Aggregator

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

2 months 1 week ago
பல மாதங்களாக, அரசாங்கதுக்கு தண்ணி காட்டிக் கொண்டிருந்த செவ்வந்தி…. இறுதியில் பிடிபட்டார். 😁 அனுரா அரசாங்கத்துக்கு, ஒரு… ஓ…. போடுங்க. 😂 🤣

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

2 months 1 week ago
கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி மற்றும் கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள் என கூறப்படும் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஐவரும் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளதாக தெரிவித்து தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சஞ்சீவ படுகொலை புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இஷாரா செவ்வந்தி பிரதான சந்தேகநபராக அடையாளப்படுத்தப்பட்டார். இந்நிலையில், இஷாரா செவ்வந்தி மற்றும் கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள் என கூறப்படும் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Tamilwinஇஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது - தமிழ்வின்கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி மற்றும் கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள் என கூறப்படும் 4 சந்தே...

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

2 months 1 week ago

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி மற்றும் கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள் என கூறப்படும் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த ஐவரும் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளதாக தெரிவித்து தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

சஞ்சீவ படுகொலை

புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில்  இஷாரா செவ்வந்தி பிரதான சந்தேகநபராக அடையாளப்படுத்தப்பட்டார். 

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது | Ishara Sevvanthi Arrested Ganemulla Sanjeewa

இந்நிலையில், இஷாரா செவ்வந்தி மற்றும் கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள் என கூறப்படும் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Tamilwin
No image previewஇஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது - தமிழ்வின்
கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி மற்றும் கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள் என கூறப்படும் 4 சந்தே...

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

2 months 1 week ago
ஓ இரண்டுமே கோலமாவு குமார்களா...? இதில் Lebara ஆள் நமக்கு கொஞ்சம் தூரத்து உறவு. இவருடன் ஒருடலும் ஈருயிருமாய் இருந்த இன்னும் ஒரு உறவு கொஞ்ச காலமாக இலங்கையில் அதிகமாக உலாத்துகிறார். கேள்விப்பட்ட வரை கடும் கடனால் அங்கே வீட்டை விட்டு வெளிய வருவதில்லையாம். மெதுவாக மனிசியுடன் இலங்கையில் நிரந்தரமாக டேரா போடப்போகிறார்களாம்.

கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!

2 months 1 week ago
கட்டுரையை வாசிக்கும்பொழுதே புரிகின்றது என்ன நோக்கத்துக்காக எழுதப்பட்டுள்ளது ...புலம் பெயர் சமுகத்தையும் ,தமிழ் இனத்தையும் இலக்கு வைத்து எழுதப்பட்டுள்ளது...1980 களில் தமிழகத்தில் கல்விகற்க வந்த பல ஆபிரிக்க இளைஞர்களை தமிழ்பெண்கள் மணமுடித்து இன்று மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் இணைந்து வாழ்கின்றனர் சமுகத்துடன் .....

இலங்கை, பூட்டான், நேபாளத்துக்கு இந்திய ரூபாயில் கடன் வழங்க அனுமதி ! - இந்திய ரிசர்வ் வங்கி

2 months 1 week ago
இதனால் இந்தியாவுக்கு என்ன இலாபம்? மறைமுகமாக தாங்கள் இவர்களை அடிமைப்படுத்துகிறோம் என்று சொல்லவோ? அல்லது அமெரிக்கா கடன் தந்தால் டொலரில் திருப்பி கொடுக்க வேணும் எங்களிடம் எடுத்தால் இந்தியா ரூபாவில் ...கடனை அடைக்கலாம் என சொல்ல வருகின்றனரா? பிரிக்ஸ் கூட்டமைப்பு அமெரிக்கா டொலருக்கு எதிராக புதிய நாணயம் உருவாக்க போயினம் என்று சொல்லிச்சினம் கடைசியல் இந்திய நாணயத்தில் கடன்... சீனாவும் இரண்டு நாடுகளுக்கு அவையின்ட நாணயத்தில் கடன் கொடுப்பினம் ....அதிகமா பாகிஸ்தானுக்கும்,மாலைதீவுக்கும்...

சீனா மீது தற்போதைய விகிதங்களை விட 100% புதிய வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் கூறுகிறார், இது வர்த்தகப் போரை பெருமளவில் அதிகரிக்கிறது.

2 months 1 week ago
ரஷ்யா உக்ரேனின் முக்கிய பகுதிகளை தாக்கும் போது ஏன் பிரிட்டனும் அமெரிக்காவும் ரஷ்யாவின் தலைநகரை தாக்க கூடாது?

ஹமாஸ் வசமிருந்த 20 பணயக்கைதிகள் விடுதலை, டிரம்ப் வருகை - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

2 months 1 week ago
சொந்த மண்ணில் வாழ்ந்த மக்கள் பூமியை சுடுகாடாக்கி விட்டு.... தாம் சமாதான புறாக்கள் என கோஷமிடும் உலகில் வாழ்கின்றோம். இது சரியென தலையாட்ட அழிந்து கொண்டிருக்கும் தமிழினத்திலும் ஒரு கூட்டம்.

சீனா மீது தற்போதைய விகிதங்களை விட 100% புதிய வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் கூறுகிறார், இது வர்த்தகப் போரை பெருமளவில் அதிகரிக்கிறது.

2 months 1 week ago
FT: பல மாதங்களாக ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்க உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி வருகிறது. ரோமன் பெட்ரென்கோ, க்ரிஸ்டினா பொண்டரிவா - 12 அக்டோபர், 10:45 ஜெலென்ஸ்கி மற்றும் டிரம்ப். புகைப்படம்: உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம் 23492 समानिकारिका 23492 அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின்படி, ரஷ்ய எரிசக்தி வசதிகள் மீது நீண்ட தூர தாக்குதல்களை நடத்துவதில் அமெரிக்கா பல மாதங்களாக உக்ரைனுக்கு உதவி வருகிறது. மூலம் : பைனான்சியல் டைம்ஸ் விவரங்கள் : பிரச்சாரத்தை நன்கு அறிந்த ஏராளமான உக்ரேனிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள், அமெரிக்க உளவுத்துறை உக்ரேனியப் படைகள் முன்னணியில் இருந்து வெகு தொலைவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உட்பட முக்கிய ரஷ்ய எரிசக்தி இலக்குகளைத் தாக்க உதவியுள்ளது என்று கூறினர். கோடையின் நடுப்பகுதியில் இருந்து தீவிரமடைந்த இந்த ஆதரவு, இதற்கு முன்பு அறிவிக்கப்படவில்லை. ஜூலை மாதம் டொனால்ட் டிரம்ப் மற்றும் வோலோடிமிர் ஜெலென்ஸ்க்னி இடையே நடந்த தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து இந்த மாற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது, அப்போது, வாஷிங்டன் நீண்ட தூர ஆயுதங்களை வழங்கினால் உக்ரைன் மாஸ்கோவைத் தாக்க முடியுமா என்று அமெரிக்க ஜனாதிபதி கேட்டதாக FT தெரிவித்துள்ளது. " [ரஷ்யர்களை] வேதனைப்படுத்தவும் " கிரெம்ளினை பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் கொடுக்கவும் நோக்கம் கொண்ட ஒரு உத்திக்கு டிரம்ப் தனது ஆதரவைத் தெரிவித்தார் என்று அந்த அழைப்பை நன்கு அறிந்த இரண்டு வட்டாரங்கள் தெரிவித்தன. பின்னர், டிரம்ப் " மேலும் கொலை செய்வதை ஊக்குவிக்கவில்லை, வெறும் ஒரு கேள்வியைக் கேட்கிறார் " என்று வெள்ளை மாளிகை கூறியது. இந்த விஷயத்தை நன்கு அறிந்த அதிகாரிகள், அமெரிக்க உளவுத்துறை விமானப் பாதைகள், உயரங்கள், நேரம் மற்றும் பணி முடிவுகளைத் திட்டமிட கியேவுக்கு உதவியுள்ளதாகவும், உக்ரேனிய நீண்ட தூர ட்ரோன்கள் ரஷ்ய வான் பாதுகாப்பைத் தவிர்க்க அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த நடவடிக்கையை நன்கு அறிந்த மூன்று பேர், திட்டமிடலின் அனைத்து நிலைகளிலும் வாஷிங்டன் நெருக்கமாக ஈடுபட்டதாகக் கூறினர். உக்ரைன் இலக்குகளைத் தேர்ந்தெடுத்ததாக ஒரு அமெரிக்க அதிகாரி கூறினார், அதன் பிறகு வாஷிங்டன் அந்த வசதிகளின் பாதிப்புகள் குறித்து உளவுத்துறையை வழங்கியது. இருப்பினும், இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட அல்லது நன்கு அறிந்த மற்றவர்கள், அமெரிக்கா உக்ரேனியர்களுக்கான முன்னுரிமை இலக்குகளையும் நிர்ணயித்ததாகக் கூறினர். உக்ரேனிய ட்ரோன்கள் ரஷ்யாவின் பொருளாதாரத்தை சீர்குலைத்து புடினை ஒரு தீர்வை நோக்கித் தள்ள வாஷிங்டனுக்கு ஒரு " கருவி " என்று ஒரு ஆதாரம் விவரித்தது. அலாஸ்கா உச்சிமாநாட்டில் தனது ரஷ்ய சகாவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்ததிலிருந்து டிரம்ப் புடினுடன் வெளிப்படையாக விரக்தியை வெளிப்படுத்தினார், இது சிறிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. நீண்ட தூர தாக்குதல்களுக்கு டிரம்ப் ஆதரவளிப்பதற்கு இதுவும் ஒரு காரணியாக இருந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. பின்னணி : சனிக்கிழமை, ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி டொனால்ட் டிரம்புடன் பேசினார் . ஆக்சியோஸின் கூற்றுப்படி , உரையாடலின் போது, உக்ரைன் டோமாஹாக் நீண்ட தூர ஏவுகணைகளைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஜெலென்ஸ்கி விவாதித்தார். உக்ரைனுக்கு டோமாஹாக் ஏவுகணைகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமெரிக்காவுடன் விரிவான மற்றும் தீவிரமான விவாதங்கள் தற்போது நடந்து வருவதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. https://www.pravda.com.ua/eng/news/2025/10/12/8002387/ இந்த செய்தி உண்மையானால் சமாதானத்தின் பெயரால் அமெரிக்கா அரசு உலக பொருளாதார அழிவிற்கான முயற்சிகளினையும் ஆரம்பித்துள்ளது போல தோன்றுகிறது, ஏற்கனவே போரினால் பாதிப்பிற்குள்ளாகியுள்ள பொருளாதாரத்தினை இந்த முயற்சி முற்றாக சீரழிக்கலாம்.

கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!

2 months 1 week ago
இதனை நானும் ஏற்றுக் கொள்கின்றேன்....தாய்மையின் வேதனை ...ஆற்றாமையால் வெளிப்பட்டிருக்கு...இந்த பதிவு வந்தவுடனேயே ...நான் புரிந்து கொண்டேன் ...எனினும் விமர்சனம் மாறுபட்டு வரத் டொடங்கவே ...நான் தேசிய செயற்பாட்டாளர் என்பதை பாவித்தேன் ...காப்புலி வசனம் கனடாவில் பாவித்தால் ஆள் உள்ளே...

விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!

2 months 1 week ago
“கீதைக்கும் ராமாயணத்திற்கும் இருக்கும் மரியாதை திருக்குறளுக்கு இருக்கிறதா?” என்ற கேள்வி எழுப்பி, “அறிவுக்குத் திருக்குறளைப் பார். உழைப்பிற்குத் திருக்குறளைப் பார்" என்று முழங்கினார். திருக்குறளுக்கு மாநாடு நடத்தினார். மலிவு விலையில் குறளை அச்சடித்துக் கொடுத்தார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னின்று நடத்தினார், தமிழறிஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று கர்ஜித்தார். பெரியார், “நான் இந்தி மொழிக்கு எதிரியல்ல! குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் எந்த மொழிக்கும் நான் எதிரியல்ல. நான் ஆதிக்கத்திற்கே எதிரி” என்றார். மொழி என்பது கருத்தைப் பரிமாறும் ஒரு கருவி. அதில் எளிமையை வேண்டினார். மொழியிலிருக்கும் ஆபாசங்களை எதிர்த்தார். மொழி என்பது பகுத்தறிவுக்கும் அறிவியலுக்கும் உதவி செய்ய வேண்டும் என்பதே அவர் எண்ணம். “செந்தமிழ் மொழியானாலும் பாமரனுக்குப் புரியவில்லை, அவனுக்கு முன்னேற்றம் இல்லை என்றால் என்ன பயன்?” என்பதே அவரது கேள்வி. குறிப்பாக மொழியில் மதம் சேர்த்ததை எதிர்த்து அதிகம் பேசியிருக்கிறார். இதே ஆதங்கத்தை 1962-ம் ஆண்டு ‘மொழியும் அறிவும்’ எனும் தலைப்பில், "ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழ் மொழியானது, மொழியில், பொருளில், எழுத்தில், எவ்வித முன்னேற்றமும் மாறுதலும் அடையவில்லை. உலகத்திலேயே தலைசிறந்த நீதி இலக்கியமான திருக்குறள் தமிழில் உள்ளது. என் அனுபவத்திற்கு எட்டியவரையில் உலகத்திலேயே சிறந்த கணக்கு முறை, அதாவது இளஞ்சுவடி எனும் எண்கணக்கு இருக்கிறது. இவை இரண்டையும் கழித்துவிட்டால் தமிழில் தமிழனுக்குப் பயன்படக் கூடியதாக எதுவும் தென்படவில்லை. தமிழும் தமிழனும் பெரும்பாலும் பழங்காலச் சின்னமாகக் காணப்படுகின்றன" என்கிறார் பெரியார். கட்டுரையின் முடிவு : இதைக் கூர்ந்து கவனித்தால் பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி காலத்து மொழி என்று கூறிய விதம், ஒரு பூனை தனது இரையான எலியைப் பிடிப்பது போன்றது கிடையாது, மாறாகப் பூனை தன் குட்டியைக் கவ்வி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற உணர்வே! அதில் எந்தப் பற்றுக்கும் இடமில்லாமல் மனித பற்றை மட்டுமே பிரதானமாக வைத்து யோசித்திருக்கிறார் அந்த தொண்டு செய்து பழுத்த பழம். இன்று அவரின் 146-வது பிறந்த தினம்!

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

2 months 1 week ago
நூறு வீதம் உண்மை. என்னதான் சகல வழிகளிலும் முன்னேறி இருந்தாலும் பக்காவாக சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை செவ்வனே திறம்பட செய்பவர்கள். மேற்குலக நாடுகளில் உள்ள அரசியல்வாதிகள் உட்பட பெரிய முதலாளிகள் உட்பட எவ்வளவு சுத்துமாத்து வேலைகளில் ஈடுபட்டு சிக்கி தவிக்கின்றார்கள் என்பது உலகறிந்த விடயம். உதாரண அரசியல்வாதிகளையும்,பிரமுகர்களையும் இங்கு குறிப்பட நான் விரும்பவில்லை.

விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!

2 months 1 week ago
இதோ இன்னுமொரு இணைப்பு…. உங்களிடம் விகடன் சந்தா இருக்கிறது என நினைக்கிறேன். வாசித்து பயனடையுங்கள். உண்மையை மீண்டும் ஒரு தரம் பறைசாற்ற நீங்கள் கொடுத்த வாய்ப்புக்கு நன்றி. பிகு இனி என்ன? விகடன், பிபிசி திராவிட ஊடகம் - அதுதானே🤣. Fact Check: நிஜமாகவே தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்றாரா பெரியார்? | Long Read https://www.vikatan.com/literature/tamil/did-periyar-actually-say-tamil-is-a-barbaric-language மேலே உள்ள விகடன் Fact-check தரவு சரிபார்க்கும் கட்டுரை சொல்லும் தரவுகளில் சில பெரியாரைப் பொறுத்தவரையில் கன்னடியன், தெலுங்கன், மலையாளி, தமிழன் என்ற வேற்றுமையே ஆரியத்தின் சூழ்ச்சி என்ற கருத்துடையவர். இவர்கள் நால்வர் பேசும் மொழியும் தமிழே! அதில் வடசொற்கள் கலந்தே பிரிவினை உண்டானது என்கிறார். நான்கு மொழி பண்டிதர்களை அழைத்து அந்தந்த மொழிகளில் இருக்கும் வடசொற்களை எடுத்துவிட்டால் தமிழே மிஞ்சும் என்கிறார். அவரைப் பொறுத்தவரை ஒன்றிலிருந்து நான்கு மொழி உருவாகவில்லை. நான்கு மொழியுமே தமிழ்தான் என்கிறார். இதனை 1948-ம் ஆண்டு எழுதிய மொழியாராய்ச்சி நூலில் விளக்கியிருக்கிறார். இதற்கு உதாரணமாக, ‘சாதி' என்ற வடமொழிச் சொல்லைத் தமிழிலிருந்து எடுத்துவிட்டால், அதற்குச் சரியான தமிழ்ச்சொல் வேறு இல்லை என்கிறார்! இதனால் வடமொழியினைக் கடுமையாகச் சாடியவர், இன்று பேசப்படும் வந்தேறி அரசியலுக்கு எந்த இடத்திலும் இடம் கொடுக்கவில்லை. மேலும் பகுத்தறிவு, விடுதலை, குடியரசு, உண்மை என்று தமிழ் மொழியிலே தனது இதழ்களைத் தொடங்கினார். இந்தி திணிப்பு போராட்டத்துக்காகச் சிறை சென்றார். தமிழ் இசையைக் கேட்கவேண்டும் என்ற இயக்கத்தைக் கொண்டு வந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் சமஸ்கிருத ஆசிரியர்களுக்கு உயர்ந்த சம்பளம் வழங்கி, தமிழ் ஆசிரியர்களுக்குக் குறைந்த சம்பளம் வழங்கிய நேரத்தில் அதற்கு எதிராகக் குரல் கொடுத்தார். தமிழர் தன் குழந்தைக்குத் தமிழில் பெயரிட வேண்டும், நமது ஊர், நகர், தெருவுக்குத் தமிழில் பெயர்கள் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ‘தமிழ் மொழி வளர்ச்சி’, ’தமிழ் பொழில்’, ‘தமிழுக்குத் துரோகமும் இந்திய மொழியின் ரகசியமும்’, ‘தமிழ்நாட்டின் நாகரீகமும் பழக்க வழக்கங்களும்’, ‘தமிழ் மொழியில் பிற மொழிகள் செய்யும் ஆதிக்கம்’ என மொழிகுறித்து பல கட்டுரைகள் எழுதினார். குறிப்பாக 1932-ல் மதராஸ் மாகாண அரசு, ஆங்கில சொற்களுக்குக் கலைச்சொல் பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அதில் வடமொழி அதிகமாகக் காணப்பட, பெரியார், "சமஸ்கிருத தொடர்பினாலும் செய்தித்தாள்களில் குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கத்தினாலும், நல்ல நல்ல தமிழ்ச் சொற்கள் வழக்கொழிந்து போகின்றன. வடமொழிச் சொற்களும், ஆங்கில சொற்களும் தமிழில் கலக்கக்கூடாது என்ற முரட்டுக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என நான் கூறவில்லை. ஆனால் எளிய தமிழில் ‘தண்ணீர்' இருக்கும் போது ‘ஜலம்' வேண்டியதில்லை என்கிறோம். ‘தூக்கம்' இருக்கும் போது 'நித்திரை' வேண்டாம் என்கிறேன். எனவே கூடுமானவரையில் நல்ல எளிய சுத்தமான தமிழிலேயே கலைச் சொற்களையும் பிற சொற்களையும் கொண்ட நூல்கள் இனி இயற்றப்படுதல் வேண்டும்" என்றார்.

விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!

2 months 1 week ago
இதைத்தான் ஒரு விடயத்தை சூழமைவை (context) கருதாமல் நுனிப்புல் மேய்வது என்பது. உண்மையில் நீங்கள் யாழில் சீமான் பிரச்சாரம் தவிர எழுதப்படும் விடயங்கள் எதையும் வாசிப்பதில்லையா? இதை பற்றி நானே திருமாவேலன் எழுதிய நீண்ட விகடன் கட்டுரையை யாழில் பதிந்துள்ளேன். இன்னொரு பிபிசி இணைப்பு கீழே இதை விட பல திரிகளில் இந்த பொய் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. BBC News தமிழ்நிர்மலா சீதாராமன் சொல்வது போல் பெரியார் தமிழை 'காட்டுமிரா...தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் படத்தை திமுகவினர் ஒவ்வோர் அறையிலும் வைத்திருப்பதாக நிர்மலா சீதாராமன் மக்களவையில் விமர்சித்தார். உண்மையில் பெரியார் கூறியது என்ன? தமிழை அவர் ஏன் காட்டுமிராண்டி

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

2 months 1 week ago
இதுதான் என் கருத்தும். இருந்தாலும் இப்படியான வரலாற்று நன்றி நவிலல்கள் இருக்கும் வரைக்கும் தமிழ் மனம் கொதித்துக்கொண்டே இருக்கும். தமிழ்நாட்டு அரசியல் சரித்திரத்தில் ஈழத்தமிழர் பிரச்சனையை தொடாத அரசியல்வாதிகளும் இல்லை.அரசியல் கட்சிகளும் இல்லை. இதில் சீமானும் விதி விலக்கு அல்ல.ஏன்.........சினிமாக்களில் கூட ஈழத்தமிழர் பிரச்சனையின் ஆதிக்கம் உள்ளது. அப்படியிருக்கும் போது.... எனக்கு பிடிக்கவில்லை என்றால் உனக்கும் பிடிக்கக்கூடாது என்ற தத்துவம் குண்டுச்சட்டிகளுடன் நிற்கக்கடவது.

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

2 months 1 week ago
ஓ…அப்போ சிறு தூள், மன்னிக்கவும் துகள் பெரு வெள்ளம் ஆகியது என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்🤣.