புதிய பதிவுகள்2

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் - அரசாங்கம் அனுமதி

18 hours 5 minutes ago
ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் செம்மணிக்கு விஜயம் செய்வது அவசியம் : பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்து 11 JUN, 2025 | 07:40 PM இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு,கிழக்கு பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களைச் சந்திப்பதுடன் செம்மணி மனித புதைகுழு அகழ்வுபப்பணிகளையும் நேரில் பார்வையிட வேண்டும் என்று பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உயர்ஸ்தானிகரின் இலங்கை விஜயமானது உண்மை மற்றும் நீதிக்கான எமது தேடல் தொடர்பில் ஒரு திருப்புமுனையாக அமைவதுடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலய கூட்டத்தொடர் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான வழியொன்றை ஏற்படுத்தித் தரும் என நாம் நம்புகிறோம். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இந்த ஜூன் மாதம் மூன்றாவது வாரம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயமானது கடற்த 9 வருட காலப் பகுதியில் உயர்ஸ்தானிகரால் இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக உள்ளதுடன் அது வடக்கு, கிழக்கு பிராந்தியங்களில் குறிப்பாக திருகோணமலை, செம்மணி மற்றும் முள்ளிவாய்க்காலில் கடந்த காலத்திலும் தற்போதும் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து சாட்சியமளிக்கவும் உரையாடவும் முக்கிய வாய்ப்பொன்றை வழங்குவதாக உள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவையால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலயத்தின் இலங்கையின் பொறுப்புக்கூறல் திட்டத்துக்கு தாக்கல் செய்யப்பட்ட அடையாள வழக்கின் முழுமையாக நிருபிக்கப்பட்ட ஆவணங்கள் மத்தியில் செம்மணி புதைகுழி மற்றும் கிரிஷாந்தி குமாரசுவாமி படுகொலை என்பன குறிப்பிடத்தக்க பகுதிகளைக் கொண்டிருந்தன. இந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கைக்கு 3 நாட்கள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளமை குறித்தும் பாரம்பரிய தமிழ் பிராந்தியமான திருகோணமலைக்கு மட்டுமே விஜயம் செய்யவுள்ளமை பிரித்தானிய தமிழர் பேரவை அறிந்தவுடன் அது செம்மணி மற்றும் முள்ளிவாய்க்கால் உள்ளடங்கலான ஏனைய பிரதேசங்களுக்கு விஜயம் செய்யவும் அந்தப் பிராந்தியங்களில் இடம்பெற்ற கொடூரமான மனித உரிமை மீறல்கள் குறித்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் கலந்துரையாடவும் வலியுறுத்தி உயர்ஸ்தானிகருக்கு கடந்த மே 27 ஆம் திகதி கடிதமொன்றை எழுதி அனுப்பி வைத்திருந்தது.. அண்மையில் செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து சில மீற்றர்கள் தொலைவில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் மற்றும் ஆடைகள் களையப்பட்ட நிலையில் காணப்பட்ட எலும்புக்கூடுகள் உள்ளடங்கலாக 17 க்கு மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை என்பன தொடர்பில் வோல்கர் டர்க் செம்மணிக்கு விஜயம் செய்வதற்கும் நிலைமையை நேரில் பார்வையிடுவதற்கும் பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய கலந்தாலோசனைகளுடன் இணைந்த நீதி மற்றும் பொறுப்புப்கூறலுக்கு உறுதிப்படுத்துவதற்கும் நெறிமுறை ரீதியான கடப்பாட்டுக்குரியவராகிறார். பிரித்தானிய தமிழர் பேரவையானது உயர்ஸ்தானிகருருடன் இதுவரை ஏற்படுத்தியிருந்த தொடர்பாடல்களைின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 திகதியிடப்பட்ட கடிதமானது ஐக்கிய நாடுகள் நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க தோல்வியானது இலங்கை மாதிரியை தம்மைப் பிணைக்கும் நீதியிலிருந்து தப்பிக்கும் நாடுகளுக்கு முன்மாதிரியாக்குவதுடன் இலங்கையை அதன் மோசமான மாதிரியிலிருந்து நல்ல மாதிரிக்கு மாற்றுவதற்கான அவசியத்திலிருந்து வழுவுவதாக உள்ள அதேசமயம் இது மற்றைய நாடுகள் பின்பற்றுவதற்கு ஒரு தடையாக அமைவதாக எச்சரிக்கிறது. அத்துடன் 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் 16 ஆம் திகதியிடப்பட்ட மின்அஞ்சலானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானகராலயத்தின் தீர்மானத்துக்காக தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்ட பொதுப் பிரேரணை குறித்து அச்சமயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உயர்ஸ்தானிகராலயத்தின் மந்தமான முன்னேற்றம்தொடர்பில் கவலையை வெளிப்படுத்துகிறது. இந்த 2025ஆம் ஆண்டு மார்ச் 10 திகதியிடப்பட்.ட கடிதமானது புதிய தேசிய மக்கள் சக்தி ( ஜே.வி.பி) அரசாங்கம் தொடர்பில் குறிப்பிட்டு அதன் சிங்கள அடிப்படைவாதக் கொள்கைகள் சம்பந்தமாக மேற்கோள்காட்டி இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றுக்கு வழியமைத்துத் தர வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்துகிறது. அதேசமயம் இந்த வருடம் மே மாதம் 27 திகதியிடப்பட்ட கடிதமானது இலங்கைக்கு இந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உயர்ஸ்தானிகர் விஜயம் செய்ய உத்தேசித்துள்ளமை குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. அந்தக் கடிதத்தில் பிரித்தானிய தமிழர்கள் மன்றம் முள்ளிவாய்க்கால் மற்றும் செம்மணிக்கு விஜயம் செய்து உள்நாட்டுப் போர் நிறைவுபெற்று 16 வருடங்களாகியும் துன்பத்தை அனுபவித்து வரும் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை நேரில் காண்பதற்கும் தோண்டியெடுக்கப்படும் புதைகுழிகளை பார்வையிடவும் வேண்டிய அவசியம் உள்ளடங்கலானவை குறித்து வலியுறுத்தியுள்ளது. உயர்ஸ்தானிகரோ அல்லது சர்வதேச சமூகமோ இலங்கை அரசாங்கம் அதனது சுத்தமான இலங்கை என்ற வேடங்களுடன் மனித உரிமைகளை மதிப்பதில் சரியான பாதையில் செல்வதாக நிலவும் பொது எண்ணக்கருவுக்கு ஈர்க்கப்படாது ஐக்கிய நாடுகள் சபையில் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள உண்மைகள் மற்றும் புள்ளிவிபரங்களை கவனத்தில் எடுத்துக் கொள்வதன் மூலம் சாதுர்யமாக இருக்க வேண்டியுள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. . மேலும், ஐக்கிய நாடுகள் அமைப்புகளும் சர்வதேச சமூகமும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது உள்ளக குற்றவியல் மற்றும் விசாரணை பொறிமுறை மூலம் போர் குற்றங்களாலும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றச்செயல்களாலும் படுகொலைகளாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியையும் பொறுப்கூறலையும் வழங்கும் என நம்பி தம்மைக் கைவிடுமா என தமிழ் மக்கள் கவலையடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழ் மக்கள் ஐக்கிய மனித உரிமைகள் உயர்ஸ்தானகராலயத்தின் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள 60 ஆவது கூட்டத்தொடர் தமிழர்களுக்கான நீதி, சமாதானம் நாட்டுக்கு ஸ்திரத்தன்மை மற்றும் சுபீட்சம் என்பவற்றைப் பெற்றுத் தரவதற்கு வழியேற்படுத்தித் தரும் என நம்பிக்கை கொண்டுள்ளனர். தற்போது உயர்ஸ்தானிகருக்கு இலங்கையின் படுகொலைத் தளங்கள், மனிதப் புதைகுழிகள், மறைந்துள்ள சித்திரவதை கூடங்கள், சட்டவிரோத தடுப்பு நிலையங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகம் என்பன தொடர்பில் சர்வதேச சமூகத்தின் கவனத்தை குவிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இலங்கையின் 77 வருட வரலாற்றின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையும் ஏனைய சர்வதேச சமூகத்தினரும் மோதல்களுக்கான வடிவங்கள் மற்றும் மூல காரணங்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதி பொறிமுறை மூலம் மட்டுமே அடையாளம் காண முடியும் என்பதையும் இலங்கையில் அவசியமான கட்டமைப்பு மாற்றங்களை ஸ்தாபிப்பதனூடாகவே சுழற்சிமுறையில் வன்முறை மீண்டும் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்த முடியும் என்பதையும் ஒப்புக்கொள்வார்கள் என பிரித்தானிய தமிழர் பேரவை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/217211

ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்தனர் டோனி பிளேயர் நிறுவன பிரதிநிதிகள் ; நான்கு முக்கிய நிறுவனங்களுக்கு நிதி, தொழில்நுட்ப உதவிகள்

18 hours 10 minutes ago
11 JUN, 2025 | 07:24 PM ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் உலகளாவிய மாற்றத்துக்கான டோனி பிளேயர் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. புதிய அரசாங்கத்தினது திட்டங்களின் முன்னுரிமைகளை இனங்கண்டு அதற்கு ஆதரவளிப்பதே இந்த சந்திப்பின் நோக்கமாகும். டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, கமத்தொழில் அமைச்சு, ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் முதலீட்டு சபை ஆகியவற்றால் செயற்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்து, அவற்றின் முன்னுரிமைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கான நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவது குறித்து, இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. டோனி பிளேயர் நிறுவனத்தின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் உலகளாவிய மாற்றத்துக்கான இந்த களப் பயணத்தின்போது, ஒவ்வோர் அமைச்சுக்கும் சென்று திட்டங்களை உன்னிப்பாகக் கண்காணிப்பதுடன், செயற்றிட்டங்களுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் இதன்போது இணக்கம் காணப்பட்டது. ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபோன்சு, டோனி பிளேயர் நிறுவனத்தின் ஆசிய பசுபிக் ஆலோசனைப் பிரிவின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜலீல் ரஷீத், ஆசிய பசுபிக் பணிக்குழாமின் அரசதுறை இணைப்புத் தலைவர் எனா ஏடின், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் பணிப்பாளர் (கமத்தொழில் தொழில்நுட்பம் ) பீ.எம்.வீ.எஸ் பஸ்நாயக்க, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி) ஜானக கீகியனகே, இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுகா எம். வீரகோன், ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் / பிரதான நிறைவேற்று அதிகாரி மங்கள விஜேசிங்க மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/217206

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

18 hours 12 minutes ago
கிருபன் 20 சுவி 20 ஈழப்பிரியன் 20 வாதவூரான் 20 ரசோதரன் 20 எப்போதும் தமிழன் 20 வீரப்பையன் 10 ஏராளன் 10 புலவர் 10 வசி 10 வாத்தியார் 10 அல்வாயான் 10 பிரபா 10 கோஷான் 10 கந்தப்பு 10 நுணாவிலான் 00 செம்பாட்டான் 00 மேலுள்ளவாறு போட்டால் எங்களுக்கு விளங்க இலகுவாக இருக்கும் ஆண்டவரே!

சிறுவர்கள் காய்கறிகள், பழங்களை உட்கொள்வதை தவிர்த்து வருகின்றனர் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

18 hours 26 minutes ago
தற்போதைய சிறுவர்கள் காய்கறிகள், பழங்களை உட்கொள்வதை தவிர்த்து வருகின்றனர்; பெற்றோர்களும் சமூகமும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ 11 JUN, 2025 | 06:07 PM தற்போதைய இளைய தலைமுறையினர் காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வதை வேகமாக தவிர்த்து வருகின்றனர். சுற்றுச்சூழலில் சத்தான மற்றும் சிறந்த பொருட்கள் காணப்பட்டாலும், பள்ளிகளில் அவை குறித்து எவ்வளவு தூரம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும், சிறுவர்கள் காய்கறிகள் மற்றும் பழங்களை விரும்புவதில்லை. பெற்றோர்களும் சமூகமும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 2025ஆம் ஆண்டுக்கான தேசிய ஊட்டச்சத்து மாதத்துக்காக இன்று (11) காலை பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற தேசிய நிகழ்வில் பங்கேற்று உரையாற்றியபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், சுகாதார அமைச்சகம் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதத்தை தேசிய ஊட்டச்சத்து மாதமாக அறிவித்துள்ளது. ஊட்டச்சத்து விடயத்தில் வெகுஜன ஊடகங்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. ஊடக நிறுவனங்கள் ஒளிபரப்பும் செய்திகள் மற்றும் அறிவார்ந்த நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல், அனைத்து அரசு மற்றும் தனியார் ஊடகங்களும் ஊட்டச்சத்து தொடர்பான சரியான செய்தியை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதற்கான முறையான திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். ஊட்டச்சத்து என்பது சுகாதாரத் துறையுடன் மட்டும் தொடர்புடைய ஒரு விடயம் அல்ல. மாறாக பல அமைச்சகங்களின் தலையீட்டின் மூலம் வெற்றிகரமாக அடைய வேண்டிய ஒரு விடயம். இந்த ஆண்டு தேசிய ஊட்டச்சத்து மாதம் 'காய்கறிகள் மற்றும் பழங்கள்’ என்ற கருப்பொருளின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருப்பொருளின் கீழ் நான்கு முக்கிய விடயங்களை அடையாளம் கண்டு சமூகத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தினமும் குறைந்தது இரண்டு வகையான காய்கறிகள், ஒரு வகை கீரை மற்றும் இரண்டு வகையான பழங்களை உட்கொள்ளுதல் ஆரோக்கியத்துக்கு மிக முக்கிய விடயமாகும். முடிந்தவரையில், ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுதல், குறைந்த விலையில் உள்ளூரில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களைத் தெரிவு செய்தல் என்பன முக்கிய விடயங்களாக கருதப்படுகின்றன என்றார். இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க, யுனிசெஃப் பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக், சுகாதார அமைச்சின் செயலாளர்கள், துணை இயக்குநர்கள், மாகாண சுகாதார சேவை இயக்குநர்கள், பிராந்திய சுகாதார சேவை இயக்குநர்கள், மருத்துவமனை இயக்குநர்கள், சிறப்பு மருத்துவர்கள், மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு, அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/217204

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

18 hours 29 minutes ago
எப்பிடி எங்க தொடங்கிறது முக்கியம் இல்லை. எப்பிடி எங்க முடிக்கிறதுதான் நம்ம இலக்கு. அதோட தலைவன் கிருபன் என்டா, என்ன நடந்தாலும் நமக்கு மகிழ்ச்சியே

ஜனாதிபதி அநுர ஜேர்மனியை சென்றடைந்தார்

18 hours 29 minutes ago
ஜேர்மன் ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி அநுர : அரச மரியாதையுடன் வரவேற்பு 11 JUN, 2025 | 07:57 PM ஜேர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க் - வோல்டர் ஸ்டெய்ன்மியரினால் (Frank-Walter Steinmeier) இன்று புதன்கிழமை (11) சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. பேர்லினின் பெல்வீவ் மாளிகைக்கு (Bellevue Palace) சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜேர்மன் முப்படை மரியாதையுடன் வரவேற்கப்பட்டதுடன், முப்படைகளின் அணிவகுப்பையும் பார்வையிட்டார். உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வின் பின்னர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க் வோல்டர் ஸ்டெய்ன்மையருக்கும் (Frank-Walter Steinmeier) இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் சர்வதேச உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், தொழில் பயிற்சி மற்றும் சுற்றுலாக் கைத்தொழில் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/217213

வடக்கு மக்கள் பிரதிநிதியின் பொறுப்பற்ற உரையாடல்

18 hours 32 minutes ago
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்காலத்தில் மாகாணசபை முதலமைச்சர் என்ற உயர் பதவிக்கு போட்டியிட இருக்கும் அர்சனா ஒரு கொலை நிகழ்வுக்கு ஆதரவாக அதை ஒரு funny யாக மகிழ்ச்சியாக எப்படி நனது நண்பியுடன் உரையாடுகிறார் பாருங்கள். மாகாணத்தின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் ஒரு பதவிக்கு வர விரும்பும் ஒருவரால் இப்படி உரையாட முடிகிறதென்றால் வன்முறையை, ஒரு குற்றச்செயலை வெளிப்படையாக ஆதரித்தாலும் தமிழ் மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை தான் இதற்கு காரணம். https://youtu.be/RyiniZWcsAA?si=QCmSOFuqBStO9450

கல்மடுக்குளத்தையும் அதன் கீழான வயல்நிலங்களையும் விடுவியுங்கள் - வனவளத் திணைக்களத்திடம் ரவிகரன் வலியுறுத்து

18 hours 32 minutes ago
11 JUN, 2025 | 06:23 PM வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தமிழர்களின் பூர்வீக கல்மடுக்குளத்தையும், அதன் கீழான வயல்நிலங்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவிடம் வன்னி மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு தமிழ் மக்கள் நீண்டகால இடப்பெயர்வைச் சந்தித்த இடங்கள், தற்போது பயன்பாடின்றி பற்றைக்காடுகளாகக் காணப்படுகின்றபோது, அந்த இடங்களை வனப்பகுதியாகக் கருதி, வனவளத் திணைக்களம் ஆக்கிரமிக்கும் செயற்பாட்டிற்கும் ரவிகரன் வன்மையாக கண்டனம் தெரிவித்தார். இவ்வருடத்திற்கான இரண்டாவது வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (11) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ரவிகரன் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கல்மடுக்குளம் என்றொரு குளம் இருப்பின், அக்குளத்தின் கீழ் மக்களுக்கு வயல்காணிகள் கட்டாயம் இருந்திருக்கும். எனவே, அக்குளத்தின் கீழ் மக்களுக்கு வயல் காணிகள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். இவ்வாறிருக்கும்போது வனவளத் திணைக்களம் மக்களுக்குரிய வயல்காணிகளை பகிர்ந்தளிக்க முடியாது எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென ரவிகரன் கூறினார். அதற்கு வனவளத் திணைக்கள அதிகாரி பதிலளிக்கையில், கல்மடுக்குளம் என வனவளத் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிரதேசம் நடுக்காட்டுக்குள், ஐந்து கிலோமீற்றர் தூரத்திலேயே காணப்படுகிறது. அந்த வகையில் அக்குளம் நடுக்காட்டுக்குள் காணப்படுவதால், அது வனமாக பாதுகாக்கப்படும் காரணத்தினால், அதனை விடுவித்துக் கொடுக்க முடியாத நிலை காணப்படுவதாகத் தெரிவித்தார். வனவளத் திணைக்கள அதிகாரியின் இக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த ரவிகரன், கடந்தகால அசாதாரண சூழ்நிலை காரணமாக குறித்த பகுதியில் குடியிருந்த, விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்ட தமிழ் மக்கள் அப்பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்துவிட்டதாகத் தெரிவித்தார். இவ்வாறு இடம்பெயர்வைச் சந்தித்த மக்கள், அவர்களுடைய பகுதிகளில் மீளக் குடியமர்த்தப்படாத நிலை காணப்படுகிறது. அத்தோடு, அவர்கள் விவசாய நடவடிக்கைக்காகப் பயன்படுத்திய குளங்களும், குளங்களுக்குக் கீழான வயல்நிலங்களும் விடுவிக்கப்படாத நிலையில் உள்ளன. இந்நிலையில், மக்கள் குடியிருந்த மற்றும் விவசாய நடவடிக்கைக்குப் பயன்படுத்திய நிலங்கள் பற்றைக்காடுகளாக காணப்படுகின்றன. மக்கள் விவசாயத்துக்காக பயன்படுத்திய குளமும் வயற்காணிகளும் நீண்டகாலமாக பயன்படுத்தாத நிலையில் பற்றைக்காடுகளாக காணப்படும்போது, அப்பகுதியை வனப்பகுதி எனக் கூறிக்கொண்டு வனவளத் திணைக்களம், அப்பகுதியை விடுவிக்காமல் தொடர்ச்சியாக ஆக்கிரமித்து வைத்திருப்பது நியாயமற்ற செயற்பாடு. கல்மடுக்குளம் என்ற பகுதியில் மக்களால் முன்பு விவசாயம் செய்யப்பட்டமையினால்தான் தற்போதும் கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் இக்குளம் தொடர்பான பதிவுகள் காணப்படுகின்றன. எனவே, அந்த காணிகளை அரசாங்கம் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதைவிடுத்து இவ்வாறாக திணைக்களங்கள் மக்களின் காணிகளை தொடர்ந்தும் அபகரித்து வைத்திருந்தால் மக்கள் எங்கே செல்வார்கள்? கடந்த காலங்களில் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி என பாரியளவில் மக்களால் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு, நெல் வடக்கிலிருந்து தென்பகுதிக்கு ஏற்றுமதி செய்த வரலாறுகளே காணப்படுகின்றன. இவ்வாறு மக்களால் நெற்செய்கைக்காக பயன்படுத்தப்பட்ட பெருமளவான காணிகளை அரச திணைக்களங்கள் ஆக்கிரமித்துள்ள நிலையே தற்போதுள்ளது. இந்த விடயத்தில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க கூடுதல் கவனம் எடுக்கவேண்டும். அரச திணைக்களங்களால் அபகரிக்கப்பட்டுள்ள மக்களின் குடியிருப்பு மற்றும் விவசாயக் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு விடயங்களை ரவிகரன் சுட்டிக்காட்டினார். அதேவேளை கல்மடுக்குளத்தின் கீழ் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு விண்ணப்பித்தவர்களின் தரவுகளையும், அங்கு ஏற்கனவே மக்கள் பயிர்ச்செய்கை மேற்கொண்டமைக்கான ஆதாரங்களையும் வவுனியா வடக்கு பிரதேச செயலரிடம் சமர்ப்பிக்குமாறு கமநல அபிவிருத்தித் திணைக்கள உத்தியோகத்தரிடம் ரவிகரன் இதன்போது அறிவுறுத்தினார். https://www.virakesari.lk/article/217198

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

18 hours 36 minutes ago
கிருபன் 20 (1) 🪑 சுவி 20 (2) ஈழப்பிரியன் 20 (3) வாதவூரான் 20 (4) ரசோதரன் 20 (5) எப்போதும் தமிழன் 20 (6) வீரப்பையன் 10 (7) ஏராளன் 10 (8) புலவர் 10 (9) வசி 10 (10) வாத்தியார் 10 (11)) அல்வாயான் 10 (12) பிரபா 10 (13) கோஷான் 10 (14) கந்தப்பு 10 (15) நுணாவிலான் 00 (16) 🐥 செம்பாட்டான் 00 (17) 🐥 எங்கள் தலைவன் கிருபன். அணி திரள்வோம்

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

18 hours 38 minutes ago
ஓம்… ஆனால் ஹெட்டும், ஸ்மித்தும், கேரியும் விக்கெட்டை தானமாக வழங்கி இராவிட்டால் நாளை லஞ்ச் வரை அவுஸ் ஆடி இருக்கலாம்.

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

18 hours 41 minutes ago
முதலாவது நாள் ஆட்டத்தின் முடிவில் யாழ்கள வேட்பாளர்களது தரநிலை பட்டியல். பலத்த ஆறுமுனை போட்டிக்கு இடையே - சபாநாயகர் கிருபன் ஜி யை ஆட்சி அமைக்க அழைத்துள்ளார். வீரப்பையன் 10 (7) ஏராளன் 10 (8) கிருபன் 20 (1) 🪑 புலவர் 10 (9) சுவி 20 (2) நுணாவிலான் 00 (16) 🐥 ஈழப்பிரியன் 20 (3) வசி 10 (10) வாத்தியார் 10 (11)) செம்பாட்டான் 00 (17) 🐥 அல்வாயான் 10 (12) வாதவூரான் 20 (4) ரசோதரன் 20 (5) பிரபா 10 (13) எப்போதும் தமிழன் 20 (6) கோஷான் 10 (14) கந்தப்பு 10 (15)

நிதி மோசடி தண்டனை பெற்றவருக்கு மன்னிப்பு : ஜனாதிபதி, சிறைச்சாலை திணைக்களத்தின் முரண்பட்ட அறிக்கை

19 hours 3 minutes ago
பொது மன்னிப்பில் ஆள்மாறாட்டம் - இலங்கையில் ஜனாதிபதி பெயரிலேயே நடந்த முறைகேடு பட மூலாதாரம்,PMD கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 10 ஜூன் 2025 ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுகின்ற சிறைக் கைதிகள் தொடர்பில் இம்முறை பாரிய சர்ச்சை எழுந்துள்ளது. ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய அனுமதிக்கப்பட்ட சிறை கைதிகளுக்கு பதிலாக வேறு கைதி விடுதலை செய்யப்பட்டதை அடுத்தே இந்த சர்ச்சை எழுந்துள்ளது. இந்த சர்ச்சை தொடர்பில் உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சிறைச்சாலை திணைக்கள ஆணையாளர் நாயகம், கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் சிறைச்சாலையின் பொறுப்பாளர், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். என்ன நடந்தது? அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட சிறைக் கைதி ஒருவர், இம்முறை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டிருந்தார். நாற்பது லட்சம் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நிதி நிறுவனமொன்றின் அநுராதபுரம் கிளை முகாமையாளருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்ட நிலையில், தண்டனை முழுமையாக நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி லக்மாலி ஹேவாசமினால், இந்தக் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டாளர், மீண்டும் முறைப்பாடு ஒன்றைச் செய்த நிலையிலேயே இந்தச் சம்பவம் மீண்டும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகள், எழுத்து மூலம் நீதிமன்றத்திற்கு முன்வைத்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வெசக் பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் கீழ் இந்தக் குற்றவாளி விடுதலை செய்யப்படுவதாக சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர். இந்த விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, குற்றவாளிக்கு எதிரான வழக்கில் இருந்து விடுதலை செய்திருந்தார். ஜனாதிபதி செயலகத்தில் பதில் பட மூலாதாரம்,PMD இந்நிலையில், ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலில், அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நிதி மோசடியுடன் தொடர்புடைய நபரின் பெயர் உள்ளடக்கப்படவில்லை என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது முறைகேடான நடவடிக்கை எனவும் ஜனாதிபதி செயலகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2025 வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்பவர் விடுவிக்கப்பட்டதாகவும், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் கடுமையான முறைகேடு இருப்பதாகவும் வெளியான செய்தி குறித்து ஜனாதிபதி செயலகம் கவனம் எடுத்தள்ளது. அரசியலமைப்பின் 34 (1) பிரிவின்படி, கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி, சிறைச்சாலை அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகளின் பட்டியல் நீதி அமைச்சுக்கு அனுப்பப்படும். இந்தப் பட்டியல் நீதி அமைச்சினால் பரிசீலிக்கப்பட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்படுகிறது. அதன்படி, ஜனாதிபதியின் அனுமதியுடன், குறித்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும். எவ்வாறாயினும், மேற்குறித்த சம்பவத்திற்கு அமைவாக 2025-05-06 தேதியிடப்பட்ட மற்றும் (06ஃ01 යෝජිතஃ ජ.පො.සමාஃ 05-12ஃ2025) இலக்கத்தில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தால் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த பொது மன்னிப்பு கிடைக்க வேண்டியவர்களின் பெயர்ப் பட்டியலில் 388 கைதிகளின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தன. அத்துடன், அனுராதபுரம் சிறைச்சாலையில் நிதி மோசடி தொடர்பாகச் சிறையிடப்பட்ட நபரின் பெயர் அந்தப் பட்டியலில் எங்கும் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. அதாவது, ஜனாதிபதியால் பொது மன்னிப்புக்காக அனுமதிக்கப்பட்ட 388 பெயர்களில் அந்த நபரின் பெயர் சேர்க்கப்படவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி செயலகம் ஜூன் 06ஆம் தேதி 'ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சிறைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக' என்ற தலைப்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட்டு, அதற்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு முன்னரும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளனவா? கடந்த காலங்களில் நாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட சிறைக் கைதிகளில் தகுதியற்ற சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்த வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவோரின் பட்டியலில் தகுதியற்ற கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றமைக்குப் பின்னணியில் சிறைச்சாலை ஆணையாளர் மாத்திரமன்றி, பின்னணியில் பலரும் இருக்கக்கூடும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், ஃபேஸ்புக் பதிவொன்றின் ஊடாகத் தெரிவித்துள்ளார். அதோடு, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள், அரசியல்வாதிகள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு, விசாரணை, குற்றப் பத்திரிகை, வழக்கு, சிறைத் தண்டனை என்ற பாதையில் பயணிக்க வைக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், இது நிச்சயமாக முதல் சம்பவமாக இருக்க முடியாது எனவும், முன்னைய ஆட்சிக் காலத்திலும் நடந்த இத்தகைய விடுவிப்பு சம்பவ வரலாறுகள் தோண்டி எடுக்கப்பட்டு சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8xgkdrdkqeo
Checked
Thu, 06/12/2025 - 11:09
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed