புதிய பதிவுகள்2

கட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை

1 hour 25 minutes ago
இரண்டு பேர் மட்டும் இருக்கும் ஒரு கட்சியை வைச்சுக் கொண்டு தேர்தலில் தனக்கு ஒரு சீற் வெல்லலாம் என்று முன்மாதிரி காட்டியிருக்கிறாரே ஒரு அரசியல் வாதி? யாரென்று தெரிகிறதா😎?

விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!

1 hour 38 minutes ago
யானை காதில் புகுந்த இலையான்….🤣 # பைத்தியம் புடிக்கும் திரிகளில் தரங்கெட்ட வசை மொழியில் எழுதி இன்பம் அடையும் மனிதர்களுக்கு, இலையான் பரவாயில்லை🤣.

லஞ்சீற்றுக்கு தடை - மாற்றீடாக வாழையிலை பயன்படுத்துவதென தீர்மானம்!

2 hours 27 minutes ago
15 Sep, 2025 | 05:43 PM பருத்தித்துறை நகரசபைக்கு உட்பட்ட உணவகங்களில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் லஞ்சீற் பயன்படுத்துவதை நிறுத்துவதென்று பருத்தித்துறை நகரசபையும், பருத்தித்துறை நகர வர்த்தகர்களும் இன்று திங்கட்கிழமை (15) தீர்மானித்துள்ளனர். பருத்தித்துறை நகரசபை மண்டபத்தில் நகரசபை தவிசாளர் வின்சன்டீபோல் டக்ளஸ் போல் தலைமையில் நகர வர்தகர்களுடன் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து உணவகங்களில் பொலித்தீன் பயன்படுத்துவதில்லையென்றும், அதற்கு பதிலாக வாழையிலையை பயன்படுத்துவதெனவும், எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து பொலித்தீன் பயன்பாட்டை முற்றுமுழுதாக நிறுத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை உணவகங்களில் உணவுப்பொதி செய்வதற்கு ஜனவரி முதலாம் திகதிவரை அனுமதிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/225154

விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!

2 hours 41 minutes ago
வணக்கம் வாத்தியார்அண்ணா, ஐயோ நீங்க வெற, நான் உங்கள் கருத்துக்கு பதிலாக எழுத வில்லை 🙏. சில திரிகளில் இலையான் மாதிரி மொய்க்கும் கூட்டத்துக்கு பொதுவாக எழுதினேன். நனைச்சு அடிச்சால் நாலு பக்கம் படும். கோஷம் போடுவபவர் கவனத்துக்கு செய்தி சென்றதில் சந்தோசம்.

திருச்சியில் தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய்யின் பிரசாரம்

3 hours 14 minutes ago
வழியெங்கும் கூட்டம்; Vijay பிரசாரத்தை பற்றி மூத்த பத்திரிகையாளர்கள் சொல்வது என்ன? தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி தனது தேர்தல் பிரசாரத்தை தவெக தலைவர் விஜய் தொடங்கி இருக்கிறார். விஜய்க்கு பெரும் கூட்டம் திரண்டது தமிழ்நாடு அரசியல் களத்தில் பேசுபொருளாகி உள்ளது. அதே நேரம், செல்வாக்கைக் காட்டும் விதத்தில் விஜய் பயணம் இருந்தாலும் அது வெற்றியைத் தருமா என்பது கேள்விக்குறி என சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். #Vijay #TVK #Tamilnadu இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

கோவையில் நாய் கடித்து இருவர் மரணம், எச்சரிக்கும் மருத்துவர்கள் - ரேபிஸ் தடுப்பூசி ஏன் அவசியம்?

3 hours 18 minutes ago
நாய்கடிக்கு சிகிச்சை பெற்றும் 40 நாட்களுக்கு பிறகு பலி - முறையாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவது எப்படி? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப்படம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை ராயப்பேட்டை பகுதியில் வெறிநாய் கடித்த பிறகு சிகிச்சை பெற்றும், 40 நாட்களுக்குப் பிறகு நோய் தாக்கி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? வெறிநாய்க் கடிக்கு தடுப்பூசிகளை எப்படி முறையாகச் செலுத்துவது? ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஏ. முகமது நஸ்ருதீன். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவரை கடந்த ஜூலை மாதம் 28-ஆம் தேதி மீர் சாகிப் பேட்டை மார்க்கெட் அருகே அவரது வலது காலில் வெறி நாய் ஒன்று கடித்திருக்கிறது. இதையடுத்து அவர் ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ராஜீவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ரேபிஸ் தொற்று உறுதியானதை அடுத்து தனியறையில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டுவந்த நிலையிலும் அவர் செப்டம்பர் 14-ஆம் தேதியன்று உயிரிழந்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மருத்துவர்கள் பரிந்துரைத்த இடைவெளியில் தடுப்பூசிகளைப் செலுத்தியதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். "அவருக்கு நாய் கடிபட்ட உடன் அன்று மாலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றோம். அவரது உடலில் இரண்டு பல் பதிந்திருந்தது. மருத்துவமனையில் காயத்தைச் சுற்றி ஊசி போட்டார்கள். முதல் ரேபிஸ் தடுப்பூசியும் போடப்பட்டது. அதற்குப் பிறகு அவர்கள் சொன்ன இடைவெளியில் தடுப்பூசிகளைப் போட்டுவந்தோம். நன்றாகக் குணமடைந்துதான் வந்தார்." என்று அவருடைய மருமகள் ஹர்ஷத் நிஷா பிபிசியிடம் தெரிவித்தார். இந்த நிலையில், கடந்த வாரம் புதன்கிழமையிலிருந்து சிக்கல்கள் ஆரம்பித்ததாகவும் அவர் விவரித்தார். "முதலில் முதுகில் வலி ஏற்பட்டது. அடுத்த நாள் இடுப்பு போன்ற பகுதிகளில் வலி அதிகரித்தது. அரிப்பும் ஏற்பட்டது. ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு காய்ச்சல் வந்தது." எனக் கூறினார். பின் வெள்ளிக்கிழமையன்று ரேபிஸ் நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டது என்கிறார் அவர். "அவரால் தண்ணீர் குடிக்க முடியவில்லை. அன்று இரவு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். சில மணி நேரங்களில் சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்துவிட்டார்" என ஹர்ஷத் நிஷா விவரித்தார். முகமது நஸ்ருதீனைப் பொறுத்தவரை அவர், நாய் கடித்த பிறகு செலுத்திக்கொண்டிருக்க வேண்டிய எல்லா தடுப்பு ஊசிகளையும் முறையாகப் போட்டுக்கொண்டதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இருந்தபோதும், அவருக்கு மரணம் நிகழ்ந்திருக்கிறது. இதில் எங்கே தவறு நடந்தது? இந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்தி வருவதாக தமிழக பொது சுகாதாரத் துறையின் இயக்குநர் டாக்டர் ஏ. சோமசுந்தரம் பிபிசியிடம் தெரிவித்தார். இது குறித்து பேசுகையில், "இந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்தவருகிறோம். வெறிநாய்க் கடியைப் பொறுத்தவரை, அன்றைய தினமே முதல் ஊசியைப் போட வேண்டும். பிறகு நான்கு ஊசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும். அவர்கள் அதனைச் சரியாகச் செய்ததாகச் சொல்கிறார்கள்." என சோமசுந்தரம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "ஒவ்வொரு ஊசியும் எப்போது போடப்பட்டது என்பது குறித்து பரிசோதிக்க வேண்டும். ஏதாவது ஒரு நாள் தவறியிருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். அவருக்கு வேறு ஏதாவது உடல் நலப் பிரச்னைகள் இருந்தனவா என்பதையும் அறிய வேண்டும்." என்றார். "ஒருவேளை தடுப்பூசிகள் சரியாகப் போடப்பட்டிருந்தால் இப்படி நிகழ்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. இருந்தாலும் விசாரணையின் முடிவில்தான் விவரங்கள் தெரியவரும்" என பிபிசியிடம் கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தமிழ்நாட்டில் இந்தாண்டு இதுவரை ரேபிஸ் நோயால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 2025-ஆம் ஆண்டில் ரேபிஸ் நோயால் ஏற்பட்டிருக்கும் 22வது மரணம் இது. ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசிகளைப் போட்ட பிறகும் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் இந்த மரணம், இந்த தடுப்பூசிகளை எப்படிப் போட்டுக்கொள்ள வேண்டும், எந்தக் கால இடைவெளியில் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டியிருக்கிறது. நாய்க் கடித்த பின் எப்படி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்? ஒருவரை நாய் கடித்த பிறகு, சரியான முறையில் சிகிச்சை மேற்கொண்டால் ரேபிஸ் நோய் தாக்குதலில் இருந்து முழுமையாகத் தப்பலாம். அதில் தவறுகள் நிகழும்பட்சத்தில் நோய் தாக்கும் வாய்ப்புகள் ஏற்படுகிறது என்கிறார் ரேபிஸ் தடுப்பு மருந்து உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் குன்னூரில் உள்ள பாஸ்டர் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இந்தியாவின் முன்னாள் இயக்குநரான பி. சேகர். நாய்க் கடிகளின் வகை, சிகிச்சை முறை என ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் அவர். இது குறித்து பேசிய அவர், "பொதுவாக நாய்களின் தாக்குதலை மூன்று வகையாகப் பிரிக்க வேண்டும். முதல் வகை வெறும் நக்குதல். நாய்களின் எச்சிலில்தான் ரேபிஸ் வைரஸ் இருக்கும் என்றாலும், உடலில் திறந்தவெளி காயங்கள் ஏதும் இல்லாத நிலையில், நாய்கள் நக்குவதற்கு சிகிச்சை தேவையில்லை." என்றார். இரண்டாவது ரத்தம் இல்லாத கீறல். இதற்கு கட்டாயம் ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும் எனக் கூறும் அவர், "மூன்றாவது, கடுமையான காயங்கள். இதற்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதோடு, இம்யூனோகுளோபுலின்களையும் செலுத்த வேண்டும்" என்கிறார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நாய் கடித்த உடன், காயத்தை ஓடும் நீரில் கழுவ வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தல். மேலும் நாய் கடித்ததும் செய்யவேண்டிய முதலுதவி குறித்தும் விளக்கினார் பி. சேகர். நாய் கடித்த உடன், காயத்தை ஓடும் நீரில் கழுவிவிட்டு உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றார் அவர் மேலும், "ரேபிஸ் தடுப்பூசியைப் பொறுத்தவரை, தோலுக்கு உள்ளே போடுவதாக இருந்தால் கடித்த தினம், மூன்றாவது நாள், ஏழாவது நாள், 28வது நாள் என நான்கு ஊசிகளைச் செலுத்த வேண்டும். தசைக்குள் செலுத்துவதாக இருந்தால் கடித்த தினம், மூன்றாவது நாள், ஏழாவது நாள், 14வது நாள், 28வது நாள் என ஐந்து ஊசிகளைச் செலுத்த வேண்டும்." என்றார். "மூன்றாவது வகை காயம் அதாவது மிகப் பெரிய காயமாக இருந்தால், கடிபட்ட இடத்தில் இம்யூனோகுளோபுலின்களைச் செலுத்த வேண்டும். இதை முதல் நாளே செலுத்த வேண்டும். இதற்குப் பிறகு தொடர்ச்சியாக ரேபிஸ் தடுப்பூசிகளைப் போட வேண்டும். இவற்றையெல்லாம் சரியாகச் செய்தால்தான் வெறிநாய்க் கடியால் ஏற்படும் ரேபிஸைத் தடுக்க முடியும்" என்கிறார் பி. சேகர். ரேபிஸ் வைரஸைப் பொறுத்தவரை, மனித உடலில் ஒரு மணி நேரத்தில் முன்று மில்லி மீட்டர் தூரத்திற்கு நகரும் தன்மையுடையது. அந்த வைரஸ் மத்திய நரம்பு மண்டலத்தைச் சென்றடைவதற்குள் இந்த தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் சேகர். தெரிவித்தார். மேலும், எல்லா நாய் கடி சம்பவங்களையும் வெறி நாய் கடி சம்பவமாகவே அணுக வேண்டும் என்கிறார். தமிழ்நாட்டின் பொது சுகாதாரத் துறை அளிக்கும் தகவல்களின்படி, மாநிலத்தில் 2024-ஆம் ஆண்டில் மட்டும் ரேபிஸ் நோயால் 43 பேர் இறந்துள்ளனர். 2023-ஆம் ஆண்டில் 121 பேர் இறந்துள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpvlkyzx7yno

கட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை

3 hours 20 minutes ago
அந்த இரண்டு பேர்... சுமந்திரனும், சிவஞானமும்தான். 😂 அவர்கள் மாறி, மாறி... முதுகு சொறிஞ்சு கொண்டு இருக்க, சோக்காக இருக்கும். 🤣

திலீபனின் 38வது நினைவு தினம் அனுஷ்டிப்பு

3 hours 22 minutes ago
வேலணையில் “தியாக தீபம்” திலீபனின் நினைவேந்தல் 15 Sep, 2025 | 01:44 PM தியாக தீபம் திலீபனின் 38வது நினைவேந்தலின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று (15) காலை தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் யாழ். தீவகம் வேலணை வங்களாவடி சந்தியில் அமைந்துள்ள பொது நினைவுத்தூபியில் நடைபெற்றன. இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். https://www.virakesari.lk/article/225134

பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?

3 hours 31 minutes ago
🤣 அந்த வீடியோவை இங்கே இணைப்பதில் உங்களுக்கு என்ன தயக்கம்? "ஞாபகம்" என்பது கொஞ்சம் சிக்கலான விடயம். நீங்கள் கனவில் கண்டது கூட "ஞாபகம்" ஆக பின்னர் தெரியக் கூடும்!

இலங்கை மத்திய வங்கி 75 ஆம் ஆண்டு நிறைவு : புதிய 2000 ரூபா நினைவு நாணயத் தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

3 hours 31 minutes ago
புதிய 2 ஆயிரம் ரூபா தாள் குறித்து இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு! 15 Sep, 2025 | 12:29 PM இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதனை நினைவுகூரும் முகமாக ஞாபகார்த்த 2 ஆயிரம் ரூபா நாணயத்தாள் சுற்றோட்டத்திற்கு விடப்படுவது பற்றிய பொதுமக்களுக்கான விழிப்புணர்வு குறித்த அறிக்கையொன்றை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை மத்திய வங்கி அதன் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி அன்று 2000 ரூபா சுற்றோட்டத்திற்கு விடப்படும் நாணயத்தாளை வெளியிட்டுள்ளது. புதிய நாணயத்தாளை தங்குதடையின்றி ஏற்றுக்கொள்வதையும் விநியோகிப்பதையும் வசதிப்படுத்தும் பொருட்டு, உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் அவற்றின் பணம் கையாளும் இயந்திரங்களை அளவமைக்கும் செயன்முறையை முன்னெடுக்கின்றன. இச் செயன்முறையின் முன்னேற்றத்திற்கு ஏற்ப, புதிய நாணயத்தாள் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் ஊடாக படிப்படையாக சுற்றோட்டத்திற்கு விடப்படும். மாறுதலடைகின்ற இக்காலப்பகுதியில் பொதுமக்களின் உத்துழைப்பை இலங்கை மத்திய வங்கி மெச்சுவதுடன் அளவமைக்கும் செயன்முறை நிறைவடைந்தவுடன் புதிய நாணயத்தாள் அனைத்து வங்கிகள் மூலமும் தங்குதடையின்றிப் பயன்படுத்தப்படுமெனவும் உறுதியளிக்கின்றது. இது குறித்த விபரங்களை அறிந்துகொள்ள, நாயணத்திணைக்களத்துடன் தொடர்பு கொள்ளுமாறும், மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கோ அல்லது மத்திய வங்கியின் சமூக ஊடகத்தளங்களை பின்தொடருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/225128

குருக்கள்மடம் மனித புதைகுழி அகழ்வுப்பணி அடுத்தவாரம் ஆரம்பம் - 29 இலட்சம் ரூபா ஒதுக்கீடு

3 hours 40 minutes ago
குருக்கள்மடம் மனித புதைகுழி அகழ்வுப்பணி அடுத்தவாரம் ஆரம்பம் - 29 இலட்சம் ரூபா ஒதுக்கீடு Sunday, September 14, 2025 செய்திகள் மட்டக்களப்பு குருக்கள்மடம் மனித புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகளை அடுத்த வாரம் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக 29 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்தார். களுவாஞ்சிக்குடி நீதவான் விடுத்த உத்தரவிற்கமைய குருக்கள்மடம் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார். குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பான விசாரணை மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அறிக்கை விடுத்திருந்தது. அதற்கமைய, எதிர்வரும் 18ஆம் திகதி களுவாஞ்சிக்குடி நீதவானிடம் இது தொடர்பான விசாரணை அறிக்கைகள் சமர்பிக்கப்படவுள்ளதாக அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த அகழ்வுப் பணிகள் தொடர்பான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் ஆராய்வதற்காக கடந்த வியாழக்கிழமை காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் அதிகாரிகள் விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது இவர்கள் ஏன் இப்போது அவசரப் படுகின்றார்கள்..... என்பது புரியவில்லை ...என்பி பி அரசின் நீதி அமைச்சர் கர்சன் நாணயக்காரா ..அமெரிக்கா போய் வந்தவுடன் குருக்கள் மடம் போனவர்...இப்ப இந்த முசுலிம் அமஐச்சரும் அவசரமாக காசு கொடுக்கிறார்....செம்மணி விடையத்திற்கு பின்பு ...புட்டும் கிரிபத்தும் ஒன்றாகி விட்டினமோ

இலங்கை, வங்கதேசம் வரிசையில் நேபாளமா? - இந்தியாவின் அண்டை நாடுகளில் என்ன நடக்கிறது?

3 hours 46 minutes ago
அவரின் நடவடிக்கைகள் இதுவரை அவர் ஊழல் சம்பந்தமாக தொடர்பு பட்டதாக ஏதானும் ஆதாரங்கள் இருக்கின்றனவா. மேலும் ஊழல்கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதையே தவிர்த்து வருகிறார். அவர்நினைத்தால் ஏதாவது ஒரு ஊழல்கட்சியுடன் கூட்டணியை அமைத்து பெருந்தொகைப்பணத்தையும் பெற்று குறிப்பிடத்தக்க அளவு உறுப்பினர்களை சட்டமன்றத்தில் பெற்றிருக்கலாம். எதிர்காலத்தில் ஊழல் செய்யக்கூடியவராக உங்களால் நம்பப்படும் அவர் ஏன் இப்போது கூட்டணி அதை;து பெருந்தொகைப்பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது?

எதிரிகளை சமாளிக்க இஸ்லாமிய நாடுகள் ராணுவ கூட்டணி உருவாக்குகின்றனவா?

3 hours 46 minutes ago
பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, உச்சிமாநாட்டிற்கு முன்பாக கத்தார் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினர். கட்டுரை தகவல் சந்தீப் ராய் பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அரபு நாடுகளிடையே நேட்டோ போன்ற ஒரு ராணுவ கூட்டணியை உருவாக்கும் முயற்சி வேகமெடுத்து வருவதாகத் தெரிகிறது. கத்தாரில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் குறித்து விவாதிக்க அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் தோஹாவில் இன்று அவசர உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக நேற்று நடந்த கூட்டத்தில் அந்தந்த நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்தநிலையில் இன்று நடக்கும் மாநாட்டில் அந்நாட்டின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இரான் அதிபர் மசூத் பெஷஷ்கியன், இராக் பிரதமர் முகமது ஷியா-அல் சூடானி மற்றும் பாலத்தீன அதிகாரசபை தலைவர் மஹ்மூத் அப்பாஸ் உட்பட பல உயர்மட்ட தலைவர்களும் இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். இதற்கிடையே, நேட்டோ போன்ற ஒரு ராணுவ கூட்டணியை உருவாக்க எகிப்து ஒரு திட்டத்தை முன்மொழிந்திருக்கிறது. "எகிப்தின் முன்மொழிவு நேட்டோ போன்ற ராணுவ கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று கோருகிறது. அதன் தலைமைப் பொறுப்பு 22 அரபு லீக் நாடுகளிடம் சுழற்சி முறையில் ஒப்படைக்கப்படும். அதன் முதல் தலைவர் எகிப்தை சேர்ந்தவராக இருப்பார்" என நேஷன் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது தி நியூ அரபு ஊடக செய்தியின்படி, இதுபோன்ற திட்டம் முதன்முதலில் 2015-ல் முன்வைக்கப்பட்டது. அப்போது யேமனில் உள்நாட்டுப் போர் தொடங்கி ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் சனாவை கைப்பற்றினர். மறுபுறம் தோஹா மீதான தாக்குதலுக்குப் பிறகு துருக்கி மீதான பதற்றமும் அதிகரித்துள்ளது. கத்தாரில் செய்தது போல இஸ்ரேல் அதன் கண்மூடித்தனமான தாக்குதல்களை அதிகரிக்கக்கூடும். அது இஸ்ரேலையும் முழு பிராந்தியத்தையும் பேரழிவை நோக்கித் தள்ளக்கூடும் என துருக்கி பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் எச்சரித்துள்ளார். எகிப்தின் திட்டம் என்ன? பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, செப்டம்பர் 9-ஆம் தேதி தோஹாவில் உள்ள கட்டடத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. எகிப்தின் முன்மொழிவில் ராணுவம், விமானப்படை மற்றும் கமாண்டோ பிரிவுகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதுடன் பயிற்சி, தளவாடங்கள் மற்றும் ராணுவ அமைப்புகளை ஒருங்கிணைப்பதும் அடங்கும். ராணுவ படையை பயன்படுத்துவதற்கான அனுமதி உறுப்பு நாடுகள் மற்றும் ராணுவத் தலைமையுடன் கலந்தாலோசித்து வழங்கப்படும். லெபனான் ஊடகமான அல் அக்பரின் கூற்றுப்படி, அத்தகைய ராணுவக் கூட்டணிக்கு 20,000 வீரர்களை வழங்குவதாக எகிப்து தெரிவித்துள்ளது. எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி இது குறித்து பல நாடுகளுடன் பேசியுள்ளார். தோஹா உச்சிமாநாட்டில் இந்த திட்டம் குறித்தும் விவாதம் நடத்த வாய்ப்பு உள்ளது. அதே நேரம் இது போன்ற ராணுவ கூட்டணி இந்த பிராந்தியத்தில் முன்பும் இருந்திருக்கிறது. அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே பாக்தாத் ஒப்பந்தம் என அறியப்பட்ட Central Treaty Organisation என்ற ராணுவ கூட்டணி 1955 முதல் 1979 வரை நீடித்தது. கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அரபு நாடுகளிடமிருந்து கடுமையான எதிர்வினை வந்துள்ளன, இந்த பிராந்தியத்தில் இஸ்ரேலுடன் ராஜிய உறவை கொண்டுள்ள ஒரே நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸும் இந்த தாக்குதலை கண்டித்துள்ளது இராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானியும் இஸ்லாமிய ராணுவ கூட்டணியை உருவாக்க அழைப்பு விடுத்துள்ளார். காஸா மற்றும் கத்தாரில் இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதல்களுக்கு கூட்டு பதிலடி அவசியம் என அவர் கூறியதாக துருக்கி அரசு ஊடகமான TRT World தெரிவித்துள்ளது. இஸ்ரேலை தண்டிக்க வேண்டும் எனக் கூறும் கத்தார் பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, உச்சி மாநாட்டை ஒட்டி இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ், கத்தார் பிரதமரை சந்தித்தார். "சர்வதேச அமைப்பு தங்களின் இருதரப்பட்ட நிலைப்பாட்டை புறந்தள்ளிவிட்டு, இஸ்ரேலை தண்டிக்க வேண்டிய நேரமிது" என திங்கட்கிழமை அன்று நடைபெறும் உச்சி மாநாட்டுக்கு முன்னதாக கத்தார் பிரதமர் கூறியதாக பிபிசி பெர்ஷிய சேவை குறிப்பிட்டுள்ளது. "எங்களின் சகோதரத்துவ மக்களான பாலத்தீனத்தின் மீது போர் தொடுத்து, அவர்களின் நிலத்தை அபகரிக்க நினைக்கும் இஸ்ரேல் எண்ணம் பலிக்காது" எனவும் அவர் கூறியுள்ளார். கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி தோஹா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு கத்தார் ஏற்கனவே கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தது. மேலும் தற்போது எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், எந்த விதமான சூழலை எதிர்கொள்ளவும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. தற்போது இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தோஹா தாக்குதல் தொடர்பாக தனது கடும் கண்டனத்தை தெரிவித்தார். ஆனால் அதே நேரத்தில் இது அமெரிக்கா இஸ்ரேல் இடையிலான பலமான உறவை பாதிக்காது எனவும் கூறினார். பட மூலாதாரம், Israel Prime Minister's Office படக்குறிப்பு, அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தற்போது இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் நேட்டோ மாதிரியான ஒரு கூட்டணி உருவாவது சாத்தியமானதா? அரபு நாடுகளிடையே நேட்டோ போன்ற ராணுவக் கூட்டணியை உருவாக்கும் யோசனை நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில், அது செயல்பாட்டுக்கு வரும் என்பது குறித்து நிபுணர்களுக்கு அதிக நம்பிக்கை இல்லை. ''அரபு நேட்டோ தொடர்பான யோசனை முன்பே விவாதிக்கப்பட்டது. செளதி அரேபியா அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. பாகிஸ்தானின் முன்னாள் ராணுவத் தலைவர் ரஹீல் ஷெரீப் கூட அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் அது அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை'' என்கிறார் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் Nelson Mandela Centre for Peace and Conflict Resolution மையத்தை சேர்ந்த பிரேமானந்த் மிஸ்ரா. தொடர்ந்து இது பற்றி விளக்கிய அவர், ''அனைத்து நாடுகளின் பாதுகாப்பு நலன்கள் மிகவும் வேறுபட்டவை, அவற்றுக்கிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவது கடினமான வேலை. உதாரணமாக, சௌதி அரேபியாவும் இரானும் தங்கள் வேறுபாடுகளை களைந்து ஒன்றிணைய முடியுமா? ஏனெனில் ராணுவக் கூட்டணி உருவாக வேண்டுமானால், உளவுத்துறை பகிர்வும் நடைபெறும்'' என்றார். எனினும் சௌதி அரேபியா மற்றும் இரான் இடையிலான உறவை இயல்பாக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. "இந்தத் திட்டம் எகிப்திலிருந்து வந்துள்ளது, அது செயல்படுத்தும் நிலையில் உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். மேலும் இதுபோன்ற எந்தவொரு குழுவையும் மேற்கத்திய நாடுகள், குறிப்பாக அமெரிக்கா மற்றும் நேட்டோ செயல்படுத்த அனுமதிக்குமா?" என்கிறார் பிரேமானந்த் மிஸ்ரா. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மேற்கு ஆசிய ஆய்வு மையத்தின் உதவிப் பேராசிரியரான முதாசிர் கமர், அரபு நாடுகள் அரபு லீக், OIC, GCC என பல அமைப்புகளைக் கொண்டுள்ளன என்கிறார். இது தவிர, செளதி அரேபியா தலைமையில் பயங்கரவாத எதிர்ப்பு ராணுவ கூட்டமைப்பும் உள்ளது. ஆனால் இங்கு சிக்கல் என்பது அரபு நாடுகளுக்கு இடையே உள்ள பரஸ்பர வேறுபாடுகளை கையாள்வதே. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். https://www.bbc.com/tamil/articles/cdxqkvq590ro

பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?

4 hours 23 minutes ago
கருனா அந்த உடலைப் பார்த்ததும் “மோடன்கள்” என்று கூறியதை வீடியோவுடன் பார்த்த ஞாபகம் உள்ளது. வேறு பலரும் இதனைப் பார்த்திருப்பார்கள் என நம்புகிறேன்.

கட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை

4 hours 25 minutes ago
இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக செயற்பட்ட தப்பியுள்ள சிலர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என தமிழரசு கட்சியின் பிரதி பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அம்பாறை ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று (14) இடம்பெற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விளக்கம் கோரி எழுதிய கடிதங்கள் மேலும் தெரிவிக்கையில், கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக இதன்போது பேசப்பட்டது. ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆகிய மூன்று தேர்தல்கள் சம்மந்தமாக கட்சியின் உடைய தீர்மானங்களை மீறி செயற்பட்டவர்கள் அனைவருக்கும் எதிராக விளக்கம் கோரி கடிதம் அனுப்பபட்டுள்ளன. நேரடியாக எங்கள் கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்கள் ஏற்கனவே கட்சியில் இருந்து விலக்கப்பட்டிருக்கின்றனர். அதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட சிலர் எங்கள் கவனக்குறைவால் தப்பியுள்ளனர். அவர்களுடைய பெயர்களும் சொல்லப்பட்டுள்ளது. அவர்களும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள். விளக்கம் கோரி எழுதிய கடிதங்களுக்கு சிலர் பதில் எழுதாமல் இருக்கின்றனர். சிலர் பதில் எழுதி இருக்கின்றனர். ஆகவே பதில் எழுதாதவர்கள் அவர்களுக்கு கொடுப்பதற்கு விளக்கம் எதுவும் இல்லை என நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. ஆனாலும் அதை அவர்களுக்கு அறிவிக்கின்றோம். அதற்கு மேலதிகமாக விளக்கம் எழுதப்படாவிட்டால் நடவடிக்கை எடுப்போம். கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக நடவடிக்கை அதேவேளை விளக்கம் எழுதியவர்கள் தொடர்பாக அவர்களது விளக்கத்தை ஆராய்ந்து அவர்களை கட்சியின் ஒழுக்காற்று முறைமைக்குள்ளே அவர்கள் குற்றம் செய்தவர்களாக இருந்தால் குற்றவாளிகளாக காணப்பட்டு ஒழுக்ககாற்று நடவடிக்கை மூலமாக அவர்களை கண்காணிப்பது அல்லது ஒரு சந்தர்ப்பத்தை கொடுப்பதாக இருந்தால் கொடுப்பது என்ற கருத்துக்கள் நிலவி இருக்கின்றன. அது தொடர்பாக ஒவ்வொரு விடயங்களை எடுத்து வெளிப்படுத்துவோம். ஆகவே கட்சியின் கட்டுப்பாடு சம்மந்தமாக மிக தெளிவான அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையிலே கட்சி தீர்மானத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றவர்களுக்கு எதிராக கட்சி உரிய நடவடிக்கை எடுக்கும் என தீர்மானித்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார் Tamilwinகட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரி...இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக செயற்பட்ட தப்பியுள்ள சிலர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என தமிழரசு கட்சியின் பிரத...

என்னை மிரட்ட முடியாது.. தன்மானமே முக்கியம்! கைகூலிகளுக்கு முடிவு கட்டப்படும்.. இறங்கி அடித்த எடப்பாடி

4 hours 33 minutes ago
என்னை மிரட்ட முடியாது.. தன்மானமே முக்கியம்! கைகூலிகளுக்கு முடிவு கட்டப்படும்.. இறங்கி அடித்த எடப்பாடி Mani Singh SUpdated: Monday, September 15, 2025, 21:24 [IST] சென்னை: என்னை யாரும் மிரட்ட முடியாது, ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அமித்ஷாவை சந்திப்பதற்காக டெல்லி பயணம் மேற்கொள்வதாக தகவல் வெளியான நிலையில் அதற்கும் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். தர்மபுரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்த நிலையில் மழை பெய்யும் jiஎன வானிலை மையம் அறிவுறுத்தியதால் அந்த பயணத்தை மாற்றி அமைத்தோம். அதற்கு அமித்ஷாவை சந்திப்பதற்காக சுற்றுப்பயணம் மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகி விட்டது என எடப்பாடி கூறுகிறார். 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜக மேலிடம் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்து இருந்தார். இந்த கெடு இன்றுடன் முடிந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற அவர், அதிமுக ஒன்றிணையும் விவகாரத்தில் புரிய வேண்டியவர்களுக்குப் புரிய வேண்டும் என்று கூறியிருந்தார். ஏற்கனவே டெல்லியில் அமித்ஷாவை சந்தித்ததாக செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில், நாளை எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல இருப்பதாக வெளியான தகவல் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓ பன்னீர்செல்வத்தை சேர்க்க முடியாது இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, ஓ பன்னீர் செல்வத்தை கட்சியில் சேர்க்க முடியாது என்பதை மறைமுகமாக கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- தருமபுரி மாவட்டத்தில் நான் வரும் 15 ஆம் தேதி சுற்றுப்பயணத்தை வைத்திருந்தோம். ஆனால் அன்று மழை பெய்யும் என வானிலை மையம் அறிவுறுத்தி இருந்தது. இதனால் அந்த தேதியில் சுற்றுப்பயணத்தை ஒத்தி வைத்தோம். ஆனால் அதற்குள் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை ஒன்றிணைக்க, இணைப்பதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க டெல்லி செல்ல இருப்பதாக செய்திகளை வெளியிட்டு விட்டார்கள். கைக்கூலிகளுக்கு முடிவு கட்டப்படும் அப்படி ஒரு நாளும் நான் செய்ய மாட்டேன். எனக்கு ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம். கைக்கூலிகளை வைத்து ஆட்டம் போட்டனர். அவர்கள் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைக்கூலிகளுக்கு விரைவில் முடிவு கட்டப்படும். அதிமுகவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. சிலர் அதிமுகவை அழிக்க பார்த்தார்கள். ஆனால் அது முடியவில்லை. அதிமுக அலுவலகத்தை உடைத்தவர்கள் இப்போது அதிமுகவில் சேர வேண்டும் என துடிக்கிறார்கள். துணை முதல்வர் பதவி கொடுத்தும் திருந்தவில்லை. அதிமுக ஆட்சியை கவிழ்க்க 18 பேரை அழைத்துக்கொண்டு சென்றார். எவர் ஒருவர் துரோகம் செய்தால் அவர் நடுரோட்டில் தான் நிற்க வேண்டும்.. இவ்வாறு அவர் பேசினார். அதிமுக அலுவலகத்தை அடித்து உடைத்தவர்களை கட்சியில் சேர்க்க முடியுமா? என்றும் அதிமுக ஆட்சியை கவிழ்க்க 18 பேரை கடத்தி செனறார் அவர்களையும் சேர்க்க முடியுமா? என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பதன் மூலம் ஓ பன்னீர் செல்வத்தை கட்சியில் மீண்டும் இணைக்க வாய்ப்பே இல்லை என்பதை எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக பேசியிருப்பதை காட்டுவதை அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். https://tamil.oneindia.com/news/chennai/no-one-can-intimidate-me-self-respect-matters-more-than-power-edappadi-k-palaniswami-fires-back-735891.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி எடப்பாடி அமித்ஷா இடையே லடாய் போல உள்ளது.
Checked
Mon, 09/15/2025 - 19:37
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed