Aggregator

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் ஆப்கானிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்

2 months 2 weeks ago
ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர், இந்தியாவில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின் போது…. பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டது சர்ச்சை ஆகி உள்ளது. இந்தியாவில் “தலிபான் விதிமுறைகளை” வகுக்க, பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை திணிக்க… ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அதிகாரம் கொடுத்தது யார் என்று பெண்ணியவாதிகளும், சமூக செயல்பாட்டாளர்களும் அரசை நோக்கி கேள்வி எழுப்பி உள்ளார்கள். பிற்குறிப்பு: தலிபான் அமைச்சருக்கு, வெளிநாட்டுக்குப் போனாலும்…. பெண்களை கண்டால் “அலர்ஜி” போலுள்ளது. 😂

சீனா மீது தற்போதைய விகிதங்களை விட 100% புதிய வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் கூறுகிறார், இது வர்த்தகப் போரை பெருமளவில் அதிகரிக்கிறது.

2 months 2 weeks ago
இது இன் சைட் ரேடிங்கிற்கு வழி வகுக்கும். இது நடக்கப் போகுது என்று தெரிந்தவர்கள் உறவினர்கள் நண்பர்கள் முதலே தமது பங்குகளை விற்றிருப்பார்கள்.

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

2 months 2 weeks ago
இல்லை. அதுவும் தமிழ்நாட்டு அரசியலில் நான் கோபப்படுவதே இல்லை. சரி மன்னிப்பும் தேவையில்லை. அந்த நடிகனை தேடி வந்தவர்கள் உயிரிழந்ததிற்கு உடனடியாக அனுதாபங்களை தெரிவித்திருக்கலாம். இதற்கும் நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்க்கும் உங்களைப்போன்ற விஜய் ரசிகர்கள் மீதுதான் கோபம் வருகின்றது. கரூர் மரணத்திற்கான காரணங்கள் வரும் வரைக்கும் அனுதாபங்களும் அஞ்சலிகளும் காத்திருக்கட்டும். இதற்கும் தமிழ்நாட்டு பட்டிமன்ற பாணியில் பாட்டு வேற போடுகின்றீர்கள்?!?!?!?! அது சரி உங்கள் அபிமான நடிகர் ஜோசப் விஜய் அரசியலுக்கு வருவதற்கான காரணம் என்ன? அவரின் மாற்று அரசியல் கொள்கை என்ன? ஒவ்வொரு கட்சியிலிருந்தும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வசனங்களை பொறுக்கி எழுதி வைத்து அரசியல் மேடை விண்ணாணம் செய்கின்றார். இதில் கொடுமை என்னவென்றால் சீமானின் அரசியல் வசனங்களைத்தான் திரைப்பட பாணியில் பேசுகின்றார் இந்த ஜோசப்பு விஜய்.

கடல்வளம் குன்றுகிறது!

2 months 2 weeks ago

தலையங்கம்

கடல்வளம் குன்றுகிறது!

மீனவர்கள்.

இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் மீன்பிடிப்பது தொடர்பாக அண்மைக் காலங்களில் மீனவர்களுக்கிடையே நிகழ்ந்துவரும் மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை கொள்ளச் செய்கிறது. ஒரே நாட்டின் அண்டை மாநில, மாவட்ட மீனவர்களுக்குள்ளேயே ஒற்றுமையோ, விட்டுக் கொடுத்தலோ இல்லாத நிலையில், அயல்நாட்டு மீனவர்கள் விட்டுக்கொடுத்து அவர்களது கடல் வளத்தை நம்மோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

அண்மையில் கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வெளிமாவட்ட மீனவர்கள் 26 பேரையும், அவர்களது 8 விசைப் படகுகளையும் வேதாரண்யம் மீனவர்கள் பிடித்து ஆறுகாட்டுத்துறை படகு துறையில் சிறை வைத்து விட்டனர்.

காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள் 2 படகுகளில் ஆந்திர மாநில கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அம்மாநில மீனவர்கள் 50-க்கும் மேற்பட்டோரால் தாக்கப்பட்டுள்ளனர். படகுகளை நோக்கி நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன.

வாக்கிடாக்கி, கைப்பேசிகள் மற்றும் மீன்பிடி வலைகள் பறிக்கப்பட்டுள்ளன. மேலும், மீனவர்களை சிறை பிடித்துச் சென்றுவிட்டனர். சமாதான பேச்சுக்குப் பிறகு மீனவர்கள் மட்டும் சொந்த ஊருக்கு திரும்பி வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

தூத்துக்குடி கடல் பகுதியில் நாட்டுப் படகு மற்றும் விசைப் படகு மீனவர்களுக்கு இடையே அவ்வப்போது தொழில் போட்டியால் மோதல் சம்பவங்கள் நிகழ்வது வாடிக்கையாக மாறி இருக்கிறது. கடந்த 2024 மார்ச்சில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் கேரள மீனவர்கள் தூத்துக்குடி கடல் பகுதியில் மீன் பிடித்ததாகக் கூறி, அங்குள்ள மீனவர்களால் சிறை பிடிக்கப்பட்டனர்.

கிழக்குக் கடற்கரையில் மட்டும்தான் இந்த மோதல் என்றில்லை. மேற்குக் கடற்கரையில் கர்நாடக மீனவர்கள் கோவா கடல் பகுதியில் அத்துமீறி புகுந்து மீன் பிடித்து வருவதாகக் கூறி மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த 2022 முதல் 2024 வரையில் அவ்வாறான மோதல் சம்பவங்கள் தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் எல்லாவற்றுக்கும் கூறப்படும் ஒரே காரணம் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாகக் கூறுவதுதான் வேடிக்கை.

நாட்டைச் சுற்றியுள்ள வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல் ஆகிய மூன்று கடல் பகுதிகளிலும் சுமார் 12 கடல் மைல் பகுதிக்கு முழுமையான இறையாண்மை மத்திய அரசுக்குத்தான் உண்டு. சுமார் 200 கடல் மைல் பகுதி வரையில் உள்ள பொருளாதார வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மாநில அரசுகள் அருகில் உள்ள கடல் பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு போன்றவற்றை மட்டுமே செய்துகொள்ள முடியும்.

ஒரு மாவட்ட, மாநில மீனவர்கள் கடலைச் சொந்தம் கொண்டாடிக் கொண்டு மற்ற மீனவர்களை தங்களது எல்லைகளுக்குள் வரக் கூடாது என சட்டபூர்வமாக தடுக்க முடியாது. ஆனால், மீனவர்கள் அவரவர் பயன்பாட்டின் அடிப்படையில் செயற்கையான எல்லை ஒன்றை வகுத்துக் கொண்டு மோதிக் கொள்வது வாடிக்கையாகி வருவது வருத்தமளிக்கிறது.

நாட்டின் கடல் பகுதியை எல்லையாகக் கொண்ட 9 மாநிலங்களிலும் மீனவர்கள் எதிர்கொள்ளும் இந்த மோதல்களுக்கு முக்கியக் காரணம், கடலில் மீன் வளம் குறைந்து வருவதும், மாறி வரும் நவீன மீன்பிடி தொழில்நுட்ப முறைகளும்தான். அதிவேக விசைப் படகுகள் மற்றும் இரட்டைமடி வலைதான் பிரச்னையின் மையப்புள்ளி.

ஆந்திர மீனவர்கள் 200 முதல் 300 குதிரைத் திறன் கொண்ட என்ஜின்களை மீன்பிடி படகுகளில் பயன்படுத்துகின்றனர். ஆனால், காரைக்கால் மீனவர்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 600 குதிரைத் திறன் கொண்ட என்ஜின்களை பயன்படுத்துகின்றனர். இதனால் வலைகள் மற்றும் மீன் வளம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதாக ஆந்திர மீனவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலை பயன்பாடு நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.

இதே காரணங்களால் தமிழக கடல் பகுதியில் மீன் வளம் குறைந்துள்ளது. அதனால்தான், ராமேசுவரம் மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடிக்கச் செல்லும்போது இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இங்கு மீன் வளம் குறைந்துள்ள நிலையில், எஞ்சி இருக்கும் கொஞ்ச வளத்தையும் அபகரித்துச் செல்ல வரும் குளச்சல் மற்றும் கேரள மீனவர்களைச் சிறைபிடிக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது.

ஆந்திர கடல் பகுதியிலும் மீன் வளம் குறைந்துவிட்டதாலும், அடிக்கடி புயல் தாக்குதல் இருப்பதாலும் அம்மாநில மீனவர்கள் கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். ஆதலால், அண்டை மாநில மீனவர்கள் அங்கு வந்து மீன் பிடிப்பது உள்ளூர் மீனவர்களின் கோபத்தை அதிகரிக்கச் செய்கிறது.

தடை செய்யப்பட்ட என்ஜின் மற்றும் வலைகளை மீனவர்கள் தொடர்ந்து பயன்படுத்துவதைத் தடுக்க மீன்வளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாலும், அவற்றால் பயன் எதுவும் ஏற்படவில்லை என்பதைக் கள நிலவரங்கள் உணர்த்துகின்றன.

கடலோர காவல் படை மற்றும் கடலோர பாதுகாப்புக் குழுமம் கண்காணிப்புப் பணிகளை முறையாக மேற்கொண்டால் இந்த மோதல்களைத் தடுக்க முடியும்.

மோதல்களுக்கான காரணங்கள் கண்கூடு. அவற்றைச் சரி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.

https://www.dinamani.com/editorial/2025/Oct/07/marine-resources-are-dwindling

கடல்வளம் குன்றுகிறது!

2 months 2 weeks ago
தலையங்கம் கடல்வளம் குன்றுகிறது! இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் மீன்பிடிப்பது தொடர்பாக அண்மைக் காலங்களில் மீனவர்களுக்கிடையே நிகழ்ந்துவரும் மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை கொள்ளச் செய்கிறது. ஒரே நாட்டின் அண்டை மாநில, மாவட்ட மீனவர்களுக்குள்ளேயே ஒற்றுமையோ, விட்டுக் கொடுத்தலோ இல்லாத நிலையில், அயல்நாட்டு மீனவர்கள் விட்டுக்கொடுத்து அவர்களது கடல் வளத்தை நம்மோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? அண்மையில் கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வெளிமாவட்ட மீனவர்கள் 26 பேரையும், அவர்களது 8 விசைப் படகுகளையும் வேதாரண்யம் மீனவர்கள் பிடித்து ஆறுகாட்டுத்துறை படகு துறையில் சிறை வைத்து விட்டனர். காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள் 2 படகுகளில் ஆந்திர மாநில கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அம்மாநில மீனவர்கள் 50-க்கும் மேற்பட்டோரால் தாக்கப்பட்டுள்ளனர். படகுகளை நோக்கி நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன. வாக்கிடாக்கி, கைப்பேசிகள் மற்றும் மீன்பிடி வலைகள் பறிக்கப்பட்டுள்ளன. மேலும், மீனவர்களை சிறை பிடித்துச் சென்றுவிட்டனர். சமாதான பேச்சுக்குப் பிறகு மீனவர்கள் மட்டும் சொந்த ஊருக்கு திரும்பி வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தூத்துக்குடி கடல் பகுதியில் நாட்டுப் படகு மற்றும் விசைப் படகு மீனவர்களுக்கு இடையே அவ்வப்போது தொழில் போட்டியால் மோதல் சம்பவங்கள் நிகழ்வது வாடிக்கையாக மாறி இருக்கிறது. கடந்த 2024 மார்ச்சில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் கேரள மீனவர்கள் தூத்துக்குடி கடல் பகுதியில் மீன் பிடித்ததாகக் கூறி, அங்குள்ள மீனவர்களால் சிறை பிடிக்கப்பட்டனர். கிழக்குக் கடற்கரையில் மட்டும்தான் இந்த மோதல் என்றில்லை. மேற்குக் கடற்கரையில் கர்நாடக மீனவர்கள் கோவா கடல் பகுதியில் அத்துமீறி புகுந்து மீன் பிடித்து வருவதாகக் கூறி மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த 2022 முதல் 2024 வரையில் அவ்வாறான மோதல் சம்பவங்கள் தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் எல்லாவற்றுக்கும் கூறப்படும் ஒரே காரணம் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாகக் கூறுவதுதான் வேடிக்கை. நாட்டைச் சுற்றியுள்ள வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல் ஆகிய மூன்று கடல் பகுதிகளிலும் சுமார் 12 கடல் மைல் பகுதிக்கு முழுமையான இறையாண்மை மத்திய அரசுக்குத்தான் உண்டு. சுமார் 200 கடல் மைல் பகுதி வரையில் உள்ள பொருளாதார வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மாநில அரசுகள் அருகில் உள்ள கடல் பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு போன்றவற்றை மட்டுமே செய்துகொள்ள முடியும். ஒரு மாவட்ட, மாநில மீனவர்கள் கடலைச் சொந்தம் கொண்டாடிக் கொண்டு மற்ற மீனவர்களை தங்களது எல்லைகளுக்குள் வரக் கூடாது என சட்டபூர்வமாக தடுக்க முடியாது. ஆனால், மீனவர்கள் அவரவர் பயன்பாட்டின் அடிப்படையில் செயற்கையான எல்லை ஒன்றை வகுத்துக் கொண்டு மோதிக் கொள்வது வாடிக்கையாகி வருவது வருத்தமளிக்கிறது. நாட்டின் கடல் பகுதியை எல்லையாகக் கொண்ட 9 மாநிலங்களிலும் மீனவர்கள் எதிர்கொள்ளும் இந்த மோதல்களுக்கு முக்கியக் காரணம், கடலில் மீன் வளம் குறைந்து வருவதும், மாறி வரும் நவீன மீன்பிடி தொழில்நுட்ப முறைகளும்தான். அதிவேக விசைப் படகுகள் மற்றும் இரட்டைமடி வலைதான் பிரச்னையின் மையப்புள்ளி. ஆந்திர மீனவர்கள் 200 முதல் 300 குதிரைத் திறன் கொண்ட என்ஜின்களை மீன்பிடி படகுகளில் பயன்படுத்துகின்றனர். ஆனால், காரைக்கால் மீனவர்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 600 குதிரைத் திறன் கொண்ட என்ஜின்களை பயன்படுத்துகின்றனர். இதனால் வலைகள் மற்றும் மீன் வளம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதாக ஆந்திர மீனவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலை பயன்பாடு நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. இதே காரணங்களால் தமிழக கடல் பகுதியில் மீன் வளம் குறைந்துள்ளது. அதனால்தான், ராமேசுவரம் மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடிக்கச் செல்லும்போது இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இங்கு மீன் வளம் குறைந்துள்ள நிலையில், எஞ்சி இருக்கும் கொஞ்ச வளத்தையும் அபகரித்துச் செல்ல வரும் குளச்சல் மற்றும் கேரள மீனவர்களைச் சிறைபிடிக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. ஆந்திர கடல் பகுதியிலும் மீன் வளம் குறைந்துவிட்டதாலும், அடிக்கடி புயல் தாக்குதல் இருப்பதாலும் அம்மாநில மீனவர்கள் கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். ஆதலால், அண்டை மாநில மீனவர்கள் அங்கு வந்து மீன் பிடிப்பது உள்ளூர் மீனவர்களின் கோபத்தை அதிகரிக்கச் செய்கிறது. தடை செய்யப்பட்ட என்ஜின் மற்றும் வலைகளை மீனவர்கள் தொடர்ந்து பயன்படுத்துவதைத் தடுக்க மீன்வளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாலும், அவற்றால் பயன் எதுவும் ஏற்படவில்லை என்பதைக் கள நிலவரங்கள் உணர்த்துகின்றன. கடலோர காவல் படை மற்றும் கடலோர பாதுகாப்புக் குழுமம் கண்காணிப்புப் பணிகளை முறையாக மேற்கொண்டால் இந்த மோதல்களைத் தடுக்க முடியும். மோதல்களுக்கான காரணங்கள் கண்கூடு. அவற்றைச் சரி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. https://www.dinamani.com/editorial/2025/Oct/07/marine-resources-are-dwindling

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 

2 months 2 weeks ago
கூட வேலை செய்பவனின் தந்தை ஒரு சமையல்காரன் என அறிந்த கோவிந்தன் அவனை நக்கலாகவும் ஏழனமாகவும் பார்த்து சிரித்து விட்டு...தாய் சமைத்து கட்டித்தந்த சோத்து பார்சலை விரித்து வைத்து ஆகா ஓகோ என ரசித்து உருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 

2 months 2 weeks ago
கூட வேலை செய்பவனின் தந்தை ஒரு சமையல்காரன் என அறிந்த கோவிந்தன் அவனை நக்கலாகவும் ஏழனமாகவும் பார்த்து சிரித்து விட்டு...தாய் சமைத்து கட்டித்தந்த சோத்து பார்சலை விரித்து வைத்து ஆகா ஓகோ என ரசித்து உருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.😂

விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!

2 months 2 weeks ago
நான் சீமான் சம்பந்தமான எந்த நேர்மறை கருத்தையும் பதிவதில்லை. ஏன் என்றால் எனக்கு அவரை பிடிக்காது. அவரை அரசியலில் முடமாக்குவதே தமிழக, ஈழ தமிழருக்கு நன்மை என்பது என் நிலைப்பாடு. ஆனால் சீமான் பற்றி விகடன் போன்ற ஒரு நிறுவனம் நேர்மறையான கட்டுரை எழுதினால், அதில் எழுதபட்டதை விமர்சிப்பேனே ஒழிய, விகடன் நாதக ஊதுகுழல், அல்லது சீமானிடம் காசு வாங்கி கொண்டு எழுதுகிறது என சொல்வதில்லை. இதுதான் வித்தியாசம். ஆனால் தம்பிகளின் யூடியுப் சேனல்களை, உ+ம் தூசண துரை, முன்னர் அய்யநாதன், ராவணன் குடில் - அவை பிரச்சார தளங்கள் என அடையாளம் காட்டுவேன். சண்டிவி, கலைஞர் டிவிக்கும் அதுவே.

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

2 months 2 weeks ago
காங்கிரஸ் விஜையை வைத்து ஆட்சியில் பங்கு என ஆரம்பித்து கொஞ்சம் அதிக சீட் கேட்பதோடு அடங்கி விடுவார்கள் என்றே நினைக்கிறேன். விஜை+அதிமுக மட்டுமே ஆட்சியை பிடிக்க கூடிய சேர்க்கை. விஜையோடு தனியே காங்கிரஸ் சேர்ந்தால் விஜை ஒரு சீட் காங்கிரசுக்கு ஏதும் இல்லை என்பதே கரூருக்கு முன்பு கூட நிலமை. இப்படி இருப்பதையும் கெடுக்க காங்கிரஸ் விரும்பாது. அதுவும் செல்வபெருந்தகை இருக்கும் வரை. கூடவே பீகாரில் நித்கிஷ், பிஜேபி இடையே லடாய் என்கிறார்கள். ஆகவே இந்தியா கூட்டணியை பலமாக்க கிடைக்கும் சந்தர்பத்தில் பலவருடம் கூட நின்ற திமுகவை விட்டு, விஜையோடு வருவதில் தேசிய, மாநில மட்டங்களில் காங்கிரசுக்கு எந்த அனுகூலமும் இல்லை. இப்படித்தான் நானும் எண்ணுகிறேன். ஆனால் விஜை கொஞ்சம் மைதானத்தில் இறங்கி விளையாட வேண்டும். டெண்டுல்கர் ஆயினும் டிரெசிங் ரூமில் இருந்து செஞ்சுரி அடிக்க முடியாது🤣.

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

2 months 2 weeks ago
இந்த கோணத்தில் நானும் சிந்தித்து பார்த்தேன். இந்த தேர்தலில் திமுகவை தோற்கடிப்போம், நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுகவுடன் சேருவோம் என டெல்லி தலைமை முடிவெடுத்தாலும்… உள்ளூர் பாஜக ரொம்பவே சோர்ந்து போய்விடுவார்கள். இது வானதி உட்பட அத்தனை சிட்டிங் எம் எல் ஏ களும் பதவி இழப்பதை உறுதி செய்யும். அடுத்த அண்ணாமலையின் இத்தனை வருட உழைப்பு வீண். நயினார் முதல் ராஜா வரை ஆவலோடு காத்திருப்போர் நிலை? இப்படி ஒரு முடிவை டெல்லி எடுத்தால்… தமிழக பாஜக ரொம்பவே துவண்டு போகும். அது என்றோ ஆட்சியை பிடிக்கும் நீண்டகால திட்டத்தை பாதிக்கும். எனவே இப்படி ஒரு முடிவு வர வாய்ப்பில்லை என்றே எண்ணுகிறேன். கூடவே, இன்னும் சில நாட்களில் நயினாரின் பிரச்சாரத்தை பாஜக பொறுப்பாளரும், எடப்பாடியிம் ஆரம்பித்து வைக்கிறார்கள். கூட்டணி நன்றாக ஜெல் ஆகிவிட்டது. இனி பிரிவது கடினம்.

சிவவாக்கியம் எனும் தேன்

2 months 2 weeks ago
கண்ணதாசன் பற்றிய தகவல்களுக்கு நன்றி. இதை பார்த்த போது நானும் நினைத்தேன், இவ்வளவு பகுத்தறிவோடு ஆன்மீகத்தை அணுகிய மனிதனை, மண்ணை சோறாக்கினார், மூங்கிலை வெட்டி தங்கம் எடுத்தார் என விட்டலாச்சார்யா கதை போல திரித்து பின்னாளில் அசிங்கபடுத்தியுள்ளார்கள் என. இது யேசுவுக்கும் புத்தருக்கும் கூட நடந்த விடயம்தானே.

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

2 months 2 weeks ago
எதிரிக்கு எதிரி நண்பர்கள் என்ற ரீதியில்.... பா ஜ க அதை புரிந்துகொண்டு அதிமுக NDA இலிருந்து வெளியேறுவதைக் கண்டும் காணாமலும் விட்டால் மட்டுமே விஜய் அதிமுக கூட்டணி உருவாகும் என நினைக்கிறேன். விஜய் + அதிமுக + பா ஜ க வுடன் இணைந்த கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமைந்தாலும் அந்தக் கூட்டணி விஜயின் அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்கிவிடும். இந்த உங்களின் கருத்தில் வேறுபாடு இல்லை. இதை விட விஜய் தனித்தோ அல்லது இந்திரா காங்கிரசுடனோ கூட்டணி வைத்து போட்டியிட்டு தி முக வை தோற்கடிக்கலாம் ஆனால் எடப்பாடியார் தான் முதல்வராவார். இதற்காக விஜய் அரசியலுக்கு வரவில்லை ஆகவே இன்னும் காலம் இருக்கின்றது. ஆலோசனைகள் செய்து தனித்து நிற்பதென்ற முடிவை விஜய் எடுத்தால் அவருடை எதிர்கால அரசியல் பிரகாசமாக இருக்கும்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months 2 weeks ago
உண்மைதான். அந்த அவுஸ்ரேலிய அணி மாதிரி ஒரு அணி இனி அமைய வாய்ப்பே இல்லை. இது ஒரு தொடர்ச்சிதான். 80களில மேற்கிந்திய அணியின் ஆளுமையைச் சமாளிக்க ஒருவராலும் முடியவில்லை. அவுஸ்ரேலியா பல தொடர்களின் வாங்கின அடியுடன், மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கினார்கள். உள்ளகக் கட்டமைப்பை மாற்றினார்கள். உள்ளூர் மைதானங்களை மாற்றினார்கள். பல வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். சிறந்த வீர்ரகளை இனங்காண குழுவை அமைத்தார்கள். அது எல்லாம் சேர்ந்து, 90களுக்குப் பிறகு அவர்களை ஒரு அசைக்க முடியாத சக்தியாக மாற்றியது. அதே நேரம் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களின் ஓய்வு, அவர்களின் பணம் மற்றும் நிர்வாகப் பிரச்சினை காரணமாக, அவர்கள் மிக மோசமான வீழ்ச்சியைக் கண்டார்கள். லாரா மட்டும் இல்லையென்டால், காணாமலே போயிருப்பார்கள். 90களில் இந்திய அணி அதே விதியை எதிர்கொண்டது. பலமான அவுஸ்ரேலியா. இலங்கையின் எழுச்சி. தென்னாபிரிக்காவின் வருகை. இந்தியாவை நிமிரவே விடவில்லை. போன இடமெல்லாம் அடி. சச்சின் மட்டும் முயற்சி செய்துகொண்டே இருந்தார். சச்சின் ஆட்டமிழந்தால், தொலைக்காட்சியை அணைத்து விட்டுப் போவது சர்வசாதாரணம். அந்த இடத்தில்தான், இந்தியாவும் எல்லா மாற்ற்ங்களையும் ஏற்படுத்தத் தொடங்கியது. 80களின் இறுதியில் அவுஸ்திரேலியா என்ன செய்ததோ, அதையே இந்தியா 90களின் இறுதியில் செய்யத் தொடங்கியது. IPLன் எழுச்சி, எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. இப்போ நாம் பார்க்கும் இந்தியா, அன்று விதைத்த விதை. இப்போ பணம்தான் எல்லாம். இந்தியவை இனி உடைக்க முடியுமோ என்று தெரியவில்லை. அவர்களின் ஆதிக்கம் மிக நீ....ண்.....ட.... காலம் நீடிக்கும் என்று நினைக்கிறேன். மற்ற அணிகள் சும்மா போய் தட்டிவிட்டு வரவேண்டியதுதான்.

சீனா மீது தற்போதைய விகிதங்களை விட 100% புதிய வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் கூறுகிறார், இது வர்த்தகப் போரை பெருமளவில் அதிகரிக்கிறது.

2 months 2 weeks ago
சீனாவில் சில விசித்திரமான விஷயங்கள் நடக்கின்றன! அவர்கள் மிகவும் விரோதமாக மாறி, உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு கடிதங்களை அனுப்பி, அரிய பூமி தொடர்பான உற்பத்தியின் ஒவ்வொரு கூறுகளின் மீதும், சீனாவில் உற்பத்தி செய்யப்படாவிட்டாலும் கூட, அவர்கள் நினைக்கும் வேறு எதன் மீதும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்க விரும்புகிறார்கள். இதுபோன்ற எதையும் யாரும் இதுவரை பார்த்ததில்லை, ஆனால், அடிப்படையில், இது சந்தைகளை "அடைத்துவிடும்", மேலும் உலகின் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிற்கும், குறிப்பாக சீனாவிற்கு வாழ்க்கையை கடினமாக்கும். எங்கிருந்தோ வந்த இந்த பெரிய வர்த்தக விரோதத்தால் மிகவும் கோபமாக இருக்கும் பிற நாடுகளால் நாங்கள் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளோம். கடந்த ஆறு மாதங்களாக சீனாவுடனான எங்கள் உறவு மிகவும் சிறப்பாக இருந்தது, இதன் மூலம் வர்த்தகத்தில் இந்த நடவடிக்கை இன்னும் ஆச்சரியமான ஒன்றாக அமைந்தது. அவர்கள் எப்போதும் காத்திருந்ததாக நான் உணர்ந்தேன், இப்போது, வழக்கம் போல், நான் சொல்வது சரி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது! சீனா உலகையே "சிறைப்பிடித்து" வைத்திருக்க அனுமதிக்கப்படக்கூடாது, ஆனால் அதுதான் நீண்ட காலமாக அவர்களின் திட்டமாகத் தெரிகிறது, "காந்தங்கள்" மற்றும் பிற கூறுகள் தொடங்கி, அவர்கள் அமைதியாக ஓரளவு ஏகபோக நிலையில் குவித்து வைத்திருக்கிறார்கள், இது மிகவும் மோசமான மற்றும் விரோதமான நடவடிக்கை என்று சொல்லலாம். ஆனால் அமெரிக்கா ஏகபோக நிலைகளையும் கொண்டுள்ளது, சீனாவை விட மிகவும் வலுவானது மற்றும் தொலைநோக்குடையது. நான் அவற்றைப் பயன்படுத்தத் தேர்வு செய்யவில்லை, நான் அவ்வாறு செய்ய ஒரு காரணமும் இல்லை - இப்போது வரை! அவர்கள் அனுப்பிய கடிதம் பல பக்கங்கள் நீளமானது, மேலும் விவரங்கள், மிகுந்த குறிப்பிட்ட தன்மையுடன், மற்ற நாடுகளிடமிருந்து அவர்கள் மறைக்க விரும்பும் ஒவ்வொரு கூறுகளும். வழக்கமாக இருந்த விஷயங்கள் இனி வழக்கமானவை அல்ல. அவ்வாறு செய்ய எந்த காரணமும் இல்லாததால் நான் ஜனாதிபதி ஜியிடம் பேசவில்லை. இது எனக்கு மட்டுமல்ல, சுதந்திர உலகின் அனைத்து தலைவர்களுக்கும் ஒரு உண்மையான ஆச்சரியமாக இருந்தது. தென் கொரியாவில் உள்ள APEC இல் இரண்டு வாரங்களில் ஜனாதிபதி ஜியை நான் சந்திக்கவிருந்தேன், ஆனால் இப்போது அவ்வாறு செய்ய எந்த காரணமும் இல்லை. மூவாயிரம் ஆண்டுகாலப் போராட்டம் மற்றும் சண்டைக்குப் பிறகு, மத்திய கிழக்கில் அமைதி நிலவிய நாள் இது என்பதால் சீன எழுத்துக்கள் குறிப்பாக பொருத்தமற்றவை. அந்த நேரம் தற்செயலாக நிகழ்ந்ததா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது? அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட விரோதமான "ஒழுங்கை"ப் பற்றி சீனா சொல்வதைப் பொறுத்து, அமெரிக்காவின் ஜனாதிபதியாக, அவர்களின் நடவடிக்கையை நிதி ரீதியாக எதிர்கொள்ள நான் கட்டாயப்படுத்தப்படுவேன். அவர்கள் ஏகபோகமாக வைத்திருக்க முடிந்த ஒவ்வொரு உறுப்புக்கும், நமக்கு இரண்டு உள்ளன. இது இப்படி வரும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை, ஆனால், எல்லா விஷயங்களையும் போலவே, நேரம் வந்துவிட்டது. இறுதியில், வேதனையாக இருந்தாலும், இறுதியில், அமெரிக்காவிற்கு இது மிகவும் நல்ல விஷயமாக இருக்கும். இந்த நேரத்தில் நாம் கணக்கிடும் கொள்கைகளில் ஒன்று, அமெரிக்காவிற்குள் வரும் சீனப் பொருட்கள் மீதான வரிகளை பெருமளவில் அதிகரிப்பது. இதேபோல், பல எதிர் நடவடிக்கைகளும் தீவிர பரிசீலனையில் உள்ளன. இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி! டொனால்ட் ஜே. டிரம்ப், ஐக்கிய மாகாணங்களின் தலைவர். நவம்பர் 1, 2025 முதல், தாங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு பொருளின் மீதும், சிலவற்றை அவர்களால் தயாரிக்கப்படாத பொருட்களின் மீதும் பெரிய அளவிலான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கப் போவதாக உலகிற்கு மிகவும் விரோதமான கடிதத்தை அனுப்புவதன் மூலம் சீனா வர்த்தகத்தில் அசாதாரணமான ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்பது இப்போதுதான் தெரிய வந்துள்ளது. இது விதிவிலக்கு இல்லாமல் அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது, மேலும் இது பல ஆண்டுகளுக்கு முன்பு அவர்களால் வகுக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இது சர்வதேச வர்த்தகத்தில் முற்றிலும் கேள்விப்படாதது, மேலும் பிற நாடுகளுடன் கையாள்வதில் ஒரு தார்மீக அவமானம். சீனா இந்த முன்னோடியில்லாத நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்பதன் அடிப்படையில், நவம்பர் 1, 2025 முதல் (அல்லது விரைவில், சீனாவால் எடுக்கப்பட்ட கூடுதல் நடவடிக்கைகள் அல்லது மாற்றங்களைப் பொறுத்து) இதேபோல் அச்சுறுத்தப்பட்ட பிற நாடுகளுக்காக அல்ல, அமெரிக்காவிற்காக மட்டுமே பேசுகிறது, அமெரிக்கா தற்போது செலுத்தும் எந்தவொரு கட்டணத்திற்கும் மேலாக சீனா மீது 100% வரியை விதிக்கும். மேலும் நவம்பர் 1 ஆம் தேதி, எந்தவொரு மற்றும் அனைத்து முக்கியமான மென்பொருட்களிலும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிப்போம். சீனா இப்படி ஒரு நடவடிக்கை எடுத்திருக்கும் என்று நம்புவது சாத்தியமில்லை, ஆனால் அவர்கள் எடுத்திருக்கிறார்கள், மற்றதெல்லாம் வரலாறு. இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி! டொனால்ட் ஜே. டிரம்ப், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது முதலாவது பதிவில் சீனா விசித்திரமாக நடக்கிறது என பணச்சந்தை மூடுவதற்கு 6 மணித்தியாலத்திற்கு முன்னர் கூறினார், அப்போது அவுஸ்ரேலிய டொலரினை விற்று ஜப்பான் ஜென் வாங்கியிருந்திருந்தேன் ஒரு குறிப்பிட்ட சதவிகித இலாபத்தில் இருந்த எனது வர்த்தகம் இந்த அறிக்கை வெளியான பின்பு அதிகளவில் சாதக போக்கினை காட்டியது வார இறுதி என்பதால் வர்த்தகத்தினை மூடிவிட்டேன், பணச்சந்தை மூடிய பின் 6 மணி நேரத்தின் பின்னர் இரண்டாவது 100% வரி அறிவிப்பினை மேற்கொண்டுள்ளார். இவரது கடந்த ஆட்சிக்காலத்திலும் இவ்வாறு அறிவுப்பகளை விட்டு (Bull trap, Bear trap) சந்தையினை புரட்டி போடுபவர் (இதில் அவருக்கு ஆதாயம் உண்டு என கருதுகிறேன்). வார ஆரம்பத்தில் ஜப்பானிய ஆளும் கட்சிக்கு ஒரு பெண்மணி தலைவராகிறார் எனும் செய்தியால் அவுஸ் ஜப்பான் இணை எகிறியது வார இறுதியில் மீண்டும் அதே நிலைக்கு ட்ரம்ப் கொண்டு வந்து விட்டார், தற்போது வெளியிட்ட இரண்டாவது அறிவுப்பு வரும் வாரத்தில் சந்தையினை என்ன செய்யபோகிறது என தெரியவில்லை. அவுஸ்ரேலியாவின் மூலப்பொருள் ஏற்றுமதி பெருமளவில் சீன இறக்குமதியில் தங்கியிருப்பதால், பெரும் தாக்கம் ஏற்படும் என கருதுகிறேன்; அல்லது முதலாவது அறிவிப்பே அதற்கான விளைவை ஏற்கனவே ஏற்படுத்தியுமிருக்கலாம்.

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

2 months 2 weeks ago
கொஞ்சம் கோவமாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். சிறிது அவகாசம் கொடுத்துத்துப் பார்க்கலாம். இந்த விடயத்தில் கவலைதான் தெரிவிக்க வேண்டுமே தவிர மன்னிப்பு எதற்காக? வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அங்கிருந்து தீர்ப்பு வரும். கண்ணதாசன் திமுக ஆட்சியை சாடி ஒரு பாடல் எழுதியிருந்தார் அந்த பாடலில் இடம் பெற்ற வரி எனக்கு ஞாபகம் வந்தது. “சட்டத்தின் பின்னால் நின்று சதிராடும் கூட்டம் தலைமாறி ஆடும் இன்று அதிகார ஆட்டம் என்றைக்கும் மேலிடத்தில் இவர் மீது நோட்டம் இப்போது புரியாது எதிர்காலம் காட்டும்…”

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months 2 weeks ago
அவர் எல்லோரையும் அண்ணா அய்யா என்றழைப்பதிலேயே தெரிகிறது அவர் எவ்வளவு இளசு என்று. மகளிர் அணிகள் எல்லாம் இன்னும் நீண்டதூரம் போகவேண்டியுள்ளது. கடந்த பத்து வருடத்தில் அவர்களின் வளர்ச்சி அளப்பெரியது. அடுத்த பத்து வருடத்தில் இன்னும் அமர்க்களமாய் இருக்கும். பணம் ஒரு தடையாக இல்லாவிட்டால் சரி.

மீண்டும் மீட்டுப் பார்க்க வேண்டிய காலம்

2 months 2 weeks ago
“முதல் முதல் வாழ்ந்த கிராமத்து வீடு முதல் முதல் ஆக்கிய கூட்டாஞ் சோறு …” ஞாபகம் வருதே ஞாபகம் வருதே… மீண்டும் மீட்டிப் பார்க்க வைத்தது👍