புதிய பதிவுகள்2

அவுஸ்திரேலியாவில் இலங்கை பிக்குக்கு சிறைத்தண்டனை

1 day 9 hours ago
ஊரிலைதான் உழுது கொண்டு திரியிறாங்கள் என்றால், போற இடத்திலாவது அதை சுருட்டி வைத்திருக்க மனம் வருகுதில்லை இவங்களுக்கு. மொத்தமாக 17 குற்றச்சாட்டுக்களின் தண்டனையையும் மறியலில் முடித்து வர 70 வயசு பிக்கு மேலை போயிடுவார். 😂

யாழ்.மாவட்டப் போக்குவரத்து; எம்.பி.க்கள் நேரில் ஆராய்வு!

1 day 10 hours ago
யாழ்ப்பாணம் 1 மணி நேரம் முன் யாழ்.மாவட்டப் போக்குவரத்து; எம்.பி.க்கள் நேரில் ஆராய்வு! இணைந்த அட்டவணை தொடர்பில் கூடுதல் கவனம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் இ.போ.ச. மற்றும் தனியார் பேருந்துச் சேவைகளின் குறைபாடுகள் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதிகாரிகளும் நேற்று நேரடிக்களப்பயணம் மேற்கொண்டு ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் யாழ். மேலதிக மாவட்டச் செயலர் சிவகரன், உள்ளூராட்சி ஆணையாளர் சுதர்சன், யாழ்ப்பாணம் பிரதேச செயலர், யாழ். மாநகர மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், நகர அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர்கள் உட்படப் பலரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கெடுத்தனர். குறிப்பாக, தூரசேவை பேருந்து நிலையத்தில் இருந்து இரு பேருந்து சேவைகளையும் இணைந்த சேவை நேர அட்டவணையின் பிரகாரம் முன்னெடுப்பதில் இருக்கின்ற பிரச்சினைகள் குறித்து கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உயர்மட்டக் கலந்துரையாடல் மூலம் சிறப்புப்பொறிமுறையை ஏற்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. யாழ்.மாவட்டப் போக்குவரத்து; எம்.பி.க்கள் நேரில் ஆராய்வு!

நல்லூர் பகுதிகளில் கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை

1 day 11 hours ago
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நல்லூர் பிரதேச சபையின் கழிவகற்றல் முகாமைத்துவத்தினை மேம்படுத்துவதற்கான செயற்றிட்டங்களினை நல்லூர் பிரதேச சபை மேற்கொண்டு வருகின்றது. அது மிகப்பெரிய சவாலாக காணப்படுகின்ற போதும் அசாத்தியமானதை சாத்தியமாக்கின்ற பணியில் நாம் தொடர்ந்தும் மிகுந்த ஈடுபாட்டுடன் பயணிக்கின்றோம். அதன் பிரகாரம் நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் பொது இடங்களில் கழிவுகள் கொட்டப்படுவதனை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை தடுக்கும் முகமாக முதற்கட்டமாக அதிகளவில் கழிவுகள் கொட்டப்படுகின்ற 11 பொது இடங்களை அடையாளப்படுத்தி அங்கு கண்காணிப்பு கமராங்கள் பொருத்தப்பட்டு தினமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு பொது இடங்களில் கழிவுகளை வீசுபவர்கள் கண்காணிப்பு கமராங்கள் மூலமாக அடையாளப்படுத்தப்பட்டு கிராம சேவையாளர்களுக்கூடாக அவர்கள் தொடர்பான விபரங்கள் பெறப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கின்ற செயற்பாடுகளும் நடைபெற்றுவருகின்றது. அதே நேரம் வாகனங்களில் வந்து கழிவுகளை வீசுபவர்களின் வாகன இலக்கங்கள் மோட்டார் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு அவர்கள் மூலம் குறித்த வாகனங்களின் விபரங்கள் பெறப்பட்டு அபராதம் விதிக்கின்ற செயற்பாடுகள் நடைபெற்றுவருகின்றது. குறித்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கென ஒரு தனி அலகும் நல்லூர் பிரதேச சபையில் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பொது இடங்களில் கழிவுகளை வீசுபவர்கள் பலர் அடையாளப்படுத்தப்பட்டு கடந்த இரண்டு மாத காலத்தினுள் இரண்டு லட்சம் ரூபாவுக்கு மேல் தண்டப்பணம் நல்லூப் பிரதேச சபைக்கு வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளது. பொது இடங்களில் கழிவுகளை கொட்ட வேண்டாம் என்று நல்லூர் பிரதேச சபை பல தடவைகள் அறிவுறுத்தல்கள் விட்டபோதும் சிலர் அவற்றினை அலட்சியம் செய்து பொது இங்களில் கழிவுகளை வீசிவிட்டே செல்கின்றனர். அதனைக் கட்டுப்படுத்த வேண்டிய தார்மீக பொறுப்பினையுணர்ந்த நல்லூர் பிரதேச சபை கழிவு போடும் இடங்களினை அடையாளப்படுத்தல் - கண்காணிப்பு கமராக்கள் பொருத்துதல் - கண்காணித்தல் - கழிவுகளை வீசுபவர்களை அடையாளப்படுத்தல் - அவர்களுக்கு அபராதம் விதிக்கின்ற செயற்பாட்டினை முன்னெடுத்தல் என்ற பொறிமுறையினை தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றது. இப் பொறிமுறைக்கு எம்மை இட்டுச் சென்றது எம்முடைய சில பொறுப்பற்ற மக்கள் கூட்டத்தினரே. இவ்வாறு கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு அபராதம் விதிக்கின்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் பொது இடங்களில் கழிவுகள் வீசுகின்ற செயற்பாடுகள் நிறுத்தப்படவில்லை. எனவே காலத்தின் தேவை கருதி இச் செயற்பாட்டினை முற்றாக நிறுத்துவதற்குரிய கடுமையான நடவடிக்கைகளை நல்லூர் பிரதேச சபை மேலும் விரிபுபடுத்தும். எனவே பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளுகின்றேன் என தெரிவித்துள்ளார். நல்லூர் பகுதிகளில் கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை | Virakesari.lk

இலங்கையின் மொத்த சனத்தொகை குறித்து வெளியான தகவல் !

1 day 11 hours ago
இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை மதிப்பீட்டுக்கமைய இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளது. இந்நிலையில், இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதமாகவும்,பெண்களின் எண்ணிக்கை 51.7 வீதமாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை, இலங்கையில் சனத்தொகை கூடிய மாவட்டமாக கம்பஹா மாவட்டம் பதிவாகியுள்ளது. இலங்கையில் தங்கி வாழ்வோரின் வீதம் ( 65 வயதுக்கு மேற்பட்ட ,தொழில் புரியாதோர்) 12.6 வீதமாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் மொத்த சனத்தொகை குறித்து வெளியான தகவல் ! | Virakesari.lk

கடலில் கவிழ்ந்த கேஷான் புதா 1 மீன்பிடிக் கப்பல் - மீனவர்களை மீட்கப் புறப்பட்டது சிதுரல கப்பல்

1 day 11 hours ago
30 Oct, 2025 | 05:10 PM இலங்கைக்கு தெற்கே, ஹம்பாந்தோட்டைக்கு சுமார் 354 கடல் மைல் (655 கிமீ) தொலைவில் ஆழ்கடலில் பாதகமான வானிலை காரணமாக கவிழ்ந்த கேஷான் புதா 1 என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்து நான்கு மீனவர்கள் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன் மீட்கப்பட்டதுடன், அவ் மீனவர்களை மீட்கும் நடவடிக்கைக்காக இலங்கை கடற்படையினால், இலங்கை கடற்படை கப்பலான சிதுரல அந்த கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டது. தேவேந்திர மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆறு மீனவர்களுடன் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்ட கேஷான் புதா 1 என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலின் தொடர்பு இணைப்புகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு, கப்பல் காணாமல் போயுள்ளது, மேலும் கப்பலையும் அதில் உள்ள மீனவர்களையும் கண்டுபிடிக்க உதவிமாரு, கடற்படை தலைமையகத்தில் அமைந்துள்ள கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு மீன்வள மற்றும் நீர்வளத் திணைக்களம் தகவல் தெரிவித்தது. இந்த அறிவிப்புக்கு உடனடியாக பதிலளித்த கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தினால், இலங்கை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள மீன்பிடி மற்றும் கடற்படை சமூகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்படி, பல நாள் மீன்பிடிக் கப்பலான கேஷான் புதா 1, இலங்கை கடற்கரையிலிருந்து ஹம்பாந்தோட்டைக்கு தெற்கே சுமார் 354 கடல் மைல்கள் (655 கிமீ) தொலைவில் ஆழ்கடலில் கவிழ்ந்து ஆபத்தில் இருந்தபோது, நான்கு மீனவர்கள் இந்தோனேசிய மீன்பிடிக் கப்பலால் மீட்கப்பட்ட பின், அடிப்படை முதலுதவி மற்றும் அடிப்படைத் தேவைகளை வழங்கவும் மீனவர்கள் வணிகக் கப்பலான MV Graceful Star அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில், இந்த மீட்பு நடவடிக்கைக்காக கடற்படை இலங்கை கடற்படை கப்பலான சிதுரலவை அனுப்பியது. கடலில் கவிழ்ந்த கேஷான் புதா 1 மீன்பிடிக் கப்பல் - மீனவர்களை மீட்கப் புறப்பட்டது சிதுரல கப்பல் | Virakesari.lk

பிரகீத் எக்னலிகொட வழக்கு : கொழும்பு உயர்நீதிமன்றம் டிசம்பர் 5 விசாரணை உத்தரவு

1 day 11 hours ago
30 Oct, 2025 | 05:52 PM ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல்போனமை தொடர்பாக இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை டிசம்பர் 5ஆம் திகதி மீண்டும் விசாரணைக்குட்படுத்த கொழும்பு உயர் நீதிமன்றம் சட்ட மாஅதிபருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று வியாழக்கிழமை (30) மூன்று நீதிபதிகளைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வின் உறுப்பினரான நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. வழக்கை விசாரிக்கும் மூன்று நீதிபதிகளைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வில் மீதமுள்ள வெற்றிடமாக உள்ள பதவிகளுக்கு தற்போது வரை நீதிபதிகள் பெயரிடப்படவில்லை என்று நீதிபதி கூறினார். விரைவில் அந்தப் பதவிகளுக்கு நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறிய நீதிபதி, வழக்கு டிசம்பர் 5ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக உத்தரவிட்டுள்ளார். கிரிதலே இராணுவ முகாமின் முன்னாள் கட்டளை அதிகாரி உட்பட ஒன்பது இராணுவ புலனாய்வுப் பிரிவினர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர். 2010 ஜனவரி 25ஆம் திகதி அல்லது அதற்கு அருகில் கிரிதலே, ஹபரணை மற்றும் கொட்டாவ ஆகிய பகுதிகளில் அடையாளம் தெரியாத ஒரு குழுவினருடன் சேர்ந்து இரகசியமாக சிறையில் அடைக்கும் நோக்கத்துடன், பத்திரிகையாளர் பிரகீத் எக்னலிகொடவை கடத்தி கொலை செய்ததாக குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்ட மாஅதிபர் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது. பிரகீத் எக்னலிகொட வழக்கு : கொழும்பு உயர்நீதிமன்றம் டிசம்பர் 5 விசாரணை உத்தரவு | Virakesari.lk

யாழில் ஒப்பந்த காலம் நிறைவடைந்தும் வெளியேறாத நிறுவனம் - மீனவர்கள் போராட்டம்!

1 day 11 hours ago
30 Oct, 2025 | 05:07 PM ஒப்பந்த காலம் நிறைவடைந்தும் வெளியேறாமல், தம்பாட்டி கடற்றொழில் கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் கட்டடத்தில் இருந்து தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் தனியார் நிறுவனத்தை உடனடியாக வெளியேறுமாறு கோரி, தம்பாட்டி கிராமிய கடற்றொழில் அபிவிருத்தி சங்கத்தினர் இன்றைய தினம் (30) குறித்த கட்டடத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தி, "தனியார் நிறுவனமே உடனடியாக வெளியேறு”, “எங்கள் வீட்டில் உங்கள் ஆட்சியா”, “ஒப்பந்தகாலம் நிறைவடைந்தும் வெளியேறாமல் இருப்பது அராஜகமான செயற்பாடா”, “மீனவர்களின் வயிற்றில் அடிக்காதே”, “எமது கட்டடம் எமக்கு வேண்டும்”, “மீனவர்களுக்கு அநீதி இழைக்காதே" போன்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட தம்பாட்டி கடற்றொழில் கிராமிய அபிவிருத்தி சங்கத்தினர் கருத்து தெரிவிக்கையில், எமது சங்க கட்டடமானது கடந்த நிர்வாகத்தால் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 5 வருடகால ஒப்பந்தத்துக்கு வழங்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நிலையில் 2023ஆம் ஆண்டு ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளது. ஒப்பந்தகாலம் நிறைவடைந்து 2 வருடங்கள் கடந்தும் அவர்கள் வெளியேறவில்லை. வேறொரு நிறுவனமானது எம்மிடம் வந்து 80 பேருக்கு வேலைவாய்ப்பும், 10 இலட்சம் ரூபா முற்பணமும், மாதாந்தம் 50ஆயிரம் ரூபா வாடகையும் தருவதாகவும் கூறினார்கள். நாங்கள் அவர்களுடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஒப்பந்தமும் செய்துவிட்டோம். ஆனால் ஏற்கனவே எமது கட்டடத்தை பயன்படுத்தும் நிறுவனமானது வெளியேறாத காரணத்தால் புதிதாக ஒப்பந்தம் செய்த நிறுவனம் தமது பணிகளை முன்னெடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புதிய நிறுவனத்தின் வருகையால் எமது பகுதியில் உள்ள பல பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதாரமும் கிடைக்கவுள்ளது. ஆனால் அதற்கு எல்லாம் வழிவிடாது, ஏதோ ஒரு பின்னணியை வைத்து அந்த நிறுவனம் வெளியேறாமல் இருக்கின்றது. எமது அனுமதியின்றி எமது கட்டடத்திலும், கட்டடம் அமைந்துள்ள வளாகத்திலும் பல்வேறு விதமான வேலைகளை செய்கின்றனர். உள்ளே என்ன நடக்கின்றது என்று கூட எமக்கு தெரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசியிருந்தோம். இருப்பினும் அவர்களும் எமக்கு தீர்வு வழங்கவில்லை. குறித்த நிறுவனமானது இதற்கு பின்னரும் வெளியேறாவிட்டால் ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல. ஏனெனில் அவர்கள் சட்டவிரோதமாக இருக்கின்றார்கள். ஒப்பந்த காலம் நிறைவடைந்த நிலையில் எங்களது சங்கத்தின் வளாகத்தில் எங்களது மக்களுக்கு நன்மை பயக்கும் எந்த செயற்பாட்டையும் நாங்கள் செய்ய முடியும் என்றனர். குறித்த போராட்டம் இடம்பெற்றபோது கட்டடத்தின் உள்ளே இருந்தவர்கள் போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் காணொளி எடுத்ததை அவதானிக்க முடிந்தது. யாழில் ஒப்பந்த காலம் நிறைவடைந்தும் வெளியேறாத நிறுவனம் - மீனவர்கள் போராட்டம்! | Virakesari.lk

'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' தொனிப்பொருளின் கீழ் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு செயற்றிட்டம்

1 day 11 hours ago
30 Oct, 2025 | 06:01 PM (எம்.மனோசித்ரா) 'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' என்ற கருப்பொருளின் கீழ் நாடளாவிய ரீதியிலான தேசிய போதைப்பொருள் ஒழிப்பு செயற்றிட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. கொழும்பு - சுகததாச உள்ளக அரங்கில் வியாழக்கிழமை (30) காலை இந்நிகழ்வு இடம்பெற்றது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உள்ளிட்ட ஏனைய அமைச்சரவை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் பொது மக்கள் என நூற்றுக்கணக்கானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அரச நிறுவனங்களின் பங்களிப்புக்கு அப்பால், பரந்த பொதுமக்களின் பங்கேற்புடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. பயனுள்ள செயலாக்கத்தை உறுதிப்படுத்த, மாவட்ட வழிகாட்டுதல் குழுக்கள், பிராந்திய வழிகாட்டுதல் குழுக்கள் மற்றும் அடிமட்ட அளவில் பொது பாதுகாப்பு குழுக்கள் உட்படப் பல கட்டங்களைக் கொண்ட ஒரு கட்டமைப்பு இதற்காக நிறுவப்பட்டுள்ளது. சமூகத்தின் பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 23 உறுப்பு அமைப்புகளைக் கொண்ட 'ஒன்றிணைந்த தேசம்' தேசிய வழிகாட்டுதல் சபை மத்திய செயல்பாட்டு அமைப்பாகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவு முழுவதும் இந்த முயற்சியை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதியின் தலைமையில் தேசிய வழிகாட்டுதல் சபை ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டுள்ளது, அத்துடன் ஜனாதிபதியின் செயலாளர் சபையின் செயலாளராகப் பணியாற்றுவார். இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், நாட்டின் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் போதைப்பொருட்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் அச்சுறுத்தலை ஒழிப்பதாகும். இதன்படி, பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், பொலிஸ், முப்படைகள், பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இன்று முதல் இந்தத் திட்டத்தில் இணைந்துகொள்ளும் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்கு இணையாக, மாகாண சபைகள், மாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரிகளும் இந்தத் திட்டத்தை ஆதரிப்பதாக முறைப்படி உறுதிமொழி எடுக்க எதிர்பார்க்கப்படுகிறது. 'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' தொனிப்பொருளின் கீழ் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு செயற்றிட்டம் | Virakesari.lk

யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் உயிர்மாய்க்க முயன்று வைத்தியசாலையில்

1 day 12 hours ago
பைத்தியர்... பாராளுமனத்துக்குள் நுழையும் மட்டும், கொஞ்சம் ஒழுங்காக.. மக்கள் பிரச்சினை சம்பந்தமாக அதிரடியாக களத்தில் இறங்கி குரல் கொடுத்துக் கொண்டுதான் இருந்தவர். அது தொடரும் என்ற நம்பிக்கையில்... மக்கள் வாக்களித்து அனுப்பினார்கள் என கருதுகின்றேன். அவர்.... பாராளுமன்றத்துக்குள் நுழைந்த முதல் நாளே... எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்து, அடாவடி பண்ணும் போதே... அவருக்கு ஏதோ சுகயீனம் இருக்கு என்று நாட்டு மக்கள் அறிந்து கொண்டார்கள். 🤣 இனி ஒரு தேர்தலில்... இவர் போட்டியிட்டால் வெற்றி கிடைக்கும் என்பது சந்தேகமே. ஆனாலும்... எங்களது மக்களை நம்பி, எதுவும் உறுதியாக கூற முடியாது. 😂

தென் கொரியாவில் ட்ரம்ப் – ஜி வரலாற்று சந்திப்பு!

1 day 12 hours ago
வர்த்தகப் போருக்கு மத்தியில் தென் கொரியாவில் ட்ரம்ப் – ஜி வரலாற்று சந்திப்பு! உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (30) தென் கொரிய விமானப்படை தளத்தில் சீனத் தலைவர் ஜி ஜின்பிங்குடனான சந்திப்பைத் தொடங்கினார். தெற்கு துறைமுக நகரமான பூசானில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள், 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவர்களின் முதல் நேரடி சந்திப்பாகும். அத்துடன், இது தென் கொரியா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் பல வர்த்தக முன்னேற்றங்களைப் பற்றிய ட்ரம்ப்பின் ஆசியா முழுவதும் மேற்கொள்ளும் விசேட பயணத்தின் இறுதிக்கட்டத்தையும் குறிக்கிறது. சந்திப்பின் போது ஜியுடன் கைகுலுக்கிய ட்ரம்ப், நாங்கள் மிகவும் வெற்றிகரமான சந்திப்பை நடத்தப் போகிறோம், அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை, இன்று நாம் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் என்று கூறினார். பேச்சுவார்த்தைகளைத் தொடங்க அவர்கள் தங்கள் பிரதிநிதிகளுடன் அமர்ந்தபோது, உலகின் இரண்டு முன்னணி பொருளாதாரங்களுக்கு இடையில் அவ்வப்போது உரசல்கள் ஏற்படுவது இயல்பானது என்று ஜி ஒரு மொழிபெயர்ப்பாளர் மூலம் ட்ரம்பிடம் கூறினார். மேலும், சீனா-அமெரிக்க உறவுகளுக்கு உறுதியான அடித்தளத்தை அமைக்க ஜனாதிபதி ட்ரம்புடன் தொடர்ந்து பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன் என்றும் அவர் மேலும் கூறினார். சில நாட்களுக்கு முன்பு, இரு நாடுகளுக்கான வர்த்தக பேச்சுவார்த்தையாளர்கள் ஒருவருக்கொருவர் முதன்மை கசப்பான விடயங்களை நிவர்த்தி செய்வதில் அடிப்படை ஒருமித்த கருத்தை எட்டினர். இந்த முன்னேற்றத்தினால், உலகளாவிய வணிகத்தை உலுக்கிய வர்த்தக பதட்டங்கள் தணியும் என்று முதலீட்டாளர்கள் நம்பியதால், டொலருக்கு எதிராக சீனாவின் யுவான் நாணயம் கிட்டத்தட்ட ஒரு வருட உச்சத்தை எட்டியது. வால் ஸ்ட்ரீட் முதல் டோக்கியோ வரையிலான உலக பங்குச் சந்தைகள் அண்மைய நாட்களில் சாதனை உச்சத்தை எட்டியுள்ளன. ஆனால் இரு நாடுகளும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் போட்டித் துறைகளில் கடுமையாக விளையாடத் தயாராக இருப்பதால், எந்தவொரு வர்த்தகத் தடையும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து பல கேள்விகள் உள்ளன. சீனா ஆதிக்கம் செலுத்தும் துறையான உயர் தொழில்நுட்ப பயன்பாடுகளுக்கு அவசியமான அரிய-பூமி தாதுக்களின் ஏற்றுமதியில் பெய்ஜிங் வியத்தகு முறையில் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்த முன்மொழிந்ததைத் தொடர்ந்து இந்த மாதம் வர்த்தகப் போர் மீண்டும் தொடங்கியது. சீன ஏற்றுமதிகள் மீது கூடுதலாக 100% வரிகள் விதிப்பதன் மூலம் பதிலடி கொடுப்பதாகவும், அமெரிக்க மென்பொருளைப் பயன்படுத்தி சீனாவுக்கான ஏற்றுமதிகளில் தடைகள் விதிக்கப்படுவது உள்ளிட்ட பிற நடவடிக்கைகள் உலகப் பொருளாதாரத்தையே தலைகீழாக மாற்றியிருக்கக்கூடும் என்றும் ட்ரம்ப் சபதம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1451575

யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் உயிர்மாய்க்க முயன்று வைத்தியசாலையில்

1 day 12 hours ago
நீங்க வேற விளையாட்டு ஒன்றைத்தானே நினைத்தீர்கள்?😀 ஒரு பைத்தியரையே தம் பிரதிநிதியாக பாராளுமன்றத்துக்கே அனுப்பிய மக்கள் அல்லவா?

NPP அரசாங்கம் யாழ்ப்பாண முஸ்லிம்களின் பிரச்சனைகளை தீர்க்குமா..?

1 day 13 hours ago
NPP அரசாங்கம் யாழ்ப்பாண முஸ்லிம்களின் பிரச்சனைகளை தீர்க்குமா..? Thursday, October 30, 2025 கட்டுரை - எம்.எஸ்.எம். ஜான்ஸின் - 1990 ஆம் ஆண்டு ஆக்டொபர் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சுமார் 20000 முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். தமிழீழத்தை முஸ்லிம்கள் அற்ற பிரதேசமாக மாற்றியமைப்பதற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களை வெளியேற்ற திட்டமிட்ட புலிகள் அமைப்பு கிழக்கு மாகாணத்தில் 1990 ஜூலை 12 அன்று குருக்கள்மடம் ஊடாக சென்ற 72 ஹஜ் குழுவினரை படுகொலை செய்தது, 1990 ஆகஸ்ட் 3 அன்று காத்தான்குடி பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்த 147 பேரை படுகொலை செய்தது , 1990 ஆகஸ்ட் 11 ஆம் திகதி இரவு முதல் 12 ஆம் திகதி காலை வரை ஏறாவூர் கிராமங்களில் 173 முஸ்லிம்களை படுகொலை செய்தது உட்பட ஏராளமான முஸ்லிம்களை கொன்று அவர்களை வெளியேற்ற முயற்சித்தும் அது வெற்றி பெறவில்லை. இந்நிலையில் யாழ்ப்பாணம், மன்னார் , முல்லைத்தீவு, வவுனியா , கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் வாழ்ந்த சுமார் 15000 குடும்பங்களை சேர்ந்த 81000 பேர் புலிகள் அமைப்பால் 1990 ஆக்டொபர் 15 முதல் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கட்டம் கட்டமாக வெளியேற்றப் பட்டனர். இந்த வெளியெர்ராஹ்த்துக்கு இறுதியாக முகம் கொடுத்தது யாழ்ப்பாண முஸ்லிம்கள் ஆவர். 1400 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தின் தீவுப்பகுதியில் அரபிகளும் நாகர் இன மக்களில் ஒரு தொகுதியினரும் இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து முஸ்லிம்களைன் பிரசன்னம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது. இவர்கள் யுத்தம், ஆழிப்பேரலை, மற்றும் சில இனவழிப்பு நடவடிக்கைகள் மூலம் காலத்துக்கு காலம் இடம்பெயர்வுகளை சந்தித்து இறுதியாக யாழ்ப்பாணம் நகர பகுதியில் வாழ்ந்து வந்தனர். இனச்சுத்திகரிப்பு வெளியேற்றம்: தமிழர்களுடன் பல தசாப்தங்களாக அன்னியோன்யமாக சகோதர மனப்பான்மையுடன் வாழ்ந்துவந்த சுமார் 3500 குடும்பங்களை சேர்ந்த 18000 முஸ்லிம்கள் 1990 ஆக்டொபர் 30 ஆம் திகதி இரண்டு மணி நேர அவகாசம் வழங்கப் பட்டு வெளியேற்றப் பட்டனர். சுமார் 600 க்கும் மேற்பட்ட கனரக ஆயுதங்கள் தரித்த புலிகள் இயக்க உறுப்பினர்கள் முஸ்லிம்கள் வாழ்ந்த சோனகர் நகரை சுற்றிவளைத்தனர். வீட்டுக்கு ஒருவரை ஜின்னா மைதானத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்து அங்கு வைத்து நீங்கள் உடனடியாக இரண்டு மணித்தியாலங்களுக்கு முஸ்லிம்கள் அனைவரும் தமிழீழத்தை விட்டு வெளியேறவேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப் பட்டு. எச்சரிக்கை வேட்டுக்களும் வானத்தை நோக்கி நடத்தப் பட்டது. இந்த வெளியேற்றத்தின் போது தமிழீழத்தில் உழைத்தாய் அனைத்தும் தமிழீழத்துக்கே சொந்தம் என கூறப்பட்டு முஸ்லிம்களின் வெளியேறு பாதைகளில் எல்லாம் சோதனை சாவடிகள் அமைத்து பணம், நகை, மேலதிக உடைகள் எல்லாம் பறிக்கப் பட்டன. சிலர் 200 ரூபாய் மட்டும் கொண்டுசெல்ல அனுமதிக்கப் பட்டனர். வெளியேற்றத்தினால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள்: யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் யாழ் சோனகர் நகர், பொம்மைவெளி, மண்கும்பான், சாவகச்சேரி , பருத்தித்துறை, கிளிநொச்சி, நாச்சிகுடா, பள்ளிக்குடா , நயினாதீவு பண்ற பிரதேசங்களில் வசித்து வந்தனர். முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டபோது எல்லாப் பொருட்களையும் விட்டு விட்டு செல்லுமாறு கூறப் பட்டனர். கொண்டு சென்ற பொருட்களும் புலிகளின் சோதனைச் சாவடிகளில் பறிக்கப் பட்டது. வெளியேற்றத்தினால் முஸ்லிம்கள் 2000 வீடுகளையும், 16 பள்ளிவாசல்கள், நான்கு பொதுக்கட்டிடங்கள், 7000 சைக்கிள்கள், 1500 மோட்டார் சைக்கிள்கள், ஏறக்குறைய 1500 கிலோ தங்க நகைகள், கோடிக்கணக்கான பணம், வியாபார பொருட்கள், ஆடுமாடுகள் கோழி உட்பட எல்லா பொருட்களும் பலவந்தமாக பறித்து எடுக்கப் பட்டன. அவ்வாறு இழக்கப் பட்ட மொத்த சொத்துக்கள் பொருட்களின் மதிப்பு ஏறக்குறைய 32 பில்லியன் ரூபாய்களாகும். சராசரியாக ஒரு குடும்பம் 91 இலட்சம் ரூபாய் இழப்புகளை சந்தித்துள்ளது. 2025 இல் தற்போதைய நிலை 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப் பட்ட யாழ்ப்பாண மாவட்ட முஸ்லிம்கள் சுமார் 3800 குடும்பங்களை சேர்த்த சுமார் 20000 பேர்களாகும். அவர்கள் இனஅழிப்பு நடவடிக்கையில் வெளியேற்றப் பட்ட பின்னர் பலரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தஞ்சம் புகுந்தனர். இக்கிரிகொல்லாவ, மதவாச்சி, அனுராதபுரம், நொச்சியாகம, குருநாகல், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கோல்பு, திகாரி, மாபோல, கண்டி, மாவனல்லை, அக்குறணை, கொழும்பு, மொரட்டுவ, பாணந்துறை , களுத்துறை, பேருவளை என தமக்கு அமைந்த ஊர்களில் அடைக்கலம் புகுந்து அகதி முகாம்களிலும் , நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் , பொது கட்டிட்டங்கள் பாடசாலை கட்டிடங்கள் போன்றவற்றிலும் தற்காலிகமாக வாழ்ந்தனர். இக்கிரிகொள்ளவையில் ஒரு அகதிமுகாமும், புத்தளத்தில் பத்து முகாம்களிலும் கொழும்பில் நான்கு முகாம்களிலும் நீர்கொழும்பில் ஒரு முகாமிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட பாடசாலைகளிலும் தஞ்சமடைந்த மக்கள் பின்னர் படிப்படியாக இடைத்தங்கல் முகாம்களுக்கு மாற்றப் பட்டனர். கடந்த 35 வருடங்களில் யாழ்ப்பாணத்தில் இருந்து அவ்வாறு வந்த 3800 குடும்பங்களும் தற்போது பல்கிப் பெருகியுள்ளது. அந்த வகையில் புத்தளத்தில் தற்போது சுமார் 5000 குடும்பங்களை சேர்ந்த 22000 பேர் வசிக்கின்றனர். இவ்வாறு நீர்கொழும்பில் 800 குடும்பங்களை சேர்ந்த 3000 பேர், பலவத்துறையில் 125 குடும்பங்களை சேர்ந்த 600 பேர் , கொழும்பில் 2000 குடும்பங்களை சேர்ந்த 8000 பேர், பாணந்துறையில் 300 குடும்பங்களை சேர்ந்த 1500 பேர் , நாட்டின் பல பாகங்களிலும் 500 குடும்பங்களை சேர்ந்த 2200 பேர் வாழ்கின்றனர். மத்திய கிழக்கு நாடுகள், பிரித்தானிய, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, சுவீஸ், நியூசீலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் சுமார் ஐநூறு குடும்பங்களை சேர்ந்த 2000 பேரும், தனி நபர்களாக சுமார் 2000 பேரும் வசிக்கின்றனர். 2009 யுத்த முடிவும் 2010 மீள் குடியேற்றமும் 2009 மே மாதம் 19 ஆம் திகதி யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் வாழ்ந்த யாழ்ப்பாண முஸ்லிம்கள் மீண்டும் தமது தாயகப் பூமியான யாழ்ப்பாணத்துக்கு சென்று மீளக் குடியேறும் வாய்ப்பு உண்ட என ஆராய்ந்தனர். அவ்வாறு சென்றவர்கள் தமது 2200 வீடுகள் 16 பள்ளிவாசல்கள் நான்கு பாடசாலை கட்டிடங்கள், கடைகள் என எல்லாம் உடைத்தழிக்கப் பட்டு காடுகள் வளர்ந்து, பற்றையாகவும், மீளக் குடியேறும் வாய்ப்பு குறைவானதாக இருப்பதையும் அவதானித்தனர். அவ்வாறு இருந்தும் சுமார் 2000 குடும்பங்கள் கிராம அதிகாரிகள் மற்றும் பிரதேச சபை ஊடாக மாவட்ட செயலக மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுக்கு மீள்குடியேற விருப்பம் தெரிவித்து விண்ணப்பங்களை சமர்பித்திருந்தனர். அவர்கள் தமது உடைந்த வீடுகளை தகரத்தால் மறைத்துக் கொண்டும், கூரையை தரப்பால் கொண்டு மறைத்துக் கொண்டும் மேலும் பாடசாலை போன்ற பொது கட்டிடங்களிலும் தற்காலிகமாக தங்கியிருந்து வீடமைப்பு மற்றும் மீள்குடியேற்ற உதவிகளை எதிர்பார்த்திருந்தனர். நாட்கள் வாரங்களாகின, வாரங்கள் மாதமாகி அது வருடங்களாகியது. 2010 ஆம் ஆண்டு வீட்டமைக்க விண்ணப்பித்தவர்களுக்கு 2015 வரை ஒரு வீடு கூட வழங்கப் படவில்லை. இதே காலப் பகுதியில் இந்திய வீட்டமைப்பு திட்டத்தின் கீழ் சுமார் 50000 வீடுகள் வவுனியா,மன்னர், கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் கட்டப்பட்டது. அதே ஒன்று இலங்கை அரசாங்கம் யாழ்ப்பாண மாவட்டத்தில் 4000 பேருக்கு காணிகளை மாவட்ட செயலகம் ஊடாக பெற்று அதில் வீடுகளை கட்டிக்க கொடுத்து இருந்தது. இந்த திட்டங்களில் முஸ்லிம்கள் உள்வாங்கப்ப படவில்லை. 2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாண சோனகர் நகரை சேர்ந்த நபரொருவர் வீடமைப்பு உதவி கேட்டு உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்த பின்னர் அடுத்த மூன்று வருடங்களில் 225 வீடுகள் கட்ட உதவிகள் வழங்கப் பட்டன. இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு 2000 குடும்பங்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்கள் தொலைந்து விட்டதாக கூறி 2016 ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் வீடமைப்பு உதவிக்கு விண்ணப்பங்கள் மாவட்ட செயலகத்தால் சேகரிக்கப் பட்டது. அந்த பதிவின் கீழ் சுமார் 3000 குடும்பங்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து இருந்தனர். அவர்கள் யாருக்கும் இதுவரை வீடுகள் வழங்கப் பட்டதாக தகவல் இல்லை. புறக்கணிப்பு யாழ்ப்பாண முஸ்லிம்களை மீள் குடியேற்ற அவர்களுக்கு வீடமைப்பு திட்டங்களை வழங்க மாறி மாறி வந்த அரசாங்கமும் மாவட்ட செயலகமும் தவறிவிட்டது என்பது கசப்பான உண்மையாகும். கருப்பு ஆக்டொபர் (BLACK OCTOBER ) 1990 ஆம் ஆண்டு வடமாகாணத்திலிருந்து 81000 முஸ்லிம்கள் பாசிச புலிகளால் அநீதியாக வெளியேற்றப் பட்ட அந்த இனவழிப்பு நடவடிக்கையை கண்டித்தும் அம்மக்களுக்கு குறிப்பாக யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு மீள் குடியேற்ற உதவிகள் மீள் கட்டமைப்பு வசதிகள் செய்யப் பட வேண்டுமென்ற கோரிக்கைகளை உள்ளடக்கியதாக இந்த கருப்பு ஆக்டொபர் வருடா வருடம் இடம்பெயர்ந்த சமூகத்தால் நினைவு படுத்தப் படுகின்றது. புதிய தேசிய மக்க சக்தி அரசாங்கம் இந்நிலையில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் வீடமைப்பு தேவை, கல்வி அபிவிருத்தி பொது சொத்துக்கள் பாதுகாப்பு , வேலை வாய்ப்பு போன்ற பிரச்சினைகளை கௌரவ ஜனாதிபதி அனுரா குமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் தீர்க்கும் என நம்பியவர்களாக பின்வரும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் தேவைகளை முன்வைக்கின்றோம் . இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்ட மக்கள் இன்னும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் மற்றும் புத்தளத்தில் அகதியாக வந்தவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் போன்றவற்றுக்கான தீர்வை புதிய அரசாங்கம் முன்வைக்கும் என நம்பி பின்வரும் தேவைகளை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மீளக் குடியேறியுள்ள நபர்களுக்கு சோனகர் நகருக்கு அண்மையாக 300 வீடுகளை அமைத்தல் அல்லது 300 குடுப்பினங்களுக்கு தேவையான தொடர் மாட்டி குடியிருப்புகளை அமைத்தல். புத்தளத்தில் இருந்து யாழ்ப்பாணம் சென்று குடியேற விரும்பும் சுமார் 100 குடும்பங்களுக்கு காணியும் வீடும் அமைத்துக் கொடுத்தல். யாழ் ஒஸ்மானியா கல்லூரிக்கு 15 கம்பியூட்டர்களைக் கொண்ட பயிற்சி நிலையம் ஒன்றை அமைத்தல். யாழ் ஒஸ்மானியா கல்லூரிக்கு லைப்ரரி, மண்டப வசதி உட்பட 10 கம்பியூட்டர்களைக் கொண்ட பயிற்சி நிலையம் போன்றவற்றை கொண்ட கட்டிடம் ஒன்றை அமைத்தல். புத்தளத்தில் தில்லையடி பாடசாலைக்கும் பத்து வகுப்பறைகளை கொண்ட புதிய கட்டிடம் ஒன்றை அமைத்தலும் அதில் 15 கம்பியூட்டர்களைக் கொண்ட பயிற்சி நிலையம் ஒன்றை அமைத்தல். புத்தளத்தில் சுமார் 300 குடும்பங்களுக்கு வீடமைப்பு திட்டம் ஒன்றை நடைமுறைப் படுத்தல். https://www.jaffnamuslim.com/2025/10/npp_30.html

யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் உயிர்மாய்க்க முயன்று வைத்தியசாலையில்

1 day 13 hours ago
எப்படிப் பட்ட கிறுக்கன்களை எல்லாம், யாழ் மக்கள் தமது பிரதிநிதியாக தேர்ந்து எடுக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது. பெருமையாக வாழ்ந்த தமிழ்ச் சமூகம்... இன்று பலரின் நகைப்புக்கு இடமாகி விட்டது. இது எங்கு போய் முடியப் போகுதோ.... 😭

யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் உயிர்மாய்க்க முயன்று வைத்தியசாலையில்

1 day 14 hours ago
பப்ஜி (PUBG) என்பது PlayerUnknown's Battlegrounds என்பதன் சுருக்கமாகும். இது ஒரு ஆன்லைன் மல்டிபிளேயர் விளையாட்டு ஆகும், இதில் 100 வீரர்கள் ஒரு தீவில் இறங்குகிறார்கள். கடைசியாக நிற்கும் வீரரே வெற்றி பெறுவார். இந்த விளையாட்டில், வீரர்கள் ஆயுதங்கள் மற்றும் பிற உபகரணங்களைத் தேடி, எதிரிகளை வீழ்த்த வேண்டும். விளையாட்டின் நோக்கம்: ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களைச் சேகரித்து, எதிரிகளை வீழ்த்தி, கடைசியாக உயிர் பிழைத்தவராக இருக்க வேண்டும். விளையாட்டு முறை: வீரர்கள் ஒரு பெரிய வரைபடத்தில் இறங்கி, விளையாட்டின் போது கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி எதிரிகளைத் தேடி அவர்களை வீழ்த்த வேண்டும். விளையாட்டு அனுபவம்: பல வீரர்கள் ஒரே நேரத்தில் ஆன்லைனில் விளையாடும் அனுபவத்தை இது வழங்குகிறது. விளையாட்டு வகைகள்: இது பல வடிவங்களில் கிடைக்கிறது, இதில் மொபைல், பிசி மற்றும் கன்சோல் பதிப்புகள் அடங்கும். விளையாட்டின் அடிப்படை: இது 2000 ஆம் ஆண்டில் வெளியான பேட்டில் ராயல் என்ற ஜப்பானியத் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டது. நன்றி: கூகிள்.
Checked
Fri, 10/31/2025 - 23:27
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed