Aggregator

3000 நாட்களை எட்டிய காணாமல் போன உறவுகளின் போராட்டம்!

2 months ago

New-Project-35-1.jpg?resize=600%2C300&ss

3000 நாட்களை எட்டிய காணாமல் போன உறவுகளின் போராட்டம்!

தமிழர் தாயகத்தின் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் 3000 நாளை எட்டியுள்ள நிலையில் கவனயீர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இறுதிப்போரின்போதும்,அதற்கு முன்னரும் காணாமல் போன தமது உறவுகளின் உண்மைநிலையினை வலியுறுத்தி தமிழர் தாயகத்தின் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா அஞ்சல் அலுவலகத்திற்கு அருகில் சுழற்சி முறை உணவுத்தவிர்ப்பு போராட்டம் கடந்த 8 வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில் போராட்டம் ஆரம்பித்து இன்றுடன் 3000 நாட்களை கடக்கின்ற நிலையில் அவர்களது போராட்டம் தீர்வின்றி தொடர்ந்து செல்கின்றது.

இதனையடுத்து இன்றையதினம் அவர்களால் கவனயீர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் ஐரோப்பிய அமெரிக்க கொடிகளை ஏந்தியிருந்ததுடன், தங்களுக்கு சர்வதேசநீதி வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தனர்.

https://athavannews.com/2025/1431117

இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் - 2025

2 months ago
2025 உள்ளூராட்சி தேர்தல்: நாடு முழுவதுமான இறுதி முடிவுகள்! 2025 உள்ளூராட்சித் தேர்தலில் அரசாங்கத்தின் தேசிய மக்கள் சக்தி (NPP) 4,503,930 வாக்குகளைப் (43.26%) பெற்று, இலங்கை முழுவதும் 3927 இடங்களைப் பெற்றுள்ளது. அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி, 23 மாநகர சபைகள், 26 நகர சபைகள் மற்றும் 217 பிரதேச சபைகள் உட்பட 266 உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் கட்சி முன்னிலை வகிக்கிறது. ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 2,258,480 வாக்குகளுடன் (21.69%) 1767 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்தக் கட்சி 13 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கிறது. இதில் 02 நகர சபைகள் மற்றும் 11 பிரதேச சபைகள் அடங்கும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 954,517 வாக்குகளைப் (9.17%) பெற்று, 742 இடங்களைப் பெற்றுள்ளது. ஆனால் எந்த உள்ளூராட்சி மன்றத்தையும் வழிநடத்தத் தவறிவிட்டது. ஐக்கிய தேசியக் கட்சி (UNP) 488,406 வாக்குகளைப் (4.69%) பெற்று 381 இடங்களைப் பெற்றுள்ளது. ஆனால் எந்த உள்ளூராட்சி மன்றத்தையும் வழிநடத்தத் தவறிவிட்டது. இலங்கைத் தமிழ் அரசு கட்சி (ITAK) 307,657 வாக்குகளைப் (2.96%) பெற்று 377 இடங்களைப் பெற்றுள்ளது. அந்தக் கட்சி 37 சபைகளில் முன்னிலை வகிக்கிறது. இதில் 03 மாநகர சபைகள், 01 நகர சபை மற்றும் 33 பிரதேச சபைகள் அடங்கும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) 116 இடங்களைப் பெற்றுள்ளது. 02 நகர சபைகள் மற்றும் 03 பிரதேச சபைகள் உட்பட 05 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கிறது. அதே நேரத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணி 300 இடங்களையும் சர்வஜன அதிகாரம் 226 இடங்களையும் பெற்றுள்ளது. https://athavannews.com/2025/1431108

ஆப்ரேஷன் சிந்தூர்: அதிரடி தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் மரணம்!

2 months ago
இந்திய தாக்குதலில் ஜெய்ஷ்-இ-மொஹமட் தலைவரின் குடும்பத்தினர் 10 பேர் மரணம்! பாகிஸ்தானின் பஹாவல்பூரில் இந்தியத் தாக்குதல்களில் ஜெய்ஷ்-இ-மொஹமட் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் நான்கு உதவியாளர்கள் உயிரிழந்துள்ளதாக பிபிசி உருது செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஜெய்ஷ், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒன்பது பயங்கரவாத முகாம்களை புதன்கிழமை (07) அதிகாலையில் இந்தியா தாக்கியது. பஹால்காமில் உள்ள சுபான் அல்லா வளாகத்தின் மீதான தாக்குதல்கள், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் 26 பேரைக் கொன்ற பஹால்காம் படுகொலைக்கு இந்தியாவின் பதிலடியான ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ இன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இரண்டு குறிப்பிடத்தக்க தாக்குதல்களில் ஒன்றாகும். இதில் பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் அடங்குவர். இதேவேளை புதன்கிழமை எல்லையில் இந்தியா நடத்திய தாக்குதல்களிலும் துப்பாக்கிச் சூட்டிலும் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது. அதேநேரத்தில் அணு ஆயுதப் போட்டியாளர்களுக்கு இடையே பல தசாப்தங்களில் நடந்த மிகக் கடுமையான சண்டையில், பாகிஸ்தான் ஷெல் தாக்குதலில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாகவும், 48 பேர் காயமடைந்ததாகவும் இந்தியா கூறுகிறது. https://athavannews.com/2025/1431101

புதிய பாப்பரசர் தெரிவு மாநாடு இன்று!

2 months ago
புதிய பாப்பரசர் தெரிவு மாநாடு இன்று! கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ் (வயது 88) கடந்த மாதம் 21ஆம் திகதி உடல்நல குறைவால் மரணம் அடைந்தார். பாப்பரசர் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய பாப்பரசரை தேர்வு செய்யும் மாநாடு இன்று (07) தொடங்கும் என்று வத்திக்கான் அறிவித்தது. அதன்படி இன்று(07) பாப்பரசர் தேர்வு தொடங்குகிறது. வத்திக்கானில் உள்ள 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாரம்பரியமிக்க சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான இரகசிய ஆலோசனை கூட்டமும், வாக்கெடுப்பும் நடைபெறுகின்றது. இதற்காக வத்திக்கானில் 250 கர்தினால்கள் குவிந்துள்ளனர். ஆனால் 80 வயதிற்குட்பட்ட 133 கர்தினால்கள் மட்டுமே புதிய பாப்பரசரை தேர்வு செய்யும் தேர்தலில் பங்கேற்று வாக்களிப்பார்கள். வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ள கர்தினால்கள் சிஸ்டைன் தேவாலயத்திற்குள் செல்வதற்கு முன்னர், பைபிள் மீது கை வைத்து இரகசிய காப்பு உறுதி மொழி எடுத்துக்கொள்வார்கள். கர்தினால்களை தவிர இரண்டு அவசர கால வைத்தியர்கள், கார்டினால்களுக்கு சமைக்கும் நபர்கள் மட்டுமே சிஸ்டைன் தேவாலயத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். கர்தினால்கள் உள்பட சிஸ்டைன் தேவாலயத்திற்குள் செல்லும் அனைவரும் வெளி உலக தொடர்பை நீக்க வேண்டும். புதிய பாப்பரசர் ஆக தேர்வு செய்யப்படுபவருக்கு 3இல் 2 பங்கு பெரும்பான்மை கிடைக்கும் வரை பல்வேறு கட்ட வாக்கெடுப்புகள் நடை பெறும். ஒவ்வொரு கர்தினால் வாக்காளரும் தாம் விரும்பும் வேட்பாளரின் பெயரை வாக்குச் சீட்டுகளில் எழுதி தங்களது வாக்குகளை அளிப்பார்கள். போப் தேர்தலில் இந்தியாவைச் சேர்ந்த பிலிப் நேரி பெராவ், பசேலியோஸ் கிளீமிஸ், அந்தோனி பூலா, ஜோர்ஜ் ஜேக்கப் கூவக்காட் ஆகிய 4 கர்தினால்கள் வாக்களிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1431131

புதிய பாப்பரசர் தெரிவு மாநாடு இன்று!

2 months ago

25-680f99f4c8dda.jpg?resize=600%2C375&ss

புதிய பாப்பரசர் தெரிவு மாநாடு இன்று!

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ் (வயது 88) கடந்த மாதம் 21ஆம் திகதி உடல்நல குறைவால் மரணம் அடைந்தார். பாப்பரசர் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய பாப்பரசரை தேர்வு செய்யும் மாநாடு இன்று (07) தொடங்கும் என்று வத்திக்கான் அறிவித்தது.

அதன்படி இன்று(07) பாப்பரசர் தேர்வு தொடங்குகிறது. வத்திக்கானில் உள்ள 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாரம்பரியமிக்க சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான இரகசிய ஆலோசனை கூட்டமும், வாக்கெடுப்பும் நடைபெறுகின்றது.

இதற்காக வத்திக்கானில் 250 கர்தினால்கள் குவிந்துள்ளனர். ஆனால் 80 வயதிற்குட்பட்ட 133 கர்தினால்கள் மட்டுமே புதிய பாப்பரசரை தேர்வு செய்யும் தேர்தலில் பங்கேற்று வாக்களிப்பார்கள்.

வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ள கர்தினால்கள் சிஸ்டைன் தேவாலயத்திற்குள் செல்வதற்கு முன்னர், பைபிள் மீது கை வைத்து இரகசிய காப்பு உறுதி மொழி எடுத்துக்கொள்வார்கள்.

கர்தினால்களை தவிர இரண்டு அவசர கால வைத்தியர்கள், கார்டினால்களுக்கு சமைக்கும் நபர்கள் மட்டுமே சிஸ்டைன் தேவாலயத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். கர்தினால்கள் உள்பட சிஸ்டைன் தேவாலயத்திற்குள் செல்லும் அனைவரும் வெளி உலக தொடர்பை நீக்க வேண்டும்.

புதிய பாப்பரசர் ஆக தேர்வு செய்யப்படுபவருக்கு 3இல் 2 பங்கு பெரும்பான்மை கிடைக்கும் வரை பல்வேறு கட்ட வாக்கெடுப்புகள் நடை பெறும். ஒவ்வொரு கர்தினால் வாக்காளரும் தாம் விரும்பும் வேட்பாளரின் பெயரை வாக்குச் சீட்டுகளில் எழுதி தங்களது வாக்குகளை அளிப்பார்கள்.

போப் தேர்தலில் இந்தியாவைச் சேர்ந்த பிலிப் நேரி பெராவ், பசேலியோஸ் கிளீமிஸ், அந்தோனி பூலா, ஜோர்ஜ் ஜேக்கப் கூவக்காட் ஆகிய 4 கர்தினால்கள் வாக்களிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1431131

வர்த்தகப் போர்; அமெரிக்காவும் சீனாவும் இந்த வாரம் பேச்சுவார்த்தை!

2 months ago
வர்த்தகப் போர்; அமெரிக்காவும் சீனாவும் இந்த வாரம் பேச்சுவார்த்தை! உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போரை தணிக்க முயற்சிக்கும் வகையில், அமெரிக்க மற்றும் சீன அதிகாரிகள் இந்த வாரம் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க உள்ளனர். மே 9 முதல் 12 வரை சுவிட்சர்லாந்தில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் சீன துணைப் பிரதமர் ஹீ லைஃபெங் கலந்து கொள்வார் என்று பீஜிங் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி (USTR) ஜேமிசன் கிரீர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் வொஷிங்டனைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என்று அவர்களது அலுவலகங்கள் அறிவித்தன. வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதிலிருந்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனப் பொருட்களுக்கு 145% வரை புதிய இறக்குமதி வரிகளை விதித்துள்ளார். சீனா அமெரிக்காவிலிருந்து வரும் சில பொருட்களுக்கு 125% வரி விதித்து பதிலடி கொடுத்துள்ளது. இந்த நிலையில் ஆரம்பமாகவுள்ள பேச்சுவார்த்தை பல மாதங்கள் நீடிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஜனவரி மாதம் ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் சீன துணை ஜனாதிபதி ஹான் ஜெங் கலந்து கொண்ட பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் உயர்மட்ட தொடர்பு இதுவாகும். https://athavannews.com/2025/1431104

வர்த்தகப் போர்; அமெரிக்காவும் சீனாவும் இந்த வாரம் பேச்சுவார்த்தை!

2 months ago

New-Project-84.jpg?resize=750%2C375&ssl=

வர்த்தகப் போர்; அமெரிக்காவும் சீனாவும் இந்த வாரம் பேச்சுவார்த்தை!

உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போரை தணிக்க முயற்சிக்கும் வகையில், அமெரிக்க மற்றும் சீன அதிகாரிகள் இந்த வாரம் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க உள்ளனர்.

மே 9 முதல் 12 வரை சுவிட்சர்லாந்தில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் சீன துணைப் பிரதமர் ஹீ லைஃபெங் கலந்து கொள்வார் என்று பீஜிங் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி (USTR) ஜேமிசன் கிரீர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் வொஷிங்டனைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என்று அவர்களது அலுவலகங்கள் அறிவித்தன.

வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதிலிருந்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனப் பொருட்களுக்கு 145% வரை புதிய இறக்குமதி வரிகளை விதித்துள்ளார்.

சீனா அமெரிக்காவிலிருந்து வரும் சில பொருட்களுக்கு 125% வரி விதித்து பதிலடி கொடுத்துள்ளது.

இந்த நிலையில் ஆரம்பமாகவுள்ள பேச்சுவார்த்தை பல மாதங்கள் நீடிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஜனவரி மாதம் ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் சீன துணை ஜனாதிபதி ஹான் ஜெங் கலந்து கொண்ட பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் உயர்மட்ட தொடர்பு இதுவாகும்.

https://athavannews.com/2025/1431104

ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்

2 months ago
இந்த முறை பாகிஸ்தானில் சப்பாத்தியும், பருப்புக்கறியும் சாப்பிட்டு விட்டு... "பேஷ்... பேஷ்... ரொம்ப நன்னாயிருக்கு" என்று சேர்ட்டிபிக்கேற் கொடுப்பார்கள். 😂

அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கால் பதித்த ஈழத்தமிழ் பெண்!

2 months ago
நிச்சயமாக தப்பே இல்லை வசி. இது இயல்பானது. இவ்வாறாக இடதுசாரி சோஷலிச கொள்கைகளில் உள்ள நல்ல அம்சங்களை எமது வாழ்வின் வளத்திற்காக ஆதரிக்குக்கும் நாம் எமது நாட்டிலும் சக மனிதர்களான எளிய மக்களிடமும் அதே பரிவுடன் நடந்து கொள்ளாமை குறித்த முரண்பாட்டையே சுட்டிக் காட்டினேன். மற்றப்படி உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். நன்றி.

ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்

2 months ago
இவை பொட்டு வைக்க போக, அவன் பூவைத்து பின்னியும் விட்டிருக்கான் போல. இனி சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு என வடிவேலு வசனம் பேச வேண்டியதுதான்🤣