3 days 9 hours ago
சுமத்திரன். 50% சிங்களவன். மிகுதி. 50% தமிழன்். தலையில். தலப்பாகையுடன். மாடு. பூட்டி. வயல். உழுவதில். திறமைசாலி. பேச்எசுவார்த்தைகளின். போதும். ஆழமாக. சிந்தித்து. பேசி. பேச்சுவார்த்தையை. இந்த. ஆட்சிக் காலம் முழுவதும் இழுத்து. அடிப்பார் கலர் சேட்டுடன். வருவார். பார்த்தால். அவரே. ஜே விபி. மாதிரித் தான். தெரியும். ஆகையால் அனுர ஆட்கள். எதிர்த்து. பேசமாட்டார்கள். எனவே. தீர்வு. விரைவில். கிடைக்கும்.
3 days 9 hours ago
Pitch and conditions The game will be played on the pitch on which Sri Lanka played Bangladesh. That track was devoid of grass and had a bright brown look to it. It is expected to be a high-scoring game. There has been rain in Navi Mumbai in the lead-up to the match, with the India Meteorological Department (IMD) issuing a yellow alert for Wednesday and Thursday, but the forecast for matchday has cleared up somewhat. The match will go into a reserve day should it not finish on Thursday. கிரிக் இன்போவின் ஆடுகள (பிட்ச்) அறிக்கை இது, வெளிர் கபிலநிற ஆடுகளம் என கூறப்பட்டுள்ளது, கந்தப்பு கூறுவது போல இது மட்டையாளருக்கான ஆடுகளம். பொதுவாக இந்த ஆடுகளத்தில் நாணய சுழற்சியில் முதல் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்வார்கள், இங்கு மைதான ஈரலிப்பு இருக்காது பெரிய ஓட்டத்தினை எடுத்து அதன் பின்னர் அந்த அழுத்தத்தினை எதிரணி மீது பிரயோகிக்கலாம். ஆனால் இரண்டு நாள் மழை வரலாம் எனும் அச்சத்தில் இருந்தமையால் (மழை இல்லை) ஆடுகளம் மூடப்பட்டே இருந்திருக்க வேண்டும் அதனால் ஆடுகளத்தில் ஈரலிப்பு காணப்படும் அதனால் முதலாவது பந்து வீச்சு சிறப்பாக இருக்கும். இந்த ஆடுகளம் ஈரலிப்பினை தொடர்ந்து தக்க வைக்காது, பந்து மட்டைக்கு இலகுவாக வரும் அதிக ஓட்டங்கள் எடுக்கும் போட்டியாக வாய்ப்புள்ளது, ஆரம்பத்தில் மேகம் மூட்டம் காணப்பட்டால் ஆடுகள ஈரலிப்பு என்பவற்றினை பயன்படுத்தில் முதலில் பந்து வீசும் அணி எதிரணி ஆரம்ப விக்கெட்டுக்களை எடுக்க முடியும். போட்டிக்கு முன்னர் பிட்ச் நிலமையினை பொறுத்து முடிவுகளை எடுப்பார்கள். இந்த ஆடுகளத்தில் நல்ல அளவினை விட கொஞ்சம் புல்லராக வீசுவார்கள் அதன் மூலம் பந்து சுவிங் ஆகுவதற்கான ஏது நிலையும் ஏற்படும், மட்டையாளர்கள் பெரிதும் முன் பக்க எல்லை நோக்கி அடித்தாடுவார்கள். ஆரம்ப ஓவர்களில் 1சிலிப் + 1 கலி வைத்து 4,5 விக்கட் லைனில் குட் லெந்தினை விட புல்லராக வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீசுவார்கள். விரல்களில் இருந்து நழுவும் கட்டர்கள், Off cutters இந்த ஆடுகளத்தில் பயனுள்ள தெரிவாகும் என கருதுகிறேன், பந்து உள்ளே வருவது போல பிரமையினை உருவாக்கி மட்டையின் வெளிப்புறமாக சென்று 3 ஆவது விக்கெட்டினை வீழ்த்தும் அல்லது பிடி கொடுக்க வைக்கும். இதனை உறுதி செய்யும் விதமாக பவர் பிளேயில் களத்தடுப்பினை எல்லை கோட்டு களத்தடுப்பாளர்கர்கள் இருவரும் டீப் தேர்ட் , டீப் சுகுயார் லெக் இல் களத்தடுப்பு வைப்பார்கள். ஆடுகள ஈரலிப்பு இருந்தால் முதல் பந்து வீசும் அணி சுழல் பந்து வீச்சாளர்களையும் பவர் பிளேயில் பயன்படுத்துவார்கள். இதே போல ஒரு அவுஸ்ரேலிய இந்திய போட்டியில் ஒரு இந்திய இரசிகர் வெல்வதற்காக பிறந்தவர்கள் என ஒரு பதாகையினை காட்ட மிக பெரிய ஓட்டத்தினை அவுஸ்ரேலியா துரத்தி வென்றது, அன்றைக்கு இந்தியணிக்கு பிடிச்ச சனி அடுத்த இரண்டு போட்டிகள் வரை தொடர்ந்தது, உங்களது இந்த ஆசீர்வாதம் இன்று மட்டும் இந்தியணிக்கு போதுமாக இருந்தால் நன்றாக இருக்கும்😁.
3 days 9 hours ago
இப்ப தான் பார்த்தேன் இவா அடிச்சு ஆடக் கூடியவா மற்ற மகளிருக்கு பதில் இவாவை அணியில் இணைத்து இருக்கினம்..............இந்தியாவின் தொடக்க மகளிர் மீது நம்பிக்கை வந்து விட்டது.......................சின்ன வயது அடிச்சு ஆட தொடங்கினா அடி தான்................ இவாவும் காயம் காரனமாக இந்த உலக கோப்பையில் ஆரம்பத்தில் சேர்க்க வில்லை காயத்தில் இருந்து மீண்டு வந்து விட்டா🙏💪..........................
3 days 9 hours ago
3 days 10 hours ago
3 days 10 hours ago
ஷபாலி வர்மா விளையாடுவா போல. இவ நல்லா அடிச்சு ஆடக் கூடிய ஆள். நல்ல தொடக்கம் குடுத்தா என்டா, மிச்சத்த ஷிமிரிதி பார்த்துக்கொள்வா. பிரத்திகா ஆடமாட்டா என்றுதான் நினைக்கிறேன்.
3 days 11 hours ago
பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு தேவயிலை என்று நினைக்கிறவர் நிச்சயமாக சுமந்திரனுடந்தான் பேசுவினம்
3 days 11 hours ago
நாளைக்கு தான் உண்மையான மகளிர் கிரிக்கேட் இந்தியாவின் தொடக்க மகளிர் வங்கிளாதேஸ்சுக்கு எதிராக விளையாடின போது காலில் காயம் ஏற்பட்டு வெளிய போனவ நாளைக்கு யார் இந்தியா சார்பாய் தொடக்க மகளிரா விளையாட போகினம் தெரியாது......................................
3 days 11 hours ago
ஏன் இலங்கை வாழ் முஸ்லீம்கள் சிங்களவன் எப்படித்தான் அடித்தாலும் தமிழில் கதைத்துக்கொண்டு சிங்களவனுக்கு வக்காளத்து வாங்கிறவங்கள்? அதுக்கி நீங்கள் பதில் சொல்லுங்கோ பிறகு இதிக்கு பதில் எடுப்போம்
3 days 12 hours ago
தென் ஆபிரிக்கா கையில் கோப்பை போக வாய்ப்பு மிக குறைவு போன வருடம் அடிச்சு பிடிச்சு பினலுக்கு வந்து நியுசிலாந்திடம் தோத்தவை..............................
3 days 12 hours ago
அது ஒபாமா மாதிரி சிங்கமா இருந்தா சரி ஆனால அசிங்கமாக இருக்குதே
3 days 12 hours ago
ஏன் எல்லோரும் சுமந்திரனோடயே பேசுகினம்?🧐 எங்கண்ட பார் சிறியும் இந்தமுறை ஐநாவிலை இங்லிஷ்ல ஸ்பீச் குடுத்தவர்தானே! 😎
3 days 12 hours ago
சும்மா சிரிப்பதற்க்கு மட்டுமே அண்ணா😁😁😁😁😁🥰🥰🥰🥰🥰..........................
3 days 12 hours ago
இன்றைய மந்திரம். விளையாட்டு ஒரு வினோதம்
3 days 12 hours ago
உலக அளவில் இங்லாந்தில் தான் அதிக அளவு கிரிக்கேட் கிலப் இருக்கு................சமர் காலம் வந்தால் இங்லாந்தில் தொடர்ந்து இடை விடாது பல போட்டிகள் வைப்பினம் அதில் திறமையான மகளிர தான் இந்த உலக கோப்பைக்கு தெரிவு செய்தவை தென் ஆபிரிக்காவிடம் இப்படி தோப்பினம் என்று நான் நினைத்து கூட பார்க்க வில்லை.................................
3 days 12 hours ago
🤣................... அதுக்காக ரத்தம் கக்குவேன் என்று என்னை வெருட்டக் கூடாது................ எத்தனை ஆடுகள், மாடுகள், கோழிகள், பன்றிகள், ஒரு கடல் அளவு மீன்கள்............... இப்படி ஏராளமாக சாப்பிட்டுச் சேர்த்த சுத்தமான ரத்தத்தை வீணாக்கலாமா...............😜.
3 days 13 hours ago
ரசோதரன் அண்ணா தான் ஜக்கம்மாவை அக்கம்மா என சொன்னவர் ஹா ஹா நான் இல்லை ஹா ஹா.........................
3 days 13 hours ago
29 Oct, 2025 | 06:48 PM (நா.தனுஜா) சீனாவின் நீண்டகால ஒத்துழைப்புப் பங்காளி என்ற ரீதியில், அடுத்த 5 வருடகாலத்தில் சீனா அடையவிருக்கும் வளர்ச்சியானது இலங்கையின் அபிவிருத்திக்கும், சுபீட்சத்துக்கும் அவசியமான வாய்ப்புக்களை வழங்கும் என இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 15ஆவது தடவையாக நடைமுறைப்படுத்தப்படும் ஐந்தாட்டுத் திட்ட அமுலாக்கத்தை அடுத்து 'புத்தாக்கம் பகிரப்பட்ட அபிவிருத்திக்கு வாய்ப்பளிக்கிறது' எனும் தலைப்பில் செவ்வாய்க்கிழமை (28) கொழும்பிலுள்ள மரினோ ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகையிலேயே சீனத்தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: 1949ஆம் ஆண்டு மக்கள் சீனக்குடியரசு ஸ்தாபிக்கப்பட்ட வேளையில், தனியொரு கார், விமானம், கனரக வாகனத்தைக் கூட சீனாவினால் உற்பத்தி செய்யமுடியவில்லை. அதனைத்தொடர்ந்து 1953 ஆம் ஆண்டு முதன்முதலாக ஐந்தாண்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது சீனாவினால் வடிவமைக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்ட 14 திட்டங்கள் இப்போதும் அமுலில் உள்ளன. அதன்மூலம் விவசாய நாடாகத் திகழ்ந்த சீனா உலகளாவிய ரீதியில் பாரிய கைத்தொழில் உற்பத்தியாளராகவும், பாரிய வர்த்தக நாடாகவும், மிக உயர்ந்தளவு வெளிநாட்டுக்கையிருப்பை வைத்திருக்கும் நாடாகவும், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகும் நிலைமாற்றமடைந்தது. அதுமாத்திரமன்றி உலகளாவிய ரீதியில் மிக அரிதாகவே எட்டப்பட்டிருக்கும் அடைவுகளான தொடர் பொருளாதார வளர்ச்சி மற்றும் நீண்டகால சமூக ஸ்திரத்தன்மை ஆகிய இரண்டையும் சீனா அடைந்துள்ளது. சீனப் பொருளாதாரமானது வலுவான அடித்தளம், பல்வகை வாய்ப்புக்கள், மீண்டெழும் தன்மை மற்றும் ஆழமான இயலுமை என்பவற்றைக் கொண்டமைந்திருக்கின்றது. அத்தோடு பல்வேறு உள்ளக மற்றும் வெளியக அச்சுறுத்தல்களையும், சவால்களையும் கையாள்வதற்கான தகைமையும், தன்னம்பிக்கையும் சீனாவிடம் உள்ளன. சீனாவின் நீண்டகால ஒத்துழைப்புப் பங்காளி என்ற ரீதியில், அடுத்த 5 வருடகாலத்தில் சீன அடையவிருக்கும் வளர்ச்சியானது இலங்கையின் அபிவிருத்திக்கும், சுபீட்சத்துக்கும் அவசியமான வாய்ப்புக்களை வழங்கும். இவ்வருடத்தின் தொடக்கத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சீனாவுக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது இருநாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் பரஸ்பர அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்புசார் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. அதேபோன்று இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரதமர் ஹரினி அமரசூரிய சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் எமது பரஸ்பர அபிவிருத்தித்திட்டங்கள்சார் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதை முன்னிறுத்தி இலங்கையுடன் நெருக்கமாகப் பணியாற்றத் தயாராக இருக்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/229006
3 days 13 hours ago
ஜெய் ஜக்கம்மா
3 days 14 hours ago
Oct 29, 2025 - 05:20 PM - எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி முதல் இந்தியாவுக்கான விசா, கடவுச்சீட்டு மற்றும் அனைத்து தூதரக சேவைகளும் நேரடியாக கையாளப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இதன்படி இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், கண்டி உதவி உயர்ஸ்தானிகராலயம் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள துணைத் தூதரகம் ஆகியவற்றினால் குறித்த சேவைகள் நேரடியாக கையாளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், விசா தொடர்பான விடயங்களை தற்போது கையாளும் சேவை வழங்குநர் எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை மட்டுமே இயங்கும் எனக் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, அடுத்த திங்கட்கிழமை முதல் அனைத்து விசா, கடவுச்சீட்டு மற்றும் தூதரக தொடர்பான சேவைகளும் உயர்ஸ்தானிகராலயத்தால் நேரடியாகக் கையாளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmhbxpguf01aeqplprg899ifh
Checked
Sun, 11/02/2025 - 05:34
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed