புதிய பதிவுகள்2

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா

3 days 11 hours ago
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா Feb 28, 2026 - 08:01 AM கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இம்முறையும் கோலாகலமாக கச்சத்தீவில் இன்று (28) நடைபெறுகிறது. இந்தத் திருவிழா இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின் ஒன்றிணைவுடன் நடத்தப்படுகிறது. புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவிற்கு பொதுவாக 3500-க்கும் மேற்பட்ட இந்திய பக்தர்கள் கச்சத்தீவுக்கு வருகை தருகின்றனர். இக்கொடியேற்ற நிகழ்வில் நெடுந்தீவு பங்குத்தந்தை பத்தினாதன் கலந்துகொண்டதுடன், அவராலேயே திருவிழாக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு உற்சவ நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. கொடியேற்றத்தைத் தொடர்ந்து யாழ் ஆயர் யாழ் மறைமாவட்ட ஆயர் ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் தலைமையில், பல பங்குத்தந்தையர்களின் பங்களிப்புடன் விசேட ஆராதனைகள் இடம்பெறுகின்றன. யாழ்ப்பாணத்திலிருந்து தென்மேற்காக சுமார் 64 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா, நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டது. சுமார் 1.15 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட சிறிய தீவான கச்சத்தீவு, இலங்கைத் தீவுக்கூட்டத்தில் இலங்கையிலிருந்து வெகு தொலைவிலும் இந்தியாவுக்கு மிக அருகிலும் அமைந்துள்ள ஒரு தீவாகும். இதன் உரிமையை முன்னிறுத்தி கடந்த காலத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அரசியல் ரீதியான முரண்பாடுகள் கூட ஏற்பட்டிருந்தன. எவ்வாறாயினும், 1974 ஆம் ஆண்டில் இரு நாட்டு மீனவர்களும் அதனைப் பயன்படுத்துவது தொடர்பான நிபந்தனைகளுடன் கச்சத்தீவின் உரிமை இலங்கைக்கு வழங்கப்பட்டது. இவ்வாறான பின்னணியிலும் கூட, வருடாந்தம் இரண்டு நாட்கள் அத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா இரு நாட்டு மீனவர்களின் பங்களிப்புடன் கொண்டாடப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmm5pffg20006356pewqn4cwu

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 days 11 hours ago
பாகிஸ்தானின் அரை இறுதி வாய்ப்பு - என்ன செய்ய வேண்டும். இலங்கையை 64 ஓட்டங்களால் வெல்ல வேண்டும், அல்லது 13.1 பந்துப் பரிமாற்றங்களில் துரத்திப் பிடிக்க வேண்டும். எனக்கென்றால், இது நடக்கும் போல் தெரியவில்லை.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 days 11 hours ago
பெரும்பாலும் அரை இறுதி போட்டி முடிவில் நான் பின்னுக்கு போவேன். பின்னுக்கு போவதற்கு,அவுஸ்திரேலியா பாகிஸ்தானில் படுதோல்வி அடைந்தது தெரிந்தும் தென்னாபிரிக்காவை தெரிவு செய்யாமல் அவுஸ்திரேலியாவை தெரிவு செய்ததும், இங்கிலாந்திடம் 3-0 க்கு என்ற கணக்கில் இலங்கை தோல்வி அடைந்தது என்பது தெரிந்தும் இலங்கை நியூசிலாந்து போட்டியில் இலங்கையை தெரிவு செய்ததும் முக்கிய காரணங்கள்

மெக்சிகோவில் பிரபல போதைப்பொருள் கும்பல் தலைவன் சுட்டுக் கொலை - சுற்றுலா நகரமும் விமான நிலையமும் முற்றுகை!

3 days 11 hours ago
இளம் காதலியால் சரிந்த பேரரசு லத்தீன் அமெரிக்கப் பிராந்தியம் உலகின் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலின் முக்கிய மையமாக உள்ளது என்பது ரகசியமல்ல. உலகின் பெரும்பாலான கொக்கைன் உற்பத்தி கொலம்பியா, பெரு மற்றும் பொலிவியாவை மையமாகக் கொண்டு நடக்கிறது. மெக்சிகோவை மையமாகக் கொண்டு ஹெரோயின் மற்றும் செயற்கைப் போதைப்பொருட்களான 'ஐஸ்' (Ice) மற்றும் ஃபெண்டானில் உற்பத்தி அதிகரித்துள்ளது. இப்பிராந்தியத்தில் போதைப்பொருள் கடத்தலை மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் வன்முறை கும்பல்கள் கட்டுப்படுத்துகின்றன. இவை 'கார்டெல்' (Cartel) என்று அழைக்கப்படுகின்றன. மெக்சிகோவில் இத்தகைய கும்பல்கள் சட்டத்திற்கு அஞ்சுவதில்லை. பொலிஸ் அதிகாரிகள், வழக்கறிஞர்களைப் பகிரங்கமாக மக்கள் முன்னிலையில் அவர்கள் கொன்று குவிக்கின்றனர். கடத்தல், கப்பம் கோருதல் மற்றும் ஆள் கடத்தல் ஆகியவற்றிலும் இவர்கள் ஈடுபடுகின்றனர். சில நகரங்கள் மட்டுமல்ல, முழு மாகாணங்களே இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. மெக்சிகோவில் 'சினலோவா கார்டெல்' மற்றும் 'ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்' (CJNG) ஆகிய இரண்டு முக்கிய கும்பல்கள் உள்ளன. மெக்சிகோவில் பரவிய பீதி கடந்த சில நாட்களாக மெக்சிகோ போர்க்களமாக மாறியுள்ளது. பேருந்துகள், கார்கள் எரிக்கப்பட்டன. அரசு அலுவலகங்கள், எரிபொருள் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பல மாகாணங்களில் பயங்கரவாதம் பரவியது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்லாது, இந்தியாவும் மெக்சிகோவில் உள்ள தனது குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியது. இதற்குக் காரணம், ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல் அமைப்பின் ஆயுதமேந்திய தலைவர் நெமேசியோ ரூபன் ஒசெகுவேரா செர்வாண்டஸ் அல்லது 'எல் மென்ச்சோ'வை மெக்சிகோ இராணுவம் சுட்டுக் கொன்றதாகும். பல தசாப்தங்களாகச் சட்டத்திலிருந்து தப்பித் தலைமறைவாக இருந்து, கொடூரமான குற்றங்களைச் செய்து வந்த 'எல் மென்ச்சோ' இறுதியில் ஒரு பெண்ணால் சிக்கினான். யார் இந்த இளம்பெண்? ஜாலிஸ்கோ மலைப்பகுதியில் மறைந்திருந்த 'எல் மென்ச்சோ'வைத் தேடும் பணியில் மெக்சிகோ மற்றும் அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக இருந்தன. அவன் இருக்கும் இடத்தை அறிய அவனது நெருக்கமானவர்களைப் புலனாய்வுத் துறையினர் கண்காணித்தனர். அப்போதுதான் அவனது இளம் காதலி குறித்த விபரங்கள் கிடைத்தன. அரசாங்கம் அந்தப் பெண்ணின் பெயரைப் பகிரங்கப்படுத்தவில்லை என்றாலும், ஊடகத் தகவல்களின்படி அவர் மரியா ஜூலிசா (Maria Julissa) எனத் தெரியவந்துள்ளது. 25 வயதான இவர் சமூக வலைத்தளங்களில் பிரபலமான ஒரு மாடல் அழகி. அவருக்கு 35 இலட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். கடந்த வார இறுதியில் அவர் 'எல் மென்ச்சோ'வுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் மூலமாகவே 'எல் மென்ச்சோ' இருக்கும் இடத்தை இராணுவம் துல்லியமாகக் கண்டறிந்தது. தற்போது ஜூலிசாவுக்கு கொலை மிரட்டல்கள் வரத் தொடங்கியுள்ளன. தனக்கும் 'எல் மென்ச்சோ'வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அவர் மறுத்தாலும், அவர் மூலமே இரகசியத் தகவல் கசிந்ததாகக் கூறப்படுகிறது. இறுதி வேட்டை பிப்ரவரி 22-ஆம் தேதி, மெக்சிகோ இராணுவம் ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி 'எல் மென்ச்சோ' மறைந்திருந்த இடத்தை முற்றுகையிட்டது. கார்டெல் உறுப்பினர்களுக்கும் இராணுவத்திற்கும் இடையே பயங்கரமான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 22 பாதுகாப்புப் படை வீரர்களும், 30-க்கும் மேற்பட்ட கும்பல் உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர். சண்டையின்போது பலத்த காயமடைந்த 'எல் மென்ச்சோ', மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தான். அவனது மரணச் செய்தி கேட்டதும் அவனது கும்பல் ஆவேசமடைந்து நகரங்களில் வன்முறையில் ஈடுபட்டது. மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷைன்பாம், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார். அடுத்த தலைவர் யார்? 'எல் மென்ச்சோ'வின் மரணத்திற்குப் பிறகு அந்த கும்பலுக்குள் அதிகாரப் போட்டி ஏற்பட்டுள்ளது. அவனது மகள் ஜெசிகா ஜோனா ஒசெகுவேரா (குற்ற உலகின் ராணி என அழைக்கப்படுபவர்) அடுத்த தலைவராக வரக்கூடும் எனப் பேசப்படுகிறது. அதே நேரத்தில், எதிரி கும்பலான 'சினலோவா கார்டெல்' இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இடங்களைக் கைப்பற்ற முயல்கிறது. யார் இந்த எல் மென்ச்சோ? 1966-இல் பிறந்த இவன், சிறுவயதில் வறுமை காரணமாக போதைப்பொருள் தோட்டங்களில் வேலை செய்தான். ஒரு காலத்தில் மெக்சிகோவில் பொலிஸ் அதிகாரியாகவும் பணியாற்றினான். பின்னர் போதைப்பொருள் உலகிற்குள் நுழைந்து தனது சாம்ராஜ்யத்தை உருவாக்கினான். அவனது தலைக்கு அமெரிக்கா 15 மில்லியன் டாலர் சன்மானம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/இளம்-காதலியால்-சரிந்த-பேரரசு/50-373063

"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!

3 days 11 hours ago
30 வருடத்துக்கு முன்பு இவர்கள் திருமணம் செய்தபோது எவ்வளவு காலம் சேர்ந்து வாழ்வார்கள் என நான் நினைத்ததுண்டு. திரைப்படங்களில் நடிக்கும் பெரும்பாலான நாயகர்களின் ஓழுக்கம் பற்றி சொல்லத்தேவையில்லை.

"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!

3 days 14 hours ago
இளைய தளபதி விஜய் தனது குடும்ப பிரச்சனைகளை சுமுகமாக தீர்த்துவைப்பார் என எதிர்பார்ப்போம். தனுஷ், ஏ ஆர் ரஹ்மான், ஜெயம் ரவி, இமாம் என ஒரு படையே ஒரே விதமான சிக்கலுக்குள் மாட்டியுள்ளது போல் தெரிகின்றதே. இவர்களின் வயதும் கிட்டத்தட்ட ஒரே அளவுதான்.

பொலிஸ் மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடு செய்யலாம்: 2026 இல் மேம்படுத்தப்பட்ட ‘‘Tell IGP’ சேவை!

3 days 14 hours ago
முன்னாள் புலனாய்வு பணிப்பாளர் பயங்கரவாதி எனும் அளவில் இலங்கை நிலமை போகிது. இப்பத்தைய போலிஸ் மா அதிபரை நம்பி தகவல்களை அனுப்பலாமோ?
Checked
Tue, 03/03/2026 - 14:23
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed