Aggregator

நிலவில் கால் பதிக்க மீண்டும் போட்டா போட்டி - முந்துவது யார்?

1 month 3 weeks ago
நிலவில் கால் பதிக்க அமெரிக்கா, இந்தியா, சீனா போட்டா போட்டி - முந்துவது யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 பிப்ரவரி 2024, 11:02 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்னும் சில ஆண்டுகளில் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா திட்டமிட்டுள்ளது. 1969 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் காலடி எடுத்து வைத்ததே முதல் முறையாக மனிதர்கள் நிலவில் தரையிறங்கியது. அதற்கு பிறகு, தொடர் அப்பல்லோ திட்டங்களின் மூலமாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி இதுவரை மொத்தம் 12 பேரை நிலவில் தரையிறக்குவதில் வெற்றி பெற்றுள்ளது அமெரிக்கா. அதை தொடர்ந்து ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் நிலவில் தங்களது விண்கலம், லேண்டர்கள் அல்லது ரோவர்களை தரையிறக்குவதில் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் இதில் மனிதர்கள் இடம்பெறவில்லை. இந்நிலையில் மீண்டும் அமெரிக்கா தனது ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் கீழ் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. சீனா மற்றும் இந்தியாவும் இதேபோன்ற திட்டங்களில் பணியாற்றி வருகின்றன. நிலவில் தளம் அமைக்க அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய மூன்று நாடுகளுமே போட்டாபோட்டியில் ஈடுபட்டுள்ளன. இதில் முந்தப் போவது யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1969 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் காலடி எடுத்து வைத்ததே முதல் முறையாக மனிதர்கள் நிலவில் தரையிறங்கியது நிலவுக்கு பயணம் விண்வெளிக்கு செல்ல ராக்கெட் தொழில்நுட்பம் மிகமிக அவசியம். பனிப்போர் காலகட்டத்தில், யார் முதலில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது என்பதில் சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு போட்டித் தொடங்கியது. அந்த போட்டியில் 1961 ஆம் ஆண்டு, சோவியத் யூனியன் யூரி ககாரினை விண்வெளிக்கு அனுப்பி வெற்றி பெற்றது. 'தி எக்கனாமிஸ்ட்' பத்திரிகையின் மூத்த ஆசிரியரும், 'தி மூன் : எ ஹிஸ்டரி ஃபார் தி ஃபியூச்சர்' என்ற புத்தகத்தின் ஆசிரியருமான ஆலிவர் மார்டன், “மனிதர்களை நிலவு அல்லது விண்வெளிக்கு அழைத்துச் செல்வது மிகப்பெரிய சவாலான பணி என்று கூறப்படுகிறது. இது உலக அரங்கில் குறிப்பிட்ட நாட்டின் நம்பகத்தன்மையையும், பலத்தையும் அதிகரிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், சோவியத் ஒன்றியத்தின் வெற்றிக்குப் பிறகு, அமெரிக்கா மீதான அழுத்தம் அதிகரித்தது” என்று கூறுகிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், "சோவியத் வெற்றிக்கு பிறகு அமெரிக்கா சோவியத் ஒன்றியத்தின் சாதனையை விட வேறு ஒரு சிறந்த சாதனையை படைக்க விரும்பியது." இதை விட பெரிய சாதனையாக நிலவுக்கு ஒரு மனிதனை அனுப்புவதே கருதப்பட்டது. ஆனால், அதற்கு அதிக சக்தி வாய்ந்த ராக்கெட் தேவைப்பட்டது. இருந்தாலும் நிலவில் கால் பதிப்பதன் மூலம், உலக அரங்கில் தனது முத்திரையை பதிக்க விரும்பியது அமெரிக்கா” என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1961 ஆம் ஆண்டில், சோவியத் யூனியன் யூரி ககாரினை விண்வெளிக்கு அனுப்பி வெற்றி பெற்றது. “அதனை தொடர்ந்து 1969 ஆம் ஆண்டு, அப்பலோ 11 விண்கலம் மூலம் இரண்டு விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்கி மெரிக்கா வெற்றி பெற்றது. அதன் பிறகு மற்ற அப்பல்லோ பயணங்கள் மூலம் மேலும் பத்து பேரை நிலவுக்கு அனுப்புவதில் வெற்றி பெற்றது. இது பெரிய அறிவியல் சாதனை மட்டுமல்ல, அமெரிக்காவின் அரசியல் சாதனையும் கூட. நிலவின் மேற்பரப்பில் இரண்டு மனிதர்கள் நடந்து செல்லும் படங்கள் உலகம் முழுவதும் பரவியது. ஆனால் அதைவிட மற்றொரு படம் மக்களை மிகவும் கவர்ந்தது.” மேலும் பேசிய ஆலிவர் மார்டன், "நிச்சயமாக நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் இருக்கும் படங்கள் உலகம் முழுவதும் பரவின. ஆனால், அதைவிட நிலவிலிருந்து பூமியை எடுக்கப்பட்ட படம்தான் உலக மக்களின் மனதில் இடம்பிடித்தது. உயிர்கள் வாழும் கிரகமான பூமியின் படத்தை மக்கள் பார்த்து திகைத்து போய் நின்றது மட்டுமின்றி, அவற்றை தங்களது வீடுகளில் போஸ்டர்களாக ஒட்டிக் கொண்டனர்” என்று குறிப்பிடுகிறார். அதற்கு பிறகு சோவியத் யூனியனால் நிலவுக்கு மனிதனை அனுப்பவே முடியவில்லை. ஆனால் 1970களில் மனிதர்கள் விண்வெளிக்கு பயணிப்பதன் முக்கியத்துவம் ஏன் குறைந்தது? அதற்கு காரணம் இதில் அமெரிக்கா ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டதே என்று ஆலிவர் மார்டன் நம்புகிறார். அது ஏற்கனவே ஒன்றுக்கும் அதிகமான முறை மனிதர்களை ஆய்வுக்காக விண்வெளிக்காக அனுப்பிவிட்டது. இந்நிலையில் அதன் மீதான ஆர்வம் குறைந்து, அந்த திட்டங்களையே அமெரிக்கா நிறுத்திவிட்டது. இந்நிலையில் மீண்டும் இந்த திட்டங்கள் இப்போது உயிர் பெற்றுள்ளன. நிலவில் மனிதனை தரையிறக்கும் முயற்சியை மீண்டும் முன்னெடுத்துள்ளது அமெரிக்கா. ஆனால், மற்ற நாடுகளுக்கு முன் அதை செய்து முடிப்பது கடினம்தான். இந்த முறை போட்டியும் கடுமையாக உள்ளது என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவும் சீனாவும் அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பத் தயாராகி வருகின்றனர். நிலவுக்கு செல்வதற்கான போட்டி அமெரிக்காவிற்கும், சீனாவுக்கும் இடையிலான உறவு கடந்த சில ஆண்டுகளாகவே மோசமான நிலையில் உள்ளது. ஆனால், இந்த முறை இரு நாடுகளும் தங்களது போட்டியை பூமிக்கு அப்பால் கொண்டு சென்றுள்ளனர். தொழில்நுட்பம் சார்ந்து எழுதிவரும் இணையதளமான ஆர்ஸ் டெக்னிகாவின் விண்வெளி விவகாரங்களுக்கான மூத்த ஆசிரியர் எரிக் பர்கர் கூறுகையில், “அமெரிக்காவும் சீனாவும் அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பத் தயாராகி வருகின்றனர். இதற்காக இருவரும் சர்வதேச கூட்டாளிகளுடன் தங்களது ஒத்துழைப்பை தொடங்கியுள்ளனர். இது நேரடியாக அரசியலுடன் தொடர்புடையது என்கிறார்.” "நிலவின் மேற்பரப்பில் குறைந்த ஈர்ப்பு விசையே உள்ளது என்பதாலும், அது பூமிக்கு மிக அருகில் இருக்கிறது என்பதாலும் அது நடைமுறை சாத்தியமான மற்றும் சிறந்த இலக்காக பார்க்கப்படுகிறது. செவ்வாய் கிரகத்தை அடைய ஆறு முதல் எட்டு மாதங்கள் ஆகும். ஆனால் நிலவுக்கோ வெறும் மூன்று நாட்கள் போதும். எனவே நிச்சயமாக நிலவுதான் அடுத்த இலக்காக இருக்கும்.” நிலவை அடைவதற்கான இந்த போட்டி குறித்து பேசுவதற்கு முன், அதிலுள்ள மிகப்பெரிய தொழில்நுட்ப சிக்கல்களைப் குறித்து பேசுவது அவசியம். இந்த பயணத்தில் ராக்கெட்டை விண்வெளிக்கு எடுத்துச் செல்வதும், விண்வெளி வீரர்களை கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பதும், நிலவின் மேற்பரப்பில் தரையிறங்குவதும் மிகப்பெரிய சவாலாகும். அதே ராக்கெட்டை மீண்டும் பூமிக்கு கொண்டு வர, நிலவில் இருந்து ஏவுவது இன்னும் கடினம் என்கிறார் எரிக். "பூமியில் இருந்து ராக்கெட்டை ஏவும்போது அதை கண்காணிக்கவும், கவுண்ட் டவுன் தொடங்கவும், எரிபொருள் இயக்கத்தை தொடங்கவும், ஏதேனும் குறைபாடு கண்டறியப்பட்டால் உடனே செயல்பாட்டை நிறுத்தவும் வசதிகள் உள்ளன. ஆனால், நிலவில் இது எல்லாமே தானியங்கி முறையில் தான் நடக்கும். மேலும், ராக்கெட் பூமியின் சுற்று வட்டப்பாதையில் நுழையும்போது அதன் வேகம் அதிகமாக இருப்பதால் வெளிப்படும் வெப்பத்திலிருந்து ராக்கெட்டை பாதுகாக்க வலுவான வெப்ப கவசம் தேவைப்படுகிறது.” என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த போட்டியில் நிலவின் தென் துருவத்தின் மீது தான் அதிக ஆர்வம் உள்ளது. இந்த சிரமங்களைக் கருத்தில் கொண்டு, விண்வெளி வீரர்களின் உயிரையும், மக்களின் பில்லியன்கணக்கான டாலர்களையும் மீண்டும் பணயம் வைக்க வேண்டிய அவசியம் உள்ளதா? ஒருவேளை இப்போது இந்த பந்தயத்தின் வடிவம் மாறியிருக்கலாம். ஆனால் இப்போது கேள்வி என்னவென்றால், முதலில் நிலவுக்கு மனிதர்களை அழைத்துச் செல்வது யார் என்பது அல்ல, மாறாக சந்திரனில் மனிதன் வாழக்கூடிய மற்றும் அதைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய தொழில்நுட்பத்தை யார் முதலில் கண்டுபிடிப்பது?, அதாவது யார் முதலில் நிலவில் மனிதக் குடியேற்றத்தை ஏற்படுத்தப் போகிறார்கள் என்பதே இந்த போட்டி. இதுகுறித்து எரிக் பர்கர் கூறுகையில், இந்த போட்டியில் நிலவின் தென் துருவத்தின் மீது தான் அதிக ஆர்வம் உள்ளது, ஏனெனில் அந்த பகுதியில் உள்ள பள்ளங்கள் சூரிய ஒளி படாமல் எப்போதும் இருளில் இருக்கும். அங்கு நீர் பனிக்கட்டி வடிவில் உறைந்து இருக்கலாம் என விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். இது ஒரு மிக முக்கியமான வளமாக இருக்கலாம். நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் தொலைவு கொண்ட இந்தப் பகுதியில் ஆராய்ச்சி மையத்தை நிறுவ ஆய்வாளர்கள் விரும்புகிறார்கள். இது ஒரு சிறிய பகுதி என்பதால் அதன் மீதான கட்டுப்பாடு யார் என்பதில் மோதல் ஏற்படுமா? தற்போதைய கேள்வியே அதன் தொழில்நுட்ப அல்லது அரசியல் பலன் என்ன என்பதுதான். இந்த போட்டியே மக்கள் மனதில் யார் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார்கள் என்பதேயாகும். அதில் அமெரிக்காவின் பிரதான போட்டியாளராக சீனா இருக்கும் என்பதே எரிக் பர்கரின் கருத்து. எரிக் பர்கரின் கூற்றுப்படி, கடந்த இருபது ஆண்டுகளில் சீனா இதில் நிறைய முன்னேற்றத்தை கண்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையம் போன்ற சிறிய மாதிரியை தயார் செய்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் தனது பயணத்தின் போது, சீனா செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்தது மட்டுமல்லாமல், அதன் மேற்பரப்பில் தரையிறங்குவதில் வெற்றியும் பெற்றது. இது பெரிய சாதனை. 2030 ஆம் ஆண்டுக்குள் நிலவில் தனது ஆய்வுத்தளத்தை உருவாக்க சீனா விரும்புகிறது. ஆனால் அமெரிக்கா இதே விஷயத்தை 2028 ஆம் ஆண்டிற்குள் செய்ய விரும்புகிறது. ஆனால் அதன் திட்டம் ஏற்கனவே தாமதமாகிவிட்டது. இதற்காக அந்நாடு கோடீஸ்வரர் எலான் மஸ்க் மற்றும் அவரது 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தை சார்ந்துள்ளது. நாசாவிற்காக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் ஸ்டார்ஷிப் விண்கலம் இல்லாமல் இது சாத்தியமில்லை என்று கூறுகிறார் எரிக் பெர்கர். விண்வெளி ஆய்வு பணிகளுக்காக அமெரிக்காவும், சீனாவும் தனியார் நிறுவனங்களோடு இணைந்து செயல்பட்டு வருகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நாசாவின் 'ஆர்டெமிஸ் மிஷன்' திட்டத்திற்காக விண்கலத்தை தயாரிக்கும் பொறுப்பு எலான் மஸ்க் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிலவில் வணிகத்திற்கான சாத்தியங்கள் நிலவில் மனிதர்களை இறக்கி, அங்கேயே சில காலம் தங்கி ஆராய்ச்சி செய்ய பல வகையான தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன. இதில் பல நாடுகள் ஆர்வமாக உள்ளன. நிலா குறித்த ஆராய்ச்சி மற்றும் அங்குள்ள வளங்களை அரசாங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்துவதற்கு என்னென்னெ விதிகள் மற்றும் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது. இதுகுறித்து இங்கிலாந்தின் வடக்கு அம்ப்ரியா பல்கலைக்கழகத்தின் விண்வெளி கொள்கை மற்றும் ஒழுங்குமுறை பேராசிரியர் கிறிஸ்டோபர் நியூமன் கூறுகையில், "உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் அமெரிக்காவும் அதன் ஆர்ட்டெமிஸ் மிஷனும் இந்த திட்டத்தை தலைமையேற்று நடத்தும் என்று நம்புகின்றன" என்கிறார். "பல நாடுகளும், நிறுவனங்களும் நிலவில் தங்களது நிலைகளை உருவாக்கி, அங்கு கிடைக்கும் வளங்களைச் சுரண்ட ஆசைப்படுவதனாலேயே அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. இதே காரணம்தான் சீனாவுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்கள் மற்றும் நாடுகளுக்கும் உள்ளது. நிலவில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் அதிகம் பணம் சம்பாதிக்க முடியும்.” பத்து ஆண்டுகளுக்கு முன்பு தனது விண்வெளித் துறையைத் தனியார் நிறுவனங்களுக்குத் திறந்துவிட்டதன் மூலம் சீனா ஓரளவு வெற்றி பெற்றது. ஆனால் இந்த துறையில் இன்னமும் மிக முக்கியமான நபராக எலான் மஸ்க் இருந்து வருகிறார். நாசாவின் 'ஆர்டெமிஸ் மிஷன்' திட்டத்திற்காக விண்கலத்தை தயாரிக்கும் பொறுப்பு அவரது நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் லட்சியம் மிகப் பெரியது என்று கூறுகிறார் கிறிஸ்டோபர் நியூமன். மேலும் "இந்த விண்கலம் தயாரிப்பு திட்டத்தில் ஈடுபட்டிருப்பதன் மூலம் மனித எதிர்காலத்தின் திசையை நிர்ணயிக்கும் பணியில் தான் ஈடுபட்டுள்ளதாக காட்ட விரும்புகிறார் எலான் மஸ்க்” என்கிறார் கிறிஸ்டோபர் நியூமன். “வேற்று கிரகங்களில் மனித குடியிருப்புகளை நிறுவுவதில் எலான் மஸ்க்கின் விண்கலம் முக்கிய பங்கு வகிக்கும். அவர்களின் லட்சியம் வெறும் லாபமீட்டுவதையும் தாண்டி மிகப்பெரியது." விண்வெளி ஆய்வுப் பணிகளில் தனியார் நிறுவனங்களை இணைத்துக்கொள்வது பல கேள்விகளை எழுப்புகிறது. இதுகுறித்து பேசிய கிறிஸ்டோபர் நியூமன் , நாம் மற்ற கிரகங்களுக்குச் செல்ல விரும்பினால் அல்லது அங்கு மனிதர்களைக் குடியேற்ற விரும்பினால், அங்கு என்ன விதிகள் இருக்கும்?, குற்றங்கள் எவ்வாறு வரையறுக்கப்படும்?, தண்டனைகள் எப்படி வழங்கப்படும்?. இந்த விதிகளின் எல்லைக்குள் தனியார் நிறுவனங்களை வைத்திருப்பது சவாலானது. இத்தகைய சூழலில், விண்வெளிப் பயணங்களில் தனியார் நிறுவனங்களைச் சார்ந்திருப்பது அரசாங்கங்களுக்கு கவலையளிக்கும் விஷயம் என்பது நிரூபிக்கப்படலாம்” என்கிறார். "ஸ்பேஸ்எக்ஸின் பிரச்னையும் இதுதான்" என்கிறார் கிறிஸ்டோபர் நியூமன். இதன் வழியாக எலான் மஸ்க் மிகவும் சக்தி வாய்ந்த நபராக மாறுவார். அதற்கு பின் அவரைக் கட்டுப்படுத்துவது கடினம். நாம் தற்போது வாழ்ந்து வரும் பூமியில் அழிவு ஏற்பட்டால் மற்ற கிரகங்களில் குடியேறி விடலாம் என்று, அங்கெல்லாம் மனித குடியேற்றங்களை உருவாக்க வேண்டும் என்பது பலரின் ஆசையாக இருக்கிறது. அவர்களுள் ஒருவர்தான் எலான் மஸ்க். ஆனால், மற்ற கிரகங்களில் குடியேற்றங்களை நிறுவுவதற்கு முன்பு மனிதர்களை நிலவில் சில காலம் வைத்திருப்பதன் மூலம் எதிர்காலத்தில் என்ன பலன்கள் கிடைக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "இந்தியாவின் சந்திரயான் 3 திட்டம் நிலவின் தென் துருவத்திலிருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் தரையிறங்கியது. அதன் மூலம் சந்திரனில் சல்பர், அலுமினியம் மற்றும் பிற தனிமங்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது" நிலவில் நீர் இருக்கிறதா? இல்லையா? அரிசோனா மாகாண பல்கலைக்கழகத்தில் உள்ள தண்டர்பேர்ட் ஸ்கூல் ஆஃப் குளோபல் மேனேஜ்மென்ட்டின் பேராசிரியரும், விண்வெளிக் கொள்கை நிபுணருமான நம்ரதா கோஸ்வாமி பேசுகையில், “ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையின் குறிக்கோளே நிலவில் முகாமை உருவாக்குவதுதான். இதன் மூலம் நிலவில் உள்ள வளங்களைப் பயன்படுத்தலாம். மேலும் செவ்வாய் கிரகத்தை அடையும் திறனையும் அதிகரிக்க முடியும். சமீபத்தில், நிலவில் இரும்பு, டைட்டானியம் மற்றும் பிற பயனுள்ள கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டது.” "இந்தியாவின் சந்திரயான் 3 திட்டம் நிலவின் தென் துருவத்திலிருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் தரையிறங்கியது. அதன் மூலம் சந்திரனில் சல்பர், அலுமினியம் மற்றும் பிற தனிமங்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. ஆனால் பனிஉறைந்த நீர் இருப்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. 2026 இல், இந்தியா மற்றும் ஜப்பான் இணைந்து நிலவில் உள்ள பனி உறைந்த நீரைக் கண்டறிய நிலவுக்கு மற்றொரு பயணத்தை தொடங்க உள்ளன. நிலவில் மனிதர்கள் குடியேறுவதற்கு பனியாக உறைந்துள்ள நீர் அவசியம். ஏனெனில் அதில் இருந்து ஆக்ஸிஜனை உருவாக்க முடியும்.” விண்வெளியில் மேலும் ஆய்வு செய்வதற்கு நிலவை ஒரு தளமாகப் பயன்படுத்தலாம் என்பதை இவை சுட்டிக்காட்டுகின்றன. “நிலாவை தளமாக்குவதன் மூலம் அங்கிருந்து செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை எளிதில் அனுப்ப முடியும்” என நம்புகிறார் நம்ரதா கோஸ்வாமி. 2036ம் ஆண்டுக்குள் நிலவில் தளம் அமைத்து விட வேண்டும் என சீனா விரும்புகிறது. இந்தியாவும் இதே திட்டத்தை அறிவித்துள்ளது. வெற்றி கிடைத்தால், நிலவின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி அங்கிருந்து ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த முடியும். பூமியில் இருந்து ராக்கெட்டை ஏவுவதற்கான செலவு மிகவும் அதிகம். காரணம் நிலவின் ஈர்ப்பு விசையில் இருந்து வெளியேறுவதை விட, பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து வெளியேற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது. அதனால்தான், பல நாடுகளும் நிலவை முக்கியத்துவம் வாய்ந்த வளமாக பார்க்கின்றன. ஆனால் இது தவிர, எதிர்காலத்தில் நிலவால் கிடைக்கும் நன்மைகள் ஏதேனும் உண்டா? உதாரணமாக, நிலவின் சில பகுதிகள் எப்போதும் சூரிய ஒளியில் இருக்கும். ஆனால், அங்கு மேகங்களோ அல்லது வளிமண்டலமோ இருக்காது. எனவே நிலவின் அந்தப்பகுதியை சூரிய சக்தியை பயன்படுத்தி ஆற்றல் உற்பத்தி செய்ய பயன்படுத்த முடியும். இதுகுறித்து நம்ரதா கோஸ்வாமி கூறுகையில், "நிலவில் சூரிய சக்தியை உற்பத்தி செய்து, மைக்ரோவேவ் மூலம் குறைந்த சுற்றுப்பாதையில் பெரிய செயற்கைக்கோள்கள் வழியாக பூமிக்கு அனுப்ப முடியும்" என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பூமியில் உள்ள புதைபடிவ எரிபொருள்கள் இன்னும் சில காலத்திற்குப் பிறகு தீர்ந்துவிடும். அதுபோன்ற சூழலில், விண்வெளியில் காணப்படும் சுத்தமான சூரிய ஆற்றல் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். நிலவில் கால் பதிக்க அமெரிக்கா, இந்தியா, சீனா போட்டி - முந்துவது யார்? பூமியில் இரவு நேரம் இருக்கிறது, அதே போல் இங்கு வானிலையில் ஏற்படும் மாற்றங்கள் சூரிய சக்தி உற்பத்தியை பாதிக்கிறது. ஆனால் விண்வெளியில் 24 மணி நேரமும் சூரிய சக்தியை உருவாக்க முடியும். பூமியில் உள்ள புதைபடிவ எரிபொருள்கள் இன்னும் சில காலத்திற்குப் பிறகு தீர்ந்துவிடும். அதுபோன்ற சூழலில், விண்வெளியில் காணப்படும் சுத்தமான சூரிய ஆற்றல் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். தற்போது இங்கு எழும் கேள்வி என்னவென்றால், யார் இந்த வளங்களை, எந்த அளவு பயன்படுத்த முடியும்? 1967 விண்வெளி ஒப்பந்தத்தின் படி, எந்த நாடும் விண்வெளியில் அதிகாரத்தை செலுத்த முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவோ, சீனாவோ நிலவின் இருண்ட பகுதிக்கு சென்று அங்கு குடியிருப்புகளை ஏற்படுத்தினாலும் கூட, அதை தங்கள் பகுதியாக உரிமைகோர முடியாது. ஆனால் யதார்த்தம் இதிலிருந்து வேறுபட்டிருக்கலாம். நிலவின் வளங்களை சமமாக பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கான எந்த சட்ட அமைப்பும் தற்போது இல்லை என்றும், முதலில் அங்கு சென்றடையும் நாடுகளே இதன் மூலம் பயனடையும் என்பதே கவலைக்குரிய விஷயம் என்றும் நம்ரதா கோஸ்வாமி கூறுகிறார். இந்நிலையில் அடுத்த முறை நிலவில் யார் முதலில் காலடி வைப்பது என்பது தற்போதைய கேள்வி? ஆனால், இந்த காலகட்டத்தில் நிலவை அடைவது என்பது விஞ்ஞான ரீதியிலான சாதனைக்கானது மட்டுமல்ல, அதை தாண்டி நிலவில் இருந்து சூரிய சக்தியைப் பெறவும், அங்கு ஒரு தளத்தை உருவாக்குவதன் மூலம் மற்ற கிரகங்களுக்கு ஆய்வு பணிகளுக்கு செல்லவும் வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும். தற்போதைய நிலவரத்தை பொறுத்தவரை 2028ல் அமெரிக்கா மீண்டும் நிலவில் காலடி எடுத்து வைக்கும் என தெரிகிறது. இரண்டு வருடங்கள் கழித்து சீனாவும் பத்து வருடங்கள் கழித்து இந்தியாவும் நிலவில் காலடி வைக்கும். https://www.bbc.com/tamil/articles/crg4y1jjl3xo

அதிகவெப்ப நிலை தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்!

1 month 3 weeks ago
Published By: VISHNU 26 FEB, 2024 | 06:21 PM அதிக வெப்பநிலை காரணமாக ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து பாடசாலை மாணவர்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான ஆலோசனைகளை குறிப்பிட்டு கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை குறித்து அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் தெரியபடுத்துமாறு கல்வி அமைச்சு ,அனைத்து மாகாணங்களின் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளது. இந்த அறிவித்தலில் மாணவர்களுக்கான விசேட குறிப்பிடுவதாவது , 1. கறுப்பு நிற ஆடைகளை அணிவதை தவிர்க்கவும் 2. தொப்பி அணிந்து அல்லது குடையைப் பிடித்தவாறு வெயில் செல்லுங்கள் 3. வீட்டிலிருந்து செல்லும் போது சுத்தமான குடிநீரை எடுத்து செல்லவும் 4. அதிகளவில் தண்ணீர் அல்லது இளநீர் அருந்தவும் 5. அதின வெப்பநிலை காரணமாக ஏதேனும் நோய் அறிகுறிகள் அல்லது ஒவ்வாமை ஏற்பட்டால் பாடசாலை ஆசிரியர்கள் அல்லது பெற்றோர்களிடம் தெரிவிக்கவும் 6. உடல் சூட்டை குறைக்க தேவையானவற்றைக் கடைப்பிடிக்கவும் 7. தேவையற்ற சந்தர்ப்பங்களில் டையை இறுக்கமாக கட்டிக் கொள்வதனை தவிர்க்கவும் https://www.virakesari.lk/article/177373

அதிகவெப்ப நிலை தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்!

1 month 3 weeks ago

Published By: VISHNU    26 FEB, 2024 | 06:21 PM

image

அதிக வெப்பநிலை காரணமாக ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து பாடசாலை மாணவர்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான ஆலோசனைகளை குறிப்பிட்டு கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கை குறித்து அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் தெரியபடுத்துமாறு கல்வி அமைச்சு ,அனைத்து மாகாணங்களின் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளது.

இந்த அறிவித்தலில் மாணவர்களுக்கான விசேட  குறிப்பிடுவதாவது ,

1. கறுப்பு நிற ஆடைகளை அணிவதை தவிர்க்கவும் 

2. தொப்பி அணிந்து அல்லது குடையைப் பிடித்தவாறு வெயில் செல்லுங்கள்

3. வீட்டிலிருந்து செல்லும் போது சுத்தமான குடிநீரை எடுத்து செல்லவும்

4. அதிகளவில் தண்ணீர் அல்லது இளநீர் அருந்தவும்

5. அதின வெப்பநிலை காரணமாக ஏதேனும் நோய் அறிகுறிகள் அல்லது ஒவ்வாமை ஏற்பட்டால் பாடசாலை ஆசிரியர்கள் அல்லது பெற்றோர்களிடம் தெரிவிக்கவும்

6. உடல் சூட்டை குறைக்க தேவையானவற்றைக் கடைப்பிடிக்கவும்

7. தேவையற்ற சந்தர்ப்பங்களில்  டையை இறுக்கமாக கட்டிக் கொள்வதனை தவிர்க்கவும்

https://www.virakesari.lk/article/177373

யாழ். மத்திய கல்லூரிக்கு பெண் அதிபர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

1 month 3 weeks ago
யாழ்ப்பாணத்தில் போலி கெளரவ கலாநிதி பட்டங்களை காசுக்கு விற்கும் திருபணியை ஒட்டுக்குழு மனிதர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்து இருந்தார் இந்த மூன்றாம் தர கோமாளி மனிதர் யாழ்ப்பாண மத்திய கல்லூரி அதிபராக கல்வி அமைச்சினால் நேர்முக தேர்வு மூலம் நியமிக்கப்பட்டுள்ள அதிபரை பதவி ஏற்க விடாமல் ஒரு வாரமாக தடுத்து வருகின்றார் கல்வி அமைச்சின் விதிகளின் படி யாழ் மத்திய கல்லூரிக்கு அதிபர் தரம் 1 ஐ சேர்ந்தவர் மட்டுமே நியமிக்க முடியும் என்கிற விதிகளை மீறி தன் விசுவாசி ஒருவரை பதவிக்கு கொண்டு வர குழப்பங்களை செய்கின்றார் பெண் அதிபராக முடியாது என்று குழப்பங்களை தொடங்கியவர் இப்போது சாதி ரீதியாகவும் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றார் மறுபுறம் மகாஜனா கல்லூரி இடமாற்றங்களை தடுத்து யாழ்ப்பாண மாவட்ட இடமாற்ற முறைமைகளை முழுமையாக சீரழித்து வருகின்றார் அரச விதிமுறைகளுக்கு மாறாக பள்ளிக்கூடங்களுக்கு போகாத நபர்களை தொண்டராசிரியர்களாக நியமிக்க முயற்சித்து வருகின்றார் பாடசாலைகளுக்கான வள பங்கீட்டில் தலையிடுகின்றார்.இதன் மூலம் கல்வி அதிகாரிகளுக்கு நெருக்கடி தருகின்றார். மேற்படி கோமாளித்தனங்களால் முன்னணி பாடசாலையான வேம்படி பெண்கள் பாடசாலை முதல் கிராமிய பாடசாலைகள் வரை சீரழிந்து வருகின்றது இது போதாதென்று யாழ்ப்பாண பல்கலை கழக பேரவைக்கு தனது அல்லக்கைகளை நியமித்து குழப்பங்களை ஏற்படுத்துகின்றார் அரசியல் அதிகாரமும் இராணுவ புலனாய்வு பிரிவும் தன்னோடு இருப்பதால் படிப்பறிவில்லாத இந்த மனிதர் தான் நினைத்தையெல்லாம் செய்ய முயற்ச்க்கின்றார் போலி பட்டங்களை வழங்கும் முகவரான ஒட்டுக்குழு இந்த மனிதருக்கு தான் செய்வது குற்றம் என்பது கூட தெரியவில்லை https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0AvrFzon9eJtDLV6PJAKCvdtwYPDZejaNoCu1bkr9Dt4tRXBc47BpNEgBrMQCBfDpl&id=100057588638936

குஜராத்தில் கிடைத்தவை மனித வரலாற்றை மாற்றும் பொக்கிஷங்களா?

1 month 3 weeks ago
குஜராத்தில் தங்கத்தை தேடி தோண்டியபோது கிடைத்தவை, மனித வரலாற்றை மாற்றும் பொக்கிஷங்களா? பட மூலாதாரம்,PRASHANT GUPTA படக்குறிப்பு, லோத்ரானி பகுதியில் ஹரப்பா நாகரிக காலத்தை சேர்ந்த தொன்ம எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளது. 26 பிப்ரவரி 2024, 02:39 GMT குஜராத் மாநிலம் கட்ச் நகரின் தோலாவிராவிலிருந்து 51 கிமீ தொலைவில் உள்ள லோத்ரானி பகுதியில் ஹரப்பா நாகரிக காலத்தை சேர்ந்த தொன்ம எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளது. தோலாவிராவில் கிடைத்த புதைபடிவங்களைப் போன்றே இங்கும் கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சிந்து சமவெளி பண்பாட்டின் முக்கிய நகரங்களாகக் கருதப்படும் ஆமதாபாத்தின் லோத்தல் மற்றும் கட்சின் தோலாவிரா ஆகியவை, தற்போது குஜராத்தின் உலகளாவிய அடையாளங்களாக மாறியுள்ளன. பேராசிரியர் டாமியன் ராபின்சன் வழிகாட்டுதலின் படி, ஆய்வாளர் அஜய் யாதவ், லோத்ரானி பகுதியில் ஆய்வு செய்து இந்த புதைபடிவங்களைக் கண்டுபிடித்துள்ளார். அவர்கள் இருவரும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தொல்லியல் அமைப்புடன் இணைந்து பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த பகுதியின் உள்ளூர்வாசிகள் தங்கத்தை தேடும் முயற்சியில் இந்த இடத்தை தோண்டும்போது, இந்த புதைபடிவங்களை கண்டுபிடித்ததாக தெரிவிக்கிறார் அவர். அவற்றை முதற்கட்டமாக ஆய்வு செய்ததில் இந்த படிமங்கள் ஹரப்பா காலத்தைச் சேர்ந்தவை என்பதை அவர் உணர்ந்துள்ளார். அஜய் யாதவின் கூற்றுப்படி, தோலாவிராவில் கிடைத்த பெரிய அளவிலான ஹரப்பா மண்பாண்டங்களை போலவே இங்கும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஹரப்பா நாகரீகத்துடன் ஒப்பிடுகையில், இந்த குடியேற்றம் மிகவும் முதிர்ச்சியடைந்ததாக தெரிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த இடத்தை விரிவாக ஆய்வு செய்வதன் மூலம் மேலும் பல உண்மைகளை கண்டறிய முடியும் என்று கூறப்படுகிறது. பட மூலாதாரம்,PRASHANT GUPTA படக்குறிப்பு, இதற்கு முன்பு ஏற்கனவே இந்த பகுதியில் ஹரப்பாவை சேர்ந்த மூன்று குடியேற்ற பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது என்ன? ஆய்வாளர்கள் குழு கட்சின் காதிர் மற்றும் பெல்லாபெட் பகுதிகளில் பல இடங்களை ஆராய்ந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில், லோத்ராணிக்கும் ராசா-ஜி கர்தாவுக்கும் இடையே தோலாவிராவிலிருந்து கிழக்கே 51 கிலோமீட்டர் தொலைவில் ஹரப்பா காலத்து குடியேற்றம் உள்ளது என்பதை தெரிந்துகொண்டார் அஜய். இதற்கு முன்பு ஏற்கெனவே இந்த பகுதியில் ஹரப்பாவை சேர்ந்த மூன்று குடியேற்ற பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு பேலியோலித்திக் காலத்தை சேர்ந்தவை. இதில் கமானியாவில் உள்ள டிம்பி-2, சயாகானில் உள்ள வந்த் மற்றும் ஜடாவாடாவிற்கு அருகிலுள்ள மோரூவின் ஹரப்பா தொல்பொருள் ஆய்வுத்தளங்கள் ஆகியவை அடங்கும். இந்த பகுதிகளில் பல தசாப்தங்களாகவே ஏராளமான ஆய்வுகள் நடைபெற்று வரும் போதிலும் கூட, எதையும் உறுதியாக கண்டறியமுடியவில்லை. இந்நிலையில் மோலோதரில் நிறைய மண்பாண்டங்கள், டெரகோட்டா பீப்பாய்கள் மற்றும் புதைகுழிகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, உறுதியான குடியிருப்புகள் (ஹரப்பா காலத்தைச் சேர்ந்தவை என்று நம்பப்படுகிறது), துளையிடப்பட்ட ஜாடிகள், மண்பாண்டங்கள் ஆகியவை இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு காணப்படும் குடியிருப்புகளின் சுவர்கள் சராசரியாக 3.3 மீட்டர் தடிமன் கொண்டவை. வடமேற்கு திசையில் சராசரியாக 10*10 மீட்டர் அளவுள்ள அறைகளைக் கொண்டிருக்கும் ஒரு கிணறும் உள்ளது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதைபடிவங்கள் தோலாவிராவைப் போலவே இருப்பதால் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. பட மூலாதாரம்,PRASHANT GUPTA படக்குறிப்பு, பல ஆண்டுகளாக, இந்திய தொல்லியல் துறை, கேரள பல்கலைக்கழகம், கட்ச் பல்கலைக்கழகம் மற்றும் பிற நிறுவனங்கள் லோத்ரானியில் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன கேள்வி எழுப்பும் ஆய்வாளர்கள் இந்நிலையில் இந்த கண்டுபிடிப்புகள் குறித்து பல ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஸ்பெயினில் உள்ள கேட்டலான் இன்ஸ்டிடியூட் ஆஃப் கிளாசிக்கல் ஆர்க்கியாலஜியின் ஆராய்ச்சியாளர் பிரான்சிசி. சி , புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல் தவறானது என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவை ஏற்கெனவே ஆய்வில் இருப்பவைதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல ஆண்டுகளாக, இந்திய தொல்லியல் துறை, கேரள பல்கலைக்கழகம், கட்ச் பல்கலைக்கழகம் மற்றும் பிற நிறுவனங்கள் லோத்ரானியில் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த கண்டுபிடிப்பு குறித்து இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. இது தொடர்பாக இந்திய தொல்லியல் துறையின் வதோதரா வட்ட கண்காணிப்பு தொல்பொருள் ஆய்வாளர் ஏ.எஸ்.வி.சுப்ரமணியத்தை தொடர்பு கொள்ள பிபிசி குஜராத்தி பலமுறை முயற்சித்தது. எனினும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. பட மூலாதாரம்,K AMARNATH RAMAKRISHNAN / FACEBOOK படக்குறிப்பு, "குஜராத்தில் இதற்கு முன்பே ஏராளமான தொல்பொருள் ஆய்வுத்தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன" என்று கூறுகிறார் தொல்பொருள் ஆய்வாளர்அமர்நாத் ராமகிருஷ்ணன் ஆய்வாளர்கள் கூறுவது என்ன? குஜராத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைபடிவங்கள் குறித்து தொல்பொருள் ஆய்வறிஞரான அமர்நாத் ராமகிருஷ்ணனிடம் பேசினோம். குஜராத்தில் இதற்கு முன்பே ஏராளமான தொல்பொருள் ஆய்வுத்தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று கூறும் அவர், இந்த பகுதி கட்ச் கடல்பகுதியை ஒட்டியிருப்பதால் பல்வேறு நகரங்களுடன் வணிகத்தொடர்பை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புகள் அதிகம் என தெரிவித்துள்ளார். “ஏற்கனவே இங்கு நடத்தப்பட்ட ஆய்வுகளில் பல தொல்பொருள் எச்சங்கள் கிடைத்துள்ளது. இந்த பகுதி கடலை சார்ந்ததாக இருந்ததால், இவர்களுக்கு சுமேரியன் தொடர்புகள் இருந்துள்ளது” என்றார். குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டவைகளில் இருந்து இரண்டு மாநிலங்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளதா என்று அவரிடம் கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், “ இன்னும் அதற்கான விரிவான ஆய்வுகள் செய்யப்படவில்லை. மகாராஷ்டிரா தைமாபாத்தோடு ஆய்வு நிற்கிறது. மேலும் ஆய்வை செய்தால் மட்டுமே தொடர்புகள் குறித்து கண்டறிய முடியும்” என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிந்து சமவெளி நாகரிகம் இன்றைய இந்தியாவின் மேற்கில் சிந்து நதிக்கரையிலும், கிழக்கே பாகிஸ்தானிலும் உருவானது. ஹரப்பா நாகரிகம் என்றால் என்ன? சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, உலகில் மூன்று பெரிய நாகரிகங்கள் இருந்துள்ளன. அதில் ஒன்றான பண்டைய எகிப்து நாகரிகம் நைல் நதிக்கரையில் செழுமையான நகரங்களையும், அரண்மனைகளையும் கட்டியெழுப்பியது. மற்றொரு நாகரிகமான மெசபடோமிய நாகரிகம் மேற்கு மற்றும் மத்திய-கிழக்கு ஆசியாவில் டைக்ரிஸ்-யூப்ரடீஸ் நதிக்கரையில் உருவானது. அதே சமயத்தில், சிந்து நதிக்கரையில் ஒரு நாகரீகமும் உருவாகியிருந்தது. மேலும் அதுவே அந்தக் காலத்தின் மிக நவீன மற்றும் நகர்ப்புற கலாச்சாரமாக கருதப்பட்டது. சிந்து சமவெளி நாகரிகம் இன்றைய இந்தியாவின் மேற்கில் சிந்து நதிக்கரையிலும், கிழக்கே பாகிஸ்தானிலும் உருவானது. பாகிஸ்தானில் உள்ள ஹரப்பா இந்த நாகரிகத்தின் முக்கிய மையமாக இருந்தது. எனவே இந்த பண்டைய நாகரிகம் 'ஹரப்பா நாகரிகம்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சிந்து சமவெளி நாகரிகத்தின் வேர்கள் வடக்கே ஆப்கானிஸ்தான் மற்றும் தெற்கில் குஜராத் வரை பரவியுள்ளது. ஹரப்பா, கனேரிவாலா, மொஹஞ்சதாரோ, தோலாவிரா, காளி வங்காளம், ராக்கிகர்ஹி, ரூபார் மற்றும் லோத்தல் ஆகியவை இந்த கலாச்சாரத்தின் முக்கிய நகரங்களாகும். கட்சில் உள்ள தோலாவிரா மற்றும் அகமதாபாத்திற்கு அருகிலுள்ள லோத்தல் ஆகியவை குஜராத்தில் உள்ள சிந்து சமவெளி நாகரிகத்தின் தொல்பொருள் தளங்கள் ஆகும். ஆராய்ச்சியாளர்கள் இதை இந்திய கலாச்சாரத்தின் அடித்தளமாக கருதுகின்றனர். இந்தியாவின் இன்றைய வாழ்க்கைமுறை இந்த கலாச்சாரத்தின் அடித்தளத்தில் தான் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் நம்புகின்றனர். https://www.bbc.com/tamil/articles/c1v1w6wxggno

அரச நிறுவனங்களின் உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகள் முறையாகச் செயற்படவில்லை

1 month 3 weeks ago
அரச நிறுவனங்களின் உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகளில் 71 சத வீதமானவை முறையாகச் செயற்படவில்லை: கணக்கெடுப்பில் தகவல்! Published By: VISHNU 26 FEB, 2024 | 05:21 PM நாட்டிலுள்ள அரச நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகளில் 71 சத வீதமானவை முறையாகச் செயற்படவில்லை என பேராதனைப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பேராசிரியர் வசந்த அத்துகோரலவின் வழிகாட்டலின் கீழ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளி விபரவியல் திணைக்கள மாணவர்கள் குழுவினால் இது தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பின்படி, அரச நிறுவனங்களைத் தொடர்பு கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகளில் 29 சத வீதமானவை மட்டுமே சரியாக இயங்குவதாகவும் 49 சத வீதமானவை இயங்கவில்லை என்றும், 22 சத வீதமானவை செயற்பாட்டில் இருந்தாலும் யாருக்கும் பதிலளிப்பதில்லை என்றும் தெரிய வந்துள்ளது. நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகங்களைச் சேர்ந்த கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஒதுக்கப்பட்ட உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகள் இந்த கணக்கெடுப்புத் தொகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதன்படி, கணக்கெடுக்கப்பட்ட 276 பிரதேச சபைகளில் 98 பிரதேசங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, 14 சத வீதமான தொலைபேசி இணைப்புகள் இயங்கவில்லை, 42 சத வீதமானவை பதிலளிக்கப்படவில்லை. 44 சத வீதமானவை மட்டுமே பதிலளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது. மேலும் பதிலளிக்கப்பட்ட உத்தியோகபூர்வ தொலைபேசி அழைப்புக்கள் ஊடாக வழங்கப்பட்ட பதில்கள் தெளிவற்றதாகவும், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எந்தப் பயனும் அல்லது பொருத்தமும் இல்லை என்றும் பேராசிரியர் அத்துகோரள மேலும் கூறினார். சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் அதிகாரிகளும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/177367

அரச நிறுவனங்களின் உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகள் முறையாகச் செயற்படவில்லை

1 month 3 weeks ago
அரச நிறுவனங்களின் உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகளில் 71 சத வீதமானவை முறையாகச் செயற்படவில்லை:  கணக்கெடுப்பில் தகவல்!

Published By: VISHNU    26 FEB, 2024 | 05:21 PM

image

நாட்டிலுள்ள அரச நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகளில் 71 சத வீதமானவை முறையாகச் செயற்படவில்லை என பேராதனைப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பேராசிரியர் வசந்த அத்துகோரலவின் வழிகாட்டலின் கீழ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளி விபரவியல் திணைக்கள மாணவர்கள் குழுவினால் இது தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்தக் கணக்கெடுப்பின்படி,  அரச  நிறுவனங்களைத் தொடர்பு கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகளில் 29 சத வீதமானவை மட்டுமே சரியாக இயங்குவதாகவும் 49 சத வீதமானவை இயங்கவில்லை  என்றும், 22 சத வீதமானவை செயற்பாட்டில் இருந்தாலும்  யாருக்கும் பதிலளிப்பதில்லை என்றும்  தெரிய வந்துள்ளது.

நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகங்களைச் சேர்ந்த கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஒதுக்கப்பட்ட உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகள் இந்த கணக்கெடுப்புத் தொகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கணக்கெடுக்கப்பட்ட 276 பிரதேச சபைகளில் 98 பிரதேசங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, 14 சத வீதமான தொலைபேசி இணைப்புகள் இயங்கவில்லை, 42 சத வீதமானவை  பதிலளிக்கப்படவில்லை.  44 சத வீதமானவை மட்டுமே பதிலளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.

மேலும் பதிலளிக்கப்பட்ட   உத்தியோகபூர்வ  தொலைபேசி அழைப்புக்கள் ஊடாக   வழங்கப்பட்ட பதில்கள் தெளிவற்றதாகவும், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எந்தப் பயனும் அல்லது பொருத்தமும் இல்லை என்றும் பேராசிரியர் அத்துகோரள மேலும் கூறினார்.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் அதிகாரிகளும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

https://www.virakesari.lk/article/177367

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் செய்திகள்

1 month 3 weeks ago
36 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறிய இந்தியாவை கில் - ஜூரெல் ஜோடி கரை சேர்த்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் ராஞ்சியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 5விக்கெட் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்து டெஸ்ட் தொடரை வென்றது. டெஸ்ட் தொடர் வெற்றி 2வது இன்னிங்ஸில் இந்திய அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக இங்கிலாந்து அணி நிர்ணயித்து இருந்தது. 61 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்து இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சுப்மான் கில் 52 ரன்களுடனும், ஜூரெல் 29 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர். 6-வது விக்கெட்டுக்கு இருவரும் 72 ரன்கள் சேர்த்து முக்கியமான பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தனர். இந்த டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 90 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்த அறிமுக வீரர் ஜூரெல் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய பேட்டர்கள் தடுமாற்றம் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்களும், இந்திய அணி 307 ரன்களும் சேர்த்தன. 46 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 192 ரன்கள் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 3-வது நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் ரோஹித் சர்மா 24, ஜெய்ஸ்வால் 16 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இன்று 4வது நாள் ஆட்டத்தை இருவரும் தொடங்கினர். ஜெய்ஸ்வால் 37 ரன்கள் சேர்த்த நிலையில், ரூட் பந்துவீச்சில் ஆன்டர்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 4வது நாளில் ஆடுகளம் மந்தமாகவும், சுழற்பந்துவீச்சுக்கு ஏதுவாக இருக்கும் என்பதால், இங்கிலாந்து அணி ரூட், பசீர், ஹார்ட்லி மூலம் நெருக்கடி கொடுத்தது. ஆடுகளம் மிகவும் மோசமானதால், பேட்டரின் முழங்காலுக்கு மேல் பந்து எழும்பவில்லை. இதனால் இந்திய பேட்டர்கள் பந்தை எதிர்கொண்டு விளையாட சிரமப்பட்டனர். அடுத்துவந்த சுப்மான் கில், ரோஹித் சர்மாவுடன் சேர்ந்தார். வேகமாக ரன்களைச் சேர்த்த ரோஹித் சர்மா 69 பந்துகளில் அரைசதம் அடித்து சிறிது நேரத்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஹார்ட்லி பந்துவீச்சில் ரோஹித் சர்மா 55 ரன்கள் சேர்த்து போக்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா களத்தில் இருந்தவரை ரன்ரேட் ஓரளவுக்கு வேகமாகச்சென்றது. அவர் ஆட்டமிழந்தபின் ரன்களும் வருவதும் கடினமாக இருந்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி தடுமாறியது. 36 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து இந்தியா தடுமாற்றம் பட மூலாதாரம்,GETTY IMAGES அதன்பின் இந்திய அணி அடுத்தடுத்து விரைவாக விக்கெட்டுகளை இழந்தது. ரஜத் பட்டிதார் வந்த வேகத்தில் பசீர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்து டக்அவுட்டில் வெளியேறினார். 4 டெஸ்ட் போட்டிகளாக பட்டிதாருக்கு வாய்ப்பு தரப்பட்டும், ஒரு போட்டியில்கூட அரைசதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்துவந்த ஜடேஜா 4 ரன்னிலும், சர்ஃபராஸ் கான் ரன் ஏதும் எடுக்காமலும் பசீர் சுழலிலும் சிக்கி வெளியேறினர். 99 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை இழந்திருந்த இந்திய அணி, அடுத்த 21 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஏறக்குறைய 20 ஓவர்களில் வெறும் 36 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. ஆட்டம் மெல்ல இங்கிலாந்து கைகளுக்கு மாறுவதுபோல் இருந்தது. இந்திய அணியை கில்-ஜூரெல் ஜோடி கரை சேர்த்தது எப்படி? ஆனால், 6-வது விக்கெட்டுக்கு சுப்மான் கில்லுடன், ஜூரெல் இணை சேர்ந்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இருவரும் நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தனர். 3 சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து இங்கிலாந்து அணி அளித்த நெருக்கடியை இருவரும் சமாளித்து பேட் செய்தனர். இருவரின் பேட்டிலிருந்து ரன்கள் பெரிதாக வரவில்லை என்றாலும், விக்கெட்டை இழந்துவிட்டால் அடுத்ததாக நிலைத்து ஆட பேட்டர்கள் இல்லை என்பது தெரிந்துவிட்டதால், தங்களை நிலைப்படுத்திக் கொண்டனர். பொறுமையாக பேட் செய்த சுப்மான் கில் 122 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க இங்கிலாந்து சழற்பந்துவீச்சாளர்கள் கடினமாக முயன்றும் முடியவில்லை. சுப்மான் கில் 52 ரன்களுடனும், ஜூரெல் 29 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்து இ்ந்திய அணியை வெற்றி பெற வைத்தனர். ஆட்டத்தின் திருப்புமுனை! ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் நேற்றைய ஆட்டநேர முடிவில் சேர்த்த 40 ரன்கள்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. இருவரும் சேர்த்த அந்த ரன்கள் இந்திய அணியின் பேட்டர்களின் சுமையையும், நெருக்கடியையும் குறைத்தது. ஒருவேளை குறைவான ரன்களைச் சேர்த்து, விக்கெட்டையும் இழந்திருந்தால், ஆட்டத்தின் போக்கு இன்று மாறியிருக்கக் கூடும். தவறவிட்ட இங்கிலாந்து இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக பென் ஸ்டோக்ஸ், பயிற்சியாளராக மெக்கலம் ஆகியோர் வந்தபின் இழக்கும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். ஹைதராபாத் டெஸ்ட் வெற்றிக்குப்பின், டெஸ்ட் தொடரை வெல்லவும் இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், அதை பயன்படுத்தவில்லை. தொடர்ந்து இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்கவும் இல்லை. இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை இளம் சுழற்பந்துவீச்சாளர்கள் சோயிப் பசீர், டாம் ஹார்ட்லி இருவரும் தங்களின் பணியைச் சிறப்பாகச் செய்தனர். இருவரும் இளம் வீரர்களாக இருந்தாலும், பந்துவீச்சில் பெரிய அளவிலான முதிர்ச்சி தென்பட்டது. இன்றைய ஆட்டம் தொடங்கும் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்களுடன் வலுவாக இருந்தது. ஆனால், பசீர், ஹார்ட்லி இருவரின் சுழற்பந்துவீச்சால் அடுத்தடுத்து இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து நெருக்கடிக்குள்ளானது. சிறப்பாகப் பந்துவீசிய பசீர் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வெற்றி நாயகர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES அதேபோல இந்திய அணியின் வெற்றிக்கு 2வது இன்னிங்ஸில் அஸ்வின், குல்தீப் யாதவின் பந்துவீச்சும், முதல் இன்னிங்ஸில் ஜூரெல் சேர்த்த 90 ரன்களும் முக்கியமானவை. அதிலும் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்து தடுமாறியது. அப்போது அறிமுக வீரராக ஜூரெல், குல்தீப் யாதவுடன் சேர்ந்து சரிவிலிருந்து இந்திய அணியை மீட்டது மிகப்பெரிய பணி. அதிலும் டெய்ல் எண்டரான குல்தீப் யாதவை வைத்துக்கொண்டு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஜூரெல் இந்திய அணியை மீட்டது அற்புதமான பேட்டிங்கிற்கு சான்றாகும். அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்தவுடன், தனது பேட்டிங்கில் கியரை மாற்றி அதிரடிக்கு மாறி இந்திய அணி 300 ரன்களைக் கடக்க உதவினார். முதல் போட்டியிலேயே சதத்தை நெருங்கிய ஜூரெல் 10 ரன்களில் சதத்தை தவறவிட்டார். முதல் இன்னிங்கில் இந்திய அணி கவுரமான ஸ்கோரைப் பெறுவதற்கு ஜூரெல் பேட்டிங் முக்கியமாகும். 2வது இன்னிங்ஸில் அஸ்வின், குல்தீப் ஆகிய இருவரின் மாயஜாலப் பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 145 ரன்களுக்கு சுருண்டது. இதனால், வெற்றி இலக்கு இந்திய அணிக்கு இலகுவானது. இதன் மூலம் கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணி டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இழந்தது இல்லை என்ற சாதனையைத் தக்கவைத்துள்ளது. சவாலான டெஸ்ட் போட்டி வெற்றிக்குப்பின் ரோஹித் சர்மா அளித்த பேட்டியில் “ மிகவும் கடினமான டெஸ்ட் தொடராக இருக்கிறது. ஏராளமான சவால்களைச் சந்தித்தோம். அதற்கு அமைதியாக பதிலடியும் கொடுத்துள்ளோம். உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி வந்துள்ள இளம் வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். பெரிய சவாலுக்கு நன்றாக பதில் அளித்தனர். அவர்களுக்கு தேவையான சுதந்திரத்தை வழங்கியிருந்தோம். அவர்களின் ஸ்டைலில் பேட்டிங் செய்யவும் அனுமதித்தோம். ஜூரெல் அமைதியாக விளையாடி அனைத்து ஷாட்களையும் ஆடினார். அவரின் 90 ரன்கள் முக்கியமானவை. முக்கிய வீரர்களை இந்த நேரத்தில் இழப்பது வேதனைதான். இருந்தாலும் குழுவாக சிறப்பாகச் செயல்பட முடியும். அவர்களின் இடத்தை நிரப்புவது கடினம்தான். ஒவ்வொரு டெஸ்ட் போட்டியையும் வெல்ல முயல்கிறோம், சிறந்த டெஸ்ட் தொடராக இதை மாற்றுவோம்” எனத் தெரிவித்தார். 'முடிவைப் பற்றி கவலை இல்லை' பட மூலாதாரம்,GETTY IMAGES இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் “ சிறந்த டெஸ்ட் போட்டி. ஸ்கோர் பெரிதாக இல்லாவிட்டாலும், இரு அணிகளுக்கும் சவாலாக இருந்தது. எங்கள் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். அவர்கள் சூழலுக்கு ஏற்றாற்போல் பந்துவீசினர். இருப்பினும் பெரிதாக பெருமைப்பட முடியவில்லை. 2வது இன்னிங்ஸில் அஸ்வின், குல்தீப், ஜடேஜா பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. ஆடுகளம் 4வது நாளான இன்று மாறும் என எதிர்பார்த்தோம். அப்படி எந்த மாற்றத்தையும் பார்க்கவில்லை. ஜோ ரூட் அற்புதமான பேட்டர். அவர் மீதான விமர்சனம் நியாயமற்றது. பசீரின் பந்துவீச்சைப் பார்த்து பெருமைப்படுகிறேன். முடிவைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம், நம்முடைய முழுப் பங்களிப்பை மட்டும் வழங்குவோம் என வீரர்களுக்கு அறிவுரை கூறியுள்ளேன்” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c04r4g1rx0mo

தமிழ்நாடு மீனவர்களுக்கு என்ன பிரச்னை?

1 month 3 weeks ago
தமிழ் நாட்டு மீனவர்களும் சரி, இலங்கை மீனவர்களும் சரி சட்டத்தைக் கடைப் பிடிப்பதில் தான் பிரச்சினை. இதில் தமிழ் நாட்டு மீனவர்களால் எல்லை மீறல்கள் இடம் பெறுவது அதிகமாக இருப்பதன் காரணம், நீண்ட தூரம் சென்று மீன்பிடிக்கக் கூடிய சக்தி வாய்ந்த படகுகள் அவர்களிடம் இருக்கின்றன. இலங்கை மீனவர்களிடம் இத்தகைய படகுகள் குறைவு. எனவே, ஒரு பாரிய பல அசம நிலையில், இலங்கை மீனவர்களுக்கு அதிகம் பாதிப்பு, வாழ்வாதார இழப்பு. கனடாவுக்கும் அமெரிக்காவிற்குமிடையே கூட வட கிழக்கு எல்லைப் பகுதியில், நீர் எல்லைகள் அவ்வளவு வரையறுக்கப் படாத பிரதேசங்களில் மீன்பிடியில் பிணக்குகள் இருக்கின்றன. ஆனால், இது grey zones எனப்படும் வரையறை செய்யப் படாத பிரதேசங்கள் சம்பந்தப் பட்டது. இலங்கை, இந்திய எல்லையில் இத்தகைய grey zones - வரையறையற்ற பகுதிகள் இருக்கின்றனவா?

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு !

1 month 3 weeks ago
மரத்தைப் பற்றி எழுத சொன்னால், மரத்தில் கட்டியிருக்கும் "புலியை" பற்றி எழுதுவதென்பது இது தானோ😎? உரிய திரியில் பதில்கள் தரப் பட்ட போது மண்டையை ஆட்டி நன்றிக் குறியும் போட்டு, விட்டு திரிக்கு வெளியே வந்து நக்கலடிப்பது "மூத்தோர்" செயலல்ல என நினைக்கிறேன்😂! ஆனால், மரம் நடுகிற உங்கள் பணி பாராட்டுக்குரியது, வாழ்த்துக்கள்!

தமிழ் மக்களும் ராஜதந்திரிகளும்! நிலாந்தன்.

1 month 3 weeks ago
முன்பெல்லாம் நான் நினைப்பதுண்டு, தமிழர்களாகிய எங்களுக்கு, நாங்கள் நிம்மதியாகவும் கெளரவமாகவும், எந்தவித பயமுன்றி, எங்களது நிலத்தில் நாங்கள் வாழ வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் உள்ளது என்று.. ஆனால் நிலமை/எண்ணம் அப்படி இல்லை என்பதைத்தான் இப்பொழுதுதெல்லாம் உணர்கிறேன். நாங்கள் இலங்கை பெளத்த நாடு என்பதை பிழையென கூறும் நாங்கள் இந்து/கிறிஸ்தவம் என பிரிந்து போகிறோம். ஒரே மதம் என்ற காரணத்திற்காக பிழையானவர்களையும் ஆதரிக்கிறோம். ஊரில் ஏற்கனவே கோயில்கள் இருக்க வீதிக்கொரு கோயிலை கட்டுகிறோம். அதே நேரம் கிளிநொச்சியில் உள்ள பின் தங்கிய கிராமத்தில் உள்ள பாடசாலைக்கு ஒரு கட்டிடத்தைக் கட்ட நிறைய யோசிக்கிறோம். புலம்பெயர்ந்த தேசங்களில் பல்வேறு சங்கங்கள். தென்னிந்திய நடிகர்களின் நிகழ்ச்சிகளையும், அவர்களது படங்களை விநியோகிக்கும் உரிமையை அனேகமாக செய்வது ஈழத்தமிழர், ஆனால் ஊரில் உள்ள கலைஞர்களை ஊக்குவிக்க quality சரியில்லை, ticket விற்க முடியாது என பல காரணங்களை அடுக்குவோம். ஊரில் சமூக சீர்கேடுகளை(சிறுவர் துஷ்பிரயோகம் தொடக்கம் பல) ஒரு சாதாரன விடயமாக கடந்து போகிறோம். அதற்கு எதிரான நடவடிக்கைகளை கூட சேர்ந்து எடுக்க முடியாத நிலையில் தான் உள்ளோம். நாங்கள் ஊரில் வளர்ந்த காலத்தில் இப்படி நடைபெற்றதா? இல்லை. அந்த காலப்பகுதியில் இளமை வயதில் இருந்தவர்களின்(பெரும்பாலானோர்) பிள்ளைகள்தான் இன்றுள்ள இளைய சமூதாயம் என நினைக்கிறேன். அவர்கள்தான் இன்று சோம்பேறிகளாகவும் போதைக்கும் அடிமையாகி வருகிறார்கள். இன்று தமிழர்களாகிய எங்களது எண்ணங்கள் வேறு என்றே தோன்றுகிறது. எங்களிடம் அரசியல் பலமும் இல்லை ஆயுதபலமும் இல்லை, பொருளாதார பலமும்(?) இல்லை, மக்கள் பலமும் இல்லை. நிலமை இப்படி இருக்கையில் நிலாந்தன் தமிழ் மக்கள் தங்களது பேரம் செய்யும் பலத்தை அதிகரிக்க வேண்டும் எனப் பேராசைப்படுகிறார்.

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

1 month 3 weeks ago
வணக்கம் வாத்தியார்.......! பெண் : { சாமிகிட்ட சொல்லிப்புட்டேன் உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன் ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு மனசுக்குள்ளே பேசிக்கிட்டோம் சுத்தமா நீ நானும் பாா்த்துக்கவே முடியலன்னு கனவுக்குள்ளே பாா்த்துக்கிட்டோம் } (3) பெண் : ஒரு கோடி புள்ளி வச்ச நான் போட்ட காதல் கோலம் ஒரு பாதி முடியும் முன்ன அழிச்சிருச்சு காலம் காலம் இன்னொரு ஜென்மம் நான் மறுபடி பொறந்து வந்து உனக்காகக் காத்திருப்பேன் அப்பவும் சேராமல் இருவரும் பிரியனும்னா பொறக்காமல் போயிடுவேன் பெண் : தெப்பக் குளத்தில் படிஞ்ச பாசி கல் எறிஞ்சா கலையும் கலையும் நெஞ்சக் குளத்தில் படிஞ்ச காதல் எந்த நெருப்பில் எரியும் எரியும் நீ போன பாத மேல சருக்காக கடந்த சுகமா உன்னோட ஞாபகம் எல்லாம் மனசுக்குள்ள இருக்கும் ரனமா கட்டுக் காவல் மீறி வர காதல் நெஞ்சு கெஞ்சுதே ஆண் : மனசுக்குள்ள பூட்டி மறச்ச அப்போ எதுக்கு வெளியில சிரிச்ச கனவுக்குள்ள ஓடி புடிச்ச நெசத்துல தான் தயங்கி நடிச்ச அடி போடி பயந்தாங்கோலி எதுக்காக ஊமை ஜாடை நீ இருந்த மனச அள்ளி எந்த தீயில் நானும் போட உன்னை என்னை கேட்டுக்கிட்டா காதல் நெஞ்ச தட்டிச்சு .......! --- சாமிகிட்ட சொல்லிப்புட்டேன் ---

நான் தொடர்ந்தும்இனப்படுகொலையுடன் தொடர்புபட்டிருக்க விரும்பவில்லை - இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே அமெரிக்க விமானப்படை வீரர் தீக்குளிக்க முயற்சி

1 month 3 weeks ago
Published By: RAJEEBAN 26 FEB, 2024 | 11:15 AM காசா யுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில் அமெரிக்க விமானப்படையை சேர்ந்த ஒருவர் வோசிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே தனக்குதானனே தீமூட்டிக்கொண்டார் என சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. உடனடியாக தீயை அணைத்த அமெரிக்க இரகசிய சேவையை சேர்ந்தவர்கள் அந்த நபரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தீக்குளிக்க முயற்சித்த நபர் தொடர்ந்தும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றார் அவர் விமானப்படையை சேர்ந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இராணுவசீருடையில் காணப்படும் அந்த நான் தொடர்ந்தும்இனப்படுகொலையுடன் தொடர்புபட்டிருக்க விரும்பவில்லை என தெரிவிக்கும் இணையவீடியோவொன்று வெளியாகியுள்ளது. தன்மேல்எரிபொருளை ஊற்றி தனக்குதானே தீமூட்டிக்கொள்வதற்கு முன்னர் அந்த நபர் சுதந்திர பாலஸ்தீனம் என கோசமிட்டார் என டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. காசாவில் யுத்தம் ஆரம்பித்த பின்னர் வோசிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு முன்னால் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/177304

நான் தொடர்ந்தும்இனப்படுகொலையுடன் தொடர்புபட்டிருக்க விரும்பவில்லை - இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே அமெரிக்க விமானப்படை வீரர் தீக்குளிக்க முயற்சி

1 month 3 weeks ago

Published By: RAJEEBAN   26 FEB, 2024 | 11:15 AM

image

காசா யுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில் அமெரிக்க விமானப்படையை  சேர்ந்த ஒருவர் வோசிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே தனக்குதானனே தீமூட்டிக்கொண்டார்  என  சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

உடனடியாக தீயை அணைத்த அமெரிக்க இரகசிய சேவையை சேர்ந்தவர்கள் அந்த நபரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தீக்குளிக்க முயற்சித்த நபர் தொடர்ந்தும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றார் அவர் விமானப்படையை சேர்ந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இராணுவசீருடையில் காணப்படும்  அந்த நான் தொடர்ந்தும்இனப்படுகொலையுடன் தொடர்புபட்டிருக்க விரும்பவில்லை என தெரிவிக்கும் இணையவீடியோவொன்று வெளியாகியுள்ளது.

தன்மேல்எரிபொருளை ஊற்றி தனக்குதானே தீமூட்டிக்கொள்வதற்கு முன்னர் அந்த நபர் சுதந்திர பாலஸ்தீனம் என கோசமிட்டார் என டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

காசாவில் யுத்தம் ஆரம்பித்த பின்னர் வோசிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு முன்னால் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/177304

பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன்.

1 month 3 weeks ago
பசுமையான எண்ணங்களை விதைத்திருக்கிறீங்கள்.......ஆனால் இவையெல்லாம் தனிமனித வாழ்வில் சாத்தியமா தெரியாது........அதுக்காக சும்மா வாளாவிருத்தல் கூடாது .........! 👍 நல்ல சிந்தனை நன்றி நெடுக்ஸ்......!