3 days 6 hours ago
எல்லாம் சரி தான் ராசாக்கள் திரிஷாவின் லட்சியம் முதல்வர் பதவி என்றால் விஜயின் ஆயுள் எவ்வளவு காலம்???? 🤫
3 days 6 hours ago
27 வருடமாக இவர் இரவு பகலாக சூட்டிங் போய்விட, இரெண்டு பிள்ளைகளின் நல்வாழ்வை கவனித்கவ்ர் யார்? நீங்களா? சங்கீதாதானே? அது உழைபில்லையா? உழைப்பில்லாத ரெஹ்மான் மனைவியை ரெஹ்மான் பிரிவின் போதும் கண்ணியமாக நடத்தினாரே? நல்லவேளை வழக்கு மேற்கு நாட்டு நீதிமன்றில் இல்லை - வினையின் சொத்தை பாதிக்கு கிட்ட சங்கீதாவுக்கு கொடுத்திருப்பார்கள். தனக்கு திரிஷா தேவை. நம்பி வந்து 27 வருடத்தை கழித்த பெண்ணுக்கு ஒரு படத்தில் வரும் காசில் அரைவாசியை கொடுக்க மனமில்லை என்றால்? இல்லை. முயல்வோர் பலர் உளர்.
3 days 6 hours ago
நீங்கள். சொல்வது. சரி தான். அப்படி. நடந்தால். எவரும். கதைக்கப்போவதில்லை. இன்றைக்கு. அனைத்து. ஊடகங்களும். கதைக்கிறது. அது. தான் விஷய். விரும்புவது. அவர். ஒரு. கிசு. கிசு. பிரியர். தனுஷ. விடயத்தில். இரு. தரப்பும். உழைப்பாளிகள். ஆகவே. பணம். பற்றி. கவலையில்லை. அவர்களுக்கு. இருவருக்கும். தேவை. புதிய. நபரின். ஸ்பரிதம். உறவு ஆகவே. இருவரும். புதிய. உறவைத். தேடிக். கொண்டார்கள். சங்கீதா. உழைப்பு. அற்றவர். இல்லையா. ? அல்லது. லண்டனின். வருமானம். வருகிறதா. தொடர்ச்சியாக ?
3 days 6 hours ago
யார். அவர். ? இந்த. உலகத்தில். இருக்கிறரா. ?
3 days 6 hours ago
வாழ்க்கையும். கற்பனையா. ?
3 days 7 hours ago
என்ஜோய் ஜி. அப்படியே ஒரு எட்டு தெஃரானுக்கும் போட்டு வாறது😂.
3 days 7 hours ago
இதை எல்லாம் பெண்களை வெறும் போக பொருளாக, கொலுப் பொம்மைகளாக, பிள்ளை பெறும் அல்லது சண்டை பிடிக்கும் இயந்திரங்களாக பார்க்க பழகியோர் சர்வ சாதாரணம் என கடந்து போகலாம். ஆனால் ஒரு வலு சமநிலை அற்ற இது போன்ற திருமணத்தில் ஒரு பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதியை ஒரு நல்ல ஆண்மகன் கண்டும் காணாமல் போக முடியாது. இந்த தொகைக்குத்தான் சங்கீதாவை கோர்ட் படியேற விஜை விட்டார் என்றால் - அவரை போல் ஒரு அடிமுட்டாள் இந்த உலகில் இருக்க முடியாது. ஜனநாயகன் அவசரமாக வழக்கு போட்டு வாபாஸ் வாங்கியது. பேசாமால் அபராததை கட்டிபோட்டு போகாமல், இன்கம்டக்ஸ் விடயத்தில் கோர்ட்டுக்கு போய் குட்டு வாங்கியது. இப்படி பலதில் விஜைக்கு மிக மோசமான சட்ட ஆலோசனை வழங்கப்படுகிறது என நினைக்கிறேன். சிவகார்த்திகேயன் இந்த வகுப்பில் இல்லையே?
3 days 8 hours ago
இனி ஏணி வைச்சாலும் எட்டாது போல.
3 days 9 hours ago
இன்று (28 / 02/ 2026) UK நேர அதிகாலையில் காகுத்தல் தொடங்கி நடந்து கொண்டு இருக்கும் போதே பாய்ந்து தரவேற்ற (வேறு வேலையும் இருணஹட்டால்) மறந்த்து விட்டேன் (அதில் சொல்லியது அடுத்து வரும் 24 - 48 மணி நேரத்தில் தாக்குதல் தொடடங்கும் சத்திய கூறுகள் மிக அதிகம் என்று. அப்படி தொடங்கா விட்டால் பங்குனி 14- 15 அளவிலேயே தாக்குதல் நடப்பதற்கு அதிக சந்தர்ப்பம் என்று ) இரானின் மீது தாக்குதல் அணுத்துறையால் அல்ல. இரான் இறமை கொண்ட தனியரசாக இருப்பதை அழிப்பதற்கும், இப்பொது ஈரானின் நிலைப்புலத்தை 2-3 பொம்மை அரசுகளாக உடைப்பதற்கும். உண்மையில் இரானே அதன் சுதந்திரத்தை பாதுகாக்க, அதன் காலில் நின்னு போராடுகிறது. மேற்கின், அமெரிக்காவின், இஸ்ரேல் நீண்ட காலா எண்ணமும் திட்டமுமமான அகன்ற இஸ்ரேல் இப்பொது வெளியில் வந்து இருக்கிறடது, அமெரிக்காவின் இஸ்ரேல் தூதுவரால் 1) அகன்ற இஸ்ரேல் ஐ தாபிப்பது - இதில் இரானி முட்டுக்கட்டை. 2) இஸ்ரேல் எந்த நாட்டின் மீதும் விரும்பியவாறு, விரும்பிய வேளை தாக்க கூடிய நிலையில் இருப்பதும்,அப்பை தாக்கினால் மற்ற நாடுகள் ஹிரியூபி தாக்கும் திறன், வ\சாதிகள் அற்று இருப்பது. 3) இவ்வ்வளவு பொறுளார த்தார்கள் இருந்தும் இரான் விஞ்ஞானத்தில் தொழில்நுட்பத்தில்முன்னேறி இருப்பது, அமெரிக்காவின் இராணுவ பலத்தின் சிறிய பிம்பமாக இருக்கும் இஸ்ரேல், 2025 இல் இரான் கொடுத்த அடியாலேயே சனை நிறுத்தத்தை முதலில் கேட்டது 4) சீனாவுக்கான என்னை, சக்தி விநியோகத்தை அமெரிக்கா / மேற்றுகின் கட்டுப்பாட்டில் கொன்டு வருவது. 5) BRICS மற்றும் BRI வழங்கல் பாதை மற்றும் அபிவிருத்தி திடத்தை குழப்புவது. அத்துடன் 6) அத்துடன் மத்தியகிழக்கை கட்டுப்படுத்த கூடிய அதிகார பீடத்துக்கு , உலக கட்டுப்படுத்துவக்கு மிகவும் எதுவாக இருக்கும் என்ற நம்பிக்கையும், அனுபவமும் 7) இதுக்கு எல்லாம் இரானில் பொம்மை ஆட்சியில் இருக்க வேண்டும் முன்பு சொல்லி இருந்தேன் சீன, ரசிய அமெரிக்கா உள்நுழைந்து சிக்கிய பின்பே, ஈரானுக்கு பின்புலத்தில் நேரடியாக இறங்காத எல்லாவற்றையும் செய்யும். அதில் முக்கியமாக அவரின் நம்பிக்கை, ஒவ்வொரு நாடும் அவற்றின் பலத்தில் நிற்கவேண்டும். (உள்ளே இறங்குவது என்பது இறங்குவது தரைப்படை அல்ல. பதிலுக்கு பதில் தாக்குதலில் இருந்து மெரிக்கா விலத்த முடியாத நிலை ) 40 வருடங்களுக்கு மேல் பொருளாதார தடைக்குள் இருக்கும் இரான் , அமெரிக்காவின் வெற்று வேட்டு வாய்சவாலத்தை (bluff) வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. ராஜதந்திரத்தில். அமெரிக்கா / மேற்கை இரான் பச்சடி போடு உள்ளது. ஆனால், மறுவளமாக, எந்த விதமாக பாத்தாலும் , அமெரிக்கா / மேற்கு பொறியின் விளிம்பில், ஒரு கால் பொறிக்குள் சரிந்து நிற்கிறது. (அமெரிக்காவிடம் எஞ்சி இருப்பது பூரணம் இல்லாத இராணுவ பலம், அதை கூட ஈரான் சமாளிக்கும், சாமாளிப்போம் என்ற நம்பிக்கை, போய் வேறு எவரிடமும் ஒழிய விரும்பாத தன்னம்பிக்கை) எந்தா விதமாக பார்த்தாலும், அமெரிக்கா தாக்கினாலும், யுத்தத்தை வென்று விட்டே இரான் சண்டையை ஆரம்பிக்கும், சீன இராணுவ கேந்திர தளபதி / சிந்தனையாளர் Sun Tzu வகுத்தது போல. ஆனாலும். அமெரிக்கா தாக்கும் வ்வாய்ப்புகளே அதிகம் கரணம், இங்கே சொல்லப்படும் டிரம்ப் இன் அந்தரங்க எஸ்பெட்டின் படங்கள் (அபய் இருந்தால்), இஸ்ரேல் இடம் இருக்கும் வாய்ப்புகளே அதிகம். புடின் கூட டிரம்ப் இவ்வளவுக்கு இரங்கி போகவில்லை. இங்கே சிலர் சொலவது போல, எவர் முல்லா(ட்டா)கள்? அமெரிக்கா. மேட்ற்கு வாலுகள் எதை செய்ய சாத்திய கூறுகள் இருக்கிறது என்பதை சொல்லும் பேட்டி. ( இருந்து கொல்லும் துரோகமே. வெனிசுலாவிக்காவிலும் நாந்ததுஅதுவே) யதார்த்தை சொல்லும் பேட்டி.
3 days 9 hours ago
3 days 9 hours ago
3 days 9 hours ago
2026 ஜனவரியில் சரிந்த இலங்கை ஆடை ஏற்றுமதி! இலங்கையின் ஆடை ஏற்றுமதி 2025 ஜனவரியில் 437.07 மில்லியனாக இருந்த நிலையில், 2026 ஜனவரியில் 2.66 சதவீதம் சரிந்து 425.44 மில்லியன் டொலர்களாக குறைந்துள்ளதாக ஒரு தொழில்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. இது நாட்டின் முக்கிய ஏற்றுமதி சந்தைகளில் தொடர்ச்சியான அழுத்தத்தை பிரதிபலிக்கிறது. அதன்படி, ஜனவரி செயல்திறன் சீரற்ற உலகளாவிய தேவையை எடுத்துக்காட்டுவதுடன், பன்முகத்தன்மை மற்றும் போட்டித்தன்மையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலுப்படுத்துகிறது என்று கூட்டு ஆடை சங்க மன்றம் (JAAF) தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கான ஆடை ஏற்றுமதி 2.73 சதவீதம் குறைந்து 165.11 மில்லியன் டொலர்களாக உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி (இங்கிலாந்து தவிர்த்து) 1.93 சதவீதம் குறைந்து 126.99 மில்லியன் டொலர்களாக உள்ளது. இங்கிலாந்துக்கான ஏற்றுமதி நிலையாக இருந்தது, 0.23 சதவீதம் அதிகரித்து 61.71 மில்லியன் டொலர்களாக இருந்தது. அதே நேரத்தில் ஏனைய சந்தைகளுக்கான ஏற்றுமதி 6.07 சதவீதம் குறைந்து 71.63 மில்லியன் டொலர்களாக இருந்தது என்று JAAF தெரிவித்துள்ளது. ஜனவரி மாத முடிவுகள் சீரற்ற உலகளாவிய தேவையைக் குறிக்கின்றன என்றும், நாட்டின் ஆடைத்துறையின் பன்முகத்தன்மை மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன என்றும் JAAF கூறியது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தின் ஓரளவு வளர்ச்சி, 2026 ஜனவரி 1, முதல் அமுலுக்கு வந்த திருத்தப்பட்ட வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்தின் (DCTS) கீழ் வர்த்தக சீர்திருத்தங்களுடன் ஒத்துப்போகிறது. இந்த மாற்றங்கள் மூலத் தேவைகளுக்கான விதிகளைத் தளர்த்தியுள்ளன, இப்போது இலங்கை உற்பத்தியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிய நாடுகளிலிருந்து மட்டுமல்லாமல் உலகளவில் மூலப்பொருட்களை வாங்கும்போது கூட, வரியின்றி ஐக்கிய இராஜ்ஜியத்துக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கிறது. மேலதிகமாக, சீரான 10% தற்காலிக அமெரிக்க வரியை அறிமுகப்படுத்துவது, முன்னர் இருந்த அதிக நாடு சார்ந்த விகிதங்களை மாற்றியுள்ளது மற்றும் இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு அதிக குறுகிய கால விலை நிர்ணய உறுதிப்பாட்டை வழங்குகிறது என்றும் JAAF தெரிவித்துள்ளது. https://athavannews.com/2026/1466585
3 days 9 hours ago
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்! ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் இன்று காலை ஒரு தடுப்பு ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் சனிக்கிழமை (28) தெரிவித்தார். இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் ஏவப்படுவதற்கான சாத்தியக்கூறுகளுக்கு பொதுமக்களை தயார்படுத்துவதற்காக நாடு முழுவதும் உள்ள பகுதிகளில் பாதுகாப்புக்காக வான்வழித் தாக்குதல் சைரன்களை ஒலித்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடையே, இஸ்ரேல் முழுவதும் அரசு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் குறிப்பிட்டுள்ளார். தாக்குதலுக்குப் பின்னர் ஈரானின் தலைநகரான தெஹ்ரான் நகர மையத்தில் ஏற்பட்ட வெடிப்பிலிருந்து அடர்ந்த புகை எழுந்தது. ஈரானிய அரசு தொலைக்காட்சி குண்டுவெடிப்பை ஒப்புக்கொண்டது, எனினும் மேலதிக விவரங்களை வழங்கவில்லை. ஏற்கனவே அதிகமாக இருந்த ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பதட்டங்கள், கடந்த ஆண்டு இறுதியில் நாடு தழுவிய போராட்டங்களை ஈரான் ஒடுக்கத் தொடங்கியதிலிருந்து அதிகரித்து வருகின்றன. ஈரான் தனது அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ட்ரம்ப் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார், ஆனால் அந்த நாடு அதை மறுத்துள்ளது. மாறாக அமைதியான நோக்கங்களுக்காக யுரேனியத்தை செறிவூட்டுவதாக வலியுறுத்துகிறது. அமெரிக்கா பல வாரங்களாக இப்பகுதியில் ஏராளமான விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை நிலைநிறுத்தி வருகிறது. வெள்ளிக்கிழமை தாக்குதல்கள் அச்சுறுத்தல் அதிகரித்ததால், இஸ்ரேலை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா தனது குடிமக்களை வலியுறுத்தியது. ஈரானும் அமெரிக்காவும் இந்த வாரம் ஜெனீவாவில் தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் குறித்து பல மணி நேரம் மறைமுக பேச்சுவார்த்தைகளை நடத்தின, ஆனால் ஒரு ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறியமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1466607
3 days 10 hours ago
அனேகமாக…. இரண்டு, மூன்று நாட்களுக்குள் சண்டை தொடங்கும் போலுள்ளது. யார்… நல்லாய் அடிக்கிறான் என்று, “பொப்கோர்ன்” சாப்பிட்டுக்கொண்டு பார்ப்போம்.
3 days 10 hours ago
பிரான்ஸ் பாண் தயாரிப்பில்… முதலிடம் பெற்ற ஜெகதீபனுக்கு வாழ்த்துக்கள். முன்பும் ஒரு தமிழர் பாண் தயாரிப்பில் முதல் இடம் பெற்று இருந்தவர். தமிழர்கள் வெளிநாடுகளில்… சிறந்த பாண்களை தயாரித்து பரிசு வாங்க…. உள்ளூரில் நமக்கு சிங்களவன் பேக்கரி நடத்தி பாண் விற்கிறான். இதே… திறமையை, ஊரில் உள்ள தமிழர்களால் ஏன், செய்ய முடியாது உள்ளது. அங்கு பேக்கரி நடத்தினால்…. சனம் “புறணி” கதைக்கும் என்ற பயத்தில், பலரும் பாண் தயாரிக்க பஞ்சிப் படுகிறார்கள் போலுள்ளது.
3 days 10 hours ago
ஈரான் - இஸ்ரேல் பதற்றம்: பிரிட்டிஷ் உட்பட பல நாடுகளின் தூதரக ஊழியர்கள், குடிமக்கள் வெளியேற்றம் Published By: Vishnu 28 Feb, 2026 | 05:27 AM ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், பிரிட்டிஷ் உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் இராஜதந்திர அதிகாரிகள் மற்றும் குடிமக்களை பிராந்தியத்திலிருந்து திரும்பப் பெற நடவடிக்கை எடுத்துள்ளன. ஈரானிலுள்ள பிரிட்டிஷ் தூதரக ஊழியர்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, அத்தியாவசிய தேவைகளைத் தவிர இஸ்ரேலுக்கு பயணம் செய்ய வேண்டாம் என பிரிட்டன் தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் அவசரகாலம் அல்லாத பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு நாட்டை விட்டு வெளியேற அனுமதி வழங்கியுள்ளது. மேலும், சீனா, இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகளும் பாதுகாப்பு காரணங்களால் ஈரானில் வசிக்கும் தங்கள் குடிமக்களை விரைவில் வெளியேறுமாறு அறிவித்துள்ளது. ஈரான் - இஸ்ரேல் பதற்றம்: பிரிட்டிஷ் உட்பட பல நாடுகளின் தூதரக ஊழியர்கள், குடிமக்கள் வெளியேற்றம்
3 days 10 hours ago
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம் Feb 27, 2026 - 10:19 PM இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின் உறவுப் பாலமாகத் திகழும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா, இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆலயத்தின் முன்பாக உள்ள கொடிமரத்தில், புனித அந்தோனியாரின் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன் கலந்துகொண்டு, திருவிழாக் கொடியினை ஏற்றிவைத்து விழாவைத் தொடக்கி வைத்தார். கொடியேற்றத்தைத் தொடர்ந்து, யாழ் மறைமாவட்ட ஆயர் ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் தலைமையில், பல பங்குத்தந்தைகள் கலந்துகொண்டு விசேட கூட்டுப் பிரார்த்தனைகளை முன்னெடுத்து வருகின்றனர். கடல் கடந்த பக்தர்களை ஒன்றிணைக்கும் இந்தத் திருவிழா, இரு நாட்டு மக்களிடையேயான நல்லுறவின் அடையாளமாக இன்றும் போற்றப்படுகிறது. -யாழ். நிருபர் பிரதீபன்- கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்
3 days 10 hours ago
ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை ‘மகிழ்ச்சி அளிக்கவில்லை’ – ட்ரம்ப் கருத்து February 28, 2026 ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த சமீபத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, தான் ஈரான் தொடர்பான விவகாரத்தில் மகிழ்ச்சியாக இல்லை என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார், ஆனால் அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதா என்பது குறித்து தான் இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் கூறினார். “நாங்கள் பெற வேண்டியதை அவர்கள் எங்களுக்கு வழங்கத் தயாராக இல்லை என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. எனவே எனக்கு இதில் ஆர்வமும் இல்லை,” என்று வியாழக்கிழமை (பிப்ரவரி 26) ஒப்பந்தம் ஏதுமின்றி முறிந்த ஜெனீவா பேச்சுவார்த்தைகள் குறித்த தனது கருத்தை டிரம்ப் கூறினார். ஈரானுக்கு எதிராக ராணுவ பலத்தைப் பயன்படுத்த தான் விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் வலியுறுத்தினார், ஆனால் “சில சமயங்களில் நான் அதைச் செய்ய வேண்டிய நிலை வரும்” என்று கூறினார். ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் குறித்த கவலை, வெள்ளிக்கிழமை அன்று பல நாடுகள் இப்பகுதியில் உள்ள தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கைகளை வழங்க வழிவகுத்தது. பிரிட்டன் தற்காலிகமாக தெஹ்ரானில் உள்ள தனது தூதரகத்தில் இருந்து பணியாளர்களைத் திரும்பப் பெற்றது மற்றும் இஸ்ரேலுக்கு “அத்தியாவசியப் பயணத்தைத் தவிர மற்ற அனைத்தையும்” தவிர்க்குமாறு பயண வழிகாட்டுதலை வெளியிட்டது. சீனா, இந்தியா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகள், நிலைமை மோசமடையக்கூடும் என்பதால் தங்கள் குடிமக்களை ஈரானை விட்டு விரைவாக வெளியேறுமாறு வலியுறுத்தின. ஜெர்மனி இஸ்ரேலுக்கான பயணத்திற்கு எதிரான அறிவுறுத்தல்களை அவசரமாக வழங்கியது. இதற்கிடையில், ஈரானில் உள்ள தனது குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா வலியுறுத்தியது. இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகமும், அதன் அவசரகால பணியாளர்கள் தவிர்த்து சில பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று கூறியது. இரான் அணுசக்தி திட்டங்கள் குறித்து ஒரு ஒப்பந்தத்தை எட்டாவிட்டால், அதற்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். www.ilakku.orgஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை 'மகிழ்ச்சி அளிக்கவில்லை' -...ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த சமீபத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, தான் ஈரான் தொடர்பான விவகாரத்தில் மகிழ்ச்சியாக இல்லை என்று அதிபர் டிரம்ப்
3 days 10 hours ago
சுரேஷ் சலேவிற்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் Feb 27, 2026 - 11:08 PM ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுரேஷ் சலே கடந்த புதன்கிழமை (25) முற்பகல் பேலியகொடையில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு வேலைக்காகச் சென்றுகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார். சுரேஷ் சலேவிற்கு 90 நாட்கள் தடுப்புக்காவல்
3 days 10 hours ago
பாரிஸின் சிறந்த பேக்கர் 2026 : இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட ஜெகதீபன் சாதனை 28 Feb, 2026 | 10:03 AM பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் கடந்த வியாழக்கிழமை (26) நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான பாரிஸின் சிறந்த பாரம்பரிய பிரஞ்சு பேக்கர் போட்டியில் இலங்கையில் பிறந்த 43 வயதான பேக்கர் (Baker) சீதம்பரப்பிள்ளை ஜெகதீபன், வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். முதல் முறையாக இப்போட்டியில் பங்கேற்ற அவர், 142 போட்டியாளர்கள் மத்தியில் இந்த சாதனையைப் படைத்துள்ளார். பாரிஸ் துணை மேயர் நிக்கோலஸ் பொன்னட் ஓலால்ட்ஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மொத்தம் 143 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பாரிஸின் 14-வது வட்டாரத்தில் (14th arrondissement), 103 ரூ டிடோ (103 Rue Didot) என்ற முகவரியில் அமைந்துள்ள இவரது 'ஃபூர்னில் டிடோ' (Fournil Didot) பேக்கரிக்கு இந்தப் பெருமை கிடைத்துள்ளது. இந்த வெற்றிக்காக அவருக்கு €4,000 (சுமார் 13 இலட்சம் இலங்கை ரூபாய்) பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அத்துடன், அடுத்த ஓராண்டிற்கு பிரான்ஸ் ஜனாதியின் உத்தியோகபூர்வ இல்லமான எலிசி அரண்மனைக்கு (Élysée Palace) பேக்கட் ரொட்டிகளை வழங்கும் கௌரவமான ஒப்பந்தமும் அவருக்கு கிடைத்துள்ளது. வெற்றிச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, ஜெகதீபனின் கடைக்கு வாடிக்கையாளர்கள் படையெடுத்து வருகின்றனர். ஒரு புலம்பெயர்ந்த தமிழரின் கடின உழைப்பு, பாரிஸின் பாரம்பரிய அடையாளத்தில் ஒரு காவியமாக மாறியுள்ளதாகப் பாராட்டுகள் குவிகின்றன. இதற்கு முன்னதாக, 2023-ஆம் ஆண்டில், இலங்கைப் பூர்வீகத்தைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜா இந்தப் புகழ்பெற்ற போட்டியில் வெற்றி பெற்ற முதல் இலங்கைத் தமிழர் என்ற வரலாற்றைப் படைத்தது குறிப்பிடத்தக்கது. பாரிஸின் சிறந்த பேக்கர் 2026
Checked
Tue, 03/03/2026 - 14:23
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed