புதிய பதிவுகள்2

'அழிவற்ற அன்பின் ஆனந்தம் ஆகாதோ?'

1 day 14 hours ago
'அழிவற்ற அன்பின் ஆனந்தம் ஆகாதோ?' பெண் நிலவு உன்னைப் பார்த்து வெண் நிலவும் பொறாமை கொள்ளுதோ கண்ணழகி உன்னைப் பார்த்த நானும் வண்ண ஒளி கந்தனை மறந்தேனோ? அலைகடலென திரண்ட அடியார் கூட்டத்தில் அலைமோதுதே என்மனம் உன் விழிகளில் அறியாத உணர்வுகளின் வரிகள் எல்லாம் அழகாக உன்னுதட்டினில் புதைத்து எனோ? வாழ்க்கை ஓடத்தில் நீயும் நானும் வாடாத மலராய் இருக்க மாட்டோமா வாலிபம் தந்த காதல் மோகம் வாசனை வீசி எம்மை அணைக்காதா? மொழியும் உணர்வும் பின்னிய பந்தம் விழியில் பேசிய அன்புச் சொந்தம் வழியொன்றில் மலர்ந்த காதல் சந்தம் அழிவற்ற அன்பின் ஆனந்தம் ஆகாதோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] 'அழிவற்ற அன்பின் ஆனந்தம் ஆகாதோ?' https://www.facebook.com/groups/978753388866632/posts/32106754852306412/?

அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்

1 day 15 hours ago
வயிற்றுக்குள் இருந்த குழந்தையை வயிற்றை கீறி எடுத்தனர் என்பதுபோல் இதுவும் ஒரு கதை. கிழக்கில் நடந்த அசம்பாவிதம் வடக்கில் நடந்தேறிவிடக்கூடாது என்பதற்காகவே இது நிகழ்ந்திருக்கலாம். இல்லையேல் வடக்கிலும் அதுதான் நடந்திருக்கும். பேசுவது தமிழ் ஆனால் அவர்களுக்கென்று ஒரு தனித் தீர்வு வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள். அதற்காக அவர்கள் போராடாமல், தமிழர் தீர்வு கேட்டால் மட்டும் அவர்களுக்கும் குடைச்சல் எடுக்கும். புலிகள் தவறு என்பதை ஏற்று, மன்னிப்பு கேட்டு, மீளவும் குடியேற அழைத்தனர். ஆனால் இவர்கள் தாம் செய்த தவறை இன்று வரை ஏற்றுக்கொள்ளவில்லை. இருபகுதியும் விட்டுக்கொடுத்தாலே நல்லிணக்கம் ஏற்படும். ஆனால் இவர்களோ தமது தவறை மறைத்து எம்மை குற்றவாளிகளாக்குவது இவர்கள் தம்மை தனிமைப்படுத்திக்கொள்ளவே முடியும்.

இலங்கையின் முதியோர் தொகை 18% ஆக அதிகரிப்பு!

1 day 15 hours ago
தமிழரின் புலம்பெயர அல்லது வலொற்றுகரமாக புலம் பெயரர வைக்க (சிங்களம் உருவாக்கிய) ஏதுநிலைகள், இதன் மிகப் பிரதான காரணம் (சிங்களத்தை பொறுத்தவரை அதன் சிந்தனைகள் இலங்கைதீவு மூலக சிங்கள பெரும்பான்மை ஆக்குவது, காலம் போக சிலாபம், நீர்கொழும்பு போல சிங்களம் ஆகிவிடும், (அனால் இப்போதும் அங்கெ உள்ளவர்கள் சைவசமயத்தை பெரும்பாலும் பின்பற்றுவது.) ஆயினும், முதுமை அடையும் சமூகம் / நாடுகள் இப்போது உலகளாவிய பிரச்சனை. நான் நினைக்கிறன். தமிழரில் மேலும் கூடாவாக இருக்கும். மேற்கு நாடுகள் வளர்ந்த பின்பே, முதுமை அடைதல் எதிர் நோக்குகின்றன. பொதுவாக ஆபிரிக்காவை தவிர, ஏனைய நாடுகள் வளரும் போது.

சீனாவின் அடுத்த 5 வருடகால வளர்ச்சி இலங்கையின் சுபீட்சத்துக்கான கதவுகளைத் திறக்கும் - இலங்கைக்கான சீனத் தூதுவர்

1 day 15 hours ago
இது பகுதியாகவேனும் உண்மையாக இருக்க வேண்டும். சீன உலக பொருளாதாரத்தில் இணைந்த பின்பே ஏறத்தாழ 39 நாடுகள் மத்திய வருமானத்துக்கு உயர்ந்து உள்ளன. இந்த காலத்தில் மேற்றுகின் / us இன் மற்ற நாடுகளுக்கான பொருளாதார கொள்கைகள் மாறவில்லை. நிதி கொள்கைகளை imf மாற்றவவில்லை. சீனா un க்குள்ளும் பொருளாதார பங்கீடு சீர்திருத்தங்களை, அமெரிக்கா / மேற்கை எதிர்த்து செய்துள்ளது என செய்திகள் உள்ளது அனால், குறிப்பாக எவை என்று தெரியாது.

அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்

1 day 15 hours ago
இளகின இரும்பை கண்டால் கொல்லர் எதையோ…தூக்கி…தூக்கி அடிப்பாராம் என்பது போல் இருக்கிறது சில முஸ்லிம் “தலைவர்களின்” அறிக்கை அக்கப்போர். எமது தலைவர்கள் போலவே அவர்களின் தலைவர்களும் தம்மக்களின் அவலத்தை வைத்து ஆதாயம் தேடுவதில் சூரர். இதில் புலிகள் கழட்ட முடியாத நகையை வெட்டி எடுத்தனர் என ஒரு புது புரளியை இவர் கிளப்பி உள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் உயிர்மாய்க்க முயன்று வைத்தியசாலையில்

1 day 16 hours ago
பப்ஜி விளையாட்டு தோல்வியால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் வலி கிழக்கு முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அகிப் சிவகுமார் சிகிச்சை பலனின்றி மரணமானார். நம்ம யாழ்ப்பாணம் இவன் போன்றவர்களை உறுப்பினராக்கிய மக்கள் முட்டாள்கள். Ilango Mahendra

இலங்கையின் முதியோர் தொகை 18% ஆக அதிகரிப்பு!

1 day 16 hours ago
இது இலங்கையில் ஏற்படும் மூளைவறட்சியால் ஏற்பட்டதாக இருக்காதா ....? இள வயது தொழில்முனைவோர் முதல் கல்விமான்கள் வரை வெளிநாட்டிற்கு ஓடித்தப்பிக்கொண்டிருக்க வெளிநாடுகளுக்கு பிரயோசனமற்ற முதியவர்கள் தப்பிக்க வழியேதும் இன்றி நாட்டில் தேங்குவதால் இந்த நிலை ஏற்படக்கூடுமல்லவா ....? சடுதியான அதிகரிப்பு என்பது குடிமக்களின் பாரிய அளவிலான இடப்பெயர்வால் நடந்துள்ளதாகவே தெரிகிறது

இலங்கையின் முதியோர் தொகை 18% ஆக அதிகரிப்பு!

1 day 16 hours ago
இலங்கையின் முதியோர் தொகை 18% ஆக அதிகரிப்பு! ஆசிய பிராந்தியத்தில் வேகமாக வளர்ந்து வரும் முதியோர் மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2012 ஆம் ஆண்டில், இலங்கையின் முதியோர் மக்கள் தொகை மொத்த மக்கள் தொகையில் 12% ஆக இருந்ததாகவும், 2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 18% ஆக அதிகரித்துள்ளதாகவும் ஆலோசகர் சமூக வைத்தியர் நிஷானி உபேசேகர தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் மேலும் உரையாற்றிய அவர், 2012 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மக்கள் தொகையில் 12% பேர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள். 2024 மக்கள் தொகை கணக்கெடுப்பில், இது 18% ஆக உயர்ந்துள்ளது. 2040 ஆம் ஆண்டுக்குள், மக்கள் தொகையில் 25% – அதாவது, ஒவ்வொரு நான்கு பேரில் ஒருவர் – முதியவர்களாக இருப்பார்கள் என்று நாங்கள் கணித்துள்ளோம். ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இலங்கை அதன் முதியோர் மக்கள்தொகையில் அதிக வளர்ச்சி விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலைமை முக்கியமாக பிறக்கும் போது ஆயுட்காலம் அதிகரிப்பதாலும் பிறப்பு விகிதங்கள் குறைவதாலும் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். https://athavannews.com/2025/1451563

ஜமைக்காவை தாக்கிய பின்னர் கியூபாவை நோக்கி நகரும் சூறாவளி "மெலிசா"!

1 day 16 hours ago
கரீபியன் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய மெலிசா! கரீபியன் முழுவதும் மெலிசா சூறாவளி தனது பேரழிவைத் தொடர்ந்து ஏற்படுத்தியுள்ளது. இது வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளை அழித்தது, சுற்றுப்புறங்களை வெள்ளத்தில் மூழ்கடித்தது மற்றும் நூற்றுக்கணக்கான மக்களை வெளியேற்றியது. ஐந்தாவது வகை சூறாவளியால் தீவு நாடு நேரடியாக குறிவைக்கப்பட்ட பின்னர், புதன்கிழமை (29) ஜமைக்காவில் தாக்கம் தெளிவாகத் தெரிந்தது. இது பிராந்தியத்தில் இதுவரை அளவிடப்பட்ட மிக சக்திவாய்ந்த சூறாவளிகளில் ஒன்றாகும். அங்கு குறைந்தது ஐந்து பேர் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஹெயிட்டியில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 20 பேர் இறந்தனர், தற்போது இரண்டாம் வகை புயலாக இருக்கும் மெலிசா புயல் அந்தப் பகுதியைக் உருகுலைத்துள்ளது. ஜமைக்காவில், மக்கள் கூரைகள் கிளித்து ஏறியப்பட்ட வீடுகளில் சிக்கித் தவித்து வருகின்றனர். அங்கு மின்சாரம் இல்லாமல் தீவு நாடு முழுவதும் பேரழிவனை சந்தித்துள்ளதாக பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ் குறிப்பிட்டார். மருத்துவமனைகள், நூலகங்கள், காவல் நிலையங்கள், துறைமுக வீடுகள் மற்றும் பிற நகர்ப்புற உள்கட்டமைப்புகளுடன் “80-90% கூரைகள் அழிக்கப்பட்டன என்று அவர் மேலும் கூறினார். ஜமைக்காவின் அரச தலைவரான மன்னர் சார்லஸ், ஜமைக்காவிலும் கரீபியன் முழுவதும் மெலிசாவால் ஏற்பட்ட சேதத்தில் “ஆழ்ந்த கவலை” மற்றும் “மிகவும் வருத்தம்” அடைந்துள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவித்தார். புயல் மண் சரிவுகளையும் ஏற்படுத்திய ஜமைக்காவில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பின்னர், மெலிசா வடக்கே கியூபாவிற்கு மூன்றாம் வகை புயலாக நகர்ந்து, மணிக்கு 115 மைல் வேகத்தில் காற்று மற்றும் பலத்த மழையைக் கொண்டு வந்து, தீவின் தென்கிழக்கைத் தாக்கியது. புதன்கிழமை இரவு, புயல் மத்திய பஹாமாஸிலிருந்து 105 மைல் (170 கிமீ) தொலைவில் இருந்தது, மேலும் இரவு முழுவதும் பஹாமாஸ் பகுதியை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மெலிசா சூறாவளி மணிக்கு 100 மைல் (155 கிமீ/மணி) வேகத்தில் காற்றுடன் வடகிழக்கு நோக்கி நகர்ந்தது. அது பெர்முடாவை நோக்கி மேலும் வடக்கு நோக்கி நகரும் முன் அங்கு ஆபத்தான புயல் அலை எதிர்பார்க்கப்படுகிறது. டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகளுக்கு வெப்பமண்டல புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. மேலும் மெதுவாக நகரும் சூறாவளியின் வேகம் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜமைக்காவில், மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் இறந்தது உறுதி செய்யப்பட்டது. நாட்டின் முக்கால்வாசிப் பகுதி ஒரே இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மெலிசா வட அமெரிக்காவில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை, ஆனால் வெள்ளிக்கிழமை இரவு கனடாவின் நியூஃபவுண்ட்லேண்டில் உள்ள செயிண்ட் ஜான்ஸை நெருங்கும்போது அது இன்னும் ஒரு வலிமையான வெப்பமண்டல சூறாவளியாக இருக்கும். சூறாவளியின் பின்னர் தேவையின் அளவை மதிப்பிடுவதற்காக அமெரிக்கா ஜமைக்காவிற்கு ஒரு பேரிடர் மீட்புக் குழுவை அனுப்புவதாக கூறியுள்ளது. https://athavannews.com/2025/1451566
Checked
Fri, 10/31/2025 - 23:27
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed