தமிழகச் செய்திகள்

தமிழ்நாட்டில் 42 யானை வழித்தடங்கள் - வனத்துறை பரிந்துரைக்கு கூடலூர், மசினகுடியில் எதிர்ப்பு ஏன்?

1 day 3 hours ago
யானை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சிராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 15 மே 2024, 09:04 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

யானை - மனித மோதல்களைத் தவிர்க்கவும், யானைகளை பாதுகாக்கவும் வனத்துறை சார்பாக தமிழகம் முழுவதும் 42 யானை வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டு, அது தொடர்பான 161 பக்க விரிவான அறிக்கை கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இதற்கு சில அரசியல் கட்சிகளும், தொடர்புடைய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் யானை - மனித மோதல்களால் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 500 மனிதர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட யானைகளும் இறப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் யானை- மனித மோதல்கள் அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக கோயம்புத்தூர், கூடலூர், சத்தியமங்கலம் மற்றும் ஓசூர் ஆகிய வனக்கோட்டங்களில் கடுமையான யானை- மனித மோதல்கள் நடந்துள்ளன என்றும், அதற்கான தீர்வு தான் இந்த புதிய யானை வழித்தடங்கள் என்று தமிழ்நாடு வனத்துறை அறிக்கை கூறுகிறது.

அடையாளம் காணப்பட்டுள்ள இந்த யானை வழித்தடங்களில் தனியார் விடுதிகள், நெடுஞ்சாலைகள், தேயிலைத் தோட்டங்கள், விவசாய நிலங்கள் மட்டுமல்லாது மக்கள் வசிக்கும் பகுதிகளும் உள்ளன. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் தொகுதியின் 46 கிராமங்கள் இதில் உள்ளன. அப்பகுதி மக்கள் வனத்துறையின் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை (மே 13) தங்கள் வீடுகள், கடைகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினார்கள்.

யானைகளுக்கான வழித்தடங்கள் என்றால் என்ன? வனத்துறை அடையாளம் கண்டுள்ள யானை வழித்தடங்களால் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு பாதிப்புகள் ஏற்படுமா?

 
யானை வழித்தடங்கள்

பட மூலாதாரம்,TNFORESTDEPARTMENT

42 யானை வழித்தடங்கள்

தமிழ்நாடு வனத்துறை அறிக்கையின் படி, 2023இல் நடத்தப்பட்ட யானைகள் கணக்கெடுப்பின் மூலம் தமிழ்நாட்டின் 20 வனக் கோட்டங்களில் மொத்தம் 2,961 யானைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதில் முதுமலை புலிகள் காப்பகத்தின் உதகை மற்றும் மசினகுடி வனக் கோட்டங்களில் 790 யானைகள் (26.7%), சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் ஹாசனூர் மற்றும் சத்தியமங்கலம் வனக் கோட்டங்களில் 668 யானைகள் (22.6%), ஆனைமலை புலிகள் காப்பகத்தின் பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் வனக் கோட்டங்களில் 337 யானைகள் (11.4%), தமிழ்நாட்டின் மீதமுள்ள வனக் கோட்டங்களில் 1,166 (39.3%) யானைகள் உள்ளன.

அதிகரித்து வரும் யானை- மனித மோதல் பிரச்னைக்கு தீர்வு காணவும், யானைகளுக்கான கூடுதல் வழித்தடங்களை அடையாளம் காணவும், தமிழக அரசின் வனத்துறை கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் வி.நாகநாதன் (வனஉயிரினம்) தலைமையில் வனத்துறை மற்றும் அறிவியல் நிபுணர்கள் அடங்கிய குழு மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தமிழக யானைகள் வழித்தட திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இக்குழு தமிழகம் முழுவதும் 42 யானை வழித்தடங்களை அடையாளம் கண்டுள்ளது. இவை ஓசூர், தருமபுரி, ஈரோடு, மசினகுடி, கூடலூர், கோயம்புத்தூர், சத்தியமங்கலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளின் வனக் கோட்டங்களில் அமைந்துள்ளன.

161 பக்க அறிக்கையில் பாலக்காட்டுக் கணவாய்க்கு மேற்குப் பகுதியில் உள்ள வழித்தடங்கள், தெற்குப் பகுதியில் உள்ள வழித்தடங்கள் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

யானை வழித்தடங்கள்

பட மூலாதாரம்,AFP/GETTY IMAGES

மேலும், அந்த வழித்தடங்களைப் பயன்படுத்தும் யானைகளின் எண்ணிக்கை, அந்தப் பகுதியில் இருக்கும் வீடுகள், விவசாய நிலங்கள், நெடுஞ்சாலைகள், தேயிலைத் தோட்டங்கள், கோயில்கள், தனியார் விடுதிகள், நிறுவனங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள், அவை யானைகளுக்கு எந்தெந்த வகையில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் ஆகிய விவரங்கள் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானைகளைப் பாதுகாக்க அரசு சார்பாக எடுக்கப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் 2022இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 80 யானைகள் இருப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த யானைகளுக்கு இரண்டு வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவை தேவர்சோலா- நிலம்பூர் மற்றும் ஓவேலி. தேவர்சோலா- நிலம்பூர் வழித்தடத்தில் உள்ள 7 கிராமங்களில் 34,796 குடும்பங்கள் வசிக்கின்றன. ஓவேலி வழித்தடத்தில் உள்ள 31 கிராமங்களில், 2,547 குடும்பங்கள் வசிக்கின்றன.

அதேபோல மசினகுடி வனக்கோட்டத்தில் 61 யானைகள் இருப்பதாக 2023 கணக்கெடுப்பில் தெரியவந்தது. இங்கு அடையாளம் காணப்பட்டுள்ள சீகூர் வழித்தடத்தில் உள்ள 8 கிராமங்களில் 513 குடும்பங்கள் வசிக்கின்றன.

வனத்துறை அறிக்கையின் சில பரிந்துரைகள்
  • மசினகுடி- உதகை பாதையில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கக் கூடாது, உதகை செல்ல கூடலூர் பாதையைப் பயன்படுத்த வேண்டும்.
  • யானைகள் செல்ல அதிக பாலங்கள் கட்டப்பட வேண்டும்.
  • வழித்தடத்தில் உள்ள இரும்புக்கம்பி வேலிகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும்.
  • பொக்காபுரத்தில் உள்ள நீலகிரி மலைச் சரிவுகள் முதல் மாயார் பள்ளத்தாக்கு வரை உள்ள பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக (ESA- Eco sensitive areas) அறிவிக்கப்படும்.
  • யானைகள் வழித்தடங்களில் சுதந்திரமாக நடமாடுவதற்கு இடையூறாக இருக்கும் அனைத்து நெருக்கடியான பகுதிகளும் (Bottle neck points) சரிசெய்யப்பட வேண்டும்.
  • முக்கிய நெருக்கடி பகுதிகளில் நிலங்களைக் கையகப்படுத்தி, மனித வாழ்விடங்களை அகற்ற வேண்டும்.
  • அதேபோல கூடலூரில் தனியார் நிலங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். குத்தகை காலம் முடிந்த தோட்ட நிலங்களை கைப்பற்றி, அவற்றை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும்.
  • யானை- மனித மோதல்களைத் தவிர்க்க புதிய கண்காணிப்பு அமைப்புகள் நிறுவப்பட வேண்டும்.
  • தேயிலைத் தோட்ட நிர்வாகங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ரிசர்வ் வனப்பகுதிக்கு அருகில் உள்ள செக்ஷன் 17 நிலங்களை கையகப்படுத்த வேண்டும்.
 
யானை வழித்தடங்கள்
படக்குறிப்பு,மசினகுடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வர்கீஸ்.
‘யானைகளின் வாழ்விடங்கள் மாறும் அபாயம்’

வனத்துறை அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டால், இந்தப் பகுதிகள் அனைத்தும் வனத்துறை கட்டுப்பாட்டில் சென்று விடும் எனவும், பல தலைமுறைகளாக இங்கு வசிப்பவர்கள் வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனவும் கூடலூர் மற்றும் மசினகுடி கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இந்த பிரச்னை தொடர்பாக பேசிய மசினகுடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வர்கீஸ், இந்த புதிய அறிக்கையின் பரிந்துரைகளை அமல்படுத்தினால் யானை- மனித மோதல்கள் அதிகரிக்கவே செய்யும் என்கிறார்.

“வழித்தடம் என்பதே இரண்டு யானை வாழ்விடங்களுக்கு இடையே செல்லக்கூடிய ஒரு குறுகிய பகுதி. அத்தகைய வழித்தடங்கள் வழியாக யானைகள் செல்லலாம், சாப்பிடலாம், தண்ணீர் குடிக்கலாம். ஆனால் அந்த இடத்தில் அவை தங்கி இனப்பெருக்கம் செய்ய முடியாது. இதுவே யானை வழித்தடத்திற்கான வரையறை." என்கிறார்.

மேலும், "நீலகிரி மலைப்பகுதியில் இருந்து மாயார் பள்ளத்தாக்கு வரை உள்ள 61,000 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பகுதியை வழித்தடம் என கூறியுள்ளார்கள். முதுமலையும் சத்தியமங்கலமும் தான் யானையின் வாழ்விடங்கள். இவ்வளவு பெரிய பகுதியை வழித்தடமாக மாற்றும்போது, யானைகள் தங்கள் வாழ்விடங்களை மாற்றிக்கொண்டு இங்கேயே தங்கி இனப்பெருக்கம் செய்யத் தொடங்கும்" என்கிறார் வர்கீஸ்.

 
யானை வழித்தடங்கள்
படக்குறிப்பு,கூடலூர் பகுதியில் ஏற்றப்பட்டுள்ள கறுப்பு கொடி.

"யானைகளின் இயற்கை வாழ்விடங்கள் மாறினால், அது யானை- மனித மோதலை அதிகரிக்கவே செய்யும். இந்த 61,000 ஹெக்டேர் பகுதியில் 1193 ஹெக்டேர் நிலப்பரப்பில் 10 பகுதிகளில் மனிதர்கள் வசிக்கிறார்கள். முதுமலை முதல் சத்தியமங்கலம் வரை உள்ள காடுகள் வழியாக யாரையும் தொந்தரவு செய்யாமல் யானைகள் சென்று வரும். மனிதர்களும் அவற்றை சீண்டுவதில்லை. இப்படியிருக்க முழு பகுதியையும் வழித்தடம் என அறிவித்தது தவறு.” என்று கூறுகிறார் வர்க்கீஸ்.

தொடர்ந்து பேசிய அவர், “எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கவே இந்தப் பகுதியின் அனைத்து வீடுகள், கடைகளில் கறுப்புக்கோடி ஏற்றியுள்ளோம். மக்கள் கருத்தைக் கேட்டு அரசு முடிவெடுக்க வேண்டும், அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து யானை வழித்தடங்களை முறையாக அடையாளம் காண வேண்டும்” என்று கூறினார்.

யானை வழித்தடங்கள்
படக்குறிப்பு,கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன்.
'வழித்தடங்களைக் கண்டறிவதில் குழப்பம்'

யானை வழித்தடங்களை எப்படி கண்டறிய வேண்டும் என்பதில் ஒரு பெரும் குழப்பம் நீடிப்பதாகக் கூறுகிறார் கூடலூர் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக கட்சியைச் சேர்ந்தவருமான பொன். ஜெயசீலன்.

“2000ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் 25 யானை வழித்தடங்கள் இருப்பதாக வனத்துறையினர் கூறினார்கள். பின்னர் 2017இல் மீண்டும் ஒரு கணக்கெடுப்பில் 18 வழித்தடங்கள் எனக் கூறினார்கள். அதன் பிறகு 2023இல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 20 என்றும் அதில் 15 தமிழ்நாட்டு எல்லைக்குள்ளும், மீதம் 5 கர்நாடகா, கேரளா எல்லைகளில் இருக்கிறது என்றும் கூறினார்கள். இப்போது 42 என்கிறார்கள்." என்று கூறினார்.

தொடர்ந்து பேசுகையில், “இந்த 161 பக்க அறிக்கையை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார்கள். இப்பகுதியில் உள்ள பாமர மக்கள் இதை எப்படி படித்து புரிந்துகொள்வார்கள். எனவே மக்களையும் உள்ளூர் பிரதிநிதிகளையும் அழைத்துப் பேச வேண்டும், இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்கிறார் சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன்.

 
யானை வழித்தடங்கள்
படக்குறிப்பு,சூழலியல் செயல்பாட்டாளரும், தமிழ்நாடு வன உயிரின வாரிய உறுப்பினருமான ஓசை காளிதாசன்.
யானை வழித்தடங்களின் முக்கியத்துவம்

இந்த உலகிற்கு காடுகள் வேண்டும் என்றால், காடுகளைக் காப்பாற்ற யானைகள் வேண்டும், யானைகளைக் காப்பாற்ற யானை வழித்தடங்கள் வேண்டும் என்று கூறுகிறார் சூழலியல் செயல்பாட்டாளரும், தமிழ்நாடு வன உயிரின வாரிய உறுப்பினருமான ஓசை காளிதாசன்.

“இரண்டு வாழ்விடங்களுக்கு இடையேயான குறுகிய பாதையை தான் யானை வழித்தடம் அல்லது வலசைப் பாதை என்று சொல்வார்கள். ஒரு வளர்ந்த யானைக்கு 150 கிலோ உணவு, 200 லிட்டர் தண்ணீர் வரை தேவைப்படும். உணவு தேடி அவை பயணித்துக் கொண்டே இருக்கும். இந்த வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டால் யானைகளால் ஒரு வாழ்விடத்திலிருந்து மற்றொன்றிற்கு செல்ல இயலாது.” என்கிறார் ஓசை காளிதாசன்.

தொடர்ந்து பேசிய அவர், “கடந்த சில வருடங்களாக பல பெரும் ஆக்கிரமிப்புகளால் யானை வலசைப் பாதைகள் மாறிவிட்டன. இதனால் யானைகளின் வாழ்விடங்கள் சுருங்கி விட்டதால், அவை விளை நிலங்களுக்குள் நுழைகின்றன. மக்கள் வசிக்கும் பகுதிகளால் யானைகளுக்கு பாதிப்பு இல்லை, காரணம் மக்களும் பழங்குடிகளும் பல காலமாக யானைகளோடு தான் வாழ்ந்து வருகிறார்கள். பிரச்னை யாரால் என்றால் புதிதாக முளைத்துள்ள பெரிய நிறுவனங்களின் ரிசார்டுகளாலும், ஆசிரமங்களாலும் தான். யானைகள், மக்கள் மற்றும் பழங்குடிகள், இரண்டு தரப்பையும் நாம் பாதுகாக்க வேண்டும்” என்று கூறுகிறார் ஓசை காளிதாசன்.

யானை வழித்தடங்கள்

பட மூலாதாரம்,@MMATHIVENTHAN

படக்குறிப்பு,தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்
தமிழக அரசு கூறுவது என்ன?

யானை வழித்தடத் திட்டத்துக்கு எழுந்திருக்கும் எதிர்ப்பு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், “கூடலூர், மசினகுடி மக்கள் யாரும் பதற்றப்படத் தேவையில்லை. இப்போது வெளியிடப்பட்டிருப்பது ஒரு திட்ட வரைவு மட்டுமே. அது நிபுணர்களுக்காக தயாரிக்கப்பட்ட வரைவு என்பதால் தான் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் மக்களிடம் இது குறித்து கருத்து கேட்கவில்லை. தேர்தல் முடிந்ததும் ஒவ்வொரு பகுதி மக்களிடமும் சென்று கருத்து கேட்போம்." என்றார்.

எதிர்க்கட்சிகள் இதை அரசியலாக்க முயற்சி செய்வதாகக் குற்றம்சாட்டிய அமைச்சர், "யானைகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் தான், அதற்காக எடுத்தோம் கவிழ்த்தோம் என்று யாரையும் வெளியேறச் சொல்ல மாட்டோம். சில பகுதிகளில் அதற்கான தேவை ஏற்பட்டாலும் அவர்களுக்கு தகுந்த நஷ்ட ஈடும், மாற்று இடமும் வழங்கப்படும்” என்றார்.

 
யானை வழித்தடங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால் கூடலூர், மசினகுடி பகுதி மக்கள் இதை ஏற்பதாகத் தெரியவில்லை. கூடலூரைச் சேர்ந்த விமல் பேசுகையில், “இப்படித்தான் கூடலூரின், ஓவேலி பகுதியில் புலிகள் காப்பகத் திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்தும்போது நஷ்ட ஈடும், மாற்று இடமும் தருவதாகச் சொன்னார்கள், ஆனால் அந்த மக்களுக்கு இன்றுவரை அது கிடைக்கவில்லை. பத்து தலைமுறைக்கும் மேலாக இங்கு வாழ்ந்து வருகிறோம். ஒருபோதும் யானை வாழ்விடங்களையோ வழித்தடங்களையோ நாங்கள் ஆக்கிரமித்ததில்லை” என்று கூறும் அவர் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறார்,

“பழங்குடிகளுக்கும் எங்களுக்கும் யானைகள் தான் பாதுகாப்பு, யானைகளுக்கு நாங்கள் தான் பாதுகாப்பு. எங்களை வெளியேற்றிவிட்டு என்ன செய்யப் போகிறார்கள்?”

https://www.bbc.com/tamil/articles/ce5llj4kr52o

தள்ளிப் போகும் பேரறிவாளன் திருமணம்? கண்ணீர் மல்கப் பேசிய அற்புதம் அம்மாள்

1 day 8 hours ago

தள்ளிப் போகும் பேரறிவாளன் திருமணம்? கண்ணீர் மல்கப் பேசிய அற்புதம் அம்மாள்

image_4c884ffbec.jpg

தமிழ்நாட்டில் அற்புதம் அம்மாள் என்றால் தெரியாதவர்கள் இல்லை. அவரது மகனைச் சிறையிலிருந்து மீட்பதற்காக 31 வருடங்கள் சட்டப் போராட்டத்தைச் சலிக்காமல் நடத்தியவர்.

எந்தக் கட்டத்திலும் சோர்ந்து போகாமல் இறுதிவரை உறுதியாக நின்று தனது மகனைச் சட்டத்தின் மூலம் விடுதலை பெற்றுத் தந்தவர்.

பேரறிவாளன் 1991 ஆம் ஆண்டு கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், தனது மகன் ஒரு அப்பாவி. விசாரணை என்று அழைத்துப் போன காவல்துறை, அவனை ராஜீவ் கொலை வழக்கில் சிக்க வைத்துவிட்டது என்று கூறி, இடைவிடாமல் போராடி வந்தார் அற்புதம்.

அதன்பின்னர் இவரது தூக்குத்தண்டனை 2014இல் ரத்து செய்யப்பட்டது. அதன்பின்னர் 2022 மே 18 அன்று உச்சநீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார்.

பேரறிவாளன் வெளியே வந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் மேலாகிவிட்டது. அவரது தாய் அன்னையர் தினத்தை ஒட்டி ஒரு யூடியூப் தளத்திற்குப் பேட்டி அளித்துள்ளார். அதில், தனது மகனின் எதிர்காலம் குறித்த கவலைகளை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பேரறிவாளன் விடுதலை ஆனதில் எனக்கு முழு மகிழ்ச்சி இல்லை. அவனுக்கு என்று ஒரு குடும்பம் அமைய வேண்டும். அப்போதுதான் முழு மகிழ்ச்சியை நான் அடைவேன். அவன் வெளியே சுற்றிக் கொண்டிருப்பதால் நான் மகிழ்ச்சி அடைந்துவிடவில்லை' என்று ஒரு தாயின் ஏக்கத்தை அந்தப் பேட்டியில் அவர் பதிய வைத்துள்ளார்.

மேலும் தனது மகனைப் பற்றி அற்புதம் அம்மாள் பேசுகையில், "ஒவ்வொரு முறையும் சிறையில் என் மகனை சந்திக்கும்போது எல்லாம், 'என்னப்பா இந்த முறையும் உன் விடுதலை தள்ளிப் போய்விட்டதே?' என்று வேதனையோடு சொல்வேன்.

அவன் மனம் தளராமல், 'அடுத்த முறை சரியாகிவிடும் அம்மா. நீ நம்பிக்கையோடு போய் வா' என்பான். அந்தளவுக்கு அவனது மன உறுதியை நான் பார்த்திருக்கிறேன்.

அப்போதுதான் எனக்கு நம்பிக்கையே வரும். எப்படியாவது நம் மகனைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று ஒரு வைராக்கியம் பிறக்கும். அப்படித்தான் என் மகனை மீட்பதற்காக 31 ஆண்டுகள் போராடினேன்.

ஒரு நாள் கூட என் குடும்பத்தைப் பற்றி நான் நினைத்ததே இல்லை. இந்த 31 ஆண்டுகள் நானும் என் வாழ்க்கையை இழந்திருக்கிறேன்.

என் மகன் சிறைக்குப் போகும் போது என் 2 மகள்களுக்கும் திருமணம் நடக்கவில்லை. ஒரு கொள்கைப் பிடிப்புள்ள ஒருவர் என் மகளை வந்து திருமணம் செய்து கொள்வதற்காகப் பார்த்துவிட்டுச் சென்றார்.

அடுத்த சில நாள்களிலேயே என் மகன் வழக்கில் சிக்கிக் கொண்டான். பேரறிவாளன் செங்கல்பட்டு சிறையிலிருந்தான். நான் போய் விசயத்தைச் சொன்னேன்.

அவன், 'திருமணத்தை மட்டும் நிறுத்தி விடாதீங்க. நிறைய புகைப்படங்கள் எடுங்கள். நான் வெளியே வரும்போது அவற்றைப் பார்த்துக் கொள்கிறேன்' எனத் தைரியம் கொடுத்தான். அந்த முடிவுதான் என் குடும்பத்தைக் காப்பாற்றியது. என் மகள்கள் இன்று நல்ல நிலையில் உள்ளனர்.

என் மகன் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, அவனுக்கு ஒரு கல்யாணம் செய்து வைத்துவிட வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. பலரிடம் என் அடுத்த வேலையே அதுதான் என்று சொல்லி வந்தேன்.

ஆனால், மகனின் விருப்பம் வேறாக உள்ளது. அவன் படித்து முடித்து நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறான். 'என் மனைவியை அடுத்தவர்கள் காசில் வாழ வைக்க நான் விரும்பவில்லை. நான் சம்பாதித்து வருபவரைக் காப்பாற்ற வேண்டும்' என்கிறான்.

அறிவுக்கு 52 வயதாகிவிட்டது. என் மகள்கள் அவரவர் தனித்தனியாக வாழ்கிறார்கள். இவனைப் பார்த்துக் கொள்ள ஒரு துணை வேண்டும். நாளை நானும் இல்லை என்று வரும்போது என் மகன் தனித்து நிற்பான். அந்த ஏக்கம் என் மனதில் இருக்கிறது. வருத்தம் இருக்கிறது.

அறிவு இப்போது 2 ஆம் ஆண்டு படித்து வருகிறான். அவனது படிப்பு முடிய இன்னும் 1 வருடம் உள்ளது. அதன்பிறகு அவன் திருமணம் செய்வான் என நினைக்கிறேன்.

அவன் எனக்கு ஏதாவது ஒரு மகிழ்ச்சியைத் தர வேண்டும் என விரும்பினால், அது அவன் திருமணம் செய்து கொள்வதில்தான் உள்ளது" என்றபடி கண் கலங்கி பேசி இருக்கிறார்.

இந்தச் சந்திப்பில் தனது அம்மாவைப் பற்றி பேரறிவாளன் பேசுகையில், "பொதுவாகவே தாய் அன்பு என்பது சிறந்ததுதான். ஆனால், அதை நிரூபிப்பதற்காக வாய்ப்புகள் பலருக்கும் கிடைக்காது. அந்த வகையில் எனக்காக எவ்வளவு தூரம் போராட முடியுமோ அதுவரை போராடி நிரூபித்தவர் என் அம்மா.

அவரை வழக்கமாக நான் நேருக்கு நேராகப் புகழ்ந்து பேசியதில்லை. அப்படி ஒரு பழக்கம் இருந்ததில்லை" என்று பேசிய அவர் தனது தாய்க்கு அன்புப் பரிசாக ஒரு புடவையை வாங்கி பரிசளித்துள்ளார்.
 

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/தள்ளிப்-போகும்-பேரறிவாளன்-திருமணம்-கண்ணீர்-மல்கப்-பேசிய-அற்புதம்-அம்மாள்/175-337361

 

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்பு 10 ஆக அதிகரிப்பு

1 week ago

சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 7 அறைகள் தரைமட்டமானது. 7 அறைகள் சேதமடைந்தது. இந்த விபத்தில் 6 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி இருந்த மற்றுமொரு தொழிலாளியின் உடல் 10 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்டது.

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் சரவணன்(55). இவர் செங்கமலப்பட்டி அருகே நாக்பூரில் உள்ள மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை(பெசோ) உரிமம் பெற்று சுதர்சன் பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் உள்ள 20க்கும் மேற்பட்ட அறைகளில் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 7 அறைகள் தரைமட்டமானது, மற்றொரு 7 அறைகள் சேதமடைந்தது. இந்த விபத்தில் 6 பெண்கள் உட்பட 9 உயிரிழந்தனர். இதில் ஒரு தொழிலாளியின் உடல் பட்டாசு ஆலையில் இருந்து 100 மீ தூரத்தில் இருந்து மீட்கப்பட்டது. காயமடைந்த 11 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில், 3 பேர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

7 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்ட உடல்: வெடி விபத்தில் ஒரு அறையில் தொடர்ந்து புகை வந்து கொண்டே இருந்ததால் மீட்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டது. மதியம் 2 மணிக்கு வெடி விபத்து நடந்த நிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டு மீட்பு பணிகள் நடந்தது. இரவு 9 மணி அளவில் இடிபாடுகளில் சிக்கி இருந்த தொழிலாளி அழகர்சாமியின் உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. அந்த கட்டிடத்தில் மேலும் இருவர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இறந்தவர்கள் பெயர் விபரம்: மத்தியசேனை சந்திரசேகர் மகன் ரமேஷ்(31), சந்திவீரன் மனைவி வீரலட்சுமி(48), வி.சொக்கலிங்கபுரம் குருசாமி மகன் காளீஸ்வரன்(47), சிவகாசி ரிசர்வ்லைன் மச்சக்காளை மனைவி முத்து(52), மாயாண்டி மனைவி ஆவுடையம்மாள்(75), சக்திவேல் மனைவி வசந்தி(38), இந்திரா நகர் கணேசன் மனைவி பேச்சியம்மாள் (எ) ஜெயலட்சுமி(22), லட்சுமி(43), விஜயகுமார்(30), மத்திய சேனையை சேர்ந்த கீதாரி மகன் அழகர்சாமி ஆகிய 10 பேர் உயிரிழந்தனர்.

இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிவகாசி அருகே ரிசர்வ்லைன் அய்யம்பட்டியை சேர்ந்த ஆவுடையம்மாள், அவரது மகள் முத்து, மருமகள் பேச்சியம்மாள் ஆகியோர் உயிரிழந்தனர்.

காயமடைந்தவர்கள் விபரம்: சிவகாசி ரிசர்வ் லைன் மாரீஸ்வரன் மனைவி மல்லிகா(35), மூக்கன் மகன் திருப்பதி(47), மகாலிங்கம் மகன் கண்ணன்(30), ஆலமரத்துப்பட்டி லட்சுமணன் மகன் சுப்புலட்சுமி(62), அய்யம்பட்டி ராமமூர்த்தி மனைவி நாகஜோதி(35), சித்திவிநாயகர் மனைவி மாரியம்மாள்(50),மத்தியசேனை செல்வம் மனைவி இந்திரா(48), ரெங்கசாமி மகன் ஜெயராஜ்(42), முருகன் மனைவி ரெக்கம்மாள்(40), பெருமாள் மகன் அழகுராஜா(30), அழகுராஜா மகன் அம்சவல்லி(32), சுரேஷ் மனைவி செல்வி(39), நாச்சான் மனைவி வீரலட்சுமி(35), ராஜாமணி மகன் மோகன்ராஜ்(35) ஆகியோர் காயமடைந்தனர்.

விபத்து நடந்த பட்டாசு ஆலையில் ஆய்வு விருதுநகர் எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா அளித்த பேட்டி: சிவகாசி செங்கமலப்பட்டியில் வெடி விபத்து தொடர்பாக உரிமையாளர் சரவணன், போர்மேன், மற்றும் மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது. இந்த பட்டாசு ஆலை விதிகளை மீறி ஒப்பந்ததாரர் மூலம் செயல்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றவாளிகளை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பட்டாசு ஆலை உரிமம் 2026 வரை உள்ளது. தொடர்ந்து விதிமுறைகளை மீறும் பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என கூறினார்.

இந்த விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் சரவணன், மேலாளர், போர்மேன் மற்றும் மாலையை லீசுக்கு எடுத்து நடத்தி வந்த முத்துகிருஷ்ணன் ஆகிய 4 பேர் என் மீது சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்பு 10 ஆக அதிகரிப்பு | Sivakasi Fireworks Factory Blast: Death Toll Rises To 10 - hindutamil.in

 

தமிழக முதலமைச்சராக மூன்றாண்டுகளை நிறைவு செய்த மு.க ஸ்டாலின்

1 week ago

Published By: DIGITAL DESK 7

09 MAY, 2024 | 04:37 PM
image
 

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட மு க ஸ்டாலின் மூன்றாண்டுகளை நிறைவு செய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார். இதைத்தொடர்ந்து அவருக்கு கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

poli_9524_2.jpg

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரத்யேக காணொளியில், ''  இது சொல்லாட்சி அல்ல. செயல் ஆட்சி. மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும் தான் இன்னும் என்னை உழைக்கத் தூண்டுகிறது. நம்பிக்கையோடு முன் செல்கிறேன். பெருமையோடு சொல்கிறேன். 'தலைசிறந்த மூன்றாண்டு தலை நிமிர்ந்த தமிழ்நாடு என..!'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக சமூக செயற்பாட்டாளர்கள் பேசுகையில், '' தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற நாளன்று அரசு பேருந்தில் மகளிருக்கு இலவச பயணம், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா நான்காயிரம் ரூபாய், ஆவின் பால் விலை குறைப்பு  உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை கைசாத்திட்டு நடைமுறைக்கு கொண்டு வந்தார்.

பாடசாலை மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் இடைநிற்றல் இல்லாமல் தொடர்ந்து கல்வி பயில்வதற்காக 'இல்லம் தேடி கல்வி', 'புதுமைப்பெண்', 'நான் முதல்வன்' என பல திட்டங்களை அறிமுகப்படுத்தியதுடன் நடைமுறை ப்படுத்தினார். மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு ஆதரவாக எதிர்வரும் ஜூலை மாதம் முதல் 'தமிழ் புதல்வன்' எனும் திட்டமும் நடைமுறைக்கு வரவிருக்கிறது. இதனால் மாணவ மாணவிகள் மட்டுமல்லாமல் அவர்களுடைய பெற்றோர்களும் பயனடைந்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 'காலை உணவு திட்டம்' பாரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

'மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தால் பயனடைந்து வரும் கோடி கணக்கிலான பெண்மணிகளும் முதல்வரை பாராட்டி வருகிறார்கள்.

கடும் நிதி சிக்கல் இருந்தும், மக்கள் நல திட்டங்களுக்கு நெருக்கடிகளிருந்தும், அழுத்தங்களிருந்தும் செயல்படுத்தும் அவருடைய சாதூரியம் மக்களால் பாராட்டப்படுகிறது.

'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டத்தையும் விளிம்பு நிலை மக்கள் பாராட்டி வருகிறார்கள்.

poli_9524.jpg

இருப்பினும் சிலிண்டர் விலை குறைப்பு, டீசல் விலை குறைப்பு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் போன்ற பல திட்டங்கள் இன்னும் நடைபெறப்படுத்தப்படாததால் முக ஸ்டாலின் மீது ஒரு பிரிவினர் அதிருப்தியும் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் தமிழகத்தின் கடன் சுமை தொடர்ந்து அதிகரித்து வருவதும் கவலை அளிக்கிறது. 

இந்த சூழலில் முதல்வராக பொறுப்பேற்று மூன்றாண்டை நிறைவு செய்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வரிடமிருந்து மேலும் பல நல்ல திட்டங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகி, அவை நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது': என்றனர்.‌

தமிழக அரசு மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து இதே வேகத்தில் நடைமுறைப்படுத்துமா? அல்லது இதைவிட கூடுதல் வேகத்தில் செயல்படுத்துமா? என்பது இதில் வரும் ஜூன் மாதம் நான்காம் திகதியன்று வெளியாகும் மக்களவைத் தேர்தல் முடிவுகளை பொறுத்து இருக்கும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

poli_9524_3.jpg

https://www.virakesari.lk/article/183069

கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறுவது எவ்வளவு கடினம்? உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்? பிபிசி கள ஆய்வு

1 week ago
கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறுவது எவ்வளவு கடினம்? உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்? பிபிசி கள ஆய்வு
2 மணி நேரங்களுக்கு முன்னர்

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில், இந்த ஆண்டு தரிசனத்திற்காகச் சென்ற 9 பேர் மரணித்துள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் மத்தியில் உயிரிழப்புகள் அதிகரிக்கக் காரணம் என்ன?

‘‘சபரிமலை போல் அல்லாமல் பாதை மிகக் கடினம் என்பதால், அவசர காலத்தில் நம்மை ‘டோலி’ மூலம் சுமந்து மலையடிவாரம் கொண்டு வருவது மிகக் கடினம். உடல்நிலை ஆரோக்கியமாக இல்லாதவர்கள் மலை ஏறுவதைத் தவிர்ப்பது நல்லது,” என்கிறார், வெள்ளியங்கிரி மலைக்குச் சென்று டோலியில் மீட்கப்பட்டு உயிர் பிழைத்துள்ள ரவி.

உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யாரையும் தொடர்பு கொள்ளக்கூட முடியாது, அங்கேயே மரணிக்க வேண்டிய நிலைதான் நீடிக்கிறது என்கிறார் வெள்ளியங்கிரிக்கு வந்த 55 வயதான முனியப்பன்.

கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறுவது எவ்வளவு கடினம்? உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்? பிபிசி கள ஆய்வு
வெள்ளியங்கிரி மலையின் அமைப்பு எத்தகையது?

உண்மையில் வெள்ளியங்கிரி மலை ஏறுவது எவ்வளவு கடினமானது? மலையின் அமைப்பு எத்தகையது?

கோவை மாவட்டத்தின் முக்கிய ஆன்மிகத் தலமான வெள்ளியங்கிரி மலை, தென்கைலாயம் எனவும் அழைக்கப்படுகிறது. கோவை நகரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் தமிழக – கேரள எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் இந்த மலை அமைந்துள்ளது.

ஏழு மலைகளைக் கொண்ட வெள்ளியங்கிரியின் அடிவாரத்தில், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு தரிசித்துவிட்டு கடல் மட்டத்தில் இருந்து 5,800 அடி உயரத்தில், 6.5 கி.மீ. தொலைவில் உள்ள ஏழாவது மலைக்குச் சென்று பக்தர்கள் சிவனை வழிபட்டுத் திரும்புகின்றனர்.

ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாத வரை, சிவராத்திரி, பங்குனி உத்திரம், சித்திரை முதல் நாள் மற்றும் சித்திரா பெளர்ணமி ஆகிய முக்கிய நாட்களிலும், செவ்வாய், வெள்ளி மற்றும் வார விடுமுறை நாட்களிலும் அதிகப்படியான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

பத்து வயது முதல் 60 வயது வரையிலுள்ள ஆண்கள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளிக்கின்றனர்.

 
மலையேறி இறந்தவர்கள் யார்?
கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறுவது எவ்வளவு கடினம்? உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்? பிபிசி கள ஆய்வு

இந்நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி துவங்கி மே 7ஆம் தேதி வரை வெள்ளியங்கிரி மலையேறிய 9 பேர் மரணித்துள்ளனர்.

இறந்தவர்களில் சிலரின் மரணத்திற்கு, மாரடைப்பு மற்றும் வெப்ப அதிர்ச்சி (Heat Stroke) காரணம் என்று அவர்களின் உடல்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளியங்கிரி மலை ஏறுவது எவ்வளவு கடினம்?

அடுத்தடுத்து 9 பேர் இறந்துள்ளதால், உண்மையில் வெள்ளியங்கிரி மலை ஏறுவது எவ்வளவு கடினம்? அங்குள்ள வசதிகள் குறித்து அறிய பிபிசி தமிழ் குழு வெள்ளியங்கிரி மலையில் கள ஆய்வு மேற்கொண்டது.

பிபிசி குழு வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலின் அடிவாரத்தை அடைந்தபோது அங்கு பல இடங்களில், ‘மலை ஏறுவதற்குரிய உடல் தகுதி உள்ளவர்கள் மட்டுமே மலை ஏறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது,’ என்ற அறிவிப்புகளுடன், அவசர உதவிக்கான எண்களும் ஒட்டப்பட்டு இருந்தன.

நுழைவுப் பகுதியிலேயே மலை ஏறுபவர்களுக்கு மூங்கில் குச்சி வழங்கி அங்கு, ‘வெள்ளியங்கிரி மலை ஏறுவது கடினம் என்பதை நான் அறிவேன், முழு உடல் தகுதியுடன்தான் மலை ஏறுகிறேன். எனது உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு நானே பொறுப்பாவேன்,’ என பக்தர்களிடம் கோவில் நிர்வாகத்தினர் சுய உறுதிமொழிக் கடிதத்தில் கையெழுத்து பெறுகின்றனர்.

ஆனால், நாம் பார்த்தவரை பலர் இந்தக் கடிதத்தை கொடுக்காமலே மலை ஏறுவதைக் காண முடிந்தது.

கோவில் சன்னிதானத்திற்கு முன் பகுதியில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருந்தது. முகாமை நாம் பார்வையிட்டபோது, மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பணியில் இருந்தனர். மலை ஏற்றத்திற்கு முன் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து அனுப்பினர்.

 
அடிப்படை வசதிகள் மிகக் குறைவு
கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறுவது எவ்வளவு கடினம்? உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்? பிபிசி கள ஆய்வு

நாமும் பக்தர்களுடன் இணைந்து மலை ஏறினோம். ஏழு மலைகளில், ஒன்று மற்றும் இரண்டாவது மலையில் மட்டுமே கற்களைக் கொண்ட கரடுமுரடான படிக்கட்டுகள் இருந்தன. மற்ற மலைகளில் பாறைகளில் படிக்கட்டுகளும், பல இடங்களில் படிக்கட்டுகள் இல்லாமல் மிகவும் கடினமான பாதையாகவும் இருந்தது.

சில இடங்களில் மட்டுமே மொபைல் சிக்னல் கிடைத்ததுடன், நான்காவது மலையில் தனியார் அமைப்பு சார்பில் ஒரு மருத்துவ முகாம் இருந்தது. ஏழு மலைகளிலும் பக்தர்கள் ஓய்வெடுக்க ஒரு வசதியும் இல்லை.

வழியில் ‘வாக்கி டாக்கி’ வசதியுடன் வனத்துறை பணியாளர்களைக் காண முடியவில்லை, சில மலைகளில் மட்டுமே வனத்துறையினர் பணியில் இருந்தனர்.

மலையேறிய பக்தர்களிடம் பிபிசி தமிழ் பேசியபோது, அவர்கள் பல குற்றச்சாட்டுகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறுவது எவ்வளவு கடினம்? உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்? பிபிசி கள ஆய்வு
‘தொலைதொடர்பு வசதி இல்லை’

பிபிசி தமிழிடம் பேசிய சென்னையைச் சேர்ந்த பிரேம்குமார் (27), ‘‘நான் சென்னை விமான நிலையத்தில் பணியாற்றுகிறேன். முதல் முறையாக வெள்ளியங்கிரி வந்துள்ளேன். செங்குத்தாக இருப்பதால் இங்கு மலை ஏறுவது மிகக் கடினமாக உள்ளது. படிக்கட்டுகள் மிகவும் சிதிலமடநை்து மோசமான நிலையில் உள்ளதுடன், ஓய்வெடுக்க ஒரு இடம்கூட இல்லை,’’ என்றார்.

சில இடங்களில் மட்டுமே மொபைல் போன் சிக்னல் கிடைக்கிறது, பாறையில் இருந்து நீர் வழியும் பகுதியில் குடிநீர் பிடிக்க ஏற்பாடு செய்துள்ளார்களே தவிர, அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை என்கிறார் பிரேம்குமார்.

உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யாரையும் தொடர்பு கொள்ளக்கூட முடியாது, அங்கேயே மரணிக்க வேண்டிய நிலைதான் நீடிக்கிறது, என்கிறார் ஐந்தாவது ஆண்டாக தரிசனத்திற்கு வந்துள்ள ஈரோட்டைச் சேர்ந்த முனியப்பன் (55).

மலையேறும் வழியில் செல்போன் சிக்னல் கிடைக்காது, வனத்துறையினரும் இல்லாததால் அவசர நேரத்தில் பக்தர்கள், மலையில் கடைகள் அமைத்துள்ள பழங்குடியின மக்களிடம்தான் உதவி கேட்க முடியும் என்கிறார் முனியப்பன்.

மேலும், ‘‘பழங்குடியினர் தங்கள் கடைகளுக்கு பொருட்கள் எடுத்துவர மலை அடிவாரத்திற்குச் செல்லும்போது செல்போன் ‘சிக்னல்’ கிடைக்கும் பகுதியில் கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்து, ‘டோலி’ ஏற்பாடு செய்வார்கள். அவர்கள் மேலே வந்த பிறகுதான் பாதிக்கப்பட்டவரை மீட்டுச் செல்வார்கள். இதற்குப் பல மணிநேரம் ஆகும்,’’ என்கிறார் முனியப்பன்.

 
‘டோலியில் வந்து உயிர் பிழைத்தேன்’
கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறுவது எவ்வளவு கடினம்? உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்? பிபிசி கள ஆய்வு

‘டோலி’யில் கடும் சிரமத்துடன் பயணித்து உயிர் பிழைத்துள்ள ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த ரவி (52) தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

நம்மிடம் பேசிய ரவி, ‘‘மூன்றாவது முறையாக 2022ஆம் ஆண்டு வெள்ளியங்கிரி சென்று தரிசனம் செய்தேன். மலை ஏறிவிட்டுத் திரும்பியபோது, நான்காவது மலை அருகே என்னால் நடக்க முடியவில்லை, உடல்நிலை மிக மோசமானது. மலைப்பகுதியில் ஓய்வெடுக்கக்கூட இடம் இல்லாத நிலையில், வெட்டவெளியில் அங்கேயே சில மணிநேரம் ஓய்வெடுத்தேன்,’’ என்றார் அவர்.

பொருட்கள் எடுத்துச்செல்லும் பழங்குடியினரிடம் தகவல் தெரிவித்தபோது, கீழே இருந்து 1.5 மணிநேரம் பயணித்து ‘டோலி’ சுமப்பவர்கள் அவரை அடைந்ததாகவும், அதன்பின் மூன்று மணிநேரத்திற்கு மேல் ‘டோலி’யில் பயணித்துதான் கீழே வந்து உயிர் பிழைத்ததாகவும், தனது அனுபவத்தை விவரிக்கிறார்.

‘‘சபரிமலை போல் அல்லாமல் இந்தப் பாதை மிககவும் கடினமாக இருக்கும். அவசரக் காலத்தில் நம்மை ‘டோலி’ மூலம் சுமந்து மலையடிவாரத்திற்குக் கொண்டு வருவது மிகக்கடினம் என்பதால், உடல்நிலை ஆரோக்கியமாக இல்லாதவர்கள் மலை ஏறுவதைத் தவிர்ப்பது நல்லது,’ என்கிறார் ரவி.

ரவியின் அனுபவத்தைக் கேட்டபோது, அவசரக் காலங்களில் ஒருவர் மலையடிவாரத்தை அடையவே பல மணிநேரம் ஆகும் என்பதையும், இந்தக் காரணத்தால் சமீபத்தில் மரணித்த 9 பேருக்கும் உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்கவில்லை என்பதையும் உறுதி செய்ய முடிகிறது.

 
‘ஏழு மணிநேரம் பயணிக்க வேண்டும்‘
கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறுவது எவ்வளவு கடினம்? உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்? பிபிசி கள ஆய்வு

உடல் பருமன் மற்றும் இதயக் கோளாறு உள்ளவர்கள் மலையேற வேண்டாம் என்கிறார், பத்து ஆண்டுகளாக மலை ஏறிவரும் ஈரோட்டைச் சேர்ந்த சுரேஷ் (30).

‘‘தொடர்ந்து பத்தாவது ஆண்டாக இங்கு வந்துள்ளேன். இந்த ஆண்டு தற்போது மூன்றாவது முறையாக நண்பர்களுடன் மலை ஏறுகிறேன். முதல் முறையாக மலை ஏறும்போது அச்சமாகவும் கடினமாகவும் இருந்தது. பின் மெதுவாக நான் மலை ஏறி முடித்ததும் ஒரு நம்பிக்கை வந்தது. பழக்கமாகிவிட்டதால் தற்போது எத்தனை முறை வேண்டுமானாலும் என்னால் மலை ஏற முடியும்,’’ என்கிறார் அவர்.

ஆரோக்கியமான ஒருவர் ஓய்வெடுத்து நடந்தாலே 6 மணிநேரம் பயணித்துதான் ஏழாவது மலையை அடைய முடியும் எனவும், மீண்டும் 6 – 7 மணிநேரத்தில் இறங்க முடியும், மற்றவர்களுக்கு இன்னும் நேரம் அதிகமாகும் என்கிறார் சுரேஷ்.

எனது அனுபவத்தில் சொல்கிறேன், மிகவும் உடல் பருமன் உள்ளவர்கள், 50 வயதைக் கடந்தவர்கள் மலை ஏறுவதைத் தவிர்ப்பது நல்லது எனத் தனது அனுபவத்தில் இருந்து கிடைத்த அறிவுரையை சுரேஷ் பகிர்ந்துள்ளார்.

பிபிசி தமிழிடம் பேசிய கோவையைச் சேர்ந்த மரகதம் (53), ‘‘இரண்டாவது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு வந்துள்ளேன். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கடும் வெயில் நிலவுவதால் மலை ஏறுவது மிகக் கடினமாக உள்ளது. நான்காவது மலையில் மட்டுமே மருத்துவ முகாம் உள்ளது, அவசர நேரங்களில் முதலுதவிகூட கிடைப்பது சிரமம். தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மலையிலும் ஒரு மருத்துவ முகாமும், ஓய்வெடுக்க ஏற்பாடும் செய்ய வேண்டும்,’’ என்கிறார் அவர்.

 
கோவில் நிர்வாகத்தின் விளக்கம் என்ன?
கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறுவது எவ்வளவு கடினம்? உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்? பிபிசி கள ஆய்வு

பக்தர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பிபிசி தமிழ் விளக்கம் கேட்டது.

பிபிசி தமிழிடம் பேசிய கோவிலின் செயல் அலுவலர் கோபால கிருஷ்ணன், ‘‘மலையடிவாரம் முதல் ஏழாவது மலை வரையிலுள்ள படிக்கட்டுகள் கோவில் கட்டுப்பாட்டில் உள்ளது. படிக்கட்டுகளைச் சீரமைப்பது, ஓய்வெடுக்க தற்காலிக ‘ஷெட்’ அமைப்பது போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த நிதி கேட்டு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம், நிதி கிடைத்தால் வசதிகள் மேம்படுத்தப்படும்,” என்றார்.

“தனியார் நிறுவனத்தை வைத்து டவர் நிறுவி ‘வாக்கி டாக்கி’ சோதனை முயற்சியாகப் பயன்படுத்தினோம். ஆனால், சிக்னல் கிடைக்கவில்லை என்பதால் ‘வாக்கி டாக்கி’ வசதி பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் அதிக தொலைவுக்கு சிகனல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென கோரிக்கையும் விடுத்துள்ளோம். அரசிடமும் ‘வாக்கி டாக்கி’ அமைப்பதற்கு உதவுமாறு கேட்டுள்ளோம்,’’ என்றார் கோபாலகிருஷ்ணன்.

மேலும் தொடர்ந்த கோபால கிருஷ்ணன், ‘‘ஒவ்வொரு மலையிலும் வனத்துறை பணியாளர்கள் உள்ளார்கள், நான்காவது மலை அருகே வனத்துறையின் முகாமும் உள்ளது, கோவில் பணியாளர்களும் நான்காவது மலையில் உள்ளனர். அவசரக் காலங்களில் அவர்களைத் தொடர்புகொள்ளலாம்,’’ என்றார்.

 
அமைச்சரின் விளக்கம் என்ன?
கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறுவது எவ்வளவு கடினம்? உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்? பிபிசி கள ஆய்வு

கடந்த ஆண்டு வெள்ளியங்கிரி மலை ஏறி தரிசனம் செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் பிபிசி தமிழ் விளக்கம் கேட்டது.

நம்மிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ‘‘ஆண்டில் மூன்று மாதங்கள் மட்டுமே பக்தர்கள் வெள்ளியங்கிரி செல்கிறார்கள், மற்ற நேரங்களில் மலை முழுவதிலும் யானை போன்ற காட்டுயிர்கள் உள்ளன. அங்கு நிரந்தரமான ஓய்வெடுக்கும் அறை கட்டுவது சிரமம், இருந்தாலும் தற்காலிகமாக ‘ஷெட்’ அமைப்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம்.

அங்குள்ள பிரச்னைகளைச் சரிசெய்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, அவசரக்கால உதவிக்கான ஏற்பாடுகளைச் செய்வது ஆகியவை குறித்து ஆலோசித்து வருகிறோம், விரைவில் சரிசெய்யப்படும்,’’ என்றார்.

கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறுவது எவ்வளவு கடினம்? உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்? பிபிசி கள ஆய்வு
யாரெல்லாம் மலைக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்?

பெரும்பாலும் பயிற்சியின்றி மலை ஏறும்போதுதான் தசைகள் அழுத்தத்திற்கு உட்பட்டு இளம் வயதினருக்கு ரத்த நாளங்கள் வெடித்து மாரடைப்பு ஏற்படுவதாகக் கூறுகிறார் சென்னை மருத்துவக்கல்லூரியின் இதயவியல் துறை பேராசிரியர் மனோகர்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சற்று வயதானவர்களாக இருந்தால் இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பால் மரணிப்பார்கள். அதேபோல், அதீத வெயில் நிலவுவதால், வெப்ப அதிர்ச்சி ஏற்பட்டு மூச்சுத் திணறலில் மாரடைப்பு ஏற்பட்டு மரணிப்பதும் நடக்கும்,’’ என்கிறார்.

ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய், உடல் பருமன் உள்ளவர்களும், அதிக வேலை செய்யாமல் போதிய உடற்பயிற்சி இல்லாமல் இருப்பவர்கள், இதய நோய் மற்றும் மூச்சுத் திணறல் உள்ளவர்கள் வெள்ளியங்கிரி மலை ஏறுவதைத் தவிர்ப்பது நல்லது என்கிறார் மனோகர்.

மலை ஏறும்போது உடல்நிலை சரியில்லாமல் போவது தெரிந்தாலே மலை ஏறுவதை உடனடியாக நிறுத்திவிட வேண்டும். அப்படிச் செய்தாலே உயிர் பிழைக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

இதை விளக்கிய மனோகர், ‘‘சிலர் சமவெளிப் பகுதியில் தங்கிப் பழகியதால் அவர்கள் உயரமாகச் செல்லும்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறலை எதிர்கொள்வார்கள். அப்படி ஏற்படும் பட்சத்தில் உடனடியாகக் கீழே இறங்கி வந்தால் உயிர் பிழைக்க முடியும். மலை ஏறும் முன்பு மூன்று மாதங்களாவது கட்டாயம் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் மலை ஏறுவதைத் தவிர்ப்பது நல்லது,’’ என்றார்.

https://www.bbc.com/tamil/articles/clw0878gyd0o

குமரி மாவட்டத்தில் 8 பேரை பலி கொண்ட 'கள்ளக்கடல்' சீற்றத்திற்கும் சுனாமிக்கும் என்ன ஒற்றுமை?

1 week 2 days ago
‘கள்ளக்கடல்’ சீற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சிராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, இராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற தென் கடலோரப் பகுதிகள் மற்றும் கேரளாவின் கடற்பகுதிகளில் மே 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (INCOIS), தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் மற்றும் இந்திய வானிலை மையம் ஆகியவை எச்சரித்திருந்தன.

இது வழக்கமான கடல் சீற்றமாக இல்லாமல், எந்தவித அறிகுறிகளும் இன்றி திடீரென கடல் கொந்தளித்து, கரையோரம் பலத்த பாதிப்பை ஏற்படுத்தும் ‘கள்ளக்கடல்' சீற்றம் (Swell Surge) என்பதால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை ஆகிய கடலோர பகுதிகளுக்கு ‘ரெட் அலர்ட்’ கொடுக்கப்பட்டிருந்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், விழுப்புரம், கடலூர், நாகை மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

0.5 மீட்டர் முதல் 1.8 மீட்டர் வரை கடல் அலைகள் எழும் என்பதால், கடலோர பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் யாரும் கடலில் இறங்கக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதையெல்லாம் தாண்டி கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரியில் மட்டும் கடந்த இரண்டு நாட்களில், 5 பயிற்சி மருத்துவர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்கடல் சீற்றம் என்றால் என்ன? இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? எச்சரிக்கை விடுக்கப்பட்டும் உயிரிழப்புகள் ஏற்பட்டது எப்படி?

 
‘கள்ளக்கடல்’ சீற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கள்ளக்கடல் சீற்றம் (Swell Surge)

2012ஆம் ஆண்டில், ‘கள்ளக்கடல்’ என்ற சொல் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பின் (யுனெஸ்கோ) முறையான ஒப்புதலைப் பெற்றது.

“கள்ளக்கடல் என்ற சொல் மலையாளத்திலிருந்து பெறப்பட்டது. 'கள்ளன் + கடல்', கள்ளன் என்றால் திருடன். திருடன் போல எந்தவித சத்தமும், முன்னறிவிப்பும் இல்லாமல் மக்கள் வசிக்கும் கரையோரப் பகுதிகளில் கொந்தளிப்புடன் நுழையும் கடல் நீர் என்ற அர்த்தத்தில் இந்த பெயர் வைக்கப்பட்டது” என்கிறார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்.

தொடர்ந்து பேசிய அவர், “கள்ளக்கடல் சீற்றம் குறித்து தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையத்துடன் இணைந்து வானிலை ஆய்வு மையம் மூலமாக பல எச்சரிக்கைகளை விடுத்து வந்தோம்.

பொதுவாக கடல் சீற்றம் மூன்று வகையில் ஏற்படும், ஒன்று கடலில் ஏற்படும் நிலநடுக்கம் போன்ற நிகழ்வுகளால் ஏற்படுவது, இரண்டாவது காற்றழுத்த தாழ்வு நிலை, புயல் காரணமாக ஏற்படுவது, மூன்றாவது எங்கோ தொலைதூரத்தில் வீசும் சூறாவளிகள் அல்லது பலத்த காற்றின் ஆற்றலால் உண்டாகும் அலைகள் அதே வேகத்தோடு கரையை நோக்கிச் செல்லும், மூன்றாவது வகையே கள்ளக்கடல்” என்று கூறினார்.

 
கள்ளக்கடல் சீற்றம் எதனால் ஏற்படுகிறது?
‘கள்ளக்கடல்’ சீற்றம்
படக்குறிப்பு,மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகத்தில் முதன்மை விஞ்ஞானியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற டாக்டர் வி.எஸ்.சந்திரசேகரன்.

“கடற்கரையோரம் வாழும் மக்கள் சாதாரண கடல் சீற்றத்தையும் கள்ளக்கடல் சீற்றத்தையும் ஒன்று என நினைக்கிறார்கள். இந்த கள்ளக்கடல் சீற்றம் என்பது பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உருவாகும் ஒரு ஆற்றல் கடல் அலைகள் மூலமாகப் பயணித்து பெரும் வேகத்துடன் கரையை அடைவது” என்கிறார் டாக்டர் வி.எஸ்.சந்திரசேகரன்.

இவர் மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகத்தில் முதன்மை விஞ்ஞானியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

தொடர்ந்து பேசிய அவர், “அவ்வாறு பெரும் ஆற்றலோடும் வேகத்தோடும் கரையை அடையும் அலைகள் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும். இந்த அலைகளில் மண், வண்டல் அதிகமாக இருக்கும். எனவே இத்தகைய கள்ளக்கடல் அலைகளில் நீச்சல் தெரிந்தவர்கள் சிக்கிக்கொண்டால் கூட தப்பிப்பது கடினம்.

காரணம் அந்த அலைகளில் சிக்கியவர்களின் நுரையீரலில் இந்த மண் மற்றும் வண்டல் நிறைந்து மூச்சுத்திணறி இறந்துவிடுவார்கள். அது மட்டுமல்லாது பெரும் வேகத்தோடும், ஆற்றலோடும் இந்த அலைகள் இருப்பதால் இதில் சிக்கியவர்கள் கரைகளில் இருக்கும் பாறைகளில் மோதி உயிரிழக்கவும் வாய்ப்புகள் உண்டு” என்கிறார்.

சுனாமி - கள்ளக்கடல் சீற்றம் என்ன ஒற்றுமை?
‘கள்ளக்கடல்’ சீற்றம்
படக்குறிப்பு,2004ஆம் ஆண்டு தமிழ்நாட்டைத் தாக்கிய சுனாமி.

“சுனாமி என்பது கடலுக்குள் ஏற்படும் பூகம்பத்தால் நிகழ்வது. அவ்வாறு கடலுக்குள் பூகம்பம் ஏற்படும் போது ராட்சத அலைகள் தோன்றி அவை கரையை நோக்கி நகரும். ஆனால் இந்த கள்ளக்கடல் சீற்றத்தில் காற்றிலிருந்து அலைகளுக்கு கடத்தப்படும் ஆற்றல் மட்டுமே பல ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு பயணம் செய்யும்.

இதனால் கரையை நெருங்கும்போது போது தான் பெரும் அலைகள் தோன்றும், அதுவரை இந்த ஆற்றல் அலைகள் மூலம் பயணிப்பது வெளியே தெரியாது. அதனால் தான் கள்ளக்கடலில் திடீரென எந்த ஆரவாரமும் இல்லாமல் கடல் கொந்தளிப்பு ஏற்படுகிறது” என்று கூறுகிறார் டாக்டர் வி.எஸ்.சந்திரசேகரன்.

“சுனாமிக்கும் இந்த கள்ளக்கடல் அலைகளுக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை என்னவென்றால், இரண்டுமே அதிகளவு கடல் மணலையும் வண்டலையும் சுமந்து வரும். கரையைத் தாண்டி அதிக தூரத்திற்கு அலைகள் செல்லும். இதனால் கூட சில சமயங்களில் சுனாமியும் கள்ளக்கடல் சீற்றமும் ஒன்று என புரிந்துகொள்ளப்படும்” என்று கூறினார் அவர்.

 
மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்
‘கள்ளக்கடல்’ சீற்றம்
படக்குறிப்பு,சமூக ஆய்வாளர் ஜோன்ஸ் தாமஸ்.

கள்ளக்கடல் சீற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுவது மீனவர்கள் தான் என்றும் ஆனால் அரசு கள்ளக்கடல் சீற்றம் குறித்து போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல் மெத்தனம் காட்டியதால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்கிறார் சமூக ஆய்வாளர் ஜோன்ஸ் தாமஸ்.

“கள்ளக்கடல் சீற்றம் ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்தில் நடக்கும் நிகழ்வு தான், ஆனால் இந்தமுறை தான் ‘ரெட் அலர்ட்’ கொடுக்கும் அளவுக்கு தீவிரமாக உள்ளது. மேற்கு கடற்கரைப் பகுதியில் கன்னியாகுமரி அமைந்திருப்பதால், இந்த பகுதி சற்று தாழ்வாக இருக்கும். இதனால் அலைகள் வழக்கமாகவே சற்று ஆக்ரோஷத்துடன் தான் வரும்.

இதனால் அதிகம் பாதிக்கப்படுவது மீனவர்கள் தான். கடந்த முறை குமரி மீனவர்களின் வீடுகளுக்குள் புகுந்த கடல் அலைகள், பல அடிகளுக்கு கடல் மண்ணை அப்படியே விட்டுச் சென்றன. இதனால் அவர்களுக்கு பொருளாதார ரீதியில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது.” என்கிறார் ஜோன்ஸ்.

தொடர்ந்து பேசிய அவர், “கடந்த சில நாட்களாகவே கள்ளக்கடல் சீற்றம் குறித்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டும், கடற்கரைகளில் முறையான பாதுகாப்பு வசதிகள் செய்யப்படாததால் தான் இத்தனை உயிரிழப்புகள். மீனவர்களின் வீடுகளுக்குள் தொடர்ந்து கடல் நீர் வருவதை அரசு நிர்வாகம் வேடிக்கை பார்த்தவாறே தான் இருந்தது. இந்த முறையும் அது போல கடல் நீர் வீடுகளுக்குள் புகும் அவ்வளவு தானே என நினைத்து இருந்துவிட்டார்கள்” என்று குற்றம் சாட்டுகிறார் சமூக ஆய்வாளர் ஜோன்ஸ் தாமஸ்.

 
கன்னியாகுமரியில் 8 பேர் உயிரிழப்பு
‘கள்ளக்கடல்’ சீற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அடுத்த கணபதிபுரம் பகுதியில் ஆயிரங்கால் பொழிமுகம் என்ற லெமூர் கடற்கரை பகுதி உள்ளது. திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்துவரும் பயிற்சி மருத்துவர்கள் 12 பேர் தங்கள் நண்பர் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்காக நாகர்கோவில் வந்துள்ளனர். இவர்களில் 8 பேர் நேற்று (06.05.2024) லெமூர் கடற்கரைக்கு சென்றுள்ளனர்.

கடற்கரையில் நின்றிருந்தபோது, கடல் சீற்றத்தால் வேகமாக எழுந்த பெரிய அலையில் அவர்கள் சிக்கிக்கொண்டனர். இதில் தஞ்சாவூரைச் சேர்ந்த சார்கவி (24), நெய்வேலியைச் சேர்ந்த காயத்ரி (25), ஆந்திராவைச் சேர்ந்த வெங்கடேஷ் (25), திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரவின் ஷாம் (23), கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சார்வதர்ஷித் (24) ஆகிய 5 பேரும் உயிரிழந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை அன்று (06-05-2024) கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தில் கடற்கரையில் நின்றிருந்த பிரேமதாஸ், அவரது 7 வயதான மகள் ஆதிஷா ஆகியோரும் கடல் சீற்றத்தில் சிக்கினர். அதில் பிரேமதாஸ் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் கடலில் மாயமான ஆதிஷா உயிரிழந்துவிட்டார். அவரது உடல் மட்டுமே கிடைத்தது.

சென்னையில் இருந்து சுற்றுலா வந்திருந்த 20 பேர் குழுவினர் குளச்சல் அருகே உள்ள கோடிமுனை கடற்கரையில் இருந்த போதும் இதேபோன்ற அசம்பாவிதம் நிகழ்ந்தது. வில்லிவாக்கம் மனோஜ் குமார், சூளைமேடு விசூஸ் ஆகியோர் கடலலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனர். பின்னர், அவர்களது உடல் மட்டுமே மீட்கப்பட்டது.

கள்ளக்கடல் சீற்றம் குறித்த தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையத்தின் எச்சரிக்கை விடுக்கப்பட்டும், கள்ளக்கடல் சீற்றத்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டே நாட்களில் 8 பேர் உயிரிழந்தது குறித்து மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதரிடம் கேட்டபோது,

“முறையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. கள்ளக்கடல் குறித்த எச்சரிக்கை கிடைத்தவுடன் லெமூர் கடற்கரை உட்பட அனைத்து கடற்கரைகளுக்கும் பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனால் ஊர் பாதை வழியாக பயிற்சி மருத்துவர்கள் அங்கு சென்றதால் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மாவட்ட நிர்வாகத்தோடு ஊர் மக்களும் ஒத்துழைத்தால் மட்டுமே இத்தகைய அசம்பாவிதங்களை தடுக்க முடியும். இன்னும் கடல் சீற்றம் இருப்பதால், ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை நீடிக்கிறது. மீனவர்களையும் தங்கள் படகுகளை இடைவெளி விட்டு, பாதுகாப்பான் இடங்களில் நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளோம்” என்று கூறினார்.

 
தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையத்தின் எச்சரிக்கை
‘கள்ளக்கடல்’ சீற்றம்

பட மூலாதாரம்,INCOIS,MOES/X

படக்குறிப்பு,தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையத்தின் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கை.

இந்த கள்ளக்கடல் சீற்றம் தொடர்பாக கடந்த மே 3ஆம் தேதி தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையத்தின் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “இந்திய பெருங்கடலின் தென் பகுதியிலிருந்து அதிக தூரம் பயணிக்கக் கூடிய ஆற்றல் உடைய அலைகள் கரையை நோக்கி வருவதால், அதன் தாக்கத்தில் கடல் சீற்றங்கள் மற்றும் மோசமான கடல் கொந்தளிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஏப்ரல் 26ஆம் தேதி இந்தியக் கடற்கரையிலிருந்து சுமார் 10,000 கிமீ தொலைவில், தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் தொடங்கிய இந்த நிகழ்வு, 28 ஏப்ரல் 2024இல் தெற்கு இந்தியப் பெருங்கடலை நோக்கி மெதுவாக நகர்ந்தது.

இது 4 மே 2024 அதிகாலையில் (02:30 மணி) இந்தியாவின் தென் முனையைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினத்தில் லட்சத்தீவு, கேரளா, தென் தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடற்கரைகளில் தாழ்வான பகுதிகளில் கடலோர வெள்ளம் ஏற்படலாம். தாழ்வான கடலோரப் பகுதிகள் அதிகம் பாதிக்கப்படக்கூடும்.

கடல் சீற்றம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு மீனவர்கள் மற்றும் கரையோர மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். சிறிய படகுகளை கரைக்கு அருகில் நிறுத்த வேண்டாம். மோதல் மற்றும் சேதத்தைத் தவிர்க்க, படகுகள் குறிப்பிட்ட இடைவெளி விட்டு நங்கூரமிடப்பட வேண்டும். இந்த நாட்களில் கடற்கரைகள் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் அனைத்து செயல்பாடுகள் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மொத்தமாக நிறுத்தப்பட வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cl40pm0kxzmo

சென்னை: நாய்களால் தாக்கப்பட்ட 5 வயது சிறுமிக்கு விரைவில் 'பிளாஸ்டிக் சர்ஜரி' - உடல்நிலை எப்படி இருக்கிறது?

1 week 3 days ago
சென்னையில் சிறுமியைக் கடித்துக் குதறிய நாய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 6 மே 2024, 14:01 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் வசித்துவரும் 5 வயது சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரால் வளர்க்கப்பட்ட ராட்வெய்லர் நாய்கள் கடித்துக் குதறியுள்ளன. அந்தச் சிறுமி தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

வளர்ப்பு நாய்கள் தொடர்பான கட்டுப்பாடுகள் என்ன சொல்கின்றன?

பூங்காவில் என்ன நடந்தது?

சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளிக்கூடச் சாலையில் இருக்கும் பூங்காவின் காவலாளியாக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரகு என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி சோனியா, குழந்தை சுதக்ஷா ஆகியோருடன், பூங்காவில் உள்ள ஒரு அறையிலேயே வசித்துவருகிறார்.

தனது உறவினர் ஒருவர் இறந்துவிட்டதால், அதற்காக விழப்புரம் சென்றிருக்கிறார் ரகு. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று (மே 5) இரவு 9 மணியளவில், அந்தப் பூங்காவுக்கு எதிரில் வசிக்கும் புகழேந்தி என்பவர் தனது இரண்டு ராட்வய்லர் ரக நாய்களுடன் அந்தப் பூங்காவிற்கு வந்திருக்கிறார். அப்போது அந்தப் பூங்காவில் விளையாடி கொண்டிருந்த சுதக்ஷாவை நாய்கள் தாக்க ஆரம்பித்துள்ளன. அந்த நாய்களை புகழேந்தியால் கட்டுப்படுத்த முடியவில்லை. குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கே வந்த குழந்தையின் தாய் சோனியாவையும் நாய்கள் தாக்கியுள்ளன.

இந்தத் தாக்குதலில், நாய்கள் குழந்தையின் தலைப் பகுதியில் உள்ள தோலைக் கடித்து குதறின. இதனால் தலையில் 11 அங்குலம் அளவுக்கு தோல் பிய்ந்து வந்துவிட்டது. இதற்குப் பிறகு அக்கம்பக்கத்தினர் வந்து நாயை விரட்டி, குழந்தையை மீட்டனர்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த குழந்தை, சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டது. அதன்பிறகு காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. நாயை வளர்த்த புகழேந்தி, அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

புகழேந்தி மீது ஐ.பி.சி 289-வது பிரிவு (மிருகங்கள் தொடர்பாக அலட்சியமான நடத்தை) ஐ.பி.சி 336 (பிறரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. நாய்கள் இரண்டும் அவரது வீட்டிற்குள்ளேயே இன்னும் இருக்கின்றன.

தற்போது குழந்தை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டிருக்கிறது.

 
சென்னை, நாய்கள், நாய்க்கடி, வளர்ப்புப் பிராணிகள்
படக்குறிப்பு,சம்பவம் நடந்த பூங்கா
சென்னை மாநகர ஆணையர் சொன்னது என்ன?

இதற்கிடையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், "ராட்வய்லர் வகை நாய்களை வளர்க்கத் தடை இல்லையென்றாலும், அதற்கு மாநகராட்சியிடம் உரிமம் பெற வேண்டும்," என்றார். இச்சம்பவத்தில் அந்த உரிமத்தை நாயை வளர்ப்பவர் பெறவில்லை என்று குறிப்பிட்டார்.

இதற்குப் பிறகு, இந்தச் சம்பவம் நடந்த பூங்காவைப் பார்வையிட்ட அவர், "கடித்த நாயின் உரிமையாளர்கள் இப்போது இங்கே இல்லை. ஆகவே ஏதாவது தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மூலம் நாயை அப்புறப்படுத்த யோசித்து வருகிறோம். ஒன்றிரண்டு நாட்களில் இது குறித்து முடிவு செய்வோம். தவிர, இதுபோன்ற நாய்களை வளர்ப்பதற்கு `கென்னல் கிளப் ஆஃப் இந்தியா` அமைப்பிடம் உரிமம் பெற்றிருந்தாலும் கூட மாநகராட்சியின் உரிமத்தையும் பெற வேண்டும்," என்றார்.

மேலும், "இதுபோன்ற நாய்களை வெளிநாடுகளில் சண்டைக்காக வளர்ப்பார்கள். அப்படி ஒரு நாயை, அதனைக் கட்டுப்படுத்தும் கயிறுகூட இல்லாமல் இவ்வளவு வீடுகள் இருக்கும் இடத்தில் அவிழ்த்து விடுவதாக இப்பகுதியினர் கூறுகிறார்கள். ஏற்கனவே இங்கிருக்கக் கூடிய கோழி ஒன்றை இந்த நாய்கள் கடித்துக் குதறியிருக்கின்றன. குழந்தைக்கு தலையில் மட்டுமல்லாமல் உடலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது குழந்தை மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளது. இன்னும் சில நாட்களுக்குப் பிறகு குழந்தைக்கு பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை செய்யப்படும்," என்று தெரிவித்தார்.

 
சென்னை, நாய்கள், நாய்க்கடி, வளர்ப்புப் பிராணிகள்

பட மூலாதாரம்,RADHAKRISHNAN

இந்தியாவில் நாய் பிரச்னை

இந்தியாவில் நாய்கள் தொடர்பாக இருவிதமான பிரச்னைகள் உள்ளன.

ஒன்று தெரு நாய்கள் தொடர்பான பிரச்னை. இரண்டாவதாக, வளர்ப்பு நாய்கள் - அதாவது ஆக்ரோஷமான வளர்ப்பு நாய்கள் - தொடர்பான பிரச்னை.

தெரு நாய்களைப் பொருத்தவரை, அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த, உள்ளூராட்சி அமைப்புகள் தெரு நாய்களைப் பிடித்து அவற்றுக்கு கருத்தடை செய்து மீண்டும் தெருவிலேயே விட்டுவிடுகின்றன.

மற்றொரு பக்கம், தனிநபர்கள் ஆக்ரோஷமான குணமுடைய நாய்களை வளர்ப்பது இந்தியாவின் பல நகரங்களில் பிரச்சனையாகவே நீடித்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த மார்ச் 12-ஆம் தேதி ஆக்ரோஷமான குணமுடைய நாய்களை வளர்ப்பதற்குக் கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது.

 
சென்னை, நாய்கள், நாய்க்கடி, வளர்ப்புப் பிராணிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ராட்வய்லர் நாய் (கோப்புப் படம்) - ஆக்ரோஷமான நாய் ரகங்களில் ஒன்று

மீன் வளம், மிருக நலன், பால்வளத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலரான ஓ.பி.சௌத்ரி ஒரு சுற்றறிக்கையை எல்லா மாநில தலைமைச் செயலர்களுக்கும் அனுப்பினார். அந்தச் சுற்றறிக்கையில், "மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நாய் இனங்களை வைத்திருக்கவோ, வளர்க்கவோ, இனப்பெருக்கம் செய்விக்கவோ அனுமதியோ, உரிமமோ அளிக்க வேண்டாம்" எனக் கூறியிருந்தார்.

பல மாநிலங்களிலும் நாய் கடித்ததால் ஏற்பட்ட மரணங்களை அடுத்து இந்த சுற்றறிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்தச் சுற்றறிக்கையில் பிட்புல் டெர்ரியர், டோஸா இனு, அமெரிக்கன் ஸ்டஃப்போர்ட்ஷயர் டெர்ரியர், டோகோ அர்ஜென்டைனோ, அமெரிக்கன் புல்டாக், ராட்வய்லர் உள்ளிட்ட நாய் ரகங்களின் பெயர்கள் இதில் இடம்பெற்றிருந்தன.

இதுபோன்ற நாய்களை வைத்திருப்பவர்கள் அவற்றுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றும் சுற்றறிக்கை கூறியது.

 
சென்னை, நாய்கள், நாய்க்கடி, வளர்ப்புப் பிராணிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தெரு நாய்ககளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த, உள்ளூராட்சி அமைப்புகள் தெரு நாய்களைப் பிடித்து அவற்றுக்கு கருத்தடை செய்து மீண்டும் தெருவிலேயே விட்டுவிடுகின்றன

ஆனால், இந்தச் சுற்றறிக்கையை எதிர்த்து சில நாய் உரிமையாளர்கள் வழக்குத் தொடர்ந்த நிலையில், இந்தியாவில் உள்ள இரண்டு உயர் நீதிமன்றங்கள் இதற்குத் தடை விதித்தன. மேற்கு வங்கத்தில் தன்மய் தத்தா என்பவர் உயர் நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். இந்தியாவில் எந்தச் சட்டம் நாய் வளர்ப்பைத் தடை செய்கிறது என தனது மனுவில் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சுற்றறிக்கையின் ஒரு பகுதிக்குத் தடை விதித்தது. இந்த நாய்களை இறக்குமதி செய்யவும் விற்கவுமான தடையை ஏற்றுக்கொண்டது.

அதேபோல, மார்ச் 19-ஆம் தேதி ராட்வய்லர் நாயை வளர்க்கும் ஒருவர் இந்தச் சுற்றறிக்கையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நாய்கள் தொடர்பான பல தரப்பினரையும் ஆலோசிக்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியிருந்தார். இதையடுத்து, இந்த முடிவுகள் எதன் அடிப்படையில் எடுக்கப்பட்டனவோ, அதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி, இந்த சுற்றறிக்கைக்குத் தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்.

 
சென்னை, நாய்கள், நாய்க்கடி, வளர்ப்புப் பிராணிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வளர்ப்புப் பிராணிகளுக்கான உரிமம், அவற்றின் கழிவுகளை அப்புறப்படுத்துதல், இனப்பெருக்கம் ஆகியவை தொடர்பாக சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது
நாய் வளர்ப்பதற்கான உரிமம்

சென்னையைப் பொருத்தவரை, வளர்ப்புப் பிராணிகளை வளர்க்க சென்னை மாநகராட்சியிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஆன்லைனிலும் பதிவுசெய்து கொள்ளலாம். இதற்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் இந்த உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும்.

இந்த உரிமம், வளர்ப்புப் பிராணிகளின் கழிவுகளை அப்புறப்படுத்துதல், இனப்பெருக்கம் ஆகியவை தொடர்பாக சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. ஆனால், ஒருவர் தனது வளர்ப்புப் பிராணியை பதிவு செய்யாமல் இருந்தால், பிரச்னை ஏற்படாமல் இருக்கும் வரை அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

உயர் ரக நாய்களை வளர்ப்பவர்கள் கென்னல் கிளப் ஆஃப் இந்தியாவில் பதிவு செய்கின்றனர்.

"கென்னல் கிளப் ஆஃப் இந்தியாவைப் பொருத்தவரை, நாய்களின் இனத் தூய்மை குறித்து மட்டுமே பதிவுசெய்கிறோம். ஒரு உயர் ரக நாய் இருந்தால், அதன் தாய்-தந்தை யார் என்பதை ஆராய்ந்து சான்றிதழ் அளிக்கிறோம். நாய்களை வளர்ப்பதற்கான உரிமம் எதையும் நாங்கள் தருவதில்லை," என்கிறார் அந்த அமைப்பைச் சேர்ந்த சி.வி.சுதர்ஸன்.

தமிழ்நாட்டில் தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக, மாநில அரசு கொள்கை ஒன்றை உருவாக்கிவருகிறது. இந்தக் கொள்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

https://www.bbc.com/tamil/articles/c4n1xg77228o

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையான பாக்ஜலசந்தி கடலினை 10 மணிநேரம் 10 நிமிடங்களில் நீந்தி கடந்து 12 வீரர்கள் சாதனை!

1 week 4 days ago
05 MAY, 2024 | 06:19 PM
image
 

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை பாக்ஜலசந்தி கடலினை 10 மணிநேரம் 10 நிமிடங்களில் 12 நீச்சல் வீரர்கள், வீராங்கணைகள் தொடர் ஓட்ட முறையில் (RELAY RACE) நீந்தி சாதனை படைத்தனர். 

இந்தியாவின் மகாராஸ்ட்ரா மாநிலம், தானே பகுதியில் செயற்பட்டுவரும் ராம் சேது திறந்த நீர் நீச்சல் அறக்கட்டளையை சேர்ந்த மகராஸ்ட்ரா மாநிலத்தின் 12 நீச்சல் வீராங்கனைகள் இரண்டு குழுக்களாக பிரிந்து தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை உள்ள சுமார் 30 கி.மீ தொலைவிலான பாக்ஜலசந்தி கடற்பரப்பினை நீந்தி கடப்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு அனுமதி  கோரியிருந்தனர்.

இந்தியா / இலங்கை இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில் வெள்ளிக்கிழமை (03) பிற்பகல் ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து இரண்டு படகுகளில் தங்கள் நீச்சல் பயிற்சியாளர் தலைமையில் மீனவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினர் தலைமன்னாரை வந்தடைந்தனர். 

தலைமன்னாரிலிருந்து சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு கடலில் குதித்து தொடர் ஓட்ட முறையில் (RELAY RACE) நீந்தத் தொடங்கி 12 பேரும் மாலை 4.40 மணியளவில் (10 மணி நேரம் 20 நிமிடங்களில் நீந்தி) தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியை சென்றடைந்தனர். 

கடலில் நீந்தி சாதனை படைத்தவர்களை சுங்கத்துறை, மரைன் பொலிஸார், சுற்றுலாப்பயணிகள் அரிச்சல்முனையில் வரவேற்றனர்.

Screenshot_20240505_064533_Video_Player.

Screenshot_20240505_064448_Video_Player.

Screenshot_20240505_064440_Video_Player.

Screenshot_20240505_064541_Video_Player.

Screenshot_20240505_064551_Video_Player.

Screenshot_20240505_064516_Video_Player.

Screenshot_20240505_064523_Video_Player.

Screenshot_20240505_064557_Video_Player.

https://www.virakesari.lk/article/182766

தமிழ்நாடு போலீஸ் செயலி மீது சைபர் தாக்குதல் - சுமார் 9 லட்சம் எஃப்ஐஆர், 54 ஆயிரம் காவலர்கள் விவரம் திருட்டா?

1 week 4 days ago
தமிழ்நாடு காவல்துறை இணையதளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்பு படம் கட்டுரை தகவல்
  • எழுதியவர், சிராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 5 மே 2024, 14:01 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கடந்த மே 3, 2024 வெள்ளிக்கிழமை அன்று, தமிழ்நாடு காவல்துறையின் முக அடையாள மென்பொருள் செயலி (Face recognition software- எப்ஆர்எஸ்) ஹேக் செய்யப்பட்டு, அதிலிருந்த தகவல்கள் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்காக பதிவேற்றப்பட்டுள்ளன என்று பால்கன்ஃபீட்ஸ் (Falconfeeds) எனும் நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

சைபர் பாதுகாப்பு மீறல் நடந்துள்ளது உண்மைதான் என சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது. உடனடியாக தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது, இந்த சம்பவம் குறித்து சென்னை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம், தமிழ்நாடு காவல்துறையின் கிரைம் அண்ட் கிரிமினல் டிராக்கிங் நெட்வொர்க்ஸ் அண்ட் சிஸ்டம்ஸ் (CCTNS- சிசிடிஎன்எஸ்) இணையதளம் ஹேக் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் மீண்டும் தமிழ்நாடு காவல்துறையை குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முக அடையாள மென்பொருள் செயலி என்றால் என்ன? அதிலிருந்து எந்தெந்த தகவல்கள் திருடப்பட்டுள்ளன? இத்தகைய சைபர் தாக்குதல்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன?

முக அடையாள மென்பொருள் செயலி (எப்ஆர்எஸ்)
தமிழ்நாடு காவல்துறை இணையதளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழ்நாடு காவல்துறையின் சிசிடிஎன்எஸ் தரவுத் தளத்திலிருந்து தேடப்படும் நபர்கள், காணாமல் போனவர்கள் மற்றும் அடையாளம் தெரியாத இறந்த உடல்களை முக அடையாளம் மூலம் கண்டுபிடிக்க எப்ஆர்எஸ் மென்பொருள் செயலி பயன்படுகிறது. இந்த எப்ஆர்எஸ் மென்பொருள் கொல்கத்தாவின் மத்திய உயர்கணிணி மேம்பாட்டு மையத்தால் உருவாக்கப்பட்டது என தமிழ்நாடு காவல்துறை கூறுகிறது.

தமிழ்நாடு முழுவதும் 46,112 காவலர்களால் இந்த எப்ஆர்எஸ் மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது.

இந்த செயலியில் ஏற்பட்ட சைபர் பாதுகாப்பு மீறலால் 62 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 54,828 காவலர்களின் அதிகாரப்பூர்வ விவரங்கள் டார்க் வெப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்கிறார் பால்கன்ஃபீட்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி நந்தகிஷோர் ஹரிகுமார்.

பால்கன்ஃபீட்ஸ் என்பது தொழில்நுட்ப ரீதியிலான அச்சுறுத்தல்கள் குறித்த நுண்ணறிவு வழிகாட்டுதல்களை வழங்கும் ஒரு நிறுவனம். அமெரிக்கா மற்றும் இந்தியாவில் இயங்கும் இந்நிறுவனம் டார்க் வெப் தளங்களில் வெளியிடப்படும் தகவல்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

“12 லட்சம் வரிகள் கொண்ட தரவுகள் திருடப்பட்டுள்ளன. வலேரி என்ற குழு, இந்த சைபர் பாதுகாப்பு மீறலுக்கு பொறுப்பேற்றுள்ளது. மொத்தம் 54,828 தமிழக காவலர்களின் பயனர் ஐடி, பயனர் பெயர், முழு பெயர், அவர்கள் பணியாற்றும் காவல் நிலையம் குறித்த விவரங்கள், முகவரி, தொலைபேசி எண்கள் என அனைத்து விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. 2,738 காவல்நிலையங்கள் குறித்த விவரங்களும் இதில் இருக்கின்றன.

குறிப்பாக 8,98,352 முதல் தகவல் அறிக்கைகளின் (எப்ஐஆர்) விவரங்கள் திருடப்பட்டுள்ளன. இதில் புகார் கொடுத்தவர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர், வழக்கை விசாரிக்கும் அதிகாரி என அனைவரின் விவரங்களும் உள்ளன. இவை தவறானவர்களின் கைகளுக்கு சென்றால் கண்டிப்பாக மிகப்பெரிய பிரச்னை ஏற்படும்” என்கிறார் ஹரிகுமார்.

 
தரவுகள் திருட்டால் ஏற்படும் பாதிப்புகள்
தமிழ்நாடு காவல்துறை இணையதளம்
படக்குறிப்பு,பால்கன்ஃபீட்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி நந்தகிஷோர் ஹரிகுமார்.

வலேரி ஹேக்கிங் குழுவால் திருடப்பட்ட தகவல்களில் அதிகாரிகள், காவலர்கள் குறித்த விவரங்கள் மட்டுமல்லாது, பொதுமக்களின் விவரங்களும் இருப்பதால் இதுவொரு தீவிரமான பிரச்னை தான் என்கிறார் ஹரிகுமார்.

தொடர்ந்து பேசுகையில், “எப்ஆர்எஸ் செயலியில் ஒருவரது படத்தைப் பதிவேற்றி, தேடினால் அவரைக் குறித்த எச்சரிக்கை மற்றும் தகவல்கள் காவலர்களுக்கு கிடைக்கும். அவ்வாறு 2,35,753 தேடல்கள் குறித்த அனைத்து விவரங்களும், அதன் முடிவுகளும் திருடப்பட்டு டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு உள்ளன.

எப்ஐஆர்களில் இருக்கும் தனிப்பட்ட அடையாள விவரங்கள் (குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது சந்தேகத்திற்குரிய நபர்களின்) மூலம் சம்மந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் வாய்ப்பும் உள்ளது.

உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட காவல் நிலையத்திலிருந்து அழைக்கிறோம் என்று கூறி, தனிப்பட்ட அடையாள விவரங்களுடன், வழக்கின் விவரங்களையும் கூறும்போது, அதை நம்பி மக்கள் பணம் செலுத்தலாம். இது மிகப்பெரிய மோசடிக்கு வழிவகுக்கும்” என்று கூறினார் நந்தகிஷோர் ஹரிகுமார்.

 
குற்றவாளிகளின் தரவுகள் கசிந்தால் என்னவாகும்?
தமிழ்நாடு காவல்துறை இணையதளம்
படக்குறிப்பு,சைபர் சட்ட வல்லுநரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான வி.பாலு.

புலனாய்வு நுட்பங்களின் போக்கில் டிஜிட்டல் தடயங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இத்தகைய சைபர் பாதுகாப்பு மீறல்கள் குறித்த விழிப்புணர்வு பலருக்கும் இல்லை என கவலை தெரிவிக்கிறார் சைபர் சட்ட வல்லுநரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான வி.பாலு.

“இன்று பல புலனாய்வு அமைப்புகளின் விசாரணையில் முக்கிய பங்கு வகிப்பது டிஜிட்டல் தடயங்கள் தான். ஒரு குற்றவாளியின் கைரேகை, கால் பாத ரேகை, கண் விழித்திரைப் பதிவு, டிஎன்ஏ என எல்லாவற்றையும் டிஜிட்டல் வடிவில் தொகுத்து, 75 ஆண்டுகள் வரை அதை சேமித்து வைக்க அனுமதி அளிக்கும் Criminal procedures identification act என்ற சட்டத்தை 2022ஆம் கொண்டு வந்தார்கள்.

இவ்வாறு டிஜிட்டல் வடிவில் சேகரிக்கப்படும் குற்றவாளிகள் குறித்த தகவல்கள் அந்நிய நாட்டு சக்திகளிடம் அல்லது கிரிமினல் கும்பல்களிடம் சிக்கினால், போதை மருந்து கடத்தல் முதல் பயங்கரவாதம் வரை அவர்கள் இந்தத் தரவுகளை வைத்து தங்களது நாசகர வேலைகளுக்கு தேவையான நபர்களை எளிதாக அடையாளம் கண்டு, அவர்களைத் தொடர்பு கொள்ள முடியும்” என்கிறார் வி.பாலு.

தொடர்ந்து பேசிய அவர், “இந்த டிஜிட்டல் தடயங்கள் மற்றும் தரவுகள் என்பது இன்றைய நிலையில் மனிதர்களின் மிகப்பெரிய சொத்து. அதிலும் அரசிடமிருந்து ஒரு தனி மனிதனின் அடையாளத்தைத் திருடுவது மிகப்பெரிய குற்றம். எனவே அரசும் அதிகாரிகளும் இதை தீவிரமான பிரச்னையாக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.

இந்தத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு சைபர் கிரைம் சார்ந்த பயிற்சிகள், படிப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்த விழிப்புணர்வுவையும் ஏற்படுத்த வேண்டும்” என்று கூறினார் வி.பாலு.

அரசுத்துறை தளங்கள் குறிவைக்கப்படுவது ஏன்?
தமிழ்நாடு காவல்துறை இணையதளம்
படக்குறிப்பு,இணையக் குற்றத் தடுப்பு வல்லுநர் முரளிகிருஷ்ணன் சின்னதுரை.

"தொலைபேசி எண்கள், முகவரி என்பதைத் தாண்டி ஒருவரின் அங்க அடையாளங்கள் முதற்கொண்டு அனைத்து அடிப்படை தகவல்களும் டார்க் வெப்பில் விற்பனைக்கு கிடைப்பது என்பது மிகவும் தீவிரமாக அணுகப்பட வேண்டிய ஒரு இணைய அச்சுறுத்தல்" என்று கூறுகிறார் இணையக் குற்றத் தடுப்பு வல்லுநர் முரளிகிருஷ்ணன் சின்னதுரை.

"கடந்த சில மாதங்களாக ஒரு புது வகையான மோசடி நடைபெறுகிறது, ஒருவருக்கு தொலைபேசியில் அழைத்து, 'உங்கள் பெயரில் போதைப் பொருள் பார்சல் ஒன்று விமான நிலையத்தில் வந்துள்ளது' என்று கூறி மிரட்டுவது. இவ்வாறு ஒருவரிடம் பேசுவதற்கு முன் அவரைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் சேகரிப்பார்கள்.

ஒருவரது கடந்த கால தகவல்களுக்கு ஏற்றவாறு தான் இந்த மோசடிகள் செயல்படுத்தப்படுகின்றன. அத்தகைய தனிப்பட்ட தகவல்களை டார்க் வெப்பில் விலை கொடுத்து வாங்க ஒரு பெரும் சமூக விரோதக் கூட்டமே தயாராக இருக்கிறது" என்கிறார் முரளிகிருஷ்ணன்.

பொதுவாக சைபர் தாக்குதல்களில் அதிகமாக குறிவைக்கப்படுவது அரசின் தரவு தளங்களே. இதற்கு காரணம் என்னவென அவரிடம் கேட்டபோது, "அரசு அலுவலகங்களின் டிஜிட்டல் சாதனங்களுக்கு என போதிய முதலீடுகள் இருப்பதில்லை. பல வருடங்களுக்கு ஒரே சாதனங்களையே பயன்படுத்துகிறார்கள்.

உதாரணமாக ஒரு இணைய திசைவியை (router) அவ்வப்போது மாற்ற வேண்டும், அதேபோல இணைய சர்வர்களையும் மாற்ற வேண்டும். ஆனால் அதைச் செய்வதில்லை. தொழில்நுட்பம் ஒருபக்கம் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்க, இந்த பழைய சாதனங்களை வைத்துக்கொண்டு அரசுத் துறைகள் திணறுகின்றன. டிஜிட்டல் யுகத்தில் பொது மக்களின் தரவுகள் சார்ந்த விஷயத்தில் சுணக்கம் காட்டாமல், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அரசுத் துறைகளில் இதற்கென நிதி ஒதுக்க வேண்டும்” என்று கூறினார்.

“வேடிக்கையான விஷயம் என்னவென்றால் கடவுச்சொல்லை கூட அவ்வப்போது மாற்றாமல், குழுவாக ஒரே கடவுச்சொல்லை பயன்படுத்துவார்கள். இப்படி இருந்தால் சைபர் தாக்குதல்கள் எளிதாக நடைபெற தான் செய்யும்.

அரசு அலுவலகங்களில் சைபர் பாதுகாப்பு விதிகள் ஒழுங்காக பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒருமுறை தொழில்நுட்ப வல்லுநர் குழு மூலம் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்துகிறார் முரளிகிருஷ்ணன்.

 
தமிழ்நாடு காவல்துறை கூறுவது என்ன?
தமிழ்நாடு காவல்துறை இணையதளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழ்நாடு காவல்துறையின் முக அடையாள மென்பொருள் செயலி ஹேக் செய்யப்பட்டு, விவரங்கள் திருடப்பட்டுள்ளது தொடர்பாக சென்னை காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பால்கன்ஃபீட்ஸ் எனும் தளத்தில் தமிழ்நாடு காவல்துறையின் முக அடையாள மென்பொருள் செயலியில் சைபர் பாதுகாப்பு மீறல் நடந்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டது.

எப்ஆர்எஸ் செயலி TNSDC-எல்காட் மூலம் ஹோஸ்ட் செய்யப்பட்டுள்ளது. சமீபத்திய தணிக்கை தமிழ்நாடு மின்-ஆளுமை முகமை மூலம் 13.03.2024 அன்று மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் அட்மின் கணக்கின் கடவுச்சொல் திருடப்பட்டதால் இது நடந்தது என தெரியவந்துள்ளது. அதன் மூலம் பயனர்களுக்கான ஐடியை உருவாக்குதல், எவ்வளவு தேடுதல் எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்டது மற்றும் முன் முனை (Front end) விவரங்களை மட்டுமே பார்க்க முடியும்.

இது தொடர்பாக எல்காட், தமிழ்நாடு மின்-ஆளுமை முகமை மற்றும் கொல்கத்தாவின் மத்திய உயர்கணிணி மேம்பாட்டு மையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பு நடவடிக்கையாக அட்மின் கணக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டது. இது குறித்து சென்னை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேலும் தகவல்களை பெற சென்னை சைபர் கிரைம் அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது, அவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

சைபர் பாதுகாப்பு மீறல்

பட மூலாதாரம்,ADGP

படக்குறிப்பு,சென்னை காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை

இலங்கை சுற்றுலா: குறைந்த செலவில் செல்ல விரும்புவோர் அவசியம் அறிய வேண்டிய தகவல்கள்

1 week 4 days ago
இலங்கை சுற்றுலா - குறைந்த செலவில் செல்ல அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

58 நிமிடங்களுக்கு முன்னர்

பண்பாட்டு-கலாசார ரீதியாக தமிழ்நாட்டுக்கு மிக நெருக்கமான நாடாக இலங்கை விளங்குகிறது. இந்தக் காரணத்திற்காகவும் அதன் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும் இந்தத் தீவு நாட்டுக்குச் செல்ல தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் ஆர்வம் காட்டுகின்றனர்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், மலைப் பிரதேசங்கள், கடற்கரைகள், காட்டுயிர் சரணாலயங்கள், தனித்துவமான-சுவையான உணவுகளுக்காக உங்களின் பயண ‘லிஸ்ட்டில்' இலங்கை நிச்சயமாக இருக்கும்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கையில், 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நெருக்கடி உச்சக்கட்டத்தை அடைந்தது. 2023ஆம் ஆண்டின் பிற்பகுதியில்தான் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியது.

தங்கள் நாட்டு பொருளாதார வளர்ச்சிக்காக சுற்றுலாத் துறையைப் பெரிதும் சார்ந்திருக்கிறது இலங்கை. 2023ஆம் ஆண்டில் முதல் இரண்டு மாதங்களிலும், 2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா - குறைந்த செலவில் செல்ல அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரஷ்யாவில் இருந்தே 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, இந்தியாவிலிருந்தே அதிகளவிலானோர் வருகை தந்துள்ளனர். இந்தத் தகவலை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்மூலம் இந்தியாவிலிருந்து அதிகளவிலானோர் இலங்கைக்குப் பயணிப்பது தெளிவாகிறது. குறைந்த செலவில் பயணம், இ-விசா சலுகை போன்ற வசதிகளும் இந்தியர்கள் இலங்கையைத் தேர்ந்தெடுப்பதற்கான முக்கியக் காரணங்களாக உள்ளன.

குறைந்த செலவில் எப்படி இலங்கைக்குச் செல்லலாம், இந்தியர்களுக்கு இலங்கையில் உள்ள வசதிகள் என்னென்ன, அங்கு நிச்சயம் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன என்பதை இங்கே காணலாம்.

 
இ-விசா சலுகை
குறைந்த செலவில் இலங்கை செல்ல அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவிலிருந்து சுற்றுலா செல்லும் நோக்கத்திற்காக இலங்கை செல்பவர்கள், https://www.srilankaevisa.lk/ எனும் இணையதளத்தில் பயண ஆவணங்களைப் பதிவேற்றி, இ-விசா பெற்று இலங்கை செல்லலாம்.

சுற்றுலா துறையை மேம்படுத்தும் பொருட்டு, இந்தியா, சீனா, ரஷ்யா உட்பட ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த இ-விசா வசதியை அந்நாட்டு அரசு கடந்த அக்டோபர், 2023இல் அறிவித்தது.

அதன்படி, இலங்கை செல்வதற்கு முன்பு, குறிப்பிட்ட இணையதளத்தில் விவரங்களைப் பதிவிட்டு இ-விசா பெற்றுக்கொள்ளலாம். இந்த இ-விசா மூலம் இலங்கையில் அதிகபட்சம் 30 நாட்கள் வரை தங்கியிருக்கலாம்.

இலங்கை சுற்றுலா - குறைந்த செலவில் செல்ல அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

குறைந்த பயண செலவு

தமிழ்நாட்டிலிருந்து இலங்கை செல்வதற்கு ஏராளமான விமான வசதிகள் உள்ளன. அதிலும் குறைவான பயண செலவிலேயே இலங்கை சென்று வர முடியும்.

சென்னையைச் சேர்ந்த ‘வேண்டர்லஸ்ட்' எனும் பயண நிறுவனத்தின் நிறுவனர் பாலாஜி கண்ணன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “தமிழ்நாட்டுக்கு மிகவும் அருகில் இருப்பதாலும் விமான கட்டணம் குறைவாக இருப்பதாலும் இங்குள்ள மக்கள் சுற்றுலாவுக்காக இலங்கையை அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர்.

இலங்கை செல்வதற்கான நடைமுறை எளிதானது. விசா தேவையில்லை. இ-விசாவை ஆன்லைன் மூலமாகவே பெறலாம். ஒருவர் இலங்கை சென்றுவர 15,000-18,000 ரூபாய் இருந்தாலே போதுமானது," என்கிறார்.

விமானப் போக்குவரத்து மட்டுமின்றி, நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து அவ்வப்போது பயணப்படகு ஒன்றையும் அரசு இயக்கி வருவதாக அவர் தெரிவித்தார். மேலும், சென்னையிலிருந்து தனியார் கப்பல் மூலமாகவும் ஜூன் மாதத்தில் இலங்கைக்கு பயணிக்கலாம் என பாலாஜி கண்ணன் தெரிவித்தார். கடல்வழிப் போக்குவரத்து எப்போதும் இருக்காது என்பதால், விமானப் பயணமே இலங்கை செல்ல ஏற்றது என்றும் அவர் பரிந்துரைக்கிறார்.

 
இந்திய ரூபாயை பயன்படுத்த முடியுமா?
குறைந்த செலவில் இலங்கை செல்ல அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எந்தவொரு வெளிநாட்டுக்குச் செல்லும்போதும் இந்திய ரூபாயை அந்த நாட்டுப் பணமாகவோ அல்லது அமெரிக்க டாலர்களாகவோ மாற்றினால்தான் நாம் அதைச் செலவுகளுக்குப் பயன்படுத்த முடியும். ஆனால், இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கென இதிலும் இலங்கை அரசு சலுகை வழங்கியிருக்கிறது.

அதாவது, இந்திய ரூபாயை அப்படியே யூபிஐ மூலமாக இலங்கையில் நாம் பயன்படுத்த முடியும். அதற்கென பெரும்பாலான இடங்களில் க்யூ-ஆர் கோடு வசதியும் செய்யப்பட்டுள்ளது. அதை நாம் ஸ்கேன் செய்தால், இந்திய ரூபாய் மதிப்பு, இலங்கை ரூபாய் மதிப்புக்கு மாற்றி அப்படியே பணத்தைச் செலுத்திவிடலாம்.

இதுதொடர்பாக பிபிசி தமிழுக்காக இலங்கை செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத் அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சகத்திடம் பேசியபோது, “இது இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கென இலங்கை அரசு செய்துள்ள சலுகை. இதற்கென பல்வேறு இடங்களில் க்யூ-ஆர் கோடு வசதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுலா - குறைந்த செலவில் செல்ல அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதன்மூலம் எளிதாக பணத்தைச் செலுத்தலாம். இதனால், சுற்றுலாப் பயணிகள் இலங்கை பணமாகவோ அல்லது அமெரிக்க டாலர்களாகவோ மாற்ற வேண்டிய அவசியம் இல்லை,” எனத் தெரிவித்தனர்.

ஆனால், இந்திய ரூபாயை கரன்சியாக அங்கு பயன்படுத்த முடியாது. எனினும், சில இடங்களில் யூபிஐ வசதி இல்லாமல் இருந்தால், அசௌகரியங்களைச் சமாளிக்க கொஞ்சம் பணத்தை இலங்கை ரூபாயாகவோ அமெரிக்க டாலர்களாகவோ மாற்றி வைத்திருப்பது நல்லது என்கிறார் பாலாஜி கண்ணன்.

மற்ற செலவுகள் எப்படி இருக்கும்?

இலங்கையில் தங்குவதற்கு ஒரு நாளைக்கு ரூ.3,000-3,500 செலவிலேயே நல்ல ஹோட்டல்கள் கிடைக்கும் என, பாலாஜி கண்ணன் தெரிவித்தார்.

“பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மெல்ல மீண்டு வருவதால், இன்னும் சில இடங்களில் சுற்றுலா வசதிகளுக்கான சேவைகள், பொருட்களின் விலை அதிகமாகத்தான் இருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு இலங்கை பணத்தைவிட அதிகம் என்பதால், அதிக செலவு இருக்காது," என்றார் பாலாஜி.

 
தவறவிடக்கூடாத இடங்கள்
இலங்கை சுற்றுலா

பட மூலாதாரம்,SAIKO3P/GETTY IMAGES

கொழும்புவில் இருந்து பதுல்லாவுக்கு செல்லும் ரயில் பயணம் நிச்சயம் சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டிய பயணம். அந்த ரயில் செல்லும் வழி மிக அழகு நிறைந்தது. மிகவும் மெதுவாக, 10 மணிநேரம் செல்லக்கூடிய இந்தப் பயணம், சிலருக்கு அசௌகரியமாக இருந்தாலும் இந்தப் பயணத்தின்போது நாம் பார்க்கக்கூடிய இடங்கள் மனதுக்கு மிக இனிமையாக இருக்கும்.

இலங்கை அழகிய கடற்கரைகளுக்குப் பெயர் போன நாடு. கடல் சார்ந்த சாகசங்களில் ஆர்வம் உள்ளவர்கள், மிரிசா, பென்டோடா போன்ற கடற்கரைகளுக்குச் செல்லலாம்.

காட்டுயிர்கள் மீதான ஆர்வம் கொண்டவர்கள் யாலா, உடவலவே போன்ற தேசிய காட்டுயிர் பூங்காக்களுக்குச் செல்லலாம். இங்கு, யானை, சிறுத்தை மற்றும் பலவகையான பறவைகளைக் காண முடியும்.

இலங்கையில் நிச்சயம் காண வேண்டிய மலைப்பிரதேசங்களும் உண்டு. தேயிலைத் தோட்டங்களால் நிரம்பிய எல்லா, நுவரெலியா போன்ற மலைப் பகுதிகளின் அழகை அவசியம் காண வேண்டும்.

இலங்கையின் கலைப் பாரம்பரியத்தின் சின்னமாகக் கருதப்படும் சிகிரியா கோட்டை, தம்புள்ளை குகை கோவில், அனுராதபுரம் போன்றவற்றுக்கு இலங்கையின் கலை அழகை ரசிக்கச் செல்லலாம்.

https://www.bbc.com/tamil/articles/cd1vm1rgrrjo

சேலம்: பட்டியலின மக்கள் கோவில் நுழைவுக்கான பேச்சுவார்த்தையில் கலவரம் வெடித்தது ஏன்? பிபிசி கள ஆய்வு

1 week 5 days ago
தீவட்டிப்பட்டி கலவரத்திற்கு காரணம் என்ன
கட்டுரை தகவல்
  • எழுதியவர், ச.பிரசாந்த்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 4 மே 2024, 05:00 GMT
    புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர்

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி கிராமத்தில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில், வழிபாடு நடத்துவது தொடர்பாக பட்டியலின மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் இடையே நடந்த கலவரத்தில் கடைகளுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்தியது.

கலவரத்திற்கான உண்மை காரணம் என்ன? பிபிசி தமிழ் அங்கு கள ஆய்வு மேற்கொண்டபோது தெரிய வந்தது என்ன?

கலவரத்தில் நடந்தது என்ன?

சேலம் மாவட்டம் காடையம்பட்டி தாலுகா அருகே தீவட்டிப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களின் 500 குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்திற்கு மிக அருகிலுள்ள நாச்சினம்பட்டியில் 200 பட்டியலின குடும்பங்கள் உள்ளன.

இரு கிராமத்தின் மத்தியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் இந்தாண்டுக்கான திருவிழா சில நாட்களுக்கு முன்பு துவங்கியுள்ளது.

 
தீவட்டிப்பட்டி கலவரத்திற்கு காரணம் என்ன

இந்நிலையில், மே 1ஆம் தேதி இரவு, "ஆதிக்க சாதியினர் தங்களை கோவிலுக்குள்விட மறுக்கிறார்கள்" எனக் குற்றம்சாட்டிய பட்டியலின மக்கள் அவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.

இதனால் பிரச்னைக்குத் தீர்வு காண, மே 2ஆம் தேதி இருதரப்பையும் அழைத்த வருவாய்த்துறையினர் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இருதரப்பும் சமரசம் அடையாத நிலையில், அன்று மதியமே இருதரப்பிற்கும் கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக்கொண்டனர். அப்போது, அப்பகுதியில் இருந்த நகைக்கடை, காய்கறிக்கடை என 5 கடைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால், இது கலவரமாக மாறி தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையில் அங்கு என்ன நடந்தது? கலவரத்திற்கான காரணம் என்ன? என்பதை அறிய பிபிசி தமிழ் தீவட்டிப்பட்டி கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.

இதேபோன்ற பிரச்னை ஏற்பட்ட திருவண்ணாமலை அருகே உள்ள அம்மன் கோவில் ஒன்றில், கோவிலுக்குள் வந்து பட்டியலின மக்கள் வழிபாடு செய்யத் தொடங்கியதால் மற்ற சமூக மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்கென புதிய கோவில் கட்ட தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து விரிவாகப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

 
‘இருதரப்பிலும் பாதிப்பு’
தீவட்டிப்பட்டி கலவரத்திற்கு காரணம் என்ன

நாங்கள் தீவட்டிப்பட்டி மற்றும் நாச்சினம்பட்டிக்குச் சென்றபோது, இரு கிராமங்களிலும் திரும்பிய திசையெல்லாம் போலீசாரும், திருவிழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களும் காட்சியளித்தன.

நாச்சினம்பட்டி நுழைவுப்பகுதியில் பரபரப்பான அந்த சாலையில், கலவரத்திற்கு சாட்சியாகத் தீக்கிரையான கடைகளும் அந்தக் கடைகளில் இருந்த பொருட்களும் இருந்தன.

தீக்கிரையான நகைக்கடைக்கு அருகே பூக்கடை நடத்தி வரும் சரஸ்வதியிடம் பேசியபோது, "இந்தக் கட்டடத்தில் ஆதிக்க சாதி, பட்டியல் சாதி எனப் பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்கள் கடை வைத்துள்ளனர். தீ பிடித்ததில் இருதரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்தபோது, அன்று மதியம் 1:00 மணிக்கு மேல் திடீரென இப்பகுதியில் பல இளைஞர்கள் கற்களை வீசித் தாக்கிக் கொண்டு இருந்தனர்," என அன்று நடந்தது குறித்து விவரித்தார்.

அப்போது ஒரு காய்கறிக்கடையில் தீப்பிடித்ததாகவும் அந்தத் தீ மளமளவென அருகிலுள்ள கடைகளுக்குப் பரவியதாகவும் பிபிசி தமிழிடம் பேசிய சரஸ்வதி கூறினார். இருப்பினும் காய்கறிக்கடை அருகே ஒரு டிப்பர் லாரி நின்றிருந்ததால் யார் தீ வைத்தது எனத் தெரியவில்லை என்கிறார் அவர்.

சரஸ்வதியிடம் பேசிவிட்டு பட்டியலின மக்கள் வசிக்கும் நாச்சினம்பட்டி கிராமத்தினுள் சென்றபோது அங்குள்ள வேப்பமரத்தின் அடியில், சில பெண்கள், இளைஞர்கள் தலையில் காயத்திற்கான கட்டுகளுடன், மற்றவர்களோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் கோவில் தொடர்பாக ஏற்பட்ட கலவரம் குறித்தும் அன்று என்ன நடந்தது எனவும் வினவினோம்.

 
தீவட்டிப்பட்டி கலவரத்திற்கு காரணம் என்ன
‘கோவிலுக்குள் வரவிடாமல் தடுத்ததால் தான் பிரச்னை’
தீவட்டிப்பட்டி கலவரத்திற்கு காரணம் என்ன
படக்குறிப்பு,'எங்களை கோவிலுக்குள் வழிபட அனுமதிக்க வேண்டும்' என்று கோரிக்கை வைக்கிறார் தங்காய்.

இத்தனை ஆண்டுகளாகத் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் வந்ததில்லை என்றும் "ஆதிக்க சாதி இளைஞர்கள் தற்போது எங்களை கோவிலுக்குள் வரவிடாமல் தடுத்ததால்தான் பிரச்னை" எழுந்ததாகத் தெரிவிக்கிறார் தங்காய்.

‘‘எனக்கு 63 வயதாகிறது. பல ஆண்டுகளாக நாங்கள் மாரியம்மன் கோவிலுக்கு உள்ளே சென்று வழிபாடு நடத்தி வருகிறோம். எங்கள் பகுதியில் உற்சவரான மாரியம்மனை வைத்து பூஜை செய்து கோவிலுக்கு அழைத்துச் சென்றுதான் திருவிழா நடத்துவார்கள். அங்குள்ள சாதியினரும் நாங்களும் ஒன்றாகத்தான் இருந்து வந்தோம்.

ஆனால், இந்த ஆண்டு பட்டியல் சாதியினர் கோவிலுக்குள் வரக்கூடாது என்று பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த சிறுவர்களும் இளைஞர்களும் கூறியதோடு சாதிப் பெயரை வைத்து மிக மோசமாகத் திட்டியதாகவும்" கண்ணீருடன் தழுதழுத்த குரலில் நம்மிடம் பேசினார் அவர்.

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசத் துவங்கிய தங்காய், ‘‘பட்டியலின சாதியில் பிறந்தால் என்ன? நாங்களும் மனிதர்கள்தானே, எங்களுக்கும் கோவிலுக்குள் சென்று வழிபட உரிமை உள்ளது. நாங்கள் எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம், எங்களை கோவிலுக்குள் வழிபட அனுமதிக்க வேண்டும், மீண்டும் நாங்கள் பிரச்னையின்றி வாழ வேண்டும்,’’ என்றார்.

 
‘போலீசார் எங்களை மட்டுமே தாக்கினார்கள்’
தீவட்டிப்பட்டி கலவரத்திற்கு காரணம் என்ன
படக்குறிப்பு,'போலீசார் தாக்கியதில், பத்துக்கும் மேற்பட்ட பெண்கள், இளைஞர்கள் படுகாயமடைந்து உள்ளனர்', என்கிறார் வீரம்மா.

கலவரம் முடிந்ததும் போலீசார் தங்கள் கிராமத்தினுள் நுழைந்து கடுமையாக தங்களைத் தாக்கியதாகவும், வீடு புகுந்து பெண்களையும் தாக்கியதாகவும் குற்றம் சாட்டுகிறார் வீரம்மா.

‘‘நான் அன்று வீட்டில்தான் இருந்தேன். திடீரென பிரச்னை எனத் தெரிந்ததும் சென்று பார்த்தபோது, அங்கு எங்கள் பகுதி இளைஞர்கள் மீது ஆதிக்க சாதியினர் கற்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கினார்கள். பலரும் மண்டை உடைந்து படுகாயமடைந்தனர்.

கலவரம் முடிவதற்குள் நான் வீட்டுக்கு வந்தபோது, எங்கள் பகுதிக்கு வந்த போலீசார் எங்களை கடுமையாகத் தாக்கி, தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். அவர்களின் தாக்குதலில், பத்துக்கும் மேற்பட்ட பெண்கள், இளைஞர்கள் படுகாயமடைந்து உள்ளனர்,’’ என்கிறார் வீரம்மா.

 
‘நான் வேலைக்கு போயிட்டு வந்தேன், என்னையும் அடித்தார்கள்’
தீவட்டிப்பட்டி கலவரத்திற்கு காரணம் என்ன
படக்குறிப்பு,கலவரம் நடந்த அன்று கூலி வேலைக்குச் சென்று வீடு திரும்பிய தன்னை போலீசார் தாக்கியதாகக் கூறுகிறார் பசுபதி.

வீரம்மாவின் கூற்றையே பசுபதியும் கூறுகிறார். காலில் காயமடைந்து படுக்கையில் இருந்தபடி நம்மிடம் பேசிய பசுபதி, ‘‘அன்று கலவரம் நடந்தது குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. கூலி வேலைக்குச் சென்றுவிட்டு மாலை நான் வீட்டுக்கு வந்தபோது திடீரென வீட்டிற்குள் வந்த போலீசார் என்னை லத்தியால் கடுமையாக அடித்தார்கள். எதற்காக அடிக்கிறீர்கள் என நான் கேட்டபோது என்னைத் திட்டியதுடன், கலவரம் செய்கிறாயா? எனக் கூறி அடித்தார்கள்,’’ என்கிறார்.

மேலும் தனது காயத்தைக் காண்பித்து, இரு நாட்களாகப் படுக்கையில் இருப்பதாகவும், தனக்கு ஏற்கெனவே பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் இந்த நிலையில் போலீஸார் தாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார் பசுபதி.

ஆனால், போலீசார் தாக்கியதாக பட்டியலின மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன்.

பிபிசி தமிழிடம் பேசிய காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், ‘‘நாங்கள் கலவரத்தில் ஈடுபட்டோரைத்தான் கைது செய்தோம். அப்போது, ஆதாரத்திற்காக நாங்கள் வீடியோ எடுத்துதான் கைது நடவடிக்கையில் ஈடுபட்டோம். பட்டியலின மக்கள் புகார் தெரிவித்தால், வீடியோவை ஆய்வு செய்து தவறு இருந்தால் அத்துமீறிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,’’ எனக் கூறி குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்.

பட்டியலின மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள், கோரிக்கைகள் குறித்து பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களின் கருத்துகளைக் கேட்டறிய தீவட்டிப்பட்டி கிராமத்திற்குச் சென்றோம்.

கிராமத்தின் நுழைவுப் பகுதியில் இருந்த மாரியம்மன் கோவில் திருவிழாக் கோலத்தில் அலங்காரம், விளக்குகளுடன் காட்சி அளித்தாலும், கலவரத்தால் திருவிழா தடைபட்டுள்ளதால் கோவிலே வெறிச்சோடி வெறும் போலீசாருடன் காணப்பட்டது.

 
‘பட்டியலின மக்கள் உள்ளே வரக்கூடாது’
தீவட்டிப்பட்டி கலவரத்திற்கு காரணம் என்ன
படக்குறிப்பு,மாரியம்மன் கோவில் தர்மகர்த்தா கோபிநாத்.

அந்தக் கோவிலைக் கடந்து சென்று பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரைச் சந்தித்துப் பேசினோம். அப்போது அவர்கள் பட்டியல் சாதி மக்கள் கோவிலுக்குள் வரக்கூடாது எனவும் இது தங்கள் பாரம்பரியம் எனவும் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

நம்மிடம் பேசிய கோவிலின் தர்மகர்த்தாவான கோபிநாத், ‘‘பல தலைமுறையாக நாங்கள் இந்தக் கோவிலை நடத்தி வருகிறோம். இதை எங்கள் சாதி உள்பட ஐந்து சாதியைச் சேர்ந்தவர்கள் நடத்துகிறோம். அவர்கள் (பட்டியலின மக்கள்) கோவிலுக்கு வெளியில் நின்றுதான் வழிபாடு செய்வார்கள், பல தலைமுறையாக அப்படித்தான் கடைபிடிக்கிறோம். நாங்கள் எங்கள் பாரம்பரியத்தைக் கடைபிடிப்போம், அவர்கள் எங்களுக்குத் தேவையில்லை எங்கள் கோவிலுக்கு அவர்கள் வர வேண்டாம்,’’ என்று கூறினார் அவர்.

"இது அனைவருக்கும் பொதுவான கோவில்தானே? பிறகு ஏன் பட்டியலின மக்கள் வர வேண்டாம் என்கிறீர்கள்?" என்று அவரிடம் கேட்டபோது, ‘‘இது தான் எங்கள் பாரம்பரியம், பல ஆண்டுகளாகக் கடைபிடிக்கிறோம், விட்டுத் தரமாட்டோம்,’’ என்றார்.

‘வெளியில் நின்றுதான் வழிபடுவார்கள்’
தீவட்டிப்பட்டி கலவரத்திற்கு காரணம் என்ன
படக்குறிப்பு,'எங்களிடம் தேர் கொடுங்கள் இல்லையெனில் திருவிழா நடத்த வேண்டாம் எனக் கூறியதால் கலவரம் நடந்துள்ளது,' என்கிறார் பாவையம்மாள்.

கோவிலுக்கு வெளியில் நின்றுதான் இத்தனை ஆண்டுகளாக பட்டியலின மக்கள் வழிபட்டார்கள் என்கிறார் பாவையம்மாள்.

‘‘பல தலைமுறைகளாக கோவிலுக்கு வெளியில் நின்று தான் அவர்கள் (பட்டியலின மக்கள்) வழிபடுவார்கள், தீர்த்தம் வாங்குவார்கள். அவர்கள் உள்ளே வந்து வழிபட்டது இல்லை, அந்தக் கூட்டத்தில் இருக்கும் ஒரு இளைஞர்தான் கோவிலுக்குள் வர வேண்டும், எங்களிடம் தேர் கொடுங்கள் இல்லையெனில் திருவிழா நடத்த வேண்டாம் எனக் கூறினார். அதனால்தான் கலவரம் நடந்துள்ளது,’’ என்கிறார் அவர்.

பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் சார்பாக நம்மிடம் பேசிய கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்த மணி மற்றும் சேனாதிபதியும், பாவையம்மாள் கருத்தைத்தான் எதிரொலித்தனர்.

கலவரம் தொடர்பாகவும், பட்டியலின மக்களின் கோரிக்கை மற்றும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் நிலைப்பாடு குறித்தும், பிபிசி தமிழ் சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் விளக்கம் கேட்டது.

 
‘சமூக நீதியை உறுதிசெய்வோம்’ – மாவட்ட ஆட்சியர்
தீவட்டிப்பட்டி கலவரத்திற்கு காரணம் என்ன
படக்குறிப்பு,போலீசார் தாக்கியதில் காயமடைந்த பெண்.

பிபிசி தமிழ் விளக்கம் கேட்டு சேலம் மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டபோது, செல்போன் வாயிலாகப் பதிலளித்த ஆட்சியர் பிருந்தா தேவி, ‘‘கலவரம் ஏற்படுவதற்கு முன்பு இருதரப்பு மக்களையும் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதிப்பது தொடர்பாக தங்களுக்குள் ஆலோசனை நடத்த ஒருநாள் அவகாசம் கேட்டனர். ஆனால், அமைதிப் பேச்சுவார்த்தை முடித்த அன்றே ஏன் கலவரம் செய்தார்கள் எனத் தெரியவில்லை," என்றார்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து வருவதாகவும் போலீசார் கண்காணிப்பில் நிலைமை மீண்டும் கட்டுக்குள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

"பட்டியலின மக்கள் கோவிலுக்குள் செல்ல ஏற்பாடு செய்து, சமூக நீதியை உறுதிப்படுத்துவோம்,’’ என விளக்கம் அளித்துள்ளார்.

‘மீண்டும் சுமூகமாக திருவிழா நடத்த திட்டம்’ – காவல் கண்காணிப்பாளர்
தீவட்டிப்பட்டி கலவரத்திற்கு காரணம் என்ன
படக்குறிப்பு,பட்டியலின மக்கள் பகுதியில் போலீசார்

போலீசார் வேண்டுமென்றே வீடு புகுந்து தாக்கியதாக பட்டியல் சாதியினர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறையிடம் விளக்கம் கேட்டபோது, செல்போன் வாயிலாக பதிலளித்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், ‘‘1972 முதல் அந்தக் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு பட்டியலின சாதியினரை உள்ளே நுழையக்கூடாது என ஆதிக்க சாதியினர் கூறியதால், இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.

பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டு, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கடைகளுக்குத் தீ வைத்தவர்களைத் தேடி வருகிறோம். இருதரப்பையும் கைது செய்யும்போது நாங்கள் ஆதாரத்திற்காக வீடியோவும் எடுத்துள்ளோம்.

போலீசார் வேண்டுமென்றே யாரையும் தாக்கவில்லை. அப்படி புகார் வரும் பட்சத்தில் எங்கள் வீடியோக்களை ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் திருவிழாவை சுமூகமாக நடத்த இருதரப்பிடமும் பேச்சவார்த்தை நடத்துவோம்,’’ என விளக்கம் அளித்தார்.

 
அறநிலையத்துறை அதிகாரிகள் சொல்வது என்ன?
பட்டியலின மக்கள் பகுதியில் போலீசார்

"அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கோவிலில் பட்டியல் சாதியினர் நுழைவதில் சிக்கல் என்ன?" என்று இந்து சமய அறநிலையத்துறை காடையம்பட்டி ஆய்வாளர் கதிரேசனிடம் கேட்டபோது, ‘‘இதுவரை அந்தக் கோவிலில் இதுபோன்ற பிரச்னை, கலவரம் வந்தது இல்லை. பட்டியல் சாதியினர் சார்பில் எந்தப் புகாரும் வரவில்லை.

அரசு கோவிலுக்குள் நுழைந்து வழிபாடு செய்வது தனிமனித உரிமை. இதை உறுதிப்படுத்த இருதரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தினோம், அதற்குள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரச்னையை விரைவில் சரி செய்வோம்,’’ என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c1vw66yn2evo

சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

1 week 5 days ago

சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
May 04, 2024 10:35AM IST ஷேர் செய்ய : 
WhatsApp-Image-2024-05-04-at-10.32.27_76
 

தேனியில் இன்று (மே 4) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர், சமீபத்தில் காவல் துறை அதிகாரிகள், குறிப்பாக பெண் காவலர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதன்பேரில் தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அவரை இன்று அதிகாலை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கோவைக்கு வேனில் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

இந்த நிலையில் கோவை மாநகரக் காவல்துறை சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Savukku Shankar has been arrested today by Coimbatore city police cyber crime wing for the offences committed under the following sections. 294(b), 509 and 353 IPC r/w section 4 of Tamilnadu prohibition of harassment of Woman Act and section 67 of Iinformation Technology Act,2000

— கோவை மாநகரக் காவல் Coimbatore City Police (@policecbecity) May 4, 2024

அதன்படி பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல் (294(b)) பெண்களுக்கு எதிராக அவதூறு பேசுதல் (509), அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் (353), பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் (67) உட்பட ஜாமீனில் வெளிவர முடியாதபடி 5 பிரிவுகளின் கீழ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 

https://minnambalam.com/political-news/fir-has-been-registered-against-savukku-shankar/

 

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு: வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது பரிதாபம்

1 week 6 days ago
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு: வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது பரிதாபம்

சென்னையில் நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கொல்லத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் உளுந்தூர்பேட்டைக்கும், விருத்தாசலத்துக்கும் இடையே வந்தபோது, 7 மாத கர்ப்பிணி பெண் தவறி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள், உடனடியாக பக்கத்து பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நடுவழியில் நிறுத்தினர். பின்னர் ரெயிலில் இருந்து இறங்கிய உறவினர்கள், கர்ப்பிணி தவறி விழுந்த இடம் நோக்கி ஓடிச் சென்று பார்த்தனர். ஆனால் அங்கு கர்ப்பிணி கிடைக்கவில்லை.

பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு, விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. இரவு 8.10 மணிக்கு வர வேண்டிய ரெயில், 20 நிமிடம் தாமதமாக இரவு 8.30 மணிக்கு வந்தடைந்தது. ரெயிலில் இருந்து இறங்கிய கர்ப்பிணியின் உறவினர்கள் கதறி அழுதனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள், சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் மனைவி கஸ்தூரி என்ற 7 மாத கர்ப்பிணி பெண் தவறி விழுந்து விட்டதாகவும், அவரை உடனடியாக மீட்டு தருமாறும் கூறினர். இதையடுத்து பொலிஸார் விரைந்து சென்று கஸ்தூரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது உளுந்தூர்பேட்டையில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் கஸ்தூரி இறந்து கிடந்தார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

தென்காசி மாவட்டம் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது 25). இவர், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், சென்னை பெரியார் நகர் திரிசூலத்தை சேர்ந்த பி.எஸ்சி. நர்சிங் பட்டதாரியான கஸ்தூரி(22) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கஸ்தூரி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதனிடையே மேலநீழிதநல்லூரில் நடைபெறும் கோவில் திருவிழாவில் பங்கேற்க செல்வதெனவும், அங்கேயே நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) கஸ்தூரிக்கு வளைகாப்பு நடத்தவும் உறவினர்கள் திட்டமிட்டனர்.

அதன்படி கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சொந்த ஊருக்கு செல்ல சுரேஷ்குமார் தனது மனைவி மற்றும் உறவினர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். அந்த ரெயிலில் எஸ்-9 பெட்டியில் அனைவரும் பயணம் செய்தனர். இந்த ரெயில் இரவு 8 மணி அளவில் உளுந்தூர்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, கஸ்தூரிக்கு வாந்திக்கான அறிகுறி ஏற்பட்டது.

உடனே அவர், தனது உறவினர்கள் உதவியுடன் எஸ்-9 பெட்டியில் உள்ள கை கழுவும் இடத்திற்கு வந்தார். அந்த இடத்தில் வாந்தி எடுத்தபடி கஸ்தூரி நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் நிலைதடுமாறி ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கர்ப்பிணி உயிரிழந்த விவகாரம் தொடர்பாகவும், அபாய சங்கிலி செயல்படாத புகார் குறித்து விசாரிக்கவும் தெற்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது.

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அபாய சங்கிலியை இழுத்தும் நிற்காத ரெயில்

கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ள எஸ்-9 பெட்டியில்தான் கஸ்தூரி தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் பயணம் செய்தார். கை கழுவும் இடத்தில் இருந்து வாந்தி எடுத்துக்கொண்டிருந்தபோது கஸ்தூரி தவறி கீழே விழுந்தார். உடனே உறவினர்கள், அந்த பெட்டியில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர்.

ஆனால் ரெயில் நிற்கவில்லை. அப்போதுதான், அந்த அபாய சங்கிலி, வேலை செய்யாமல் செயல் இழந்து இருந்தது தெரிய வந்தது. உடனே உறவினர்கள் பக்கத்தில் உள்ள எஸ்-8 பெட்டிக்கு ஓடிச் சென்று, அங்குள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர்.

அதன்பிறகே ரெயில் நின்றுள்ளது. அதற்குள் அந்த ரெயில் கர்ப்பிணி விழுந்த இடத்தில் இருந்து 8 கிலோ மீற்றர் தூரத்திற்கு சென்று விட்டது. உடனடியாக ரெயில் நின்றிருந்தால் கர்ப்பிணியை காப்பாற்றி இருக்கலாம் என்றும், வரும் காலங்களில் அனைத்து பெட்டிகளிலும் அபாய சங்கலி செயல்படுவதை உறுதி படுத்த வேண்டும் என்றும் உறவினர்கள் கூறினர்.

https://thinakkural.lk/article/300787

மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன் விஜயகாந்த்.

1 week 6 days ago
jk-1-623x375.jpg மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன்.

மறைந்த  நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவிடமாக விஜயகாந்தின் நினைவிடம் போற்றப்படுகிறது.

விஜயகாந்த் மறைந்த நாள் முதல் இப்போது வரையிலும் தினம்தோறும் கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்திற்கு தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். மேலும் இவ்வாறு வருகை தரும் மக்களுக்கு அங்கு நாளாந்தம் உணவளிக்கப்பட்டு வருகின்றது.

விஜயகாந்த் மறைந்து 125 நாட்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை சுமார் 15 லட்சம் பேர் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1380958

தமிழர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்? நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூரில் போராட்டம்! பதற்றம் .

2 weeks ago

திருப்பூர்: திருப்பூரில் தமிழக இளைஞர்களை வடமாநிலத்தவர் ஓட ஓட விரட்டியதாக வெளியான வீடியோ பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிழைப்பு தேடி தமிழ்நாட்டிற்கு வருகை தருவது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. வடமாநிலங்களில் சம்பளம் குறைவாக உள்ளதாலும் வேலைவாய்ப்பு பெரியளவில் இல்லை என்பதாலும் அவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள்.

ஹோட்டல், கட்டிட பணிகளுக்கு வெளிமாநில தொழிலாளர்களே அதிகம் இங்கு வருகிறார்கள்.. இருப்பினும், இப்படி அதிகப்படியாக வரும் வடமாநிலத்தவரால் தமிழர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்ற புகார் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

வடமாநிலத்தவர் ஊதியம், தொடர்ச்சியாக வேலை கிடைப்பது உள்ளிட்டவற்றால் வடமாநில தொழிலாளர்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வர ஆர்வம் காட்டுகிறார்கள். இது எப்போதோ நடக்கும் சம்பவம் இல்லை.. வட இந்தியாவில் இருந்து வரும் எந்தவொரு ரயில்களைப் பார்த்தாலும் நமக்கு இது புரியும். வடமாநிலத்தவர் மார்கெட்டை காட்டிலும் குறைந்த விலையில் வேலை பார்ப்பதாகவும் இதன் காரணமாகவே தமிழர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளன. திருப்பூர் இருப்பினும், குறைந்த விலையில் ஆட்கள் தேவை இருப்பதால் வடமாநிலத்தவர் தொடர்ந்து இங்கு வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். முதலில் சென்னை உட்பட பெருநகரங்களில் மட்டுமே இவர்கள் அதிகம் வந்து கொண்டிருந்த நிலையில், இப்போது சென்னையைத் தாண்டி மற்ற சிறு நகரங்களிலும் செட்டில் ஆகத் தொடங்கியுள்ளனர். குறிப்பாகத் திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் சென்றால் வடமாநிலத்தவரையே பெரும்பாலான இடங்களில் பார்க்க முடியும். பரபர வீடியோ இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் தமிழக இளைஞர்களை ஓட ஓட விரட்டுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வந்தது. இது எங்கோ எடுத்தது இல்லை.. நம்ம திருப்பூரில் நடந்த சம்பவம் தான் இது. அங்கிருந்த தமிழக இளைஞர்களைப் பல நூறு வடமாநிலத்தவர்கள் இணைந்து ஓட ஓட விரட்டிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகப் புயலைக் கிளப்பியது. போராட்டம் அனுப்பர் பாளையத்தில் தமிழக தொழிலாளர்களைத் தாக்க முயன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வடமாநில தொழிலாளர்களின் செயலுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து சம்பந்தப்பட்ட பனியன் அலுவலகத்தைத் திருப்பூர் மேயர் ந.தினேஷ்குமார் ஆய்வு செய்து போராடியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆட்சியர் அலுவலகம் முற்றுகை இருப்பினும், தமிழர்களைத் தாக்கிய வடமாநிலத் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டும் நேற்று பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமாதானப்படுத்தினர். இதனால் அங்குச் சற்று பதற்றமான ஒரு சூழல் உருவானது.

இதன் காரணமாகப் பாதுகாப்பு கருதிச் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இது தொடர்பாகத் திருப்பூர் போலீசார் தரப்பில் கூறுகையில், "புகை பிடித்தல் குறித்து இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை தகராறாக மாறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும், சமூக வலைத்தளங்களில் சிலர் தவறான தகவல் பரப்பி வருகின்றனர்" என்றார்

Read more at: https://tamil.oneindia.com/news/tiruppur/many-tamil-groups-are-protesting-against-north-indians-attacking-tamils-in-tiruppur/articlecontent-pf852979-496221.html
 

இலங்கை – தமிழகம் சுற்றுலாத்துறையில் கூட்டு பொறிமுறை அமைத்து செயற்படின் முன்னேற்றம் - தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2 weeks ago
28 APR, 2024 | 06:36 PM
image

நேர்கண்டவர் -  ரொபட் அன்டனி 

இலங்கையில் சுற்றுலாத்துறை மிகப் பெரிய ஒரு துறையாக காணப்படுகிறது.  இந்தியாவில் தமிழ்நாடு தான் மிகவும் உயர்ந்த அளவான சுற்றுலாத்துறை ஆற்றலை கொண்டிருக்கிறது.  எனவே இலங்கையும்  தமிழகமும் சுற்றுலாத்துறை விடயத்தில் ஒரு கூட்டு  பொறிமுறையை வகுத்து செயல்பட்டால் சிறந்த முன்னேற்றத்தை   எட்ட முடியும் என்று தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். 

கொழும்பில் நடைபெற்ற  ரோட்டரி கழகத்தின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீரகேசரி பத்திரிகைக்கு   வழங்கிய விசேட செவியிலேயே இதனை  சுட்டிக்காட்டினார். 

மிக முக்கியமாக இலங்கையில் ரோட்டரி கழகத்தின் மாநாட்டில் பங்கேற்ற தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கமையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

மேலும்   தமிழகத்தின் நிதித்துறை, வரிவருமான விடயம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சி,  பெண்களின் பொருளாதார பங்களிப்பு  குறித்து அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

‘’ ஒரு நாட்டில் பெண்கள் கல்வியில் வளர்ச்சிaடையும் போது அவர்களுக்கு சம உரிமை வழங்கப்படும் போதுதான் அந்த நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்தி அடையும். எனவே பொருளாதாரத்தை அபிவிருத்தி அடைய செய்வதில் பெண்களின் பங்களிப்பு முக்கியமானது’’  என்று பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டார். 

மேலும் இலங்கைக்கு இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பாக கருத்து வெளியிட்ட பழனிவேல் தியாகராஜன் பொறியியல் ரீதியாக கட்டடவியல் ரீதியாக இலங்கைக்கு இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது சாத்தியமானதே  என்று தெரிவித்ததுடன் உலக நாடுகளில் இதனை விட நீளமான பாலங்கள் இருப்பதையும் சுட்டிக் காட்டினார். 

கச்சத்தீவு விவகாரம் தொடர்பிலும் அமைச்சர்  தியாகராஜன் கருத்து வெளியிட்டார். 

‘’ 50 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்குk; இந்தியாவுக்கும் இடையில் கடல்சார் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாகவே இந்த விடயம் காணப்படுகிறது.  எல்லைகள் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் அதிகாரம் உலகில் எந்த ஒரு இடத்திலும் மாநிலங்களுக்கு வழங்கப்படவில்லை‘’  என்றும் பழனிவேல் தியாகராஜன் எடுத்துக்காட்டினார். 

செவ்வியின் முழு விபரம் வருமாறு

கேள்வி  நாங்கள் 2022 ஆம் ஆண்டு இலங்கையில் நிதி நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருந்தபோது நீங்கள் தமிழகத்தில் மிகப்பெரிய நிதி ஸ்திரத்தன்மை ரீதியான சாதனையை நிகழ்த்தி கொண்டிருந்தீர்கள். அது தொடர்பாக விளக்க முடியுமா 

பதில் இந்த விடயத்தில் நான் உலகத்தில் பெற்ற அனுபவத்தையோ  கல்வியையோ தாண்டி இன்றைய முதலமைச்சர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர்  ஸ்டாலின் வழங்கிய ஆதரவும் பொறுப்பும் தான் இதற்கு காரணமாகும்.  2016 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டுவரை நான் எதிர்க்கட்சியில் இருந்தபோது அரசாங்க கணக்கு குழுவில் அங்கம் வகித்தேன்.  இதில்   பல விடயங்களை ஆராய்ந்தேன். ஆயிரக்கணக்கான விடயங்கள் தொடர்பாக வாசிக்க கிடைத்தது.  குறிப்பாக மீனவத்துறை வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில்   எங்கு பிரச்சனைகள் இருக்கின்றன என்பன தொடர்பாக ஆராய்ந்து அது தொடர்பான ஒரு தெளிவை பெற்றுக் கொள்ள என்னால் முடிந்தது.  இந்த குழுவின் ஊடாக பல இடங்களுக்கு சென்று ஆய்வு செய்ய முடிந்தது.  அதேபோன்று பல பல அதிகாரிகளை அழைத்து கேள்வி கேடகும் உரிமையும் இந்த குழுவுக்கு காணப்பட்டது.  இந்த ஐந்து வருட காலப்பகுதியில்     நான் சிறந்த புரிதலையும் தெளிவையும் பெற்றேன்.    எங்கே என்னென்ன பிரச்சனைகள் காணப்படுகின்றன?  அவற்றை எவ்வாறு திருத்துவது?  என்பதை இந்த ஐந்து ஆண்டுகளில் நான் மதிப்பீடு செய்துவிட்டு தான் பதவிக்கு வந்தேன்.  அந்த அனுபவம்,  அந்த புரிதல் நான் இந்த செயற்பாட்டை மேற்கொள்வதற்கு கை கொடுத்தது,  மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் அறிவோ தெளிவோ தொழில்நுட்ப திறமையோ முக்கியமாக இருக்காது.    மாறாக மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற ஒரு அரசியல் ரீதியான நோக்கம் இருக்க வேண்டும்.  அந்த அரசியல் நோக்கம் அல்லது எதிர்பார்ப்பு (Political will)    முதலமைச்சரிடம் மட்டும் இருந்தே வர வேண்டும்.  முதல்வரின் அந்த நோக்கம் தெளிவாக இருந்தது.  அதற்காக அவர் எனக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்.  இந்த விடயத்தில் எனக்கு ஆலோசனை ஒத்துழைப்பு தந்தது மட்டுமன்றி முதல்வர் என்னை பாதுகாப்பாகவும் வைத்துக் கொண்டிருக்கிறார்.  இந்த சில வருடங்களில் ஒருமுறை கூட முதல்வர்  ஏன் இப்படி செய்தீர்கள்? ஏன் இப்படி செய்யவில்லை என்று கேட்டது கிடையாது. கடந்த காலங்களில் நான் கிட்டத்தட்ட 7 ஆயிரம் கோப்புகளை ஆய்வு செய்து கையொப்பம் இட வேண்டி ஏற்பட்டது.  அந்த 7000 கோப்புகளில் பத்து சதவீதமானவை மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டு திருத்தப்பட்டு கொண்டுவரப்பட்டன.  இதன் காரணமாகவே 20 ஆண்டுகளில் ஏற்படுத்த முடியாத ஒரு மாற்றத்தை என்னால் இரண்டு ஆண்டுகளில் மாற்றி அமைக்க முடிந்தது. 

ஒரு முறையை நீங்கள் தொடர்ந்து அவ்வாறே செய்து கொண்டிருந்தால் மாற்றம் வராது.  முறையை   மாற்றினால் கூட விளைவு வருமா என்பது தெரியாது. ஆனால்  மாற்றத்தை ஆரம்பிக்க வேண்டியது அவசியம். அதனையே நாங்கள் செய்தோம்.  

கேள்வி நீங்கள் சமூகநீதி, சமஷ்டி முறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேசுகின்றீர்கள். ஆனால் பெண்கள் கல்வி கற்றால் மட்டுமே ஒரு சமூகம் விரைவாக வளர்ச்சி அடைய முடியும் என்று கூறுகின்றீர்கள்.   இதனை எவ்வாறு நீங்கள் மேற்கொள்கின்றீர்கள்? 

 பதில் சகல சமூகங்களிலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பெண்கள் பின்தங்கி வைக்கப்பட்டனர்.  அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும்   சக்தியை கொண்டிருப்பதால் அவர்கள் வீடுகளில் இருந்து குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு எண்ணம் காணப்பட்டது.  நீங்கள் இந்த நூற்றாண்டை  எடுத்துப் பார்த்தால் ஒரு சமூகம் எந்த அளவுக்கு பெண்களுக்கு சமகல்வி சம உரிமை அளிக்கின்றதோ  அங்கு பாரியதொரு பொருளாதார அபிவிருத்தி முன்னேற்றத்தை காண்கிறோம். 

ஸ்கடேினேவிய நாடுகள்,  மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இந்த நிலைமையை பரவலாக காணமுடியும்,  மிக முக்கியமாக ஜப்பானில் இதை பார்க்கலாம். ஜப்பானில் பெண்களுக்கு சமஉரிமை சமத்துவம் வழங்கப்பட்டதன் பின்னர் அந்த நாட்டின் அபார வளர்ச்சியை புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.  பெண்கள் எத்தனை ஆண்டுகள் கல்வி கற்கின்றார்களோ, உயர் கல்வியை பெறுகின்றார்களோ அத்தனை ஆண்டுகள் அவர்கள் திருமணம் செய்வதும் குழந்தை பெற்றுக் கொள்வதும் தாமதமாகிறது.   பெண்கள் எந்த சூழலில் குழந்தையை பெற்றுக் கொள்கிறார்கள்,  அப்போது அவர்களது பொருளாதார நிலைமை எவ்வாறு இருக்கின்றது  என்பதில்தான் அந்த குழந்தையின் எதிர்காலம் தங்கி இருக்கிறது.  எனவே பெண்களுக்கு நீங்கள் சமகல்வி சமஉரிமை வழங்கினீர்கள் என்றால் சுகாதார ரீதியான ஒரு முன்னேற்றத்திலிருந்து   நாட்டின் அபிவிருத்தி ஆரம்பமாகிறது.  பெண்கள் தாமதித்து குழந்தை பெற்றுக் கொள்வார்களாயின் அந்த குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமானதாக வளரும்.  பிரசவ மரணம் குறைவடையும்.  அரசாங்கத்தின் மக்கள் நல்வாழ்வுத்துறை தொடர்பான  சுமை குறைவடைகிறது.  அப்படிபார்க்கும்போது எந்தளவு தூரம் ஆண்களுக்கு சமமாக பெண்கள்     பலத்தை அடைகிறார்களோ அங்கு முன்னேற்றம் தானாக உருவாகிவிடும்.  ஆண்களுக்கு சிறந்த கல்வியை கொடுத்து அவர்களை முன்னேற்றிவிட்டு பெண்களுக்கு ஒன்றும் செய்யாமல் விட்டால் அங்கு என்ன நடக்கும் ? அங்கு அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான சராசரி எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  பெண்களுக்கும் அதேயளவு சமஉரிமையும் சம கல்வியும் வழங்கப்பட்டால் சமுதாயத்தின் உற்பத்தி திறன் அதிகரிக்கும்.  பொருளாதார வளர்ச்சி அபிவிருத்தி உயர்வடையும்.  இன்று தமிழ்நாடு இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பாரிய  வளர்ச்சியை அடைந்திருப்பதாக கூறுகிறார்கள்.  அதற்கு முக்கிய காரணம் அனைவருக்கும் கல்வி என்ற சட்ட திருத்தம் 1921 ஆம் ஆண்டு நீதி கட்சியினால் உருவாக்கப்பட்டது.  அன்றிலிருந்து இன்று வரை பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் எந்தக் கட்சியும் பின் வாங்கியதில்லை.  இன்று தமிழ்நாடு இலத்திரணியல் உற்பத்தி ஏற்றுமதியில் உயர்ந்த இடத்துக்கு வந்துவிட்டது. அதில் அதிகளமான பங்களிப்பை பெண்களே வழங்குகிறார்கள் என்பது இங்கு ஒரு முக்கியமான விடயம்.  இன்று இந்தியா முழுவதும் தொழிற்சாலைகளில் ஏனைய இடங்களில் தொழில் புரியும் பெண்களில் 43 சதவீதமானோர்  தமிழ்நாட்டில் இருக்கின்றனர்.    இதன் காரணமாகவே தமிழகத்தின் தலா வருமானம் அதிகரிக்கிறது.   

கேள்வி தற்போது நீங்கள் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகிக்கின்ற வகிக்கின்றீர்கள்.    தற்போது இந்தியாவில் ஹைதராபாத் பெங்களூர் பூனே ஆகிய நகரங்களே தகவல் தொழில்நுட்பத் துறையில் பாரிய வளர்ச்சி அடைந்திருக்கின்றன.   தமிழகம் எப்போது இந்த இடத்தை நோக்கி பயணிக்கும்? 

 பதில் தமிழகத்தின் மிகப்பெரிய இயற்கை பலம் என்னவென்றால் அது தமிழக மக்களின் மனித வளமாகும்.  இந்தத் துறையின் எதிர்காலத்தை கருதி   1991 ஆம் ஆண்டு முன்னால் முதல்வர் கலைஞர்     தகவல் தொழில்நுட்ப திணைக்களத்தை உருவாக்கினார்.  ஆனால் கடந்த 25 வருடங்களில் தமிழகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியானது இயற்கையான வளர்ச்சியாக அமைந்துவிட்டது. ஆனால் பெங்களூர் ஹைதராபாத் பூனே ஆகிய நகரங்கள் இந்த விடயத்தை தேடிச் சென்று கஷ்டப்பட்டு உருவாக்கின.  தற்போது பெங்களூரு நகரத்தை பார்த்தால் அங்கு தகவல் தொழில்நுட்பம் இல்லை என்றால் ஒன்றுமே இல்லை என்ற நிலைமை வந்துவிட்டது. 

ஆனால் தமிழகத்தில் அப்படி இல்லை.  பல துறைகளில் முன்னேற்றம் காணப்படுகிறது.   தகவல் தொழில்நுட்பம் என்ற  விடயம்  வெளிக்காட்டவில்லை.  அதாவது தமிழகத்தில் இந்த துறையை அதிகளவில் நாம் ஊக்குவிக்க வில்லை.    பொதுவாக இந்த துறையில் எந்தெந்த கம்பெனிகள் எங்கெங்கே   முதலீடு செய்து இருக்கின்றன  என்ற தகவல் மாநில அரசாங்கத்தில் இருக்கும்.  ஆனால் தமிழகத்தில் அந்தத் தரவு கட்டமைப்பு கூட இல்லை.  காரணம்   நாங்கள் ஊக்குவிப்பு வழங்காமல் இயற்கையாக இந்த துறை வளர்ந்திருக்கிறது.    அதனால் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் பின்தங்கி இல்லை என்பதை நான் உங்களுக்கு இப்போது கூற விளைகிறேன்.  எம்மிடம் தகவல் கட்டமைப்பு தான் இல்லை.  மாறாக அந்த துறை முன்னேறியிருக்கிறது.  இதனை நாம் நுணுக்கமாக தேட ஆரம்பித்தால் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை பாரியளவில் வளர்ச்சி அடைந்திருக்கின்றது என்ற உண்மையை கண்டுபிடிக்க முடியும்.  மேலும் தற்போது ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 10,000 தொழில் வாய்ப்புகள் இந்த துறையில் உருவாக்கப்படுகின்றன.    இதனை நான் சட்டமன்றத்திலும் கூறி இருக்கிறேன்.  ஆனால் இது மிகப் பெரிய ஒரு எண்ணிக்கை அல்ல.  இது இயற்கையாக நடந்து கொண்டிருக்கின்றது.  ஆனாலும் இது கவனிக்கத்தக்கது ஒன்றாக உள்ளது.  நாங்கள் அரசாங்கமாக இதனை இன்னும் ஊக்குவிக்கவில்லை.  எனவே முதலில் தகவல் கட்டமைப்பை திரட்ட வேண்டும்.   அது தொடர்பான விபரங்களை உண்மையை வெளியிட வேண்டும்.  அதைவைத்து ஒரு சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு இந்த துறையை மேலும் வலுவானதாக உருவாக்குவோம்.  

கேள்வி 2030ஆம் ஆண்டில் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டொலர் பெறுமதிக்கு கொண்டு வர முயற்சிக்கின்றீர்கள். இது சாத்தியமா?

பதில் இது முதலமைச்சர்  ஸ்டாலினின் இலக்காக காணப்படுகிறது அதற்கு ஏற்ப நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி  நீங்கள் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கின்றீர்கள். இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து தற்போது மீண்டும் வந்து கொண்டிருக்கின்றது.  உங்களின் பார்வையில் தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையில் பொருளாதார உறவை எவ்வாறு மேம்படுத்த முடியும்? 

பதில்   நான் மாநில அமைச்சராக இருப்பதால் மாநிலம் சம்பந்தமான விடயங்களிலேயே அவதானம் செலுத்த வேண்டும்.  காரணம் இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையில் எந்தவிதமான தொடர்பை வலுப்படுத்த வேண்டும் என்றாலும் அல்லது தொடர்புகளை மேம்படுத்த வேண்டும் என்றாலும் அது இந்திய மத்திய அரசாங்கத்தின் ஒப்புதல் மற்றும் ஆசீர்வாதத்துடனேயே முன்னெடுக்கப்பட முடியும்.  அரசியலமைப்பில் இது தொடர்பில் பல தேவைகள் காணப்படுகின்றன.  தற்போதைய சூழலில் மாநில உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றன.  தற்போதைய டெல்லி அரசாங்கம் இருக்கும்வரை இந்த விடயங்களில் முற்போக்கான நிலைமை ஏற்படுமா என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.  அப்படியான ஒரு தடை இல்லாவிடில் தமிழகமும் இலங்கையும் மிக நெருக்கமாக செயல்படுவதற்கான இயற்கை ரீதியாக பல வழிகள் காணப்படுகின்றன.  சக்திவளத்துறையில் நாங்கள் நெருக்கடியை சந்திக்கிறோம்.  ஆனால் இலங்கையில் அளவுக்கு அதிகமாக இந்த புதுப்பிக்கத்தக்க வகையிலான வலு சக்தி துறையில் உற்பத்தியை செய்ய முடியும்.  அதில் இணைந்து செயற்பட  ஆற்றல் காணப்படுகிறது.  மனிதவள அபிவிருத்தி கல்வி அபிவிருத்தி போன்றவற்றில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்திருக்கின்றது.  இந்த விடயத்திலும் இலங்கை இளைஞர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி   தொழில் செய்யும்போது பயிற்சி வழங்குதல் போன்றவற்றில் நாம் இணைந்து செயல்படலாம். 

இலங்கையில் சுற்றுலாத்துறை மிகப் பெரிய ஒரு துறையாக காணப்படுகிறது.  இந்தியாவில் தமிழ்நாடு தான் மிகவும் உயர்ந்த அளவான சுற்றுலாத்துறை ஆற்றலை கொண்டிருக்கிறது.  எனவே இலங்கையும்  தமிழகமும் சுற்றுலாத்துறை விடயத்தில் ஒரு கூட்டு  பொறிமுறையை வகுத்து செயல்பட்டால் சிறந்த முன்னேற்றத்தை   எட்ட முடியும். அதாவது தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள கலாசார தொடர்புகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக்கொண்டு இதனை முன்னெடுக்கலாம்.  

கேள்வி தற்போது இந்த கச்சதீவு விவகாரம் மீண்டும் களத்துக்கு வந்திருக்கிறது.  இது மத்திய அரசாங்கத்தின் விடயம் ஆனாலும் மாநில அரசாங்கத்தின் மீது விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.  எனவே இந்த கச்சதீவு விவகாரத்தை தமிழக அமைச்சர் என்ற ரீதியில் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில் என்னைப்பொறுத்த வரையில் இந்த விடயம் சட்டமன்றத்திலும் சரி தற்போது அரசியல் களத்திலும் சரி வெறுமனே பேசப்படுகிறது.  50 வருடங்களுக்கு முன்னரே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில்  12 கிலோமீட்டர் அடிப்படையிலான கடல் சார்ந்த ஒப்பந்தம்   கைச்சாத்திடப்பட்டிருக்கிறது.  அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவே இந்த விடயம் (கச்சதீவு)  இடம் பெற்றுள்ளது.  அல்லது அந்த ஒப்பந்தத்தின் ஒரு பங்காக இந்த விடயம் காணப்படுகிறது.  50 வருடங்களுக்கு முதல் நடந்த ஒரு விடயம் குறித்து   கடந்த 10 வருடங்களாக டெல்லியில் ஆட்சியில் இருந்த    எதனையும் செய்யவில்லை.  ஆனால் தற்போது இதனை இங்கே அரசியலுக்காக பேசுகின்றார்கள்.  கவனச்சிதறல்  முயற்சியாகவே இது  தெரிகிறது. 

இது இந்த விடயத்தில் மாநிலத்துக்கு எவ்வளவு அக்கறை, எவ்வளவு தேவை, ஈடுபாடு இருந்தாலும் கூட இந்த எல்லை நிர்ணய விடயங்களை மத்திய அரசாங்கமே செய்யும். 

கேள்வி  தற்போது இலங்கைக்கு இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பாக பேசப்படுகிறது.  நீங்கள் தகவல் தொழில்நுட்ப அமைச்சர்.  முன்னாள் நிதி அமைச்சர்.  பொருளாதார ரீதியாக இதன் சாத்தியத்தன்மை குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

 பதில் இதற்கு சாத்தியம் இல்லை என்று கூற முடியாது.  இதற்கான சாத்தியம் கேள்விக்கு உட்படுத்தப்பட முடியாதது.  உலகளவில் இதனை விட நீளமான பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  நானே பயணம் செய்திருக்கிறேன்.   ஆனால் இதில் பொருளாதார  விளைவுகள் என்ன ? செலவு என்ன என்பது முக்கியமாகும்.  தொடர்புகள்,  பாதுகாப்பு விடயங்கள் என்பன ஆராயப்பட வேண்டும்.   என்னுடைய துறையுடன் இது உடனடியாக தொடர்புபடவில்லை.  சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர்பாக ஆராய்வார்கள். ஆனால் இதனை  சாத்தியமில்லை என்று உறுதியாக கூற முடியாது.  உலக அளவில் இதனைவிட நீளமான எத்தனையோ பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.    பொறியியல் ரீதியாக கட்டிடவியல் ரீதியாக அது சாத்தியமானதாகும். 

கேள்வி உங்களின் இரண்டு கைகளிலும் இரண்டு கைக்கடிகாரங்கள் கட்டப்பட்டுள்ளனவே? 

பதில்  இதற்கான காரணம் உள்ளது. அதில் எனது இடது கையில் இருப்பது என்னுடைய தாத்தாவின் கைக்கடிகாரமாகும்.   அதனை 1990 ஆம் ஆண்டு எனது தந்தை எனக்கு வழங்கினார்.  நான் அதனை திருத்தி பழுதுபார்த்து தொடர்ச்சியாக எனது இடது கையில் கட்டிக் கொண்டிருக்கின்றேன்.  வலது கையில் இருப்பது  மிகவும் நவீனமான எனக்கு பல்வேறு தொழில்நுட்ப ரீதியான ஆலோசனைகளை வழங்குகின்ற கைக்கடிகாரமாகும்.  உங்களுக்கு தெரியும் எங்களது குடும்பம் அரசியல் பாரம்பரியம் கொண்ட குடும்பம்.    எனவே இந்த கைக்கடிகாரம் எனக்கு மிக முக்கியமானதாக   இருக்கிறது. 

https://www.virakesari.lk/article/182174

இந்திய பெருங்கடல்: மீன் வளம் முற்றிலும் அழியும் ஆபத்து - தமிழக மீனவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?

2 weeks ago
இந்திய பெருங்கடல்: மீன் வளம் முற்றிலும் அழியும் ஆபத்து - தமிழக மீனவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.சுபகுணம்
  • பதவி, பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அதீத காலநிலை நிகழ்வுகள் காரணமாக தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் கன்னியாகுமரி, ராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

புனேவை தளமாகக் கொண்டு இயங்கி வரும் வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வின் முடிவுகள், இந்தியப் பெருங்கடல் அடுத்த 80 ஆண்டுகளில் அதீத காலநிலை நிகழ்வுகளை எதிர்கொள்ளப் போவதாகவும் இதனால் பெருங்கடல் பகுதியில் பவளப்பாறைகள் அழிவு, கடல் அமிலமயமாதல், அதிக புயல் மற்றும் சூறாவளி நிகழ்வுகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கிறது.

எல்சேவியர்ஸ் ஆய்விதழில் வெளியாகியுள்ள ‘இந்தியப் பெருங்கடலின் வெப்பமண்டல பகுதிக்கான எதிர்கால கணிப்புகள்’ என்ற தலைப்பிலான இந்த ஆய்வின் முன்னணி விஞ்ஞானியான ஐஐடிஎம் புனேவை சேர்ந்த காலநிலை விஞ்ஞானி ராக்சி மேத்யு கோல், “எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் வெப்பநிலை உயர்வு, ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்புக்கு நிகரான வெப்பத்தை உண்டாக்கும்” என்று தனது ஆய்வின் முடிவுகள் குறித்து விவரிக்கிறார்.

மேலும், “இந்த மாற்றங்களின் தாக்கங்கள் நமது எதிர்கால சந்ததிகள் எதிர்கொள்ளக் கூடியவை என்று புறக்கணிக்க முடியாது. இவற்றின் விளைவுகளை நாம் ஏற்கெனவே சந்தித்து வருகிறோம்." என்கிறார் அவர்.

இந்திய பெருங்கடல்: மீன் வளம் முற்றிலும் அழியும் ஆபத்து - தமிழக மீனவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?

பட மூலாதாரம்,ROXY MATHEW KOLL/FB

"வெள்ளம், வறட்சி, சூறாவளி, நிலம் மற்றும் கடல் ஆகிய இரண்டிலும் நிகழும் வெப்ப அலைகள் நம்மை அதிகளவில் பாதிக்கின்றன. காலநிலை நெருக்கடியைத் தணிப்பதற்கான தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இந்தத் தீவிர வானிலை நிகழ்வுகள் ஆய்வு முடிவுகள் கூறும் காலத்திற்கும் முன்பே தீவிரமடையும்,” என்று எச்சரிக்கிறார் ராக்சி மேத்யூ கோல்.

இந்தியப் பெருங்கடலின் வெப்பமண்டலப் பகுதி குறித்து ஆய்வறிக்கை முன்வைக்கும் எச்சரிக்கைகள்:

  • கடந்த 70 ஆண்டுகளில்(1950-2020) நூற்றாண்டுக்கு 1.2 டிகிரி செல்ஷியஸ் என்ற அளவுக்கு இந்தியப் பெருங்கடலில் வெப்பநிலை அதிகரித்தது. ஆனால், அடுத்த 80 ஆண்டுகளில் (2020-2100) நூற்றாண்டுக்கு 1.7 டிகிரி செல்ஷியஸ் முதல் அதிகபட்சமாக 3.8 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும்.
  • அரபிக் கடல் உட்பட வடமேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதி அதிகபட்ச வெப்பநிலை உயர்வை எதிர்கொள்ளக்கூடும்.
  • இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதிதீவிர பருவநிலை நிகழ்வுகள் ஏற்படலாம். கடந்த 1950கள் முதல் அதிகன மழை, அதிதீவிர சூறாவளிகள் ஆகியவை அதிகரித்துள்ளன. இந்த நிகழ்வுகளின் அளவு வரும் ஆண்டுகளில் உயரப்போகும் கடல் வெப்பநிலை காரணமாக மேன்மேலும் அதிகரிக்கும்.
  • கடல் மேற்பரப்பு மட்டுமின்றி, கடலின் 2000 மீட்டர் ஆழத்திலும்கூட பத்து ஆண்டுகளுக்கு 4.5 ஜெட்டா-ஜூல் என்ற கணக்கில் ஏற்கெனவே வெப்பமடைந்து வருகிறது.
  • இவற்றின் விளைவாக இந்தியப் பெருங்கடலில் அதிகரிக்கப் போகும் கடல் அமிலமயமாதல், பவளப்பாறை அழிவு, கடல்புல் அழிவு, கடல்பாசி நிறைந்த பகுதிகளின் அழிவு ஆகியவற்றால் வாழ்விடச் சிதைவு ஏற்படக்கூடும். இதனால் பெருங்கடலின் மீன்வளத்துறை பெரியளவில் பாதிக்கப்படும்.
 
இந்திய பெருங்கடல்: மீன் வளம் முற்றிலும் அழியும் ஆபத்து - தமிழக மீனவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தக் காலநிலை விளைவுகளால் மீனவர்கள் எதிர்கொள்ளப் போகும் ஆபத்து என்ன?

"இதுபோன்ற எச்சரிக்கைகள் புதிதல்ல" என்கிறார் நெய்தல் சமூக ஆய்வாளரும் உலக மீனவர் மன்றத்தின் பிரதிநிதியுமான ஜோன்ஸ் தாமஸ் பார்டகஸ். "இவை குறித்து என்ன செய்யலாம் என்று மீனவ சமூகங்களிடம் கலந்து பேசினால் மட்டுமே அவர்களுக்கு ஏற்ற உரிய தீர்வு கிடைக்கும்" என்றும் வலியுறுத்துகிறார்.

கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச இடை அரசுக் குழுவின் (ஐபிசிசி) சிறப்பு அறிக்கை, “கடல் வெப்பநிலை எதிர்பாராத வேகத்தில் உயர்வதாகவும் இதனால் அதைச் சார்ந்துள்ள சமூகங்கள் பெரியளவிலான பாதிப்புகளை எதிர்கொள்வதாகவும் எச்சரித்தது.

அந்த எச்சரிக்கையை மேலும் அழுத்தமாகத் தற்போதைய ஆய்வு எடுத்துக்காட்டுவதாகக் கூறுகிறார் ஜோன்ஸ்.

கடல் வெப்பநிலை அதிகரிப்பது, கடல் மட்டம் உயர்வது, கடல் நீர் உட்புகுதல் ஆகியவை கழிமுகப் பகுதிகளில் ஆக்சிஜன் நீக்கம் ஏற்படக் காரணமாக அமைவதாகவும் இதனால், மீன் இனங்களின் இடப்பெயர்ச்சி நடப்பதாகவும் ஐபிசிசி அறிக்கை எச்சரித்தது.

அதன்படி, வாழ்விடப் பரவல், மீன்களின் இருப்பு ஆகியவற்றின்மீது வெப்பநிலை உயர்வு ஏற்படுத்தியதன் விளைவுகளை ஏற்கெனவே மீன்பிடித் தொழிலும் அதைச் சார்ந்து வாழும் சமூகங்களும் எதிர்கொள்கின்றன.

இந்திய பெருங்கடல்: மீன் வளம் முற்றிலும் அழியும் ஆபத்து - தமிழக மீனவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?
படக்குறிப்பு,மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருவதாக எச்சரிக்கிறார் நெய்தல் சமூக ஆய்வாளரும் உலக மீனவர் மன்றத்தின் பிரதிநிதியுமான ஜோன்ஸ் தாமஸ் பார்டகஸ்.

இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஆய்வு “கடந்த 70 ஆண்டுகளில் (1950-2020) இந்தியப் பெருங்கடலின் வெப்பநிலை 1.2 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால், காலநிலை மாதிரிகள் கணித்துள்ளதன்படி அடுத்த 80 ஆண்டுகளில் (2020-2100) இந்த அளவு குறைந்தபட்சம் 1.7 டிகிரி முதல் அதிகபட்சமாக 3.8 டிகிரி வரை இருக்கும்” என்று எச்சரிக்கிறது.

குறிப்பாக, இந்தியப் பெருங்கடலின் வடமேற்குப் பகுதியும் அரபிக் கடலும்தான் இதன் தீவிரத்தை அதிகம் உணரப் போவதாகவும் ஆய்வு முடிவுகள் உணர்த்துகின்றன. இது கடலோர சமூகங்கள், குறிப்பாக கடல் வளங்களைச் சார்ந்திருக்கும் மீனவ சமூகங்கள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கிறார் ஜோன்ஸ்.

கேள்விக்குறியாகும் மீனவர்களின் வாழ்வாதாரம்

சமீபத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற 55-ஆவது மனித உரிமை மன்றத்தில் மீனவ சமூகங்களின் பிரதிநிதியாகப் பங்கெடுத்த ஜோன்ஸ், “இந்தியப் பெருங்கடல் அரசியல், பாதுகாப்பு, வர்த்தகம் எனப் பல முனைகளிலும் குறிவைக்கப்படுவதால், இதுபோன்ற காலநிலை நெருக்கடிகளோ அதன் விளைவாகப் பாதிக்கப்படும் மீனவ சமூகங்களோ கண்டுகொள்ளப்படுவது இல்லை,” என்று கடுமையாக விமர்சிக்கிறார்.

“இந்தியப் பெருங்கடல் என்னும்போது, அதை மட்டுமே பார்க்கக்கூடாது. இதைச் சுற்றியுள்ள பகுதிகளில்தான் சுமார் 80 சதவீதம் வர்த்தகம் நடைபெறுகிறது. அதுபோக, பாதுகாப்பு ரீதியாகவும் மிகப்பெரிய கவனம் பெற்றுள்ளது. பல நாடுகள் இங்குள்ள தீவுகளின்மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. மீன் சார்ந்த தொழில் துறையும் இங்கு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், இங்குள்ள மக்களின் வாழ்வியல் மற்றும் வாழ்வாதாரம் குறித்து யாருமே கவலைப்படுவது இல்லை,” என்று குற்றம் சாட்டுகிறார் ஜோன்ஸ்.

 
இந்திய பெருங்கடல்: மீன் வளம் முற்றிலும் அழியும் ஆபத்து - தமிழக மீனவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தப் பகுதியிலுள்ள அனைத்து மீனவர்களும் வரலாற்று ரீதியாகவே ஓர் இன ஒதுக்கலை எதிர்கொள்வதாக அவர் கூறுகிறார். “இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பொறுத்தவரை பேரிடர்களும் வளர்ச்சிகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஆனால், அதன் விளைவுகளை எதிர்கொள்ளும் மீனவ மக்கள் அதன் பாதிப்புகளை எதிர்கொள்கிறார்களே தவிர, இங்கு கிடைக்கும் நன்மைகள் அவர்களைச் சென்றடைவதே இல்லை.”

சமீபத்திய ஆய்வறிக்கை, இந்தியப் பெருங்கடலின் வெப்பமண்டலப் பகுதிகளில் ஆக்சிஜன் செறிவு குறைந்து வருவதாகவும் கண்டறிந்துள்ளது. சர்வதேச அளவில் கரிம உமிழ்வை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துவதாகக் கூறுகிறார் இந்த ஆய்வின் முன்னணி விஞ்ஞானி ராக்சி மேத்யூ கோல்.

பலமுனைகளில் இருந்து இதை அணுகுவதன் மூலம்தான் வரவிருக்கும் சவால்களைச் சமாளிக்க முடியும் என்றும் இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அதாவது, உலகளாவிய கரிம உமிழ்வைக் கட்டுப்படுத்துவது, இதன் விளைவாக ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்ளத்தக்க கட்டுமானங்களை உருவாக்குவது எனப் பலமுனை நடவடிக்கைகளை ஒருசேர எடுப்பதே கடலோர சமூகங்கள் எதிர்கொள்ளவிருக்கும் இந்தப் பேராபத்தைத் தடுக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
இந்திய பெருங்கடல்: மீன் வளம் முற்றிலும் அழியும் ஆபத்து - தமிழக மீனவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

‘மூச்சுமுட்டும் நிலையில் தவிக்கும் மீனவர்கள்’

ஆனால், ஏற்கெனவே மீனவர்கள் எதிர்கொண்டு வரும் அபாயங்களே அவர்களை மூச்சுமுட்ட வைப்பதாகவும் இந்த நிலையில் இப்படியொரு எச்சரிக்கை வந்திருப்பது சிவப்பு எச்சரிக்கையைவிடத் தீவிரமானது என்றும் கூறுகிறார் ஜோன்ஸ்.

“கடலோர பொருளாதார மண்டலங்கள், கடலில் நடக்கும் பொருளாதார நடவடிக்கைகள், இவற்றுக்கு மேல் காலநிலை நெருக்கடியால் ஏற்படும் தொழில், வாழ்வாதார பாதிப்புகள் என்று அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தாக்குதல் நிகழும்போது மீனவர்களால் எந்தப் பக்கம் ஓட முடியும்?” என்று வினவும் ஜோன்ஸ், மீனவ சமூகங்கள் அனைத்துமே இப்போதே உள்நாட்டு சூழலியல் அகதிகளாகத்தான் இருப்பதாகவும் கூறுகிறார்.

அதே நேரத்தில், இத்தகைய ஆய்வுகளை முற்றிலுமாகச் சார்ந்திருக்க முடியாது என்கிறார் ஐஐடி மும்பையை சேர்ந்த பேராசிரியரும் காலநிலை விஞ்ஞானியுமான ரகு முர்துகுட்டே.

அவரது கூற்றுப்படி, ஒருவேளை உண்மையாக இத்தகைய பேராபத்து வரவுள்ளது என வைத்துக்கொண்டாலும்கூட அதைச் சமாளிக்க என்ன செய்யப் போகிறோம் என்பதற்கான பதில் நம்மிடம் இல்லை.

 
இந்திய பெருங்கடல்: மீன் வளம் முற்றிலும் அழியும் ஆபத்து - தமிழக மீனவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

காலநிலை மாதிரிகள் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் எதிர்காலம் குறித்த ஊகங்களை மட்டுமே வழங்குவதாகவும் அவற்றை முழுமையாக நம்ப முடியாது என்று கூறும் முர்துகுட்டே, பவளப் பாறைகள் அழிவு, கடல்பரப்பில் வெப்பநிலை உயர்வு, கடல் அமிலமயமாதல் ஆகிய அபாயங்கள் அதிகரித்து வருவதை ஏற்றுக்கொள்கிறார்.

“கடல் பகுதியில் ஏற்படும் வெப்ப அலைகளை, அதன் பாதிப்புகளை இப்போது எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பது குறித்து நாம் கலந்தாலோசித்து திட்டமிட வேண்டும். அதன் பிறகு, 2100-இல் ஏற்படப்போகும் ஆபத்துகளைப் பற்றிச் சிந்திக்கலாம்.”

மீன் வளத்தைப் பொறுத்தவரை அளவுக்கு அதிகமாக மீன் பிடிப்பது ஒருபுறம் பிரச்னையாக இருக்க, மறுபுறம் காலநிலை நெருக்கடியால் மீன் வளம் குறைவது ஒரு முக்கியப் பிரச்னையாக இருக்கிறது. இந்த இரண்டையும் தனித்தனி பிரச்னைகளாக அணுக வேண்டியது அவசியம் என்கிறார் ரகு முர்துகுட்டே.

“கடலோரங்களில் அலையாத்திக் காடுகள், பவளப் பாறைகள் மீது அதிக கவனம் செலுத்துவது, மாசுபாடுகளைக் கட்டுப்படுத்துவது, மீனவ சமூகங்கள் ஒட்டுமொத்தமாக மீன் பிடிக்காமல், அவர்களில் யாரெல்லாம், எந்தெந்த காலகட்டங்களில் மீன் பிடிக்கலாம் என்பது போன்ற ஏற்பாடுகளைச் செய்வது, மீன்வள மேலாண்மையில் நிலைத்தன்மையைக் கொண்டு வருவது எனப் பல்வேறு நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த வகையில் எடுக்க வேண்டியது அவசியம். அதன்மூலம் இந்த அபாயத்தைக் கட்டுப்படுத்த முடியும்.” எனவும் வலியுறுத்துகிறார் அவர்.

 
காலநிலை நெருக்கடியைக் கையாள என்ன செய்ய வேண்டும்?
இந்திய பெருங்கடல்: மீன் வளம் முற்றிலும் அழியும் ஆபத்து - தமிழக மீனவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் பல்லுயிர்ச் சூழலைப் பாதுகாக்கவும், காலநிலை தகவமைப்புடன் கூடிய அணுகுமுறையைக் கையாள வேண்டியது அவசியம் எனவும் இதில் சர்வதேச ஒத்துழைப்பையும் வளர்க்க வேண்டும் என்று சமீபத்திய ஆய்வறிக்கை அறிவுறுத்துகிறது.

ஆனால் காலநிலை நெருக்கடியின் விளைவாக ஏற்படும் ஆபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக நிலைமையை மோசமாக்கும் வகையிலேயே அரசின் நடவடிக்கைகள் அமைந்திருப்பதாகவும் கூறுகிறார் ரகு முர்துகுட்டே.

கடலோர பொருளாதார மண்டலங்கள் மூலம் துறைமுகங்களைப் புதிதாகக் கட்டுவது, ஆழ்கடல் சுரங்கங்கள், ஹைட்ரோகார்பன் திட்டங்கள், தூய ஆற்றல் என்ற பெயரில் ஆழ்கடலில் காற்றாலைகளை நிறுவுவது எனப் பல திட்டங்கள் இந்தியப் பெருங்கடல், வங்கக் கடல் பகுதிகளில் திட்டமிடப்பட்டுள்ளன.

ஆனால், “இத்தகைய பொருளாதார நோக்கிலான திட்டங்களால் தற்போது கூறப்படும் காலநிலை எச்சரிக்கைகள் துரிதப்படுமே தவிர, தணியாது” என்று விமர்சிக்கிறார் ஜோன்ஸ்.

மனித நடவடிக்கைகளால் துரிதமடையும் அபாயங்களை மட்டுப்படுத்தாமல், “வளர்ச்சித் திட்டங்கள்” மூலம் அதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதையே அரசு செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார்.

 
இந்திய பெருங்கடல்: மீன் வளம் முற்றிலும் அழியும் ஆபத்து - தமிழக மீனவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?

பட மூலாதாரம்,SIVA.V.MEYYANATHAN/TWITTER

காலநிலை நெருக்கடியின் விளைவுகள் மட்டுமின்றி மேற்கூறிய மனித நடவடிக்கைகளால் ஏற்படும் அபாயங்களையும் கையாள்வதற்கான அணுகுமுறையைத் திட்டமிடும்போது மீனவ சமூகங்களின் பார்வை மிகவும் அவசியம் என அவர் வாதிடுகிறார்.

“உள்ளூர் மக்கள் சமூகங்களைத் திட்டமிடுதலில் இணைத்துக்கொள்ள வேண்டுமென்ற பார்வையே அதிகாரிகள், வல்லுநர்கள் என யாரிடத்திலும் இல்லை. அப்படி நினைத்தால் மட்டுமே அவர்களுக்குத் தேவையான நடவடிகைகளை மேற்கொள்ள முடியும். அதன் மூலமாகத்தான் எதிர்வரும் அபாயங்களைக் கையாள முடியும்” என்கிறார் ஜோன்ஸ்.

மீனவர்கள் நலனில் அரசு அக்கறை செலுத்துகிறதா?

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற கடந்த மூன்றாண்டு காலத்தில் எந்தவித அபாயகரமான திட்டமும் கடற்கரையோரங்களில் நிறைவேற்றப்படவில்லை என்று கூறுகிறார் தமிழ்நாடு சுற்றுச்சூழல், காடு, காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

எந்தவொரு திட்டமோ நடவடிக்கையோ கொண்டு வரப்படும்போது மீனவ சமூகங்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்துக் கேட்டபோது, “மீனவ மக்களுடைய உரிமைகள், வாழ்வாதாரம் தொடர்பான பணிகளை, மீனவ சங்கப் பிரதிநிதிகளிடம் கேட்டு, அவர்கள் அறிவுறுத்தியதன்படியே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,” என்றார்.

எதிர்காலத்தில் காலநிலை நெருக்கடியால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருத்தில் கொண்டே நெய்தல் மீட்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் கூறினார் மெய்யநாதன்.

அந்தத் திட்டத்தால் மீனவ மக்களுக்குப் பெரிய பயன் ஏதுமில்லை என்ற விமர்சனம் குறித்துக் கேட்டபோது, “மீன்பிடித் தடைக்காலத்தில் கொடுக்கப்படும் தொகை உயர்த்தப்பட்டுள்ளது, மீனவ மக்களுக்கான வீட்டு வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன” என்று கூறியவர் அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் நிறைவேற்றித் தருவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c84z39xx194o

தமிழ்நாட்டில் 12 நாட்களில் 4 காவல் மரணங்கள்: போர்க்கொடி உயர்த்தும் மனித உரிமை ஆர்வலர்கள்

2 weeks ago
காவல் மரணங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 5 முதல் 16ஆம் தேதிக்குள் 4 காவல் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இது தொடரக்கூடாது என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள். இந்தச் சம்பவங்களில் என்ன நடந்தது?

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாடு காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் கொடி வழங்கும் விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "காவல் நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை தமிழக காவல்துறையினர் ஏற்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டார். ஆனால், அந்த ஆண்டுத் துவக்கத்தில் இருந்து ஏப்ரல் மாதத்திற்குள் மட்டும் 3 காவல் மரணங்கள் நடந்திருந்தன.

முதலமைச்சர் இப்படிச் சுட்டிக்காட்டிப் பேசிய பிறகும்கூட போலீஸ் காவலில் இருப்பவர்கள் மரணமடைவது தொடர்ந்துகொண்டே இருந்தது. ஆனால், இப்போது ஒரே மாதத்தில் 12 நாட்களுக்குள் நான்கு பேர் போலீஸ் காவலில் இறந்திருப்பதுதான் பலரையும் அதிர வைத்திருக்கிறது.

ஏப்ரல் 5ஆம் தேதி முதல் 16ஆம் தேதிவரை நான்கு பேர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது உயிரிழந்திருக்கின்றனர். இந்த நான்கு பேரில் 2 பேர் காவல் நிலையத்தில் உயிரிழந்திருக்கின்றனர். இரண்டு பேர் நீதிமன்றக் காவலில் உயிரிழந்திருக்கின்றனர்.

 
12 நாட்களில் நான்கு காவல் மரணங்கள்: போர்க்கொடி உயர்த்தும் மனித உரிமை ஆர்வலர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டவர் காவலில் மரணம்

மணிமேகலையும் அவரது கணவர் கணேசனும் மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையின் வாயிலில் கடை வைத்து பிழைத்துக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் கடைகள் அங்கிருந்து அகற்றப்படவே, தற்போது கூலி வேலை செய்கிறார்கள் இந்தத் தம்பதி. இவர்களது ஒரே மகன் கார்த்திக். இவருக்குத் திருமணமாகி, ஒரு வயதிலும் 3 வயதிலும் குழந்தைகள் இருக்கின்றனர். இவர் மீது சில வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில்தான் ஒரு வழிப்பறி வழக்கில் கைதுசெய்யப்பட்ட கார்த்திக், போலீஸ் காவலிலேயே இறந்து போயிருக்கிறார்.

"ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவனை போலீஸ்காரர்கள் வந்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள். நான் வேலைக்குப் போயிருந்ததால், பிற்பகல் நான்கு மணி அளவில் தொலைபேசியில் தகவல் சொன்னார்கள். நான் என் மருமகளிடம் விவரத்தைச் சொன்னேன். அதற்குப் பிறகு ஆறு மணிக்கு என் மகனே போன் செய்தான். தன்னை ரிமாண்ட் செய்யப்போவதாகவும் வந்து பார்க்கும்படியும் சொன்னான். உடனே போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனோம். பத்து மணியளவில் அவனை ரிமாண்ட் செய்து ஜெயிலுக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். நாங்கள் வீட்டுக்குப் போய்விட்டோம்." என்கிறார் கார்த்தியின் தாயாரான மணிமேகலை.

"அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு காவல் துறையிடமிருந்து போன் வந்தது. என்னுடைய மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகச் சொன்னார்கள். போய்ப் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினோம். அன்று இரவு 2 மணிக்கு போலீஸிடமிருந்து மறுபடியும் போன் வந்தது. எனது மகனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துவிட்டதாகவும் வந்து பார்க்கும்படியும் சொன்னார்கள். நாங்கள் போய் பார்த்த சிறிது நேரத்திலேயே அவன் இறந்துவிட்டான். என்ன நடந்ததென்றே தெரியவில்லை" என்கிறார் மணிமேகலை.

அதீத காய்ச்சலால் இறந்ததாகக் கூறிய காவல்துறை

அவர் அதீதமான காய்ச்சலால் உயிரிழந்ததாக காவல் துறை கூறியிருக்கிறது. இருந்தாலும் குடும்பத்தினரால் நம்ப முடியவில்லை. நன்றாகப் பேசிக்கொண்டிருந்த மகன் எப்படி திடீரென இறக்க முடியும் எனக் கேள்வி எழுப்புகிறார்கள்.

இதற்கு சில நாட்களுக்குப் பிறகு சென்னைக்கு அருகிலுள்ள பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவர் போலீஸ் காவலில் இறந்து போனார்.

12 நாட்களில் நான்கு காவல் மரணங்கள்: போர்க்கொடி உயர்த்தும் மனித உரிமை ஆர்வலர்கள்

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு,இட்லி கார்த்திக். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட படம்
பாஜக நிர்வாகி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு நேர்ந்தது என்ன?

பா.ஜ.கவின் பட்டியல் அணி பிரிவின் மாநிலப் பொருளாளரான சங்கர் என்பவர் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த கவுன்சிலரான 30 வயது சாந்தகுமார் என்பவர் கைதுசெய்யப்பட்டு 11 மாதங்களுக்குப் பிறகு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அவர் நசரத்பேட்டை காவல்நிலையத்தில் கையெழுத்திட்டுவந்தார். இதற்காக புட்லூரில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் அவரையும் அவருடன் இருந்த வேறு ஆறு பேரையும் கைதுசெய்தனர். செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் காவல் துறையினர் இவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக சாந்தகுமார் கூறியதாகவும் அதனால், அவரை மருத்துமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் வழியிலேயே இறந்துவிட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.

 
12 நாட்களில் நான்கு காவல் மரணங்கள்: போர்க்கொடி உயர்த்தும் மனித உரிமை ஆர்வலர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

திட்டமிட்ட படுகொலை எனக் கூறும் சாந்தகுமாரின் மனைவி

இது திட்டமிட்ட படுகொலை என்று குற்றம்சாட்டிய சாந்தகுமாரின் மனைவியும் அவரது குடும்பத்தினரும் சாந்தகுமாரின் மரணம் நடந்து ஒரு வாரத்திற்கு மேல் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

"என் கணவரின் சொந்த ஊரே புட்லூர்தான். அவருடைய அம்மா வழியில் வந்த நிலம் அங்கிருந்தது. அதை விற்பது குறித்து பேசத்தான் அவர் அங்கே போயிருந்தார். ஆனால், ஆயுதங்களோடு இருந்ததாகக் கூறி கைதுசெய்திருக்கிறார்கள். அன்று மாலை நான்கு மணியளவில்தான் எனக்குத் தகவல் தெரிந்தது. நான் வழக்கறிஞர்களை அனுப்பிவைத்தேன். உள்ளே விசாரணை நடந்துவந்ததால், அவர்களால் அவரை சந்திக்க முடியவில்லை. ஐந்தரை மணியளவில் போன் செய்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு வரச் சொன்னார்கள். அங்கே போனபோது, மார்ச்சுவரியில் என் கணவரின் உடல் இருப்பதாகச் சொல்லிவிட்டார்கள்" என்கிறார் அவரது மனைவி விஜயலட்சுமி.

இப்போது இந்த விவகாரம் தொடர்பாக குற்றவியல் நடுவர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. சாந்தகுமாரிடம் விசாரணை நடத்திய நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் குணசேகரன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

இது எப்படி நடந்தது என்பது குறித்து ஆவடி மாநகர காவல் துறை ஆணையர் ஷங்கரிடம் கேட்டபோது, "பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. ஆனால், இதுவரை கிடைத்த தகவல்களின் படி அவரது உடலில் காயங்கள் ஏதும் இல்லை. இருதய நாளங்களில் அடைப்பு இருந்ததால்தான் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கிறார். ஆனால், காவல் நிலையத்தில் இருக்கும்போது இந்தச் சம்பவம் நேரிட்டதால் சம்பந்தப்பட்ட ஆய்வாளர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். நீதித்துறை நடுவர் விசாரணை நடக்கிறது. விசாரணையின் முடிவை வைத்து கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

ஆனால், சாந்தகுமாருக்கு வயது வெறும் 30தான் எனும்போது சந்தேகம் ஏற்படாதா எனக் கேட்டபோது, "இப்போது சிறு வயதினருக்கே மாரடைப்பு ஏற்படுகிறது. உடற்பயிற்சி கூடத்தில்கூட மாரடைப்பு ஏற்பட்டு இறக்கின்றனர். இருந்தாலும் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் எதையும் சொல்ல முடியும்" என்கிறார் அவர்.

உயிரிழந்த சாந்தகுமாருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

 
12 நாட்களில் நான்கு காவல் மரணங்கள்: போர்க்கொடி உயர்த்தும் மனித உரிமை ஆர்வலர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதேபோல, ஏப்ரல் 10ஆம் தேதி விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு வீடு திரும்பிய கே. ராஜா என்பவர், வீட்டிற்குள் வந்தவுடன் உயிரிழந்தார்.

விழுப்புரம் டவுன் ஜிஆர்பி தெருவைச் சேர்ந்த 44 வயதான கே. ராஜா என்பவரை ஏப்ரல் 9ஆம் தேதி முதல் காணவில்லை. ஏப்ரல் பத்தாம் தேதி காலையில் அவர் காவல் துறையால் கைதுசெய்யப்பட்டிருப்பது குடும்பத்தினருக்குத் தெரியவந்தது. இதற்குப் பிறகு அவரைச் சந்திக்க அவரது குடும்பத்தினர் சென்றனர். அவர்கள் கைதியை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. இதற்குப் பிறகு காலை 11.30 மணியளவில் அவர் வீடு திரும்பினார்.

டாஸ்மாக் ஒன்றுக்கு அருகில் இருந்த உணவகத்தில் வேலை பார்த்த ராஜா, மது விற்பனைக்கான நேரம் முடிந்த பிறகும் கள்ளச்சந்தையில் மது விற்ற குற்றச்சாட்டில் விசாரிக்கப்பட்டதாக காவல்துறை கூறியது.

வீட்டுக்குத் திரும்பிய ராஜா, தன்னைக் காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியதாக குடும்பத்தினரிடம் கூறியிருக்கிறார். அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் வாயிலிருந்து நுரை தள்ளி கீழே சாயவே, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இப்போது இது தொடர்பாக விழுப்புரம் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட சிவகாசியை சேர்ந்த 60 வயதான ஜெயக்குமார் என்ற விசாரணைக் கைதி ஏப்ரல் 15ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறி பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் அங்கேயே உயிரிழந்தார்.

விழுப்புரம் வழக்கைத் தவிர, மற்ற மூன்று சம்பவங்கள் தொடர்பாகவும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 176 (1) (அ)ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நான்கு சம்பவங்களிலும் தமிழ்நாடு அரசு இழப்பீடு ஏதும் அறிவிக்கவில்லை. விழுப்புரம் ராஜாவின் மரணம் சந்தேக மரணமாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இப்போது மறு பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவு பெறப்பட்டுள்ளது.

 

"இந்த வழக்குகளின் புலன் விசாரணையை உடனடியாக குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CB-CID) மாற்ற தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இந்த மரணங்களில் தொடர்புடைய காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். மேலும் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இந்த நான்கு சம்பவங்களிலும் தொடர்புடைய அனைத்து காவலர்கள், சிறைச்சாலை அதிகாரிகளையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். இது தொடர்பான விவரங்களை தேசிய மனித உரிமை ஆணையத்திடம் (NHRC) தெரிவிக்க வேண்டும்" என்கிறார் மக்கள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளரான ஹென்றி திஃபேன்.

மேலும் சில விஷயங்களையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். "இதுபோல நடந்தால் என்ன செய்ய வேண்டுமென 'சந்தேஷ் VS மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர்' வழக்கின் தீர்ப்பில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவர் போலீஸ் காவலில் இறந்தால், குடும்ப உறுப்பினர்கள் பார்க்காமல் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கே அனுப்பக்கூடாது.

பிரேதப் பரிசோதனை அறிக்கையை உடனடியாக குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும். அவர்கள் அதனைப் படித்துப் பார்த்து, ஒப்புதல் தெரிவிக்க கால அவகாசம் வழங்கியே சடலத்திற்கு இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டும். இப்படியெல்லாம் செய்தாலே, பாதி பிரச்னைகள் எழாது. இந்தப் பரிந்துரைகள் எல்லாமே காவல்துறைக்கு எதிரானவையல்ல. அவர்களுக்கு ஆதரவானவைதான். இந்த விதிமுறைகளின்படி நடந்தால், காவல்துறை அதிகாரிகள் எந்தச் சிக்கலிலும் சிக்க மாட்டார்களே.. ஆனால், அப்படி செய்யாமலிருப்பது ஏன் எனத் தெரியவில்லை" என்கிறார் ஹென்றி.

 
12 நாட்களில் நான்கு காவல் மரணங்கள்: போர்க்கொடி உயர்த்தும் மனித உரிமை ஆர்வலர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

காவல்துறையில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க ஏற்கெனவே உள்ள விதிமுறைகளைப் பின்பற்றினாலே போதும் என்கிறார் முன்னாள் டிஜிபியான திலகவதி.

"ஒருவரை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துவரும்போது பல சமயங்களில் அவரது உடல் நிலை மோசமாகக்கூட இருக்கலாம். அதனால்கூட மரணங்கள் நேரலாம். அதற்கு காவல்துறை பொறுப்பேற்க நேர்கிறது. ஆகவே, ஒருவரை விசாரணைக்கு அழைத்துவரும்போதே அவரை மருத்துவ பரிசோதனை செய்துதான் அழைத்து வரவேண்டும். அவருக்கு உடல்நிலை மோசமாக இருந்தால், மருத்துவமனையில் சேர்க்க வேண்டுமே தவிர, காவல் நிலையத்திற்கு அழைத்துவரக்கூடாது. கைது செய்யப்பட்டவுடனேயே உறவினர்களுக்கு தகவல் அளிக்க வேண்டும். கைதி விரும்பினால் வழக்கறிஞர்களிடம் பேச அனுமதிக்க வேண்டும்."

"எந்தக் கைதியையும் இரவு நேரங்களில் காவல் நிலையத்தில் தங்க வைக்கக்கூடாது. காரணம், இரவில் காவல் நிலையத்தில் மிகக் குறைவான காவலர்களே இருப்பார்கள். திடீரென கைதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் ஒன்றிரண்டு காவலர்களால் எதுவும் செய்ய முடியாது. இந்த விதிமுறைகளை திரும்பத் திரும்ப காவல்துறையினருக்கு சொல்லிவர வேண்டும். மனித உயிர் விலைமதிப்பற்றது" என்கிறார் திலகவதி.

தேசிய மனித உரிமை ஆணையம் அளிக்கும் புள்ளிவிவரங்களின்படி, 2018-19ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 11 காவல் மரணங்களும் 89 சிறை மரணங்களும் நடந்திருக்கின்றன. இந்திய அளவில் 137 காவல் மரணங்களும் 1797 சிறை மரணங்களும் நடந்திருக்கின்றன. 2019 - 20ல் தமிழ்நாட்டில் 12 காவல் நிலைய மரணங்களும் 57 சிறை மரணங்களும் நடந்திருக்கின்றன.

https://www.bbc.com/tamil/articles/c72pkrxp3xxo

தமிழகத்திற்கு தொடர்ந்து 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை : அதிக வெப்பநிலையால் 9 பேர் பலி

2 weeks ago
high-temperatures-711x375.webp தமிழகத்திற்கு தொடர்ந்து 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை : அதிக வெப்பநிலையால் 9 பேர் பலி.

இந்தியாவில் சில பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தமையால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் கிழக்கு இந்தியாவில் அதிகளவான வெப்பம் பதிவாகியுள்ளது.

ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்தியாவின் தென்பகுதி, மத்திய இந்தியா, கிழக்கு இந்தியா, வடமேற்கு இந்தியாவின் சமவெளிப் பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான வெப்ப அலை வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி ஆரம்பமான ஏழு கட்ட நாடாளுமன்றத் தேர்தலில், ஜூன் மாதம் 4 ஆம் திகதி முடிவுகள் வெளியாகும் நிலையில் வாக்குப்பதிவு குறைந்தமைக்கு கடும் வெப்பமும் ஒரு காரணம் என அரசியல் ஆய்வாளர்களால் கூறுகின்றனர்.

குறிப்பாக சேலம், ஈரோடு, கரூர், தர்மபுரி, திருத்தணி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரியையும், சில நேரங்களில் 105 டிகிரி கடந்தும் வெயில் பதிவாகியுள்ளது.

இதில் ஈரோடு, சேலத்தில் 108 டிகிரியையும் கடந்து இந்த ஆண்டில் இதுவரை இல்லாத வெப்ப அளவாக பதிவாகியுள்ளது. ஈரோட்டில் 11-வது நாளாக நேற்று 110 டிகிரி அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

https://athavannews.com/2024/1380732

சென்னை: ஏரிகளில் வேகமாக குறையும் நீர்மட்டம் - கோடையில் குடிநீர் தட்டுப்பாடின்றி வருமா?

2 weeks 1 day ago
சென்னை குடிநீர் பற்றாக்குறை வருமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னையின் வடக்கு எல்லையில், திருவொற்றியூரில் வசிக்கும் எஸ்.பாக்கியலட்சுமி கடந்த வாரம் தனது இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு பேரன்களுடன் அருகில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று இரண்டு நாட்கள் தங்கியிருந்தார். கோடைகாலத்தில் மகள் வீட்டில் ஆசுவாசப்படுத்திக் கொள்ள அல்ல, தனது வீட்டில் நான்கு நாட்களாக தண்ணீர் வராததால் அவர் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டிருந்தார்.

திருவொற்றியூர் ஆறாவது தெருவில் வசிக்கும் அவரது வீட்டில் அவருடன் சேர்த்து ஐந்து பேர் வசிக்கின்றனர். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மாலை 5 மணி முதல் 7 மணி வரை அரசு வழங்கும் குடிநீர் கிடைக்கும். அதை அடுத்து இரண்டு நாட்களின் பயன்பாட்டுக்காக வீட்டில் உள்ள ட்ரம், பாத்திரங்களில் நிரப்பி வைத்துக் கொள்வார். குடிப்பதற்கு கேன் தண்ணீர் பயன்படுத்தும் பாக்கியலட்சுமியின் குடும்பத்தினர் மற்ற எல்லா தேவைகளுக்கும் இந்த நீரையே நம்பியுள்ளனர்.

“எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் சேறும் சகதியுமாக இருக்கும். அதை யாரும் பயன்படுத்த மாட்டோம். கடல் நீரை குடிநீராக்கும் ஆலையிலிருந்து எங்களுக்கு கிடைக்கும் நீர், போதிய அழுத்தம் இல்லாததால் எங்கள் பகுதி வரை வந்து சேரவில்லை என்று இந்தப் பகுதி கவுன்சிலர் கூறினார். எனவே இரண்டு நாட்கள் அனைவரும் மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டோம். அங்கும் மெட்ரோ வாட்டர் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தான் கிடைக்கும், ஆனால் நிலத்தடி நீரின் தரம் பரவாயில்லை,” என்றார்.

இந்த ஆண்டு பெங்களூரூ நகரில், தேர்தல் விவகாரமாக பேசப்படும் அளவுக்கு, கடுமையான நீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஒரு கோடிக்கும் மேலான மக்கள் தொகை கொண்ட பெங்களூரூ நகரம் தனது குடிநீர் தேவையில் 60%-ஐ பூர்த்தி செய்ய காவிரி நீரையேச் சார்ந்துள்ளது.

சென்னை குடிநீர் பற்றாக்குறை வருமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பெங்களூருவில் குடிநீர் பிரச்னையைச் சரிசெய்யக் கோரி நடத்தப்பட்ட போராட்டம்
பெங்களூருவின் குடிநீர் பிரச்னை

காவிரி ஆற்றுப்படுகையில், மரங்கள் அழிக்கப்பட்டதால் பெங்களூருவின் குடிநீர் தேவையை காவிரி ஆற்றால் பூர்த்தி செய்யமுடியவில்லை, என்றும் அதிகரித்து வரும் கட்டடங்களால் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து வருகிறது என்றும் பெங்களூருவின் இந்திய அறிவியல் கழகத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பெங்களூரூ போன்றே சுமார் ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட மாநகரம் சென்னை. பெங்களூரு இன்று சந்திப்பது போன்ற வறட்சியை ஐந்து ஆண்டுகளுக்கு முன் சென்னை சந்தித்திருந்தது. மீண்டும் அப்படி ஒரு நிலை சென்னையில் வராது என்று கூறுவதற்கு எந்த காரணமும் இல்லை. அதிகரிக்கும் வெப்ப அலை, குறைந்து வரும் ஏரிகளின் நீர் மட்டம் ஆகியவை சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

5 ஏரிகளிலும் வேகமாக குறையும் நீர்மட்டம்

சென்னைக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஐந்து ஏரிகளில் 50% நீர் இருப்பே உள்ளது. சென்னையில் 1944-ஆம் ஆண்டு கட்டப்பட்ட முதல் நீர்த்தேக்கம் பூண்டி. பெரிய நீர் தேக்கங்களில் ஒன்றான பூண்டியில் அதன் முழு கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் 27.79% மட்டுமே நீர் உள்ளது.

அதே போன்று 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் நீர் தேக்கத்தில் 9.99% நீர் இருப்பு உள்ளது. புழல் ஏரியில் அதன் 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவில் 89.7% நீர் இருப்பும் செம்பரம்பாக்கத்தில் 64.64% நீர் இருப்பும், தேர்வாய் கண்டிகையில் 76% நீர் இருப்பும் உள்ளது.

 
சென்னை குடிநீர் பற்றாக்குறை வருமா?

பட மூலாதாரம்,VINAY IAS

படக்குறிப்பு,சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் வினய் ஐ.ஏ.எஸ்
காவிரி நீர் பற்றாக்குறையும் சென்னையை பாதிக்கிறது

இதைத் தவிர சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய, கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி கடந்த இரண்டு மாதங்களாக வறண்டு கிடக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன் சோழ அரசர்களால் அமைக்கப்பட்டு, 1,465 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட வீராணம் சென்னையிலிருந்து 250 கி.மீ தொலைவில் உள்ளது. காவிரி நீரை கொண்டு வந்து சேர்க்கும் மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைவாக இருப்பதால், கடந்த 21 ஆண்டுகளாக சென்னைக்குக் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக இருந்து வரும் வீராணம் ஏரி தற்போது வறண்டு கிடக்கிறது.

சென்னையின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் நீர் தேக்கங்களின் மொத்த கொள்ளளவான 13,222 மில்லியன் கன அடியில் 6,702 மில்லியன் கன அடி அதாவது 50.69% மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் வினய் ஐ.ஏ.எஸ் பிபிசி தமிழிடம் பேசும் போது, “வீராணம் ஏரி வறண்டு போவதற்கு முன்பாக, அதிலிருந்து ஒரு நாளுக்கு 165 மில்லியன் லிட்டர் நீர் எடுப்போம். தற்போது வீராணத்துக்கு அருகில் உள்ள நெய்வேலி சுரங்கம், பரவனாறு ஆற்று நீர், மற்றும் பரவனாற்றுக்கு அருகில் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் 65 மில்லியன் லிட்டர் நீர் கிடைக்கிறது,” என்றார்.

 
சென்னை குடிநீர் பற்றாக்குறை வருமா?

பட மூலாதாரம்,DR L ELANGO

சென்னைக்கு வரும் கிருஷ்ணா நதி நீர்

இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமான சென்னை மாநகரம், தமிழ்நாட்டிலேயே அதிக மக்கள் அடர்த்தி கொண்டதாகும். சென்னையில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 26,000 முதல் 27,000 பேர் வரை வசிக்கின்றனர். இது லண்டன் மாநகரத்தின் சராசரி மக்கள் அடர்த்தியை விட ஐந்து மடங்கு அதிகம்.

இந்நிலையில் சென்னையின் குடிநீர் தேவை தற்போது ஒரு நாளுக்கு 1,070 மில்லியன் லிட்டராக உள்ளது. இதில் 1,040 மில்லியன் லிட்டர் நீரை சென்னை குடிநீர் வாரியம் வழங்குவதாகக் கூறுகிறது. சென்னையின் குடிநீர் தேவைக்கும், குடிநீர் வழங்கலுக்கும் இடையிலான வித்தியாசம் வரும் நாட்களில் அதிகரிக்கப் போகிறது என்று அண்ணா பல்கலை கழகம் மற்றும் ஐ.ஐ.டி மெட்ராஸ் இணைந்து நடத்திய ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வை நடத்திய சென்னை ஐ.ஐ.டி-யின் பகுதி நேர பேராசிரியர் முனைவர் எல்.இளங்கோ பிபிசி தமிழிடம் பேசுகையில், “சென்னையில் 2030-ஆம் ஆண்டில் ஒரு நாளுக்கு 2,365 மில்லியன் லிட்டர் நீர் தேவைப்படும். அப்போது ஒரு நாளுக்கு 466 மில்லியன் லிட்டர் நீர் குறைபாடு இருக்கும்.

அதேபோன்று சென்னையில் 2040-ஆம் ஆண்டு ஒரு நாளுக்கு 717.5 மில்லியன் லிட்டர் குறைவாக இருக்கும், மேலும் 2050-ஆம் ஆண்டு 962 மில்லியன் லிட்டர் நீர் ஒரு நாளுக்கு தட்டுப்பாடாக இருக்கும். சென்னையின் சராசரி மழை அளவு, நிலத்தடி நீர் என பல்வேறு அளவுகோல்களை கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது,” என்றார்.

சென்னை குடிநீர் பற்றாக்குறை வருமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சென்னையிலுள்ள ஒரு கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை
கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்

குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, சென்னைக்குக் கை கொடுக்கும் 'ஆபத்பாந்தவன்' கடல் நீரை குடிநீராக்கும் திட்டமாகும்.

சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை முதன் முதலாக 2010-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. சென்னையின் வடக்கில் மீஞ்சூரில் அமைக்கப்பட்ட அந்த ஆலை ஒரு நாளுக்கு 100 மில்லியன் லிட்டர் நீரை அப்பகுதியில் உள்ள 10 லட்சம் மக்களுக்கு வழங்கி வருகிறது.

சென்னையின் தென் திசையில் நெம்மேலியில் அமைக்கப்பட்டுள்ள ஆலை 110 மில்லியன் லிட்டர் ஒரு நாளுக்கு வழங்கக் கூடியது.

நெம்மேலியில் ரூ.1,516 கோடி மதிப்பீட்டில், 150 மில்லியன் லிட்டர் தரக்கூடிய மற்றொரு ஆலை கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்டது.

நான்காவது ஆலை, சென்னையிலிருந்து புதுச்சேரி வரை வங்கக் கடலை ஒட்டிய கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரூரில் ரூ.4,276 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.

எதிர்வரும் 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படும் இந்த ஆலை ஒரு நாளுக்கு 450 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கும் திறன் கொண்டது. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரிய ஆலையான இதிலிருந்து சென்னையின் தென் பகுதியில் உள்ள 22 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும் என்று அரசு கூறுகிறது.

இதன் மூலம் இந்தியாவிலேயே 750 மில்லியன் லிட்டர் குடிநீரை கடல் நீரிலிருந்து பெறக் கூடிய நகரமாக சென்னை இருக்கும் என தமிழக அரசு கூறுகிறது.

இந்த ஆண்டும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என்று அதிகாரிகள் நம்பிக்கையுடன் கூறுவதற்கு இந்த ஆலைகளே முக்கிய காரணம்.

 
சென்னை, குடிநீர் தட்டுப்பாடு, கோடை, வறட்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமான சென்னையில் சுமார் ஒரு கோடி பேர் வசிக்கின்றனர்
அதிகாரிகள் சொல்வது என்ன?

சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் டி.ஜி.வினய் ஐ.ஏ.எஸ், “சென்னையின் ஏரிகளில் 50%-க்கும் குறைவான நீர் இருப்பு இருந்தாலும், மார்ச் மாதத்துக்கு முன் எவ்வளவு தண்ணீர் வழங்கப்பட்டதோ, அதே அளவு நீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. சென்னையின் ஏரிகளிலிருந்து ஒரு நாளுக்கு 42 மில்லியன் கனஅடி நீர் சென்னையின் தேவைக்காக எடுக்கப்படுகிறது. இப்போது உள்ள நீர் இருப்பைக் கொண்டு, கிட்டத்தட்ட 150 நாட்களுக்கு நீர் வழங்க முடியும். கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகளிலிருந்து 360 மில்லியன் லிட்டர் ஒரு நாளுக்கு பெறமுடியும். தற்போது 250 மில்லியன் லிட்டர் பெறப்படுகிறது. அடுத்த சில நாட்களில் இந்த அளவு அதிகரிக்கப்படும். எனவே செப்டம்பர் முதல் வாரம் வரை சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை,” என்றார்.

இந்த ஆண்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என்று வைத்துக்கொண்டாலும், இது இந்த ஆண்டுக்கு மட்டுமான பிரச்னை அல்ல. வறட்சி, நீர் பற்றாக்குறை, மண்வளம் குறைதல், கடல் நீர் உட்புகுதல், காட்டுத் தீ, உயிரினங்கள் அழிவது, வெப்ப அசௌகரியம் ஆகியவை காலநிலை மாற்றத்தின் அறிகுறிகளாகும்.

காலநிலை மாற்றத்தின் நீண்ட கால விளைவுகளை தமிழ்நாடு அரசு வகுத்துள்ள காலநிலை செயல்திட்டம் கணித்துள்ளது. அதன்படி 2100-ஆம் ஆண்டுக்குள் சென்னையின் ஆண்டுக்கான சராசரி வெப்பம் 3.1 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும், மழை பொழிவு 9% குறையும்.

சென்னையில் மழை பற்றாக்குறையா?

காலநிலை மாற்றத்தின் ஒரு விளைவு தான் மாறி வரும் மழைப்பொழிவு என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். சென்னையில் சராசரியாக ஆண்டுக்கு 1,200மி.மீ. மழை பெய்கிறது. இது சென்னை நகரத்தின் நீர் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமான அளவு மழை ஆகும். எனினும், சில நேரங்களில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்து விடுகிறது. ஒரு ஆண்டில் வடகிழக்குப் பருவ மழை முடிந்து தென்மேற்குப் பருவ மழை தொடங்குவதற்கு இடைப்பட்ட காலத்தில் உள்ள நாட்கள் ‘வறண்ட நாட்கள்’ என்று அழைக்கப்படும்.

கடந்த 2010-ஆம் ஆண்டு சென்னையில் 150 வறண்ட நாட்கள் இருந்தன, அது 2019-ஆம் ஆண்டு 193 நாட்களாக அதிகரித்தது. இடையில் சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட 2015-ஆம் ஆண்டும் 193 வறண்ட நாட்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

 
சென்னை, குடிநீர் தட்டுப்பாடு, கோடை, வறட்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சென்னையில் 2023-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருமழை காரணமாக நகரத்தில் வெள்ளம் ஏற்பட்டது
பெருவெள்ளமும், கடும் வறட்சியும்

சென்னையில் 2005, 2015, 2018, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதில் 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் சென்னை நகரையே ஸ்தம்பிக்க வைத்தது. ஆனால் நான்கு ஆண்டுகள் கழித்து தண்ணீரே இல்லாத நிலையை குறிக்கும் ‘பூஜ்ஜிய நாள்’ அறிவிக்கப்பட்டது. அப்போது தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக விடுதிகள் மூடப்பட்டன. உணவக நேரம் குறைக்கப்பட்டது. குடியிருப்புப் பகுதிகளில் தாண்ணீருக்காக அடிக்கடி கைகலப்புகள் நேர்ந்தன. அப்போது பிற மாவட்டங்களில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அருகில் உள்ள விவசாய கிணறுகளிலிருந்தும் கல் குவாரிகளிலிருந்தும் தண்ணீர் எடுத்து வரப்பட்டது.

அதேபோல 2003-ஆம் ஆண்டும் மிகக் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை சென்னை சந்தித்தது. வெள்ளத்துக்கும் வறட்சிக்கும் முக்கிய காரணமாக இருப்பது நகரமயமாக்கல், நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டடங்கள், என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 
சென்னை, குடிநீர் தட்டுப்பாடு, கோடை, வறட்சி
படக்குறிப்பு,சென்னையில் நீர்நிலைகளின் பரப்பளவு சுருங்கி வருகிறது. பூண்டி நீர்த்தேக்கத்தின் கோப்புப் படம்
'சென்னையின் நீர் நிலைகள் சுருங்கிவிட்டன'

1893-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் சென்னையில் 12.6 சதுர கி.மீ.-ஆக இருந்த சென்னை நீர் நிலைகளின் பரப்பளவு 3.2 சதுர கி.மீ.-ஆகச் சுருங்கியுள்ளது.

சென்னையில் உள்ள கட்டங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது 1,488 சதுர கி.மீ. பரப்பளவில் கட்டடங்கள் உள்ளன. இது 100 ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று அண்ணா பல்கலை கழகம் மற்றும் சென்னை ஐ.ஐ .டி நடத்திய ஆய்வின் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் நமது எல்லா பிரச்னைகளுக்கும் காலநிலை மாற்றத்தின் மீது பழி போடக் கூடாது என்கிறார் லண்டன் பல்கலைகழகத்தின் நீர் மற்றும் வளர்ச்சிக்கான மையத்தின் முன்னாள் ஆய்வாளராகவும், பல்துறை நீர்வள ஆய்வுகளுக்கான தெற்காசிய கூட்டமைப்பின் தலைவராகவும் இருக்கும் எஸ்.ஜனகராஜன்.

சென்னை, குடிநீர் தட்டுப்பாடு, கோடை, வறட்சி

பட மூலாதாரம்,S JANAKARAJAN

படக்குறிப்பு,எஸ்.ஜனகராஜன்

இதுகுறித்து பிபிசி தமிழிடம் அவர் பேசும்போது, “தமிழகத்தின் அனைத்து நீர் நிலைகளும் எக்காரணம் கொண்டும் அழிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டும் என்று 2007-ஆம் ஆண்டு தமிழக அரசு சட்டம் ஒன்றை இயற்றியது. ஆனால், அந்தச் சட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 'Tank Memoirs' என்ற ஆவணத்தின்படி சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில், 3,600 நீர் நிலைகள் இருந்தன. இன்று இவற்றில் பல காணாமல் போய்விட்டன,” என்றார்.

மேலும், “ஏரிகள் ஒவ்வொன்றும் இணைக்கப்பட்டவை. ஒன்று நிரம்பும் போது, அங்கிருந்து நீர் அடுத்த ஏரிக்குச் செல்லும். அந்த முறை இன்று முற்றிலும் அழிந்துவிட்டது. வளர்ச்சிக்கு யாரும் தடை சொல்லவில்லை. அந்த வளர்ச்சி நிலையானதாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்,” என்கிறார்.

மாறி வரும் மழைப்பொழிவுக்கு ஏற்றாற் போல மழைநீர் சேகரிப்பு முறைகள் வடிவமைக்க வேண்டும் என்கிறார் அவர். “ஒரே நாளில் பெய்யும் கனமழை கடலில் கலப்பதற்கு முன்பாக அதைச் சேமிக்க நவீன வழிகள் இருக்கின்றன. பூமிக்கு அடியில் பல கிலோ மீட்டருக்கு கால்வாய்கள் அமைத்து நீரைச் சேமிக்கும் பல நாடுகள் இருக்கின்றன. போதிய மழை பெய்யும் சென்னையில் தெற்கு ஆசியாவிலேயே பெரிய கடல்நீரை குடிநீராக்கும் ஆலை தேவை இல்லை. ஏரிகளை முறையாகத் தூர்வாரி, நவீன மழை நீர் சேமிப்புக் கட்டமைப்புகளை ஏற்படுத்தினாலே போதும்,” என்கிறார்.

 
சென்னை, குடிநீர் தட்டுப்பாடு, கோடை, வறட்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சென்னையில் மெட்ரோ வாட்டர் வினியோகம் செய்யப்பட்டாலும், பெரும்பாலான மக்கள் அதைக் குடிக்க விரும்புவதில்லை
சென்னையில் கிடைக்கும் குடிநீர் தரமானதா?

மத்திய அரசு நடத்திய 'பே ஜல் சர்வேக்ஷன்' (Peyjal Survekshan) ஆய்வில் இந்தியாவில் உள்ள 485 நகரங்களில் 46 நகரங்கள் மட்டுமே மக்களுக்குத் தரமான குடிநீர் வழங்குகின்றன என்று கண்டறியப்பட்டது. சென்னையின் குடிநீர் தேவையை 90%-க்கும் மேல் பூர்த்தி செய்து விட்டதாக அரசு கூறினாலும், சென்னை குடிநீர் வாரியம் வழங்கும் நீரை பலரும் குடிப்பதில்லை. சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி சென்னையில் 70% குடியிருப்புகள் குடி தண்ணீர் கேன்களை பயன்படுத்துகின்றன. 25 கி.மீ. நீள கடற்கரை கொண்ட சென்னையில் கடலோரப் பகுதிகளில் கடல் நீர் உட்புகுவதால், நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகரிப்பது சென்னையின் மற்றொரு சவாலாகும்.

சென்னை கோடம்பாக்கத்தில் வசிக்கும் எஸ் குமாரி, “எங்களுக்கு 24 மணி நேரமும் மெட்ரோ வாட்டர் கிடைக்கிறது. ஆனால் அந்த தண்ணீரில் கழிவுநீர் கலக்கலாம், தூசு கலக்கலாம் என்பதால் அதைக் குடிப்பதில்லை. தண்ணீர் கேன்கள் வாங்கிக் கொள்கிறோம்,” என்றார்.

ஐ.ஐ.டி-யின் ஆய்வை நடத்திய முனைவர் எல்.இளங்கோ, “குடிநீர் வாரியம் குடிநீரை எவ்வளவு தான் சுத்தப்படுத்தி வழங்கினாலும், குழாய்களில் இருக்கும் தூசு, வழியில் யாராவது கொண்டுள்ள கழிவுநீர் இணைப்புகள் நீரின் தரத்தை பாதிக்கின்றன. அதேநேரம் கேன்களில் நீரில் அதன் எல்லா தாது சத்துகளும் நீக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. குடிநீரில் 500 TDS இருக்க வேண்டிய சத்துகள் 50-க்கும் குறைவாகவே இருக்கின்றன. கேன்களில், பாட்டில்களில் விற்கப்படும் குடிநீரில் குறைந்தபட்ச தாதுக்களின் அளவை நிர்ணயிக்க வேண்டும்,” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c0x0v85l72po

Checked
Thu, 05/16/2024 - 17:57
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed