3 days 17 hours ago
ஓம்…ஓம் நிவேதாதான். ராஜேசையும் பெத்துராஜையும் குழப்பிகொண்டேன். நீங்களும் ஐலண்டும் சொல்வது போல், முதலமைச்சர் இல்லை, ஒரு 15% வாக்கை எடுத்திருந்தார் எனில் கூட சங்கீதா வழக்கை, விஜி வழக்கு போல் அடித்து நூத்திருப்பார். அதனால்தான் சங்கீதா முந்தியுள்ளார்.
3 days 17 hours ago
❤️........................ மிக்க நன்றி செம்பாட்டான். களத்தில் போட்டிகளை எப்போதும் நடத்தும் கிருபனுக்கும், கந்தப்புவுக்கும் ஒரு உதவும் கரம் கிடைத்திருப்பது நல்லதொரு விடயம்.................👍.
3 days 18 hours ago
பிரித்தானிய நேரப்படி நாளை சனி 28 பெப் ஒரு சுப்பர் 8 சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 62) சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல, பாகிஸ்தான் (Y3) எதிர் சிறிலங்கா (Y4) PAK எதிர் SL 13 பேர் பாகிஸ்தான் அணி வெல்வதாகவும் 09 பேர் சிறிலங்கா அணி வெல்வதாகவும், ஒருவர் சுப்பர் 8 சுற்றில் இல்லாத நெதர்லாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். நெதர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த @சுவைப்பிரியன் க்கு புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் செம்பாட்டான் SL ஏராளன் PAK வசீ SL புலவர் PAK சுவைப்பிரியன் NED அல்வாயன் PAK ஈழப்பிரியன் PAK நியூ பலன்ஸ் PAK வாத்தியார் SL கறுப்பி SL வாதவூரான் SL வீரப் பையன்26 PAK சுவி PAK கிருபன் PAK கோஷான் சே PAK அஹஸ்தியன் PAK கந்தப்பு PAK நியாயம் SL எப்போதும் தமிழன் PAK ரசோதரன் SL பிரபா SL நிலாமதி SL நந்தன் PAK இப்போட்டியில் எவர் புள்ளிகள் எடுப்பார்கள்?
3 days 18 hours ago
எதுக்கும் மேற்கிந்தியாவ ஒரு வார்த்தை கேளுங்க.
3 days 18 hours ago
தொடர்ந்து செய்வோம்.
3 days 18 hours ago
டுப்பிளசி இங்கிலாந்து இறுதிப்போட்டிக்கு செல்லாது என கூறுகிறார்.
3 days 18 hours ago
நன்றி @செம்பாட்டான் . புள்ளிகளை கூட்டி வரிசையை ஒழுங்காக காண்பித்ததற்கு. இன்னும் சில நாட்கள் உதவி தேவைப்படும்
3 days 18 hours ago
அரையிறுதியில் இங்கிலாந்தும் இந்தியாவும் (?) மோதும் என நினைக்கிறேன், இங்கிலாந்தினை வெல்வது இலகுவான விடயாமாக இருக்காது போல உள்ளது!
3 days 18 hours ago
அடுத்த மூன்று மாதத்தில் விஜை ஆட்சிக்கு வந்தால் தனக்கு நீதி கிடைப்பது கடினமாகிவிடும் என்பதால் தான் ஆட்சிக்கு வர முதல் சங்கீதா வழக்கு போட்டுள்ளார் என்றால் அது சரியானதே.
3 days 18 hours ago
சாச்சா. நான் சும்மா பியோன். அங்க எடுத்து இங்க வைக்கிற வேலை.
3 days 18 hours ago
பவர் இருந்தால் இராஐதந்திரம் தானாக வருமண்ணை. பெயரை மாற்றி எழுதி விட்டீர்களோ அது நிவேதா பெ த்துராஜ் இல்லை...? இப்போது அதிகார பீடமாக இருந்தால் அண்ணி சங்கீதாவும் கோர்ட்டு படியேற மூன்றுக்கு நான்கு முறை யோசித்திருப்பார். பாவம் தூயசக்தி தமிழ்நாடு தற்போதைய அரசியலை M.G.R காலத்து அரதப்பழசு அரசியலுடன் காம்பேர் பண்ணி இப்போ காமசக்தியாக திரு திருவென்று முழிக்கிறது. இதுவரை ஏழரை இனி அஷ்டமமும் சேர்ந்து பயலை காக்டெயில் போடப்போகுது
3 days 19 hours ago
😂 வேற லெவல் போங்கோ😂 நாளைக்கு எடுக்கும் போது ஒரு தென்னம்பிள்ளையை சேத்து எரிக்கோணும் 😂 கந்தப்பு செஞ்சுரி அடிச்சிட்டார். இப்ப நீங்களோ கிளாக்கர் வேலை? 😂
3 days 19 hours ago
நேற்றைய இன்றையப் போட்டிகளின் பின், நீங்கள் ஆவலுடன் எதிர் பார்த்த புள்ளி விபரம். முதல் இருவரும் குத்துக் கல்லாடம் போல் அங்கேயே இருக்க, அல்வாயன் 3வது இடத்துக்குத் தாவியுள்ளார். சுமைதாங்கிகளில் மாற்றமில்லை. இன்னும் 3 போட்டிகளே மீதமுள்ளன.
3 days 19 hours ago
சனிப்பிணம் தனிப்போகாது, இலங்கை பாகிஸ்தானையும் கூட்டிகொண்டு வெளியே போகும். நியுசிலாந்தின் துடுப்பாட்டம் வேலை இடைவேளையில் பார்த்த போது எடுத்திருந்த ஓட்டம் மிகுதி ஓவருக்கு ஒவ்வொரு பந்திற்கும் 1 ஓட்டமாக எடுதாலே 170 எட்டி விடும், நியுசிலாந்து வென்றுவிடும் என நினைத்தேன் 159 மட்டும் எடுத்துள்ளது, நல்ல போட்டியாக இருந்திருக்கும் என நினைக்கிறேன், இங்கிலாந்து அணி உலக கோப்பையினை எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை (நியுசிலாந்தும் சிறப்பாக விளையாடுகிறது).
3 days 19 hours ago
வர்ணணை கேட்டபோது நீங்கள் சொன்னதுதான் மனதில் வந்து போனது. இன்னும் எத்தனை போட்டிகளைத்தான் இங்கிலாந்து ஒரு தனி மனிதனால் வெல்ல முடியும்?
3 days 19 hours ago
இன்றைய சூப்பர் 8 சுற்றுப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, துடுப்பெடுத்தாடத் தொடங்கியது. ஆச்சரின் முதல் பந்து பரிமாற்றத்தில் ஓட்டங்கள் எதுவும் பெறாமல் மெதுவாக ஆரம்பித்த அவர்கள் துடுப்பாட்டம், மெதுவாக சூடு பிடித்த தொடங்கியது. பவர் பிளேயில் 54 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்கள். ஆனால், இங்கிலாந்தின் சுழல் பந்துவீச்சாளர்கள், அவர்களை கட்டுப்படுத்தினார்கள். விக்கெட்டை இளக்கத் தொடங்கி, தட்டுத் தடுமாறி, 159 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்கள். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியும், தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று, மெதுவாகவே தங்கள் ஆட்டத்தை ஆரம்பித்தார்கள். விக்கெட்டை பறிகொடுத்துக் கொண்டே இருந்தார்கள். 17வது பரிமாற்றத்தின் முடிவில் ஆறு விக்கட்டுகளை இழந்து, 117 ஓட்டங்களையே பெற்றிருந்தார்கள். 18 பந்துகளில் 43 ஓட்டங்கள் அடிக்க வேண்டிய நிலையில், பில் ஜாக்சுடன் இணைந்த ரெகான் அகமட், அடிக்கத் தொடங்கினார்கள். அடுத்த 15 பந்துகளில் 44 ஓட்டங்களை குவித்து, இங்கிலாந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்கள்.
3 days 19 hours ago
தோழர், எந்த ஊர் பெண் என்றாலும் அவர் நியாயம் சபை ஏற வேண்டும். இதிலே அவர் கூறி உள்ள குற்றசாட்டுகள் யூகேயில் domestic violence என்ற வரையறக்குள் வரும். வஞ்சிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தக்க நியாயம் கிடைக்கவேண்டும். அது விஜி அண்ணியாகிலும், சங்கீதா அண்ணியாகிலும். இதில் ஐஸ்வர்யா பெத்துராஜ் திருமணத்தை முன்னின்று நடத்திவர்களின் இராஜதந்திரத்தையும் மெச்சல் வேண்டும்.
3 days 19 hours ago
நடக்கும் ஒவ்வொரு சம்பவத்திலும் தான் எப்படி பட்ட ஒரு தத்தி என்பதை விஜை நிருபிக்கிறார். மணமுறிவு ஒண்டும் பஞ்சமா பாதகமில்லை. அதே போல் தமிழக அரசியல், சினிமா மட்டும் அல்ல, பொதுவான வாழ்வில் கூட, குறிப்பாக ஆண்கள் தனி மனித ஒழுக்கம் தவறுவது பெரிய மேட்டர் அல்ல. பெரியார், அண்ணா, காமராஜர், எம் ஜி ஆர், கருணாநிதி, உதய நிதி, போன்ற பெரிய அரசியல்வாதிகள் முதல், பெரிய கருப்பன், சீமான் போன்ற சின்ன அரசியல்வாதிகள் வரை அனைவரினதும் வாழ்க்கையும் பயில்வான் ரங்கநாதன் கதைக்கும் ரேஞ்ச்சுதான். ஆனாலும் அவர்கள் தலைவர்கள். ஆனால் இதை விஜை அழகாக கையாண்டு இருக்கலாம். இணைந்து வாழ முடியாது என தெரிந்ததும்… தனுஷ்-ஐஸ்வர்யா, ஜீவிபி- சைந்தவி ஜோடிகள் போல் இணக்கமாக பிரிந்திருக்கலாம். இப்படி கோர்ட் படியேறி… நடிகையுடன் உறவில் இருந்தார்… என்னை மனதளவில் டார்ச்சர் செய்தார்… புறக்கணித்தார்… நிதியை முடக்கினார்… என்றெல்லாம் குற்றம்சாட்ட படாமல். அதுவும் அரசியலுக்கு வரும் எண்ணம் இருந்தால்…இதை வரமுதலே வெட்டி முடித்திருக்க வேண்டும். வளர்ந்த பெண் பிள்ளை வேறு…. சரியான அடி முட்டாளாக இருக்கிறார். எஸ் ஏ சி மட்டும் இல்லை என்றால் - ஆளை எப்பவோ காக்கா தூக்கி போயிருக்கும் போல😂. 😂 என்ன மொட்டையா திரிசா… அப்படி கூப்பிட நீங்க என்ன விஜையா? புரட்சி தலைவி, இதயதெய்வம், அம்மா… அவ்வளவுதான். பெயர் எல்லாம் சொல்லப்படாது😂 போராட்டத்தை தலைமை ஏற்க வட்டுகோட்டை விரைகிறார் சுமந்திரன்!😂
3 days 19 hours ago
இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி கிளென் பிலிப்ஸின் வேகமான 39 (28 பந்துகள்), டிம் செய்ஃபேர்ட்டின் விரைவான 35 (25 பந்துகள்), பின் அலெனின் அதிரடியான 29 (19 ) ஓட்டங்களுடனும் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை பறிகொடுத்து தோல்வியை நோக்கி போயிருந்தபோதும் டொம் பண்டனின் வேகமான 33 (24 பந்துகள்), வில் ஜக்ஸ் ஆட்டமிழக்காமல் அதிரடியாக எடுத்த 32 (18 பந்துகள்), இறுதி ஓவர்களில் றெஹான் அஹ்மட் ஆட்டம் இழக்காமல் புயல்வேகத்தில் எடுத்த 19 (07 பந்துகள்) ஓட்டங்களுடன் 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த நான்கு பேருக்குப் புள்ளிகள் கிடையாது. அத்தோடு சுப்பர் 8 சுற்றில் விளையாடாத ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கும் புள்ளிகள் கிடையாது!
3 days 19 hours ago
நானும் ரெகான் இப்பிடி காளி ஆடுவான் என்று எதிர்பார்க்கவில்லை. இங்கிலாந்து வழமை போல் தாங்களே தங்கள் மேல் மண் அள்ளிப் போட்டார்கள் என்று நினைத்தேன். பில் ஜாக்ஸ் தொடர்ந்து அசத்திக் கொண்டே இருக்கிறார். அந்தக் கடைசி நாலை அடித்துவிட்டு தோளை உலுப்பினார். என்னங்டா என்று தன் அணி வீரர்களைப் பார்த்து கேட்டது போல் இருந்தது.
Checked
Tue, 03/03/2026 - 14:23
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed