மாவீரர் நினைவு

கப்பலுக்கான விநியோக நடவடிக்கை ஒன்றை மேற்கொண்ட லெப். கேணல் றோசா

3 months ago

FB_IMG_1555700776734.jpg

 

வேலாயுதம் வசந்தி என்ற இயற்பெயர் கொண்டு திருகோணமலை மாவட்டத்தில் இருந்து தமிழீழ மண் மீட்புப் போரிலே இணைந்து கொண்டார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் சிறப்பு பயிற்சிகளை திறமையாக செய்து முடித்தார்.மகளிர் நாங்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்ற செயல் வடிவம் மூலம் பயிற்சி ஆசிரியர்களுக்கு பல முறை நிரூபித்துக் காட்டினார்.

மகளிர் பிரிவில் இவரது அசாத்தியமான திறமை தேசியத் தலைவரின் பார்வைக்கு அறிவிக்கப்படுகிறது.அந்த சூழ்நிலையில் கடற்புலிகளின் கப்பலுக்கான விநியோக நடவடிக்கைக்கு மகளிர் அணி கட்டாயமாக பங்கு கொள்ள வேண்டிய தேவை இருந்தது. இந்த விநியோக நடவடிக்கைக்காக கடற்புலிகளின் சிறப்பு தளபதியால் லெப் கேணல் றோசாவை உள்வாங்க சிறப்பு தகமைப் பரீட்சை வழங்கப்பட்டது.

இந்த தகமைப் பரீட்சையில் அதிகூடிய  திறமையை வெளிப்படுத்தி அந்த கப்பல் விநியோக அணிக்கு பொறுப்பாளராக சிறப்பு தளபதியால் நியமிக்கப்பட்டார்.

லெப் கேணல் றோசாவாலே போராட்ட வரலாற்றில் மகளிர் அணி முதன்முதலாக வெற்றிகரமாக கப்பலுக்கான விநியோக நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு சாதனைத் தடம் பதித்தார்.

இவருடைய திறமை பல சண்டைக்களங்களில் கடற்பரப்பில் ஈடுபடுத்தியது. ஒரு தொகுதி இராணுவ தளபாடங்கள் இடம்மாற்றும் நடவடிக்கை ஒன்றில் 18-04-1998 அன்று திருமலை கடற்பரப்பில் சிறிலங்கா  கடற்படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். இவரை இந்நாளில் நெஞ்சில் நிறுத்தி இவரோடு வீரச்சாவடைந்த அனைத்து மாவீர மறவர்களுக்கும் எமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வோம்.

உங்கள் விடுதலை வேட்கை என்றும் எங்களை வழிநடத்தி போராட்டப் பாதையில் வீறுகொண்டு பயணிக்க வழிவகுக்கும்.

https://www.tamilarul.net/2022/04/18_01976124944.html

தியாகசீலங்களின் விபரங்கள்

3 months 2 weeks ago

"வேர்கள் வெளியில் தெரிவதில்லை - சில
வேங்கைகள் முகவரி அறிவதில்லை!"

 

இதற்குள் என்னால் முடிந்தளவு தியாகசீலங்களின் பெயர் விரிப்புகளை சேகரித்து எழுதி வைக்கின்றேன். ஆனால், தனிப்பட்ட பாதுகாப்புக் கருதி எவருடைய பாலும் எழுதமாட்டேன். இவர்கள் எவரினது பெயரும் மாவீரர் பட்டியலில் இல்லை. உங்கள் ஆருக்கேனும் இவ்வாறு வீரச்சாவடைந்த போராளிகளின் பெயர் விபரங்கள் தெரிந்தால் கீழே எழுதுங்கள்.

இத்தியாகசீலங்களின் எண்ணிக்கை நூற்றிற்கும் மேல் ஆகும்!

 

மறைமுகக் கரும்புலிகள்:

  1. தியாகசீலம் அன்பு (என்னைப் பொறுத்தவரை இவரே எமது தேசத்தின் முதல் மறைமுகக் கரும்புலி. சாஜர் இயக்கி இலக்கொன்றை அழித்து வீரச்சாவடைந்தார். இவரோடு சென்ற 10+ புலனாய்வாளர்களும் பின்னாளில் வீரச்சாவடைந்தனர். அன்னவர்களின் பெயர் விரிப்பு கிடைக்கவில்லை. இவர்கள் எவரினது பெயரும் மாவீரர் பட்டியலில் இல்லை)
  2. தியாகசீலம் மனோகரன் 
  3. தியாகசீலம் சோழன் (14/05/1998 அன்று யாழில் மேஜர் ஜெனரல் லரி விஜயரட்னவை கொன்று வீரச்சாவடைந்தார்.)
  4. தியாகசீலம் பாண்டியன் (2008ம் ஆண்டு இறுதியில் யாழில் வீரச்சாவடைந்தார்)
  5. தியாகசீலம் வசந்தன் (06/04/2008ம் ஆண்டு வெலிவேரிய என்ற இடத்தில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே மீது கரும்புலித் தாக்குதல் நடாத்தி வீரச்சாவடைந்தார்)
  6. தியாகசீலம் செந்தமிழ் (10/03 2009ம் ஆண்டு மாத்தறையில் உள்ள அகுரேச என்ற இடத்தில் பல சிங்கள அரசாங்க அமைச்சர்கள் மீது ஒரே நேரத்தில் கரும்புலித் தாக்குதல் நடாத்தி வீரச்சாவடைந்தார்) 

இன்னும் மூன்று கரும்புலிகளினது பேந்து எழுதுகிறேன்.



படைத்துறைக் கிளை அறியில்லாதோர்:

  1. தியாகசீலம் ஐங்கரன் (பழனியாண்டி-ராக்கம்மா இணையரின் புதல்வன்) (https://www.kuriyeedu.com/?p=462880)

 

Checked
Thu, 05/16/2024 - 11:54
மாவீரர் நினைவு Latest Topics
Subscribe to மாவீரர் நினைவு feed