1 hour 19 minutes ago
நான் படிக்க வேண்டும் என்பதை உங்களுக்கு எழுத தெரிகிறது ........ அது உங்களுக்கு தெரியவில்லையா? நீங்கள் சொல்லவிடடாலும் நான் படித்துக்கொண்டுதான் இருப்பேன். நான் வக்கிர புத்தி கொண்டவன்தான்......... அதுக்கு நீங்கள் ஏன் வக்கிரம் ஆக்குகிறீர்கள்? உங்களுக்கும் படிப்பு பஞ்சமா?
1 hour 25 minutes ago
வெள்ள நேரம் நாட்டில நிண்டனான் பாருங்கோ… ஈழத்தமிழர் காதில் இப்போ முழுசா அனுரா சுத்துற பூத்தான் பாருங்கோ… ஆமி, நேவி இல்லாட்டில் இனமே வெள்ளத்தில அழிஞ்சிருக்கும் எண்ட அளவுக்கு பூந்தோட்டமே காதில இருக்கு கண்டியளே…. இனி எந்த தமிழ்தலைவரின் பூவும் அங்கே வேலைக்கு ஆகும் போல தெரியவில்லை.
1 hour 27 minutes ago
நூல் உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... இந்நெடுந்தொடரானது ஈழநாதம் நாளேட்டில் 1990ம் ஆண்டு காலப்பகுதியில் வெளிவந்த தொடராகும். இது தென் தமிழீழத்தில் முஸ்லிம் ஊர்காவல் படையினர், முஸ்லிம் காடையர்கள் மற்றும் சிங்கள படைத்துறை இயந்திரத்தால் அம்மாவட்ட மக்கள் கண்ட அவலங்களை எடுத்துரைக்கிறது. இதனை மூத்த விடுதலைப் போராளி பசீர் காக்கா அவர்கள் எழுதியுள்ளார். இக்கட்டுரையானது 1993இற்கு முன்னர் நூல் வடிவம் பெற்று தமிழீழத்தில் வெளியிடப்பட்டது. எனினும் இதில் தேசத்துரோகி மாத்தையா தொடர்பிலும் வருவதால், அவனது வஞ்சகத்தால், அவன் தொடர்பான அனைத்து ஆவணங்களும் புலிகளால் பொது வெளிப்பரப்பிலிருந்து நீக்கப்பட்ட போது இந்நூலும் மெள்ள மறைந்து போனது. தற்போது காலத்தின் தேவை கருதி, குறிப்பாக முஸ்லிம்கள் தனியினமாக தம்மைக் கருதி எம்மினத்திற்கு இழைத்த கொடூரங்களை வெளிக்காட்டும் முகமாக இந்நூல் மீளவும் எழுத்துணரியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. ஆயினும் இக்கட்டுரையின் இரு பத்திகள் கிடைக்கப்பெறவில்லை. கொழுவி:
1 hour 42 minutes ago
வீரவணக்க நினைவாலயம் வன்னியில் எங்கோ
1 hour 48 minutes ago
இது கருத்துக்களம்… இதில் ஒரு ஆண் தனது அந்தரங்க உறுப்பை குலுக்கி நடனமாடும் வீடியோவை…. அது செலன்ஸ்கி போல் உரு மாற்றப்பட்ட வீடியோ என தெரிந்தும்.. பகிர வேண்டிய அரி….உந்தல் உங்களுக்கு ஏன் ஏற்பட்டது? கேட்டால் அது ஏ ஐ என எல்லாருக்கும் தெரியும் என்கிறீர்கள். செலன்ஸ்கி செய்வது போல் ஏஐ நீலப்படமும் உள்ளது. நாளைக்கு அதையும் இணைப்பீர்களா? இப்பொ புரிகிறதா? நீங்கள் எப்படி பட்ட வக்கிர புத்திகாரார் என்பதை நான் ஏன் முன்பே எழுதினேன் என்பது? முதலில் பொதுவெளியில் எப்படி எழுதுவது என போய் படியுங்கள். பிறகு சைக்கோலஜி டிப்ளோமாவாது செய்யுங்கள். அதுக்கு பிறகு எமக்கு சைக்கோலஜி பாடம் எடுக்கலாம்.
1 hour 53 minutes ago
முதற் கரும்புலி கப்டன் மில்லர் அவர்களின் தாயார் அவரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கிறார்.
1 hour 55 minutes ago
இப்போ இந்த நான் பதியும் இந்த கருதும் இந்த திரியின் கீழ் தேவையற்றது ...இதை யாரும் ஏன் அவர்கள் நேரத்தை வீணாக்கி வாசிக்க வேண்டும்?
1 hour 57 minutes ago
இது பரபரப்புக்காக எழுத பட்ட தலைப்பு போல படுகிறது. சும்மா சந்தோசமான தாம்பத்யத்தில் இருந்த மனைவி - ஒரு நாள் புட்டு கேட்டதற்கா தலையை கொத்துவா? Battered women syndrome போல ஏதோ பிண்ணனி காரணம் இருக்கும் என நினைக்கிறேன். நீங்கள் கொலைக்கான உண்மை காரணத்தை அல்லது அதற்கு அருகான காரணத்தை நெருங்கி இருக்கலாம் என ஊகிக்கிறேன்.
2 hours 7 minutes ago
🤣அத பார்க்கிறவனுக்கே தெரியும் அது ஐ வீடியோ என்று......... அது பற்றி ௨௦௨௩ யிலேயே உலகம் பேசி முடிச்ச கடகியை தூக்கிவந்து ...... இது என்ன விதமான கேவலம் என்றே புரியவில்லை? வெற்றிகரமாக உக்ரைன் நாடடை மேற்கு நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அழித்ததற்கு பாராட்டி எழுதி இருந்தேன். தொடங்கியதை செவ்வனவே செய்த செம்மல் என்று பாராட்டி அல்லவா எழுதி இருந்தேன். எங்கு தொடங்கிய போர் எங்கு வந்து நிற்கிறது? என்பதை இந்த திரியின் தலைப்பிலேயே புலிகேசி சொல்லி இருக்கிறார்? தலைப்ப கூட வாசிக்க தெரியவில்லை AI video 2003 (correction) இதுக்கெல்லாம் சைகொலிஜிஸ்ட் சொல்லும் ஒரே ஒரு விளக்கம் உலகில் இப்போ மூன்றே மூன்று அறிவாளிகள்தான் இருக்கிறார்கள் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்ற இருவர் யாழ்களத்தில் ...... இந்த மனநிலையை தெரிந்துகொண்டாலே அடுத்தவர்களை திரிக்கு திரி சொரியும் மனநிலையில் இருந்து வெளியேறி சில ஆக்கபூர்வமான கருத்துக்களை பதியலாம். யாழ் களமும் கொஞ்சம் என்றாலும் ஒரு கருத்து களமாக இருக்கும்
2 hours 7 minutes ago
பாகம் - 14 திரு. மாத்தயா அவர்கள் அகதிகளிடம் விடைபெற்று வாகனத்தில் ஏறினார். செல்லும் வழியெங்கும் சிறு குடில்களை அமைத்து ஏரானமான அகதிகள் தங்கியிருப்பது தெரிந்தது. வாகரையை அடைந்ததும் மதிய உணவுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் தங்கினோம். அப்போது ஒரு செய்தி வந்தது. யாழ் கோட்டையைப் போராளிகள் கைப்பற்றி விட்டார்கள் என்று. அன்று திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு சில இடங்களில் நினைவுக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. மட்டக்களப்பு நகர் முழுவதும் விழாக்கோலம் பூணுகிறது. மக்கள் பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றார்கள் என்றும் செய்தி வந்தது. மாத்தயாவை ஊர் மக்கள் பலரும் மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளில் மகளிர்படைப் பிரிவுக்குப் பொறுப்பாக இருக்கும் ஜெயாவும் வந்து சந்தித்துச் சென்றனர். அங்கிருந்து நாம் நீண்ட தூர பிரயாண த்தின் பின் ஒரு முகாமைச் சென்றடைந்தோம். 28.09.90 வரை இந்த முகாமிலேயே தங்கினோம், 28 09.90 மாலை அந்த முகாமிலிருந்து புறப் பட்டோம். எம்மை அழைத்துச் செல்ல மட்டக்களப்புத் தளபதி கருணா புறப்பட்டு வந்தார். வழியில் எம்மைச் சந்தித்து அழைத்துச் சென்றார். ஒருமணித்தியாலம் நடக்க வேண்டியிருந்தது. வயல் வெளிகளுக்குள்ளாக நடத்து சென்றோம். நன்றாக விளைந்திருந்த வயலை யானை அழித்திருந்தது. அறுவடை செய்யாமல் இப்படி அழித்திருக்கும் வயல் வெளிகளைப் பார்க்கும் போது வயிறுபற்றி எரித்தது. எனக்கே இப்படி யென்றால் சொந்தக்காரனுக்கு எப்படி இருந்திருக்கும்? ஏன் இந்த வயல்கள் அறுவடை செய்யப்படவில்லை? என்று கேட்டேன். சுதந்திரமாக மனிதர்கள் நடமாட முடியாத நிலையில், வயல்கள் அறுவடை செய்யப் படவில்லை. இராணுவத்துக்குப் பயந்து வயல் பக்கம் மக்கள் செல்ல வில்லை என்றார். இராணுவத்துடனான மோதல்கள் தொடருகின்றனவா? என்று கேட்டேன். என்ன நடத்தாலும் அது மட்டும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். கடந்த 22 ஆந் திகதி கூட சிங்கபுர முகாமிலிருந்து கண்டக்காடு முகாமுக்கு சென்ற இராணுவத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. பத்து இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். தொலைத் தொடர்பு சாதனம் ஒன்றும் பத்து றைபிள்களும் உருப்படியாகக் கிடைத்தன என்றார். கண்டக்காடு பொலனறுவை மாவட்டத்திலல்லா இருக்கிறது. நானும் தான் அடிக்கடி கேள்விப்படுகிறேன். அனுராதபுரம் மாவட்டத்தில் தாக்குதல் நடக்கிறது, பொலனறுவைறுவை மாவட்டத்தில் தாக்குதல் நடக்கிறது என்று, பதுமனும் நீங்களும் ஏதோ தீர்மானம் எடுத்திருக்கிறீர்கள் போல இருக்கிறது. வாகனத்தில் ஏறினார். நான் அறிந்தவரை வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தான் தமிழீழம் என்று எண்ணியிருக்கிறேன், நீங்களோ பொலனறுவை மாவட்டத்திலும், அனுராதபுரம் மாவட்டத்திலும் தாக்குதல் நடத்துகிறீர்கள். ஈரோஸுக்கு பதுளை தேவைப்பட்டது போல உங்களுக்கு இந்த இரண்டு மாவட்டங்களும் தேவைப்படுகின்றதோ? என்றேன். சிரித்தார். “அப்படியில்லை. இராணுவமோ, குடியேற்றமோ நாம் அதைத்தேடிப் போகாவிட்டால் அவை நம்மைத் தேடி வரும்.” தமிழீழம் எமது சொந்தநாடு, எமது நாட்டிற்குள் சிங்களவன் அத்துமீறும் போது நாமும் எல்லை தாண்டுவது தவிர்க்க முடியாததாகின்றது. அதைவிட கண்டக்காடு பகுதி தமிழரின் பூர்வீக நிலம்தான். பொலனறுவையில் கூட இந்து ஆவயங்கள் இருந்திருக்கின்றன. கண்டக்காடுபகுதியை அண்டிச் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதால் இன்று நீங்கள் அதைச் சிங்களவருடைய பிரதேசமென்று எண்ணுகின்றீர்கள் காலப்போக்கில் மொறவேவா, சாலியபுர என்பதெல்லாம் சிங்களக் கிராமங்கள் என்ற் வேறு இடத்தில் உள்ள தமிழர்கள் சொல்லக்கூடும். ஏனெனில் அந்தப் பெயர்கள் பழக்கத்தில் வந்துவிடும். இராணுவத்தின் கொடுமைகளால் அந்த இடத்துக்குச் சொந்த மான மக்கள் வேறு இடங்களில் குடியமரும்போது இப்படியான நிலை தான் தோன்றும் என்றார். பொதுமக்களின் நிலை என்னமாதிரி என்று கேட்டார் மாத்தயா. நாளாந்தம் சராசரியாக இருபது, முப்பது என்று செத்துக்கொண்டே இருந்தபடியால் அகதிமுகாம் வாழ்க்கை வாழ்ந்து நாளாந்தம் அழிவதை விட முகாம்களைவிட்டு வெளியேறி அவரவர்களுக்கு வசதியான இடங்களில் குடியமருங்கள் என்று மக்களிடம் சொல்லி விட்டோம் என்றார். இவ்வளவு மக்களும் முகாம்களை விட்டு வந்தால் அவர்களால் சமாளிக்க முடியுமா? கேட்டேன். “வேறென்னவழி ஊர்காவற்படையின் கொடுமை அதிகரித்து வருகிறது. மக்களை வெட்டிக் கொல்கிறார்கள். பெண்களைக் கற்பழிக்கிறார்கள். கற்பழிக்கப்படும் பெண்கள் உயிரோடு விடப்படுவதில்லை. இவ்வளவு காலமும் கலவரம் நடந்ததுதான். தமிழ்ப் பெண்களைக் கற்பழிப்பதும் கொலை செய்வதும் இப்போதுதான் ஆரம்பித்துள்ளது. அவர்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள். இனி நாம் என்ன செய்ய வேண்டும். என்பதுதான் பிரச்சினை. அதற்கு முடி வெடுத்தாக வேண்டும்" என்றார். இயக்கத்தில் நிறைய முஸ்லிம் இளைஞர்கள் இருந்தார்களே! அவர்கள் இது தொடர்பாக, என்ன நிலைப் பாட்டைக் கொண்டிருக்கிறார்கள் என்றேன். இயக்கத்தில் இருந்தவர்கள் இருவகை. ஒருசாரார் வேண்டுமென்றே ஊடுருவியவர்கள். அவர்கள். சண்டை தொடங்கியதுமே ஆயுதங்களுடன் ஓடிவிட்டார்கள். அவர்கள் தான் தமிழரைக் கொல்வதில் தீவிரமாயிருக்கிறார்கள். அடுத்தவர்கள் விசுவாசமாகவே இயக்கத்துடன் இருந்தவர்கள். இந்தச் சண்டையில்கூட இராணுவத்துடன் மோதி உயிரிழந்துள்ளார்கள். ஓட்டமாவடியில் நிகழ்ந்த தாக்குதல், களுவாஞ்சிக்குடியில் நிகழ்ந்த தாக்குதல் எல்லாவற்றிலும் முஸ்லிம் போராளிகள் களத்தில் இறந்துள்ளார்கள். இராணுவம் பிரதான பாதையினுள் நுழையவிருந்த சமயத்தில் ஜெட்வேகத்தில் நிலைமை மாறியது என்றார். 'நிலைமைக்கேற்ற மாதிரி மாறி விட்டார்கள் என்று கருதுகிறீர்களா?” என்று கேட்டேன். இல்லை, ஏற்கனவே வகுத்ததிட்டம் செயற்படத் தொடங்கியது” என்றார். “என்ன அது?” என்றேன். “எல்லாக் கிராமங்களிலும் இருந்த பள்ளிவாசல்கள் ஒரேநாளில் இயக்கத்தில் இருந்த முஸ்லிம் இளைஞர்களைக் கூப்பிட்டுக் கதைத்தன. அதைத் தொடர்ந்து அனைவரும் உடனே விலகிவிட்டார்கள். இதன் பின்னணி மிகப் பயங்கரமானது” என்றார். என்ன அது? என்றேன். (தொடரும்)
2 hours 8 minutes ago
யாழ் களம் கேவலமாகி இருக்கிறதா? அப்படியானால் யாரால் கேவலமாகியிருக்கிறது? என்பதை வாசகர்கள் தீர்மானிக்கட்டும் மருதர்😂! போலிச் செய்திகளையும், செயற்கை நுண்ணறிவு தயாரிக்கும் துணுக்குகளையும் இணைப்போர் முயற்சித்தும் கூட யாழ் களம் கேவலமாகி விடவில்லை! செய்தி/தகவல்களின் உண்மைத் தன்மையைக் கேள்விக்குட்படுத்தும் வசதி இருக்கும் வரை யாழ் களம் தரமாகத் தான் இருக்கும்.
2 hours 12 minutes ago
குண்டுச்சட்டிக்கை குதிரை ஓடாமல்...வெளியாலை வந்து யோசிக்கவேணும் ..பாருங்கோ...
2 hours 13 minutes ago
பரம்பரை பரம்பரையாக லைன் ஒற்றை அறை குடிசைக்குள் மூன்று, நான்கு தலைமுறைகள் ஒன்றாக வாழ்ந்தபடி, எந்த சமூக, காணி, மனித அங்கீகாரம் கூட இன்றி, உழைக்கும் இயந்திரங்களாக, நவீன அடிமைகளாக… வெறும் 100 கிமி தொலைவில்… வாழும்… சக தமிழனை… அவன் சுய விருப்பில்…. எமது இடம் கூட்டி வந்து, அவமாக போகும் எமது மனைகளில் இடம், கொடுத்து, ஒரு தொழிலுக்கான பாதையையும் காட்டலாம் என்கிறோம்… யூதனோ, சிங்களவனோ தன் சக இனத்தை இப்படித்தான் நடத்தி இருப்பான். ஆனால் சுண்ணாம்பு தமிழர்களுக்கு இது வினோதமான கோரிக்கையாக இருக்கிறது. சிங்களவரின் பாரம்பரிய தாயகத்தில் அவன் நாலாம் தர பிரஜையாக இருப்பதே அவனுக்கு நல்லது என்கிறீர்கள் 😂. இந்த மனோநிலை வினோதம் அல்ல… விசம்…விசம்…விசம்.
2 hours 18 minutes ago
பாகம் - 13 15-11-1990 என்ன நடந்தது? என்று விசாரித்தேன். அப்போது அருகில் நின்ற ஒருவர் குறுக்கிட்டு நாலாயிரத்து ஐநூறு ரூபாவுடன் வெருகலில் இருந்து இந்தப் பிள்ளைகளின் தந்தை வாழைச்சேனைக்குப் பொருள்கள் கொள்வனவு செய்யப் போனதாகச் சொன்னார். இங்கிருந்து வாகனம் எதுவும் போவதாகத் தெரியவில்லையே? என்றேன். 'சைக்கிளில் தான் சென்றார். எல்லா வியாபாரிகளுமே சைக்கிளில் சென்றுதான் பொருள்களை வாங்குகின்றார்கள்' என்றார். ஏதாவது சின்னப் பிரச்சினைகளென்றாலும் ஓட்டமாவடிப் பாலத்தில் தான் முஸ்லிம் காடையர்கள் சண்டித்தனம் செய்வதும், ஆட்களைக் கடத்துவதும் வழக்கம். வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள். 85 ஆம் ஆண்டுக் கலவரத்தின் போதும் (தமிழ் - முஸ்லிம்) இவ்வாறு பல சம்பவங்கள் நடந்தன. "எனவே ஓட்டமாவடிப்பாலத்தால் போவது பிரச்சினை தானே!. ஏன் அந்த வழியால் போகிறார்கள்?" என்று விசாரித்தேன். ஓட்டமாவடி வழியாக இல்லை. வாழைச்சேனைக்கு நேர்எதிரே உள்ள நாசிவன் தீவு என்னும் இடத்திற்குச் சென்று அங்கிருந்து தோணி மூலம் வாழைச்சேனைக்குச் செல்வார்கள் என்றார். வாழைச்சேனையில் பொருள்கள் வாங்கத் தடையில்லையா? என்று கேட்டேன். வாழைச்சேனையில் தற்போது முஸ்லிம்களின் கடைகள் மட்டுமே உள்ளன. இக்கடைகளுக்கு பள்ளிவாசல்கள் சில நிபத்தனைகளை விதித்துள்ளன. வழக்கமாக ஒரு பொருளுக்கு ஒரு விலையென்றால் தமிழர்களுக்கு விற்கும்போது ஒரு விசேட வரியையும் சேர்த்து கடைக்காரர் வசூலிக்கவேண்டும். குறிப்பிட்ட அந்த வரிப் பணத்தை பள்ளிவாசலுக்கான உண்டியலில் உடனே போட்டுவிட வேண்டும். இதற்காக ஒவ்வொரு கடைகளுக்கும் பள்ளி வாசல்கள் 'வரி உண்டியல்' என்று ஒன்றைக் கொடுத்துள்ளார்கள் என்றார். தேங்காய்க்கு வரி எவ்வளவு? என்றேன். ஒரு தேங்காய் தமிழருக்கு விற்றால் ஒரு ரூபாய் வரி. அந்தக் காசையும் தமிழரிடம் அறவிட்டுப் போட வேண்டியதுதான். இப்படியே ஒவ்வொரு பொருள்களுக்கும் வேறுபட்ட வரி என்றார். கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குள் போராளிகள் சாராயம். சிகரெட் போன்ற பொருள்களுக்கு வரிவசூலிப்பது போல் ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட செயற்பாட்டில் பள்ளி வாசல்கள் இப்படியான முடிவுகளை எடுத்துள்ளன என்பதை உணரமுடிந்தது. எனவே “வரிதான் அறவிடுகின்றார்களே, பின்பு ஏன் தமிழர்களைக் கொல்கிறார்கள்” என்றேன். “கிழக்கு மாகாணத்தில் தமிழர்களைக் கொல்வதென்பது இப்போது சமூக மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு” என்றார். எல்லா' முஸ்லிம்களும் இதற்குச் சம்மதிப்பார்களா? அவர்களுக்கு தமிழ் மக்களின் நிலங்களுக்கு மத்தியில் காணி உள்ளது அதில் தான் விவசாயம் செய்ய வேண்டும். தமிழர் மத்தியில் தான் கடை நடத்தவேண்டும். விறகுக்குப் போவதானால் கூட தமிழர் நிலங்களுக்குள்ளால் தானே செல்ல வேண்டும். அப்படியானால் எல்லா முஸ்லிம்களும் இதற்குச் சம்மதிப்பார்களா? நீண்ட காலம் ஒன்றாக வாழ்ந்தவர்களை அழிப்பது சாத்தியமா? என்றேன். அதற்கு அவர் “முஸ்லிம்கள் மத்தியில் ஒரு சமூகக்கட்டுப்பாடு உண்டு அதாவது பள்ளிவாசல்கள் என்ன முடிவை எடுக்கின்றனவோ அந்த முடிவுக்கு அந்தப் பள்ளி வாசல்களைச் சேர்ந்தவர்கள் கட்டுப்பட்டே ஆகவேண்டும். தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு என்ன கருத்தும் இருக்கலாம். ஆனால் பள்ளிவாசல்களின் முடிவை எந்தக் காரணத்தாலும் மீற முடியாது. கிழக்கு மாகாணத் தில் இருந்து தமிழர்கள் ஒழிகப்பட வேண்டியவர்கள். எனவே அந்த நடவடிக்கை தொடர்ந்த வண்ணமே இருக்கும். அதுவரை இடைக்கால ஏற்பாடாகத்தான் இந்த வரி வசூலிப்பு முறையை அமுல் படுத்தியுள்ளார்கள்” என்றார். “இதுசாத்தியமாகக் கூடிய விடயமா முஸ்லிமகள் மத்தியில் எத்தனை கல்விமான்கள் உள்ளனர். அவர்கள் இதற்கு சம்மதிப்பார்களா?” என்று சந்தேகத்துடன் கேட்டேன். அவர்களின் கூற்றை யார் மதிக்கிறார்கள். மதவெறியை ஊட்டி ஓரணியில் திரள வைக்கிறார்கள். 85 ஆம் ஆண்டும் இது போல கலவரங்கள் ஏற்பட்டபோது இதே பள்ளிவாசல்கள்தான் முஸ்லிம் காடையர்களிடம் பிடிபடும் தமிழர்களை விடுவிப்பதிலும் சமூக உறவுகளை சீராக்குவதிலும் ஈடுபட்டிருந்தன. ஆனால் இன்று நிலைமை எவ்வளவு தலைகீழாகப் போய்விட்டது” என் றார். “இதற்கெல்லாம் அடிப்படையான காரணம் ஒன்று இருக்க வேண்டுமே என்னவென்று தெரியவில்லையா?” என்று கேட்டேன் நிச்சயமாக இதற்கு ஒரு பெரிய பின்னணி உண்டு. இது என்னவென்று எமக்குப் புரியவில்லை. ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். தமிழர்களைக் கொல்வதற்கு முன் அனைவரும் பள்ளிவாசல்களில் கூடுகின்றார்கள். அங்கு சில கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. சிறிது நேரத்தில் இராணுவம் அந்த இடத்துக்கு வரும். இராணுவத்துடன் இணைந்து முஸ்லிம் ஊர்காவல் படையினர் அனைவரும் செல்கின்றார்கள். அப்படிப் புறப்படும் நாளில் பாரிய இன அழிவு நிச்சயம் என்றார். பள்ளிவாசல்களில் என்ன கருத்து முன்வைக்கப்படுகிறது என்று தெரியுமா? என்றேன். அது தெரியவில்லை. அந்தளவுக்கு பள்ளிவாசல்களை நெருங்கிப் பார்க்கவோ, அவதானிக்கவோ முடியாது. முன்பு போல எம்மோடு நெருங்கிப் பழகிய முஸ்லிம்களும் இந்த விடயங்கள் பற்றி எதுவும் கதைப்பதில்லை. ஆனால் ஒரு விடயம் மட்டும் தெரிந்து கொண்டோம் என்றார். “என்ன அது?” என்று கேட்டேன். இப்போது கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு எதிராக முஸ்லிம்களால் எடுக்கப்படும் நடவடிக்கைக்கு “புனிதப்போர்” என்று பெயரிட்டிருக்கிறார் கள் என்றார். “மனிதத்துவத்துக்கு சமாதிகட்டும் ஈனச் செயலுக்கு புனிதப்போர் என்று பெயரிட்டிருக்கிறார்கள். இதற்கு ஏதோ பின்னணி இருக்க வேண்டும்” என்று நினைத்துக்கொண்டேன். சில நாட்களின்பின் அதற்கு விடை கிடைக்கத்தான் செய்தது. (தொடரும்)
2 hours 29 minutes ago
வீரவணக்க நினைவாலயம் யாழ் 1993
2 hours 38 minutes ago
அதுதான் செலன்ஸ்கியின் குலுக்கல் நடனத்தை பகிர்ந்த கருத்து செழுமையை களமே கண்டதே. சாத்தான் வேதம் ஓதக்கூடாது. வாசகருக்கு, இந்த செலன்ஸ்கி ஒரு கோமாளி பெல்லி டான்ஸ் ஆடுகிறார் என மேற்படி கருத்தாளர் யாழில் பதிந்த வீடியோ ஒரு ஏ ஐ புரட்டு. பச்சை பொய்யர் - பொய் என தெரிந்தே பதிந்தார் என்பது என் குற்றச்சாட்டு. ஆதாரம் இதோ. இதுதான் இவர் ஏ ஐ உலகில் “கருத்தாடும்” இலட்சணம். வெக்கட்கேடு! https://www.reuters.com/article/fact-check/dancer-in-social-media-video-is-not-ukraines-president-zelenskiy-idUSL1N3930VL/
3 hours 1 minute ago
காலம் காலமாக பரம்பரம்பரையாக வாழும் ஒருவனை அந்த இடத்தில இருந்து துரத்தும் உங்கள் எண்ணங்கள் அதைவிட வினோதமானது மட்டுமல்ல விசித்திரமானதும்
3 hours 5 minutes ago
இந்த AI காலத்திலும் எவ்வளவு கருத்து வரடசியில் இருக்கிறார்கள்? தலைப்பு சார்ந்து ஒரு கருத்தை பதிய ஏன் இவர்களுக்கு தோன்றுவதில்லை? இந்த யாழ்களத்தை இப்படி கேவலம் ஆக்கியதை தவிர இதனால் யாருக்கு என்ன லாபம்? சைகொலோஜி ரீதியாக இதை தெளிவாக புரிந்துகொள்ளலாம்
3 hours 26 minutes ago
வீரவணக்க நினைவாலயம் யாழ் 1993
4 hours 33 minutes ago
யாழில் மகளிர் கரும்புலிகள் வீரவணக்க நினைவாலயம் 1995/04/13 இடமிருந்து... முதலாவது: கடற்கரும்புலி கப்டன் அங்கையற்கண்ணி - அலுவல்சார் முதற் பெண் கரும்புலி, முதற் பெண் கடற்கரும்புலி, முதல் நீரடி நீச்சல் கரும்புலி, முதற் பெண் நீரடி நீச்சல் கரும்புலி. நடு மற்றும் கடைசி முறையே: கடற்கரும்புலிகளான லெப் கேணல் நளாயினி மற்றும் மேஜர் மங்கை - முதற் பெண் நீர்மேற் தாக்குதல் கடற்கரும்புலிகள். ============================
Checked
Tue, 12/16/2025 - 19:52
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed