Aggregator

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது

2 months 1 week ago
Thava Arumugam · இது கென்யா நாட்டிலே விவசாயிகளால் அமைக்கப்படும் தொங்கும் தேன்கூடுகளைக் கொண்ட யானைத் தடுப்பு வேலிகள் இவை. பொதுவாகவே யானைகள் தேனீக்கள் இருக்கும் பக்கம் தலைவைத்துப் பார்ப்பதில்லையாம். இந்த வேலிகளால் யானைகள் தங்கள் பயிர்களை சேதம் செய்வதை பெரும்பாலும் தடுப்பதோடு தேன் மூலமும் விவசாயிகள் மேலதிக வருமானத்தைப் பெறுகின்றனர். இலங்கையிலும் இந்த முறையைப் பயன்படுத்தலாமே.🙏" தேனீக்கள் பற்றிய இன்னொரு தகவல் வியட்நாம் போரின் போது அமெரிக்க சிப்பாய்கள் சப்பித் துப்பிய சுவிங்களை சேகரித்த வியட்நாம் போராளிகள் அவற்றை குச்சிகளில் குத்தி தேன் கூடுகளை இடைஞ்சல் செய்வார்களாம் இதனால் கோபமடைந்த தேனீக்கள் சுவிங்கம் சப்பியபடி வரும் அமெரிக்க சிப்பாய்கள் முகத்தை பதம்பார்க்க வியட்நாம் போராளிகள் அமெரிக்க வீர்ர்களை பதம்பார்த்தார்களாம். 🌺"

அதிசயக்குதிரை

2 months 1 week ago
காவலூர் அகிலன் · ஒருவர் மண்ணுலகை விட்டு விண் உலகிற்கு பிரிந்து சென்றதை...அதுவும் வலுக்கட்டாயமாக உயிருடன் அனுப்பப்பட்டதை மறக்க முடியாமல் சிலர் 67 வருடங்களாக தவித்து வருகின்றனர். லைக்கா, அன்பான, அமைதியான ஜீவன். எல்லா உணர்வுகளையும் கண்ணிலும், உடல் மொழியிலும் சொல்லி விடக் கூடிய உயிர். வாழ்நாள் முழுவதும் வலிகளை மட்டுமே சுமந்த நிலையில், திடீர் என ஒரு நாள், விண்வெளி ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது லைக்கா. அதற்குரிய பயிற்சிகளிலும் தேர்ச்சி பெற்றது. நம்மை என்ன செய்கிறார்கள். ஏன் அந்தரத்தில் கட்டி விட்டு மிதக்க சொல்கிறார்கள். ஏன் கறி சோறு தராமல் என்னவோ மருந்து பவுடர்கள் கொடுக்கிறார்கள்? ஏன் தண்ணீர் தர மறுக்கிறார்கள்? எதுவுமே தெரியாது லைக்காவுக்கு. ஆனால், ஒரு நாள் திடீர் என தரதரவென்று இழுத்து போய் ஏதோ வண்டியில் ஏற்றி விட்டார்கள். ஆனால், கூட யாருமே வர வில்லை. தன் எஜமானர் அழுவதை பார்த்து தானும் அழுதாள் லைக்கா. அவ்வளவுதான். அந்த வாகனம் முழுக்க மூடப்பட்டது. வண்டி எங்கோ போவது புரிந்தது. கொஞ்ச நேரத்தில் வயிறு தொண்டைக்கு வந்தது. என்னவோ சரி இல்லை என்று தோன்றியது. யாரிடமாவது சொல்லலாம் என்றால் அருகே யாரும் இல்லை. சின்ன சின்ன கேப்சூல் மாத்திரைகளில் உணவு இருந்தது. கொஞ்சம் நீர் இருந்தது. சுத்திமுத்தி வாகன சுவர்கள் இருந்தது. 1957 நவம்பர் 3 ஆம் தேதி ஸ்புட்னிக் 2 என்னும் விண்வெளி கலத்தில், ஆராய்ச் சிகளுக்காக அனுப்பப்பட்டதுதான் லைக்கா. உயிருடன் பூமிக்கு திரும்பி வர வாய்ப்பே இல்லை என்று தெரிந்தே அனுப்பப்பட்டது . மிஞ்சி மிஞ்சி ஒரு வாரம் அல்லது 10 நாள் மட்டுமே உயிருடன் இருக்கும் என்று தெரிந்தே அனுப்பப்பட்டது. அதன்படியே தன்னந்தனியாக, அமைதியாக விண்வெளியில் உயிரை விட்டது லைக்கா. உணவு தீரும் முன் 2,570 முறை பூமியை சுற்றி வந்தது லைக்கா. இதில் எதுவுமே லைக்காவின் முடிவு அல்ல. மனிதர்களின் முடிவு. அறிவியல் வளர்ச்சி, விண்வெளியில் என்ன எப்படி இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கும் மனிதர்களின் வேட்கைக்கு பலியான உயிர் லைக்கா. லைக்கா - ஒரு நாய். பூமியில் இருந்து கிளம்பும் முன் அது பார்த்த பார்வையை பாருங்கள். அதன் கண்களை பாருங்கள்.... அந்த பார்வையை பார்த்த சில மனிதர்கள், 67 வருடங்கள் ஆக, இன்று வரை ஒவ்வொரு நவம்பர் 3 ஆம் தேதி அன்று மெழுகுவர்த்தி ஏற்றி, பூக்களை வைத்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்!!! படித்தேன் பகிர்கிறேன்.😌" Voir la traductio

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

2 months 1 week ago
கோகிலா விடயம்தான் லிபாராவின் ஆரம்பமுமா என்பது உண்மையில் எனக்கு தெரியாது. லைக்காவில் வேலை பார்த்த ஆட்கள், சம்பளத்துக்கு வேலை செய்யாமல், தாமே தொடங்கிய வியாபாரம் என ஒரு நம்பகூடிய கதையையாவது backstory யையாவது செட் பண்ணி வைத்துள்ளார்கள். ஆனால் லைக்காவின் கதை படையப்பாவில் ரஜனி மலையை பிக்கானால் உடைத்து வித்து பணக்காரன் ஆனது போல் இருக்கும்🤣. பரிசில் போய் கேட்டால் வேற மாதிரி சொல்வார்கள். யூகேயில் இப்படி ஒரு ஐந்து வருடத்தில் சிங்கிள் டீக்கு சிங்கி- அடித்து விட்டு, தீடீரென ஜாவா சுந்தரேசன் ஆகி லம்போவில் வருவோர், தமிழர்கள் மத்தியில் அதிகம். கேட்டால் அவர்கள் சொல்லும் கதை விட்டலாச்சார்யா படம் போல இருக்கும்🤣. ஏன்?

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months 1 week ago
நான் அனைத்து போட்டிகளிலும் கடைசியாகத்தான் வருவதுண்டு, அதனை பற்றி ஏன் கவலைப்படவேண்டும்? அதனாலேயே எந்த டென்சனும் இருக்காது, அத்துடன் எந்த அணியினை தெரிவு செய்தோம் என்பதே நீங்கள் கூறும்போதுதான் தெரியும். நான் கடைசியாக வருவதால் ஏற்கனவே கடைசி இடம் எனக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் எனும் நம்பிக்கையினால் பலருக்கு நான் போட்டியில் கலந்து கொள்வதற்கு ஒரு உத்வேகமாக உள்ளேன். 🤣 மேலே போறது என்பது இயற்கைக்கு விரோதம் அனைவரும் கீழே இலகுவாக வரலாம் (புவியீர்ப்பு).🤣 இல்லை ஆரம்பத்தில் நம்பிக்கை கொடுத்து பின்னர் நம்பிக்கை துரோகம் செய்துவிடும்🤣.

குட்டிக் கதைகள்.

2 months 1 week ago
Bjp Eswaramoorthy Kannan · குப்பை வண்டி விதி’ தெரியுமா? (The Law of the Garbage Truck) ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்லவேண்டியிருந்தது. ஆகையால் ரயில் நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே ரயில்வே ஸ்டேஷன் போகுமாறு டிரைவரிடம் சொன்னார். இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னாள் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட… ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி டிரைவர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன் சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இன்ச் முன்னதாக நிறுத்தினார். அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர் இவர்களை கன்னாபின்னாவென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான்.இந்த டாக்சி டிரைவரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார். அவர் செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஒட்டிய ஒரு டிரைவரிடம் செய்வது போல இல்லை.“ஏன் அவனை சும்மா விட்டீங்க? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல… அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான்..?” என்று அதிகாரி டாக்சி டிரைவரிடம் கேட்கிறார். அதற்கு டாக்சி டிரைவர் சொன்னது தான் ‘குப்பை வண்டி விதி’ எனப்படுவது. ஆங்கிலத்தில் ‘The Law of the Garbage Truck’ என்பார்கள்.“இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர் ஸார், பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள். மனம் நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும், வைத்திருப்பார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்திருக்குக்ம். அது போன்ற குப்பைகள் சேரச் சேர அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை. சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள். அதை நாம் பர்சனலாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜஸ்ட் அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்கொண்டே இருக்க வேண்டும்” அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது சார். நம்ம பேர் தான் நாறிப்போகும்…!!” என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணக்கத்தை அறிந்து வியந்துவிட்டார். வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும் இந்த குப்பைவண்டிகள் தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள். அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ அல்லது வன்சொற்கள் வீசினாலோ பதிலுக்கு நீங்களும் வார்த்தை யுத்தத்தில் இறங்காது ஜஸ்ட் ஒரு புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுங்கள். நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம். அப்படி நடத்தாதவர்களை புறக்கணிப்போம். வாழ்க்கை என்பது 10% நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதை பொருத்தது. 90% நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதையே பொருத்தது. Voir la traduction......!

அரிய பூமி காந்த ஏற்றுமதி உரிமங்களைப் பெறுவதை சீனா கடினமாக்குகிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2 months 1 week ago
அமெரிக்க இராணுவ தளபாடங்கள் 70 சதவிகித அரிய மூலப்பொருள் மற்றும் காந்தங்களில் சீனாவில் தங்கியுள்ள நிலையில் இவ்வாறான தேசிய வளங்களை தேசிய மயப்படுத்தியமையின் பின்விளைவாக பல நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் அமெரிக்க மற்றும் பிரித்தானியாவால் ஏற்படுத்தப்படுகின்ற நிலையில் அதன் நீட்சியாக இரஸ்ஸிய உக்கிரேன் போர் நிகழும் நிலையில் சீனாவின் இந்த முயற்சி கிழக்காசியாவில் இன்னொரு போர் அரங்கு ஒன்றினை திறக்கப்படுவதற்கான வாய்ப்பினை அதிகரிக்கின்றதா?

அரிய பூமி காந்த ஏற்றுமதி உரிமங்களைப் பெறுவதை சீனா கடினமாக்குகிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2 months 1 week ago
அரிய பூமி காந்த ஏற்றுமதி உரிமங்களைப் பெறுவதை சீனா கடினமாக்குகிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராய்ட்டர்ஸ் மூலம் அக்டோபர் 14, 2025 மாலை 6:50 GMT+11 25 நிமிடங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது அக்டோபர் 31, 2010 அன்று சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள லியான்யுங்காங்கில் உள்ள ஒரு துறைமுகத்தில் ஏற்றுமதிக்காக அரிய பூமி கூறுகள் கொண்ட மண்ணை தொழிலாளர்கள் கொண்டு செல்கின்றனர். REUTERS/Stringer கொள்முதல் உரிம உரிமைகள்., புதிய தாவலைத் திறக்கிறது சுருக்கம் காந்த தயாரிப்பாளர்கள் நீண்ட உரிம மதிப்பாய்வுகளை எதிர்கொள்கிறார்கள் என்று வட்டாரங்கள் கூறுகின்றன. அமெரிக்க-சீன வர்த்தகப் போரின் உச்சத்தில், ஏப்ரல் மாதத்தைப் போலவே ஆய்வும் உள்ளது. சீனாவின் அரிய மண் ஏற்றுமதி செப்டம்பர் மாதத்தில் 31% சரிந்தது. பெய்ஜிங், அக்டோபர் 14 (ராய்ட்டர்ஸ்) - காந்தங்களில் பயன்படுத்தப்படும் முக்கியமான கனிமங்கள் மீதான கட்டுப்பாடுகளை விரிவுபடுத்த கடந்த வாரம் பெய்ஜிங் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பே, சீன அரிய பூமி காந்த நிறுவனங்கள் செப்டம்பர் முதல் ஏற்றுமதி உரிம விண்ணப்பங்களில் கடுமையான ஆய்வுகளை எதிர்கொண்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேக்னட் தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் நீண்ட மதிப்புரைகள், உலகின் முன்னணி சப்ளையரான சீனா, மே மாதம் அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் நிறுத்தத்தில் ஏற்றுமதியை விரைவுபடுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டிற்கு மாறாக, இராணுவ மற்றும் வணிக தொழில்நுட்பத்தில் அவசியமான தயாரிப்புகளின் மீதான அதன் பிடியை மேலும் இறுக்க காந்த ஏற்றுமதியை குறைக்க முயல்கிறதா என்ற கேள்விகளை எழுப்புகின்றன. உங்கள் நாளைத் தொடங்குவதற்குத் தேவையான அனைத்து செய்திகளையும் ராய்ட்டர்ஸ் தினசரி சுருக்கச் செய்திமடல் வழங்குகிறது. இங்கே பதிவு செய்யவும் . செப்டம்பர் மாதம் தொடங்கி ஏற்றுமதி உரிமம் பெறுவது கடினமாகிவிட்டது என்று இந்த விஷயத்தைப் பற்றி அறிந்த இரண்டு வட்டாரங்கள் தெரிவித்தன. கூடுதல் தகவல்களுக்கான கோரிக்கைகளுடன் விண்ணப்பங்கள் இப்போது அடிக்கடி திருப்பி அனுப்பப்படுகின்றன என்று வட்டாரங்களில் ஒன்று தெரிவித்தது. ஒப்புதல்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றன, இருப்பினும் பொதுவாக வர்த்தக அமைச்சகத்தின் 45 வேலை நாள் காலக்கெடுவிற்குள் இருக்கும் என்று மற்றொருவர் கூறினார், ஆனால் இப்போது ஆய்வு வர்த்தகப் போரின் உச்சத்தில் ஏப்ரல் மாதத்தைப் போலவே உள்ளது, அப்போது உரிமங்களுக்கான நீண்ட காத்திருப்பு காந்தப் பற்றாக்குறையை ஏற்படுத்தியது, இது வாகனத் தொழிற்சாலைகளில் பணிநிறுத்தத்திற்கு வழிவகுத்தது. உரிமங்களைப் பெறுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பது குறித்து சரியாகக் கருத்து தெரிவிக்கவோ அல்லது கேட்கப்படும் கேள்விகளை விரிவாகக் கூறவோ அந்த வட்டாரங்கள் மறுத்துவிட்டன. சீனாவில் இந்தப் பிரச்சினையின் உணர்திறன் காரணமாக, பெயர் வெளியிட விரும்பாத நிலையில் இருவரும் பேசினர். உரிம ஒப்புதல்கள் குறித்து கருத்து தெரிவிக்க ராய்ட்டர்ஸ் தொலைநகல் கோரிக்கைக்கு சீன வர்த்தக அமைச்சகம் பதிலளிக்கவில்லை. திங்களன்று வெளியிடப்பட்ட தரவு, சீனாவின் அரிய மண் ஏற்றுமதி செப்டம்பரில் 31% குறைந்துள்ளதாகக் காட்டுகிறது . அந்த சரிவில் எவ்வளவு காந்தங்களால் ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஏனெனில் தரவு தயாரிப்புகளுக்கு இடையில் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. "செப்டம்பரில் ஏற்றுமதிகள் குறைந்திருப்பது ஆச்சரியமல்ல, ஏனெனில் கடந்த மாதம் புதிய உரிமம் பெறுவது மிகவும் கடினமாகிவிட்டது" என்று ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அரிய பூமி காந்தங்களின் ஏற்றுமதி கடுமையாக சரிந்தது, ஆனால் ஜூன் , ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதிகரித்தது. செப்டம்பர் மாதத்திற்கான தரவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும். மின்சார வாகனங்கள் மற்றும் காற்றாலை விசையாழிகள் முதல் இராணுவ ரேடார்கள் வரையிலான தயாரிப்புகளில் முக்கியமான 17 கூறுகளைக் கொண்ட ஒரு குழுவான அரிய மண் தாதுக்களை உலகின் முன்னணி சப்ளையராக சீனா உள்ளது, மேலும் அதன் உரிம அமைப்பு மூலம் பல வகையான ஏற்றுமதியை இறுக்கமாகக் கட்டுப்படுத்துகிறது. கடந்த வாரம் பெய்ஜிங் அந்தக் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்தியது , அமெரிக்காவில் கோபத்தைத் தூண்டியது, அங்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிக வரிகள் மற்றும் பழிவாங்கும் ஏற்றுமதி தடைகளை உறுதியளித்தார், இருப்பினும் பின்னர் அவர் மிகவும் சமரசமான தொனியில் பேசினார். நவம்பர் 8 ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பு ஆர்டர்களை அனுப்ப முயற்சிக்கும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடமிருந்து அறிவிப்பு வந்ததிலிருந்து, விசாரணைகள் அவசரமாக நடந்துள்ளதாக இரு வட்டாரங்களும் தெரிவிக்கின்றன. சீனாவில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக சபையின் பொதுச் செயலாளர் ஆடம் டன்னட், உறுப்பினர்களுக்கான முதன்மையான கவலை, ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் அரிய மண் தயாரிப்பு விண்ணப்பங்களின் இடையூறுதான் என்றார். கடந்த பல வாரங்களாக சபை அதன் உறுப்பினர்களுக்கு ஒப்புதல்களையும் தாமதங்களையும் கண்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார். "பதட்டம் அல்லது கவலையின் அளவு குறைந்துள்ளதாக நாங்கள் கூற முடியாது," என்று அவர் கூறினார். "சில நிறுவனங்கள் ஏன் அப்படி இருக்கின்றன என்பதற்கான எந்த பதிலும் இல்லாமல் தங்கள் காத்திருப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது." ராய்ட்டர்ஸ் ஊழியர்களின் அறிக்கை; சோனாலி பால் எடிட்டிங். https://www.reuters.com/world/china/china-is-making-it-harder-get-rare-earth-magnet-export-licenses-sources-say-2025-10-14/

அரிய பூமி காந்த ஏற்றுமதி உரிமங்களைப் பெறுவதை சீனா கடினமாக்குகிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2 months 1 week ago

அரிய பூமி காந்த ஏற்றுமதி உரிமங்களைப் பெறுவதை சீனா கடினமாக்குகிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராய்ட்டர்ஸ்
மூலம்

அக்டோபர் 14, 2025 மாலை 6:50 GMT+11 25 நிமிடங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது

லியான்யுங்காங்கில் உள்ள ஒரு துறைமுகத்தில் ஏற்றுமதிக்காக அரிய மண் கூறுகள் கொண்ட மண்ணை தொழிலாளர்கள் கொண்டு செல்கின்றனர்.

அக்டோபர் 31, 2010 அன்று சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள லியான்யுங்காங்கில் உள்ள ஒரு துறைமுகத்தில் ஏற்றுமதிக்காக அரிய பூமி கூறுகள் கொண்ட மண்ணை தொழிலாளர்கள் கொண்டு செல்கின்றனர். REUTERS/Stringer கொள்முதல் உரிம உரிமைகள்., புதிய தாவலைத் திறக்கிறது

  • சுருக்கம்

  • காந்த தயாரிப்பாளர்கள் நீண்ட உரிம மதிப்பாய்வுகளை எதிர்கொள்கிறார்கள் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.

  • அமெரிக்க-சீன வர்த்தகப் போரின் உச்சத்தில், ஏப்ரல் மாதத்தைப் போலவே ஆய்வும் உள்ளது.

  • சீனாவின் அரிய மண் ஏற்றுமதி செப்டம்பர் மாதத்தில் 31% சரிந்தது.

பெய்ஜிங், அக்டோபர் 14 (ராய்ட்டர்ஸ்) - காந்தங்களில் பயன்படுத்தப்படும் முக்கியமான கனிமங்கள் மீதான கட்டுப்பாடுகளை விரிவுபடுத்த கடந்த வாரம் பெய்ஜிங் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பே, சீன அரிய பூமி காந்த நிறுவனங்கள் செப்டம்பர் முதல் ஏற்றுமதி உரிம விண்ணப்பங்களில் கடுமையான ஆய்வுகளை எதிர்கொண்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேக்னட் தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் நீண்ட மதிப்புரைகள், உலகின் முன்னணி சப்ளையரான சீனா, மே மாதம் அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் நிறுத்தத்தில் ஏற்றுமதியை விரைவுபடுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டிற்கு மாறாக, இராணுவ மற்றும் வணிக தொழில்நுட்பத்தில் அவசியமான தயாரிப்புகளின் மீதான அதன் பிடியை மேலும் இறுக்க காந்த ஏற்றுமதியை குறைக்க முயல்கிறதா என்ற கேள்விகளை எழுப்புகின்றன.

உங்கள் நாளைத் தொடங்குவதற்குத் தேவையான அனைத்து செய்திகளையும் ராய்ட்டர்ஸ் தினசரி சுருக்கச் செய்திமடல் வழங்குகிறது. இங்கே பதிவு செய்யவும் .

செப்டம்பர் மாதம் தொடங்கி ஏற்றுமதி உரிமம் பெறுவது கடினமாகிவிட்டது என்று இந்த விஷயத்தைப் பற்றி அறிந்த இரண்டு வட்டாரங்கள் தெரிவித்தன. கூடுதல் தகவல்களுக்கான கோரிக்கைகளுடன் விண்ணப்பங்கள் இப்போது அடிக்கடி திருப்பி அனுப்பப்படுகின்றன என்று வட்டாரங்களில் ஒன்று தெரிவித்தது.

ஒப்புதல்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றன, இருப்பினும் பொதுவாக வர்த்தக அமைச்சகத்தின் 45 வேலை நாள் காலக்கெடுவிற்குள் இருக்கும் என்று மற்றொருவர் கூறினார், ஆனால் இப்போது ஆய்வு வர்த்தகப் போரின் உச்சத்தில் ஏப்ரல் மாதத்தைப் போலவே உள்ளது, அப்போது உரிமங்களுக்கான நீண்ட காத்திருப்பு காந்தப் பற்றாக்குறையை ஏற்படுத்தியது, இது வாகனத் தொழிற்சாலைகளில் பணிநிறுத்தத்திற்கு வழிவகுத்தது.

உரிமங்களைப் பெறுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பது குறித்து சரியாகக் கருத்து தெரிவிக்கவோ அல்லது கேட்கப்படும் கேள்விகளை விரிவாகக் கூறவோ அந்த வட்டாரங்கள் மறுத்துவிட்டன.

சீனாவில் இந்தப் பிரச்சினையின் உணர்திறன் காரணமாக, பெயர் வெளியிட விரும்பாத நிலையில் இருவரும் பேசினர்.

உரிம ஒப்புதல்கள் குறித்து கருத்து தெரிவிக்க ராய்ட்டர்ஸ் தொலைநகல் கோரிக்கைக்கு சீன வர்த்தக அமைச்சகம் பதிலளிக்கவில்லை.

திங்களன்று வெளியிடப்பட்ட தரவு, சீனாவின் அரிய மண் ஏற்றுமதி செப்டம்பரில் 31% குறைந்துள்ளதாகக் காட்டுகிறது . அந்த சரிவில் எவ்வளவு காந்தங்களால் ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஏனெனில் தரவு தயாரிப்புகளுக்கு இடையில் வேறுபடுத்திப் பார்க்கவில்லை.

"செப்டம்பரில் ஏற்றுமதிகள் குறைந்திருப்பது ஆச்சரியமல்ல, ஏனெனில் கடந்த மாதம் புதிய உரிமம் பெறுவது மிகவும் கடினமாகிவிட்டது" என்று ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அரிய பூமி காந்தங்களின் ஏற்றுமதி கடுமையாக சரிந்தது, ஆனால் ஜூன் , ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதிகரித்தது. செப்டம்பர் மாதத்திற்கான தரவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்.

மின்சார வாகனங்கள் மற்றும் காற்றாலை விசையாழிகள் முதல் இராணுவ ரேடார்கள் வரையிலான தயாரிப்புகளில் முக்கியமான 17 கூறுகளைக் கொண்ட ஒரு குழுவான அரிய மண் தாதுக்களை உலகின் முன்னணி சப்ளையராக சீனா உள்ளது, மேலும் அதன் உரிம அமைப்பு மூலம் பல வகையான ஏற்றுமதியை இறுக்கமாகக் கட்டுப்படுத்துகிறது.

கடந்த வாரம் பெய்ஜிங் அந்தக் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்தியது , அமெரிக்காவில் கோபத்தைத் தூண்டியது, அங்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிக வரிகள் மற்றும் பழிவாங்கும் ஏற்றுமதி தடைகளை உறுதியளித்தார், இருப்பினும் பின்னர் அவர் மிகவும் சமரசமான தொனியில் பேசினார்.

நவம்பர் 8 ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பு ஆர்டர்களை அனுப்ப முயற்சிக்கும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடமிருந்து அறிவிப்பு வந்ததிலிருந்து, விசாரணைகள் அவசரமாக நடந்துள்ளதாக இரு வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.

சீனாவில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக சபையின் பொதுச் செயலாளர் ஆடம் டன்னட், உறுப்பினர்களுக்கான முதன்மையான கவலை, ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் அரிய மண் தயாரிப்பு விண்ணப்பங்களின் இடையூறுதான் என்றார்.

கடந்த பல வாரங்களாக சபை அதன் உறுப்பினர்களுக்கு ஒப்புதல்களையும் தாமதங்களையும் கண்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

"பதட்டம் அல்லது கவலையின் அளவு குறைந்துள்ளதாக நாங்கள் கூற முடியாது," என்று அவர் கூறினார். "சில நிறுவனங்கள் ஏன் அப்படி இருக்கின்றன என்பதற்கான எந்த பதிலும் இல்லாமல் தங்கள் காத்திருப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது."

ராய்ட்டர்ஸ் ஊழியர்களின் அறிக்கை; சோனாலி பால் எடிட்டிங்.

https://www.reuters.com/world/china/china-is-making-it-harder-get-rare-earth-magnet-export-licenses-sources-say-2025-10-14/

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months 1 week ago
நானும் யாழை எட்டி பார்ப்ப‌து மிக‌ குறைவு ஆர‌ம்ப‌த்தில் ம‌க‌ளிர் உல‌க‌ கோப்பை போட்டிய‌ யாழில் ந‌ட‌த்த‌ ஒருத‌ரும் முன் வ‌ர‌ வில்லை.............முத‌லே க‌ந்த‌ப்பு அண்ணா சொல்லி இருந்தால் தான் ந‌ட‌த்துகிறேன் என்றால் இன்னும் ப‌ல‌ர் இணைந்து இருப்பின‌ம்..............இடையில் க‌ந்த‌ப்பு அண்ண‌ போட்டிய‌ த‌யார் ப‌டுத்தி விட்டார்............பிற‌க்கு ஏராள‌ன் அண்ண‌ அழைப்பு கொடுத்தார்................. நான் இந்தியா ம‌க‌ளிர‌ ந‌ம்பி என‌க்கு நானே சூனிய‌ம் வைத்து விட்டேன்................இந்தியா ம‌க‌ளிரின் வேக‌ ப‌ந்து வீச்சு ந‌ம்பிக்கை த‌ரும் ப‌டி இல்லை பாப்போம் போட்டி முடிவில் எத்த‌னையாவ‌து இட‌ம் வ‌ருகிறேன் என்று..........................

காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது

2 months 1 week ago
இரு பக்கத்திலும் பாதிக்கப்பட்ட அப்பாவி பொதுமக்களின் வாழ்வில் இனியாவது சுபீட்ஷம் மலரட்டும் ....... நல்லதோ கெட்டதோ இந்த அமைதிக்காக அயராது பாடுபட்ட திரு . ட்ரம்ப் அவர்களுக்கு பாராட்டுக்கள் . .......!

மாகாணசபை தேர்தல்கள்; குழப்பகரமான அறிவிப்புகளைச் செய்யும் அரசாங்கம்  — வீரகத்தி தனபாலசிங்கம் — 

2 months 1 week ago
மாகாணசபை தேர்தல்கள்; குழப்பகரமான அறிவிப்புகளைச் செய்யும் அரசாங்கம் October 14, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — மாகாணசபை தேர்தல்கள் அடுத்த வருடம் நடத்தப்படும் என்று அரசாங்க தலைவர்கள் அண்மைக் காலமாக செய்துவரும் அறிவிப்புக்கள் தேர்தல்கள் நிச்சயமாக நடத்தப்படும் என்ற நம்பிக்கையை தருவதிலும் பார்க்க சந்தேகத்தை வலுப்படுத்துபவையாகவே அமைந்திருக்கின்றன. நீண்டகாலமாக தாமதிக்கப்படும் மாகாணசபை தேர்தல்களை அடுத்த வருடத்திற்குள் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்திருக்கிறது என்றும் தற்போதைய எல்லை நிர்ணயச் செயன்முறை நிறைவடைந்தவுடன் தேர்தல்கள் குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கடந்த வியாழக்கிழமை (9/10) பாராளுமன்றத்தில் அறிவித்தார். “மாகாணசபை தேர்தல்களை விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் நடத்துவதா அல்லது கலப்பு தேர்தல் முறையின் கீழ் நடத்துவதா என்பதை நாம் பிறகு தீர்மானிப்போம். இதை பாராளுமன்றமே தீர்மானிக்க முடியும். தேர்தல் முறை குறித்து தீர்மானிப்பதற்கு பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும்” என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கமும் ஜீவன் தொண்டமானும் கிளப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் கூறினார். அண்மையில் முடிவடைந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 வது கூட்டத் தொடரில் உரையாற்றிய வேளையிலும் அதற்கு முன்னதாக இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சமர்ப்பித்த அறிக்கைக்கு பதிலளித்த வேளையிலும் விஜித ஹேரத் மாகாணசபை தேர்தல்கள் தொடர்பான அரசாங்கத்தின் இதே நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. ஆளும் தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) பலம் பொருந்திய பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களான சபை முதல்வரும் அமைச்சருமான பிமால் இரத்நாயக்க மற்றும் அமைச்சரவைப் பேச்சாளர் நாளிந்த ஜயதிஸ்ஸ போன்றவர்களும் எல்லைநிர்ணயச் செயன்முறை நிறைவடைந்தவுடன் அடுத்த வருடம் மாகாணசபை தேர்தல்களை நடத்தப்படும் என்று கூறினார்கள். விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையையும் பழைய தொகுதி அடிப்படையிலான முறையையும் உள்ளடக்கிய கலப்பு தேர்தல் முறையில் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதாக இருந்தால் மாத்திரமே எல்லை நிர்ணயச் செயன்முறை நிறைவடையும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். மாகாணசபை தேர்தல்களுக்கான புதிய எல்லை நிர்ணயக் குழுவொன்றை அமைப்பது தொடர்பில் தங்களுக்கு எந்த அறிவுறுத்தலும் கிடைக்கவில்லை என்றும் அந்த செயன்முறை எப்போது முன்னெடுக்கப்படும் என்பது தொடர்பில் தெளிவான தீர்மானம் ஒன்று இல்லாத நிலையில் மாகாணசபை தேர்தல்களுக்கான காத்திருப்பு தொடருகிறது என்றும் சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். இரத்நாயக்க ஊடகங்களுக்கு கூறியிருந்தார். முன்னைய குழுக்களின் அறிக்கைகளை மீளாய்வு செய்வதற்கும் மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் வழிகாட்டல்களை வழங்குவதற்கும் புதியதொரு எல்லை நிர்ணயக்குழுவை நியமிப்பதற்கு ஆகஸ்ட் மாத முற்பகுதியில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. ஆனால், எல்லை நிர்ணயச் செயன்முறை நிறைவடைந்தவுடன் தேர்தல்களை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று முன்னதாக உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதிலும், அந்த செயன்முறைகளின் முன்னேற்றம் குறித்து பிந்திய தகவல் எதுவும் எந்த தகவலும் அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை. உள்ளூராட்சி தேர்தல்களைப் போன்று மாகாணசபை தேர்தல்களையும் கலப்பு முறையின் கீழ் நடத்துவதற்காக ‘நல்லாட்சி ‘ அரசாங்க காலத்தில் 2017 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் மாகாணங்களில் 2022 தேர்தல் வட்டாரங்களையும் 222 பட்டியல் அடிப்படையிலான ஆசனங்களையும் நிர்ணயம் செய்வதற்காக கலாநிதி கே. தவலிங்கம் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. ஆனால், அந்த குழு அதற்கான காலஅவகாசம் கடந்த நிலையில் 2018 ஆம் ஆண்டில் சமர்ப்பித்த அறிக்கையை அன்றைய அமைச்சரவை நிராகரித்தது. அவ்வாறு எல்லை நிர்ணயக்குழுவின் அறிக்கை நிராகரிக்கப்படும் பட்சத்தில், பிரதமர் தலைமையிலான குழு ஒன்று அதை மீள்பரிசீலனை செய்து இரு மாதங்களுக்குள் புதிய அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு சட்டத்தில் ஏற்பாடு இருக்கிறது. அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு இரு மாதங்களில் எல்லை நிர்ணயக்குழுவின் அறிக்கையை முழுமையாக மீள்பரிசீலனை செய்வது சாத்தியமில்லை என்று ஒரு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது என்று கூறப்படுகிறது. அதற்கு பிறகு புதிய மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படாமல் 11 வருடங்களுக்கும் அதிகமான காலம் கடந்துவிட்டது. அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தின் கீழ் இறுதியாக 2014 ஆம் ஆண்டில் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. புதிய அரசாங்கம் பதவியேற்று ஒரு வருட காலத்திற்குள் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படும் என்று கடந்த வருட தேசிய தேர்தல்களின் போது தேசிய மக்கள் சக்தி வாக்குறுதி வழங்கியது. அந்த ஒரு வருடம் நிறைவு பெறுவதற்கு இன்னமும் இரு மாதமே இருக்கிறது. உள்ளூராட்சி தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் வாக்குகளில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டதை அடுத்து மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் தயக்கம் காட்டுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியம். அடுத்த வருட முதல் அரைப்பகுதியில் அந்த தேர்தல்கள் நடத்தப்படும் என்று அரசாங்கத்தின் சில தலைவர்கள் ஏற்கெனவே கூறியிருந்த நிலையில், தற்போது வெளியுறவு அமைச்சர் அடுத்த வருடத்திற்குள் தேர்தல்கள் நடத்தப்படும் என்று கூறியிருப்பது இயல்பாகவே சந்தேகங்களுக்கு வழிவகுத்திருக்கிறது. அமைச்சரவை ஆகஸ்டில் வழங்கிய அங்கீகாரத்தின் பிரகாரம் புதியதொரு எல்லை நிர்ணயக்குழு நியமிக்கப்படுமாக இருந்தால், அது புதிதாக அதன் செயன்முறைகளை தொடங்கும் பட்சத்தில் அடுத்த வருடம் மாகாணசபை தேர்தல்களை நடத்துவது எந்தவிதத்திலும் சாத்தியமில்லை. அதனால் மீண்டும் தேர்தல்கள் ஓரிரு வருடங்கள் தாமதிக்கப்படுவதற்கான வாய்ப்பே இருக்கிறது. ஆனால், ஏற்கெனவே ஏழு வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றம் நிராகரித்த எல்லை நிர்ணயக்குழுவின் அறிக்கையை தற்போதைய பிரதமரின் தலைமையில் குழுவொன்றை அமைத்து மீள்பரிசீலனை செய்யும் உத்தேசம் அரசாங்கத்துக்கு இருக்கிறது என்று சில அரசியல் வட்டாரங்கள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது. மாகாணசபை தேர்தல்களை மேலும் தாமதிக்காமல் விரைவாக நடத்த வேண்டுமானால், ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் அதை நடத்துவதே நடைமுறைச் சாத்தியமான ஒரேயொரு வழிமுறையாகும். அதற்கு வழிசெய்யும் வகையில் முன்னைய அரசாங்க காலத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தனிநபர் பிரேரணை என்ற வடிவில் கொண்டு வந்ததைப் போன்ற சட்டமூலத்தை தற்போது தமிழரசு கட்சியின் மடடக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கொண்டு வந்திருக்கிறார். உண்மையிலேயே மாகாணசபை தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டும் என்ற அக்கறை அரசாங்கத்துக்கு இருந்தால், சாணக்கியனின் தனிநபர் பிரேரணையை சபையில் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும். ஆனால், அதற்கான விருப்பத்தை அரசாங்கம் வெளிக்காட்டுவதாக இல்லை என்பது மாத்திரமல்ல தானாகவே அத்தகைய சட்டமூலம் ஒன்றை கொண்டுவந்து நிறைவேற்றும் நோக்கமும் அதற்கு இல்லை. பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு இருக்கும் மூன்றில் இரண்டு ஆசனங்களுக்கும் அதிகமான பெரும்பான்மைப் பலத்தை பயன்படுத்தி அதை இலகுவாகச் செய்யமுடியும். மாகாணசபை தேர்தல்களை விரைவாக நடத்துவதற்கு குறுக்கே நிற்கும் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண வேண்டியது முற்று முழுதாக அரசாங்கத்தின் பொறுப்பேயாகும். தாமதத்துக்கு இடமளிக்காமல் உகந்த முறையில் தேர்தல்களை நடத்துவதாக உறுதியளித்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவற்றை பின்போடுவதை எந்த காரணத்தின் அடிப்படையிலும் நியாயப்படுத்த முடியாது. பாராளுமன்ற தேர்தலைப் போன்று உள்ளூராட்சி தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கு பிரமிக்கத்தக்க வெற்றி கிடைத்திருந்தால் அதைத் தொடர்ந்து உடனடியாகவே அரசாங்கம் மாகாணசபை தேர்தல்களை நிச்சயமாக நடத்தியிருக்கும். தேர்தல்களை பின்போடுவதன் மூலமாக மேற்கொண்டும் வாக்கு வீழ்ச்சியை எந்த அரசாங்கத்தினாலும் தவிர்க்க முடியாது. தேர்தல்களை தாமதிப்பதனால் மேலும் வாக்குகளில் வீழ்ச்சி ஏற்படுமே தவிர, மக்களின் ஆதரவை எந்த வகையிலும் அதிகரிக்க முடியாது. தோல்விப் பயத்தில் தேர்தல்களை ஒத்திவைத்த சகல அரசாங்கங்களுமே படுதோல்வியையே சந்தித்தன என்பதை இன்றையா அரசாங்கத் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது இவ்வாறிருக்க, தென்னிலங்கை அரசியல் நிகழ்வுப் போக்குகளில் ஒரு விசித்திரமான திருப்பத்தை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. கடந்த ஒரு தசாப்தத்துக்கும் அதிகமான காலமாக மாகாணசபை தேர்தல்களைப் பற்றி எந்தவிதமான அக்கறையும் இல்லாமல் இருந்த தற்போதைய எதிர்க்கட்சிகள் அந்த தேர்தல்களை விரைவாக நடத்துமாறு அண்மைக் காலமாக அரசாங்கத்தை வலியுறுத்தத் தொடங்கியிருக்கின்றன. மாகாணங்களுக்கான அதிகாரப்பரவலாக்கம் மீதான அக்கறை அதற்கு காரணமில்லை என்பதை புரிந்துகொள்வதில் எவருக்கும் சிரமம் இருக்க முடியாது. உள்ளூராட்சி தேர்தல்களில் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட பின்னடைவினால் உற்சாகமடைந்த எதிர்க்கட்சிகள், தேசிய தேர்தல்களின்போது தேசிய மக்கள் சக்தி நாட்டு மக்களுக்கு வழங்கிய பெருவாரியான வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற முடியாமல் இருப்பதன் காரணத்தினால் அடுத்து வரக்கூடிய எந்தவொரு தேர்தலிலும் அதற்கு பாரிய பின்னடைவு ஏற்படும் என்று எதிர்பார்க்கின்றன. மறுபுறத்தில், மத்தியில் தற்போதைக்கு அதிகாரத்துக்கு வரக்கூடிய வாய்ப்பு இல்லை என்பதால், இந்த எதிர்க்கட்சிகள் ஆட்சிமுறையின் இரண்டாம் அடுக்கான மாகாணசபைகளில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் நாட்டம் காட்டுகின்றன. ஏற்கெனவே படுமோசமாக பலவீனமடைந்திருக்கும் இந்த கட்சிகள் ஏதாவது ஒரு மட்டத்தில் அதிகாரப் பதவிகளுக்கு நீண்ட காலத்துக்கு வரமுடியாவிட்டால் அவற்றின் கட்டமைப்புக்கள் மேலும் சீர்குலையாமல் தடுப்பது கஷ்டமான காரியமாக இருக்கும். மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் இந்த கட்சிகள் அரசாங்கத்துக்கு சவால் விடுப்பதற்கு துணிச்சல் கொண்டதற்கு இதுவே காரணமாகும். முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் சில தினங்களுக்கு முன்னர் கூட்டப்பட்ட மகாநாடு ஒன்றில் எதிர்க் கட்சிகளும் சில சிவில் சமூக அமைப்புக்களும் தாமதமின்றி விரைவாக மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு நெருக்குதல்களை கொடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக ஆராய்ந்தன. அடுத்த வருடம் வரை காத்திராமல் இந்த வருடத்திற்குள்ளாகவே தேர்தல்களை நடத்த வேண்டும் என்றும் அவை கோரிக்கை விடுத்தன. தென்னிலங்கையில் மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் இவ்வாறாக அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைத்துவரும் நிலையில், வடக்கு, கிழக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் இது விடயத்தில் அரசாங்கத்துக்கு நெருக்குதல்களை கொடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய்வதில் பெரிதாக அக்கறை காட்டாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு வருடம் நிறைவடையும் நிலையில், இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் அக்கறை காட்டாததையும் மாகாணசபை தேர்தல்கள் தாமதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டிய தமிழரசு கட்சி ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அவகாசம் கோரி அவருக்கு கடிதத்தை அனுப்பியிருந்தது. ஜனாதிபதி விரைவில் தமிழரசு கட்சியின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசுவார் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் போன்றவர்கள் செய்தியாளர்கள் மாகாநாட்டில் கூறினார்களே தவிர, ஜனாதிபதியிடமிருந்து எந்தவிதமான பதிலும் தமிழரசு கட்சிக்கு கிடைத்ததாக அறிய வரவில்லை. https://arangamnews.com/?p=12377

மாகாணசபை தேர்தல்கள்; குழப்பகரமான அறிவிப்புகளைச் செய்யும் அரசாங்கம்  — வீரகத்தி தனபாலசிங்கம் — 

2 months 1 week ago

மாகாணசபை தேர்தல்கள்; குழப்பகரமான அறிவிப்புகளைச் செய்யும் அரசாங்கம்

October 14, 2025

 — வீரகத்தி தனபாலசிங்கம் — 

மாகாணசபை தேர்தல்கள் அடுத்த வருடம் நடத்தப்படும் என்று அரசாங்க தலைவர்கள் அண்மைக் காலமாக செய்துவரும்  அறிவிப்புக்கள்  தேர்தல்கள் நிச்சயமாக நடத்தப்படும் என்ற நம்பிக்கையை தருவதிலும் பார்க்க சந்தேகத்தை வலுப்படுத்துபவையாகவே  அமைந்திருக்கின்றன. 

 நீண்டகாலமாக தாமதிக்கப்படும் மாகாணசபை தேர்தல்களை  அடுத்த வருடத்திற்குள் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்திருக்கிறது என்றும் தற்போதைய எல்லை நிர்ணயச் செயன்முறை நிறைவடைந்தவுடன் தேர்தல்கள் குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கடந்த வியாழக்கிழமை (9/10)  பாராளுமன்றத்தில் அறிவித்தார்.  “மாகாணசபை தேர்தல்களை விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் நடத்துவதா அல்லது கலப்பு தேர்தல் முறையின் கீழ் நடத்துவதா என்பதை  நாம் பிறகு  தீர்மானிப்போம். இதை பாராளுமன்றமே தீர்மானிக்க முடியும். தேர்தல் முறை குறித்து தீர்மானிப்பதற்கு பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும்” என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கமும் ஜீவன் தொண்டமானும் கிளப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர்  கூறினார்.

அண்மையில் முடிவடைந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 வது கூட்டத் தொடரில் உரையாற்றிய வேளையிலும் அதற்கு முன்னதாக இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சமர்ப்பித்த அறிக்கைக்கு பதிலளித்த வேளையிலும் விஜித ஹேரத் மாகாணசபை தேர்தல்கள் தொடர்பான அரசாங்கத்தின் இதே நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. 

ஆளும் தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) பலம் பொருந்திய பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களான சபை முதல்வரும்  அமைச்சருமான  பிமால் இரத்நாயக்க மற்றும் அமைச்சரவைப் பேச்சாளர் நாளிந்த ஜயதிஸ்ஸ போன்றவர்களும்  எல்லைநிர்ணயச் செயன்முறை நிறைவடைந்தவுடன் அடுத்த வருடம்  மாகாணசபை தேர்தல்களை நடத்தப்படும் என்று கூறினார்கள். 

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையையும்  பழைய தொகுதி அடிப்படையிலான முறையையும் உள்ளடக்கிய கலப்பு தேர்தல் முறையில் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதாக இருந்தால் மாத்திரமே எல்லை நிர்ணயச் செயன்முறை நிறைவடையும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

மாகாணசபை தேர்தல்களுக்கான புதிய எல்லை நிர்ணயக் குழுவொன்றை அமைப்பது தொடர்பில் தங்களுக்கு எந்த அறிவுறுத்தலும் கிடைக்கவில்லை என்றும் அந்த செயன்முறை எப்போது முன்னெடுக்கப்படும் என்பது தொடர்பில் தெளிவான தீர்மானம் ஒன்று இல்லாத நிலையில் மாகாணசபை தேர்தல்களுக்கான காத்திருப்பு தொடருகிறது என்றும் சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். இரத்நாயக்க ஊடகங்களுக்கு கூறியிருந்தார்.  

முன்னைய குழுக்களின் அறிக்கைகளை மீளாய்வு செய்வதற்கும் மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் வழிகாட்டல்களை வழங்குவதற்கும்  புதியதொரு எல்லை நிர்ணயக்குழுவை நியமிப்பதற்கு ஆகஸ்ட் மாத முற்பகுதியில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. ஆனால், எல்லை நிர்ணயச் செயன்முறை நிறைவடைந்தவுடன் தேர்தல்களை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று முன்னதாக உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதிலும், அந்த செயன்முறைகளின் முன்னேற்றம் குறித்து பிந்திய தகவல் எதுவும் எந்த தகவலும்  அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை. 

உள்ளூராட்சி தேர்தல்களைப் போன்று மாகாணசபை தேர்தல்களையும் கலப்பு முறையின் கீழ் நடத்துவதற்காக ‘நல்லாட்சி ‘ அரசாங்க காலத்தில் 2017 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் மாகாணங்களில் 2022 தேர்தல் வட்டாரங்களையும் 222 பட்டியல் அடிப்படையிலான ஆசனங்களையும்  நிர்ணயம் செய்வதற்காக கலாநிதி கே. தவலிங்கம் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. ஆனால், அந்த குழு அதற்கான காலஅவகாசம் கடந்த நிலையில் 2018 ஆம் ஆண்டில் சமர்ப்பித்த அறிக்கையை அன்றைய அமைச்சரவை நிராகரித்தது.

அவ்வாறு எல்லை நிர்ணயக்குழுவின் அறிக்கை நிராகரிக்கப்படும் பட்சத்தில், பிரதமர் தலைமையிலான குழு ஒன்று அதை மீள்பரிசீலனை செய்து இரு மாதங்களுக்குள்  புதிய அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு சட்டத்தில் ஏற்பாடு இருக்கிறது. அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு இரு மாதங்களில் எல்லை நிர்ணயக்குழுவின் அறிக்கையை முழுமையாக மீள்பரிசீலனை செய்வது சாத்தியமில்லை என்று ஒரு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது  என்று கூறப்படுகிறது.  அதற்கு பிறகு புதிய மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படாமல் 11 வருடங்களுக்கும் அதிகமான காலம் கடந்துவிட்டது. அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தின் கீழ் இறுதியாக 2014 ஆம் ஆண்டில் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அரசாங்கம் பதவியேற்று ஒரு வருட காலத்திற்குள் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படும் என்று கடந்த வருட தேசிய தேர்தல்களின் போது தேசிய மக்கள் சக்தி வாக்குறுதி வழங்கியது. அந்த ஒரு வருடம் நிறைவு பெறுவதற்கு இன்னமும் இரு மாதமே இருக்கிறது. உள்ளூராட்சி தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் வாக்குகளில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டதை அடுத்து  மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் தயக்கம் காட்டுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியம். அடுத்த வருட முதல் அரைப்பகுதியில் அந்த தேர்தல்கள் நடத்தப்படும் என்று அரசாங்கத்தின் சில தலைவர்கள் ஏற்கெனவே கூறியிருந்த நிலையில்,  தற்போது வெளியுறவு அமைச்சர் அடுத்த வருடத்திற்குள் தேர்தல்கள் நடத்தப்படும் என்று கூறியிருப்பது இயல்பாகவே சந்தேகங்களுக்கு வழிவகுத்திருக்கிறது. 

அமைச்சரவை ஆகஸ்டில் வழங்கிய அங்கீகாரத்தின் பிரகாரம்  புதியதொரு எல்லை நிர்ணயக்குழு நியமிக்கப்படுமாக இருந்தால், அது புதிதாக அதன் செயன்முறைகளை தொடங்கும் பட்சத்தில் அடுத்த வருடம் மாகாணசபை தேர்தல்களை நடத்துவது  எந்தவிதத்திலும்  சாத்தியமில்லை. அதனால் மீண்டும் தேர்தல்கள் ஓரிரு வருடங்கள் தாமதிக்கப்படுவதற்கான வாய்ப்பே இருக்கிறது.  ஆனால், ஏற்கெனவே ஏழு வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றம் நிராகரித்த எல்லை நிர்ணயக்குழுவின் அறிக்கையை தற்போதைய பிரதமரின் தலைமையில் குழுவொன்றை அமைத்து மீள்பரிசீலனை  செய்யும் உத்தேசம் அரசாங்கத்துக்கு இருக்கிறது என்று சில  அரசியல் வட்டாரங்கள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது. 

மாகாணசபை தேர்தல்களை மேலும் தாமதிக்காமல் விரைவாக நடத்த வேண்டுமானால், ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் அதை நடத்துவதே நடைமுறைச் சாத்தியமான ஒரேயொரு வழிமுறையாகும். அதற்கு வழிசெய்யும் வகையில் முன்னைய அரசாங்க காலத்தில் இலங்கை தமிழரசு  கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தனிநபர் பிரேரணை என்ற வடிவில் கொண்டு வந்ததைப் போன்ற சட்டமூலத்தை தற்போது தமிழரசு கட்சியின் மடடக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கொண்டு வந்திருக்கிறார். 

உண்மையிலேயே மாகாணசபை தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டும் என்ற அக்கறை அரசாங்கத்துக்கு  இருந்தால்,  சாணக்கியனின் தனிநபர் பிரேரணையை  சபையில் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும். ஆனால், அதற்கான விருப்பத்தை அரசாங்கம் வெளிக்காட்டுவதாக இல்லை என்பது மாத்திரமல்ல தானாகவே அத்தகைய சட்டமூலம் ஒன்றை கொண்டுவந்து நிறைவேற்றும் நோக்கமும் அதற்கு இல்லை. பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு இருக்கும் மூன்றில் இரண்டு ஆசனங்களுக்கும் அதிகமான பெரும்பான்மைப் பலத்தை பயன்படுத்தி அதை இலகுவாகச் செய்யமுடியும்.

மாகாணசபை தேர்தல்களை விரைவாக நடத்துவதற்கு குறுக்கே நிற்கும் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண வேண்டியது முற்று முழுதாக  அரசாங்கத்தின் பொறுப்பேயாகும். தாமதத்துக்கு இடமளிக்காமல் உகந்த முறையில்  தேர்தல்களை நடத்துவதாக உறுதியளித்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவற்றை பின்போடுவதை எந்த காரணத்தின் அடிப்படையிலும் நியாயப்படுத்த முடியாது. பாராளுமன்ற தேர்தலைப் போன்று  உள்ளூராட்சி தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கு பிரமிக்கத்தக்க வெற்றி கிடைத்திருந்தால் அதைத் தொடர்ந்து  உடனடியாகவே அரசாங்கம் மாகாணசபை தேர்தல்களை  நிச்சயமாக நடத்தியிருக்கும்.

தேர்தல்களை பின்போடுவதன் மூலமாக  மேற்கொண்டும் வாக்கு வீழ்ச்சியை  எந்த  அரசாங்கத்தினாலும் தவிர்க்க முடியாது. தேர்தல்களை தாமதிப்பதனால் மேலும் வாக்குகளில் வீழ்ச்சி ஏற்படுமே தவிர, மக்களின் ஆதரவை எந்த வகையிலும் அதிகரிக்க முடியாது. தோல்விப் பயத்தில் தேர்தல்களை ஒத்திவைத்த சகல அரசாங்கங்களுமே படுதோல்வியையே சந்தித்தன என்பதை இன்றையா அரசாங்கத் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  

இது இவ்வாறிருக்க, தென்னிலங்கை  அரசியல் நிகழ்வுப் போக்குகளில் ஒரு விசித்திரமான திருப்பத்தை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. 

கடந்த ஒரு தசாப்தத்துக்கும் அதிகமான காலமாக மாகாணசபை தேர்தல்களைப் பற்றி எந்தவிதமான அக்கறையும் இல்லாமல் இருந்த தற்போதைய எதிர்க்கட்சிகள் அந்த தேர்தல்களை விரைவாக நடத்துமாறு அண்மைக் காலமாக அரசாங்கத்தை வலியுறுத்தத் தொடங்கியிருக்கின்றன. மாகாணங்களுக்கான அதிகாரப்பரவலாக்கம் மீதான அக்கறை அதற்கு காரணமில்லை என்பதை புரிந்துகொள்வதில் எவருக்கும் சிரமம் இருக்க முடியாது. 

உள்ளூராட்சி தேர்தல்களில் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட பின்னடைவினால் உற்சாகமடைந்த எதிர்க்கட்சிகள், தேசிய தேர்தல்களின்போது தேசிய மக்கள் சக்தி நாட்டு மக்களுக்கு வழங்கிய பெருவாரியான வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற முடியாமல் இருப்பதன் காரணத்தினால் அடுத்து வரக்கூடிய எந்தவொரு தேர்தலிலும் அதற்கு பாரிய பின்னடைவு ஏற்படும் என்று எதிர்பார்க்கின்றன. 

மறுபுறத்தில், மத்தியில் தற்போதைக்கு அதிகாரத்துக்கு வரக்கூடிய வாய்ப்பு இல்லை என்பதால்,  இந்த எதிர்க்கட்சிகள் ஆட்சிமுறையின் இரண்டாம் அடுக்கான மாகாணசபைகளில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் நாட்டம் காட்டுகின்றன. ஏற்கெனவே படுமோசமாக பலவீனமடைந்திருக்கும் இந்த கட்சிகள் ஏதாவது ஒரு மட்டத்தில் அதிகாரப் பதவிகளுக்கு நீண்ட காலத்துக்கு வரமுடியாவிட்டால் அவற்றின் கட்டமைப்புக்கள் மேலும் சீர்குலையாமல் தடுப்பது கஷ்டமான காரியமாக இருக்கும். மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் இந்த கட்சிகள் அரசாங்கத்துக்கு சவால் விடுப்பதற்கு துணிச்சல் கொண்டதற்கு இதுவே காரணமாகும். 

முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான  சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் சில தினங்களுக்கு முன்னர் கூட்டப்பட்ட மகாநாடு ஒன்றில் எதிர்க் கட்சிகளும் சில சிவில் சமூக அமைப்புக்களும் தாமதமின்றி விரைவாக மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு நெருக்குதல்களை கொடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக ஆராய்ந்தன. அடுத்த வருடம் வரை காத்திராமல் இந்த வருடத்திற்குள்ளாகவே தேர்தல்களை நடத்த வேண்டும் என்றும் அவை கோரிக்கை விடுத்தன.

தென்னிலங்கையில் மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் இவ்வாறாக அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைத்துவரும் நிலையில், வடக்கு,  கிழக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் இது விடயத்தில்  அரசாங்கத்துக்கு நெருக்குதல்களை கொடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய்வதில் பெரிதாக அக்கறை காட்டாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது.  

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு வருடம் நிறைவடையும் நிலையில், இனப் பிரச்சினைக்கு  அரசியல் தீர்வை காண்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் அக்கறை காட்டாததையும் மாகாணசபை தேர்தல்கள் தாமதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டிய தமிழரசு கட்சி ஜனாதிபதி அநுர  குமார திசநாயக்கவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அவகாசம் கோரி அவருக்கு கடிதத்தை அனுப்பியிருந்தது. ஜனாதிபதி விரைவில் தமிழரசு கட்சியின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசுவார் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் போன்றவர்கள் செய்தியாளர்கள் மாகாநாட்டில் கூறினார்களே தவிர, ஜனாதிபதியிடமிருந்து எந்தவிதமான பதிலும் தமிழரசு கட்சிக்கு கிடைத்ததாக அறிய வரவில்லை. 

https://arangamnews.com/?p=12377

ஆளுநர் செயலகம் முன் தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்.. கயேந்திரகுமார் சிறிதரன் எம்பிகள் வருகை.

2 months 1 week ago
ஆளுநர் செயலகம் முன் தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்.. கயேந்திரகுமார் சிறிதரன் எம்பிகள் வருகை. செவ்வாய், 14 அக்டோபர் 2025 07:36 AM வடக்கு ஆசிரிய இட மாற்றத்தில் மோசடி அரசியல் தலையீடு.. இரத்து செயாவிட்டால் தொடர் போராட்டம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் எச்சரிக்கை. வட மாகாண கல்வி திணைக்களத்தினால் சேவையின் தேவை கருதி என மேற்கொள்ளப்பட்ட ஆசிரிய இடமாற்றம் பாரபட்சமானதும் பழிவாங்கல் நோக்கமாக கருதும் நிலையில் குறித்த இடமாற்றத்தை உடன் இடைநிறுத்தி மீள மேற்கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் இன்றும் செவ்வாய்கிறமை போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில் வட மாகாண கல்வி திணைக்களத்தினால் சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தில் ஆசிரியர்கள் பழிவாங்கலால் இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சுட்டிக்காட்டினர். இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த விடையம் தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடுவதாக பதில் வழங்கினர். https://jaffnazone.com/news/51285

ஆளுநர் செயலகம் முன் தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்.. கயேந்திரகுமார் சிறிதரன் எம்பிகள் வருகை.

2 months 1 week ago

ஆளுநர் செயலகம் முன் தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்.. கயேந்திரகுமார் சிறிதரன் எம்பிகள் வருகை.

செவ்வாய், 14 அக்டோபர் 2025 07:36 AM

ஆளுநர் செயலகம் முன் தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்.. கயேந்திரகுமார் சிறிதரன் எம்பிகள் வருகை.

வடக்கு ஆசிரிய இட மாற்றத்தில் மோசடி அரசியல் தலையீடு.. இரத்து செயாவிட்டால் தொடர் போராட்டம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் எச்சரிக்கை.

வட மாகாண கல்வி திணைக்களத்தினால் சேவையின் தேவை கருதி என மேற்கொள்ளப்பட்ட ஆசிரிய இடமாற்றம் பாரபட்சமானதும் பழிவாங்கல் நோக்கமாக கருதும் நிலையில் குறித்த இடமாற்றத்தை உடன் இடைநிறுத்தி மீள மேற்கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் இன்றும் செவ்வாய்கிறமை  போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில் வட மாகாண கல்வி திணைக்களத்தினால்  சேவையின் தேவை கருதிய  இடமாற்றத்தில் ஆசிரியர்கள் பழிவாங்கலால் இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சுட்டிக்காட்டினர்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த விடையம் தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடுவதாக பதில் வழங்கினர்.

https://jaffnazone.com/news/51285