Aggregator

01.11.1990 மணலாறு முந்திரிகைக்குளத்தில் அமைக்கப்பட்ட சிறிலங்காப்படைமுகாம் தாக்கியழிக்கப்பட்ட வரலாற்று...

2 months 1 week ago

01.11.1990 மணலாறு முந்திரிகைக்குளத்தில் அமைக்கப்பட்ட சிறிலங்காப்படைமுகாம் தாக்கியழிக்கப்பட்ட வரலாற்று...

தமிழீழத்தின்.இதயபூமியான மணலாற்றில் தமிழர்களின் பாரம்பரிய நிலப்பரப்பிலிருந்து தமிழர்களை விரட்டிவிட்டு அதாவது வடக்குகிழக்கு மாகாணங்களைப் பிரிப்பதற்காக தமிழர்களின் தொடர் நிலப்பரப்பினைச் சிதைப்பதிற்கான நோக்கத்திற்காகவும் சிங்களபௌத்த பேரினவாதத்தின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை அதாவது சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்காகவும் அச்சிங்கள மக்களைப் பாதுகாப்பதற்காகவும் அமைக்கப்பட்ட பல மினிமுகாம்களில் மணலாறு முந்திரிகைக்குள மினிமுகாமும் ஒன்றாகும்.

இம்மினிமுகாமில் நூற்றிற்க்கும் மேற்பட்ட சிங்கள இராணுவத்தினர் இருந்தனர்.

1990 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இப்பகுதியில் பெருமளவான சிங்களமக்களை குடியேற்றுவதற்கான முயற்சிகளில் இம்முகாம் படையினர் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

இத்தகவல்களை மணலாற்று வேவு அணிகள் அப்போது மணலாறு மாவட்டத் தளபதியாக இருந்த லெப்.கேணல் அன்பு அவர்களிடம் கொடுத்தனர்.

வேவுத்தரவுகளை தீவிரமாக ஆராய்ந்த தளபதி அன்பு அவர்களும் தளபதி மேஐர். வீமன் அவர்களும்

நிலமையின் விபரீதத்தை உணர்ந்து இம்முகாமை தாக்கி அழிக்கவேண்டும்.

எனமுடிவெடுத்து தலைவர் அவர்களிடம் இத்தகவல்கள் அனைத்தையும் தெரிவித்தனர்.

தலைவர் அவர்கள் அனைத்துத் தகவல்களையும் கேட்டறிந்தார்.

அதன் சாதகபாதக நிலைகளையும் எவ்வாறு தாக்குதல் நடாத்தவேண்டும் எனவும் அத்தாக்குதலின்போது சிங்களப் பொதுமக்களுக்குச் சிறுசேதமும் ஏற்படக்கூடாதென உறுதியாக தலைவர் அவர்கள் தளபதிக்கு கூறினார்.

இம்முகாம் கட்டாயம் அழிக்கப்படவேண்டும் எனக் கூறியதோடு அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி தளபதிகளை வழியனுப்பிவைத்தார்.

தலைவர் அவர்கள் கொடுத்த ஆலோசனைகளுக்கமைவாகவும் தலைவர் அவர்களின் சிந்தனைக்கேற்ப கடும்பயிற்சி இலகுவான சண்டை என்றதன் அடிப்படையில் வேவுநடவடிக்கைகளில்

பெறப்பட்ட தகவல்களுக்கேற்ப தாக்குதலுக்கான பயிற்சிகள் தொடங்கப்பட்டன.

தாக்குதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போராளிகளுக்கு மேஐர் செங்கோல் அவர்கள் தலைமையிலான போராளிகளால் முறையே நிசாம் வெட்டை மற்றும் ஜீவன் ஆகிய முகாம்களில் பயிற்சிகள் நடைபெற்றன.

பயிற்சிகள் முடிவடைந்து தாக்குதற் திட்டம் தளபதி அன்பு அவர்களால் விளங்கப்படுத்தப்பட்டதுடன் தலைவர் அவர்களால் கொடுக்கப்பட்ட அறிவுரைகளையும் அன்பு அவர்கள் தெளிவாகக் கூறினார்.

தாக்குதலுக்கான இருநூறுபேர் கொண்ட அணிகள் தாயர்படுத்தப்பட்டன.

இவ்வணிகள் கொக்குத்தொடுவாயிலிருந்து படகுகளில் சென்று கொக்கிளாய் கடல்நீரேரியைக்கடந்து தரையிறங்கி அங்கிருந்து நடந்துசென்று 01.11.1990 அன்று அதிகாலை ஒரு மணிவரை முந்திரிகைக்குள முகாமருகில் காத்திருந்து.

அதிகாலை ஒருமணியளவில் மணலாறு முந்திரிகைக்குளத்தில் அமைக்கப்பட்ட சிங்களப்படையின் முகாம் மீது ஒரு வெற்றிகர அதிரடித்தாக்குதலைத் தொடுத்து வெற்றிகொண்டனர்.

குறிப்பிட்ட சிலநிமிடத்தில் முகாம் புலிகளின்

பூரணகட்டுப்பாட்டிற்க்குள் வந்தது.

தொடர்ந்து அந்தமுகாமை தக்கவைத்திருந்த போராளிகள் படைமுகாமை முற்றுமுழுதாக அழித்தொழித்துவிட்டு கைப்பற்றிய ஆயுதங்களுடன் தளம் திரும்பினார்கள்.

இதன் பின்னும் இதனை அண்டியபகுதிகளில் பல்வேறு தாக்குதல்கள் விடுதலைப்புலிகளால் படையினர் மீதுமேற்கொள்ளப்பட்டதால் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டது.

இவ்வாறுதான் எம் தாயக பகுதி மீதான சிங்களத்தின் ஆக்கிரமிப்பு ஆசைகள் முறியடிக்கப்பட்டு வந்தன.

இவ்வெற்றிகர அதிரடித் தாக்குதல்களுக்கான வேவுத்தகவல்களை மேஐர் .ரம்போ கப்டன்.விமல்ராஜ் தலைமையிலான போராளிகளால் சொல்லமுடியாத அர்ப்பணிப்புக்களுடன் சிறுகச்சிறுகச் சேகரித்துக்கொடுத்தனர்.

படைமுகாமின் தாக்ககுதல்களை களத்தில் நின்று மேஐர்.சங்கர் அவர்கள் வழிநடாத்த களமருத்துவத்தை கப்டன் இளங்கோ அவர்கள் தலைமையிலான போராளிகள் செவ்வனவே செய்தனர்.

இவ் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கினைத்து முல்லை மணலாறு மாவட்டத் தளபதி அன்பு அவர்கள் வழி நடத்தினார்.

(1991ம் ஆண்டு முற்பகுதியின் பின்னர் தான் இயக்கத்தின் வளர்ச்சியும் அதன் நிர்வாக கட்டமைப்புக்காகவுமாக ஒருமாவட்டத்தில் சிறப்புத்தளபதி, தளபதி, துணைத்தளபதி எனும் கட்டமைப்பு பரிணாம வளர்ச்சி அடைந்தது.)

இவ்வெற்றிகரத் தாக்குதலை களத்தில் நின்று

வழிநடாத்திய..

மேஐர் .சங்கர்.அவர்களுடன்

2ம் லெப்ரினன்.மதுவன்.

வீரவேங்கை .முசோலினி .

ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.

நீண்டகாலமாக 2ம் லெப்.மதுவனைப் பார்க்காத பெற்றோர் மதுவனைப் பார்பதற்காக மணலாற்று முகாமிற்க்குவந்திருந்தனர்.

ஆனால் அவ்வெற்றிச்சமரில் வீரச்சாவடைந்த மகனின் வித்துடலுடனே மதுவனின் பெற்றோர் வீடுதிரும்பினர்.

இப்படியான பல்வேறு அர்பணிப்புக்கள் தியாகங்கள் நிறைந்த போராட்டமாக தமிழீழவிடுதலைப் போராட்டம் திகழ்கிறது.

கிட்டத்தட்ட முப்பதான்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இச்சம்பவமானது அன்று இக்களமுனையில் நின்றவர்களால் மறக்கமுடியாத பெரும் சோக நிகழ்வாக இன்றும் அப்போராளிகளால் நினைவுகூரப்படுகிறது.

அக்களமுனையில் நின்று இன்று புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் உள்ளத்திலிருந்து......

களத்தில்


(மாவீரர்) கணேசினி - பூவொன்று புயலானது!

2 months 1 week ago

பூவொன்று புயலானது! ❤️💛

பலாலி கிழக்கை பூர்வீக இடமாக கொண்ட கந்தசாமி-சின்னத்தங்கச்சி இணையரிற்கு இளைய மகளாக பிறந்தவள் தான் விஜயராணி. குடும்பத்திலே அவளுக்கு 3சகோதரர்களும் 1சகோதரியுமாக, அவளது குடும்பம் பலாலியிலே மிகவும் செளிப்புடன் வாழ்க்கையை வாழ்ந்துவந்தனர்.

விஜயராணி தனது ஆரம்பக்கல்வியை பலாலி வடக்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையிலே கற்றாள்,பின்னர் 1990.ஆனி.15 > பலாலி இடப்பெயர்வு காரணமாக தனது கல்வியை கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலயத்திலும்

(தற்போது மத்திய கல்லூரியாக பெயர் மாற்றம் பெற்றுள்ளது) பின்னர் அச்சுவேலி- பத்தைமேனியில் வசித்த காலத்தில்- இடைநிலைக்கல்வியை அச்சுவேலி புனித தெரேசாள் மகளீர் கல்லூரியிலுமாக கற்றிருந்தாள். சிறுவயதிலிருந்தே மிகவும் துடிப்பானவளாக, பயமறியாதவளாக தன்னை வளர்த்துக்கொண்டவள், குறிப்பாக அன்றைய கால கட்டத்தில் வீதியால் செல்லும் சிங்களப் படைகளுடன் வாய்ச்சண்டை போடுவாள். எங்கட மண்ணில உவங்களுக்கு இங்க என்ன வேலை என்று அவள் அடிக்கடி தனக்குள் முனுமுனுத்துக்கொள்வாள்.

2002 காலப்பகுதியிலே தாயின் இழப்பு அவளையும் அவளது குடும்பத்தையும் மிகவும் பாதித்திருந்தது. அந்த இழப்பிலிருந்து மீள்வதற்கு விஜயராணி மிகவும் கஷ்டப்பட்டாள், ஏனெனில் அச்சுவேலி வைத்தியசாலையில் அவளது மடியிலே தாயின் உயிர்பிரிந்தது அவளை மிகவும் வாட்டியிருந்தது!

2001/2002 போர்நிறுத்த ஒப்பந்தத்தின் நிமிர்த்தம் > விடுதலை பு*லிகளின் அரசியல் பிரிவினர் யாழ்குடாநாட்டுக்கு வருகை தந்திருந்த காலம் அச்சுவேலியிலே ஆண்,பெண் அரசியல் பிரிவு போராளிகள் தமது பணிகளை பக்கத்து பக்கத்து வீடுகளிலிருந்து மேற்கொண்டனர். பெண் போராளிகளுடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட விஜயராணி அவர்களுடன் மிகவும் பாசத்தோடு பழகலானாள், பின் அவர்களை தனது வீட்டிற்கு அழைத்து உணவு உபசரிப்பு வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தாள்.

தானும் அவர்களை போன்று தேசத்துக்கான தனது கடமையை செய்யவென எண்ணி 2003ம் ஆண்டின் பிற்பகுதியிலே பெண்போராளிகளின் உதவியுடன் வன்னிநோக்கி தனது தேசத்துக்கான பயணத்தை ஆரம்பித்தாள். 3மாத அடிப்படை பயிற்சியை பெற்றுக்கொண்டவள் பயிற்சிப்பாசறையிலே மிகவும் திறம்பட செயற்பட்டு தன்னை புடம்போட்டுக்கொண்டாள்.

இயக்கம் அவளுக்கு இட்ட பெயர் 'கணேசினி'.

கணேசினியை 2ம் லெப். மாலதி படையணி உள்வாங்கிக்கொணடது. அன்றிலிருந்து அவள் சக தோழிகளுடன் மிகவும் பாசத்துக்குரியவளானாள். சிறிது காலத்தின் பின்னர் லெப்.கேணல் குட்டிசிறீ மோட்டார் படையணி கணேசினியை உள்வாங்கியது!

கணேசினி வன்னிக்கு சென்று இயக்கத்திலே சேர்ந்திருந்தமையால் அவளது தந்தையும் மூத்த சகோதரனும் மற்றும் சகோதரியும் வன்னிக்கு இடம்பெயர்ந்தனர். இளைய சகோதரன் இவளுக்கு பின்னர் தன்னையும் போராட்டத்தோடு இணைத்துக்கொண்டார்.

வன்னியிலே தனது சகோதரியின் திருமண நிகழ்வுக்கு வருகை தந்தவள், காதிலே தோடும் போடச் சம்மதிக்கவில்லை, கழுத்திலே ஓர் சிறிய செயினை எல்லோரது வற்புறுத்தலால் போட்டுக்கொண்டாள். அவளவு தூரம் இயக்க மரபை மிகவும் இறுக்கமாக்கிக்கொண்டாள்.

2006.ஆகஸ்ட்.11 போர் மீள வடபோர் முனையிலே ஆரம்பமானது.

முகமாலை, மன்னார் என களமுனைகள் மாறி மாறி மிகவும் உறுதியுடன் போரிட்டாள். வாகனங்கள் ஓடவும் திறமைாக கற்றுத்தேர்ந்திருந்தாள். படிப்படியாக தனது திறமையினூடாக தன்னை வளர்த்துக்கொண்டவள் பின்னர் லெப்.கேணல் குட்டிசிறீ மோட்டார் படையணியின் ஓர் பகுதி தாக்குதலணி பொறுப்பாளராக உயரும் அளவுக்கு தன்னை மாற்றியிருந்தாள்.

இறுதிக்கட்ட போர் உக்கிரமடைந்து மன்னார் களமுனை வழியாக சிங்கள இராணுவம் படிப்படியாக முன்னேறி கிளிநொச்சி வழியாக பரந்தனை ஊடறுத்து முல்லைத்தீவு நோக்கிய போர்ச்சூழல் உச்சம் பெற்ற காலப்பகுதியில் 2009 தை/ மாசி மாதமளவில் அவளது தந்தையும் மூத்த சகோதரனும் அவளை சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்தபோது அவர்கள் கேட்டுக்கொண்டது நீ என்ன செய்யப்போகிறாய் என்று? அவள் கூறிய பதில்- நீங்கள் பாதுகாப்பாக சனங்களோடு போங்கோ, என்னை எதிர்பார்க்க வேண்டாம், இயக்கம் என்ன முடிவு எடுக்குதோ அதே முடிவு தான் தானும் என கூறிய பின் அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டாள். அந்த சந்திப்பு தான் அவர்கள் அவளை இறுதியாக கண்டது.

பின்னர் 10.03.2009 அன்று நடந்த சமரிலே கணேசினி தன்னை ஈழ மண்ணின் விடுதலைக்காக பல்லாயிரம் மாவீரர்கள் வரிசையிலே தன்னையும் இணைத்துக்கொண்டாள்! 15ம் திகதியளவிலே தான் வீரச்சாவு செய்தி கிடைத்ததாக சக பெண்போராளிகள் வாயிலாக பின்னர் அறியக்கிடைத்தது.

மாவீரர் கண்ட கனவு நிச்சயம் ஓர் மெய்ப்படும் என்பது எமது அசைக்க முடியாத நம்பிக்கை!

  • குறிப்பு: கணேசினி அவர்களது வீரச்சாவுக்கு பின்னர் இயக்கம் அவளுக்கு வழங்கிய தரநிலை பற்றி யாரேனும் அறிந்திருப்பின் இங்கே குறிப்பிடவும்.

நன்றி.

27.11.2025

dwd.jpg

(மாவீரர்) கணேசினி - பூவொன்று புயலானது!

2 months 1 week ago
பூவொன்று புயலானது! ❤️💛 பலாலி கிழக்கை பூர்வீக இடமாக கொண்ட கந்தசாமி-சின்னத்தங்கச்சி இணையரிற்கு இளைய மகளாக பிறந்தவள் தான் விஜயராணி. குடும்பத்திலே அவளுக்கு 3சகோதரர்களும் 1சகோதரியுமாக, அவளது குடும்பம் பலாலியிலே மிகவும் செளிப்புடன் வாழ்க்கையை வாழ்ந்துவந்தனர். விஜயராணி தனது ஆரம்பக்கல்வியை பலாலி வடக்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையிலே கற்றாள்,பின்னர் 1990.ஆனி.15 > பலாலி இடப்பெயர்வு காரணமாக தனது கல்வியை கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலயத்திலும் (தற்போது மத்திய கல்லூரியாக பெயர் மாற்றம் பெற்றுள்ளது) பின்னர் அச்சுவேலி- பத்தைமேனியில் வசித்த காலத்தில்- இடைநிலைக்கல்வியை அச்சுவேலி புனித தெரேசாள் மகளீர் கல்லூரியிலுமாக கற்றிருந்தாள். சிறுவயதிலிருந்தே மிகவும் துடிப்பானவளாக, பயமறியாதவளாக தன்னை வளர்த்துக்கொண்டவள், குறிப்பாக அன்றைய கால கட்டத்தில் வீதியால் செல்லும் சிங்களப் படைகளுடன் வாய்ச்சண்டை போடுவாள். எங்கட மண்ணில உவங்களுக்கு இங்க என்ன வேலை என்று அவள் அடிக்கடி தனக்குள் முனுமுனுத்துக்கொள்வாள். 2002 காலப்பகுதியிலே தாயின் இழப்பு அவளையும் அவளது குடும்பத்தையும் மிகவும் பாதித்திருந்தது. அந்த இழப்பிலிருந்து மீள்வதற்கு விஜயராணி மிகவும் கஷ்டப்பட்டாள், ஏனெனில் அச்சுவேலி வைத்தியசாலையில் அவளது மடியிலே தாயின் உயிர்பிரிந்தது அவளை மிகவும் வாட்டியிருந்தது! 2001/2002 போர்நிறுத்த ஒப்பந்தத்தின் நிமிர்த்தம் > விடுதலை பு*லிகளின் அரசியல் பிரிவினர் யாழ்குடாநாட்டுக்கு வருகை தந்திருந்த காலம் அச்சுவேலியிலே ஆண்,பெண் அரசியல் பிரிவு போராளிகள் தமது பணிகளை பக்கத்து பக்கத்து வீடுகளிலிருந்து மேற்கொண்டனர். பெண் போராளிகளுடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட விஜயராணி அவர்களுடன் மிகவும் பாசத்தோடு பழகலானாள், பின் அவர்களை தனது வீட்டிற்கு அழைத்து உணவு உபசரிப்பு வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தாள். தானும் அவர்களை போன்று தேசத்துக்கான தனது கடமையை செய்யவென எண்ணி 2003ம் ஆண்டின் பிற்பகுதியிலே பெண்போராளிகளின் உதவியுடன் வன்னிநோக்கி தனது தேசத்துக்கான பயணத்தை ஆரம்பித்தாள். 3மாத அடிப்படை பயிற்சியை பெற்றுக்கொண்டவள் பயிற்சிப்பாசறையிலே மிகவும் திறம்பட செயற்பட்டு தன்னை புடம்போட்டுக்கொண்டாள். இயக்கம் அவளுக்கு இட்ட பெயர் 'கணேசினி'. கணேசினியை 2ம் லெப். மாலதி படையணி உள்வாங்கிக்கொணடது. அன்றிலிருந்து அவள் சக தோழிகளுடன் மிகவும் பாசத்துக்குரியவளானாள். சிறிது காலத்தின் பின்னர் லெப்.கேணல் குட்டிசிறீ மோட்டார் படையணி கணேசினியை உள்வாங்கியது! கணேசினி வன்னிக்கு சென்று இயக்கத்திலே சேர்ந்திருந்தமையால் அவளது தந்தையும் மூத்த சகோதரனும் மற்றும் சகோதரியும் வன்னிக்கு இடம்பெயர்ந்தனர். இளைய சகோதரன் இவளுக்கு பின்னர் தன்னையும் போராட்டத்தோடு இணைத்துக்கொண்டார். வன்னியிலே தனது சகோதரியின் திருமண நிகழ்வுக்கு வருகை தந்தவள், காதிலே தோடும் போடச் சம்மதிக்கவில்லை, கழுத்திலே ஓர் சிறிய செயினை எல்லோரது வற்புறுத்தலால் போட்டுக்கொண்டாள். அவளவு தூரம் இயக்க மரபை மிகவும் இறுக்கமாக்கிக்கொண்டாள். 2006.ஆகஸ்ட்.11 போர் மீள வடபோர் முனையிலே ஆரம்பமானது. முகமாலை, மன்னார் என களமுனைகள் மாறி மாறி மிகவும் உறுதியுடன் போரிட்டாள். வாகனங்கள் ஓடவும் திறமைாக கற்றுத்தேர்ந்திருந்தாள். படிப்படியாக தனது திறமையினூடாக தன்னை வளர்த்துக்கொண்டவள் பின்னர் லெப்.கேணல் குட்டிசிறீ மோட்டார் படையணியின் ஓர் பகுதி தாக்குதலணி பொறுப்பாளராக உயரும் அளவுக்கு தன்னை மாற்றியிருந்தாள். இறுதிக்கட்ட போர் உக்கிரமடைந்து மன்னார் களமுனை வழியாக சிங்கள இராணுவம் படிப்படியாக முன்னேறி கிளிநொச்சி வழியாக பரந்தனை ஊடறுத்து முல்லைத்தீவு நோக்கிய போர்ச்சூழல் உச்சம் பெற்ற காலப்பகுதியில் 2009 தை/ மாசி மாதமளவில் அவளது தந்தையும் மூத்த சகோதரனும் அவளை சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்தபோது அவர்கள் கேட்டுக்கொண்டது நீ என்ன செய்யப்போகிறாய் என்று? அவள் கூறிய பதில்- நீங்கள் பாதுகாப்பாக சனங்களோடு போங்கோ, என்னை எதிர்பார்க்க வேண்டாம், இயக்கம் என்ன முடிவு எடுக்குதோ அதே முடிவு தான் தானும் என கூறிய பின் அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டாள். அந்த சந்திப்பு தான் அவர்கள் அவளை இறுதியாக கண்டது. பின்னர் 10.03.2009 அன்று நடந்த சமரிலே கணேசினி தன்னை ஈழ மண்ணின் விடுதலைக்காக பல்லாயிரம் மாவீரர்கள் வரிசையிலே தன்னையும் இணைத்துக்கொண்டாள்! 15ம் திகதியளவிலே தான் வீரச்சாவு செய்தி கிடைத்ததாக சக பெண்போராளிகள் வாயிலாக பின்னர் அறியக்கிடைத்தது. மாவீரர் கண்ட கனவு நிச்சயம் ஓர் மெய்ப்படும் என்பது எமது அசைக்க முடியாத நம்பிக்கை! குறிப்பு: கணேசினி அவர்களது வீரச்சாவுக்கு பின்னர் இயக்கம் அவளுக்கு வழங்கிய தரநிலை பற்றி யாரேனும் அறிந்திருப்பின் இங்கே குறிப்பிடவும். நன்றி. 27.11.2025

வீரவேங்கை சந்திரபாபு

2 months 1 week ago

எனது மாமாவின் மகன் , மைத்துனன் , என்னைவிட இரண்டு வயது தான் அதிகம் ,ஆறடி உயரம் , சிறுவயதிலிருந்தே மிகுந்த ஆளுமையானவர் , விளையாட்டு கிரிக்கெட் முதல் கொண்டு கல்வி வரை மட்டுமல்லாது தமையனோடும் எங்களோடு போடும் குத்து சணடை தொடக்கம் விளையாட்டு வரை எப்போதும் அவர் இருந்தால் அது எங்களுக்குச் சிறிய திருவிழாதான்.

என் மாமா மாவட்ட நீதிபதியாக கடமையாற்றியவர் முதலில் மட்டக்களப்பு , சாவகச்சேரி பின்னர் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதியாக கடமையாற்றியவர் . அதனால் ராகவனும் மட்டக்களப்பு , முதல் சாவகச்சேரி இந்து கல்லூரியிலும் , யாழ் இந்து கல்லூரியிலும் கல்வி பயின்றவர் .

சிறுவனாக இருக்கும் போதே மிக உயர்ந்த சிந்தனை கொண்டு இருந்தவர் , ஒரு விமான ஓட்டியாக படிப்பேன் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். யாழப்பாணத்தில் மிக அரிதானவர்கள் தான் டாக்டர் , என்ஜெனியரை தாண்டி பறக்கிற உயர்ந்த சிந்தனைகளை கொண்டவர்கள் .

யாழ் இந்து கல்லுரியில் 8 பாடங்களிலும் " D" எடுத்தவர்கள் இவன் மட்டும் முக்கியமானவனல்ல இவனது உற்ற நண்பர்களும் தான் , இன்னும் அவர்கள் இவனை இறுதி வழியனுப்ப வந்து அழுது கொண்டு இருந்தது இன்னும் மறக்கமுடியாது .

வல்வை வைத்தீஸ்வரன் சிவன் கோயில் தான் எங்களுக்கு குல தெய்வம் , ஸ்கூல் லீவு விட்டு ஊருக்கு வந்தால் கோயில் பந்தம் பிடிப்பது முதல் அந்த சுற்று வட்ட வீடுகள் எல்லாம் நாங்கள் கால் பதித்த இடம் தான் .

நாங்களும் வீட்டில் விக்கிரங்கள் வைத்திருக்கின்றோம் , எங்கட வீட்டுக்கு அவர்கள் வந்தால் என் முருகன் சாமிக்கு கொடி ஏற்றி 10 நாளில் தேர் , பூங்காவனம் தீர்த்தம் எல்லாம் வைப்போம் நான் தான் ஐயர் , அவர்கள் வீட்டுக்கு நாங்கள் போனால் பிள்ளையார் சாமிக்கு கொடி ஏற்றி திருவிழா நடத்தி 10ம் நாள் தீர்ததமாடுவோம் . அவர் தான் ஐயர் . உண்மையான கோயில விட இங்க பக்தியும் , ஒழுக்கமும் உண்மையாக இருக்கும் .

அவனோட கதையை நான் சுருக்கமாக சொல்லோணுமென்றால் , நானும் அவனும் கடைசியாக சந்தித்தது கோண்டாவிலில் 1990 களில் தமிழீழ விடுதலை புலிகள் மாணவர் அமைப்பு (SOLT ) பொறுப்பாளர்களுக்கான போது கூட்டம் நடைபெற்றது .

நான் வடமராட்ச்சியில் இருந்தும் , அவர் வலிகாமத்திலிருந்தும் சென்றிருந்தோம் , அது போர் முனைக்கு எங்களை தயார் படுத்துவதாக இருந்தாலும் , அவர்கள் இறுதி இலக்கு ஒன்றுதான் . டேய் " நாங்க சந்தித்ததை வீட்டில சொல்லாதே என்றான் " அதற்கு பிறகு அவன் கதைத்தது அப்பவும் இப்பவும் சரியாக விளங்கவேயில்லை . பின்னாளில் அதை சொல்லுவதற்கு தைரியமும் வரவில்லை .

அவர் ஒரு தனித்துவமான ஆளுமை.

அந்த வயதில், அந்த காலத்தில், அத்தகைய உயர்ந்த சிந்தனையும் தைரியமும் கொண்டவரை

நான் வேறு யாரிடமும் காணவில்லை.

இன்றும் — ஒருபோதாவது ராகவன் திரும்பி வருவானோ என

எங்கள் பிள்ளைகளிள் கூட தேடல் உண்டாகி விடுகிறது.

இது நடந்து கொண்டிருப்பது 1990 காலம் ..

இலங்கை சட்ட அரசாங்கத்தில் மிகவும் முக்கியமான , பொறுப்பான பதவிகளில் நீதித்துறை முக்கியமானது , யாழ் மாவட்ட நீதிபதிக்கு யப்பானிலிருந்து புதிய கார்களை இறக்குமதி செய்து அரசாங்கம் வழங்கியிருந்தது , அவரது 16 வயதில் கொழும்பிலிருந்து தானே ஒட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார் .

சில நாட்களிலேயே விடுதலை புலிகள் பாசறையில் சேர்ந்தார்.

மாமாவின் பதவி காரணமாக இந்த விஷயம் எங்களில் யாருடனும் முறையாக பகிரப்படவுமில்லை. .

கிட்டத்தட்ட ஆறு மாதங்களே.

ஒருநாள் சில போராளிகள் என் வீட்டின் வாசலில் மறைந்த வீரரின் உடலுடன் வந்தனர்.

"சந்திரபாபு வீடு இதுதானா?" என்று கேட்டபோது

நான் பதட்டத்தால் "இல்லை, இங்கே அப்படி ஒருவரில்லை" என்றேன்.

மனம் கேற்கவில்லை , மேலே சென்று உடலை பார்த்தேன்.

அது எங்கள் ராகவன் தான்.

கோட்டை சமரில் வீரமரணம் அடைந்திருந்தார்.

ஆம் கோட்டை சமரில் அவர் வீர்மரணமடைந்துவிட்டார். அடுத்த கணங்கள் எவ்வாறு போனது என்று விபரிக்கமுடியாது .

35 ஆண்டுகள் கடந்தாலும் இன்னும் அவன் விடுமுறைக்கு வந்து ஆழ்மனதில் சில வேளை விளையாடுவான் .

இன்னும் அந்த வீரன் அவரது குரல் இன்றும் என் உள்ளத்தில் ஒலிக்கிறது. திரும்பிப் போக முடியாத காலத்துக்கு எதிரே. குற்றஉணர்வுடன் வாழ்கின்றோம்

Navajeevan Anantharaj

வீரவேங்கை சந்திரபாபு

2 months 1 week ago
எனது மாமாவின் மகன் , மைத்துனன் , என்னைவிட இரண்டு வயது தான் அதிகம் ,ஆறடி உயரம் , சிறுவயதிலிருந்தே மிகுந்த ஆளுமையானவர் , விளையாட்டு கிரிக்கெட் முதல் கொண்டு கல்வி வரை மட்டுமல்லாது தமையனோடும் எங்களோடு போடும் குத்து சணடை தொடக்கம் விளையாட்டு வரை எப்போதும் அவர் இருந்தால் அது எங்களுக்குச் சிறிய திருவிழாதான். என் மாமா மாவட்ட நீதிபதியாக கடமையாற்றியவர் முதலில் மட்டக்களப்பு , சாவகச்சேரி பின்னர் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதியாக கடமையாற்றியவர் . அதனால் ராகவனும் மட்டக்களப்பு , முதல் சாவகச்சேரி இந்து கல்லூரியிலும் , யாழ் இந்து கல்லூரியிலும் கல்வி பயின்றவர் . சிறுவனாக இருக்கும் போதே மிக உயர்ந்த சிந்தனை கொண்டு இருந்தவர் , ஒரு விமான ஓட்டியாக படிப்பேன் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். யாழப்பாணத்தில் மிக அரிதானவர்கள் தான் டாக்டர் , என்ஜெனியரை தாண்டி பறக்கிற உயர்ந்த சிந்தனைகளை கொண்டவர்கள் . யாழ் இந்து கல்லுரியில் 8 பாடங்களிலும் " D" எடுத்தவர்கள் இவன் மட்டும் முக்கியமானவனல்ல இவனது உற்ற நண்பர்களும் தான் , இன்னும் அவர்கள் இவனை இறுதி வழியனுப்ப வந்து அழுது கொண்டு இருந்தது இன்னும் மறக்கமுடியாது . வல்வை வைத்தீஸ்வரன் சிவன் கோயில் தான் எங்களுக்கு குல தெய்வம் , ஸ்கூல் லீவு விட்டு ஊருக்கு வந்தால் கோயில் பந்தம் பிடிப்பது முதல் அந்த சுற்று வட்ட வீடுகள் எல்லாம் நாங்கள் கால் பதித்த இடம் தான் . நாங்களும் வீட்டில் விக்கிரங்கள் வைத்திருக்கின்றோம் , எங்கட வீட்டுக்கு அவர்கள் வந்தால் என் முருகன் சாமிக்கு கொடி ஏற்றி 10 நாளில் தேர் , பூங்காவனம் தீர்த்தம் எல்லாம் வைப்போம் நான் தான் ஐயர் , அவர்கள் வீட்டுக்கு நாங்கள் போனால் பிள்ளையார் சாமிக்கு கொடி ஏற்றி திருவிழா நடத்தி 10ம் நாள் தீர்ததமாடுவோம் . அவர் தான் ஐயர் . உண்மையான கோயில விட இங்க பக்தியும் , ஒழுக்கமும் உண்மையாக இருக்கும் . அவனோட கதையை நான் சுருக்கமாக சொல்லோணுமென்றால் , நானும் அவனும் கடைசியாக சந்தித்தது கோண்டாவிலில் 1990 களில் தமிழீழ விடுதலை புலிகள் மாணவர் அமைப்பு (SOLT ) பொறுப்பாளர்களுக்கான போது கூட்டம் நடைபெற்றது . நான் வடமராட்ச்சியில் இருந்தும் , அவர் வலிகாமத்திலிருந்தும் சென்றிருந்தோம் , அது போர் முனைக்கு எங்களை தயார் படுத்துவதாக இருந்தாலும் , அவர்கள் இறுதி இலக்கு ஒன்றுதான் . டேய் " நாங்க சந்தித்ததை வீட்டில சொல்லாதே என்றான் " அதற்கு பிறகு அவன் கதைத்தது அப்பவும் இப்பவும் சரியாக விளங்கவேயில்லை . பின்னாளில் அதை சொல்லுவதற்கு தைரியமும் வரவில்லை . அவர் ஒரு தனித்துவமான ஆளுமை. அந்த வயதில், அந்த காலத்தில், அத்தகைய உயர்ந்த சிந்தனையும் தைரியமும் கொண்டவரை நான் வேறு யாரிடமும் காணவில்லை. இன்றும் — ஒருபோதாவது ராகவன் திரும்பி வருவானோ என எங்கள் பிள்ளைகளிள் கூட தேடல் உண்டாகி விடுகிறது. இது நடந்து கொண்டிருப்பது 1990 காலம் .. இலங்கை சட்ட அரசாங்கத்தில் மிகவும் முக்கியமான , பொறுப்பான பதவிகளில் நீதித்துறை முக்கியமானது , யாழ் மாவட்ட நீதிபதிக்கு யப்பானிலிருந்து புதிய கார்களை இறக்குமதி செய்து அரசாங்கம் வழங்கியிருந்தது , அவரது 16 வயதில் கொழும்பிலிருந்து தானே ஒட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார் . சில நாட்களிலேயே விடுதலை புலிகள் பாசறையில் சேர்ந்தார். மாமாவின் பதவி காரணமாக இந்த விஷயம் எங்களில் யாருடனும் முறையாக பகிரப்படவுமில்லை. . கிட்டத்தட்ட ஆறு மாதங்களே. ஒருநாள் சில போராளிகள் என் வீட்டின் வாசலில் மறைந்த வீரரின் உடலுடன் வந்தனர். "சந்திரபாபு வீடு இதுதானா?" என்று கேட்டபோது நான் பதட்டத்தால் "இல்லை, இங்கே அப்படி ஒருவரில்லை" என்றேன். மனம் கேற்கவில்லை , மேலே சென்று உடலை பார்த்தேன். அது எங்கள் ராகவன் தான். கோட்டை சமரில் வீரமரணம் அடைந்திருந்தார். ஆம் கோட்டை சமரில் அவர் வீர்மரணமடைந்துவிட்டார். அடுத்த கணங்கள் எவ்வாறு போனது என்று விபரிக்கமுடியாது . 35 ஆண்டுகள் கடந்தாலும் இன்னும் அவன் விடுமுறைக்கு வந்து ஆழ்மனதில் சில வேளை விளையாடுவான் . இன்னும் அந்த வீரன் அவரது குரல் இன்றும் என் உள்ளத்தில் ஒலிக்கிறது. திரும்பிப் போக முடியாத காலத்துக்கு எதிரே. குற்றஉணர்வுடன் வாழ்கின்றோம் Navajeevan Anantharaj

பற்சமயத்தவருக்கு நடந்த வித்துடல் விதைப்புகள்

2 months 1 week ago

சமாதான காலத்தின் பின் முகமாலை முன்னரங்கில் வீரச்சா வேந்திய இராமநாதபுரத்தை சேர்ந்த முஸ்லிம் மாவீரரின் வித்துடல் கிளிநொச்சி துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது. இதேபோல ஆழஊடுருவும் படையினரின் தாக்குதலில் வீரச்சாவெய்ந்திய மட்டக்களப்பைச் சேர்ந்த முஸ்லிம் மாவீரரின் வித்துடலும் இதே கிளிநொச்சி துயிலும் இல்லத்தில் புதைக்கப்பட்டது.

மகன் கட்டளைத் தளபதியாக முதன்மைச்சுடரேற்றிய அதே மேடையில் இரு மாவீரர்களின் (பிரிகேடியர் தீபன் லெப்.கேணல் கில்மன்) இந்த தந்தையாக இறுதி யுத்ததின் பின்னர் வேலாயுதபிள்ளை அவர்கள் நின்று பிரதான சுடரை ஏற்றிய வரலாறும் இதே துயிலுமில்லத்தில் நிகழ்ந்து.

சிங்களப் பெண்மணியின் வாரிசுகளின் வித்துடல் முழங்காவில் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட வரலாறும் உண்டு. 1990 ஏப்ரலில் ஏறாவூர் புன்னைக்குடா வீதியைச் சேர்ந்த றியாஸ் என்பவர் மாவீரர் ஆனார். இவரின் வித்துடல் முஸ்லிம் மையவாடியிலேயே விதைக்கப்பட்டது இந்திய ராணுவ காலத்தில் போராட்டத்தில் இணைந்து கொண்ட ஆளுமை மிக்க இந்த மாவீரரின் வித்துடலுக்கு 21 துப்பாக்கி வேட்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இந்த நிகழ்வில் அரசியல் துறைப் பொறுப்பாளர் கரிகாலன் உரையாற்றினார்.

முஸ்ஸிம் மாவீரரான உஸ்மான் -கிழக்கு என்பவரது வித்துடல் விதைப்பு யாழ் -முஸ்ஸிம் மையவாடியில் மார்க்க முறைப்படி நடைபெற்றது. இங்கேயே கப்டன் பாரூக்கின் (கனீபா- அக்கரைப்பற்று) வித்துடலும் விதைக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட தளபதியாக விளங்கிய லெப் கேணல் விக்ரர் மற்றும் நாயுடு ஆகிய மாவீரர்களின் வித்துடல்கள் ஆட்காட்டிவெளியில் பொதுமக்களின் சவக்காலையிலேயே விதைக்கப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் தவறுதலான வெடி விபத்தில் வீரச்சாவடைந்த ஆரையம்பதியைச் சேர்ந்த மாவீரர் ஒருவரின் சிதைக்கு கிட்டு கொள்ளி வைத்தார். தாவடியில் விமானத் தாக்குதலில் வீரச்சாவடைந்த நாவலப்பிட்டியைச் சேர்ந்த லூக்காஸ் என்ற மாவீரருக்கு இன்னொரு போராளியே கொள்ளி வைத்தார்.

தம்மை வெளிப்படுத்த முடியாத காலத்தில் வீரச்சாவேந்திய லெப். செல்லக்கிளியம்மானின் வித்துடல் இரகசியமான ஓரிடத்தில் விதைக்கப்பட்டது. இதேபோல இந்திய இராணுவத்தின் காலத்தில் சிலரை எரிக்காமல் விதைக்க வேண்டியேற்பட்டது. பின்னர் துயிலும் இல்லங்களை அமைக்க ஏற்பாடு செய்வது என்ற முடிவுக்கு வந்த பின்னர் ஒரு மேடையில் வித்துடல்கள் வைத்து எரிக்கப்பட்டது. அக் காணொலியை கண்டபின்னரே எரிப்பதனை விட விதைப்பதுதான் பொருத்தமானது என்ற முடிவுக்கு வந்தார் தலைவர் . இது சகல சமயத்தவருக்கும் பொதுவானது என்று முடிவாயிற்று.

மூத்தபோராளி பசீர்/காக்காவிடம் பெற்ற தவகலை அவரது மகன் கீதன் எழுத்தாக்கம் செய்து வெளியிட்டார்

உக்ரைனின் வெளிநாட்டுப் படையணி திறம்பட அகற்றப்படும், தன்னார்வலர்கள் எச்சரிக்கை மணி ஒலிக்கின்றனர்

2 months 1 week ago

பிரத்தியேக: உக்ரைனின் வெளிநாட்டுப் படையணி திறம்பட அகற்றப்படும், தன்னார்வலர்கள் எச்சரிக்கை மணி ஒலிக்கின்றனர்

ஆசாமி தெராஜிமா, ஜாரெட் கோயெட்டே

நவம்பர் 21, 2025 மாலை 5:28·8 நிமிடம் படித்தது

நவம்பர் 27, 2023 அன்று வெளியிடப்பட்ட புகைப்படத்தில், சர்வதேச படையணியின் 4வது பட்டாலியனின் பயிற்சி வெளியிடப்படாத இடத்தில் உள்ளது. (உக்ரைனின் பாதுகாப்புக்கான சர்வதேச படையணி / Facebook)

போர்

இந்தக் கட்டுரையைக் கேளுங்கள்

10 நிமிடம்

இந்த ஆடியோ AI உதவியுடன் உருவாக்கப்பட்டது.

வெளிநாட்டு தன்னார்வலர்களை அதன் அணிகளில் இணைத்துள்ள முக்கிய கட்டமைப்புகளில் ஒன்றான தரைப்படைகளின் கீழ் உள்ள சர்வதேச படையணியை திறம்பட அகற்ற உக்ரைன் திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், படைவீரர்கள் அந்த பிரிவின் கடின உழைப்பால் வென்ற அடையாளத்தை இழந்து, அறிமுகமில்லாத கட்டமைப்புகளில் சிதறடிக்கப்படுவார்கள் என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள்.

"எங்கள் மிகப்பெரிய கவலை என்னவென்றால், நாங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படுவோம், அலகுகள் பிரிக்கப்படுவோம், மேலும் இந்த வேலையைச் செய்வதற்கு எங்களை வைக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கும் இடத்திற்கு நாங்கள் அடிப்படையில் அனுப்பப்படுவோம்," என்று ஒன்றரை ஆண்டுகளாக லெஜியனுடன் போராடிய ஒரு சிப்பாய் பெயர் தெரியாத நிலையில் கெய்வ் இன்டிபென்டன்ட் பத்திரிகையிடம் கூறினார்.

"இது (சுமார் ஆயிரம் வீரர்கள்) வெவ்வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டு, அவர்களின் கட்டளையின் கீழ் வருகிறது, மேலும் அந்த வகையான மாற்றத்தால் தவறுகள் வரும். இப்போது நம்மிடம் உள்ள கட்டமைப்பை மட்டும் வைத்திருப்பதன் மூலம் தடுக்கப்பட்டிருக்கக்கூடிய தவறுகள்," என்று அவர் மேலும் கூறினார்.

லெஜியன் கீழ்ப்படிந்த தரைப்படைகள், வெளியீட்டு நேரத்தில் எதிர்பார்க்கப்படும் கட்டமைப்பு மாற்றம் குறித்த காரணங்கள் அல்லது கூடுதல் விவரங்களைக் கோரும் கியேவ் இன்டிபென்டன்ட்டின் கோரிக்கைக்கு பதிலளிக்கவில்லை. இந்தத் திட்டம் பாதுகாப்பு அமைச்சகத்தின் இராணுவ உளவுத்துறையின் (HUR) கீழ் உள்ள மற்ற சர்வதேச லெஜியனைப் பாதிக்காது.

பிப்ரவரி 2022 இல் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் வேண்டுகோளின் பேரில் நிறுவப்பட்ட லெஜியன் , உக்ரேனிய இராணுவத்துடன் இணைந்து வெளிநாட்டினரைப் போராட அனுமதித்தது, மேலும் போர் முழுவதும் போர்க்களத்திலும் அரசியல் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய திட்டத்தில், லெஜியனின் மூன்று போர் பட்டாலியன்கள் தனித்தனியாக ஒரு தாக்குதல் படைப்பிரிவு அல்லது படைப்பிரிவுக்கு மாற்றப்படும் என்று, இந்த விஷயத்தை நன்கு அறிந்த ஒரு அதிகாரி பெயர் தெரியாத நிலையில் கெய்வ் இன்டிபென்டன்ட் பத்திரிகையிடம் தெரிவித்தார். நேர்காணல் செய்யப்பட்ட பல லெஜியோனேயர்களுடன் சேர்ந்து, லெஜியனை அதன் தற்போதைய வடிவத்தில் பாதுகாக்கும் முயற்சியில் தாங்கள் பேசுவதாகவும், எந்த மாற்றமும் தேவையில்லை என்று வாதிடுவதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

படைவீரர்கள் மாற்றப்படும் தாக்குதல் படைப்பிரிவு அல்லது படைப்பிரிவு தரைப்படைகளின் கட்டளையின் கீழ் இருக்குமா அல்லது புதிதாக உருவாக்கப்பட்ட தாக்குதல் படைகளின் கட்டளையின் கீழ் இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அதிகாரி கூறினார். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த இடமாற்றம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் படைவீரர்களின் சுயாதீன குடையின் கீழ் இந்த பிரிவுகள் இருக்காது என்று அதிகாரி கூறினார்.

ஜூலை 16, 2024 அன்று வெளியிடப்பட்ட ஒரு புகைப்படத்தில், வெளியிடப்படாத இடத்தில் சர்வதேச படையணியின் பயிற்சி.

ஜூலை 16, 2024 அன்று வெளியிடப்பட்ட புகைப்படத்தில், வெளியிடப்படாத இடத்தில் சர்வதேச படையணியின் பயிற்சி. (உக்ரைனின் பாதுகாப்புக்கான சர்வதேச படையணி / பேஸ்புக்)

அக்டோபர் மாதம் டிக்டோக்கில் செயல்பாட்டு பாதுகாப்பை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு , தவறான அல்லது அதிக நம்பிக்கையான போர்க்கள மதிப்பீடுகளுடன் வீடியோக்களை வெளியிட்டதற்காக உக்ரேனிய பத்திரிகையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களால் விமர்சிக்கப்பட்ட கர்னல் வாலண்டைன் மான்கோ, புதிதாக உருவாக்கப்பட்ட தாக்குதல் படைகளுக்குத் தலைமை தாங்குகிறார், இதற்கு லெஜியன் பட்டாலியன்கள் அடிபணியக்கூடும். குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் அவரது நியமனம் அப்படியே உள்ளது, இதை மான்கோ மறுத்துள்ளார்.

உறுப்பினராகுங்கள் – விளம்பரமில்லாமல் பாருங்கள்.

இருப்பினும், நவம்பர் 16 அன்று ஒரு பேஸ்புக் பதிவில் , தரைப்படைகள் வெளிநாட்டு தன்னார்வலர்களுடன் பணிபுரியும் முறை மாறி வருவதாகக் கூறியது, இது "சிறந்த ஒருங்கிணைப்பு, உக்ரேனிய வீரர்களுடன் சம வாய்ப்புகள் மற்றும் மனித வளங்களை அதிக பகுத்தறிவு பயன்பாடு" ஆகியவற்றை வழங்குகிறது.

"புதிய மாதிரியின் முக்கிய கொள்கை என்னவென்றால், அவர்களின் அனுபவம், உந்துதல் மற்றும் தொழில்முறை திறன்களை அவர்கள் மிகவும் தேவைப்படும் பிரிவுகளில் மிகவும் திறம்பட பயன்படுத்துவதாகும்" என்று அந்த இடுகை கூறியது.

இந்த இடமாற்றம் லெஜியனின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பட்டாலியன்களைச் சேர்ந்த சுமார் 1,000 வீரர்களைப் பற்றியது, மேலும் நான்காவது பயிற்சி பட்டாலியன் புதிய வெளிநாட்டு தன்னார்வலர்களை போருக்குத் தயார்படுத்துவதற்கான பயிற்சி மையமாக மாறும் என்று அதிகாரி கூறினார்.

"குறைந்த பட்சம் சிறிது காலத்திற்கு, அலகுகளின் செயல்திறன் பெரும்பாலும் குறையும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் சர்வதேச லெஜியன் பிராண்டின் இழப்பு காரணமாக அலகுகளை வெளிநாட்டு தன்னார்வலர்களால் நிரப்புவது கடினமாக இருக்கும்."

வெளிநாட்டினருடன் எவ்வாறு பணியாற்றுவது என்பது அனுபவத்துடன் வருகிறது என்று "சாண்டா" என்ற அழைப்பு அடையாளத்தைப் பயன்படுத்தும் 2வது பட்டாலியனின் முன்னாள் தளபதி கர்னல் ருஸ்லான் மைரோஷ்னிசென்கோ கூறினார். திட்டமிடப்பட்ட மாற்றத்தை "அபத்தமானது" என்று அழைத்த மைரோஷ்னிசென்கோ, கடினமாக வென்ற நம்பிக்கை ஆபத்தில் உள்ளது, குறிப்பாக "இறப்பதற்கான அதிக நிகழ்தகவு" இருந்தபோதிலும் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி போராட எழுந்து நின்ற வெளிநாட்டினருக்கு என்று கூறினார்.

"அனைத்து அன்றாட விவகாரங்களும் நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளன," என்று மைரோஷ்னிசென்கோ கியேவ் இன்டிபென்டன்ட் பத்திரிகையிடம் கூறினார். "நீங்கள் நம்பிக்கையை இழந்தால், நீங்கள் சிப்பாயை இழக்கிறீர்கள். பின்னர் அவர் ஒப்பந்தத்தை மீறுவார்."

கெய்வ் இன்டிபென்டன்ட்டிடம் பேசிய அதிகாரி, ஒரு பெரிய வெளிநாட்டினர் குழுவை நிர்வகிப்பது, ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பாளர்களை ஒருங்கிணைப்பது, வீரர்கள் பணிகளுக்கு முன் முழுமையாக விளக்கப்படுவதை உறுதிசெய்வது போன்ற சவால்களுக்கு லெஜியன் ஏற்கனவே தழுவிக்கொண்டுள்ளது என்றார். ஒவ்வொரு லெஜியன் பட்டாலியனை எதிர்கொள்ளும் உக்ரேனிய தாக்குதல் பிரிவுகளும், இந்த நடைமுறைகளை புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அதிகாரி கூறினார். லெஜியன் இப்போது லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த தன்னார்வலர்களின் பெரும் பங்கைக் கொண்டுள்ளது, அவர்களில் பலர் ஸ்பானிஷ் மட்டுமே பேசுகிறார்கள்.

"குறைந்த பட்சம் சிறிது காலத்திற்கு, அலகுகளின் செயல்திறன் பெரும்பாலும் குறையும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் சர்வதேச லெஜியன் பிராண்டின் இழப்பு காரணமாக அலகுகளை வெளிநாட்டு தன்னார்வலர்களால் நிரப்புவது கடினமாக இருக்கும்" என்று அந்த அதிகாரி கூறினார்.

வெளிநாட்டு தன்னார்வலர்கள் பல்வேறு அளவிலான இராணுவ அனுபவத்தையும் போருக்குத் தயாராக இருப்பதையும் கொண்டிருப்பதால், படைவீரர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றும் உக்ரேனிய தாக்குதல் பிரிவுகளுக்கு, கற்பனை செய்யப்பட்ட மாற்றம் ஒரு கணிக்க முடியாத காரணியைச் சேர்க்கும்.

"துரதிர்ஷ்டவசமாக, நேர்மறையான அனுபவத்தை விட, பிரச்சனைகள் மிகவும் எளிதாக யூனிட்டிலிருந்து யூனிட்டுக்கு பரவும் என்று நான் நினைக்கிறேன்," என்று அந்த அதிகாரி கூறினார்.

https://kyivindependent.com/exclusive-ukraine-plans-to-effectively-dismantle-international-legion-sources-say/

மேஜர் கலையரசன் - துரோகத்தால் வீழ்த்தப் பட்டவன்

2 months 1 week ago

விடுதலைப் பு*லிகள் ஒருதலைப் பட்சமாக போர் நிறுத்தம் செய்திருந்த காலப்பகுதியது என நினைக்கின்றேன்

எனது மாமா வேலை நிமித்தம் மன்னார் பெருநிலப் பரப்பில் ஒரு முக்கிய பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தார்

விடுதலை பு*லிகளின் கட்டுப் பாட்டுப் பகுதியில் இருந்த எங்களது வீட்டிற்கு மாமா அவ்வப்போது வந்து போவார்..

தாய் மாமன் மாரை யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும் அப்படித்தான் நானும் என் குட்டி மாமா மீது அதீத நேசம்...

அன்று ஒரு நாள் மாலை மங்கும் நேரம் எங்கள் வீட்டில் மாமா தேனீர் அருந்திக் கொண்டிருந்தார். மாமாவோடு போராளிகள் அல்லாத இரண்டு அண்ணா மார்களும் இருந்தனர் அவர்களும் எமக்கு பரிட்சயமானவர்களே ... மாமா அவ்வப்போது வீட்டிற்கு வரும்போது இவர்களும் கூட வருவார்கள்..

அன்றுதான் நான் மாமாவை உயிருடன் பார்கப்போகும் இறுதி நாள் என்பதை அறியாமல் மாமாவுக்கு அருகில் இருந்து தேனீர் அருந்திக் கொண்டிருந்தேன். தன் தம்பிக்கு தான் கொடுக்கும் இறுதித் தேனீர் அதுவென அறியாமல் எனது அம்மா...

தம்பி கவனம் ஆ*மி ஒரே ஆக்களிட்ட உன்னத்தான் கேக்கிறானாம் போய் வாறது கவனம் என்றார் மாமாவிடம் இருந்து பதிலில்லை ஒரு கேலியான சிரிப்பு..

ஆ*மி என்னை என்ன செய்து விட முடியும் என்பது போல இருந்தது அந்த சிரிப்பு..

அம்மாவின் எச்சரிக்கைக்கான பதில் அருகில் இருந்த போ*ராளி அல்லாத அந்த அண்ணாவிடம் இருந்து வந்தது...

அக்கா நாங்கள் செத்தால் தான் கலையரசன் சாகுவான் நீங்கள் ஒண்ணும் யோசிக்காதையுங்கோ.....

படு பாதகர்கள் மாமாவையும் இப்படித்தான் நம்ப வைத்திருப்பார்கள் போல...

தேனீர் அருந்தி முடித்ததும் அவசர அவசரமாக புறப்பட்டுச்சென்றார்கள்.

சரியாக மூன்றாவது நாள் எமது காதோரம் வந்த செய்தி எம்மை அதிர்சியடைச் செய்தது ..

துயரத்தின் எல்லைக்கே சென்று வந்தேன்.

வாழ்க்கைப் பட்டான் கண்டல் பகுதியில் கலையரசன் வீர*ச் சாவாம்..

மாமா யாரை நம்பி பயணித்தாரோ அவர்களே அவரின் நடமாட்டம் பற்றி தகவல் வழங்கியதாக மாமாவின் போ*ராளி நண்பர்கள் மூலம் அறிந்து கொண்ட போது இன்னும் வலித்தது...

இப்படி எத்தனை ஆயிரம் துரோகங்கள்

எத்தனை ஆயிரம் சாவுகள்...

என் குட்டி மாமா மட்டுமல்ல எம் இனமே துரோகத்தால் தான் ........

என் மாமா கலையரன்

அண்ணா வல்லவன்

நண்பன் நிலவன்

நண்பன் யாழ்வேந்தன்

அறிவு அண்ணா

சுதா அண்ணா

ரகுராம் அண்ணா

நீலவண்ணன் அண்ணா

சோ அண்ணா

இவர்களோடு எம் இனத்தின் விடியலுக்காய் வித்தாகிப் போன ஆயிரமாயிரம் வேங்கைகளுக்கும் என் வீர வணக்கங்கள்.

Moris Fernando - Muththooran  (Muththooran)


கப்டன் அகத்தியன்

2 months 1 week ago

இறுதி வரை உறுதியாக நின்றாய்.

பிரிகேடியர் தமிழ்செல்வன் அண்ணாவின் இறுதி வணக்க நிகழ்வு தான் உனக்கும் எனக்குமான இறுதி சந்திப்பு.

தமிழ்செல்வன் அண்ணாவின் விதை குழியருகில் செல்ல நீண்ட நேர காத்திருப்பு. அத்தனை நேரமும் அவருக்கும் உனக்கும் இடையிலான சம்பாசனைகளை எனக்குள் விதைத்துக்கொண்டு வந்தாய்.

விதைகுழியருகில் வந்துவிட்டோம். நீ முன்னால் நான் உன் பின்னால். கையில் ஏந்திய மண்ணினை வித்துடலின் மேல் மெதுவாக தூவினோம். கையை நெஞ்சில் வைத்து மரியாதை செய்தாய். விழிகள் அருவியாக கரைந்தன. பாதங்களை உறுதியோடு முன்னால் வைத்து நகர்ந்தோம்.

அப்போது

“ மச்சான் விரைவில எனக்கும் இப்பிடி மண் போடுவாய் என்று நினைக்கிறன். எதுக்கும் புலிகளின்குரலைக் கேளு ஈழநாதத்தை தினமும் பாரு“ என்று கூறினாய். அது உன்னைப் போன்ற விடுதலைப் போராளிகள் வாழ்வில் சாதாரணமான கதை. நண்பனே நீ எனக்கு கூறிய அந்த வார்த்தைகளை பொதுமகனான நானும் சாதாரணமாகவே கடந்து போனேன்.

ஆனால்,

அன்றொருநாள் உன் செய்தி வானேறி தொலைத்தொடர்பினூடாக வந்து புலிகளின்குரல் வானொலியினூடு எங்கள் செவிகளுக்கு வந்து சேர்ந்தது. பிரபா வீரச்சாவாம். அருந்தவத்தார்ர பெடியன் பிரபா வீரச்சாவாம்.

விழிகள் பனித்தன. உன் குரல் இன்னும் இன்னும் செவிகளுக்குள் ரீங்காரம் இசைத்தபடியே இருக்கிறதடா.

நான் யாழ்ப்பாணத்தில் இருந்து வல்லாதிக்க சக்திகளால் இடம்பெயரவைத்த பொல்லாத பொழுதுகளை கடக்க முடியாது தவித்த 1996 ஆம் ஆண்டின் சித்திரைத் திங்களின் ஒரு நாளில் ஏதியிலாக உன் ஊர் முற்றத்தில் வந்து இறங்கிய என்னை அரவணைத்தது உன்னைப் போன்ற உறவுகள் தான்.

யோகபுரம் தாய் எம்மை கல்விக்காக அரவணைத்த போது முதன்முதலாக உன்னைக் கண்டேன். நிரந்தரமாக கற்கும் மாணவன் நீ. நானோ இடம்பெயர்ந்து வந்தவன். அதனால் என்னை அருகில் இருக்க விடுவார்களா என்ற ஏக்கத்தோடு வந்தவனை கையை பிடித்து பக்கத்தில் இருத்திய அந்த பொழுதில் ஆரம்பித்தது நண்பா உனக்கும் எனக்குமான உறவு.

அன்றில் இருந்து 2007 கார்திகைத்திங்கள் 7 ஆம் நாள்வரை சந்தோசமாக தான் இருந்தோம்.

தேசத்துரோகிகள் செய்த காட்டிக்கொடுப்பெனும் கொடூரத்தினால் நீ உன்னை நீயே தற்கொடையாக்கிய செய்தி வந்த போது அழுவதை தவிர வேறென்ன இருக்கும் நண்பா…?

அருந்தவத்தார்ர பெடியா வீரவணக்கமடா..

விழியில் நீருடன் உன் கூட்டாளி இ.இ.கவிமகன்

லெப். கேணல் சிவநேசன்

2 months 1 week ago

நண்பா உன்னுடைய கனவுகள் மிக நீண்டது…பயணத்தின் பாதையில் உன்னை தவற விட்டு விட்டோம்…. உன்னைப் பற்றி அதிகம் எழுத வேண்டும் என்று நினைப்பேன் ஆனால் இந்த முகநூல் அதற்கு உகந்ததல்ல…

அது ஒரு காலம்…ஸ்கந்தபுரம் தொடக்கம் பூநகரி கௌதாரி முனை வரை பயணமும் பாதையும் எங்களுடைய யாழ்ப்பாணத்து கடமைகளை கதைகளை சொல்லும்…கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு செல்லும் விமானத்தை விட நாங்கள் வேகமாக யாழ்ப்பாணத்துக்கு சென்ற நாட்கள் பல…

ஒருமுறை உனக்கும் பிரதீப் மாஸ்டருக்கும் சின்னதாக சண்டை.. எங்களுடைய முகாமுக்கு வந்து யாரிடமாவது பாதை இருக்கிறதா என்று நீ காத்திருந்த அந்த நினைவுகள் இன்றும் என் நினைவில்…உன்னுடைய தேசக்கடமை உன் உயிரை விட மேல் என்பது உன்னுடைய ஒவ்வொரு செயல்பாடுகளும் எங்களுக்கு உணர்த்திக் கொண்டே இருந்தது…

பூநகரி வாடி அடியில் இருந்த எங்களுடைய உணவுச் சாலை…விமான தாக்குதலுக்குள் அகப்பட்டுவிட்டது…அன்று அதிர்ஷ்டவசமாக நீ தப்பி விட்டாய்…காயமடைந்தவர்களை வைத்தியசாலை அனுப்பிவிட்டு நீ வந்து நீ கூறிய வார்த்தைகள்…என்னுடைய சாவு யாழ்ப்பாணத்தில் தான் அதுவரை எனக்கு சாவில்லை…உன்னுடைய துணிவு தான் உன்னை குறுகிய காலத்தில் உன்னை எல்லோர் மத்தியிலும் உயர்த்திப் பார்த்தது…

எங்களை எல்லோரும் படிக்காத பல்கலைக்கழக மாணவர்களாகத்தான் பார்த்தார்கள் ஆனால் எங்களுக்கும் படிப்புக்கும் சம்பந்தமில்லை…உன்னை பார்த்து பலர் கேட்பார்கள் பார்க்க மருத்துவத் துறை மாணவன் போல் இருக்கிறாய் என்று…நீ தலையை ஆட்டிக் கொண்டு சிரிக்கும் அந்த சிரிப்பு எப்பொழுதுமே மிக அழகானது…

இப்பொழுது பசுமையோடு ஓடிக் கொண்டிருக்கிறேன் நண்பா ஓய்வுகளை தொலைத்து…ஓய்வு கிடைக்கும் பொழுது உன்னுடைய தேசத்திற்கான கடமைகளையும் பயணத்தையும் வரலாறாக எழுதுவேன்…நேற்றைய தினம் நீ மண்ணை முத்தமிட்ட நாள் உன்னுடைய ஆன்மா இளைப்பாறட்டும் நண்பா அமைதியாக…பிரார்த்தித்துக் கொள்கிறேன் சக நண்பனாக…

விதைப்பது நமது கடமை…

தரன் ஸ்ரீ💐

வன்னி தமிழ் மக்கள் ஒன்றியம்

செல்வன் பஞ்சாட்சரம் குணேந்திரன் (எல்லாளன்) | வீரவணக்கம்

2 months 1 week ago

“அந்தச் சிரிப்பும் கடைசி வார்த்தைகளும்...”

2006 ஆம் ஆண்டு மே மாதமளவில் அவனை கடைசியாக சந்தித்திருந்தேன். உடலாலும் மனதாலும் சோர்ந்திருந்தான்.

அதற்கு ஒரு மாதம் முன்பு வீதியால் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது இராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்திருந்தான். ஓட வழியின்றி இரண்டு மூன்று மதில்களால் ஏறி பாய்ந்தவனால், அதிக குருதிப்பெருக்கத்தால் ஒரு கட்டத்தில் இயலவில்லை. அருகில் தெரிந்த வீடொன்றின் மலசலகூடமொன்றில் சென்று படுத்துவிட்டான் - இல்லை மயங்கிவிட்டான். சிறிது நேரத்தில் அங்கு வந்த வீட்டின் அம்மா, இவனை அடையாளம் கண்டு கொண்டுள்ளார். உடனடியாக சறமொன்றினால் காயத்தை கட்டிவிட்டு தனக்கு தெரிந்த மருத்துவபீட மாணவன் ஒருவருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

உடனேயெ சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் அவனுக்குரிய அவசர மருத்துவ உதவிகளை செய்துவிட்டு பல்கலைக்கழகத்திற்கு எடுத்துச்சென்று மேலதிக சிகிச்சை வழங்கினர். அதன்பின் அவனுக்கு பல்கலைகழக நூலகமும் சிற்றுண்டிச்சாலையுமே வீடாகிற்று.

நான் மீண்டும் சந்தித்த போது, அவனில் இருந்த பழைய உறுதியும் தீவிரமும் மங்கியிருந்தது. தன் இறுதிக்காலம் நெருங்கிவிட்டதென்றே எண்ணியிருப்பான் போல. ஆனால் எனக்கு அது கடைசி சந்திப்பென்று புரியவில்லை.

பழைய அதே புன்னகையுடன் 'இப்பவும் அந்தப்பிள்ளைய பார்க்கிறனியா? படிடா, நல்லா இருக்கனும்' என்றான். அவனது புகைப்படம் பார்க்கும்பொழுதெல்லாம் அந்தச்சிரிப்பும் கடைசிவசனங்களும் எனக்குள் வந்து தொலைக்கும்.

'நான் இறந்தபின் என்னோட பள்ளிக்கூடத்தில ஒரு போட்டோ கூட வைக்கமாட்டிங்க என்னடா?' இந்த ஒரு வார்த்தைக்கு பின் என்னால் அவனுடன் பேசமுடியவில்லை.

பல்கலைக்கழகத்தை விட்டு வெளியே வந்த பின்னும் அவன் அதே இடத்தில் இருந்தபடி வேலியால் பார்த்துக்கொண்டே இருந்தான்.

மாணவர் ஒன்றியத் தலைவராக — சுனாமி அனர்த்த மீட்பு உட்பட பல தளங்களில் தன் நேர்த்தியான தலைமைத்துவத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிக்காட்டியவன்.

நாம் சுனாமி பற்றிய செய்தியை அறிந்த வேளையில், அவன் ஏற்கனவே பல சடலங்களை மீட்டதுடன், அல்லல்பட்ட பலரை ஆலயங்களிலும் பொதுமண்டபங்களிலும் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தான்.

அது ஒன்றே அவனது அர்ப்பணிப்பிற்கு சான்றாகும்.

17 வயதில், அந்த நேரத்தில் எமக்கு மோட்டார் சைக்கிள் — அதுவும் கிளட்ச் மொடல் — என்றால் தொட்டுப் பார்த்ததில்லை.

ஒரு நாள் வேலை அலுவலாகச் செல்லும் பொழுது, “மோட்டார் சைக்கிள் ஓடுவியா?” என்றான்.

“அய்யோ, தெரியாது,” என்றேன்.

சட்டென்று கரைக்கெடுத்தவன், “இந்த பிடி... ஓடு,” என்றான்.

“அடேய், ஸ்டார்ட் அடிக்கமாட்டன்டா! எங்கயாச்சும் மதிலுக்க விட்டிரப்போறன்,” என்றேன்.

“நீ நினைக்கிற மாதிரி இதெல்லாம் பெரிய விஷயமில்லடா... இந்தா,” என்று சொல்லிக் கொண்டு வெறும் ஐந்து நிமிடங்களில் கற்றுத்தந்து,

அன்றைய நாள் முழுதும் என்னையே ஓடவைத்தான்.

2008 ஆம் ஆண்டு தை 21 இல் நான் சந்தித்த அந்த இடத்திற்கு சற்று அருகில் தான் சுடப்பட்டு இறந்திருந்தான்.

கடந்த மூன்று நாட்களாக அவனது நினைவுகள் மீண்டும் வந்து உறுத்திக்கொண்டே இருக்கின்றன. ஆம் அவனின் அந்த இரத்தக்கறை படிந்த சறத்திற்கு வயது 19.

எல்லாளன் என்ற குணேந்திரன் - நயினாதீவிலிருந்து வைத்தியர் கனவுடன் வந்து தன் கனவினை அகலமாக்கிய மாறாப்புன்னகை

Ellalan.jpg

கப்டன் ஆதி & கப்டன் உத்தமன்

2 months 1 week ago

01-11-2008 அன்று பகல் 2.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து வன்னிக்கு செல்ல முற்பட்டபோது , கூட இருந்த ஒருவரால் காட்டி கொடுக்கப்பட்டு அரியாலை பகுதியில் இராணுவம் சுற்றிவலைத்தபோது நடைபெற்ற நேரடி தாக்குதலில் வீரச்சாவை தழுவிக்கொண்டார். இதே சம்பவத்தில் கப்டன் உத்தமன் எதிரியிடம் அகப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக குப்பி கடித்து வீரச்சாவை தழுவிக்கொண்டார்.

https://www.facebook.com/amal.raj.108

படையத்தொடக்கப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி முடித்த இரகசியப் பிரிவொன்று

2 months 1 week ago

எழுத்தாளர்: புரட்சி தமிழன்

இவர்களை பலருக்கு தெரியாது. அவர்களுடைய வீட்டினருக்கு கூட போராளியென்பது தெரியாது, அருகில் இருந்தவர்களுக்கு கூட போராளி என்பது தெரியாது. ஏனைய படையணி போராளிகளுக்கு கூட தெரியாது. பிரிகேடியர் கடாபியின் நேரடி ஆயுதபயிற்சியில் மிக குறுகிய காலத்தில் சிறப்பு பயிற்சி பெற்ற அணி. எந்த ஒரு ஆயுத்தையோ அல்லது ஒரு இயந்திரத்தையோ இலகுவாக கையாளகூடிய அனைத்து துறை சார் அறிவையும் பெற்றவர்களாக இருந்தார்கள். வளமான தமிழீழத்தை கட்டமைக்கும் நோக்கில் நெறிப்படுத்தபட்டார்கள்.

பலர் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பட்டபடிப்பை மேற்கொள்ள அனுப்பபட்டனர்.சிலர் இராணுவ கட்டமைப்புக்குள்ளேயே பல்வேறு வேலைகளுக்காக அனுப்பபட்டனர். சிலர் மரணமடைந்த பின்னர்தான் போராளியாக இருந்திருக்கிறான் என்பது பலருக்கு தெரியும். சிலர் இராணுவ கட்டுபாட்டுக்குள்ளேயே வேலை செய்தனர்.

இந்த அணியின் ஒரு 30% வீதமானோர் உயிரோடுள்ளனர். தப்பி வந்தவர்கள் அல்ல கட்டளைகளுக்காக காத்திருந்தவர்களாக . இன்று அவர்கள் போராளியாக இருந்தார்கள் என்பது தெரியாமல் சமூக ஓட்டத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழ்கிறார்கள். ஆனால் அவர்களின் வாழ்வு முறை என்றும் போராளிகளுக்கான ஒரு அடையாளம் .

Brigadier-Aathavan-4.jpg

 

Brigadier-Aathavan.jpg.

கடத்தப்பட்ட தமிழ் பெடியன் ஒருவனின் தாயாரின் வாக்குமூலம்

2 months 1 week ago

என் பெயர் சரோஜினி நாகநந்தன். நான் கொழும்பு கொட்டாஞ்சேனையில் வசிக்கிறேன்.

என் மகன் – ராஜீவ் நாகநந்தன் – 17 செப்டம்பர் 2008 அன்று கடத்தப்பட்ட 11 ஆண் குழந்தைகளில் ஒருவராக இருக்கிறார்.

1987 மார்ச் 30 அன்று பிறந்த என் மகன், கொழும்பிலுள்ள ஒரு சர்வதேச பாடசாலையில் படித்தார். அவர் மருத்துவராக ஆக வேண்டும் என்ற கனவு கொண்டிருந்தார்.

காணாமல் போன நாளின் மறுநாள் இங்கிலாந்து பயணிக்க திட்டமிட்டிருந்தார்.

அன்று இரவு, நண்பர்களுக்காக நாங்கள் பிரியாவிடை விருந்து வைத்திருந்தோம்.

அதன் பின்னர் தலைமுடி வெட்டவும், மற்றொரு நண்பரை சந்திக்கவும் என் மகனும் அவரது நண்பர்கள் நான்கு பேரும் காரில் புறப்பட்டார்கள்.

அவர்கள் சென்ற காரை கடற்படை ஆயுததாரிகள் தடுத்து நிறுத்தி கடத்திச் சென்றனர்.

சிறிது நேரத்தில் ராஜீவ் என்னை அழைத்து நடந்ததைப் பகிர்ந்தார்.

நான் திரும்ப அழைத்தபோது, அவரது தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தது.

டிசம்பர் 14, 2008 — எதிர்பாராத ஒரு அழைப்பு

ராஜீவ் எங்களை மீண்டும் தொடர்பு கொண்டார்.

சம்பத் முனசிங்க என்ற கடற்படை வீரர் தம்மை பிடித்து ஹெட்டியாராச்சி என்பவரிடம் ஒப்படைத்ததாகச் சொன்னார்.

அவர்கள் முதலில் வெலிசராவில் வைத்திருந்து பின்னர்

திருகோணமலையின் Gunsite கடற்படை வதை முகாமுக்கு மாற்றப்பட்டதாக கூறினார்.

2009 மே 21 — என் மகனின் கடைசி குரல்

அன்று ராஜீவ் என்னை இறுதி தடவையாக அழைத்தார்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு மனம் நெகிழ்ந்த நபரிடமிருந்து தொலைபேசியை வாங்கி பேசினார்.

அவரது குரல் நடுங்கியது…

அங்கு நடக்கும் பயங்கரமான நிகழ்வுகளை பற்றி கூறினார்.

“அம்மா… 18–20 வயதுடைய இளைஞர்களை இங்கு கொண்டு வந்து சு*ட்*டு*க் கொ*லை செய்கிறார்கள்…”

கழிவறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது இரத்தக்கறைகள் மற்றும் பெருமளவு இரத்தத்தை கண்டதாகச் சொன்னார்.

தனக்கும் அந்த விதி ஏற்படும் என அச்சத்தில் இருந்தார்.

நான் அவனை உற்சாகப்படுத்தி:

“ஜயப்பனை வணங்கு… கடவுள் உன்னை காப்பாற்றுவார்,”

எனச் சொன்னேன்.

அப்போதே, அவன் சாப்பாடு வந்து முடிச்சிருந்த பேப்பரில் ஐயப்பனின் படம் இருந்ததாகவும், அதை தன்னிடம் வைத்திருப்பதாகவும் சொன்னான்.

அதன் பின்… 16 ஆண்டுகள் கழிந்தும் ஒன்னு கூட தகவல் இல்லை.

இன்று வரை, ராஜீவ் 2009 மே 21க்குப் பிறகு கொ*லை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

https://www.facebook.com/namathuyalpanam

ஹாட்லிக் கல்லூரியின் நூலகம் 1984ஆம் ஆண்டு எரிக்கப்பட்டது

2 months 1 week ago

எழுத்தாளர்: தமிழ்ப்பொடியன்

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது உங்கள் எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் பருத்தித்துறையில் உள்ள பிரபலமான ஆண்கள் பாடசாலையான ஹாட்லிக்கல்லூரியின் நூலகம் 1984ஆம் ஆண்டு எரிக்கப்பட்டது உங்களுக்கு தெரியுமா?

1984 ஆம் ஆண்டு செப்ரம்பர் 2 ஆம் திகதி.

"பருத்தித்துறை படுகொலை"

18 பேர் சிறிலங்கா பொலிசாரால் பட்டப்பகலில் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்கள்.

அத்தோடு ஹாட்லிக்கல்லூரியின் நூலகத்தை எரித்தார்கள். சுமார் 7000 புத்தகங்களை எரித்து சாம்பல் ஆக்கினார்கள்.

நூலகத்தை எரிப்பதற்கு ஹாட்லிக்கல்லூரியின் ஆய்வுகூடத்தில் இருந்த இரசாயண திரவங்களை(acids) பாவித்தார்கள்.

ஆய்வுகூடத்தையும் உடைத்து எறிந்தார்கள்.

யாழ்நூலகம் எரிக்கப்பட்டது 1981.

மூண்டு ஆண்டுகள் கழித்து திரும்பவும் ஒரு பெரிய நூலகத்தை 1983 இல் சிறிலங்கா பேரினவாதம் கொழுத்தி வேடிக்கை பார்த்து எக்காளமிட்டு சிரித்தது.

வான்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sky Tigers Images

2 months 1 week ago
குண்டுவைத்து தகர்க்கப்பட்ட புலிகளின் கட்டுமானம் முழுமைபெறாத மரபுவழி நிலை-இறக்கை வானூர்தி இது பொறி மற்றும் நடுப்பகுதி என்று எண்ணுகிறேன்.

வான்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sky Tigers Images

2 months 1 week ago
குண்டுவைத்து தகர்க்கப்பட்ட புலிகளின் கட்டுமானம் முழுமைபெறாத மரபுவழி நிலை-இறக்கை வானூர்தி இது வால் என்று நினைக்கிறேன். மற்றது இது முழுமையாக கட்டிமுடிக்கப்படவில்லை.

வான்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sky Tigers Images

2 months 1 week ago
குண்டுவைத்து தகர்க்கப்பட்ட புலிகளின் கட்டுமானம் முழுமைபெறாத மரபுவழி நிலை-இறக்கை வானூர்தி வான்புலிகளின் நிலை-இறக்கை வானூர்தியானது பாதி கட்டப்பட்ட குறையியிலேயே புலிகளால் குண்டுவைத்து தகர்க்கப்பட்டிருக்கிறது என்பது கிடைக்கப்பெற்றுள்ள படிமங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. சிங்களவரின் கைகளிற்கு தமது தொழில்நுட்பம் கிடைக்கக்கூடாது என்ற நோக்கிலேயே புலிகள் இவ்வாறு செய்துள்ளனர் என்பதை ஊகித்தறியலாம். இது வானூர்தி முகப்பு என்று எண்ணுகிறேன். எனினும் வானூர்தி தொடர்பில் அறிந்தவர்கள் இவற்றை கண்டுபிடிக்கவும்.