புதிய பதிவுகள்2

யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் உயிர்மாய்க்க முயன்று வைத்தியசாலையில்

2 days 6 hours ago
பப்ஜி (PUBG) என்பது PlayerUnknown's Battlegrounds என்பதன் சுருக்கமாகும். இது ஒரு ஆன்லைன் மல்டிபிளேயர் விளையாட்டு ஆகும், இதில் 100 வீரர்கள் ஒரு தீவில் இறங்குகிறார்கள். கடைசியாக நிற்கும் வீரரே வெற்றி பெறுவார். இந்த விளையாட்டில், வீரர்கள் ஆயுதங்கள் மற்றும் பிற உபகரணங்களைத் தேடி, எதிரிகளை வீழ்த்த வேண்டும். விளையாட்டின் நோக்கம்: ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களைச் சேகரித்து, எதிரிகளை வீழ்த்தி, கடைசியாக உயிர் பிழைத்தவராக இருக்க வேண்டும். விளையாட்டு முறை: வீரர்கள் ஒரு பெரிய வரைபடத்தில் இறங்கி, விளையாட்டின் போது கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி எதிரிகளைத் தேடி அவர்களை வீழ்த்த வேண்டும். விளையாட்டு அனுபவம்: பல வீரர்கள் ஒரே நேரத்தில் ஆன்லைனில் விளையாடும் அனுபவத்தை இது வழங்குகிறது. விளையாட்டு வகைகள்: இது பல வடிவங்களில் கிடைக்கிறது, இதில் மொபைல், பிசி மற்றும் கன்சோல் பதிப்புகள் அடங்கும். விளையாட்டின் அடிப்படை: இது 2000 ஆம் ஆண்டில் வெளியான பேட்டில் ராயல் என்ற ஜப்பானியத் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டது. நன்றி: கூகிள்.

'அழிவற்ற அன்பின் ஆனந்தம் ஆகாதோ?'

2 days 6 hours ago
'அழிவற்ற அன்பின் ஆனந்தம் ஆகாதோ?' பெண் நிலவு உன்னைப் பார்த்து வெண் நிலவும் பொறாமை கொள்ளுதோ கண்ணழகி உன்னைப் பார்த்த நானும் வண்ண ஒளி கந்தனை மறந்தேனோ? அலைகடலென திரண்ட அடியார் கூட்டத்தில் அலைமோதுதே என்மனம் உன் விழிகளில் அறியாத உணர்வுகளின் வரிகள் எல்லாம் அழகாக உன்னுதட்டினில் புதைத்து எனோ? வாழ்க்கை ஓடத்தில் நீயும் நானும் வாடாத மலராய் இருக்க மாட்டோமா வாலிபம் தந்த காதல் மோகம் வாசனை வீசி எம்மை அணைக்காதா? மொழியும் உணர்வும் பின்னிய பந்தம் விழியில் பேசிய அன்புச் சொந்தம் வழியொன்றில் மலர்ந்த காதல் சந்தம் அழிவற்ற அன்பின் ஆனந்தம் ஆகாதோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] 'அழிவற்ற அன்பின் ஆனந்தம் ஆகாதோ?' https://www.facebook.com/groups/978753388866632/posts/32106754852306412/?

அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்

2 days 7 hours ago
வயிற்றுக்குள் இருந்த குழந்தையை வயிற்றை கீறி எடுத்தனர் என்பதுபோல் இதுவும் ஒரு கதை. கிழக்கில் நடந்த அசம்பாவிதம் வடக்கில் நடந்தேறிவிடக்கூடாது என்பதற்காகவே இது நிகழ்ந்திருக்கலாம். இல்லையேல் வடக்கிலும் அதுதான் நடந்திருக்கும். பேசுவது தமிழ் ஆனால் அவர்களுக்கென்று ஒரு தனித் தீர்வு வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள். அதற்காக அவர்கள் போராடாமல், தமிழர் தீர்வு கேட்டால் மட்டும் அவர்களுக்கும் குடைச்சல் எடுக்கும். புலிகள் தவறு என்பதை ஏற்று, மன்னிப்பு கேட்டு, மீளவும் குடியேற அழைத்தனர். ஆனால் இவர்கள் தாம் செய்த தவறை இன்று வரை ஏற்றுக்கொள்ளவில்லை. இருபகுதியும் விட்டுக்கொடுத்தாலே நல்லிணக்கம் ஏற்படும். ஆனால் இவர்களோ தமது தவறை மறைத்து எம்மை குற்றவாளிகளாக்குவது இவர்கள் தம்மை தனிமைப்படுத்திக்கொள்ளவே முடியும்.

இலங்கையின் முதியோர் தொகை 18% ஆக அதிகரிப்பு!

2 days 7 hours ago
தமிழரின் புலம்பெயர அல்லது வலொற்றுகரமாக புலம் பெயரர வைக்க (சிங்களம் உருவாக்கிய) ஏதுநிலைகள், இதன் மிகப் பிரதான காரணம் (சிங்களத்தை பொறுத்தவரை அதன் சிந்தனைகள் இலங்கைதீவு மூலக சிங்கள பெரும்பான்மை ஆக்குவது, காலம் போக சிலாபம், நீர்கொழும்பு போல சிங்களம் ஆகிவிடும், (அனால் இப்போதும் அங்கெ உள்ளவர்கள் சைவசமயத்தை பெரும்பாலும் பின்பற்றுவது.) ஆயினும், முதுமை அடையும் சமூகம் / நாடுகள் இப்போது உலகளாவிய பிரச்சனை. நான் நினைக்கிறன். தமிழரில் மேலும் கூடாவாக இருக்கும். மேற்கு நாடுகள் வளர்ந்த பின்பே, முதுமை அடைதல் எதிர் நோக்குகின்றன. பொதுவாக ஆபிரிக்காவை தவிர, ஏனைய நாடுகள் வளரும் போது.

சீனாவின் அடுத்த 5 வருடகால வளர்ச்சி இலங்கையின் சுபீட்சத்துக்கான கதவுகளைத் திறக்கும் - இலங்கைக்கான சீனத் தூதுவர்

2 days 7 hours ago
இது பகுதியாகவேனும் உண்மையாக இருக்க வேண்டும். சீன உலக பொருளாதாரத்தில் இணைந்த பின்பே ஏறத்தாழ 39 நாடுகள் மத்திய வருமானத்துக்கு உயர்ந்து உள்ளன. இந்த காலத்தில் மேற்றுகின் / us இன் மற்ற நாடுகளுக்கான பொருளாதார கொள்கைகள் மாறவில்லை. நிதி கொள்கைகளை imf மாற்றவவில்லை. சீனா un க்குள்ளும் பொருளாதார பங்கீடு சீர்திருத்தங்களை, அமெரிக்கா / மேற்கை எதிர்த்து செய்துள்ளது என செய்திகள் உள்ளது அனால், குறிப்பாக எவை என்று தெரியாது.

அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்

2 days 7 hours ago
இளகின இரும்பை கண்டால் கொல்லர் எதையோ…தூக்கி…தூக்கி அடிப்பாராம் என்பது போல் இருக்கிறது சில முஸ்லிம் “தலைவர்களின்” அறிக்கை அக்கப்போர். எமது தலைவர்கள் போலவே அவர்களின் தலைவர்களும் தம்மக்களின் அவலத்தை வைத்து ஆதாயம் தேடுவதில் சூரர். இதில் புலிகள் கழட்ட முடியாத நகையை வெட்டி எடுத்தனர் என ஒரு புது புரளியை இவர் கிளப்பி உள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் உயிர்மாய்க்க முயன்று வைத்தியசாலையில்

2 days 8 hours ago
பப்ஜி விளையாட்டு தோல்வியால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் வலி கிழக்கு முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அகிப் சிவகுமார் சிகிச்சை பலனின்றி மரணமானார். நம்ம யாழ்ப்பாணம் இவன் போன்றவர்களை உறுப்பினராக்கிய மக்கள் முட்டாள்கள். Ilango Mahendra

இலங்கையின் முதியோர் தொகை 18% ஆக அதிகரிப்பு!

2 days 8 hours ago
இது இலங்கையில் ஏற்படும் மூளைவறட்சியால் ஏற்பட்டதாக இருக்காதா ....? இள வயது தொழில்முனைவோர் முதல் கல்விமான்கள் வரை வெளிநாட்டிற்கு ஓடித்தப்பிக்கொண்டிருக்க வெளிநாடுகளுக்கு பிரயோசனமற்ற முதியவர்கள் தப்பிக்க வழியேதும் இன்றி நாட்டில் தேங்குவதால் இந்த நிலை ஏற்படக்கூடுமல்லவா ....? சடுதியான அதிகரிப்பு என்பது குடிமக்களின் பாரிய அளவிலான இடப்பெயர்வால் நடந்துள்ளதாகவே தெரிகிறது

இலங்கையின் முதியோர் தொகை 18% ஆக அதிகரிப்பு!

2 days 8 hours ago
இலங்கையின் முதியோர் தொகை 18% ஆக அதிகரிப்பு! ஆசிய பிராந்தியத்தில் வேகமாக வளர்ந்து வரும் முதியோர் மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2012 ஆம் ஆண்டில், இலங்கையின் முதியோர் மக்கள் தொகை மொத்த மக்கள் தொகையில் 12% ஆக இருந்ததாகவும், 2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 18% ஆக அதிகரித்துள்ளதாகவும் ஆலோசகர் சமூக வைத்தியர் நிஷானி உபேசேகர தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் மேலும் உரையாற்றிய அவர், 2012 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மக்கள் தொகையில் 12% பேர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள். 2024 மக்கள் தொகை கணக்கெடுப்பில், இது 18% ஆக உயர்ந்துள்ளது. 2040 ஆம் ஆண்டுக்குள், மக்கள் தொகையில் 25% – அதாவது, ஒவ்வொரு நான்கு பேரில் ஒருவர் – முதியவர்களாக இருப்பார்கள் என்று நாங்கள் கணித்துள்ளோம். ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இலங்கை அதன் முதியோர் மக்கள்தொகையில் அதிக வளர்ச்சி விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலைமை முக்கியமாக பிறக்கும் போது ஆயுட்காலம் அதிகரிப்பதாலும் பிறப்பு விகிதங்கள் குறைவதாலும் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். https://athavannews.com/2025/1451563
Checked
Sat, 11/01/2025 - 14:29
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed