1 day 4 hours ago
      வீரப் பையா..339 ...50 ஒவரில்   அடிக்க வேணும் ..நம்ம பொண்ணுகளால் முடியுமா...
  
      
    
  
            
      
            1 day 5 hours ago
      தலையற்ற மக்கள் கூட்டம்....😭
  
      
    
  
            
      
            1 day 5 hours ago
      ஏற்கெனவே... "ஆசன வாயிலில்" வைத்து தங்கம் கடத்தும் கோஷ்டிகள்  தானே இவர்கள். 😂
  
      
    
  
            
      
            1 day 5 hours ago
      ரன்ஸ் வேகமாக கூடுது  இந்தியா மகளிர் அணியில் இரண்டு மாற்றம்  மற்றம் படி அதே மகளிர் தான்..........................
  
      
    
  
            
      
            1 day 5 hours ago
      பைத்தியர்... பாராளுமனத்துக்குள் நுழையும் மட்டும், கொஞ்சம் ஒழுங்காக.. மக்கள் பிரச்சினை  சம்பந்தமாக அதிரடியாக களத்தில் இறங்கி குரல் கொடுத்துக் கொண்டுதான் இருந்தவர். அது தொடரும் என்ற நம்பிக்கையில்... மக்கள் வாக்களித்து அனுப்பினார்கள் என கருதுகின்றேன். அவர்.... பாராளுமன்றத்துக்குள் நுழைந்த முதல் நாளே... எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்து, அடாவடி பண்ணும் போதே... அவருக்கு ஏதோ சுகயீனம் இருக்கு என்று நாட்டு மக்கள் அறிந்து கொண்டார்கள். 🤣 இனி ஒரு தேர்தலில்... இவர் போட்டியிட்டால் வெற்றி கிடைக்கும் என்பது சந்தேகமே. ஆனாலும்... எங்களது மக்களை நம்பி, எதுவும் உறுதியாக கூற முடியாது. 😂
  
      
    
  
            
      
            1 day 5 hours ago
      வர்த்தகப் போருக்கு மத்தியில் தென் கொரியாவில் ட்ரம்ப் – ஜி வரலாற்று சந்திப்பு! உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (30) தென் கொரிய விமானப்படை தளத்தில் சீனத் தலைவர் ஜி ஜின்பிங்குடனான சந்திப்பைத் தொடங்கினார். தெற்கு துறைமுக நகரமான பூசானில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள், 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவர்களின் முதல் நேரடி சந்திப்பாகும். அத்துடன், இது தென் கொரியா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் பல வர்த்தக முன்னேற்றங்களைப் பற்றிய ட்ரம்ப்பின் ஆசியா முழுவதும் மேற்கொள்ளும் விசேட பயணத்தின் இறுதிக்கட்டத்தையும் குறிக்கிறது. சந்திப்பின் போது ஜியுடன் கைகுலுக்கிய ட்ரம்ப், நாங்கள் மிகவும் வெற்றிகரமான சந்திப்பை நடத்தப் போகிறோம், அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை, இன்று நாம் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் என்று கூறினார். பேச்சுவார்த்தைகளைத் தொடங்க அவர்கள் தங்கள் பிரதிநிதிகளுடன் அமர்ந்தபோது, உலகின் இரண்டு முன்னணி பொருளாதாரங்களுக்கு இடையில் அவ்வப்போது உரசல்கள் ஏற்படுவது இயல்பானது என்று ஜி ஒரு மொழிபெயர்ப்பாளர் மூலம் ட்ரம்பிடம் கூறினார். மேலும், சீனா-அமெரிக்க உறவுகளுக்கு உறுதியான அடித்தளத்தை அமைக்க ஜனாதிபதி ட்ரம்புடன் தொடர்ந்து பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன் என்றும் அவர் மேலும் கூறினார். சில நாட்களுக்கு முன்பு, இரு நாடுகளுக்கான வர்த்தக பேச்சுவார்த்தையாளர்கள் ஒருவருக்கொருவர் முதன்மை கசப்பான விடயங்களை நிவர்த்தி செய்வதில் அடிப்படை ஒருமித்த கருத்தை எட்டினர். இந்த முன்னேற்றத்தினால், உலகளாவிய வணிகத்தை உலுக்கிய வர்த்தக பதட்டங்கள் தணியும் என்று முதலீட்டாளர்கள் நம்பியதால், டொலருக்கு எதிராக சீனாவின் யுவான் நாணயம் கிட்டத்தட்ட ஒரு வருட உச்சத்தை எட்டியது.  வால் ஸ்ட்ரீட் முதல் டோக்கியோ வரையிலான உலக பங்குச் சந்தைகள் அண்மைய நாட்களில் சாதனை உச்சத்தை எட்டியுள்ளன. ஆனால் இரு நாடுகளும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் போட்டித் துறைகளில் கடுமையாக விளையாடத் தயாராக இருப்பதால், எந்தவொரு வர்த்தகத் தடையும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து பல கேள்விகள் உள்ளன. சீனா ஆதிக்கம் செலுத்தும் துறையான உயர் தொழில்நுட்ப பயன்பாடுகளுக்கு அவசியமான அரிய-பூமி தாதுக்களின் ஏற்றுமதியில் பெய்ஜிங் வியத்தகு முறையில் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்த முன்மொழிந்ததைத் தொடர்ந்து இந்த மாதம் வர்த்தகப் போர் மீண்டும் தொடங்கியது. சீன ஏற்றுமதிகள் மீது கூடுதலாக 100% வரிகள் விதிப்பதன் மூலம் பதிலடி கொடுப்பதாகவும், அமெரிக்க மென்பொருளைப் பயன்படுத்தி சீனாவுக்கான ஏற்றுமதிகளில் தடைகள் விதிக்கப்படுவது உள்ளிட்ட பிற நடவடிக்கைகள் உலகப் பொருளாதாரத்தையே தலைகீழாக மாற்றியிருக்கக்கூடும் என்றும் ட்ரம்ப் சபதம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1451575
  
      
    
  
            
      
            1 day 5 hours ago
      நீங்க வேற விளையாட்டு ஒன்றைத்தானே  நினைத்தீர்கள்?😀  ஒரு பைத்தியரையே தம் பிரதிநிதியாக பாராளுமன்றத்துக்கே அனுப்பிய மக்கள் அல்லவா?
  
      
    
  
            
      
            1 day 6 hours ago
      NPP அரசாங்கம் யாழ்ப்பாண முஸ்லிம்களின் பிரச்சனைகளை தீர்க்குமா..? Thursday, October 30, 2025 கட்டுரை    - எம்.எஸ்.எம். ஜான்ஸின் -    1990  ஆம் ஆண்டு ஆக்டொபர் 30  ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சுமார் 20000  முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். தமிழீழத்தை முஸ்லிம்கள் அற்ற பிரதேசமாக மாற்றியமைப்பதற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களை வெளியேற்ற திட்டமிட்ட புலிகள் அமைப்பு கிழக்கு மாகாணத்தில்   1990  ஜூலை 12  அன்று குருக்கள்மடம்   ஊடாக சென்ற 72  ஹஜ் குழுவினரை படுகொலை செய்தது,  1990  ஆகஸ்ட் 3   அன்று காத்தான்குடி பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்த 147  பேரை  படுகொலை செய்தது , 1990  ஆகஸ்ட் 11 ஆம் திகதி இரவு முதல் 12  ஆம் திகதி  காலை வரை  ஏறாவூர் கிராமங்களில் 173 முஸ்லிம்களை படுகொலை செய்தது உட்பட ஏராளமான முஸ்லிம்களை கொன்று அவர்களை வெளியேற்ற முயற்சித்தும் அது வெற்றி பெறவில்லை.    இந்நிலையில் யாழ்ப்பாணம், மன்னார் , முல்லைத்தீவு, வவுனியா , கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் வாழ்ந்த சுமார் 15000  குடும்பங்களை சேர்ந்த   81000 பேர் புலிகள் அமைப்பால் 1990  ஆக்டொபர் 15  முதல் 30  ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கட்டம் கட்டமாக வெளியேற்றப் பட்டனர்.  இந்த வெளியெர்ராஹ்த்துக்கு இறுதியாக முகம் கொடுத்தது யாழ்ப்பாண முஸ்லிம்கள் ஆவர்.    1400 ஆண்டுகளுக்கு முன்னர்  யாழ்ப்பாணத்தின் தீவுப்பகுதியில் அரபிகளும் நாகர் இன  மக்களில் ஒரு தொகுதியினரும் இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து முஸ்லிம்களைன் பிரசன்னம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது.  இவர்கள் யுத்தம், ஆழிப்பேரலை, மற்றும் சில இனவழிப்பு நடவடிக்கைகள் மூலம் காலத்துக்கு காலம் இடம்பெயர்வுகளை சந்தித்து இறுதியாக யாழ்ப்பாணம் நகர பகுதியில் வாழ்ந்து வந்தனர்.       இனச்சுத்திகரிப்பு வெளியேற்றம்:   தமிழர்களுடன் பல தசாப்தங்களாக அன்னியோன்யமாக சகோதர மனப்பான்மையுடன் வாழ்ந்துவந்த  சுமார் 3500 குடும்பங்களை சேர்ந்த 18000    முஸ்லிம்கள் 1990  ஆக்டொபர் 30  ஆம் திகதி  இரண்டு மணி நேர அவகாசம் வழங்கப் பட்டு வெளியேற்றப் பட்டனர்.  சுமார் 600  க்கும்  மேற்பட்ட கனரக ஆயுதங்கள்  தரித்த புலிகள் இயக்க உறுப்பினர்கள் முஸ்லிம்கள் வாழ்ந்த சோனகர் நகரை சுற்றிவளைத்தனர்.  வீட்டுக்கு ஒருவரை ஜின்னா மைதானத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்து அங்கு வைத்து நீங்கள் உடனடியாக இரண்டு மணித்தியாலங்களுக்கு முஸ்லிம்கள் அனைவரும் தமிழீழத்தை விட்டு வெளியேறவேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப் பட்டு.  எச்சரிக்கை வேட்டுக்களும்   வானத்தை நோக்கி  நடத்தப் பட்டது.    இந்த வெளியேற்றத்தின் போது தமிழீழத்தில் உழைத்தாய் அனைத்தும் தமிழீழத்துக்கே சொந்தம் என  கூறப்பட்டு முஸ்லிம்களின் வெளியேறு பாதைகளில் எல்லாம் சோதனை சாவடிகள் அமைத்து  பணம், நகை, மேலதிக உடைகள் எல்லாம் பறிக்கப் பட்டன. சிலர் 200 ரூபாய் மட்டும் கொண்டுசெல்ல அனுமதிக்கப் பட்டனர்.    வெளியேற்றத்தினால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள்:    யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் யாழ் சோனகர் நகர், பொம்மைவெளி, மண்கும்பான், சாவகச்சேரி , பருத்தித்துறை, கிளிநொச்சி, நாச்சிகுடா, பள்ளிக்குடா , நயினாதீவு பண்ற பிரதேசங்களில் வசித்து வந்தனர்.  முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டபோது எல்லாப் பொருட்களையும் விட்டு விட்டு செல்லுமாறு கூறப் பட்டனர். கொண்டு சென்ற பொருட்களும் புலிகளின் சோதனைச் சாவடிகளில் பறிக்கப் பட்டது.    வெளியேற்றத்தினால் முஸ்லிம்கள் 2000  வீடுகளையும், 16  பள்ளிவாசல்கள், நான்கு பொதுக்கட்டிடங்கள்,  7000  சைக்கிள்கள்,  1500 மோட்டார் சைக்கிள்கள், ஏறக்குறைய 1500 கிலோ தங்க நகைகள், கோடிக்கணக்கான பணம், வியாபார பொருட்கள், ஆடுமாடுகள் கோழி உட்பட எல்லா பொருட்களும் பலவந்தமாக பறித்து எடுக்கப் பட்டன.    அவ்வாறு இழக்கப் பட்ட மொத்த சொத்துக்கள் பொருட்களின் மதிப்பு ஏறக்குறைய 32  பில்லியன்    ரூபாய்களாகும்.  சராசரியாக ஒரு குடும்பம் 91 இலட்சம் ரூபாய் இழப்புகளை சந்தித்துள்ளது.     2025  இல் தற்போதைய நிலை  1990  ஆம் ஆண்டு வெளியேற்றப் பட்ட யாழ்ப்பாண மாவட்ட முஸ்லிம்கள் சுமார் 3800  குடும்பங்களை சேர்த்த சுமார்  20000  பேர்களாகும். அவர்கள் இனஅழிப்பு நடவடிக்கையில் வெளியேற்றப் பட்ட பின்னர் பலரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தஞ்சம் புகுந்தனர். இக்கிரிகொல்லாவ, மதவாச்சி, அனுராதபுரம், நொச்சியாகம, குருநாகல், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கோல்பு, திகாரி, மாபோல, கண்டி, மாவனல்லை, அக்குறணை, கொழும்பு, மொரட்டுவ, பாணந்துறை   , களுத்துறை, பேருவளை என தமக்கு அமைந்த ஊர்களில்  அடைக்கலம் புகுந்து அகதி முகாம்களிலும் , நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் , பொது கட்டிட்டங்கள் பாடசாலை கட்டிடங்கள் போன்றவற்றிலும் தற்காலிகமாக வாழ்ந்தனர்.    இக்கிரிகொள்ளவையில் ஒரு அகதிமுகாமும், புத்தளத்தில் பத்து முகாம்களிலும் கொழும்பில் நான்கு முகாம்களிலும் நீர்கொழும்பில்  ஒரு முகாமிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட பாடசாலைகளிலும் தஞ்சமடைந்த மக்கள் பின்னர் படிப்படியாக இடைத்தங்கல்   முகாம்களுக்கு மாற்றப் பட்டனர்.     கடந்த 35 வருடங்களில் யாழ்ப்பாணத்தில் இருந்து அவ்வாறு வந்த 3800  குடும்பங்களும் தற்போது பல்கிப் பெருகியுள்ளது. அந்த வகையில் புத்தளத்தில் தற்போது சுமார் 5000  குடும்பங்களை சேர்ந்த   22000  பேர் வசிக்கின்றனர். இவ்வாறு நீர்கொழும்பில்   800  குடும்பங்களை சேர்ந்த   3000  பேர், பலவத்துறையில் 125  குடும்பங்களை சேர்ந்த   600  பேர் , கொழும்பில் 2000  குடும்பங்களை சேர்ந்த   8000  பேர், பாணந்துறையில் 300  குடும்பங்களை சேர்ந்த   1500  பேர் , நாட்டின் பல பாகங்களிலும் 500  குடும்பங்களை சேர்ந்த   2200  பேர் வாழ்கின்றனர்.    மத்திய கிழக்கு நாடுகள், பிரித்தானிய, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, சுவீஸ், நியூசீலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் சுமார் ஐநூறு குடும்பங்களை சேர்ந்த 2000 பேரும், தனி நபர்களாக சுமார் 2000  பேரும் வசிக்கின்றனர்.           2009  யுத்த முடிவும் 2010  மீள் குடியேற்றமும்    2009 மே மாதம் 19  ஆம் திகதி யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் வாழ்ந்த யாழ்ப்பாண முஸ்லிம்கள் மீண்டும் தமது தாயகப் பூமியான யாழ்ப்பாணத்துக்கு சென்று மீளக் குடியேறும் வாய்ப்பு உண்ட என ஆராய்ந்தனர்.     அவ்வாறு சென்றவர்கள் தமது  2200  வீடுகள் 16 பள்ளிவாசல்கள் நான்கு பாடசாலை கட்டிடங்கள், கடைகள்  என  எல்லாம் உடைத்தழிக்கப் பட்டு காடுகள் வளர்ந்து, பற்றையாகவும், மீளக் குடியேறும் வாய்ப்பு குறைவானதாக இருப்பதையும் அவதானித்தனர்.    அவ்வாறு   இருந்தும் சுமார் 2000  குடும்பங்கள் கிராம அதிகாரிகள் மற்றும் பிரதேச சபை ஊடாக மாவட்ட செயலக மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுக்கு மீள்குடியேற விருப்பம் தெரிவித்து விண்ணப்பங்களை சமர்பித்திருந்தனர். அவர்கள் தமது உடைந்த வீடுகளை தகரத்தால் மறைத்துக் கொண்டும், கூரையை தரப்பால் கொண்டு மறைத்துக் கொண்டும் மேலும்  பாடசாலை போன்ற பொது கட்டிடங்களிலும் தற்காலிகமாக தங்கியிருந்து வீடமைப்பு மற்றும் மீள்குடியேற்ற உதவிகளை எதிர்பார்த்திருந்தனர்.    நாட்கள் வாரங்களாகின, வாரங்கள் மாதமாகி அது வருடங்களாகியது. 2010 ஆம் ஆண்டு வீட்டமைக்க விண்ணப்பித்தவர்களுக்கு 2015 வரை ஒரு வீடு கூட வழங்கப் படவில்லை. இதே காலப் பகுதியில் இந்திய வீட்டமைப்பு திட்டத்தின்   கீழ் சுமார் 50000 வீடுகள் வவுனியா,மன்னர், கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் கட்டப்பட்டது. அதே ஒன்று இலங்கை அரசாங்கம்  யாழ்ப்பாண மாவட்டத்தில் 4000 பேருக்கு காணிகளை மாவட்ட செயலகம் ஊடாக பெற்று அதில் வீடுகளை கட்டிக்க கொடுத்து இருந்தது.   இந்த திட்டங்களில் முஸ்லிம்கள் உள்வாங்கப்ப படவில்லை.    2015  ஆம் ஆண்டு யாழ்ப்பாண சோனகர் நகரை சேர்ந்த நபரொருவர் வீடமைப்பு உதவி கேட்டு உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்த பின்னர் அடுத்த மூன்று வருடங்களில் 225  வீடுகள் கட்ட உதவிகள் வழங்கப் பட்டன.      இந்நிலையில்  2010 ஆம் ஆண்டு   2000  குடும்பங்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்கள் தொலைந்து விட்டதாக கூறி 2016 ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் வீடமைப்பு உதவிக்கு விண்ணப்பங்கள் மாவட்ட செயலகத்தால் சேகரிக்கப் பட்டது. அந்த பதிவின் கீழ் சுமார் 3000  குடும்பங்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து இருந்தனர்.   அவர்கள் யாருக்கும் இதுவரை வீடுகள் வழங்கப் பட்டதாக தகவல் இல்லை.    புறக்கணிப்பு    யாழ்ப்பாண முஸ்லிம்களை மீள் குடியேற்ற அவர்களுக்கு வீடமைப்பு திட்டங்களை வழங்க மாறி மாறி வந்த அரசாங்கமும் மாவட்ட செயலகமும் தவறிவிட்டது என்பது கசப்பான உண்மையாகும்.  கருப்பு ஆக்டொபர்  (BLACK OCTOBER )    1990  ஆம் ஆண்டு வடமாகாணத்திலிருந்து 81000 முஸ்லிம்கள்  பாசிச புலிகளால் அநீதியாக வெளியேற்றப்  பட்ட அந்த இனவழிப்பு   நடவடிக்கையை  கண்டித்தும் அம்மக்களுக்கு குறிப்பாக யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு மீள் குடியேற்ற உதவிகள் மீள் கட்டமைப்பு வசதிகள் செய்யப் பட வேண்டுமென்ற கோரிக்கைகளை உள்ளடக்கியதாக இந்த கருப்பு ஆக்டொபர் வருடா வருடம் இடம்பெயர்ந்த சமூகத்தால் நினைவு படுத்தப் படுகின்றது.  புதிய தேசிய மக்க சக்தி அரசாங்கம்    இந்நிலையில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் வீடமைப்பு தேவை, கல்வி அபிவிருத்தி பொது சொத்துக்கள் பாதுகாப்பு , வேலை வாய்ப்பு போன்ற பிரச்சினைகளை கௌரவ ஜனாதிபதி அனுரா குமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் தீர்க்கும்  என நம்பியவர்களாக பின்வரும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் தேவைகளை முன்வைக்கின்றோம்  .   இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்ட மக்கள் இன்னும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் மற்றும்  புத்தளத்தில் அகதியாக வந்தவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் போன்றவற்றுக்கான தீர்வை புதிய  அரசாங்கம் முன்வைக்கும் என நம்பி பின்வரும் தேவைகளை  அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மீளக் குடியேறியுள்ள நபர்களுக்கு சோனகர் நகருக்கு அண்மையாக 300 வீடுகளை அமைத்தல் அல்லது 300 குடுப்பினங்களுக்கு தேவையான தொடர் மாட்டி குடியிருப்புகளை அமைத்தல்.    புத்தளத்தில் இருந்து யாழ்ப்பாணம் சென்று குடியேற விரும்பும் சுமார் 100  குடும்பங்களுக்கு காணியும் வீடும் அமைத்துக் கொடுத்தல்.     யாழ் ஒஸ்மானியா கல்லூரிக்கு 15  கம்பியூட்டர்களைக் கொண்ட  பயிற்சி நிலையம் ஒன்றை   அமைத்தல்.   யாழ் ஒஸ்மானியா கல்லூரிக்கு  லைப்ரரி, மண்டப வசதி உட்பட 10  கம்பியூட்டர்களைக் கொண்ட  பயிற்சி நிலையம் போன்றவற்றை கொண்ட கட்டிடம்  ஒன்றை   அமைத்தல்.   புத்தளத்தில் தில்லையடி பாடசாலைக்கும் பத்து வகுப்பறைகளை கொண்ட புதிய கட்டிடம் ஒன்றை அமைத்தலும்  அதில்    15  கம்பியூட்டர்களைக் கொண்ட  பயிற்சி நிலையம் ஒன்றை   அமைத்தல்.   புத்தளத்தில் சுமார் 300 குடும்பங்களுக்கு வீடமைப்பு திட்டம் ஒன்றை நடைமுறைப் படுத்தல்.    https://www.jaffnamuslim.com/2025/10/npp_30.html
  
      
    
  
            
      
            1 day 7 hours ago
      எப்படிப் பட்ட கிறுக்கன்களை எல்லாம், யாழ் மக்கள் தமது பிரதிநிதியாக தேர்ந்து எடுக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது.   பெருமையாக வாழ்ந்த தமிழ்ச்  சமூகம்... இன்று பலரின் நகைப்புக்கு இடமாகி விட்டது. இது எங்கு போய் முடியப் போகுதோ.... 😭
  
      
    
  
            
      
            1 day 7 hours ago
      பப்ஜி (PUBG) என்பது PlayerUnknown's Battlegrounds என்பதன் சுருக்கமாகும். இது ஒரு ஆன்லைன் மல்டிபிளேயர் விளையாட்டு ஆகும், இதில் 100 வீரர்கள் ஒரு தீவில் இறங்குகிறார்கள். கடைசியாக நிற்கும் வீரரே வெற்றி பெறுவார். இந்த விளையாட்டில், வீரர்கள் ஆயுதங்கள் மற்றும் பிற உபகரணங்களைத் தேடி, எதிரிகளை வீழ்த்த வேண்டும்.  விளையாட்டின் நோக்கம்: ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களைச் சேகரித்து, எதிரிகளை வீழ்த்தி, கடைசியாக உயிர் பிழைத்தவராக இருக்க வேண்டும். விளையாட்டு முறை: வீரர்கள் ஒரு பெரிய வரைபடத்தில் இறங்கி, விளையாட்டின் போது கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி எதிரிகளைத் தேடி அவர்களை வீழ்த்த வேண்டும். விளையாட்டு அனுபவம்: பல வீரர்கள் ஒரே நேரத்தில் ஆன்லைனில் விளையாடும் அனுபவத்தை இது வழங்குகிறது. விளையாட்டு வகைகள்: இது பல வடிவங்களில் கிடைக்கிறது, இதில் மொபைல், பிசி மற்றும் கன்சோல் பதிப்புகள் அடங்கும். விளையாட்டின் அடிப்படை: இது 2000 ஆம் ஆண்டில் வெளியான பேட்டில் ராயல் என்ற ஜப்பானியத் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டது.   நன்றி: கூகிள்.
  
      
    
  
            
      
            1 day 7 hours ago
      'அழிவற்ற அன்பின் ஆனந்தம் ஆகாதோ?'   பெண் நிலவு உன்னைப் பார்த்து  வெண் நிலவும் பொறாமை கொள்ளுதோ  கண்ணழகி உன்னைப் பார்த்த நானும்     வண்ண ஒளி கந்தனை மறந்தேனோ?    அலைகடலென திரண்ட அடியார் கூட்டத்தில்  அலைமோதுதே என்மனம் உன் விழிகளில்  அறியாத உணர்வுகளின் வரிகள்  எல்லாம்  அழகாக உன்னுதட்டினில் புதைத்து எனோ?    வாழ்க்கை ஓடத்தில் நீயும் நானும் வாடாத மலராய் இருக்க மாட்டோமா    வாலிபம் தந்த காதல் மோகம்  வாசனை வீசி எம்மை அணைக்காதா?      மொழியும் உணர்வும் பின்னிய பந்தம் விழியில் பேசிய அன்புச் சொந்தம்  வழியொன்றில் மலர்ந்த காதல் சந்தம்    அழிவற்ற அன்பின் ஆனந்தம் ஆகாதோ?   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,  அத்தியடி, யாழ்ப்பாணம்]    'அழிவற்ற அன்பின் ஆனந்தம் ஆகாதோ?' https://www.facebook.com/groups/978753388866632/posts/32106754852306412/?
  
      
    
  
            
      
            1 day 8 hours ago
      Live 2nd Semi Final (D/N), DY Patil, October 30, 2025, ICC Women's World Cup PrevNext Australia Women (16.1/50 ov) 107/1 India Women AUS Women chose to bat.
  
      
    
  
            
      
            1 day 8 hours ago
      வயிற்றுக்குள் இருந்த குழந்தையை வயிற்றை கீறி எடுத்தனர் என்பதுபோல் இதுவும் ஒரு கதை. கிழக்கில் நடந்த அசம்பாவிதம் வடக்கில் நடந்தேறிவிடக்கூடாது என்பதற்காகவே இது நிகழ்ந்திருக்கலாம். இல்லையேல் வடக்கிலும் அதுதான் நடந்திருக்கும். பேசுவது தமிழ் ஆனால் அவர்களுக்கென்று ஒரு தனித் தீர்வு வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள். அதற்காக அவர்கள் போராடாமல், தமிழர் தீர்வு கேட்டால் மட்டும் அவர்களுக்கும் குடைச்சல் எடுக்கும்.  புலிகள் தவறு என்பதை ஏற்று, மன்னிப்பு கேட்டு, மீளவும் குடியேற அழைத்தனர். ஆனால் இவர்கள் தாம் செய்த தவறை இன்று வரை ஏற்றுக்கொள்ளவில்லை. இருபகுதியும் விட்டுக்கொடுத்தாலே நல்லிணக்கம் ஏற்படும். ஆனால் இவர்களோ தமது தவறை மறைத்து எம்மை குற்றவாளிகளாக்குவது இவர்கள் தம்மை தனிமைப்படுத்திக்கொள்ளவே முடியும்.
  
      
    
  
            
      
            1 day 8 hours ago
      தமிழரின் புலம்பெயர அல்லது வலொற்றுகரமாக புலம் பெயரர வைக்க (சிங்களம் உருவாக்கிய) ஏதுநிலைகள், இதன் மிகப் பிரதான காரணம் (சிங்களத்தை பொறுத்தவரை அதன் சிந்தனைகள் இலங்கைதீவு மூலக சிங்கள பெரும்பான்மை ஆக்குவது, காலம் போக சிலாபம், நீர்கொழும்பு போல சிங்களம் ஆகிவிடும், (அனால் இப்போதும் அங்கெ உள்ளவர்கள் சைவசமயத்தை பெரும்பாலும் பின்பற்றுவது.) ஆயினும், முதுமை அடையும் சமூகம் / நாடுகள் இப்போது உலகளாவிய பிரச்சனை.  நான் நினைக்கிறன். தமிழரில்  மேலும் கூடாவாக இருக்கும். மேற்கு நாடுகள் வளர்ந்த பின்பே, முதுமை அடைதல்  எதிர் நோக்குகின்றன. பொதுவாக ஆபிரிக்காவை தவிர, ஏனைய நாடுகள் வளரும் போது.
  
      
    
  
            
      
            1 day 8 hours ago
      இது பகுதியாகவேனும் உண்மையாக இருக்க வேண்டும். சீன உலக பொருளாதாரத்தில் இணைந்த பின்பே ஏறத்தாழ 39 நாடுகள் மத்திய வருமானத்துக்கு உயர்ந்து உள்ளன. இந்த காலத்தில் மேற்றுகின்  / us இன் மற்ற நாடுகளுக்கான பொருளாதார கொள்கைகள் மாறவில்லை. நிதி கொள்கைகளை imf மாற்றவவில்லை. சீனா un க்குள்ளும்  பொருளாதார பங்கீடு  சீர்திருத்தங்களை, அமெரிக்கா / மேற்கை எதிர்த்து செய்துள்ளது என செய்திகள் உள்ளது  அனால், குறிப்பாக  எவை என்று தெரியாது.
  
      
    
  
            
      
            1 day 8 hours ago
      இளகின இரும்பை கண்டால் கொல்லர் எதையோ…தூக்கி…தூக்கி அடிப்பாராம் என்பது போல் இருக்கிறது சில முஸ்லிம் “தலைவர்களின்” அறிக்கை அக்கப்போர். எமது தலைவர்கள் போலவே அவர்களின் தலைவர்களும் தம்மக்களின் அவலத்தை வைத்து ஆதாயம் தேடுவதில் சூரர். இதில் புலிகள் கழட்ட முடியாத நகையை வெட்டி எடுத்தனர் என ஒரு புது புரளியை இவர் கிளப்பி உள்ளார்.
  
      
    
  
            
      
            1 day 9 hours ago
      மக்கள் பிழைத்து கொண்டார்கள் 😡
  
      
    
  
            
      
            1 day 9 hours ago
      ஆரினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் . .........!  💐
  
      
    
  
            
      
            1 day 9 hours ago
      வல்லிய சீவன் .......நீடுழி வாழட்டும் ........!  🙏
  
      
    
  
            
      
            1 day 9 hours ago
      அதென்ன பப்ஜி விளையாட்டு .........! 😗
  
    Checked
              Fri, 10/31/2025 - 17:25
           
கருத்துக்களம் - All Activity
  
  Subscribe to புதிய பதிவுகள்2 feed