2 days 14 hours ago
காணாமலாக்கப்பட்ட 158 பேர் பற்றிய உண்மைக்கான நம்பிக்கை ஒளி Photo, TAMILGUARDIAN சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு நான் செம்மணியில் நின்று அகழ்வாராய்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தேன். உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு, லேபிள் ஒட்டப்பட்டு மேலதிக செயல்முறைகளுக்காக பொதி செய்யப்பட்டிருந்தன. மிகவும் கடினமான மற்றும் சிரமமான பணி. என்னைச் சுற்றி நீதிபதிகள், சட்டத்தரணிகள், மனித உரிமை குழுக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், பொலிஸார், பாதுகாப்பு அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் அந்த இடத்தில் கூடியிருந்தார்கள். அவர்கள் அனைவரும், “இங்கு புதைக்கப்பட்டவர்கள் யார், அவர்களைப் புதைத்தவர்கள் யார்?” என்ற புதிரைத் தீர்க்க முயற்சிப்பதைப் பார்த்தேன். புதைக்கப்பட்டவர்கள் தங்களுக்கு இப்படியொரு நாள் வரும் என்று எப்போதாவது நினைத்திருப்பார்களா என்று நான் நினைத்தேன். அவர்களில் சிலர் இன்னும் தங்களின் பாடசாலைப் பைகளை சுமந்து கொண்டு செல்லும் குழந்தைகள் மட்டுமே. சிறையில் உள்ள இராணுவ அதிகாரி ஒருவர் இந்த மனித புதைகுழியைப் பற்றியும் அதன் கீழ் புதைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையைப் பற்றியும் நீதிமன்றில் வைத்து அம்பலப்படுத்தினார். இது உண்மையா? இல்லையா? அவர் சொல்வது சரியா? இன்னும் பலர் நிலத்தின் கீழே புதைக்கப்பட்டிருக்கிறார்களா? இன்று வரை, தோண்டி எடுக்கப்பட்ட எலும்புக் கூட்டுத்தொகுதிகள் எண்ணிக்கை 231 என அறிவிக்கப்பட்டுள்ளது (வீரகேசரி, செப்டம்பர் 04, 2025). செப்டம்பர் 5, 1990 அன்று நான் கிழக்குப் பல்கலைக்கழக அகதிகள் முகாமில் நூற்றுக்கணக்கானோருடன் நான் இருந்தபோது என்ன உணர்வோடு இருந்தேன் என்பதில் என் மனம் அலைவதை என்னால் தடுக்க முடியவில்லை. அங்கிருந்து 158 பேர் ஆயுதப்படைகளால் அழைத்துச் செல்லப்பட்டனர். இன்று வரை, அவர்களுக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. அவர்களிடமிருந்து எல்லாவற்றையும் பறித்தபோது, அவர்களின் வாழ்க்கையையும் குடும்பங்களையும் பற்றி அவர்களின் மனங்களில் என்ன கடந்து சென்றிருக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கிறேன். இத்தனை வருடங்களாக அவர்களது குடும்பங்கள் தங்களின் கனத்த இதயங்களில் என்ன சுமந்துகொண்டிருப்பார்கள் என்பது பற்றியும் நான் நினைக்கிறேன். நான் என்னையே கேட்டுக் கொள்கிறேன் – என்னைப் பற்றி என்ன சொல்ல முடியும்? நான் எப்போதாவது அவர்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்படுவதைப் பார்ப்பேனா அல்லது அவர்கள் உயிருடன் திரும்பி வருவதைக் கண்டு நான் ஆச்சரியப்படுவேனா? ஆதாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், வரலாறு எப்போதாவது எங்கள் கதைகளைச் சொல்லும். நீதி நிஜமாக நிறைவேறாவிட்டால், பின்னர் தெய்வீகமாகவோ அது நிறைவேறும் என்று நான் நம்புகிறேன். அதைப் பார்ப்பதற்கு நான் உயிருடன் இல்லாமல் இருக்கலாம், ஆனால் வந்தாறுமூலையிலிருந்து அழைத்துச் சென்ற அந்த 158 பேரின் பாரம்பரியம் தொடரும். அரசாங்க அறிக்கைகளிலும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையிலும் அவர்கள் இன்னும் ‘காணாமல் போன நபர்கள்’ என்று குறிப்பிடப்படுகிறார்கள். கிழக்கு மாகாணத்தின் காணாமல் போனவர்கள் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி நான் பட்டியலிட்ட நபர்களிடம் அதிகாரிகள் எப்போதாவது விசாரணை நடத்தியிருக்கிறார்களா? விசாரணை நடாத்தியிருந்தால் விசாரணை முடிவுகள் எங்கே? விசாரணை நடாத்தவில்லை என்றால் ஏன்? வேறொரு வழக்கில் ரத்நாயக்கே போன்ற ஒருவர் விரல் நீட்டி இது தான் நடந்தது என்று சொல்லக்கூடியவராக இருப்பாரா, அவர்களின் கடைசி நாட்களில் கூட ஆறுதல் பெற காத்திருக்கிறேன். வேறொரு வழக்கில் ரத்னாயக்கா அம்பலப்படுத்தியது போல ஒருவர், அவரது வாழ்க்கையின் இறுதியிலும் கூட, ஏதேனும் ஆறுதல் பெற முடியும் வகையில் விரல் நீட்டி உண்மையில் என்ன நடந்தது என்று சொல்ல முடியுமா? அந்த ஒரு சந்தர்ப்பத்திற்காக நான் இன்னும் காத்திருக்கிறேன். செப்டம்பர் 5, 1990 மற்றும் அந்த நாட்களைச் சுற்றி எதையாவது பார்த்த மற்றவர்கள் அப்பகுதியில் உள்ளனரா, அன்றைய நாட்களின் என்ன நடந்தது என்பது பற்றி தகவல்களை கொடுத்துதவ முடியுமா? வதந்திகள் மற்றும் உறுதிப்படுத்தப்படாத கதைகளிலிருந்து நாம் கேள்விப்பட்டது என்னவென்றால், கைது செய்யப்பட்டவர்கள் முதலில் வாழைச்சேனை காகித தொழிற்சாலை முகாமில் வைக்கப்பட்டு பின்னர் நாவலடி முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்? சம்பவம் இடம்பெற்று மூன்று நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 8, 1990 அன்று அகதிகள் முகாமுக்கு வந்த ஜெனரல் என்னிடம் சொன்னார், “அவர்கள் அனைவரும் எல்.ரி.ரி.ஈ. அவர்களைப் பற்றி கேட்காதே.” அவர் அவ்வாறு குறிப்பிட்டதன் அர்த்தம் என்ன? நான் இதை ஜனாதிபதி ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தாலும், விசாரணையில் வேறு எதுவும் வெளிவராதது ஏன்? பல சந்தர்ப்பங்களில், சிறுபான்மையினர், நாட்டில் எந்த உரிமையும் இல்லாத வெளியாட்கள் என்று கருதப்படுகிறார்கள். உதாரணமாக, முஸ்லிம்கள் அரேபியாவுக்கு செல்ல வேண்டும் என்றும், தமிழர்கள் இந்தியாவுக்கு செல்ல வேண்டும் என்றும் ஒரு முன்னாள் அமைச்சர் ஒருமுறை கூறியது என் நினைவில் உள்ளது. வெறுப்புப் பேச்சு சட்டங்களின் கீழ் கூட அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது காணாமல் போனவர்கள் பற்றிய புதிய அலுவலகம் ஒன்று இருப்பதாக நான் பார்க்கிறேன். ஆனால் ஆரம்பத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுக்களிடமும் காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகத்திடமும் செய்யப்பட்ட முறைப்பாடுகள் இன்னும் ஏன் நிலுவையில் உள்ளன அல்லது அதிகாரப்பூர்வமாக முத்திரையிடப்பட்டுள்ளன என்று ஆச்சரியப்படுகிறேன். இது சில சர்வதேச சட்டங்கள் அல்லது ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதற்காக மட்டுமே செய்யப்படுகிறதா? புதிய அரசாங்கம் வித்தியாசமானதாக இருக்கலாம். எனவே, நான் ஓரளவு நம்பிக்கை வைத்திருக்கிறேன். ஆனால் சர்வதேச ஒப்பந்தங்களைப் புறக்கணித்து, மாகாண உரிமைகளை நிராகரித்து மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் தயக்கம் காட்டுவது சந்தேகத்தை எழுப்புகிறது. இது புதிய பெயரின் கீழ் இயங்கும் அதே பழைய முறைமையா? இருப்பினும், 2000ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களை விசாரிப்பதாக ஜனாதிபதியின் சமீபத்திய வாக்குறுதி, காணாமல் போன 158 பேர் மற்றும் பல பேரின் குடும்பங்களுக்கு சிறிது நம்பிக்கையை கொடுத்துள்ளது. 1990 கிழக்குக்கு பயங்கரமான ஆண்டாக இருந்தது. முஸ்லிம் கிராமங்கள் இரண்டின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அகதிகள் முகாம் உருவாக்கப்பட்டது. தன்னாமுனை உட்பட தமிழ் பகுதிகளில் ஏராளமான கடத்தல்கள் மற்றும் கைதுகள் நடந்தன. இந்தச் சம்பவங்களைப் பற்றி அதிகம் எழுதப்பட்டுள்ளது, சித்தாண்டி மற்றும் பங்குடாவெளி போன்ற இடங்களும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களின் உடலங்களை கண்டுபிடிப்பது ஒரு பணியாக இருக்கலாம். ஆனால், அதிகாரப்பூர்வ கோப்புகளை திறப்பது மற்றொரு பணியாகும். நாம் உடலங்களை கண்டுபிடிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறோம். அப்படி இடம்பெறாவிட்டால் கோப்புகளை ஒருபோதும் திறக்க முடியாது. ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உதவியுடன் செம்மணியில் பயன்படுத்தப்படும் உபகரணங்களைப் போல, மனித புதைக்குழிகளைக் கண்டுபிடிப்பதற்கு அதிக ரேடார் உபகரணங்களைப் பயன்படுத்துவது ஒரு பரிந்துரையாகும். உண்மையைத் தேடுவதை விரைவுபடுத்தும் அத்தகைய முயற்சிகளுக்கு புலம்பெயர் சமூகம் நிதி வழங்கலாம். காணாமல் போனவர்களுடன் பணிபுரிபவர்கள் எல்லா பக்கங்களிலும் பெரும் அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள் என்று அவர்களோடு பணிபுரிபவர்கள் எனக்குக் கூறினார்கள். குடும்பத்தின் வருமான மார்க்கமாக இருந்த, உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மைக்காக காத்திருக்கும் இந்த குடும்பங்களுக்கு OMP இடைக்கால மனிதாபிமான உதவியாக இழப்பீடுகளைக் கருத்தில் கொள்வது நல்லது. மரண சான்றிதழுக்கு பதிலாக குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட காணாமல் போனவர்களின் சான்றிதழைப் பயன்படுத்தி நில பரிமாற்றங்கள், EPF மற்றும் ETF பணம் பெறுவதில் நிர்வாக இடையூறுகள் உள்ளன என்றும் எனக்கு அறியக்கிடைத்தது. இவற்றைத் தீர்க்குமாறு நான் அரசாங்கத்திடம் பணிவுடன் கோருகிறேன். ஏனென்றால், இந்த மக்கள் கடந்த 35 ஆண்டுகளாக காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடி வருகிறார்கள், அவர்கள் அனுபவித்துவரும் வேதனைக்கு மேலதிகமாக அவர்கள் மற்றொரு சுமையை எதிர்கொள்ள வேண்டியிருக்கக் கூடாது. வீடுகளை இழந்த எம்.பி.க்களுக்கு சில மாதங்களுக்குள் மில்லியன் கணக்கான இழப்பீடு வழங்கப்பட்டது என்பதை நினைவில் கொள்வது பொருத்தமானது. மோதலில் வீடுகளை இழந்த நூற்றுக்கணக்கான சாதாரண மக்கள் இன்னும் கொடுப்பனவுகளுக்காக பட்டியலில் சேர்க்கப்படவில்லை. உண்மையான அரசியல் விருப்பம் இருந்தால், எப்போதும் ஒரு வழி இருக்கிறது. ஏற்கனவே 35 ஆண்டு சாதாரண வாழ்க்கையை இழந்த இந்த குடும்பங்களுக்கு அரசு அதை செய்து காட்ட வேண்டும். நான் எதையும் கேட்கவில்லை. ஆனால், பாடசாலை நாட்களில் நான் படித்த ஒரு கதை நினைவுக்கு வருகிறது. “கடவுள் உண்மையைப் பார்க்கிறார். ஆனால், காத்திருக்கிறார்.” நான் இதை நம்புகிறேன். என்றாவது ஒரு நாள், ஆணைக்குழு மூலமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் உண்மை வெளியே வரும், செம்மணியில் நடந்ததைப் போல உலகம் உண்மையான கதையை அறியும். இந்த ‘மரகத தீவில்’ இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கும் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் வேதனை என்றென்றும் மறைக்கப்படாது. பேராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கம் * கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை * 1990 கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை அகதி முகாம் பொறுப்பதிகாரி https://maatram.org/articles/12285
2 days 14 hours ago
ஜீவனின் கமரா பாலுமகேந்திராவை நினைவூட்டும்…..! September 11, 2025 — அழகு குணசீலன் — புலம்பெயர்ந்த தேசங்களில் பலர் இயற்கை மரணத்தை தழுவியிருக்கிறார்கள். ஆனால் ஒரு பல்துறை ஆர்வலனாக ஜீவனின் மரணம் பெற்றிருக்கின்ற ஈர்ப்பு அதிகமானது. அதிசயிக்கத்தக்கது. புலம்பெயர்ந்த தேசங்களையும் கடந்து, இலங்கை, இந்தியா, சிங்கப்பூரிலும் ஜீவன் தனது கலைப்பயணத்தின் ஊடாகப் பேசப்படுகிறார். இதற்கு என்ன காரணம்? ஜீவன் ஒரு முன்னாள் ஈழப்போராளி. ஒரு ஊடகவியலாளர். ஒலி, ஒளி பரப்பாளர், படப்பிடிப்பாளர். நாடக, குறுந்திரை தயாரிப்பாளர். சிறந்த தொடர்பாளர். கட்டுரையாளர், பேச்சாளர், விமர்சகர். சினிமாவிலும் தேர்ச்சி பெற்ற பல்துறை ஆற்றல் கொண்டவர். இவற்றின் பிரதிபலிப்பாக மரணித்தும், மறக்காத நினைவுகளோடு பலரும் அவருடனான நினைவுகளை இரைமீட்கின்றனர். எனக்கும் ஜீவனுக்குமான முதல் சந்திப்பு எப்போது, எங்கு ஏற்பட்டது என்பதை என்னால் உறுதியாக சொல்லமுடியவில்லை. எனது நினைவு சரியென்றால் 1990 நடுப்பகுதியில் சூரிச்சில் இடம்பெற்ற இரு கவிதை நூல்களின் விமர்சன நிகழ்வு என்று நினைக்கிறேன். சுவிஸ் ரவியின் “செட்டை கழற்றிய நாங்கள்”, மற்றும் காத்தான்குடி என்.ஆத்மாவின் “அதிகாலை நீல இருள்” கவிதை நூல்கள் அவை. அந்த நிகழ்வுதான் சுவிஸில் நான் கலந்து கொண்ட முதலாவது கலை, இலக்கிய நிகழ்வு. ஜீவனின், போராட்ட பின்னணி, கலை, இலக்கிய ஆர்வம், அப்போது மாற்றுக்கருத்தாளர்கள் ஒன்று கூடுவதற்கான சந்தர்ப்பம் என்பனவற்றின் அடிப்படையில் இதனை குறிப்பிடுகிறேன். அதற்கு பின்னர் பல்வேறு கலை இலக்கிய நிகழ்வுகள், அரசியல் கலந்துரையாடல்களில் இந்த உறவு தொடர்ந்தது. எங்களை ஜீவனுடன் நெருக்கமாக பிணைத்த சில விடயங்களை குறிப்பிட்டால், அவற்றினூடாக அவரின் பங்களிப்பை அறிந்து கொள்ள முடியும். தமிழ் ஏடு பத்திரிகை, லண்டன் ரி.பி.சி.வானொலி, பாரிஸ் ரி.ஆர்.ரி வானொலி, தொலைக்காட்சி என்பன அவற்றுள் சில. மேலும் “FLUCHT” அமைப்பினால் நடாத்தப்பட்ட சிறார்களுக்கான ஓவியப்போட்டி, ஜீவனின் குறும்படங்கள் போன்ற வற்றையும் குறிப்பிடலாம். (FLUCHT: ஜேர்மன் மொழியில் அகதியாதல், தப்பித்த்தல் என்ற அர்த்தத்தைக் கொண்டது) ஓவியப்போட்டிக்கு பிரதான நடுவராக ஈரான் நாட்டைச் சேர்ந்த ஓவியர் ஒருவரை அழைத்திருந்தோம். மற்றைய இரு நடுவர்களுள் ஓவியக்கலை அழகியலில் ஈடுபாடு கொண்ட ஜீவனும் ஒருவர் என்று நினைக்கிறேன். எனினும் எனக்கு நிச்சயமாக குறிப்பிட முடியாதுள்ளது. அன்றைய சூழலில் மாற்று சினிமா, மாற்று மொழி சினிமா குறித்த சிறந்த விமர்சகர்களாக ஐரோப்பாவில் இருந்த சில தமிழர்களுள் ஜீவனும் ஒருவர். அச்சுறுத்தல்களுக்கும், ஜனநாயகத்திற்கு முரணான கருத்துச்சுதந்திர தடைகளுக்கும் மத்தியிலும் ‘பரம்’ என்று அறியப்பட்ட பாலசுப்பிரமணியத்தை ஆசிரியராகக் கொண்ட ‘தமிழ்ஏடு’ பத்திரிகையில் சினிமா விமர்சனம், அறிமுக கட்டுரைகளை ஜீவன் தொடர்ந்து எழுதினார். அப்போது தமிழ் ஏட்டில் என்னால் அரசியல் விமர்சனக்கட்டுரைகள் எழுதப்பட்டன. பண்டமாற்று போன்று இருவரும் ஒருவருக்கொருவர் எங்களுக்குள் விமர்சனங்களைச் செய்து கொள்வோம். நான் எழுதி, ஜெயந்தி மாலாவின் குரலில், ராம் ராஜ்ஜின் ரி.பி.சி. வானொலியில் ஒலிபரப்பப்பட்ட “பூகோளம்” நிகழ்ச்சி நிறைவுறும் போது எங்கள் வீட்டு தொலைபேசி அலறும். அந்த அழைப்பில் வருபவர்களுள் ஜீவன் முதன்மையானவர். அவர் நிகழ்சி குறித்த கருத்துக்களை சூடு ஆறுமுன் சொல்லுவார். ஜீவன் மூன்று குறும்படங்களையும் போட்டிக்கு தயாரித்தார். ‘எச்சில் போர்வை’, ‘நிழல் யுத்தம்’ என்பன இவற்றில் குறிப்பிடத்தக்கவை. இவை பரிசுகளையும் பெற்றுக்கொண்டன. ஜீவனை ஒரு அழகியல் கலைஞன் என்றும் குறிப்பிடலாம். காட்சிகளை அவர் படமாக்கும் விதம் அற்புதமானது. அவை வெறும், காட்சிகளோ, படங்களோ அல்ல. மனித எண்ணங்களை பிரதிபலிக்கின்ற – பார்வையாளர்களோடு நேரடியாக பேசுகின்ற கைவண்ணங்கள். அதனால்தான் ஜீவனின் கமரா மொழி பாலுமகேந்திரா பாணி என்று குறிப்பிட்டேன். ஜீவன் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய தலைசிறந்த கமராக்கலைஞன். இந்தப் பண்புகளை சிங்கப்பூரில் அவரே குறிப்பிடுகின்ற கோபாலு அண்ணர் முதல் பாலச்சந்தர் -பாலுமகேந்திராவின் அனுபவங்கள் வரை பெற்று தன்னை புடம்போட்டுக்கொண்டு சிறந்த கமராக்கலைஞனாக உயர்ந்தவர். பாரிஸ் ரி.ஆர்.ரி. தொலைக்காட்சியில் பிலிப் தேவா தயாரித்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றிலும் ஜயந்தியும், நானும் பங்களிப்பு செய்தோம். எங்கள் கதைக்கும், குரலுக்குமான காட்சியை படமாக்குவதில் ஜீவனின் கமரா மிகவும் அற்புமாக பேசியது. சுமார் 25- 30 ஆண்டுகளுக்கு முன்னரான ஒப்பீட்டளவில் இன்றையதை விடவும் தொழில்நுட்ப வசதிகள் குறைந்த அந்த காலத்தில் ஜீவனின் கைவரிசை குறைத்து மதிப்பிட முடியாத ஒன்று. தமிழ், ஆங்கிலம், சிங்களம் பின்னர் டொச் மொழியிலும் புலமை பெற்றிருந்த ஜீவன் தனது உறவுகளை தமிழ்பரப்புக்கும் அப்பால் விரிவுபடுத்தியது வியப்புக்குரியதல்ல. அவர் எண்ணற்ற நண்பர்களை கொண்டிருந்தார். அவரது சிங்கள மொழியாற்றல், செய்தித்தொகுப்பு, ஊடக நுணுக்கங்கள் ஊடாக தமிழ்மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) அமைப்பினரால் 1980 களில் நடாத்தப்பட்ட “தமிழ் ஈழத்தின் குரல்” வானொலியில் செய்தி தொகுப்பாளராகவும், வாசிப்பவராகவும் இருந்தார். சிங்கள மக்கள் மத்தியில் ஈழப்போராட்டத்தை முன்கொண்டு செல்வதற்கும், முற்போக்கு சக்திகளை ஒன்றிணைப்பதற்கும் இந்த பணி உதவியது. இலங்கையின் இருதயம் என்று கருதப்படுகின்ற குருநாகல் மாவட்டத்தில் “புளொட்” அமைப்பு நடாத்திய நிக்கவரெட்டிய வங்கிக்கொள்ளையிலும் ஜீவன் பங்கேற்றார் என்று கூறப்படுகிறது. ஆனால் இன்று இயக்கத்திற்கு போனதால் தான் தனது வாழ்வு தொலைந்தது என்று கவலைப்படும், எல்லா இயக்கங்களினதும் ஆயிரக்கணக்கான அன்றைய இளைஞர்களுள் ஜீவனும் ஒருவர். இறுதியாக என்னால் ஏற்பாடு செய்யப்பட்ட “உதயம்” கிழக்கின் வருடாந்த ஒன்று கூடலுக்கான நடன நிகழ்வொன்றை அவரே ஏற்பாடு செய்தும் தந்திருந்தார். நாங்கள் அறிந்த வகையில் வீரகீர்த்தி தமிழ்ச்செல்வம் என்ற பிரசாத்/ ஜீவன்/ அஜீவன் இன, மதங்களுக்கு அப்பாற்பட்டவர். அந்த வகையில் எந்த மத நம்பிக்கையின் அடிப்படையிலான வார்த்தைகளையும் பயன்படுத்தி ஜீவனை மதங்களோடு கட்டிப்போட விரும்பவில்லை. அஞ்சலிகள் ஜீவன். https://arangamnews.com/?p=12315
2 days 14 hours ago
2 days 14 hours ago
வடமராட்சி பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் கும்பல்களால் மீனவர்களின் வாடிகளுக்கு தீ வைப்பு சனி, 13 செப்டம்பர் 2025 09:08 AM யாழ்ப்பாணம் , வடமராட்சி பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் கும்பல்களால் மீனவர்களின் வாடிகள் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டு , தீ வைக்கப்பட்டுள்ளதுடன் , மீனவர்கள் மீது தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த இரு மீனவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வடமராட்சி கற்கோவளம் சந்தைக்கு அண்மித்த பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது. இவ்வாறு மணல் அகழப்படும் இடங்களில் ஏற்படும் பாரிய குழிகளில் மழை நீர் தேங்குவதன் ஊடாக பல்வேறு அசௌகரியங்களுக்கு அப்பகுதி மக்கள் முகம் கொடுத்து வந்த நிலையில் கடந்த மாரி காலத்தில் இவ்வாறு சட்டவிரோதமாக தோண்டப்பட்ட குழியில் தேங்கியிருந்த வெள்ள நீரில் விழுந்து ஒருவர் உயிரிழந்திருந்தார். அத்துடன் இவ்வாறான சட்டவிரோத மணில் அகழ்வு தொடர்ந்து இடம்பெறுமாக இருந்தால் இந்த பகுதி வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காண்ப்படுகிறது. எனவே கற்ககோவளம்- புனிதநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். இவ்வாறான பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் சட்டவிரோத மணல் கடத்தலில் இந்த பகுதியை சேர்ந்த குறிப்பிட்ட சிலரே ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் குறித்த நபர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று இனிமேல் இவ்வாறான சட்டவிரோத மணல் கடத்தல் செயற்பாட்டில் ஈடுபடவேண்டாம் என அப்பகுதியை சேர்ந்த சிலர் கோரியுள்ளனர் அதனை அடுத்து, அவ்வாறு கோரிக்கை விடுத்தவர்களை வரும் வழியிலேயே வழிமறித்து அச்சுறுத்தப்பட்ட நிலையில், இரவு மீன்பிடி வாடிகள் அடித்துடைக்கப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டு வருபவர்கள் வாள்களுடன் வந்து மேற்கொண்ட இத்தாக்குதலில் இரு மீனவர்கள் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு பருத்தித்துறை பிரதேச செயலாளர் ந.திரிலிங்கநாதன் சென்று பார்வையிட்டு பருத்தித்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பருத்தித்துறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் குற்றம் இடம்பெற்ற இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கமரா பதிவுகளின் அடிப்படையில் ஏனையவர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார். https://jaffnazone.com/news/50542
2 days 14 hours ago
மக்களைத் தவறாக வழிநடத்தும் சுகாஸ்; சுமந்திரன் சாடல் சர்வதேச விசாரணை ஒன்று முடிவடைந்ததா? என்பது சம்பந்தமாக நான் ஒரு கேள்வி கேட்டேன். அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை என்பதால் பொய்யான அவதூறுகள் கொட்ட வேண்டிய தேவையில்லை, அது ஒரு சட்டத்தரணிக்கு அழகுமல்ல என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷுக்கு இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ‘மக்களை நான் தவறாக வழி நடத்துவதாக நீங்கள் (சுமந்திரன்) குறிப்பிட்டிருப்பதை பார்த்தபோது சாத்தான் வேதம் ஓதிய கதை நினைவுக்கு வந்தது.மக்களைத் தவறாக வழிநடத்துவது நானா?நீங்களா?’ என சுமந்திரனிடம் சுகாஷ் கேள்வி எழுப்பியிருந்த நிலையில்,அதற்கு பதில் வழங்கும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; 1) தேசியப் பட்டியல் ‘பின் கதவு’ என்றால் உங்கள் கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் 2020 ஆம் ஆண்டு பின் கதவாலா பாராளுமன்றத்திற்குள் நுளைந்தார்? நான் எங்கேயும் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் தவறானது என்று கூறியதில்லை. அதற்கு மாறான எனது கருத்து பல இடங்களில் பதிவாகி உள்ளது. இதை மறுப்பதற்கு பத்திரிகை எடுத்து வர வேண்டாம். பத்திரிகைகள் வேண்டுமென்றே தவறான செய்திகளை வெளியிட்ட பல சந்தர்ப்பங்கள் உண்டு. 2) இனப்படுகொலைக்கு ஆதாரங்கள் இல்லை என்று நான் எங்கேயும் கூறியதில்லை. இனப்படுகொலையை குற்றவியல் ரீதியாக நிறுவுவதற்கு இன்னொரு கூறு (ingredient) தேவை என்றே கூறியிருக்கிறேன். Mens Rea இற்கும் Dolus Specialis இற்கும் உள்ள வித்தியாசம் சட்டத்தரணி என்று சொல்லிக்கொள்கிறவர்களுக்கும் தெரியாமல் இருப்பது துரதிஷ்டமே. 3) மேலே (2) இல் சொன்னது இதற்கும் பொருந்தும் 4) ஏக்கிய ராஜ்ஜிய ஒற்றையாட்சி அல்ல, ஏக்கிய ரஜய தான் ஒற்றையாட்சி என்ற வித்தியாசம் கூட ஒரு சட்டத்தரணிக்குத் தெரியாதா? நீங்கள் கூறிய மற்றைய விடயங்கள் வெறும் அவதூறுகளே. அவற்றிற்குப் பதில் வழங்கத் தேவையில்லை. கலப்புப் பொறிமுறையை உள்ளக விசாரணை என்று கூறும் உங்களது கருத்தைக் குறித்து யாரை நொந்து கொள்வது? எமது நாட்டின் கல்விக் கட்டமைப்பையா? . மீண்டும் சொல்கின்றோம் ‘பேப்பர் கட்டிங்’அரசியல் செய்து மக்களைத் தவறாக வழிநடத்துவது தவறு என சுமந்திரன் தெரிவித்துள்ளார். https://akkinikkunchu.com/?p=340687
2 days 14 hours ago
2 days 14 hours ago
2 days 14 hours ago
2 days 14 hours ago
இந்திய தூதுவருக்கும் ரெலோவுக்குமிடையே சந்திப்பு! September 13, 2025 கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (11) இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலொவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனும், அக்கட்சியின் நிதிச் செயலாளரும் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரனும் கலந்து கொண்டனர். அதன்போது செப்டம்பர் 8ம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐநா மனித உரிமை 60 ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தமிழர்களின் அபிலாசைகளான அர்த்தமுள்ள அதிகார பகிர்வு, நீதி, கௌரவம் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை இலங்கை அரசு முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை தாம் வரவேற்பதாக ரெலோ தலைவர் தெரிவித்தார். அரசியல் யாப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையிலே விரைந்து மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியமை நீண்ட காலமாக இழுத்தடிக்கப்படும் மாகாண சபை தேர்தலை நடாத்த வழிவகுக்கும் எனவும் உயர்ஸ்தானிகரிடம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் மன்னார் வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு 600 மில்லியன் ரூபாய்களை வழங்கி அப்பிரதேச மக்களின் நீண்ட கால சுகாதாரத் தேவையை நிறைவு செய்ய இந்தியா முன்வந்தமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அதேவேளை காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி, பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு மற்றும் தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் போக்குவரத்து என்பவற்றில் இந்தியா தொடர்ந்தும் அக்கறையுடன் இருப்பதாகவும் விரைந்து அதை நிறைவேறுவதற்கான தொடர் முயற்சிகள் எடுக்கப்படுதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதும் பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுப்பதும் சமாந்தரமாக செயல்படுத்தப்படுவது அவசியம் எனவும் அதில் இந்தியா அக்கறையோடு இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி என்பவற்றில் இந்தியா இதய சுத்தியோடும் உறுதியோடும் பயணிப்பதற்கு தமிழ் மக்கள் சார்பில் தாம் நன்றி கூறுவதாக ரெலோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. https://www.ilakku.org/meeting-between-indian-ambassador-and-telo/
2 days 14 hours ago
மன்னார் காற்றாலை போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவில் இருந்து நடை பயணம் September 13, 2025 மன்னார் காற்றாலை போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவு இளைஞர்கள் இருவர் மன்னார் நோக்கி நடை பயணத்தை ஆரம்பித்த நிலையில் குறித்த இரு இளைஞர்களும் வெள்ளிக்கிழமை (12) மாலை மன்னாரை வந்தடைந்தனர். மன்னார் பகுதியில் அமைக்கப்பட உள்ள காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்காலில் இருந்து இரண்டு இளைஞர்கள் நடைபயணம் ஒன்றை கடந்த புதன்கிழமை (10) ஆரம்பித்தனர். அவர்கள் முல்லைத்தீவிலிருந்து கால்நடையாக செல்வதோடு துண்டு பிரசுரங்களை வீதி ஓரங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கி வந்தனர். இந்த நிலையில் குறித்த இரு இளைஞர்களும் வெள்ளிக்கிழமை (12) மாலை 6 மணியளவில் மன்னார் தள்ளாடி சந்தியை வந்தடைந்தனர். இந்த நிலையில் குறித்த இரு இளைஞர்களையும் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் மற்றும் மன்னார் நகரில் போராட்டத்தை முன்னெடுத்து வரும் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து வரவேற்றனர். பின்னர் தள்ளாடி சந்தியில் இருந்து மன்னார் பஜார் பகுதி வரை குறித்த குழுவினர் நடை பயணமாக வருகை தந்து காற்றாலைக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை பஜார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு வினியோகித்தனர். https://www.ilakku.org/walking-tour-from-mullaitivu-in-support-of-mannar-wind-farm-protest/
2 days 14 hours ago
2 days 14 hours ago
நேபாள பாராளுமன்றம் கலைப்பு – தேர்தல் திகதியும் அறிவிப்பு September 13, 2025 நேபாள பாராளுமன்றம் நேற்று (12)இரவு கலைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில் இளைய தலைமுறையிரின் போராட்டம் மற்றும் வன்முறையால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், நாட்டின் இடைக்கால பிரதமராக நேபாள உயர் நீதிமன்றத்தின் முன்னாள் பிரதம நீதியரசர் சுசீலா கார்கி நேற்று பதவி ஏற்றார். இந்த நிலையில், அவருடைய பரிந்துரையின்பேரில் நேபாள பாராளுமன்றத்தை ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் கலைத்தார். ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி அந்நாட்டு பாராளுமன்றம் நேற்று இரவு 11.00 மணிக்கு கலைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த ஆண்டு (2026) மார்ச் 21 ஆம் திகதி நேபாள பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என்றும் அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார். நேபாளத்தில் ஆட்சியில் இருந்தவர்களின் ஊழல் மக்களை பெரும் கோபத்தில் ஆழ்த்தியிருந்த வேளையில், சமூக வலைத்தளங்களுக்கு அரசு தடை விதித்தது. இதனால் பெரும் கொந்தளிப்புக்கு ஆளான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அடங்கிய ‘ஜென் சி’ தலைமுறையினர் கத்மண்டுவில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராடினர். இதில் ஏற்பட்ட கலவரம் மற்றும் பொலிஸ் துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் கொல்லப்பட்டனர். இதனால் போராட்டமும், வன்முறையும் நாடு முழுவதும் தீவிரமடைந்ததால், பிரதமர் சர்மா ஒலி 9ஆம் திகதி பதவி விலகினார். உடனடியாக நாட்டின் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பை இராணுவம் கையில் எடுத்தது. அதன்பின்னர் வன்முறை ஓய்ந்து நாடு முழுவதும் படிப்படியாக அமைதியும், இயல்பு நிலையும் திரும்புகிறது. பிரதமர் சர்மா ஒலி பதவி விலகியதை தொடர்ந்து நாட்டில் இடைக்கால அரசு அமைப்பதற்கான பணிகள் தொடங்கின. இதற்காக ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் மற்றும் இராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்டெல்லுடன் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இடைக்கால அரசின் பிரதமராக நேபாள உயர் நீதிமன்ற முன்னாள் பிரதம நீதியரசர் சுசீலா கார்கி, காத்மண்டு மேயர் பலேந்திர ஷா உள்பட 4 பேர் பெயர்களை பரிந்துரைத்தனர். இதில் சுசீலா கார்கிக்கு அனைத்து பெரிய அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. அத்துடன் போராட்டக்காரர்களின் ஆதரவும் இருந்ததால் அவர் இடைக்கால பிரதமராக நேற்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் ஜனாதிபதி மாளிகையில் இரவு நடந்த நிகழ்ச்சியில், நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் அந்நாட்டின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றார். முன்னதாக நாட்டின் முதலாவது பெண் பிரதம நீதியரசர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016-ம் ஆண்டு நேபாளத்தின் முதல் பெண் பிரதம நீதியரசராக பதவியேற்ற அவர், 11 மாதங்கள் அந்த பொறுப்பில் இருந்தார். அப்போது ஊழலுக்கு எதிராக அவர் காட்டிய கடுமையே, ஜென் சி தலைமுறையினரின் பிரதமர் தேர்வுக்கு காரணமாக இருந்துள்ளது. https://www.ilakku.org/nepal-parliament-dissolved-election-date-also-announced/
2 days 14 hours ago
Minds toeoSrnsdp5e18e0ea 81mp773mti90a8610s0r40g,chb ut:11m1th756a · The pilot announced, “We will land after half an hour.” Then he forgot to turn off the mic and told the co-pilot, “First I will drink some hot tea, then I will kiss the air hostess.” 😘" When the air hostess heard this, she ran to turn off the mic but tripped on a child’s foot and fell. The child said, “Why are you in such a hurry? He said he will drink tea first.”🙃"........ ! 😂
2 days 15 hours ago
வெளிநாட்டு தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்தாலோ, பகிர்ந்தாலோ மரண தண்டனை: வட கொரியா குறித்து ஐ.நா. அறிக்கை 13 Sep, 2025 | 01:08 PM வட கொரியாவில், தென் கொரியா உள்ளிட்ட வெளிநாட்டுத் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பது அல்லது பகிர்வது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. இதுகுறித்து வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. வட கொரிய அரசு, புதிய தொழில்நுட்பங்களின் உதவியுடன் மக்களின் அன்றாட நடவடிக்கைகளை மிகவும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இதன் விளைவாக, தண்டனைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைமுறைக்கு வந்த புதிய சட்டங்கள், அந்நாட்டுக் குடிமக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை அதிகரித்துள்ளன. தென்கொரியாவின் பிரபல 'கே-டிராமாக்கள்' (K-Dramas) உட்பட வெளிநாட்டுத் தொலைக்காட்சித் தொடர்களை விநியோகித்ததற்காக, பல வட கொரியர்கள் ஏற்கனவே தூக்கிலிடப்பட்டுள்ளனர் என வட கொரியாவுக்கான மனித உரிமைகள் ஆணையாளர் ஜேம்ஸ் ஹீனன் தெரிவித்தார். இந்த 14 பக்க அறிக்கை, 2014 முதல் வட கொரியாவிலிருந்து தப்பிச் சென்ற 300-க்கும் மேற்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட நேர்காணல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை வட கொரிய அரசாங்கம் முற்றிலுமாக நிராகரித்துள்ளது. இந்த அறிக்கைக்கு அனுமதியளித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்; தீர்மானத்தை எதிர்ப்பதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை, வட கொரியாவில் மனித உரிமைகள் எந்த அளவுக்கு மீறப்படுகின்றன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது https://www.virakesari.lk/article/224987
2 days 15 hours ago
பாலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வை ஏற்படுத்தும் "நியூயோர்க் பிரகடனம்": இலங்கை உள்ளிட்ட 142 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு 13 Sep, 2025 | 12:06 PM பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண்பது மற்றும் இரு-நாடுகள் தீர்வை செயல்படுத்துவது குறித்த நியூயோர்க் பிரகடனத்தை ஆதரிக்கும் தீர்மானத்தை ஐ.நா. பொதுச் சபை ஏற்றுக்கொண்டுள்ளது. நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில், காசா போருக்கு அமைதியான தீர்வை ஏற்படுத்தும் "நியூயோர்க் பிரகடனம்" மீது வெள்ளிக்கிழமை (13) வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பின் முடிவுகளின் படி, தீர்மானத்திற்கு ஆதரவாக 142 நாடுகள் வாக்களித்திருந்தன. எதிராக 10 நாடுகள் வாக்களித்திருந்தன. 12 நாடுகள் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தன. பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியாவால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவு, பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண "இரு- நாடுகள் தீர்வை" (Two-State Solution) செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இது காசா போரை முடிவுக்குக் கொண்டுவர கூட்டு முயற்சிகள் அவசியம் என்றும், அதன் மூலமே நியாயமான, நீடித்த தீர்வு சாத்தியம் என்றும் கூறுகிறது. அதேநேரம், இந்தத் தீர்மானம், ஒக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல்களைக் கண்டிக்கிறது. ஹமாஸ் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கவும், காசாவில் அதிகாரத்தைக் கைவிட்டு, ஆயுதங்களை பாலஸ்தீன அதிகாரசபையிடம் ஒப்படைக்கவும் கோருகிறது. ஐ.நா.வின் தகவலின்படி, 2023 முதல் காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களில் 64,750-க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். அத்துடன் பட்டினியால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/224981
2 days 15 hours ago
இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி : அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை சந்தித்தார் கட்டார் பிரதமர் 13 Sep, 2025 | 09:48 AM இஸ்ரேல் அண்மையில் கட்டாரின் தலைநகரான டோஹாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரின் சந்திப்பு ஒன்றை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலுக்குப், கட்டார் பிரதமர் ஷேக் முஹம்மது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை நியூயார்க்கில் சந்தித்துப் பேசினார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முன்மொழிந்த புதிய ஒப்பந்தம் குறித்து விவாதிப்பதற்காக, டோஹாவில் நடைபெற்ற ஹமாஸ் சந்திப்பைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், காசாவில் போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளைப் பாதிக்கும் என அமெரிக்கா கவலை தெரிவித்தது. இந்த வார தொடக்கத்தில், அமெரிக்கா பொதுவாக இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்த போதிலும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து ஏனைய நாடுகளுடன் இணைந்து கொண்டது. டோஹா மீதான இஸ்ரேலின் தாக்குதலால் ஜனாதிபதி டிரம்ப் அதிருப்தியடைந்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான தொலைபேசி உரையாடலில் தனது கோபத்தை அவர் வெளிப்படுத்தியதாகவும், இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் இடம்பெறாது என்று கட்டாருக்கு உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், பிராந்தியத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் கட்டாரின் முக்கியப் பங்கையும் இந்தச் சந்திப்பு உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் அமெரிக்காவின் வலுவான நட்பு நாடாக கட்டார் திகழ்வதாகவும், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அதன் பங்கு மிகவும் முக்கியமானது என்றும் அமெரிக்கா கருதுகிறது. ஹமாஸ் தலைவர்கள், அமெரிக்கா முன்மொழிந்த போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்த போது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் சமரசப் பேச்சுவார்த்தைகளைத் தகர்க்கும் முயற்சி என கட்டார் குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேல் நடத்திய இந்த வான்வழித் தாக்குதல், பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவிவரும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இது மத்திய கிழக்கில் உள்ள ஏனைய நாடுகளையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவும் இஸ்ரேலின் இந்த நடவடிக்கையைக் கண்டித்துள்ளது. இந்த உயர்மட்ட சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு இராஜதந்திர சமநிலையைப் பேணுவதற்கான முயற்சியாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த வார இறுதியில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இஸ்ரேலுக்கு விஜயம் செய்ய உள்ளார். கட்டாரை வளைகுடா பிராந்தியத்தில் ஒரு வலுவான நட்பு நாடாக வொஷிங்டன்கருதுகிறது, ஏனெனில் அமெரிக்காவின் அல் உதேத் விமானப்படைத் தளம் அங்கு அமைந்துள்ளது. கட்டார் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களின் காரணமாக அமெரிக்காவுக்கும் கட்டாருக்கும் இடையிலான உறவுகள் மிகவும் சிக்கலாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஒரு கட்டார் பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஐந்து ஹமாஸ் உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். https://www.virakesari.lk/article/224964
2 days 15 hours ago
தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய்யின் பிரசாரம் 13 September 2025 தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் மக்கள் பிரசாரம் இன்று திருச்சியில் ஆரம்பமாகியுள்ளது. திருச்சி காந்தி சந்தை மற்றும் எம்.ஜி.ஆர். சிலை அருகே காலையில் பிரசாரம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் த.வெ.க தலைவர் விஜய்யை காண வந்த தொண்டர்கள் அவரது பிரசார பேருந்தை பின் தொடர்ந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் தொண்டர்கள் சூழ்ந்த காரணத்தினால் பிரசார பேருந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காவல்துறை நிபந்தனைகளை மீறி அவரது பிரசார வாகனத்தை தொடர்ந்து ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்றுள்ளனர். https://hirunews.lk/tm/419953/vijays-campaign-is-flooded-with-volunteers
2 days 15 hours ago
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் விசாரணை அறிக்கை யாழ்.நகரில் விநியோகம்! adminSeptember 13, 2025 படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனுக்கு நீதி கோரிய விசாரணை அறிக்கை யாழ் ஊடக அமைய ஊடகவியலாளர்களால் யாழ் நகரில் விநியோகிக்கப்பட்டது. யாழ் . ஊடக அமைய தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் சக ஊடகவியலாளர்களால் இன்றைய தினம் சனிக்கிழமை காலை , யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் , அதனை சூழவுள்ள பகுதிகளில் விசாரணை அறிக்கை விநியோகிக்கப்பட்டது கடந்த 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை , நிமலராஜன் வீட்டினுள் புகுந்த துப்பாக்கிதாரிகள் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் , வீட்டினுள் கைக்குண்டு வீசியும் தாக்குதல் மேற்கொண்டனர். குறித்த தாக்குதல் சம்பவத்தில் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் , அவரது தந்தை தாய் , மற்றும் மருமகன் ஆகியோர் காயங்களுக்கு உள்ளாகி இருந்தனர். நிமலராஜன் படுகொலைக்கு கடந்த இருபத்தைந்து, ஆண்டுகளாக நீதி இன்றி நிலைத்து வரும் நிலையில் , படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக தொடர்ந்தும் யாழ் . ஊடக அமையம் குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/220286/
2 days 15 hours ago
பாஸ்வேர்ட்டை மாத்தலாம் அல்லது கைத்தொலைபேசியில் (ஐபோன் ஆக இருந்தால் Passwords App) சேமிக்கப்பட்ட பாஸ்வேர்ட்டை பார்த்துக்கொள்ளலாம்😀
2 days 15 hours ago
ஆம் அங்குதான் ரியோ விசிறிகள் கொஞ்சம் விளங்க படுத்தினால் நல்லது .
Checked
Mon, 09/15/2025 - 22:38
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed