2 days 9 hours ago
எனது முதலாவது பிரியமான உணவு புட்டுத்தான்.இனி நிழலி எடுத்த முடிவைத்தான் எடுக்க வேண்டிய நிலை. ஒரே இரத்தம்
2 days 9 hours ago
செலன்ஸ்கி இப்பொழுதுதான் தான் விட்ட அடிப்படைத் தவறை உணர்ந்துள்ளார்.மேற்கு நாடுகள் தங்கள் தளங்களை அமைப்பதற்கும் உக்கிரைனின் வளங்களைக் கொள்ளையடிப்பதற்கும் காட்டியே ஆசையே உக்ரைனை நேட்டோவில் இணைத்துக் கொள்வது என்பது. தனது கோடிக்குள் நேட்டோவை ரஸ்யா அனுமதித்தால் அது ரஸயாவின் அழிவுக்கு வழிவகுக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அந்த நோக்கத்தை ரஸ்யா எந்த விலை கொடுத்தும் நிறைவேற்றும். ஆகவே 3 வருட கால உசுப்பேத்தல் போரினால் நேட்டோ நாடுகளின் ஆயுதங்களைப்பரிட்சித்துப் பார்க்கும் களமாக உக்ரைன் போர் அமைந்திருக்கிறது. இனி நேட்டோவில் இணையும் நோக்கத்தை உக்கரைன் கைவிட்டால் ஆப்கானிஸ்தானை திடீரென்று கைவிட்டதைப்போல உக்ரைனையும் கைவிட்டு விடுவார்கள்.தேவையில்லாமல் அடுத்தவன் பேச்சைக் கேட்டு பக்கத்து வீட்டுக்காரனைப்பகைக்கப் போய் இனி உக்ரைனுக்கு அவல நிலைதான் ரஸ்யா உக்ரைனை ஒரு பரமஎதிரியாக பார்க்கும்.
2 days 10 hours ago
எவ்வளவுதான் தான் கல்வி அறிவு இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் பட்டறிவு தான் கை கொடுக்கும்....😅 என்ற வசனம் சுமந்திரனின் கருத்திற்குப் பொருத்தமானது என்பதற்கான சில ஆதாரமான விஷயங்களை சொன்னால்...... இவர் கீழே மேலே நடுவிலே என்று ஆர்ப்பரிக்கின்றார்😂
2 days 10 hours ago
சுமந்திரனை நம்பி யாரும் இந்த அழைப்பினைக் கருத்தில் எடுக்க வேண்டாம் என்பதே எமது கருத்து. அரசியலில் மட்டும் தான் இதனால் அவருக்கு ஆதாயம் என்று பலரும் நினைக்கலாம். ஆத்மீகம் என்றும் ஒன்று உள்ளதே அதுவும் இப்போது ஆதாயம் தேடும் மார்க்கமாக மாறிவிட்டதே
2 days 10 hours ago
மக்கள் கூட்டத்துக்கு ஈழ நிலத்தின் பூர்வீக மைந்தர்கள் என்ன செய்யலாம்; இவர்களது வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கையை எப்படி அனுகலாம்? சொந்த அனுபவத்தில் கதவை தட்டி செய்யப்படும் எந்த உதவியிலும் உடன்பாடில்லை. அவை ஒன்றில் சுயநலத்திற்காக இருக்கும் அல்லது துஸ்பிரயோகம் செய்யப்படும்.
2 days 10 hours ago
வில்லவன், மலையக தமிழ் மக்களின் நன்மைக்கும், பாதுகாப்பிற்கும், எதிர்காலத்துக்குமாக, மலையக மக்களின் சுயவிருப்புடன் அவர்கள் வடக்கு கிழக்கில் குடியேற்றப்பட்டு, கௌரவத்துடன் நடத்தப்படுவார்கள் என்றால், அதைவிட நல்லதொரு விடயம் இருக்கமுடியாது. ஆனால் எனக்கு எம் மக்கள் மீது நம்பிக்கை இல்லை. எம் மக்களின் சில பிடிவாதங்கள், கண்ணுக்குத் தெரியாத அமைப்புகள் என்பன மனிதர்களை அவர்களின் பிறப்புகளினால் வரும் அடையாளங்களை வைத்து வகைப்படுத்துகின்றன. ஒரு மனிதன் ஒடுக்கப்படுகின்றான் என்பது கண்ணீரை வரவழைக்கின்றது. மார்த்தாண்டம் என்னும் ஊர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா என்று தெரியாது. கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ளது. உலகிலேயே மிகவும் கறுப்பு என்றால் மார்த்தாண்டக் கறுப்பு என்று சொல்வார்கள். அங்கிருந்து ஒரு பையன் இங்கு வேலை செய்ய வந்தான். டாடா கன்சல்டிங். மிகப் பெரிய விசயம். அந்தச் சமூகத்திலிருந்து அப்படி ஒரு பையன் இங்கு வருவது நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று. அதுவும் டாடா கன்சல்டிங் போன்ற நிறுவனங்களில் இருந்து வருவது. ஆனாலும் அவனை இங்கிருந்த தமிழ்நாட்டவர்கள் முற்றாகவே, வெளிப்படையாகவே ஒதுக்கினார்கள். வேலையில் என்னை மீறி அந்தப் பையனை அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இது தமிழ்நாட்டு மக்கள், ஆனால் நாங்கள் வேறு என்று நாங்கள் நினைக்கக்கூடும். இந்த விடயத்தில் யாழ்ப்பாண மக்களும் இவ்வாறானவர்களே. இது தான் என்னுடைய பயம். என்னுடைய வேறு பல சொந்த அனுபவங்களும் உள்ளன. சிலவற்றை நான் எழுதினாலும், அப்படி நடந்திருக்கும் என்று பலர் நம்பப் போவதில்லை. ஆனாலும் இந்த விடயம் அடங்கிய பின், கதைகளாக எழுதுவதாக உள்ளேன். இவ்வகையான சமூக புறக்கணிப்புகள் இருக்காது என்றால், அந்த மக்கள் இந்தக் குடியேற்றத்தை விரும்புகின்றார்கள் என்றால், இதை வரவேற்கும் முதல் ஆட்களில் ஒருவனாக, உங்களைப் போலவே நானும் இருப்பேன். இது நான் இங்கு இணைந்தவுடன் எழுதிய ஆக்கங்களில் ஒன்று. சொந்த அனுபவமே.
2 days 10 hours ago
புங்குடுதீவில் எத்தனை சதவீதம் புங்குடுதீவு மண்ணை பூர்வீகமாகக் கொண்டோர் வாழ்கின்றனர் என்று உங்களுக்கு தெரியுமா?? வெளிநாடுகளில் வெளிஊர்களில் அதிலும் வன்னி நிலப்பரப்பில் எத்தனை கிராமங்கள் புங்குடுதீவு தீவுமக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் என்பது தெரியுமா? அது ஏன் என்றாவது உங்களுக்கு புரியுமா?? மலையக மக்களை குடியேற்ற கரம்பனில் வீடுகள் சும்மா கிடக்கிறது என்பவரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும். ???
2 days 10 hours ago
தவறான புரிதல் தவறான புரிதல் தம்பி நம் சுயநலத்திற்காக அவர்களை அழைக்கிறோமே தவிர...? அதற்காக மட்டுமே அவ்வுதாரணம்.
2 days 10 hours ago
இல்லை ஐக்கிய அமெரிக்க நாட்டில் இருந்து அரிப்பு, சிலாவத்துறை, முந்தல் போன்ற பதங்கள் பாவிக்கப்பட்டதால், பாவிப்பவரின் முன்னைய யோக்கியதை என்ன எனபதை நினைவூட்டினேன். அதை மறுக்க திராணி இல்லைதானே? அதன் கீழ் தலைப்பை ஒட்டி கருத்தும் எழுதியுள்ளேன். வாசிப்பு மங்குகிறதோ?
2 days 11 hours ago
@ரசோதரன் அண்ணை நீங்கள் குறிப்பிட்டுள்ள படி அவர்களுக்கான தீர்வு அவர்களுடைய நிலையான (sustainable) பொருளாதார முன்னேற்றத்துடன் கூடிய கெளரவமான சமூகப் பங்காளிகளாக வாழக்கூடிய தீர்வாக இருக்க வேண்டும். இதையே இயற்கைப் பேரிடர்களின் தாக்கம் குறைவாகவும் மற்றும் வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கக்கூடியதாகவும் வடக்கில் அவர்களைக் குடியிருத்த முடியும் என்றால் அது ஆங்கிலேயர் அவர்களைக் குடியிருத்தியது போல் அல்ல என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். ஆங்கிலேயர் செய்தது தமது பலனுக்காக, ஆனால் இது அவர்களுடைய நன்மைக்காகவும் பாதுகாப்பான எதிர்காலத்துக்காகவும். எடுத்ததெற்கெல்லாம் வெள்ளைக்காரன் நிறவெறி பிடித்தவன் என்று கூப்பாடு போடும் தமிழர்கள் தமது முதுகையும் கண்ணாடி கொண்டு பார்த்துக் கொஞ்சம் ஆதிக்க மனப்பான்மையிலிருந்து வெளிவர வேண்டும்.
2 days 11 hours ago
பேசுறவனுக்கும் தெரியும் என்ன பேசுகிறோம் என்று கேட்பவனுக்கும் தெரியும் என்ன கிடக்கிறோம் என்று. அது புட்டினுக்கு மட்டும் தெரியாமல் இருக்கும் என்பதுதான் தற்போதைய உலக அரசியலை நகைப்புக்கிடமாக்கி உள்ளது. எதோ ஒன்றை எழுதி ஒரு 4-5 மாதம் சும்மா இருந்தார்கள் என்றால் தலைவர் ட்ரம்மிற்கு உக்ரைப்போரை நிறுத்திய செம்மல் என்று படடம் கிடைத்துவிடும் அதை தொடர்ந்து அந்த நோபல் பரிசையும் கொடுத்தால் ஐரோப்பியாவிற்கு வரி விலக்கும் வந்துவிடும். இவர்க்ளின் எந்த ஆடடத்திற்கும் கிரிமியாவை ரசியா ஒருபோதும் விட்டுக்கொடுக்க போவதில்லை. க்ரீமியாவை வைத்திருந்தாலே கடலை ரஸ்யா பூரண கண்காணிப்பில் வைத்திருக்கும் அதை ரஸ்யா விட்டுக்கொடுக்க போவதில்லை என்பது இவர்களுக்கும் தெரியும். ஆனால் இவர்கள் இலக்கு க்ரீமியாவை தட்டி பறிப்பதுதான் அங்குதான் முக்கிய பேச்சுக்கள் தொடங்கும். இப்போதே இவர்களின் இராணுவ முழு பலமும் அங்குதான் இருக்கிறது அது சின்ன பிள்ளைக்கே தெரியும் அதை வைத்து இனி ரஸ்யாவிற்கு பூச்சாண்டி காட்டிட முடியாது. இந்த இடைவெளியில் நாம் வெனிசுவேலாவை களவாடலாம். ஐக்கிய ராச்சியத்தில் இவ்வளவு கருத்து பஞ்சமா? தலைப்பு : நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
2 days 11 hours ago
பிந்தி வந்த செய்திகள் அதிபர் ட்ரம்ப் 'பிளாட்டினம் பாதுகாப்பு உத்தரவாதம்' ஒன்றை உக்ரேனுக்கு வழங்கவுள்ளார் என்று சொல்கின்றன. இந்த திட்டத்தை அவர் அமெரிக்க காங்கிரஸின் முன் கொண்டு செல்லப் போகின்றார் என்றும் செய்தியில் இருக்கின்றது. ஆனால் இந்த உடன்படிக்கை முழுவதையும் ரஷ்ய அதிபர் புடின் முற்றாக நிராகரிக்கப் போகின்றார். அவர் எந்த உடன்படிக்கையையுமே நிராகரிப்பார், ஆனால் இது என்ன உடன்படிக்கை............ ரஷ்ய அதிபரைப் பார்த்தால் அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும், உக்ரேனுக்கும் ஒரு கோமாளியாகத் தெரிகின்றாரா...................... மூன்று வருட சண்டைக்கு பலனாக ஒரு கொஞ்சமாவது ரஷ்யாவுக்கு விட்டுக் கொடுக்க வேண்டாமா.................
2 days 11 hours ago
இதனால்தான் சொல்கிறேன் சிங்களவர் கூர்ப்பில் முன்னேறிய இனம். இதை சொன்னால் கூட விளங்கி கொள்ள முடியாது ஈழதமிழ் சுண்ணாம்பு குவளைகளால்.
2 days 11 hours ago
Pedo க்களை ஆதரித்து யாழில் கருத்து எழுதும், பெட்டியில் ஏறும் வயதில், மகள் வயது நடிகைகள் மீது ஜொல்லு வழிக்கும், பீடோ ஆதரவு மாமாக்களிடம் அரிப்பு பற்றிய தகவல்கள் அபரிமிதமாக இருப்பது வியப்பல்ல. ஆனால் எமது விடுதலை போராட்டத்தையும், இதே போல் “இந்தியாவின் துண்டுதலால், புலிகள் “அரிப்பு” எடுத்து நடத்தினார்கள் என எழுதுவோரும் உளர். தேசிய இனங்களின் சுயநிர்ணயத்துக்கான “வேட்கை” சகல இனவழி தேசிய இனங்களுக்கும் ஒன்றே. எமக்கு வந்தால் விடுதலை வேட்கை, உக்ரேனியனுக்கு வந்தால் அரிப்பு என்பது வடிவேல் ஜோக்
2 days 11 hours ago
இன்று யேர்மனி, பேர்லினில் நடைபெற்ற தலைவர்கள் சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. அதன் சுருக்கம், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க ஆதரவுடன், உக்ரைனுக்காக ஐரோப்பிய தலைமையிலான ஒரு பன்னாட்டுப் படையை அமைக்க உறுதியளித்துள்ளன. இந்தப் படை உக்ரைன் இராணுவத்தை மீண்டும் வலுப்படுத்த, வான்வெளி மற்றும் கடல்களைப் பாதுகாக்க உதவும். எதிர்காலத்தில் உக்ரைன் இராணுவம் சுமார் 8 லட்சம் வீரர்களைக் கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், அமெரிக்கா தலைமையிலான போர்நிறுத்த கண்காணிப்பு அமைப்பு முன்மொழியப்பட்டுள்ளது. இது ரஷ்ய தாக்குதல்களுக்கு முன் எச்சரிக்கை வழங்கவும், போர்நிறுத்த மீறல்களை கண்டறியவும் பயன்படும். முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துகளை உக்ரைனுக்குப் பயன்படுத்தும் எண்ணத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. போரைக் முடிக்க உக்ரைனுக்கு வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களும், பொருளாதார மறுசீரமைப்புக்கான உதவியும் தேவை என்று அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உக்ரைன் ஒருமித்த கருத்து தெரிவித்துள்ளன. ரஷ்யா அமைதிக்குத் தயாராகி, டிரம்பின் அமைதித் திட்டத்தையும் போர்நிறுத்தத்தையும் ஏற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்காக ரஷ்யாவிற்கு மேலதிக அழுத்தம் கொடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால், இந்தத் திட்டங்களை அமெரிக்கா முழுமையாக ஏற்றுக்கொள்ளுமா என்பதும், உக்ரைனில் வெளிநாட்டு படைகள் இருப்பதை ரஷ்யா ஏற்குமா என்பதும் இன்னும் தெளிவில்லை.
2 days 11 hours ago
ஓடு பாதைக்கு எப்ப சார் கல்லு நாட்டுவீர்கள்.
2 days 11 hours ago
வடகிழக்கில் நடந்தது ஒரு ஆயுதப் போராட்டம்... பல வருடங்கள் இது தொடர்ந்திருந்தாலும் என்றாவது ஒரு நாள் ஒரு முடிவுக்கு வரும்.. வந்தது!! ஆனால் மலையகத்தில் நடப்பது வாழ்நாள் போர் 200 ஆண்டு காலம் ஆகியும் முடிவு இல்லாத வாழ்க்கை போர். ஒரு இனத்தை இன்னொரு இனம் அழிக்கும் போர். 200 ஆண்டு காலம் என்பது எத்தனை தலைமுறைகள்? அங்கேயே அந்த மண்ணிலே பிறந்து, வளர்ந்து அங்கேயே உழைத்த மக்களுக்கு உரிமை கிடைக்காது என்பது எப்படிப்பட்ட கொடுமை. மாட்டுக்கு கொம்பு முளைக்கும் முன்பே நம்மை முட்டாமல் இருக்க, அது பிறந்ததும் சூட்டுக்கோளால் கொம்பு முளைக்கும் இடத்தில் தீச்சு விடுவதும் அடுத்தது பருவத்துக்கு வரும் முன்னால் காய் அடித்து ஆண்மை நீக்கி வேலையில் கட்டி வசக்கிவிட்டால் வாழ்நாள் பூராவும் அதே வேலை வாங்கலாம். உரிமையை அபகரிப்பதும் காய அடிப்பதும் ஒன்றுதான். அந்த மக்கள் தொகையை அதிகமாகாமல் தமிழினம் பெருகாமல் பார்த்துக் கொள்வதும் ஒன்றுதான். பிரித்தானிய காலனித்துவவாதிகளால் பிழைப்புக்காக தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த நாள் முதல் இந்த நாள் வரை அவர்கள் அடைந்த வாழ்வியல் துயங்கள் அதற்கான காரணிகளான தேசிய புறக்கணிப்பு, அரசியல் புறக்கணிப்பு, குடியுரிமை பறிப்பு, நாடற்ற நிலை, நாடு கடத்தல், பதிவு குடியுரிமை, வசிப்பிட குடியுரிமை, திட்டமிட்ட கருத்தடை, கூடிசன குறைப்பு, நிலமற்ற நிலை, வீடற்ற நிலை, பொருளாதார ஒடுக்குமுறை, கல்வியொடுக்குமுறை, உள்ளூர் ஆட்சிக்குள் உள்வாங்காத ஒதுக்கு முறை, இம்மக்களின் வாழ்விடங்களை வணிக நிலம் ஆக்கி கம்பெனிக்காரர்களுக்கு நூறு ஆண்டு கால குத்தகைக்கு கொடுத்து விட்டமை, இம்மக்கள் வாழ்ந்த பல பெருந்தோட்டங்களை சுவைகரித்து சிங்கள மக்களுக்கு சிறு தோட்ட உடைமையாளர்களாக கொடுத்து விட்டமை, இதனால் வாழ்விடங்கள் இழந்து வசிப்பிட தொழிலாளர்களாக காலனித்துவவாதிகள் கட்டிப்போட்ட அதே 200 ஆண்டுகால வரிசை லயங்களில் வாழும் நிலை என பல்வேறு நெருக்கடிகளை இன்றும் அந்த மக்கள் எதிர்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இன்றும் இவர்கள் வாழும் நிலங்களை கிராமங்களாக கூட அங்கீகரிக்காமல், இம்மக்களை கிராம மக்களாக கூட ஏற்றுக் கொள்ளாமல், நாட்டு மக்கள் என்று தேசிய அந்தஸ்தை வழங்காமல் தோட்ட மக்கள் "வத்து கம்கரு" என்றே புறக்கணித்து வைத்திருக்கின்றமை என இத்தனை அரசியல் தேச வஞ்சனைகளுக்கும் முகம் கொடுத்து உரிமைக்குப் போராடாமல் மௌனித்து 200 ஆண்டுகளை வீணடித்துவிட்டு வந்தேறி குடிகளாக வருடங்களை எண்ணிக்கொண்டு வாழாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்துக்கு ஈழ நிலத்தின் பூர்வீக மைந்தர்கள் என்ன செய்யலாம்; இவர்களது வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கையை எப்படி அனுகலாம்? ~ ஒப்பாரி கோச்சி புத்தகத்தை வாசித்து... என்னை பாதித்த வரிகளுடன் ...
2 days 12 hours ago
நன்றி
2 days 12 hours ago
விடுதலை போருக்கும் அடுத்தவன் அரிப்பு போருக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் எதிரியாய் இருந்தாலும் கோத்தா சொன்னால் சொல்வதை பார்த்து அப்படியே பற்றிக்கொள்ள வேணுமாம். அடுத்தவன் சொன்னால் சொன்னவர்கள் கருத்தை விட்டுவிட்டு எங்கே சுச்சா போனார்கள் எப்போ போனார்கள் எங்கே போனார்கள் என்று என்று பிரிச்சு மேய்ந்து அக்குவேறு ஆணிவேறாக பார்க்கவேண்டும். அப்போதான் அது இனிக்கும்
2 days 12 hours ago
வீட்டில் புட்டு அவிப்பதைத் தவிர மற்ற சமையல் எல்லாம் நான் தான்.🤫 இனி புட்டு அவிப்பதையும் பழகவேண்டியதுதான்.🤣
Checked
Thu, 12/18/2025 - 08:09
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed