Aggregator

ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்

2 months ago
வானில் விமானப்படை, தரையில் இராணுவம் – இந்தியாவின் இருமுனை தாக்குதல்! ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ஒரு பெரிய இராணுவ நடவடிக்கையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா ஒரு தீர்க்கமான தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல் இரு முனைகளைக் கொண்டது. இதில் வானத்தில் விமானப்படை மற்றும் தரையில் இராணுவம் ஈடுபட்டதாக அரசாங்க உயர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய விமானப்படை (IAF) ஆகாயத்திலிருந்து தரைக்கு ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய அதே வேளையில், இந்திய இராணுவம் ஒரே நேரத்தில் தரையிலிருந்து தரைக்கு ஏவுகணைகளை ஏவியதாக பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கொள்ளிட்டு இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜெய்ஷ்-இ-மொஹமட், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய பயங்கரவாத உள்கட்டமைப்புகளை குறிவைத்து துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இரவு முழுவதும் நடந்த இந்த நடவடிக்கையில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த பன்முக தாக்குதல், பயங்கரவாத இயந்திரங்களை ஆதரிப்பதை நிறுத்துமாறு பாகிஸ்தானுக்கு ஒரு எச்சரிக்கையாகும், இது பாகிஸ்தானின் பயங்கரவாத இயந்திரத்தை முடக்கும் என்று இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிப்பதை நிறுத்துமாறு இஸ்லாமாபாத்திற்கு தெளிவான செய்தியை அனுப்புவதே இதன் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதல்கள் தொடங்கப்படுவதற்கு முன்பு, புது டெல்லி முக்கிய உலக சக்திகளிடமிருந்து இராஜதந்திர ஆதரவைப் பெற்றதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கு வெளிப்படையான ஆதரவு கிடைத்தது, சீனாவின் பதில் நடுநிலையானது என்று விவரிக்கப்பட்டாலும், வளைகுடா நாடுகள் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதைக் காண முடிந்தது. இதனால் பாகிஸ்தான் இராஜதந்திர முன்னணியில் பெரும்பாலும் தனிமைப்படுத்தப்பட்டது. துருக்கியைத் தவிர, வேறு எந்த நாடும் இஸ்லாமாபாத்தை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இது இந்தியாவுக்கு கிடைத்த குறிப்பிடத்தக்க இராஜதந்திர வெற்றி என்று கூறியது. தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த நடவடிக்கையை “அப்பட்டமான போர் நடவடிக்கை” என்று கூறி, பொதுமக்கள் உயிரிழப்புகளைக் கூறினார். பாகிஸ்தான் “அதன் விருப்பப்படி சரியான நேரத்தில் மற்றும் இடத்தில்” பதிலடி கொடுக்கும் என்று அச்சுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் பதிலடி கொடுத்தால் இந்தியா கடுமையாக பதிலளிக்கத் தயாராக உள்ளது என்று இந்தியா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்தார். எவ்வாறெனினும், இந்தியாவின் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டதில் அசாரின் உறவினர்கள் பத்து பேர் அடங்குவர் என்று பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் ஒரு விளையாட்டு மைதானத்தில் அவரது இறுதிச் சடங்கிற்காக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து. “அல்லாஹ் அக்பர்” அல்லது கடவுள் பெரியவர் என்று கோஷமிட்டனர். மேலும் பிற மத கோஷங்களையும் எழுப்பினர். “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கொடூரம் அனைத்து விதிமுறைகளையும் மீறியுள்ளது” என்று அந்தக் குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “துக்கமும் அதிர்ச்சியும் விவரிக்க முடியாதவை”. கொல்லப்பட்டவர்களில் ஐந்து பேர் குழந்தைகள் என்றும், மற்றவர்களில் அசாரின் சகோதரி மற்றும் அவரது கணவர் அடங்குவதாகவும் அது கூறியது. பல ஆண்டுகளாகக் காணப்படாத அசார் மற்றும் அவரது சகோதரர், குழுவின் துணைத் தலைவரான அப்துல் ரவூப் அஸ்கர் ஆகியோர் இறுதிச் சடங்கு பிரார்த்தனைகளில் கலந்து கொண்டதாகத் தெரியவில்லை. தாக்குதலுக்குப் பின்னர் அந்த இடத்திற்குச் செல்லும் சாலை முற்றுகையிடப்பட்டது. மேலும் வடக்கே, நள்ளிரவுக்குப் பிறகு சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு, நான்கு இந்திய ஏவுகணைகள் முரிட்கேயில் உள்ள ஒரு பரந்த வளாகத்தை ஆறு நிமிடங்களுக்குள் தாக்கியதாக உள்ளூர் அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தத் தாக்குதல் ஒரு மசூதியையும் அருகிலுள்ள நிர்வாகக் கட்டிடத்தையும் இடித்து, மூன்று பேரை இடிபாடுகளுக்குள் புதைத்தது. https://athavannews.com/2025/1431218 ################### ################## ################### 😂 🤣

கிழக்கில் தமிழ் பேசும் பகுதிகளில் ஆசனங்களை கைப்பற்றியுள்ள கட்சிகள் !

2 months ago
கிழக்கில் தமிழ் பேசும் பகுதிகளில் ஆசனங்களை கைப்பற்றியுள்ள கட்சிகள் ! Published By: Vishnu 08 May, 2025 | 10:29 AM (ஆர்.ராம்) கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய கட்சிகள் ஆசனங்களை கைப்பற்றியுள்ள நிலையில், திருகோணமலையில் தமிழ் அரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன ஆசனங்களை கைப்பற்றியுள்ளன. அதேபோன்று அம்பாறையில் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழரசுக்கட்சி ஆகியன தமிழ் பேசும் பகுதிகளில் ஆசனங்களை கைப்பற்றியுள்ளன. எனினும், திருகோணமலை, அம்பாறையின் சிங்களப் பகுதிகளில் தேசிய மக்கள் சக்தியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியும் சபையொன்றைக் கைப்பற்றியுள்ளது. கிழக்கு மாகாணத்திலும் பல்வேறு சபைகளிலும் ஆட்சி அமைப்பதில் அறுதிப்பெரும்பான்மை இன்மையால் இழுபறியான நிலைமைகள் அதிகமேற்பட்டுள்ளது. இந்நிலையில், கிழக்கு மாகாணத்தில் உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளின் பிரகாரம் கட்சிகளின் நிலைமைகள் வருமாறு, மட்டக்களப்பு மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகரசபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 16 ஆசனங்களையும், ஏறாவூர் பற்று பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 13 ஆசனங்களையும் கோரளைப்பற்று பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 10ஆசனங்களையும், மண்முனை தெற்கு மற்றும் எருவில் பற்று பிரதேச சபை இலங்கைத் தமிழரசுக்கட்சி 8ஆசனங்களையும், மண்முனை பற்று பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 6 ஆசனங்களையும் மண்முனை மேற்கு பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 10ஆசனங்களையும் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 6 ஆசனங்களையும் போரதீவு பற்று பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 8ஆசனங்களையும் பெற்றுள்ளது. தமிழரசுக்கட்சி மண்முனைப் மேற்கு பிரதேச சபையில் மாத்திரம் அறுதிப்பெரும்பான்மையைப் பெற்றுள்ளதோடு ஏனைய சபைகளில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் ஒத்துழைப்புடனேயே ஆட்சி அமைக்கும் நிலைமைகள் காணப்படுகின்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காத்தான்குடி நகரசபையில் அறுதிப்பெரும்பான்மையுடன் 10ஆசனங்களை கைப்பற்றியுள்ளதோடு ஏறாவூர் பற்று பிரதேச சபையில் 7ஆசனங்களைப் பெற்றுள்ளது. கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 7ஆசனங்களைப் பெற்றுள்ளதோடு அக்கட்சி ஏனைய அனைத்து சபைகளிலும் ஆசனங்களைப் பெற்றுக்கொண்டு தீர்மானிக்கும் சக்தியாக காணப்படுகின்றது. கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபை ஐக்கிய மக்கள் சக்தி 8ஆசனங்களைப் பெற்றுற்றுள்ளபோதும் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையைக் கொண்டிருக்கவில்லை. இந்நிலையில் முன்னிலை பெற்றுள்ள தரப்பினர்கள் ஏனைய தரப்பினருடன் கூட்டிணைந்து ஆட்சி அமைப்பதற்குரிய பேச்சுக்களை ஆரம்பித்துள்ளனர். திகாமடுல்ல மாவட்டம் திகாமடுல்ல மாவட்டத்தில் அக்கறைப்பற்று மாநகரசபை, அக்கரைப்பற்று பிரதேச சபை ஆகியவற்றை தேசிய காங்கிரஸ் கைப்பற்றியுள்ளதோடு சம்மாந்துறை பிரதேச சபையையும், நிந்தவூர் பிரதேச சபையையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. தேசிய மக்கள் சக்தி அம்பாறை நகரசபையிலும், தெஹியத்தகண்டிய பிரதேச சபையிலும், தமன பிரதேச சபையிலும், உஹன பிரதேச சபையிலும், மஹா ஓயா பிரதேச சபையிலும், நமலோயா பிரதேச சபையிலும், பதியத்தலாவ பிரதேச சபையிலும் லகுகல பிரதேச சபையிலும் ஆசனங்களை கைப்பற்றியுள்ளன. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நாவிதன்வெளி பிரதேச சபையிலும், ஆலையடிவேம்பு பிரதேச சபையிலும், காரைதீவு பிரதேச சபையிலும் ஆசனங்களை பெற்றுள்ளதோடு இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இறக்காமம் பிரதேச சபையிலும், பொத்துவில் பிரதேச சபையிலும், அட்டளைச்சேனை பிரதேச சபையிலும் திருக்கோவில் பிரதேச சபையில் சுயேட்சைக்குழு ஒன்றும் ஆசனங்களை கைப்பற்றியுள்ளன. எனினும் இந்த சபைகளிலும் கூட்டணிகளை அமைப்பதன் மூலமே ஆட்சியை அமைத்துக்கொள்ளக்கூடிய நிலைமைகளே காணப்படுகின்றது. திருகோணமலை மாவட்டம் இலங்கைத் தமிழரசுக்கட்சி திருகோணமலை மாநகரசபையில் 9ஆசனங்களையும், வெருகல் பிரதேச சபையில் 8ஆசனங்களையும் திருகோணமலை நகர சபையில் 6ஆசனங்களையும் மூதூர் பிரதேச சபையில் 5ஆசனங்களையும் பெற்றுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிண்ணியா நகரசபையில் மட்டும் 4 ஆசனங்களைப் பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி சேருவில பிரதேச சபையில் 7ஆசனங்களையும் கந்தளாய் பிரதேச சபையில் 10 ஆசனங்களையும் மொரவெவ பிரதேச சபையில் 9ஆசனங்களையும் கோமரன்கடவல பிரதேச சபையில் 9 ஆசனங்களையும் பதவிஸ்ரீபுர பிரதேச சபையில் 9ஆசனங்களையும் தம்பலகமுவ பிரதேச சபையில் 3 ஆசனங்களையும் பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குச்சவெளி பிரதேச சபையில் 5ஆசனங்களையும், கிண்ணியா பிரதேச சபையில் 5ஆசனங்களையும் பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/214150

கிழக்கில் தமிழ் பேசும் பகுதிகளில் ஆசனங்களை கைப்பற்றியுள்ள கட்சிகள் !

2 months ago

கிழக்கில் தமிழ் பேசும் பகுதிகளில் ஆசனங்களை கைப்பற்றியுள்ள கட்சிகள் !

Published By: Vishnu

08 May, 2025 | 10:29 AM

image

 (ஆர்.ராம்)

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய கட்சிகள் ஆசனங்களை கைப்பற்றியுள்ள நிலையில், திருகோணமலையில் தமிழ் அரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன ஆசனங்களை கைப்பற்றியுள்ளன.

அதேபோன்று அம்பாறையில் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழரசுக்கட்சி ஆகியன தமிழ் பேசும் பகுதிகளில் ஆசனங்களை கைப்பற்றியுள்ளன. 

எனினும், திருகோணமலை, அம்பாறையின் சிங்களப் பகுதிகளில் தேசிய மக்கள் சக்தியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியும் சபையொன்றைக் கைப்பற்றியுள்ளது. 

கிழக்கு மாகாணத்திலும் பல்வேறு சபைகளிலும் ஆட்சி அமைப்பதில் அறுதிப்பெரும்பான்மை இன்மையால் இழுபறியான நிலைமைகள் அதிகமேற்பட்டுள்ளது.

இந்நிலையில், கிழக்கு மாகாணத்தில் உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளின் பிரகாரம் கட்சிகளின் நிலைமைகள் வருமாறு,

மட்டக்களப்பு மாவட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகரசபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 16 ஆசனங்களையும், ஏறாவூர் பற்று பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 13 ஆசனங்களையும் கோரளைப்பற்று பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 10ஆசனங்களையும், மண்முனை தெற்கு மற்றும் எருவில் பற்று பிரதேச சபை இலங்கைத் தமிழரசுக்கட்சி 8ஆசனங்களையும், மண்முனை பற்று பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 6 ஆசனங்களையும் மண்முனை மேற்கு பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 10ஆசனங்களையும் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 6 ஆசனங்களையும் போரதீவு பற்று பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 8ஆசனங்களையும் பெற்றுள்ளது.

தமிழரசுக்கட்சி மண்முனைப் மேற்கு பிரதேச சபையில் மாத்திரம் அறுதிப்பெரும்பான்மையைப் பெற்றுள்ளதோடு ஏனைய சபைகளில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் ஒத்துழைப்புடனேயே ஆட்சி அமைக்கும் நிலைமைகள் காணப்படுகின்றன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காத்தான்குடி நகரசபையில் அறுதிப்பெரும்பான்மையுடன் 10ஆசனங்களை கைப்பற்றியுள்ளதோடு ஏறாவூர் பற்று பிரதேச சபையில் 7ஆசனங்களைப் பெற்றுள்ளது.

கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 7ஆசனங்களைப் பெற்றுள்ளதோடு அக்கட்சி ஏனைய அனைத்து சபைகளிலும் ஆசனங்களைப் பெற்றுக்கொண்டு தீர்மானிக்கும் சக்தியாக காணப்படுகின்றது.

கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபை ஐக்கிய மக்கள் சக்தி 8ஆசனங்களைப் பெற்றுற்றுள்ளபோதும் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையைக் கொண்டிருக்கவில்லை.

இந்நிலையில் முன்னிலை பெற்றுள்ள தரப்பினர்கள் ஏனைய தரப்பினருடன் கூட்டிணைந்து ஆட்சி அமைப்பதற்குரிய பேச்சுக்களை ஆரம்பித்துள்ளனர்.

திகாமடுல்ல மாவட்டம்

திகாமடுல்ல மாவட்டத்தில் அக்கறைப்பற்று மாநகரசபை, அக்கரைப்பற்று பிரதேச சபை ஆகியவற்றை தேசிய காங்கிரஸ் கைப்பற்றியுள்ளதோடு சம்மாந்துறை பிரதேச சபையையும், நிந்தவூர் பிரதேச சபையையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. 

தேசிய மக்கள் சக்தி அம்பாறை நகரசபையிலும், தெஹியத்தகண்டிய பிரதேச சபையிலும், தமன பிரதேச சபையிலும், உஹன பிரதேச சபையிலும், மஹா ஓயா பிரதேச சபையிலும், நமலோயா பிரதேச சபையிலும், பதியத்தலாவ பிரதேச சபையிலும் லகுகல பிரதேச சபையிலும் ஆசனங்களை கைப்பற்றியுள்ளன. 

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நாவிதன்வெளி பிரதேச சபையிலும், ஆலையடிவேம்பு பிரதேச சபையிலும், காரைதீவு பிரதேச சபையிலும் ஆசனங்களை பெற்றுள்ளதோடு இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இறக்காமம் பிரதேச சபையிலும், பொத்துவில் பிரதேச சபையிலும், அட்டளைச்சேனை பிரதேச சபையிலும் திருக்கோவில் பிரதேச சபையில் சுயேட்சைக்குழு ஒன்றும் ஆசனங்களை கைப்பற்றியுள்ளன. 

எனினும் இந்த சபைகளிலும் கூட்டணிகளை அமைப்பதன் மூலமே ஆட்சியை அமைத்துக்கொள்ளக்கூடிய நிலைமைகளே காணப்படுகின்றது.

திருகோணமலை மாவட்டம்

இலங்கைத் தமிழரசுக்கட்சி திருகோணமலை மாநகரசபையில் 9ஆசனங்களையும், வெருகல் பிரதேச சபையில் 8ஆசனங்களையும் திருகோணமலை நகர சபையில் 6ஆசனங்களையும் மூதூர் பிரதேச சபையில் 5ஆசனங்களையும் பெற்றுள்ளது.

 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிண்ணியா நகரசபையில் மட்டும் 4 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி  சேருவில பிரதேச சபையில் 7ஆசனங்களையும் கந்தளாய் பிரதேச சபையில் 10 ஆசனங்களையும் மொரவெவ பிரதேச சபையில் 9ஆசனங்களையும் கோமரன்கடவல பிரதேச சபையில் 9 ஆசனங்களையும் பதவிஸ்ரீபுர பிரதேச சபையில் 9ஆசனங்களையும் தம்பலகமுவ பிரதேச சபையில் 3 ஆசனங்களையும் பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குச்சவெளி பிரதேச சபையில் 5ஆசனங்களையும், கிண்ணியா பிரதேச சபையில் 5ஆசனங்களையும் பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/214150

மே.10 வரை விமான நிலையங்கள் மூடல்; 200 விமான சேவை ரத்து

2 months ago
மே.10 வரை விமான நிலையங்கள் மூடல்; 200 விமான சேவை ரத்து இந்திய ராணுவ முப்படைகளின் 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை தொடர்ந்து, நாடு முழுவதும் 200 விமானங்களின் சேவை வரும் 10-ம் திகதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 18 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி தரும்விதமாக புதன்கிழமை (07) அதிகாலை, இந்திய ராணுவம் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் அதிரடி தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்த இந்திய ராணுவம், மொத்தம் 9 தீவிரவாதிகளின் தளங்களை தாக்கி அழித்தது. இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே மேலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தத் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற சூழல் நிலவுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 244 இடங்களில் போர் பயிற்சி ஒத்திகை நடத்தப்பட்டது. மேலும், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாடு முழுவதும் 200 விமானங்களின் சேவை வரும் 10-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ஸ்ரீநகர், லே, அமிர்தரஸ், சண்டிகர் உள்பட 18 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஜம்மு, பதான்கோட், ஜோத்பூர், ஜெய்சால்மர், ஷிம்லா, தரம்சாலா போன்ற விமான நிலையங்களிலும் விமானங்களின் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வழியாகச் செல்லும் 7 சர்வதேச விமானசேவை நிறுவனங்கள் தங்களது பயணங்களை ரத்து செய்துள்ளன. நெதர்லாந்தைச் சேர்ந்த கேஎல்எம் ஏர்லைன்ஸ் நிறுவனம், அடுத்த அறிவிப்பு வரும் வரை பாகிஸ்தான் வான்வெளியை தங்களது விமானங்கள் பயன்படுத்தாது என அறிவித்துள்ளது. அதேபோல் கடந்த 6-ம் திகதி முதல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும், பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்துவதை நிறுத்தி வைத்துள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/மே-10-வரை-விமான-நிலையங்கள்-மூடல்-200-விமான-சேவை-ரத்து/175-356989

கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

2 months ago
மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்! கொழும்பு- கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த மாணவி, தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக, இன்று காலை கொழும்பு கொச்சிக்கடை விவேகானந்தா வீதிக்கு முன்பாக அமைதியான முறையில் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை கொழும்பு கொச்சிக்கடை விவேகானந்தா வீதிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டிருந்த போராட்டம் கொட்டாஞ்சேனை ராஜேஸ்வரி கல்விக்கூடம் வரை முன்னெடுக்கப்படுகின்றது. கொழும்பில் உள்ள பிரபல தமிழ் பாடசாலையொன்றில் தரம் 11 இல் கல்விக் கற்றுவந்த மாணவி ஒருவர் கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7வது மாடியில் இருந்து கீழே பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவி கல்வி கற்றுவந்த பாடசாலையில் கற்பித்த கணித பாட ஆசிரியர் குறித்த மாணவியை பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளதாக பொற்றோர் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக பாடசாலை நிர்வாகத்திடம் முறையிட்ட போதும் பாடசாலை நிர்வாகம் மாணவியின் மீது போலியாக மனநிலை சரியில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து கணிதபாட ஆசிரியரைப் பாதுகாத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனை தொடர்ந்து மாணவிக்கு ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் அவமானம் காரணமாக மாணவி விரக்தியடைந்த நிலையில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். முன்னதாக பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு அளித்திருந்தபோது சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைதுசெய்யப்பட்டு சிறைக்குச் சென்று பின்னர் விடுதலையானார். இதனை தொடர்ந்து மாணவியை கொழும்பில் உள்ள வேறு ஒரு பிரபல மகளிர் பாடசாலைக்கு பெற்றோர் மாற்றியுள்ளனர். இந்த நிலையில் மாணவி பகுதிநேர வகுப்புக்குச் செல்லும் கற்கை நிலையத்தில் ஆசிரியராக இருந்தவரும், மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியரின் நண்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது நண்பரான கணிதபாட ஆசிரியருக்கு எதிராக மாணவி வழக்கிய முறைபாடு தொடர்பாகவும் மாணவியின் நடத்தை தொடர்பாகவும் தனியார் கல்வி நிலைய ஆசிரியர் தவறான தகவலை திட்டமிட்டு பொது வெளியில் பகிரங்கப்படுத்தியுள்ளார். இதனால் மன அழுத்தம் மற்றும் அவமானம் தாங்க முடியாமல் குறித்த மாணவி தாம் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் 7வது மாடியில் இருந்து கீழே பாய்ந்து தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். குறித்த ஆசிரியர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதுடன் இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பும் பாடசாலை நிர்வாகவே ஏற்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்னர். உடனடியாக பொலிஸார் மாணவியின் தற்கொலைக்கு பொறுப்புக் கூற வேண்டிய அனைவரையும் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு உரிய தண்டனைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர் கோருகின்றனர். இந்நிலையில் இன்று கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்லர்கள், சமயத் தலைவர்கள், அரசியல்வாதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1431222

இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு

2 months ago
இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அண்மையில் கைச்சாத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி, வைத்தியர் குணதாச அமரசேகர உள்ளிட்ட குழுவினர் நேற்று (07) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனுவில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அமைச்சரவை பெயரிடப்பட்டுள்ளது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் அண்மையில் கைச்சாத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம், நாட்டின் அரசியலமைப்பிற்கும் சர்வதேச சட்டத்திற்கும் முரணானது என்று மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்கள் குறித்து பொதுமக்களுக்கு இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்றும், இது மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாகும் என்றும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு தீங்கு விளைவித்துள்ளதாகவும், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காமல் கையெழுத்திடும் அரசின் நடவடிக்கை முற்றிலும் சட்டத்திற்கு எதிரானது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதன் ஊடாக தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறும், அந்த ஒப்பந்தங்களை செயல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றில் கோரியுள்ளனர். அத்துடன் அடிப்படை மனித உரிமைகளை மீறியதற்காக பிரதிவாதிகளிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் இழப்பீட்டை வசூலித்து உத்தரவிடுமாறும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. https://www.samakalam.com/இந்தியாவுடன்-செய்து-கொண்/

இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு

2 months ago

இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அண்மையில் கைச்சாத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி, வைத்தியர் குணதாச அமரசேகர உள்ளிட்ட குழுவினர் நேற்று (07) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அமைச்சரவை பெயரிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் அண்மையில் கைச்சாத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம், நாட்டின் அரசியலமைப்பிற்கும் சர்வதேச சட்டத்திற்கும் முரணானது என்று மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்கள் குறித்து பொதுமக்களுக்கு இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்றும், இது மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாகும் என்றும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு தீங்கு விளைவித்துள்ளதாகவும், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காமல் கையெழுத்திடும் அரசின் நடவடிக்கை முற்றிலும் சட்டத்திற்கு எதிரானது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதன் ஊடாக தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறும், அந்த ஒப்பந்தங்களை செயல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றில் கோரியுள்ளனர்.

அத்துடன் அடிப்படை மனித உரிமைகளை மீறியதற்காக பிரதிவாதிகளிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் இழப்பீட்டை வசூலித்து உத்தரவிடுமாறும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

https://www.samakalam.com/இந்தியாவுடன்-செய்து-கொண்/

ஆப்ரேஷன் சிந்தூர்: அதிரடி தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் மரணம்!

2 months ago
ஆப்ரேஷன் சிந்தூர்: பெயருக்கான காரணத்தை வெளியிட்ட இந்தியா! பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) புதன்கிழமை (07) ஒன்பது தளங்களைத் தாக்கி இந்தியா பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலளித்தபோது, அந்தத் திட்டத்திற்கு – ஆப்ரேஷன் சிந்தூர் என்று பெயரிட்டது. சிந்தூர் அல்லது குங்குமம் என்பது திருமணமான இந்துப் பெண்களின் அடையாளமாகும். மேலும் ஏப்ரல் 22 அன்று பஹல்காம் படுகொலையைக் குறிக்கிறது. அதில் புதிதாகத் திருமணமானவர்கள் உட்பட ஆண்கள் தங்கள் மதத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். போர் வீரர்களால் ஒரு சிந்தூர் திலகமும் பெருமையுடன் அணியப்படுகிறது. எல்லை தாண்டிய தாக்குதல்கள் குறித்த முதல் அறிவிப்பில், இந்திய இராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரை காட்சிப்படுத்த ஒரு படத்தைப் பயன்படுத்தியது. துல்லியமான வெடிமருந்துகளைப் பயன்படுத்தி அதிகாலையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள், இராணுவம், கடற்படை மற்றும் இந்திய விமானப்படை (IAF) ஆகிய முப்படைகளால் ஒருங்கிணைக்கப்பட்டு, பாகிஸ்தான் மற்றும் POK இல் உள்ள பயங்கரவாத முகாம்களைத் தாக்கின. “சிறிது நேரத்திற்கு முன்பு, இந்திய ஆயுதப்படைகள் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ என்ற அதிரடி நடவடிக்கையைத் தொடங்கின. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பைத் தாக்கியது. அங்கிருந்துதான் இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு இயக்கப்பட்டன. மொத்தம் ஒன்பது தளங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன என்று இந்திய இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதிகள், பைசரனில் உள்ள புல்வெளியில், இந்து ஆண்களைத் தனிமைப்படுத்தி, மிக அருகில் இருந்து சுட்டுக் கொன்றனர். பஹல்காமில் உள்ள இந்த இடத்திற்கு தேனிலவு பயணிகள் அடிக்கடி வருகிறார்கள். ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் கணவன்களை இழந்த பெண்களை மனதில் கொண்டு, பதிலடி கொடுக்கும் இராணுவ நடவடிக்கைக்கு “ஆபரேஷன் சிந்தூர்” என்று குறியீட்டுப் பெயரை வைத்தது பிரதமர் நரேந்திர மோடிதான் என்று அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் கூறியுள்ளதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹரியானாவைச் சேர்ந்த ஹிமான்ஷி நர்வால், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐஷான்யா திவேதி, குஜராத்தைச் சேர்ந்த ஷிதல் கலாதியா, காஜல்பென் பர்மர், கொல்கத்தாவைச் சேர்ந்த சோஹினி அதிகாரி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரகதி ஜக்டேல், கேரளாவைச் சேர்ந்த ஷீலா ராமச்சந்திரன், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜெனிபர் நதானியேல், ஜெயா மிஸ்ரா ஆகியோரின் கணவர்கள் பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டனர். தாக்குதலின் பின்னர் திருமணமாகி ஆறு நாட்களே ஆன ஹிமான்ஷி நர்வால், தனது கணவர் கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வாலின் உடலுக்கு அருகில் மண்டியிட்டார். அவர்தான் இந்த துயரத்தின் முகமாக மாறினார். சில நாட்களுக்குப் பின்னர், ஹிமான்ஷி தனது கணவருக்கு அஞ்சலி செலுத்தத் தோன்றினார், ஆனால் திருமணமான இந்துப் பெண்களின் நெற்றியில் பிரகாசிக்கும் குங்குமம் இல்லாமல். https://athavannews.com/2025/1431168

ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்

2 months ago
எல்லையில் பதற்றம் – ஐ.பி.எல் போட்டிகளில் மாற்றம்? ஓப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது . இந்த நிலையில், ஐ.பி.எல் போட்டி மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது . நாளை டெல்லி-பஞ்சாப் இடையே தர்மசாலாவில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி மும்பைக்கு மாற்றப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. போட்டியை மாற்றுவது தொடர்பாக பி.சி.சி.ஐ ஆலோசனை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1431182 😂

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

2 months ago
எல்லையில் பதற்றம் – ஐ.பி.எல் போட்டிகளில் மாற்றம்? ஓப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது . இந்த நிலையில், ஐ.பி.எல் போட்டி மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது . நாளை டெல்லி-பஞ்சாப் இடையே தர்மசாலாவில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி மும்பைக்கு மாற்றப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. போட்டியை மாற்றுவது தொடர்பாக பி.சி.சி.ஐ ஆலோசனை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Athavan Newsஎல்லையில் பதற்றம் - ஐ.பி.எல் போட்டிகளில் மாற்றம்?ஓப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது . இந்த நிலையில், ஐ.பி.எல் போட்டி மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது . நாளை டெல்லி-பஞ்சாப் இடையே தர்மசாலாவில் நடைபெறவுள...

புதிய பாப்பரசர் தெரிவு மாநாடு இன்று!

2 months ago
போப் தேர்வு மாநாடு: சிஸ்டைன் தேவாலயத்திலிருந்து வெளியேறிய கரும்புகை! வத்திக்கான நேரப்படி புதன்கிழமை (07) இரவு 9.00 மணியளவில் சிஸ்டைன் தேவாலயத்தின் புகைபோக்கியில் இருந்து கருப்பு புகை வெளியேறியது. போப்பாண்டவர் மாநாட்டில் முதல் சுற்று வாக்களிப்பில் கத்தோலிக்க கார்டினல்கள் புதிய போப்பைத் தேர்ந்தெடுக்கத் தவறிவிட்டனர் என்பதை இது உறுதிப்படுத்தியது. மூடிய கதவுகளுக்குப் பின்னால் கூடும் 133 கார்டினல்கள், போப்பை தேர்வு செய்வதற்காக வரும் நாட்களில் மீண்டும் விவாதங்களைத் தொடங்கவுள்ளனர். சிஸ்டைன் தேவாலயத்திற்குள் ஒரு புனிதமான ஊர்வலத்தைத் தொடர்ந்து, வத்திக்கான் நேரப்படி மாலை 5:45 மணியளவில் முதல் சுற்று வாக்களிப்பு தொடங்குவதற்கு முன்பு, ஒவ்வொரு கார்டினலும் ரகசியக் காப்புப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். (தங்களுக்குத் தெரியவரும் தகவல்களை யாருக்கும் தெரியப்படுத்துவதில்லை என்று பதவியேற்கும்போது செய்துகொள்ளும் பிரமாணம்) வாக்களிப்புகள் பதிவானதும், கவனம் தேவாலயத்தின் சின்னமான புகைபோக்கியின் மீது திரும்பியது. இதன்போது, சிறிது நேரம் ஒரு கடற்பறவை அங்கு அமர்ந்திருந்தது விசேட கவனமாக அமைந்தது. பல மணி நேர காத்திருப்புக்குப் பின்னர், இரவு 9:05 மணிக்கு, புகைபோக்கியில் இருந்து கரும்புகை எழுந்தது. இது செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த 45,000 க்கும் மேற்பட்ட கூட்டத்தினரிடமிருந்து கைதட்டலைத் தூண்டியது. போப்பாண்டவர் மாநாட்டில் முதல் சுற்று வாக்களிப்பில் கத்தோலிக்க கார்டினல்கள் புதிய போப்பைத் தேர்ந்தெடுக்கத் தவறிவிட்டனர் என்பதை இந்த வெளிப்பாடு உறுதிப்படுத்தியது. இந்த மாநாடு வியாழக்கிழமை (இன்று) மீண்டும் தொடங்கும். கடந்த மாதம் 88 வயதில் காலமான போப் பிரான்சிஸுக்குப் பின்னர் புதிய போப் தேர்ந்தெடுக்கப்படும் வரை தொடரும். ஒரு போப் தேர்ந்தெடுக்கப்படும்போது சிஸ்டைன் தேவாலயத்தின் புகைபோக்கியில் இருந்து வெள்ளைப் புகை வெளிப்படும், ஆனால் புதன்கிழமை இது எதிர்பார்க்கப்படவில்லை. நவீன காலத்தில் ஒரு மாநாட்டின் முதல் நாளில் ஒரு போப்பாண்டவர் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை. நவீன போப் மாநாடுகள் பொதுவாக குறுகியவை. 2013 மாநாடு இரண்டு நாட்கள் மட்டுமே நீடித்தது. அதேபோல் 2005 இல் அவரது முன்னோடியான பெனடிக்ட் XVI தேர்ந்தெடுக்கப்பட்டபோதும் அவ்வாறே நீடித்தது. அண்மைய நாட்களில், 1.4 பில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட திருச்சபையை வழிநடத்தும் அடுத்த போப்பாண்டவரிடம் அவர்கள் என்ன எதிர்பார்க்கின்றார்கள் என்பது குறித்து கார்டினல்கள் வெவ்வேறு மதிப்பீடுகளை வழங்கியுள்ளனர். சிலர் பிரான்சிஸின் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் சீர்திருத்தம் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் தொடர்ச்சியைக் கோரியுள்ளனர், மற்றவர்கள் பழைய மரபுகளைத் தழுவ விரும்புவதாகக் கூறியுள்ளனர். பலர் இன்னும் கணிக்கக்கூடிய, அளவிடப்பட்ட போப் பதவியை விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2025/1431209

ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்

2 months ago
உண்மை அடி வலுவா விழுந்திருக்கிறது ... 24மணித்தியாலம் ஆச்சிது இன்னும் இந்தியன் வான்சண்டை பற்றி வாய் திறக்கேல. ஆனால் சீனன் அறிக்கை விட்டிருக்கிறான், 160கிமீ பரப்பளவான வான்வெளியில் நடந்த வான்சண்டையில் மொத்தம் 125 வானூர்திகள் ஈடுபட்டதாம் என்று.

ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்

2 months ago
இந்தியன்… வாயாலை வடை சுடத்தான் லாயக்கு. இப்படி நடக்கும் என்று, கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இருந்த மானமும் கப்பல் ஏறி விட்டது. 😂

ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்

2 months ago
52 இந்தியப் படையினர் கொல்லப்படுள்ளனர் என்றும் இந்தியாவின் ஒர் படைத்தொகுதி தலைமையகம் (Brigade headquaters) மற்றும் சில முன்னணி காவலரண்களை தாம் அழித்துள்ளதாகவும் பாக். கோரியுள்ளது. எனினும் இந்தியா இதுவரை 5 வீரர்களின் பெயர்விரிப்புகளையே வெளியிட்டுள்ளது

நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?

2 months ago
மகிந்த சகோதர்கள் போல ரணிலால் முப்படைகளையும் கட்டுப்படுத்த முடியாது. ரணில் மகிந்த கம்பனி போல விடாமல் யுத்தத்தை நடத்தி முடிக்கும் திறன் அற்றவர். ரணில் தந்திரமான ராஜ தந்திரி, கனவான் அரசியல் வாதி. ஆனால் மகிந்த குடும்பம் போன்ற சண்டியன் இல்லை. சில இராஜ தந்திர நகர்வுகள் மூலம் ஆளை மடக்கியிருக்கலாம். அத்துடன் ரணில் தெற்கின் ஆதரவு அற்றவர் அதனால் தான் தமிழர்களின் வாக்கு இல்லாமல் தோற்றார். யுத்தம் ஆரம்பிப்பதை அந்த நேரத்தில் புலிகளும் விரும்பினார்கள். அவர்களது பலம் பற்றி அவர்களுக்குள்ளேயே ஒரு பெரிய விம்பம் ஏற்றப்படுத்தப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தை என்ன விலை கொடுத்தும் உடனடியாக பிடிப்பதே அவர்களது திட்டம். முகமாலைப் பகுதிகளில் பல ஆயிரம் மாவீரர்களை இதனால் இழந்தார்கள். பல முனைகளில் ஒரே நேரத்தில் சண்டை தொடங்கும் என அவர்கள் நினைத்தேயிருக்கவில்லை. மன்னாரிலே முன் லைனிலே விடக்கூட போராளிகள் இருக்கவில்லை. ஆமி ஒரு ரவை கூட சுடாமல் சில இடங்களில் முன்னேறியது.

கனடிய தேர்தல்: ஒரு போஸ்ட் மோட்டம்

2 months ago
மக்கள் கெட்டிக்காரர்கள் என்று இன்னும் சில காலாண்டுகளில் காபன் டக்ஸ் கார்ணி நிரூபிப்பார். மக்களை விட நீங்கள் மிகவும் கெட்டிக்காரர் என அதிகமுறை இங்கு நிரூபித்திருக்கிறீர்கள்!

ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்

2 months ago
நேற்றிரவு மட்டும் மொத்தம் 8 வண்டுகளை (பல வகை) பாக்கிகள் வீழ்த்தியுள்ளார்கள்: படங்கள் வெளியாகியுள்ளன : ஒரே இரவில்: 5 தாரை வானூர்திகள் 8 வண்டுகள் ... அம்மாடியோவ் ... இந்தியருக்கு மொங்கிற்றாங்கள் 🤣