உலக நடப்பு

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் மருத்துவரின் 9 பிள்ளைகள் பலி

2 weeks 3 days ago

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் மருத்துவரின் 9 பிள்ளைகள் பலி - குழந்தை மருத்துவராக பல வருடங்களாக மருத்துவசேவையாற்றியவர் தனது அனைத்து சொந்தங்களையும் இழக்க நேரிட்ட தாங்க முடியாத கொடூரம்

Published By: RAJEEBAN

25 MAY, 2025 | 11:00 AM

image

காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட விமானதாக்குதலில் மருத்துவர் ஒருவரின் பத்து பிள்ளைகளில் 9 பிள்ளைகள் கொல்லப்பட்டனர்.

வைத்தியர் அலா அல் நஜார் என்பவரின் வீட்டை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் அவரது கணவரும் பிள்ளையொன்றும் காயமடைந்துள்ளனர் என நாசெர் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

gaza_doctors_child1.jpg

மருத்துவரின் உயிர்பிழைத்த 11 வயது மகனிற்கு சத்திரசிகிச்சையை மேற்கொண்ட பிரிட்டிஸ் மருத்துவர் கிரேஸ் குரூம் குழந்தை மருத்துவராக குழந்தைகள் சிறுவர்களிற்கு பல வருடங்களாக மருத்துவசேவையாற்றிய தாயார் ஒருவர் தனது அனைத்து சொந்தங்களையும் இழக்க நேரிட்டது தாங்க முடியாத கொடுரம் என பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

வைத்தியரின் கணவர் கடும்காயங்களிற்குள்ளாகியுள்ளார், தலையை குண்டுசிதறல்கள் தாக்கியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தந்தையும் மருத்துவர் நான் அவரிடம் கேட்டதற்கு அவர் தனக்கு அரசியல் இராணுவ தொடர்புகள் இல்லை, சமூக ஊடகங்களில் நான் பிரபலமாகயில்லை என தெரிவித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியர் அலால அல் நஜாரின் குடும்பத்தினை பொறுத்தவரை இது நினைத்து பார்க்க முடியாத நிலைமை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

gaza_doctors_child2.jpg

ஹமாசின் மருத்துவ பிரிவினரால் வெளியிடப்பட்ட பிபிசியினால் உறுதி செய்யப்பட்ட வீடியோக்களில் ஹான்யூனிசின் இடிபாடுகளிற்கு இடையிலிருந்து சிறிய எரியுண்ட உடல்கள் மீட்கப்படுவதை காண்பித்துள்ளன.

வைத்தியரின் கணவர் தனது மனைவியை மருத்துவமனையில்விட்டுவிட்டு வீட்டிற்கு வந்த ஒரிருநிமிடங்களில் அந்த வீடு தாக்குதலிற்குள்ளானது என ஹமாசின் சுகாதார அமைச்சின் இயக்குநர் வைத்தியர் முனீர் அல்போர்ஸ் தெரிவித்துள்ளார். மூத்த மகனிற்கு 12 வயது என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/215619

சோவியத் வலையில் விழுந்த சிஐஏ உளவாளி அமெரிக்காவையே கதிகலங்கச் செய்தது எப்படி?

2 weeks 4 days ago

சிஐஏ, ரஷ்யா, அமெரிக்கா, கேஜிபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஆல்ட்ரிச் அமெஸ்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், மைல்ஸ் பர்க்

  • பதவி,

  • 25 மே 2025, 02:43 GMT

சோவியத் ஒன்றியத்துக்கு அமெரிக்காவின் உளவுத் தகவல்களை விற்று 100-க்கும் மேற்பட்ட ரகசிய திட்டங்களை முறியடிக்க உதவி 10 மேற்கு உளவாளிகளின் இறப்புக்கும் காரணமாக இருந்த குற்றத்திற்காக ஆல்ட்ரிச் சிறையில் உள்ளார்.

1994-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த வருடம் பிப்ரவரியில் அமெஸால் துரோகம் இழைக்கப்பட்ட ஒரு உளவாளியிடம் பிபிசி பேசியது.

1985-ம் ஆண்டு அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவுக்கு வேலை பார்த்து வந்த சோவியத் ஏஜெண்ட்டுகள் ஒவ்வொருவராக காணாமல் போயினர். இந்த மேற்கத்திய உளவாளிகள் எல்லாம் சோவியத் உளவு அமைப்பான கேஜிபியால் பிடிக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டனர்.

ஒலெக் கோர்டிவ்ஸ்கி, அப்படிப்பட்ட ஒரு டபுள் ஏஜெண்ட் (ஒரு நாட்டின் உளவுத்துறையில் இருந்துகொண்டு வேறொரு நாட்டிற்கு வேலை பார்ப்பவர்கள்). லண்டனில் கேஜிபி நிலைய தலைவராக இருந்து கொண்டு பிரிட்டனின் உளவு அமைப்பான எம்.ஐ6-ற்கு பல வருடங்களாக ரகசியமாக வேலை பார்த்து வந்தார். ஆனால், ஒரு நாள் மாஸ்கோவில் மருந்தளிக்கப்பட்டு, ஐந்து மணி நேர விசாரணைக்குப் பிறகு கிட்டத்தட்ட கொலை செய்யப்படும் நிலையில் இருந்தார். எம்.ஐ6 அவரை காரின் பின்பகுதியில் வைத்து சோவியத் ஒன்றியத்துக்கு வெளியே அழைத்து வந்ததால் நூலிழையில் உயிர் தப்பினார்.

அதன்பின்னர் தன்னைக் காட்டிக் கொடுத்தது யார் எனக் கண்டறிய கோர்டிவ்ஸ்கி முயற்சித்தார். "நான் ஒன்பது வருடங்களாக என்னைக் காட்டிக் கொடுத்தது யார் என கணித்து வந்தேன். ஆனால் எனக்கு பதில் கிடைக்கவில்லை" என 1994-ஆம் ஆண்டு 28 பிப்ரவரி-ஆம் தேதி பிபிசியின் டாம் மேன்கோல்ட்டிடம் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். அதற்கான பதில் இரண்டு மாதங்களில் கோர்டிவ்ஸ்கிக்கு கிடைத்தது.

"சிஐஏ மற்றும் இதர உளவு அமைப்புகளில் எனக்குத் தெரிந்த அனைத்து உளவாளிகளையும் காட்டிக் கொடுத்தேன்" என அமெரிக்க நீதிமன்றத்தில் சிஐஏ அதிகாரி ஆல்ட்ரிச் அமெஸ் ஒப்புக்கொண்டபோது கோர்டிவ்ஸ்கிக்கு தெரியவந்தது.

சிஐஏ, ரஷ்யா, அமெரிக்கா, கேஜிபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆல்ட்ரிச் அமெஸ்

1994-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி மேற்கு நாடுகளுக்கு உளவு பார்த்த 30-க்கும் மேற்பட்ட உளவாளிகளைக் காட்டிக் கொடுத்து 100-க்கும் மேற்பட்ட ரகசிய ஆபரேஷன்களை சமரசம் செய்துவிட்டதாக அமெஸ் ஒப்புக்கொண்டார்.

கேஜிபியால் கொலோகொல் என அறியப்பட்ட அமெஸின் துரோகம், சோவியத் ராணுவ உளவுத்துறையின் மூத்த அதிகாரியும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்குலக நாடுகளுக்கு தகவல்களை வழங்கி வந்தவருமான ஜெனரல் டிமிட்ரி பாலியாகோவ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட சிஐஏ உளவாளிகளின் இறப்புக்கு காரணமானது.

அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய கேஜிபியின் உளவாளியான அமெஸ் தண்டிக்கப்பட்டு அவருக்கு பரோல் இல்லாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

"1960-களில் பிரிட்டன் உளவாளியான கிம் ஃபில்பி, சோவியத் ஏஜெண்டாக வேலை பார்த்தது அம்பலமான போது பிரிட்டன் அரசு அதிர்ந்து போனதைப் போலவே அமெஸ் ஏற்படுத்திய பாதிப்பின் வீரியத்தால் அமெரிக்க அரசு அதிர்ந்து நின்றது" என 1994-ல் அளித்த பேட்டியில் தெரிவித்தார் மேன்கோல்ட்.

சோவியத்துக்கு எதிரான சிஐஏவின் உளவு பிரிவுக்கு தலைமை தாங்கியதால்தான் அமெஸால் இந்த அளவு பாதிப்புகளை ஏற்படுத்த முடிந்தது. இது சோவியத்துக்கு எதிரான அமெரிக்காவின் ரகசிய ஆபரேஷன்கள் மற்றும் அதன் உளவாளிகள் அடையாளம் காண்பதற்கு உதவிய தகவல்களை தடையின்றி அணுக அனுமதித்தது.

அமெஸின் பதவி இதர மேற்கத்திய உளவு அமைப்புகளின் கூட்டங்களிலும் கலந்து கொள்ள அவரை அனுமதித்தது. இவ்வாறு தான் பிரிட்டன் உளவு அமைப்புகளான எம்.ஐ6 மற்றும் எம்.ஐ5-க்கு தகவல்களை வழங்கி வந்த கேஜிபி அதிகாரியான கோர்டிவ்ஸ்கி இவருடன் தொடர்பில் வந்தார். இந்த கூட்டங்கள் தான் "கேஜிபி உளவாளியே, கேஜிபி அதிகாரியிடம் தகவல் வழங்கும் விநோதமான சூழ்நிலையை உருவாக்கியது" என்றார் மேன்கோல்ட்.

"அமெரிக்கர்கள் விளக்கம் அளிப்பதில் மிகவும் தீவிரமாகவும் நன்றாகவும் செயல்பட்டனர்" என்கிறார் கோர்டிவ்ஸ்கி. மேலும் அவர், "நான் மிக ஆர்வமுடன் இருந்தேன். எனக்கு அமெரிக்கர்களைப் பிடித்துப் போனது. என் அறிவை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். ஆனால் அமெஸ் அங்கு இருந்தார் என்பதை உணர்கிறேன். என் புதிய தகவல்கள், புதிய பதில்கள் அன அனைத்தையுமே அவர் கேஜிபியிடம் கொடுத்திருப்பார்" என்றார்.

குடிப் பழக்கம் மற்றும் விவாகரத்து

சிஐஏ, ரஷ்யா, அமெரிக்கா, கேஜிபி

பட மூலாதாரம்,ALAMY

படக்குறிப்பு,ஆல்ட்ரிச் அமெஸ்

அமெஸ் மிக இளம் வயதிலே உளவு உலகிற்கு அறிமுகமானார். அவரின் தந்தை சிஐஏ ஆய்வாளராக இருந்த நிலையில் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திய தன்னுடைய மகனுக்கு அங்கேயே வேலை வாங்கிக் கொடுத்தார்.

ஆனால் பிற்காலத்தில் உளவு அமைப்பிற்கு துரோகம் இழைக்க வேண்டும் என்கிற அமெஸின் முடிவு அவரின் சித்தாந்த சறுக்கல்களை விடவும் பணத்தேவையைச் சார்ந்தே இருந்தது.

தொடக்கத்தில் உளவு அதிகாரியாக நன்றாக வேலை செய்து வந்தார் அமெஸ். அவரின் மனைவியும் சக சிஏஐ ஏஜெண்டுமான நான்சி செகெபார்த் உடன் 1960களின் இறுதியில் துருக்கியில் முதலில் பணியமர்த்தப்பட்டார். அங்கு வெளிநாட்டு உளவாளிகளை வேலைக்குச் சேர்ப்பது தான் அவரின் பணியாக இருந்தது. ஆனால் அமெஸ் களப்பணிக்கு ஏற்றவர் அல்ல என நினைத்த அவரின் மேலதிகாரிகள் அவரை சிஐஏ தலைமையிடத்திற்கு அழைத்துக் கொண்டனர். அமெரிக்கா திரும்பிய பிறகு ரஷ்ய மொழி கற்றுக்கொண்டார். அவருக்கு ரஷ்ய அதிகாரிகளுக்கு எதிரான ஆபரேஷன்களைத் திட்டமிடும் பணி வழங்கப்பட்டது.

குடிப்பழக்கத்தின் காரணமாக அமெஸ் தந்தையின் சிஐஏ பயணம் பாதியிலேயே முடிவுக்கு வந்தது. அதே போல அமெஸின் குடிப்பழக்கம் அவரின் வளர்ச்சியை தடம்புரளச் செய்தது.

1972-ல் அவர் குடிபோதையில் மற்றொரு பெண் சிஐஏ ஊழியருடன் சமரசமான சூழ்நிலையில் இன்னொரு ஏஜெண்டால் கண்டறியப்பட்டார். வேலையிலும் கவனக் குறைவான அணுகுமுறை அவருக்கு உதவவில்லை. 1976-ல் ஒருமுறை உளவுத் தகவல்கள் அடங்கிய பெட்டியை ரயிலில் தவறவிட்டார்.

சிஐஏ, ரஷ்யா, அமெரிக்கா, கேஜிபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆல்ட்ரிச் அமெஸ்

வேலையில் மீண்டும் சோபிக்கும் முயற்சியில் 1981-ஆம் ஆண்டு மாஸ்கோவில் இரண்டாவது வெளிநாட்டு பணியை ஏற்றுக் கொண்டார். அவரின் மனைவி நியூயார்க்கிலே இருந்தார். ஆனால் அவரின் நடத்தை மற்றும் நீடித்த அதீத குடிப்பழக்கத்தால் ஒரு தேர்ந்த சிஐஏ அதிகாரி எனப் பெயர் பெற தவறினார்.

1981-ல் மாஸ்கோவில் ஒரு விபத்தில் சிக்கினார். எந்த அளவிற்கு போதையில் இருந்தார் என்றால் காவல்துறையின் கேள்விக்கு பதிலளிக்கவோ, அவருக்கு உதவ வந்த அமெரிக்கா தூதரக அதிகாரியையோ கூட அவரால் அடையாளம் காணவோ, முடியாத அளவுக்கு போதையில் இருந்தார்.

அதன் பிறகு, தூதரகத்தில் ஒரு கியூப அதிகாரியுடனான வாக்குவாதத்தைத் தொடர்ந்து அமெரிக்கா திரும்பிய பிறகு அவரின் குடிப்பழக்கத்தை மதிப்பிட அவரின் மேலதிகாரிகள் முடிவு செய்தனர்.

அமெஸ் தொடர்ந்து திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளில் ஈடுபட்டு வந்தார். அதில் ஒன்று தான் அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. 1982-ம் இறுதியில் அவர் சிஐஏவுக்காக வேலை பார்த்த கொலம்பியரான மரியா டெல் ரொசாரியோ காசாஸ் டுபுய் உறவில் இருந்தார். அந்த உறவு தீவிரமாகவே தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ரொசாரியோவை திருமணம் செய்து அமெரிக்கா அழைத்து வர முடிவு செய்தார்.

சிஐஏவில் பெரிதாக சோபிக்காத நிலையிலும் அவருக்குத் தொடர்ந்து பணிகள் வழங்கப்பட்டன. 1983-ல் சிஐஏ தலைமையிடத்தில் சோவியத் ஆபரேஷன்களை முறியடிப்பதற்கான உளவு பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இது சிஐஏவின் ரகசிய நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் கிடைக்கச் செய்தது.

நான்சியுடனான விவாகரத்து உடன்படிக்கையின்படி தம்பதியினராக அவர்கள் பெற்ற கடனை அடைப்பதோடு நான்சிக்கு ஜீவனாம்ச தொகையை வழங்கவும் ஒப்புக் கொண்டார் அமெஸ்.

இத்துடன் அவரது இரண்டாவது மனைவியின் விலையுயர்ந்த ரசனைகள், ஷாப்பிங் மீதான அவரின் தீரா விருப்பம் மற்றும் கொலம்பியாவுக்கு அவர் மேற்கொண்ட தொலைபேசி அழைப்புகளால் அவரின் பணச் சிக்கல் கட்டுப்பாடின்றி சென்றது. தனது அதிகரித்த கடன்கள் தான் தன் வசம் இருந்த ரகசியங்களை விற்க அவரைத் தூண்டியதாக பின்னாளில் அரிசோனா செனடர் டென்னிஸ் டிகோன்சினியிடம் கூறியுள்ளார். "நான் மிகுதியான பொருளாதார நெருக்கடிகளை உணர்ந்தேன். ஆனால் அதற்காக அளவு கடந்து எதிர்வினையாற்றிவிட்டேன்" என அமெஸ் தெரிவித்திருந்தார்.

நாட்டிற்குச் செய்த துரோகம்

சிஐஏ, ரஷ்யா, அமெரிக்கா, கேஜிபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,"நான் கோட்டை கடந்துவிட்டேன், என்னால் திரும்ப முடியாது" என ஒரு செனட் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

"அது பணத்தைப் பற்றியது. அவரின் துரோகம் பணத்தைத் தாண்டி எதற்காகவும் இல்லை என யாரையும் அவர் நம்ப வைக்க முயற்சித்ததாக நான் நினைக்கவில்லை" என அவரைக் கைது செய்த எஃப்.பி.ஐ அதிகாரியான லெஸ்சி ஜி வைஸர் 2015-ல் பிபிசியின் விட்னெஸ் ஹிஸ்டரியில் தெரிவித்தார்.

1985-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி குடிபோதையில் அமெஸ் வாஷிங்டனில் சோவியத் தூதரகத்திற்குச் சென்றார். உள்ளே சென்றவர் அங்கே வரவேற்பில் இருந்தவரிடம் சில டபுள் ஏஜெண்ட்களின் பெயர் பட்டியலை வழங்கி தான் சிஐஏ அதிகாரி என்பதற்கான ஆவணங்களையும் காண்பித்து 50,000 டாலர் வேண்டும் என்கிற குறிப்பையும் வழங்கினார்.

இது தன் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டு கொண்டு வரும் நிகழ்வு. இது ஒரு முறை மட்டுமே நடக்கும் என நம்பியதாகவும், ஆனால் விரைவில் "நான் கோட்டை கடந்துவிட்டேன், என்னால் திரும்ப முடியாது" என ஒரு செனட் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

அடுத்த ஒன்பது ஆண்டுகளுக்கு கேஜிபிக்கு அமெஸ் பல ரகசிய தகவல்களை வழங்கி வந்தார். சோவியத்தின் விண்வெளி நிலைகளை ஒட்டுக் கேட்கும் தொடர்பு சாதனங்கள் தொடங்கி சோவியத்தின் அணு ஆயுத ஏவுகணைகளை கணக்கிடும் நவீன தொழில்நுட்பம் வரை அனைத்து தகவல்கள் அடங்கிய ஆவணங்களையும் ஒரு பிளாஸ்டிக் பையில் சுற்றி சிஐஏவில் இருந்து அவர் எடுத்துச் சென்றார். அவரின் பணி சோவியத் தூதரக அதிகாரிகளுடனான அதிகாரப்பூர்வ கூட்டங்களை உள்ளடக்கியதால் தன்னைக் கையாள்பவர்களை எந்தச் சந்தேகமும் இல்லாமல் அவரால் நேருக்கு நேர் சந்திக்க முடிந்தது.

அவர் ரகசிய ஆவணங்கள் அடங்கிய பைகளை முன்னரே தீர்மானிக்கப்பட்ட 'டெட் ட்ராப்' என அழைக்கப்படும் ரகசிய இடங்களில் விட்டுவிட்டு செல்வார்.

"அவர் ஒரு இடத்தில் ஆவணங்களை விட்டுச் செல்கிறார் என்றால் அங்குள்ள தபால்பெட்டியில் ஒரு தடத்தை வைத்துவிடுவார். அந்த அடையாளத்தை ரஷ்யர்கள் பார்த்தால் அந்த ட்ராப்பில் ஆவணங்கள் உள்ளன என்பதை தெரிந்து கொள்வார்கள்" என்றார் வைஸர். "பின்னர் ஆவணங்களை எடுத்த ரஷ்யர்கள் அந்தத் தடயத்தை அழித்துவிடுவார்கள். இதனால் ஆவணப் பரிமாற்றம் பாதுகாப்பாக நடைபெற்றது என்பதை அவர் தெரிந்துகொள்வார்"

அமெஸ் கசியவிட்ட ரகசிய உளவுத் தகவல்களால் சோவியத் ஒன்றியத்தில் உள்ள அனைத்து சிஐஏ உளவாளிகளையும் கண்டறிந்து அமெரிக்காவின் ரகசிய ஆபரேஷன்களையும் கேஜிபி முறியடித்துவிடும் சாத்தியம் இருந்தது.

"அமெரிக்காவுக்கு இத்தகைய உயிரிழப்புகளை ஏற்படுத்திய வேறொரு உளவாளியை நான் அறிந்திருக்கவில்லை" என்றார் வைஸர். நிறைய சிஐஏ உளவாளிகள் திடீரென காணாமல் போனது 1986-ல் சிஐஏவுக்குள்ளே உளவாளியைத் தேடும் முயற்சியைத் தூண்டிவிட்டது. ஆனால் அமெஸ் அதில் சிக்காமல் பல வருடங்கள் தப்பித்துவந்தார்.

அவரின் துரோகத்திற்கு நன்றாக சம்பாதித்து வந்தார் அமெஸ். சோவியத் ஒன்றியத்திடமிருந்து மொத்தமாக 2.5 மில்லியன் டாலர்கள் பெற்றார். தனது புதிய செல்வத்தை மறைக்க அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. வருடத்திற்கு 70,000 டாலருக்கு மேல் சம்பளம் பெறாத நிலையில் 540,000 டாலர் மதிப்புள்ள வீட்டை பணம் செலுத்தி வாங்கினார். வீட்டை மேம்படுத்த ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவு செய்தார். மேலும் ஜாகுவார் கார் ஒன்றையும் வாங்கினார். அவரின் ஆடம்பர வாழ்க்கை முறை தான் அவரை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து, 1994-ல் வைஸர் தலைமையிலான எஃப்.பி.ஐ குழுவால் கைது செய்யப்படுவதற்கும் வித்திட்டது.

சிஐஏ, ரஷ்யா, அமெரிக்கா, கேஜிபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆல்ட்ரிச் அமெஸ் கைது

எஃப்.பி.ஐ.யால் கைது செய்யப்பட்ட பிறகு அமெஸ் அதிகாரிகளுடன் விசாரணைக்கு ஒத்துழைத்தார். சோவியத் அதிகாரிகளுடனான சந்திப்பு மற்றும் பணம் பற்றி தெரியும் என ஒப்புக்கொண்ட அவரின் மனைவி ரொசாரியோவிற்கு குறைந்த தண்டனை கிடைக்க வேண்டும் என கோரிக்கைக்கு ஈடாக அவரின் உளவு நடவடிக்கைகளின் ஆழத்தை விவரித்தார்.

ரொசாரியோ ஐந்து ஆண்டுகள் கழித்து விடுவிக்கப்பட்டார். டபுள் ஏஜெண்டாக அம்பலமான சிஐஏ அதிகாரியான அமெஸ் இண்டியானா மாகாணத்தில் உள்ள மத்திய சிறைச்சாலை ஒன்றில் அவரின் தண்டனைக் காலத்தை தொடர்ந்து கழித்து வருகிறார்.

இதுநாள் வரை அமெஸ் தனது செயல்களுக்கோ அதனால் ஏற்பட்ட மரணங்களுக்கோ எந்த விதமான வருத்தமும் வெளிப்படுத்தவில்லை. "அவருக்கு தன்னைப் பற்றி மிக உயரிய எண்ணம் இருந்தது" என அமெஸ் பற்றி குறிப்பிடுகிறார் வைஸர். "அவர் பிடிபட்டதற்காக வருந்துகிறார். உளவாளியாக இருந்ததற்கு வருந்தவில்லை" என்றார் வைஸர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx2j7dy8l89o

ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் மீது 50 சதவீதம் கூடுதல் வரி!

2 weeks 4 days ago

Column-Will-Donald-Trump-Go-to-Prison-fo

ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் மீது 50 சதவீதம் கூடுதல் வரி!

எதிர்வரும் ஜூன் 01ஆம் திகதி முதல் ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் மீது 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

தனது சமூக ஊடக பதவில், அமெரிக்காவிற்கான ஏற்றுமதியை அதிகரிக்கும் ஒரே குறிக்கோளுடன் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகள் எந்தப் பலனையும் அளிக்கவில்லை எனவும் டிரம்ப் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, டிரம்பின் 50 சதவீத வரி அச்சுறுத்தலுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பதிலலிக்காத நிலையில்
ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிற்கு 500 பில்லியன் யூரோ மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1433062

ஐரோப்பாவில் முதன்முறையாக ஓய்வூதிய வயதை 70 ஆக உயர்த்தியது டென்மார்க்

2 weeks 4 days ago

Published By: DIGITAL DESK 2

24 MAY, 2025 | 09:01 PM

image

டென்மார்க் அரசு, தனது நாட்டில் ஓய்வூதிய வயதை 70 ஆக உயர்த்தும் புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் டென்மார்க், ஐரோப்பாவில் ஓய்வூதிய வயதை 70-க்கு உயர்த்தும் முதல் நாடாக மாறியுள்ளது.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டத்திற்கு 81 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 21 பேர் எதிராகவும் வாக்களித்தனர். புதிய சட்டம் 1970 டிசம்பர் 31க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

தற்போதைய ஓய்வூதிய வயது சுமார் 67 ஆக இருந்தாலும், 1967 ஜனவரி 1 பிறந்தவர்களுக்கு அது 69 வரை உயரக்கூடியதாகும். இந்த உயர்வு, எதிர்கால சந்ததிகளுக்கு நிலையான சமூக நலன்கள் வழங்கும் நோக்கில் அமல்படுத்தப்படுகிறது என ஊதிய அமைச்சர் அண்ணே ஹால்ஸ்போ ஜோர்ஜன்சென் தெரிவித்துள்ளார்.

வயது அடிப்படையிலான மக்கள் விநியோகம்:

டென்மார்க் நாட்டில் 60–69 வயதினரானவர்கள் சுமார் 7.13 லட்சம் பேர் உள்ளனர். அதேசமயம், 70–79 வயதினர்கள் 5.80 லட்சமாக உள்ளனர். தற்போது 80,000க்கும் மேற்பட்டோர் ஓய்வூதிய வயதுக்கு மேல் இருந்தும் பணியாற்றி வருகின்றனர். இது நல்வாழ்வு நிலை, பணியாளர் உரிமைகள் மற்றும் நிதி ஊக்குவிப்புகள் காரணமாக ஏற்பட்டுள்ளது என்று F&P அமைப்பு தெரிவித்துள்ளது.

F&P இயக்குநர் ஜான் வி. ஹான்சன், “இந்த உயர்வு சிலருக்கு சிரமமாக இருக்கலாம். ஆனால், மக்கள் நீண்ட காலம் பணியாற்றும் போக்கே அதிகமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய ஓய்வூதிய வயது நிலவரம்

டென்மார்க் ஐரோப்பாவில் முதன்முறையாக ஓய்வூதிய வயதை 70-க்கு மேல் உயர்த்தும் நாடாக மாறுகிறது. இதனால், உலகளவில் லிபியாவுடன் இணையான நிலையை பெற்றுக் கொள்கிறது.

பிரான்சில், கடந்த மார்ச் மாதம் 64 வயதிற்கு ஓய்வூதிய வயதை உயர்த்துவதற்கு எதிராக ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் வீதியில் பேரணி செய்தனர்.

செப்டம்பரில், சீன அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றியது, அதில் ஆண்களின் ஓய்வுபெறும் வயது 60 இருந்து 63 ஆக உயர்த்தப்படுகிறது. பெண்களின் தொழில்களுக்கு ஏற்ப 50 மற்றும் 55 ஆக இருந்த ஓய்வுபெறும் வயது, 55 மற்றும் 58 ஆக உயர்த்தப்பட்டது.

இங்கிலாந்தில் 2026 முதல் 2028 வரை ஓய்வூதிய வயது 67 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் 68 ஆக உயர்த்தும் ஆய்வும் நடந்து வருகிறது.

அமெரிக்காவில் ஓய்வு பெறும் வயது, ஐக்கிய இராச்சியத்தின் ஓய்வுவயதுக்கு சமானமாகவே இருக்கிறது. இருப்பினும், சில சமூக பாதுகாப்பு நலன்கள் 62வது வயதிலிருந்தே கிடைக்கத் தொடங்குகின்றன.

உலகம் முழுவதும் வாழ்நாள் நீடித்தும், பொருளாதார சவால்களும் ஓய்வூதிய வயதை உயர்த்தும் ஒரு கட்டாய நிலையை உருவாக்கி வருகின்றன. டென்மார்க் இந்த மாற்றத்தில் முன்னணி நாடாக மாறி, எதிர்கால சந்ததிகளுக்கான நலத்தைக் கண்காணிக்கும் நோக்கில் 70 வயதுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தியுள்ளது. இது ஒரு உலகளாவிய போக்காகவே உருவாகி வருகிறது, மக்கள் நீண்ட காலம் பணியாற்ற வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்துகிறது.

https://www.virakesari.lk/article/215582

ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்காவிட்டால் 25% வரி விதிக்கப்படும் ! ட்ரம்ப் எச்சரிக்கை!

2 weeks 5 days ago

New-Project-2025-05-24T111905.728.jpg?re

ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்காவிட்டால் 25% வரி விதிக்கப்படும் ! ட்ரம்ப் எச்சரிக்கை!

ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்காவில்லை என்றால், இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்(Iphones) உற்பத்தியை இந்தியாவில் அதிகளவில் உற்பத்தி செய்து வருகின்ற நிலையில் இந்தியாவில் ஐபோன்கள் தயாரிக்கப்படுவதை டொனால்ட் ட்ரம்ப் விரும்பவில்லை.

இந்நிலையில் ஐபோன் தயாரிப்பு குறித்து பேசியிருக்கும் ட்ரம்ப், “அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்றும் தான் நீண்ட காலமாக ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக்கிடம் (TIM COOK ) தெரிவித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐபோன்கள் இந்தியாவிலோ அல்லது வேறு எங்குமோ தயாரிக்கப்படக் கூடாது எனவும் இது நடக்கவில்லை என்றால், குறைந்தபட்சம் 25% கட்டணத்தை ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவுக்கு செலுத்த வேண்டும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வரும் அனைத்து இறக்குமதிகளுக்கும் 50% வரி விதிக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

https://athavannews.com/2025/1433051

ஜெர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் 12பேர் படுகாயம்!

2 weeks 5 days ago

New-Project-2025-05-24T085306.883.jpg?re

ஜெர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் 12பேர் படுகாயம்!

ஜெர்மனியில் ஹம்பர்க் ரயில் நிலையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் அந்நாட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியில் ஹம்பர்க் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்துக்கொண்டு இருந்தவர்கள் மீது திடீரென மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் 12 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் இவர்களில் மூன்று பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கத்தியால் தாக்கிய நபரை அங்கிருந்த பொலிஸார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளதுடன்
கத்தி குத்து தாக்குதல் நடத்தியவரின் நோக்கம் குறித்தும் அவரது பின்னணி குறித்தும் விசாரணை நடத்தி வருவதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2025/1433018

சிரியாவில் தூக்கிலிடப்பட்ட மொசாட் உளவாளியின் 2500 உடைமைகளை ரகசியமாக மீட்ட இஸ்ரேல்

2 weeks 5 days ago

இஸ்ரேல், மொசாட், சிரியா, உளவாளி, எலி கோஹன்

பட மூலாதாரம்,BBC/PUNEET KUMAR

படக்குறிப்பு, எலி கோஹன்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், பரத் சர்மா

  • பதவி, பிபிசி செய்தியாளர்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

இஸ்ரேலின் புகழ்பெற்ற உளவாளி எலி கோஹன் மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.

இஸ்ரேலிய அரசாங்கம், அதன் உளவுத்துறை அமைப்பான மொசாட், ஒரு நட்பு நாட்டின் உளவுத்துறை முகமையுடன் இணைந்து ஒரு ரகசிய மற்றும் சிக்கலான நடவடிக்கையை (Covert operation) மேற்கொண்டதாகக் கூறுகிறது.

இந்த நடவடிக்கையின் மூலம், எலி கோஹன் தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணங்களை சிரியாவிலிருந்து இஸ்ரேலுக்குக் கொண்டு வர முடிந்தது.

இஸ்ரேலின் கூற்றுப்படி இந்த ரகசிய நடவடிக்கையில், எலி கோஹனின் புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட உடைமைகள் உள்பட சுமார் 2500 ஆவணங்கள் சிரியாவிலிருந்து இஸ்ரேலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த ஆவணங்கள் அனைத்தும் இதுவரை சிரியா பாதுகாப்புப் படையினரிடம் இருந்ததாகவும், அவர்கள் அவற்றைத் தனியாக வைத்திருந்ததாகவும் மொசாட் கூறுகிறது.

மே 18, 1965 அன்று சிரியாவில் பொதுமக்கள் முன்னிலையில் எலி கோஹன் தூக்கிலிடப்பட்டார். கோஹனின் முழுப் பெயர் எலியாஹு பென் ஷால் கோஹன்.

அவர் இஸ்ரேலின் மிகவும் துணிச்சலான உளவாளி என்றும் அழைக்கப்படுகிறார். சிரியாவில் எதிரிகளிடையே நான்கு ஆண்டுகள் வாழ்ந்த எலி கோஹனால், அந்நாட்டின் அதிகாரத்தின் வட்டத்திற்குள் ஊடுருவி உயர் மட்டத்தை அடையவும் முடிந்தது.

எலி கோஹன் தொடர்புடைய எந்தெந்த பொருட்கள் கிடைத்துள்ளன?

இஸ்ரேல், மொசாட், சிரியா, உளவாளி, எலி கோஹன்

பட மூலாதாரம்,X/PRIME MINISTER OF ISRAEL

படக்குறிப்பு,எலி கோஹனின் உடைமைகளை, கோஹனின் மனைவி நதியா கோஹனுக்குக் காட்டுகிறார் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு

இஸ்ரேலிய பிரதமரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் காணொளியில், எலி கோஹனின் உடைமைகளை, கோஹனின் மனைவி நதியா கோஹனுக்குக் காட்டுகிறார் பெஞ்சமின் நெதன்யாகு.

இதில் எலி கோஹனின் கடைசி உயில் என குறிப்பிடப்படும் ஆவணம், மரண தண்டனைக்கு சற்று முன்பு அவரால் எழுதப்பட்டது.

இந்த ரகசிய நடவடிக்கையின் மூலம் கோஹனின் விசாரணை கோப்புகளிலிருந்து ஆடியோ பதிவுகள் மற்றும் பிற பொருட்களும் மீட்கப்பட்டதாக மொசாட் கூறுகிறது. கோஹனுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த கோப்புகளும் உள்ளன.

இது தவிர, சிரியாவில் அவரது பணியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் (இதற்கு முன்பு பார்க்கப்படாதவை) கிடைத்துள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் கோஹன் தனது குடும்பத்தினருக்கு எழுதிய கடிதங்கள் மற்றும் அவர் கைது செய்யப்பட்ட பின்னர் அவரது இல்லத்தில் இருந்து மீட்கப்பட்ட பொருட்களும் அடங்கும்.

மொசாட்டின் கூற்றுப்படி, சிரியாவில் உள்ள கோஹனின் இல்லத்தில் இருந்து மீட்கப்பட்ட குறிப்பேடுகள் மற்றும் டைரிகளில், இஸ்ரேலிய உளவுத்துறை முகமையிடமிருந்து அவர் பெற்ற உளவுத்துறை பணி தொடர்பான வழிமுறைகளும் இருந்தன.

இது தவிர, சிரியாவில் உள்ள கோஹனின் அடுக்குமாடி குடியிருப்பின் சாவிகள், அவரது பாஸ்போர்ட் மற்றும் அவர் பணியின் போது பயன்படுத்திய போலி அடையாள ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆவணங்களில் ஒன்று கோஹனின் சொந்த கையெழுத்தில் உள்ளது, அதை அவர் மரண தண்டனைக்கு சற்று முன்பு எழுதினார்.

எகிப்தில் பிறந்து, சிரியாவில் மரணித்தவர்

இஸ்ரேல், மொசாட், சிரியா, உளவாளி, எலி கோஹன்

பட மூலாதாரம்,ISRAELI GOVERNMENT PRESS OFFICE

படக்குறிப்பு,சிரியாவில் எலி கோஹன்

கோஹனின் மரண தண்டனைக்கான உத்தரவையும் மொசாட் கைப்பற்றியுள்ளது. அதில் டமாஸ்கஸில் உள்ள யூத சமூகத்தின் தலைவரான ரப்பி நிசிம் இண்டிபோவை சந்திக்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உளவு பணியின் போது கோஹன், அர்ஜென்டினா குடிமகன் கமில் என்ற அடையாளத்தில் வாழ்ந்தார்.

அவர் சிரிய அதிபருக்கு மிகவும் நெருக்கமானவராக மாறினார். ஒரு கட்டத்தில் சிரியாவின் துணை பாதுகாப்பு அமைச்சராக மாறுவதற்கான வாய்ப்பு கூட அவரை நெருங்கி வந்தது.

1967 அரபு-இஸ்ரேலியப் போரில் இஸ்ரேலின் வெற்றியில் கோஹன் சேகரித்த உளவுத் தகவல்கள் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.

எலி கோஹன் இஸ்ரேலிலோ, சிரியாவிலோ அல்லது அர்ஜென்டினாவிலோ பிறந்தவரல்ல. அவர் 1924ஆம் ஆண்டு எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியாவில், ஒரு சிரிய-யூத குடும்பத்தில் பிறந்தார்.

அவரது தந்தை 1914ஆம் ஆண்டு சிரியாவின் அலெப்போவிலிருந்து எகிப்தில் குடியேறினார். இஸ்ரேல் நாடு உருவானபோது, எகிப்திலிருந்து பல யூத குடும்பங்கள் வெளியேறத் தொடங்கின.

1949ஆம் ஆண்டில், கோஹனின் பெற்றோரும் மூன்று சகோதரர்களும் அதே முடிவை எடுத்து இஸ்ரேலில் குடியேறினர். ஆனால் எலக்ட்ரானிக்ஸ் படித்துக்கொண்டிருந்த கோஹன், எகிப்திலேயே தங்கி தனது படிப்பைத் தொடர முடிவு செய்தார்.

என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவின் கூற்றுப்படி, அரபு, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் அவருக்கு இருந்த சிறந்த புலமை காரணமாக இஸ்ரேலிய உளவுத்துறை அவர் மீது ஆர்வம் காட்டியது.

எலி கோஹன் அர்ஜென்டினாவை அடைந்தது எப்படி?

இஸ்ரேல், மொசாட், சிரியா, உளவாளி, எலி கோஹன்

பட மூலாதாரம்,ISRAELI GOVERNMENT PRESS OFFICE

படக்குறிப்பு,எலி கோஹன் பிடிபடும் வரை இந்தக் கடிகாரத்தை அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

1955ஆம் ஆண்டு, உளவுப் பயிற்சி பெற இஸ்ரேல் சென்ற அவர், அடுத்த ஆண்டு எகிப்து திரும்பினார். இருப்பினும், சூயஸ் நெருக்கடியைத் தொடர்ந்து எகிப்திலிருந்து பலர் வெளியேற்றப்பட்டனர், அதில் கோஹனும் ஒருவர். பிறகு 1957இல் அவர் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தார்.

இஸ்ரேல் வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஈராக்கிய-யூதரும், எழுத்தாளர் சாம்மி மைக்கேலின் சகோதரியுமான நதியா மஜ்தாலை மணந்தார். 1960இல் இஸ்ரேலிய உளவுத்துறையில் சேருவதற்கு, முன்பு அவர் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி வந்தார்.

அடுத்தகட்ட பயிற்சியை முடித்த பிறகு, கோஹன் 1961இல் அர்ஜென்டினா தலைநகரான பியூனஸ் அயர்ஸை அடைந்தார். அங்கு அவர், சிரியா வம்சாவளியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் என்ற அடையாளத்தில் தனது உளவுப் பணியை தொடங்கினார்.

கமில் அமின் தாபெட் என்ற பெயருடன், கோஹன் அர்ஜென்டினாவில் உள்ள சிரியா சமூகத்தினரிடையே பல முக்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். வெகு சீக்கிரமாக சிரியா தூதரகத்தின் மூத்த அதிகாரிகளுடன் நட்பாக பழகி, அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார்.

அவர்களில் சிரியா ராணுவ உயரதிகாரி அமின் அல்-ஹஃபிஸும் ஒருவர். பின்னாளில் அவர் சிரியாவின் அதிபரானார். கோஹன் தனது 'புதிய நண்பர்களுக்கு' சிரியாவுக்கு விரைவில் 'திரும்ப' விரும்புவதாக ஒரு செய்தியை அனுப்பியிருந்தார்.

1962 ஆம் ஆண்டு தலைநகர் டமாஸ்கஸில் குடியேற அவருக்கு வாய்ப்பு கிடைத்தபோது, அர்ஜென்டினாவில் அவருக்கு இருந்த தொடர்புகள் சிரியாவின் அதிகாரப் பாதைகளுக்கான அற்புதமான வாய்ப்பை அளித்தன.

சிரியாவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட உடனேயே, சிரியா ராணுவம் பற்றிய உளவுத்துறை தகவல்களையும் திட்டங்களையும் கோஹன் இஸ்ரேலுக்கு அனுப்பத் தொடங்கினார்.

இஸ்ரேல், மொசாட், சிரியா, உளவாளி, எலி கோஹன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கோலன் குன்றுகள் தொடர்பாக இஸ்ரேலுக்கும் சிரியாவிற்கும் இடையே நீண்ட காலமாக பிரச்னை நிலவி வருகிறது.

சிரியாவில் ஏற்பட்ட அதிகார மாற்றம்

1963ஆம் ஆண்டு சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது, உளவுத்துறையில் கோஹனின் பணிகள் மிகவும் முக்கியமானதாக மாறியது. சிரியாவில் பாத் கட்சி ஆட்சிக்கு வந்தது, அதன் உறுப்பினர்களில் பலர் கோஹனின் அர்ஜென்டினா வாழ்க்கையின் போது அவருக்கு நண்பர்களாக இருந்தவர்கள்.

இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு அமின் அல்-ஹஃபிஸ் தலைமை தாங்கினார், அவர் அதிபரானார். ஹஃபிஸ், கோஹனை முழுமையாக நம்பினார். ஒரு கட்டத்தில் கோஹனை சிரியாவின் துணைப் பாதுகாப்பு அமைச்சராக்க அவர் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

கோஹனுக்கு ரகசிய ராணுவ விளக்கக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது மட்டுமல்லாமல், கோலன் குன்றுகள் பகுதியில் உள்ள சிரியா ராணுவத் தளங்களையும் பார்வையிடும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.

அந்த சமயத்தில் கோலன் குன்றுகள் பகுதி தொடர்பாக சிரியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிக பதற்றம் நிலவியது.

1967ஆம் ஆண்டு மத்திய கிழக்குப் போரில் இஸ்ரேலிடம் சிரியா தோல்வியடைந்ததற்கு, கோலன் குன்றுகள் தொடர்பாக கோஹன் அனுப்பிய உளவுத் தகவல்களும் முக்கிய காரணம் கூறப்படுகிறது.

இந்த தகவல்கள் காரணமாக, சிரியா வீரர்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பதில் இஸ்ரேலுக்கு நிறைய உதவி கிடைத்தது.

இஸ்ரேல், மொசாட், சிரியா, உளவாளி, எலி கோஹன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கோலன் குன்றுகள் பகுதி (1967, கோப்புப் படம்)

கோஹனின் அலட்சியம் அவரது உயிரைப் பறித்ததா?

யூத டிஜிட்டல் நூலகத்தின் ஒரு கட்டுரையின்படி, கோஹனுக்கு உளவுத்துறையில் நிபுணத்துவம் இருந்தபோதிலும், அவர் சில விஷயங்களில் கவனக்குறைவாகவும் இருந்தார்.

இஸ்ரேலில் இருந்த மொசாட் அதிகாரிகள், வானொலி தகவல் பரிமாற்ற முறையில் கவனத்துடன் இருக்குமாறு கோஹனை பலமுறை எச்சரித்துள்ளனர்.

ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் தகவல் பரிமாற்றங்களை செய்ய வேண்டாம் என்றும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் கோஹன் இந்த எச்சரிக்கைகளை மீண்டும் மீண்டும் புறக்கணித்தார், ஒருகட்டத்தில் இந்த கவனக்குறைவு அவரது வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

ஜனவரி 1965இல், சிரியா புலனாய்வு அதிகாரிகள் அவரது வானொலி சமிக்ஞைகளை இடைமறித்து, அவர் தகவல்கள் அனுப்புவதை கையும் களவுமாகப் பிடித்தனர். கோஹன் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு, பின்னர் ராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இறுதியில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

கோஹன் மே 18, 1965 அன்று டமாஸ்கஸில் ஒரு பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டார். அவரது கழுத்தில் 'சிரியாவில் உள்ள அரபு மக்களின் சார்பாக' என்று எழுதப்பட்ட ஒரு பதாகை தொங்க விடப்பட்டது.

ஆரம்பத்தில் அவரது மரண தண்டனையைத் தடுக்க இஸ்ரேல் ஒரு சர்வதேச பிரசாரத்தைத் தொடங்கியது, ஆனால் சிரியா அதற்கு உடன்படவில்லை. கோஹனின் மரணத்திற்குப் பிறகு, அவரது உடலையும் உடமைகளையும் திருப்பித் தருமாறு இஸ்ரேல் பலமுறை கோரியது, ஆனால் சிரியா ஒவ்வொரு முறையும் மறுத்துவிட்டது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ce3v79qk6yxo

ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதலை மேற்கொள்ள தயாராகின்றது இஸ்ரேல் - அமெரிக்க புலனாய்வு பிரிவினர்

2 weeks 6 days ago

Published By: RAJEEBAN

23 MAY, 2025 | 11:02 AM

image

டொனால்ட் டிரம்பின் ஆதரவு இல்லாமலே இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் தயாராகின்றது என சிஎன்என் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கடந்த சில மாதங்களில் பல மடங்காக அதிகரித்துள்ளன என அமெரிக்காவின் புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா அந்த நாட்டுடன் மேற்கொள்ளவுள்ள பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால்,இஸ்ரேல் அதன் பின்னர் தாக்குதலை மேற்கொள்ளக்கூடும் என புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

iran_nuclear_sites.jpg

ஈரானின் அணுசக்தி கட்டமைப்பின் மீது தாக்குதலை மேற்கொள்ளவேண்டும் என இஸ்ரேலின் கடும்போக்குவாதிகள் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு அழுத்தம் கொடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஒக்டோபரில் ஈரான் இஸ்ரேலை இலக்குவைத்து ஏவுகணை தாக்குதலை மேற்கொண்ட பின்னர் இந்த அழுத்தம் அதிகரித்துள்ளது.

இஸ்ரேலின் தொடர்பாடல்களை இடைமறித்து கேட்டதன் மூலமும், இராணுவத்தினரின் நடவடிக்கைகளை அவதானித்ததன் மூலம் இஸ்ரேல் எந்த நேரத்திலும் ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதலை நடத்தலாம் என்பது தெரியவந்துள்ளதாக அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டால் அதன் காரணமாக மத்திய கிழக்கில் பரந்துபட்ட மோதல் வெடிக்கலாம். அமெரிக்கா இதனை தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அணுசக்தி உடன்பாட்டிற்கு வராவிட்டால் ஈரானிற்கு எதிராக இராணுவநடவடிக்கை எடுக்கப்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். கடந்த மாதம் முதல் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன.

மார்ச் மாதம் டிரம்ப் ஈரானிற்கு 60 நாள் காலக்கெடுவை விதித்தார் அந்த காலக்கெடு முடிவடைந்துள்ளது.

பல மாதங்களாக யுரேனியத்தை செறிவூட்டுவதில் ஈடுபட்டுள்ள ஈரான், தற்போது சிறிய அணுகுண்டை உருவாக்கும் திறனுடன் உள்ளதாக இஸ்ரேல் அச்சம் கொண்டுள்ளது.

https://www.virakesari.lk/article/215477

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்க ட்ரம்ப் நிர்வாகம் தடை!

2 weeks 6 days ago

New-Project-245.jpg?resize=750%2C375&ssl

ஹார்வர்டில் பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்க ட்ரம்ப் நிர்வாகம் தடை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் வியாழக்கிழமை (22) ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மாணவர்களைச் சேர்க்கும் திறனை இரத்து செய்தது.

மேலும், தற்போதைய வெளிநாட்டு மாணவர்களை வேறு கல்லூரிகளுக்கு மாற்றவோ அல்லது அவர்களின் சட்டப்பூர்வ அந்தஸ்தை இழக்கவோ கட்டாயப்படுத்துகிறது.

அதேநேரத்தில், ஏனைய கல்லூரிகளுக்கும் இந்த நடவடிக்கையை விரிவுபடுத்துவதாக உத்தரவு அச்சுறுத்துகிறது.

2025-2026 கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர் மற்றும் பரிமாற்ற பார்வையாளர் திட்ட சான்றிதழை நிறுத்துமாறு உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் உத்தரவிட்டதாகத் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான மாணவர்களைப் பாதிக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் பழிவாங்கும் செயலாகும் என்றும் ஹார்வர்ட் கூறியது.

ஹார்வர்டில் உள்ள சில வெளிநாட்டு மாணவர் விசா வைத்திருப்பவர்கள் குறித்து கிறிஸ்டி நோயம் கோரிய தகவல்களை வழங்க ஹார்வர்ட் மறுத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக புள்ளிவிவரங்களின்படி, ஹார்வர்ட் 2024-2025 கல்வியாண்டில் கிட்டத்தட்ட 6,800 சர்வதேச மாணவர்களைச் சேர்த்தது, இது அதன் மொத்த சேர்க்கையில் 27% ஆகும்.

2022 ஆம் ஆண்டில், சீன நாட்டினர் 1,016 பேர் வெளிநாட்டு மாணவர்களாக இருந்ததாக பல்கலைக்கழக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அதைத் தொடர்ந்து கனடா, இந்தியா, தென் கொரியா, பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் வந்தனர்.

இது தொடர்பான கருத்துக்கான கோரிக்கைக்கு வொஷிங்டனில் உள்ள சீனத் தூதரகம் உடனடியாக பதிலளிக்கவில்லை.

https://athavannews.com/2025/1432896

அதிபர் மாளிகையில் மற்றொரு வாக்குவாதம் - டிரம்பின் மோதல் போக்கு உத்தியின் பின்னணி என்ன?

2 weeks 6 days ago

டிரம்பின் விமர்சனங்களை அமைதியாக சமாளித்த ராமபோசா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், கேரி ஓ'டோனோகு

  • பதவி, பிபிசி

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலம் தொடங்கி மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், வெளிநாட்டு தலைவர்கள் அமெரிக்க அதிபர் அலுவலகத்திற்கு செல்வதற்கு அழைப்பு கிடைப்பதை ஒரு புறம் பெருமையான விஷயமாகக் கருதலாம்.

ஆனால் அதே நேரத்தில் அனைவர் முன்னிலையில் விமர்சிக்கப்படுவதற்கும், அவமானப்படுத்தப்படுவதற்கான அபாயமும் அந்த அழைப்பில் உள்ளது என்பதையும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.

அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் தென்னாப்பிரிக்காவின் அதிபர் சிரில் ராமபோசாவுக்கும் இடையே நடந்த சந்திப்பு அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.

மங்கலான விளக்குகள், நீண்ட வீடியோ ஒன்றின் திரையிடல் மற்றும் செய்திக் கட்டுரைகளின் குவியல்களுடன் நடத்தப்பட்ட ஒரு மறைமுக தாக்குதலும் இதில் இடம்பெற்றது.

அந்த சந்திப்பை தொலைக்காட்சி கேமராக்கள் பதிவு செய்துக்கொண்டிருந்தன. அங்கே ஒரு அமைதியான உரையாடல் நடைபெற்றது.

அதன் பிறகு, தென்னாப்பிரிக்காவில் "வெள்ளையர்கள் இனப்படுகொலை" செய்யப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டுகள் தவறானவை என நீங்கள் நம்ப வேண்டுமென்றால் எந்த வகையான ஆதாரங்கள் தேவை என்று டிரம்பிடம் ஒரு பத்திரிகையாளர் கேட்டார்.

அந்த கேள்விக்கு முதலில் பதிலளித்த ராமபோசா , இந்த விவகாரத்தில் அதிபர் "தென்னாப்பிரிக்க மக்களின் குரல்களைக் கேட்க வேண்டும்" என்று கூறினார்.

அதன் பின்னர் பேசத் தொடங்கிய டிரம்ப், தென்னாப்பிரிக்கத் தலைவருக்கு "சில விஷயங்களை" காட்ட வேண்டும் எனக் கூறி, "விளக்குகளை அணைத்து" தொலைக்காட்சியை இயக்குமாறு ஒரு உதவியாளரிடம் கூறினார்.

மறுபுறம் டிரம்பின் ஆலோசகராகவும், தென்னாப்பிரிக்காவில் பிறந்த கோடீஸ்வரராகவும் இருக்கும் ஈலோன் மஸ்க், ஒரு சோபாவில் அமைதியாக அமர்ந்து நிகழ்வைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

அதற்குப் பிறகு, தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளை மையமாகக் கொண்டு, ஒரு அசாதாரணமான மற்றும் திட்டமிட்டு நடத்தியது போன்ற தாக்குதல்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னெடுத்தார்.

இது, பிப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த யுக்ரேன் தலைவர் ஸெலென்ஸ்கியை டிரம்ப் நடத்திய விதத்தை நினைவுபடுத்தியது.

தென்னாப்பிரிக்க அரசியல் தலைவர்கள் "போயரை சுடு" (Shoot the Boer) என்ற இனவெறி எதிர்ப்புப் பாடலை கோஷமிடுவதை அந்த பெரிய திரையில் காண்பிக்கப்பட்ட வீடியோ காட்டியது.

அடிக்கடி செய்தி ஊடகங்களை விமர்சிக்கும் டிரம்ப், தெளிவாக ஆதாரம் இல்லாத புகைப்படங்களை காட்டி மகிழ்ந்ததாகவும் தெரிந்தது.

மேலும் விவசாயிகளாக இருந்த வெள்ளையர்களின் கல்லறைகள் எங்கே உள்ளன என்ற கேள்விக்கு, டிரம்ப் வெறும் "தென்னாப்பிரிக்கா" என்று மட்டும் பதிலளித்தார்.

அந்த வீடியோவில் அரசாங்கத்தில் பங்கு வகிக்காத அரசியல் தலைவர்கள் காட்டப்பட்டனர். விவசாயிகளாக இருந்த வெள்ளையர்களின் நிலத்தைப் பறிமுதல் செய்யும் அதிகாரம் அந்த அரசியல் தலைவர்களுக்கு இருப்பதாக டிரம்ப் நம்புவதாகவும் தெரிகிறது. ஆனால், அவர்களுக்கு அதற்கு உரிமை இல்லை.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இழப்பீடு இல்லாமல் நிலத்தை கையகப்படுத்துதலை அனுமதிக்கும் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு ராமபோசா கையெழுத்திட்டபோதிலும், அந்த சட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை.

மேலும், தென்னாப்பிரிக்க அதிபரான ராமபோசா அரசியல் உரைகளில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் அல்லது தொனியுடன் உடன்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆனால் தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலாவின் நெருங்கிய கூட்டாளியும், சிறுபான்மை வெள்ளையர்களால் ஆளப்பட்ட ஆட்சியை முடிக்க உதவிய பேச்சுவார்த்தையாளருமான ராமபோசா, அந்தக் கூட்டத்திற்காக தயாராக வந்திருந்தார்.

தென்னாப்பிரிக்க அதிபருடன் வெள்ளை மாளிகையில் டிரம்ப் வாக்குவாதம் ஏன்?  உத்தி என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெளிநாட்டு தலைவர்கள் வெளிப்படையாக புகழ்வதற்கு எடுக்கும் முயற்சிகளை டிரம்ப் சில சமயம் உணராமல் இருக்கிறார். ஆனால் அது தென்னாப்பிரிக்காவுடைய தெளிவான திட்டத்தின் ஒரு பகுதி.

டொனால்ட் டிரம்ப் கோல்ஃப் மீது அதீத ஆர்வம் கொண்டவர் என்பது உண்மைதான்.

ஆனால், ராஜ்ஜீய பிரச்னைகள் மற்றும் வர்த்தக கொள்கை குறித்து நடைபெறும் கூட்டத்துக்காக இரண்டு புகழ்பெற்ற கோல்ஃப் வீரர்களான எர்னி எல்ஸ் மற்றும் ரீடீஃப் கூசனை அழைத்து வரும் ராமபோசாவின் திட்டம், நான் இதுவரை படித்த எந்த சர்வதேச உறவுகள் பாடப்புத்தகத்திலும் காணப்படாத ஒரு யுக்தி.

மேலும், இரண்டு வெள்ளை தென்னாப்பிரிக்க கோல்ஃப் வீரர்களை அங்கு காண்பதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மகிழ்ச்சியடைந்ததை அனைவரும் தெளிவாகக் கண்டனர்.

ராமபோசா பெரும்பாலும் அமைதியாகவும், சுருக்கமாகவும் பேசினார்.

மேலும் ராமபோசா இந்த சூழ்நிலையில் மகிழ்ச்சியடைந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது.

ஏனென்றால் கோல்ஃப் வீரர்களும், தேசிய ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள எதிர்க்கட்சியிலிருந்து வந்த அவரது வெள்ளையின விவசாய அமைச்சரும், ஓரளவு பாதுகாப்பாகவும், ஆதரவாகவும் இருந்தனர்.

ஒரு சிறிய கவசம் அல்லது ராஜ்ஜீய பாதுகாவலைப் போல காணப்பட்ட இந்த உத்தி பயனுள்ளதாகவும் இருந்தது.

டிரம்ப் விவசாயிகளின் அவலநிலை குறித்து மீண்டும் பேசினார் . அவர்களில் பலரை அவர் அமெரிக்காவிற்குள் அகதிகளாக வரவேற்றுள்ளார்.

ஆனால் அதிபர் ராமபோசா இதற்கு பதில் சொல்லவில்லை, மேலும் அவரை கோபமூட்ட எடுக்கப்பட்ட முயற்சிகள் பெரும்பாலும் கவனம் பெறவில்லை.

ஒரு கட்டத்தில், கோல்ஃப் வீரர்களையும், தனது அணியில் இடம் பெற்றிருந்த ஒரு ஆப்பிரிக்க கோடீஸ்வரரையும் ராமபோசா குறிப்பிட்டு, " ஆப்பிரிக்க விவசாயிகள் (வெள்ளை தென் ஆப்ரிக்க விவசாயிகள்) மீது இனப்படுகொலை நடந்திருந்தால், இந்த மூன்று நபர்களும் இங்கே இருக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக சொல்ல முடியும்." என்று டிரம்பிடம் கூறினார்.

அதிபர் டிரம்ப்பால் தென்னாப்பிரிக்க அதிபரிடம் இருந்து எந்த எதிர்வினையையும் பெற முடியவில்லை என்றாலும், அவர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மேற்கொண்ட முயற்சிகள் வீண் என்று அர்த்தமல்ல. அவை நிச்சயமாக வீணாகவில்லை.

மக்கள் தங்களின் அதிருப்தி மற்றும் கவலை என நினைப்பதை தொடர்ந்து கவனத்தில் வைத்திருப்பதே ''அமெரிக்காவை மீண்டும் மகத்துவமாக்குவோம்" (MAGA) திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். அதிபர் டிரம்ப், தனது ஆதரவாளர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை நன்றாக அறிந்திருக்கிறார்

ஏனென்றால், இவ்வாறு திட்டமிட்டது போல நிகழ்த்தப்பட்ட இந்த ராஜ்ஜீய பாணியானது, அதிபர் அலுவலகத்திற்கு சென்றிருந்த பார்வையாளர்களை மட்டுமின்றி, உள்நாட்டு அமெரிக்க பார்வையாளர்களையும் இலக்காகக் கொண்டது.

சில வெளிநாட்டு தலைவர்கள் இந்த தருணங்களை திறமையாக சமாளிக்க கற்றுக்கொண்டால், டொனால்ட் டிரம்ப் தான் விரும்பும் தாக்கத்தை தொடர்ந்து பெற, தனது திட்டங்களை சிறிது மாற்ற வேண்டியிருக்கும்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckg455kx1zgo

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரைக்கு விஜயம் மேற்கொண்ட இராஜதந்திரிகளை நோக்கி இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகம் - உலக நாடுகள் கடும் கண்டனம்

3 weeks ago

22 MAY, 2025 | 12:33 PM

image

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் இராஜதந்திரிகள் குழுவினரை நோக்கி இஸ்ரேலிய படையினர் எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்தமைக்கு பல உலக நாடுகள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

ஜெனின் நகரை நோக்கி சென்றுகொண்டிருந்த இராஜதந்திரிகளை நோக்கி இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எவரும் பாதிக்கப்படவில்லை என பிபிசி தெரிவித்துள்ளது.

israel_fires_diplomats.jpg

இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபடுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. ஏழு துப்பாக்கி வேட்டுகளையாவது வீடியோவில் கேட்க முடிகின்றது.

அனுமதியளிக்கப்பட்ட பகுதியிலிருந்து அவர்கள் விலகியதன் காரணமாகவே துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ள  இஸ்ரேலிய இராணுவம், அவர்களை எச்சரிக்கும் விதத்தில் வானை நோக்கியே துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது.

சர்வதேச இராஜதந்திரிகளிற்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம் விசாரணைகளின் பின்னர் இராஜதந்திரிகளை தொடர்புகொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது

இஸ்ரேலிய இராணுவத்தினரின் இந்த நடவடிக்கைகக்கு ஸ்பெயின், எகிப்து, பிரான்ஸ், அயர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலிய தூதுவர்களை அழைத்து தங்கள் கண்டனங்களை வெளியிடப்போவதாக பல நாடுகள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும், விளக்கமளிக்கவேண்டும் என பலநாடுகள் தெரிவித்துள்ளன.

இராஜதந்திரிகள் குழுவை இஸ்ரேலிய படையினர் வேண்டுமென்றே இலக்குவைத்தது பெரும் குற்றம் என பாலஸ்தீன அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் காணப்படும் மனிதாபிமான நிலை குறித்து நேரடியாக பார்த்து அறிந்துகொள்வதற்காகவும், பாலஸ்தீன மக்களிற்கு எதிரான இஸ்ரேலிய படையினரின் மனித உரிமை மீறல்களை பதிவு செய்வதற்காகவே இராஜதந்திரிகள் அங்கு சென்றனர் என பாலஸ்தீன அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேற்குக் கரையில் உள்ள ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி அமைப்பின் இயக்குநரான ரோலண்ட் பிரீட்ரிக் இஸ்ரேல் தெரிவித்ததை ஏற்கமறுத்துள்ளதுடன் அதன் விளக்கங்கள் "இன்றைய சம்பவத்தின்தீவிரத்தை முழுமையாகப் பிடிக்கவில்லை" என்று கூறினார்

இந்த சம்பவம் மேற்குக் கரையில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் அதிகப்படியான பலத்தை தெளிவாக நினைவூட்டுகிறது. இது பெரும்பாலும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது" என்று பிரீட்ரிக் கூறினார். "இந்த சம்பவத்திற்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறை உயர் பிரதிநிதி காஜா கல்லாஸ் "இராஜதந்திரிகளின் உயிருக்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கூறினார்.

"இந்த சம்பவத்தை விசாரித்து இதற்குப் பொறுப்பானவர்களை பொறுப்பேற்கச் செய்ய இஸ்ரேலை நாங்கள் நிச்சயமாகக் கேட்டுக்கொள்கிறோம்" என்று கல்லாஸ் புதன்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்

மேற்குக் கரையில் உள்ள ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி அமைப்பின் இயக்குநரான ரோலண்ட் பிரீட்ரிக் இஸ்ரேலிய இராணுவத்தின் நிகழ்வுகள் குறித்த பதிப்பை மறுத்து அதன் விளக்கங்கள் "இன்றைய நிகழ்வின் தீவிரத்தை முழுமையாகப் பிடிக்கவில்லை" என்று கூறினார்

இந்த சம்பவம் மேற்குக் கரையில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் அதிகப்படியான பலத்தை மெதுவான முறையில் பயன்படுத்துவதை தெளிவாக நினைவூட்டுகிறது. இது பெரும்பாலும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது" என்று பிரீட்ரிக் கூறினார். "நிராயுதபாணியான பொதுமக்களுக்கு ஈடுபாட்டின் விதிகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து இது கடுமையான கவலைகளை எழுப்புகிறது.

https://www.virakesari.lk/article/215390

சாகோஸ் தீவுகள் ஒப்பந்தம் இடைநிறுத்தம்!

3 weeks ago

New-Project-238.jpg?resize=750%2C375&ssl

சாகோஸ் தீவுகள் ஒப்பந்தம் இடைநிறுத்தம்!

இங்கிலாந்து மேல் நீதிமன்றத்தின் தடை உத்தரவின் மூலம், சாகோஸ் தீவுகள் (Chagos Islands) ஒப்பந்தத்தை முடிப்பதில் இருந்து அந் நாட்டு அரசாங்கம் தற்காலிகமாகத் தடுக்கப்பட்டுள்ளது.

வரும் சில மணிநேரங்களில் மொரிஷியஸிடம் தீவுக்கூட்டத்தின் இறையாண்மையை இங்கிலாந்து ஒப்படைக்கும் ஒரு ஒப்பந்தத்தை அமைச்சர்கள் முடிப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், வியாழக்கிழமை அதிகாலை இங்கிலாந்து வெளிவிவகார அலுவலகத்திற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட அவசரகாலத் தடை உத்தரவில், நீதிபதி கூஸ், இந்த ஒப்பந்தம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க முன்னர் வழக்குத் தொடர்ந்த பெர்ட்ரிஸ் பாம்பேவுக்கு “இடைக்கால நிவாரணம்” அளித்தார்.

திருமதி பாம்பே ஒரு சாகோசியன் பெண், இந்த ஒப்பந்தத்தை தங்கள் உரிமைகளுக்கு துரோகம் செய்வதாகக் கருதுவதாக கூறி வழக்குத் தாக்குல் செய்துள்ளார்.

அந் நாட்டு நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 2.25 மணிக்கு வழங்கப்பட்ட உத்தரவில், “சாகோஸ் தீவுக்கூட்டம் என்றும் அழைக்கப்படும் பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தை ஒரு வெளிநாட்டு அரசாங்கத்திற்கு மாற்றுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை முடிக்க அரசாங்கம் எந்தவொரு உறுதியான அல்லது சட்டப்பூர்வ நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது அல்லது அத்தகைய எந்தவொரு பரிமாற்றத்தின் குறிப்பிட்ட விதிமுறைகளுக்கும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடாது” என்று கூறுகிறது.

வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ee1c85b0-36e6-11f0-96c3-cf669419a2b0.png

சாகோசியர்கள் சாகோசிய தீவுகளின் முன்னாள் குடியிருப்பாளர்கள், அவர்கள் 1960களின் நடுப்பகுதிக்கும் 1970களின் முற்பகுதிக்கும் இடையில் தீவுகளிலிருந்து பெரும்பாலும் மொரீஷியஸுக்கு வெளியேற்றப்பட்டனர்.

தீவுகளில் பிறந்தவர்களும் அவர்களது குழந்தைகளும் பிரிட்டிஷ் குடியுரிமையைப் பெற்றுள்ளனர்.

ஆனால் பிரிட்டிஷ் எல்லைக்கு வெளியே பிறந்த அடுத்தடுத்த தலைமுறையினருக்கு அதற்கு எந்த உரிமையும் இல்லை.

இந்த நிலையில் அண்மைய ஆண்டுகளில், தீவுகளை மொரீஷியஸிடம் திருப்பித் தருமாறு இங்கிலாந்து சர்வதேச அளவில் அதிகரித்து வரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1432800

மாஸ்கோ மீது உக்ரைன் படைகளின் தாக்குதல்! விமான சேவைகள் முடக்கம் – உலக நாடுகள் அதிர்ச்சி!

3 weeks ago

UKKKRA.jpg?resize=750%2C375&ssl=1

மாஸ்கோ மீது உக்ரைன் படைகளின் தாக்குதல்! விமான சேவைகள் முடக்கம் – உலக நாடுகள் அதிர்ச்சி!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ வியாழக்கிழமை அன்று மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாஸ்கோவை இலக்காகக் கொண்டு ஏவப்பட்ட 35 உக்ரைனிய ட்ரோன்கள் உட்பட, மொத்தம் 105 ட்ரோன்களை வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்துள்ளன. இந்தத் தாக்குதல் காரணமாக மாஸ்கோவைச் சுற்றியுள்ள விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின், “விழுந்த சிதைவுகளை அகற்றும் பணியில் அவசர சேவை வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்” என்று டெலிகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

இது கடந்த ஒரு நாளுக்கு முன்பு மாஸ்கோ மீது 27 ட்ரோன்கள் ஏவப்பட்ட நிலையில் வந்துள்ள அடுத்த பெரும் தாக்குதல் ஆகும். உக்ரைன் மீது ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையைத் தொடங்கிய மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, இரு நாடுகளும் கிட்டத்தட்ட தினசரி அடிப்படையில் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றன என்றாலும், மாஸ்கோ மீது இவ்வளவு பெரிய தாக்குதல் நடத்தப்படுவது அரிது.

வியாழக்கிழமை அன்று, மாஸ்கோவின் முக்கிய விமான நிலையங்களான ஷெரமெட்டியோவோ, வ்னுகோவோ, டொமோடெடோவோ மற்றும் ஜுகோவ்ஸ்கி ஆகியவற்றில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன என்று ரஷ்யாவின் விமானப் போக்குவரத்து ஆணையம் Rosaviatsiya தெரிவித்துள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளின் நிபந்தனையற்ற மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கான அழைப்புகளை தொடர்ந்து நிராகரித்து வருகிறார். 2014 இல் இணைக்கப்பட்ட கிரிமியா தீபகற்பம் உட்பட உக்ரைனின் சுமார் ஐந்தில் ஒரு பகுதியை ரஷ்யா தற்போது கட்டுப்படுத்துகிறது.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த மோதல், பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர். உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இந்த புதிய ட்ரோன் தாக்குதல், மோதலின் தீவிரத்தை மேலும் அதிகரித்துள்ளதுடன், ரஷ்ய தலைநகரின் பாதுகாப்பிற்கு ஒரு புதிய சவாலாக அமைந்துள்ளது.

https://athavannews.com/2025/1432812

உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் சுட்டுக்கொலை

3 weeks ago

உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் சுட்டுக்கொலை

May 21, 2025 6:52 pm

உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் சுட்டுக்கொலை

உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சின் ஆலோசகராக செயற்பட்டு வந்த ஆண்ட்ரி போர்ட்னோவ். அடையாளந் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள பாடசாலையொன்றிற்கு அருகில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சின் ஆலோசகராக செயல்பட்டு வந்தவர் ஆண்ட்ரி போர்ட்னோவ்.

2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை உக்ரைன் ஜனாதிபதி அலுவலகத்தின் துணைத் தலைவராக பணியாற்றிய இவர், விக்டர் யானுகோவிச்சுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்தார்.

விக்டர் யானுகோவிச் ஆட்சிக் காலத்தின்போது பெரும்பாலும் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஆண்ட்ரி போர்ட்னோவ் பின்பற்றி வந்தார்.

மேலும் உக்ரைனில் 2014 ஆம் ஆண்டு நடந்த மாபெரும் புரட்சியில் பங்கேற்ற போராட்டக்காரர்களுக்கு எதிரான சட்டங்களை இயற்றியதில் ஆண்ட்ரி போர்ட்னோவ் முக்கிய பங்காற்றினார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://oruvan.com/advisor-to-ukraines-former-president-shot-dead/

தனித்தீவில் சிறை வைத்து ஒவ்வொரு அசைவையும் கண்காணித்த பிரிட்டன் - நெப்போலியன் என்ன செய்தார்?

3 weeks ago

நெப்போலியனின் இறுதி வாழ்க்கை, இறுதி காலகட்டம், முக்கியச் செய்திகள், வரலாற்றுச் செய்திகள்,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,நெப்போலியன்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ரெஹான் ஃபசல்

  • பதவி, பிபிசி ஹிந்தி

  • 13 மே 2025

    புதுப்பிக்கப்பட்டது 14 மே 2025

வாட்டர்லூ போரில் தோற்கடிக்கப்பட்ட பிறகு ஐரோப்பாவில் தனக்கு வருங்காலம் இல்லை என்று முடிவு செய்த நெப்போலியன், அமெரிக்கா செல்ல முடிவெடுத்தார்.

ஆனால், ஃபிரான்ஸின் அட்லாண்டிக் கடற்கரையை பிரிட்டனின் போர்க்கப்பல்கள் சூழ்ந்து இருந்ததால் அங்கிருந்து தப்பிப்பது இயலாத காரியமானது.

பிரிட்டன் கடற்படையிடம் சரணடைந்து, பிரிட்டனிடம் அரசியல் அடைக்கலம் பெறலாம் என்று முடிவு செய்தார் நெப்போலியன். ஆனால், நெப்போலியனுக்கு எந்த சலுகையும் காட்டும் முடிவில் பிரிட்டன் இல்லை.

"பிரிட்டன் பொதுமக்களின் பார்வையில் பார்த்தால் நெப்போலியன் ஒரு குற்றவாளி. பாதிக்கப்பட்டவர் அல்ல. அங்கிருக்கும் கார்ட்டூனிஸ்டுகள் நெப்போலியனைக் கூண்டில் அடைபட்ட விலங்காகக் காட்டினார்கள். பிரிட்டனில் அவரை வைத்திருந்தால் நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார் என்று பொதுவாக ஒரு கருத்து இருந்தது. பிரிட்டன் மண்ணிலோ அல்லது அருகில் உள்ள வேறொரு நாட்டிலோ அவரை வைத்திருந்தால் பின்னாளில் புரட்சிக்கான மையமாக அவர் மாற வாய்ப்பிருந்தது," என்று 'நெப்போலியன் இன் கேரிகேச்சர் 1795-1821' (Napoleon in Caricature 1795 – 1821) என்ற தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் ஏ எம் ப்ராட்லி.

நெப்போலியனை செயின்ட் ஹெலனா தீவுக்கு அனுப்பும் முடிவு

உலகின் பிற பகுதிகளில் இருந்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டிருந்த செயின்ட் ஹெலனா தீவுக்கு அவரை அனுப்ப தீர்மானித்தது பிரிட்டன் அரசு. பிரிட்டனால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்த தீவு அது.

ஆப்பிரிக்கப் பெருநிலப்பரப்பில் இருந்து சுமார் 1,200 கி.மீ தூரம் தள்ளி இருந்தது இந்த இடம்.

"இந்தியாவை ஆட்சி செய்து வந்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் கப்பல்கள் ஓய்வுக்காக நிறுத்தப்படும் இடமாக செயின்ட் ஹெலனாதீவு இருந்தது. பிரிட்டனின் ராணுவ முகாமைப் போல செயல்பட்ட அந்த பகுதியில் சுமார் 5,000 பேர் வாழ்ந்தனர். அவர்களில் சிலர் மடகாஸ்கரில் இருந்து அழைத்து வரப்பட்ட அடிமைகள். மற்றவர்கள் சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட கூலித் தொழிலாளிகள். அவர்கள் ஒவ்வொரு வருடமும் அந்தப் பகுதியைக் கடந்து செல்லும் ஆயிரக்கணக்கான கப்பல்களை பராமரித்து வந்தார்கள்," என்று தனது 'டெரிபிள் எக்ஸைல், தி லாஸ்ட் டேஸ் ஆஃப் நெப்போலியன் ஆன் செயிண்ட்.ஹெலெனா' (Terrible Exile, The last days of Napoleon on St.Helena) புத்தகத்தில் எழுதியிருக்கிறார் ப்ரையன் அன்வின்.

நெப்போலியனின் இறுதி வாழ்க்கை, இறுதி காலகட்டம், முக்கியச் செய்திகள், வரலாற்றுச் செய்திகள்,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,செயின்ட் ஹெலனாவில் நெப்போலியன் (ஃப்ரான்சைஸ் ஜோசஃப் சாண்டேமேன் வரைந்த ஓவியம்)

நெப்போலியனுடன் செயின்ட் ஹெலனா சென்ற 27 பேர்

செயின்ட் ஹெலனாவில் அவர் போர்க்கைதியாக வைக்கப்படுவார் என்று நெப்போலியனிடம், அட்மிரல் லார்ட் கீத், 1815-ம் ஆண்டு ஜுலை 31 அன்று கூறினார்.

இதைக் கடுமையாக எதிர்த்த நெப்போலியன், தனக்கு பிரிட்டனிலேயே தங்க அனுமதி அளிப்பதாகக் கூறி ஏமாற்றி விட்டதாகக் கூறினார்.

இந்தத் தகவலைக் கேள்விப்பட்டதும் தனது கப்பலின் கேபினுக்குச் சென்ற நெப்போலியன் அடுத்த மூன்று நாட்கள் வெளியே வரவில்லை. நான்காம் நாள் பிரிட்டன் அரசுக்குத் தன் எதிர்ப்பை முறையாகக் கடிதம் எழுதித் தெரிவித்தார் நெப்போலியன்.

'நெப்போலியன் தி மேன் பிஹைண்ட் தி மித்' (Napoleon the man behind the myth) என்ற தனது புத்தகத்தில், "மொத்தம் 27 பேர் நெப்போலியனுடன் செயின்ட் ஹெலனாவுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். அவர்கள் கப்பலில் ஏறும்போது நெப்போலியனும், அவரது குழுவினரும் முழுமையாக சோதிக்கப்பட்டனர். நிறைய செல்வம் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதை ஏற்கெனவே யூகித்திருந்த நெப்போலியன், அனைவரது இடுப்பில் உள்ள பெல்ட்களுக்குள் தங்க நாணயங்களைக் கட்டி மறைத்து எடுத்துச் சென்றார்," என்று குறிப்பிடுகிறார் ஆடம் ஸெமோவ்ஸ்கி.

இந்த நீண்ட பயணத்தில் அவர் கடல் பயணத்தின் பல துன்பங்களையும் எதிர்கொண்டார். தனது அறையிலே தங்கி நிறைய வாசித்தார். மாலுமிகளுடன் பேசி தனது ஆங்கிலத்தை மேம்படுத்த முயற்சித்தார். அக்டோபர் 24-ம் தேதி, செயின்ட் ஹெலனா தீவு நெப்போலியனின் கண் முன்னால் விரிந்தது.

நெப்போலியனின் இறுதி வாழ்க்கை, இறுதி காலகட்டம், முக்கியச் செய்திகள், வரலாற்றுச் செய்திகள்,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,செயின்ட் ஹெலனாவில் அவர் போர்க்கைதியாக வைக்கப்படுவார் என்று நெப்போலியனிடம், அட்மிரல் லார்ட் கீத், 1815-ம் ஆண்டு ஜுலை 31 அன்று கூறினார்

நெப்போலியனுக்கும் ஆங்கிலேயர்களுக்குமான உறவு கசந்தது

இந்தத் தீவின் பரப்பளவு 122 சதுர கி.மீ. 1502-ஆம் வருடம் போர்த்துக்கீசியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது இந்தத் தீவு. 1815-ஆம் ஆண்டு வாக்கில் இங்கே 3395 ஐரோப்பியர்கள், அடிமைகளாக அழைத்துவரப்பட்ட 218 கறுப்பினத்தவர், 489 சீனர்கள், 116 இந்திய மற்றும் மலேசிய நாட்டு மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர்.

ராணுவ ஆளுநர் ஒருவர், இந்தத் தீவை ஆட்சி செய்தார். ஒரு சிறிய பிரிட்டிஷ் படை அங்கே நிலை கொண்டிருந்தது.

ஆரம்பத்தில் 'தி ப்ரையர்' என்ற பெயர் கொண்ட ஆங்கிலேயர்களின் எஸ்டேட் ஒன்றில் வைக்கப்பட்டிருந்தார் நெப்போலியன். சில நாட்களுக்குப் பிறகு அவர் லாங்வுட் ஹவுஸுக்கு மாற்றப்பட்டார்.

"மிகத் தீவிரமான கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார் நெப்போலியன். அவர் தோட்டத்துக்குச் சென்றால் கூட பிரிட்டன் ராணுவ வீரர் ஒருவர் உடன் வருவார். இந்தத் தீவின் ஆளுநராக ஹட்சன் லோவ் வந்த பிறகு நெப்போலியனுக்கான கட்டுப்பாடுகள் இன்னும் அதிகரித்தன. 1816-ஆம் ஆண்டுக்குள் பிரிட்டன் அரசு தரப்புடனான அவரது உறவு மேலும் மோசமானது," என்று எழுதுகிறார் ப்ரையன் அன்வின்.

ஆங்கிலேயர்கள், அவருக்காக ஒரு புது வீடு கட்ட ஆரம்பித்தபோது, இனி வாழ்நாள் முழுவதும் செயின்ட் ஹெலனாவில் தான் கழிக்க வேண்டும் என்பதை உணர்ந்தார் நெப்போலியன்.

நடை பயிற்சியும் சீட்டு விளையாட்டும்

நெப்போலியன் லாங்வுட் ஹவுஸில் வாசிப்பதிலேயே தன் பெரும்பாலான நேரத்தைக் கழித்தார். ஐரோப்பாவில் இருந்து வரும் கப்பல்கள் தனக்கான புத்தகங்களைக் கொண்டு வருவதற்காக அவர் காத்திருப்பார்.

நெப்போலியனின் இரண்டாவது பொழுதுபோக்கு தன்னை சந்திக்க வரும் நபர்களை நல்ல உணவும், ஒயினும் கொடுத்து உபசரிப்பது.

"விருந்தோம்பலுக்காக அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதியைவிட மிக அதிகமாகத்தான் பணம் செலவழிப்பார் நெப்போலியன். அவர் மதுபானத்தை அதிக அளவில் குடிக்கவும் செய்தார், பரிமாறவும் செய்தார்.

1816-ஆம் ஆண்டில் மட்டும் 830 மிக விலை உயர்ந்த ஒயின் பாட்டில்கள் உட்பட 3700 ஒயின் பாட்டில்கள் அவருக்கு அனுப்பப்பட்டிருந்தன. குதிரை சவாரி செய்வது அல்லது 'தி ப்ரையர்' தோட்டங்களில் நடப்பது போன்ற நடவடிக்கைகளால் தனது உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தார் நெப்போலியன்.

கேப்டன் பாப்பிள்டன் எப்போதும் அவருடன் இருப்பார். நெப்போலியன் மீது ஒரு கண் வைத்துக் கொள்ளும் பொறுப்பு அவருடையது. பல மாலை நேரங்களை தனது நண்பர் பால்கம்முடன் சீட்டு விளையாடிக் கழித்தார் நெப்போலியன்." என்று தான் எழுதிய நெப்போலியனின் சரிதையில் குறிப்பிட்டிருக்கிறார் ஜான் பால் பார்டு.

நெப்போலியனின் இறுதி வாழ்க்கை, இறுதி காலகட்டம், முக்கியச் செய்திகள், வரலாற்றுச் செய்திகள்,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,நெப்போலியனும் அவரது கூட்டாளிகளும் செயின்ட் ஹெலனாவுக்குக் கப்பலில் சென்றபோது

'செயின்ட் ஹெலனாவின் வானிலையும் சூழலும் எனக்குப் பிடிக்கவில்லை'

நெப்போலியன் வைக்கப்பட்டிருந்த லாங்வுட் ஹவுஸில் கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருந்தன.

"அங்கே பெயிண்ட் அடிக்கப்படும் வாசம், தன் உடல்நிலையை மோசமாக்குவதாகக் கூறினார் நெப்போலியன். செயின்ட் ஹெலனாவில் உள்ள வானிலையும், அதன் சூழலும் நெப்போலியனுக்கும், அவரது குழுவினருக்கும் வெறுப்பை வரவழைத்தது," என்று எழுதுகிறார் ஆடம் ஸெமோவ்ஸ்கி.

"நெப்போலியனுடன் சென்றிருந்த அதிகாரிகள் அவர் முன்னிலையில் முழு அரச நெறிமுறைகளைப் பின்பற்றினர். பகல் நேரத்தில் பச்சை நிற ஹண்டர் கோட் வகை உடையையோ அல்லது வெள்ளை லினென் துணியில் கோட்டும் பேண்டுமோ அணிந்திருப்பார் நெப்போலியன்.

இரவு உணவின் போது முழு ராணுவ உடையில் இருப்பார் அவர். அவருடன் இரவு உணவருந்தச் செல்லும் பெண்கள் அரசவை உடைகளையும், நகைகளையும் அணிந்திருந்தனர். உணவுக்குப் பிறகு அவர்கள் சீட்டு விளையாடுவார்கள் அல்லது பேசுவார்கள். இல்லையென்றால் நெப்போலியன் ஏதாவது புத்தகம் வாசிக்க அதை அவர்கள் கேட்டுக் கொண்டிருப்பார்கள்."

நெப்போலியனின் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டது

கண்காணிப்பில் இருந்தபோதும் தோட்டவேலை செய்வதை பொழுதுபோக்காகச் செய்தார் நெப்போலியன். இரண்டு சீனத் தொழிலாளிகள் அவருக்கு உதவியாக இருந்தனர். தாவரங்களுக்குத் தனது கைகளாலேயே நீர் ஊற்றுவார் நெப்போலியன். முழுமையாகப் பார்த்தால் நெப்போலியன் ஒரு குற்றவாளியைப் போலவோ, போர்க்கைதியைப் போலவோ நடத்தப்படவில்லை. நடக்கவோ, குதிரை சவாரி செய்யவோ அனுமதிக்கப்பட்டாலும் அதுவும் ஒரு எல்லை வரைதான். அந்த சமயத்திலும் பிரிட்டன் அதிகாரி ஒருவர் அவருடன் இருப்பார். வீட்டுக்குள் இருந்த போதும் அவரது ஒவ்வொரு நடவடிக்கையையும் ராணுவ வீரர்கள் யாராவது கண்காணித்துக் கொண்டுதான் இருந்தனர்.

ஒருநாளைக்கு இரண்டு முறை அவர் அங்குதான் இருக்கிறார் என்று உறுதிப்படுத்திக் கொள்ள அதிகாரி ஒருவர் வருவார்."இரண்டு கப்பல்கள் எப்போதும் தீவை சுற்றிக் கொண்டே இருந்தன. நெப்போலியனுக்கு எந்த செய்தித்தாள்களும் வழங்கப்படவில்லை. செயின்ட் ஹெலனாவை விட்டு நெப்போலியன் தப்பிக்க நினைத்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை," என்று தனது டைரியில் எழுதியிருக்கிறார் செயின்ட் ஹெலனாவின் ஆளுநராக இருந்த ரியர் அட்மிரல் சர் ஜார்ஜ் காக்பர்ன்.

ஆனால் அதற்கு நேர்மாறாக அந்த சூழ்நிலைக்குத் தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொண்டு அதை அனுபவிக்கவும் ஆரம்பித்தார் அவர். அங்கு இருந்த பிரிட்டன் அதிகாரிகள் அனைவரிடமும் மரியாதையாக நடந்து கொண்டார் அவர். அந்தத் தீவுக்கு வரும் அல்லது அந்தத் தீவின் வழியாகச் செல்லும் பிரிட்டன் ராணுவ வீரர்களுக்கு நெப்போலியனை நேரில் பார்க்க முடிவதென்பது அந்தத் தீவின் கவர்ச்சிகளுள் ஒன்றாக இருந்தது. அவர்களுடனும் நெப்போலியனின் பழக்கவழக்கம் நன்றாகத்தான் இருந்தது.

ஆனால், அந்தத் தீவில் மோசமான நிலையில் நெப்போலியன் வைக்கப்பட்டிருப்பதாக பிரிட்டன் செய்தித்தாள்களில் செய்தி பரவியது.

நெப்போலியனின் இறுதி வாழ்க்கை, இறுதி காலகட்டம், முக்கியச் செய்திகள், வரலாற்றுச் செய்திகள்,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,முடிசூடும் உடையில் நெப்போலியன்

நெப்போலியனுக்கும் ஆளுநர் லோவுக்குமான தகராறு

அட்மிரல் காக்பர்னுக்கு பதிலாக 1816-ஆம் ஆண்டு மேஜர் ஜெனரல் சர் ஹட்சன் லோவ், செயின்ட் ஹெலனாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆரம்பத்தில் இருந்தே நெப்போலியனுக்கும், லோவுக்கும் எதிலும் உடன்பாடில்லை.

"புதிய ஆளுநர் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் லாங்வுட் ஹவுஸுக்கு வந்த போது நெப்போலியன் அவரை சந்திக்க மறுத்துவிட்டார். அடுத்தநாள் அவரை சந்திப்பதாக செய்தி அனுப்பினார் நெப்போலியன். மறுநாள் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. ஆனால் அந்த நிமிடத்தில் இருந்தே நெப்போலியனுக்கு லோவைப் பிடிக்கவில்லை. லோவும், நெப்போலியனுக்கு ஒரு பாடம் கற்பிக்க முடிவு செய்தார்" என்று எழுதினார் ஆடம் ஸெமோய்ஸ்கி.

நெப்போலியனைப் பெரிதும் மதித்த ஆங்கிலேயர் ஒருவர் நெப்போலியனுக்கு இரண்டு அட்டைப் பெட்டிகள் நிறைய புத்தகங்கள் அனுப்பினார். அதைப் பறிமுதல் செய்தார் லோவ். நெப்போலியனின் பயன்பாட்டுக்கு என்று சில பொருட்களை அனுப்பி வைத்தார் அவரது தங்கை பாலின். நெப்போலியனுக்கு இவ்வளவு பொருட்கள் தேவையில்லை என்று சொல்லி அவை அனைத்தையும் நெப்போலியனிடம் சென்று சேரவிடாமல் தடுத்துவிட்டார் லோவ்.

லோவுக்கும், நெப்போலியனுக்கும் இடையே வலுத்த மோதல்

இதற்கிடையே லோவுக்கும், நெப்போலியனுக்கும் இடையே இரண்டு சந்திப்புகள் நிகழ்ந்தன. "நெப்போலியன் இந்த சந்திப்புகள் முழுவதும் நின்று கொண்டே இருந்தார். ஒரு பேரரசர் நிற்கும்போது அவர் முன் அமர்வது வழக்கமில்லை, ஆதலால் லோவும் நின்று கொண்டே இருக்க வேண்டிய சூழல் வந்தது. நெப்போலியனின் செலவுகளைக் குறைக்கச் சொல்லி லோவுக்கு செய்தி வந்தது. இதைப் பற்றி லோவ் நெப்போலியனுடன் பேச விரும்பிய போது, தனது பட்லரிடம் இதைப் பற்றிப் பேசிக்கொள்ளும்படி கூறினார் நெப்போலியன்," என்று தனது புத்தகத்தில் எழுதியுள்ளார் தாமஸ் ஆப்ரி.

1816-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி அன்று லோவ் நெப்போலியனைச் சந்திக்கச் சென்ற போது , லோவை நீ வெறும் கணக்கர்தான், வேறு ஒன்றுமில்லை என்று பொறுமித் தள்ளினார் நெப்போலியன்.

நெப்போலியனின் வாழ்க்க வரலாற்றை எழுதிய கில்பர்ட் மார்ட்டினோ, "நெப்போலியன் லோவிடம், நீ ஒரு கௌரவமான மனிதன் இல்லை. மற்ற மனிதர்களின் கடிதங்களை ரகசியமாகப் படிக்கும் மனிதன் நீ. நீ ஒரு சாதாரண சிறை அதிகாரிதான், ராணுவ வீரன் இல்லை. என் உடல் வேண்டுமானால் உன் கைகளில் இருக்கலாம். ஆனால் என் ஆன்மா சுதந்திரமாக இருக்கிறது என்று கூறினார் நெப்போலியன்" , என்கிறார்.

இதைக் கேட்டதும் லோவின் முகம் சிவந்தது. அவர் நெப்போலியனிடம், "நீங்கள் ஒரு அபத்தமான மனிதர். உங்கள் முரட்டுத்தனம் பரிதாபகரமானதாக இருக்கிறது," என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டார்.

அதன் பிறகு, நெப்போலியன் உயிருடன் இருக்கும்வரை அவரைச் சந்திக்க லோவ் செல்லவில்லை.

நெப்போலியனின் இறுதி வாழ்க்கை, இறுதி காலகட்டம், முக்கியச் செய்திகள், வரலாற்றுச் செய்திகள்,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,செயின்ட் ஹெலனாவில் உடல்நிலை சரியில்லாத நிலையில் நெப்போலியன் (ஆன் மரியர் வரைந்த ஓவியம்)

நெப்போலியனின் உடல்நிலை மோசம் அடைந்தது

இதன்பிறகு நெப்போலியனின் மன உறுதி குலைந்து போனது. ஒரே மாதிரியான வாழ்க்கை, மோசமான வானிலை, மோசமான உணவு, வாசல் மற்றும் ஜன்னல் அருகே நிற்கும் காவலர்கள், எங்கு சென்றாலும் கட்டுப்பாடுகள் மற்றும் தொடர்ச்சியாக உடல்நலம் சரியில்லாமல் போவது ஆகியவை நெப்போலியனை மோசமாக பாதித்தது.

தான் எங்கு செல்ல விரும்பினாலும் அதற்கு லோவ் கட்டுப்பாடுகள் விதித்ததால் நடை பயிற்சி செய்வதையும், குதிரை சவாரி செய்வதையும் நிறுத்திவிட்டார் நெப்போலியன்.

1816-ஆம் ஆண்டின் இறுதியில் நெப்போலியனுக்குக் காய்ச்சலும் இருமலும் வந்தது. பல நாட்கள் தன் உடைகளை மாற்றாமலோ அல்லது அறையில் இருந்து வெளிவராமலோ கழித்தார் நெப்போலியன்.

"நெப்போலியனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போன போது, அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதை ஏற்றுக்கொள்ளவே மறுத்தார் ஆளுநர் லோவ். பின்னர் ஒரு நல்ல ராணுவ அல்லது கடற்படை மருத்துவர் ஒருவரை அனுப்பி வைப்பதாக லோவ் கூறிய போது நெப்போலியன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் ஆளுநருக்காக ஒற்று வேலை பார்ப்பார்கள் என்று அவர் நம்பினார். பின்னர் அவர் ஹெச்எம்எஸ் கான்கொயரர் கப்பலின் டாக்டர் ஜான் ஸ்டோக் தன்னை வந்து பார்க்க அவர் அனுமதித்தார்."

52 வயதில் இறந்து போனார் நெப்போலியன்

1819-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நெப்போலியன் ஹெபடைடிஸ் நோயால் அவதிப்படுவதைக் கண்டுபிடித்தார் டாக்டர் ஸ்டோக். அப்போது பிரிட்டனின் பிரதமராக இருந்த லார்ட் லிவர்பூலுக்கு, இதைப் பற்றி, ஏப்ரல் மாதம் தெரியப்படுத்தினார் ஸ்டோக். ஆனால் நெப்போலியனுக்கு உடலுக்கு ஒன்றுமில்லை என்று பிரதமரை நம்ப வைத்தார் லோவ்.

வசந்த காலத்துக்குள் நெப்போலியன் ஒரு மோசமான வியாதியால் தாக்கப்பட்டார். அது ஒருவேளை புற்றுநோயாகவோ அல்லது அல்சரின் காரணமாக ஏற்பட்ட ரத்தப்போக்காகவோ இருக்க வேண்டும். ஏப்ரல் கடைசி வாரத்தில் நெப்போலியன் ரத்த வாந்தி எடுக்கத் தொடங்கினார்.

வெளிச்சம் நிறைய இருப்பதால் தனது படுக்கையை வரவேற்பறைக்கு மாற்றும்படி அவர் கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு நாளும் உடல்நிலை மோசமடைந்த அவர் பலமுறை மயக்கமடைந்தார்.

1821-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி மாலை 5.50 மணிக்கு தனது இறுதி மூச்சை சுவாசித்தார் நெப்போலியன்.

c6f91bd0-2f32-11f0-b26b-ab62c890638b.jpg

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,நெப்போலியனின் மரணம் (ஸ்டீபென் சார்லஸ் டி வரைந்த ஓவியம்)

பாரீஸில் மறுஅடக்கம்

பின்னாட்களில் அவரது மரணத்துக்கான காரணங்கள் குறித்து ஒரு சர்ச்சை எழுந்தது. "அவர் தலைமுடியில் ஆர்செனிக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருடன் சென்ற கூட்டாளிகளில் ஒருவரான மார்சென், அவரது சில தலைமுடிகளை , ஞாபகார்த்தமாக எடுத்து வைத்திருந்தார். அதைப் பின்னர் அறிவியல் ரீதியாகப் பரிசோதித்த போது, நெப்போலியனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நிரூபிக்கப்பட்டது," என்று நெப்போலியனைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றில் எழுதுகிறார் ஆலன் ஃபாரஸ்ட்.

தான் இறந்த பிறகு பாரீஸில் புதைக்கப்பட வேண்டும் என்று தனது இறுதிநாட்களில் ஆசை தெரிவித்தார் நெப்போலியன். அப்போதைய பிரிட்டன் மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனால் அவரை செயின்ட் ஹெலனாவிலேயே புதைக்க முடிவு செய்யப்பட்டது. நெப்போலியனின் அரச பாதுகாவலர்களான 12 வீரர்கள் அவரது உடலைப் புதைப்பதற்காக எடுத்துச் சென்றபோது ஒட்டுமொத்த செயின்ட் ஹெலனா தீவின் மக்களும் இந்தக் காட்சியைக் காண வந்தது.

அவரது சவப்பெட்டி நீல வெல்வெட் துணியால் மூடப்பட்டிருந்தது. அதன் மேலே அவரது வாளும், கடிகாரமும் வைக்கப்பட்டிருந்தன.

அவர் புதைக்கப்பட்டு 18 ஆண்டுகள் கழித்து பிரான்ஸ் அரசராக இருந்த லூயி ஃபிலிப் ஆணையின் பேரில், செயின்ட் ஹெலனாவில் இருந்த அவரது கல்லறையில் இருந்து உடல் தோண்டி எடுக்கப்பட்டு , பாரீஸில் முழு அரச மரியாதையுடன் மறுஅடக்கம் செய்யப்பட்டது.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cqj702l744do

வொஷிங்டன் டிசி நகரில் துப்பாக்கி சூடு; இஸ்ரேலிய தூதரக ஊழியர் இருவர் உயிரிழப்பு!

3 weeks ago

New-Project-231.jpg?resize=750%2C375&ssl

வொஷிங்டன் டிசி நகரில் துப்பாக்கி சூடு; இஸ்ரேலிய தூதரக ஊழியர் இருவர் உயிரிழப்பு!

வொஷிங்டன் டிசி நகர மையத்தில் அமைந்துள்ள ஒரு யூத அருங்காட்சியகத்திற்கு வெளியே இரண்டு இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் (Kristi Noem) தெரிவித்துள்ளார்.

தலைநகர் யூத அருங்காட்சியகத்தில் நடந்த ஒரு நிகழ்விலிருந்து வெளியேறும் போது பாதிக்கப்பட்ட ஒரு ஆணும் பெண்ணும் சுட்டுக் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த தாக்குதல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாக சந்தேகிக்கப்படுகின்றது.

அந் நாட்டு நேரப்படி புதன்கிழமை (21) இரவு 9:05 மணிக்கு எஃப் தெருக் வடமேற்கில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

இது ஏராளமான சுற்றுலா தளங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களைக் கொண்ட பகுதி.

இதில் FBI இன் வொஷிங்டன் கள அலுவலகம் அடங்கும்.

துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் இஸ்ரேலிய தூதரகத்தின் பல ஊழியர்கள் ஒரு அருங்காட்சியக நிகழ்வில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2025/1432762

காசாவை எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம்; இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

3 weeks 1 day ago

காசாவை எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம்; இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

காசா முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7- ஆம் தேதி முதல் காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் அங்கு போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், இஸ்ரேல் – காசா இடையேயான முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த மார்ச் 1ஆம் தேதி முடிவுக்கு வந்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்த காலத்தை ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்கலாம் என்று அமெரிக்கா யோசனை தெரிவித்தது.

இதனை நிராகரித்துவிட்ட ஹமாஸ் அமைப்பு தங்கள் வசம் உள்ள பிணைக் கைதிகளை விடுவிக்கவும் மறுத்துவிட்டது. அதைத் தொடர்ந்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது. கடந்த மார்ச் 19ஆம் தேதி காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 436 பேர் கொல்லப்பட்டனர்.

இதன்பின்னரும் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடந்துவருகிறது. தற்போது, காசாவில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள நெதன்யாகு, ஹமாஸ் மீதான தாக்குதல் நடவடிக்கை விரிவாக்கப்பட்டுள்ளதாகவும், தாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம் எனவும் கூறியுள்ளார். மேலும், காசா முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/318197

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் அச்சுறுத்தல்; எண்ணெய் விலை உயர்வு!

3 weeks 1 day ago

New-Project-213.jpg?resize=750%2C375&ssl

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் அச்சுறுத்தல்; எண்ணெய் விலை உயர்வு!

ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் புதன்கிழமை (21) எண்ணெய் விலைகள் 1% க்கும் அதிகமாக உயர்ந்தன.

இது மத்திய கிழக்கு உற்பத்தி செய்யும் முக்கிய பிராந்தியத்தில் விநியோக கிடைப்பைப் பாதிக்கக்கூடும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது.

முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளரான பிரெண்ட் மசகு எண்ணெய் விலை 00.03 GMT மணியளவில் 86 காசுகள் அல்லது 1.32% உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு $66.24 ஆக இருந்தது.

அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை (WTI) மசகு எண்ணெய் 90 காசுகள் அல்லது 1.45% உயர்ந்து $62.93 ஆக இருந்தது.

அமெரிக்காவிற்கு கிடைத்த புதிய உளவுத்துறை தகவல்கள், இஸ்ரேல் ஈரானிய அணுசக்தி நிலையங்களைத் தாக்கத் தயாராகி வருவதாகக் கூறுகின்றன என்று, இந்த விடயத்தை நன்கு அறிந்த பல அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, CNN செவ்வாயன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், இது குறித்து இஸ்ரேலிய தலைவர்கள் இறுதி முடிவை எடுத்தார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அதிகாரிகளை மேற்கோள் காட்டி CNN மேலும் கூறியது.

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பின் உறுப்பினர்களில் ஈரான் மூன்றாவது பெரிய உற்பத்தியாளராக உள்ளது.

மேலும், இஸ்ரேலிய தாக்குதல் நாட்டிலிருந்து எண்ணெய் ஓட்டத்தை சீர்குலைக்கக்கூடும்.

சவுதி அரேபியா, குவைத், ஈராக் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை மசகு எண்ணெய் மற்றும் எரிபொருளை ஏற்றுமதி செய்யும் வளைகுடாவில் உள்ள ஹார்முஸ் நீரிணையின் வழியாக எண்ணெய் கப்பல் ஓட்டத்தைத் தடுப்பதன் மூலம் ஈரான் பதிலடி கொடுக்கக்கூடும் என்ற கவலையும் உள்ளது.

எனினும், மசகு எண்ணெய் விநியோகத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான சில அறிகுறிகளும் இருந்தன.

செவ்வாயன்று அமெரிக்க பெட்ரோலிய நிறுவனத்தின் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, கடந்த வாரம் அமெரிக்க மசகு எண்ணெய் கையிருப்பு உயர்ந்தது.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் நுகர்வோரான அமெரிக்காவில், மே 16 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் மசகு எண்ணெய் இருப்பு 2.5 மில்லியன் பீப்பாய்கள் அதிகரித்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத வட்டாரங்கள் தெரிவித்தன.

புதன்கிழமை பிற்பகுதியில் எரிசக்தி தகவல் நிர்வாகத்திடமிருந்து அமெரிக்க அரசாங்க எண்ணெய் இருப்பு தரவுகளையும் முதலீட்டாளர்கள் எதிர்நோக்குகின்றனர்.

மேலும், கஜகஸ்தானின் எண்ணெய் உற்பத்தி மே மாதத்தில் 2% அதிகரித்துள்ளது என்று ஒரு தொழில்துறை வட்டாரம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது.

இது OPEC+ இன் உற்பத்தியைக் குறைக்கும் அழுத்தத்தை மீறுவதாகும்.

https://athavannews.com/2025/1432604

ரஷ்யா மற்றும் சீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா புதிய திட்டம்!

3 weeks 1 day ago

trump.jpg?resize=720%2C375&ssl=1

ரஷ்யா மற்றும் சீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா புதிய திட்டம்!

சீனா, ரஷ்யாவை எதிர்கொள்ள ‘கோல்டன் டோம்’ எனப்படும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அமெரிக்க ஜனதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

சீனா மற்றும் ரஷ்யாவால் ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்காவை பாதுகாக்கும் நோக்கில், ‘கோல்டன் டோம்’ எனப்படும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் அமைக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

இந்த பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு 175 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

https://athavannews.com/2025/1432614

அரிசியை இலவசமாகப் பெற்ற விவகாரம்: ஜப்பானின் விவசாய அமைச்சர் இராஜினாமா!

3 weeks 1 day ago

download.webp?resize=750%2C375&ssl=1

அரிசியை இலவசமாகப் பெற்ற விவகாரம்: ஜப்பானின் விவசாய அமைச்சர் இராஜினாமா!

ஜப்பானின் விவசாய அமைச்சராக இருந்த டகு எடோ(Taku Eto) , “நான் அரிசியை வாங்குவதில்லை; ஆதரவாளர்களிடம் இருந்து இலவசமாகவே பெறுகிறேன்” எனத் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில்  தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

ஜப்பானில் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அமைச்சரின் இந்த கருத்து பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை  ஏற்படுத்தியிருந்தது.

இதேவேளை அவரது கருத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளும்  கடுமையான கண்டனம்  தெரிவித்திருந்தன. அத்துடன்  தாகு எதோவை பதவியில் இருந்து நீக்க நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

குறித்த விவகாரம்  ஜப்பான் பிரதமர் ஷிகெரு ஈஷிபா தலைமையிலான அரசாங்கத்திற்கு  பெரும் தலைவலியாக மாறியது.

இந்நிலையில் தான் தெரிவித்த  கருத்துதவறானது எனவும், அதற்காக வருந்துவதாகவும் தெரிவித்த டகு எடோ, விவசாய அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் ஷிஞ்ஜிரோ கோயிசுமி புதிய விவசாய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1432608

Checked
Thu, 06/12/2025 - 11:09
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe