடப்படுவதாக தகவல் வெளியானது.

தற்போது வரையில், SNAP-19C எனப்படும் 13 கிலோ எடை கொண்ட புளூட்டோனியம் ஜெனரேட்டர் என்ன ஆனது என்பது மர்மமாகவே உள்ளது.

Lankasri News
No image previewஇமயமலையில் அணு ஆயுதம் ஒன்றைத் தொலைத்த அமெரிக்கா... 60 வரு...
சீனாவை ரகசியமாக கண்காணிக்கும் பொருட்டு அணு ஆயுதத்தால் இயங்கும் கருவி ஒன்றை இமயமலையில் நிறுவ முயன்ற அமெரிக்கா, அதை அங்கேய...

வெள்ளத்தில் மூழ்கிய துபாய்.. மத்திய கிழக்கிலும் பதற்றத்தை ஏற்படுத்தும் காலநிலை மாற்றம்

2 weeks 6 days ago

மத்திய கிழக்கின் முக்கிய நகரமான துபாயில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக, பல பகுதிகள் இடுப்பளவு வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் காலநிலை மாற்றத்தால் கடுமையான பாதிப்புக்கள் பதிவாகி வரும் நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் தற்போது மழை அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், துபாய் பொலிஸார், கனமழை பெய்து வருவதன் காரணமாக பாதுகாப்பு கவலைகள் எழும்பியுள்ளதால், அப்பகுதி மக்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை 

மேலும், நகரின் சில பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வெள்ளத்தில் மூழ்கிய துபாய்.. மத்திய கிழக்கிலும் பதற்றத்தை ஏற்படுத்தும் காலநிலை மாற்றம் | Dubai After Heavy Rains Stunned Videos Flood Uae

அந்நகர மக்களின் தொலைபேசிகளுக்கு அனுப்பப்பட்ட எச்சரிக்கையில், வெள்ளிக்கிழமை நண்பகல் வரை மிகவும் கவனமாக இருக்கவும், தேவைப்படாவிட்டால் முற்றிலும் வெளியே செல்வதைத் தவிர்க்கவும் துபாய் பொலிஸார் வலியுறுத்தியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. 

வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், குறிப்பாக துபாய் மற்றும் அபுதாபியில், கனமழை எச்சரிக்கைகள் நடைமுறையில் இருந்ததாக அந்நாட்டு தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கலீஜ் டைம்ஸின் அறிக்கையின்படி, மாறிவரும் வானிலை காரணமாக அபுதாபி சிவில் பாதுகாப்பும் மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு கோரியுள்ளது. 

அத்துடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், திடீர் வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளிலிருந்து விலகி இருக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், சமூக ஊடக தளமான X இல், மழை மற்றும் மூடுபனி நகர வானலையை மூடியதால், சின்னமான புர்ஜ் கலீஃபா கிட்டத்தட்ட முற்றிலும் அடர்ந்த மேகங்களுக்குப் பின்னால் மறைந்திருப்பதைக் காட்டும் காட்சிகளும் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Tamilwin
No image previewவெள்ளத்தில் மூழ்கிய துபாய்.. மத்திய கிழக்கிலும் பதற்றத்தை...
மத்திய கிழக்கின் முக்கிய நகரமான துபாயில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக, பல பகுதிகள் இடுப்பளவு வெள்ள நீரில் மூழ்கிய...

பெல்ஜியம் ரஷ்யாவின் மிகவும் மதிப்புமிக்க சொத்தாக மாறியது எப்படி

2 weeks 6 days ago

பெல்ஜியம் ரஷ்யாவின் மிகவும் மதிப்புமிக்க சொத்தாக மாறியது எப்படி

உக்ரைனுக்கு உதவுவதற்காக மாஸ்கோவின் முடக்கப்பட்ட நிதிகள் மீதான சோதனையை பிரதமர் பார்ட் டி வெவர் தடுக்கிறார். யாராவது தனது எண்ணத்தை மாற்ற முடியுமா?

TIM ROSS, GREGORIO SORGI,
HANS VON DER BURCHARD
மற்றும் NICOLAS VINOCUR

பிரஸ்ஸல்ஸில்

WhatsApp-Image-2025-12-02-at-5.06.42-PM-

நடாலியா டெல்கடோ / பொலிட்டிகோவின் விளக்கம்

டிசம்பர் 4, 2025 காலை 4:00 மணி CET

மதிய உணவிற்கு லாங்குஸ்டைன்கள் பரிமாறப்படும் நேரத்தில் ஏதோ தவறு நடந்திருப்பது தெளிவாகத் தெரிந்தது. 

அக்டோபர் 23 அன்று மழையில் நனைந்த பிரஸ்ஸல்ஸில் ஒரு உச்சிமாநாட்டிற்காக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை வரவேற்க வந்தனர், அவருக்கு மிகவும் தேவையான ஒரு பரிசை வழங்கினார்: பெல்ஜிய வங்கியில் முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களின் ஆதரவுடன் சுமார் €140 பில்லியன் மதிப்புள்ள ஒரு பெரிய கடன். ரஷ்யாவின் படையெடுப்புப் படைகளுக்கு எதிரான போராட்டத்தில் அவரது முற்றுகையிடப்பட்ட நாட்டை குறைந்தபட்சம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வைத்திருக்க இது போதுமானதாக இருக்கும். 

பல்வேறு பிரதமர்களும் ஜனாதிபதிகளும் தங்கள் கடனுக்கான திட்டத்தில் மிகவும் உறுதியாக இருந்ததால், பணத்தை எவ்வாறு செலவிட வேண்டும் என்பது குறித்து ஏற்கனவே தங்களுக்குள் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை உக்ரைன் வாங்க வேண்டும் என்று பிரான்ஸ் விரும்பியது. பின்லாந்து உள்ளிட்ட நாடுகள், ஜெலென்ஸ்கிக்கு எங்கு வேண்டுமானாலும் தேவையான எந்த கருவியையும் வாங்க சுதந்திரம் இருக்க வேண்டும் என்று வாதிட்டன. 

ஆனால், ரஷ்ய பணத்தை சோதனை செய்வது குறித்து உடன்பாடு இல்லாமல் மதிய உணவிற்காக விவாதம் முடிவடைந்தபோது, உண்மை வெளிப்பட்டது: 12 மில்லியன் மக்களைக் கொண்ட அடக்கமான பெல்ஜியம், இழப்பீட்டுக் கடன் என்று அழைக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. 

அந்தக் கொடிய அடி பார்ட் டி வெவரிடமிருந்து வந்தது. கண்ணாடி அணிந்த 54 வயதான பெல்ஜியப் பிரதமர், ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டு மேசையில், வட்டக் காலர் சட்டைகள், ரோமானிய வரலாறு மற்றும் நகைச்சுவையான ஒற்றை வரிகள் மீதான தனது ஆர்வத்துடன் ஒரு விசித்திரமான நபராகத் தெரிகிறார். இந்த முறை அவர் மிகவும் தீவிரமாக இருந்தார், மேலும் அதில் ஆழ்ந்து சிந்தித்தார். 

ரஷ்யர்கள் தங்கள் இறையாண்மை சொத்துக்களை பறிமுதல் செய்ததற்காக பழிவாங்கும் அபாயம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகமாக இருப்பதாக அவர் தனது சகாக்களிடம் கூறினார். பெல்ஜியம் அல்லது சொத்துக்களை வைத்திருக்கும் பிரஸ்ஸல்ஸ் வைப்புத்தொகை நிறுவனமான யூரோக்ளியருக்கு எதிராக மாஸ்கோ ஒரு சட்டப்பூர்வ சவாலில் வெற்றி பெற்றால், அவர்கள் முழுத் தொகையையும் தாங்களாகவே திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். "அது முற்றிலும் பைத்தியக்காரத்தனமானது," என்று அவர் கூறினார். 

மதியம் மாலை வரை நீண்டு, இரவு உணவு வந்து சென்றதால், மாஸ்கோவின் சொத்துக்களைப் பயன்படுத்தி கியேவுக்கு பணம் அனுப்புவது குறித்த எந்தவொரு குறிப்பையும் நீக்க, உச்சிமாநாட்டின் இறுதி முடிவுகளை மீண்டும் மீண்டும் எழுத வேண்டும் என்று டி வெவர் கோரினார். 

GettyImages-2242417090-1024x636.jpg

 அக்டோபர் 23, 2025 அன்று பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் நடைபெறும் ஐரோப்பிய கவுன்சில் உச்சிமாநாட்டில் பார்ட் டி வெவர் கலந்து கொள்கிறார். | கெட்டி இமேஜஸ் வழியாக டர்சன் அய்டெமிர்/அனடோலு

பெல்ஜிய முற்றுகை ஒரு முக்கியமான தருணத்தில் உக்ரைனின் ஐரோப்பிய கூட்டணியை முறியடித்தது. அக்டோபர் உச்சிமாநாட்டில் கடன் திட்டத்துடன் விரைவாக முன்னேற தலைவர்கள் ஒப்புக்கொண்டிருந்தால், அது உக்ரைனின் நீண்டகால வலிமை மற்றும் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஐரோப்பாவின் உறுதியான அர்ப்பணிப்பு குறித்து விளாடிமிர் புடினுக்கு ஒரு சக்திவாய்ந்த சமிக்ஞையை அனுப்பியிருக்கும்.

அதற்கு பதிலாக, அமைதிக்கான நோபல் பரிசை இன்னும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த டொனால்ட் டிரம்ப், புதினின் கூட்டாளிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான தனது உந்துதலை மீண்டும் திறந்தபோது, ஜெலென்ஸ்கியும் ஐரோப்பாவும் பிளவுகளால் பலவீனமடைந்தன.

கிட்டத்தட்ட நான்கு வருட காலப் போரின் விளைவு ஒரு முக்கிய தருணத்தை நெருங்கி வரும் நிலையில், பிரஸ்ஸல்ஸில் நிலைமை தொடர்ந்து சிக்கலில் உள்ளது. உக்ரைன் நிதி சரிவை நோக்கி நெருங்கி வருகிறது, டிரம்ப் ஜெலென்ஸ்கி புடினுடன் ஒரு தலைகீழ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்புகிறார் - இது ஐரோப்பா முழுவதும் அச்சத்தைத் தூண்டுகிறது - இன்னும் டி வெவர் இன்னும் இல்லை என்று கூறி வருகிறார்.

"ரஷ்யர்கள் சிறந்த நேரத்தை அனுபவிக்க வேண்டும்," என்று பேச்சுவார்த்தைகளுக்கு அருகில் ஒரு ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி கூறினார்.

டிசம்பர் 18 ஆம் தேதி  நடைபெறும் அடுத்த வழக்கமான பிரஸ்ஸல்ஸ் உச்சிமாநாட்டிற்குச் செல்லும்போது, உக்ரைனில் பணம் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுப்பதற்கான இறுதித் திட்டத்தில் உடன்படுவதே கூட்டமைப்பின் தலைவர்களின் நோக்கமாகும் .

ஆனால் நேரம் செல்லச் செல்ல, ஒரு முக்கிய சிக்கல் எஞ்சியுள்ளது: ஐரோப்பிய ஒன்றியத்தின் மிக மூத்த அதிகாரிகள் - ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா - டி வெவரை தனது மனதை மாற்றும்படி வற்புறுத்த முடியுமா?

இதுவரை அறிகுறிகள் நன்றாக இல்லை. "நான் இன்னும் ஈர்க்கப்படவில்லை, அதை அப்படியே சொல்லட்டும்," என்று புதன்கிழமை ஆணையம் தனது வரைவு சட்ட நூல்களை வெளியிட்டபோது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கருத்துக்களில் டி வெவர் கூறினார். "நூற்றுக்கணக்கான பில்லியன்கள் சம்பந்தப்பட்ட அபாயங்களை பெல்ஜிய தோள்களில் சுமத்தப் போவதில்லை. இன்று இல்லை, நாளை இல்லை, ஒருபோதும் இல்லை."

நேர்காணல்களில், 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் இராஜதந்திரிகள், பலர் தனிப்பட்ட முறையில் முக்கியமான விஷயங்களைப் பற்றி விவாதித்து, உக்ரைனின் பாதுகாப்பிற்கு நிதியளிக்க ஐரோப்பிய முயற்சிகள் எவ்வாறு குழப்பம் மற்றும் முடக்குதலுக்கு ஆளாகின, உயர் மட்டங்களில் அரசியல் செயலிழப்பு மற்றும் ஆளுமை மோதல்கள் ஏற்பட்டன என்பதை POLITICO விடம் விவரித்தனர். டிரம்ப் உக்ரைனில் ஒரு சமாதான ஒப்பந்தத்தை கட்டாயப்படுத்த முற்படுவதால், ஐரோப்பாவிற்கு ஏற்படக்கூடிய சாத்தியமான விளைவுகள் இதைவிடக் கடுமையானதாக இருக்க முடியாது.

குதிரைகளைப் பயமுறுத்துதல். 

விவாதங்களுக்கு நெருக்கமான பலரின் கூற்றுப்படி, டி வெவருக்கும் அவரது அண்டை வீட்டாரான புதிய ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸுக்கும் இடையே பதற்றம் உருவாகத் தொடங்கியபோது இழப்பீட்டு கடன் திட்டம் சிக்கலைத் தொடங்கியது.

பெல்ஜிய அரசியலில் ஒரு உன்னதமான சூழ்நிலையாக - பல மாதங்களாக நடந்த சிக்கலான கூட்டணி பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஒரு பிளெமிஷ் தேசியவாதியான டி வெவர் கடந்த பிப்ரவரி மாதம்தான் ஆட்சிக்கு வந்தார். மூன்று வாரங்களுக்குப் பிறகு, ஜெர்மனி ஒரு தேசியத் தேர்தலில் மைய-வலது பழமைவாதக் கட்சியைச் சேர்ந்த மெர்ஸுக்கு ஐரோப்பாவின் மிகவும் சக்திவாய்ந்த பொருளாதாரத்தின் தலைமையை வழங்க வாக்களித்தது. 

டி வெவரைப் போலவே, மெர்ஸும் கூட்டாளிகளை அமைதியற்றவர்களாக மாற்றும் வகையில் தூண்டுதலாக இருக்க முடியும். "அவர் இடுப்பிலிருந்து சுடுகிறார்," என்று ஒரு மேற்கத்திய தூதர் கூறினார். அவர் வென்ற இரவில் , அமெரிக்காவிலிருந்து முழு "சுதந்திரத்திற்காக" பாடுபட ஐரோப்பாவை அவர் அழைத்தார், மேலும் இது விரைவில் வரலாறாக மாறக்கூடும் என்று நேட்டோவை எச்சரித்தார். 

GettyImages-2249081226-1024x683.jpg

தாமதங்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் பாதையில் உடன்படத் தவறியதற்கு மத்தியில், சமீபத்திய வாரங்களில் பார்ட் டி வெவரை இலக்காகக் கொண்டு கோபமான விளக்கங்கள் வழங்கப்படுகின்றன, மேலும் உர்சுலா வான் டெர் லேயனையும் இலக்காகக் கொண்டு அதிகரித்து வருகின்றன. | நிக்கோலஸ் டுகாட்/கெட்டி இமேஜஸ்

செப்டம்பரில், ஜெர்மன் அதிபர் மீண்டும் தனது கழுத்தை நீட்டினார். ஐரோப்பா தனது வங்கிக் காப்பகங்களை சோதனை செய்து, உக்ரைனுக்கு உதவுவதற்காக அசையாத ரஷ்ய சொத்துக்களைப் பயன்படுத்த வேண்டிய நேரம் இது என்று அவர் கூறினார். தனது கோபத்தால், மெர்ஸ் பெல்ஜியர்களைப் பயமுறுத்தினார், அந்த நேரத்தில் அவர்கள் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் தங்கள் கவலைகளைத் தீர்க்க முயற்சிக்கும் முக்கியமான தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தனர்.

டி வெவர் கையெழுத்திடுவதற்கு முன்பே, மெர்ஸ் இந்தக் கொள்கையை மிகவும் வலுக்கட்டாயமாகவும், இவ்வளவு சீக்கிரமாகவும் பொது களத்தில் வெளியிடுவதில் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக பல அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஐந்து நாட்களுக்குப் பிறகு, வான் டெர் லெயன் அதைப் பற்றி விவாதித்தார், இருப்பினும் கவலைகள் உள்ள எவருக்கும் "சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியாது" என்று உறுதியளிக்க முயற்சிப்பதில் அவர் கவனமாக இருந்தார். அதற்கு பதிலாக, சொத்துக்கள் மாஸ்கோவிலிருந்து தவிர்க்க முடியாமல் செலுத்த வேண்டிய போர் இழப்பீடுகளுக்கு ஒரு வகையான முன்கூட்டியே பணம் வழங்க மட்டுமே பயன்படுத்தப்படும் என்று அவர் வாதிட்டார். உக்ரைனில் ஏற்பட்ட அழிவுக்கு கியேவுக்கு ஈடுசெய்ய கிரெம்ளின் ஒப்புக்கொண்டால் மட்டுமே பணம் ரஷ்யாவிற்குத் திருப்பித் தரப்படும். 

இந்த யோசனை விரைவான வேகத்தைப் பெற்றது. "இந்த செயல்பாட்டில் முன்னேறுவது முக்கியம், ஏனெனில் இது உக்ரைனுக்கான பட்ஜெட் மற்றும் இராணுவத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிதி இருப்பதை உறுதி செய்வது பற்றியது, மேலும் ரஷ்யாவால் ஏற்பட்ட சேதத்திற்கு பணம் செலுத்தச் செய்வது பற்றிய தார்மீகப் பிரச்சினையும் கூட," என்று ஸ்வீடனின் ஐரோப்பிய ஒன்றிய விவகார அமைச்சர் ஜெசிகா ரோசன்கிராண்ட்ஸ் POLITICO இடம் கூறினார். "அந்த வகையில், முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களைப் பயன்படுத்துவது தர்க்கரீதியான மற்றும் தார்மீகத் தேர்வாகும்."

சிலந்தி வலை 

ஐரோப்பிய கவுன்சில் உச்சிமாநாட்டின் பெரும்பாலான பணிகள், அந்தத் தொகுதியின் தலைவர்கள் கைகுலுக்கல் மற்றும் புகைப்படங்களுக்காக எதிர்கால "விண்வெளி முட்டை" யூரோபா கட்டிடத்திற்கு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே முடிந்துவிட்டன.

ஒவ்வொரு கூட்டத்திற்கும் முந்தைய வாரங்களில், உச்சிமாநாடு என்ன சாதிக்கும் என்பதைப் பற்றி விவாதிக்கவும் - திட்டங்களின் துல்லியமான சொற்களை வரையவும் - கூட்டமைப்பின் 27 உறுப்பு நாடுகளின் தூதர்கள் கூடுகிறார்கள். 

அக்டோபர் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பெல்ஜிய தூதர் பீட்டர் மூர்ஸ், ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துக்களைப் பயன்படுத்துவதற்கான திட்டங்களில் முன்னேற்றம் அடைவது நல்லது என்று தனது சகாக்களுக்கு சமிக்ஞைகளை அனுப்பி வந்தார். இந்த விஷயத்தை நன்கு அறிந்த நான்கு அதிகாரிகளின் கூற்றுப்படி, மூர்ஸ் நேரடியாக டி வெவருடன் பேசவில்லை, மேலும் ரஷ்ய சொத்துக்கள் பற்றிய அனைத்து முடிவுகளும் பிரதமரிடம் இருந்தன. 

பெல்ஜிய அரசாங்கத்திற்குள் இருந்த மற்றவர்கள், பிரதமர் தனது நாட்டின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் முக்கியமான நிதி நிறுவனங்களில் ஒன்றான யூரோக்ளியரைக் கொள்ளையடிப்பதை முற்றிலும் எதிர்க்கிறார் என்பதை அறிந்திருந்தாலும், சில நூறு மீட்டர் தொலைவில் உச்சிமாநாட்டு ஒப்பந்தத்தைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்திய தூதர் வெளிப்படையாக அதை அறிந்திருக்கவில்லை. 

அதாவது, டி வெவர் உச்சிமாநாடு நாளில் வந்து சேரும் வரை, அவரது காதுகளில் இருந்து நீராவி வெளியேறும் வரை, அவரது எதிர்ப்பு எவ்வளவு தீவிரமாக இருக்கும் என்பதை ஐரோப்பிய ஒன்றிய இயந்திரத்தில் உள்ள எவருக்கும் உண்மையில் புரியவில்லை. 

மூர்ஸ் தனது சகாக்கள் மத்தியிலும் பெல்ஜிய அரசாங்கத்திலும் நன்கு மதிக்கப்படுகிறார். அவர் திறமையானவராகவும், அனுபவம் வாய்ந்தவராகவும், திறமையானவராகவும் காணப்படுகிறார், இராஜதந்திரம் மற்றும் அரசியலில் நீண்ட காலம் பணியாற்றியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தூதராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, அவர் பெல்ஜிய வெளியுறவுக் கொள்கையின்  "வலைக்குள் சிலந்தி" என்று அழைக்கப்பட்டார்.

GettyImages-2248226253-1024x682.jpg

பார்ட் டி வெவர் கையெழுத்திடுவதற்கு முன்பே, ஃபிரெட்ரிக் மெர்ஸ் இந்தக் கொள்கையை மிகவும் வலுக்கட்டாயமாகவும், இவ்வளவு சீக்கிரமாகவும் பொது களத்தில் வெளியிடுவதில் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக பல அதிகாரிகள் தெரிவித்தனர். | டோபியாஸ் ஸ்வார்ட்ஸ்/கெட்டி இமேஜஸ்

பிரச்சனை அரசியல் ரீதியாக இருந்திருக்கலாம் என்று தெரிகிறது. டி வெவரின் போட்டியாளரும், பிரதமராக இருந்த முன்னோடியுமான அலெக்சாண்டர் டி குரூவின் தலைமைப் பணியாளராக அவர் இருந்தார், மேலும் கடந்த ஆண்டு தேர்தலில் அதிகாரத்தை இழந்து இப்போது எதிர்க்கட்சியில் பணியாற்றும் கட்சியைச் சேர்ந்தவர். அரசியலில் இத்தகைய வேறுபாடுகள் யார் வெளியேறுகிறார்கள் என்பதைப் பாதிப்பது அசாதாரணமானது அல்ல. 

மற்றொரு சிக்கலான காரணி பெல்ஜியத்தின் அரசியல் செயலிழப்பு ஆகும். டி வெவர் அவர்களே கூறியது போல், அவர் தனது தோழர்களுடன் பல வாரங்களாக ஒரு தேசிய பட்ஜெட்டை ஒப்புக்கொள்ள முயற்சிக்கும் பேச்சுவார்த்தைகளில் சிக்கிக் கொண்டார், எந்த ஒப்பந்தமும் பார்வையில் இல்லை. 

"10 பில்லியன் யூரோக்களைக் கண்டுபிடிக்க நான் பல வாரங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்," என்று ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்குச் செல்லும் வழியில் டி வெவர் கூறினார். எனவே, பெல்ஜியம் ரஷ்யாவிற்கு அந்தத் தொகையை விட 10 மடங்கு அதிகமாக திருப்பிச் செலுத்த வேண்டிய சூழ்நிலையை நினைத்துப் பார்க்க முடியாது என்று அவர் மேலும் கூறினார். 

உக்ரைனுக்கு நிதியளிப்பது குறித்து மீண்டும் பரிசீலிக்க தலைவர்களுக்கு ஒரு தெளிவற்ற ஒப்பந்தம் மட்டுமே இருந்ததால், உச்சிமாநாடு முறிந்ததால், அதிகாரிகள் தலையைச் சொறிந்து கொண்டு என்ன தவறு நடந்துவிட்டது என்று யோசித்துக்கொண்டிருந்தனர். 

அமெரிக்கா முதலில் 

பிப்ரவரி 2022 இல் போரின் தொடக்கத்தில் நிதி அனுமதிக்கப்பட்டதிலிருந்து, மேற்கத்திய கணக்குகளில் பூட்டி வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் மதிப்புள்ள ரஷ்ய சொத்துக்களை என்ன செய்வது என்ற கேள்வி உக்ரைனின் நட்பு நாடுகளின் மீது தொங்கிக் கொண்டிருந்தது. இருப்பினும், இப்போது ஐரோப்பியர்கள் மட்டும் பணத்தின் மீது தங்கள் கண்களைக் கொண்டிருக்கவில்லை. 

அமெரிக்கத் தரப்பு அமைதியாக ஆனால் உறுதியாக பிரஸ்ஸல்ஸுக்கு நிதிக்கான தங்கள் சொந்தத் திட்டங்களைத் தெரிவித்துவிட்டது. ஐரோப்பிய ஒன்றியத் தடைகள் தூதர் டேவிட் ஓ'சல்லிவன் கோடைகாலத்தில் வாஷிங்டனுக்குப் பயணம் செய்தபோது, ஒரு சமாதான ஒப்பந்தம் செய்யப்பட்டவுடன் சொத்துக்களை ரஷ்யாவிடம் திருப்பித் தர விரும்புவதாக அமெரிக்க அதிகாரிகள் வெளிப்படையாகக் கூறியதாக இரண்டு மூத்த இராஜதந்திரிகள் தெரிவித்தனர். 

கெய்வ் மற்றும் மாஸ்கோ ஒரு முழுமையான சமாதான உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்வதை டிரம்ப் அதிகரித்துக்கொண்டே போகிறார். அவர்களின் வார்த்தைக்கு உண்மையாக, அமெரிக்கர்களின் அசல் 28-புள்ளி ஒப்பந்தத்திற்கான வரைபடத்தில் ரஷ்ய சொத்துக்களை முடக்குவதையும், கூட்டு உக்ரைன் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு அவற்றைப் பயன்படுத்துவதையும் உள்ளடக்கியது, இதன் கீழ் அமெரிக்கா லாபத்தில் 50 சதவீதத்தை எடுத்துக்கொள்ளும். 

இந்தக் கருத்து ஐரோப்பிய தலைநகரங்களில் சீற்றத்தைத் தூண்டியது, அங்கு அதிர்ச்சியடைந்த ஒரு அதிகாரி, டிரம்பின் அமைதித் தூதர் ஸ்டீவ் விட்காஃப் "ஒரு மனநல மருத்துவரை" பார்க்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.  வேறொன்றுமில்லை என்றாலும், புடினுடன் விரைவான ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்ற டிரம்பின் விருப்பமும் - முடக்கப்பட்ட சொத்துக்களுக்கான அவரது வெளிப்படையான திட்டங்களும் - ஐரோப்பிய ஒன்றியத்தின் டி வெவருடனான பேச்சுவார்த்தைகளின் கீழ் ஒரு தீப்பொறியைக் கொளுத்தியது. 

வீணான நேரம்  

பல ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் பெல்ஜியத் தலைவரிடம் அனுதாபம் கொண்டுள்ளன. எந்தவொரு அரசாங்கமும் இதுபோன்ற ஒரு நடவடிக்கையை எடுப்பது எவ்வளவு கடினம் என்பதை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் அறிவார்கள், இது கோட்பாட்டளவில் தண்டனைக்குரிய விலையுயர்ந்த சட்ட நடவடிக்கைகளுக்கு அவர்களைத் தூண்டக்கூடும்.

யூரோக்ளியர் மீதான சோதனை, முதலீட்டாளர்கள் தங்கள் சொத்துக்களை ஐரோப்பிய வங்கிகளில் வைப்பது பற்றி மீண்டும் சிந்திக்க வைத்தால், யூரோவின் ஸ்திரத்தன்மையே பாதிக்கப்படும் என்று டி வெவர் கவலைப்படுகிறார். 

சமீபத்திய வாரங்களில், வான் டெர் லேயனின் மிக மூத்த உதவியாளரான பியோர்ன் சீபர்ட், பெல்ஜியத்தின் ஆட்சேபனைகளைப் புரிந்துகொள்வதிலும் அவற்றைச் சமாளிப்பதற்கான ஆக்கப்பூர்வமான வழிகளைக் கண்டுபிடிப்பதிலும் நேரத்தைச் செலவிட்டார். மூர்ஸ் மற்றும் பிற தூதர்கள் ஒருவருக்கொருவர் மற்றும் ஆணையத்துடனான வழக்கமான சந்திப்புகளின் போது, இந்தப் பிரச்சினைகளைப் பற்றி முடிவில்லாமல் விவாதித்துள்ளனர். 

ஆனால் இரவுகள் நெருங்க நெருங்க, மனநிலை இருண்டு கொண்டே போகிறது.

தாமதங்கள் மற்றும் முன்னோக்கி ஒரு உடன்பாட்டை எட்டுவதில் தொடர்ச்சியான தோல்விகளுக்கு மத்தியில், டி வெவரை இலக்காகக் கொண்டு கோபமான விளக்கங்கள் வழங்கப்படுகின்றன, மேலும் சமீபத்திய வாரங்களில் வான் டெர் லெயனையும் இலக்காகக் கொண்டுள்ளன. இழப்பீட்டுக் கடனுக்கு சொத்துக்களைப் பயன்படுத்த அனுமதிக்கும் வரைவு சட்ட நூல்களை வெளியிடுவதற்கான தீர்க்கமான படியை அவர் நிறுத்தி வைத்துள்ளார். இந்த ஆவணங்கள்தான் திட்டத்தை இயற்ற, மாற்ற அல்லது நிராகரிக்க அனைத்து தரப்பினருக்கும் தேவை.

"நாங்கள் நிறைய நேரத்தை வீணடித்துவிட்டோம்," என்று எஸ்தோனிய வெளியுறவு அமைச்சகத்தின் பொதுச் செயலாளர் ஜோனாதன் வெசெவியோவ் POLITICO இடம் கூறினார். "எங்கள் கவனம் கமிஷன் தலைவரிடம் மட்டுமே இருந்தது, அவரை முன்மொழிவை முன்வைக்கச் சொன்னது. வேறு யாராலும் முன்மொழிவை தாக்கல் செய்ய முடியாது." கடனின் விவரங்களை அமைக்கும் சட்ட நூல்களை புதன்கிழமைக்கு முன்னதாகவே ஆணையம் தயாரித்திருந்தால் "சிறப்பாக" இருந்திருக்கும் என்று அவர் கூறினார், அப்போது அவை இறுதியில் வெளியிடப்பட்டன.

GettyImages-1241339306-1024x683.jpg

"நாங்கள் நிறைய நேரத்தை வீணடித்துவிட்டோம்," என்று எஸ்தோனிய வெளியுறவு அமைச்சகத்தின் பொதுச் செயலாளர் ஜோனாதன் வெசெவியோவ் POLITICO இடம் கூறினார். | அலி பாலிக்சி/கெட்டி இமேஜஸ்

"நம் அனைவருக்கும் இப்போது விரைவுபடுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது" என்று மற்றொரு தூதர் கூறினார், அதே நேரத்தில் மூன்றில் ஒரு பங்கு பெல்ஜியம் கூட சமீபத்திய வாரங்களில் சட்டத் திட்டங்களை வெளியிட ஆணையத்திடம் மன்றாடி வருவதாகக் குறிப்பிட்டார். அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என்றும், டி வெவர் இன்னும் தனது பிடியில் இருந்து இறங்க வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். மற்றொரு தூதர் பெல்ஜியம் "அவர்களின் அனைத்து விருப்பங்களும் முழுமையாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்க முடியாது" என்றார்.

குளிர்காலம் வந்துவிட்டது

மெர்ஸ் மிகவும் பதட்டமாக உள்ளார். சொத்துக் கடன் தொடராவிட்டால், தனது நாட்டின் வரி செலுத்துவோர் தலையிட வேண்டியிருக்கும் என்று அவர் கவலைப்படுகிறார். "இதைச் செய்ய வேண்டிய அவசியம் அதிகரித்து வருவதாக நான் காண்கிறேன்," என்று ஜெர்மன் தலைவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார். "உக்ரைனுக்கு எங்கள் ஆதரவு தேவை. ரஷ்ய தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. குளிர்காலம் நெருங்கி வருகிறது - அல்லது மாறாக, நாம் ஏற்கனவே குளிர்காலத்தில் இருக்கிறோம்."

ஒரு இராஜதந்திரி கூறியது போல், டி வெவர் இன்னும் மற்ற விருப்பங்களை செயல்படுத்த வேண்டும் என்று "கெஞ்சுகிறார்". இரண்டு மாற்று யோசனைகள் காற்றில் உள்ளன. முதலாவது, ஐரோப்பிய ஒன்றிய தேசிய அரசாங்கங்கள் தங்கள் சொந்த கருவூலத்தில் இருந்து கியேவுக்கு நிதி மானியங்களை அனுப்புமாறு கேட்பது, பல ஐரோப்பிய நாடுகளின் வரவு செலவுத் திட்டங்களின் ஆபத்தான நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த வாய்ப்பு நம்பத்தகாதது என்று பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர். 

மற்றொரு யோசனை, கூட்டு ஐரோப்பிய ஒன்றிய கடன் மூலம் கியேவுக்கு கடனை வழங்குவது, இது சிக்கனமான நாடுகள் விரும்பாத ஒன்று, ஏனெனில் இது எதிர்கால தலைமுறை வரி செலுத்துவோரால் திருப்பிச் செலுத்த வேண்டிய கடனைக் குவிக்கும். "நாங்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை," என்று ஒரு தூதர் கூறினார். "சேதத்திற்கு ரஷ்யா பணம் செலுத்த வேண்டும் என்று கூறும் கொள்கை சரியானது." 

இந்த யோசனைகளின் சில சேர்க்கைகள் தவிர்க்க முடியாததாக இருக்கலாம், குறிப்பாக உக்ரைனின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இழப்பீட்டுக் கடன் சரியான நேரத்தில் இறுதி செய்யப்படாவிட்டால். அந்தச் சூழ்நிலையில், அவசரகால "திட்டம் B" ஆக ஒரு பிரிட்ஜிங் கடன் தேவைப்படும் . 

நவம்பர் 27 அன்று வான் டெர் லேயனுக்கு எழுதிய கடிதத்தில், டி வெவர் தனது எதிர்ப்பை அடிக்கோடிட்டுக் காட்டினார், இழப்பீட்டு கடன் திட்டத்தை "அடிப்படையில் தவறானது" என்று விவரித்தார். 

"உக்ரைனுக்கு நிதி உதவியைத் தொடர வழிகளைக் கண்டறிய வேண்டியதன் அவசியத்தை நான் முழுமையாக அறிவேன்," என்று டி வெவர் வான் டெர் லேயனுக்கு எழுதிய கடிதத்தில் எழுதினார். "நமது பணத்தை நம் வாய் இருக்கும் இடத்தில் வைப்பதற்கு மாற்று வழிகள் உள்ளன என்பதே எனது கருத்து. விளையாட்டில் தோலை வைத்திருப்பது பற்றி நாம் பேசும்போது, அது விளையாட்டில் நம் தோலாக இருக்கும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்." 

"பிரதம மந்திரிக்கு இப்படி ஒரு கடிதம் எழுத யார் ஆலோசனை கூறுவார்கள்?" என்று ஒரு தூதர் கோபமடைந்து, டி வெவரின் வெளிப்படையான உணர்வின்மையால் திகைத்துப் போனார். "அவர் 'விளையாட்டில் தோலைப்' பற்றிப் பேசுகிறார். உக்ரைனைப் பற்றி என்ன?"

ரஷ்ய ட்ரோன்கள் 

தனது கூட்டாளிகளை விரக்தியடையச் செய்த போதிலும், டி வெவர் தனது சொந்த அரசாங்கத்திலிருந்தே தனது கடுமையான நிலைப்பாட்டிற்கு ஆதரவைப் பெற்றுள்ளார். அவரது நிலைப்பாட்டை யூரோகிளியர் தானே வலுப்படுத்தியுள்ளது, அது அதன் சொந்த எச்சரிக்கைகளை வெளியிட்டது. பெல்ஜியத்திற்கு இந்த விஷயம் எவ்வளவு முக்கியமானது என்பதற்கான அடையாளமாக, யூரோகிளியரின் முதலாளிகள் நிதி அமைச்சகத்தைத் தவிர்த்து, டி வெவரின் அலுவலகத்துடன் நேரடியாகக் கையாள்கின்றனர். 

பெல்ஜியத்தின் உடல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் சிலர் அஞ்சுகின்றனர். கடந்த மாதம் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்தை மர்மமான ட்ரோன்கள் பாதித்தன, மேலும் பெல்ஜிய இராணுவத் தளங்கள் மீது அவை காணப்பட்டன, அவை போர் விமானங்கள் மற்றும் வெடிமருந்துக் கிடங்குகளை உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்பட்டன. ஐரோப்பா மீதான புடினின் கலப்பினத் தாக்குதலின் ஒரு பகுதியாக அவை இருக்கலாம் என்பதும், மாஸ்கோவின் சொத்துக்களைப் பயன்படுத்த டி வெவர் ஒப்புதல் அளித்தால் பெல்ஜியம் அதிக ஆபத்தில் இருக்கும் என்பதும் கவலை அளிக்கிறது. 

கடனில் முன்னேறுவதற்கு மற்றொரு பெரிய தடையாக இருப்பது ஹங்கேரி. புடினின் நண்பர் விக்டர் ஓர்பன் உட்பட அனைத்து ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களும் நிதியை முடக்கி தடைகளை நீட்டிக்க ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒப்புக்கொண்டதால் ரஷ்யாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. ஓர்பன் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டால், ரஷ்யா திடீரென்று அந்த சொத்துக்களை மீண்டும் உரிமை கோரலாம், இது பெல்ஜியத்தை சிக்கலில் சிக்க வைக்கும். 

இறுதியில், கமிஷனின் உயர் தகுதி வாய்ந்த வழக்கறிஞர்களுக்குக் கூட இந்தப் பணி மிகப் பெரியதாக இருக்கலாம். ஹங்கேரியின் வீட்டோ மற்றும் ரஷ்ய பழிவாங்கலைத் தவிர்க்கவும், பெல்ஜியத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்கவும், ஐரோப்பிய வரி செலுத்துவோர் பணத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டிய அவசியத்தைத் தவிர்க்கவும் ஒரு சட்டப்பூர்வ தீர்வு கூட இருக்கிறதா என்பது உறுதியாகத் தெரியவில்லை. 

GettyImages-2244599995-1024x683.jpg

கடந்த மாதம் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்தை பாதித்த மர்மமான ட்ரோன்கள், போர் விமானங்கள் மற்றும் வெடிமருந்துக் கடைகளை உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் பெல்ஜிய இராணுவத் தளங்கள் மீது காணப்பட்டன. | நிக்கோலஸ் டுகாட்/கெட்டி இமேஜஸ்

டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெறும் அடுத்த நெருக்கடியான ஐரோப்பிய கவுன்சில் உச்சிமாநாடு நெருங்கி வருவதால், ஐரோப்பிய அதிகாரிகள் அழுத்தத்தை உணர்கிறார்கள்.

"இது ஒரு கணக்கியல் பயிற்சி அல்ல," என்று எஸ்டோனியாவின் வெசெவியோவ் கூறினார். "அனைத்து ஐரோப்பிய கவுன்சில்களிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை நாங்கள் தயார் செய்கிறோம் ... வரலாறு உருவாக்கப்படும் மேசையில் ஐரோப்பா ஒரு இடத்தைப் பெறுவதை உறுதிசெய்ய நாங்கள் முயற்சிக்கிறோம்."

ஐரோப்பிய ஒன்றியத்தைப் பொறுத்தவரை, ஒரு முக்கியமான கேள்வி எஞ்சியுள்ளது - பிரஸ்ஸல்ஸில் பணிபுரியும் இராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகளின் மேசைகளைத் தாண்டும் ஒவ்வொரு நெருக்கடியிலும் அது எப்போதும் இருக்கும் ஒன்று: 27 மாறுபட்ட, பிளவுபட்ட, சிக்கலான நாடுகள், ஒவ்வொன்றும் அதன் சொந்த உள்நாட்டுப் போராட்டங்கள், அரசியல் போட்டிகள் மற்றும் லட்சியத் தலைவர்களைக் கொண்ட ஒரு ஒன்றியம், அது உண்மையிலேயே முக்கியமான தருணத்தை சந்திக்க ஒன்றுபட முடியுமா? 

ஒரு ராஜதந்திரி சொன்னது போல், "இது யாருடைய யூகமோ அவ்வளவுதான்."

இந்த அறிக்கைக்கு ஜாகோபோ பாரிகாஸி மற்றும் பிஜார்க் ஸ்மித்-மேயர் ஆகியோர் பங்களித்தனர்.

https://www.politico.eu/article/belgium-russia-bart-de-wever-moscow-funds-brussels-bank-ukraine-war/

நேற்று இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய மானாட்டிற்கு பின்னரான நிருபர்கள் சந்திப்பில் பெல்ஜிய அதிபர் பொலிட்டிக்கோவின் கட்டுரைக்கு பதிலளித்துள்ளார்🤣.

அமெரிக்க க்றீன் கார்ட் விசா லொட்டரி திட்டம் இடைநிறுத்தம் - ட்ரம்ப் அதிரடி உத்தரவு

2 weeks 6 days ago

அமெரிக்க க்றீன் கார்ட் விசா லொட்டரி திட்டம் இடைநிறுத்தம் - ட்ரம்ப் அதிரடி உத்தரவு 

19 Dec, 2025 | 05:38 PM

image

அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதையடுத்து, அமெரிக்க க்ரீன் கார்ட் விசா லொட்டரி திட்டத்தை நிறுத்துவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். 

இத்துப்பாக்கிச் சூட்டின்போது போர்த்துக்கீசரான நெவ்ஸ் வாலண்டே என்ற நபர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். அந்த நபர் 2017ஆம் ஆண்டில் பன்முகத்தன்மை லொட்டரி விசா திட்டத்தின் (DV1) மூலம் அமெரிக்காவிற்குச் சென்று, அங்கு க்ரீன் கார்ட் பெற்றுக்கொண்ட ஒருவரென தெரிவிக்கப்படுகிறது. 

இதனைக் கருத்திற்கொண்டே ட்ரம்ப், இவ்விசா லொட்டரி திட்டத்தை நிறுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பேரழிவை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய திட்டத்தால் இனி அமெரிக்கர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ட்ரம்பின் வழிகாட்டுதலின் கீழ் க்றீன் கார்ட் விசா திட்டத்தை இடைநிறுத்த அந்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம்  (Kristi Noem) உத்தரவிட்டுள்ளார். 

அத்துடன் “நெவ்ஸ் வாலண்டே போன்ற கொடூரமான நபர் நம் நாட்டுக்குள் வர ஒருபோதும் அனுமதிக்கப்பட்டிருக்கக்கூடாது” என்றும் நோயம் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். 

சமீப காலமாக பன்முகத்தன்மை விசா லொட்டரி திட்டத்துக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்த ட்ரம்ப். அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை சுட்டிக்காட்டி, இத்திட்டத்தை நிறுத்துவதாக உறுதிபட அறிவித்திருக்கிறார். 

https://www.virakesari.lk/article/233868

56,000 பாக். பிச்சைகாரர்களை திருப்பி அனுப்பிய சவுதி

2 weeks 6 days ago

Editorial   / 2025 டிசெம்பர் 19 , பி.ப. 04:38 - 0     - 22

image_3b31367f00.jpg

வெளிநாடுகளுக்கு சென்று பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து,சவுதி அரேபிய ஒரே நேரத்தில் 56,000 பாகிஸ்தானியர்களை நாடு கடத்தியுள்ளது.   

பிச்சை எடுக்கும் நோக்கில் வெளிநாடு செல்ல முயன்ற 6,000 க்கும் மேற்பட்டோரை பாகிஸ்தான் அதிகாரிகளே விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

புனிதப் பயணம் (உம்ரா) என்ற பெயரில் சவுதி அரேபியாவுக்கு சென்று மெக்கா மற்றும் மதினா நகரங்களில் பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்கள் மீது சவுதி அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்ட 56,000 பேர் தற்போது பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.


Tamilmirror Online || 56,000 பாக். பிச்சைகாரர்களை திருப்பி அனுப்பிய சவுதி

தென் அமெரிக்க நாடுகளுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒத்திவைப்பு

3 weeks ago

தென் அமெரிக்க நாடுகளுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒத்திவைப்பு

19 Dec, 2025 | 10:47 AM

image

தென் அமெரிக்க நாடுகளுடன் மேற்கொள்ளப்படவிருந்த மிகப்பெரிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (EU–Mercosur) ஐரோப்பிய ஒன்றியம் (ஈயூ) ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈயூ விவசாயிகளின் கடும் எதிர்ப்பும், பிரான்ஸ் மற்றும் இத்தாலி முன்வைத்த கடைசி நேர எதிர்ப்பும் இந்த முடிவுக்கு காரணமாக அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக பிரஸல்ஸில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் உழவு இயந்திரத்துடன் வீதிகளை மறித்து பட்டாசுகள் மற்றும் டயர்களை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈயூ–மெர்கோசூர் வர்த்தக ஒப்பந்தம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் தான் கையெழுத்தாகும் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைமை பேச்சாளர் பவுலா பின்யோ வியாழக்கிழமை (18) உறுதிப்படுத்தினார். சுமார் 25 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த இந்த ஒப்பந்தம் மீண்டும் தாமதமடைந்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் பிரேசிலுக்கு பயணம் செய்யவிருந்தார். ஆனால், ஈயூ உறுப்புநாடுகளில் பெரும்பான்மையான ஆதரவு கிடைக்காததால் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

பிரஸல்ஸில் நடைபெற்ற ஈயூ உச்சி மாநாட்டின் போது, வான் டெர் லெயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோருக்கு இடையில் ஜனவரி மாதம் ஒப்பந்தத்திற்கு ஆதரவு அளிக்கும் நிபந்தனையுடன் ஒத்திவைப்புக்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி, மேலும் சலுகைகள் மற்றும் கூடுதல் பேச்சுவார்த்தைகள் தேவை எனக் கூறி ஒப்பந்தத்தை தள்ளிவைக்க வலியுறுத்தினார். இத்தாலி, போலந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளுடன் இது தொடர்பாக ஆலோசித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தம் உலகின் மிகப்பெரிய சுதந்திர வர்த்தக மண்டலத்தை உருவாக்கும் என்பதுடன், வாகனங்கள், இயந்திரங்கள், மதுபானங்கள் உள்ளிட்ட ஈயூ தயாரிப்புகளின் லத்தீன் அமெரிக்க ஏற்றுமதியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/233796

முக்கிய அறிவிப்பு: இலங்கைக்கு செல்லும் பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

3 weeks ago

முக்கிய அறிவிப்பு: இலங்கைக்கு செல்லும் பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

written by admin December 18, 2025

US-Warning.png?fit=820%2C820&ssl=1

<span class=🚨" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> இலங்கையில் சிக்குன்குனியா (Chikungunya) வைரஸ் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC), இலங்கைக்கு ‘Level 2’ பயண சுகாதார எச்சரிக்கையை விடுத்துள்ளது.

<span class=🚨" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> முக்கிய பின்னணி:

<span class=🚨" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;">காரணம்: கொசுக்களால் பரவும் சிக்குன்குனியா வைரஸின் அதீத பரவல்.

<span class=🚨" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;">தற்போதைய நிலை:

அண்மையில் இலங்கையைத் தாக்கிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் உள்கட்டமைப்புகள் மற்றும் சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நோய் பரவல் அதிகரித்துள்ளது.

<span class=🛡️" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்:

இலங்கைக்கு பயணம் செய்வோர் கூடுதல் பாதுகாப்புடன் இருக்குமாறு (Enhanced Precautions) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கொசுக்கடியிலிருந்து தப்பிக்க தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.

காய்ச்சல், மூட்டு வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும்.

இலங்கையிலுள்ள உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்தத் தகவலைப் பகிர்ந்து விழிப்புடன் இருக்க உதவுங்கள்! <span class=🙏" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;">

#SriLanka #Chikungunya #CDCalert #TravelNotice #HealthAlert #CycloneDitwah #StaySafe #SLNews #PublicHealth #இலங்கை #சிக்குன்குனியா


https://globaltamilnews.net/2025/224478/

🚨 அமெரிக்காவில் கோர விமான விபத்து: முன்னாள் NASCAR வீரர் கிரெக் பிஃபிள் -மனைவி குழந்தைகள் உட்பட 6 பேர் பலி!

3 weeks ago

🚨 அமெரிக்காவில் கோர விமான விபத்து: முன்னாள் NASCAR வீரர் கிரெக் பிஃபிள் -மனைவி குழந்தைகள் உட்பட 6 பேர் பலி!

written by admin December 18, 2025

Greg-Biffle.jpg?fit=900%2C600&ssl=1

அமெரிக்காவின் வட கரோலினா (North Carolina) மாநிலத்தில் உள்ள ஸ்டேட்ஸ்வில் (Statesville) பிராந்திய விமான நிலையத்தில் இன்று காலை நிகழ்ந்த ஒரு தனியார் விமான விபத்து, விளையாட்டு உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

✈️ என்ன நடந்தது?

  • விபத்து: இன்று (டிசம்பர் 18, 2025) காலை 10:20 மணியளவில், Cessna C550 ரகத்தைச் சேர்ந்த பிசினஸ் ஜெட் விமானம் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளாகித் தீப்பிடித்தது.

  • உயிரிழப்பு: இந்த விபத்தில் புகழ்பெற்ற முன்னாள் NASCAR கார்பந்தய வீரர் கிரெக் பிஃபிள் (Greg Biffle), அவரது மனைவி கிறிஸ்டினா, இரு குழந்தைகள் மற்றும் விமானி உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • கொடூரத் தீ: விமானம் தரையிறங்கிய சில நிமிடங்களிலேயே பெரும் தீப்பிழம்பாக மாறியது. சம்பவ இடத்திலேயே பலரும் பலியாகியுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

🔍 விசாரணையில் அதிர்ச்சித் தகவல்:

  • இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏதோ தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் அவசரமாகத் தரையிறங்க முயன்றுள்ளது.

  • அந்த நேரத்தில் நிலவிய கடும் பனிமூட்டம் மற்றும் சீரற்ற வானிலையும் விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

nascar.jpg?resize=300%2C168&ssl=1

#NASCAR #GregBiffle #PlaneCrash #NorthCarolina #Statesville #BreakingNews #BreakingNewsTamil #AviationAccident #LKA #Tragedy


https://globaltamilnews.net/2025/224482/

உக்ரைனில் மேலும் நிலப்பரப்பு கைப்பற்றப்படும்: புடின் எச்சரிக்கை

3 weeks 1 day ago

உக்ரைனில் மேலும் நிலப்பரப்பு கைப்பற்றப்படும்: புடின் எச்சரிக்கை

Nishanthan SubramaniyamDecember 18, 2025 11:55 am 0

உக்ரைனில் மேலும் நிலப்பரப்பு கைப்பற்றப்படும்: புடின் எச்சரிக்கை

உக்ரைன் அமைதிப் பேச்சு தோல்வி அடைந்தால், உக்ரைனில் மேலும் கூடுதலான நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்றும் என ஜனாதிபதி புடின் எச்சரித்துள்ளார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

ஆனால் தீர்வு இல்லாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது. எனவே, ‘நேட்டோ’ கூட்டமைப்பில் உக்ரைனை இணைக்க வேண்டும் என்ற தங்கள் நீண்டகால கோரிக்கையை கைவிட தயாராக இருப்பதாக, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறியிருந்தார்.

இந்த சூழலில், வருடாந்திர கூட்டத்தில் இராணுவ தளபதிகள் மத்தியில் புடின் நேற்று உரையாற்றிய போது,

அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்க தவறினால், உக்ரைனில் தனது பிராந்தியக் கட்டுப்பாட்டை விரிவுபடுத்த ரஷ்யா நடவடிக்கை எடுக்கக்கூடும். மேலும் கூடுதலான நிலப்பரப்பை கைப்பற்றுவோம்.

ராஜதந்திர முயற்சிகள் தடைபட்டால், ரஷ்யா ராணுவ பலத்தை நம்ப தயாராக உள்ளது.

பேச்சுவார்த்தைகள் மூலம் மோதலை தீர்ப்பதை ரஷ்யா விரும்புகிறது. ராஜதந்திரம் வாயிலாக போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா பாடுபடும் என குறிப்பிட்டுள்ளார்.

https://oruvan.com/more-territory-will-be-seized-in-ukraine-putin-warns/

பசிபிக் கடலில் படகுகள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் - 8 பேர் பலி

3 weeks 1 day ago

பசிபிக் கடலில் படகுகள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் - 8 பேர் பலி

17 Dec, 2025 | 01:48 PM

image

பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டுப் படகுகள் மீது அமெரிக்க இராணுவம் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச கடல் பகுதியில் பயணித்த மூன்று படகுகளை இலக்கு வைத்து அமெரிக்க இராணுவம் நேற்று (16) இந்தத் தாக்குதலை நடத்தியது.

இந்தப் படகுகள் பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தல் பாதையில் சென்றதாகவும், கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருந்ததாகவும் உளவுத்துறை உறுதிப்படுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என இராணுவம் தெரிவித்துள்ளது.

சமீபகாலமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமை காட்டி வரும் நிலையில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட படகுகள் இதேபோல் தாக்கப்பட்டுள்ளன.

ஆனால் அவை போதைப்பொருள் படகுகள் இல்லை என்றும் இந்தத் தாக்குதல்கள் சட்டத்திற்குப் புறம்பானவை என்றும் விமர்சனம் எழுந்தது.

ஆனால், சர்வதேச சட்டங்களின்படியே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பென்டகன் விளக்கம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/233627

சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை வம்சாவளி தமிழ் பெண்

3 weeks 2 days ago

https://dailynews.lk/wp-content/uploads/2025/12/Untitled-60-2.jpg

பரா ரூமி Farah Rumy இலங்கை வம்சாவளி தமிழ் பெண் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்.

சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணைத் தலைவராக அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பரா ரூமி சுவிஸ் கூட்டாட்சி நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இலங்கையில் பிறந்த நபர் ஆனார். இனவாதம் பார்க்காத சுவிட்சர்லாந்து நாட்டிற்கும் பாரா ரூமிக்கும் வாழ்த்துக்கள்.

https://dailynews.lk/2025/12/15/local/914618/farah-rumy-34-first-lankan-born-elected-to-swiss-federal-parliament/

ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் மீது முதன் முறையாக நீருக்கடியிலான ட்ரோன் தாக்குதலை நடத்தியது உக்ரைன்!

3 weeks 3 days ago

ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் மீது முதன் முறையாக நீருக்கடியிலான ட்ரோன் தாக்குதலை நடத்தியது உக்ரைன்!

16 Dec, 2025 | 11:45 AM

image

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிடுவதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறிய நிலையில், உக்ரைன் தனது முதல் நீருக்கடியிலான ட்ரோன் தாக்குதல் மூலம் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலை தாக்கி அழித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் நேட்டோவில்(NATO) இணைய முயன்றதைத் தொடர்ந்து, ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது.

அந்த போர் ஆண்டுக்கணக்கில் நீண்டுகொண்டிருக்கும் நிலையில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின் மூலம் போர் சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த இறுதிகட்ட தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்திவருகிறது.

உக்ரைனும் அவ்வப்போது அதற்கு பதிலடி கொடுத்து வருவதுடன், முதன் முறையாக, நீருக்கடியில் சென்று தாக்கும் ட்ரோன் மூலம், ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலை சிதைத்து, ரஷ்யாவை கதற விட்டுள்ளது உக்ரைன்.

இந்த சூழலில், உக்ரைன் பாதுகாப்பு சேவையான SBU அதன் நீருக்கடியில் சென்று தாக்கும் "சப் சீ பேபி" ட்ரோன்கள் மூலம் நோவோரோசிஸ்க் துறைமுகத்தில் உள்ள ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலைத் தாக்கியது.

தாக்குதல் தொடர்பாக SBU வெளியிட்ட காட்சிகள், நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் பிற கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு துறைமுகத்தில் இருந்து ஒரு சக்திவாய்ந்த வெடிப்பைக் காட்டியது.

துறைமுகத்தின் தளவமைப்பு மற்றும் கப்பல் தளவமைப்புகளைப் பயன்படுத்தி வீடியோவின் இருப்பிடம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/233501

Checked
Fri, 01/09/2026 - 11:53
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe