3 days 17 hours ago
இலங்கைத் திருநாட்டின் பெருமைகள். தங்கமகள் மற்றும் தங்கமகன் சர்வதேச விளையாட்டுப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கத்தை வென்று வந்த முஸ்லீம் பெண்ணும், கானா நாட்டில் 50 கிலோ தங்கம் வாங்க, இரண்டு மில்லியன் அமெரிக்க டொலரை கொடுத்து ஏமாந்த முன்னாள் கிழக்கு மாகாண முதல்வர் ஹிஸ்புல்லாவும். Rooban Mahan
3 days 17 hours ago
169 இந்த ஸ்கோரை தனி ஒரு மகளிரால் அடிக்க முடியாது மீதம் இருக்கும் போட்டியில் , அவுஸ்ரேலியா மகளிரை தெரிவு செய்தவைக்கு முட்டை தான் அவுஸ்ரேலியா மகளிர் கப்டன் தான் ஒரு விளையாட்டில் அதிக ரன்ஸ் அடிச்சா..........இப்போது தென் ஆபிரிக்கா மகளிர் அடித்து விட்டா இமயமலை ஸ்கோர...................................
3 days 17 hours ago
மன்னார் காற்றாலைத் திட்டத்தைப் பற்றி இது வரை நான் கண்ட கட்டுரைகளில் எல்லாத் தரவுகளையும், சட்ட ஆதாரங்களையும் உள்ளடக்கிய ஒரேயொரு கட்டுரை இது மட்டும் தான். இரண்டாம் தடவையும் வாசிக்க வேண்டும், முழுவதையும் விளங்கிக் கொள்ள. இந்தத் தரவுகளை வைத்துக் கொண்டு யாராவது இலங்கையில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்காலத் தடையுத்தரவு கோரியாவது ஏதாவது வழக்குப் போட்டிருக்கிறார்களா இது வரை? தேர்தல் நேரம் மட்டும் வெளிப் பட்டு வரும் "ஜனாதிபதி சட்டத்தரணிகள்" எவராவது ஒரு சூழல் பாதுகாப்பு சட்டத் தரணியோடு இணைந்து இதை உச்ச நீதிமன்றத்திற்குக் கொன்டு போக முடியாதா? இலங்கையில், இந்த விடயங்களில் eminent domain என்ற அரசுக்கான விசேட உரிமை சட்டத்தில் இருக்கிறதா?
3 days 17 hours ago
இங்லாந்தின் தொடக்க மகளிர் மூன்று பேர் 5ஓவருக்கு உள்ள அவுட்.............................
3 days 18 hours ago
🔴 கடுமையாக ஏமாற்றப்பட்டிருக்கும் ஹிஸ்புல்லா! கானா நாட்டின், அக்ராவில் உள்ள நீதிமன்றம் ஒன்று, போலித் தங்க ஒப்பந்தம் மூலம் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் முஹம்மது ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இது குறித்து கானா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட பதினொருவருக்கும் தலா 500,000 கானா செடிகள் (சுமார் $33,000) ஜாமீன் தொகை விதிக்கப்பட்டது. சந்தேக நபர்கள் 2023-ஆம் ஆண்டில் சதி செய்து, அதிக அளவிலான தங்கத்தை வழங்க முடியும் என்று கூறி, இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் ஹிஸ்புல்லாவை மோசடி செய்ததாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். பணத்தைப் பெற்ற பிறகு, அந்த குழுவினர் தங்கத்தை வழங்கத் தவறியதாகவும் குறிப்பிடப்படுகிறது. தேசிய பாதுகாப்பு நடவடிக்கையின் போது, சந்தேக நபர்கள் அக்ராவின் வெய்ஜா எஸ்.சி.சி பகுதியில் கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அதிகாரிகள் தங்கமாக இருக்கலாம் என்று நம்பப்படும் இரண்டு மஞ்சள் உலோகப் பொருட்களைக் கைப்பற்றினர். அவற்றின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க ஆய்வகச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. குற்றம் சாட்டப்பட்ட 11 பேர் மீதும் குற்றம் செய்யச் சதி செய்தல், பொய்ப் பிரதிநிதித்துவத்தின் மூலம் மோசடி செய்தல் மற்றும் மோசடி செய்ய முயற்சித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் நவம்பர் 20-ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் மேலும் அங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. Vaanam.lk
3 days 18 hours ago
வாய்ப்பில்லை ராஜா.
3 days 18 hours ago
319பெரிய ஸ்கோர் இங்லாந் இந்தப் பெரிய ஸ்கோரை அடிச்சு வெல்ல முடியுமோ தெரியாது...........................
3 days 18 hours ago
இந்தியாவில்... கைது செய்யப் படும் இலங்கைத் தமிழர் பலருக்கும் விடுதலைப் புலி முத்திரையை குத்துவது, இந்தியாவை... பிடித்த ஒரு வியாதி. அப்படி குத்தும் போதுதான்... விடுதலைப்புலிகளால் இன்னும் இந்தியாவிற்கு ஆபத்து என்று சர்வதேசத்திற்கு காட்டவும், விடுதலைப் புலிகளை மீதான தடையை ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்கவும் அவர்களுக்கு உதவும். இப்படி பலர்... புலி முத்திரை குத்தப் பட்டு தமது வாழ்க்கையை இழந்த ஈழத்தமிழர் ஏராளம். காந்தி வேசம் போட்டுக் கொண்டு... உலகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கும் நேர்மை அற்ற சகுனி நாடுதான் இந்தியா. ராஜீவ் காந்தி கொலையில் சம்பந்தப் பட்டதாக கூறப் பட்டு... 30 வருடங்களுக்கு மேலாக இந்திய சிறையில் இருந்து மரணித்த சாந்தன் கூட... ராஜீவ் காந்தி கொலையில் சம்பந்தப் படாத ஒருவர் தான். அந்நேரம் வெளிநாடு போக இந்தியாவிற்கு போனவரை ராஜீவ் கொலையில் முடிச்சுப் போட்டு சிறையில் அடைத்த நயவஞ்சகர்கள். சாந்தன் என்ற பெயரில் உள்ள வேறு ஒருவரை கைது செய்ய வேண்டிய இடத்தில், அப்பாவியான இவரை கைது செய்து... கேடு கெட்ட வேலை செய்த நாடு தான் இந்தியா. இந்த நாடு... எப்ப சுக்கு நூறாக உடையுதோ... அன்றுதான் ஈழத்தமிழனுக்கு நிம்மதி.
3 days 19 hours ago
2009 உடன் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டுவிட்டது. விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர், தலைமை இல்லை. இங்கே மறைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் வெடிபொருட்கள் 2009 அல்லது அதற்கு முற்பட்டதா? அல்லது குடு அடிக்கும்/விற்கும் கோஷ்டி விடுதலை புலிகள் அமைப்பு என கூறப்படுகின்றதா?
3 days 19 hours ago
கார்திகா சாதி என்னவாம்? இல்லை ஏன் கேக்கிறன் எண்டா… குகேஷ் தெலுங்கன், கார்த்திகா தமிழச்சி என அரசியல் செய்ய வசதியாய் இருக்கும்… அதுக்குத்தான் 😂
3 days 19 hours ago
பேரன் ஆரினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
3 days 19 hours ago
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்களை விமானத்தில் தாக்கும் பயணி; வைரலாகும் காணொளி! கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி ரியாத்தில் இருந்து கொழும்புக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL266 இல், விமான ஊழியர்கள் தங்களைத் தாக்கியதாகக் கூறப்படும் ஒரு சவுதி அரேபிய பயணியைத் தடுக்க முயற்சிக்கும் பதட்டமான சம்பவத்தைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது. கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின்படி, விமானம் தரையிறங்கத் தயாராகும் போது இந்த வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் பயணிகள் ஆசனப் பட்டிகளை அணிந்துகொண்டு இருக்க வேண்டும். ஆனால் குறித்த சவுதி நாட்டவர், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி கழிப்பறைக்குள் செல்ல முயன்றதன் விளைவாக இந்த வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். பின்னர், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் விமான நிலைய பொலிஸார் உறுதிப்படுத்தினர். https://athavannews.com/2025/1451471
3 days 19 hours ago
இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள் விமான நிலையத்தில் கைது! குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று இலங்கையர்கள், இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்ததும் அவர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இந்த நபர்கள் நேற்று (28) இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். இந்த மூவரும் சுமார் 15 நாட்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழ்நாட்டிற்கு சட்டவிரோதமாக நுழைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், சந்தேக நபர்கள் இந்தியாவிற்குள் நுழைவதற்கும் அங்கு வசிப்பதற்கும் எந்த செல்லுபடியாகும் பயண ஆவணங்களையும் வைத்திருக்கவில்லை என்பது தெரியவந்தது. இலங்கையில் மூன்று சந்தேக நபர்கள் மீதும் தற்போது பல குற்றவியல் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இந்த நாடுகடத்தல் மேற்கொள்ளப்பட்டதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்தன. இதனிடையே, வல்வெட்டித்துறையில் அண்மையில் விடுதலைப் புலிகள் அமைப்பால் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக நம்பப்படும் வெடிபொருட்களுடன் சந்தேக நபர்கள் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1451489
3 days 19 hours ago
💙 பேரன் ஆரினின் முதல் அகவைநாள் வாழ்த்துக்கள்! [29 அக்டோபர் 2025] இலையுதிர் விடியலில் அழுகை ஒலித்தது சொர்க்கத்தில் இருந்து பரிசு வந்தது காலைப்பனி போல சிறிய கைகளுடன் ஆரின் [Aarin], எங்கள் மகிழ்ச்சி, நனவானது! ஆண்டு ஒன்று கடந்த மகிழ்வில் அன்பு மலர் விரிவடையத் தொடங்க மழலைச் சிரிப்பு வீட்டில் ஒலிக்க மென் குரல் அனைவரையும் அணைத்தது! கருணை உள்ளம் பொங்கி வழிய அண்ணன் இருவரும் உன்னை அணைத்து திரென் [Dhiren] அமைதியாக புத்தியாக வழிகாட்டிட நிலன் சிரிப்பும் உற்சாகமும் கொடுப்பானே! உன்னைச் சுற்றி சுழலும் உலகில் உறக்கமற்ற இரவுடன் மகிழ்வான நாட்களுடன் பரந்த இதயத்துடன் பெற்றோர் பிரகாசிக்க பொன் கதிர்களால் வீட்டை நிரப்புவாயே! ஆனந்தக் கண்ணீருடன் கவனமாக பார்க்க தாத்தா என்றும் உன்னுடன் நிற்பாரே ஈழத்தின் கரையிலிருந்து இங்கிலாந்தின் வானம்வரை தாத்தாவின் மங்கா வாழ்த்துக்கள் ஒலிக்குமே! அம்மம்மா வானத்தில் இருந்து ஆசீர்வதிக்க அவளின் கருணை உள்ளம் ஒளிகொடுக்க விண்மீன்கள் அவளின் முகத்தைக் காட்டிட ஆரினின் தொட்டிலை ஆசீர்வதித்து ஆட்டுவாளே! ஆரினே பேரனே வலிமையாக கனிவாக வளர்ந்து மனதில் அன்பையும் நம்பிக்கையையும் பதித்திடு உன்னை உருவாக்கிய ஒவ்வொரு குடும்ப வேரிலும் அன்பு உணர்வு நிறைந்த கதைகள் அடங்குமே! வெல்வின் தோட்டத்தில் [Welwyn Garden] மலர்ந்த மழலையே நேசிப்பவருக்கு இன்ப மகிழ்ச்சி கொடுப்பவனே மூன்று காலமும் அன்பும் நம்பிக்கையும் பொங்க காலம் பிணைத்த பிணைப்பு நீதானோ! உங்கள் வாழ்வின் புதுப்பாடல் ஆரம்பிக்க ஆரின் குட்டியே மெழுகுவர்த்தியை ஊதுங்கள் காலடித் தடங்கள் அமைதியும் மகிழ்ச்சியும் அடைய சொர்க்கத்தின் புன்னகை முகத்தில் ஒளிரட்டுமே! தாத்தா 'கந்தையா தில்லைவிநாயகலிங்கம்', அத்தியடி, யாழ்ப்பாணம். 💙 ஆரினின் முதல் அகவைநாள் வாழ்த்துக்கள்! [29 அக்டோபர் 2025] https://www.facebook.com/groups/978753388866632/posts/32083417654640132/?
3 days 19 hours ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 38 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 38 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'தீபவம்சத்தின் ஆசிரியர் புத்தருக்கும் அவருடைய கொள்கைக்கும் வஞ்சகம் செய்தாரா?' 1-27 'இந்த மன்னன் அசோகனுக்கு, இலங்கை தீபத்தை [புத்த சமயத்துக்கு] மாற்றுவதற்கு, ஒரு கற்றறிந்த புத்திசாலி மகன் மகிந்த இருந்தார். ' [27. This king Asoka will have a son, a clever man, Mahinda, the learned converter of Laṅkādīpa.”] என்று மட்டும் கூறுகிறது. மகிந்த, ஆண் மக்களையும், சங்கமித்தை (Sanghamitta, பாளி: சங்கமித்தா, சம்ஸ்கிருதம்: சங்கமித்ரா) பெண் மக்களையும், புனிதப் பதவியான துறவியாக, ஒருவரை உயர்த்தும் சடங்கு செய்வதற்கு நியமித்ததாக கூறப்பட்டாலும், சங்கமித்தா இந்த முன்னைய அத்தியாயத்தில் குறிப்பிடப்படாததால், கதையில் ஒரு பின் சிந்தனையாக, சங்கமித்தாவை இணைத்திருக்க வேண்டும்? அத்தியாயம் 1 புத்தரின் பயங்கரவாத தந்திரங்களைப் பற்றியது. புத்தர் 1-21, இல் 'இயக்கர்கள், பிசாசுகள் [அரக்கன்கள்] மற்றும் அவருத்தகர்களின் [சில குறிப்பிட்ட இயக்கர்களை 'அவருத்தக்க' என்று புத்த சமயத்தில் அழைக்கப்படுகிறது] படைகளை விரட்டியடித்து, நான் தீவில் அமைதியை நிலைநாட்டி, அதை மனிதர்களால் வாழ வைப்பேன்' [21. Having driven out the hosts of Yakkhas, the Pisācas and Avaruddhakas, [a certain Yakkha named Avaruddhaka] I will establish peace in the island and cause it to be inhabited by men.] என்று கூறுகிறார். அதாவது உண்மையில் இலங்கையின் பூர்விகமாக்களை பயமுறுத்தி துரத்துகிறார். மிகவும் வேதனையான பகுதி என்னவென்றால், புத்தர் நிர்வாணம் அல்லது ஞானம் அடைந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, இந்த கொடுமையை, தீபவம்சத்தின் படி செய்கிறார். அப்படி என்றால், அது என்ன வகையான ஞானத்தை உண்மையில் அவர் பெற்றார்? இங்கு புத்தர் மிக மோசமான நிலையில் வர்ணிக்கப் படுகிறது. எனவே, அத்தியாயம் 1, இலங்கையில் நடந்த எந்த மனித வரலாற்று நிகழ்வுகளையும் பற்றியது அல்ல. அத்தியாயம் 2, இரண்டு நாக அரசர்களுக்கிடையேயான உட்பூசல்களை நிறுத்துவதற்காக புத்தர் ஞானம் அடைந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இரண்டாம் தரம் இலங்கைக்கு வருவதைப் பற்றியது. சிம்மாசனத்திற்காக, நாக இனத்தைச் சேர்ந்த மாமாவுக்கும் அவரது மருமகனுக்கும் இடையே நடந்த உள்நாட்டுப் போரை நிறுத்த வந்த புத்தர், அதை மறந்து, [2- 36 முதல் 37 வரை] அவர் தனக்காக அந்த அரியணையைப் பெறுவதில் கதை முடிகிறது. இது புத்தருக்கு எப்படிப்பட்ட அவமானம்! ஆனால், உண்மையான புத்தர், உண்மையைத் தேடுவதற்காக தனது சொந்த சிம்மாசனத்தையும், தனது இளம் மனைவியையும், பிறந்த குழந்தை ராகுலனையும் துறந்தார். சமகால அரசர் பிம்பிசாரர், தனது அரசை புத்தருக்கு வழங்கினார், ஆனால் புத்தர் அதை ஏற்க மறுத்தார். அப்படியான உண்மை புத்தரின் புனித உருவத்தை, நாகர்களின் சிம்மாசனத்தை ஏற்றுக்கொள்வதாக இலங்கை நூல்களில் சித்தரிப்பதன் மூலம், அவரை உண்மையில் இழிவுபடுத்தியது என்பதே உண்மை!. என்றாலும் இன்று இலங்கையில் இந்த புத்தரின் பெயரில் தமிழரின் காணிகள் பறிக்கப் படுவதையும், தமிழர்களை அங்கிருந்து அகற்றுவதையும் பௌத்த சிங்கள பலவந்த குடியேற்றங்களை நிறைவேற்றுவதில் இலங்கையின் அரசும் நீதியும் மௌனம் சாதிப்பதும் , இலங்கை பண்டைய நூல்களின் நோக்கத்தை இன்று புரிய வைக்கிறது! அதாவது, இந்தக் கதையை இயற்றிய வஞ்சகத் துறவிகள், புத்தர் ஆயிரம் மைல்களுக்கு மேல் பறந்து வந்து, நாகர்களின் [அதிகமாக தமிழ் மொழியுடனும் பண்பாட்டுடனும் ஒன்றியவர்கள்] அரியணையைப் பிடித்ததாக, மற்றவர்கள் நம்ப வேண்டும் என்று ஏன் விரும்பினர் என்பது இன்று எனக்குப் புலப்படுகிறது! இந்த இரண்டு வருகைகளிலும் புத்தர் தனது செய்தியை, தனது கொள்கையை இலங்கையில் தெரிவிக்க அமைதியான எந்த வழிகளையும் கடைப்பிடிக்கவில்லை. புத்தரும் அவருடைய கொள்கைகளும் தீபவம்சத்தின் ஆசிரியரால் துரோகத்துக்கு உள்ளாக்கப் பட்டுள்ளது கவலை தரும் ஒரு விடயம்.! எவ்வாறாயினும், ஞானம் பெற்ற புத்தருக்கு அடிபணிவதற்கு, நாகர்கள் பயமுறுத்தப்பட்ட போதிலும், நாகர்கள் ஒரு குழுவாக தப்பிப்பிழைத்ததை இந்த அத்தியாயம் வெறுப்புடன் மற்றும் மனக்கசப்புடன் ஏற்றுக்கொள்கிறது. Part: 38 / Appendix – Dipavamsa / 'Is the author of the Dipavamsa, betrayed the Buddha and his tenets?' 1-27 reads ‘This king Asoka will have a son, a clever man, Mahinda, the learned converter of Lankadipa’. Mahinda Thera allegedly ordained the male population and sanghamitta ordained the female population. sanghamitta must have been an afterthought in the narration as she is not mentioned in this chapter. The chapter1 is about the alleged terror tactics of the Buddha. The Buddha thinks, 1-21 reads, ‘Having driven out the hosts of Yakkhas, Pisacas, and Avaruddhakas, I will establish peace in the island and cause it to be inhabited by men’. The agonizing part is that, it is alleged, that the Buddha did these just nine months after attaining the Buddhahood (nirvana - the enlightenment). What kind of enlightenment was that! The Buddha is betrayed to the worst degree. Chapter 1 is, therefore, not about any human historical events that took place in Lanka. Chapter 2 is about Buddha’s uninvited visit to Lanka five years after the attainment of the Buddhahood to stop the infighting between two serpent kings, 2 – 3. Second time too the Buddha resorted to the same tactics of terrorizing the combatants in Lanka. The Buddha who came to stop the internecine war between an uncle and his nephew over a throne ended in getting the throne for himself, 2- 36 to 37. What a shame on the Buddha! The real Buddha renounced his own throne, his young wife, and the just born infant son Rahula in search of truth. The contemporary king Bimbisara offered the Buddha his kingdom which the Buddha refused. It is a wanton debasement of the holy image of the Buddha by portraying him as accepting the throne of Nagas. The devious monks who concocted this story wanted others to believe that the Buddha came flying more than thousand miles to take the throne of Nagas! Nowhere in these two visits had Buddha adopted peaceful means to convey his message in Lanka. The Buddha and his tenets are betrayed by the author of the Dipavamsa! This chapter, however, grudgingly accept that Nagas survived as a group, though terrorized into submission by the enlightened Buddha. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 39 தொடரும் / Will follow "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 38 https://www.facebook.com/groups/978753388866632/posts/32090689990579565/?
3 days 20 hours ago
(படத்திலிருப்பது Lady with Lamp செவிலியர் சேவையின் அன்னையான Florence Nightingale அம்மையார். அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படும் அவரது சேவைக்கால ஆடை. நைட்டிங்கேல் புனிதமான செவிலியர் சேவையின் அஸ்திவாரமாக இருந்தவர் இருப்பவர். அவரையும் அவரது சேவையின் தொடக்கப்புள்ளியையும் நினைவு கூறுதலின் ஒரு வடிவம்தான் தலைக்கவசமும் நீண்ட வெள்ளை ஏப்ரனும். ஆரம்பத்தில் அவர் அணிந்த அதே வடிவில் இந்த ஆடை வடிவமைக்கப்பட்டாலும் கால இட சூழலுக்கேற்ப பொருத்தமான பல பரிமானங்களை எடுத்திருக்கிறது, அவரின் நினைவு கூறலுக்கான அடிப்படைகளை விட்டுக் கொடுக்காமல். தவிர்த்து நைட்டிங்கேல் அம்மையார் நினைவு கூறப்படவேண்டியது மகத்தான தாதியர் சேவையில்தானே தவிர அவரது ஆடையொழுங்கில் மாத்திரம் அல்ல. எப்பொழுது அந்த சேவைக்கு இனம் மதம் என்ற கறை பூசப்படுகிறதோ அப்பொழுதே அது தன் புனிதத்தன்மையை இழக்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. தாதியம் என்ற சேவை ஆடைகளுக்கு அப்பாற்பட்டது என்ற சிறிய தெளிவே இந்தச் சிக்கலுக்கு மிக இலகுவான பதிலாக இருந்தும் அத்தனை இலகுவாக அதையெல்லாம் எமது நாட்டின் சூழலில் எதிர்பார்த்து விட முடியாது என்பதே வெள்ளிடை மலையும் யதார்த்தமும்.) Voir la traduction
3 days 20 hours ago
Prakasam P Palani · நம் நிலாவில் எடுக்கப்பட்ட உண்மை புகைப்படம். 1969-ல் நாசா அனுப்பிய அப்பலோ 11 விண்கலம் நிலாவில் இறங்கியபோது விண்வெளி வீரரான பஸ் ஆல்ட்ரின் பதித்த கால் தடம் தான் இது. புகைப்படத்தை நல்லா பாருங்க. கால் தடத்தின் ஆழத்தை பார்க்கும்போது ஆல்ட்ரின் ரொம்ப குண்டாக இருந்த மாதிரி தெரியுது தானே...? ஆனா, அது இல்ல. நிலாவில் தரையிறங்கியபோது பஸ் ஆல்ட்ரினின் எடை 27 கிலோ தான். 'என்னாது...வெறும் 27 கிலோவா...'? ஆமா. ஆனா, அவர் பூமியில் இருந்தபோது அவரோட எடை 80 கிலோ. அவர் போட்டுக்கொண்ட விண்வெளி உடைகள்+உபகரணங்களின் எடை 80 கிலோ. ஆக மொத்தம் 160 கிலோ. இது பூமியில் இருந்தபோது இருந்த எடை. அவர் நிலாவுக்கு போனதும் மொத்த எடையும் 27 கிலோவுக்கு மாறிவிட்டது. காரணம் நிலாவில் உள்ள குறைவான ஈர்ப்பு விசை தான். நீங்க இங்க பூமியில் 60 கிலோ எடை இருந்து, அப்படியே நிலாவுக்கு போனால் அங்கே உங்க எடை வெறும் 10 கிலோ தான் இருக்கும். இப்ப ஒரு விஷயத்தை தெளிவாக புரிஞ்சிக்கங்க. இங்க பூமியில் நீங்க 60 கிலோ எடையுடன் இருந்தால், அது உங்களுடைய உடலின் எடை கிடையாது. உங்களை இந்த பூமி எப்போதும் இழுத்து பிடித்துக் கொண்டுருக்கும் விசை தான் அந்த எடைக்கான காரணம். அப்ப, உங்க உடலில் இருப்பது என்ன...? அதுக்கு பேர் தான் mass. அதாவது நிறை. இந்த நிறை பூமி, நிலா, மார்ஸ் என எந்த இடத்திலும் மாறாது. ஆக, நிலாவில் பஸ் ஆல்ட்ரினின் எடை 27 கிலோ, ஆனா நிறை அதே 160 கிலோ தான். சரி இவ்வளவு குறைவான எடையிலும் கால் தடம் ரொம்ப ஆழமா இருக்கே...? ஏன்னா, நம் பூமி மண் போல் நிலாவில் இருக்காது. கிட்டத்தட்ட சிமெண்ட் மாதிரி பவுடராக தான் இருக்கும். இதனால் தான் கால் தடம் மிக ஆழமாகவே விழுந்திருக்கு. இந்த படத்தை பார்த்து நான் சொல்ல வந்த விஷயம் என்னான்னா... "நிலாவில் நீர், காற்று, உயிரினங்கள் என எதுவுமே இல்லை என்பதால், இந்த கால் தடம் எப்போதும் அழியாமல் அப்படியே இருக்கும்" என இந்த போட்டோவில் ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். ஆனால், அது தவறு. நிலாவில் நீர், காற்று எதுவும் இல்லை என்பது உண்மை தான். ஆனால், இன்னொரு விஷயம் அங்க தினமும் நடந்துக்கிட்டு இருக்கே..!! இங்க பூமியில் தினமும் சிறிய அளவிலான எரிகற்கள்(Micrometeorites) விழுந்துக்கிட்டு தான் இருக்கு. இதனால் பூமியின் எடையும் கூடிக்கிட்டு தான் இருக்கு. இதே மாதிரி தான் நிலாவிலும் சிறிய அளவிலான எரிகற்கள் தினமும் விழுந்துக்கிட்டே இருக்கு. இங்க பூமியில் வளிமண்டலம் இருப்பதால் வரும் எரிகல் சில நேரம் உராய்ந்து ஆவியாகிவிடும், அல்லது சிறிய சிறிய பீஸ்கள் மிஞ்சி போய் கீழே விழும். ஆனால், நிலாவில் வளிமண்டலம் இல்லை என்பதால் உராய்வு எதுவும் ஏற்படாமல் அப்படியே விழும். ஆக, அங்கேயும் பிரச்சனை இருக்கு. இப்ப இந்த மாதிரி சிறிய சிறிய பீஸ்கள் இந்த கால் தடம் மீது விழத்தானே செய்யும்...? அப்போ, கால் தடம் அழிந்து விடுமே...? இந்த புகைப்படம் எடுத்து 56 வருஷம் ஆகிட்டதால, அது இன்னும் அழியாம இருக்குமா...? அட்லீஸ்ட், shape கூட மாறியிருக்கலாம் என்பதே உண்மை!!! Voir la traduction
3 days 20 hours ago
பிரேசிலில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை - 64 பேர் உயிரிழப்பு! போதைப்பொருள் கடத்தல் கும்பலை கைது செய்ய 2500க்கும் மேற்பட்ட பிரேசில் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பின் போது நடந்த தாக்குதலில் 4 பொலிஸார் உட்பட 64 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க 2500க்கும் மேற்பட்ட பிரேசில் பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையின் போது கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதையடுத்து பதிலுக்கு பிரேசில் பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் மோதல் முற்றியுள்ளது. இந்த தாக்குதலின் போது 4 பொலிஸார் உட்பட 64 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள 46 பாடசாலைகள் மூடப்பட்டதாகவும், பெடரல் பல்கலைக்கழகத்தில் சிறப்பு வகுப்புகளை இரத்து செய்துள்ளது. பல்கலையில் தங்கி படிக்கும் மாணவர்கள் விடுதியில் பத்திரமாக இருக்கின்றனர் என கல்வித்துறை தெரிவித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் கும்பல் மீதான ஒரு வருட விசாரணையைத் தொடர்ந்து, இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை வரலாற்றில் மிகப்பெரியது. குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கம் கூடுதல் ஆதரவை வழங்க வேண்டும் என ரியோ டி ஜெனிரோ நகர் கவர்னர் கிளாடியோ காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார். இதனால் ரியோ டி ஜெனிரோ நகரில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1451511
3 days 20 hours ago
நல்ல தொடக்கம் தென் ஆபிரிக்கா ஆனால் 10ரன்ஸ்சுக்கும் 3விக்கேட்...............................
3 days 20 hours ago
❣எங்கே எனது கவிதை ❣ · (1887–1895ல்) முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பிரிட்டிஷ் எஞ்சினீயர் பென்னி குவிக் அணயைக் கட்டுவதில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.......!
Checked
Sun, 11/02/2025 - 05:34
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed