உலக நடப்பு

அமெரிக்காவால் எண்ணெய் கப்பல் கொள்ளை - வெனிசுலா குற்றச்சாட்டு

4 weeks 1 day ago

அமெரிக்காவால் எண்ணெய் கப்பல் கொள்ளை - வெனிசுலா குற்றச்சாட்டு

Dec 11, 2025 - 08:14 AM

அமெரிக்காவால் எண்ணெய் கப்பல்  கொள்ளை - வெனிசுலா குற்றச்சாட்டு

வெனிசுலாவின் கடற்கரையில் இருந்து அமெரிக்கப் படைகள் ஒரு எண்ணெய்க் கப்பலைப் பறிமுதல் செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

இது நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கத்திற்கு எதிரான அமெரிக்காவின் அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளது. 

வெனிசுலாவின் கடற்கரையில் பாரிய எண்ணெய்க் கப்பலை பறிமுதல் செய்துள்ளதாக ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். 

இந்த நடவடிக்கையை வெனிசுலா உடனடியாகக் கண்டித்துள்ளது. 

இதை "சர்வதேச கடற்கொள்ளை" நடவடிக்கை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது. 

முன்னதாக, வெனிசுலா ஒருபோதும் "எண்ணெய் காலனியாக மாறாது என்றும் மதுரோ அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmj0u4sai02mao29neh5sjld1

ரஷ்யாவிற்கு நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது: யுக்ரைன் ஜனாதிபதி திட்டவட்டம்

4 weeks 2 days ago

ரஷ்யாவிற்கு நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது: யுக்ரைன் ஜனாதிபதி திட்டவட்டம்

10 December 2025

4be209b0-d4fb-11f0-949c-45d05c88eada.png

யுக்ரைன் அமைதித் திட்டத்திற்கு பதிலளிக்க ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், ரஷ்யாவிற்கு நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது என யுக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

ரஷ்யா மற்றும் யுக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருவதால், இரண்டு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. 

அதற்காக, அமெரிக்கா பரிந்துரைக்கும் அமைதி ஒப்பந்தத்தில் ரஷ்யாவுக்கு சாதகமான அம்சங்கள் இருப்பதாக யுக்ரைன் ஜனாதிபதி தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வருகிறார். 

அத்துடன், அமைதி திட்டத்தை ஏற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி ட்ரம்ப், யுக்ரைனுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். 

இந்த நிலையில், ரஷ்யா தங்களிடம், நிலத்தை விட்டுக் கொடுக்குமாறு வலியுறுத்தி வருவதாக யுக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். 

ஆனால், தாங்கள் எதனையும் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை என்றும் அதற்காகவே தாங்கள் போராடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்துடன், யுக்ரைனின் சட்டம், அதன் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டம் எந்த சலுகைகளையும் அனுமதிக்காது என்பதால், நிலத்தை விட்டுக்கொடுப்பதற்கு தங்களுக்கு தார்மீக உரிமை இல்லை என்று யுக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

https://hirunews.lk/tm/435093/ukraine-cannot-cede-land-to-russia-presidential-plan

இலங்கையை பூர்வீகமாக கொண்ட பேராசிரியர் அமெரிக்காவில் கைது

1 month ago

இலங்கையை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் பல்கலைக்கழக பேராசிரியர், அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்கச்செயலாக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மரண அச்சுறுத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகக் குற்றங்களுக்காகத் தண்டனை பெற்ற குற்ற வரலாறு இவருக்கு இருப்பதால், இவரைக் கைது செய்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக பணியிலிருந்து நீக்கம்

சுமித் குணசேகர என்ற சந்தேகநபர்  1998 ஆம் ஆண்டில் கனடாவில் பாலியல் குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்றவர் என்றும், அதில் ஒரு சிறுவருடன் தொடர்புடைய பாலியல் குற்றத்தை புரிந்ததாக அவரே ஒப்புக்கொண்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட பேராசிரியர் அமெரிக்காவில் கைது | Sri Lankan Professor Arrested In America

மேலும், 2004 ஆம் ஆண்டிலும் ஒழுங்கீனமான நடத்தைக்காக அவர் தண்டிக்கப்பட்டுள்ளார். குணசேகர மாணவர் விசாவில் அமெரிக்காவில் இருந்தபோதிலும், கனடாவில் செய்த குற்றங்களால், அமெரிக்காவில் சட்டப்படி இருக்க இவருக்கு உரிமை இல்லை என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தத் தகவல் தெரியவந்தவுடன், ஃபெரிஸ் ஸ்டேட் பல்கலைக்கழகம் அவரை உடனடியாகப் பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது.

"பாலியல் குற்றவாளி ஒருவர் பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணியாற்றியது மிகவும் வேதனை அளிக்கிறது" என்று அமெரிக்க அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.

Tamilwin
No image previewஇலங்கையை பூர்வீகமாக கொண்ட பேராசிரியர் அமெரிக்காவில் கைது...
இலங்கையை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் பல்கலைக்கழக பேராசிரியர், அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்கச்செயலாக்க அதிகாரிகளால்...

உக்ரேனுக்கான ஆதரவை அதிகரிக்க ஐரோப்பிய தலைவர்கள் முடிவு!

1 month ago

New-Project-87.jpg?resize=750%2C375&ssl=

உக்ரேனுக்கான ஆதரவை அதிகரிக்க ஐரோப்பிய தலைவர்கள் முடிவு!

உக்ரேனுக்கான ஆதரவை அதிகரிக்கவும், போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்கவும் “இப்போது ஒரு முக்கியமான தருணம்” என்று ஐரோப்பிய தலைவர்கள் கூறியுள்ளனர்.

உக்ரேன் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே கடந்த வாரம் வரைவு செய்யப்பட்ட அமைதித் திட்டத்தின் அண்மைய பதிப்பு குறித்து விவாதிக்க உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் ஆகியோரை திங்களன்று (08) லண்டனில் சந்தித்தார்.

ரஷ்யாவுடன் விரைவான ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ள அமெரிக்கா கெய்வ் மீது அழுத்தம் கொடுப்பதால், உக்ரேனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களைப் பெறுவதற்கு மேலதிக பணிகள் தேவை என்று ஐரோப்பியத் தலைவர்கள் இதன்போது கூறினர்.

நேட்டோ அதிகாரிகளைச் சந்திக்க பிரஸ்ஸல்ஸுக்குச் சென்ற ஜெலென்ஸ்கி, செவ்வாயன்று (09) உக்ரேன் அமெரிக்காவுடன் திருத்தப்பட்ட திட்டத்தைப் பகிர்ந்து கொள்ளும் என்றும் கூறினார்.

கடந்த வாரம், உக்ரேனிய அதிகாரிகள் புளோரிடாவில் அமெரிக்க பேச்சுவார்த்தை குழுவுடன் மூன்று நாட்கள் செலவிட்டு, ரஷ்யாவிற்கு சாதகமாகக் கருதப்படும் அமெரிக்க ஆதரவுடன் கூடிய சமாதானத் திட்டத்தில் மாற்றங்களைக் கோரினர்.

https://athavannews.com/2025/1455703

ஜப்பானில் பாரிய பூகம்பம் : சுனாமி எச்சரிக்கை

1 month ago

ஜப்பானில் பாரிய பூகம்பம் : சுனாமி எச்சரிக்கை

Published By: Vishnu

08 Dec, 2025 | 08:27 PM

image

ஜப்பானில் பாரிய பூகம்பம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பூகம்பம் 7.6 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. கடற்கரையில் வசிக்கும் மக்களை உடனடியாக உயரமான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/232820

டிரம்பின் புதிய தேசிய பாதுகாப்பு உத்திக்கு ரஷ்யா வரவேற்பு!

1 month ago

டிரம்பின் புதிய தேசிய பாதுகாப்பு உத்திக்கு ரஷ்யா வரவேற்பு!

December 8, 2025

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய தேசிய பாதுகாப்பு உத்தியை ரஷ்யா வரவேற்றுள்ளது. அது ரஷ்யாவின் தொலைநோக்கு பார்வையுடன் பெரும்பாலும் ஒத்துப்போகிறது என்றும் ரஷ்யா கூறியிருக்கிறது.

இந்த வாரம் அமெரிக்க அரசு வெளியிட்ட 33 பக்க ஆவணம், ஐரோப்பா ‘நாகரிக அழிவை’ எதிர்கொள்கிறது என்று கூறுகிறது. அது ரஷ்யாவை அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாகக் காட்டவில்லை. வெளிநாட்டு செல்வாக்கை எதிர்த்துப் போராடுவது, வெகுஜன இடப்பெயர்வை நிறுத்துவது மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தணிக்கை நடைமுறையை நிராகரிப்பது ஆகியவை அறிக்கையில் மற்ற முன்னுரிமைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

“நாங்கள் பார்க்கும் மாற்றங்கள்… பெரும்பாலும் எங்கள் நோக்கத்தோடு ஒத்துப்போகின்றன” என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான டாஸ் வெளியிட்ட பேட்டியில் கூறினார். “இது ஒரு நேர்மறையான நடவடிக்கையாக நாங்கள் கருதுகிறோம்,” என்று அவர் கூறினார். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் ஆவணத்தை ரஷ்யா தொடர்ந்து பகுப்பாய்வு செய்யும் என்றும் அவர் கூறினார்.

இந்த ஆவணம் அமெரிக்க வெளிநாட்டு உறவுகளை சிதைக்கக்கூடும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர். ஜேசன் க்ரோ, இந்த உத்தி “உலக அரங்கில் அமெரிக்காவின் நிலைக்கு பேரழிவு” என்று கூறினார். https://www.ilakku.org/russia-welcomes-trumps-new-national-security-strategy/

போர் நிறுத்த திட்டம் ; ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளது ; உக்ரேன் புரிந்துகொள்ளவில்லை - அமெரிக்க ஜனாதிபதி

1 month ago

போர் நிறுத்த திட்டம் ; ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளது ; உக்ரேன் புரிந்துகொள்ளவில்லை - அமெரிக்க ஜனாதிபதி

Published By: Digital Desk 3

08 Dec, 2025 | 11:56 AM

image

போர் நிறுத்தம், அமைதி திட்டத்தை ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், ஆனால் உக்ரேன் புரிந்துகொள்ளவில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உக்ரேன், ரஷ்யா இடையே இன்று திங்கட்கிழமை (டிச. 08) 1 ஆயிரத்து 383வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். போர் நிறுத்த திட்டம் தொடர்பாக 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்க உக்ரேன் மறுத்து வருகிறது. இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் உக்ரேன் - ரஷ்யா போர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த டொனால்ட் ட்ரம்ப், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின், உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியிடம் பேசி வருகிறோம். போர் நிறுத்தம், அமைதி திட்டத்தை ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளது. அது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், இந்த திட்டத்தை உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி புரிந்துகொள்ளவில்லை. அது எனக்கு ஏமாற்றம் தான்’ என்றார்.

https://www.virakesari.lk/article/232752

கம்போடியா மீது தாய்லாந்து தாக்குதல்

1 month ago

கம்போடியா மீது தாய்லாந்து தாக்குதல்

08 Dec, 2025 | 12:43 PM

image

கம்போடியா மீது தாய்லாந்து இன்று (டிச.08) வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. எல்லையில் கம்போடியா முதலில் அத்துமீறி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதாகவும் இதற்கு பதிலடியாகவே வான்வழி தாக்குதல் நடத்தியதாகவும் தாய்லாந்து தெரிவித்துள்ளது.

கம்போடியா நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் உயிரிழந்ததாகவும், இதற்கு பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் தாய்லாந்து தெரிவித்துள்ளது.

அதேவேளை, தாய்லாந்து நடத்திய தாக்குதலில் கம்போடியாவில் ஏற்பட்ட உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. இந்த மோதலால் தாய்லாந்து, கம்போடியா இடையே மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/232757

சூடானில் ஆயுத குழுக்களின் ட்ரான் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் உட்பட 50பேர் உயிரிழப்பு!

1 month ago

download-5-1.jpg?resize=750%2C375&ssl=1

சூடானில் ஆயுத குழுக்களின் ட்ரான் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் உட்பட 50பேர் உயிரிழப்பு!

சூடானில் பாடசாலை , மருத்துவமனை மீது ஆயுத குழுவினர் ட்ரோனை ஏவி தாக்குதல் நடத்தியதில் 33 குழந்தைகள் உள்ளிட்ட 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

சூடானில் அந்நாட்டு ராணுவத்திற்கும், ரேபிட் சப்போர்ட் போர்சஸ்(ஆர்எஸ்எப்) எனப்படும் ஆயுதமேந்திய குழுவினருக்கும் சமீப காலமாக மோதல் நிலவுகிறது.

இந்நிலையில் கோர்டோபான் மாகாணத்தில் உள்ள கலோகி நகரில் உள்ள ஒரு சிறுவர்கள் பாடசாலை , மருத்துவமனை மீது ஆயுத குழுவான ஆர்எஸ்எப், நேற்றுமுன்தினம் இரவு ட்ரோன் ஏவியது. இந்த தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர்.

ஆயுத குழுவினர்,முதலில் பாடசாலையை தாக்கியதுடன் பின்னர் பொதுமக்கள் உணவுக்காக உதவி வாங்க கூடியிருந்த இடத்தில் இரண்டாவது தாக்குதலை நடத்தியதாகவும் 50 பேர் இதில் கொல்லப்பட்டனர் எனவும் குழந்தைகள் 33 பேர் உள்ளடங்குவதாகவும் இந்த தாக்குதலுக்கு குறித்த அமைப்பினர் பொறுப்பேற்கவில்லை எனவும் சூடான் மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2025/1455473

ஐரோப்பா தலைமையிலான நேட்டோ பாதுகாப்புக்கு அமெரிக்கா 2027 காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது: அதிகாரிகள்

1 month ago


ஐரோப்பா தலைமையிலான நேட்டோ பாதுகாப்புக்கு அமெரிக்கா 2027 காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது: அதிகாரிகள்

ராய்ட்டர்ஸ், வாஷிங்டன்

வெளியிடப்பட்டது: 06 டிசம்பர் 2025, 12:00 AM

ஐரோப்பா தலைமையிலான நேட்டோ பாதுகாப்புக்கு அமெரிக்கா 2027 காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது: அதிகாரிகள்

அஅ

2027 ஆம் ஆண்டுக்குள், உளவுத்துறை முதல் ஏவுகணைகள் வரை, நேட்டோவின் வழக்கமான பாதுகாப்புத் திறன்களில் பெரும்பகுதியை ஐரோப்பா கைப்பற்ற வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது என்று பென்டகன் அதிகாரிகள் இந்த வாரம் வாஷிங்டனில் உள்ள தூதர்களிடம் தெரிவித்தனர் - சில ஐரோப்பிய அதிகாரிகளை நம்பத்தகாததாகக் கருதும் ஒரு இறுக்கமான காலக்கெடு.

இந்த விவாதத்தில் நன்கு அறிந்த ஐந்து ஆதாரங்களால், ஒரு அமெரிக்க அதிகாரி உட்பட, விவரிக்கப்பட்ட செய்தி, வாஷிங்டனில் நேட்டோ கொள்கையை மேற்பார்வையிடும் பென்டகன் ஊழியர்கள் மற்றும் பல ஐரோப்பிய பிரதிநிதிகளின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சுமையை அமெரிக்காவிலிருந்து ஐரோப்பிய நேட்டோ உறுப்பினர்களுக்கு மாற்றுவது, போருக்குப் பிந்தைய கூட்டணியின் ஸ்தாபக உறுப்பினரான அமெரிக்கா, அதன் மிக முக்கியமான இராணுவ பங்காளிகளுடன் எவ்வாறு செயல்படுகிறது என்பதை வியத்தகு முறையில் மாற்றும்.

2022 ஆம் ஆண்டில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு விரிவாக்கப்பட்டதிலிருந்து ஐரோப்பா தனது பாதுகாப்புத் திறன்களை அதிகரிப்பதில் அடைந்துள்ள முன்னேற்றத்தில் வாஷிங்டன் இன்னும் திருப்தி அடையவில்லை என்று பென்டகன் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். ஐரோப்பா 2027 காலக்கெடுவை பூர்த்தி செய்யாவிட்டால், சில நேட்டோ பாதுகாப்பு ஒருங்கிணைப்பு வழிமுறைகளில் பங்கேற்பதை அமெரிக்கா நிறுத்தக்கூடும் என்று அமெரிக்க அதிகாரிகள் தங்கள் ஐரோப்பிய சகாக்களிடம் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கு பென்டகனின் செய்தியை கேபிடல் ஹில்லில் உள்ள சில அதிகாரிகள் அறிந்திருக்கிறார்கள், அதைப் பற்றி கவலைப்படுகிறார்கள் என்று ஒரு அமெரிக்க அதிகாரி மேலும் கூறினார்.

அமெரிக்கா முன்னேற்றத்தை எவ்வாறு அளவிடும் என்பது குறித்து தெளிவு இல்லை.

வழக்கமான பாதுகாப்புத் திறன்களில் துருப்புக்கள் முதல் ஆயுதங்கள் வரை அணுசக்தி அல்லாத சொத்துக்கள் அடங்கும், ஆனால் பெரும்பாலான சுமையை ஏற்றுக்கொள்வதில் ஐரோப்பாவின் முன்னேற்றத்தை அமெரிக்கா எவ்வாறு அளவிடும் என்பதை அதிகாரிகள் விளக்கவில்லை.

2027 காலக்கெடு டிரம்ப் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைக் குறிக்கிறதா அல்லது சில பென்டகன் அதிகாரிகளின் கருத்துக்களை மட்டும் பிரதிபலிக்கிறதா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. ஐரோப்பாவில் அமெரிக்கா வகிக்க வேண்டிய இராணுவப் பங்கு குறித்து வாஷிங்டனில் குறிப்பிடத்தக்க கருத்து வேறுபாடுகள் உள்ளன.

வாஷிங்டன் முன்னேற்றத்தை எவ்வாறு அளந்தாலும், 2027 காலக்கெடு நடைமுறைக்கு மாறானது என்று பல ஐரோப்பிய அதிகாரிகள் கூறினர், ஏனெனில் குறுகிய காலத்தில் சில அமெரிக்க திறன்களை மாற்றுவதற்கு ஐரோப்பாவிற்கு பணம் மற்றும் அரசியல் விருப்பத்தை விட அதிகமாக தேவைப்படுகிறது. நேட்டோ நட்பு நாடுகளும் தாங்கள் வாங்க முயற்சிக்கும் இராணுவ உபகரணங்களுக்கான உற்பத்தி நிலுவைகளை எதிர்கொள்கின்றன. அமெரிக்க அதிகாரிகள் ஐரோப்பாவை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை அதிகமாக வாங்க ஊக்குவித்தாலும், இன்று ஆர்டர் செய்தால் மிகவும் மேம்பட்ட அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் சிலவற்றை வழங்க பல ஆண்டுகள் ஆகும்.

உக்ரேனிய போர் முயற்சிக்கு முக்கியமானதாக நிரூபிக்கப்பட்ட தனித்துவமான உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் உளவு பார்த்தல் போன்ற வெறுமனே வாங்க முடியாத திறன்களையும் அமெரிக்கா வழங்குகிறது.

கருத்து கேட்டதற்கு, ஐரோப்பிய நட்பு நாடுகள் கண்டத்தின் பாதுகாப்பிற்கு அதிக பொறுப்பை ஏற்கத் தொடங்கியுள்ளன என்று நேட்டோ அதிகாரி ஒருவர் கூறினார், ஆனால் 2027 காலக்கெடு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. "பாதுகாப்பில் அதிக முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை நேச நாடுகள் அங்கீகரித்துள்ளன, மேலும் வழக்கமான பாதுகாப்பின் மீதான சுமையை அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு மாற்றியுள்ளன" என்று அந்த அதிகாரி கூறினார்.

கருத்துக்கான கோரிக்கைகளுக்கு பென்டகனும் வெள்ளை மாளிகையும் உடனடியாக பதிலளிக்கவில்லை.

ஐரோப்பா அதிக பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது

ஐரோப்பிய நாடுகள் தங்கள் சொந்த பாதுகாப்பிற்கு அதிக பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கோரிக்கையை பரவலாக ஏற்றுக்கொண்டு, பாதுகாப்பு செலவினங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு உறுதியளித்துள்ளன.

2030 ஆம் ஆண்டுக்குள் கண்டம் தன்னைத்தானே தற்காத்துக் கொள்ளும் திறன் கொண்டதாக மாற்றுவதை ஐரோப்பிய ஒன்றியம் இலக்காகக் கொண்டுள்ளது, வான் பாதுகாப்பு, ட்ரோன்கள், சைபர் போர், வெடிமருந்துகள் மற்றும் பிற பகுதிகளில் உள்ள இடைவெளிகளை நிரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த காலக்கெடு கூட மிகவும் லட்சியமானது என்று அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

வாஷிங்டன்-நேட்டோ உறவு சூடாகவும் குளிராகவும் செல்கிறது

ஐரோப்பிய நட்பு நாடுகள் நேட்டோவிற்கு அதிக பங்களிப்பை வழங்க வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து வாதிட்டு வருகிறது, ஆனால் கூட்டணியில் ஜனாதிபதியின் நிலைப்பாடு எப்போதும் தெளிவாகத் தெரியவில்லை.

2024 பிரச்சாரப் பாதையில், டிரம்ப் ஐரோப்பிய நட்பு நாடுகளை அடிக்கடி விமர்சித்தார், மேலும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை பாதுகாப்புக்காக தங்கள் நியாயமான பங்கைச் செலவிடாத நேட்டோ நாடுகளை ஆக்கிரமிக்க ஊக்குவிப்பதாகக் கூறினார். இருப்பினும், ஜூன் மாதம் நடந்த வருடாந்திர நேட்டோ தலைவர்கள் உச்சி மாநாட்டில், உறுப்பு நாடுகளின் வருடாந்திர பாதுகாப்பு செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% ஆக உயர்த்துவதற்கான அமெரிக்க திட்டத்திற்கு ஒப்புக்கொண்டதற்காக ஐரோப்பிய தலைவர்களைப் பாராட்டினார்.

அதன் பின்னர் வந்த மாதங்களில், நேட்டோவின் முக்கிய எதிரியான ரஷ்யா மீதான கடுமையான கோட்டிற்கும், உக்ரைன் மோதல் தொடர்பாக மாஸ்கோவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் விருப்பத்திற்கும் இடையில் டிரம்ப் ஊசலாடி வருகிறார். ஐரோப்பிய அதிகாரிகள் அந்தப் பேச்சுவார்த்தைகளில் இருந்து பெரும்பாலும் விலக்கப்பட்டதாக புகார் கூறியுள்ளனர்.

இந்த வாரம் நடந்த நேட்டோ வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், அமெரிக்க துணை வெளியுறவு செயலாளர் கிறிஸ்டோபர் லாண்டவு, ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கு நேட்டோ நட்பு நாடுகள் பொறுப்பேற்க வேண்டும் என்பது "வெளிப்படையானது" என்று கூறினார். "தொடர்ச்சியான அமெரிக்க நிர்வாகங்கள் என் வாழ்நாள் முழுவதும் ஏதோ ஒரு வடிவத்தில் இதைச் சொல்லி வருகின்றன... ஆனால் எங்கள் நிர்வாகம் அது சொல்வதை அர்த்தப்படுத்துகிறது," என்று லாண்டவு X இல் எழுதினார்.


வெடிக்கும் புதிய ஆவணத்தில் ஐரோப்பா 'நாகரிக அழிப்பு' நிலையை எதிர்கொள்கிறது என்று டிரம்ப் எச்சரிக்கிறார்

1 month ago

வெடிக்கும் புதிய ஆவணத்தில் ஐரோப்பா 'நாகரிக அழிப்பு' நிலையை எதிர்கொள்கிறது என்று டிரம்ப் எச்சரிக்கிறார்

அதிகாரப்பூர்வ தேசிய பாதுகாப்பு உத்தியில் பரந்த கண்ட சரிவைத் தூண்டுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இடம்பெயர்வு ஆகியவற்றை அமெரிக்க ஜனாதிபதி குற்றம் சாட்டுகிறார்.

கேளுங்கள்

இலவச கட்டுரை பொதுவாக சந்தாதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க-அரசியல்-டிரம்ப்

புதிய பாதுகாப்பு உத்தி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பிரபலமான MAGA இயக்கத்திற்கும் ஐரோப்பாவின் தேசியவாதக் கட்சிகளுக்கும் இடையே ஒரு தெளிவான கருத்தியல் சீரமைப்பை வழங்குகிறது. | ஆண்ட்ரூ கபல்லெரோ-ரெனால்ட்ஸ்/AFP வழியாக கெட்டி இமேஜஸ்

டிசம்பர் 5, 2025 காலை 11:02 CET

லாரா கயாலி எழுதியது

ஐரோப்பாவில் உடனடியாக நிகழும் முழுமையான கலாச்சார சீரழிவுக்கும், அதற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தையும், இடம்பெயர்வையும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் அவரது நிர்வாகமும் குற்றம் சாட்டுகின்றன. 

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு உத்தியில் இந்த வெடிக்கும் கூற்று கூறப்பட்டுள்ளது , இது ஐரோப்பாவில் பொருளாதார சிக்கல்கள் இருப்பதாகக் குறிப்பிடுகிறது, ஆனால் அடுத்த 20 ஆண்டுகளுக்குள் "நாகரீகத்தை அழிப்பதற்கான உண்மையான மற்றும் மிகவும் அப்பட்டமான வாய்ப்பால் அவை மறைக்கப்பட்டுள்ளன" என்று கூறுகிறது. 

"ஐரோப்பா எதிர்கொள்ளும் பெரிய பிரச்சினைகளில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அரசியல் சுதந்திரம் மற்றும் இறையாண்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் பிற நாடுகடந்த அமைப்புகளின் செயல்பாடுகள், கண்டத்தை மாற்றும் மற்றும் மோதல்களை உருவாக்கும் இடம்பெயர்வு கொள்கைகள், பேச்சு சுதந்திரம் தணிக்கை மற்றும் அரசியல் எதிர்ப்பை அடக்குதல், பிறப்பு விகிதங்களை பெருக்குதல் மற்றும் தேசிய அடையாளங்கள் மற்றும் தன்னம்பிக்கை இழப்பு ஆகியவை அடங்கும்" என்று டிரம்ப் நிர்வாகம் இரவு முழுவதும் வெளியிடப்பட்ட 33 பக்க ஆவணத்தில் கூறுகிறது. 

இந்தக் கதை, ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதான விமர்சனம், முஸ்லிம் பெரும்பான்மை மற்றும் ஐரோப்பியரல்லாத நாடுகளிலிருந்து இடம்பெயர்வுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் தங்கள் நாடுகளின் உணரப்பட்ட சரிவுகளை முறியடிக்க தேசபக்தி உந்துதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் திட்டங்களைக் கொண்ட பெரும்பாலான ஐரோப்பாவின் தீவிர வலதுசாரிக் கட்சிகளிடையே ஆழமாக எதிரொலிக்கும். 

புதிய பாதுகாப்பு உத்தி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மக்கள்வாத MAGA இயக்கத்திற்கும் ஐரோப்பாவின் தேசியவாதக் கட்சிகளுக்கும் இடையே ஒரு தெளிவான கருத்தியல் சீரமைப்பை வழங்குகிறது.

ஜெர்மனி , ஸ்பெயின் போன்ற நாடுகளில் தீவிர வலதுசாரிக் கட்சிகளுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொண்டுள்ள அமெரிக்க நிர்வாகம், சித்தாந்த ரீதியாக கூட்டணி வைத்த ஐரோப்பியக் கட்சிகளுக்கு உதவக்கூடும் என்று சூசகமாகத் தெரிகிறது.

"இந்த மன எழுச்சியை ஊக்குவிக்க அமெரிக்கா ஐரோப்பாவில் உள்ள அதன் அரசியல் கூட்டாளிகளை ஊக்குவிக்கிறது, மேலும் தேசபக்தி கொண்ட ஐரோப்பிய கட்சிகளின் வளர்ந்து வரும் செல்வாக்கு உண்மையில் மிகுந்த நம்பிக்கைக்கு வழிவகுக்கிறது" என்று மூலோபாயம் கூறுகிறது.

இந்த ஆவணம், டிரம்ப்பின் வெளியுறவுக் கொள்கை உலகக் கண்ணோட்டத்தை அவரது நிர்வாகத்தால் அரிதாகவே விளக்குகிறது . ஜனாதிபதிகள் வழக்கமாக ஒவ்வொரு பதவிக் காலத்துக்கும் ஒரு முறை வெளியிடும் இத்தகைய உத்திகள், அமெரிக்க அரசாங்கத்தின் சில பகுதிகள் பட்ஜெட்டுகளை எவ்வாறு ஒதுக்குகின்றன மற்றும் கொள்கை முன்னுரிமைகளை அமைக்கின்றன என்பதை வடிவமைக்க உதவும். மூலோபாயத்திற்கான அறிமுகக் குறிப்பில், டிரம்ப் இதை "மனித வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான நாடாகவும், பூமியில் சுதந்திரத்தின் தாயகமாகவும் அமெரிக்கா இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு பாதை" என்று அழைத்தார்.

"ஐரோப்பா அமெரிக்காவிற்கு மூலோபாய ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் இன்றியமையாதது" என்று டிரம்ப் நிர்வாகம் ஒப்புக்கொள்கிறது, ஆனால் கண்டம் குறித்த அதன் கருத்துக்கள் நிர்வாகத்தின் கடந்தகால எதிர்மறை பொது அறிக்கைகளுடன் ஒத்துப்போகின்றன. துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் பிப்ரவரியில் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் இடம்பெயர்வு மற்றும் பேச்சு சுதந்திரம் தொடர்பாக ஐரோப்பாவைத் தாக்கி பிரதான அரசியல் வர்க்கத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

இந்த ஆவணம் இனவெறி " சிறந்த மாற்று " சதி கோட்பாட்டையும் எதிரொலிக்கிறது, இது ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து, குறிப்பாக முஸ்லிம் நாடுகளிலிருந்து குடியேறுபவர்களுக்கு தங்கள் நாடுகளின் கதவுகளைத் திறப்பதன் மூலம் வெள்ளை ஐரோப்பியர்களின் வாக்குரிமையைக் குறைக்க உயரடுக்குகள் சதி செய்கின்றன என்று வலியுறுத்துகிறது. "நீண்ட காலத்திற்கு, சில தசாப்தங்களுக்குள், சில நேட்டோ உறுப்பினர்கள் பெரும்பான்மை ஐரோப்பியரல்லாதவர்களாக மாறுவார்கள் என்பது நம்பத்தகுந்ததாக இருக்கிறது" என்று ஆவணம் கூறுகிறது.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைமை செய்தித் தொடர்பாளர் பவுலா பின்ஹோ செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த அறிக்கை வெளியிடப்படுவது" குறித்து தனக்குத் தெரியும், ஆனால் "அதைப் பரிசீலிக்க நேரம் இல்லை" என்றார். ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகி "நிச்சயமாக" தனது நிலைப்பாட்டை உரிய நேரத்தில் அறிவிப்பார் என்றும் கூறினார்.

ஐரோப்பாவின் "நாகரிக அழிப்பு" பற்றி விவாதிப்பதிலிருந்து ஒரு சுருக்கமான விலகலில், உக்ரைன் போர் குறிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்யாவுடனான "மூலோபாய ஸ்திரத்தன்மையை" மீட்டெடுப்பது உட்பட, கிரெம்ளினின் போர் நிறுத்தப்படுவது அமெரிக்காவின் நலனுக்காக என்று அமெரிக்கா வலியுறுத்துகிறது.

இருப்பினும், ஐரோப்பாவில் "நிலையற்ற சிறுபான்மை அரசாங்கங்கள்" "போருக்கான யதார்த்தமற்ற எதிர்பார்ப்புகளைக்" கொண்டுள்ளன என்று அமெரிக்க நிர்வாகம் கூறுகிறது, அதே நேரத்தில் அவை அமைதி செயல்முறையைத் தடுக்கின்றன என்றும் சுட்டிக்காட்டுகிறது. மாஸ்கோவுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது வாஷிங்டன் உக்ரைனை "காட்டிக் கொடுக்கக்கூடும்" என்று ஐரோப்பியத் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் எச்சரித்த நிலையில் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.

வேட்பாளர் நாடுகளுக்கான நேட்டோவின் திறந்த கதவு கொள்கைக்கு முரணாக, அமெரிக்க நிர்வாகம் "நேட்டோ ஒரு நிரந்தரமாக விரிவடையும் கூட்டணி என்ற கருத்தை முடிவுக்குக் கொண்டு வந்து யதார்த்தத்தைத் தடுப்பதை" முன்னுரிமைப்படுத்த விரும்புகிறது. டிரம்ப் உக்ரைன் நேட்டோவில் சேர விரும்பவில்லை என்பது இரகசியமல்ல என்றாலும், அவரது முன்னோடி ஜோ பைடனின் கீழும் வாஷிங்டனின் நிலைப்பாடு அதுதான். 

இந்த அறிக்கைக்கு செப் ஸ்டார்செவிக் பங்களித்தார்.  

இந்தக் கட்டுரை புதுப்பிக்கப்பட்டது.

டொனால்ட் டிரம்பிற்கு 'FIFA சமாதான விருது' வழங்கப்பட்டது

1 month ago

டொனால்ட் டிரம்பிற்கு 'FIFA சமாதான விருது' வழங்கப்பட்டது

செய்திகள்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு 'FIFA சமாதான விருது' வழங்கப்பட்டுள்ளது. 

2026 FIFA உலகக் கிண்ணப் போட்டிக்கான குழுக்களைத் தெரிவு செய்யும் குலுக்கல் (draw)அமெரிக்காவின் வொஷிங்டனில் (இலங்கை நேரப்படி இன்று அதிகாலை) நடைபெற்ற போதே, இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது. 

FIFA தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவினால் இவ்வருடம் முதன்முறையாக இவ்விருது அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அதற்கமைய அவ்விருதின் முதலாவது வெற்றியாளராக டிரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

'சமாதானத்திற்காக விசேட மற்றும் அசாதாரண நடவடிக்கைகளை மேற்கொண்ட' மற்றும் 'உலகெங்கிலும் உள்ள மக்களை ஒன்றிணைத்த' ஒருவருக்கே இவ்விருது வழங்கப்படுகின்றது.

https://adaderanatamil.lk/news/cmits1pzx02fqo29n869yjsgx

பிரித்தானியாவை விட்டு செல்லும் வெளிநாட்டினர்: முதலிடத்தில் இந்தியர்கள்; 2ம் இடத்தில் சீனர்கள்!

1 month ago

download-5.jpg?resize=325%2C155&ssl=1

பிரித்தானியாவை விட்டு செல்லும் வெளிநாட்டினர்: முதலிடத்தில் இந்தியர்கள்; 2ம் இடத்தில் சீனர்கள்!

பிரித்தானியாவில் தங்கியிருந்த வெளிநாட்டினர், வரலாறு காணாத வகையில் வெளியேறி வருகின்றனர். அதில், இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர்.

வேலைக்காகவும், கல்விக்காகவும் வெளிநாட்டினர் அதிகம் செல்லும் நாடுகளில் பிரித்தானியா முன்னணியில் உள்ளது. அதுவே அந்நாட்டிற்கு பிரச்னையாகவும் மாறியுள்ளது.

39 சதவீதம் வெளிநாட்டினர் எண்ணிக்கை அதிகரித்ததால், உள்ளூர் மக்கள் சிரமப்படுவதாக பிரித்தானிய அரசு கூறியது.

இதனால், முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் அரசு கடுமையான விசா விதிகளை அறிமுகப்படுத்தியது. இதனால், பிரித்தானியாவின் நிகரக் குடியேற்றம் வெகுவாகக் குறைந்தது.

பிரித்தானியாவுக்கு வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை மற்றும் அங்கிருந்து கிளம்பும் வெளிநாட்டினரின் எண்ணிக்கைக்கு இடையே இருக்கும் வித்தியாசமே நிகர குடியேற்றம் எனப்படுகிறது.

இது தான் இப்போது சரிந்து வருகிறது.

இங்கிலாந்து தேசிய புள்ளிவிபர அலுவலகத்தின் தகவலின்படி, 2023ல், 9.44 லட்சமாக இருந்த நிகர குடியேற்றம், 2025ல், 2.04 லட்சம் -ஆக குறைந்துள்ளது. இரு ஆண்டுகளில் ஏழு லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

மேலும், 2025 ஜூன் வரையிலான காலத்தில், பிரித்தானியாவை விட்டு வெளியேறியவர்களில் இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர்.

மாணவர் விசாக்களில் இருந்த 45,000 பேர், பணி விசாக்களில் இருந்த 22,000 பேர் உட்பட, 75,000 பேர் வெளியேறியுள்ளனர்.

அடுத்தபடியாக, 42,000 சீனர்கள் வெளியேறியுள்ளனர். இதே போல், விசா வழங்குவதும் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் வரை 32 லட்சம் விசாக்கள் வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் 31 லட்சமாக குறைந்துள்ளது. குறிப்பாக, பணி விசாக்கள் 39 சதவீதம் வரை சரிந்துள்ளது.

இதற்கு மத்தியிலும், 2025 ஜூன் வரையிலான காலத்தில், வேலை, படிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக 1.5 லட்சம் பேர் பிரித்தானியா சென்றுள்ளனர்.

வெளிநாட்டினரின் இருப்பு குறைந்தது பிரதமர் கெய்ர் ஸ்டாமர் அரசுக்கு பெரும் நிம்மதியாக அமைந்துள்ளது.

ஆனால், திறன்வாய்ந்த உழைப்பாளர்கள் வெளியேறுவது, பிரித்தானியாவின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

https://athavannews.com/2025/1455387

ஆணுறைகள் மீது கூடுதல் வரி விதித்தது சீனா

1 month ago

S.Renuka   / 2025 டிசெம்பர் 04 , பி.ப. 03:03 - 0     - 58

messenger sharing button

facebook sharing button

linkedin sharing button

email sharing button

மக்கள் தொகையில் உலகிலேயே முதல் இடத்தில் இந்தியா உள்ளது. அடுத்த இடத்தில சீனா உள்ளது. தொடர்ந்து இந்தியாவின் மக்கள் தொகை உயர்ந்து வரும் நிலையில், சீனா மக்கள் தொகை சரிவை சந்தித்து வருகிறது.

1980ஆம் ஆண்டு, ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொள்ளும் கொள்கையை சீனா அறிவித்தவுடன், ஆண் குழந்தை பெற்றுக்கொள்வதில் பெண்கள் ஆர்வம் காட்டினர். 

இதனையடுத்து, ஆண்களுக்கு திருமணத்துக்கு பெண் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது.

சிறு குடும்ப முறைக்கு மக்கள் பழகி விட்டதும், வாழ்க்கை செலவு அதிகரித்ததும், திருமண வயது அதிகரித்ததால், குழந்தை பிறப்பு தள்ளிப்போனதும், குழந்தை பெற்றுக்கொள்ளும் வயது பெண்கள் குறைவாக இருப்பதும் சீனாவின் மக்கள்தொகை சரிவடைய தொடங்கி இருப்பதற்கு முக்கிய காரணங்கள் ஆகும்.

இதனால் ஒரே குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கொள்கையை கடந்த 2016ஆம் ஆண்டு சீனா கைவிட்டது. 

3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளுமாறு வரிச்சலுகைகளையும், ஊக்கத்தொகையையும் கடந்த ஆண்டு அறிவித்தது.

ஆனாலும், சீனாவின் குழந்தை பிறப்பு விகிதம் குறைத்துக்கொண்டு தான் உள்ளது. 

இந்நிலையில், சீனாவில் சரிந்துவரும் மக்கள்தொகையை அதிகரிக்கும் ஒரு பகுதியாக, ஆணுறைகள்,

கருத்தடை மருந்துகளின் பயன்பாடுகளை குறைக்க கூடுதல் வரிகளை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், குழந்தைகள், முதியோர் பராமரிப்பு சேவைகள், திருமணம் தொடர்பான வணிகங்கள் மீதான மதிப்புக் கூட்டு வரிகளையும் சீனா நீக்கியுள்ளது.


Tamilmirror Online || ஆணுறைகள் மீது கூடுதல் வரி விதித்தது சீனா

'சிங்கத்தை தழுவ கனவு' - தடுப்புகளை தாண்டி குதித்த இளைஞருக்கு என்ன நேர்ந்தது?

1 month ago

'சிங்கத்தை தழுவ கனவு' - தடுப்புகளை தாண்டி குதித்த இளைஞருக்கு என்ன நேர்ந்தது?

சிங்கம், இளைஞர், மன நல சிகிச்சை, பிரேசில்

பட மூலாதாரம்,Cortesía/Parque Zoobotânico Arruda Câmara/AFP

கட்டுரை தகவல்

  • ஜாஷுவா செய்சஸ்

  • பிபிசி நியூஸ் பிரேசில்

  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

எச்சரிக்கை: உள்ளடக்கம் சங்கடத்தை ஏற்படுத்தலாம்

பிரேசிலில் சிங்கங்கள் அடைத்து வைக்கப்படும் இடத்திற்குள் நுழைந்த 19 வயதான கெர்சன் டி மெலோ மச்சாடோ என்கிற இளைஞர் பெண் சிங்கம் ஒன்று தாக்கியதில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பிரேசிலின் ஜொவா பெசோவா நகரில் உள்ள அரூடா கமாரா தேசிய பூங்காவில் நடைபெற்றுள்ளது.

பார்வையாளர்கள் பதிவு செய்த காணொளிகளில் அந்த இளைஞர் மரத்தின் உதவியுடன் ஏறி வேலிகளை மற்றும் தடுப்புகளைக் கடந்து குதித்து சிங்கம் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் செல்வதைப் பார்க்க முடிகிறது.

சிறிது தூரத்தில் இருந்த சிங்கம் மெதுவாக அருகே வந்து அந்த இளைஞர் மரத்தில் இருந்து இறங்கி வருவதைப் பார்த்தது. இருவருமே ஒரு இடத்தில் நின்றனர். ஆனால் அந்த இளைஞர் சிங்கத்தின் அருகில் சென்றார் அப்போது தான் சிங்கம் அவரைத் தாக்கியது.

மன நல சவால்கள் கொண்ட கெர்சனின் உடல் திங்கட்கிழமை அன்று அடக்கம் செய்யப்பட்டது. அதில் அவரின் குடும்பத்தினர் அவரை கவனித்துக் கொண்ட சமூக நல பணியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் ஒருவர் 9 ஆண்டுகளாக கெர்சனை பார்த்துக் கொண்ட வெரோனிகா ஆலிவெராவும் ஒருவர்.

அவரைப் பொருத்தவரை கெர்சனின் மரணம் என்பது அரசு, சமூகம் மற்றும் மன நலன் சவால்கள் கொண்ட இளைஞரை பாதுகாக்க தவறிய அமைப்பு ஆகிய அனைவரின் கூட்டுத் தோல்விதான்.

"அந்த வீடியோவில் காட்டப்படுவது மட்டுமல்ல அவன். அவன் உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தை. இந்த ஒட்டுமொத்த அமைப்பும் அவனை கைவிட்டுவிட்டது," எனத் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறும் அவர், அதிகாரிகளின் பதில் என்பது அந்த இளைஞருக்கு நடத்தை சிக்கல்கள் உள்ளது என்பதாகவே இருந்தது என்றார்.

"ஜொவா பெசோவாவில் உள்ள அனைத்து பாதுகாப்பு மையங்களிக்கும் அவர் சென்று வந்தார். இந்த ஒட்டுமொத்த சமயமும் ஒரு அறிக்கை பெற முயற்சித்தோம். ஆனால் ஜூலியானோ மொரெய்ராவில் உள்ள மன நல மருத்துவர் இவரிடம் எந்தச் சிக்கலும் இல்லை, இவரின் பிரச்னை எல்லாம் நடத்தை சார்ந்ததுதான் என்றார். அவருக்கான அறிக்கையை பெறவே முடியவில்லை," என அவரின் சட்டப்பூர்வ பிரதிநிதி தெரிவித்தார்.

சிங்கம், இளைஞர், மன நல சிகிச்சை, பிரேசில்

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,மன நல சவால்கள் கொண்ட கெர்சனின் உடல் திங்கட்கிழமை அன்று அடக்கம் செய்யப்பட்டது.

இளைஞர் பெற்றுவந்த சிகிச்சை

கிளேசியஸ் கப்ரால் டோஸ் ரெய்ஸ் என்கிற மன நல மருத்துவர் 2023-ஆம் ஆண்டு வழங்கிய அறிக்கை ஒன்றை பிபிசி பிரேசில் ஆய்வு செய்தது. அதில் "பொருந்தாத நடத்தை", "மன நிலை மாற்றங்கள்", "நிலையற்றத்தன்மை", மற்றும் "உணரச்சி வேகத்தில் செயல்படும் தன்மை" இருப்பதாகவும் அதற்கு பல்முனை சிகிச்சைகளை பரிந்துரைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அந்த அறிக்கையின்படி, குழந்தைப் பருவத்திலும் இளமைக் காலத்திலும் கெர்சன் மூன்று மன நல மருத்துவர்களைச் சந்தித்துள்ளார். அவை போக சமூக சேவைகள் துறை ஏற்பாடு செய்த தனியார் கலந்தாய்வுகளிலும் கலந்து கொண்டுள்ளார்," என அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த இளைஞர் தொடர்ந்து வெவ்வேறு சேவைக்கு பரிந்துரைக்கப்பட்டு வந்துள்ளார்.

கமின்ஹார் உளவியல் நல மையத்தின் இயக்குநரும் கெர்சனின் பொறுப்பாளாறுமான ஜனைனா டி'எமெரி அவர் சிறுவயது முதலே கண்காணிக்கப்பட்டு வந்ததாக தெரிவித்தார். டிசம்பர் 2024-இல் அந்த மையத்திற்கு வந்த கெர்சன் சிகிச்சை பெறுவதில் சிரமங்களை சந்தித்து வந்துள்ளார். கெர்சன் பல முறை அங்கு வந்து மீண்டும் காணாமல் போனதாகவும் ஜனைனா தெரிவித்தார்.

சிங்கம், இளைஞர், மன நல சிகிச்சை, பிரேசில்

பட மூலாதாரம்,Vídeo/Reprodução

படக்குறிப்பு,கெர்சனின் பொறுப்பாளாரான ஜனைனா டி'எமெரி அவர் சிறுவயது முதலே கண்காணிக்கப்பட்டு வந்ததாக தெரிவித்தார்.

கெர்சனின் மரணத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மேற்பார்வையிட பரைபா சட்ட அலுவலகம் விசாரணை ஒன்றை துவக்கியுள்ளது. அரூடா கமாரா பூங்காவில் "மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள், நிர்வாக நடைமுறைகள், தொழில்நுட்ப மதிப்பீடுகள் மற்றும் ஆய்வுகளைக்" குறிப்பிட்டு சுற்றுச்சூழல் செயலகம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

அதே வேளையில் பூங்கா நிர்வாகம் சிங்கத்தின் நிலை உட்பட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க வேண்டும்.

சிங்கம், இளைஞர், மன நல சிகிச்சை, பிரேசில்

பட மூலாதாரம்,Arquivo Pessoal

படக்குறிப்பு,9 ஆண்டுகளாக அவரைப் பார்த்துக் கொண்ட வெரோனிகா ஆலிவெரா

சிங்கத்தை தழுவ கனவு கண்ட கெர்சன்

கெர்சன் சிங்கத்தை தழுவுவதற்கு கனவு கண்டதாகக் கூறுகிறார் ஆலிவெரா. "சிறு வயது முதலே அவன் அதைப்பற்றி பேசி வந்துள்ளான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூட ஆப்ரிக்கா சென்று சஃபாரி செல்ல ஜொவா பெசோவா விமான நிலையத்தில் உள்ள விமானம் ஒன்றின் லெனடிங் கியரில் ஏற முயற்சித்துள்ளான்." என்றார்.

சிங்கத்தை நெருங்குவதால் ஏற்படும் ஆபத்தை அவன் உணர்ந்து இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

"நீங்கள் அந்த வீடியோவை கவனமாகப் பார்த்தால் அவன் சிங்கத்தை நெருக்கி செல்வதைப் பார்க்க முடியும். எந்த பிரச்னையும் ஏற்படாது என அவன் நினைத்துள்ளான். சிங்கத்துடன் விளையாடுவதற்காக கீழே இறங்கி சென்றுள்ளான்," என்றார்.

கெர்சனுக்கு 10 வயது இருக்கிறபோது சிறுவர் தடுப்பு மையத்திற்கு முதல் முறையாக வந்துள்ளார். நெடுஞ்சாலையில் சுற்றித் திரிந்தவரை காவல்துறையினர் அவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சிங்கம், இளைஞர், மன நல சிகிச்சை, பிரேசில்

பட மூலாதாரம்,Parque Zoobotânico Arruda Câmara/AFP

படக்குறிப்பு,சிங்கம் தற்போது கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

"நாங்கள் சென்று பார்த்தபோது அது அவனின் பாட்டி வீடாக இருந்தது. அவரின் தாய் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். அவரின் தாய், பாட்டி இருவருக்கும் மனச் சிதைவு நோய் இருந்தது. இருவரும் அவனைப் பார்த்து, 'கண்ணா, நீ இங்கே இருக்க முடியாது' என்றனர். அதற்கு அவன், 'இல்லை, நான் உங்களுடன் இருக்க வேண்டும்' எனக் கூறினான் " என்கிறார் ஆலிவெரா.

மனச் சிதைவு நோய் கொண்ட அத்தாய் 5 குழந்தைகளின் பாராமரிப்பையும் இழந்தார். அவர்களின் 4 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டனர். கெர்சன் பராமரிப்பு மையங்களில் வளர்ந்து வந்துள்ளார்.

"நாங்கள் அவனுடன் பேசினோம். அவன் காப்பக்கத்தில் இருக்க விருப்பமில்லை எனத் தெரிவித்தான். அவனுடைய எண்ணத்தில் தாயுடன் இருப்பது தான் சரியாக இருக்கும் என இருந்தது. அவன் தாயுடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளான். ஆனால் அவர் சரியான நிலையில் இருந்ததில்லை, இப்போதும் இல்லை," என்றார் ஆலிவெரா.

'கொள்ளையில் ஈடுபட ஆர்வம்'

கெர்சனுக்கு விலங்குகளுடன் வலுவான பிணைப்பு இருந்ததாகக் கூறுகிறார் ஆலிவெரா.

''குதிரைகளைத் திருடி அதன் மீது சிறுது தூரம் சவாரி சென்று திரும்பியுள்ளான்.காலப்போக்கில் சிறு கொள்ளைகளில் ஈடுபடும் ஆர்வம் அவனிடம் உருவானது. ஆனால் இது திட்டமிடப்பட்டோ அல்லது தீங்கு விளைவிக்கும் நோக்கிலோ இருக்காது. வாகங்களை திருடக் கற்றுக் கொண்ட கெர்சன், அவற்றை காவல் நிலையங்களில் ஒப்படைத்தும் விடுவான்.''

சமூக ஊடகங்களில் அவருக்கு "வாகுவெரின்ஹோ" (சிறிய கவ்பாய்) என்கிற பெயர் இருந்ததாகக் கூறும் ஆலிவெரா, "மக்கள் அவனைப் பற்றி பதிவிட்டு லைக்ஸ் பெற ஆரம்பித்தனர். அவனைக் கெட்ட விஷயங்கள் செய்யத் தூண்டினார். இது மிகவும் சோகமானது. பலரும் அவனின் புகைப்படத்தைப் பயன்படுத்துவதால் அவனுடைய தகவல்களை சமூக ஊடகங்களிலிருந்து நீக்க பலமுறை புகார் அளித்துள்ளோம்," என்றார்.

''சமூக மற்றும் கல்வி அமைப்பில் அவன் பாதுகாப்பாக உணர்ந்தான், அவனுக்கு உணவு கிடைத்தது, யாரும் அவனை தொல்லை செய்யவில்லை. அங்கிருந்து சென்ற பிறகு அவன் திரும்பவில்லை''. என்றார் ஆலிவெரா

முதிர்வயதை அடைந்த பிறகு பாராமரிப்பு பெறும் உரிமையை இழந்தார்.

"சிறைக்குச் செல்வதற்கான வழியை கண்டுபிடிக்கப் போவதாக அவன் கூறினான்" என நினைவு கூறும் ஆலிவேரா. "அங்கு அவனுக்கு உணவு மற்றும் பாதுகாப்பு கிடைக்கும்." எனத் தெரிவித்தார்.

காவல் நிலையம் அருகே உள்ள ஏடிஎம்-ஐ திறக்க முயற்சிப்பது ரோந்து வாகனத்தின் மீது கல்லைத் தூக்கி எறிவது என ஏற்கெனவே ஆறு முறை சிறைக்குச் சென்றுள்ளார் கெர்சன். விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 25-ஆம் தேதி கார்டியன்ஷிப் கவுன்சிலுக்கு சென்று ஆவணங்கள் மற்றும் வேலை உரிமம் பெற கெர்சன் முயற்சித்துள்ளதாகாகக் கூறும் ஆலிவெரா, அவர்கள் அவனுக்கு உதவவில்லை என்றும் தெரிவித்தார்.

அவரின் இறுதிச் சடங்கில் பேசிய பாதிரியார் ஒருவர், "அவன் சிங்கத்தின் கூண்டிற்குள் சென்றான். சமூகம் அவனை அதற்குள் தூக்கி எறிந்தது." எனத் தெரிவித்தார்.

விசாரணை மற்றும் அதிகாரப்பூர்வ நடைமுறைகள் முடிகின்ற வரையில் அரூடா கமாரா பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மூடப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cm28mz4g53po

அமெரிக்க விசா விண்ணப்பதாரர்களுக்கு ட்ரம்ப் அரசு விடுத்த முக்கிய அறிவிப்பு

1 month ago

அமெரிக்க விசா விண்ணப்பதாரர்களுக்கு ட்ரம்ப் அரசு விடுத்த முக்கிய அறிவிப்பு

05 Dec, 2025 | 12:10 PM

image

அமெரிக்காவில் பணியாற்றச் செல்பவர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி மற்றும் எச்-4 விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் சமூக வலைத்தள கணக்குகள் கண்காணிக்கப்படும் என டொனால்ட் ட்ரம்ப் அரசு அறிவித்துள்ளது. 

அதன்படி, அமெரிக்க விசா விண்ணப்பதாரர்கள் தங்களது சமூக வலைத்தள கணக்குகளை மறைத்த நிலையில் வைக்காமல், பொதுவில் அனைவரும் பார்க்கக்கூடியவாறு “பப்ளிக்” ஒப்ஷனை தெரிவுசெய்து, பொதுவில் வைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதைத் தொடர்ந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து நாடு கடத்துவது போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 

அண்மையில் ஆப்கானிஸ்தான், மியன்மார், ஈரான் உள்ளிட்ட 19 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கு நிரந்தர தடை விதித்தார்.

அத்துடன் அமெரிக்க நிறுவனங்கள் பல்வேறு பணிகளுக்காக எடுக்கின்ற வெளிநாட்டவர்களால் அமெரிக்கர்களின் வேலை பறிக்கப்படுவதாகவும் கூறி சமீப காலமாக டொனால்ட் ட்ரம்ப் விசா நடைமுறையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். 

அந்த வகையில், தற்போது அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் சமூக வலைத்தள கணக்குகள் தீவிர கண்காணிக்கப்பட்டே விசா வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார். 

அமெரிக்காவில் பணியாற்றச் செல்வோருக்கு எச்-1பி விசா வழங்கப்படுகிறது. 

எச்-1பி விசா விண்ணப்பதாரர்கள், அவர்கள் அழைத்துச் செல்லும் கணவன் அல்லது மனைவி  மற்றும் பிள்ளைகளுக்காக பெறும் எச்.4 விசா விண்ணப்பதாரர்கள் தங்கள் சமூக வலைத்தள கணக்குகளை மறைக்காமல், பொதுவில் வைக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

விண்ணப்பதாரர்களின் சமூக வலைத்தள பதிவுகள் அனைத்தும் எதிர்வரும் 15ஆம் திகதி ஆய்வு செய்யப்படும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது. 

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய விசா விண்ணப்பதாரர்களை அடையாளம் காணவே இந்த சமூக வலைத்தள ஆய்வு முறையை பயன்படுத்துவதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/232504

சுனாமியின் முழு வடிவத்தை முதல் முதலாக படமெடுத்த செயற்கைக்கோள்! - நாசா

1 month ago

04 Dec, 2025 | 05:17 PM

image

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் கடந்த ஜூலை மாதம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதோடு பசுபிக் பெருங்கடலில் சுனாமி அலை எழுந்ததாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அப்போது எழுந்த சுனாமியின் முழு அலை தோற்றத்தையும், செயற்கைக்கோளைக் கொண்டு தெளிவாக எடுத்த காட்சிப் பதிவை தற்போது நாசா வெளியிட்டுள்ளது.

SWOT (Surface Water and Ocean Topography) என்ற செயற்கைக்கோளே இந்த சுனாமி புகைப்படத்தை எடுத்திருக்கிறது. நாசா மற்றும் பிரெஞ்சு ஏஜென்சியின் கூட்டுமுயற்சியில் உருவான இந்த செயற்கைக் கோள் ஆறுகள், ஏரிகளை கண்காணிக்க உருவாக்கப்பட்டது.

கம்சட்கா தீபகற்ப பகுதியில் 8.8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதோடு, பசுபிக் கடலிலும் இலேசான சுனாமி கிளம்பியபோது, SWOT செயற்கைக்கோள் தற்செயலாக சுனாமி எழுந்த கடற்பரப்புக்கு மேல் கடந்து சென்றது. அப்போது சுனாமியின் முழு அலை வடிவத்தையும் மிகத் தெளிவாக படமெடுத்தது. 

சுனாமியை மிக உயர்ந்த தெளிவாக படமெடுத்த முதல் செயற்கைக்கோளாக SWOT கருதப்படுகிறது. 

சுனாமி என்பது ஒற்றை அலையாக, சீராக  சிதறாமல் மேலெழும்புவதாக இதுவரை விஞ்ஞானிகள் கூறிவந்த நிலையில், சுனாமி ஆற்றலால் நடுக்கடலில் அலைகள் பிளவுபட்டு, சிதறி, பின்னர் மீண்டும் உருவாகும் என்பதையும் சுனாமியானது சிக்கலான ஆற்றல் வடிவத்தை கொண்ட ஓர் இயற்கைப் பேரனர்த்தம் என்பதையும் இந்த செயற்கைக்கோள் துள்ளியமான படத்தின் ஊடாக காண்பித்துள்ளது. 

kamtsunami_swot_noaa_20250729.jpg

https://www.virakesari.lk/article/232456

ரஷ்யா, டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!

1 month ago

Putin-2.jpg?resize=750%2C375&ssl=1

ரஷ்யா, டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!

உக்ரேனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் இருந்து உக்ரேன் படையினர் வெளியேற வேண்டும், இல்லையெனில் மொஸ்கோ குறித்த பகுதியை கைப்பற்றும் என்று என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மீண்டும் எச்சரித்துள்ளார்.

அதேநேரம், உக்ரேனில் போரை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது என்பது குறித்த எந்தவொரு சமரசத்தையும் அவர் நிராகரித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அவர், குறித்த பகுதிகளை வலுக்கட்டாயமாக விடுவிப்போம், இல்லையெனில் உக்ரேனிய படைகள் இந்தப் பகுதிகளை விட்டு வெளியேறும் – என்றார்.

டான்பாஸின் 85% பகுதியை மொஸ்கோ கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது.

அதேநேரம், உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, டான்பாஸ் பகுதியை விட்டுக்கொடுக்கும் திட்டத்தை நிராகரித்துள்ளார்.

அமெரிக்க அமைதித் திட்டம் குறித்து விவாதிக்கும் தனது பேச்சுவார்த்தையாளர்கள், செவ்வாய்க்கிழமை (02) மொஸ்கோவில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் ரஷ்யாவின் தலைவர் “போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவார்” என்று நம்புவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதை அடுத்து புட்டினின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.

ரஷ்யா 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியது.

மேலும் தற்போது மொஸ்கோ உக்ரேன் பிரதேசத்தில் சுமார் 20% கட்டுப்பாட்டினை கொண்டுள்ளது.

மோதல்களினால் கடுமையான உயிரழப்புகள் ஏற்பட்டுள்ள போதிலும், அண்மைய வாரங்களில், தென்கிழக்கு உக்ரேனில் ரஷ்ய படையினர் மெதுவாக முன்னேறி வருகின்றன.

https://athavannews.com/2025/1455232

கோலன் மலைப்பகுதி ஆக்கிரமிப்பு: இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு

1 month ago

கோலன் மலைப்பகுதி ஆக்கிரமிப்பு: இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு

Published By: Vishnu

03 Dec, 2025 | 05:51 PM

image

சிரியாவின் கோலன் மலைப்பகுதி மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பை சட்டவிரோதமானது எனக் கூறி, அந்தப் பகுதியை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.

எகிப்து முன்வைத்த இந்த தீர்மானத்துக்கு இந்தியா உட்பட 123 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

இதற்கெதிராக 7 நாடுகள் மட்டுமே வாக்குகளை பதிவு செய்துள்ளன. மேலும் 43 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகி புறக்கணித்தன.

கோலன் பிராந்தியத்தின் சட்ட அந்தஸ்து மற்றும் நிலைமை குறித்து சர்வதேச மட்டத்தில் மீண்டும் கவனம் திரும்பிய நிலையில், இந்த தீர்மானம் குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது.

https://www.virakesari.lk/article/232362

Checked
Fri, 01/09/2026 - 11:53
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe