தமிழகச் செய்திகள்

தமிழகத்தில் இலங்கையர் உள்ளிட்ட வெளிநாட்டவர்களை வெளியேற்ற நடவடிக்கை!

1 month 1 week ago

தமிழகத்தில் இலங்கையர் உள்ளிட்ட வெளிநாட்டவர்களை வெளியேற்ற நடவடிக்கை!

 தமிழகத்தில் சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கி உள்ளதாக  இந்திய  ஊடகங்கள்  தெரிவித்துள்ளன.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.

அவ்வாறு வெளியேறாதவர்களுக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், பாகிஸ்தானியர்கள் மட்டுமல்லாமல் நேப்பாளம், இலங்கை, பங்ளாதேஷ் உட்பட, சட்டவிரோதமாக தங்கியுள்ள அனைத்து வெளிநாட்டவர்களையும் வெளியேற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் சட்ட விரோதமாக தங்கி இருக்கும் வெளி நாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளன.

அதன்படி, விசா காலம் முடிந்தும் தமிழகத்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர் பற்றிய விவரங்களை காவல்துறையினர் சேகரித்துள்ளனர். அவர்களை எப்போது, எப்படி வெளியேற்றுவது என்பது குறித்து உள்துறை செயலாளர் தீரஜ்குமார், காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம், பயங்கரவாத தடுப்புப் பிரிவு உயரதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அந்நிய நாட்டவர்கள் உரிய பயண, அடையாள ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக, பல்வேறு மாநிலங்களில் காவல்துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது ஏராளமான பங்ளாதேஷ் குடிமக்கள் போலி ஆதார், வாக்காளர் அட்டைகளைப் பெற்று நீண்ட ஆண்டு காலமாக இந்தியாவில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

 இந்நிலையில் வெளிநாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கை  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  அந்த  தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

https://www.thaarakam.com/news/795086fa-e007-44c6-9d05-18f45f411474

அர்ச்சகர் பயிற்சி முடித்தும் கருவறைக்குள் செல்ல முடியாமல் தவிக்கும் அர்ச்சகர்கள்

1 month 1 week ago

அனைத்து சாதியினரும் அர்ச்சகர், கோயில்கள், அறநிலையத் துறை, தமிழ்நாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் பல காரணங்களால் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரத் தாமதமாகிறது.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 1 மே 2025, 06:49 GMT

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வேலை வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் மாணவர்கள், விரைவில் தங்களுக்குப் பணி வாய்ப்புகளை வழங்க வேண்டுமெனக் கோருகிறார்கள். ஆனால், பணிநியமனம் செய்யாததற்கு நீதிமன்ற வழக்குகளை அரசு காரணம் காட்டுகிறது.

திருப்பத்தூரைச் சேர்ந்த மு. கோகுல்நாத் ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டமுடையவர். பர்வதமலை அடிவாரத்தில் இருந்த ஆதி சிவலிங்காச்சாரியார் குரு சுவாமி பீடத்தில் மந்திரங்களைக் கற்றுக் கொண்டிருந்தார்.

அவர் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிக்கான விளம்பரத்தைப் பார்த்து, திருவண்ணாமலையில் இருந்த அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் 2022ஆம் ஆண்டில் இணைந்தார். 2023இல் படிப்பை முடித்து தீட்சையும் பெற்றார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகப் போகின்றன. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் பணி வாய்ப்பு வரும் எனக் காத்திருக்கிறார்.

"எப்போதாவது புரோகிதத்திற்கு அழைப்பார்கள். அங்கு செல்வேன். என் தந்தையார் செயின் பாலீஷ் போடும் கடை வைத்திருக்கிறார். மீதி நேரத்தில் அந்த வேலையைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்" என்கிறார். தான் படிப்பை முடித்தவுடன் எந்தக் கோவிலில் பணி செய்ய விருப்பம் போன்ற தகவல்களையெல்லாம் அதிகாரிகள் வாங்கிச் சென்றதாகக் குறிப்பிடும் அவர், அதற்குப் பிறகு அது தொடர்பாக ஏதும் நடக்கவில்லை என்கிறார்.

அர்ச்சகர் நியமனத்தில் ஏற்படும் தாமதங்கள்

கோகுல்நாத்தாவது படிப்பை முடித்து இரண்டு ஆண்டுகள்தான் ஆகின்றன. ஆனால், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் 2007 - 2008ஆம் ஆண்டில் துவங்கிய முதல் பயிற்சி வகுப்பில் தனது அர்ச்சகர் படிப்பை முடித்தவர்.

இப்போது அவர் ராசிபுரத்திலேயே உள்ள சிறிய கோவில் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். புரோகிதம் செய்யும் வாய்ப்பு வந்தால், அதற்கும் சென்று வருகிறார். "2007-2008இல் முடித்தவர்களில் 28 பேருக்கு வேலை வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்களில் சிலர் இறந்துவிட்டனர். படித்து முடித்தவர்களில் 50 சதவிகிதம் பேர் புரோகிதம் போன்ற சின்னச் சின்ன வேலைகளைச் செய்து வருகின்றனர். பூணூல் எல்லாம் அணிந்து தீட்சை பெற்ற பிறகு, இதை விட்டுவிட்டுப் போக முடியவில்லை" என்கிறார் விஜயகுமார்.

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டு வரும் பயிற்சிப் பள்ளிகளில் தங்கள் படிப்பை முடித்து, இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் பணி வாய்ப்புக்காகக் காத்திருக்கும் இந்த இருவரைப் போல 200க்கும் மேற்பட்டவர்கள் காத்திருக்கிறார்கள். இவர்கள் கடவுள்களுக்கு பூஜை செய்யச் செல்வதற்கான பாதையின் வழியை வழக்குகள் மறித்து நிற்கின்றன.

தமிழ்நாட்டில் உள்ள இந்து கோவில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க அனுமதிக்கும் வகையில் 2006ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு சட்டம் ஒன்றை இயற்றியது. இதற்கென அரசாணை ஒன்றும் வெளியிடப்பட்டது. அந்த அரசாணையின் அடிப்படையில், நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி அர்ச்சக மாணவர்களின் தகுதி, பாடத் திட்டம், பயிற்சிக் காலம், கோவில்களில் நடைபெறும் பூஜை முறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து சில பரிந்துரைகளை அளித்தது.

பயிற்சி முடித்தும் வேலைக்காக காத்திருக்கும் அர்ச்சகர்கள்

அர்ச்சகர் நியமனம், கோயில்கள், அறநிலையத்துறை, தமிழ்நாடு

படக்குறிப்பு,அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயின்றுள்ள அர்ச்சகர்கள் பணி நியமானத்திற்காகக் காத்திருக்கின்றனர்.

அந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் அனைத்து சாதியைச் சேர்ந்த மாணவர்களுக்கும் பயிற்சி அளித்து, அவர்களை அர்ச்சகராக்கும் நோக்கத்தில், 2007ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி, திருவரங்கம், திருவண்ணாமலை, மதுரை, திருச்செந்தூர், பழநி ஆகிய ஆறு இடங்களில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் அமைக்கப்பட்டன.

அதில் திருவல்லிக்கேணி, திருவரங்கம் ஆகிய இடங்களில் வைணவ கோவில்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும் மீதமுள்ள நான்கு இடங்களில் சைவ கோவில்களுக்கான அர்ச்சகர் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

கடந்த 2007 - 2008ஆம் ஆண்டில் முதன்முதலில் இந்தப் பயிற்சிப் பள்ளிகள் துவங்கப்பட்டபோது, மொத்தமாக 240 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இவர்களில் சிலர் நடுவிலேயே விலகிவிட, 207 பேர் பயிற்சியை மொத்தமாக முடித்து 2008இல் தீட்சை பெற்றனர். இதற்கிடையில் மதுரையைச் சேர்ந்த ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் அரசின் முடிவை எதிர்த்து வழக்குத் தொடர்ந்து, தடை ஆணையைப் பெற்றது. இதனால், இந்த மாணவர்களுக்குப் பணி வாய்ப்பு வழங்கப்படவில்லை.

கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாத மத்தியில் உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. "தமிழக கோவில்களில் ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்கும் மரபு உள்ள இடங்களில் அதே முறைப்படி நியமிக்க வேண்டுமென்றும் ஆகம விதிகளின் கீழ் அர்ச்சகர் நியமனங்கள் நடக்கும்போது, பாதிக்கப்படுபவர்கள் நீதிமன்றங்களை அணுகி, தனித்தனியாக நிவாரணம் கோர வேண்டுமென்றும்" உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தெரிவித்தது.

ஆனால், இந்தத் தீர்ப்பின் மூலம் அனைத்து சாதியைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாமா என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தவில்லை என்ற கருத்து நிலவியதால், பணி நியமனம் போன்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

அர்ச்சகர் நியமனமும் சட்டப் போராட்டங்களும்

சென்னை உயர்நீதிமன்றம், அர்ச்சகர் நியமனம், அறநிலையத் துறை

படக்குறிப்பு,அர்ச்சகர் நியமனம் தொடர்பான பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், 2019ஆம் ஆண்டில் இந்து சமய அறநிலையத் துறையில் பணியாற்றும் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் இருக்க வேண்டிய தகுதிகளை வரையறை செய்யும் விதிகளை இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டது.

அந்தப் புதிய விதிகளின்படி, அர்ச்சகராக சேருவோர் 18 வயதிலிருந்து 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்றும் ஆகமப் பள்ளிகளில் பயிற்சி பெறுவோராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்குப் பிறகு, இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட இரு சிறிய கோவில்களில் இருவருக்குப் பணி வாய்ப்பு வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்கள் பணிவாய்ப்புக்காகக் காத்திருந்த நிலையில், 2021இல் புதிதாகப் பதவியேற்ற தி.மு.க. அரசு, அதே ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி 28 பேருக்குப் பணி வாய்ப்பு வழங்கியது.

இந்த நிலையில் இந்த நியமனங்களை எதிர்த்து மீண்டும் வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து புதிய நியமனங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இருந்தபோதும், மீண்டும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை நடத்தத் துவங்கியது தமிழ்நாடு அரசு. 2022-23இல் 94 பேரும் 2023 - 24இல் 111 பேரும் அர்ச்சகர் பயிற்சியை முடித்தனர். 2024 - 2025இல் 95 மாணவர்கள் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அனைத்து சாதி அர்ச்சகர்கள் நியமனத்தை எதிர்த்தும் அறநிலையத் துறையின் புதிய விதிகளை எதிர்த்தும் அகில இந்திய ஆதி சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்பட பத்துக்கும் மேற்பட்ட தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர்.

கடந்த 2022ஆம் ஆண்டில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், தமிழ்நாடு அரசு விதித்த விதிகள் செல்லும் என்றும் ஆகம விதிப்படி இயங்கும் கோவில்களில் அந்தந்த ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. தமிழ்நாட்டில் எந்தெந்த கோவில்கள் ஆகம விதிகளைப் பின்பற்றுகின்றன, எந்தெந்த கோவில்கள் ஆகம விதிகளைப் பின்பற்றவில்லை என்பது குறித்துக் கண்டறிய ஐந்து பேர் அடங்கிய குழுவை அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற தீர்ப்பால் ஏற்பட்ட இழுபறி

கோயில்கள், பூசாரி, பூஜை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் நீதிமன்ற தீர்ப்புகளால் தாமதம் ஆவதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் கிடைத்த தீர்ப்பு, தமிழ்நாடு அரசுக்கு வெற்றி என்பதைப் போலத் தோன்றினாலும் உண்மையில் அது வெற்றியல்ல என்கிறார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன். "அதற்குக் காரணம், ஆகம விதிப்படி இயங்கும் கோவில்களில் ஆகம முறைப்படியே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என நீதிமன்றம் சொல்லிவிட்டது. இதனால், ஆகம கோவில்களில் அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தைச் செயல்படுத்த முடியாத நிலை இந்தத் தீர்ப்பால் ஏற்பட்டது" என்கிறார் அவர்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து இந்து சமய அறநிலையத் துறை மேல் முறையீடு செய்யவில்லை. ஆனால், சில வைதீக அமைப்புகள் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. "இந்த வழக்கில் அவர்கள் செய்த மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தால்கூட அர்ச்சகர்களை அரசு நியமிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்" என்கிறார் வாஞ்சிநாதன்.

அடுத்ததாக, சேலம் சுகவனேஸ்வரர் கோவில் அர்ச்சகர் நியமனம் தொடர்பான வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது. சுகவனேஸ்வரர் கோவிலில் காலியாக உள்ள அர்ச்சகர் மற்றும் ஸ்தானிகர் பணியிடங்களை நிரப்ப அந்தக் கோவிலின் செயல் அலுவலர் கடந்த 2018இல் அறிவிப்பாணை வெளியிட்டார்.

ஆனால் இந்த அறிவிப்பு ஆகம விதிகளைப் பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி, அந்தக் கோவிலில் பரம்பரை அர்ச்சகராகப் பணியாற்றி வரும் முத்து சுப்ரமணிய குருக்கள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், "ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்களை அர்ச்சகர்களாக நியமிக்கலாம். அதற்கு சாதி தடையாக இருக்காது" என்று தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்துச் செய்யப்பட்ட மேல் முறையீடு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

நிலுவையில் உள்ள வழக்குகள்

உச்சநீதிமன்றம், வழக்கு நிலுவை, தமிழ்நாடு அரசு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அர்ச்சகர் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளது. பல மேல்முறையீட்டு மனுக்களும் நிலுவையில் உள்ளன.

மேலும், திருச்சி வயலூர் கோவிலில், அனைத்து சாதி அர்ச்சகர்கள் திட்டத்தின் கீழ் இரு அர்ச்சகர்களை நியமித்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் அந்த நியமனங்கள் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அர்ச்சகர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தை அணுகி, அந்தத் தீர்ப்பிற்குத் தடையாணை பெறப்பட்டுள்ளது. வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இப்படி அனைத்து சாதி அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாகப் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால், பயிற்சி முடித்தவர்களின் காத்திருப்பு நீண்டுகொண்டே போகிறது.

"நாங்கள் அரசை நம்பிப் படித்தோம். இதுவரை வேலை கோரி மனு அளிப்பதைத் தவிர எந்தப் போராட்டங்களிலும் நாங்கள் ஈடுபட்டதில்லை. எங்களுக்கு அரசுதான் உதவ வேண்டும். அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் பணி வாய்ப்பு வழங்கப்படும் வரை எங்களுக்கு ஏதாவது ஒரு உதவித் தொகையை அரசு வழங்க வேண்டும். கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் எங்களுக்கு அதுவொரு சிறிய ஆறுதலாகவேனும் இருக்கும்" என்கிறார் விஜயகுமார்.

இந்த விவகாரம் தொடர்பாகக் கேட்க இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர், இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சர் சேகர் பாபு ஆகியோரைத் தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இத்துறையின் கூடுதல் தலைமைச் செயலரான கே. மணிவாசனிடம் இது குறித்துக் கேட்டபோது இது தொடர்பான வழக்குகளை தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாக நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.

"அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த வழக்குகள் முடிவுக்கு வந்தால்தான் இந்த விவகாரத்தில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியும். புதிய நியமனங்களை மேற்கொள்ள முடியும். இந்த விஷயத்தில் அரசு தீவிரமாக இருக்கிறது.

ஒவ்வொரு முறை வழக்கு விசாரணைக்கு வரும்போதும், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களை வைத்து வழக்கை எதிர்கொள்கிறோம்" என்கிறார் கே. மணிவாசன். இடைப்பட்ட காலத்தில் அந்த மாணவர்கள் உதவித்தொகை கோருவது குறித்துக் கேட்டபோது, "அதில் அரசுதான் முடிவெடுக்க வேண்டும். என்ன நடக்கிறதென பார்க்கலாம்" என்று மட்டும் பதிலளித்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/crld7g48n41o

பிரதமர் மோடி காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவருவார்: ரஜினிகாந்த் நம்பிக்கை!

1 month 1 week ago

New-Project-12.jpg?resize=750%2C375&ssl=

பிரதமர் மோடி காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவருவார்: ரஜினிகாந்த் நம்பிக்கை!

ஜம்மு-காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவருவதில் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளை நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியதுடன், மோடியின் தலைமையின் மீதும் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

மும்பையில் இன்று (01) ஆரம்பமாகியுள்ள வேவ்ஸ் எனப்படும் 2025 உலக ஆடியோ விஷூவல் பொழுது போக்கு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

இதன்போது 74 வயதான நடிகர் ரஜினிகாந்த், மோடியை ஒரு ‘போராளி’ என்று அழைத்தார்.

மேலும் தற்போதைய சூழ்நிலையை ‘கருணையுடன்’ கையாள பிரதமரை நம்புவதாகவும் பகிர்ந்து கொண்டார்.

“நமஸ்கார், மரியாதைக்குரிய பிரதமரே, மகாராஷ்டிராவின் முதலமைச்சர் அவர்களே. பஹல்காமில் நடந்த காட்டுமிராண்டித்தனமான, இரக்கமற்ற நிகழ்வுக்குப் பின்னர், தேவையற்ற விமர்சனங்கள் காரணமாக அரசாங்கம் இந்த நிகழ்வை ஒத்திவைக்கும் என்று பலர் என்னிடம் சொன்னார்கள்.

ஆனால், இந்த நிகழ்வு நிச்சயமாக நடக்கும் என்று நான் உறுதியாக இருந்தேன், ஏனென்றால் எனது பிரதமர் – நரேந்திர மோடி ஜி (sic) மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.”

“அவர் ஒரு போராளி. அவர் எந்த சவாலையும் சந்திப்பார், கடந்த பத்தாண்டுகளாக நாங்கள் சொல்லி வருவதை நிரூபிப்பார், இந்த சூழ்நிலையையும் அவர் அழகாகவும் துணிச்சலுடனும் எதிர்கொள்வார், காஷ்மீரில் அமைதியையும் நம் நாட்டிற்கு பெருமையையும் கொண்டு வருவார்” என்று அவர் கூறினார்.

இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

2025 வேவ்ஸ் உச்சி மாநாடு என்பது மும்பையில் உள்ள JIO மாநாட்டு மையத்தில் நடைபெறும் நான்கு நாள் நிகழ்வாகும்.

இந்த நிகழ்வு இந்தியாவை கலை, படைப்பாற்றல் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் உலகளாவிய முன்னணியில் நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது இந்திய திரைப்பட சகோதரத்துவத்தைச் சேர்ந்த முக்கியப் பெயர்களுடன் தொடர்ச்சியான அறிவார்ந்த உரையாடல்களைக் கொண்டிருக்கும்.

மேலும் நாட்டின் நாட்டுப்புற நடனம் மற்றும் இசையை அதன் மென்மையான சக்தியாக எடுத்துக்காட்டும்.

gp2bqiobmaaocrc_0.jpeg?ssl=1

இந்த நிகழ்வில் ஷாருக்கான், தீபிகா படுகோன், அக்ஷய் குமார், கரண் ஜோஹர், ஹேமா மாலினி, மிதுன் சக்ரவர்த்தி, இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசாரி உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

https://athavannews.com/2025/1430224

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

1 month 1 week ago

நரேந்திர மோதி , சாதி வாரி கணக்கெடுப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

30 ஏப்ரல் 2025, 11:10 GMT

புதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர்

(இந்த சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)

நாட்டில் அடுத்து நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு முடிவெடுத்துள்ளதாக, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார் என, ஏ.என்.ஐ. செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லியில் இன்று பிரதமர் மோதி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் இதனை தெரிவித்தார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பில் இதுவரை நடந்தது என்ன?

எடப்பாடி பழனிசாமி

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு தலைவர்கள் பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாடு மக்கள் பல ஆண்டுகளாக மத்திய அரசிடம் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

ஏற்கெனவே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும்பொழுது, தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு வந்த திமுக அரசு அதை கைவிட்டுவிட்டது.

தற்போது மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதே சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.

சுமார் 93 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை மனதார வரவேற்கிறேன்." என தெரிவித்துள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என அறிவித்த பிரதமர் மோதிக்கு அதிமுக சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு கடைசியாக எப்போது எடுக்கப்பட்டது?

கடந்த 1865ஆம் ஆண்டில் அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு மாகாணமான வட-மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பே இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முறையான முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பாகக் கருதப்படுகிறது.

கடந்த 1931ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கடைசி முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பாகக் கொள்ளப்படுகிறது.

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதிகள் விவரம் சேகரிக்கப்படவில்லை. ஆனால், பட்டியல் பிரிவில் இருக்கும் பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதால், அவர்களது எண்ணிக்கை மட்டும் சேகரிக்கப்பட்டது. மற்ற சாதியினர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படவில்லை.

ஆகவே, மற்ற சாதியினரின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 1931ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இருந்த விகிதமே இப்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதி தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டாலும், அவை வெளியிடப்படவில்லை.

இந்தியாவில் கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011இல் மேற்கொள்ளப்பட்டது. அதற்கடுத்த கணக்கெடுப்பு, 2021இல் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்தத் தருணத்தில் கோவிட் பரவல் இருந்த காரணத்தால், மேற்கொள்ளப்படவில்லை. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது மேற்கொள்ளப்படும் என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c75dg19vkg7o

பெண்களின் பாதுகாப்புக் கருதி Red-Button Robotic COP சேவையை அறிமுகப்படுத்தும் தமிழக அரசு!

1 month 1 week ago

process-aws.webp?resize=740%2C375&ssl=1

பெண்களின் பாதுகாப்புக் கருதி Red-Button Robotic COP சேவையை அறிமுகப்படுத்தும் தமிழக அரசு!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ரோபோ கோப் (Robotic COP) வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

மாநகரின் 200 முக்கிய இடங்களில் ரெட் பட்டன்- ரோபோட்டிக் கோப் (Red-Button Robotic COP) என்ற புதிய பாதுகாப்பு சாதனம் விரைவில் பொருத்தப்படவுள்ளது. 24 மணிநேரமும் இயங்கக் கூடிய இந்த பாதுகாப்பு சாதனம் வீதியின் அனைத்து பகுதிகளையும் அலசி ஆராயும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சாதனத்தில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்துவதன் மூலம் பொலிஸ்  கட்டுபாட்டு அறையுடன் நேரடி தொடர்பு கொள்ளவும், உடனடியாக பொலிஸ் துறைக்கு  அழைப்பினை ஏற்படுத்தவும், அருகில் ரோந்து பணியில் ஈடுபடும் பொலிஸாரை எச்சரிக்கவும் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆபத்தில் உள்ளவரை பொலிஸ்  கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளவும், வீடியோ கோல் மூலம் ஆபத்தில் உள்ளவரின் நிலை அறிந்து கொள்ளவும் முடியும் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மக்கள் அதிகமாகக்  கூடும் இடங்கள் தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் குறித்த  சாதனத்தை பொருத்தத் தமிழ அரசு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1429847

பாஜக - அதிமுக கூட்டணியல்ல அது ஒரு சதி

1 month 2 weeks ago

ஒவ்வொரு தேர்தலிலும், ஒரே நாடகத்தை நாம் பார்க்கிறோம். பாஜக அதிமுகவுடன் கைகோர்க்க வலியுறுத்துகிறது. அதிமுக நாங்கள் பிஜேபியுடன் கூட்டணி வைத்ததால் தான் தோற்றோம் என்றார்கள். எந்தக் காலத்தில் நடக்காது என்றார் தவழ்பாடி. வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் பொய்.

வெற்றி பெறத் தவறிய பிறகும் கூட, தமிழ்நாட்டு மக்கள் அவர்களை தெளிவாக நிராகரித்த பிறகும் கூட கூட்டணி ஏன்?

பாஜக ஏன் இவ்வளவு அவசரமாக கூட்டணிக்காக துடித்தது?

காரணம் என்ன தெரியுமா?

இது தமிழ் நாட்டு மக்களின் நலனுக்கான தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் அமைந்த கூட்டணி அல்ல. இது ஒரு சதி வலை. பின்னுவது பிஜேபி. அடிமைக்கூட்டம் கைகட்டி மெய் வாய் மூடி தலையைக் கூட ஆட்டாமல் தமிழர்களைக் காவு கொடுக்க உதவி செய்கிறது.

அதிமுகவை படிப்படியான கையகப்படுத்தும் திட்டம். அமைதியான, கணக்கிடப்பட்ட சதி.

பாஜகவால் தமிழ்நாட்டில் தனியாக வெற்றி பெற முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். இந்தி மேலாதிக்கம், வட இந்திய தேசியவாதம் மற்றும் தீவிர இந்துத்துவா ஆகியவற்றின் அடிப்படையில் கட்டப்பட்ட அவர்களின் சித்தாந்தத்திற்கு தமிழ் மக்களின் மனதில் இடமில்லை என்பது அவர்களுக்குத் தெரியும்.

ஆனாலும் அவர்கள் என்ன செய்கிறார்கள்?

அவர்கள் ஒரு பிராந்தியக் கட்சியின் பின்னால் மறைந்து கொள்கிறார்கள். அதிமுகவை ஒரு முகமூடியாக, ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள்.

தமிழர்களே ஏமாறாதீர்கள் - இது இந்தியா முழுவதும் அவர்கள் பயன்படுத்திய அதே கதை.

மகாராஷ்டிராவில், அவர்கள் பல ஆண்டுகளாக சிவசேனாவைப் பிடித்துக் கொண்டனர். பின்னர் என்ன? உள்ளிருந்து பிரித்தனர். கட்சியை கடத்தினர். இன்று என்ன ஆனது?

பஞ்சாபில், அவர்கள் அகாலி தளத்தைப் பயன்படுத்தினர். பின்னர் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களுடன் அவர்களை இணைத்து அழித்தனர்.

பீகாரில், அவர்கள் நிதிஷ் குமாருக்குப் பின்னால் நின்றனர், அவரது அரசியல் வாழ்க்கையை முடிக்க முயன்றனர்.

வடகிழக்கில், அவர்கள் பிராந்தியக் கட்சிகளை ஒவ்வொன்றாக உள்வாங்கினர் - பாஜக கொடியைத் தவிர வேறொரு கட்சியின் கொடியையும் காணவில்லை.

இது கூட்டணி அரசியல் அல்ல. இது அரசியல் மனித பட்சிணி.

அவர்கள் கூட்டணியை உருவாக்கவில்லை - அதை உடைக்கிறார்கள்.

அவர்கள் கூட்டணியை ஆதரிக்கவில்லை - அவர்கள் கூட்டணிக் கட்சிகளை விழுங்குகிறார்கள்.

இப்போது, தமிழ்நாடு அவர்களின் பட்டியலில் அடுத்தது என்ன?

அவர்கள் ஏற்கனவே விளையாட்டைத் தொடங்கிவிட்டனர்.

அதிமுகவுக்குள் பாஜக ஆதரவு முகங்களை ஊக்குவித்தல்.

உள்ளிருந்து கட்சியை பலவீனப்படுத்துதல்.

அழுத்தம் கொடுக்க மத்திய அமைப்புகளைப் பயன்படுத்துதல்.

ஊடகக் கதைகளை கட்டுப்படுத்துதல்.

மெதுவாக, திமுகவுக்கு முக்கிய மாற்றாக தங்களை நிலைநிறுத்துதல்.

நான் இதை உரத்த குரலில் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன் - பாஜக அதிமுகவுக்கு ஆதரவளிக்க இங்கே இல்லை. பாஜக அதிமுகவை அழித்து ஒழித்து விட இங்கே உள்ளது.

சிவசேனாவிற்கு செய்தது போல. JD(U) உடன் முயற்சித்தது போல. நேர்மையாக வெற்றி பெற முடியாத ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்கள் திட்டமிட்டது போல.

இது கூட்டணி அல்ல. இது அரசியல் கட்சிகளைக் கைதியாக்கும் உத்தி.

அதிமுக விழித்தெழாது. துரோகம் அதன் வாடிக்கையானது. பொய்களே கொள்கையானது. தலையற்ற தலைமையின் கீழ் திக்குத் தெரியாது சுடுகாட்டில் போய் படுத்துக் கொண்டது. அழிந்தால் என்ன அழியாவிட்டால் தான் என்ன?

தமிழர்களுக்கு இதுபற்றிய எந்தக் கவலையும் தேவையில்லை. நச்சுக் களையொன்று ஊடுபயிரென பொங்கிப் பெருகும் தமிழர் வாழ்வுக்குள் ஊடுறுவத் துடிக்கிறது. அந்த நச்சுக் களைக்கு தமிழர்கள் நஞ்சிட வேண்டும்.

தமிழ்நாடு நினைவில் கொள்ள வேண்டும் - தமிழ்நாடு டெல்லிக்கு தலைவணங்கும் நிலம் அல்ல. டெல்லியில் இருந்து விதிக்கப்படும் கட்டுப்பாட்டால் ஆளப்படும் மக்கள் அல்ல.

பாஜகவுக்கு இங்கே இடமில்லை. இந்தக் கூட்டணி அரசியலை நாம் இப்போது நிறுத்தவில்லை என்றால், அவர்கள் ஒவ்வொரு குரலையும், ஒவ்வொரு கட்சியையும், மாநிலத்தில் மீதமுள்ள ஒவ்வொரு ஜனநாயகத்தையும் அழிப்பார்கள். மகாராஷ்டிராவில் மூன்றாம் மொழியாக இந்தியைக் கட்டாயமாக்கி விட்டார்கள்.

இது வாக்குகள் பற்றியது மட்டுமல்ல.

இது தமிழர்களின் அடையாளம் பற்றியது.

கூட்டாட்சியின் மகத்துவம் பற்றியது. சுய மரியாதையைப் பற்றியது.

இதுவெல்லாம் அடிமைகளுக்குத் தெரியாது. ஒவ்வொரு அடிமையும் ஊழல் வழக்குகளால் சிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். தலை தூக்கினால் அரசியலில் அவர்களின் முகம் காணாமல் போய் விடும் என்பதால் மவுனியாக அழிவுக்குத் துணை போகின்றார்கள்.

தமிழ்நாடு விற்பனைக்கு இல்லை.

தமிழக அரசியல் அவர்களின் விளையாட்டு மைதானம் அல்ல.

தமிழக மக்கள் இந்தச் சதிக்கு ஒருபோதும் சரணடைய மாட்டார்கள்.

https://thangavelmanickadevar.blogspot.com/

தமிழில் மருத்துவப் படிப்பு

1 month 2 weeks ago

எனக்கு தமிழில் மருத்துவக் கல்வியை வழங்க ஓரளவுக்கு நல்ல வாய்ப்புள்ளது என்றே தோன்றுகிறது. மருத்துவத்தில் ஆய்வு செய்வதை, தேர்வு எழுதுவதை சற்றே சுலபமாக்கும். கலைச்சொற்கள்? இப்போதைக்கு ஆங்கில கலைச்சொற்களைக் கலந்து பாடநூல்களை உருவாக்கலாம். செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி அனைத்து ஆங்கில நூல்களையும் நிமிடத்தில் தமிழாக்கலாம். புனைவுக்கு மட்டுமே செயற்கை நுண்ணறிவு மொழியாக்கம் சரிவராது, ஆனால் அபுனைவுக்கு, அதுவும் தகவல்சார்ந்த நேரடி மொழியாக்கத்துக்கு அது ஏற்றது. ஆனால் ஆசிரியர்கள் இதற்குப் பழகியிருக்க மாட்டார்கள் என்பதால் மெல்லமெல்ல கொண்டு வரலாம். எதிர்காலத்தில் வெருள வைக்கும் ஆங்கிலச் சொற்களைத் தவிர்த்து நேரடியாகத் தமிழில் படிப்பது மத்திய வர்க்க, கீழ்வர்க்க சிறுநகர மாணவர்களுக்கு உதவும். மருத்துவர்களும் தமிழில் விளக்கினால் நோயாளிகள் புரிந்துகொள்வார்கள்.

மோடி எதைச் சொன்னாலும் திட்ட வேண்டியதில்லை. ஆங்கிலமே உலக மொழி, அதைக் கொண்டே நாம் வளர்ந்தோம் என அதை மிகைப்படுத்த தேவையில்லை. ஆங்கிலம் வழி படித்து வெளிநாட்டில் பணியாற்ற விரும்புவோரும் உள்ளூரில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற விரும்புவோரும் அவரவருக்கு ஏற்ப பயிலும் மொழியைத் தேர்வு செய்யும் வாய்ப்பு இருந்தால் நல்லது. இன்னும் சொல்லப் போனால் தமிழ்வழி படித்த ஒரு மாணவரால் ஆங்கிலத்தில் எழுதவும் பேசவும் முடியாது என்று தீர்மானிக்க முடியுமா? ஆங்கில வழியில் படித்தோர் எல்லாரும் இங்கு ஷேக்ஸ்பிராக இருக்கிறார்களா?

இரு மொழிகளில் ஒரு திறம்படைத்த மருத்துவரால் இயங்க முடியாதா? அப்படியே இரு சாராருக்கும் வேறுபாடு தோன்றினால், தமிழில் படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மருத்துவப் பணிகளில் அரசு ஒட இதுக்கீடு தந்தால் அது சமத்துவத்தை ஏற்படுத்தும்.

நான் இதை முழுமையாக ஆதரிக்கிறேன்.

AVvXsEhpTZKC9D2HCINa8irvQk23kUAkXHJ3fYuVj34wyO-KTFTFgzxwvbQTpLsCSWoLepYfeTKQbqJ9ZahB-B3MIin8DAtTsAqjmwF8-tkKh33DWbNh5xf2M9mR0sSih6CQH3bHJFEwrOEIS6d25eaoHDp51OZpx9T440G1LdSeN3Hcgf-Fq1yrWOB0rc-2cNGD=w400-h400

https://thiruttusavi.blogspot.com/2025/04/blog-post_96.html

வழக்குகளின் பிடியில் மேலும் 6 அமைச்சர்கள் - செந்தில் பாலாஜி, பொன்முடி மட்டுமல்ல

1 month 2 weeks ago

திமுக, அமைச்சர்கள், தமிழ்நாடு, சட்டம், வழக்குகள்

பட மூலாதாரம்,DMK/WWW.DMK.IN

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 27 ஏப்ரல் 2025, 10:07 GMT

'அமைச்சராக இல்லை என்பதால் தான் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அவருக்கு ஜாமீன் வேண்டுமா... அமைச்சர் பதவி வேண்டுமா?' என, ஏப்ரல் 23 அன்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

செந்தில் பாலாஜியின் கருத்தை அறிவதற்கு ஏப்ரல் 28 வரை உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்தது. இந்த சூழ்நிலையில் செந்தில் பாலாஜி தமது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இவருடன் சேர்த்து பொன்முடியும் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

தி.மு.க அமைச்சர்களில் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி போலவே, மேலும் 6 அமைச்சர்கள் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் மீதான வழக்குகள் என்ன?

செந்தில் பாலாஜி மீதான வழக்கு என்ன?

திமுக, அமைச்சர்கள், தமிழ்நாடு, சட்டம், வழக்குகள்

பட மூலாதாரம்,V.SENTHILBALAJI/FACEBOOK

படக்குறிப்பு,2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.

தி.மு.க அரசில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி, 2011-2015 அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அப்போது, போக்குவரத்துத்துறையில் இளநிலை உதவியாளர், ஓட்டுநர், நடத்துநர் ஆகிய பணியிடங்களில் செந்தில் பாலாஜி மற்றும் அதிகாரிகள் சிலர் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில், செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு செந்தில் பாலாஜி மற்றும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதன் விசாரணைக்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்தார். இதையேற்று, 2021 ஆம் ஆண்டு செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை நிறுத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதே வழக்கில், சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்ததாகக் கூறி 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.

சிறையில் இருந்தபோதும் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்தார். இதன் காரணமாக ஜாமீன் வழங்குவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

2024 பிப்ரவரி மாதம் அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார். அதே ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றார்.

அவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யுமாறு வித்யா குமார் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவின்படி அடிப்படை உரிமை மீறப்பட்டதால் ஜாமீன் வழங்கினோம். 2 நாட்களுக்குள் அவர் அமைச்சர் ஆனதை ஏற்க முடியாது' எனக் கூறியது.

மேலும், 'ஜாமீன் வேண்டுமா.. அமைச்சராக நீடிக்க வேண்டுமா? என்பது குறித்து ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்குமாறு செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்டது.

இதனால் பதவியை ராஜினாமா செய்வதைத் தவிர செந்தில் பாலாஜிக்கு வேறு வழியில்லை என்ற பேச்சு எழுந்துள்ளது. அதற்கேற்ப, தற்போது அவர் ராஜினாமா செய்துள்ளார்.

அமைச்சர் துரைமுருகன்:

திமுக, அமைச்சர்கள், தமிழ்நாடு, சட்டம், வழக்குகள்

பட மூலாதாரம்,@KATPADIDMK/X

படக்குறிப்பு,2006-2011 தி.மு.க ஆட்சிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.40 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு

தி.மு.க அமைச்சரவையில் நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகன், 1996-2001 தி.மு.க ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்தார்.

இதே காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 3.92 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக, அவர் மீது 2002 ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

2007 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து வேலூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து 2013 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனு சுமார் 12 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது.

கடந்த ஜனவரி மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி தள்ளுபடி செய்யுமாறு துரைமுருகன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இந்த வழக்கில், ஏப்ரல் 23 ஆம் தேதியன்று உத்தரவு பிறப்பித்த சென்னை சென்னை உயர் நீதிமன்றம், வேலூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது.

மேலும், துரைமுருகன் மீதான விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடிக்குமாறு எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

இதுதவிர, 2006-2011 தி.மு.க ஆட்சிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக 1.40 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக துரைமுருகன் மற்றும் அவரது மனைவி மீது ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இருந்து துரைமுருகனும் அவரது மனைவியும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.

ஏப்ரல் 24 ஆம் தேதியன்று இந்த உத்தரவையும் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அமைச்சர் பொன்முடி:

திமுக, அமைச்சர்கள், தமிழ்நாடு, சட்டம், வழக்குகள்

பட மூலாதாரம்,KPONMUDI/FACEBOOK

படக்குறிப்பு,பொன்முடி மீது 2002 ஆம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 2021 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து, பொன்முடி மீதான சர்ச்சைகள் அணிவகுத்தன.

மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத்தை விமர்சித்தது, அரசு நிகழ்ச்சிகளில் பொதுமக்களை விமர்சித்தது எனத் தொடர்ந்து பொன்முடியின் பேச்சு விமர்சனத்துக்குள்ளானது.

தி.மு.க பொதுக்குழு கூட்டத்திலேயே இதுதொடர்பாக தனது அதிருப்தியை முதலமைச்சர் ஸ்டாலின் வெளிக்காட்டினார். இந்தநிலையில், கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதியன்று பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் வனத்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றார்.

அப்போது, சைவம், வைணவம் ஆகிய மதங்களை பாலியல் தொழிலாளிகளுடன் ஒப்பிட்டு அவர் பேசினார்.

பொன்முடியின் பேச்சு இணையத்தில் பரவியது. இதையடுத்து, பொன்முடியை தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்டேஷ், "சைவ, வைணவ சமயங்கள் குறித்த பேச்சுக்கு அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன்?" எனக் கேள்வி எழுப்பினார்.

"இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யவில்லை என்றால் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறி ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

மீண்டும் வழக்கு விசாரணையின்போது, 'கட்சியே நடவடிக்கை எடுததும்கூட காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை' எனக் கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "பொன்முடியின் பேச்சு வெறுப்பு வரம்புக்குள் வருகிறது" எனக் கூறினார்.

வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதற்காக பதிவுத் துறைக்கு தான் உத்தரவிடுவதாகவும் ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.

இதுதவிர, 1996-2001 தி.மு.க ஆட்சியின்போது போக்குவரத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீது 2002 ஆம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

அவர் 1.36 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு வேலூர் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி ஆகியோரை வேலூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 'ஒரு மாவட்டத்தில் உள்ள வழக்கை மாவட்டத்தின் நிர்வாக நீதிபதிகள் வேறு மாவட்டத்துக்கு மாற்ற முடியுமா?' எனக் கேள்வி எழுப்பி, இதற்கு அரசின் தலைமை வழக்கறிஞர் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டார்.

'பொன்முடி மீதான வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்ற முடியும் என்றால், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கிலும் எந்த விசாரணையும் நடத்த முடியாது' எனக் கூறி இறுதி விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.

இந்த சூழலில் செந்தில் பாலாஜியுடன் சேர்ந்து பொன்முடியும் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்:

திமுக, அமைச்சர்கள், தமிழ்நாடு, சட்டம், வழக்குகள்

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

தி.மு.க ஆட்சியில் வேளாண்மைத் துறை அமைச்சராக இருக்கும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், 1996-2001 மற்றும் 2006-2011 தி.மு.க ஆட்சியிலும் அமைச்சராக பதவி வகித்தார்.

இந்தக் காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக பன்னீர்செல்வம், அவரது மனைவி மற்றும் மகன் மீது ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

வழக்கை விசாரித்த கடலூர் சிறப்பு நீதிமன்றம், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்பட மூன்று பேரையும் விடுவிதது உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஊழல் ஒழிப்புத் துறை சார்பில் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது பன்னீர்செல்வம் தரப்பில் சில வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அறக்கட்டளை சொத்துகளையும் குடும்ப சொத்துகளையும் வருமானத்துக்கு அதிகமான சொத்துகளாக ஊழல் ஒழிப்புத் துறை கணக்கிட்டுள்ளதாக வாதிடப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 25) இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அவரது மனைவி, மகன் ஆகியோரை விடுவித்து கடலுர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார்.

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையை ஆறு மாதங்களுக்குள் கடலூர் நீதிமன்றம் முடிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு:

திமுக, அமைச்சர்கள், தமிழ்நாடு, சட்டம், வழக்குகள்

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,2012 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்ட ஊழல் ஒழிப்புத்துறை அதிகாரிகள் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மீது வழக்குப் பதிவு செய்தனர்

2006-2011 தி.மு.க ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, வருமானத்துக்கு அதிகமாக ரூ.76,40,433 அளவு சொத்து சேர்த்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது.

2012 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்ட ஊழல் ஒழிப்புத்துறை அதிகாரிகள் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தன்னையும் தன் மனைவியையும் விடுவிக்குமாறு தங்கம் தென்னரசு மனுத்தாக்கல் செய்திருந்தார். இதையேற்று 2022 ஆம் ஆண்டு இருவரையும் விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து ஊழல் ஒழிப்புத்துறை மேல் முறையீடு செய்யவில்லை. ஆனால், வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார்.

வழக்கை மறுவிசாரணை நடத்துமாறு உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்கு ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மறு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்:

திமுக, அமைச்சர்கள், தமிழ்நாடு, சட்டம், வழக்குகள்

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.44,56,067 ரூபாய் சொத்து சேர்த்ததாக ஊழல் ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது

தி.மு.க ஆட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராக பதவி வகிக்கும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கடந்த 2006-2011 தி.மு.க அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அப்போது, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.44,56,067 ரூபாய் சொத்து சேர்த்ததாக ஊழல் ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

2012 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் இருந்து ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவியை ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2023 ஆம் ஆண்டு விடுவித்தது.

தங்கம் தென்னரசு வழக்குடன் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ராமச்சந்திரன் மேல்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றமும் வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமைச்சர் மா.சுப்ரமணியன்:

திமுக, அமைச்சர்கள், தமிழ்நாடு, சட்டம், வழக்குகள்

பட மூலாதாரம்,@SUBRAMANIAN_MA/X

படக்குறிப்பு,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்

2006-2011 தி.மு.க ஆட்சியில் சென்னை மாநகராட்சி மேயராக இருந்த மா.சுப்ரமணியன், தற்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

சென்னை கிண்டியில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மனையை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்துவிட்டதாக, குற்றம் சுமத்தப்பட்டது.

கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் இந்தப் புகார் தொடர்பாக மா.சுப்ரமணியன் மீது நில அபகரிப்பு வழக்கு பதிவானது. இந்த வழக்கு எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மா.சுப்ரமணியன் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவில், நிலத்தை 1998 ஆம் ஆண்டே தான் வாங்கிவிட்டதாகவும் சுமார் 20 ஆண்டுகள் கழித்து அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

நிலத்தை வாங்கியதன் மூலம் சிட்கோ மற்றும் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை எனவும் மோசடி நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கும் இடமில்லை என மா.சுப்ரமணியன் கூறியிருந்தார்.

வழக்கில் காவல்துறை மற்றும் புகார்தாரர் பார்த்திபன் ஆகியோரின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், மா.சுப்ரமணியனின் மனுவை கடந்த மார்ச் 28 ஆம் தேதின்று தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.

மா.சுப்ரமணியன் மீதான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து விசாரணையைத் தொடர வேண்டும் எனவும் சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி:

திமுக, அமைச்சர்கள், தமிழ்நாடு, சட்டம், வழக்குகள்

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,2012 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் ஐ.பெரியசாமி மீது ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.

தி.மு.க அரசில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக உள்ள ஐ.பெரியசாமி, கடந்த 2006-2011 தி.மு.க ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

வீட்டு வசதி வாரியத்தின் நிலத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலருக்கு முறைகேடாக வழங்கியதாக, ஐ.பெரியசாமி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

2012 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் ஐ.பெரியசாமி மீது ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த வழக்கில் இருந்து ஐ.பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை மறு ஆய்வு செய்யும் வகையில் தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்,

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், ஐ.பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதி, ஜூலை மாதத்துக்குள் வழக்கின் விசாரணையை முடிக்குமாறு உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஐ.பெரியசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கும் தடை விதித்துள்ளது.

'தடை உத்தரவு தொடரும்' என கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvgpzz9kzpvo

ஆளுநர் மாநாட்டை புறக்கணித்த மாநில பல்கலை. துணைவேந்தர்கள் - போலீஸ் மிரட்டியதா?

1 month 2 weeks ago

ஆளுநர் ஆர்.என். ரவி, ஜெகதீப் தன்கர், துணைவேந்தர்கள் மாநாடு

பட மூலாதாரம்,TNRAJBHAVAN

2 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பு, திராவிட இயக்கத்தினரின் போராட்டங்களுக்கு மத்தியில் உதகையில் இருநாள் துணைவேந்தர்கள் மாநாடு இன்று (ஏப். 25) ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் தொடங்கியது.

மத்திய பல்கலைக்கழகம் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், மத்திய அரசின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டில் செயல்படும் மாநில அரசு பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் யாரும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.

"மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் வீட்டு கதவுகளை நள்ளிரவில் தட்டி போலீஸார் எச்சரித்ததாலேயே" அவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார், மாநாட்டில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி.

இந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ளார், திமுக மூத்த தலைவரும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான டி.கே.எஸ். இளங்கோவன்.

ஆளுநர் ஆர்.என். ரவி பேசியது என்ன?

உதகை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இம்மாநாட்டில், மத்திய பல்கலைக்கழகம், மத்திய அரசின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள் என, 34 கல்வி நிறுவனங்களின் துணைவேந்தர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டில் மொத்தம் 20 மாநில அரசு பல்கலைக்கழகங்கள் இருப்பதாக ஆளுநர் மாளிகை இணையதளம் கூறுகிறது. ஆனால், அந்த பல்கலைக்கழகங்களின் சார்பாக எந்தவொரு துணைவேந்தரோ அல்லது துணைவேந்தர் பொறுப்புக் குழு பிரதிநிதிகளோ பங்கேற்கவில்லை. தமிழ்நாட்டின் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் தற்போது துணைவேந்தர்கள் இல்லை, அதற்கு பதிலாக துணைவேந்தர் பொறுப்புக் குழு செயல்பட்டு வருகிறது.

மாநில பல்கலைக்கழகங்கள் இந்த மாநாட்டில் பங்கேற்காதது குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு அரசின் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.

இந்த மாநாட்டில் பேசிய ஆர்.என். ரவி, "துரதிருஷ்டவசமாக இந்த மாநாட்டில் மாநில பல்கலைக்கழகங்கள் பங்கேற்கவில்லை. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது என தங்களுக்கு மாநில அரசிடமிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக, அவர்கள் என்னிடம் எழுத்துபூர்வமாக தெரிவித்தனர்." என்றார்.

தற்போது கூட துணைவேந்தர் ஒருவர் காவல் நிலையத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். விதிமுறைகளை மீறி தனியார் அமைப்புகள் தொடங்கி, பல்கலைக்கழக நிதியை பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் சேலம் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் இன்று சூரமங்கலம் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதைத்தான் ஆளுநர் ஆர்.என். ரவி குறிப்பிடுவதாக, கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

"இது முன்னெப்போதும் நடந்திராதது. நள்ளிரவில் துணைவேந்தர் வீடுகளின் கதவுகளைத் தட்டி காவல்துறை எச்சரித்துள்ளது. 'நீங்கள் மாநாட்டுக்கு சென்றால், வீட்டுக்குச் செல்ல முடியாது. உங்கள் குடும்பத்தைக் காண முடியாது' என எச்சரித்துள்ளனர். நான் அவர்களிடம், 'உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள், ஆபத்துக்கு ஆளாகாதீர்கள்,' என்று கூறினேன்" என ஆர்.என். ரவி கூறினார்.

தமிழ்நாட்டில் மாநில பல்கலைக்கழகங்கள், அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்துவிட்டதாக விமர்சித்த அவர், கல்வி தரத்தை மேம்படுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கம் என்றும் மாறாக இதில் எந்த அரசியலும் இல்லை என்றும் தெரிவித்தார்.

ஆளுநர் ஆர்.என். ரவி, ஜெகதீப் தன்கர், துணைவேந்தர்கள் மாநாடு

பட மூலாதாரம்,TNRAJBHAVAN

குற்றச்சாட்டை மறுக்கும் திமுக

ஆளுநர் ஆர்.என். ரவியின் குற்றச்சாட்டை முற்றிலுமாக புறக்கணித்தது திமுக.

திமுகவின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "கற்பனையாக பேசுவதில் ஆளுநருக்கு இணையாக இந்த உலகத்திலேயே யாரும் கிடையாது. இந்த மாநாடு எதற்காக கூட்டப்படுகிறது, இந்த மாநாட்டின் திட்டம், பேசுபொருள் என்ன என்பதையெல்லாம் ஆளுநர் மாளிகை துணைவேந்தர்களுக்கு அனுப்பியிருக்கிறதா என்பதை விசாரிக்க வேண்டும்.

கல்வி வளர்ச்சிக்கும் ஆளுநர், குடியரசு துணைத் தலைவருக்கும் என்ன தொடர்பு என்பதை விளக்க வேண்டும்.

நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பேசிய குடியரசு துணைத் தலைவரை மாநாட்டுக்கு அழைத்திருக்கிறார் ஆளுநர். ஆளுநரும் குடியரசு துணைத் தலைவரும் அரசியலமைப்பு சட்டத்தின்படி நடந்துகொள்ளாதவர்கள். தங்களுக்கு மிகப்பெரிய அதிகாரம் வந்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கின்றனர்." என்றார்.

தமிழக ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில், மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் குடியரசு தலைவருக்கும் காலக்கெடு விதிக்கப்பட்டிருந்ததை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் விமர்சித்திருந்தார். அதையே டி.கே.எஸ். இளங்கோவன் குறிப்பிட்டுப் பேசினார்.

டி.கே.எஸ். இளங்கோவன்

பட மூலாதாரம்,TKS ELANGOVAN / X

படக்குறிப்பு,ஆளுநரின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார் டி.கே.எஸ். இளங்கோவன்

"ஆளுநர் கல்வி தொடர்பாக ஒரு கூட்டம் நடத்துகிறார் என்றால், மாநில கல்வி அமைச்சரிடம் முதலில் கேட்டிருக்க வேண்டும். இரண்டாவதாக எதற்காக இந்த கூட்டம் கூட்டப்படுகிறது என்பதை பேசியிருக்க வேண்டும். குடியரசு துணைத் தலைவருக்கு பதிலாக மத்திய கல்வி அமைச்சரை அழைத்து வந்திருக்க வேண்டும். கல்வித்துறை குறித்து குடியரசு துணைத் தலைவருக்கு என்ன தெரியும்? மாநில முதலமைச்சரிடம் இதுகுறித்து கூறினார்களா?" என டி.கே.எஸ். இளங்கோவன் கேள்வியெழுப்பினார்.

எச்சரிக்கை விடுக்கப்பட்டதா?

மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்காதது குறித்து தமிழ்நாடு பல்கலைக்கழகம் ஒன்றின் பொறுப்பு துணைவேந்தர் ஒருவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பிபிசி தமிழிடம் பேசினார்.

"வரும் 27ம் தேதி எங்கள் பல்கலைக்கழகத்தில் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்கும் முக்கியமான கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் இருந்தன. மேலும், இன்று பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. அதனால் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை" என்றார்.

மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது என காவல் துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டதா என கேட்டபோது, அப்படியெல்லாம் எதுவும் வரவில்லை என்றார்.

இந்த மாநாட்டில் அரசியல் நோக்கம் இருப்பதாக தமிழ்நாடு அரசு கூறுவது குறித்த கேள்விக்கும் அவர் பதில் கூறவில்லை.

மாநாட்டில் பேசிய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், "இந்த மாநாட்டில் துணைவேந்தர்கள் சிலர் பங்கேற்கவில்லை என்பது குறித்து ஆளுநர் கவலை கொள்ளத் தேவையில்லை. எந்த சூழ்நிலையால் அவர்கள் பங்கேற்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வந்தவர்களுக்கு வாழ்த்து கூறுவோம், வராதவர்கள் மாநாட்டின் குறிப்புகளில் இருந்து நடந்தவற்றை கற்றுக் கொள்ளலாம்" என்றார்.

ஜெகதீப் தன்கர், துணைவேந்தர்கள் மாநாடு

பட மூலாதாரம்,TNRAJBHAVAN

மாநாட்டுக்கு எதிர்ப்பு ஏன்?

திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு தடையாகவும் மக்கள் நலனுக்கு எதிராகவும் செயல்படுகிறார் என தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு ஆளுநர் மீது குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாநில பல்கலைக்கழகங்கள் தொடர்பான 10 மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது "சட்டவிரோதம்" என்று ஏப். 08 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது, மசோதாக்கள் மீது ஆளுநர்கள் நடவடிக்கை எடுப்பதற்கு காலக்கெடுவும் விதித்தது.

இதையடுத்து, ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் தெளிவாக வரையறுத்திருப்பதாக தமிழ்நாடு அரசு கூறிவந்த நிலையில், அரசு-ஆளுநர் மோதல் சற்று தணியும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் விரைவிலேயே ஆளுநர் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தும் செய்தி மீண்டும் சர்ச்சையை அதிகப்படுத்தியது. முன்னதாக, ஏப். 16 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தியிருந்தார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தருக்கான அதிகாரம் முதலமைச்சருக்கு வந்துவிட்டதால், அதிகாரமில்லாத வேந்தராக ஆளுநர் தொடர்வதாக முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் பிபிசி தமிழிடம் முன்னதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநரே தொடர்வதாகக் கருதி, இந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்தது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, கடந்த 2022ம் ஆண்டிலிருந்து ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த துணைவேந்தர்கள் மாநாடு திட்டமிட்டு நடத்தப்படுவதாக, ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. "இதை தமிழ்நாடு ஆளுநர் மற்றும் மாநில அரசுக்கு இடையிலான மோதலாக கட்டமைக்க முயற்சி மேற்கொள்வது வருந்தத்தக்கது" என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே இந்த மாநாட்டுக்கு எதிராகவும் ஆளுநர், குடியரசு துணைத் தலைவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன.

ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரை கண்டித்து உதகை காபி ஹவுஸ் பகுதியில் கருப்புக் கொடியுடன் திராவிட தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். உதகை பேருந்து நிலையம் முன்பு தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் பங்கேற்றவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cly1xzkqe0eo

மயோனைஸுக்கு ஓராண்டு தடை

1 month 2 weeks ago

image_cf749f0df7.jpg

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதால் தடை விதிப்பதாக மயோனைஸ் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முட்டையின் வெள்ளைக் கருவுடன், வெஜிடபிள் ஆயில், வினிகர் சேர்த்து மயோனைஸ் தயாரிக்கப்படுகிறது. சைவ மற்றும் அசைவ உணவுகளைத் தொட்டு சாப்பிடுவதற்கு இந்த மயோனைஸ் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

சான்ட்விச், ஷவர்மா மற்றும் பர்கர் போன்ற உணவுப் பொருட்களில் மயோனைஸ் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிகம் விரும்பி உட்கொள்ளும் உணவுப் பொருளாக மயோனைஸ் இருந்து வருகிறது

இந்நிலையில், மயோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ள தடை உத்தரவில், சால்மோனெல்லா டைபிமிரியம், சால்மோனெல்லா என்டிரிடிடிஸ், எஸ்கெரிச்சியா கோலி மற்றும் லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மாசுபடுவதால், முட்டைகளால் செய்யப்பட்ட மயோனைஸ் உணவு மூலம் பரவும் நோய்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, தமிழகத்தில் மயோனைஸ் உணவுப்பொருளுக்கு ஏப்.8ம் தேதி முதல் அடுத்த ஆணடு வரை தடை விதிக்கப்படுகிறது. ஓராண்டுக்கு இந்த தடை விதிப்பு தொடரும். தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்கள், கேட்டரிங் சேவைகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் உட்பட அனைத்து உணவு நிறுவனங்களும் மூல முட்டை அடிப்படையிலான மயோனைஸின் பயன்பாடு, விற்பனை அல்லது விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். மீறுபவர்களுக்கு அபராதம் விதித்தல், உரிமம் ரத்து செய்தல் உள்ளிட்ட சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை விதிக்கப்படும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B8%E0%AE%95%E0%AE%95-%E0%AE%93%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%9F/175-356131

கை விரித்த பி.டி.ஆர், மேடையில் சமாதானம் செய்த முதலமைச்சர் - என்ன நடக்கிறது திமுகவில்?

1 month 2 weeks ago

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மு.க. ஸ்டாலின்

பட மூலாதாரம்,PALANIVEL THIAGA RAJAN/FACEBOOK

கட்டுரை தகவல்

  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

தனது துறைக்கான அதிகாரங்கள் குறித்து அதிருப்தியை சட்டமன்றத்திலேயே வெளிப்படுத்தியிருக்கிறார் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். வேறொரு விழாவில் இதற்கு பதிலளிப்பதைப் போல பேசியிருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். என்ன நடக்கிறது?

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத் தொடரில் ஏப்ரல் 21ஆம் தேதி கேள்வி நேரத்தின்போது கூடலூர் தொகுதியின் அ.தி.மு.கவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான பொன். ஜெயசீலன் கேள்வி ஒன்றை எழுப்பினார்.

அந்த கேள்வியில், "எனது தொகுதியான கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்கான நிறுவனங்கள் ஏதும் இல்லை. ஆகவே, அந்தப் பகுதியில் சிறு தகவல் தொழில்நுட்ப பூங்கா ஒன்றை அமைத்துத் தருவதற்கு அரசு முன்வருமா என்பதை அறிய விரும்புகிறேன்" எனக் கேட்டிருந்தார்.

அதற்குப் பதிலளித்த தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "இந்தக் கூட்டத் தொடரிலேயே என்னுடைய துறையில் இருக்கின்ற சிக்கல்களை கூறியிருக்கிறேன். நிதியும் மிகவும் குறைவாக ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களைப் போல எல்லா தொழில்நுட்ப பூங்காக்களும் எங்கள் துறையின் கீழ் செயல்படுவதில்லை." என்றார்.

ஒரு சிறிய பங்கு, எல்காட் மட்டும்தான் தங்கள் துறையின் கீழ் செயல்படுகிறது எனக்கூறிய அமைச்சர், பாக்கியுள்ள டைடல், நியோ டைடல் எல்லாம் தொழில்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது என்றார்.

"அது அசாதாரணமான சூழலாக இருந்தாலும் 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. எனவே, யாரிடம் நிதியும் திறனும் அதிகாரமும் இருக்கிறதோ அவர்களிடம் கேட்டால் அவர் செய்து கொடுப்பார் என்று நான் கருதுகிறேன். எங்களிடம் அது இல்லை" என்றார். அவரது இந்த பதில் ஆளும்கட்சியின் உறுப்பினர்களை அதிரவைத்தது.

இதையடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு, "உறுப்பினர் கோரிக்கையாக கேட்கிறார். அமைச்சர் இதையெல்லாம் உள்ளுக்குள்ளே முதலமைச்சரிடம் பேசி முடிவெடுக்க வேண்டியது. பாசிட்டிவாகப் பதில் சொன்னால் உறுப்பினர்களுக்கு நன்றாக இருக்கும்" என்றார்.

தன்னுடைய அமைச்சரவைக்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லாதது குறித்து, சட்டமன்றத்துக்குள்ளேயே விமர்சனத்துடன் பி.டி.ஆர் பேசிய பேச்சு விவாதப் பொருளாகியிருந்தது. இந்த நிலையில்தான், ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பழனிவேல் தியாகராஜனின் விமர்சனத்துக்கும் வருத்தத்துக்கும் பதில் சொல்வதைப் போல சில கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் நீதிக் கட்சியின் தலைவருமாக இருந்தவரும் பழனிவேல் தியாகராஜனின் தாத்தாவுமான பி.டி. ராஜன் குறித்த புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. "திராவிட அறநெறியாளர் தமிழவேள் பி.டி. ராஜன் வாழ்வே வரலாறு" என்ற பெயரில் எழுதப்பட்ட இந்த நூலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுப் பேசினார்.

பி.டி. ராஜன், நீதிக் கட்சி, திராவிட இயக்கம், மத்திய அரசு குறித்தெல்லாம் பேசிய முதலமைச்சர், தனது பேச்சை நிறைவுசெய்வதற்கு முன்பாக, பழனிவேல் தியாகராஜனின் முந்தைய நாள் பேச்சுக்கு பதில் சொல்வதைப் போல சில கருத்துகளைத் தெரிவித்தார்.

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மு.க. ஸ்டாலின்

பட மூலாதாரம்,PALANIVEL THIAGA RAJAN/FACEBOOK

படக்குறிப்பு,புத்தக வெளியீட்டு நிகழ்வில் மு.க. ஸ்டாலின் மற்றும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

ஸ்டாலின் வழங்கிய அறிவுரை

"நம்முடைய பழனிவேல் தியாகராஜனைப் பொறுத்தவரை அறிவார்ந்த வலிமையான வாதங்களை வைக்கக்கூடியவர். நான் அவருக்குக் கூற விரும்புவது இந்தச் சொல்லாற்றல் அவருக்குப் பலமாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, அவரின் பலவீனமாக ஆகிவிடக்கூடாது. இதை ஏன் சொல்கிறேன் என்று அவருக்கே தெரியும். " என்றார்.

நம்முடைய எதிரிகள் வெறும் வாயையே மெல்லக்கூடிய வினோத ஆற்றல் பெற்றவர்கள் எனக்கூறிய முதலமைச்சர், அவர்களின் அவதூறுகளுக்கு உங்களின் சொல் அவலாக ஆகிவிடக்கூடாது என்பதை தி.மு.க. தலைவராக மட்டுமல்லாமல், உங்கள் மீது அக்கறை கொண்டவனாகவும் அறிவுரை வழங்கக் கடமைப்பட்டிருக்கிறேன் என, பி.டி.ஆருக்கு அறிவுறுத்தினார்.

"என் சொல்லைத் தட்டாத பி.டி.ஆர். என்னுடைய அறிவுரையின் ஆழத்தையும் அர்த்தத்தையும் புரிந்துகொள்வார் என நம்புகிறேன்" என்று குறிப்பிட்டார்.

சர்ச்சைகள் புதிதல்ல

இதன் மூலம் இப்போதைக்கு இந்த விவகாரம் முடிவுக்கு வந்திருப்பதாகவே கருதப்படுகிறது. ஆனால், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இதுபோல பேசி சலசலப்பில் சிக்குவது முதன்முறை இல்லை. 2021ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று அமைச்சராவதற்கு முன்பாக, அவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துவந்த கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்தினாலும் பெரிய சர்ச்சையாக மாறவில்லை. அவர் நிதியமைச்சரான பிறகு, தனது கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே.எஸ். இளங்கோவனையே எக்ஸ் தளத்தில் கடுமையாக விமர்சித்து அதிரவைத்தார்.

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மு.க. ஸ்டாலின்

பட மூலாதாரம்,PALANIVEL THIAGA RAJAN/FACEBOOK

இருந்தபோதும், அவர் நிதியமைச்சராகப் பதவியேற்றதும் மாநிலத்தின் நிதி நிலையை மேம்படுத்த அவர் எடுத்த நடவடிக்கைகள் மிகுந்த கவனத்தைப் பெற்றன, பாராட்டுதல்களையும் பெற்றன. மற்றொரு பக்கம், தேசிய அளவில் தி.மு.கவின் முகத்தை மாற்றியமைப்பதிலும் அவர் முக்கியப் பங்கு வகித்தார். ஆங்கில ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டிகள், தொலைக்காட்சி விவாதங்களில் அவர் பங்கேற்று முன்வைத்த கருத்துகள் ஆகியவை நாடு முழுவதும் வெகுவாகக் கவனிக்கப்பட்டன.

இந்த நிலையில்தான் 2023ஆம் ஆண்டில் முதலமைச்சரின் குடும்பத்தினர் குறித்து இவர் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு சில நாட்களுக்குப் பிறகு நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பழனிவேல் தியாகராஜன் மாற்றப்பட்டார். ஆடியோ வெளியானதன் தொடர்ச்சியாகவே முக்கியத்துவம் இல்லாத துறைக்கு அவர் மாற்றப்பட்டதாக பேசப்பட்டது.

இருந்தபோதும் தொடர்ந்து செயல்பட்டுவந்த பழனிவேல் தியாகராஜன், தேசிய அளவிலான விவகாரங்களைத் தி.மு.க. கையில் எடுக்கும்போது, ஆங்கில ஊடகங்களில் தி.மு.கவின் கருத்துகளை வலுவாக முன்வைப்பதன் மூலம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துவந்தார். இந்த நிலையில்தான் சட்டமன்றத்தில் அவர் சமீபத்தில் பேசிய பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பிடிஆர் பேச்சு பெரிதுபடுத்தப்படுகிறதா?

"பி.டி.ஆர். பேசிய பேச்சு இந்த முறை வழக்கத்துக்கு மாறாக பெரிதுபடுத்தப்படுகிறது. அவர் இந்தத் துறைக்கு வந்த பிறகு பல முறை தனது துறைக்கு போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லை என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான கார்த்திகேயன்.

அவர் சொல்வதைப்போல, தனது துறைக்கு மிகக் குறைவான நிதி ஒதுக்கீடு இருப்பது குறித்து பழனிவேல் தியாகராஜன் பேசுவது இதுவே முதல் முறையல்ல. 2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இதேபோல கேள்வி நேரத்தில் பேசிய பழனிவேல் தியாகராஜன், பிற மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சகங்களை ஒப்பிட்டு, தமிழ்நாட்டில் அந்தத் துறைக்கு குறைவாக நிதி ஒதுக்கப்படுவதாக குறிப்பிட்டார். "

தமிழ்நாட்டில் 30 இடங்களில் 'ஐடி பார்க்' அமைக்க கோரிக்கை வந்துள்ளது எனக்கூறிய அமைச்சர், ஆனால், இந்த நிதியாண்டில் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு 119 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது, இதை வைத்து ஓரளவுக்குத்தான் செயல்பட முடியும் என்றார்.

"கர்நாடகா, தெலங்கானா போன்ற மாநிலங்களிளின் மொத்த பட்ஜெட் தமிழ்நாட்டைவிட குறைவாக இருந்தாலும் இந்தத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்குகிறார்கள். கர்நாடக மாநிலத்தில் ஐடி துறைக்கு 750 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. தெலங்கானாவில் 776 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

பட மூலாதாரம்,TNDIPR

"இப்போதும் அதைத்தான் சொன்னார். ஆனால், இந்த முறை விவகாரம் பெரிதாகிவிட்டது. கூடுதலாக நிதி ஒதுக்கீடு இருக்கக்கூடிய துறை தனக்கு இருந்திருக்கலாம் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடாகவும் இந்தப் பேச்சைப் பார்க்கலாம்" என்கிறார் கார்த்திகேயன்.

வெளிப்படையாக பேசியிருக்க வேண்டுமா?

ஆனால், பி.டி.ஆர். இவ்வளவு வெளிப்படையாக இதனைப் பேசியிருக்க வேண்டியதில்லை என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன்.

"ஐ.டி. துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவை என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், இவர் நிதியமைச்சராக இருக்கும்போதும் இதுபோலத்தானே நிதி ஒதுக்கப்பட்டது? அப்போது இருந்தவர்கள் இப்படிப் பேசவில்லையே? ஒன்று, இது தனது துறைக்கான கேள்வியில்லை எனச் சொல்லியிருக்கலாம், அல்லது மென்மையாக மறுத்திருக்கலாம். இதுபோல பேசுவது முதலமைச்சருக்குத்தான் சங்கடத்தை ஏற்படுத்தும்" என்கிறார் குபேந்திரன்.

தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களைப் (IT Parks) பொறுத்தவரை, தொழில்துறையின் கீழ் உள்ள டிட்கோவும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள எல்காட்டும் இணைந்தும் தனித்தனியாகவும் கட்டிவருகின்றன. சென்னையில் உள்ள டைடல் பார்க், டிட்கோ - எல்காட் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் கட்டப்பட்டது. ஆனால், முதலீட்டின் பெரும்பகுதி டிட்கோவினுடையது என்பதால், அந்த நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. மதுரை போன்ற இடங்களில் எல்காட் நிறுவனமே தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை கட்டியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8epg19y9reo

12 வயதில் பாலியல் வன்கொடுமை - 10 ஆண்டுக்குப் பின் திரும்பி வந்து நீதி பெற்ற பெண்

1 month 2 weeks ago

போக்சோ வழக்கு, முக்கிய செய்திகள், சென்னை செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பள்ளிப்படிப்பையும் பாதியிலேயே நிறுத்திய அந்த பெண், தன் அம்மாவுடன் கூலி வேலைக்கு சென்றுள்ளார்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், நித்யா பாண்டியன்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 22 ஏப்ரல் 2025

எச்சரிக்கை: இந்த செய்தியில் இடம் பெற்றுள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை அளிக்கக்கூடும்

2015-ஆம் ஆண்டில், 12 வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி ஒருவர், 10 ஆண்டுகள் கழித்து இளம்பெண்ணாக, நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளார்.

குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானமாக கருதி, 10 ஆண்டுகள் சொந்த குடும்பத்தில் இருந்து, வெளியேற்றப்பட்ட அந்த பெண் இந்த ஆண்டு ஜனவரி மாதம், சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்ட ஈட்டை வழங்க நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தப்பட்டு, சொந்த பெயரை மாற்றிக் கொண்டு, வெளியூரில் சென்று வேறொரு அடையாளத்தில் வாழ்ந்த அந்த சிறுமி, 10 ஆண்டுகள் கழித்து குற்றவாளிக்கு எதிராக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தது எப்படி?

10 ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் இருந்தது எப்படி? காவல்துறையினர் எவ்வாறு அந்த பெண்ணை தேடிக் கண்டுபிடித்தனர்? வழக்கில் நடந்தது என்ன?

2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்த சிறுமியின் தாயார் எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். ஆனால் புகார் அளித்து வெறும் இரண்டே நாளில் அந்த சிறுமி, அவருடைய அம்மா மற்றும் அப்பெண்ணின் உடன் பிறந்தோர் இரண்டு பேரும் எங்கே சென்றார்கள் என்று காவல்துறையினருக்கு தெரியவில்லை.

10 ஆண்டுகள் கழித்து, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரம், எம்.கே.பி. நகர் காவல்துறையினர் பாதுகாப்புடன் 22 வயது இளம்பெண்ணாக திரும்பி வந்த அந்த சிறுமி, தனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பான தகவலை முதன்முறையாக சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் பதிவு செய்தார்.

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் வசித்து வந்த வீட்டின் உரிமையாளரின் மருமகனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதையும், அதனைத் தொடர்ந்து அவர் திண்டுக்கல்லுக்கு கடத்திச் செல்லப்பட்டு மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதையும் அவர் நீதிமன்றத்தில் உறுதி செய்ததோடு, குற்றவாளியையும் அடையாளம் காட்டியுள்ளார்.

புகார் அளித்த சிறுமி காணாமல் போனது எப்படி?

அப்போது வட சென்னையில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார் அந்த சிறுமி. 7-ஆம் வகுப்பு மாணவியான அவர் தொடர்ச்சியாக பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்.

2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி அன்று அந்த சிறுமி வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். அவருடைய குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் விசாரித்தும் அவர் கிடைக்கவில்லை என்பதால் அவரைக் காணவில்லை என்று எம்.கே.பி. காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இரண்டு நாட்கள் கழித்து வீடு திரும்பிய அந்த சிறுமி, திண்டுக்கலுக்கு அவர் கடத்திச் செல்லப்பட்டதாகவும், அங்கே அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரின் அம்மா, அதே காவல்நிலையத்தில் அவர் வீட்டு உரிமையாளரின் மருமகன் மீது புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

"ஆனால், அடுத்த இரண்டு நாட்களில் அந்த பெண், அவரின் உடன்பிறந்தோர், மற்றும் அம்மா அனைவரும் சென்னையில் இருந்து வெளியேறிவிட்டனர். காவல்துறையினர் தரப்பில் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தியும் அந்த சிறுமியும் அவரின் குடும்பத்தினரும் எங்கே சென்றனர் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அந்த பெண்ணின் தாயார் அளித்த புகார், போக்சோ வழக்காக பதிவு செய்யப்பட்டு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது," என்று தெரிவிக்கிறார் தற்போது எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு காவல்துறை அதிகாரி.

போக்சோ வழக்கு, முக்கிய செய்திகள், சென்னை செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,எம்.கே.பி.நகர் காவல் நிலைய அதிகாரிகள் அந்த பெண்ணை கண்டுபிடித்தனர்

குடும்பத்தில் இருந்து விரட்டப்பட்ட சிறுமி

இந்த வழக்கில், ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் எஸ். அனிதா, இது குறித்து பேசும் போது, "இங்கு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்கள் அவர்களின் குடும்பத்தால் கைவிடப்படும் போது என்ன ஆகும் என்பதற்கு இந்த வழக்கு ஒரு எடுத்துக்காட்டு.

கூட்டுக்குடும்பத்தில் வசித்த அந்த சிறுமிக்கு நடந்த குற்றத்தை வன்முறையாக அவரின் அப்பா காணவில்லை. மாறாக அவரின் குடும்பத்திற்கு ஏற்பட்ட களங்கமாக கருதினார். அதனால் சிறுமி, சிறுமியின் அம்மா, மற்றும் உடன் பிறந்தோர் ஆகியோரை சென்னையில் இருக்க வேண்டாம் என்று கூறி துரத்திவிட்டிருக்கிறார் அவருடைய அப்பா.

பெண்ணை சரியாக வளர்க்கவில்லை என்று கூறி தன்னுடைய மனைவியிடம் இருந்து முற்றிலுமாக பிரிந்துவிட்டார் அவர்.

குடும்ப உறவுகள் இந்த ஒரு நிகழ்வால் முறிந்து போனது. சொந்த அடையாளங்களை மறைத்துக் கொண்டு அந்த சிறுமியும், அம்மாவும், உடன் பிறந்தவர்களும் தென் தமிழகத்தில் இருக்கும் கிராமம் ஒன்றில் வசிக்க ஆரம்பித்தனர். மிகவும் வயதான சிறுமியின் பாட்டி தான், வேலைக்குச் சென்று அந்த நான்கு பேரையும் காப்பாற்றினார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பள்ளிப்படிப்பு, வறுமை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அந்த சிறுமியின் தாயார் மனதளவில் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தார்," என்று கூறுகிறார்.

இந்த 10 ஆண்டுகளில் அந்த சிறுமியின் அப்பாவும் இறந்து போக, சென்னையில் உள்ள உறவினர்கள் யாரும் அவர்களிடம் பேசுவதில்லை என்று தெரிவிக்கிறார் எம்.கே.பி. காவல்நிலைய அதிகாரி.

போக்சோ வழக்கு, முக்கிய செய்திகள், சென்னை செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இரண்டு முறைக்கு விசாரணைக்காக அப்பெண் சென்னை அழைத்துவரப்பட்டார் (சித்தரிப்புப் படம்)

காவல்துறையினர் அவரை கண்டுபிடித்தது எப்படி?

"அந்த சிறுமி காணாமல் போய்விட்டார் என்று கூறி இந்த வழக்கு முடித்து வைக்கப்படவில்லை. ஒவ்வொரு முறை இந்த வழக்கு விசாரணை வரும் போதும் எம்.கே.பி. காவல் துறையினர், அந்த சிறுமியை கண்டுபிடிக்க இயலவில்லை என்று கூறி வந்தனர். கடந்த ஆண்டு இறுதியில் நீதிமன்றம், காவல்துறை துணை ஆணையருக்கு 'நோட்டீஸ்' அனுப்பியது. இந்த சிறுமியை கட்டாயம் கண்டுபிடித்தே தீர வேண்டும் என்று காவல்துறைக்கு அழுத்தம் தந்தது நீதிமன்றம்," என்கிறார் அனிதா.

"இது எங்களுக்கு சவாலானதாக இருந்தது. ஏன் என்றால், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நகரத்தை விட்டு வெளியே சென்றவர்களை எப்படி தேடி கண்டுபிடிப்பது? புகார் அளிக்கும் போது இருந்த ஒரே ஒரு செல்போன் எண்ணை வைத்து, எங்கள் காவல்நிலைய காவலர் தன்னுடைய தேடுதல் பணியை துவங்கினார். மூன்று வார கடும் தேடுதல் பணிக்குப் பிறகு அந்த பெண்ணின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது," என்கிறார் எம்.கே.பி. காவல்நிலைய அதிகாரி.

"அவரை அவருடைய சிறிய வீட்டில் வைத்து பார்த்த போது, மிகவும் அச்சத்துடன் காணப்பட்டார் அந்த பெண். நீதிமன்றத்திற்கு வர மிகவும் தயக்கம் காட்டினார் அவர். அவரின் அச்சத்திற்கு காரணம் இருந்தது . ஆனால் அவருக்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

இரண்டு நாட்கள் அந்த பெண்ணுக்கு நம்பிக்கையை அளித்தோம். அதன் பிறகு அவர் பாதுகாப்பாக போக்சோ நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். பிறகு நீதிபதியிடம் நடந்த விபரங்களைத் தெரிவித்தார். குற்றவாளிக்கு எதிரான தன்னுடைய வாக்குமூலத்தை அவர் பதிவு செய்தார்," என்று கூறுகிறார் அந்த அதிகாரி.

இரண்டு முறைக்கு விசாரணைக்காக அப்பெண் சென்னை அழைத்துவரப்பட்டார். கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி அன்று, குற்றவாளிக்கு தண்டனையை உறுதி செய்ததோடு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 15 லட்சம் நஷ்டஈட்டை அரசு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது போக்சோ சிறப்பு நீதிமன்றம். தற்போது குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அரிதாகவே நடக்கும் நிகழ்வு

சென்னை உயர் நீதிமன்றத்தில் போக்சோ உள்ளிட்ட வழக்குகளுக்காக ஆஜராகும் வழக்கறிஞர் வி. அனுஷா இது குறித்து பேசும் போது, "போக்சோ வழக்குகளைப் பொறுத்தவரை பாதிக்கப்பட்ட நபர் தான் தனக்கு என்ன நடந்தது என்பதை தெரிவிக்க வேண்டும். அவர் காணாமல் போய்விட்டார் என்று வழக்கை முடித்துவைக்காமல், அந்த பெண் திரும்பி வருவார் என்று நம்பிக்கையுடன் இருந்தது இந்த வழக்கில் தனித்துவமான ஒன்றாக இருக்கிறது," என்று கூறினார்.

"12 வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார். 10 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதற்காக அவர் நீதிக்காக போராட வேண்டாம் என்றில்லை. அவர் அந்த மனநிலையைப் பெறுவதற்கான கால அவகாசம் தேவைப்பட்டிருக்கலாம். அவரின் இந்த முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது," என்றும் அவர் குறிப்பிட்டார்.

"பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தேவையான பாதுகாப்பை உறுதி செய்வது இந்த அரசாங்கத்தின் கடமை. ஏற்கனவே அந்த சிறுமி கடத்தப்பட்டு மீண்டும் வீடு திரும்பி வந்த நிலையில், காவல்துறையினர் அப்போதே எச்சரிக்கையுடன் செயல்பட்டிருந்தால், இந்த வழக்கில் இவ்வளவு தாமதமாக நீதி கிடைத்திருக்காது," என்றார் அனுஷா.

மேற்கொண்டு பேசிய அவர், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாதுகாப்பு, மனநல ஆலோசனை, படிப்பை மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றை உறுதி செய்ய தவறிவிட்டது மாநில அரசு என்றும் அவர் தெரிவித்தார்.

போக்சோ வழக்கு, முக்கிய செய்திகள், சென்னை செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நம்பிக்கையுடன் இருங்கள்

"இந்த குற்றச்சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் கடந்திருக்கலாம். இன்று உலகம் வெகுவாக மாறிவிட்டது. பெற்றோர்கள், இது போன்ற ஒரு சூழலில் குழந்தைக்கு உற்ற பாதுகாப்பாக இருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் தங்களுக்கு நடந்த பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு வர இயலும்.

பாதிக்கப்பட்ட உடனே புகார் அளிப்பது சிறந்தது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் உறுதி செய்ய சட்டம் வழி வகை செய்கிறது.

வேகமாக விசாரணை நடத்தி, 60 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது, பாதிப்பின் தன்மையை பொறுத்து மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட இதர செலவுகளுக்கு சிறுமிக்கு தேவையான நிதியை வழங்குவது, பெண் அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பெரும்பாலான வழக்குகளில் ஆஜர்படுத்துவது, மனநல ஆலோசனை வழங்குவது, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம் பாதுகாப்பற்ற சூழ்நிலை கொண்டிருந்தால் அவருக்கு காப்பகங்களில் இடம் அளிப்பது போன்றவற்றையும் போக்சோ சட்டம் உறுதி செய்கிறது.

எனவே பாதிக்கப்பட்ட சிறுமிகளோ, பெண்களோ அல்லது பெற்றோர்களோ தயக்கம் காட்டாமல் புகாரளிக்க முன்வர வேண்டும்," என்றும் தெரிவிக்கிறார் எஸ்.அனிதா.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c9djv5djx9vo

நான்கு முனைப் போட்டி – “2026 தமிழக தேர்தல்“ யாருக்குச் சாதகம்?

1 month 2 weeks ago

நான்கு முனைப் போட்டி – “2026 தமிழக தேர்தல்“ யாருக்குச் சாதகம்?

April 22, 2025 10:42 am

நான்கு முனைப் போட்டி – “2026 தமிழக தேர்தல்“ யாருக்குச் சாதகம்?

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக என கிட்டத்தட்ட நான்குமுனைப் போட்டி உறுதியாகிவிட்டது. இதில் நாதக-வும் தவெக-வும் பிரிக்கும் வாக்குகள் யாருக்குச் சாதகமாகும் என்பதே இப்போதைய கேள்வி.

தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலுக்கும் கூட்டணி கணக்குகள் மாறினாலும், மூன்றாவது அல்லது நான்காவது அணிகள் எப்போதும், பிரதானமான திமுக, அதிமுக கூட்டணியின் வெற்றி தோல்விகளுக்கு காரணமாகி இருக்கின்றன.

2016 தேர்தலில் அதிமுக 40.88% வாக்குகளுடன் 136 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. திமுக கூட்டணி 39.85% வாக்குகளுடன் 98 தொகுதிகளில் வென்று ஆட்சியை இழந்தது. இரண்டு அணிகளுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் 1 சதவீதம்தான். அதேசமயம், மக்கள் நலக் கூட்டணி பெற்ற வாக்குகள் 6.1 சதவீதம். தனித்து போட்டியிட்ட பாமக 5.36 சதவீதம், பாஜக 2.86 சதவீதம், நாதக 1.07 சதவீதம் என வாக்குகளை பெற்றன. இதுதான் கூட்டணி கணக்கு. இதில் ஒரு சில கட்சிகள் திமுக பக்கம் போயிருந்தால் ஆட்சியே மாறியிருக்கலாம்.

2021 தேர்தலில் திமுக கூட்டணி 45.38 சதவீத வாக்குகளுடன் 159 தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடித்தது. அதிமுக கூட்டணி 39.71 சதவீத வாக்குகளுடன் 75 தொகுதிகளில் வென்று ஆட்சியை இழந்தது. இரு கூட்டணிகளுக்கு இடையிலான வித்தியாசம் 6 சதவீதம் தான். அந்தத் தேர்தலில் 3-வது இடம்பிடித்த நாதக பெற்ற வாக்குகள் 6.58 சதவீதம். அதேபோல், அமமுக – தேமுதிக 2.85 சதவீதமும் மநீம 2.73 சதவீதமும் வாக்குகளை பெற்றன.

வரும் 2026 தேர்தலில் திமுக அணி அப்படியே தொடர்கிறது. அதிமுக -பாஜக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையலாம். வழக்கம் போல நாதக தனித்து போட்டியிடுகிறது. தவெக-வுக்கும் தனித்து போட்டியிடுவதை தவிர வேறு வழியில்லை. ஒருவேளை, நாதக – தவெக கூட்டணி அமையலாம். தற்போதைய சூழலில் 4 முனைப் போட்டி நிச்சயமாகி உள்ளது.

இதில் 2024 தேர்தலின்படி நிரூபிக்கப்பட்ட வாக்கு சதவீதப் படி திமுக அணிக்கு 46.97 சதவீத வாக்குகள் உள்ளன. அதிமுக அணியின் 23.05 சதவீதம், பாஜக அணியின் 18.28 சதவீத வாக்குகளைக் கூட்டினால் 41.33 சதவீதம் வரும். 2024-ல் நாதக தனித்து 8.20 சதவீத வாக்குகளைப் பெற்றது. இதில் திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை கொண்ட வாக்குகளை அறுவடை செய்து எளிதாக வெற்றிபெறலாம் என்பது அதிமுக – பாஜகவின் கணக்கு. ஆனால், புதிதாக களத்துக்கு வரும் தவெக யாருடைய வாக்குகளைப் பிரிக்கப்போகிறது எனத் தெரியவில்லை.

விஜய் கடுமையாக திமுக-வை எதிர்க்கிறார். எனவே, திமுக-வுக்கு எதிரான வாக்குகள் தவெக-வுக்குப் போகலாம் இது அதிமுக-வுக்கு மைனஸ். அதேசமயம், விஜய், பாஜக-வையும் கடுமையாக எதிர்க்கிறார். இதனால் பாஜக-வுக்கு எதிரான வாக்குகள் விஜய்க்கு வரலாம். இது திமுக-வுக்கு மைனஸ். மேலும், திமுக, பாஜக-வை பிடிக்காத சிறுபான்மையினர், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் வாக்குகள் தவெக – நாதகவுக்கு போகும்.

இது திமுக, அதிமுக அணிகளுக்கு மைனஸ். ஒருவேளை, நாதக – தவெக கூட்டணி அமைந்தால் அது திமுக, அதிமுக அணிகளுக்கு மேலும் சவாலாகும். 2006-ல் விஜயகாந்த் 3-வது அணியாக களத்தில் நின்றார். அது அப்போதைய ஆளும் கட்சியான அதிமுக-வின் ஆட்சி பறிபோக காரணமானது. 2011-ல் அதே தேமுதிக-வை கூட்டணிக்குள் இழுத்து திமுக-வை ஆட்சியிலிருந்து அகற்றினார் ஜெயலலிதா. அதேசமயம், 2016-ல் அமைக்கப்பட்ட மக்கள் நலக்கூட்டணி எதிர்க்கட்சியான திமுக-வுக்குப் போகவேண்டிய வாக்குகளை அறுவடை செய்து, மீண்டும் அதிமுக ஆட்சியமைய காரணமானது. 2021-ல் நாதக பிரித்த வாக்குகள் அதிமுக ஆட்சியை இழக்க வழியமைத்தது.

எப்படிப் பார்த்தாலும் தற்போதைய 4 முனைப் போட்டி, திமுக-வுக்கும், அதிமுக-வுக்கும் கத்திமேல் நடக்கும் பாதைதான். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருப்பதால் அதற்குள்ளாக காட்சிகள் மாறுகிறதா எனப் பார்ப்போம்.

https://oruvan.com/four-way-competition-who-benefits-from-the-2026-tamil-nadu-elections/

நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தை முடக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இரத்து!

1 month 3 weeks ago

sivasdeew-down-1741154742.jpg?resize=600

நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தை  முடக்குமாறு பிறப்பிக்கப்பட்ட  உத்தரவு இரத்து!

நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தை  முடக்குமாறு  (சொத்து முடக்கம்) பிறப்பிக்கப்பட்ட  உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் இரத்து செய்தது.

சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் தனது ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் ‘ஜகஜால கில்லாடி’ என்ற படத்தை தயாரித்தார்.

இதற்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், இந்திய ரூபாய் மதிப்பில் 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர்.

குறித்த கடனை திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டை முடக்குமாறு  நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் ‘அன்னை இல்லம் தனது வீடு கிடையாது எனவும், அது தனது  தம்பி பிரபுவின் வீடு எனவும் எனவே தடையை இரத்து செய்ய வேண்டும்  எனவும் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கிடையே, நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை மடக்குமாறு பிறப்பித்த  உத்தரவை  இரத்து செய்ய கோரி நடிகர் பிரபு மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை இன்று (ஏப்ரல் 21) விசாரித்த உயர்நீதிமன்றம், ”நடிகர் பிரபு தான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர்” என்பதை உறுதி செய்ததோடு,  நீதிமன்றம் பிறப்பித்த  சொத்து முடக்க உத்தரவையும்  நீக்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

https://athavannews.com/2025/1429028

வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்

1 month 3 weeks ago

வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்

19 Apr 2025, 8:33 AM

NTK Seeman Speech

மே 18-ஆம் தேதி கோவையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழின பேரெழுச்சி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் விடுதியில் ஏப்ரல் 18-ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய சீமான், “2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியில் நான் சொல்பவர்கள் தான் வேட்பாளர்கள். நான் சொல்வதற்கு மாறாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால், விஜய் கட்சிக்கு சென்று விடுங்கள். நானே உங்களை சேர்த்து விடுகிறேன்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து சென்றால் ஸ்டாலின், விஜய் ஆகியோர் தேர்தலில் நிற்க உடனடியாக சீட் கொடுத்துவிடுவார்கள்.

இந்தப் படையை சரியாக வழிநடத்திக் கொண்டுபோய் நான் வென்று காட்டுவேன் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டும் என்னுடன் வாருங்கள். உங்களுக்கு ஒதுக்கும் தொகுதியில் நீங்கள் வென்று காட்ட வேண்டும்.

நீங்கள் வெற்றி பெற்றால் பல்லக்கில் ஏற்றி மாலை போட்டு அழைத்து வருவேன். தோற்றால் பாடையில் ஏற்றி மாலை போடுவேன். எப்படி பார்த்தாலும் மாலை கன்ஃபார்ம். தோற்றால் சிறிது பால்டாயிலை வாங்கி குடித்துவிட்டு நீங்களே பாடையில் படுத்துவிடுங்கள். வேறு வழியே கிடையாது.

நம்முடைய கட்சி பிளக்ஸ் பேனரில் தொண்டர்கள், நிர்வாகிகள் நல்ல புகைப்படங்களை வைக்க வேண்டும். தறுதலைகளை போல தலையை விதவிதமாக அலங்காரம் செய்து கொண்டு ஃபோட்டோ வைக்க கூடாது. எங்கெங்கு நிராகரிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, வீழ்த்தப்பட்ட மக்கள் இருக்கிறார்களோ அங்கு நம்முடைய குரல் ஒலிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

https://minnambalam.com/ntk-seeman-speech-about-win-in-2026-election/

விஜய் மீது இந்த மாதிரி குற்றச்சாட்டுக்களை வைக்காதீர்கள்” - சீமான்

1 month 3 weeks ago

விஜய் மீது இந்த மாதிரி குற்றச்சாட்டுக்களை வைக்காதீர்கள்” - சீமான்

Seeman says Don’t make such allegations against Vijay

ரம்ஜான் பண்டிகையொட்டி, இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கடந்த மார்ச் 7ஆம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், தவெக தலைவரும், நடிகருமான விஜய் கலந்து இஸ்லாமியர்களோடு நோன்பு கஞ்சி அருந்தியதோடு தொழுகையிலும் ஈடுபட்டார். 

இந்த சூழ்நிலையில், தவெக தலைவர் விஜய்யிடம் இஸ்லாமியர்கள் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் சகாபுதீன் ரஸ்வி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது, ‘தமிழ்நாட்டிலிருந்து விஜய் என்ற ஒரு முக்கிய நபர் இருக்கிறார் அவர் தவெக என்ற கட்சியை உருவாக்கியுள்ளார். இப்போது, அவர் திரைப்படத் துறையிலிருந்து அரசியலுக்கு மாற விரும்புகிறார். திரைப்படத் துறையில் இருந்த காலத்தில், அவர் தனது பல படங்களில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்தார். பல்வேறு வழிகளில் முஸ்லிம்களை அவதூறு செய்ய முயன்றார். இப்போது, அவர் ஒரு அரசியல் முகத்தை முன்வைத்து முஸ்லிம் சமூகத்திற்குள் நுழைய முயற்சிக்கிறார்

சமீபத்தில் அவர் ஒரு இஃப்தார் விருந்தை நடத்தி, சூதாட்டக்காரர்கள், மது அருந்துபவர்கள் மற்றும் பிற சமூக விரோத சக்திகளை அழைத்தார், இது தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் சமூகத்தை எரிச்சலடையச் செய்துள்ளது. தமிழ்நாட்டு முஸ்லிம்கள் நடிகர் விஜய்யுடன் கைகுலுக்கவோ, சந்திக்கவோ அல்லது அனுதாபம் கொள்ளவோ கூடாது என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் தங்கள் முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுக்க வேண்டும், நடிகர் விஜயை நம்ப முடியாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார். இது தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

Seeman says Don’t make such allegations against Vijay

இந்த நிலையில், விஜய் இஃப்தார் நோன்பில் பங்கேற்றதில் உள்நோக்கம் இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவரிடம், விஜய்க்கு அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் கண்டனம் தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதலளித்த சீமான், “எனக்கு தம்பி விஜய்யை பற்றி தெரியும். அது மாதிரி உள்நோக்கம் வைத்துகொண்டு செய்யும் ஆள் அவர் கிடையாது. அவர் எதார்த்தமான ஆள். இஃப்தார் நிகழ்ச்சிக்கு அழைத்திருப்பார்கள், அதனால் அவர் போயிருப்பார். விஜய்யை பற்றி உங்களுக்கு தெரியாதா? எனக்கே தனிப்பட்ட முறையில் தம்பியை தெரியும். கவனத்தை தன் பக்கம் இழுப்பதற்காக எங்கிருந்தோ பேசுகிறார்கள். இந்த மாதிரி குற்றச்சாட்டை எல்லாம் தம்பி விஜய் மீது வைக்காதீர்கள்” என்று கூறினார். 

nakkheeran
No image preview“விஜய் மீது இந்த மாதிரி குற்றச்சாட்டுக்களை வைக்காதீர்கள்”...
ரம்ஜான் பண்டிகையொட்டி, இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கடந்த மார்ச் 7ஆம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், தவெக தலைவரும், நடிகருமான விஜய் கலந்து இஸ்லாமியர்களோடு நோன...

'பள்ளி, கல்லூரி பெயர்களில் சாதி இருக்கக்கூடாது' - சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு நடைமுறையில் சாத்தியமா?

1 month 3 weeks ago

பள்ளி, கல்லூரிகளில் சாதி பெயர்களை நீக்க உத்தரவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 17 ஏப்ரல் 2025

    புதுப்பிக்கப்பட்டது 18 ஏப்ரல் 2025

தமிழ்நாடு முழுவதும் உள்ள சாதி சங்கங்கள் நடத்தும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனை நடைமுறைப்படுத்துவது எந்த அளவுக்குச் சாத்தியம்?

தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள சாதி பெயர்களை நான்கு வாரங்களுக்குள் நீக்க வேண்டும் என்றும் அவ்வாறு நீக்கத் தவறும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. அந்தச் சங்க நடவடிக்கைகள் தொடர்பாக ஏற்கெனவே அளித்த தீர்ப்புகளை ரத்து செய்து, சங்கத்துக்கான தேர்தல் நடவடிக்கைகளை தொடர அனுமதி அளிக்க அந்த வழக்கில் கோரப்பட்டிருந்தது.

அதேபோல, திருச்செங்கோடு வட்டக்கொங்கு வேளாளர் சங்கம், தி புவர் எஜுகேஷனல் ஃபண்ட் ஆகியவற்றின் சார்பில் வெவ்வேறு கோரிக்கைகளோடு வேறு சில வழக்குகளும் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழங்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி ஏப்ரல் 16ஆம் தேதி இந்த வழக்குகளில் மொத்தமாகத் தீர்ப்பளித்தார்.

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

பள்ளி, கல்லூரிகளில் சாதி பெயர்களை நீக்க உத்தரவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சாதி சங்கங்கள் நடத்தும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்களில் பெயர்ப் பலகைகளில் சாதிப் பெயர்கள் இனி இடம்பெறக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சுமார் 40 பக்கங்களுக்கு நீளும் இந்தத் தீர்ப்பில் பின்வரும் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

  • சாதி சங்கங்கள் பலவும் பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிலையங்களை சாதி பெயர்களிலேயே நடத்துகின்றன. அந்த சாதி பெயர்களை அப்படியே தொடர அனுமதிக்க முடியுமா? இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமெனக் கூறியபோது அரசுத் தரப்பு வழக்கறிஞர் அதற்கு கால அவகாசம் கோரினார். பிறகு, அரசு தன் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கி, தற்போதைய வழக்கோடு இது தொடர்பில்லாதது; அதற்குள் செல்ல வேண்டாம் எனப் பதிலளித்தது.

  • மேலும், நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருக்கும் வழக்குகளை தேவையில்லாமல் போகச் செய்யும் வகையில், மனுதாரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, ஆணைகளை வெளியிட்டது.

  • அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 75 ஆண்டுகளான நிலையில், சாதிப் பாகுபாடுகள் உச்சத்தைத் தொட்டிருக்கின்றன. இன்னொரு சாதியைச் சேர்ந்த ஒருவரை காதலித்தார் என்பதற்காகவே பெற்றோர், தங்கள் குழந்தைகளைக் கொல்கின்றனர். குழந்தைகள் தூய்மையான மனதைக் கொண்டவர்கள் என்பதை அறிவோம். ஆனால், அது மாறிக்கொண்டிருக்கிறது. அவர்கள் சாதிகளை குறிப்பிடும் வகையில் கயிறுகளை அணிகிறார்கள். பையில் ஆயுதங்களைக் கொண்டுவந்து சக மாணவர்களைத் தாக்குகின்றனர்.

  • பள்ளி, கல்லூரிகளில் சாதி பெயர்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு - நடைமுறையில் சாத்தியமா?18 ஏப்ரல் 2025

  • வக்ஃப் சட்டம் – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்த வாக்குறுதி என்ன? நீதிபதி கூறியது என்ன?17 ஏப்ரல் 2025

  • தற்போது மனுத்தாக்கல் செய்திருக்கும் மனுதாரர்கள், சாதியை முன்னெடுத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டவர்கள். அவர்களது சங்கப் பெயரிலேயே சாதி இருக்கிறது. அந்த சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அந்த சங்கங்களில் சேர முடியும். அடுத்ததாக, ஒரே சமூகத்தைத் சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து, சமூகத்துக்குப் பயனுள்ள சில விஷயங்களைச் செய்வதில் என்ன தவறு என்கிறார்கள். ஆனால், ஒரு குறிப்பிட்ட சாதிக்காக மட்டும் ஒரு சங்கத்தை உருவாக்கி, பெயரிலேயே சாதியை வைத்திருந்தால் அது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதாகிறது.

  • இந்த சாதி சங்கங்களுக்கு உள்ளே உள்ள மோதல்கள், அது தொடர்பான வழக்குகள் என்பவை அரசியலமைப்புச் சட்ட இலக்குகளுக்கு முரணானவை. ஆகவே, இது போன்ற வழக்குகளை விசாரிக்க முடியாது. சங்கங்களின் பதிவாளர், எல்லா சங்கங்களின் பட்டியலையும் எடுத்து, அவற்றின் பெயர், நோக்கம் ஆகியவை அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். அவை தங்களது பெயரையும் விதிமுறைகளையும் மாற்றிக்கொள்ள கால அவகாசம் தர வேண்டும். அம்மாதிரி, பெயரையும் விதிமுறைகளையும் பதிவாளரிடம் சென்று மாற்றிக்கொண்டவர்கள் மட்டுமே இது போன்ற பிரச்னைகளுக்காக நீதிமன்றத்தை அணுகலாம்.

  • சங்கங்களில் பெயர்களில் உள்ள சாதிப் பெயரை நீக்கி, குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தங்கள் சங்கத்தில் இணைய முடியும் என்ற விதிகளை மாற்ற வேண்டும். அவ்வாறு திருத்தம் செய்யாத சங்கங்களின் செயல்பாடுகளை சட்டவிரோதம் என அறிவித்து, அவற்றின் பதிவை பதிவுத்துறை ஐ.ஜி. ரத்து செய்ய வேண்டும். இந்தப் பணியை மூன்று மாதங்களுக்குள் துவங்கி, ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.

  • இந்த சங்கங்களாலோ, அறக்கட்டளைகளாலோ நடத்தப்படும் பள்ளிகள், கல்லூரிகள் போன்றவை நேரடியாகவோ, மறைமுகமாகவோ சாதிப் பெயர்களைக் கொண்டிருக்கக் கூடாது. சாதி சங்கங்கள் நடத்தும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்களில் பெயர்ப் பலகைகளில் சாதிப் பெயர்கள் இனி இடம்பெறக்கூடாது. கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நான்கு வாரங்களுக்குள் நீக்க வேண்டும்.

  • அவ்வாறு நீக்காத கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். அந்தக் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களை அங்கீகாரம் பெற்ற வேறு கல்வி நிறுவனங்களுக்கு அரசு மாற்ற வேண்டும். அரசு நடத்தும் கள்ளர் சீர்திருத்தப் பள்ளி, ஆதிதிராவிடர் நலப்பள்ளி போன்ற சாதிப் பெயர்களை உடனடியாக நீக்க வேண்டும். பொதுவான பெயரான அரசுப் பள்ளி என்ற பெயரே இடம்பெற வேண்டும். பள்ளிப் பெயர்களில் நன்கொடையாளர்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்.

என இந்த தீர்ப்பு கூறுகிறது.

பள்ளி, கல்லூரிகளில் சாதி பெயர்களை நீக்க உத்தரவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

சாதி சங்கங்கள் என்ன சொல்கின்றன?

தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான சாதிச் சங்கங்கள் இருக்கும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

"தமிழ்நாட்டில் முதன்முதலில் துவங்கப்பட்ட வெகு சில சாதி சங்கங்களில், எங்களுடையதும் ஒன்று. 1927ல் இதனைத் துவங்கினோம். இது எங்களுடைய கலாசார அடையாளம். பெயரை எப்படி மாற்ற முடியும்? தமிழ்நாடு அரசு இந்தத் தீர்ப்பை எப்படி செயல்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்கிறார், தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவரான கே.பி.கே. செல்வராஜ்.

தாங்கள் நீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கை வேறு, நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வேறு எனக்கூறிய அவர், சம்பந்தமே இல்லாத தீர்ப்பாக இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது என்றார்.

வேறு பல சாதி சங்கங்களும் அதிர்ந்து போயிருக்கின்றன. நாடார் சங்கங்களைப் பொறுத்தவரை ஞாயிற்றுக் கிழமையன்று சென்னையில்கூடி இந்த விவாகரம் குறித்து விவாதிக்கப் போவதாகச் சொல்கிறார் நாடார் மகாஜன சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி. கரிக்கோல்ராஜ்.

"தீர்ப்பைப் பற்றி எங்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. எங்கள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட 120 வருடங்கள் ஆகின்றன. அந்த காலகட்டத்தில் கிறிஸ்தவ அமைப்புகளும் சாதி அமைப்புகளும்தான் ஆங்காங்கே பள்ளிக்கூடங்களைத் துவங்கி கல்வி அளித்தன. அந்தப் பள்ளிக்கூடங்களில் சம்பந்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லா சாதியைச் சேர்ந்த மாணவர்களுக்கும் தான் கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டது" என்கிறார் அவர்.

இப்போது திடீரென இப்படி ஒரு உத்தரவைப் பிறப்பித்தால் என்ன சொல்வதெனத் தெரியவில்லை எனக்கூறும் அவர், இந்தியாவில் எங்கேயுமே ஜாதி பாகுபாடே இருக்காது என அரசு உத்தரவிட்டுவிட்டால், சங்கங்களைக் கலைத்துவிடுவதாக கூறினார்.

வரும் ஞாயிற்றுக் கிழமையன்று நடக்கவிருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்ப்பை மேல் முறையீடு செய்வதா, இல்லையா என்பதை முடிவு செய்வோம் என்கிறார் கரிக்கோல் ராஜ்.

பள்ளி, கல்லூரிகளில் சாதி பெயர்களை நீக்க உத்தரவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால், இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது மிகச் சிக்கலான காரியம் என்கிறார்கள் சில மூத்த வழக்கறிஞர்கள்.

இது குறித்து பிபிசியிடம் பேசிய பெயரைத் தெரிவிக்க விரும்பாத மூத்த வழக்கறிஞர், "அரசுப் பள்ளிக்கூடங்களில் சாதிப் பெயர்கள் இருந்தால், அவற்றை நீக்க அரசினால் முடியும். மற்ற தனியார் கல்வி நிலையங்களில் எப்படி அதனைச் செய்ய முடியும்?" என கேள்வியெழுப்புகிறார்.

ஒரு கல்வி நிலையத்தை துவங்குவதற்கு அரசு பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. பள்ளிக்கூடம் அமையும் இடம், பாதுகாப்பான கட்டடம், கல்வி கற்பிப்பதற்கான கட்டமைப்பு, ஆசிரியர்கள் எண்ணிக்கை போன்றவை குறித்துத்தான் இந்த விதிமுறைகள் பேசுகின்றன.

"ஆனால், பள்ளிக்கூடத்தின் பெயரில் சாதி இருக்கலாமா, கூடாதா என்பது குறித்துப் பேசவில்லை.'' என்கிறார் அந்த வழக்கறிஞர்.

தென் மாவட்டங்களில் பல வருடங்களுக்கு முன்பு அரசுப் பள்ளிக்கூடங்கள் இல்லாத நிலையில் பல சாதி சங்கங்கள்தான் பள்ளிக்கூடங்களைத் துவங்கின என கூறுகிறார் அவர்.

மேலும், விதிமுறைகளிலோ, சட்டத்திலோ இல்லாத ஒன்றை எப்படிச் செயல்படுத்த முடியும் என்றும் மேலும் இப்போது அந்தப் பெயர்களை நீக்க வேண்டும்; இல்லாவிட்டால் அங்கீகாரத்தை ரத்து செய்வோம் என்றால் அது நடைமுறையில் எந்த அளவுக்கு சாத்தியம் எனத் தெரியவில்லை என்றும் கூறுகிறார் வழக்கறிஞர்.

''பல நகரங்களில் பல சாதியினர் ஒன்று சேர்ந்து, வெறும் சாதிப் பெயர்களில் கல்லூரிகளை நடத்துகின்றனர். இப்போது அந்தப் பெயர்களை எப்படி மாற்ற முடியும்? அரசு நடத்தும் கள்ளர் பள்ளிகள், ஆதிதிராவிடர் பள்ளிகளின் பெயர்களை மாற்ற வேண்டும் என நீதிபதி சந்துரு பரிந்துரைத்தபோதே, அதற்கு கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது" என்கிறார் மூத்த வழக்கறிஞர்.

'நடைமுறைப்படுத்த வேண்டிய தீர்ப்பு'

ஆனால், இந்தத் தீர்ப்பு கட்டாயம் செயல்படுத்த வேண்டிய ஒரு உத்தரவு என்கிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் து. ரவிக்குமார்.

கல்வி நிறுவனங்களில் சாதி பெயர் இருக்கவே கூடாது என்பதை நான்காண்டுகளுக்கும் மேலாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்திவருவதாக அவர் குறிப்பிடுகிறார். நீதிபதி சந்துரு கமிட்டியும் அதை பரிந்துரைத்ததை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

"சுதந்திரத்துக்கு முன்பாக சாதியாகத் திரண்டுதான் கோரிக்கைகளை முன்னெடுத்தார்கள். ஆனால், சுதந்திரம் அடைந்த பிறகு, எல்லோரும் சமம் எனச் சொன்ன பிறகு இதுபோல சாதிச் சங்கங்களுக்கும் அவற்றின் செயல்பாடுகளுக்கும் என்ன இடம் இருக்கிறது?" என கேட்கிறார் அவர்.

சாதிய வேற்றுமையை களைவதை நோக்கி அரசு செயல்பட வேண்டும். அதைத்தான் அரசமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது என்கிறார் ரவிக்குமார்.

''அதுதான் சமூக நீதியை நோக்கிய பயணமாக இருக்க முடியும்."

இந்த உத்தரவு, அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்ட உத்தரவாக கருதும் ரவிக்குமார், இதை நிறைவேற்ற வேண்டிய கடமை தமிழ்நாட்டு அரசுக்கு இருக்கிறது என்றும் முதலில் அரசின் கல்வி நிறுவனங்களில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

ஆனால், நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளே செயல்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில், இந்த உத்தரவை செயல்படுத்துவதிலும் சுணக்கம் காட்டக் கூடாது என்கிறார் அவர்.

"நீதிபதி சந்துருவின் பரிந்துரைகள் மிக முக்கியமானவை. அவை ஏன் இன்னும் கிடப்பில் கிடக்கின்றன என்பது புரியவில்லை. முதலில் எல்லாத் தரப்பினருக்கும் கருத்தொற்றுமை இருக்கக்கூடிய விஷயங்களையாவது செயல்படுத்த வேண்டும். வேறு பல விஷயங்களில் தீவிரமாகச் செயல்படும் தமிழக அரசு சாதி தொடர்பான விஷயங்களில் தயங்குகிறது. அதனால்தான் அது தொடர்பான வன்முறைகள் அதிகரிக்கின்றன" என்கிறார் ரவிக்குமார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ce84080v1y5o

உள்ளாட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் - புதிய மசோதா ஒரு முன்மாதிரியா? அடையாள அரசியலா?

1 month 3 weeks ago

தமிழ்நாடு, உள்ளாட்சி அமைப்புகள், மாற்றுத்திறனாளிகள், மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சிராஜ்

  • பதவி, பிபிசி தமிழ்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத் திறனாளிகளை நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான சட்டத்திருத்த மசோதாக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி சட்டப் பேரவையில் தாக்கல் செய்திருந்தார்.

இதன் மூலம் 13,988 மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும், மாற்றுத்திறனாளிகளின் குரல், உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்க இது உதவும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

'தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்த வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தில் 4 மணிநேரம் பணி என்ற பழைய நடைமுறையைக் கொண்டு வர வேண்டும்' என்பன போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி, சமீப காலமாக மாற்றுத்திறனாளி சங்கங்கள் சார்பாகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பு அவர்களுக்கு எந்தளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும்?

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளி பிரதிநிதித்துவம்

தமிழ்நாடு, உள்ளாட்சி அமைப்புகள், மாற்றுத்திறனாளிகள், மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம்,TNDIPR

நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வகை செய்யும் சட்ட மசோதாக்களை, தமிழக சட்டப்பேரவையில் (ஏப்ரல் 16) அறிமுகம் செய்த முதலமைச்சர் ஸ்டாலின், "நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பு, இந்தத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 667 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால், இப்போது, இந்த நிதியாண்டில் 1,432 கோடியாக, அதாவது இரண்டு மடங்கு உயர்த்தியுள்ளோம். இந்தியாவிலேயே, அதிக எண்ணிக்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கும் மாநிலம் தமிழ்நாடுதான்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், அதாவது, கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் மாற்றுத் திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினர் ஆக்கப்படுகிறார்கள்" என்று தெரிவித்தார்.

இதன் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத் திறனாளிகளுடைய பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும், சிறப்பு உரிமைகளையும் சமமாகப் பெறுவதற்கு இந்தச் சட்ட முன்வடிவுகள் வழிவகுக்கும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

"இதை நடைமுறைப்படுத்த, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, தமிழ்நாடு நகர்ப்புற ஊராட்சிகள் சட்டம் 1998 ஆகியவற்றில் திருத்தங்களை முன்மொழிகிறேன். இந்த மசோதாக்கள் மூலம், மாற்றுத் திறனாளிகளின் குரல், உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிப்பது மட்டுமின்றி, அவர்கள் உள்ளாட்சி நிர்வாகத்தை வழிநடத்தும் வல்லமை பெற்றவர்களாகத் திகழ்வார்கள்" என்று கூறினார்.

தற்போது நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 35 பேர் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் என்றும், இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் சுமார் 650 மாற்றுத் திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 மாற்றுத் திறனாளிகள் கிராமப் பஞ்சாயத்துகளிலும், 388 மாற்றுத் திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும், மாவட்ட ஊராட்சிகளில் 37 மாற்றுத்திறனாளிகளும் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் சட்டப்பேரவையில் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளின் நிலை

தமிழ்நாடு, உள்ளாட்சி அமைப்புகள், மாற்றுத்திறனாளிகள், மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு, 2006ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை ஓர் ஒப்பந்தத்தை வெளியிட்டது

இந்த சட்ட மசோதாக்கள் குறித்துப் பேசிய, மாற்றுத்திறனாளிகளுக்கான டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக் நாதன், "நமது நாட்டில் பெரும்பாலான இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வசதிகள் இல்லை. ஒரு மாற்றுத்திறனாளி தனக்கு அரசின் சக்கர நாற்காலி வேண்டுமெனில், மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்குச் சென்று சான்றிதழ் பெற்று, மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்க வேண்டும். ஏதோவொரு குக்கிராமத்தில் வாழும் ஓர் ஏழை மாற்றுத் திறனாளிக்கு இது அவ்வளவு எளிதல்ல," என்று தெரிவித்தார்.

அரசியல் தலைவர்களோ அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களோ தங்கள் வலியைப் புரிந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதைவிட, தாங்களே அதிகாரத்திற்குச் சென்றால்தான் இத்தகைய கடினமான நடைமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று தீபக் நாதன் கருதுகிறார். ஆனால், "தேர்தல் அரசியலில் பங்கெடுக்கும் அளவுக்கு இங்கு மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்புகள் அல்லது வசதிகள் அமைவதில்லை. அப்படியிருக்க இந்தச் சட்டத்திருத்தம் மிகவும் பயனுள்ள ஒன்று" என்கிறார் தீபக் நாதன்.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு, 2006ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை ஓர் ஒப்பந்தத்தை வெளியிட்டது. இந்தியா உள்படப் பல நாடுகள் இதில் கையெழுத்திட்டன. மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு, அனைத்து விதமான மனித உரிமைகளும் அடிப்படை சுதந்திரங்களும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம்.

அதில் ஆர்டிகிள் 29, மாற்றுத்திறனாளிகளின் அரசியல் உரிமைகள் பற்றித் தெளிவாக விளக்குகிறது. ஒரு நாட்டில் நடக்கும் தேர்தலில் வாக்களிப்பது மட்டுமின்றி அதில் போட்டியிடுவதற்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

"ஆனால், இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் மாற்றுத்திறனாளிகள் போட்டியிடுவதற்கான சரிசமமான சூழல் உள்ளதா எனக் கேட்டால் சந்தேகமே. ஏனென்றால் இங்கு பலரும் வாழ்வாதாரத்திற்கே சிரமப்படுகிறார்கள் எனும்போது, பணம் செலவழித்து தேர்தலில் நிற்பதைக் கற்பனைகூடச் செய்ய முடியாது. அதனால்தான் தேர்தல் அரசியலில் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநித்துவம் குறைவாக உள்ளது," என்றார் தீபக் நாதன்.

மேற்கொண்டு பேசியவர், "சமூகத்தில் எங்களுக்குக் கிடைக்கும் மரியாதை குறித்துச் சொல்லவே தேவையில்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டு முதலமைச்சரிடம் கடந்த பிப்ரவரி மாதம் எங்கள் இயக்கத்தின் சார்பாகக் கோரிக்கை வைத்தோம். அது இவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றப்படும் என்று நினைக்கவில்லை" என்றும் குறிப்பிட்டார்.

'அடையாள அரசியல்'

தமிழ்நாடு, உள்ளாட்சி அமைப்புகள், மாற்றுத்திறனாளிகள், மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம்,@DEEPAK_TMN

படக்குறிப்பு,முதலமைச்சர் ஸ்டாலினுடன் டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக் நாதன்

ஆனால், 'மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய மேடை' எனும் அமைப்பின் செயல் தலைவர் நம்புராஜன், தமிழக அரசின் இந்த மசோதாக்கள் 'வெறும் அடையாள அரசியல்' என்று விமர்சிக்கிறார்.

"இங்கு பல மாற்றுத்திறனாளிகள் வேலையின்றி, வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்தியாவிலேயே, அதிக எண்ணிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குகிறோம் என முதலமைச்சர் கூறுகிறார். அந்த மாதாந்திர உதவித்தொகை 1500 ரூபாய் மட்டுமே.

அதை உயர்த்திக் கொடுங்கள் என மாற்றுத்திறனாளிகள் நடத்தும் போராட்டங்கள் அவர்களுக்குத் தெரியவில்லை. நூறு நாள் வேலைத் திட்டத்தில் முன்பு 50 சதவிகித பணி, 4 மணிநேரம் வேலை என்று இருந்த நடைமுறையை மாற்றிவிட்டு, 8 மணிநேரப் பணி, நாள் முழுவதும் பணித்தளத்தில் இருக்க வேண்டும் என்ற 2024ஆம் ஆண்டு தமிழக ஊரக வளர்ச்சித் துறையின் உத்தரவை அமல்படுத்தினார்கள். அதை ரத்து செய்யக் கோரிக்கை வைத்தோம். அதையும் கண்டுகொள்ளவில்லை," என்று குற்றம் சாட்டுகிறார் நம்புராஜன்.

கடந்த ஜனவரி மாதம் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் சார்பில் உதவித்தொகையை அண்டை மாநிலங்களில் வழங்குவது போல் அதிகபட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தில் 4 மணிநேரம் பணி என்ற பழைய நடைமுறையைக் கொண்டு வரவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.

"எங்களது போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கான ஓர் உத்தியாகவே இதைப் பார்க்கிறேன். எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 22ஆம் தேதி, சென்னையில் முற்றுகைப் போராட்டம் நடத்தவுள்ளோம். உள்ளாட்சிகளில் நியமன உறுப்பினர் என்பது உரிமை அடிப்படையில் வழங்கப்பட்ட ஒன்றாகத் தெரியவில்லை, பச்சாதாப அடிப்படையில் வழங்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது" என்று கூறுகிறார் நம்புராஜன்.

ஆனால், நம்புராஜனின் கருத்தை மறுக்கும் டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக் நாதன், "இதுவொரு தொடக்கம்தான். நான் முன்பே கூறியது போல, நாங்கள் அதிகாரத்திற்குச் சென்றால்தானே, எங்களுக்கான அரசியலைப் பேச முடியும். அதற்கான ஒரு வழியாகத்தான் இதைப் பார்க்கிறேன். மாற்றுத்திறனாளிகளுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் குறித்த விவகாரத்தில், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் இந்த மசோதாக்களைக் கொண்டு வந்துள்ளது.

இது நிச்சயம் அடையாள அரசியலாக இருக்காது. அதை உறுதி செய்யும் விதமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எங்கள் அடுத்த கட்ட பணி. உதவித்தொகையை உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை முதலமைச்சரிடம் வலியுறுத்தினேன். அவர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது," என்கிறார்.

இந்தியாவில் முதல் முறையா?

தமிழ்நாடு, உள்ளாட்சி அமைப்புகள், மாற்றுத்திறனாளிகள், மு.க.ஸ்டாலின்

படக்குறிப்பு,'மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய மேடை' அமைப்பின் செயல் தலைவர் நம்புராஜன்

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரதிநிதித்துவம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டிருக்கும் இந்த மசோதா, இந்தியாவுக்கு புதிதல்ல.

கடந்த 2019ஆம் ஆண்டு, சத்தீஸ்கர் மாநிலத்தின் அப்போதைய அமைச்சரவை, '1993ஆம் ஆண்டு மாநில பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில்' ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தது.

அதன் மூலம் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் மாற்றுத்திறனாளி ஒருவர் உறுப்பினராக இருப்பது கட்டாயமாக்கப்பட்டது. தேர்தல் செயல்முறை மூலம் எந்த மாற்றுத்திறனாளியும் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், அரசாங்கம் ஒருவரைப் பரிந்துரைக்க வேண்டும். உள்ளூர் நிர்வாக அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதே இந்த முயற்சியின் நோக்கம் என சத்தீஸ்கர் அரசு கூறியது.

இந்த நடைமுறை இப்போதும் முழுமையாகச் செயல்பாட்டில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

"இவ்வாறு நியமன உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கு எத்தகைய அதிகாரங்கள் வழங்கப்படும், இதனால் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் என்ன மாற்றம் வரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்கிறார் மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய மேடையின் செயல் தலைவர் நம்புராஜன்.

"எங்களுக்கு அரசியல் பிரதிநித்துவம் வேண்டும்தான். ஆனால், முதலில் வாழ்வாதாரம் குறித்த சிக்கல்களைப் பார்க்க வேண்டும் அல்லவா? வெறும் வயிற்றில் அரசியல் செய்ய முடியாதே" என்கிறார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/crld2rngd01o

திமுகவின் 4 ஆண்டு கால ஆட்சியில் கோயிலுக்கு சொந்தமான ரூ.7,850 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

1 month 3 weeks ago
திமுகவின் 4 ஆண்டு கால ஆட்சியில் கோயிலுக்கு சொந்தமான ரூ.7,850 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

19L-7.jpg

சென்னை: திமுகவின் 4 ஆண்டு கால ஆட்சியில் கோயிலுக்கு சொந்தமான ரூ.7,850 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் ஆரணி சேவூர் ராமசந்திரன் (அதிமுக) பேசும்போது, மீட்கப்பட்ட திருக்கோயில் நிலங்கள், இன்றும் கோயில் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்படாமல் உள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் கோயில் யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது இது நிறுத்தப்பட்டு விட்டதால் பல யானைகள் இறந்துள்ளது என்றார்.

இதற்கு பதில் அளித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறும்போது, கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் ரூ.2800 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மட்டுமே மீட்கப்பட்டது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.7,850 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.450 கோடி மதிப்பிலான 22 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கோயில் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு ஆண்டுக்குள் ரூ.5,000 ஆயிரம் கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் கட்டாயம் மீட்கப்படும். தமிழகத்தில் உள்ள திருக்கோயில்ல்களில் 28 யானைகள் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும் பணியில் ஈடுபடுகிறது. அனைத்து யானைகளுக்கும் குளியல் தொட்டி அந்தந்த கோயில்களில் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் யானைகளுக்கு புத்துணர்வு கிடைக்கும்.

மேலும், மாதம் 2 முறை வனத்துறை குழு மருத்துவ குழு இணைந்து யானைகளுக்கு உடல் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யானைகள் நடைப்பயிற்சி செய்யும் அளவிற்கு திருக்கோயில்களிலேயே பாதை அமைத்து யானைகளின் நலன் காக்கப்பட்டு வருகிறது. அதேபோல், இறந்து போன 10 யானைகளின் நினைவாக யானைகள் மண்டபத்தை கட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. திருத்தணியில் யானை மண்டபம் இந்த மாத இறுதியில் திறந்து வைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பதிக்கு நிகராக திருசெந்தூர் மாறும்..
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் நேற்று கூறும்போது, கடந்த ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.22 கோடியுடன் கூடுதலாக ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிந்து திருசெந்தூர் பக்தர்கள் தங்கும் விடுதி ஓராண்டுக்கு முன்பே பயன்பாட்டுக்கு வந்து விட்டது. திருச்செந்தூர் கோயிலுக்கு பெருந்திட்ட பணிகளுக்கு அனுமதி பெற்று 440 கோடி ரூபாய் அளவுக்கு திருப்பதிக்கு நிகராக திருச்செந்தூரை வடிவமைக்கும் சிற்பி முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று கூறினார்.

https://www.dinakaran.com/dmk_4-yearrule_asset_recovery_ministersekarbabu/

துரை வைகோ Vs மல்லை சத்யா: வைகோ கண்டித்தது ஏன்? ம.தி.மு.க-வில் என்ன நடக்கிறது?

1 month 3 weeks ago

மல்லை சத்யா, துரை வைகோ, மதிமுக

பட மூலாதாரம்,MALLAI C E SATHYA

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

'மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்' எனக் கூறி, அக்கட்சியின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

அந்த தீர்மானத்துக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவுடன் மோதல் போக்கைத் தொடர்வதால் சத்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, மல்லை சத்யாவின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ம.தி.மு.க-வில் என்ன நடக்கிறது?

தமிழ்நாட்டில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, 'மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு கட்சியில் பொறுப்பு வழங்க வேண்டும்' என்ற குரல்கள் எழுந்தன.

ஆனால், 'துரை வைகோவுக்கு கட்சியில் பொறுப்பு வழங்குவதை தான் ஏற்கவில்லை' என செய்தியாளர்களிடம் வைகோ தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ஆம் தேதி மதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள், உயர்நிலைக் குழு கூட்டத்தில் கட்சியின் தலைமை நிலைய செயலாளராக துரை வைகோ தேர்வு செய்யப்பட்டார். தற்போது அவர் முதன்மைச் செயலாளராக உள்ளார்.

துரை வைகோவுக்கு கட்சிக்குள் எதிர்ப்பு

வைகோ, மல்லை சத்யா, மதிமுக

பட மூலாதாரம்,MALLAI C E SATHYA

இதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 106 பேர் பங்கேற்றனர். இதில் 104 பேர் துரை வைகோவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக அறிவிக்கப்பட்டது. 'இவ்வாறு தேர்வு செய்யப்பட்டது வாரிசு அரசியல் இல்லை' என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விளக்கம் அளித்தார்.

'ஒருவரை திணிப்பதுதான் வாரிசு அரசியல். தொண்டர்களின் விருப்பப்படி அவருக்குப் பதவி வழங்கப்பட்டது' என்றும் அவர் தெரிவித்தார்.

வைகோவின் முடிவை எதிர்த்து மதிமுக இளைஞரணி செயலாளராக இருந்த கோவை ஈஸ்வரன் பதவி விலகினார்.

மதிமுக அவைத் தலைவராக இருந்த திருப்பூர் துரைசாமி, தனது விலகலுக்கு துரை வைகோவின் வருகையை ஒரு காரணமாக முன்வைத்திருந்தார்.

மல்லை சத்யாவுக்கு எதிராக தீர்மானம்

மல்லை சத்யா, மதிமுக

பட மூலாதாரம்,MALLAI C E SATHYA

படக்குறிப்பு,மல்லை சத்யாவுக்கும் துரை வைகோவின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் தொடங்கியுள்ளது

இதன் தொடர்ச்சியாக, தற்போது மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும் துரை வைகோவின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் தொடங்கியுள்ளது.

கடந்த 12-ஆம் தேதி மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்ற மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில், நிர்வாகிகள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி சிலர் வாக்குவாதம் செய்தனர். அப்போது கூட்டத்தில் இருந்து துரை வைகோ வெளியேறினார்.

பொதுக்குழுவில் பேசிய வைகோ, "குடும்பத்துக்குள் சண்டை வருவது இயல்பு. ராமதாஸ் குடும்பத்துக்குள்ளேயே மோதல் வந்துவிட்டது. கண்ணாடியில் விரிசல் விழுந்தால் ஒட்ட வைக்க முடியாது. தண்ணீரில் விரிசல் விழுந்தால் தானாக சேர்ந்துவிடும்" எனக் கூறினார்.

"நானும் சத்யாவும் கண்ணாடியல்ல, ஓடும் தண்ணீர்" எனவும் வைகோ குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து திருச்சியில் நடைபெற்ற மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில், 'கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்' எனக் கூறி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

சர்ச்சையை கிளப்பிய பதிவு

இந்தநிலையில், மல்லை சத்யாவுக்கு எதிராக ம.தி.மு.க-வின் முன்னாள் மாணவரணி துணைச் செயலாளர் சத்தியகுமரனின் முகநூல் பதிவு கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

'ம.தி.மு.கவில் வைகோவுக்கு அடுத்தபடியாக துரை வைகோ மட்டுமே அடுத்த பரிணாமம். இதை ஏற்பவர்கள் கட்சியில் இருக்கலாம். இதற்கு மறுப்பு தெரிவிப்பவர்கள் உடனே வெளியேறலாம்' எனக் கூறியிருந்தார்.

துரை வைகோ, மதிமுக

பட மூலாதாரம்,DURAI VAIKO

'ம.தி.மு.க-வில் 30 ஆண்டுகள் அல்ல, 300 ஆண்டுகள் உழைத்திருந்தாலும் இதனை ஏற்க வேண்டும். இது துரை வைகோ காலம்' எனவும் அவர் பதிவிட்டிருந்தார். மல்லை சத்யாவை மையமாக வைத்து இவ்வாறு கூறியுள்ளதாக ம.தி.மு.க வட்டாரத்தில் பேசப்பட்டது.

இந்தநிலையில், தனது முகநூல் பக்கத்தில் ''ம.தி.மு.க-வில் 32 ஆண்டுகள் உழைத்ததற்கு நம்பிக்கை துரோகி உள்பட பல விருதுகளை எனக்குத் தந்துள்ளனர்'' எனப் பதிவிட்டுள்ளார் மல்லை சத்யா.

'வைகோவின் இதயத்தில் இருந்து நீக்க முடியாது'

திருச்சி ம.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்துப் பதில் அளித்துள்ள மல்லை சத்யா, 'எனக்கு எதிராக சிலர் தீர்மானம் கொண்டு வரலாம். ஆனால், வைகோவின் இதயத்தில் இருந்து என்னை நீக்க முடியாது' எனக் பதிவிட்டுள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னையில் சுவர் விளம்பரங்கள் மற்றும் அழைப்பிதழ்களில் மல்லை சத்யாவின் பெயர் புறக்கணிக்கப்படுவதாகவும் ம.தி.மு.க-வை விட்டு சீனியர்கள் சிலர் வெளியேறியது போல சத்யாவும் வெளியேற வேண்டும் என துரை வைகோ தரப்பினர் விரும்புவதாகவும் சத்யாவின் ஆதரவாளர் ஒருவர், பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"கட்சியில் தகுதி அடிப்படையில் பொறுப்புக்கு வருவதை சிலர் விரும்பவில்லை. கட்சி நிகழ்ச்சிகளில் மல்லை சத்யா சிரித்தால் கூட அதைக் குற்ற நிகழ்வாக கருதுகின்றனர்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

வைகோவின் கண்டனம்

திருச்சியில் மல்லை சத்யாவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கண்டித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

''சில மாவட்டக் கழகங்கள் கூட்டத்தைக் கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. கட்சியின் கட்டுப்பாட்டுக்கு எதிராக இத்தகைய கூட்டங்களை நடத்துவது, தீர்மானங்களை நிறைவேற்றுவது போன்றவை கூடாது'' என அறிவுறுத்தப்படுவதாக வைகோ தெரிவித்துள்ளார்.

வரும் 20 ஆம் தேதியன்று ம.தி.மு.க நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறும் எனவும் வைகோ அறிவித்துள்ளார்.

மல்லை சத்யா, வைகோ, மதிமுக

பட மூலாதாரம்,MALLAI C E SATHYA

படக்குறிப்பு,'வைகோவின் இதயத்தில் இருந்து என்னை நீக்க முடியாது' என மல்லை சத்யா தெரிவித்துள்ளார்

"மல்லை சத்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஏன்?" என அக்கட்சியின் மாநில மாணவரணி முன்னாள் துணை அமைப்பாளர் சத்தியகுமாரனிடம் பிபிசி தமிழ் பேசியது.

"மல்லை சத்யாவின் கட்சிப் பணியை யாரும் மறுக்கவில்லை. அதேநேரம், தொண்டர்கள் அறிவுறுத்தியதால்தான் கட்சிப் பணிக்கு துரை வைகோ வந்தார். கட்சிக்கு எதிராகவும் பொதுக்குழுவுக்கு எதிராகவும் மல்லை சத்யா தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்" எனக் கூறினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் மறைவு தொடர்பான நிகழ்வில் கட்சிக்கு எதிராக மல்லை சத்யா செயல்பட்டதாகவும் அவர் விமர்சித்தார்.

"திராவிடர் கழகத் தலைவர் வீரமணியுடன் சென்று குமரி அனந்தனுக்கு வைகோ இறுதி மரியாதை செலுத்தினார். அப்போது வைகோவுடன் செல்லாமல் மல்லை சத்யா தனியாக சென்று அஞ்சலி செலுத்திவிட்டு ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்தார்" என சத்தியகுமாரன் தெரிவித்தார்.

"ஒரு நிகழ்வு தொடர்பாக பொதுச் செயலாளர் பேசிவிட்டால் வேறு யாரும் பேசக் கூடாது. ஆனால், கட்சியின் சட்டவிதிகளுக்கு மாறாக அவரது செயல் உள்ளது. கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்" எனவும் அவர் தெரிவித்தார்.

துரை வைகோ, மதிமுக

பட மூலாதாரம்,DURAI VAIKO

படக்குறிப்பு,துரை வைகோவை கட்சியில் முன்னிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் துரைசாமி, கோவை ஈஸ்வரன் ஆகியோர் கட்சியிலிருந்து விலகினர்

அதேநேரம், "கடந்த மூன்று ஆண்டுகளாக கட்சிப் பணிகளில் மல்லை சத்யா போதிய ஆர்வம் காட்டவில்லை" எனக் கூறுகிறார், ம.தி.மு.க சீனியர் நிர்வாகி ஒருவர்.

பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய அவர், "வைகோ தொடர்பாக சத்யாவின் ஆதரவாளர் ஒருவர் முகநூலில் அவதூறான கருத்தை வெளியிட்டார். இதற்கு சத்யா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதுதான் பிரச்னைக்கு காரணம்" எனக் கூறினார்.

அடுத்ததாக, ஈ.வெ.ரா.பெரியார், அண்ணா, வைகோ வரிசையில் சத்யாவின் படத்தை ஒருவர் பகிர்ந்ததாகக் கூறிய அவர், "இதற்கும் சத்யா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இவையெல்லாம் குழப்பத்தை ஏற்படுத்தும் செயல்களாக இருந்தன"எனத் தெரிவித்தார்.

"வைகோவுக்கு உடல்நலம் குன்றிப் போன பிறகு கட்சியை வளர்ப்பதற்கு துரை வைகோ உழைத்து வருகிறார். இந்தநிலையில் சிலரின் தூண்டுதலில் சத்யா செயல்படுவதாக தோன்றுகிறது" எனவும் அவர் தெரிவித்தார்.

ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை மல்லை சத்யா முற்றிலும் மறுத்தார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இதுதொடர்பாக, சமூக வலைதளத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன். அதற்கு மேல் கூறுவதற்கு எதுவும் இல்லை" எனக் கூறினார்.

"இந்த விவகாரம் தொடர்பாக எந்தக் கருத்தையும் கூறக் கூடாது எனக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துவிட்டார். வரும் ஏப்ரல் 20 ஆம் தேதியன்று நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதன்பிறகு பேசுகிறேன்" என்று மட்டும் அவர் பதில் அளித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c807g8l2dvmo

Checked
Thu, 06/12/2025 - 11:09
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed