8 hours 30 minutes ago
மற்றுமோர் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு! ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இயங்கும் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலையை களுத்துறை குற்றப்பிரிவு கண்டுபிடித்துள்ளது. இந்த சோதனையின் போது, ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உபகரணங்கள், இரசாயனங்கள் மற்றும் போதைப்பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு வாகனம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மொத்தம் 52 லிட்டர் இரசாயனங்கள் அடங்கிய 14 கேன்களையும், போதைப்பொருள் உற்பத்தி செயல்முறையின் ஒரு பகுதியாக நம்பப்படும் பல்வேறு உபகரணங்களையும் அதிகாரிகள் இதன்போது கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வெல்லவாயவைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அண்மையில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் சுரங்காவின் சகா என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். இந்தோனேசியாவில் அண்மையில் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட அண்மைய ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலை இதுவாகும். முன்னதாக, நுவரெலியா, மித்தேனியா, நெட்டோல்பிட்டிய மற்றும் கந்தான ஆகிய இடங்களில் இதுபோன்ற ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலைகளை அதிகாரிகள் கண்டுபிடித்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1447215
8 hours 58 minutes ago
ஒரே இடத்தில் தொடர்ந்து நிற்பீர்களாயின் இப்படித்தான் உங்களை அசிங்கப்படுத்துவார்கள். சொந்த அனுபவமாக்கும் 😎
9 hours 22 minutes ago
Mind Your Language · Lawrence Nwabukwu ·roSntodpseu4a2a6se012 446g4ge3057:phftrf02m9btm271e61i,43c 3 · A teacher entered the classroom and found the chair he was to sit on hung on the ceiling. He looked at the students and smiled. Without saying a word, he proceeded to the blackboard and wrote: Test - 15 min, 30 marks. Q1. Calculate the distance between the chair and the floor in centimeters (1 Mark). Q2. Calculate the angle of inclination of the chair to the ceiling, and show your workings (1 Mark) Q3. Write the name of the student who hung the chair on the ceiling and the friends who helped him. (28 Marks). 🤣" “The teacher caught the student who hung the chair.” ✅" ........ !
9 hours 36 minutes ago
சீனா பேனாவை காகிதங்களில் கையெழுத்துப் போடுவதற்கு மட்டும் பயன்படுத்தவில்லை ....... அதையும் தாண்டி என்னன்னவோ செய்கிறது . .......! 😂
10 hours ago
10 hours 4 minutes ago
சிறப்பு . ......! 👍
10 hours 6 minutes ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
11 hours 5 minutes ago
நான் விடியோவை பாக்கவும் இல்லை, பாக்கிற நோக்கமும் இல்லை. என்னடா தேர்தல் நெருங்குது இன்னும் விஜயலட்சுமியை காணலையே என்று பார்த்தேன். தேர்தல் முடியிற வரைபொறுத்திருப்பம். அந்தம்மா பிறகு காணாமல் போய் அடுத்த தேர்தலுக்கு திரும்பி வருவா. பிஜேபி, திமுக இந்த ரெண்டும் இந்த வழக்கை முடிக்கவே விடாது.
11 hours 12 minutes ago
ஆழ்ந்த இரங்கல்! ஆத்மா இறைவனடி சேரட்டும்!!🙏
13 hours 34 minutes ago
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் மக்கள் தொடர்பகத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு 15 Sep, 2025 | 12:07 PM தியாகதீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது மக்கள் தொடர்பகத்தில் இன்று திங்கட்கிழமை (15) நடைபெற்றது. குறிப்பாக தியாகதீபம் திலீபனின் திரு உருவப்படத்திற்கு மலர்தூவி, சுடரேற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில் மாவீரர் ஒருவரின் தாயாரான செ.தவராணி ஈகைச்சுடரினை ஏற்றி குறித்த நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கலந்துகொண்டதுடன், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/225122
13 hours 37 minutes ago
காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: 53 பேர் உயிரிழப்பு: பல கட்டடங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன! Published By: Digital Desk 1 15 Sep, 2025 | 09:01 AM காசா மீது நேற்றையதினம் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 53 பேர் உயிரிழந்ததுடன், பல கட்டடங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. காசா நகரத்தின் மீது இஸ்ரேல் தனது குண்டுவீச்சு தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாக்குதலிக்போது, மூன்று கோபுரங்கள் உட்பட 16 கட்டிடங்கள் தரைமட்டமாக்கியுள்ளன. மேலும், இந்த தாக்குதல்களில் பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு நகர்ப்புற மையத்தைக் கைப்பற்றி அதன் மக்களை இடம்பெயரச் செய்வதற்கான தாக்குதலை இஸ்ரேலியப் படைகள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், காசா பகுதியில் 53 பாலஸ்தீனியர்களைக் கொல்லப்பட்டுள்ளனர் இஸ்ரேலின் போர் தொடங்கியதிலிருந்து, காசாவில் பசியிலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 422 ஆக உயர்ந்துள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காசா நகரில், இஸ்ரேலிய இராணுவம் தெற்கு ரெமால் சுற்றுப்புறத்தில் உள்ள அல்-கவ்தர் கோபுரத்தை இலக்குவைத்து, இரண்டு மணி நேரம் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இடைவிடாத குண்டுவீச்சு தாக்குதல்களால் பல்லாயிரக்கணக்கானவர்கள் தப்பி ஓடியுள்ளனர். https://www.virakesari.lk/article/225105
13 hours 53 minutes ago
திலீபனின் 38வது நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு 15 Sep, 2025 | 12:08 PM ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த “தியாக தீபம்” என அழைக்கப்படும் திலீபனின் 38வது நினைவு தின நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை (15) யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. யாழ்ப்பாணம், நல்லூர் பின்வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில், அவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரமான காலை 9.45 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாயின. இந்த நினைவேந்தலின்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, திலீபனின் திருவுருவப் படத்துக்கு மலர்மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. திலீபன் முன்வைத்த கோரிக்கைகளான 1) மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும். 2) சிறைக்கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும். 3) அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். 4) ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும். 5) தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் ஆகிய ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து திலீபன் உயிர்நீத்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/225126
13 hours 55 minutes ago
கைகுலுக்காத வீரர்கள்: டாஸ் முதல் பரிசளிப்பு வரை நீடித்த இறுக்கம் - பஹல்காம் பற்றி சூர்யகுமார் கூறியது என்ன? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் தினேஷ் குமார் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஆசிய கோப்பையில் குரூப் ஏ பிரிவில் துபாயில் நடைபெற்ற ஆறாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 11 முறை பாகிஸ்தானை வீழ்த்தி (11-3) தனது ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்த ஆட்டத்தில் டாஸ் முதல் கடைசியில் கைகுலுக்காதது வரையிலும் விளையாட்டைத் தாண்டிய ஒருவித இறுக்கம் இரு அணி வீரர்களிடையே தென்பட்டது. பரிசளிப்பு நிகழ்ச்சி வரையிலும் அது நீடித்தது. பஹல்காம் தாக்குதல் பற்றி சூர்யகுமார் கூறியது என்ன? பாகிஸ்தான் பயிற்சியாளர் என்ன சொன்னார்? நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்த கேப்டன்கள் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சமர், டாஸ் நிகழ்விலேயே தொடங்கிவிட்டது. இரு அணி கேப்டன்களும் நேருக்கும் நேர் பார்ப்பதை தவிர்த்ததோடு சம்பிரதாயத்துக்கு கைகுலுக்குவதையும் கூட தவிர்த்தனர். இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி 8 ஆட்டங்களில் 7 இல் இரண்டாவது பேட்டிங் செய்த அணியே வெற்றிபெற்ற போதிலும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா, பேட்டிங்கை தேர்வுசெய்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இரு அணிகளும் தத்தமது முந்தைய ஆட்டத்தில் விளையாடிய அதே அணியுடனே களமிறங்கினர். பாகிஸ்தானின் அதிவேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப்புக்கு இந்தமுறையும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய அணியில் ரோஹித், கோலி, ஜடேஜா போன்ற நட்சத்திர வீரர்கள் ஓய்வுபெற்ற நிலையில், பாகிஸ்தான் அணியும் பாபர் ஆஸம், முகமது ரிஸ்வான் இல்லாத ஓர் இளம் அணியுடன் இம்முறை களமிறங்கியது. பட மூலாதாரம், Getty Images பவர்பிளேவில் பட்டையை கிளப்பிய பாண்ட்யா-பும்ரா சல்மான் அகாவின் டாஸ் முடிவு தவறு என்பது ஆட்டத்தின் முதல் பந்திலேயே நிரூபணமானது. இன்னிங்ஸை 'வைடு'டன் தொடங்கிய பாண்ட்யா, அடுத்த பந்தில், அதிரடி இளம் பேட்டர் சைம் அயுப்பை 'கோல்டன் டக்' ஆக்கினார். அவுட்சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட லென்த் பந்தை ஸ்கொயர் டிரைவ் ஆட முயன்ற சைம், சரியான டைமிங் இல்லாததால் பாயிண்ட் திசையில் பும்ராவிடன் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த தொடரில் இது அவருக்கு இரண்டாவது 'கோல்டன் டக்'. மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய, அதிரடி பேட்டர் முகமது ஹாரிஸ், பும்ரா பந்தில் பிக்-அப் ஷாட் விளையாடுகிறேன் என்று, டீப் பேக்வர்ட் ஸ்கொயர் லெக் திசையில் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இப்படியாக, பாண்ட்யாவும் பும்ராவும் ஒருவர் பந்தில் மற்றொருவர் கேட்ச் பிடித்து தங்கள் நன்றியை பரிமாறிக் கொண்டனர். பட மூலாதாரம், Getty Images பவர்பிளே முடிவில் பாகிஸ்தான் 42/2 முதல் ஓவரில் விக்கெட் எடுத்த பாண்ட்யா இரண்டாவது ஓவரில் லைனையும் லெங்த்தையும் தவறவிட, ஸமான் இரு பவுண்டரிகளை விளாசினார். தனது இரண்டாவது ஓவரில் பும்ரா வீசிய முழு நீள பந்தை, ஃபர்ஹான் லாங்-ஆன் திசையில் ஒரு அபாரமான சிக்ஸரை பறக்கவிட்டு, சோர்ந்து போயிருந்த பாகிஸ்தான் ரசிகர்களை தலைநிமிரச் செய்தார். முதல் நான்கு ஓவர்களில், ஆடுகளத்தில் கிடைத்த ஸ்விங்கை பும்ராவும் பாண்ட்யாவும் சரியாகப் பயன்படுத்தி வீசினர். கடந்த ஆட்டத்தை போலவே இந்தமுறையும் பவர்பிளேவிலேயே மூன்று ஓவர்களை பும்ரா வீசி முடித்தார். தட்டுத்தடுமாறி இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் ஸமான், ஃபர்ஹான் கைகொடுக்க பவர்பிளே முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் என்ற நிலைக்கு நகர்ந்தது. பட மூலாதாரம், Getty Images இந்தியாவின் மும்முனை சுழலில் சிக்கிய பாகிஸ்தான் பவர்பிளேவுக்கு பிறகு இருமுனையும் சுழல் தாக்குதலை கையிலெடுத்தார் சூர்யகுமார் யாதவ். கிரீஸில் இருந்து இறங்கிவந்து சுழற்பந்து வீச்சாளர்களை ஆடிக் கொண்டிருந்த ஸமான், அக்சர் படேல் பந்தில் அதேபோல விளையாடி சிக்ஸர் அடிக்க முயன்று, லாங்-ஆன் திசையில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இந்திய சுழலர்களின் பந்துகள் உள்ளே வருகிறதா வெளியே செல்கிறதா என்ற குழப்பத்தில், பாகிஸ்தான் பேட்டர்கள் குத்துமதிப்பாக விளையாடுவதை பார்க்க முடிந்தது. குறைவேக பிட்ச் என்பதால், வழக்கமாக வேகமாக வீசும் அக்சர் படேல் கூட, வேகத்தை மாற்றி மாற்றி வீசினார். முதல் ஓவரில் ஸமான் விக்கெட்டை தூக்கிய அக்சர், இரண்டாவது ஓவரில் ஸ்வீப் ஷாட் ஆடப் பார்த்த பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகாவை பெவிலியனுக்கு அனுப்பினார். 10 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 49 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. பட மூலாதாரம், Getty Images ஒன்றிரண்டாக ரன் சேர்க்க தவறிய பாகிஸ்தான் ஒருபக்கம் விக்கெட்கள் சரிந்தாலும், மறுமுனையில் நிதானமாக விளையாடிய ஃபர்ஹான், 12-வது ஓவரில் அக்சர் படேல் பந்தில் தனது மூன்றாவது சிக்ஸரை அடித்தார். சுழற்பந்து வீச்சுக்கு கிடைத்த அனுகூலத்தை பார்த்த சூர்யகுமார் யாதவ், நான்காவது சுழலராக அபிஷேக் சர்மாவை கொண்டுவந்தார். கடந்த ஆட்டத்தில் யூஏஇ அணியை நிலைகுலைய செய்த குல்தீப், இந்த ஆட்டத்தில் தனது முதல் விக்கெட்டாக, அபாயகரமான பேட்டர் ஹசன் நவாஸை வீழ்த்தினார். கேப்டன் சல்மான் அகா போலவே, தேவையின்றி ஸ்லாக் ஸ்வீப் ஆடப் பார்த்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் அவர். ஹசன் நவாஸை அனுப்பி வைத்த கையோடு, அடுத்த பந்திலேயே இன்னொரு நவாஸை (முகமது) எல்பிடபிள்யூ ஆக்கினார் குல்தீப். இந்திய சுழலர்கள் 50 சதவீதத்துக்கும் அதிகமான பந்துகளை ஸ்டம்ப் லைனிலேயே வீசினர். கட்டுக்கோப்பான பந்துவீச்சை சமாளித்து விளையாடி ஓரிரு ரன்களாக சேர்க்கும் திறனற்றவர்களாக பாகிஸ்தான் அணியினர் காணப்பட்டனர். பட மூலாதாரம், Getty Images கடைசி நேரத்தில் சிக்ஸர் மழை பொழிந்த ஷஹீன் அஃப்ரிடி பாபர், ரிஸ்வான் இல்லாத வெறுமையை பாகிஸ்தானின் ஆட்டத்தில் பார்க்க முடிந்தது. ஓரளவுக்கு தாக்குப்பிடித்த ஃபர்ஹான் 40 ரன்களுக்கு லாங்-ஆனில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து, குல்தீப்பின் 3-வது இரையாக மாறினார். 20 ஓவர்களை முழுமையாக விளையாடி 100 ரன்களை பாகிஸ்தான் கடக்குமா என்பதே சந்தேகமாக இருந்த நிலையில், ஷஹீன் ஷா அஃப்ரிடி, 2 சிக்சர்களை வெளுத்தார். தனது கடைசி ஓவரில் நோ பால் உள்பட 12 ரன்களை விட்டுக்கொடுத்த பும்ரா, ஸ்பெல்லின் கடைசி பந்தில் முகீம் (10) விக்கெட்டை தூக்கினார். குல்தீப், அக்சர் வரிசையில் வருண் சக்ரவர்த்தியும் தன் பங்குக்கு ஆல்ரவுண்டர் ஃபஹீம் அஷ்ரஃப் விக்கெட்டை கைப்பற்றினார். இன்னிங்ஸின் கடைசி ஓவரில் பாண்ட்யா பந்துவிச்சில் அஃப்ரிடி மேலும் 2 சிக்ஸர்களை அடிக்க, பாகிஸ்தான் அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 127 ரன்கள் என்ற கௌரவமான ஸ்கோரை எட்டியது. கடைசி கட்டத்தில் அஃப்ரிடி (33*), முகீம் (11) அதிரடி கைகொடுத்திருக்காவிட்டால், பாகிஸ்தான் நிலைமை இன்னும் மோசமாக மாறியிருக்கும். மொத்தமாக 20 ஓவர்களில் 63 பந்துகளை டாட் பந்துகளாக இந்தியா வீசியது. பட மூலாதாரம், Getty Images பவர்பிளேவில் பாகிஸ்தானை பதம் பார்த்த அபிஷேக் சர்மா 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய் அணிக்கு அபிஷேக் சர்மா, நம்ப முடியாத தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தார். முழு நீளத்தில் ஷஹீன் அஃப்ரிடி வீசிய முதல் பந்தை ஸ்ட்ரைட் டிரைவ் செய்த அவர், அடுத்த பந்தை கவர் திசையில் அநாயசமாக சிக்ஸருக்கு அனுப்பினார். பேட்டிங்கில் சொதப்பிய சைம் அயுப், அதற்கு பரிகாரமாக ஒரு அட்டகாசமான கேரம் பந்தில் கில் விக்கெட்டை எடுத்தார். அடுத்தடுத்து இறங்கிவந்து இரு பவுண்டரிகளை விளாசிய கில், மூன்றாவது முறையும் முயன்று ஸ்டம்பிங் ஆனார். நேரம் செல்லசெல்ல பிட்ச் சுழலுக்கு சாதமாக மாறும் என்பதை புரிந்துகொண்ட அபிஷேக் ஷர்மா, ஷஹீன் பந்துவீச்சை குறிவைத்து தாக்கினார். மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் பாயிண்ட் திசையில் பந்தை வெட்டி பவுண்டரி அடித்த அவர், அதே ஓவரில் மிட் விக்கெட் திசையில் பிரமாதமான ஒரு சிக்ஸரை அடித்தார். தனது இரண்டாவது ஓவரிலும் அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை வழங்கிய சைம் அயுப், அடுத்த பந்திலேயே அபாயகரமான அபிஷேக் சர்மா (31) விக்கெட்டை கைப்பற்றினார். பட மூலாதாரம், Getty Images பேட்டிங் பாடமெடுத்த சூர்யாகுமார்-திலக் ஜோடி தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தானுக்கு எதிராக 20 ரன்களை தாண்டியதில்லை என்ற குறையை போக்கும் திட்டத்துடன் களம்புகுந்தார். ஆறாவது ஓவரில் முகமது நவாஸ் ஓவரை குறிவைத்த திலக் வர்மா, 2 பவுண்டரிகள் உள்பட 13 ரன்கள் குவித்து, பவர்பிளேவில் இந்திய அணி 60 ரன்களை கடக்க உதவினார். பாகிஸ்தான் பேட்டர்கள் போல பவுண்டரி, சிக்ஸர் மட்டும்தான் அடிப்பேன் என்று முரண்டு பிடிக்காமல், ஓடி ரன் எடுப்பதில் கவனம் செலுத்தினர். திலக் வர்மா-சூர்யகுமார் யாதவ் ஜோடி சீரான வேகத்தில் ரன்களை சேர்க்க, பாகிஸ்தான் லெக் ஸ்பின்னர் அப்ரார் அஹமது சிக்கனமாக பந்துவீசி 16 ரன்கள் மட்டும் கொடுத்து தன் கோட்டாவை முடித்தார். டி20 கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 50 சராசரி வைத்துள்ள திலக் வர்மா, சைனாமேன் சுழலர் முகீம் பந்தில் அதிரடியாக சிக்ஸரை விளாசினார். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக குறைவேக ஆடுகளத்தில் எப்படி விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் அணிக்கு பாடம் எடுக்கும் விதமாக இந்திய பேட்டர்கள் விளையாடினர். 30 ரன்களில் திலக் வர்மா கொடுத்த எளிமையான காட் & பவுல்ட் (caught & bowled) வாய்ப்பை முகமது நவாஸ் கோட்டைவிட்டார். ஆனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாத திலக், சைம் அயுப் வீசிய அடுத்த ஓவரிலேயே பவுல்டானார். பட மூலாதாரம், Getty Images ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்ற குல்தீப் இடக்கை பேட்டர் என்றால் ஆஃப் பிரேக், வலக்கை பேட்டர் என்றால் கேரம் பந்து என்ற வியூகத்துடன் சைம் வீசினார். 13-வது ஓவர் முடிவில் இந்தியா 100 ரன்களை எட்டியது. முகமது நவாஸின் ஓவரில் பேக்புட்டில் இரண்டு பவுண்டரிகளை வெட்டிய சூர்யகுமார் யாதவ், வெற்றிக்கு தேவையான ரன்களை 18 ஆக குறைத்தார். சைம் அயுபின் கடைசி ஓவரின் கடைசி பந்தில் துபே இறங்கிவந்து கோடு போட்டது போல ஒரு மகத்தான் சிக்ஸர் விளாச, வெற்றிக்கு 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 16-வது ஓவரில் 25 பந்துகள் மீதமிருந்த நிலையில், முகீம் பந்தில் மிட்விக்கெட்டில் ஒரு அபாரமான சிக்ஸர் அடித்து, சூர்யகுமார் யாதவ் ஆட்டத்தை முடித்துவைத்தார். சூர்யகுமார் யாதவ், தனக்கு தானே கொடுத்து கொண்ட பிறந்தநாள் பரிசாக இந்த இன்னிங்ஸ் அமைந்த்தது. பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்துவீசிய போதும், பவர்பிளேவில் அபிஷேக் சர்மாவின் ருத்ர தாண்டவத்தால் வலுவான அடித்தளம் அமைத்துக் கொண்ட இந்திய அணி, மிடில் ஓவர்களில் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மாவின் பேட்டிங் கைகொடுக்க எளிதாக இலக்கை எட்டியது. பேட்டிங்கில் பவர்பிளேவில் சொதப்பியதும் மிடில் ஆர்டரில் பேட்டிங் வரிசையில் இருந்த அனுபவ குறைவும் பாகிஸ்தானுக்கு பாதகமாக முடிந்துவிட்டது. துபாயில் சேஸ் செய்யும் அணி வெற்றிபெறவே வாய்ப்பிருந்தும் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா பேட்டிங் தேர்வு செய்தது முதல் கோணலாக அமைந்து பாகிஸ்தானுக்கு ஆட்டத்தை காவு வாங்கிவிட்டது. தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக குல்தீப் யாதவ் (3/18) ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார். பட மூலாதாரம், Getty Images பஹல்காம் பற்றி சூர்யகுமார் கூறியது என்ன? சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெறச் செய்ததும் கேப்டன் சூர்யகுமார், மறுமுனையில் நின்றிருந்த ஷிபம் துபேவை அழைத்துக் கொண்டு உடனடியாக களத்தை விட்டு வெளியேறினார். பாகிஸ்தான் வீரர்களுடன் வழக்கமான கைகுலுக்கல் ஏதும் நிகழவில்லை. பின்னர், பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறும் போது இந்திய வீரர்களின் டக்அவுட்டை நோக்கி நடந்து வருவது போல் தோன்றியது. ஆனால் இந்திய வீரர்கள் அதற்கு முன்னதாகவே ஓய்வறைக்குத் திரும்பிவிட்டனர். இந்த ஆட்டத்தில் டாஸ் போடப்பட்ட போதும் சூரியகுமார் - பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா ஆகிய இருவரும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய சூர்யகுமார் வெற்றியை "இந்தியாவுக்கு ஒரு சரியான பரிசு" என்றார். "பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நாங்கள் துணை நிற்கிறோம், இன்றைய வெற்றியை மிகுந்த துணிச்சலைக் காட்டிய எங்கள் ராணுவத்தினருக்கு அர்ப்பணிக்க விரும்புகிறோம்." என்று அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தான் பயிற்சியாளர் கூறியது என்ன? பரிசளிப்பு நிகழ்ச்சியில் எந்தவொரு பாகிஸ்தான் வீரர்களும் பேசவில்லை. பின்னர் பேசிய பாகிஸ்தான் பயிற்சியாளர் ஹெசன்"நாங்கள் கைகுலுக்க அங்கு சென்றோம். ஆனால், அவர்கள் ஏற்கனவே உடை மாற்றும் அறைக்குச் சென்று கொண்டிருந்தார்கள்," என்று கூறினார். "ஒரு போட்டியை இந்த வகையில் முடிப்பது ஏமாற்றமளிக்கும் ஒன்று. நாங்கள் விளையாடிய விதத்தில் நாங்கள் ஏமாற்றமடைந்தோம். ஆனால் நிச்சயமாக நாங்கள் சென்று கைகுலுக்க தயாராக இருந்தோம்." என்று அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தானுடன் மீண்டும் பலப்பரீட்சைக்கு வாய்ப்புள்ளதா? 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா, புள்ளிகள் பட்டியலில் குரூப் ஏ பிரிவில் 2 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 2 ஆட்டங்களில் 1 இல் மட்டும் வெற்றிபெற்ற பாகிஸ்தான் 2 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. புதன்கிழமை (செப்டம்பர் 17) யுஏஇ அணியுடன் நடைபெறும் ஆட்டத்தில் வெற்றிபெறும்பட்சத்தில் பாகிஸ்தான் அணியால் எளிதாக சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேற முடியும். ஆகவே, மீண்டும் ஒன்று அல்லது இருமுறை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துவதை பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைக்கும். இந்திய அணி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 19) தனது அடுத்த ஆட்டத்தில் கத்துக்குட்டியான ஓமனை எதிர்கொள்ளவுள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 14 ஆட்டங்களில் 11 இல் இந்தியாவும் 3 இல் பாகிஸ்தானும் வென்றுள்ளன. நாளை நடைபெறும் ஆட்டங்களில் (double-header) குரூப் ஏ பிரிவில் யூஏஇ, ஓமன் அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, ஹாங்காங் அணிகளும் மோதுகின்றன. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cr5qd9ll6qpo
14 hours 5 minutes ago
15 Sep, 2025 | 11:03 AM கடந்த ஆட்சியின்போது, அதிகாரத்திலிருந்த குழுக்களால் ஜனாதிபதி நிதியம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் அதனை இந்த அரசாங்கத்தினால் சரியான திசைக்கு கொண்டுவர முடிந்தது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற மத்திய மாகாணத்தில் க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில், கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்த 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 6 பாடப் பிரிவுகளின் கீழ் உயர் சித்திகளைப் பெற்ற முதல் 10 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபாய் புலமைப்பரிசில் வழங்கப்பட்டது. ஜனாதிபதி நிதியம் இதற்காக 36.1 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது. இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் கூறுகையில், ஜனாதிபதி நிதியம் நிறுவப்பட்டதற்கான உண்மையான நோக்கம் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்படுவதாகவும், தொலைதூர கிராமங்களில் வாழும் மக்களுக்கு வசதிகளை வழங்க ஜனாதிபதி நிதியம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. மருத்துவ உதவிக்கு அப்பாற்பட்ட ஒரு திட்டத்தை செயல்படுத்த ஜனாதிபதி நிதியம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மாணவர்களின் கல்விக்கு உதவும் ஒரு திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், அது அறிவு நிறைந்த ஒரு நல்ல எதிர்கால மனித வளத்தை உருவாக்க பங்களிக்கும். ஒரே கட்டமைப்பின் கீழ் இருக்கும் கல்வி முறைக்குப் பதிலாக, பல்வேறு துறைகளைப் பார்க்கும் மற்றும் திறந்த மனதைக் கொண்ட மனித வளத்தை உருவாக்க புதிய கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்தத் தயாராக இருப்பதாகவும், இது மாணவர்கள் தங்கள் கனவுகளை நனவாக்க உதவும். வரப்பிரசாதம் பெற்ற ஒரு குழுவினரால் அவர்களது சலுகைகள் மற்றும் நலன்களை அதிகரித்துக்கொள்ளவே இந்த நிதியம் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு வந்திருந்தது. ஆயினும் இன்று அந்த நிலைமை முற்றிலும் மாறி, ஜனாதிபதி நிதியத்தின் உண்மையான நோக்கத்திற்காக அதை 100% பயன்படுத்துவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நிதியம் இப்போது மக்களுக்கு நெருக்கமாகி, மக்கள் தங்கள் பிரதேசத்திலேயே அதனை எளிதாகப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. மாறிவரும் உலகில் வித்தியாசமான விதத்தில் சிந்திக்கக்கூடிய, ஒரு விடயத்தின் அனைத்துப் பக்கங்களையும் பார்க்கக்கூடிய, உலகத்தை மாற்றக்கூடிய மனிதநேயம் மிக்க குடிமக்களை உருவாக்குவதற்கே நாம் முயற்சிக்கிறோம் என்றார். இவ்விழாவில் உரையாற்றிய சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, மனித வளங்களை வளர்ப்பதை போல் உலகில் வெற்றி பெறக்கூடிய வேறு எதுவும் இல்லை. நாட்டின் இளைஞர்களுக்கு அவற்றை முறையாகவும் திறம்படவும் பயன்படுத்துவதன் மூலம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு. ஜனாதிபதி நிதியம் இன்று அந்தப் பணிக்கு பங்களிக்கிறது. மனித வளங்களை வளர்ப்பதன் மூலம் நாடு வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என்றார். போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேனவும் விழாவில் உரையாற்றினார். கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, மத்திய மாகாண பிரதம செயலாளர் எம்.ஏ. பிரேமசிங்க, கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இதேவேளை, ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை பிராந்திய மட்டத்திற்கு பரவலாக்குவது தொடர்பாக மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களின் துறைசார் அலுவலர்களுக்கான ஒரு நாள் விசேட செயலமர்வு சனிக்கிழமை (13) கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மத்திய மாகாணத்தின் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் ஜனாதிபதி நிதியத்தை கையாளும் துறைசார் அலுவலர்களுக்கு இந்த நிகழ்வில் தெளிவுபடுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் மத்திய மாகாணத்தில் ஜனாதிபதி நிதியத்தின் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பயனாளிகளுக்கு உயர்தர சேவைகளை வழங்கவும், நவீனமயமாக்கப்பட்ட ஒன்லைன் முறைகளை அறிமுகப்படுத்தவும் மற்றும் விரைவான சேவைகளை வழங்கத் தேவையான அறிவு மற்றும் பயிற்சி வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/225113
14 hours 10 minutes ago
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 1982ம் ஆண்டில் பிரபாகரன் முதலும் கடைசியுமாக அப்போதைய மெட்ராஸுக்கு வந்தார் கட்டுரை தகவல் ரெஹான் ஃபசல் பிபிசி ஹிந்தி 2 மணி நேரங்களுக்கு முன்னர் எச்சரிக்கை: இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள சில விவரிப்புகள் உங்களுக்கு சங்கடம் தரலாம். 2009ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களில் ஒருபிரிவினர் இன்றும் அதனை ஏற்க மறுக்கின்றனர். இப்படியான சூழலில், பிரபாகரனின் கடைசி தருணங்கள் குறித்து இந்த கட்டுரை அலசுகிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் 2008ம் ஆண்டு, நவம்பர் 27-ஆம் தேதி மாவீரர் தினத்தை முன்னிட்டு ஆற்றிய உரையே அவருடைய கடைசி உரையாக பதிவாகியுள்ளது. அதற்கடுத்த சில மாதங்களில் அவருடைய வாழ்க்கை முடிவுக்கு வரும் என்று யாரும் நினைக்கவில்லை, ஆனால் அவருடைய வாழ்வின் கடைசி தருணம் வரை அவருடைய மனோபாவம் மாறவே இல்லை. 1976-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பை தொடங்கினாலும் கூட பிரபாகரன் நீண்ட காலமாக பெரிதும் அறியப்படாத ஒருவராகவே திகழ்ந்தார். 1982 மே மாதம் சென்னையில் முதலும் கடைசியுமாக பிரபாகரன் பிடிபட்ட போது, இந்திய அரசு அவர் மீது அதிக கவனம் செலுத்தவில்லை. அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் ராணுவத்திற்கு சவால் விடுவதற்கும் தயங்காத வகையில், பிரபாகரனின் செல்வாக்கு மற்றும் நம்பிக்கை அபரிமிதமாக அதிகரித்தது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தியாவின் ராணுவ சக்திக்கு சவால் விடுக்கும் அளவுக்கு பிரபாகரனின் செல்வாக்கு இருந்தது பிரபாகரனின் பாணி இலங்கையின் புனித நகரமான அனுராதபுரத்தில் சிங்களர்கள் கொலைக்குப் பிறகு, பிரபாகரன் குறித்து பெரும் விவாதம் எழுந்தது. அதன்பிறகு, இலங்கையில் போட்டி தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். இது, தமிழர்கள் மத்தியில் தனிப்பெரும் தலைவராக உருவாவதற்கான முயற்சியாகவே நம்பப்பட்டது. பிரபல பத்திரிகையாளர் எம்கே நாராயண் சுவாமி தன்னுடைய 'தி ரௌட் ஆஃப் பிரபாகரன்' (The Route of Prabhakaran) எனும் புத்தகத்தில், "பிரபாகரனின் ஒவ்வொரு வார்த்தையும் சட்டம் போன்றது. அவரை யாரும் சவால் செய்ய முடியாது. அவருக்கு முன் தலை தாழ்ந்து, அவர் சொல்லும் அனைத்தையும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே, உங்களால் தமிழ் ஈழத்துக்காக போராட முடியும்," என எழுதியுள்ளார். "அவருடன் உடன்படவில்லையென்றால், ஒன்று நீங்கள் விடுதலைப் புலிகளை விட்டு வெளியேற வேண்டும், அல்லது உலகை விட்டு நீங்க வேண்டும். அவரை எதிர்க்கும் யாராக இருந்தாலும் அவர் 'துரோகி' என அறிவிக்கப்படுவார். சோவியத் முன்னாள் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தன்னுடைய எதிரிகளை எப்படி நடத்தினாரோ, அவர் அப்படி நடத்தப்படுவர்." பட மூலாதாரம், konark படக்குறிப்பு, பிரபல பத்திரிகையாளர் எம்கே நாராயண் சுவாமி எழுதிய 'தி ரௌட் ஆஃப் பிரபாகரன்' புத்தகம் அடுத்தடுத்து நடந்த கொலைகள் விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் மட்டுமல்லாது, இந்தியாவிலும் குறிப்பிட்ட சிலருக்கு குறிவைத்தது. பிரபாகரனுக்கோ அல்லது விடுதலைப் புலிகள் அமைப்புக்கோ சில சமயங்களில் உதவியிருந்தவர்களும் கூட இலக்காயினர். பிரபல பத்திரிகையாளரும் எழுத்தாளருமான அனிதா பிரதாப், தன்னுடைய 'ஐலாண்ட் ஆஃப் பிளட்' (Island of Blood) எனும் புத்தகத்தில், "பிரபாகரனின் ஆரம்பகால வாழ்க்கை குறித்து புத்தகம் எழுத திட்டமிட்டிருந்த நபர் ஒருவர், பாரிஸில் தன்னுடைய இல்லத்தின் முன்பாக சுட்டு கொலை செய்யப்பட்டார்." என எழுதியுள்ளார். இலங்கை பாதுகாப்பு அமைச்சர் தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது கொலை செய்யப்பட்டார். வெளியுறவு அமைச்சர் (தமிழர்) ஒருவர் நீச்சல் குளத்தில் இருந்தபோது படுகொலை செய்யப்பட்டார். இலங்கை ஜனாதிபதி ஒருவரும் மே தின பேரணியில் உரையாற்றியபோது கொலை செய்யப்பட்டார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது தற்கொலை தாக்குதலில் கொலை செய்யப்பட்டார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ராஜிவ் காந்தி கொலையிலும் பிரபாகரன் தொடர்புபடுத்தப்படுகிறார். பிரபாகரனின் சரிவு ஒரு கட்டத்தில், இலங்கையின் மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த பிரபாகரனின் கட்டுப்பாடு ஒரு கால்பந்து மைதானம் அளவுக்கு சுருங்கும் நேரம் வந்தது. "முதன் முறையாக விடுதலைப் புலிகள் அமைப்பு போராளிகளின் கண்களில் நான் பயத்தை பார்த்தேன். பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகளை நெருங்கி பார்த்துவரும் எனக்கு இது முற்றிலும் புதிய விஷயமாக இருந்தது," என பெயர் குறிப்பிட வேண்டாம் என கேட்டுக்கொண்ட விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறினார். "மே 17 அன்று, பிரபாகரன் தன் நெருங்கிய கூட்டாளிகளிடையே, தான் போர்க்களத்திலிருந்து ஓடவோ அல்லது ஆயுதங்களை கைவிடவோ மாட்டேன் என்றும், யாராவது போராட்டத்திலிருந்து விலகிக்கொள்ள விரும்பினால், அதை அவர்கள் தாராளமாக செய்யலாம் என்றும் கூறினார். குடிமக்களுடன் இணைய யாராவது விரும்பினால், அவர்கள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு அங்கே செல்லலாம். எதிரியின் கைகளால் வீழ்த்தப்படுவதை தவிர்க்கும் விதமாக யாரேனும் இறக்க விரும்பினால், சயனைடை உட்கொண்டு இறக்கலாம்." சூரிய கடவுளின் அவதாரம் என்றும் யாராலும் வீழ்த்தப்பட முடியாதவர் என்றும் தன் ஆதரவாளர்களால் அழைக்கப்பட்ட ஒருவருக்கு இது மோசமான பிரியாவிடையாக இது இருந்தது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தான் விரும்பிய அனைத்தையும் சொல்வதற்கு மே 17-ஆம் தேதியை பிரபாகரன் தேர்ந்தெடுத்தது தற்செயல் நிகழ்வு அல்ல. பிரபாகரனும் எட்டாம் எண்ணும் தான் விரும்பிய அனைத்தையும் சொல்வதற்கு மே 17-ஆம் தேதியை பிரபாகரன் தேர்ந்தெடுத்தது தற்செயல் நிகழ்வு அல்ல. பிரபாகரனின் பழைய கூட்டாளியான ராஜேஷ் குமார் பிரிட்டனில் வசிக்கிறார், அவர் தற்போது ராகவன் எனும் பெயரில் அறியப்படுகிறார். அவர் கூறுகையில், "பிரபாகரன் 8 எனும் எண்ணை துரதிருஷ்டவசமான எண்ணாக கருதினார். பிரபாகரன் எந்தவொரு வேலையையும் 8, 17 மற்றும் 26 ஆகிய தேதிகளில் செய்வதை தவிர்ப்பார், அது எதிர்காலத்தில் பிரச்னைகளை ஏற்படுத்தும் என கருதினார். இந்த நாட்களில் மறைவிடத்திலேயே நாள் முழுவதும் பதுங்கியிருந்து அடுத்த நாளே வெளியில் வரும் அளவுக்கு அவருக்கு அதன் மீது வலுவான மூடநம்பிக்கை இருந்தது" என்றார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மெய்க்காப்பாளருடன் பிரபாகரன் தோல்விகளால் குலைந்த மன உறுதி 2008-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், மன்னார் மாவட்டம் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதன்பின், நவம்பர் மாதத்தில் விடுதலைப் புலிகள் வியூக ரீதியாக தங்களின் முக்கிய இடங்களான பூநகரி மற்றும் மாங்குளத்திலிருந்து வெளியேற வேண்டியிருந்தது. 2008-ஆம் ஆண்டு மே மாதம், விடுதலைப் புலிகளின் மிகவும் அனுபவம் வாய்ந்த தளபதி கந்தையா பாலசேகரன் எனும் பால்ராஜ் மாரடைப்பில் இறந்தது பிரபாகரன் பெரும் பின்னடைவாக அமைந்தது. பாலசேகரனின் நினைவாக மூன்று நாள் துக்கம் அனுசரிப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்தது. பாலசேகரன் இறந்திருக்காவிட்டால், இலங்கை ராணுவத்துடனான போரின் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும் என, அந்த அமைப்பைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் நம்புகின்றனர். 2009-ஆம் ஆண்டுவாக்கில் பிரபாகரன் மேலும் அதிகமான பின்னடைவுகளை சந்திக்க ஆரம்பித்தார். இலங்கை அரசுப் படைகள், முதலில் பரந்தன் நகரத்தையும் பின்னர் அதன் அருகிலுள்ள கிளிநொச்சியையும் கைப்பற்றின. இதில், கிளிநொச்சி, விடுதலைப் புலிகளால் நிர்வகிக்கப்படும் பகுதிகளின் தலைநகரமாக கருதப்பட்டது. கிளிநொச்சியில் தோல்வியடைந்தது, விடுதலைப் புலிகள் அமைப்பினரின் மன உறுதியை கடுமையாக குலைத்தது. இந்த நகரத்தில் தான் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை பிரபாகரன் சந்தித்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, விடுதலைப் புலிகளின் மிகவும் அனுபவம் வாய்ந்த ராணுவப் பிரிவு தலைவராக கந்தையா பாலசேகரன் இருந்தார். இலங்கைக்கு அமெரிக்கா நெருக்கடி விடுதலைப் புலிகளின் முக்கியமான ஊடக ஒருங்கிணைப்பாளராக இருந்த வேலாயுதன் தயாநிதி எனும் தயா மாஸ்டர் மற்றும் பிரபாகரனின் உரைகளை மொழிபெயர்த்த குமார் பஞ்சரத்னம் எனும் ஜார்ஜ் இருவரும் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்ததால் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டது. அப்போது ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஸவும், அவரது இளைய சகோதரர் கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தனர். விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஸ தலைமை வகித்தார். எம்ஆர் நாராயண் சுவாமி எழுதுகையில், "சண்டையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறு அமெரிக்காவிடமிருந்து கோட்டாபய ராஜபக்ஸ பெரும் அழுத்தத்தை சந்தித்தார். அமெரிக்க குடியுரிமையையும் கொண்டுள்ள கோட்டாபய ராஜபக்ஸ, பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க பிரதிநிதிகளிடம் எவ்வித உறுதியையும் அளிக்கவில்லை. எனினும், இதுதொடர்பான தன்னுடைய கவலைகளை ராணுவ தளபதிகளிடம் மே 14-ஆம் தேதி பகிர்ந்துகொண்டார்," என எழுதியுள்ளார். "இன்னும் எவ்வளவு காலம் இந்த போர் தொடரும் என அவர் கேள்வியெழுப்பினார். இந்த போர் கூடிய விரைவில் வெற்றியுடன் முடிவுற வேண்டும், இல்லையெனில், அமெரிக்காவின் அழுத்தத்தை எதிர்கொள்வது கடினமாகிவிடும்." பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அப்போது கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்பு அமைச்சராக இருந்தார் சண்டையை தொடர பிரபாகரன் முடிவு மே 16 அன்று, இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளின் கடைசி கட்ட பாதுகாப்பையும் அழித்தது. ஜி-11 மாநாட்டில் பங்கேற்றிருந்த நிலையில், இந்த செய்தியை அறிந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, விடுதலைப் புலிகளை ராணுவம் வெற்றி கொண்டதாக முன்கூட்டியே அறிவித்தார். விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்கள் தலைவர் குமரன் பத்மநாதன் எனும் கேபி, கோலாலம்பூரில் அதே நாள், "சண்டை இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. எங்களது துப்பாக்கிகளை கைவிடுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்." என தெரிவித்தார். பிரபாகரன் இந்த சண்டையை தொடர முடிவெடுத்ததால், மஹிந்த ராஜபக்ஸவும் குமரன் பத்மநாதனும் இவ்வாறு பேசியதாக தெரிகிறது. விடுதலைப் புலிகள் பல நாட்களாக குளிக்கக் கூட முடியாத அளவுக்கு சண்டை கடுமையானதாக இருந்தது. அவர்களுக்கான உணவுப் பொருட்கள் கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டன. விடுதலைப் புலிகளின் கொரில்லா படையினர் (எதிரிகள் மீது திடீர் தாக்குதல் நடத்துபவர்கள்) சிலர், இலங்கை படையினரால் பிடிக்கப்படக் கூடாது என்பதற்காக, தற்கொலை செய்துகொண்டனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மே 17 அன்று இரவு, விடுதலைப் புலிகளின் கடைசிப் படைகளை 1600 சதுர மீட்டருக்குள் இலங்கை ராணுவம் நெருக்கியது. கடைசியாக உயிருடன் பார்க்கப்பட்டது எப்போது? மே 17 அன்று இரவு, விடுதலைப் புலிகளின் கடைசிப் படைகளை 1600 சதுர மீட்டருக்குள் இலங்கை ராணுவம் நெருக்கியது. இலங்கை ராணுவம் மூன்று புறங்களில் சூழ்ந்திருந்தது. நான்காவது பக்கத்தில், இலங்கை கடற்படை தொடர்ந்து கண்காணித்து வந்த நந்திக்கடல் இருந்தது. மே 17 அன்று விடுதலைப் புலிகளின் பல தளபதிகள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதையடுத்து, அந்நாள் அந்த அமைப்புக்கு மிகவும் துரதிருஷ்டவசமான நாளாக அமைந்தது. விடுதலைப் புலிகளின் கொரில்லா படையை சேர்ந்த 'எஸ்கே' பின்னொரு நாளில் அளித்த நேர்காணலில், "மே 17 அன்று கடைசியாக பிரபாகரன் உயிருடன் காணப்பட்டார். 6 மணிக்கு பிரபாகரன் இருந்த இடத்தை நான் அடைந்தேன். எங்களுடைய உணவு முழுவதும் தீர்ந்துவிட்டது" என்றார். "நம்பினால் நம்புங்கள், தமிழ் ஈழம் எனும் கனவு சிதைய போகிறது என்பதை உணர்ந்திருந்த போதிலும், பிரபாகரன் மிகவும் சாதாரணமாகவே காணப்பட்டார்." பட மூலாதாரம், Getty Images பிரபாகரனின் மகன் மரணம் அடுத்த நாள், மீதமுள்ள விடுதலைப் புலிகள், ராணுவ முற்றுகையை தகர்க்க முயற்சித்தனர். அதில் அவர்கள் வெற்றியடைந்தனர், ஆனால், 30 நிமிடங்களில் இலங்கை படையினர் மீண்டும் குழுக்களாக இணைந்தனர். இந்த முறை இலங்கை படையின் எதிர் தாக்குதலில், விடுதலைப் புலிகள் படையை சேர்ந்த தளபதிகள் பலரும் பிரபாகரனின் 24 வயது மகன் சார்லஸ் ஆண்டனியும் கொல்லப்பட்டார். ஆண்டனியின் உடலை இலங்கை படையினர் தேடியபோது, அவரிடம் 23 லட்சம் இலங்கை பணம் இருந்ததை கண்டறிந்தனர். 53வது பிரிவின் படைத்தளபதியாக இருந்த கமல் குணரத்ன, அச்சமயத்தில் பிரபாகரன், பொட்டு அம்மான் மற்றும் சூசை தவிர விடுதலைப் புலிகளின் தலைமை பொறுப்பில் இருந்த பலரும் அழிக்கப்பட்டதாக கூறினார். இலங்கை ராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, பிரபாகரன் குறித்த செய்தி வரும் வரை சண்டை தொடரும் என தெளிவாக கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனி (வலதுபக்கம் உள்ளவர்) பிரபாகரன் மரணம் குறித்த செய்தியை பெற்ற குணரத்ன மே 19 அன்று வரை பிரபாகரன் எங்கிருக்கிறார் என்ற செய்தி மேஜர் குணரத்னவுக்கு சிறிதும் தெரியவில்லை. இதையடுத்து, நந்திக்கடல் பகுதியின் சேறு நிறைந்த உவர் நீரில் கடுமையான சண்டை வெடித்ததாக இளநிலை அதிகாரி ஒருவர் அவரிடம் தெரிவித்தார். விடுதலைப் புலிகளை சேர்ந்த பலரும் அங்கே சிக்கியிருந்தனர். அவர்களுள் யாரும் ஆயுதத்தைக் கைவிட தயாராக இல்லை. இறுதியில் சண்டை முடிந்து ஒரு மணிநேரம் கழித்து, தான் காத்திருந்த செய்தி குணரத்னவுக்கு கிடைத்தது. தன்னுடைய 'தி கேஜ், தி ஃபைட் ஃபார் ஸ்ரீ லங்கா அண்ட் தி லாஸ்ட் டேஸ் ஆஃப் தமிழ் டைகர்ஸ்' (The Cage, The Fight for Sri Lanka and the Last Days of the Tamil Tigers) எனும் தன் புத்தகத்தில் கார்டன் வெய்ஸ், "கர்னல் ரவிப்ரியா மேஜர் ஜெனரல் குணரத்னவிடம், 'சார், நாங்கள் பிரபாகரனை கொலை செய்துவிட்டோம்'. என கூறினார்," என எழுதியுள்ளார். ஆச்சர்யமடைந்த குணரத்ன, 'உறுதியாக கூறுகிறீர்களா' என கேட்டதற்கு, 'ஆமாம், உறுதியாக,' என பதிலளித்துள்ளார். ஆனால், குணரத்ன இதனை உறுதியாக அறிய விரும்பியதால், கர்னல் லலிந்த கமகேவை சம்பவ இடத்துக்கு அனுப்பினார். சில நிமிடங்களிலேயே கமகேயின் குரல் ராணுவ தொலைபேசியில் ஒலித்தது: 'சார், அது சரியான செய்திதான், பிரபாகரன் தான்.' என தெரிவித்தார். பிரபாகரனின் உடல் கண்டறியப்பட்டது பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஜெனரல் சரத் பொன்சேகா முற்றிலும் உறுதிப்படுத்திய பின் குணரத்ன இந்த செய்தியை ராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அனுப்பினார். அதற்கு முன்பு, பிரபாகரனின் உடலை கொண்டு வருமாறு படையினரை கேட்டுக்கொண்டார். எம்ஆர் நாராயண் சுவாமி எழுதுகையில், "அந்த சமயத்தில் இலங்கை படையினர் சுமார் மூவாயிரம் பேர் பிரபாகரனின் உடல் கிடத்தப்பட்டிருந்த இடத்தில் திரண்டிருந்தனர். சேறு நிறைந்த ஆழமற்ற நீரில் இறங்கி படையினர் உடலை வெளியே எடுத்தனர்." என குறிப்பிட்டுள்ளா. "பிரபாகரனின் உடலை படையினர் பார்த்த உடனேயே, அவர்கள் வானத்தை நோக்கி சுட ஆரம்பித்தனர். படையினரை ஒருங்குபடுத்த அதிகாரி முயற்சி மேற்கொண்டார், ஆனால் அவரின் வார்த்தைகளுக்கு பயனில்லாமல் போனது." ஜெனரல் பொன்சேகா இந்த செய்தியை அறிந்தபோது இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்தார். பொன்சேகாவிடம் குணரத்ன சிங்கள மொழியில் தொலைபேசியில், 'மஹா எஸ் இவராய்' என்றார், அதாவது, 'பெரியவன் முடிந்து விட்டான்'. அடையாள அட்டை பட மூலாதாரம், Ministry of Defence Sri Lanka படக்குறிப்பு, பிரபாகரனின் அடையாள அட்டை பிரபாகரன் சுமார் 9.15 மணியளவில் இறந்தார். அவருக்கு அப்போது வயது 54. எம்ஆர் நாராயண் சுவாமி எழுதுகையில், "அவருடைய நெற்றியில் பெரிய காயம் இருந்தது, இதனால் அவருடைய தலை இரண்டு பாகங்களாக பிளவுபட்டிருந்தது. அவருடைய வாய் திறந்திருந்தது, அவருடைய கண் மேல் நோக்கி இருந்தது. அவருடைய தாடி வெள்ளை நிறத்தில் இருந்தது." என எழுதியுள்ளார். "குணரத்ன அவருடைய உடலை தொட்ட போது, அது இன்னும் சூடாக இருந்தது. அவருடைய நெற்றி தவிர வேறெங்கும் துப்பாக்கி குண்டு காயம் இல்லை. பிரபாகரன் அப்போது ராணுவ உடையில் இருந்தார். அவருடைய பாக்கெட்டில் தேடியபோது, 001 எனும் வரிசை எண்ணுடன் விடுதலைப் புலிகளின் அடையாள அட்டை கண்டறியப்பட்டது, அந்த அடையாள அட்டை ஜனவரி 1, 2007 அன்று வழங்கப்பட்டது." இதுதவிர, நீரிழிவு மருந்துகள் சிலவும் கண்டறியப்பட்டன. சிங்கப்பூரிலிருந்து வாங்கப்பட்ட திராட்சை மணத்துடன் கூடிய லோஷனும் (hand lotion) இருந்தது. அவரின் தலையில் இருந்த காயம் நீல நிற துணியால் மூடப்பட்டிருந்தது. கார்டன் வெய்ஸ் எழுதுகையில், "12.7 எம்எம் தோட்டாவால் பிரபாகரன் கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் என்னிடம் தெரிவித்தார்." என குறிப்பிட்டுள்ளார். இலங்கை ராணுவத்தின் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, பிரபாகரனின் ராணுவ உடையை கழற்றுமாறு உத்தரவிட்டார். இலங்கை படையினரை தவிர, ராணுவ உடையணிய யாருக்கும் உரிமை இல்லை என்பது அவரின் வாதமாக இருந்தது. பிரபாகரனின் உடல் அடையாளம் காணப்பட்டது நாராயண் சுவாமி எழுதுகையில், "பிரபாகரனின் உடலை அடையாளம் காண கர்னல் கருணா மற்றும் தயா மாஸ்டர் எனும் விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களை அனுப்புவதாக பொன்சேகா குணரத்னேவிடம் தெரிவித்தார்." என குறிப்பிட்டுள்ளார். "இருவரும் ராணுவ விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர். அந்த உயிரற்ற உடலை அடையாளம் காண அவர்கள் ஒரு நொடி கூட எடுத்துக்கொள்ளவில்லை." பிரபாகரனின் மரணத்தால் தமிழ் ஈழத்துக்கான ஆயுத போராட்டமும் இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டுப் போரும் முடிவுக்கு வந்தன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gvrppzdgno
14 hours 29 minutes ago
தமிழ் ரக்கர் என்ற யுரியூப் தம்பி போய் வந்திருக்கிறார் அண்ணை!
14 hours 35 minutes ago
இங்கை தடை இல்லாதபடியால VPN பாவிப்பதில்லை அண்ணை.
15 hours 5 minutes ago
செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கு புதைகுழிகளுக்கு நீதிகோரி கையெழுத்து போராட்டம்! செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகளுக்கும் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (15) கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் உள்ள மனித புதை குழிகளுக்கும் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்குமான சர்வதேச நீதிக்கோரிய கையெழுத்துப் போராட்டம் மாற்றத்திற்கான இளையோர் குரல் அமைப்பினால் யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. இந்த கையெழுத்து போராட்டத்தில் மாற்றத்திற்கான இளையோர் அமைப்பின் பிரதிநிதிகள், உறுப்பினர்கள் யாழ் மருதனார்மடம் வர்த்தகர்கள், சந்தை வியாபாரிகள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். https://athavannews.com/2025/1447169
15 hours 9 minutes ago
15 hours 9 minutes ago
Checked
Mon, 09/15/2025 - 19:37
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed