Aggregator

நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?

2 months ago
நான் நம்பவில்லை ......இவரது ஒப்பந்தம் புலிகளை அழிக்க உதவியது எப்படி என்று கூறுங்கள் பார்ப்போம் சிங்களத் தலைவர்கள் அனைவரும் தமிழர்கள் விடயத்தில் ஒத்த கருத்துகள் செயல்பாடுகளை உடையவர்கள் அது வந்து இவர்கள் உடல் ரீதியாகவும் தொடர்பில் இருந்தாதக ஒரு கட்டுரை வாசித்து இருக்கிறேன் அவ்வளவு நெருக்கம் அவா. சொன்னால் இவர்கள் எதிர்த்து கதைக்க மாட்டார்கள் இப்படிப்பட்ட அடிமைகளை விரும்பாத மக்கள் உண்டா ??? இந்த உலகில்……………

தமிழரசுக்கட்சி பலவீனமடையவில்லை தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக சேர்ந்து இருந்ததை விட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கின்றது- எம் ஏ சுமந்திரன் !

2 months ago
சுத்து மாத்தருக்கு கிடைச்சிருக்கும் கடைசிச் சுற்று வாய்ப்பு இது என பட்சி சொல்கிறது .. மக்கள் சகலமும் அறிவர் .. பாடம் படித்தோரும் , ஆக குறைந்தது படிக்க மெய்யாலுமே அக்கறை காட்டுபவரும் பிழைத்துக் கொள்வர்

ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்

2 months ago
இது நேற்று பாக்கிகுள்ள சுட்டு வீழ்த்தப்பட்ட இரு இந்திய வண்டுகள்: இந்தியனை முல்லாக்கள் மொங்குறாங்கள் : அடி விழுந்துகொண்டே இருக்குது ... இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் இன்னுமொரு வண்டை வீழ்த்திவிட்டதாக பாக். அறிவித்துள்ளது:

நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?

2 months ago
இதை எழுதுவதால் பல விமர்சனங்கள் வரும், ஆனாலும் அந்த சமயம் நடந்த விடயங்கள் எனது கண் முன்னாலேயே நடந்ததால் எழுதுகிறேன் 2002 O/L படித்துக்கொண்டிருந்தேன். யுத்த நிறுத்தம் ஆரம்பித்து புலிகளின் அரசியல் துறை நெல்லியடியில், மகாவித்தியாலய வீதியில் அலுவலகம் அமைத்திருந்தார்கள். நான் உயர்தரம் படிக்கத்த தொடங்கிய காலத்திலேயே (2003) தனியார் கல்வி நிலையங்களுக்கு இளம்பரிதி, பாப்பா, அமிதாப், லோரன்ஸ் போன்றவர்கள் வந்து கூட்டம் வைப்பார்கள். "இந்த சமாதானம் சர்வதேசத்துக்கு நாங்கள் காட்டும் போக்கு. எங்களைப் பலப்படுத்தவே இந்த நேரத்தை நாங்கள் பாவிக்கிறோம். இதன் பின்னர் இறுதிச்சண்டை வரப்போகுது அதுக்கு நீங்கள் வந்து எங்களுடன் இணையுங்கோ, அதுக்கு முதல் எரிமலைக்கு வந்து மக்கள் பயிற்சி எடுத்து ஆயத்தமாக இருக்க வேணும்" என்ற தொனியிலேயே அந்தக் கூட்டங்கள் இருந்தது. வன்னியிலோ நிலைமை வேறாக இருந்தது. இயக்க உயர் தளபதிகளின் குடும்பங்களுக்கு எப்போதுமே இருந்திராத சந்தர்ப்பங்கள் வாய்த்திருந்தன. பலருக்கு வாகனங்கள் வழங்கப்பட்டன, தொலைபேசி, மின்சாரம், தொலைக்காட்சி போன்ற வசதிகள் கிடைத்தது. புலம்பெயர் நாடுகளில் இருந்து வருபவர்களால் பல பரிசுகளும் கிடைத்தது. மிக நீண்ட வருடங்கள் கடுமையான யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர்களுக்கு மூச்சு விட சந்தர்ப்பம் கிடைத்தது. தலைவர் வைக்கும் கிழமை கூட்டங்களும் கொஞ்சம் கொஞ்சமாக நின்று போனது. தலைவருக்கும், வரும் புலம்பெயர் முக்கியஸ்தர்களுடனும் வெளிநாட்டு பிரதிநிதிகளுடனும் செலவிடவே நேரம் போதவில்லை. இந்த கால கட்டத்தில் தான் KP இடம் இருந்து வெளிநாட்டு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு காஸ்ட்ரோவிடம் கொடுக்கப்பட்டது. அவர்களால் ஒரு கிரேனைட் ஐக்கூட வன்னிக்குள் கொண்டு சென்று இறக்க முடியவில்லை. கப்பல் கப்பலாக ஆயுதங்கள் வந்தும் எல்லாமே மூழ்கடிக்கப்பட்டன. பலர் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளின் வலையில் சிக்கினார்கள். வெளிநாடுகளை வெட்டி ஓடிக்கொண்டிருந்த அன்டன் பாலசிங்கத்துக்கு இது எப்படி போகப்போகிறது என தெரிந்திருந்தது. ஒரு கட்ட சமாதானப் பேச்சு வார்த்தையில் அவர் சமஸ்டிக்கு ஓம் என்று போட்டு வந்த பின்னரே அவருக்கு கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டது. தமிழ்ச்செல்வனால் பாலசிங்கத்தார் போல செயற்பட முடியவில்லை. இதே காலத்தில் கருணாவின் பிரிவும் தொடங்கி இயக்கத்தை கூறு போட்டது. பல சண்டைகளில் துணிந்து முன்னேறி அடித்து நொறுக்கும் ஜெயந்தன் படையணி பல பாகங்களாக உடைந்தது. பால்றாஜ் அண்ணையையும் புற்றுநோய் கொண்டு போனது. யாழ்மாவட்டத்தில் இருந்த போராளிகளும் கொஞ்சம் கொஞ்சமாக இராணுவத்தை இலக்கு வைக்கத் தொடங்கினார்கள். கிளைமோர், கிரேனைட், பிஸ்டல் என பல விடயங்களை உயர்தர மாணவர்களை கொண்டே செய்வித்தார்கள். ஹாட்லி காம்ப் கூட இப்படியான விதத்திலே அடித்து உடைக்கப்பட்டது. தேவையே இல்லாத ஆணியான மாவிலாறை மூடி அவர்களுக்கு கொஞ்சமும் வசதியற்ற தொப்பிகல காட்டிலே சண்டையை ஆரம்பித்து ஆரம்பத்திலேயே பின்வாங்கத் தொடங்கினார்கள். மாவிலாறில் தொடங்கி முள்ளி வாய்க்காலில் முடியுமட்டும் இது நிக்கவில்லை. பல அரசியல் கொலைகள், தெற்குப் பகுதி தற்கொலைத் தாக்குதல்கள் குறிப்பாக 2006 இல் கதிர்காமரின் சினைப்பர் சூடு போன்றவை சர்வதேசத்திடம் இருந்து வந்திருக்க கூடிய கொஞ்ச நஞ்ச ஆதரவையும் இல்லாமல் ஆகிவிட்டிருந்தது. இயக்கமோ, சர்வதேசம் உதவும், ஏதாவது ஒரு நாடு தலையிடும் என நம்பியிருந்தார்கள். ஆனால் கிடைத்த சந்தர்ப்பங்களில் உறுதியான சர்தேச உறவுகளை வளர்க்க தவறி விட்டார்கள். ஆயுத ரீதியில் தங்களை கட்டமைத்தது போல அரசியல் ரீதியில் வளர்க்கவே இல்லை. இருபது வயது இளைஜன் பத்து வயசு பிள்ளையின் உள வளர்ச்சியுடன் இருப்பது போன்ற நிலை. 9/11 பின்னர் மாறி விட்ட பூகோள அரசியல் ஆயுத நிலைமைகளை தலைவர் சரியாக எடை போட்டிருக்கவில்லை. தொழில் நுட்ப ரீதியில் அவர்களின் வளர்ச்சி இலங்கை அரசின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இறுதிக் காலங்களில் கட்டாய ஆட் சேர்ப்பு, வரிகள் போன்ற காரணங்களால் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு போனார்கள். மகிந்தவிடம் மிகப்பெரும் தொகை பணத்தை வாங்கி ரணிலை புறக்கணித்தார்கள். ரணில் வெண்டிருந்தால் இயக்கம் இப்பவும் இருக்கும்.

ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்

2 months ago
ஓடியாங்கோ ஓடியாங்கோ இரண்டாவது ரபேல் விழுந்ததற்கான ஆதாரத்தை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. சிறிநகருக்கும் பஞ்சாப்பிற்குமான தொலைவு ~500 கிமீ!!!

நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?

2 months ago
அவரை "உள் வாங்கினார்கள்" என்று ஏன் சொல்ல வேண்டும்? அவராக கல்வியில் உயர்ந்து சட்டத்துறையில் சர்வதேச மட்டத்தில் ஒரு தனித் துறையில் (constitutional law) நிபுணராக வந்தார் (ஹார்வார்ட்டில் fellowship அப்பாவின் பெயரைப் பார்த்துக் கொடுப்பதில்லை). இப்படியானவர்களை தமிழ் சிங்களம் என்று பார்க்காமல் இலங்கைத் தலைவர்கள் தங்கள் நட்பில் வைத்திருந்திருக்கிறார்கள் (பொன்னம்பலம் சீனியர், சிறிமாவின் "கழு புத்தா", எப்படி என்று தேடினீர்களா?). சட்டத்தரணி கனக் ஈஸ்வரன் பற்றிக் கேள்விப் படவில்லையா? அவர் கூட சந்திரிக்காவின் நட்புத் தான். இதற்கெல்லாம் சதித் திட்டம் தேடி, குத்தி முறிந்து...எப்படி நீங்களெல்லாம் யாழ் போன்ற களத்தில் பதவியில் இருக்கிறீர்கள்? ஆச்சரியக் குறிகள்!

தமிழரசுக்கட்சி பலவீனமடையவில்லை தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக சேர்ந்து இருந்ததை விட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கின்றது- எம் ஏ சுமந்திரன் !

2 months ago
இப்ப ஏன் உங்கள் இருவருக்கும் "உச்சியில் கரண்ட்" பாய்கிறது😂? உரிய உதாரணம் என்றால் எந்த நாட்டிலிருந்தும் எடுக்கலாம். இதைத் தடுக்கும் விதிகள் எவையும் இருக்கின்றனவா க.க "நிர்வாகி" நுணாவிலான்😎? தமிழ் நாட்டுக் கட்சி மீள மீள தோற்று டிப்போசிற் இழக்கும் வேளைகளில் "தனிய நின்று இவ்வளவு எடுத்தார்கள்" என்று உச்சி முகர்ந்தவர்கள், தனியாக தமிழரசு , கூட்டை விட வென்றிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தடுப்பது என்னத்தில் இருக்கும் "வரட்சி"? நிச்சயமாக கருத்தின் வரட்சி இல்லை, அது வேறேதோ "வரட்சி"😂!

தமிழரசுக்கட்சி பலவீனமடையவில்லை தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக சேர்ந்து இருந்ததை விட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கின்றது- எம் ஏ சுமந்திரன் !

2 months ago
வந்தாரையா நாகரீகக் கோமாளி .. மல்லி நாமல் பரவாயில்லை .. பத்து வீதம் எடுத்துவிட்டோம் , பல சபாக்களில் கட்டுப்பாட்டைப் பெற்றிருக்கிறோம் என புளகாங்கிதம் ..

ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்

2 months ago
இதோ அடுத்த வானூர்தி வீழ்ந்ததை கண்ட இந்தியர்கள் தெரிவிக்கும் வாக்குமூலங்கள் .... அடேய் 25 அப்பாவிகளை கொல்ல 5 தாரை வானூர்திகளை தாரைவார்த்த தாராள மனம்கொண்டவர்களே இந்தியர்கள்!!! ஆக மொத்தம் 3 உறுதி...😂🫡 கடைசி வரை மறுக்க முடியாத ஆதாரங்கள்

நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?

2 months ago
நீலன் திருச்செல்வத்தின் மகன் என்பதால் உள்வாங்கப்பட்டிருக்கலாம். எப்படி சந்திரிக்காவுக்கு மிக நெருங்கினார் என சொன்னால் நன்னா இருக்கும். சிங்களவர்களில் பல கெட்டிக்காரர்கள் உள்ள போது??

ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்

2 months ago
மக்களே... மிராஜ் 2000வீழ்த்தப்பட்டது அதன் கிடைக்கப்பெற்ற பொறியிலிருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ... வெளுத்துப் போட்டாங்கள் 🤣

நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?

2 months ago
முடிப்போம் என யார் சொன்னார்கள்? இவர்கள் எப்படி நடுநிலையாளர்கள் ஆனார்கள்? ஒரு முடிவுக்கு வர எல்லோரும் ஒன்றானார்கள் ஆயின் பிறகென்ன பேச்சுவார்த்தை?அதன் அர்த்தம் என்ன? பேச்சுவார்தையை புலிகள் குழப்பியதாக நாடகமாடியவர்களில் எத்கனை பேர் இங்குள்ளீர்கள்?? இப்படியான நொண்டிச்சாட்டுகளை இப்போதும் கூறி ஏனையவர்களை மடையர்கள் ஆக்காதீர்கள். புலிகளை பயங்கரவாதிகள் என் கிறீர்கள். எமது அரசியல் கட்சியாக கூட்டமைப்பை அனுப்புகிறோம் என புலிகள் கூறினார்கள்.

கனடிய தேர்தல்: ஒரு போஸ்ட் மோட்டம்

2 months ago
முச பிடிக்கிற நாய் தனது தொகுதியில் எப்படி தோற்றார் என்ற கேள்விக்கு பதில் என்ன? திரும்பவும் அரசியலுக்குள் வர இன்னொருவரின் தலை உறுள வேண்டும் என்பது எத்ததைய வெ ட்க கேடாக உங்களுக்கு தெரிக்கிறது? தற்போதைய நிலையில் கார்ணி தான் சரியான தேர்வு. பொருளாராதாரத்துக்கு பின் எதுவும். நீங்களும் மனைவியும் பியர் பொலிவியர்ருக்கு வாக்களித்ததால் மொத்த கனடாவும் அவர்களுக்கு வாக்களித்து வெல்ல வேண்டும் என்பது இ;ல்லை தானே. மக்கள் உங்களை விட கெட்டிக்காரர்களாக இருக்க வாய்ப்புண்டு.

ஜேர்மனியில் சேன்சலர் தேர்தல்: தோல்வியைத் தழுவிய ஃபிரிடிரிக் மெர்ஸ்!

2 months ago
ஏன் ?? நீங்கள் அடுத்த தேர்தலில் நிற்கப் போகிறீர்களா. ?? இரண்டு கட்சிகளும் சேர்த்து ஆட்சி அமைப்பது என்று முடிவு செய்து விட்டு பிரதமர் தெரிவில் இடறி. விட்டது போன்ற பிரச்சனைகள் வாராது Afd. காரி. வை மீண்டும் தேர்தலை என்றவுடன் வழிக்கு வந்து விட்டார்கள் போலும்” அடுத்த முறை Afd. பத்து வீதம். வாக்குகள். எடுக்குமா ??

நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?

2 months ago
உங்களின் "லாம் " விடைகள் யார் நீலன் என்பதை என்னை மட்டுமில்லை என்போன்றவர்களின் இமையை உயர்த்த வைத்தது. நீலனை சிறிலங்கா அரசு 100 வீதம் பயன்படுத்திக் கொண்டது என்பதைமட்டும் உறுதியாக நம்புகிறேன். அவரின் கொலையை எப்போதும் நியாயப்படுத்தவில்லை.

தமிழரசுக்கட்சி பலவீனமடையவில்லை தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக சேர்ந்து இருந்ததை விட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கின்றது- எம் ஏ சுமந்திரன் !

2 months ago
சுமந்திரன் தோற்ற போது உங்களுக்கு ஏன் கறன் பாயவில்லை. இப்போ தமிழ் நாட்டை ஒப்பிட வந்து விட்டீர்கள்? சாவகச்சேரி , பருத்திதுறை தொகுதிகளில் தமிழரசு கட்சி சேர்ந்து பயணிக்க தயாரா? அல்லது புறணி கூறலா???