20 hours 18 minutes ago
நீதி:- ஆண்களுக்கும் சமைக்க தெரிந்திருக்கவேண்டும்!
20 hours 26 minutes ago
கம்போடியா - தாய்லாந்து யுத்தம் நிறுத்தக் கோரி களனி ரஜமஹா விகாரையில் சத்தியாக்கிரகம்! 16 Dec, 2025 | 10:33 AM கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையில் நிலவும் யுத்தத்தை உடனடியாக நிறுத்தக் கோரி, வணக்கத்துக்குரிய ஓமல்பே சோபித தேரர் தலைமையில் 250க்கும் மேற்பட்ட பிக்குகள் செவ்வாய்க்கிழமை (16) களனி ரஜமஹா விகாரையில் சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை நடத்தினர். இந்த சத்தியாக்கிரகத்தில் கம்போடியாவைச் சேர்ந்த வணக்கத்துக்குரிய காஷ்யப தேரர் தலைமையிலான சுமார் 50 பிக்குகளும் கலந்துகொண்டனர். கம்போடிய காஷ்யப தேரர் சிங்களம், ஆங்கிலம் மற்றும் கம்போடிய மொழிகளில் கருத்துக்களை வெளியிட்டார். இதன்போது இங்கு கருத்துத் தெரிவித்த வணக்கத்துக்குரிய ஓமல்பே சோபித தேரர், இலங்கையில் அண்மையில் வீசிய சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே முதன்மையானது என்றும், இந்த நேரத்தில் அரசியல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். குற்றவாளிகளைத் தேடுவதை விட, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே இப்போதைய முக்கிய விடயம் என்றும் தேரர் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/233484
21 hours 14 minutes ago
சிவபெருமானுக்கே முதுகுல ரெண்டு அடித்தான் விழுந்தது, இந்த மனுஷன் தலையில கோடாரியில கொத்து வாங்கி இருக்கு.
21 hours 38 minutes ago
தமிழீழ நடைமுறையரசின் சிற்பக்கலை செய்யும் குறிப்பிட்ட பிரிவு ஆல் மரத்தில் வடிக்கப்பட்ட ஓர் சிற்பம். இதே போன்ற சிற்பம் ஒன்று கட்டுநாயக்கா கரும்புலிகளுக்கும் தாக்குதல் முடிந்து 24 மணிநேரத்திற்குள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதே மாதிரி ஆறு சிற்பங்கள் புலிகளின் காலத்தில் வடிக்கப்பட்டன .
21 hours 47 minutes ago
.
21 hours 54 minutes ago
தரைக்கரும்புலி லெப். கேணல் போர்க் அவர்களின் சிலை வவுனியா 2003 (படிமம் கிடைக்கப்பெறவில்லை)
22 hours 2 minutes ago
வீரவணக்க நினைவாலயம் சத்தியநாதன் சிலையடி, கம்பர்மலை, வல்வெட்டித்துறை (இதனது நல்ல நிலையிலுள்ள படிமம் ஒன்றை ஆவணப்படுத்த தந்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்) இது லெப். சங்கர் அவர்களின் வீட்டிலிருந்து சில மீட்டர்கள் தொலைவில் 1980களின் பிற்பகுதியில் கட்டப்பட்டது ஆகும். இச்சிலையில் பெயரால் அப்பகுதி "சத்தியநாதன் சிலையடி" என்றே வழங்கப்பட்டு வந்தது. சிதிலமடைந்த நிலையிலுள்ள மூல நினைவாலயம் 2017ம் ஆண்டு இதனது மூல நினைவாலயத்தின் எஞ்சியுள்ள பகுதிகளில் சுடரேற்றப்பட்டுள்ளதைக் காண்க. அந்த பெட்டிகளுக்குள் முந்தைய காலத்தில் திருவுருவப்படங்கள் (லெப். சங்கர், கப்டன் பண்டிதர் மற்றும் வேறுசிலர்) வைக்கப்பட்டிருந்தனவாம். 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உள்ளூர் இளைஞர்களால் பழைய வடிவத்திலேயே சிதிலமடைந்த பகுதிகள் சரிசெய்யப்பட்ட பின்னர்: "மாவீரர்களின் நினைவாலயம்" என்ற சொற்றொடர் பழையதிலையும் எழுதப்பட்டிருந்தது.
22 hours 18 minutes ago
தீருவில் நினைவுத்தூண் ~90களின் முற்பகுதி இந்திய சிறிலங்காக் கூட்டுப் படைகளின் நயவஞ்சகத்திற்கு இலக்காகி தீருவிலிலே காவியமான 12 வேங்கைகளின் நினைவாக தவிபுவினரால் எழுப்பப்பட்ட சின்னம்.... ''கீழே நிற்கும் மனிதரின் உயரத்தை வைத்து இதன் உயரத்தை கணக்கிடுக''
23 hours 43 minutes ago
என்ன நடக்குது இங்க .. புட்டை ஒருவரும் தொடுவதற்கில்லை சிவப்பு பச்சரிசி ஊறல் இடியல் ஒரு வறுவல் மூங்கில் குழலில் கடைசி அவியல் சுடுதல் உண்டு திரியாய்ப்பாரை கருவாடு பொரியல் உண்டு ஊர்க்கோழி முடடையுடன் சின்ன வெங்காயமும் பிஞ்சு மிளகாயும் இவற்றுடன் முதல்நாள் வைத்த கரைவலை மீன் அரைத்த குழம்பு சொர்க்கம் ஐயா .. என்ன நடக்குது இங்க .. புட்டை ஒருவரும் தொடுவதற்கில்லை
23 hours 47 minutes ago
புட்டு கேட்ட கணவனை போட்டு தள்ளிய மனைவி கத்தியுடன் சரண்..... அட ..இதென்ன கொடுமை புட்டு...புட்டுக்கேட்ட கணவரை வெட்டிச் சாய்த்தாள் மனைவி...என்றுதான் செய்தி படித்திருப்போம்... இதென்ன புட்டுக்கேட்ட ..கணவனையே வெட்டிச்சாய்க்கும் மனைவி என்றால் ...இனி எம்மினத்தில் யாரப்பா பெண்..எடுப்பான்..
1 day ago
கல்லு நாட்டல் இதுக்கு தேவைப்படாதுங்க...இன்னும் மூன்று ..நாலு அமெரிக்கன் பிளேன் வத்து போக...கல்லில்லாமல் ரன்வே நீட்டப்படும்....
1 day 1 hour ago
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நிழலி🎉
1 day 1 hour ago
இது உக்ரேன் போர் பற்றிய திரி. இங்கே உக்ரேன் அரசியலையும் தமிழர் அரசியலையும் சேர்த்து பிசைவதால் எந்த பலனும் இல்லை. உலகின் ஒவ்வொரு அரசியலையும் நிறுத்தி நிதானித்து முற்றுப்புள்ளியுடன் விவாதிக்க முயற்சி செய்யுங்கள். உக்ரேனுக்காக ஐரோப்பிய ஒன்றியம் நிற்பதால் மட்டுமே...உக்ரேன் இன்னும் நிமிர்ந்து நிற்கின்றது.இது தான் இங்கு பேசு பொருள். இனி மேலைத்தேய ஊடகங்களில் உக்ரேன்/செலென்ஸ்கி போன்ற செய்திகள் தலைப்பு செய்தியாக வராது என நம்புகின்றேன்.இராணுவ அடி பலம் மட்டுமல்ல அரசியல் அடியும் பலமாக வீழ்ந்து விட்டது போல் தெரிகின்றது. டொன்பாஸ்?????? 😁
1 day 2 hours ago
புட்டினால் உலகிற்கே கேடு என்பது தெரிந்தது தானே. இலங்கை தமிழர்கள் சாப்பிடுகின்ற புட்டு சாப்பாடு இரண்டு தடவைகள் அவிக்கின்றார்கள் 🙄 என்பதை கவனத்தில் கொண்டு வந்தீர்கள் நன்றி.
1 day 2 hours ago
இறங்க வேண்டிய இடம் .ஏரங்குடி ஏறங்கடி ஏறங்கடி ஏறங்கடி
1 day 2 hours ago
உக்ரைனுக்கு பக்கத்து வீட்டுகாரனாக ஐரோப்பிய யூனியன் உள்ளது. அது தான் உக்ரைன் மனதுக்கு பிடித்த பக்கத்து வீட்டுகாரன். அடுத்த பக்கத்து வீட்டு கொள்ளைகாரன் ரஷ்யா இல்லை. உக்ரைனியர்களோடு பேசிபார்க்கும் போது தெரியவரும் எவ்வளவுக்கு ரஷ்யாவை புடினை வெறுக்கிறார்கள். ஈழதமிழ் ரஷ்ய விசுவாசிகளே ரஷ்யா நிராகரித்து மேற்குலகில் வாழ்வை இனிதாக அனுபவித்து கொண்டிருக்கின்ற நிலையில் உக்ரைனை பார்த்து நீ ரஷ்யாவோடு தான் இரு மேற்குலத்தை நிராகரி என்று சொல்வது...
1 day 2 hours ago
பாகம் - 12 14-11-1990 மட்டக்களப்பு மாவட்ட எல்லை நாம் இருந்த இடத்திலிருந்து மிக அண்மையில் தான். மட்டக்களப்பையும் திருக்கோணமலையையும் பிரிக்கும் எல்லை ஓர் ஆறு. இது மகாவலி கங்கையின் கிளை நதி. இந்த ஆற்றில் முதலைகள் நிறைய உண்டு. ஓர் இ. போ. ச. சாரதியை இங்குள்ள முதலையொன்று இழுத்துச் சென்றதாக ஏற்கனவே அறிந்திருந்தேன். வருடா வருடம் யாராவது ஒருவர் முதலைக்குப்பலியாவது வழக்கம் என்று சொன்னார்கள். ஆற்றின் ஓர் எல்லையான திருகோணமலை மாவட்டப் பகுதிக்குள் புகழ் பெற்ற முருகன் ஆலயம் ஒன்று உண்டு. வெருகல கந்தசாமி கோயில் என்பது இதன்பெயர். இரு மாவட்டங்களின் எல்லையில் இருப்பதாலோ என்னவோ கிழக்கு மாகாணம் முழுவதும் இது புகழ்பெற்று விளங்குகின்றது. ஆற்றைக் கடக்க உதவும் ‘பாதை’ ஒன்றின் உதவியுடன் நாம் திருக்கோணமலை மாவட்டத்திலிருந்து மட்டக் களப்பு மாவட்டத்திற்குள் வந்தோம். இந்த ஆறு 30 யார் தூரம் தான் இருக்கும் என்றாலும் நடந்து போக முடியாது. ஆழமான ஆறு முதலைகளின் அபாயம் கூடுதல் என்பதால் பெரும்பாலும் எவரும் நீந்திக் கடக்க முயற்சிப்பதில்லை. அப்போது திரு. துரைநாயகம் இந்த இடத்தில் தான் 'முதலை வள்ளியை' முதலை பிடித்தது என்றார். எப்போது அந்தச் சம்பவம் நடந்தது என்றேன், பலவருடங்களாகி விட்டன. இந்த ஆலயத்தின் திருவிழாவின் போது தீக்குளிப்பதாக வள்ளி வேண்டிக்கொண்டாள். நேர்த் திக்கடனை என்ன காரணத்தாலோ அவளால் அதை நிறைவேற்ற முடியவில்லை. திருவிழாவுக்கு வந்த அவள் முகம் கழுவ ஆற்றில் இறங்கிய போதுதான் முதலைபிடித்தது. எல்லோரும் சேர்ந்து அவளைக் காப்பாற்றினோம். முதலை பிடித்ததால் சில காயங்கள் ஏற்பட்டன. ஆனால் அந்தக் காயத்துடனேயே வள்ளி தீக்குளித்தார் என்றார். அது சரி முதலை பிடித்தால் தப்ப என்ன செய்ய வேண்டும்? என்றேன். அதன் வயிற்றுப் பக்கம் தடவினால் விட்டுவிடும் என்றார். ஏன் வயிற்றுப் பக்கம் தடவ வேண்டும்? என்றேன். அது மென்மையான பகுதி. வயிற்றில் தடவினால் அது கூச்சத்தினால் விட்டுவிடும் என்றார். முதலையைக் கண்டவுடனேயே பயம் வந்துவிடும். இதெல்லாம் சாத்தியமா? என்றேன். முதலை ஆபத்தானதுதான். ஆனால் நீங்கள் நினைப்பது போல் பயங்கரமானதல்ல. ஆற்றுக்குள் முதலை இருப்பது ஒரு பொந்து போன்ற இடத்தில். ஆழமான அந்தப் பகுதியை பாளி என்பர். அந்தப் பாளிக்குள் போய் தடியால் தட்டி மீன் பிடிப்பவர்களும் உண்டு என்றார். ஏன் பாளிக்குள் முதலை கடிக்காதா? என்றேன். பாளிக்குள் கடிக்காது என்றார். பாளி ஓர் சமாதானப் பிராந்தியமோ? என்றேன். சிரித்தார். தொடர்ந்து பாளிக்குள் என்ன மீன் கூடுதலாக இருக்கும்? என்று கேட்டேன். விரால் தான் கூடுதலாக இருக்கும். மீன்பிடிப்பதற்கு இன்னொரு சுலபமான வழி உண்டு என்றார். என்ன வழி? என்றேன். மீன் உள்ள பள்ளங்களில் ஒரு கொடியைப் போடவேண்டும் என்றார். என்ன கொடி? என்றேன். கருந்தெவுளங்கொடி என்பது அதன் பெயர். அந்தக் கொடியில் ஒரு துண்டைப் போட்டால் மீன்மயங்கி வரும், மீனைப் பிடித்து எடுக்கலாம் என்றார். இதற்கு ஏதாவது விஞ்ஞான ரீதியான காரணம் இருக்கும் என்றேன். அதைப் பற்றித் தெரியாது. ஆனால் எமது அனுபவ உண்மை என்றார். இப்படிக் கூடுதலாக மீன் பிடிபட்டால் என்ன செய்வது? என்றேன். சூட்டுக் கருவாடு போடுவார்கள். வெயிலில் காய வைக்காமல் நெருப்பில் காய வைப்பது தான் இந்தக் கருவாடு செய்யும் முறை என்றார். தொடர்ந்து இந்த பல மாதிரி மீன் பிடிக்கும் போது சில முறைகள் உண்டு என்றார். அது என்ன? என்று கேட்டேன். கத்தியோ வேறு எந்த உலோகமோ கொண்டு போகக் கூடாது; துப்பக் கூடாது என்றார். துப்பினால் என்ன நடக்கும்? என்றேன். துப்பினாலோ உலோகங்களைக்கொண்டு சென்றாலோ சித்திக்காது - மீன்கள் ஓடி விடும் என்றார். இந்தப் பாரம்பரிய நம்பிக்கைகளைப் பரீட்சித்துப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக் குக் கிடைக்கவில்லை. ஆற்றங்கரைகளில் நின்ற மக்களுடன் மாத்தயா அளவளாவினார்? அனைவருமே திருக்கோணமலை மாவட்டத்தில் இருந்து இந்த மட்டக்களப்பு மாவட்ட எல்லைவரை வந்து குடிசை அமைத்து இருப்பவர்கள். சிலர் வெருகல் ஆலயமடத்தில் இருப்பவர்கள். தமக்கு உணவோ மருந்தோ கிடைப்பதில்லை எனவும் அடிக்கடி செஞ்சிலுவைச் சங்கத்தினர் வந்து பதிந்து போகின்றார்கள். எந்த விதமான பிரயோசனமும் ஏற்படவில்லை என் னர். அன்று 26-9-90 சண்டை தொடங்கி 3 மாதங்களாகி விட்டன. தமிழ் அகதிகள் என்றால் ஆமை வேகத்தில், ஆமை வேகம் என்பது கூடத் தவறு. நத்தை வேகத்தில் தான் காரியங்கள் நடைபெறுகின்றன. மக்களின் குறைகளை மாத்தயா கேட்டறிந்தார். அந்தப் பகுதி பிரதேசப் பொறுப்பாள ரிடம் இங்கு எவ்வளவு மக்கள் உள்ளனர்? என்றார். வாகரை, கதிர வெளி, வெருகல் எல்லா இடமும் சேர்த்து முப்பதினாயிரம் அகதிகள் என்றார் பிரதேசப் பொறுப்பாளர் எஸ்.பி. அங்கு ஒரு பத்து வயதுச்சிறுவன் சுறுசுறுப்பாக ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்தான். அவனிடம் உனது பெயர் என்ன? என்று கேட் டேன். அவன் "பிரபாகரன்" என்றான். மாத்தயா அவர்கள் பொது மக்களோடு பேசிக் கொண்டு இருக்கும் போது எனது பார்வையைச் சுழலவிட்டேன். ஓலையால் வேய்ந்த கடை ஒன்று; அன்று திறக்கப்படவில்லை. தட்டியால் மூடியிருந்தது. அந்தக் கடைக்கு முன்னே ஒரு சிறுமியும் இரண்டு குழந்தைகளும் நின்றார்கள். ஆகச் சிறிய குழந்தை ஆண் குழந்தை. அந்தச் சிறுமியிடம் போய் மருமகள் உங்களது பெயர் என்ன என்றேன். ராஜசுலோசனா என்றாள் சிறுமி. உங்களுக்கு எத்தனை வயது? என்றேன். பத்து வயது என்றார். ஏன் இன்று கடை திறக்கவில்லை? என்றேன். 'இனிக் கடை திறக்க முடியாது. அப்பாவை முஸ்லிம் ஆட்களும் ராணுவமும் பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள்’ என்றாள். எங்கே பிடித்தார்கள்? என்றேன். வாழைச் சேனையில் என்றாள். மட்டக்களப்பு மண்ணில் கால் வைத்தவுடனேயே முதன்முதல் கிடைக்கும் செய்தி இதுதானா? (தொடரும்)
1 day 2 hours ago
விமானம் மலேசியாவில் இருந்து புறப்பட்டாலும் இது அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட விமானம் என ஆங்கில எழுத்து N குறிப்பிடுகின்றது. விமானத்தை ஓட்டியவரும் அமெரிக்காவில் விமான ஓட்டி அனுமதி பெற்றவராக விளங்க வேண்டும். நாங்கள் பலாலி விமானத்தளம் என கூறுகின்றோம். ஆனால், பல சர்வதேச விமானத்துறை தகவல் தளங்களில் காங்கேசன்துறை/யாழ்ப்பாணம் விமான தளம் VCCJ என குறிப்பிடப்படுகின்றது.
1 day 2 hours ago
இந்த பெருந்தோட்ட முதலாளிகளோ அல்லது அரசாங்கமோ மலையக மக்களின் சுபிட்சமான வாழ்வு குறித்து பெரிதாக சிந்திக்கப் போவதில்லை. காரணம் நாளைக்கு வாழ்க்கையில் அவர்கள் ஒரு நல்ல நிலைக்கு வந்து விட்டால் அந்த தேயிலை கூடையையும்... கவ்வாத்து கத்தியையும் அவர்கள் கையில் எடுக்கப் போவதில்லை. சிங்களவர்கள்; ஈழத் தமிழர்கள்; முஸ்லிம்கள்; யாரும் இந்த தேயிலை தோட்டத்து கூலி வேலையை செய்யப் போவதுமில்லை. ஆகவே இந்த மக்கள் கூட்டம் அவர்களுக்கு தேவை... அடிமைகளாகவே தேவை. இதுதான் யதார்த்தம். நம் விடுதலைப் போராட்ட வரலாறில் தம்மை இணைத்து கொண்ட அனைத்து இயக்கங்களும் சாதிய கட்டமைப்புகள்; சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவே குரல் கொடுத்திருந்தார்கள். குறிப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பு காத்திரமான; செயற்பாடுகளை கூட மேற்கொண்டு இருந்தார்கள். இவ்வாறான உயரிய செயல்பாடுகளை பெருமையாக பேசியதும் நாங்கள் தான். இன்று அவர்கள் இல்லாமல் இருக்கலாம்... ஆனாலும் அந்தப் போராட்டத்தின் நியாயப்பாடுகள்; கோட்பாடுகள்; தேவைகள் எமக்கு இன்றுமே இருக்கின்றன. இன்று சாதிய மேலாண்மை குறித்து ஆங்காங்கே தனி மனிதர்கள், சமூகங்கள் மத்தியில எழக்கூடிய வக்கிர புக்தியை பொது புத்தியாக பேசத் துணிந்து உள்ளோம். இதை அருண் சித்தார்த்தன் பேர்வழி தெற்கில் போய் பிரச்சாரம் செய்தால் அவனைத் துரோகி, அரச கைகூலி என்கின்றோம். இங்கே இரட்டை நிலைப்பாட்டை எடுப்பதைப் போல் எனக்குப்படுகிறது. நீங்கள் இன்னும் மாறவில்லை என்பதை நீங்களே கூறிக் கொள்கிறீர்கள். அப்படித்தான் நான் பார்க்கிறேன். நாளைய அல்லது அடுத்து வரும் தலைமுறைகள் இப்படியே இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஈழத் தமிழரிடம் சென்று ஆங்காங்கே முகம் கொடுக்கக்கூடிய களைய வேண்டிய இந்த சமூகப் பிரச்சினையை விட; மலையக மக்களை சிங்களவன் காலடியில் கிடந்தது வாழ்நாள் முழுவதும் பரம்பரை பரம்பரையாக எல்லா வகையிலும் அடிமையாக வாழ்ந்து மடிவது சிறப்பு என்கிறீர்கள். என்னத்த சொல்ல!!!
1 day 2 hours ago
பாகம் - 11 13.11.1990 பதுமன் என்னோடு பேசிக் கொண்டிருக்கையில் அந்தப் பொதுமகன் தெருவால் சென்ற மாட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். முதுகில் “க” என்ற குறியுடன் போகும் அந்த மாட்டில் அப்படி என்னதான் விசேடம் இருக்கும் என்று எனக்குப் புரியவில்லை. எனவே “என்னமாட்டையே வெறித்துப் பார்க்கிறீர்கள்” என்றேன். 'மாட்டுக்குக் குறி சுட்டிருக்கிறது. இதேபோலத்தான் மனிதருக்கும் குறிசுட்டார்கள். பழைய ஞாபகம் வந்தது' என்றார். மனிதருக்கா? என்றேன். ஆம், இந்திய ராணுவம் இருக்கும்போது கள்ளிமேட்டில் எமது இயக்கத்தின் ஆதரவாளர் ஒருவர் ஈ. பி. ஆர். எல். எப். இடம் பிடிபட்டபோது கையில் எல். ரி. ரி. ஈ என்று கம்பியால் காய்ச்சிக் குறி இழுத்தார்கள் என்றார். அப்படி சூடுவாங்கியவரின் பெயர் என்ன? என்றேன். பெயர் நவரட்ணம். குருகுல பூபாலசிங்கம் என்பவரின் மகன் என்றார். கள்ளிமேட்டில் ரின்னர் ஊற்றிக்கொழுத்தப்பட்டவரின் பெயரும் நவரட்ணம்தானே என்றேன். அவர்வேறு, இவர்வேறு. அவர் அவரது மைத்துனன் (மனைவியின் சகோதரன்) நவீனன் இயக்கத்தில் இருந்ததற்காகக் கொழுத்தப்பட்டவர் என்றார். தொடர்ந்து, யாருக்காக இப்படி வெறியாட்டம் ஆடினார்களோ, அவர்களே இன்று... என்று இழுத்தார். என்ன விடயம் என்றேன். ஈ பி. ஆர். எல். எப். இன் இராணுவப் பொறுப்பாளராக இருந்த ஜோர்ஜ் தம்பிராசா தவராஜா மனைவி சகுந்தலையையே இராணுவம் கடத்திக் கொண்டு போய்விட்டது. இனி தேடவேண்டிய அவசியம் இருக்காது. முன்பு நேவி கொண்டுபோய் தடுப்புக் காவலில் வைத்திருந்தார்கள். இப்போது அப்படி எதுவும் இல்லாதபடியால் இறந்தவர்களின் பட்டியலில் சேர்க்க வேண்டியதுதான் என்றார். “திருமலை நகருக்குள் வேறு என்ன நடந்தது?” என்றேன். சண்டை தொடங்கிய ஒரு வாரமளவில் தனியார் பஸ் வைத்திருக்கும் கணேஷ் என்பவர் தனது மனைவியின் ஊரான நிலாவெளியை விட்டுப் புறப்பட்டார். திருமலையில் அவருக்கு அறிமுகமாயிருந்த வெளிநாட்டவரான ஆறு வெள்ளையர்களுடன் தனது குடும்பத்தைச் சேர்ந்த பதின்னான்கு பேருடன் புறப்பட்டார். வெள்ளைக்காரருடன் புறப்படுவதால் தனக்கு ஏதும் நடக்காது என்ற நம்பிக்கை தான் அவருக்கு இருந்தது. கணேஷ் அவரது மனைவி, அவருக்கு அறிமுகமான பன்னிரண்டு வயதுப் பெண்பிள்ளை ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று டொலர் ஏஜென்ஸியின் மைத்துனன் பாலு, மகேஸ்வரி ஹாட்பெயர் ஸ்ரோர்ஸ் முதலாளியின் மகன் ஆகியவர்கள் இந்தப் பஸ்ஸில் போனவர்களில் எனக்குத் தெரிந்தவர்கள். பஸ் ஹொறவப்பொத்தானை போனபோது அங்கு பொஸிசாரால் இடைமறிக்கப்பட்டு பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஓ .ஐ . சி யாக இருந்தவர் ஒரு சிங்களவர். அவருக்கும் கணேசுக்கும் பழக்கம் இருந்தது. ஆகையால் விசாணையில் பெரிய சிக்கல் இருக்கவில்லை. டொலர் ஏஜென்ஸியின் மைத்துனன் கொண்டு வந்த 35 இலட்சம் ரூபா காசும் நகையும் தான் பிரச்சினையாக இருந்தது என்றார். “ஏன் இவ்வளவு பணத்தைக் கொண்டு புறப்பட்டார்கள்"? என்றேன். பணம் வங்கியிலிடப்பட வேண்டியது. ஏழு நாட்களாக வங்கியில் பணம் வைப்பிளிடப்படாததால் தான் இவ்வளவு காசு சேரவேண்டி வந்தது. இந்தவிடயங்கள் எல்லாம் ஆவணங்களுடன் சரியாக நிரூபிக்கப்பட்டன. அதற்குப் பிறகு ஓ .ஐ . சி ஒரு கடிதம் கொடுத்திருந்தார் இவர்கள் பயணத்தைத் தொடர தடையில்லை என்று. ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்தில் பஸ்ஸை இராணுவம் மறித்தது என்றார். அப்படியானால் வெளிநாட்டவர்கள் நிலைமை என்ன மாதிரி?'' என்றேன். "அவர்களை சிறிலங்காப் படையினர் வேறு பஸ்ஸில் கொழும்புக்கு அனுப்பி விட்டார்கள்” என்றார். பணத்தையும் நகையையும் கண்ட இராணுவத்தினர் பஸ்ஸை இராணுவ முகாமுக்கு கொண்டு சென்றனர். முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு பெண்ணின் ஓலம் பெரிதாகக் கேட்டது. அப்போது வாகனங்களின் எஞ்சின் இயக்கப்பட்டு அவற்றின ஓசையால் அந்த ஓலம் மறைக்கப்பட்டது. அன்றிரவு அந்த முகாமில் தீ மூட்டப்பட்டு வெளிச்சம் எரிந்தது. இப்போது பஸ் சாலியபுர முகாமில் உள்ளது என்றார். பஸ்ஸின் இலக்கம் தெரியுமா? என்றேன். 29 ஸ்ரீ... இலக்கம் சரியாகத் தெரியவில்லை. யாழ்ப்பாணத்திலுள்ள சேவ்ரி நிறுவனத்தில் இருந்து வாங்கிய பஸ்தான் அது என்றார். பின்பு என்ன நடந்தது என்றேன். டொலர் முதலாளி ஒரு வழக்கறிஞருடன் இராணுவ முகாமுக்குச் சென்றார். ஆனால் ஜே. வி. பி. தான் பஸ்ஸை மறித்தது என்று கேள்விப்பட்டோம். எமக்கு இதைப்பற்றி முழு விபரமும் கிடைக்கவில்லை என்று அனுப்பி விட்டனர் என்றார். இந்த விபரம் எல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்? பஸ்ஸில் போன அனைவரும் தான் முடிந்து விட்டார்களே என்றேன். ஹொறவப்பொத்தாளையில் ரொட்ட வேவாவைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் இருந்தார். அவரை மௌலவி என்று அழைப்போம். அவர் மூலம் தான் இந்தத் தகவல் வெளிவந்தது. அதற்குப் பிறகுதான் டொலர் முதலாளி இராணுவ முகாமுக்குச் சென்று விசாரித்தார் என்றார். தொடர்ந்து வாகனத்தில் பிரயாணம் செய்வது என்பது இனி நினைத்துப் பார்க்க முடியாத விஷயம் என்றார். (இதன் பின்னர் இ. போ. ச. பஸ்ஸில் வீரகேசரி நிருபர் வேலாயுதத்தின் மகள் லலிதா பணம், நகை போன்றவற்றுடன் திரு மலையிலிருந்து கொழும்புக்குப் புறப்பட்டனர் என்றும், 92 ஆம் கட் டையில் முஸ்லிம் ஊர்காவல் படையினரும், சிங்கள ஊர்காவல் படையினரும் அவர்களின் பணம், நகை போன்றவற்றைப் பறித்துவிட்டு அவர்களை வெட்டுவதற்காக இழுத்தபோது சிங்களவரான இ. போ. ச. சாரதி ஆட்களை விடாவிட்டால் பஸ்ஸை எடுக்கமாட்டேன் என்று மிரட்டியதாகவும் அதனால் லலிதாவும் குடும்பத்தினரும் தப்பினார்கள் என்றும் அறிந்தோம்.) எப்படியாவது நடந்து போகமுடியாதா? என்று கேட்டேன். அப்போது பதுமன் குறுக்கிட்டு அது மிகவும் சிரமம். நாங்கள் நடத்துவந்த பாதையின் கஷ்டம் உங்களுக்குத் தெரியும்தானே. தனி ஆட்களென்றால் பரவாயில்லை. ஒருநாள் கைக்குழந்தையுடன் ஒரு குடும்பம் வந்தது. அந்தக் குழந்தை அழுது கொண்டிருந்தது. குடும்பத் தலைவனுக்கு என்னை விட வயது குறைவுதான். எங்களை கண்டதும் ''அண்ணே எனது பிள்ளைக்கு ஏதாவது கொடுங்கள். நாங்கள் சாப்பிடா விட்டாலும் பரவாயில்லை. பசியால் குழந்தை கத்துகிறது. என்னால் இந்த நிலையைத் தாங்கமுடியாது என்று எனது காலில் விழுந்து அழுதான். அவர்களைப் பார்க்கவேதனையாக இருந்தது. முகாமில் நோயாளிகளுக்கென வைத்தி ருந்த பால்மாவை எடுத்துக் கரைத்து குழந்தைக்கு கொடுத்து விட்டு, அவர்களுக்கும் உணவும் மற்றும் யானவையும் கொடுத்து அனுப்பி வைத்தோம். அன்றைய காட்சியை நினைத்தால்... என்று கண்கலங்கினார் பதுமன். அப்போது “மட்டக்களப்புக்குச் செல்ல ஆயத்தம்”' என்றார்கள். (தொடரும்)
Checked
Wed, 12/17/2025 - 01:57
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed