புதிய பதிவுகள்2

குடியேற்றவாசிகள் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து லொஸ் ஏஞ்சல்சில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் - வாகனங்கள் தீக்கிரை - ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த தேசிய காவல்படையினரை அழைத்தார் டிரம்ப்

1 day 6 hours ago
லொஸ் ஏஞ்சல்ஸில் ஊரடங்கு உத்தரவு Freelancer / 2025 ஜூன் 11 , மு.ப. 08:18 அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் குடியேற்றக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு லொஸ் ஏஞ்சல்ஸ் நகர மையத்தின் ஒரு சிறிய பகுதியான 1 சதுர மைல் பரப்பளவில் பொருந்தும் என்றும், உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணி வரை அமலில் இருக்கும் எனவும் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் அறிவித்துள்ளார். (a) https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/லொஸ்-ஏஞ்சல்ஸில்-ஊரடங்கு-உத்தரவு/50-358984

தமிழ்த் தேசியப் பரப்பின் ஒற்றுமைக்கான இறுதிச் சந்தர்ப்பத்தையும் தமிழரசுக் கட்சி தவறவிட்டுள்ளது - குருசாமி சுரேந்திரன்

1 day 6 hours ago
தமிழ்த் தேசியப் பரப்பின் ஒற்றுமைக்கான இறுதிச் சந்தர்ப்பத்தையும் தமிழரசுக் கட்சி தவறவிட்டுள்ளது - குருசாமி சுரேந்திரன் 11 June 2025 தமிழ்த் தேசியப் பரப்பின் ஒற்றுமைக்கான இறுதிச் சந்தர்ப்பத்தையும் இலங்கை தமிழரசுக் கட்சி தவறவிட்டுள்ளதாக ரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த கட்சியின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியத் தரப்பாக ஒன்றிணைந்து ஆட்சி அமைப்பதற்குப் பல தடவைகள் தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி எடுத்துக்கொண்ட முயற்சிகள் உதாசீனப் படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், பல விட்டுக்கொடுப்புகள் அரவணைப்புகளின் அடிப்படையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான கொள்கை ரீதியான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இந்தநிலையில், வன்னியில் தமிழ்த் தேசிய கட்சிகளிடம் சபைகளைக் கையளிப்பது குறித்து திங்களன்று தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானத்தின் அலுவலகத்தில் அந்த கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரனுடன் சந்திப்பு இடம்பெற்றது. அதன்போது வன்னியின் அரசியல் சூழ்நிலை பற்றிக் கலந்துரையாட முற்பட்ட வேளையில் யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறதோ அதற்கான பதில் நடவடிக்கை வன்னியில் அமையுமெனத் தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரன் தெரிவித்தார். வன்னியில் அதிக சபைகளை ஆளும் தரப்பு கைப்பற்றும் நிலை காணப்படுகிறது. பல சபைகளில் தனி ஒரு கட்சியாக அவர்கள் ஆசனங்களை பெற்றுள்ளார்கள். தமிழ்த் தேசியப் பரப்பினர் இணைந்து செயலாற்றாது விட்டால் இந்த சபைகளை ஆளும் தரப்பிடம் இழக்க வேண்டிய சூழ்நிலை வரும். தமிழ்த் தேசிய பரப்பினர் ஒன்றிணைந்து விட்டுக் கொடுப்போடு வடக்கு கிழக்கில் அனைத்து சபைகளையும் அமைப்பதற்கான முயற்சியை மேற்கொள்வதற்குக் கால அவகாசம் உள்ளது. அதை நாங்கள் முன்னெடுக்க விரும்புகிறோம் எனவும் தெரிவித்தோம் , அதற்குத் தகுந்த பதில்கள் கிடைத்திருக்கவில்லை. மேலும் மக்கள் வழங்கிய ஆணையை ஏற்றுத் தமிழ்த் தேசியப் பரப்பினர் ஒன்று கூடி ஆட்சியைக் கைப்பற்றுவதே மக்களின் எதிர்பார்ப்பாகும். அதற்காக விட்டுக்கொடுப்பு, அரவணைப்பு என்பன மிக அவசியம். தலைமைகளின் வறட்டு கௌரவம் இதற்குத் தடையாக இருக்கக் கூடாது எனவும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://hirunews.lk/tm/406823/the-tamil-nationalist-party-has-missed-its-last-opportunity-for-unity-across-the-tamil-national-spectrum-gurusamy-surendran

கிழக்கில் தமிழரசுக்கட்சியின் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு

1 day 6 hours ago
கிழக்கில் தமிழரசுக்கட்சியின் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு நாங்கள் எந்தக் கட்சியுடனும் ஒப்பந்தம் செய்து சபைகளில் ஆட்சியதிகாரத்தை எடுப்பதற்கு செல்லவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருக்கின்ற உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவு தருகின்றார்கள். நாங்கள் எங்களுடைய உறுப்பினர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆதரவாக வழங்குவோம். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்திலே ஒப்பந்தங்கள் செய்திருக்கின்றோம் எனச்சொல்வது முற்றுமுழுவதுமாக பொய்யான விடயமாகும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெற்ற உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு நேற்று (10) நடைபெற்றது. மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட தமிழரசுக்கிளையின் தலைவருமான இரா.சாணக்கியன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். இதன்போது மட்டக்களப்பு மாநகரசபை உட்பட 11 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன்போது சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு நடைபெற்றதுடன் கட்சியின் உறுதியுரையும் எடுக்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், நடந்து முடிந்த தேர்தல் மட்டக்களப்பை பொறுத்தமட்டிலும் சரி வடக்கு கிழக்கை பொறுத்தமட்டிலும் சரி இலங்கை தமிழரசுக் கட்சிக்கு பாரிய வெற்றி கிடைத்திருக்கின்றது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது இம்முறை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலே 86 உறுப்பினர்கள் நேரடியாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். அது உண்மையில் எங்களுடைய கட்சிக்கு பெரும் வெற்றியாகும். 2018 ஆம் ஆண்டு நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டதை விட அதிகளவான ஆசனங்களை இலங்கைத் தமிழரசுக் கட்சியாக தனித்து நின்று எங்களுடைய உறுப்பினர்களை தெரிவு செய்திருக்கின்றோம். நாங்கள் போட்டியிட்ட பதினொரு சபைகளிலும் இலங்கை தமிழரசுக் கட்சி ஏதோவொரு வகையாக ஆட்சியதிகாரத்தை எடுக்கக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது என்ற நல்லதொரு செய்தியை இந்த இடத்தில் கூறிக்கொள்கின்றோம். இதிலே தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய ஒன்பது பிரதேச சபைகளிலே நாங்கள் தவிசாளர் ஒருவரை, மேயர் ஒருவரை, உதவி தவிசாளர் ஒருவரை, பிரதி மேயர் ஒருவரை எங்கள் கட்சியின் சார்பில் முன்மொழிய இருக்கின்றோம். நாங்கள் போட்டியிட்ட அனைத்து சபைகளிலும் தவிசாளர் பதவி எங்கள் கட்சிக்குத்தான் கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். நாங்கள் சிறுபான்மையாக இருக்கும் ஓட்டமாவடி மற்றும் ஏறாவூர் ஆகிய இரண்டு சபைகளிலும் இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த எங்களுடைய உறுப்பினர்கள் தான் தவிசாளரை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றார்கள். தேர்தலுக்கு முன்பாக நாங்கள் சொன்னதற்கு இணங்க மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள். எங்களுடைய உறுப்பினர்கள் வெற்றியடைந்திருக்கின்றார்கள். நாங்கள் சில சபைகளிலே முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்கவேண்டிய தேவை இருக்கின்றது. குச்சவெளி, மூதூர் போன்ற சபைகளிலே 40 வீதமான தமிழர்களும் 60 வீதமான முஸ்லிம்களும் இருக்கின்ற மூதூர் சபையிலே தமிழர் ஒருவரை தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நியமித்திருக்கின்றது. யாழ் மாநகர சபையிலே நாங்கள் எங்களுக்கு கிடைத்த பட்டியல் ஆசனத்தை முஸ்லிம் உறுப்பினருக்கு வழங்கியதாக எங்களுடைய கட்சியை சேர்ந்தவர்களல்ல கட்சிக்கு வெளியில் இருப்பவர்கள் விமர்சித்திருக்கின்றனர். அதே நேரம் 60 வீதமான முஸ்லிம்கள் வாழும் மூதூர் சபையிலே தமிழர் ஒருவரை தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நியமித்திருக்கின்றது. எங்களுடைய அரசியல் குழுக் கூட்டத்திலே நாங்கள் எடுத்த தீர்மானம் தமிழ் பேசும் கட்சிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நாங்கள் எங்களுடைய தவிசாளர் பதவிகளை எடுப்பதற்கான வேலைகளை பார்க்க வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்திருக்கின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியைத்தவிர ஆசனங்களைப் பெற்ற ஏனைய கட்சிகளாக தேசிய மக்கள் சக்தி, கிழக்குத் தமிழர் கூட்டணி அல்லது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, சங்கு சின்னத்தில் போட்டியிட்ட கட்சி, சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு 2 ஆசனங்களைப் பெற்ற கட்சிகள் உள்ளன. இதிலே இலங்கை தமிழரசுக் கட்சி அனைத்து சபைகளிலும் தவிசாளராகவும் மேயராகவும் பிரதி தவிசாளராகவும் பிரதி மேயராகவும் நாங்கள் வேட்பாளர்களை முன்னிறுத்தும்பொழுது இதிலே தெரிவு செய்யப்பட்ட தமிழ் உறுப்பினர்கள் எவராக இருந்தாலும் எங்களுடைய கட்சிக்கு விரும்பினால் ஆதரவளிக்கலாம். மட்டக்களப்பு மாவட்டத்திலே நாங்கள் எந்தக் கட்சியுடனும் ஒப்பந்தம் செய்து சபைகளில் ஆட்சியதிகாரத்தை எடுப்பதற்கு செல்லவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருக்கின்ற உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவு தருகின்றார்கள். நாங்கள் எங்களுடைய உறுப்பினர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு ஆதரவாக வழங்குவோம். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்திலே ஒப்பந்தங்கள் செய்திருக்கின்றோம் எனச்சொல்வது முற்றுமுழுவதுமாக பொய்யான விடயமாகும். நேற்றுக்கூட மட்டக்களப்பு மாவட்டத்திலே இருக்கின்ற ஈ.பி.டி.பி உறுப்பினர்களை சாணக்கியனுடைய அலுவலகத்திற்கு அழைத்திருக்கின்றார்கள் என்று பொய்யான செய்திகளை பரப்பியிருந்தனர். இப்படியான பொய்யான செய்திகளை பரப்பி எங்களுடைய மாவட்டத்தில் எங்களுடைய கட்சிக்குள்ளே பல குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர். இது முற்றாக பொய்யான செய்தியாகும். பல கட்சிகள் எங்களுடன் பேசியிருந்தனர். நீங்கள் இந்த சபைகளை விட்டுத்தந்தால் நாங்கள் மற்றைய சபைகளிலே உங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தருவோம் என்று அதிலே சில கட்சிகள் கூறியிருந்தனர். எங்களுடைய கட்சியை சேர்ந்த ஒருவர் தவிசாளராக, மேயராக வரக்கூடிய வாய்ப்பு இருக்கின்றபோது எங்களுடைய கட்சியைச் சேர்ந்த எந்த உறுப்பினரும் அந்த சந்தர்ப்பத்தை இன்னுமொரு கட்சிக்கு வழங்குவதை விரும்பமாட்டார்கள். ஏனைய கட்சிகளுடைய செயற்பாடு எவ்வாறாக அமையுமென்று நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம். தேசிய மக்கள் சக்தி ஒரு பேரினவாதக் கட்சியாகும். தமிழ் மக்களுக்கு விரோதமான கட்சியாகும். இந்த மாவட்டத்திலே ஆட்சியமைப்பதற்கு விரும்புமாக இருந்தால் அவர்கள் சேர்ந்து ஆட்சியமைப்பதற்கு முயற்சிகள் எடுக்கட்டும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஆட்சியமைப்பது என்றால் அது அவர்களுடைய முடிவாகும். அதை மக்கள் விளங்கிக் கொள்வார்கள். அதேபோல சங்கு சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது உறுப்பினர்களை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கோ தேசிய மக்கள் சக்திக்கோ ஆதரவாக வழங்கப்போகின்றார்கள் என்றால் மக்கள் அதற்கான தீர்ப்பை வழங்கட்டும். அவர்கள் தமிழ் மக்களுடைய பிரதானமான கட்சியும், கூடிய ஆசனங்களை பெற்ற கட்சியுமான இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு தங்களுடைய ஆதரவை வழங்காது விடுவார்களானால் அவர்களுடைய எதிர்கால அரசியலைப்பற்றி மக்கள் முடிவெடுக்கட்டும். நாங்கள் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருக்கின்றோம். நாங்கள் பிரதானமான கட்சி என்ற வகையிலே எங்களுடைய உறுப்பினர் ஒருவரை அந்த உள்ளுராட்சிமன்றத் தலைவராக முன்மொழிகின்றோம். நீங்கள் உங்களுடைய நிபந்தனையற்ற ஆதரவைத் தரலாம். இலங்கைத் தமிழரசுக் கட்சியை தோற்கடிப்பது மாத்திரம் தான் உங்களுடைய நோக்கம் என்றால் எங்களுடைய கட்சியைத் தோற்கடிப்பதற்கு மனச்சாட்சிக்கு ஒவ்வாத விடயங்களை நீங்கள் செய்வீர்களானால் அதற்கான பதிலை எதிர்வரும் காலங்களில் எங்களுடைய மக்கள் வழங்குவார்கள். பல கட்சிகள் இன்று கைகளில் இருக்கும் விரல்களின் எண்ணிக்கையை விடவும் குறைவான உறுப்பினர்களை பெற்றிருக்கின்றார்கள். அதுவும் இல்லாத நிலைக்கு தள்ளப்படுவார்கள். இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களை அனைத்து சபைகளிலும் தவிசாளராக நியமிப்பதற்கு அனைத்து கட்சிகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் முன்வரவேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் தமிழ் மக்களுக்க எதிரான ஒரு சக்தி பிரதேசங்களில் ஆட்சியமைப்பதற்கு உதவியாக இருக்கின்றீர்கள் என்ற செய்திதான் வெளிவரும். நாளைய தினமிருந்து சபைகளிலே வாக்கெடுப்பு ஆரம்பமாக இருக்கின்றது. போரதீவுப்பற்று, வவுனதீவு சபைகளில் நாங்கள் அறுதிப்பெரும்பான்மையுடன் வென்ற காரணத்தினால் எங்களால் அங்கு ஆட்சியமைக்கக்கூடியதாக இருந்தது. 09 ஆம் திகதி இரண்டு சபைகளிலும் தவிசாளர்கள் கூட்டத்தை நடத்தியிருக்கின்றார்கள். இன்று (11) முதலாவதாக மாநகரசபையிலே வாக்கெடுப்பு நடைபெறவிருக்கின்றது. நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றோம். பல பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கின்றோம். அனைத்து சபைகளிலும் நாங்கள் ஆட்சியமைக்கக்கூடியதாக இருக்கும். மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல சபைகளிலும் வாக்கெடுப்பை நடத்தி முடிப்போம். எங்களுடைய உறுப்பினர்கள் அனைத்து சபைகளிலும் தலைவர்களாக தெரிவுசெய்யப்படுவார்கள். இது ஒரு பாரிய வெற்றியாகும். இந்த வெற்றியிலிருந்து எங்களுடைய அடுத்த இலக்கு மாகாணசபைத் தேர்தலை இலக்கு வைத்து அனைவரும் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களை வைத்து எங்களுடைய மக்களுக்கு பிரதேச ரீதியாக சேவைகளை வழங்கலாம். ஆனால் மாகாண ரீதியாக பல நிர்வாகச்சிக்கல்கள் இருக்கின்றது. சுகாதாரத்துறை, கல்வித்துறை, நீர்ப்பாசனத்துறை, வீதி அபிவிருத்தி எனப் பல துறைகளிலும் மத்திக்கும் மாகாணத்திற்குமிடையில் இருக்கும் குழப்பங்கள் காரணமாக பல நிர்வாகச் சிக்கல்கள் உருவாகியிருக்கின்றன. இதனால் எங்களுடைய மக்கள் அன்றாடம் எதிர்நோக்குகின்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாமலிருக்கின்றனர். இதற்கான தீர்வை காண்பதாக இருந்தால் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும். தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கு ஒரு பாரிய பொறுப்பிருக்கின்றது. நாங்கள் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிகளவான ஆசனங்களை பெற வேண்டும் என்ற நோக்குடன் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சேர்ந்து வேலைகளை செய்திருக்கின்றோம். மாகாணசபைத் தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாங்கள் மூவரும் நீங்கள் 86 பேரும் இணைந்து செயற்பட்டால் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி முதலமைச்சர் பதவியை எடுக்கக்கூடிய ஒரு சூழலை உருவாக்கிக்கொள்ளலாம். இதற்காள நாங்கள் ஓரணியில் நின்று உழைக்க வேண்டும். ஒரு சவாலாக இதனை எடுத்து எங்கடைய அரசியற் பயணத்தை முன்னெடுக்க வேண்டும். நாங்கள் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒவ்வொரு நாளும் பல தரப்புகளுடன் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கின்றோம். வெளியிலிருந்து பலவாறாக விமர்சித்துக் கொள்ளலாம். சில சபைகளிலே ஆட்சியமைப்பதற்காக நாங்கள் விரும்பாத சில வேலைகளையும் சில இடங்களுக்கும் சென்று சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது. எங்களுடைய சத்தியப் பிரமாண நிகழ்வு எல்லா மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை அழைத்து செய்திருக்கின்றனர். அந்தந்த பிரதேசங்களிலிருந்து தெரிவு செய்யப்படுவதற்கு உதவியாக இருந்த உதவி வேட்பாளர்களையும் கிளை உறுப்பினர்களையும் நாங்கள் அழைத்திருக்கின்றோம். கட்சியினுடைய சத்தியப் பிரமாண நிகழ்வென்றால் நாங்கள் அழைப்பிதழ் வழங்கத் தேவையில்லை. அதனை அறிந்தால் அனைவரும் வரவேண்டும். கிடைத்த வெற்றியினுடைய பங்காளிகளாக இருக்க வேண்டும். இனிவரும் காலங்களில் நாங்கள் அனைவரும் இணைந்து ஓரணியாக நின்று இலங்கை தமிழரசுக் கட்சியை, எங்களுடைய மக்களுடைய பிரதான கட்சியை மென்மேலும் பலப்படுத்துவோம் என தெரிவித்தார். -மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்- https://adaderanatamil.lk/news/cmbrheg1o01obqpbsjd7qo0c9

சட்டவிரோத கருக்கலைப்பு – அதீத இரத்தப் பெருக்கினால் பெண் உயிழப்பு!

1 day 6 hours ago
சட்டவிரோத கருக்கலைப்பு – அதீத இரத்தப் பெருக்கினால் பெண் உயிழப்பு! adminJune 11, 2025 யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் சட்டவிரோதமான கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்துள்ளார். சுன்னாகம் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு , வீடொன்றில் சட்டவிரோதமான கருக்கலைப்பினை மேற்கொண்ட போது , அதீத இரத்தப் பெருக்கு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதீத இரத்த பெருக்கே உயிரிழப்புக்கு காரணம் என மரண விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் , சுன்னாக காவவற்துறையினர் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://globaltamilnews.net/2025/216619/

பிறந்த நாள் நினைவு கூறல்: 'திரு வீரகத்திப்பிள்ளை கணபதிப்பிள்ளை கந்தையா' (11/06/1907 – 18/02/2000)

1 day 8 hours ago
பிறந்த நாள் நினைவு கூறல்: 'திரு வீரகத்திப்பிள்ளை கணபதிப்பிள்ளை கந்தையா' (11/06/1907 – 18/02/2000) பிறந்த நாள் இன்று உங்களுக்கு அப்பா நெஞ்சினாலே உங்கள் நினைவு மலர்கிறதே! பிறந்தாலும் மறைந்தாலும் நீங்கள் வாழ்கிறீர்கள் எங்களுள் எப்போதும் தீபமாய் ஒளிர்கிறீர்களே! சாமக்கோழி கூவும் போது எழுந்தீர்கள் நல்லூர் கந்தனை வணங்க சென்றீர்களே! வெள்ளைவேட்டி கட்டி சால்வை அணிந்து நேர்கொண்ட பார்வையுடன் நிமிர்ந்து நடந்தீர்களே! சாவும் வரை சளைக்காமல் உழைத்தீர்கள் சாதாரண வாழ்க்கையையும் இனிமை ஆக்கினீர்களே! உண்மையைச் சொன்னீர் உன்னதமாய் வாழ்ந்தீர் ஒப்பில்லா மகத்துவம் உங்களிடம் இருந்ததே! சான்றோரை மதித்தீர் கற்றோரை போற்றினீர் சாமியாய் இன்று எம்மிடம் வாழ்கிறீர்களே! உங்கள் பெயரில் புகழும்பாசமும் ஒளிர்கிறது நம் இருதயத்தில் தெய்வமாக குடிகொண்டவரே! ஒலிக்காத மௌனத்திலும் உங்களைக் காண்கிறோம் முதுமையின் மென்மையில் உங்களை உணர்கிறோமே! இப்பிறந்த நாளில் உங்களை வணங்குகிறோம் உயிருடன் வாழ்ந்த பாதையை நினைவில் கொள்கிறோமே! - கந்தையா குடும்பம் - Birthday Memoriams: Mr. Veerakathipillai Kanapathipillai Kandiah (11/06/1907 – 18/02/2000) Today we mark your day of birth, Though you’ve long returned to earth. Your voice still echoes in our soul, A guiding light, a steady goal. You rose each dawn with humble grace, To bow before Lord Nallur’s face. With dhoti draped and shawl in hand, You walked with strength across the land. You labored on without complaint, With honest heart, a life so quaint. You taught us truth, you lived it too, A soul so rare, a heart so true. You honored wisdom, revered the wise, In every act, your greatness lies. Today, in thought, you stand so tall, A simple man — yet God to all. No throne, no crown, no worldly fame, Yet love and honor bless your name. We miss your steps, your silent power, Your memory blooms in every flower. Oh Appa, your journey now divine, Still shapes this little life of mine. On your birthday, we bow our head, To the life you lived, the path you led. - Kandiah family -

குடியேற்றவாசிகள் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து லொஸ் ஏஞ்சல்சில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் - வாகனங்கள் தீக்கிரை - ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த தேசிய காவல்படையினரை அழைத்தார் டிரம்ப்

1 day 11 hours ago
காலத்துக்கு காலம் இப்படி ஏதும் வரத்தானே வேண்டும்.

சிறைச்சாலை தலைமையகமே சட்டவிரோதமாக செயற்பட்டது; கைதிகள் விடுப்பு தொடர்பில் ஜனாதிபதி அநுர தெரிவிப்பு

1 day 13 hours ago
நான் சொல்லேல.... எங்கும் எதிலும் ஊழல், அது அம்பலமாகும்போது தமிழர் பக்கம் பிரச்சனையை திசை திருப்புவது. இது உடனடியாக தீர்க்கக்கூடிய பிரச்சனையல்ல. இதற்கு அனுர நிறைய விலை கொடுக்க வேண்டி வரும், அதை செய்தால் இவரை யாரும் அசைக்க முடியாது அரசியலில்.

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

1 day 13 hours ago
ஐ பி எல்லில் விட்டதை இங்கே பிடிக்கும் ஐடியா🤣 ஆ தள்ளு…தள்ளு…🤣 பிறகென்ன வாங்கோ…பழகலாம்🤣 மானாஸ் மானஸ்தனுக்கு இது முக்கியமான போட்டி, அடித்தால்தான் டீமில் நிலைக்கலாம் என்ற நிலையில் அடிக்கவும் கூடும். 1 டவுனாக இறங்கும் பச்சையப்பனும் வெளுக்க கூடும்🤣

குடியேற்றவாசிகள் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து லொஸ் ஏஞ்சல்சில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் - வாகனங்கள் தீக்கிரை - ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த தேசிய காவல்படையினரை அழைத்தார் டிரம்ப்

1 day 14 hours ago
இந்த ஊரை, லாஸ் ஏஞ்சலீஸ், போன்ற ஊர்கள் உலகில் மிகச்சிலவே இருக்கும். அடிக்கடி எரிந்தும் போகின்றது. ஆனாலும் இந்த ஊர் இங்கு வந்து தங்கும் மனிதர்களுக்கு நம்பிக்கையை கொடுத்துக் கொண்டேயிருக்கின்றது. இதுவரை அதிபர் ட்ரம்பின் நிர்வாகம் அமெரிக்காவை விட்டு வெளியேற்றிக் கொண்டிருக்கும் சட்டரீதியற்ற குடியேற்றவாசிகளின் நாளாந்த எண்ணிக்கை முன்னைய அதிபர் பைடனின் காலத்தில் வெளியேற்றப்பட்ட அதே அளவு தான் என்பது நம்ப முடியாத ஒரு தகவல். அரச நிர்வாகத்தின் இவ்வளவு அதிவேக நடவடிக்கைகளும் எண்ணிக்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்றால் எதற்குத்தான் இந்த ஆள் அம்பு சேனை என்ற கேள்வி வரும். மிக அதிகமாக சட்டரீதியற்று தங்கியிருப்பவர்கள் லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றி தான் இருக்கின்றார்கள் என்று இங்கே பிடிக்க வந்திருக்கின்றார்கள் போல. வீட்டருகே ஒரு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் பெரிய மைதானம் ஒன்று இருக்கின்றது. பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் வருவார்கள். பல விளையாட்டுகள் ஒரே நேரத்தில் போய்க் கொண்டிருக்கும். வீட்டிலிருந்து நடந்து தான் போவேன். எல் சால்வடோர் போய் வரும் பலன் இருக்கின்றதோ தெரியவில்லை................🤣.

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

1 day 14 hours ago
நம்ம கேசவன் மகராசன் போட்டு உறுட்டப் போறார். சரித்திரம் ஒன்று எழுதப் படப் போகிறது. பிறகு ஏன் முதலே சொல்லேல என்டு வரக்கூடாது. சரியா. அந்த இந்தக் கதை வேண்டாம். நமக்கு கொண்டாட்டம்தான் வேணும். உங்களைத்தான் நம்பி..... எல்லாத்துக்கும் ஆசைப் பட்டா எப்பிடி. முதல்ல விளையாடச் சொல்லுங்க

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

1 day 15 hours ago
அவுஸ்ரேலிய அணியில் 3ஆவதாக விளையாடிவரும் மானஸ் லபுசேங் மோசமான போர்மில் இருந்து வருவதால் அணியில் அவரின் நிலை தொடர்பில் நெருக்கடிகள் அவருக்குள்ள நிலையில் இந்த போட்டியில் ஆரம்ப துடுப்பாட்டக்காரராக (2ஆவதாக) களமிறங்க உள்ளார். யாரும் இவரை அதிக ஓட்டம் எடுப்பவர் எனும் விசப்பரீட்சையில் இதுவரை இறங்கவில்லை என தெரிகிறது, இந்த போட்டியில் அதிக ஓட்டங்களை எடுத்து பலரிற்க்கும் முட்டைகளை வழங்க வாழ்த்துக்கள். வழமையாக இங்கிலாந்து ஆடுகளம் அவுஸ்ரேலிய ஆடுகளம் போல இருக்காது பந்து அதிகமாக சுவிங் ஆகும் ஆடுகளம் அத்துடன் டூக் பந்தும் அதிகம் சீம் மற்றும் சுவிங் அதிகம் உள்ள இந்த ஆடுகளத்தில் தாமதித்து விளையாடவேண்டும் என கூறுவார்கள், இந்த ஆடுகளத்தில் தென்னாபிரிக்காவினை விட அவுஸ்ரேலியாவிற்கு அதிக அனுபவம் உண்டு, கடந்த காலத்தில் இங்கு அவுஸ்ரேலியா பல வெற்றிகளை குவித்துள்ளது. போட்டியில் கலந்து கொள்ளாதவர்கள் உடனடியாக கலந்து கொள்ளவும், போட்டி முடிவு நேரம் நெருங்கி கொண்டுள்ளது.

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

1 day 15 hours ago
இந்த ஆண்டுஇங்கிலாந்தில் கோடைகாலம் கடும் வரட்சி நிலவுகிறதாக கூறப்படுகிறது, சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமையலாம். Pitch and conditions: Look up and look down It had been a very dry start to the English summer up until the last week. Neither Australia nor South Africa have much experience of playing at Lord's in early June, and there will be some guessing about the conditions. Given the dry spring, the surface is on the drier side which could mean more of an impact for the spinners. The forecast looks good with warm temperatures coming, although there is a chance of a few thunderstorms. South Africa : 1 Aiden Markram, 2 Ryan Rickleton, 3 Wiaan Mulder, 4 Temba Bavuma (capt), 5 Tristan Stubbs, 6 David Bedingham, 7 Kyle Verreynne, 8 Marco Jansen, 9 Keshav Maharaj, 10 Kagiso Rabada, 11 Lungi Ngidi Australia: 1 Usman Khawaja, 2 Marnus Labuschagne, 3 Cameron Green, 4 Steven Smith, 5 Travis Head, 6 Beau Webster, 7 Alex Carey (wk), 8 Pat Cummins (capt), 9 Mitchell Starc, 10 Nathan Lyon, 11 Josh Hazlewood
Checked
Thu, 06/12/2025 - 11:09
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed