1 hour 6 minutes ago
அதைத்தானே ராசா நானும் சொன்னேன்
அதே கம்பி தான்...
1 hour 16 minutes ago
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சு 75ஆண்டு ஆக போகுது இந்தியா இதுவரை என்ன முன்னேற்றத்தை கண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................
அமெரிக்கன் ஒலிம்பிக் போட்டியில் 100பதக்கங்கள் வெல்லுகினம் இந்தியா வெறுமனே ஒரு பதக்கம்............இந்தியர்கள் எந்த விளையாட்டில் திறமையானவர்கள் சொல்லப் போனால் கிரிக்கேட் விளையாட்டை தவிற வேறு விளையாட்டில் இந்தியர்கள் பூச்சியம்.................ஹிந்தி தினிப்பதில் காட்டும் ஆர்வம்
பிள்ளைகளுக்கு விளையாட்டு அக்கடாமி திறந்து அதில் திறமையை காட்டும் வீரர்களை புகழ் பெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பலாமே................28கோடி இந்திய மக்கள் இரவு நேர உணவு இல்லாம தூங்கினமாம்................யூடுப்பில் மத்திய அரசு இந்தியாவை புகழ் பாட சிலர அமத்தி இருக்கினம்.....................பெரும்பாலான பணத்தை போர் தளபாடங்களை வேண்ட மற்றும் இராணுவத்துக்கே மத்திய அரசு பணத்தை ஒதுக்குது................
இந்தியாவே நாறி போய் கிடக்கு..........இந்தியா வளந்து வரும் நாட்டு பட்டியலில் எத்தனையாவது இடத்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்களை கற்பழிக்கும் நாடு என்று தான் ஜரோப்பியர்கள் சொல்லுவார்கள்.................
இந்தியாவை விட சின்ன நாடுகள் எவளவோ முன்னேற்றம் அடைந்து விட்டார்கள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப வரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வல்லரசு நாடாக ஆகிவிடும் என்று போலி விம்பத்தை கட்டு அவுட்டு விட்டார்களே இந்தியா வல்லரசு நாடா வந்திட்டா..............இந்தியர்களுக்கு வல்லரசுசின் அர்த்தம் தெரியாது.................இந்தியர்கள் ஒற்றுமை இல்லை அதனால் தான் சிறு முன்னேற்றத்தையும் இதுவரை அடைய வில்லை..............தமிழ் நாட்டு பிள்ளைகள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு தமிழ் நாட்டு பிள்ளைகளுக்கு ஊமை குத்து குத்தினம் ..................இந்தியா ஏற்றுமதி செய்வதை விட இறக்கு மதி தான் அதிகம்................டென்மார்க் சிறிய நாடு டென்மார்க் காசின் பெருமதிக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி தள்ளி நிக்கனும்
இந்தியா ஊழல் நாடு அன்டை நாடான சீனனின் நாட்டு வளர்சியை பார்த்தும் இந்தியர்களுக்கு சூடு சுரணை வர வில்லை.............மொத்தத்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அரசாங்க மருத்துவமனைகளை நேரில் போய் பாருங்கோ எப்படி வைச்சு இருக்கிறாங்கள் என்று..................
ஸ்கன்ரினேவியன் நாட்டு அரசியல் வாதிகள் ஊழல் செய்வதில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிடன் பின்லாந் நல்ல முன்னேற்றம் அடைந்து இருக்கு...............இந்த நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிசன் வைத்து இருப்பவர்கள் லோன் எடுக்கலாம்..................அப்படி பல விடையங்களில் ஸ்கன்ரினேவியன் நாடுகளுக்கு உலக அளவில் நல்ல பெயர் இருக்கு............இந்தியா வெறுமன குப்பை தொட்டி நாடு..............தமிழக மக்கள் ஒரு விசிட் அடிக்கனும் ஜரோப்பாவுக்கு மற்ற நாடுகளுக்கு அப்ப உணருவினம் இந்தியம் திராவிடம் என்ற போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி மறைக்க முடியாது இது தான் உண்மையும் கூட......................இந்தியாவை தவிர்த்து விட்டு உலகம் இயங்கும் சீனன் இல்லாம இந்த உலகம் இயங்காது.............இதில் இருந்து தெரிவது என்ன சீனனின் முன்னேற்றம் இந்தியாவை விட பல மடங்கு அதிகம்...........நீங்கள் பாவிக்கும் ஜபோனில் கூட சீனனின் பொருல் இருக்கும்............இப்படி சொல்ல நிறைய இருக்கு..............................................................
1 hour 25 minutes ago
இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை.
தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
1 hour 30 minutes ago
இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
1 hour 35 minutes ago
1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.
2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது.
3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு.
4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை.
5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை.
6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை.
நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும்.
இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.
1 hour 36 minutes ago
பாகம்3
துரையப்பா சுடப்பட்டது.
பாகம் 4
தமிழ் புதிய புலிகள்
1 hour 42 minutes ago
நீங்க வேறை... அவர் இந்த கம்பியை சொன்னவர்.
1 hour 46 minutes ago
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நிச்சயமாக இல்லை.
இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன்.
நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல.
5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு.
1 hour 49 minutes ago
2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன்.
மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்?
"தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின் பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?
உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது.
ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
1 hour 50 minutes ago
சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
1 hour 52 minutes ago
நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கினார்.
மிக விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு. 😂
ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
1 hour 58 minutes ago
5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்).
இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50?
ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்?
பிகு
எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
1 hour 59 minutes ago
அவள் ஒருநாள் வீதியோரம்
கூடை நிறைந்த கடவுளர்களை
கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்
போவோர் வருவோரிடம்
'கடவுள் விற்பனைக்கு'
என்று கத்திச் சொன்னாள்
அவள் சொன்னதை யாரும்
கவனித்ததாகத் தெரியவில்லை
பிள்ளை பாலுக்கு அழுதது
கடவுளர்களின் சுமை
அவளின் தலையை அழுத்தியது
'கடவுள் விற்பனைக்கு'
அவள் முகம் நிறைந்த புன்னகையுடன்
மீண்டும் கூவினாள்
கடவுள் மீது விருப்புற்ற பலரால்
கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்
அந்நாளின் முடிவில்
அவளின் வேண்டுதலை ஏற்றுக்
கடவுளர்கள் அனைவரும்
விலை போயினர்
தியா - காண்டீபன்
மார்ச் 29, 2024
காலை 7:20
2 hours 8 minutes ago
வருகை, கருத்துக்கு நன்றி.
இரெண்டு வாரம் இல்லை. மாதம்.
ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான்.
ஒரு ஊக கணிப்புத்தான்.
பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள்.
இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.
ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது.
பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
2 hours 8 minutes ago
சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள்
2 hours 10 minutes ago
நேரமிருக்கும் போது இந்த காணொளியைக் கேழுங்கள்.
2 hours 17 minutes ago
நேரம் கிடைக்கும் போது காங்கேசந்துறை முதல் தாமரை கோபுரம் வரை நான் எடுத்த படங்களையும் இணைக்கிறேன்.
வாசகர்கள் முடிவு செய்யட்டும்.
அதான் கொக்கதடில மாம்பழம் சிக்கீட்டே.
மரநாய் ஏன் கிடந்து உருளுது🤣
2 hours 17 minutes ago
இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள்?
2 hours 19 minutes ago
யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது.
நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள்.
நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
2 hours 20 minutes ago
தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார்.
https://thinakkural.lk/article/297513
Checked
Fri, 03/29/2024 - 13:27
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed