புதிய பதிவுகள்2

இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்

1 day 2 hours ago
இன்னும் சில‌ ம‌ணி நேர‌த்தில் இஸ்ரேல் ஈரானை தாக்கும் என்று சுட‌ சுட‌ ப‌ல‌ த‌ள‌ங்க‌ளின் இருந்து செய்திக‌ள் வ‌ருது....................இஸ்ரேல் இன்று இந்த‌ தாக்குத‌லை செய்தால் நேற்று ந‌ட‌ந்த‌ தாக்குத‌ல‌ விட‌ இர‌ண்டு ம‌ட‌ங்கு அதிக‌மான‌ தாக்குத‌ல‌ இஸ்ரேல் மீது ஈரான் ந‌ட‌த்தும் ஜீ7 நாடுக‌ள் ஈரான் செய்த‌து த‌வ‌று என்று சொல்லி இருக்கின‌ம் எல்லாம் குழ‌ப்ப‌மாய் இருக்கு.........................

"அன்பு நெஞ்சே அரவணைத்த கையே"

1 day 2 hours ago
"அன்பு நெஞ்சே அரவணைத்த கையே" "அன்பு நெஞ்சே அரவணைத்த கையே அயராத கண்ணே அலைந்த காலே ஆத்திரம் ஏனோ ஆவேசம் ஏனோ ஆரிடமும் சொல்லாமல் போனது ஏனோ?" "இருப்பாய் என்று இறுமாப்பு கொண்டோம் இருளில் இன்று மருண்டு துடிக்கிறோம் ஈன்ற கன்றுகள் இளைத்து வாடுகின்றன ஈழ மண்ணின் இளைய மகளே? " "உருவம் சுவரில் தீபத்துடன் தொங்குது உயிர்கள் இருந்தும் பிணமாய் நடக்கிறோம் ஊர்கள் மாறி வாரிசு வாழ்கின்றன ஊமையாய் ஊனமாய் எதோ வாழ்கிறோம்? " "எண்ணம் செயல் எல்லாம் நீயே எங்கள் வீட்டு ஆண்டவனும் நீயே ஏக்கம் தவிப்பு சுடுகுது எம்மை ஏமாற்றம் தந்து பிரிந்தது ஏனோ?" "ஐந்து பேராய் ஒன்றாய் இருந்தோம் ஐயம் கொண்டு ஓடியது ஏனோ ஒடிந்து போனோம் ஆடிப் போனோம் ஒழிந்தது ஏனோ அழிந்தது ஏனோ?" "ஓயாத அலையே ஓங்கார தீபமே ஓரமாய் ஒதுங்கி அணைந்தது ஏனோ ஔவை வழியில் பிரிவை பாடுகிறேன் ஔதடம் உண்டோ இவளுக்கு பராபரமே?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

“ஏழடி நடந்தாய் ஏழாயிரம் கனவு கண்டாய்"

1 day 2 hours ago
“ஏழடி நடந்தாய் ஏழாயிரம் கனவு கண்டாய்" "ஏழடி நடந்தாய் ஏழாயிரம் கனவு கண்டாய், தாளடி தொழுதாய் பல்லாண்டு வாழ்க வென ஓரடி ஈரடி மூவடி என வாழ்வில் அடிவைத்து சீரடி பாவில் அம்மாவென சிறப்படி வைத்தாய்" "ஆறடி சேலையில் அழகாய் தொட்டில் கட்டி, காலடியில் வைத்து முத்துகளை வளர்த்து எடுத்தாய் ஈரடி திருக்குறளை இதயத்தில் ஏற்றி வைத்து, வாழையடி மரபை பெருமையாக பேணி காத்தாய்" "வேரடி கேட்டோர் விழியடி விரித்து நிற்க சொல்லடி கொடுத்து தலை நிமிர வழிசமைத்தாய் ஏனடி போனாய் ஏகாந்தமாய் எம்மை விட்டு, யாரடி எம்மை அன்பாய் இனி பார்ப்பார்?" (கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்)

"காதல் தந்த தண்ணீர் குடம்"

1 day 2 hours ago
நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை உடனொடும், இளங் கன்னியோடும் உங்கள் காதலும் மலர்ந்திடுதே .......! 😂 நல்லா இருக்கு....... நன்றி தில்லை......! கடைக்காரருக்கு ஒரு மகள்தான் சார் ........ ஆனால் ஒரு முரட்டு அண்ணன் இருக்கிறான் பரவாயில்லையா ......! 😂

பதிலடி கொடுத்தால், அதை தனியாக செய்வீர்கள், இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

1 day 2 hours ago
பல தசாப்தங்களாக உலகின் வேறு எந்த நாட்டையும் விட அதிகமான அமெரிக்க இராணுவ உதவிகளைப் பெற்றுக்கொண்டிருக்கும் ஒரு நெருங்கிய கூட்டாளிக்கு இது ஒரு அசாதாரண செய்தியாகும். ஆனால் பல மாதங்களுக்குப் பிறகு காசாவில் இஸ்ரேல் தன்னிச்சையாகச் செயல்பட்டு -- அதன் இராணுவ நடவடிக்கைகள் வெகுதூரம் சென்றுவிட்டன என்று அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகளிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகு - ஈரானுக்கு எதிரான தாக்குதல் இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா பங்கேற்காது என்று பிடென் நிர்வாகம் தெளிவுபடுத்தியது. மத்திய கிழக்கில் ஒரு பரந்த போருக்கு அஞ்சுகிறது. மேலும்: இஸ்ரேல்-காசா நேரடி அறிவிப்புகள்: இஸ்ரேலிய போர் அமைச்சரவை திங்கள்கிழமை மீண்டும் கூடவுள்ளது "இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், தன்னைத் தானே தற்காத்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கும் சுதந்திரம் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்" என்று ஈரானின் தாக்குதல் முடிவடைந்த சிறிது நேரத்திலேயே ஒரு மூத்த நிர்வாக அதிகாரி செய்தியாளர்களிடம் கூறினார். "இது ஒரு நீண்டகால கொள்கை, அது இன்னும் உள்ளது." தாக்குதல் இராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கு இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவுமா என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, அந்த அதிகாரி இல்லை என்று கூறினார். "நாங்கள் அத்தகைய ஒரு காரியத்தில் பங்கேற்பதை கற்பனை செய்ய மாட்டோம்," என்று அந்த நபர் கூறினார். இரண்டாவது அமெரிக்க அதிகாரியின் கூற்றுப்படி, அந்த செய்தி இஸ்ரேலின் உயர் அதிகாரிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி யோவ் கேலன்ட் ஆகியோருக்கு இடையே ஒரு தனிப்பட்ட தொலைபேசி அழைப்பில் நேரடியாக வழங்கப்பட்டது. இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு ஆதரவை தெரிவிப்பதோடு, இஸ்ரேலின் சார்பாக ஒரு சாத்தியமான எதிர் தாக்குதலில் சேர அமெரிக்கா திட்டமிடவில்லை என்பதை ஆஸ்டின் மிகவும் "நேரடி" முறையில் தெளிவுபடுத்தியதாக அந்த அதிகாரி கூறினார். மூலம் : https://www.yahoo.com/news/us-israel-strike-back-iran-162024611.html

தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா? 

1 day 2 hours ago
நிச்சயமாக இவை இரண்டும் ஒன்றல்ல. திட்டமிட்ட குடியேற்றங்களும் கொழும்பு போன்ற Metropole city ஐ நோக்கிய தமிழரின் குடிப்பரம்பலும் ஒன்றல்ல. ஆனால், இவற்றை தடுத்திருக்க அல்லது தமிழரின் இனப்பரம்பலை வட கிழக்குப் பிரதேசங்களில் அதிகரித்திருத்து இதன் ஈடு செய்திருக்கக் கூடிய அரசியல் தீர்வை பெற கிடைத்த பல சந்தர்ப்பங்களை எமக்கே உரி ய பாணியில் தவறவிட்டதன் விளைவுகளில் இதுவும் ஒன்று. தற்போதைய எமது நிலையில் எமக்கு சாத்தியமானவற்றை பெற தாயக/ புலம் பெயர் அரசியலாளர்கள் ஒன்றாக இணைந்து முயற்சிப்பது ஒரு வழி (ஒருவருக்கொருவர் துரோகி பட்டங்களை வழங்குவதன் மூலம் தம்மை புனிதராக காட்ட விளையும் மூடத்தனமான அரசியல் செய்வதை விடுத்து) அல்லது, தாயகத்தில் தமிழரின் இருப்பை பாதுகாக்க வேண்டும் பொது எண்ணம் கொண்ட, துணிச்சல் கொண்ட இளைஞர்கள் வருங்காலத்தில் அமையும் அரசாங்கங்களுடன் (முஸ்லீம் மக்களைப் போல்) அமைச்சரவையில் இணைந்து பணியாற்றுவதன் மூலம் வரும் அனுகூலங்களை பாவித்து எமது மக்களின் குடிப்பரம்பலை வட கிழக்கில் மெதுவான வேகத்திலாவது அதிகரிக்க செய்ய முயற்சிக்க முடியும். எமது மக்களின் உற்பத்தி, கல்வி, பொருளதாரம் ஆகியவற்றில் எம்மை பலப்படுத்தி இலங்கைத் தீவில் நாமும் ஒரு சக்தி என்பதை காப்பாற்றிக் கொள்ளலாம். அப்படி இல்லை எமது பழைய வழி முறைகளில் நாம் வீரர்கள் என்று நிருப்பிக்க கங்கணம் கட்டி உசுப்பேற்றிக் கொண்டிருந்தால், இப்படியே இணையங்களிலும் முகநூல்களிலும் மட்டும் தேசியம் பேசி காலத்தை வீண்டித்து மாயாஜால அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தால் இலங்கையில் தமிழரின் அரசியல் பலம் இன்னும் இப்போதிருப்பதை விட இன்னும் மோசமாகும் ஆபத்து கண்முன்னே தெரிகிறது. ஒவ்வொன்றாக இழந்துவிட்டு எதிரி மோசமானவன் என்பதை உலகத்திற்கு காட்டுவதற்காகவே இந்த அரசியலை செய்தோம் என்று கூறிக்கொண்டிருப்பது எம்மை நாமே ஏமாற்றும் மடைத்தனமான அரசியல். அதையே கடந்த 70 வருடங்களாக செய்து வருகிறோம்.

அதிசயக்குதிரை

1 day 2 hours ago
காவலர் சாரதியிடம் கேட்கிறார் : போதைப்பொருள், குடிவகை .... ? 🥵 சாரதி சொல்கிறார் : இல்லை அவை எனக்கு வேண்டாம் ....நன்றி .....ஆனால் கோப்பி எனக்கு மிகவும் பிடிக்கும்......! 😂

இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்

1 day 3 hours ago
என் குடும்ப பாடல் இது. எனது தகப்பனார் அடிக்கடி இப்பாடசாலை பாடுவார். அண்ணர் மற்றும் என் குறும்புத்தம்பி இன்று உயிருடன் இல்லை. தானாக படித்து வந்த தம்பி நான் மட்டும்.....???

"பாசக்காரப் பாட்டி"

1 day 3 hours ago
"பாசக்காரப் பாட்டி" எல்லா குழந்தைகளுக்கும், தமக்கு அன்பு செலுத்தவும், தாம் அன்பு செலுத்தவும் ஒரு சிலர் கட்டாயம் தேவை. அம்மா, அப்பாவிற்கு அடுத்ததாக, ஏன் பலவேளைகளில் முதலாவராக இருப்பவர் தான் பாட்டி ஆவார். ஏன் என்றால் அவர்கள் பெற்றோர்களின் பங்கை இலகுவாக எடுக்கக் கூடியது தான், பொறுமையாக இருந்து ஆலோசனை வழங்குவதுடன், சேர்ந்து விளையாடி, கதைகள் சொல்லி ஒரு ஆசிரியர் போலவும், கூட்டாளி போலவும் செயற்படக் கூடியவர்கள் அவர்கள் ஒருவரே! அப்படியான ஒருவர் தான் என் பாட்டி!! எங்க குடும்பம் ஓரளவு கூட்டு குடும்பம் என்பதால், தாத்தாவும் பாட்டியும் எம்முடன் இருந்தனர். அப்பா முழுநேர வேலையும், அம்மா பகுதி நேர வேலையும் என்பதால், என்னை கவனிப்பதில் பாட்டியே முதலாவதாக இருந்தார். பல மகிழ்வான நிகழ்வுகள் இன்னும் என் மனதில் இருக்கிறது. நான் இன்று பெரியவனாகி, படிப்பு முடித்து, வேலையும் செய்கிறேன். அடுத்த ஆண்டு எனக்கு திருமணம் கூட நடக்க உள்ளது. என் முதல் கனா, எனக்கு மூத்தப்பிள்ளை, மகளாக பிறக்கவேண்டும், அவளுக்கு பாட்டியின் பெயரை சூட்டிட வேண்டும். ஆமாம் ஒன்று சொல்ல மறந்து விட்டேன், என் பாசக்காரப் பாட்டி, சென்ற ஆண்டு திடீரென கொரோனாவால் எம்மை விட்டு பிரிந்துவிட்டார். ஆனால் அதற்க்கு முதல், என் வருங்கால மனைவியை [காதலியை] சந்தித்து அவருக்கு ஆசி வழங்கியது, அவரை பேத்தி என்று செல்லமாக கூப்பிட்டு அளவளாவியது இன்னும் மறக்க முடியாது! என் சின்ன வயதில், பாட்டி பொதுவாக வீட்டிலேயே இருப்பதால், என்னுடன் அதிகமாக இருந்து உள்ளார். அதனால் அவரே, நான் எடுக்கும் சின்ன சின்ன தீர்மானங்களுக்கு நங்கூரமாகவும், அதே நேரம் எனது பாதுகாப்பாகவும் இருந்தார். அந்த நேரம் அதை என்னால் சரியாக உணரமுடியவில்லை. இடைஞ்சலாக இருக்கிறார் என அடம்பிடித்ததும் உண்டு. ஆனால் இன்று அதன் உண்மையான தன்மையை உணருகிறேன் குறிப்பாக என் பாலர் பருவத்தில் பாட்டியின் பங்கு மறக்கமுடியாத ஒன்று. அவரின் பாசம், எந்த நிலையிலும் மனம் குழம்பாது ஒரு சிறு புன்னகையுடன் எடுக்கும் தீர்மானங்கள், மடியில் இருத்தி கதை சொல்லும் அழகு, தாலாட்டு பாடி நித்திரை ஆக்கும் பக்குவம், கணிதம், தமிழ், விஞ்ஞானம், பொது அறிவு போன்றவற்றை இலகுவாக உதாரணத்துடனும் செய்முறைகளுடனும் புகட்டும் அனுபவம் நான் இன்னும் வேறு யாரிடமும் கண்டதில்லை. "பாசம் கொண்டு மகிழ்ந்து விளையாட பாவம் பாட்டி இந்த வயதிலும் பார்த்து படியில் கால் வைத்து பாலும் சோறும் கொண்டு வாரார்" "பாடி ஆடி விளையாட்டு காட்ட பால் கொடுத்து கதை சொல்ல பாயில் அணைத்து சேர்ந்து படுக்க பாக்கியம் பெற்றேனென மகிழ்ந்து வாரார்" பாயை விரித்து நீட்டி படுத்து பாதி பல்லால் வெற்றிலை மென்று பாதை காட்ட நல்ல கதைசொல்ல பாசம் கொண்டு மகிழ்ந்து வாரார்" ஆமாம் இப்படித் தான் என் பாட்டி இருந்தது எனக்கு இன்னும் ஞாபகம் . அவரை பற்றி கொஞ்சம் விரிவாக சொலவ்து என்றால், அவர் என்றும் பாரம்பரிய உடையில் தான் இருப்பார். எம் பெற்றோர் , நாம் எல்லோரும் இன்றைய நவீன உடை அலங்காரத்துக்குள் தாராளமாக இருந்தாலும், அவர் தன் அலங்காரத்தை மாற்றவே இல்லை, ஆனால் எம்மை தடுக்கவும் இல்லை, அவர் எம்மை அதில் பார்ப்பதில் மிக்க மகிழ்வே காட்டினார் ! அது தான் அவரின் சிறப்பு !, இது யாருக்கு வரும் ?? அவர் பெரிதாக வண்ண நிற ஆடைகள் அணியமாட்டார். அது மட்டும் அல்ல தொழ தொழ என்றே மேல் சடடை இருக்கும். அது முழங்கை மட்டும் நீண்டும் இருக்கும். அதிகமாக பகலில் சேலை அணிந்து இருப்பார். மாலை வரும் பொழுது நைட்டி / இரவில் அணியும் ஆடை அல்லது மேல் சட்டையுடன் ஒரு வித பாவாடை அணிவார். ஆனால் மிகவும் கச்சிதமாக அழகாக உடுத்து இருப்பார். இன்று உடை கலாச்சாரம் சிறுவரில் இருந்து கிழவி வரை மாறி விட்டாலும், என் பாட்டி கிராமத்து கலாச்சார உடையை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார். அவர் எந்த ஒப்பனையும் செய்வதில்லை, என்றாலும் அவரின் இயற்கையான சாயல் உண்மையில் அழகே! ஏன், அவர் பெயர் கூட கனகம்மா தான்! அவர் சிறு வயதில், பாரமான தங்க தோடு அணிந்தவர் என்பதால், பிற்காலத்தில் அவரின் காது மடல்கள் நீளமாக வந்துவிட்டது என்று எண்ணுகிறேன். பாட்டி சொன்ன இரு விடயங்கள் எனக்கு இன்னும் ஞாபகமாக இருக்கு. அது அவரின் பண்பாட்டையும் அறிவையும் கட்டாயம் பறைசாற்றும். அது மட்டும் அல்ல அவரின் இனப்பற்றையும், ஒரு குடும்ப ஒழுஙகையும் எடுத்துக்காட்டுகிறது. இன்று தமிழ் இனம் இலங்கையில் பட்ட துன்பங்களும், அதனால் ஆயிரம் ஆயிரமாக இடம் பெயர்ந்து பரவலாக பல நாடுகளில் வாழும் சூழலில், தமது பண்பாட்டையும், மொழியையும் தொடர வேண்டிய அவசியம் இருக்கு என்பதை அவரின் சொற்கள் என் காதில் ஒலித்த படியே உள்ளது. கலிகாலம் என்றால் என்ன? ஒரு சின்ன பிரசங்கமே எனக்கு வைத்தார். அந்த நாள் காலம் வேறு, இப்பத்தான் காலம் வேறு என்று ஆரம்பித்த அவர், கரிகாலம் என்று சற்று நிறுத்தி சொல்லி, அண்ணனும் தம்பியும் ஒரு முறை சந்தித்தார்கள், தம்பி, அண்ணா கரிகாலம் பிறந்து விட்டது என்று சொன்னான். உடனே அண்ணன், அது உன்னிலேயே தெரிகிறது என்று பதில் கொடுத்தார். காரணம் அன்றைய காலத்தில், மூத்தோருக்கு முன்னால், தோளில் இருக்கும் சால்வையை, ஒரு மரியாதை பொருட்டு, எடுத்துவிட்டு தான் கதைப்பார்கள். ஆனால் தம்பி அதை மறந்து வீறாப்புடன் அண்ணன் முன் கதைத்தது கரியன் பிறந்து விட்டான் என்பதை காட்டுகிறது என்றானாம், என்றார் என் பாட்டி. இது இன்று நகைப்புக்கு உரியதாக பலரால் கருதினாலும், கரிகாலம் என்ற சொல்லுக்கு ஒரு நல்ல விளக்கம் என்றே நம்புகிறேன் ! மற்றும் படி எனக்கும் அதில் பெரிதாக நம்பிக்கை இல்லை. மேலும் குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று வலியுறுத்திய பாட்டி, பிதா மாதாவுக்கு கடமை செய்ய வேண்டும் என்றும் தாய் மொழியை எங்கிருந்தாலும் மறக்க வேண்டாம் என்றும், மொழி அழிந்தால் இனம் அழிந்ததுக்கு சமன் என்று சில வரலாற்று கதைகள் மூலம் விளங்கப் படுத்தினார். அதனின் உண்மையை இன்று நாம் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம் / காண்கிறோம்! அதனால் தான் என் பாட்டியை மீண்டும் என் மகளாக வரவேண்டும் என்று கனவு காண்கிறேன். நான் மறு பிறப்பில், இவை போன்ற மூட நம்பிக்கைகளில், எந்த உண்மையும் இல்லை என்று அறிவியல் ரீதியாக எண்ணுகிறவன் என்றாலும், என் பாசக்காரப் பாட்டியின் சாயலில் வரவேண்டும் என்பதே என் கனா! "கட்டிலில் படுத்து பாட்டியை நினைத்தேன் ஊட்டி வளர்த்த கதைகளை சுவைத்தேன் போட்டி போட்டு கனவு வந்தது பாட்டி உருவில் தேவதை வந்தது!" "கேட்காத இனிமை காதில் ஒலித்தது வாட்டாத நிலவு வானத்தில் ஒளித்தது மொட்டு விரிந்து வாசனை தந்தது குட்டி பாட்டி தவழ்ந்து வந்தது" "மெட்டி ஒலி காற்றோடு கலக்க முட்டி மோதி நிமிர்ந்து நடந்து பொட்டக் குட்டி பாட்டி பெயரில் லூட்டி அடிச்சு அட்டகாசம் போடுது" "ஒட்டி உடையில் அழகு காட்டி சட்டம் போட்டு திமிரு காட்டி பாட்டு படித்து இனிமை காட்டி புட்டி பாலூட்ட மடியில் உறங்குது" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பி கு ; என் அம்மாவை என் மகன் எழுதுவதாக கதை வடிவமைத்துள்ளேன்

ஐ.பி.எல் 2024 - செய்திகள்

1 day 3 hours ago
தினேஸ் கார்த்திக் செஞ்ச‌ரி அடிப்பார் என்று எதிர் பார்த்தேன் 83ர‌ன்ஸ்சில் அவுட் ஆகி விட்டார் ஹில‌ன் ம‌ஸ்வேலைன்று ந‌ட‌ந்த‌ விளையாட்டில் சேர்க்க‌ வில்லை ப‌டு சுத‌ப்ப‌ல் விளையாட்டு விளையாடின‌ அனைத்து விளையாட்டிலும்.....................................

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி -  2024

1 day 3 hours ago
# Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும். No Result Tie CSK Select CSK CSK DC Select DC Select GT Select GT Select KKR Select KKR KKR LSG Select LSG Select MI Select MI Select PBKS Select PBKS Select RR Select RR RR RCB Select RCB Select SRH Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் ) RR #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) KKR #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team KKR 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7) மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) RCB 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Kohli 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Bumra 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Kohli 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Sanju Samson 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி குழாத்தில் யாழ். இளைஞர் விஜயகாந்த் வியாஸ்காந்த்

1 day 3 hours ago
இல‌ங்கை அணியில் சிற‌ந்த‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் இரண்டு பேர் இருக்கின‌ம்..................இவ‌ரின் விளையாட்டை நான் பார்த‌து இல்லை................ம‌திஷ்ச‌னாவின் ப‌ந்து வீச்சை விட‌ இவ‌ர் சிற‌ப்பாக‌ ப‌ந்து போட்டால் இல‌ங்கை அணியில் வாய்ப்பு கிடைக்கும் ஜ‌பிஎல்ல‌ எடுத்தும் இதுவ‌ரை ஒரு விளையாட்டிலும் விளையாட‌ விட‌ வில்லை.................................

இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்

1 day 3 hours ago
இந்த‌ விடைய‌த்தில் ந‌ண்ப‌ர் எப்போதும் குறை சொல்ல‌ மாட்டேன்..................இது க‌ருத்துக்க‌ள‌ம் தானே முன்னுக்கு பின் க‌ருத்து இருந்தா தான் க‌ருத்துக்க‌ளமாய் இருக்கும்...............எப்போதும் த‌மிழ‌ன் எல்லார் கூட‌வும் க‌ருத்தாடும் ந‌ப‌ர்.................பிழைக‌ள் குறைக‌ளை வெளிப்ப‌டையாய் எழுதுப‌வ‌ர்........................

இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்

1 day 4 hours ago
தெரியும் தானே பரசூட்டில வந்து இறங்கின ஆக்கள் இப்ப கதறக் கதற அடிவாங்கிக்கொண்டு பங்கர்களுக்க ஒளிச்சுத் திரியினை. இரானின் வருத்தத்துக்கு நிச்சயம் மருந்து கிடைக்கும்!

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி குழாத்தில் யாழ். இளைஞர் விஜயகாந்த் வியாஸ்காந்த்

1 day 4 hours ago
Published By: VISHNU 14 APR, 2024 | 10:18 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு தெரிவாளர்கள் பெயரிட்டுள்ள 32 வீரர்களைக் கொண்ட இலங்கை முன்னோடி குழாத்தில் யாழ். மத்திய கல்லூரியின் முன்னாள் தலைவர் விஜயகாந்த் வியாஸ்காந்த் பெயரிடப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் தெரிவாளர்கள் ஏற்கனவே அறிவித்தவாறு வனிந்து ஹசரங்க அணித் தலைவராகவும் சரித் அசலன்க உதவித் தலைவராகவும் பெயரிடப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்திவரும் சகலதுறை ஆட்டக்காரர்கள் உட்பட சிறந்த வீரர்கள் பலர் குழாத்தில் இடம்பெறுகின்றனர். இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவரும் சில வீரர்களைத் தவிர்ந்த ஏனைய அனைவரும் தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்துடன் குழாத்தில் இணைந்து தீவிர பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர். இலங்கை முன்னோடி குழாம் வனிந்து ஹசரங்க (தலைவர்), சரித் அசலன்க (உதவித் தலைவர்), குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸன்க, சதீர சமரவிக்ரம, ஏஞ்சலோ மெத்யூஸ், கமிந்து மெண்டிஸ், தசுன் ஷானக்க, தனஞ்சய டி சில்வா, அவிஷ்க பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால், குசல் பெரேரா, பானுக்க ராஜபக்ஷ, நிரோஷன் திக்வெல்ல, துஷ்மன்த சமீர, மஹீஷ் தீக்ஷன, பினுர பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ, லஹிரு மதுஷன்க, மதீஷ பத்திரண, நுவன் துஷார, லஹிரு குமார, டில்ஷான் மதுஷன்க, ப்ரமோத் மதுஷான், சாமிக்க கருணாரட்ன, ஜனித் லியனகே, லசித் குரூஸ்புள்ளே, சஹான் ஆராச்சிகே, அக்கில தனஞ்சய, ஜெவ்றி வெண்டசாய், துனித் வெல்லாலகே, விஜயகாந்த் வியாஸ்காந்த். https://www.virakesari.lk/article/181078

இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்

1 day 4 hours ago
அது வழக்கமான நிலை ஆனால் ஈரான் இழுத்து உள்ளே விட்டு விட்டது. இதை இஸ்ரேல் நிச்சயமாக பாவிக்கும். தனது பல நிலுவை களை பூர்த்தி செய்து பாதுகாப்பு உத்தரவாதம் எடுத்து கொள்ளும். அது தான் புத்திசாலித்தனமும் கூட.

இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்

1 day 4 hours ago
கொஞ்ச காலம் பொறுத்து…. சத்தமில்லாமல்…. சில உயர் அதிகாரிகளையோ… சில அணு விஞ்ஞானிலளையோ… ஒரு அணு சோதனை கூடத்தையோ… போட்டு பிளக்கும்…..
Checked
Tue, 04/16/2024 - 20:20
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed