Aggregator

பாவப்பட்ட 🇪🇺🇨🇦 புலம்பெயர்ந்த முதலாவது தலைமுறை..

2 months ago
ஏனைய நாடுகளை போல் சொந்தமாக வீடு வாங்கினால்தான் வாழ்க்கை எனவும் ஜேர்மன் மக்கள் நினைப்பதில்லை. வாடகை வீட்டில் இருப்பது சர்வசாதாராணம்.

ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்

2 months ago
வடக்கன்களின் வாய்க்கு வாய்க்கரிசி போடவேணும். சும்மா அலம்பிக்கொண்டு நிக்குதுகள்! குறிப்பு: யாழ்குடாநாட்டுக்கு வடக்கில இருக்கிறவன்கள் எல்லாம் வடக்கன்கள் தான்!

தமிழரசுக்கட்சி பலவீனமடையவில்லை தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக சேர்ந்து இருந்ததை விட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கின்றது- எம் ஏ சுமந்திரன் !

2 months ago
அது உங்கள் கோளாறு. எண்பதற்கு மேல் வாக்கு வங்கியை வைத்திருந்த ஒரு பெரும் கட்சியை ஒரு வாக்கில் தொடங்கி வளரும் இன்னொரு கட்சியுடன் சீண்டு முடியவேண்டிய நிலையில் கருத்து வறுமை வெறுமை அல்லது வஞ்சனை....

ஜேர்மனியில் சேன்சலர் தேர்தல்: தோல்வியைத் தழுவிய ஃபிரிடிரிக் மெர்ஸ்!

2 months ago
நல்ல முடிவு வரவேற்கிறேன் .....ஜேர்மன் பாராளுமன்றத்தில் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் இருந்தால் இப்படியான பிரச்சனைகள் வாராது

ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்

2 months ago
பாகிஸ்தான் இராணுவத்தின் கணக்கு என சொல்லி கொள்ளும் இந்த கணக்கு, பூடகமான பதிவுகளை சில நிமிடம் முன் வெளியிட்டுள்ளது. ஒரு ரபேல் வீழ்ந்ததை பிரெஞ் அதிகாரிகள் உறுதிபடுத்தினர் என்கிறது இந்த கணக்கு.

அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கால் பதித்த ஈழத்தமிழ் பெண்!

2 months ago
உங்களது கருத்தில் முழுமையாக உடன்படுகிறேன், சில வேளை நாங்கள் அதிகமான நலன் விரும்பிகளாக இருப்பதால் மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் விட்டு விடுகிறோமோ என தோன்றுகிறது. எமது நாட்டில் உள்ள இயலாத மக்களை மட்டுமல்ல வந்தேறிய நாடுகளிலேயே உள்ள இயலாத மக்களையும் எமது செய்கைகளால் பாதிப்புள்ளாக்குகிறோம். கோவிட் சீனாவில் இருந்து பரவிக்க்கொண்டிருந்த காலகட்டத்தில் மலிவாக கிடைத்த ஐரோப்பிய உல்லாச பிரயாணத்தினை தொடர்வதா அப்படி பிரயாணம் செய்தால் எமக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என இணையத்தில் ஆலோசனை கேட்பதில் காட்டும் அக்கறையினை, அப்படி ஒரு பிரயாணத்தின் மூலம் நாம் காவி வரும் நோய் நாம் வாழும் நாட்டில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், வயோதிகர்களை தடுப்பூசி அற்ற காலத்தில் கொல்லும் என தெரிந்தும் அதனை பற்றி கவலைப்படாமல் மலிவான டிக்கெட்டிற்காக மற்றவர்களை கொல்லும் மனிதர்களாக எமது நலன் உயரத்தில் நிற்கிறோம். நாம் மட்டுமல்ல உலகே இப்படித்தான் இயங்குகிறது, அதனால் எங்களில் மட்டும் தப்பில்லை.

ஜேர்மனியில் சேன்சலர் தேர்தல்: தோல்வியைத் தழுவிய ஃபிரிடிரிக் மெர்ஸ்!

2 months ago
இதை செய்யாவிடில் AfD வெல்ல இவர்களே வழி சமைத்தது போல் ஆகி விடும். பிரிதானியா பழமைவாதிகளுக்கும் இப்படி ஒரு தலைவர்தான் தேவை.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

2 months ago
நாளைக்கு என் தலைமையில் இந்த மண்ணில் பல போராட்டங்கள் நடைபெறும் எதிரிகளை புற முதுகோடு வைத்து எங்கள் கொள்கைகளை ( இருந்தால்த்தானே ) 😅முன்னிறுத்தி.... மூச்சு வாங்குது.... இருந்தாலும் ....😂 சென்னை இந்த முறை கோப்பையைத் தூக்காவிட்டால் நான் எனது பதவியத் துறந்து விடுவேன்......🤣 இப்படிக்கு உங்கள் தம்பி இயங்காக் குமாரன் 😜

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

2 months ago
தரம்சாலாவில் நடைபெறும் இந்த போட்டி, இந்திய பாகிஸ்தான் பதற்றநிலையால் விமான போக்குவரத்துகளில் சில கட்டுப்பாடுகள் காணப்படுவதாகவும் அது இந்த போட்டியினை பாதிக்கலாம் என கேள்விபட்டேன் உண்மையா?

தமிழரசுக்கட்சி பலவீனமடையவில்லை தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக சேர்ந்து இருந்ததை விட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கின்றது- எம் ஏ சுமந்திரன் !

2 months ago
சரியாகத் தானே சொல்லியிருக்கிறார்? தமிழ் தேசிய பேரவையில், கடந்த தேர்தலில் போட்டியிட சீற் கிடைக்காமல் போனதால் திடீரென்று "தேசிய நரம்பில் கரண்ட்" பாய்ந்தவர்கள்😎 பலர் கூட்டாக நின்றார்கள். தமிழரசுக் கட்சி தனியாக ஒரு கட்சியாக நின்றது. தேர்தலின் பின்னர் கொள்கை ஒத்து வந்தால் சேர்ந்து கொள்ளலாம் என்று முன்னர் சொல்லப் பட்டது போல செய்யலாம். (தமிழ் நாட்டில் ஒரு கட்சி ஒற்றையாக நின்று டிபோசிற் இழக்கும் தருணங்களில், "தனியாக நிக்கிறாங்கள்- அதுவே வெற்றி" என்று வாழ்த்தும் ரசிகர்கள், அதே தியரியை தமிழரசுக்குப் பிரயோகிக்க மாட்டார்களாம்!)

இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் - 2025

2 months ago
உள்ளூராட்சி தேர்தல் முடிந்தது. இனியாவது தெருவில் இருக்கும் குப்பைகளும் சமூக ஊடக குப்பைகளும் குறையும் என்று பார்த்தால் அலப்பறை கொஞ்சமும் குறைந்த பாடில்லை. எப்படி நாங்கள் ஜெயித்தோம் அல்லது ஏன் எதிராளி கட்சி தோற்றார் என்பதற்கு படங்கள் போட்டு ஆராய்ச்சிகள் விளக்கங்கள் வேறு. தேர்தல் முடிவுகள் தமிழினம் தனித்துவமானது என்று காட்டுவதாக பெருமை வேறு. அதிலும் உள்ளூர் மக்களை விட வெளிநாட்டில் நிரந்தரமாக வசிப்பவர்கள் போடும் பதிவுகள் ஈழம் கிடைத்து விட்டதா என்று என்ன வைக்கிறது. தையிட்டி விகாரையை அகற்றுவதற்கு உள்ளூராட்சி முடிவுகளை தான் எதிர்பார்த்து இருந்ததாக ஏமாற்றும் அறிக்கைகள் பல. வரைபடம் போட்டு வடக்கு கிழக்கு இணைந்து விட்டதாக சிலரின் அறிக்கை. வடக்கு கிழக்கில் இந்த தேர்தலில் வென்றவர்கள் பலர் கடந்த காலத்தில் ஈழப் போராட்டத்தை கொச்சை படுத்தியவர்கள் என்பதும் இந்திய மற்றும் உளவுத்துறைகளின் முகவர்களாக செயல்பட்டவர்கள் என்பதும் பலருக்கு மறந்து போய்விட்டது. ஒருபுறம் ஆட்சி அமைப்பதற்கு சிங்கள கட்சிகளுடன் பேரம் பேசிக் கொண்டு மறுபுறம் இந்த வீரமான போலி அறிக்கைகள் தமிழீழம் கோரி தமது உயிரை தியாகம் செய்த போராளிகளின் ஆன்மாக்கள் எந்த பிரயோசனமும் அற்ற இந்த தேர்தல் முடிவு அலப்பறைகளை பார்த்தால் என்ன செய்திருப்பார்கள் என்று எண்ணி பார்த்தேன். உதாரணமாக பருத்தித்துறை பிரதேச சபை கடந்த காலத்திலும் இந்த தேர்தலிலும் தமிழ் தேசிய கட்சிகளின் கையிலேயே இருக்கிறது. கடந்த காலத்தில் குப்பை கழிவுகள் அகற்றாமல் தரிசு நிலங்களுக்கும் வீடுகளுக்கும் வரிகளை அதிகரித்தார்கள். இந்த தேர்தலின் பின்னர் மறுபடியும் மக்களுக்கு எதுவும் செய்யாமல் இன்னும் வரிகளை அதிகரித்து தேர்தலில் செலவழித்த பணத்தை மக்களிடம் இருந்து வசூலிக்க பார்ப்பார்கள். இதற்கு பொதுமக்களாகிய நாங்கள் பெருமைப் படவேண்டுமா? எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே! நன்றி Dr முரளி வல்லிபுரநாதன் 7.5.2025 வாட்ஸப்பில் கண்டது..

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

2 months ago
GMT நேரப்படி நாளை வியாழன் 08 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 58) வியாழன் 08 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் PBKS எதிர் DC 13 பேர் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் 10 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி பிரபா வாதவூரான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே அகஸ்தியன் டெல்லி கேப்பிட்டல்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் சுவி சுவைப்பிரியன் செம்பாட்டான் கந்தப்பு ஏராளன் ரசோதரன் நுணாவிலான் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?

அலசல்: கார்ணி – ட்றம்ப் சந்திப்பு

2 months ago
அலசல்: கார்ணி – ட்றம்ப் சந்திப்புசிவதாசன்கனடிய பிரதமர் கார்ணியின் அமெரிக்க ஜனாதிபதியுடனான முதல் சந்திப்பு நேற்று நடந்தது. யூக்கிரெய்ன் அதிபர் செலென்ஸ்கியின் சந்திப்பைப்போல இதுவும் வெடித்துச் சிதறுமோ என ஐயப்பட்ட சிலருக்கு ஆறுதல். செலென்ஸ்கி சந்திப்பின் பின்னர் தேனீர் கூட் வழங்காமல் அவமதித்து அனுப்பியமைக்கும் கார்ணியின் சந்திப்பின் பின்னர் வெள்ளை மாளிகையில் விருந்து வைத்து அனுப்பியமைக்குமுள்ள வித்தியாசம்?: கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு! பாவம் செலென்ஸ்கி வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்யவில்லை. ட்றம்ப் கார்ணியை உபசரித்து அனுப்பியமை ட்றூடோ, செலென்ஸ்கி உட்படப் பலருக்கு பாடம் புகட்டுவதற்காகவும் இருக்கலாம். இதைத் திட்டமிட்டுச் செய்யக்கூடியவர் ட்றம்ப். இரண்டாம் ஆட்சியில் ட்றம்ப் தன்னை ஒரு சக்கரவர்த்தியாகவே feel பண்ணத் தொடங்கிவிட்டார். சாமரங்கள், ஆலவட்டங்கள் இல்லையே தவிர மந்திரிகள், ஆலோசகர்கள் புடைசூழ அவர் முன் சமூகம் தரும் பிரதானிகள் – நெட்டன்யாஹு தவிர்ந்த – அனைவருக்கும் ஒரு protocol உண்டு. ட்றம்புடன் பேசுவதற்கென்று ஒரு மொழியுண்டு. செலென்ஸ்கிக்கு அது தெரியாது. மூக்குடைபட்டு அனுப்பப்பட்டார். கார்ணிக்கு அது தெரியும். “நீங்கள் பல சொத்துக்காரர். எல்லாச் சொத்துக்களும் விற்பனைக்கென்று வருவதில்லை. நீங்கள் இருக்கும் இந்த வெள்ளை மாளிகைகூட விற்பனைக்கில்லை. விரைவில் உங்களை அழைத்துக் கெளரவிக்கவிருக்கும் பக்கிங்ஹாம் அரண்மனையும் அப்படித்தான்” என ட்றம்பின் மொழியிலேயே நக்கலும் நளினமுமாகச் சிரித்துக்கொண்டே கூறினார் கார்ணி. “கனடாவின் சொந்தக்காரரோடு பேசிவிட்டுத்தான் வருகிறேன். அது ஒருபோதும் விற்பனைக்கு வரப்போவதில்லை” என அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்திருந்தார். அதற்காக ‘கனடாவை அபகரிக்கும்’ திட்டத்தை ட்றம்ப் விட்டுவிட்டதாக எண்ணிவிடக்கூடாது. ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் எடுத்த போதிருந்த ட்றம்ப் தான் இப்போதும் இருக்கிறார். அவருக்குத் தேவை அமெரிக்க உற்பத்தித் துறை அமெரிக்காவுக்கு மீள வேண்டும் என்பதே. அதில் அவரது பிடி தளரவேயில்லை. “கனடாவில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் எங்களுக்குத் தேவையில்லை” என்பதை அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். தேர்தலுக்கு முன்னர் முன்வைத்த வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் ஒப்புவிக்கிறார். “கொஞ்சக் காலத்துக்கு அமெரிக்கர்கள் கஷ்டப்படத்தான் போகிறார்கள். அது பரவாயில்லை” என எளிமையாகக் கடந்து போகிறார். எனவே அவரது மனதை மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் கார்ணி அங்கு சென்றிருந்தால் அதில் அவருக்கு வெற்றியில்லை. ஆனால் செலென்ஸ்கியின் சந்திப்பைப்போல “முற்றும்” போடப்படாமல் கார்ணியின் சந்திப்பு “தொடரும்” எனக்குறியிடப்பட்டிருப்பது கார்ணியின் வெற்றி. கார்ணிக்கு முன்னிருந்த ஜே.டி. வான்ஸ் மற்றும் மார்க்கோ ரூபியோ போன்ற விகடகவிகள் கார்ணிக்கு முன் பவ்வியமாக இருந்தமை அவதானிக்கத்தக்கது. வாய்களைத் திறந்து அவமானப்பட அவர்களுக்கு விருப்பமில்லாமலிருக்கலாம். ஆனால் வழக்கமான ஊடகக் கொழுந்துகளில் ஒன்று வெடி ஒன்றைக் கொழுத்திப் போட்டது. அதைக் கார்ணி மிகவும் இலாவகமாகத் திருப்பி அவரிடமே கையில் கொடுத்துவிட்டார். நாடு திரும்பியதும் அவருக்கு நிறைய வேலை இருக்கிறது. நோஞ்சான் அரசாங்கத்தில் நல்ல, அனுபவமுள்ள மந்திரிகளை நியமிக்க வேண்டும். பொய்லியேவுக்கு அட்மிசன் கிடைக்குமட்டும் வகுப்பு அமைதியாகவிருக்கும். கடற்கரையில்லா அல்பேர்ட்டா மாகாணத்தின் முதல்வி பிரிந்துபோவதற்கான மக்கள் வேட்கையை அறிய கருத்துக்கணிப்பை நடத்தப் போகிறாராம். சில வேளைகளில் அல்பேர்ட்டாவை மனதில் வைத்துக்கொண்டுதான் ட்றம்ப் “51 ஆவது மாநில” கர்ச்சிப்பைச் செய்கிறாரோ என்னவோ. அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் எரிபொருள் பெரும்பாலும் இங்கிருந்துதான் போகிறது. என்னவோ இப்பெண்ணும் ட்றம்பின் மார்-எல்-லாகோ மாளிகைக்கு விஜயம் செய்து வந்தவர். எதையும் அறுதியாகக் கூற முடியாது. சந்திப்பின் பாகம் -2 வரும் வரை.. https://veedu.com/%e0%ae%85%e0%ae%b2%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d/?fbclid=IwY2xjawKImvFleHRuA2FlbQIxMQBicmlkETFJVWhyRnJkbXJMYU8wckF0AR4ZWz1Sy28_a0y8z08kf97PqvpvEm7xrH_fNN1CB0tjZql8TLo5kIoHkWiX_A_aem_SSjgb-vsIHTsLaBveiSCOQ

அலசல்: கார்ணி – ட்றம்ப் சந்திப்பு

2 months ago

Screen-Shot-2025-05-07-at-1.38.02-AM-800

அலசல்: கார்ணி – ட்றம்ப் சந்திப்புசிவதாசன்

கனடிய பிரதமர் கார்ணியின் அமெரிக்க ஜனாதிபதியுடனான முதல் சந்திப்பு நேற்று நடந்தது. யூக்கிரெய்ன் அதிபர் செலென்ஸ்கியின் சந்திப்பைப்போல இதுவும் வெடித்துச் சிதறுமோ என ஐயப்பட்ட சிலருக்கு ஆறுதல். செலென்ஸ்கி சந்திப்பின் பின்னர் தேனீர் கூட் வழங்காமல் அவமதித்து அனுப்பியமைக்கும் கார்ணியின் சந்திப்பின் பின்னர் வெள்ளை மாளிகையில் விருந்து வைத்து அனுப்பியமைக்குமுள்ள வித்தியாசம்?: கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு! பாவம் செலென்ஸ்கி வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்யவில்லை. ட்றம்ப் கார்ணியை உபசரித்து அனுப்பியமை ட்றூடோ, செலென்ஸ்கி உட்படப் பலருக்கு பாடம் புகட்டுவதற்காகவும் இருக்கலாம். இதைத் திட்டமிட்டுச் செய்யக்கூடியவர் ட்றம்ப்.

இரண்டாம் ஆட்சியில் ட்றம்ப் தன்னை ஒரு சக்கரவர்த்தியாகவே feel பண்ணத் தொடங்கிவிட்டார். சாமரங்கள், ஆலவட்டங்கள் இல்லையே தவிர மந்திரிகள், ஆலோசகர்கள் புடைசூழ அவர் முன் சமூகம் தரும் பிரதானிகள் – நெட்டன்யாஹு தவிர்ந்த – அனைவருக்கும் ஒரு protocol உண்டு. ட்றம்புடன் பேசுவதற்கென்று ஒரு மொழியுண்டு. செலென்ஸ்கிக்கு அது தெரியாது. மூக்குடைபட்டு அனுப்பப்பட்டார். கார்ணிக்கு அது தெரியும். “நீங்கள் பல சொத்துக்காரர். எல்லாச் சொத்துக்களும் விற்பனைக்கென்று வருவதில்லை. நீங்கள் இருக்கும் இந்த வெள்ளை மாளிகைகூட விற்பனைக்கில்லை. விரைவில் உங்களை அழைத்துக் கெளரவிக்கவிருக்கும் பக்கிங்ஹாம் அரண்மனையும் அப்படித்தான்” என ட்றம்பின் மொழியிலேயே நக்கலும் நளினமுமாகச் சிரித்துக்கொண்டே கூறினார் கார்ணி. “கனடாவின் சொந்தக்காரரோடு பேசிவிட்டுத்தான் வருகிறேன். அது ஒருபோதும் விற்பனைக்கு வரப்போவதில்லை” என அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்திருந்தார்.

அதற்காக ‘கனடாவை அபகரிக்கும்’ திட்டத்தை ட்றம்ப் விட்டுவிட்டதாக எண்ணிவிடக்கூடாது. ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் எடுத்த போதிருந்த ட்றம்ப் தான் இப்போதும் இருக்கிறார். அவருக்குத் தேவை அமெரிக்க உற்பத்தித் துறை அமெரிக்காவுக்கு மீள வேண்டும் என்பதே. அதில் அவரது பிடி தளரவேயில்லை. “கனடாவில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் எங்களுக்குத் தேவையில்லை” என்பதை அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். தேர்தலுக்கு முன்னர் முன்வைத்த வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் ஒப்புவிக்கிறார். “கொஞ்சக் காலத்துக்கு அமெரிக்கர்கள் கஷ்டப்படத்தான் போகிறார்கள். அது பரவாயில்லை” என எளிமையாகக் கடந்து போகிறார். எனவே அவரது மனதை மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் கார்ணி அங்கு சென்றிருந்தால் அதில் அவருக்கு வெற்றியில்லை. ஆனால் செலென்ஸ்கியின் சந்திப்பைப்போல “முற்றும்” போடப்படாமல் கார்ணியின் சந்திப்பு “தொடரும்” எனக்குறியிடப்பட்டிருப்பது கார்ணியின் வெற்றி.

கார்ணிக்கு முன்னிருந்த ஜே.டி. வான்ஸ் மற்றும் மார்க்கோ ரூபியோ போன்ற விகடகவிகள் கார்ணிக்கு முன் பவ்வியமாக இருந்தமை அவதானிக்கத்தக்கது. வாய்களைத் திறந்து அவமானப்பட அவர்களுக்கு விருப்பமில்லாமலிருக்கலாம். ஆனால் வழக்கமான ஊடகக் கொழுந்துகளில் ஒன்று வெடி ஒன்றைக் கொழுத்திப் போட்டது. அதைக் கார்ணி மிகவும் இலாவகமாகத் திருப்பி அவரிடமே கையில் கொடுத்துவிட்டார்.

நாடு திரும்பியதும் அவருக்கு நிறைய வேலை இருக்கிறது. நோஞ்சான் அரசாங்கத்தில் நல்ல, அனுபவமுள்ள மந்திரிகளை நியமிக்க வேண்டும். பொய்லியேவுக்கு அட்மிசன் கிடைக்குமட்டும் வகுப்பு அமைதியாகவிருக்கும். கடற்கரையில்லா அல்பேர்ட்டா மாகாணத்தின் முதல்வி பிரிந்துபோவதற்கான மக்கள் வேட்கையை அறிய கருத்துக்கணிப்பை நடத்தப் போகிறாராம். சில வேளைகளில் அல்பேர்ட்டாவை மனதில் வைத்துக்கொண்டுதான் ட்றம்ப் “51 ஆவது மாநில” கர்ச்சிப்பைச் செய்கிறாரோ என்னவோ. அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் எரிபொருள் பெரும்பாலும் இங்கிருந்துதான் போகிறது. என்னவோ இப்பெண்ணும் ட்றம்பின் மார்-எல்-லாகோ மாளிகைக்கு விஜயம் செய்து வந்தவர். எதையும் அறுதியாகக் கூற முடியாது.

சந்திப்பின் பாகம் -2 வரும் வரை..

https://veedu.com/%e0%ae%85%e0%ae%b2%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d/?fbclid=IwY2xjawKImvFleHRuA2FlbQIxMQBicmlkETFJVWhyRnJkbXJMYU8wckF0AR4ZWz1Sy28_a0y8z08kf97PqvpvEm7xrH_fNN1CB0tjZql8TLo5kIoHkWiX_A_aem_SSjgb-vsIHTsLaBveiSCOQ

தமிழரசுக்கட்சி பலவீனமடையவில்லை தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக சேர்ந்து இருந்ததை விட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கின்றது- எம் ஏ சுமந்திரன் !

2 months ago
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து பயணிக்கத் தயார் #TruthAboutSumanthiran #PalaliLandIssue #JusticeForNorthEast #TamilStruggle #LegalTruths #WhoSpeaksForUs #HumanRightsSriLanka #ExposeTheTruth மேலும் எனுடன் நேரடியானகருத்துப்பரிமாற்றலுடன் இணைய எனது Whtaspp குழுவிவிலும் இணையலாம். WhatsApp.comTruth About SumanthiranWhatsApp Group Invitehttps://m.facebook.com/story.php?story_fbid=pfbid02B8zst7AhbqCGcurEr88G8NXu5bH7gysXub7KYmdjfmPBdyyHMux2udD7L6qXts28l&id=100044426436593&mibextid=wwXIfr கஜேந்திரகுமார் கேட்ட போதே இணைந்திருக்கலாம்.