உலக நடப்பு

ட்ரம்ப் – புட்டின் சந்திப்பு நிறுத்தி வைப்பு!

4 weeks 2 days ago

New-Project-228.jpg?resize=750%2C375&ssl

ட்ரம்ப் – புட்டின் சந்திப்பு நிறுத்தி வைப்பு!

உக்ரேனில் போரை தீர்ப்பது குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை (21) தெரிவித்தார்.

இந்த சந்திப்பு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. 

திகதி நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், அது ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இடையேயான அழைப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், ட்ரம்ப் – புட்டின் இடையிலான எதிர்கால சந்திப்பு தொடர்பான எந்த திட்டமும் இல்லை என்று பெயர் குறிப்பிட விரும்பாத வெள்ளை மாளிகையின் அதிகாரி ஒருவர் செவ்வாயன்று கூறியுள்ளார்.

அமைதிக்கான அமெரிக்கா மற்றும் ரஷ்ய திட்டங்களுக்கு இடையிலான முக்கிய வேறுபாடுகள் இந்த வாரம் பெருகிய முறையில் தெளிவாகத் தெரிந்தன.

இது ஒரு உச்சிமாநாட்டிற்கான வாய்ப்புகளை அழித்துவிட்டது போல் தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு உச்சிமாநாட்டின் போது ட்ரம்பும் புட்டினும் இறுதியாக அலாஸ்காவில் சந்தித்தனர்.

ஆனால் உறுதியான முடிவுகள் எதுவும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1450858

நெதன்யாகு கனடா நுழைந்தால் நிச்சயம் கைது செய்யப்படுவார்! - கனடா பிரதமர் எச்சரிக்கை

4 weeks 2 days ago

22 Oct, 2025 | 01:00 PM

image

நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றம் கடந்த ஆண்டு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்வதற்கான பிடியானை பிறப்பித்திருந்த நிலையில், தனி பாலஸ்தீன நாடு உருவாக்கத்துக்கு நெதன்யாகு தடையாக இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி, நெதன்யாகு கனடாவில் நுழைந்தால், அவர் சர்வதேச நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது செய்யப்படுவார் என எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

காசா மீது இஸ்ரேல் தொடுத்த போரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இப்போர்க்குற்றம் இடம்பெற்றதற்காக நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சர்வதேச நீதிமன்றம்  கடந்த ஆண்டு நெதன்யாகுவை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது.

அந்த பிடியாணை நிலுவையில் உள்ள நிலையில், தனி பாலஸ்தீன நாடு உருவாக்கத்துக்கு நெதன்யாகு தடையாக இருப்பதாக கனடா பிரதமர் குற்றஞ்சாட்டினார். அத்துடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கனடாவுக்குள் நுழைந்தால் நிச்சயமாக சர்வதேச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கைது செய்யப்படுவார் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். 

இதேபோன்று பிரான்ஸ், துருக்கி, பெல்ஜியம் உட்பட பல நாடுகள் சர்வதேச நீதிமன்றத்தின் பிடியாணை உத்தரவை நிறைவேற்றக் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/228368

போர் நிறுத்தத்தையும் மீறி காசாவில் மீண்டும் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்

4 weeks 2 days ago

போர் நிறுத்தத்தையும் மீறி காசாவில் மீண்டும் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்

22 Oct, 2025 | 11:21 AM

image

இஸ்ரேல் -  காசா போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னும், நேற்று (21) காசாவின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இஸ்ரேல் போர் விமானங்கள் காசாவில் குண்டு வீசி தாக்கியதாகவும் அங்கு தரைவழி தாக்குதலும் இடம்பெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

காசாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் இராணுவத்தினர் மீது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஹமாஸ் திடீரென தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு பதிலடியாகவே தாமும் தாக்குதல் மேற்கொண்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இஸ்ரேல் இராணுவத்தின் மீது தாம் எந்த வகையிலும் தாக்குதல் நடத்தவில்லை என ஹமாஸ் மறுத்துள்ளது. 

இந்நிலையில், இஸ்ரேல் இராணுவ தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் கடுமையான பதிலடி கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். 

போர் நிறுத்தம் அமுலில் உள்ள சூழ்நிலையில் காசாவில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இத்தகை சந்தர்ப்பத்தில் பாலஸ்தீனத்தில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள் குறித்து உலக நீதிமன்றம் ஆலோசனைக் கருத்தை வெளியிடவுள்ளது. 

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்தில் ஐ.நா. சபை, பிற சர்வதேச அமைப்புகள் மற்றும் மூன்றாம் நாடுகளின் இருப்பு மற்றும் செயற்பாடுகள் தொடர்பான இஸ்ரேலின் கடமைகள் குறித்து சர்வதேச நீதிமன்றம் இன்று (22) ஆலோசனைக் கருத்தை வெளியிடவுள்ளது என்பது தெரியவந்துள்ளது. 

காசாவில் இஸ்ரேல் இராணுவம் மற்றும் ஹமாஸ் இடையே இரண்டு ஆண்டுகளாக நடந்த போர் முடிவுக்கு வந்து கடந்த 10ஆம் திகதி முதல் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது.  இதனால் காசாவை விட்டு வெளியேறியிருந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். போர் முடிவுக்கு வந்ததையிட்டு அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இவ்வாறான சூழ்நிலையிலேயே போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி காசாவில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/228355#google_vignette

வர்த்தக ஒப்பந்தம் செய்யாவிட்டால் 155 வீத வரி: சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

1 month ago

21 Oct, 2025 | 12:53 PM

image

அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் சீனா கையெழுத்திடாவிட்டால், அந்த நாடு மீது 155 சதவீதம் வரை வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க வெள்ளை மாளிகையில் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், "சீனாவுடன் அமெரிக்கா மிகவும் மரியாதையுடன் நடந்து வருகிறது. அதேசமயம், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை எனது நிர்வாகம் பொறுத்துக்கொள்ளாது. சீனா ஏற்கனவே 55 சதவீத வரிகளைச் செலுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியும்" என்று குறிப்பிட்டார்.

மேலும், "சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், நவம்பர் முதலாம் திகதி முதல் சீனா 155 சதவீதம் வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும்" என்று திட்டவட்டமாக எச்சரித்தார்.

அத்துடன், அமெரிக்கா சீனப் பொருட்களுக்கு புதிய ஏற்றுமதித் தடைகளையும் விதிக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார். மலேசியாவில் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ள நிலையில், சீனா பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

"கடந்த காலங்களில் பல நாடுகள் அமெரிக்காவைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன, ஆனால் அந்தச் சகாப்தம் முடிந்துவிட்டது. இனி அவர்களால் சாதகமாகப் பயன்படுத்த முடியாது," என்றும் டிரம்ப் கூறினார்.

முக்கியமான கனிமங்களை வாங்குவது தொடர்பாக அவுஸ்திரேலியாவுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், சீனாவுக்கு இந்த கடுமையான எச்சரிக்கையை டிரம்ப் விடுத்துள்ளார். அண்மையில், அமெரிக்காவிடம் இருந்து சோயாபீன்ஸ்களை சீனா வாங்கவில்லை என்று டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/articles/cj3zm6gm46eo

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் தெரிவு!

1 month ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்ததை அடுத்து, பிரதமர் ஷிகெரு இஷிபா தமது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார்.

அதன் பின்னர், அக்கட்சியின் புதிய தலைவராக அமைச்சர் சனே டகாய்ச்சி (64) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வெற்றியைத் தொடர்ந்து லிபரல் ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து, அவர் பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படியே சனே டகாய்ச்சி பிரதமர் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பான் பாராளுமன்றில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கீழவையில் மொத்தம் உள்ள 465 வாக்குகளில் 237 வாக்குகளைப் பெற்று டகாய்ச்சி வெற்றி பெற்றார்.

இதையடுத்து, அவர் மேலவையில் நடத்தப்படும் வாக்கெடுப்பிலும் வெற்றி பெறும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதால் ஜப்பானின் புதிய பிரதமராக ஏற்றுக் கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் ஜப்பான் நாட்டின் 104வது பிரதமராக அவர் பதவி ஏற்க இருக்கிறார்.

இதன் மூலம் ஜப்பான் அரசியல் வரலாற்றில் பதவியேற்க உள்ள முதல் பெண் பிரதமர் என்ற பெயரையும், பெருமையையும் சனே டகாய்ச்சி பெறுகிறார்.

ஜப்பானின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படும் டகாய்ச்சி, மறைந்த இரும்பு சீமாட்டி என அறியப்படும் பிரித்தானிய பிரதமர் மார்க்ரட் தட்சரின் அரசியல் ரசிகையாக கருதப்படுகின்றார்

https://adaderanatamil.lk/news/cmh04iayb014gqplpa9n04kv7

சீனாவின் ஐந்தாண்டுத் திட்டம் உலகப் பொருளாதாரத்தையே மாற்றியது எப்படி? 3 தருணங்கள்

1 month ago

சீனா, ஐந்தாண்டு திட்டம், உலக பொருளாதாரம்

பட மூலாதாரம், AFP via Getty Images

கட்டுரை தகவல்

  • நிக் மார்ஷ்

  • பிபிசி செய்தி

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

சீனாவின் உயர்மட்டத் தலைவர்கள் பெய்ஜிங்கில் இந்த வாரம் கூடி, இந்த தசாப்தத்தின் மீதமுள்ள காலத்திற்கான நாட்டின் முக்கிய இலக்குகளைத் தீர்மானிக்க உள்ளனர்.

சீனாவின் மிக உயர்ந்த அரசியல் அமைப்பான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு ஒவ்வொரு ஆண்டும் கூடுகிறது. இந்தக் கூட்டம் ஒரு வாரம் நீடிக்கும்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், சீனாவின் அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்திற்கான அடிப்படையாக அமையும்.

2026 முதல் 2030 வரை, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா பின்பற்ற உள்ள திட்டத்தின் வழிகாட்டியாக இது இருக்கும்.

முழு ஐந்தாண்டுத் திட்டம் அடுத்த ஆண்டு தான் வெளியாகும்.

ஆனால், வரும் புதன்கிழமை அதிகாரிகள் இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களைப் பற்றிய தகவல்களை வழங்குவார்கள். அதன் பிறகு ஒரு வாரத்துக்குள் கூடுதல் விவரங்களையும் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

"மேற்கத்திய நாடுகளில், கொள்கைகள் தேர்தல் சுழற்சிகளால் இயங்குகின்றன. ஆனால், சீனாவில் திட்டமிடல், அடிப்படையில் இயங்குகிறது," என்கிறார் ஆசிய சமூகக் கொள்கை நிறுவனத்தின் சீன அரசியல் நிபுணர் நீல் தாமஸ்.

"ஐந்தாண்டுத் திட்டங்கள், சீனா எதை அடைய விரும்புகிறது என்பதையும், தலைமை எந்த திசையில் செல்ல விரும்புகிறது என்பதையும் காட்டுகின்றன. அரசின் வளங்கள் இந்த குறிக்கோள்களை அடைய வடிவமைக்கப்படுகின்றன," என்றும் அவர் கூறுகிறார்.

மேலோட்டமாகப் பார்த்தால், நூற்றுக்கணக்கான அதிகாரிகள் கைகுலுக்கி கூட்டம் நடத்துவது சாதாரணமான விஷயமாகத் தோன்றலாம். ஆனால் அவர்கள் எடுக்கும் முடிவுகள் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை வரலாறு நமக்குச் சொல்கிறது.

சீனாவின் ஐந்தாண்டுத் திட்டங்கள் உலகப் பொருளாதாரத்தை மாற்றிய மூன்று முக்கிய தருணங்களை இங்கே பார்க்கலாம்.

1981-84: "சீர்திருத்தம் மற்றும் புதுமை"

சீனா ஒரு பொருளாதார வல்லரசாக எப்போது மாறத் தொடங்கியது என்று சரியாகக் கூறுவது கடினம். ஆனால், பலர் 1978 டிசம்பர் 18-ஐ முக்கியமான தருணமாகக் கருதுகின்றனர்.

அதற்கு முன், 30 ஆண்டுகளாக சீனாவின் பொருளாதாரம் அரசின் கடுமையான கட்டுப்பாட்டில் இருந்தது. சோவியத் பாணியில் அமைந்த திட்டமிடல் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவில்லை. பலர் வறுமையில் வாடினர்.

மாவோ சேதுங்கின் கடுமையான ஆட்சியிலிருந்து சீனா மெதுவாக மீண்டு வந்த சமயம் அது.

மாவோ சேதுங் ஆட்சியில், 'மகா முன்னேற்றம்' மற்றும் 'கலாசாரப் புரட்சி' போன்ற திட்டங்கள் பொருளாதாரத்தையும் சமூகத்தையும் மாற்ற முயன்றன, ஆனால் கோடிக்கணக்கான உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தன.

பெய்ஜிங்கில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சீனாவின் புதிய தலைவர் டெங் ஜியோ பிங், 'சுதந்திர சந்தைக் கொள்கைகளை ஏற்க வேண்டிய நேரம் இது' என்று அறிவித்தார்.

அவரது "சீர்திருத்தமும் புதுமையும்" (Reform and Opening Up) என்ற கொள்கை, 1981-இல் தொடங்கிய அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய அங்கமாக மாறியது.

சுதந்திர வர்த்தகத்திற்காக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. இவை வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து, சீன மக்களின் வாழ்க்கையை மாற்றின.

சீனா, ஐந்தாண்டு திட்டம், உலக பொருளாதாரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெங் ஜியோ பிங் தொடங்கிய சீனாவின் பொருளாதார திட்டம், 1979ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் கார்டருடன் கையெழுத்தான ஒரு முக்கியமான ஒப்பந்தத்தையும் உள்ளடக்கியது.

அந்த ஐந்தாண்டுத் திட்டத்தின் இலக்குகளை இதைவிட சிறப்பாக நிறைவேற்றியிருக்க முடியாது என்கிறார் தாமஸ் .

"மக்களால் கற்பனை செய்ய முடியாத அளவு சீனா வளர்ந்தது. தேசிய பெருமையையும், உலக வல்லரசுகளில் தனது இடத்தையும் சீனா உறுதிப்படுத்தியது," என்கிறார் நீல் தாமஸ்.

இந்த மாற்றங்கள் உலக பொருளாதாரத்தை மாற்றின.

21-ஆம் நூற்றாண்டில், மேற்கத்திய நாடுகளின் லட்சக்கணக்கான உற்பத்தி தொழில்கள் சீனாவின் கடலோர தொழிற்சாலைகளுக்கு மாற்றப்பட்டன.

பொருளாதார வல்லுநர்கள் இதை "சீன அதிர்வு" (The China Shock) என்று அழைக்கிறார்கள்.

இது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பழைய தொழில்துறை மையங்களில் சில கட்சிகளின் எழுச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது.

உதாரணமாக, டொனால்ட் டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகள், குறிப்பாக அவரது சுங்க வரிகள் மற்றும் வர்த்தகப் போர்கள், கடந்த சில ஆண்டுகளில் சீனாவுக்குச் சென்ற அமெரிக்க உற்பத்தி பணிகளை மீண்டும் அமெரிக்காவுக்கே கொண்டுவரும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன.

2011-15: "உத்தி சார்ந்து வளர்ந்து வரும் தொழில்கள்"

2001-இல் சீனா உலக வர்த்தக அமைப்பில் (WTO) இணைந்தபோது, 'உலகின் உற்பத்தி மையம்' என்ற அந்தஸ்தை உறுதிப்படுத்தியது. ஆனால், நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அடுத்த கட்டத்தைத் திட்டமிட்டது.

சீனா "நடுத்தர வருமானப் பொறி"யில் (Middle Income Trap) சிக்க விரும்பவில்லை. இது, ஒரு நாடு வளர்ச்சியடைந்த, அதேநேரம் மேம்பட்ட பொருளாதார நாடுகளைப் போல உயர்தரப் பொருட்கள் மற்றும் சேவைகளை உருவாக்கும் புதுமைத் திறன் இல்லாதபோது ஏற்படும் சிக்கல்.

எனவே, மலிவான உற்பத்திக்கு பதிலாக, சீனா "உத்தி சார்ந்து வளர்ந்து வரும் தொழில்கள்" (Strategic Emerging Industries) என்ற கருத்தை 2010-இல் அறிமுகப்படுத்தியது. இதில் மின்சார வாகனங்கள் (EVs) மற்றும் சோலார் பேனல்கள் போன்ற பசுமை தொழில்நுட்பங்கள் முக்கியமாக இருந்தன.

மேற்கத்திய நாடுகளில் காலநிலை மாற்றம் முக்கியத்துவம் பெற்ற போது, சீனா இந்தத் துறைகளில் மிகப்பெரிய வளங்களை முதலீடு செய்தது.

இன்று, சீனா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சார வாகன உற்பத்தியில் உலக நாடுகளில் முன்னிலை வகிக்கிறது.

இவற்றை உருவாக்கத் தேவையான அரிய தாதுக்களின் (Rare Earth Elements) விநியோகச் சங்கிலியில் கிட்டத்தட்ட முழு கட்டுப்பாட்டையும் சீனா பெற்றுள்ளது.

இந்த அரிய தாதுக்கள் சிப் தயாரிப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறைகளுக்கு முக்கியமானவை. இந்த வளங்களின் மீதான சீனாவின் கட்டுப்பாடு, அதனை உலகளவில் மிகவும் சக்திவாய்ந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

சமீபத்தில், அரிய தாதுக்களின் ஏற்றுமதியைக் சீனா கட்டுப்படுத்தியது. இந்த முடிவை, டொனால்ட் டிரம்ப் "உலகை சிறைப்பிடிக்கும் முயற்சி" என்று விமர்சித்தார்.

"உத்தி சார்ந்து எழுச்சி பெறும் சக்திகள்" (Strategic Emerging Forces) என்ற கருத்து 2011-ஆம் ஆண்டு ஐந்தாண்டுத் திட்டத்தில் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றிருந்தாலும், பசுமை தொழில்நுட்பத்தை வளர்ச்சி மற்றும் உலக அரசியல் சக்தியின் புதிய இயந்திரமாகப் பார்க்கும் சிந்தனையை சீனாவின் அப்போதைய தலைவர் ஹு ஜின்டாவோ 2000-களின் தொடக்கத்திலேயே முன்வைத்திருந்தார்.

"சீனா தனது பொருளாதாரத்திலும், தொழில்நுட்பத்திலும், தன்னம்பிக்கையுடனும் தனித்துவம் மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் புதிது அல்ல. அது சீன கம்யூனிஸ்ட் கட்சி சித்தாந்தத்தின் அடிப்படை கூறாகவே உள்ளது," என்று நீல் தாமஸ் விளக்குகிறார்.

2021-2025: "உயர்தர மேம்பாடு"

2017-ஆம் ஆண்டு ஜின்பிங் அறிமுகப்படுத்திய "உயர்தர வளர்ச்சி" (High Quality Development) என்ற கருத்து, சமீபத்திய ஐந்தாண்டுத் திட்டங்கள் அதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியிருப்பது ஏன் என்று விளக்குகின்றன.

தொழில்நுட்ப துறையில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு சவால் விடுத்து, சீனாவை அந்த துறையில் முன்னிலை பெறச் செய்வது தான் இதன் நோக்கம்.

வீடியோ பகிர்வு செயலியான டிக்‌டாக் (TikTok), தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாய் (Huawei), மற்றும் டீப்சீக் (DeepSeek) எனப்படும் செயற்கை நுண்ணறிவு மாடல் போன்ற உள்நாட்டு தயாரிப்புகள், இந்த நூற்றாண்டில் சீனாவின் அதிவேக தொழில்நுட்ப வளர்ச்சிக்கான சான்றுகளாகத் திகழ்கின்றன.

ஆனால் மேற்கத்திய நாடுகள் சீன தொழில்நுட்பத்தை அவற்றின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதுகின்றன.

இதனால், சீன தொழில்நுட்பங்களுக்கு தடைகள் விதிக்கப்பட்டன. இது உலகளவில் கோடிக்கணக்கான இணையப் பயனர்களைப் பாதித்ததுடன், கடுமையான ராஜ்ஜீய மோதல்களையும் உருவாக்கியது.

சீனா, ஐந்தாண்டு திட்டம், உலக பொருளாதாரம்

பட மூலாதாரம், Grigory Sysoev/RIA Novosti/Pool/Anadolu via Getty Images

படக்குறிப்பு, 2017-ஆம் ஆண்டு ஜின்பிங் அறிமுகப்படுத்திய "உயர்தர வளர்ச்சி" என்ற கருத்து

இதுவரை சீனா தனது தொழில்நுட்ப வளர்ச்சியை அமெரிக்காவின் புதுமையான கண்டுபிடிப்புகள், குறிப்பாக என்விடியாவின் மேம்பட்ட செமிகன்டக்டர்கள் (advanced semiconductors) மூலம் முன்னெடுத்தது.

தற்போது அவற்றை சீனாவிற்கு விற்பனை செய்யும் திட்டத்தை அமெரிக்கா தடுத்து விட்டதால், "உயர்தர வளர்ச்சி" என்ற பழைய முழக்கம், 2023ஆம் ஆண்டு ஜின்பிங் அறிமுகப்படுத்திய "புதிய தரமான உற்பத்தி" என்ற புதிய முழக்கமாக மாறும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்த புதிய முழக்கம், உள்நாட்டு பெருமையும் தேசிய பாதுகாப்பையும் முக்கியமாகக் கொண்டது.

அதாவது, மேற்கத்திய தொழில்நுட்பத்தைச் சார்ந்திருக்காமல் , தடைகளால் பாதிக்கப்படாமல், சிப் தயாரித்தல், கணினிமயமாக்கல், செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றில் சீனாவை முன்னணியில் நிலைநிறுத்துவதே இதன் நோக்கம்.

இந்நிலையில், அனைத்து துறைகளிலும், குறிப்பாக புதுமையான கண்டுபிடிப்புகளில் தன்னிறைவு (self-sufficiency) அடைவது, அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"தேசிய பாதுகாப்பும் சுயாதீனமான தொழில்நுட்ப மேம்பாடுகளும் இப்போது சீனாவின் பொருளாதாரக் கொள்கையின் முக்கிய நோக்கமாக மாறியுள்ளன," என்று நீல் தாமஸ் விளக்குகிறார்.

"இது, மீண்டும் சீனாவில் கம்யூனிசத்துக்கு அடிப்படையாக உள்ள தேசியவாத கருத்துக்குத் திரும்பி, வெளிநாட்டு ஆதிக்கத்திற்கு சீனா மீண்டும் இடமளிக்காது என்பதை உறுதி செய்கிறது," என்றும் அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5yp7kx1z5eo

பாரிஸ் அருங்காட்சியகத்தில் சினிமா பாணியில் கொள்ளை - வெறும் 7 நிமிடங்களில் நடந்தது என்ன?

1 month ago

பிரான்ஸ், பாரிஸ், நகை கொள்ளை, லூவ்ர் அருங்காட்சியகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லூவா அருங்காட்சியகம்

கட்டுரை தகவல்

  • இயன் ஐக்மேன்

  • ரேசல் ஹாகன்

  • 20 அக்டோபர் 2025, 04:14 GMT

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் சினிமா பாணியில் துணிகர கொள்ளை நடந்துள்ளது. இதில், பிரான்சின் மதிப்பு மிக்க அரச குடும்ப நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை தொடர்ந்து அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

உலகில் அதிக சுற்றுலாப் பயணிகளை வரும் இந்த அருங்காட்சியகத்தில் பட்டப்பகலில் நுழைந்த கொள்ளையர்கள் மிகவும் விலையுயர்ந்த 8 நகைகளை திருடிவிட்டு ஸ்கூட்டர்களில் தப்பிச் சென்றனர்.

சினிமா பாணியில் நடந்தேறியுள்ள இந்த கொள்ளை பிரான்ஸையே உலுக்கியுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவத்தில் தற்போது வரை நடந்தது என்ன?

பிரான்ஸ், பாரிஸ், நகை கொள்ளை, லூவ்ர் அருங்காட்சியகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, திருடர்கள் பால்கனி வழியாக அப்போலோ காட்சி கூடத்தை அடைந்தனர்.

கொள்ளை எப்படி நடந்தது?

ஞாயிற்றுக்கிழமை பார்வையாளர்களுக்காக அருங்காட்சியகம் திறந்த சில நிமிடங்களிலே 09:30 மணியிலிருந்து 09:40 மணிக்குள் இந்த கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.

நான்கு கொள்ளையர்கள் வாகனத்தில் பொருத்தப்பட்ட இயந்திர ஏணியைப் பயன்படுத்தி செய்ன்(Seine) நதிக்கு அருகே உள்ள பால்கனி வழியாக அருங்காட்சியகத்தின் அப்போலோ காட்சி கூடத்தை அடைந்தனர்.

வாகனத்தில் பொருத்தப்பட்ட ஏணி ஒன்று முதல் தளத்தின் ஜன்னல் வரை இருப்பதை சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் மூலம் காண முடிகிறது.

இரண்டு கொள்ளையர்கள் பேட்டரியால் இயங்கும் கட்டர்களைப் பயன்படுத்தி கண்ணாடி தகட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

பின்னர் அங்கு பணியிலிருந்த காவலர்களை அச்சுறுத்தி அந்த தளத்தை காலி செய்ய வைத்துவிட்டு, இரண்டு காட்சி பெட்டிகளில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

பிரான்ஸ், பாரிஸ், நகை கொள்ளை, லூவ்ர் அருங்காட்சியகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொள்ளையர்கள் பயன்படுத்திய ஏணி

அருங்காட்சியகத்தில் உள்ள எச்சரிக்கை மணி ஒலித்ததைத் தொடர்ந்து பணியாளர்கள் நெறிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பு படைகளை அழைத்தனர் என கலாச்சாரத் துறை அறிக்கை மூலம் கூறியுள்ளது.

கொள்ளையில் ஈடுபட்ட குழுவினர் அவர்கள் வந்த வாகனத்திற்கு தீ வைக்க முயன்ற போது அருங்காட்சியக ஊழியரின் தலையீட்டால் தடுக்கப்பட்டது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஎஃப்1 செய்தி ஊடகத்திடம் பேசிய கலாச்சாரத் துறை அமைச்சர் ரச்சிதா, "கொள்ளைச் சம்பவத்தின் காட்சிகள், கொள்ளையர்கள் அமைதியாக வந்து நகைகள் இருந்த காட்சி பெட்டிகளை உடைக்க ஆரம்பித்ததைக் காட்டுகின்றன" எனத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை, "வன்முறை இல்லாமல் இந்த கொள்ளை நடத்தப்பட்டுள்ளது." என தாடி தெரிவித்தார்.

கொள்ளையர்கள் மிகவும் "அனுபவம் வாய்ந்தவர்கள்" போல தெரிந்ததாக கூறும் அவர், இரு சக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல வேண்டும் என்கிற மிகவும் தெளிவான திட்டத்தோடு வந்துள்ளனர் என்றார்.

பிரான்ஸ், பாரிஸ், நகை கொள்ளை, லூவ்ர் அருங்காட்சியகம்

காவல்துறை அதிகாரிகள் சிசிடிவி காட்சி அடிப்படையில் சந்தேகத்திற்கிடமான நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பிரான்ஸ் இண்டர் ரேடியோவில் பேசிய அந்நாட்டின் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ், "இந்தச் சம்பவம் மிகமிக வேகமாக நடைபெற்றது, வெறும் ஏழே நிமிடங்களில் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்." எனத் தெரிவித்தார்.

அருங்காட்சியகம் காலி செய்யப்பட்ட போது "மிகவும் பதற்றம்" நிறைந்து காணப்பட்டதாக கொள்ளைச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் குறிப்பிட்டார். அதன் பின்னர் அருங்காட்சியகத்தின் நுழைவுவாயில் மெட்டல் கதவுகளைக் கொண்டு மூடப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

திருடப்பட்ட நகைகள் எவை?

அருங்காட்சியகத்திலிருந்து கிரீடங்கள், நெக்லஸ், காதணிகள் மற்றும் ப்ரூச்கள் உள்ளிட்ட எட்டு பொருட்கள் திருடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நகைகள் அனைத்தும் பிரெஞ்சு மன்னர்கள் வசம் இருந்தவை.

திருடு போன நகைகளின் பட்டியலை பிரான்ஸ் கலாசார அமைச்சகம் வெளியிட்டுள்ளது, அவை

  • மூன்றாம் நெப்போலியனின் மனைவியும் அரசியுமான யூஜினிக்குச் சொந்தமான கிரீடமும் அணிகலன்

  • அரசர் மேரி லூயிசிற்கு சொந்தமான மரகத நெக்லஸ் மற்றும் ஒரு ஜோடி மரகத காதணிகள்

  • அரசி மேரி அமீலி மற்றும் ஹார்டென்சுக்கு சொந்தமான நெக்லஸ், கிரீடம் மற்றும் ஒற்றைக் காதணி

  • "ரெலிகுவரி ப்ரூச்" என அழைக்கப்படும் நகை

இந்த நகைகளுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான வைரங்களும் இதர விலை மதிக்க முடியாத ரத்தின கற்களும் இடம்பெற்றுள்ளன.

அரசி யூஜினின் கிரீடம் உட்பட இரண்டு பொருட்கள் சம்பவ இடத்திற்கு அருகே கிடந்தன. அவை தப்பிச் செல்லும்போது தவறவிடப்பட்டிருக்கலாம். அந்த நகைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

திருடப்பட்ட நகைகள் "விலைமதிக்க முடியாதவை" மற்றும் "அளவிட முடியாத பாரம்பரிய மதிப்பை" கொண்டவை எனக் குறிப்பிட்டார் நுனெஸ்.

முன்னர் இதுபோன்ற கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளதா?

1911-ஆம் ஆண்டு இத்தாலி நாட்டைச் சேர்ந்த அருங்காட்சியக பணியாளர் ஒருவர் மோனாலிசா ஓவியத்தை சுவரிலிருந்து அகற்றி அவர் அணிந்திருந்த கோட்டிற்கு அடியில் வைத்து எடுத்துச் சென்றார். அப்போது மோனாலிசா ஓவியம் பிரபலமாகியிருக்கவில்லை.

பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து ஓவியம் மீட்கப்பட்டது. லியோனார்டோ டவின்சியின் இந்த ஓவியம் இத்தாலிக்குச் சொந்தமானது என நம்பியதால் அதனை திருடியதாக அருங்காட்சியக பணியாளர் ஒப்புக்கொண்டார்.

தற்போது மோனாலிசா ஓவியத்தை யாரும் திருட முயற்சிப்பதில்லை. அருங்காட்சியத்தில் உள்ளதிலேயே மிகவும் பிரபலமான மோனாலிசா ஓவியம் மிகவும் பாதுகாக்கப்பட்ட கண்ணாடி அறையில் இருக்கிறது.

1998-ஆம் ஆண்டு கமில் கோரோட் வரைந்த 19-ஆம் நூற்றாண்டு ஓவியமான 'லே செமின் தி செவ்ரே' திருடப்பட்டு பின்னர் கண்டுபிடிக்கப்படவே இல்லை. அதன் பிறகு அருங்காட்சியகத்தின் பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட்டது.

சமீபத்தில் பிரெஞ்சு அருங்காட்சியகங்களைக் குறிவைத்து தொடர் கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

கடந்த மாதம் லிமோஜஸில் உள்ள அட்ரியன் துபோச் அருங்காட்சியகத்தில் நுழைந்த திருடர்கள் 11 மில்லியன் டாலர் மதிப்புள்ள பீங்கான் பொருட்களை திருடிச் சென்றனர்.

2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பாரிசில் உள்ள காக்னாக்-ஜே அருங்காட்சியகத்திலிருந்து "மிகவும் வரலாற்று மற்றும் பாரம்பரிய மதிப்புள்ள" ஏழு பொருட்களை திருடப்பட்டது. அவற்றில் ஐந்து பொருட்கள் சில நாட்கள் கழித்து மீட்கப்பட்டன.

அதே மாதம் புர்கண்டியில் உள்ள ஹிரோன் அருங்காட்சியகத்தில் நுழைந்த ஆயுதமேந்திய திருடர்கள் பல மில்லியன் பவுண்ட்கள் மதிப்புள்ள 20-ஆம் நூற்றாண்டு கலைப் பொருட்களை திருடிச் சென்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5ydvg38dvzo

அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக லட்சக்கணக்கானோர் போராட்டம் - என்ன நடக்கிறது?

1 month ago

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், டிரம்புக்கு எதிராக போராட்டம்

பட மூலாதாரம், FREDERIC J. BROWN/AFP via Getty Images

படக்குறிப்பு, லாஸ் ஏஞ்சலிஸில் நடைபெற்ற போராட்டத்தில் டிரம்ப் உருவிலான பலூன்களை போராட்டக்காரர்கள் எடுத்து வந்தனர்.

19 அக்டோபர் 2025, 07:15 GMT

புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகளுக்கு எதிராக நியூயார்க், வாஷிங்டன் டிசி, சிகாகோ, மயாமி மற்றும் லாஸ் ஏஞ்சலிஸ் உட்பட பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சனிக்கிழமை காலை நியூயார்க்கின் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

தெருக்களிலும் மெட்ரோ ரயில் நிலையங்களின் வாசல்களிலும், "மன்னராட்சி அல்ல, ஜனநாயகம்," மற்றும் "அரசியலமைப்பு விருப்பத்தேர்வு அல்ல," என்கிற பதாகைகளை ஏந்திய போராட்டக்காரர்கள் நிரம்பி வழிந்தனர்.

போராட்டங்களுக்கு முன்பு அதில் ஈடுபடுவர்கள் தீவிர இடதுசாரி ஆன்டிஃபா இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என டிரம்பின் கூட்டாளிகள் குற்றம்சாட்டி வந்தனர். இந்தப் பேரணிகள் 'அமெரிக்க வெறுப்பு பேரணிகள்' எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

ஆனால் சனிக்கிழமை பேரணிகள் அமைதியாக நடைபெற்றதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

"நோ கிங்ஸ் (மன்னர்கள் இல்லை)" என்கிற பெயரில் நடைபெறும் இந்த நிகழ்வுகளில் அடிப்படை கொள்கை என்பது அஹிம்சை தான் என அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போராட்டங்களில் கலந்து கொள்பவர்கள் சாத்தியமான மோதல்களை தவிர்க்குமாறும் கூறப்பட்டுள்ளது.

நியூயார்க் பேரணியில் கலந்து கொண்டவர்கள் மேளதாளங்களுக்கு மத்தியில் "இது தான் ஜனநாயகம் போல் இருக்கிறது" என முழக்கங்களை எழுப்பி வந்தனர்.

வானத்தில் ஹெலிகாப்டர்களும் டிரோன்களும் பறந்த நிலையில் காவல்துறையினர் சாலையோரமாக நின்றிருந்தனர்.

நகரின் ஐந்து பகுதிகளில் கிட்டத்தட்ட 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அமைதியான முறையில் போராட ஒருங்கிணைந்திருந்ததாகவும் போராட்டம் தொடர்பாக எந்த கைதும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் நியூயார்க் காவல்துறை தெரிவித்துள்ளது.

டைம்ஸ் சதுக்கத்தில் பணியிலிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் அங்கு 20,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கிறார்.

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், டிரம்புக்கு எதிராக போராட்டம்

பட மூலாதாரம், Stephani Spindel/VIEWpress

படக்குறிப்பு, டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் "ஃபாசிசம் மற்றும் எதேச்சதிகாரத்தை நோக்கிய நகர்வைக்" கண்டு கோபமும் கவலையும் அடைந்ததால் நியூயார்க் போராட்டத்தில் கலந்து கொண்டதாக பகுதி நேர எழுத்தாளரும் ஆசிரியருமான பெத் ஜாஸ்லோஃப் தெரிவித்தார்.

"நியூயார்க் நகரைப் பற்றி நான் மிகவும் அக்கறைப்படுகிறேன். இங்கு பலருடன் இருப்பது எனக்கு நம்பிக்கை அளிக்கிறது." என்றும் தெரிவித்தார்.

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், டிரம்புக்கு எதிராக போராட்டம்

பட மூலாதாரம், Grace Eliza Goodwin/BBC

படக்குறிப்பு, நியூயார்கில் நடைபெற்ற போராட்டத்தில் எழுத்தாளர் பெத் ஜாஸ்லோஃப் கலந்து கொண்டிருந்தார்.

ஜனவரி மாதம் மீண்டும் அதிபராக பதவியேற்றதிலிருந்து அதிபருக்கான அதிகாரத்தை விரிவுபடுத்தியுள்ளார் டிரம்ப், மத்திய அரசாங்கத்தின் அங்கங்களை நிர்வாக உத்தரவுகளைப் பயன்படுத்தி கலைப்பது மற்றும் மாகாண ஆளுநர்களின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நகரங்களில் படைகளை குவிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

தனது அரசியல் எதிரிகள் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை அமைப்புகளின் அதிகாரிகளுக்கும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

தன்னை சர்வாதிகாரி அல்லது ஃபாசிஸ்ட் என அழைப்பதை நகைப்பிற்குரியது எனக் கூறும் டிரம்ப் நெருக்கடியில் இருக்கும் நாட்டை மீண்டும் கட்டமைக்க தனது நடவடிக்கைகள் அவசியமானது எனத் தெரிவிக்கிறார்.

ஆனால் டிரம்ப் அரசின் சில நடவடிக்கைகள் அரசியலமைப்பிற்கு விரோதமானவை என்றும் அமெரிக்க ஜனநாயகத்திற்கே ஆபத்தானவை என்றும் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.

இத்தாலியில் பிறந்து வளர்ந்தவரும் நியூஜெர்சிவாசியுமான 68 வயதான மின்னணு பொறியாளர் மாசிமோ மாஸ்கோலி போராட்டத்தில் கலந்து கொண்டார். கடந்த நூற்றாண்டில் அவரின் சொந்த நாடு (இத்தாலி) சென்ற பாதையில் அமெரிக்காவும் செல்வதால் கவலையடைந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

"முசோலினியின் ராணுவத்தை உதறித்தள்ளி புரட்சி இயக்கத்தில் சேர்ந்த இத்தாலிய ஹீரோவின் உறவினர் நான். அவர் ஃபாசிஸ்டுகளால் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். 80 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் மீண்டும் ஃபாசிசத்தைக் காண்பேன் என நான் நினைத்திருக்கவில்லை." என மாஸ்கோலி தெரிவித்தார்.

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், டிரம்புக்கு எதிராக போராட்டம்

பட மூலாதாரம், Grace Eliza Goodwin/BBC

படக்குறிப்பு, நியூயார்க் போராட்டத்தில் கலந்து கொண்ட இத்தாலிய அமெரிக்கரான மாசிமோ மாஸ்கோலி அமெரிக்காவில் ஃபாசிசம் அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்தார்.

டிரம்பின் நடவடிக்கைகளில் குறிப்பாக புலம்பெயர்ந்தோரை கைது செய்வது மற்றும் லட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கான சுகாதார காப்பீட்டை ரத்து செய்வது கவலையளிப்பதாக மாஸ்கோலி தெரிவிக்கிறார்.

"நாம் உச்சநீதிமன்றத்தை நம்பியிருக்க முடியாது, நாம் அரசாங்கத்தை நம்பியிருக்க முடியாது. நாம் நாடாளுமன்றத்தை நம்பியிருக்க முடியாது. அரசு, நிர்வாகம், நீதித்துறை என அனைத்தும் தற்போது அமெரிக்க மக்களுக்கு எதிராக உள்ளன. எனவே தான் நாங்கள் போராடுகிறோம்," என அவர் பிபிசியிடம் தெரிவித்தார். "

செனட் சிறுபான்மை பிரிவு தலைவரும் நியூயார்க் குடியரசு கட்சியைச் சேர்ந்தவருமான சுக் ஷூமரும் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

"அமெரிக்காவில் சர்வாதிகாரிகள் கிடையாது, டிரம்ப் நமது ஜனநாயகத்தை அழிக்க நாம் அனுமதிக்கமாட்டோம்," என ஷுமர் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருந்தார். போராட்டத்தில் "சுகாதாரத் துறை நெருக்கடியை சரி செய்யுங்கள்" என்கிற பதாகையுடன் அவர் கலந்து கொண்ட புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தார்.

வெர்மாண்டைச் சேர்ந்த செனட் சபை உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ் வாஷிங்டனில் தலைமை உரையாற்றினார்.

"நாங்கள் அமெரிக்காவை வெறுப்பதால் இங்கு வரவில்லை, அமெரிக்காவை நேசிப்பதால் தான் இங்கு வந்துள்ளோம்," என தனது உரையில் குறிப்பிட்டார்.

வாஷிங்டனில் நடைபெற்ற போராட்டத்தில் டிரம்பின் 'மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன்' வாசகம் பொறிக்கப்பட்டிருந்த தொப்பி அணிந்த ஒருவரை பிபிசி கண்டது. ஒரு வேலையாக நகரத்துக்கு வந்த அவர், போராட்டத்தைக் காணலாம் என முடிவு செய்திருக்கிறார். தனது பெயரைக் கூற மறுத்த அவர் தனக்கு ஒன்றும் புரியவில்லையென்றும் மக்கள் மிகவும் அமைதியாக இருந்ததாகவும் குறிப்பிட்டார். சிறிது நேரத்தில் கூட்டத்தில் ஒரு பெண் அவருக்கு எதிராக அவதூறான கோஷத்தை எழுப்பினார்.

இந்தப் போராட்டங்கள் அமெரிக்காவில் மட்டும் நடைபெறவில்லை.

ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி போன்ற பல ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்க மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பேரணிகள் நடைபெற்றன. லண்டனிலும் அமெரிக்க தூதரகத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கூடினர்.

கனடாவின் டொராண்டோ நகரிலும் அமெரிக்க தூதரகம் அருகில் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது "கனடாவிலிருந்து கையை எடுங்கள்" என்கிற பதாகையை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், டிரம்புக்கு எதிராக போராட்டம்

பட மூலாதாரம், Wiktor Szymanowicz/Future Publishing via Getty Images

படக்குறிப்பு, லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியே நடைபெற்ற போராட்டம்

ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியில் வெளியாகவுள்ள நேர்காணலில் டிரம்ப் போராட்டங்கள் மற்றும் பேரணிகள் பற்றி பேச இருக்கிறார்.

"மன்னரா! இவை அனைத்தும் நாடகமே. என்னை மன்னர் எனக் குறிப்பிடுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும் அல்லவா. நான் மன்னர் கிடையாது." என நேர்காணலின் முன்னோட்டத்தில் அவர் தெரிவித்திருந்தார்.

கன்சாஸ் செனட்டர் ரோஜர் மார்ஷல் பேரணிக்கு முன்பாக சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "படையினரை வெளியேற்ற வேண்டும். அது அமைதியாக நடக்கும் என நம்புகிறேன். ஆனால் எனக்கு சந்தேகம் உள்ளது." எனத் தெரிவித்தார்.

அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் பொறுப்பில் உள்ள குடியரசு கட்சியின் ஆளுநர்கள் போராட்டங்களுக்கு முன்பாக தேசிய படைகளை தயார் நிலையில் வைத்திருந்தனர்.

வியாழக்கிழமை டெக்சாஸ் மாகாண ஆளுநர் கிரேக் அபாட், ஆஸ்டின் பகுதியில் ஆன்டிஃபா போன்ற போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதால் தேசிய படைகள் தேவைப்படும் எனக் கூறி அவர்களை அழைத்துள்ளார்

இந்த நகர்வை, மாகாணத்தின் மூத்த ஜனநாயக கட்சி தலைவர் ஜீன் வூ உள்ளிட்ட பலரும் நிராகரித்துள்ளனர். "அமைதியான போராட்டங்களை ஒடுக்க ஆயுதமேந்திர ராணுவ வீரர்களை அனுப்புவது என்பதை மன்னர்களும் சர்வாதிகாரிகளுமே செய்வார்கள் - கிரேக் அபாட் தானும் சர்வாதிகாரிகளில் ஒருவர் என்பதை நிருபித்துள்ளார்." எனத் தெரிவித்தார்.

வெர்ஜீனியா மாகாணத்தின் குடியரசு கட்சியைச் சேர்ந்த ஆளுநரான கிளென் யங்கின்னும் தேசிய படைகளை நிறுத்த உத்தரவிட்டிருந்தார். ஆனால் போராட்டத்தின்போது படைகள் இல்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், டிரம்புக்கு எதிராக போராட்டம்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, வாஷிங்டனில் நடைபெற்ற போராட்டம்

வாஷிங்டனில் டிரம்பின் கோரிக்கைக்கு இணங்க கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தேசிய படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் போராட்டம் நடந்த இடத்தில் அவர்கள் இல்லை, சில உள்ளூர் காவல்துறையினர் மட்டும் இருந்தனர்.

வாஷிங்டனில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட ஒருவர் "நான் தான் ஆன்டிஃபா" எனக் கூறும் பதாகையை வைத்திருந்தார்.

76 வயதான சுக் எப்ஸ் அது மிகவும் அர்த்தம் பொதிந்த பதம் என்றார். அதன் அர்த்தம், "அமைதி, சுகாதார காப்பீடு, வாழ்வதற்கான ஊதியம், வாழ்வாதாரம், புலம்பெயர்ந்தோர் மற்றும் பிற இனக் குழுக்களைச் சேர்ந்த மக்களை ஆதரிக்கிறேன்," என்பது தான் எனத் தெரிவித்தார்.

"டிரம்ப் அனைவரையும் தூண்டிவிடுகிறார், அல்லது தூண்டிவிட முயற்சிக்கிறார், ஆனால் அது நடக்கவில்லை," என அவர் தெரிவித்தார்.

டொனால்ட் டிரம்ப் விவகாரத்தில் அமெரிக்கர்களின் ஆதரவு பிளவுபட்டுள்ளது.

ராய்ட்டர்ஸ்/இப்சாஸ் சமீபத்தில் நடத்திய ஆய்வில் டிரம்பின் நடவடிக்கைகளை 40% பேர் மட்டுமே ஆதரவளிப்பதாகவும் 58% பேர் எதிர்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்பிற்கு முதலாவது ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிட ஆதரவு அதிகமாக இருந்தாலும் இரண்டாவது முறையாக பதவியேற்றபோது இருந்ததைவிட (47% ஆதரவு) தற்போது குறைவாகவே உள்ளது.

ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகு அதிபர்களுக்கான ஆதரவு குறைவது இயல்பான ஒன்று தான். ராய்ட்டர்ஸ்/இப்சாஸின்படி 2021 ஜனவரியில் ஜோ பைடன் அதிபரானபோது 55% ஆதரவு இருந்தது. ஆனால் அதே ஆண்டு அக்டோபர் மாதம், இந்த ஆதரவு 46% ஆக சரிந்தது.

கூடுதல் செய்தி சேகரிப்பு அனா ஃபாகய்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c77zjyy2gkxo

ஹமாஸ் தாக்குதலை வழிநடத்தியதாகக் கூறப்படும் நபர் அமெரிக்காவில் கைது

1 month ago

18 Oct, 2025 | 01:39 PM

image

இஸ்ரேல் மீது 2023 அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குத் தலைமை தாங்கியதாகக் கூறப்படும் மஹ்மூத் அமீன் யாகூப் அல்-முஹ்தாதி  என்ற நபர் அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க விசாரணைக் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின்போது, அமெரிக்கர்கள் மீதான கொலை மற்றும் கடத்தல் குறித்த விசாரணைகளுக்காக அலெக்ஸாண்ட்ரியா எம். தோமன் மேற்பார்வையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

ஒக்டோபர் 7 தாக்குதலின்போது ஹமாஸ் படையில் மஹ்மூத் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர் அமெரிக்காவில் தங்கியிருப்பது விசாரணையின் போது தெரியவந்தது.

அமெரிக்க விசா விண்ணப்பத்தில், தான் எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும், நிரந்தரக் குடியிருப்பாளர் என்றும் மஹ்மூத் பொய்கூறி விசா பெற்றுள்ளார். இதன் மூலம், அவர் விசா பெறுவதிலும் மோசடி செய்துள்ளார்.

விசா மோசடி மற்றும் வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளிக்கச் சதித் திட்டம் தீட்டியதாக மஹ்மூத் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹ்மூத் அமீன் யாகூப் அல்-முஹ்தாதி என்ற பெயரிலும், அதே வயதிலும் மற்றொரு நபர் இருப்பதாகவும், அவரும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/228063

லெபனானில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் : ஹமாஸ் தளபதி பலி

1 month ago

லெபனானில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் : ஹமாஸ் தளபதி பலி

18 Oct, 2025 | 11:16 AM

image

லெபனானின் சிடோன் நகரில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் (Drone) தாக்குதலில் ஹமாஸின் முக்கிய தலைவர் முகமது ஷாஹீன் கொல்லப்பட்டார். இருதரப்பு யுத்த நிறுத்தத்திற்கான காலக்கெடு முடிவடையும் நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது, இது பிராந்திய பதற்றத்தை அதிகரித்துள்ளது.

ஹமாஸ் இயக்கத்தின் லெபனான் செயல்பாட்டுத்துறைத் தலைவராக (Chief of Operations in Lebanon) முகமது ஷாஹீன் செயல்பட்டு வந்தார். அவர் கொல்லப்பட்டதை இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்தது.

ஈரானின் நிதியுதவி மற்றும் வழிகாட்டுதலின் பேரில், இஸ்ரேல் மக்களுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டதற்காகவே ஷாஹீன் இலக்கு வைக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

முகமது ஷாஹீனின் மரணத்தை ஹமாஸ் இயக்கமும் உறுதி செய்ததுடன், அவரைத் தங்கள் ராணுவத் தளபதி என்று குறிப்பிட்டது. லெபனானின் சிடோன் நகரில் முக்கிய வீதி ஒன்றில் சென்ற கார் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலுக்குப் பிறகு இராணுவ சோதனைச்சாவடி அருகே ஒரு கார் தீப்பிடித்து எரிந்த காணொளியும் வெளியானது.

https://www.virakesari.lk/article/228050

ஓய்வூதிய முறைகளை சரிசெய்யாத நாடுகளிடமிருந்து நிதியை நிறுத்தி வைப்பது குறித்து EU பரிசீலித்து வருகிறது.

1 month ago

ஓய்வூதிய முறைகளை சரிசெய்யாத நாடுகளிடமிருந்து நிதியை நிறுத்தி வைப்பது குறித்து EU பரிசீலித்து வருகிறது.

உறுப்பு நாடுகள் நீடித்து உழைக்க முடியாத ஓய்வூதிய முறைகளை கவனிக்காவிட்டால், ஐரோப்பாவின் வயதான மக்கள் தொகை நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என்று பிரஸ்ஸல்ஸ் அஞ்சுகிறது.

கேளுங்கள்

இலவச கட்டுரை பொதுவாக சந்தாதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியத்தில் நாடு தழுவிய வேலைநிறுத்தம்

பிரஸ்ஸல்ஸில், 2030 ஆம் ஆண்டுக்குள் ஓய்வு பெறும் வயதை 65 இலிருந்து 67 ஆக உயர்த்துவது உள்ளிட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்களுடன் போலீசார் செவ்வாய்க்கிழமை மோதினர். | Dursun Aydemir/Getty Images

அக்டோபர் 17, 2025 காலை 4:08 CET

பிஜார்க் ஸ்மித்-மேயர் எழுதியது

ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய ஒன்றியத்தின் அடுத்த €2 டிரில்லியன் பட்ஜெட்டில் இருந்து ரொக்கமாக செலுத்தும் தொகையுடன் ஓய்வூதிய சீர்திருத்தத்தை இணைப்பது குறித்து பரிசீலித்து வருகிறது , ஏனெனில் அது உறுப்பு நாடுகளின் நிதிகளை வரவிருக்கும் மக்கள்தொகை நெருக்கடியிலிருந்து பாதுகாக்க முயற்சிக்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகத்தின் பொருளாதார மற்றும் நிதி சட்டமன்றக் குழு, தனிப்பட்ட நாடுகளுக்கு ஓய்வூதிய சேமிப்புக் கொள்கைகளைப் பரிந்துரைப்பதன் மூலம், வளர்ந்து வரும் நாடுகளின் அரசு ஓய்வூதிய முறைகளை ஆதரிப்பதாக மூன்று ஐரோப்பிய ஒன்றிய மூத்த அதிகாரிகள் POLITICO இடம் தெரிவித்தனர் .

ஐரோப்பிய ஒன்றிய தலைநகரங்கள் இந்த நாடு சார்ந்த பரிந்துரைகளை அல்லது CSR-களைப் புறக்கணித்தால், 2028 முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏழு ஆண்டு பட்ஜெட்டில் தங்கள் முழுப் பங்கையும் பெற முடியாமல் போகலாம்.

"கடினமான விஷயங்களைச் செய்ய நாடுகளுக்கு உதவுவதே ஆணையத்தில் எங்கள் பணி," என்று இந்தக் கதையில் மேற்கோள் காட்டப்பட்ட மற்றவர்களைப் போலவே, சுதந்திரமாகப் பேசுவதற்கு பெயர் தெரியாத நிலையில் பேசிய ஒரு மூத்த ஆணைய அதிகாரி கூறினார். "சீர்திருத்தங்களை முதலீட்டுடன் இணைப்பதன் மூலம்" "அதைச் செய்வதற்கு CSRகள் மிகவும் பொருத்தமானதாக இருக்கும்".

ஐரோப்பிய ஒன்றியம் அதிக கடன், வயதான மக்கள் தொகை மற்றும் குறைந்து வரும் பிறப்பு விகிதங்கள் ஆகியவற்றின் நச்சு கலவையை எதிர்கொள்கிறது. இவை அனைத்தும் இணைந்து, ஓய்வூதியதாரர்களுக்கு வருமான ஆதாரத்தை வழங்க வரி செலுத்துவோரை நம்பியிருக்கும் எந்தவொரு பொது "பணம் செலுத்தும்" ஓய்வூதிய முறையை முடக்கும்.

அது இன்றும் நாளையும் ஒரு பிரச்சனை. 2023 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றிய ஓய்வூதியதாரர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்கள் ஒரே வருமான ஆதாரமாக அரசு ஓய்வூதியத்தை நம்பியிருந்தனர். அந்த அதிகப்படியான சார்பு 65 வயதுக்கு மேற்பட்ட ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களில் ஐந்து பேரில் ஒருவரை வறுமையின் அபாயத்தில் ஆழ்த்தியுள்ளது, இது 18.5 மில்லியன் மக்களுக்கு சமம்.

பிரஸ்ஸல்ஸின் இலக்கு இரண்டு மடங்கு: ஓய்வூதியதாரர்களை மிதக்க வைக்க அரசு கருவூலத்தின் மீதான அழுத்தத்தைக் குறைத்தல், மற்றும் மக்களின் நீண்டகால சேமிப்பைச் செயல்படுத்துவதன் மூலம் அமெரிக்க பாணி மூலதனச் சந்தையை உருவாக்க உதவுதல்.

இந்த யோசனை நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருந்தாலும், அரசியல் ரீதியாக கடினமாக இருக்கும், மேலும் துணை நிதி அமைச்சர்கள் இந்த யோசனையை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

ஓய்வூதியக் கொள்கை ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகப் பிரிவின் சட்டப்பூர்வ வரம்பிற்கு அப்பாற்பட்டது. அப்படியிருந்தும், அரசியல் ரீதியாக நச்சுப் பிரச்சினைகளுடன் ஐரோப்பிய ஒன்றிய நிதியை இணைப்பதன் அபாயங்கள் அரசாங்கங்களுக்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடும், குறிப்பாக ஜனநாயகத்தின் மிகவும் விசுவாசமான பங்கேற்பாளர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கும்போது .

"ஓய்வூதிய சீர்திருத்தத்தை நீங்கள் வாங்க முடியாது," என்று ஒரு துணை நிதியமைச்சர் கூறினார். "இது ஜனநாயகம் எதைப் பற்றியது என்பதையே பாதிக்கும்."

12287601-1024x738.jpg

2023 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றிய ஓய்வூதியதாரர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்கள் ஒரே வருமான ஆதாரமாக அரசு ஓய்வூதியத்தை நம்பியிருந்தனர். | டுமித்ரு டோரு/EPA

ஓய்வூதிய சீர்திருத்தமும் போராட்டக்காரர்களை வீதிக்குக் கொண்டுவரும் பழக்கத்தைக் கொண்டுள்ளது. பிரஸ்ஸல்ஸில், 2030 ஆம் ஆண்டுக்குள் ஓய்வு பெறும் வயதை 65 இலிருந்து 67 ஆக உயர்த்துவது உள்ளிட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய தொழிற்சங்கங்களுடன் செவ்வாய்க்கிழமை போலீசார் மோதினர் . 2023 ஆம் ஆண்டில் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஓய்வு பெறும் வயதை 62 இலிருந்து 64 ஆக உயர்த்தியபோது பல மாத போராட்டங்களைக் கண்ட பிரான்சுடன் ஒப்பிடும்போது பெல்ஜியம் லேசானது.

அப்படியிருந்தும், பிரான்சின் சமீபத்தில் மீண்டும் பதவியேற்ற பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு செவ்வாயன்று, பட்ஜெட்டை நிறைவேற்ற முடியாத நாடாளுமன்ற நெருக்கடியைச் சமாளிக்க மக்ரோனின் ஓய்வூதிய சீர்திருத்தங்களை முடக்குவதாக அறிவித்தார் . சீர்திருத்தங்களை ஒத்திவைப்பது அடுத்த ஆண்டு பாரிஸுக்கு €400 மில்லியன் வரை செலவாகும், இந்த நேரத்தில் அரசாங்கம் தனது பெல்ட்டை இறுக்கி நாட்டின் பெருகிவரும் கடன் சுமையைக் குறைக்க முயற்சிக்கிறது.

ஓய்வூதிய வயதை நிர்ணயிப்பதில் அல்லது ஓய்வூதியதாரர்களுக்கு மாதாந்திர கொடுப்பனவுகளை கட்டாயமாக்குவதில் மட்டுமே ஆணையத்தின் கவனம் இருக்கும். பிரஸ்ஸல்ஸின் சீர்திருத்தத் திட்டங்கள், குடிமக்கள் ஓய்வூதியத்திற்காக சேமிக்க ஊக்குவிப்பதிலும், நிறுவனங்கள் ஊழியர்களுக்கு பெருநிறுவன ஓய்வூதியத் திட்டங்களை வழங்க ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்துகின்றன.

CSRகள் என்பது வருடாந்திர நிதி கண்காணிப்புப் பயிற்சியின் ஒரு பகுதியாகும், இது கூட்டமைப்பு முழுவதும் பொருளாதாரக் கொள்கைகளை ஒருங்கிணைக்க ஆணையம் பயன்படுத்துகிறது. ஒரு நாட்டின் மிகவும் அழுத்தமான பொருளாதாரப் பிரச்சினைகளைச் சரிசெய்யும் முயற்சியில் இந்தப் பரிந்துரைகள் EU தலைநகரங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றன. ஆணையம் இந்த வற்புறுத்தலைக் கருத்தில் கொள்ளவில்லை, மாறாக நல்ல பொருளாதாரத்தை மட்டுமே கருத்தில் கொள்கிறது.

"ஓய்வூதியம் பற்றியதாக இருந்தால், அப்படியே ஆகட்டும்" என்று கமிஷனின் இரண்டாவது மூத்த அதிகாரி கூறினார் .

தொற்றுநோய்க்குப் பிந்தைய கேரட் மற்றும் குச்சிகள்

ஐரோப்பிய ஒன்றிய தலைநகரங்கள் கடந்த காலங்களில் CSR-களைப் புறக்கணிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தன. ஆணையம் ரொக்கச் சலுகைகளைச் சேர்த்தால் அது மாறக்கூடும், இந்த யோசனை EUவின் €800 பில்லியன் தொற்றுநோய்க்குப் பிந்தைய மீட்பு நிதியிலிருந்து பிறந்தது.

ஐரோப்பிய ஒன்றிய நிதிகளை பகுதிகளாகத் திறக்கும் இலக்குகளை நிர்ணயிப்பதன் மூலம், கூட்டமைப்பின் பொருளாதாரத்தை நவீனமயமாக்குவதற்கு விலையுயர்ந்த சீர்திருத்தங்களைச் செயல்படுத்த அரசாங்கங்களை ஊக்குவிப்பதற்கான ஒரு வாய்ப்பையும் ஆணையம் கண்டது. ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு, ஓய்வூதிய சீர்திருத்தமும் இதில் அடங்கும்.

கேரட் மற்றும் குச்சி உத்தி பெர்லேமாண்டிற்குள் மிகவும் வெற்றியைப் பெற்றது, அடுத்த EU பட்ஜெட்டில் அதே முறையைப் பயன்படுத்த விரும்புகிறது , குறிப்பாக இது CSR களில் பற்களைச் சேர்க்க உதவும் என்றால்.

எல்லோரும் இதை விரும்புவதில்லை. அரசாங்கங்கள் ஆணையத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றியதை நிரூபிக்க குவிக்க வேண்டியிருந்த ஏராளமான ஆவணங்கள் முன்னேற்றத்தை மெதுவாக்கியது, நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை மேசையில் விட்டுச் சென்றது .

"இந்த மாதிரியை ஆணையம் ஏன் இவ்வளவு விரும்புகிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை," என்று மற்றொரு துணை நிதியமைச்சர் கூறினார், அவர் இந்த யோசனையை குளிர்ந்த நீரை ஊற்றினார். "[ஓய்வூதிய சீர்திருத்தம்] மிகவும் சர்ச்சைக்குரியது. யாராவது இதைச் செய்வார்களா என்று நான் மிகவும் சந்தேகிக்கிறேன்."

பாரிஸிலிருந்து ஜியோர்ஜியோ லியாலி அறிக்கையிடலுக்கு பங்களித்தார்.

https://www.politico.eu/article/eu-funds-pension-systems-budget-legal-protests/

மலேசியாவில் புதிய வகை கொரோனா, மர்ம காய்ச்சல் : 6 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு

1 month ago

Published By: Digital Desk 3

16 Oct, 2025 | 11:46 AM

image

மலேசியாவில் அதிகரித்து வரும் புதிய வகை கொரோனா மற்றும் மர்ம காய்ச்சல் காரணமாக நாடு முழுவதும் சுமார் 6,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

மலேசியாவில் அண்மையில் எக்ஸ்.எப்.ஜி. (XFG) என்ற புதிய வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்த வகை கொரோனா, இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்டது. இந்த கொரோனா பரவலுடன், இன்புளூயன்சா (Influenza) பாதிப்பும் பலரிடம் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், மர்ம காய்ச்சலும் அதிகரித்து வருகிறது.

பாடசாலைகளில் இந்தக் காய்ச்சல் பரவல், ஒரே வாரத்தில் 14 ஆக இருந்த நிலையில், தற்போது 97 கொத்தணிகளாக (Clusters) அதிகரித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 6,000 மாணவர்கள் இந்த மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, பல பகுதிகளில் உள்ள பாடசாலைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிக அடிப்படையில் மூடப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 5 முதல் 7 நாட்கள் வரை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு இணைய வழியே பாடங்களை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அதிக அளவில் ஒன்று கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும், முகக்கவசம் அணியவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பல பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளனர். மேலும், கொவிட்-19 தொற்றுநோயிலிருந்து பெற்ற அனுபவங்களைக் கொண்டு நிலைமை கையாளப்படுவதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு கல்வி அமைச்சகம் பாடசாலைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நாடு முழுவதும் ஏறக்குறைய 4 இலட்சம் மாணவர்கள் பாடசாலைகளில் இறுதி பரீட்சை எழுத உள்ள நிலையில், இந்த திடீர் தொற்று அதிகரிப்பு மாணவர்கள் மத்தியில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

உலக சுகாதார அமைப்பும் (WHO) இந்த கொரோனா வைரஸை கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட வேண்டிய ஒரு வகையாக வகைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/227864

உக்ரேன் போர் குறித்து விவாதிக்க ஹங்கேரியில் ட்ரம்ப், புட்டின் சந்திப்பு!

1 month ago

New-Project-207.jpg?resize=750%2C375&ssl

உக்ரேன் போர் குறித்து விவாதிக்க ஹங்கேரியில் ட்ரம்ப், புட்டின் சந்திப்பு!

உக்ரேனில் நடந்து வரும் மோதல் குறித்து கவனம் செலுத்துவதற்காக, ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இரு தலைவர்களுக்கும் இடையில் வியாழக்கிழமை (16) சுமார் இரண்டரை மணி நேரம் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொலைபேசி உரையாடலில் இரு தலைவர்களும் அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த உரையாடலானது மிகவும் ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாக ட்ரம்ப் விவரித்தார்.

அதேநேரம், கிரெம்ளின் உதவியாளர் யூரி உஷாகோவ் இந்த அழைப்பை ‘மிகவும் தகவல் தரும், மிகவும் வெளிப்படையானது’ என்று கூறினார்.

உக்ரேன் போரைச் சுற்றியுள்ள அதிகரித்த இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு மத்தியில் வரவிருக்கும் உச்சிமாநாடு கடந்த ஆகஸ்ட் நடுப்பகுதிக்குப் பின்னர் தலைவர்களின் முதல் நேரடி ஈடுபாட்டைக் குறிக்கிறது.

எனினும், சந்திப்பின் திகதியை ட்ரம்ப் குறிப்பிடவில்லை.

எனினும், அதற்காக அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார்.

உலகின் சக்திவாய்ந்த இரு தலைவர்களுக்கும் இடையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த சந்திப்பின் பின்னணியானது உக்ரேனில் நடந்து வரும் போர் ஆகும்.

இது 2022 பெப்ரவரி ரஷ்யா ஒரு பெரிய அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து ஆரம்பித்தது.

இந்த மோதல் பாரிய உயிர் இழப்புக்கும் பொதுமக்களின் இடம்பெயர்வுக்கும் வழிவகுத்தது.

அதே நேரத்தில் உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மையையும் பாதித்தது.

திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, ட்ரம்ப் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை ஓவல் அலுவலகத்தில் சந்திக்க உள்ளார். 

இந்த சந்திப்பு பல முக்கியமான விடயங்களை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் 2,500 கிலோ மீட்டர் (சுமார் 1,600 மைல்கள்) பயண வரம்பைக் கொண்ட டோமாஹாக் ஏவுகணைகளை உக்ரேனுக்கு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அடங்கும். 

ரஷ்யா மீது அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு வழிமுறையாக இந்த நீண்ட தூர திறன்களைப் பற்றி ஜெலென்ஸ்கி விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://athavannews.com/2025/1450565

"ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி என்னிடம் உறுதி அளித்தார்!" - டிரம்ப் பரபரப்பு தகவல்

1 month ago

Published By: Digital Desk 3

16 Oct, 2025 | 12:39 PM

image

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதியளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஒக். 15,) தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கு எதிரான உலகளாவிய அழுத்தத்தை அதிகரிக்கும் முயற்சியில் இந்தியாவின் இந்த நடவடிக்கை ஒரு முக்கிய விடயமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓவல் அலுவலகத்தில் வன்முறைக் குற்றங்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் எஃப்.பி.ஐ. பணிப்பாளர் காஷ் படேல் ஆகியோர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதனைத் தெரிவித்தார்.

இந்தியாவை நம்பகமான கூட்டாளியாகப் பார்க்கிறீர்களா? என்ற கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப் கூறியதாவது,

"ஆம். பிரதமர் மோடி எனது நண்பர். எங்களுக்குள் சிறந்த உறவு இருக்கிறது. இந்தியா ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதில் எனக்கு மகிழ்ச்சியில்லை. மேலும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்று என்னிடம் இன்று உறுதியளித்தார். இது ஒரு பெரிய நிறுத்தமாகும். இப்போது சீனாவையும் இதைச் செய்ய வைக்க வேண்டும்.

ரஷ்யா அபத்தமான போரைத் தொடர்கிறது. இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யாவும் இராணுவ வீரர்கள் உட்பட இலட்சக்கணக்கானோரை இழந்துள்ளது. இந்தப் போர் தொடங்கியிருக்கவே கூடாது. முதல் வாரத்திலேயே ரஷ்யா வெற்றி பெற்றிருக்க வேண்டியது, ஆனால், நான்காவது ஆண்டை அடைந்துள்ளார்கள்.

போர் நிறுத்தத்தைக் காண நான் விரும்புகிறேன். எனவே, இந்தியா எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை.

மத்திய கிழக்கில் கடந்த வாரம் நாங்கள் செய்ததை ஒப்பிடும்போது இது (ரஷ்யா-உக்ரைன் போர்) எளிதானது என்பது உங்களுக்குத் தெரியும். அது 3,000 ஆண்டுகள் பிரச்சினை. ஆனால், இது வெறும் 3 ஆண்டுப் போர் மட்டுமே. நாங்கள் ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்திக் காட்டுவோம். ரஷ்ய ஜனாதிபதி புட்டின் போரை நிறுத்துவார் என்று நினைக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு குறித்து இந்திய அரசு அதிகாரபூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் மசகு எண்ணெய் இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/227872

ஹமாஸ் ஒப்படைத்த பணய கைதிகளின் உடல்களில் குழப்பம்!

1 month ago

download-16.jpg?resize=275%2C183&ssl=1

ஹமாஸ் ஒப்படைத்த பணய கைதிகளின் உடல்களில் குழப்பம்!

பணயக்கைதிகளின் உடல்களை ஒப்படைப்பதற்கு அவகாசம் தேவைப்படுவதாக இஸ்ரேலிடம் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நீடித்து வந்த போர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முயற்சியால் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் அமெரிக்கா முன்மொழிந்த 20 அம்ச திட்டங்களின் முதல் கட்டத்திற்கு மட்டுமே, இருதரப்பும் ஒப்புதல் அளித்துள்ளதுடன் அதன்படி பணயக்கைதிகளை பரஸ்பரமாக விடுவித்தனர்.

மொத்தம் 28 பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஹமாஸ் படிப்படியாக ஒப்படைத்து வருகிறது.

பிணைக்கைதிகளின் உடல்கள் அடங்கிய பெட்டிகளை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் இயக்கம் ஒப்படைத்து வருகிறது.

அண்மையில், பணயக்கைதியின் உடலுக்கு பதிலாக வேறு உடலை ஹமாஸ் ஒப்படைத்துள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேல், தங்கள் நாட்டைச் சேர்ந்த பணயக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் முறையாக ஒப்படைக்க வேண்டும் என்று ஹமாஸூக்கு எச்சரிக்கை விடுத்தது.

இதேவேளையில், ஹமாஸ் ஒப்பந்தத்தை கடைபிடிக்கவில்லை எனில், இஸ்ரேல் காசாவில் தாக்குதலை தொடங்கலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நேற்றிரவு மேலும் இரு பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஹமாஸ் ஒப்படைத்துள்ளது.

மேலும், காசாவின் இடிபாடுகளில் சிக்கியுள்ள பணயக்கைதிகளின் உடல்களை மீட்டுக் கொண்டு வர அவகாசமும், நவீன உபகரணங்களும் தேவை என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

தற்போது வரை மொத்தம் 28 உடல்களில் 9 பேரின் சடலங்கள் இஸ்ரேலிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

மத்தியஸ்தம் செய்த நாடுகளின் உதவியுடன் எஞ்சியவர்களின் உடல்களை தேடும் பணியில் ஹமாஸ் அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

https://athavannews.com/2025/1450477

அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ட்ரம்பின் திட்டத்தை தடுத்த அமெரிக்க நீதிமன்றம்!

1 month ago

New-Project-192.jpg?resize=750%2C375&ssl

அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ட்ரம்பின் திட்டத்தை தடுத்த அமெரிக்க நீதிமன்றம்!

கலிபோர்னியாவில் உள்ள ஒரு கூட்டாட்சி நீதிபதி புதன்கிழமை (15) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்திற்கு, பகுதி அரசாங்க முடக்கத்தின் போது கூட்டாட்சி ஊழியர்களின் பெருமளவிலான பணிநீக்கங்களை நிறுத்துவதற்கு உத்தரவிட்டார்.

அதே நேரத்தில் பணி நீக்கங்கள் சட்டவிரோதமானது என்ற தொழிற்சங்கங்களின் கூற்றுக்களை அவர் பரிசீலித்துள்ளார்.

சான் பிரான்சிஸ்கோவில் நடந்த விசாரணையின் போது, வழக்கு தொடரும் வரை 30க்கும் மேற்பட்ட கூட்டாட்சி நிறுவனங்களில் பணிநீக்கங்களைத் தடுக்க இரண்டு தொழிற்சங்கங்கள் விடுத்த கோரிக்கையை அமெரிக்க மாவட்ட நீதிபதி சூசன் இல்ஸ்டன் ஏற்றுக்கொண்டார்.

இந்த முடிவு விரைவில் மேல்முறையீடு செய்யப்படலாம்.

ஆனால், ட்ரம்ப் நிர்வாகத்தினால் தங்கள் பதவிகளைக் குறைக்க சுமார் ஒரு வருட காலமாக அழுத்தம் கொடுத்து வரும் கூட்டாட்சி ஊழியர்களுக்கு இது ஒரு நிவாரணத்தை வழங்குகிறது.

அரசாங்க முடக்கத்தின் போது கூட்டாட்சி பணியாளர்களைக் குறைப்பதாக ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து, தற்போது அதன் 15 ஆவது நாளில், அமெரிக்க அரசாங்கம் முழுவதும் கணிசமான பணிநீக்கங்களைத் தொடங்கியுள்ளதாக வெள்ளை மாளிகை கடந்த வாரம் கூறியது. 

புதன்கிழமை ஒரு உத்தரவில், புதிய கூட்டாட்சி ஊழியர்களை பணியமர்த்துவதில் ஏற்கனவே இருந்த முடக்கத்தை ட்ரம்ப் நீட்டித்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1450478

சீனாவுக்கு உளவு பார்த்ததாக இந்திய வம்சாவளி நபர் அமெரிக்காவில் கைது - யார் அவர்?

1 month ago

ஆஷ்லே டெல்லிஸ், அமெரிக்கா, சீனா, இந்தியா, உளவு பார்த்ததாக கைது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆஷ்லே டெல்லிஸ் 2001 ஆம் ஆண்டில் அமெரிக்க வெளியுறவுத் துறையில் பணியாற்றத் தொடங்கினார் (கோப்புப் படம்)

4 மணி நேரங்களுக்கு முன்னர்

வெர்ஜீனியாவின் வியன்னாவைச் சேர்ந்த 64 வயதான ஆஷ்லே டெல்லிஸ் தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை சட்டவிரோதமாகத் சேகரித்ததாக கிரிமினல் குற்றம்சாட்டப்பட்டு வார இறுதியில் கைது செய்யப்பட்டதாக அமெரிக்காவின் வெர்ஜீனியாவின் கிழக்குப் பகுதிக்கான அமெரிக்க அட்டர்னி லிண்ட்சே ஹாலிகன் கூறியுள்ளார்.

வெர்ஜீனியாவின் கிழக்கு மாவட்ட அமெரிக்க அட்டர்னி அலுவலகம் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

லிண்ட்சே ஹாலிகன், "நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்து வகையான அச்சுறுத்தல்களிலிருந்தும் அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நமது குடிமக்களின் பாதுகாப்புக்கு (Safety and Security) ஒரு தீவிரமான அச்சுறுத்தலாகத் தெரிகிறது," என்று கூறினார்.

"இந்த வழக்கில் உண்மைகளும் சட்டமும் தெளிவாக உள்ளன. நாங்கள் நீதியை நிலைநாட்டுவதற்காக அவற்றைத் தொடர்ந்து பின்பற்றுவோம்."

இந்த வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஷ்லே டெல்லிஸ் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாகப் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மற்றும் இரண்டரை லட்சம் டாலர் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, டெல்லிஸின் வீட்டிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட ரகசிய ஆவணங்கள் மீட்கப்பட்டதாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

64 வயதான டெல்லிஸ், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் பதவிக்காலத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் (National Security Council) உறுப்பினராக இருந்துள்ளார்.

ஆஷ்லே டெல்லிஸ், அமெரிக்கா, சீனா, இந்தியா, உளவு பார்த்ததாக கைது

பட மூலாதாரம், Getty Images

ராய்ட்டர்ஸ் செய்திப்படி, எஃப்.பி.ஐ உறுதிமொழிப் பத்திரத்தில் (Affidavit), அவர் வெளியுறவுத் துறையின் ஊதியம் பெறாத ஆலோசகராகவும், பாதுகாப்பு அமைச்சகத்தின் (பென்டகன்) ஒப்பந்ததாரராகவும் பட்டியலிடப்பட்டுள்ளார்.

ஆவணங்களின்படி, அவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டு, திங்கட்கிழமை அவர் மீது முறையாகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

டெல்லிஸ் வாஷிங்டனைச் சேர்ந்த சிந்தனைக் குழுவான (Think Tank) கார்னெகி எண்டோமென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸ் (Carnegie Endowment for International Peace) என்ற அமைப்பில் ஒரு மூத்த ஆய்வாளராகவும் உள்ளார்.

டெல்லிஸ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கு குறித்துத் தாங்கள் கருத்து தெரிவிக்கப் போவதில்லை என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

வீட்டில் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிப்பு

எஃப்.பி.ஐ உறுதிமொழிப் பத்திரத்தின்படி, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில், டெல்லிஸ் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை கட்டடங்களுக்குச் சென்று, ரகசிய ஆவணங்களை அச்சிட்டுப் பைகளில் எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டது.

சனிக்கிழமை, வெர்ஜீனியாவில் உள்ள அவரது வீடு சோதனையிடப்பட்ட போது, "டாப் சீக்ரெட்" மற்றும் "சீக்ரெட்" என்று முத்திரையிடப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் மீட்கப்பட்டன.

நீதிமன்றத்தில் எஃப்.பி.ஐ சமர்ப்பித்த ஆவணங்களின்படி, "டெல்லிஸ் கடந்த சில ஆண்டுகளில் பலமுறை சீன அரசு அதிகாரிகளைச் சந்தித்துள்ளார். இவற்றில் ஒரு சந்திப்பு செப்டம்பர் 15-ஆம் தேதி வெர்ஜீனியாவின் ஃபேர்ஃபாக்ஸில் உள்ள ஒரு உணவகத்தில் நடைபெற்றது. அங்கு அவர் ஒரு உறையை கொண்டு சென்றார், ஆனால் திரும்பி வரும்போது அவரிடம் அது இல்லை."

வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறையில் தனது பங்கு காரணமாக டெல்லிஸ் "டாப் சீக்ரெட்" பாதுகாப்பு அனுமதியைப் பெற்றிருந்தார். இதன் கீழ் அவருக்கு முக்கியமான தகவல்களை அணுகும் உரிமை இருந்தது என்று உறுதிமொழிப் பத்திரம் கூறியது.

சீன அதிகாரிகளுடனான சந்திப்பு

ஆஷ்லே டெல்லிஸ், அமெரிக்கா, சீனா, இந்தியா, உளவு பார்த்ததாக கைது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்கப் பாதுகாப்புத் துறை இந்த விவகாரத்தில் தற்போது எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை (சித்தரிப்புப் படம்)

ஃபாக்ஸ் நியூஸ் அறிக்கையின்படி, ஒரு அமெரிக்க வெளியுறவுத் துறை ஊழியர் 2023 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பான இடங்களிலிருந்து ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும், சீன அதிகாரிகளைச் சந்தித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க நீதித் துறையின்படி, டெல்லிஸ் வெளியுறவுத் துறையின் ஊதியம் பெறாத மூத்த ஆலோசகராகவும், மற்றும் பாதுகாப்புத் துறையின் ஆஃபீஸ் ஆஃப் நெட் அசெஸ்மென்ட்டின் (இப்போது "டிபார்ட்மென்ட் ஆஃப் வார்") ஒப்பந்தத்தாரராகவும் இருந்தார்.

அவர் இந்தியா மற்றும் தெற்காசிய விவகாரங்களில் நிபுணராகக் கருதப்படுகிறார்.

நீதிமன்ற ஆவணங்களில், டெல்லிஸ் 2001 ஆம் ஆண்டில் வெளியுறவுத் துறையில் பணியாற்றத் தொடங்கினார் என்று கூறப்பட்டுள்ளது. அவர் சட்டவிரோதமாக நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரது வீட்டில் "டாப் சீக்ரெட்" மற்றும் "சீக்ரெட்" என்று முத்திரையிடப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் மீட்கப்பட்டன.

செப்டம்பர் 12 அன்று, அவர் அரசாங்க அலுவலகத்தில் தனது சகா ஒருவர் மூலம் பல ரகசிய ஆவணங்களை அச்சிட்டு பெற்றார். செப்டம்பர் 25 அன்று, அவர் அமெரிக்க விமானப்படையின் திறன் தொடர்பான ஆவணங்களை அச்சிட்டார்.

குற்றச்சாட்டுகளின்படி, அவர் கடந்த பல ஆண்டுகளாகச் சீன அரசாங்க அதிகாரிகளைப் பலமுறை சந்தித்துள்ளார். செப்டம்பர் 2022 இல் ஒரு உணவகத்தில் சீன அதிகாரிகளைச் சந்தித்தார். அதே சமயம், ஏப்ரல் 2023 இல் நடந்த ஒரு கூட்டத்தில், இரான்-சீனா உறவுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து அவர் விவாதித்தது தெரியவந்தது.

ஃபாக்ஸ் நியூஸ் செய்தியின்படி, செப்டம்பர் 2 ஆம் தேதி நடந்த மற்றொரு கூட்டத்தில், அவர் சீன அதிகாரிகளிடமிருந்து ஒரு பரிசுப் பையைப் பெற்றார்.

ஆஷ்லே டெல்லிஸ் யார்?

ஆஷ்லே ஜே. டெல்லிஸ் சிகாகோ பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பிஎச்.டி. பட்டம் பெற்றவர்.

அவர் அதே பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டமும் பெற்றுள்ளார்.

ஆஷ்லே ஜே. டெல்லிஸ் பி.ஏ. மற்றும் எம்.ஏ. (பொருளாதாரம்) பட்டங்களை பம்பாய் பல்கலைக்கழகத்தில் படித்தார்.

டெல்லிஸ், கார்னெகி எண்டோமென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸில் உத்தி ரீதியான விவகாரங்களுக்கான டாடா சேரில் (Tata Chair for Strategic Affairs) மூத்த ஆய்வாளராக உள்ளார். அவர் குறிப்பாக ஆசியா மற்றும் இந்தியத் துணைக்கண்டம் தொடர்பான சர்வதேச பாதுகாப்பு மற்றும் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் கொள்கை ஆகியவற்றில் நிபுணர்.

அவர் அமெரிக்க வெளியுறவுத் துறையின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளரின் (Under Secretary for Political Affairs) மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அங்கு அவர் இந்தியாவுடனான சிவிலியன் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முக்கியப் பங்காற்றினார். அவர் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் (NSC) அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் சிறப்பு உதவியாளராகவும் பணியாற்றினார்.

அரசு சேவைக்கு முன், அவர் RAND கார்பரேஷனில் மூத்த கொள்கை ஆய்வாளராகவும், RAND பட்டதாரி பள்ளியில் கொள்கை பகுப்பாய்வுப் பேராசிரியராகவும் இருந்தார்.

அவர் ஆசிய ஆராய்ச்சி தேசிய பணியகத்தில் (National Bureau of Asian Research) ஆலோசகராகவும், அதன் மூலோபாய ஆசியா திட்டத்தின் ஆராய்ச்சி இயக்குநராகவும் உள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c74j9d2m3nno

உயிரிழந்த மேலும் 4 பணயக்கைதிகளின் உடல்களை விடுவித்துள்ள ஹமாஸ்!

1 month ago

New-Project-182.jpg?resize=750%2C375&ssl

உயிரிழந்த மேலும் 4 பணயக்கைதிகளின் உடல்களை விடுவித்துள்ள ஹமாஸ்!

உயிரிழந்த மேலும் நான்கு பணயக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் திருப்பி அனுப்பியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது.

உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் IDF கூறியுள்ளது.

அந்த தகவலின்படி, செஞ்சிலுவைச் சங்கம் சவப்பெட்டிகளில் இருந்த உடல்களை மீட்டு செவ்வாய்க்கிழமை (14) இரவு இஸ்ரேலிய இராணுவத்திடம் ஒப்படைத்தது.

ஹமாஸ் இறந்த 28 பணயக்கைதிகளின் உடல்களையும் திருப்பி அனுப்பும் வரை காசாவிற்கு உதவி செய்வதை கட்டுப்படுத்துவதாக இஸ்ரேல் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டது. 

பாலஸ்தீன ஆயுதக் குழு திங்களன்று (13)  20 உயிருள்ள மற்றும் நான்கு இறந்த பணயக்கைதிகளை திருப்பி அனுப்பியது.

இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 45 பாலஸ்தீனியர்களின் உடல்கள் செவ்வாய்க்கிழமை காசாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டதாக செஞ்சிலுவைச் சங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

திங்களன்று ஹமாஸால் விடுவிக்கப்பட்ட முதல் நான்கு பணயக்கைதிகள் டேனியல் பெரெட்ஸ் (வயது 22) யோசி ஷராபி (வயது 53) கை இல்லூஸ் (வயது 26) மற்றும் பிபின் ஜோஷி (வயது 23) ஆகியோர் என இஸ்ரேலால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் அலுவலகம், விடுவிக்கப்பட்ட அண்மைய நான்கு பணயக்கைதிகளை அடையாளம் காணும் செயல்முறை நடந்து வருவதாகக் கூறியுள்ளது.

https://athavannews.com/2025/1450429

'புளூடூத்திங்' பழக்கத்தால் பரவும் எச்.ஐ.வி. தொற்று!

1 month ago

Published By: Digital Desk 3

14 Oct, 2025 | 04:28 PM

image

இளைஞர்கள் மத்தியில் பரவி வரும் 'புளூடூத்திங்' (Bluetoothing) அல்லது'ஹொட்ஸ்போட்டிங்' (Hotspotting) என்ற புதிய பழக்கத்தால், தென் பசிபிக் நாடான பிஜியில் (Fiji) எச்ஐவி (HIV) தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரித்துள்ளது.

இது ஒரு தேசிய சுகாதார நெருக்கடியாக உருவெடுத்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

'புளூடூத்திங்' என்றால் என்ன?

இது கையடக்கத்தொலைபேசிகளிலோ அல்லது இலத்திரனியல் கருவிகளில் காணப்படும் தொழில்நுட்பம் அல்ல. மாறாக இது போதைப்பொருள் பாவனையாளர்கள், ஊசியைப் பயன்படுத்தி போதை மருந்து கலந்த இரத்தத்தை ஒருவர் மற்றவருடன் பரிமாறிக்கொள்ளும் ஆபத்தான நடைமுறையாகும். போதைப் பொருள் விலை மற்றும் ஊசி தட்டுப்பாடு போன்ற காரணங்களால், ஒருவர் போதைப்பொருளை உடலில் ஏற்றிக்கொண்டு, பின்னர் அவரது இரத்தத்தை எடுத்து மற்றவர் தமது உடலில் ஏற்றுவதையே 'புளூடூத்திங்' எனக் குறிப்பிடுகின்றனர்.

இந்த அபாயகரமான பழக்கம் பிஜியில் வெகுவாக அதிகரித்துள்ளது. 2014ஆம் ஆண்டில் 500க்கும் குறைவாக இருந்த எச்ஐவி தொற்றாளர்களின் எண்ணிக்கை, கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 10 மடங்கு உயர்ந்து தற்போது 5,900 ஆக அதிகரித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் 1,093 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் 223 பேர் நரம்புவழி போதை மருந்து பயன்பாட்டால் நோய் தொற்றுக்கு உள்ளானதாக ஐக்கிய நாடுகள் சபை தகவல் வெளியிட்டுள்ளது.

புதிய தொற்றாளர்களில், 10 வயது சிறுவன் உட்பட, 19 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பலர் இந்த 'புளூடூத்திங்' முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மேலும் 3,000 பேருக்கு எச்ஐவி ஏற்பட வாய்ப்புள்ளது என்று பிஜியின் சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா, தன்சானியா, லெசோதோ மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளிலும் இந்தப் பழக்கம் இருப்பதாக ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளதுடன், இதனைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/227723

அரிய பூமி காந்த ஏற்றுமதி உரிமங்களைப் பெறுவதை சீனா கடினமாக்குகிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1 month 1 week ago

அரிய பூமி காந்த ஏற்றுமதி உரிமங்களைப் பெறுவதை சீனா கடினமாக்குகிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராய்ட்டர்ஸ்
மூலம்

அக்டோபர் 14, 2025 மாலை 6:50 GMT+11 25 நிமிடங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது

லியான்யுங்காங்கில் உள்ள ஒரு துறைமுகத்தில் ஏற்றுமதிக்காக அரிய மண் கூறுகள் கொண்ட மண்ணை தொழிலாளர்கள் கொண்டு செல்கின்றனர்.

அக்டோபர் 31, 2010 அன்று சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள லியான்யுங்காங்கில் உள்ள ஒரு துறைமுகத்தில் ஏற்றுமதிக்காக அரிய பூமி கூறுகள் கொண்ட மண்ணை தொழிலாளர்கள் கொண்டு செல்கின்றனர். REUTERS/Stringer கொள்முதல் உரிம உரிமைகள்., புதிய தாவலைத் திறக்கிறது

  • சுருக்கம்

  • காந்த தயாரிப்பாளர்கள் நீண்ட உரிம மதிப்பாய்வுகளை எதிர்கொள்கிறார்கள் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.

  • அமெரிக்க-சீன வர்த்தகப் போரின் உச்சத்தில், ஏப்ரல் மாதத்தைப் போலவே ஆய்வும் உள்ளது.

  • சீனாவின் அரிய மண் ஏற்றுமதி செப்டம்பர் மாதத்தில் 31% சரிந்தது.

பெய்ஜிங், அக்டோபர் 14 (ராய்ட்டர்ஸ்) - காந்தங்களில் பயன்படுத்தப்படும் முக்கியமான கனிமங்கள் மீதான கட்டுப்பாடுகளை விரிவுபடுத்த கடந்த வாரம் பெய்ஜிங் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பே, சீன அரிய பூமி காந்த நிறுவனங்கள் செப்டம்பர் முதல் ஏற்றுமதி உரிம விண்ணப்பங்களில் கடுமையான ஆய்வுகளை எதிர்கொண்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேக்னட் தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் நீண்ட மதிப்புரைகள், உலகின் முன்னணி சப்ளையரான சீனா, மே மாதம் அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் நிறுத்தத்தில் ஏற்றுமதியை விரைவுபடுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டிற்கு மாறாக, இராணுவ மற்றும் வணிக தொழில்நுட்பத்தில் அவசியமான தயாரிப்புகளின் மீதான அதன் பிடியை மேலும் இறுக்க காந்த ஏற்றுமதியை குறைக்க முயல்கிறதா என்ற கேள்விகளை எழுப்புகின்றன.

உங்கள் நாளைத் தொடங்குவதற்குத் தேவையான அனைத்து செய்திகளையும் ராய்ட்டர்ஸ் தினசரி சுருக்கச் செய்திமடல் வழங்குகிறது. இங்கே பதிவு செய்யவும் .

செப்டம்பர் மாதம் தொடங்கி ஏற்றுமதி உரிமம் பெறுவது கடினமாகிவிட்டது என்று இந்த விஷயத்தைப் பற்றி அறிந்த இரண்டு வட்டாரங்கள் தெரிவித்தன. கூடுதல் தகவல்களுக்கான கோரிக்கைகளுடன் விண்ணப்பங்கள் இப்போது அடிக்கடி திருப்பி அனுப்பப்படுகின்றன என்று வட்டாரங்களில் ஒன்று தெரிவித்தது.

ஒப்புதல்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றன, இருப்பினும் பொதுவாக வர்த்தக அமைச்சகத்தின் 45 வேலை நாள் காலக்கெடுவிற்குள் இருக்கும் என்று மற்றொருவர் கூறினார், ஆனால் இப்போது ஆய்வு வர்த்தகப் போரின் உச்சத்தில் ஏப்ரல் மாதத்தைப் போலவே உள்ளது, அப்போது உரிமங்களுக்கான நீண்ட காத்திருப்பு காந்தப் பற்றாக்குறையை ஏற்படுத்தியது, இது வாகனத் தொழிற்சாலைகளில் பணிநிறுத்தத்திற்கு வழிவகுத்தது.

உரிமங்களைப் பெறுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பது குறித்து சரியாகக் கருத்து தெரிவிக்கவோ அல்லது கேட்கப்படும் கேள்விகளை விரிவாகக் கூறவோ அந்த வட்டாரங்கள் மறுத்துவிட்டன.

சீனாவில் இந்தப் பிரச்சினையின் உணர்திறன் காரணமாக, பெயர் வெளியிட விரும்பாத நிலையில் இருவரும் பேசினர்.

உரிம ஒப்புதல்கள் குறித்து கருத்து தெரிவிக்க ராய்ட்டர்ஸ் தொலைநகல் கோரிக்கைக்கு சீன வர்த்தக அமைச்சகம் பதிலளிக்கவில்லை.

திங்களன்று வெளியிடப்பட்ட தரவு, சீனாவின் அரிய மண் ஏற்றுமதி செப்டம்பரில் 31% குறைந்துள்ளதாகக் காட்டுகிறது . அந்த சரிவில் எவ்வளவு காந்தங்களால் ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஏனெனில் தரவு தயாரிப்புகளுக்கு இடையில் வேறுபடுத்திப் பார்க்கவில்லை.

"செப்டம்பரில் ஏற்றுமதிகள் குறைந்திருப்பது ஆச்சரியமல்ல, ஏனெனில் கடந்த மாதம் புதிய உரிமம் பெறுவது மிகவும் கடினமாகிவிட்டது" என்று ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அரிய பூமி காந்தங்களின் ஏற்றுமதி கடுமையாக சரிந்தது, ஆனால் ஜூன் , ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதிகரித்தது. செப்டம்பர் மாதத்திற்கான தரவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்.

மின்சார வாகனங்கள் மற்றும் காற்றாலை விசையாழிகள் முதல் இராணுவ ரேடார்கள் வரையிலான தயாரிப்புகளில் முக்கியமான 17 கூறுகளைக் கொண்ட ஒரு குழுவான அரிய மண் தாதுக்களை உலகின் முன்னணி சப்ளையராக சீனா உள்ளது, மேலும் அதன் உரிம அமைப்பு மூலம் பல வகையான ஏற்றுமதியை இறுக்கமாகக் கட்டுப்படுத்துகிறது.

கடந்த வாரம் பெய்ஜிங் அந்தக் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்தியது , அமெரிக்காவில் கோபத்தைத் தூண்டியது, அங்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிக வரிகள் மற்றும் பழிவாங்கும் ஏற்றுமதி தடைகளை உறுதியளித்தார், இருப்பினும் பின்னர் அவர் மிகவும் சமரசமான தொனியில் பேசினார்.

நவம்பர் 8 ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பு ஆர்டர்களை அனுப்ப முயற்சிக்கும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடமிருந்து அறிவிப்பு வந்ததிலிருந்து, விசாரணைகள் அவசரமாக நடந்துள்ளதாக இரு வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.

சீனாவில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக சபையின் பொதுச் செயலாளர் ஆடம் டன்னட், உறுப்பினர்களுக்கான முதன்மையான கவலை, ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் அரிய மண் தயாரிப்பு விண்ணப்பங்களின் இடையூறுதான் என்றார்.

கடந்த பல வாரங்களாக சபை அதன் உறுப்பினர்களுக்கு ஒப்புதல்களையும் தாமதங்களையும் கண்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

"பதட்டம் அல்லது கவலையின் அளவு குறைந்துள்ளதாக நாங்கள் கூற முடியாது," என்று அவர் கூறினார். "சில நிறுவனங்கள் ஏன் அப்படி இருக்கின்றன என்பதற்கான எந்த பதிலும் இல்லாமல் தங்கள் காத்திருப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது."

ராய்ட்டர்ஸ் ஊழியர்களின் அறிக்கை; சோனாலி பால் எடிட்டிங்.

https://www.reuters.com/world/china/china-is-making-it-harder-get-rare-earth-magnet-export-licenses-sources-say-2025-10-14/

Checked
Fri, 11/21/2025 - 16:47
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe