தமிழகச் செய்திகள்

TVK Karur Stampede - நீங்கள் செய்தது நியாயமா Vijay சார்?| Open Letter to தமிழக வெற்றிக் கழகம் விஜய்

1 month ago

தவெக தலைவர் விஜய் பிரசாரத்தை தொடங்கியதிலிருந்து, அவரையும், அவரது கட்சியின் செயல்பாடுகளையும் ஒரு ஊடகமா தொடர்ந்து பின் தொடர்ந்துட்டு வர்றோம். அசம்பாவிதம் நடந்த கரூர் பிரசாரத்தைலையும் விகடன் இருந்துச்சு. சம்பவம் நடந்த அன்னைக்கு, அந்த கூட்ட நெரிசல்ல எங்கள் நிருபர்களும் இருந்தாங்க. அதன் பிறகு களத்துக்கு போன எங்கள் செய்தியாளர்கள், இரண்டு நாட்களாக அங்கேயே தங்கி மக்களை சந்திச்சு பேசியிருக்காங்க. அதை பல காணொளிகளா பதிவு பண்ணி இருக்கோம். முதல்ல, இறந்துபோன 41 பேருக்கும் எங்களுடைய ஆழ் மனசுல இருந்து அஞ்சலிய செலுத்துறோம். கரூர் அசம்பாவிதத்தை முழுமையாக observe பண்ணோம் என்கிற அடிப்படையில், இந்த சம்பவத்துக்கு பிறகு விஜய் மற்றும் தவெக ஆற்றிய எதிர்வினைகள் குறித்து சில கேள்விகள் எங்களுக்கு இருக்கு. அந்த கேள்விகள்தான் இந்த காணொளி. எந்த முன்முடிவும் இல்லாம நாங்க இந்த கேள்விகள முன்வைக்கிறோம்.

கூட்ட நெரிசலுக்கு பொறுப்பு காவல்துறையா அல்லது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களா?

1 month ago

கரூர் தவெக பரப்புரை, கூட்ட நெரிசல், சட்டம், விசாரணை, காவல்துறை

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • மோகன்

  • பிபிசி தமிழ்

  • 1 அக்டோபர் 2025, 01:52 GMT

கரூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட 2 தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் மற்றும் இதர அமைப்புகள் நடத்தும் பொதுக் கூட்டங்களுக்கு தெளிவான விதிகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் வகுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

"ஒருநபர் ஆணையம் விசாரணையை அறிக்கை கிடைத்த பிறகு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்பது உறுதி செய்யப்படும்," எனத் தெரிவித்தார் ஸ்டாலின்.

கரூர் தவெக பரப்புரை, கூட்ட நெரிசல், சட்டம், விசாரணை, காவல்துறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெங்களூரு ஆர்சிபி வெற்றிக் கொண்டாடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்.

கரூரைப் போலவே, கடந்த ஜனவரியில் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் 37 பேரும் (பிபிசி புலனாய்வில் 82 பேர் பலியானது தெரியவந்தது) பெங்களூருவில் ஜூன் மாதம் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேரும் உயிரிழந்தனர்.

இதுபோன்ற பொது நிகழ்ச்சிகளில் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் பாதிப்புகளுக்கு யார் பொறுப்பு? கடந்த காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளில் யார்யார் தண்டிக்கப்பட்டார்கள்? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

கரூரில் என்னென்ன பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது?

கருர் கூட்ட நெரிசல் தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 105, 110, 125 பி, 223 மற்றும் தமிழ்நாடு பொதுச் சொத்து சேதம் மற்றும் இழப்பு தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பிரிவுகள் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது, அலட்சியத்தால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியது, சட்டப்பூர்வமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மீறியது போன்றவற்றை குறிக்கின்றன.

கரூர் தவெக பரப்புரை, கூட்ட நெரிசல், சட்டம், விசாரணை, காவல்துறை

பட மூலாதாரம், Getty Images

அனுமதி பெறும் நடைமுறை என்ன?

ஒரு கட்சி அல்லது அமைப்பு பொது நிகழ்ச்சி நடத்த விரும்புகிறதென்றால் அவர்கள் முதலில் விருப்பமான இடங்களைக் குறிப்பிட்டு காவல்துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஒருங்கிணைப்பாளர்கள் தரப்பிலிருந்து கொடுக்கப்பட வேண்டிய அடிப்படை தகவல்கள் என்னென்ன?

  • நிகழ்ச்சிக்கு எத்தனை பேர் வருவார்கள்?

  • நிகழ்ச்சிக்கு முடிவு செய்யப்பட்டுள்ள இடங்கள்

  • எந்த நேரத்திற்குள் நிகழ்ச்சி நடத்தப்படும்?

  • என்னென்ன வசதிகள் செய்து தரப்படும்?

  • எத்தனை வாகனங்கள் வரும், வாகனங்களுக்கான நிறுத்துமிடம் எங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது?

ஒவ்வொரு காவல்நிலையத்திலும் பார்ட் 4 என்கிற பதிவு பராமரிக்கப்படும். அதில் அந்த சரகத்திற்கு உட்பட்ட கடந்த கால நிகழ்வுகள் உள்ளிட்ட முழுமையான தகவல்கள் இருக்கும். அதன் அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர்கள் கேட்கின்ற இடத்தில் நிகழ்ச்சியை சுமூகமாக நடத்த முடியுமா என்பதை பொறுத்து இடம் தேர்வு செய்து அனுமதி வழங்கப்படும்.

பரப்புரையைத் தாண்டி பேரணி நடத்தப்படுகிறது என்றால் அதற்கு தனியாக அனுமதி பெற வேண்டும் என்கிறார் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கருணாநிதி.

"பேரணி எந்த இடத்தில் தொடங்கி எங்கு முடிவடைகிறது, எத்தனை மணிக்கு தொடங்கி எப்போது முடிவடையும், எந்த வழித்தடத்தில் பேரணி நடத்தப்பட உள்ளது, எத்தனை பேர் வர உள்ளார்கள்? என்பன போன்ற தகவல்களை வழங்க வேண்டும். காவல்துறை அந்த இடங்களின் தன்மை, போக்குவரத்து நெரிசல், பொதுமக்களுக்கான சாத்தியமான இடையூறுகள் போன்றவற்றை ஆராய்ந்து தான் அனுமதி வழங்கவோ அல்லது மறுக்கவோ செய்வார்கள்." என்றார் அவர்.

ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு என்ன?

நிகழ்ச்சிக்காக அனுமதி பெறுகிற போது ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளை முழுமையாக கடைபிடிப்பது ஒருங்கிணைப்பாளர்களின் பொறுப்பு என்கிறார் கருணாநிதி.

அரசியல் நிகழ்ச்சிகளுக்கு குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் வர வேண்டாம் என்பதை ஒருங்கிணைப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும், அதனை தீவிரமாக விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

"நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு தண்ணீர், உணவு, கழிப்பிடம், நிழற்குடை, போதுமான இடவசதிகள், நெரிசல் ஏற்படாத வண்ணம் கூட்டத்தை சமாளிக்க தன்னார்வலர்கள் போன்றவற்றை ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்." என்றார் கருணாநிதி.

ஒரே இடத்தில் அதிக அளவில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வெவ்வேறு இடங்களில் பெரிய திரைகள் அமைத்து ஒளிபரப்பு செய்வது, நேரலை செய்வது போன்ற ஏற்பாடுகளையும் ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொள்ளலாம் என்று சில பரிந்துரைகளையும் அவர் முன்வைத்தார்.

கரூர் தவெக பரப்புரை, கூட்ட நெரிசல், சட்டம், விசாரணை, காவல்துறை

பட மூலாதாரம், Karunanidhi

படக்குறிப்பு, ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கருணாநிதி

காவல்துறையின் பொறுப்பு என்ன?

நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவதோடு, தேவையான கட்டுப்பாடுகளை விதித்து முறையான பாதுகாப்பு வழங்குவது காவல்துறையின் முதன்மையான கடமை என்கிறார் கருணாநிதி.

காவல்துறையின் பொறுப்புகளை விளக்கிய அவர், "கூட்ட நெரிசல், பொதுமக்களுக்கு இடையூறு, அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுப்பது போன்றவை தான் காவல்துறையின் முதன்மையான பொறுப்புகள். நிகழ்ச்சி நடைபெறும் இடம் மட்டுமல்லாது அதனை ஒட்டியுள்ள இடங்களை ஆராய்வதும் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூட்டம் அதிகமாகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிப்பதும் காவல்துறையின் பணி" என்றும் தெரிவித்தார்.

நெரிசல் ஏற்பட்டால் யார் பொறுப்பு?

நெரிசல் ஏற்பட்டால் அதற்கு இரண்டு தரப்புக்குமே பொறுப்புண்டு என்கிறார் கருணாநிதி.

கடந்த கால கூட்ட நெரிசல் சம்பவங்களில் யாரும் தண்டிக்கப்பட்டதில்லை என்கிறார் ஓய்வு பெற்ற நீதிபதியான ஹரிபரந்தாமன்.

"நிகழ்ச்சி நடத்துவது என்பது இரு தரப்பின் பொறுப்பு என்கிறோமோ அதே போல நிகழ்ச்சியில் நெரிசல் ஏற்பட்டால் அதை இரு தரப்பின் தோல்வியாகவே பார்க்க வேண்டும்." என்று கூறுகிறார் கருணாநிதி.

வருகின்ற கூட்டத்திற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்யத் தவறினால் ஒருங்கிணைப்பாளர்கள் தான் பொறுப்பாவார்கள் எனக் கூறும் அவர் காவல்துறையும் தனக்கு பொறுப்பில்லை என்று தட்டிக்கழிக்க முடியாது என்கிறார்.

"காவல்துறைக்கு உளவு அறிக்கையின் மூலம் எத்தனை பேர் கூடுவார்கள் என்கிற கணிப்பு இருக்கும். அளவுக்கு அதிகமாக மக்கள் கூடுவார்கள் அல்லது கூடுகிறார்கள் என்று தெரிந்தால் காவல்துறை நிகழ்ச்சிக்கு முன்பாகவோ அல்லது நிகழ்ச்சியின்போதோ தடுத்து நிறுத்துவதற்கான அதிகாரம் உள்ளது," என்றும் அவர் தெரிவித்தார்.

இரு தரப்பிலிருந்தும் ஒலி பெருக்கிகள் மூலம் முறையான அறிவிப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கரூர் தவெக பரப்புரை, கூட்ட நெரிசல், சட்டம், விசாரணை, காவல்துறை

பட மூலாதாரம், Hariparanthaman

படக்குறிப்பு, ஓய்வு பெற்ற நீதிபதியான ஹரிபரந்தாமன்

விசாரணை எப்படி நடக்கும்?

கூட்ட நெரிசல் வழக்குகளை விசாரிப்பதும் குற்றத்தை நிரூபிப்பதும் கடினமானது என இருவரும் ஒப்புக் கொள்கின்றனர்.

ஆனால் முன்பிருந்ததைவிட விசாரணை தற்போது நவீனமடைந்துவிட்டது என்கிறார் கருணாநிதி, "நிகழ்ச்சி நடத்த யார் பெயரில் அனுமதி பெறப்படுகிறதோ, யார் முக்கிய ஒருங்கிணைப்பாளர்களாக உள்ளார்களோ அவர்களிடம் முதலில் விசாரணை நடத்தப்படும். அதோடு கூட்ட நெரிசல் எதனால் நடைபெற்றது, அதற்கு யார் காரணம், யாராவது ஒருவரின் குறிப்பிட்ட செயல் காரணமா என்கிற நோக்கிலும் விசாரணை நடத்தப்படும். நிகழ்ச்சியின் முழு காணொளி பதிவுகள் இப்போது கிடைக்கின்றன, நேரலை செய்யப்படுகிறது, சிசிடிவி காட்சிகள் உள்ளன, நேரடி சாட்சிகளின் பதிவுகள் உள்ளன. இவையெல்லாம் விசாரணையை எளிமையாக்கும்." என்று அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டிலும் அரசு மற்றும் தனியார் நடத்திய பல நிகழ்ச்சிகளில் கூட்ட நெரிசல் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன, ஆனால் யாரும் தண்டிக்கப்பட்டதில்லை என்கிறார் ஹரிபரந்தாமன்.

"சட்டப்பூர்வமாக பார்த்தால் கூட்ட நெரிசல் வழக்குகளும் சாலை விபத்து வழக்குகளைப் போன்றது தான். கடந்த ஆண்டு தான் மெரினாவில் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டன. ஆனால் யாரும் விசாரிக்கப்பட்டதாகவோ தண்டிக்கப்பட்டதாகவோ தெரியவில்லை. காவல்துறை பதிவு செய்துள்ள வழக்கில் அலட்சியம் தான் முக்கியமான குற்றச்சாட்டாக உள்ளது. ஆனால் அதனை நிரூபிப்பது கடினம்." என்றும் அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cly17055x1vo

'45 அடி உயரம்' - 9 பேர் இறந்த எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான விபத்தில் நடந்தது என்ன?

1 month ago

எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணியின் போது விபத்து; 9 தொழிலாளர்கள் பலி - என்ன நடந்தது?

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பணியில் ஈடுபட்டிருந்த 30க்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்

30 செப்டெம்பர் 2025

சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த போது முகப்பு சாரம் சரிந்து குறைந்தது 9 பேர் பலியாகி உள்ளனர்.

பிரதமர் மோதி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இறந்த தொழிலாளர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்

சுமார் 45 அடிக்கு மேல் பணி செய்து கொண்டிருக்கும்போது திடீரென சாரத்தின் ஒரு பகுதி சரிந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில், பணியில் ஈடுபட்டிருந்த 30க்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

என்ன நடந்தது?

பொன்னேரி அருகே வாயலூரில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அனல்மின் திட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் புதிய அலகு கட்டுமானத்தில் ராட்சத வளைவு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது ராட்சத வளைவு அமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, திடீரென சாரம் சரிந்து விழுந்தது. அதில், 9 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

பலரும் காயம் அடைந்துள்ள நிலையில், அவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக சிஐடியூ மாநில துணைத் தலைவர் விஜயன் பிபிசியிடம் பேசுகையில், " சுமார் 45 மீட்டர் உயரத்தில் வளைவு அமைக்கும் பணி நடைபெற்றது. ஒருபக்கம் பணிகள் நிறைவடைந்து மற்றொரு பக்கத்தில் பணி நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிலையில் தான், அந்த சாரம் ஒரு பக்கத்திலிருந்து சரிந்துவிட்டது. அதன் மேல் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் கீழே விழுந்துவிட்டனர். பாதுகாப்பு பெல்ட் அணிந்திருந்தும் அதனுடன் சேர்ந்தே விழுந்துவிட்டனர்." என்றார்.

ராதாகிருஷ்ணன்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ராதாகிருஷ்ணன்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) தலைவர் ராதாகிருஷ்ணன், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இங்கு மொத்தமாக 3,200 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலும் வட இந்திய தொழிலாளர்கள் தான். அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரியின் கருத்துப்படி 45 அடி உயரத்தில் பாதுகாப்பு உடை அணிந்து 10 பேர் பணியாற்றிக் கொண்டிருந்துள்ளனர். ஆனாலும், திடீரென சாரம் சரிந்து விழுந்ததால், இதுவரை 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக காவல்துறை, மருத்துவமனை நிர்வாகம் உள்ளிட்டோருடன் பேசி இருக்கிறோம். அடுத்ததாக BHEL நிறுவனத்திடம் தான் பேசி உள்ளோம். ஏனென்றால் அந்த நிறுவனம் தான் ஒப்பந்ததாரர்கள்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "இருவருக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் நலமாக உள்ளனர். மற்ற ஒன்பது பேர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன" என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

சம்பவ நடந்த இடத்தில் அனைத்து அதிகாரிகளும் இருப்பதாகவும் விபத்து குறித்து காவல்துறையினர் சார்பில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணியின் போது விபத்து; 9 தொழிலாளர்கள் பலி - என்ன நடந்தது?

முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோதி இரங்கல்

இந்த விபத்து குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "எண்ணூரில் பெல் (BHEL) நிறுவனம் மேற்கொண்டு வரும் மின் உற்பத்தி நிலையக் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பது பணியாளர்கள் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மின்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) தலைவர் ராதாகிருஷ்ணனையும் உடனே நேரடியாகச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கிடவும், அவர்களது உடலை அவர்களது சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆணையிட்டுள்ளேன்." என பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோதி தன் எக்ஸ் பக்கத்தில், இச்செய்தி அறிந்து வருத்தமடைந்ததாகவும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளார். சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து குணமடைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என மோதி தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c5yvl1lze3eo

சித்தி முன்னாடியே 2 கான்ஸ்டபிள்களும்.. நம்ம தமிழகத்தில் வேலியே பயிரை மேயுதே.. திமுக அரசுக்கு கண்டனம்

1 month ago

சித்தி முன்னாடியே 2 கான்ஸ்டபிள்களும்.. நம்ம தமிழகத்தில் வேலியே பயிரை மேயுதே.. திமுக அரசுக்கு கண்டனம்

HemavandhanaUpdated: Wednesday, October 1, 2025, 12:03 [IST]

Tiruvannamalai DMK Government

திருவண்ணாமலை: போதைப் பொருள், கள்ளச்சாராயம், பெண்கள் பாதுகாப்பு, லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும் என்று காவல் துறைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும், பெண்கள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது.. அந்தவகையில், திருவண்ணாமலை சம்பவம் பேரதிர்ச்சியை தந்து வருகிறது.. அதுவும், வேலியே பயிரை மேய்வதும், வடமாநிலங்களை போலவே நம்முடைய தமிழ்நாட்டிலும் இத்தகைய பயங்கரங்கள் நடப்பதும், மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது.

நேற்று விடிகாலை திருவண்ணாமலை ரிங்ரோடு பகுதியில் இருவரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுமார் 3 மணியளவில் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து திருவண்ணாமலைக்கு மினி வேன் ஒன்று, வாழைத்தார்களை ஏற்றி வந்துள்ளது..

திருவண்ணாமலை கான்ஸ்டபிள்கள்

இந்த மினிவேனை ஏந்தல் கிராம சந்திப்பு பகுதியில் நிறுத்திய கான்ஸ்டபிள்கள் இருவரும், அதில் சோதனை மேற்கொண்டனர். அதில் 20 மற்றும் 45 வயதில் 2 பெண்கள் இருந்ததை கண்டு அவர்கள் யார் என்று விசாரித்திருக்கிறார்கள்..

அப்போது இருவரும் ஆந்திரா சித்தூரை சேர்ந்த மகளும், சித்தியும் (தந்தையின் இரண்டாவது மனைவி) என்பதும், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு, தன்னுடைய உறவினர் மினிவேனில் வந்துள்ளதும் தெரியவந்தது.

ஆனாலும், 2 பெண்களையும் விசாரணை என்ற பெயரில் நைசாக பேசி, ஒதுக்குப்புறமிருந்த தோப்பு பகுதிக்கு கான்ஸ்டபிள்கள் இருவரும் அழைத்து சென்றுள்ளனர்.. அங்கே சித்தி கண்முன்னேயே 20 வயது பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரமும் செய்துள்ளனர்.. இதில் அந்த பெண் அங்கேயே மயங்கிவிழ, சித்தி அலறி கூச்சலிட, அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து பெண்ணை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

வேலியே பயிரை மேய்ந்தது

இதையடுத்து, மருத்துவமனையில் இளம்பெண் அளித்த புகாரின் பேரில் சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகிய இரண்டு கான்ஸ்டபிள்களும் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம் இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, இருவருமே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் திருவண்ணாமலை மட்டுமல்லாமல் தமிழகத்துக்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகளும் கையில் எடுத்துள்ளனர்..

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர்களாலே, பெண்ணுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு இந்த பொம்மை முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார்? என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சித்தி கண்முன்னேயே

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில், "திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப் பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோர், இளம் பெண்ணை அவர் சித்தி கண் முன்னரே கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

பெண்கள் பாதுகாப்பின்மை எனும் அவல நிலையின் கொடூர உச்சம் இது. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர்களாலே, பெண்ணுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு இந்த பொம்மை முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார்?

இந்த வெட்கக்கேடான நிலைக்கு பொம்மை முதல்வரின் திமுக அரசு தலைகுனிய வேண்டும். மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய காவல்துறையிடம் இருந்தே தங்களை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு பெண்களைத் தள்ளிய ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், காமுகர்களாக மாறிய காவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

பாஜக, அதிமுக கடும் கண்டனம்

அதேபோல, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், "ஆளும் திமுக ஆட்சியில் தமிழக பெண்களுக்கும் பாதுகாப்பில்லை. பிற மாநில பெண்களும் இதில் விதிவிலக்கல்ல என்பதை மீண்டும் ஒரு முறை உணர்த்தும் இச்சம்பவம் தமிழகத்தின் மீதான அழியா களங்கம்.

திமுக ஆட்சியில் நாளுக்கு நாள் பெருகி வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் ஒருபுறம் நம்மை கவலையில் ஆழ்த்துகின்றன. குற்றங்களை தடுக்க வேண்டிய போலீசாரே காமுகர்களாக உருமாறி வருவது மறுபுறம் நம்மை பயமுறுத்துகிறது. இப்படி மக்களை பதற்றத்திலும் அச்சத்திலும் நிலைகுலைய வைப்பது தான் திராவிட மாடலா?" என்று நறுக்கென கேள்வி எழுப்பியிருக்கிறார்.

திமுக அரசுக்கு கண்டனம்

அதேபோல முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த திருவண்ணாமலை சம்பவத்துக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், "போலீசாரே பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அளவுக்கு பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலைக்கு தமிழக சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சகோதரிகளை விட குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்குடனே செயல்பட்டு வரும் கையாலாகாத தி.மு.க. அரசால் தமிழக பெண்கள் வெளியே செல்வதற்கே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. குற்றம் செய்பவர்களுக்கு எந்த பயமும் இல்லை என்பதற்கு காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்" என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

https://tamil.oneindia.com/news/thiruvannamalai/tiruvannamalai-two-policemen-arrested-for-lorry-girl-incident-and-edappadi-palanisamy-annamalai-na-739789.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

டிஸ்கி

தமிழக பொலிசார் எவ்வளவு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர்கள் என்பதற்கு இன்னொரு உதாரணம்.

இதை கண்டிக்கும் தலைவர்கள் அரசியல்விளையாட்டு விளையாடுகிறார்கள்.

‘சிஎம் சார், என்னைப் பழிவாங்க வேண்டுமானால்...’ - கரூர் சம்பவத்தில் மவுனம் கலைத்த விஜய்

1 month ago

சென்னை: கரூர் சம்பவம் தொடர்பாக 3 நாட்கள் கழித்து மவுனம் கலைத்துள்ள தவெக தலைவர் விஜய், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, கரூருக்கு நேரில் வருவேன் என்றார். மேலும், இந்தச் சம்பவத்தில் தன்னைப் பழிவாங்க வேண்டுமென்றால், தன்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம், தனது கட்சித் தொண்டர்களை ஏதும் செய்ய வேண்டாம் என்று தமிழக முதல்வருக்கு வெளிப்படையாக சவால் விட்டுள்ளார். மேலும், முன்பைவிட வலுவாக அரசியல் பயணம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இன்று மதியம் 3 மணிக்கு மேல் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “அனைவருக்கும் வணக்கம். என் வாழ்க்கையில் இது மாதிரியான வலி மிகுந்த நிகழ்வை நான் சந்தித்ததே இல்லை. மனது முழுவதும் வலி மட்டுமே இருக்கிறது.

இந்தச் சுற்றுப்பயணத்தில் மக்கள் என்னைப் பார்க்க வருகிறார்கள். அதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது. அது அவர்கள் என் மீது வைத்துள்ள பாசமும், அன்பும் . அதற்கு நான் மிகுந்த கடமைப்பட்டிருக்கிறேன். அதனால் தான், அவர்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்துவிடக் கூடாது என்ற எண்ணம் என் மனதில் ஆழமாக இருக்கும்.

அரசியல் காரணங்களை ஒதுக்கிவைத்துவிட்டு மக்கள் பாதுகாப்புக்கான இடங்களை கேட்பதில் கவனமாக இருப்போம். ஆனால், நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. நானும் மனிதன் தானே. அப்படி ஒரு சம்பவம் நடந்தபோது எப்படி அந்த இடத்தை விட்டு வர முடியும்?. நான் திரும்ப அங்கு சென்றால், அது வேறு சில அசம்பாவிதங்கள், பதற்றங்களை ஏற்படுத்தக் கூடும். அதனால் தான் திரும்பிச் செல்லவில்லை.

இந்தத் தருணத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த உயிரிழப்புகளுக்கு நான் என்ன ஆறுதல் சொன்னாலும் அது ஈடாகாது. காயமடைந்தவர்கள் சீக்கிரம் குணமடைந்து வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். உங்கள் எல்லோரையும் நான் சந்திக்கிறேன். இந்த நேரத்தில் எங்களுடைய வலிகளை புரிந்து கொண்டு எங்களுக்காகப் பேசிய அரசியல் கட்சிகள், தலைவர்களுக்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிட்டத்தட்ட 5 மாவட்டங்களில் நான் பிரச்சாரம் செய்துள்ளேன். ஆனால், கரூரில் மட்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும். மக்களுக்கு எல்லாம் உண்மையும் தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கரூரைச் சேர்ந்த மக்கள் உண்மையைச் சொல்லும் போது, கடவுளே நேரில் வந்து இறங்கி உண்மையைச் சொல்வது போல் இருந்தது. சீக்கிரமே எல்லா உண்மையும் வெளியே வரும்.

எங்களுக்குத் தரப்பட்ட இடத்தில் நாங்கள் பேசினோம். அதைத் தவிர நாங்கள் வேறேதும் செய்யவில்லை. ஆனால் எங்கள் கட்சியின் தோழர்கள், நிர்வாகிகள் மீது எஃப்ஐஆர் போட்டு கைது செய்கிறார்கள். சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்தோரையும் கைது செய்கிறார்கள்.

சிஎம் சார் உங்களுக்கு என்னை ஏதாவது பழிவாங்கும் எண்ணம் இருந்திருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நான் ஒன்று வீட்டில் இருப்பேன். இல்லாவிட்டால் ஆஃபீஸில் இருப்பேன். நண்பர்களே, தோழர்களே நம் அரசியல் பயணம் இன்னும் வலுவாக இருக்கும். இன்னும் தைரியத்தோடு தொடரும். வீடியோ:


‘சிஎம் சார், என்னைப் பழிவாங்க வேண்டுமானால்...’ - கரூர் சம்பவத்தில் மவுனம் கலைத்த விஜய் | Vijay releases video regarding Karur Stampede: Challenges CM Stalin - hindutamil.in

கரூர் கூட்ட நெரிசல்: அரசியல், சட்டம், கட்சி ரீதியாக விஜய்க்கு காத்திருக்கும் சவால்கள்

1 month ago

தவெக, விஜய், கரூர் பரப்புரை, விஜய் பரப்புரை, கரூர் கூட்ட நெரிசல்

பட மூலாதாரம், TVK IT Wing Official/X

கட்டுரை தகவல்

  • விஜயானந்த் ஆறுமுகம்

  • பிபிசி தமிழ்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

கரூரில் விஜய் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தவெக மாவட்ட, மாநில நிர்வாகிகள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுவிட்டார்.

கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தவெக வழக்கறிஞர்கள் முறையிட்டுள்ளனர்.

"வரும் நாட்களில் பொதுமக்களை எதிர்கொள்வதில் பல்வேறு சிக்கல்களை விஜய் எதிர்கொள்ள நேரிடும்" என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தவெகவின் அரசியல் பயணத்தில் கரூர் சம்பவத்தின் தாக்கம் எப்படி இருக்கும்?

கரூர் வழக்கு - என்ன நடந்தது?

கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய், கடந்த சனிக்கிழயமைன்று (செப்டெம்பர் 27) பரப்புரை மேற்கொண்டார். அவர் பேசி முடித்துவிட்டுக் கிளம்பியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் சிக்கிக் கொண்டனர். அதில், 41 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் அறுபதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட தவெக நிர்வாகிகள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மதியழகன் நேற்றைய தினம் (29/09/2025) கைது செய்யப்பட்டுவிட்டார்.

ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையமும் விசாரணையை தொடங்கியுள்ளது. பரப்புரைக் கூட்டம் நடைபெற்ற இடம், கரூர் அரசு மருத்துவமனை, உயிரிழந்தவர்களின் வீடுகள் ஆகியவற்றுக்குச் சென்று அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தியுள்ளார்.

அதேநேரத்தில், சி.பி.ஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தவெக தரப்பில் முறையிடப்பட்டுள்ளது.

விஜய் பிரசாரம் செய்ய தடை விதிக்குமாறு கோரியும் ஒரு தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது.

தவெக, விஜய், கரூர் பரப்புரை, விஜய் பரப்புரை, கரூர் கூட்ட நெரிசல்

'தவெக அணுகுமுறையில் தோல்வி' - ஷ்யாம்

தவெகவின் அணுகுமுறையில் தோல்வி ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர் "துயர சம்பவத்துக்குப் பிறகு ஒரு கட்சி எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பது முக்கியம். ஆளும்கட்சி என்பதால் களத்துக்கு தி.மு.க வந்துவிட்டது. பா.ஜ.க, அ.ம.மு.க, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளும் சம்பவ இடத்துக்கு வந்துவிட்டன" என கூறுகிறார்.

"சசிகலாவும் கூட பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். ஆனால், மக்களை சந்திப்பது தொடர்பாக தவெக தலைமை மற்றும் நிர்வாகிகளிடம் எந்தப் பதிலும் இல்லை" எனவும் ஷ்யாம் குறிப்பிட்டார்.

தராசு ஷ்யாம்

பட மூலாதாரம், Tarasu Shyam

படக்குறிப்பு, கரூரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக தவெகவின் அணுகுமுறையில் தோல்வி ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார், ஷ்யாம்

தமிழக வெற்றிக் கழகத்துக்கு கீழ்மட்டத்தில் கட்டமைப்பு இல்லாததை பிரதான காரணமாக முன்வைக்கும் ஷ்யாம், "மருத்துவமனைக்கு கட்சித் தலைவர் வராவிட்டாலும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்த்திருக்க வேண்டும். அவர்கள் சென்று பார்க்காததன் மூலம் கட்சிக்கு கட்டமைப்பு இல்லை என்பது தெளிவாகிறது" என்கிறார்.

"கட்சியின் கட்டமைப்பு சரியாக இல்லாவிட்டால் தேர்தலின்போது வாக்குகளைப் பெறுவதில் சிக்கல் இருக்கும். இது தோல்வியில் முடியும். நேரில் ஆறுதல் கூறுவதற்குச் சென்றால் தங்களுக்கு ஏதேனும் நேரும் என்ற அச்சம் இருந்தால் அரசியலுக்கு வரவே கூடாது" எனவும் ஷ்யாம் தெரிவித்தார்.

"ஆனால், அடிப்படைக் கட்டமைப்பு என்பது கட்சிக்கான நீண்டகால பிரச்னை" எனக் கூறும் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், " உடனடியான பிரச்னை என்பது சட்டரீதியானது. தேர்தலுக்கு எட்டு மாதங்களே உள்ளன. அதற்குள் பிரச்னைகளை சரிசெய்ய முடியுமா என்பது கேள்விக்குறி" என்கிறார்.

அடுத்து வரக் கூடிய சிக்கல்கள் என்ன?

"வரும் நாட்களில் விஜய் பரப்புரையில் எந்த மாதிரியான சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்?" என, மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமிடம் பிபிசி தமிழ் கேட்டது.

"வரும் நாட்களில் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட சில பரப்புரைகளை மேற்கொள்ள முடியாது. நீதிமன்றத்துக்கு தவெக சென்றுள்ளது. சி.பி.ஐ விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்தாலும் கட்டுப்பாடுகள் வரவே செய்யும்" எனக் கூறுகிறார்.

இதற்கு மாறான கருத்தை முன்வைக்கும் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், கரூர் சம்பவத்தைப் பொறுத்தவரை விஜய் மீது தான் அனைவரின் கவனமும் திரும்பியிருப்பதாக கூறுகிறார். "ஆளும்கட்சியை பொருத்தவரை எத்தனை அனுமதிகளை வேண்டுமானாலும் தரலாம். களத்தில் அது தவெகவுக்கு எதிர்மறையாகவே முடியும்" என்கிறார்.

கரூர் பரப்புரை, கரூர் கூட்ட நெரிசல், விஜய் பரப்புரை

பட மூலாதாரம், Getty Images

'கூட்டணி சேரும் கட்சிகளுக்கும் சிக்கல்'

"கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதில் காவல்துறைக்கு சில கடமைகள் இருப்பதைப் போன்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் சில கடமைகள் உள்ளன" எனக் கூறும் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "மதியம் 12 மணிக்கு ஐந்தாயிரம் பேர் வந்தனர் என்றால் ஏழு மணிக்கு பத்தாயிரம் பேர் வருவார்கள் என ஊகித்திருக்க வேண்டும்" என்கிறார்.

"2026 சட்டமன்றத் தேர்தலில் கரூரில் தவெகவை சேர்ந்த நிர்வாகிகள், விஜயின் படத்தைக் காட்டி வாக்கு கேட்க முடியாது" எனக் கூறும் ஷ்யாம், " அரசியல் ரீதியாக இதனை எதிர்கொள்வதற்கு அவர்களுக்குத் தெரியவில்லை என்றே தோன்றுகிறது" எனக் கூறுகிறார்.

"மக்களை எதிர்கொள்வதில் விஜய்க்கு சிக்கல் வரும். கரூர் சம்பவத்தை அவரால் எதிர்கொள்ள முடியவில்லை. திரைக் கவர்ச்சியும் கூட்டத்தைக் கூட்டும் நபராகவும் இருப்பதாலேயே ஒருவரால் அரசியல் தலைவர் ஆக முடியாது." என்கிறார் ஷ்யாம்.

"2026 சட்டமன்றத் தேர்தலில் தவெகவுக்கு மட்டுமல்லாமல் அக்கட்சியுடன் கூட்டணி செல்லும் கட்சிகளுக்கும் இது பிரச்னையை ஏற்படுத்தும்" எனவும் அவர் தெரிவித்தார்.

'விஜய்க்கு காத்திருக்கும் 3 வகையான சவால்கள்'

கரூர் சம்பவத்தின் மூலம் சட்டம், அரசியல் மற்றும் கட்சி ரீதியாக மூன்று வகையான பிரச்னைகளை விஜய் எதிர்கொள்ளலாம் எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "வழக்கில் முதல் குற்றவாளியாக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகனையும் அடுத்து புஸ்ஸி ஆனந்த் மற்றும் இதர நிர்வாகிகளைச் சேர்த்துள்ளனர். வழக்கில் விஜயைக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது சட்டரீதியான சவாலாக இருக்கும்" எனக் கூறுகிறார்.

ஆர்.கே.ராதாகிருஷ்ணன்

பட மூலாதாரம், RK Radhakrishnan

படக்குறிப்பு, வழக்கில் விஜயைக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்கிறார், ஆர்.கே.ராதாகிருஷ்ணன்

"இரண்டாவதாக, அரசியல் ரீதியாக இந்த விவகாரத்தில் இருந்து தவெக எப்படி வெளிவரப் போகிறது என்பது முக்கியம். கடந்த கால பொதுக் கூட்டங்களில் துப்பாக்கிச் சூடு நடத்திய நிகழ்வுகள் கூட உள்ளன. ஆனால், இவ்வளவு பேர் இறந்துபோனதாக எந்த சம்பவங்களும் இல்லை" எனக் கூறுகிறார், ஆர்.கே.ராதாகிருஷ்ணன்.

தொடர்ந்து பேசிய அவர், "மூன்றாவதாக, தவெகவின் அரசியல் வியூகங்களில் சிக்கல் உள்ளது. இதைத் தலைமையின் பிரச்னையாக பார்க்கிறேன். சம்பவத்துக்குப் பிறகு விஜய் சென்னை சென்றுவிட்டார். அடுத்தநிலையில் உள்ளவர்கள் யாரும் செல்போனை எடுக்கவில்லை. ஒரு சம்பவத்துக்குப் பிறகு அனைவரும் ஓடிப் போய்விட்டதாக பார்க்க முடியும்" என்கிறார்.

சதி செய்துவிட்டதாக கூற முடியுமா?

கரூர் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய அ.தி.முக. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "தவெக பரப்புரைக்கு தமிழ்நாடு அரசு போதுமான ஏற்பாடுகளைச் செய்யவில்லை. அதுவே அசம்பாவிதம் நிகழ்வதற்குக் காரணம்" என செய்தியாளர்களிடம் பேசுகையில் குற்றம்சாட்டினார்.

இதனை மேற்கோள் காட்டிப் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அரசியல் ரீதியாக தி.மு.க எதிர்ப்புக்கு இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியுமா எனப் பார்க்கின்றனர். 'காவல்துறை தவறிவிட்டது.. சதி நடந்துள்ளது' என்றெல்லாம் கூறுவதற்கு இது தான் காரணம்" என்கிறார்.

'சம்பவங்கள் தொடரவே செய்யும்'

கரூரில் பரப்புரை செய்வதற்கு விஜய் வந்த பேருந்தை பின்தொடர்ந்து அக்கட்சியின் தொண்டர்கள் சென்றனர். இவ்வாறு பின்தொடர வேண்டாம் எனவும் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர் கூட்டத்துக்கு வரவேண்டாம் என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியிருந்தார்.

"பின்தொடர வேண்டாம் எனக் கூறிவிட்டு தொடர்வதற்கு அனுமதிப்பதை தங்களின் செல்வாக்காக பார்க்கின்றனர். இரண்டாயிரம் பேர் பேருந்துடன் நகர்கின்றனர். அதைத் தடுக்க வேண்டிய கடமை ஒருங்கிணைப்பாளர்களுக்கும் தலைமைக்கும் உள்ளது" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

"பரப்புரை மேற்கொள்ளப்படும் இடங்களில் உள்ளூர் ஒருங்கிணைப்பு இல்லாமல் இருந்தால் இதேபோன்று பல சம்பவங்கள் தொடரவே செய்யும். இனி இவ்வாறு நடக்காது என்று சொல்வதற்கு உத்தரவாதங்கள் இல்லை" எனவும் ஷ்யாம் குறிப்பிட்டார்.

கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக மூத்த நிர்வாகிகளிடம் விளக்கம் பெற பிபிசி தமிழ் முயன்றது. அதற்கான முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cgmze82exkzo

'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?

1 month ago

கரூர் கூட்ட நெரிசல், தவெக பரப்புரை, விஜய் பிரசாரம், காவல்துறை வழக்கு

பட மூலாதாரம், TVK

படக்குறிப்பு, கரூர் பரப்புரையை வேண்டுமென்றே காலதாமதம் செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

29 செப்டெம்பர் 2025, 09:50 GMT

புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் வேண்டுமென்றே காலதாமதம் செய்ததாகவும் அனுமதியின்றி ரோட் ஷோ நடத்தியதாகவும் தவெக நிர்வாகிகள் மீது காவல்துறை தரப்பில் குற்றம்சாட்டுள்ளது.

காவல்துறை அதிகாரிகளின் அறிவுரையையும் மீறி தவெக நிர்வாகிகள் அசாதாரண செயல்களில் ஈடுபட்டதாகவும் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தவெக பரப்புரைக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட தற்போது வரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் ஒன்றை அமைத்துள்ளது. காவல்துறையும் கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக ஐந்து பிரிவுகளின் கீழ் தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், தவெக இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் மற்றும் தவெக நிர்வாகிகள் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.

கரூர் கூட்ட நெரிசல், தவெக பரப்புரை, விஜய் பிரசாரம், காவல்துறை வழக்கு

முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன?

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) தற்போது வெளியாகியுள்ளது.

கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்ய அனுமதி கேட்டு செப்டம்பர் 26-ஆம் தேதி தவெக சார்பில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அதோடு பரப்புரை தினமான சனிக்கிழமை 500 காவலர்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீர் செய்யும் பணிகளில் ஈடுபட்டதாக எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல், தவெக பரப்புரை, விஜய் பிரசாரம், காவல்துறை வழக்கு

பட மூலாதாரம், TVK

படக்குறிப்பு, தவெகவின் அனுமதி விண்ணப்பத்தில் 10,000 தொண்டர்கள் வருவார்கள் எனக் கூறப்பட்ட நிலையில்25,000-க்கும் மேற்பட்டோர் வந்ததாக காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.

சனிக்கிழமை மதியம் 12:00 மணிக்கு விஜய் கரூர் வர இருப்பதாக காலை 9 மணிக்கு தொலைக்காட்சிகளில் அறிவிக்கப்பட்டது, இதனால் காலை 10 மணி முதலே கூட்டம் கூடியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

"இதனால் வேலுச்சாமிபுரம் மெயின்ரோடு, கோவை சாலை, முனியப்பன் கோவில் ஜங்சன், கோவை சாலை, திருக்காம்புலியூர், ரவுண்டானா, மதுரை சேலம் பைபாஸ் ரோடு ஆகிய இடங்களில் கூட்டம் அதிகளவில் வர தொடங்கினார்கள்." என எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெகவின் அனுமதி விண்ணப்பத்தில் 10,000 தொண்டர்கள் வருவார்கள் எனக் கூறப்பட்ட நிலையில் 25,000-க்கும் மேற்பட்டோர் வந்ததாக காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.

கரூரில் பரப்புரை மேற்கொள்ள 12 மணிக்கு அனுமதி வாங்கியிருந்த நிலையில் நாமக்கலில் இருந்து புறப்பட்ட விஜய் மாலை 04:45 மணிக்கு கரூர் மாவட்ட எல்லையை அடைந்ததாக எஃப்.ஐ.ஆர் கூறுகிறது.

காவல்துறையால் விதிக்கப்பட்ட கட்டாய நிபந்தனைகளை வேண்டுமென்றே மீறி வரவேற்பு நடத்தியதாகவும் விஜயின் வாகனத்தை நிறுத்தி கால தாமதம் செய்ததாகவும் காவல்துறை தெரிவிக்கிறது.

"வேண்டுமென்றே காலதாமதம் செய்து தெருவில் அனுமதி இல்லாமல் ரோட்ஷோ நடத்தி போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடைஞ்சல் ஏற்படுத்தினர்." என எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலதாமதமாக விஜயின் வாகனம் மாலை 06.00 மணிக்கு முனியப்பன் கோவில் ஜங்சனில் ராங்ரூட்டில் (தவறான வழியில்) பயணித்ததாகவும் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல், தவெக பரப்புரை, விஜய் பிரசாரம், காவல்துறை வழக்கு

பட மூலாதாரம், TVK

படக்குறிப்பு, காவல்துறையால் விதிக்கப்பட்ட கட்டாய நிபந்தனைகளை வேண்டுமென்றே மீறியதாக எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"வேலுச்சாமிபுரம் ஜங்சனில் தொண்டர்களின் கூட்டத்திற்கு நடுவே வாகனத்தை நிறுத்தி வேண்டுமென்றே காலதாமதம் செய்தனர். அதே இடத்தில் அளவுக்கு அதிகமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்." என எஃப்.ஐ.ஆர் கூறுகிறது.

"காவல்துறை அறிவுரையை தவெகவினர் புறக்கணித்தனர்"

மாவட்ட செயலாளர் மதியழகன், என். ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல்குமார் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் பலரிடமும் "அசாதாரண சூழல்கள் ஏற்பட்டு கூட்ட நெரிசலால் மூச்சு திணறல் கொடுங்காயம் உயிர் சேதம் ஏற்படும்" என எச்சரித்ததாக காவல்துறை எஃப்.ஐ.ஆரில் தெரிவித்துள்ளது.

கரூர் கூட்ட நெரிசல், தவெக பரப்புரை, விஜய் பிரசாரம், காவல்துறை வழக்கு

"மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகிகள் எவரும் தொண்டர்களை சரிவர ஒழுங்குபடுத்தவில்லை.

ரோட்டில் அருகிலுள்ள கடைகளுக்கு நிழல் தரவேண்டி அமைக்கப்பட்டிருந்த குறுகிய சரிவான தகர கொட்டகைகளிலும் மற்றும் அருகிலிருந்த மரங்களிலும் கட்சி தொண்டர்கள் ஏறி அமர்ந்தனர்.

தகர கொட்டகை உடைந்ததாலும் மரம் முறிந்ததாலும் அதில் உட்கார்ந்திருந்த தொண்டர்கள் கீழே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது சரிந்து விழுந்தனர். இதனால் பொதுமக்களில் பெரும்பாலோனோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது." என எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் பலத்தை பறைசாற்றும் நோக்கத்துடன் கட்சி ஏற்பட்டாளர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய் கரூருக்கு வருவதை நான்கு மணிநேரம் தாமதப்படுத்தியதாகவும் காவல்துறையால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நீண்ட காலதாமதத்தால் காத்திருந்த மக்கள் வெயிலின் தாக்கத்தால் சோர்வடைந்து தண்ணீர் மற்றும் மருத்துவ வசதி இல்லாமல் உடல் நிலை சோர்வடைந்தனர் என்றும் காவல்துறை எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c9dx4pw8w6lo

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 month ago

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

Halley KarthikUpdated: Saturday, September 27, 2025, 20:52 [IST]

கரூர்: கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் அவரை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. நெரிசலில் சிக்கி 20 பேர் பலியாகியுள்ளனர்.

நெரிசலில் சிக்கி 22 பேர் மயக்கமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், நெரிசலில் சிக்கி 10 பெண்கள், 6 குழந்தைகள் என மொத்தம் 29 பேர் வரை உயிரிழந்திருக்கின்றனர். இந்த சம்பவம் கரூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Vijay stampede

உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தையடுத்து கரூருக்கு அமைச்சர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் விரைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.

டிஸ்கி

செந்தில்பாலாஜி ஊரிலேயே போய் கூட்டம் போட்டா விடுவாரா?

இதை வைத்து விஜையை ஓட…ஓட அடிப்பார்கள்.

என் கணிப்பு - சீமான் இதில் லீட் பண்ணுவார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க முயற்சியா? சென்னையில் இலங்கை பெண்ணிடம் விசாரணை

1 month ago

மேரி ஃபிரான்சிஸ்கா, புழல் சிறை, விடுதலைப் புலிகள் இயக்கம்

கட்டுரை தகவல்

  • விஜயானந்த் ஆறுமுகம்

  • செய்தியாளர்

  • 26 செப்டெம்பர் 2025

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் நிர்வாகிகளுடன் இணைந்து வங்கிப் பணத்தை அபகரிக்க முயன்றதாக மேரி ஃபிரான்சிஸ்கா என்ற இலங்கை பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

மும்பையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் செயல்படாத வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 42 கோடி ரூபாய் பணத்தை எடுப்பதற்காக போலி ஆவணங்களை மேரி ஃபிரான்சிஸ்கா தயாரித்தார் என்பது குற்றச்சாட்டு.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மேரி ஃபிரான்சிஸ்காவின் வழக்கறிஞர்கள் மறுக்கின்றனர். என்ன நடந்தது?

எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டிருப்பது என்ன?

சென்னை அண்ணா நகரில் வசித்து வந்த மேரி ஃபிரான்சிஸ்கா என்ற 45 வயது இலங்கைப் பெண், கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல திட்டமிட்டிருந்தார்.

ஆனால், விமான நிலையத்தில் பணியில் இருந்த குடியேற்ற பணியகத்தின் அதிகாரி (Bureau of Immigration) சதாசிவம், மேரி ஃபிரான்சிஸ்கா குறித்து சில தகவல்களை சென்னை கியூ பிரிவு போலீஸிடம் தெரிவித்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து பெங்களூரு சென்று அங்கிருந்து மும்பை செல்வதற்கு மேரி ஃபிரான்சிஸ்கா திட்டமிட்டிருந்ததாகவும் அவரிடம் இந்திய பாஸ்போர்ட், இந்திய வாக்காளர் அடையாள அட்டை, இலங்கை பாஸ்போர்ட்டின் அசல் ஆவணம் ஆகியவை கண்டறியப்பட்டதாகவும் குடியேற்ற பணியக அதிகாரி தெரிவித்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த ஒருவர், முறைகேடான வழியில் இந்திய அரசின் ஆவணங்களை வைத்திருந்ததாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

இந்த தகவலை சென்னை கியூ பிரிவு சிஐடி காவல் ஆய்வாளர் வேலவனிடம் குடியேற்ற அதிகாரி சதாசிவம் தெரிவித்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதே தகவல், தமிழ்நாடு அரசின் அரசிதழில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளது.

2021-ல் மேரி ஃபிரான்சிஸ்கா கைது

"இலங்கையைச் சேர்ந்த மேரி ஃபிரான்சிஸ்கா, இந்தியாவுக்கு சுற்றுலா விசாவில் வந்துள்ளார். அவர் சென்னை அண்ணா நகரில் தங்கியுள்ளார். அவரின் சுற்றுலா விசா காலாவதியாகிவிட்டதால் இந்தியாவில் வசிப்பதற்கான ஆதாரங்களை முறைகேடாக பெற்றுள்ளார்" என்று கியூ பிரிவு சி.ஐ.டி குற்றம் சுமத்தியது.

இந்த வழக்கில் 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி மேரி ஃபிரான்சிஸ்காவை கைது செய்து நீதிமன்றக் காவலில் கியூ பிரிவு சி.ஐ.டி போலீஸ் அடைத்துள்ளது.

காவல்துறையில் மேரி ஃபிரான்சிஸ்கா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் 7 பேர் வெவ்வேறு தருணங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

'42 கோடி ரூபாயை சட்டவிரோதமாக எடுக்க திட்டம்'

காவல்துறை நடத்திய விசாரணையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் நிர்வாகிகளான பாலைய்யா, உமாகாந்தன் ஆகியோருடன் இணைந்து மேரி ஃபிரான்சிஸ்கா குற்றச்செயலில் ஈடுபட்டதாக கியூ பிரிவு சிஐடி குற்றம் சுமத்தியுள்ளது.

இவர்கள் இந்தியா வந்ததற்கான பின்னணி குறித்தும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதில், மும்பையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் ஹமீதா ஏ லால்ஜி, அர்ஷியா ஏ லால்ஜி மற்றும் இஸ்கந்தர் ஏ லால்ஜி (Iskander-A-Laljee) ஆகியோரின் செயல்படாத வங்கிக் கணக்குகளில் (Inoperative bank accounts) இருந்து 42 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 172 ரூபாயை மோசடியாக எடுக்க முயற்சித்ததாக கியூ பிரிவு சிஐடி குற்றம் சுமத்தியுள்ளது.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்கவும் அந்த அமைப்பை ஒருங்கிணைப்பதற்காகவும் இந்த பணத்தை எடுக்க முயன்றதாக கியூ பிரிவு சி.ஐ.டி கூறுகிறது.

புழல் சிறையில் மேரி ஃபிரான்சிஸ்காவிடம் விசாரணை

இந்த வழக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு மறுவழக்கு பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நாடு அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் புழல் பெண்கள் சிறையில் மேரி ஃபிரான்சிஸ்கா அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கைதானவர்களில் மேரி ஃபிரான்சிஸ்கா தவிர மற்ற அனைவரும் வெவ்வேறு காலகட்டங்களில் பிணையில் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.

வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரித்து வந்த நிலையில், தடை செய்யப்பட்ட இயக்கத்துக்காக பணப் பரிவர்த்தையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேரி ஃபிரான்சிஸ்காவிடம் விசாரணை நடத்துவதற்கு அமலாக்கத்துறை முடிவு செய்தது.

இதற்காக, பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதியைப் பெற்றனர்.

கடந்த செப்டம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் புழல் சிறையில் வைத்து சுமார் இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக மேரி ஃபிரான்சிஸ்காவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.

'ஜாமீனில் எடுக்க கூட ஆள் இல்லை'

மேரி ஃபிரான்சிஸ்கா, புழல் சிறை, விடுதலைப் புலிகள் இயக்கம்

படக்குறிப்பு, மேரி ஃபிரான்சிஸ்காவை ஜாமீனில் எடுக்க உறவினர்கள் வரவில்லை என்கிறார் அவரது வழக்கறிஞர் பா புகழேந்தி

"வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்து சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் மேரி பிரான்சிஸ்கா ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அவர் புழல் பெண்கள் சிறையில் இருக்கிறார்" எனக் கூறுகிறார், மேரி ஃபிரான்சிஸ்காவின் வழக்கறிஞர் பா.புகழேந்தி.

மேரி ஃபிரான்சிஸ்காவின் உறவினர்கள் கனடாவில் வசிப்பதாகக் கூறும் பா.புகழேந்தி, "தமிழ்நாட்டுக்குள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக அவர் வந்துள்ளார். அவருடன் கைதான நபர்கள் பலரும் ஜாமீனில் வெளியில் வந்துவிட்டனர். ஆனால், அவரை ஜாமீனில் எடுப்பதற்குக் கூட உறவினர்கள் முன்வரவில்லை" என்கிறார்.

அவரது மனநலன் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் பா.புகழேந்தி, "புழல் பெண்கள் சிறையில் அவரை பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். அப்போது முன்னுக்குப்பின் முரணாகவே அவர் பேசினார்" எனத் தெரிவித்தார்.

'எந்த ஆதாரமும் இல்லை'

போலி பாஸ்போர்ட் மற்றும் மோசடி வழக்கில் முதன்மைக் குற்றவாளியாக மேரி ஃபிரான்சிஸ்கா உள்ளதை மேற்கோள் காட்டிப் பேசிய பா.புகழேந்தி, " ஹவாலா பணம் கைமாறியுள்ளதாக காவல்துறை கூறினாலும் அதனை புலிகள் அமைப்புடன் தொடர்படுத்திப் பேசுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை" என்கிறார்.

"வழக்கில் கைதானவர்களுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் நிர்வாகிகள் பணம் அனுப்பியதாக என்.ஐ.ஏ கூறுகிறது. பொதுவாக, வெளிநாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள், தங்களின் உறவினர்களுக்குப் பல்வேறு வழிகளில் பணம் அனுப்புவது இயல்பு. அதை வைத்தே இந்த வழக்கைக் கையாள்வதாகவே பார்க்கிறேன்" எனவும் குறிப்பிட்டார்.

மேரி ஃபிரான்சிஸ்கா தற்போது உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேரி ஃபிரான்சிஸ்கா, புழல் சிறை, விடுதலைப் புலிகள் இயக்கம்

படக்குறிப்பு, தடை செய்யப்பட்ட இயக்கத்துக்காக பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டது தொடர்பாக மேரி ஃபிரான்சிஸ்காவிடம் அமலாக்கத்துறை விசாரணை

'பணத்தை எடுக்கவில்லை'

மேரி ஃபிரான்சிஸ்கா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இலங்கையைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரும் அதே காலகட்டத்தில் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

"அனைவரும் சேர்ந்து கூட்டம் போட்டதாகவும் சொத்துகளை வாங்குவதற்கு முயற்சி செய்ததாகவும் என்.ஐ.ஏ கூறுகிறது. இவர்களை உமா காந்தன் என்ற நபர் இயக்கியதாகக் கூறுகின்றனர். ஆனால், மும்பை வங்கியில் உள்ள உரிமை கோரப்படாத பணத்தை இவர்கள் எடுக்கவில்லை" எனக் கூறுகிறார், பாஸ்கரனின் வழக்கறிஞர் ஷர்புதீன்.

இந்த வழக்கில் தாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை என, கைதான நபர்கள் கூறுவதாகவும் சர்புதீன் தெரிவித்தார்.

மேரி ஃபிரான்சிஸ்கா மீதான வழக்கு குறித்து அமலாக்கத்துறை சார்பில் ஆஜராகும் மத்திய அரசின் வழக்கறிஞர் ஒருவரிடம் பிபிசி தமிழ் பேசியது.

"வழக்கு குறித்து கருத்து எதையும் தெரிவிக்க விரும்பவில்லை" என்று மட்டும் அவர் பதில் அளித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cd72z8lpwqlo

அண்ணா, எம்ஜிஆரை கீழ்த்தரமாக விமர்சித்த சீமான்… பகிரங்க எச்சரிக்கை விடுத்த அதிமுக!

1 month ago

அண்ணா, எம்ஜிஆரை கீழ்த்தரமாக விமர்சித்த சீமான்… பகிரங்க எச்சரிக்கை விடுத்த அதிமுக!

26 Sep 2025, 6:05 PM

Seeman, who disparaged Anna and MGR, also criticized Vijay

அண்ணா, எம்ஜிஆரை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்த நிலையில், அதிமுக தரப்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 26) விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த திலீபனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது தவெக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், “விஜய் மாற்றம் என்பது குறித்து சொல்லவே இல்லை.. அவர் திமுகவிலிருந்து இரண்டு இட்லியையும், அதிமுகவில் இருந்து இரண்டு தோசையையும் எடுத்து ஒன்றாக பிச்சு போட்டு ஒரு உப்புமா கிண்டி விட்டார். ஒரு பக்கம் அண்ணாவையும், ஒரு பக்கம் எம்ஜிஆரையும் வைத்து கொண்டார். இதில் என்ன மாற்றம் வருகிறது. இது ஒரு சனியன்.. அது ஒரு சனியன்.. இரண்டு சனியனையும் சேர்த்து ஒரு சட்டையை தைத்து விட்டார். சனிக்கிழமை, சனிக்கிழமை கிளம்பி விட்டார்.

சரி.. மாற்றம் என்றால் எப்படிப்பட்ட மாற்றம்.. என்பதை பற்றி எல்லாம் அவர் சொல்லவே இல்லையே. நாங்கள் ஸ்ட்ரெய்ட்டாக பாயிண்டுக்கு வருவோம் என்கிறார். இதுவரை ஒரு பாயிண்டுக்கும் வரவில்லை. நாளை கரூர், நாமக்கல் என இரண்டு பாயிண்ட்களில் பேசுகிறார். அதுதான் அவருடைய பாயிண்ட்” என விமர்சித்திருந்தார்.

விஜய்யை விமர்சிப்பதாக கூறி தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் இருவரையும் கீழ்த்தரமாக சீமான் சாடியுள்ளது திமுக, அதிமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக வேடிக்கை பார்க்காது!

அதிமுக மாநில ஐடி விங் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் வெளியிட்ட கண்டன அறிக்கையில், “பேரறிஞர் அண்ணாவை பற்றியோ புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை பற்றியோ இழிவாகப் பேச சீமானுக்கு என்ன தகுதி உள்ளது? மறைந்த தலைவர்களை எப்படி பேச வேண்டும் என்ற அடிப்படை நாகரிகம் கூட சீமானுக்கு இல்லை.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பெயரை சொல்லி தமிழ்நாட்டில் ஏமாற்றி திரள்நிதி வசூல் செய்து உடம்பை வளர்க்கும் சீமானுக்கு எம்.ஜி.ஆர் யார் என தெரியாது, ஆனால் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் யார், என்ன செய்திருக்கிறார் என பிரபாகரனுக்கு தெரியும், சொல்லி இருக்கிறார்.

பாலியல் குற்ற வழக்கில் மாட்டி மூளை பிசகி முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு போய் சரணடைந்ததால், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை எல்லாம் வாய்க்கொழுப்பில் விமர்சித்தால் அதிமுக வேடிக்கை பார்க்காது!” என அவர் தெரிவித்துள்ளார்.

https://minnambalam.com/seeman-who-spoke-disparagingly-of-anna-and-mgr/

தமிழக அரசியல்வாதிகளில் முதலிடத்தில் விஜய்!

1 month 1 week ago

tvk-vijay.webp?resize=750%2C375&ssl=1

தமிழக அரசியல்வாதிகளில் முதலிடத்தில் விஜய்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும்,  தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய், தமிழக அரசியல்வாதிகளுக்கிடையே சமூக வலைதளங்களில் அதிக பின்தொடர்பவர்களைக் கொண்ட பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி, முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடத்தினார். அப்போது பா.ஜ.க மற்றும் தி.மு.க ஆகிய கட்சிகளை தனது அரசியல் எதிரிகளாக சுட்டிக்காட்டி உரையாற்றினார். சமீபத்தில் மதுரையில் நடந்த இரண்டாவது மாநாட்டிலும் அவர் தி.மு.க. அரசைக் கடுமையாக விமர்சித்தார். இதன் தொடர்ச்சியாக, “உங்கள் விஜய் நான் வரேன்” என்ற கோஷத்துடன் மாநிலம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில்  சமூக வலைதளங்களில் அதிக பின் தொடர்பவர்களைக் கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் தொடர்பில் அண்மையில் ஆய்வொன்று நடத்தப்பட்டுள்ளது.

குறித்த ஆய்வில் நடிகர் விஜய் முதல் இடத்தைப் பெற்றுள்ளார் . நடிகர் விஜயை  Instagram இல் 1.46 கோடிபேரும் Facebook க்கில்  77 லட்சம் பேரும் X தளத்தில் 55 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர். அந்தவகையில்  சராசரியாக  93 லட்சம் பேர் விஜயை பின்தொடர்கின்றனர் எனத் தெரிய வந்துள்ளது. 

அதே சமயம்   தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மொத்தமாக  30 லட்சம் பேரும்  எடப்பாடி பழனிசாமியை   2.95 லட்சம் பேரும் , அண்ணாமலையை  10.25 லட்சம் பேரும் , உதயநிதி ஸ்டாலினை  மொத்தம் 16.25 லட்சம் பேரும் பின்தொடர்கவதாகத் தெரிய வந்துள்ளது. 

எவ்வாறு  இருப்பினும்சமூகவலைதளங்களில் அதிக பின்தொடர்பவர்கள் இருப்பது அரசியல் ஆதரவு அல்லது வாக்குகள் என்பதைக் குறிக்காது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எடுத்துக்காட்டாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு Instagram-இல் 9.75 கோடி பின்தொடர்பவர்கள் இருக்க, கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு அதைவிட அதிகமான 27.3 கோடி பின்தொடர்பவர்கள் உள்ளனர். அதுபோல, விஜய்க்கும் அவரது திரை உலகப் புகழ் காரணமாக உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம் உள்ளதால், பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1448457

சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம்

1 month 1 week ago


1377632.jpg

புதுடெல்லி: பாலியல் புகார் தொடர்பான வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், நடிகை விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோரி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு எதிராக வளசரவாக்கம் போலீஸில் கடந்த 2011-ம் ஆண்டு புகார் அளி்த்திருந்தார். அந்தப் புகாரின்பேரில் சீமான் மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது விஜயலட்சுமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஷாதான் ஃபராஸத், ‘இது தொடர்பாக சீமான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் எங்கும் மன்னிப்பு கோரவில்லை’ என்றார். அதற்கு, சீமான் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ‘கடந்த முறை உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்பும்கூட சீமானுக்கு எதிராக விஜயலட்சுமி தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக உச்ச நீதிமன்றத்தில் சீமான் என்ன செய்ய வேண்டும் என்றும் பேசியுள்ளார்’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், ‘இருவரும் தங்களது குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற்று பரஸ்பரம் மன்னிப்புக் கோரி இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ எனக் கூறி விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சீமானும், விஜயலட்சுமியும் ஊடகங்களிலோ அல்லது சமூக வலைதளங்களிலோ எந்தப் பேட்டியும் தரக்கூடாது என்றும், இந்த உத்தரவை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.


சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம் | Seeman and Vijayalakshmi should Apologize to Each Other - Supreme Court - hindutamil.in

ஒரே இரவில் நாடற்றவராக அறிவிக்கப்பட்ட தமிழர்; பிறந்தது இந்தியாவில் தான், ஆனால் குடியுரிமை இல்லை

1 month 1 week ago

இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை

படக்குறிப்பு, மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் (கோப்புப் படம்)

கட்டுரை தகவல்

  • சாரதா வி

  • பிபிசி தமிழ்

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னையில் வசிக்கும் ஆர்.பகிசன் (34) இந்திய பாஸ்போர்ட் உட்பட இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் பல ஆவணங்களை கொண்டுள்ளார். சென்னையில் தனது பள்ளிப் படிப்பையும், கல்லூரி படிப்பையும் முடித்து ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் பாஸ்போர்ட்-ல் தனது மனைவியின் பெயரை சேர்க்க விண்ணப்பித்த போது அவரது பெயரை சேர்த்து இந்த ஆண்டு மார்ச் மாதம் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் பாஸ்போர்ட் வழங்கிய பின்னர், அவர் பாஸ்போர்ட் பெற்றிருப்பது சட்டவிரோதமானது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அவரது பெற்றோர் இருவரும் இலங்கை நாட்டவர். 1991-ம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப் பிரச்னை ஏற்பட்ட போது அகதிகளாக இந்தியாவுக்கு வந்தனர். பகிசன் தமிழ்நாட்டிலேயே பிறந்து, 30 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கேயே தொடர்ந்து வசித்து வந்தாலும், அவரது பெற்றோர் இருவரும் இந்தியர் அல்ல (இலங்கை நாட்டவர்) என்பதால் அவர் இந்திய குடிமகனாக கருதப்பட மாட்டார், எனவே அவர் 'நாடற்றவர்' என்று தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பகிசன், இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளனர்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் வசிப்பவர்

இந்திய குடியுரிமைச் சட்டத்தின் படி, 1987-ம் ஆண்டுக்கு ஜூலை 1ம் தேதி அல்லது அதன் பின் இந்தியாவில் பிறந்த ஒருவரது பெற்றோரில் யாரேனும் ஒருவர் இந்தியராக இருந்தால் மட்டுமே, அவர் இந்திய குடியுரிமை பெறமுடியும். மேலும், பெற்றோர் இருவரும் 'சட்டவிரோத குடியேறிகளாக' இருக்கக் கூடாது.

இந்தியாவில் அகதிகள் குறித்த தேசிய அளவிலான தெளிவான சட்டமும் கொள்கையும் இல்லாததால், இலங்கை தமிழர்கள், தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வசித்து வந்தாலும் அவர்கள் 'சட்டவிரோத குடியேறிகளாகவே' கருதப்படுகின்றனர். இந்திய குடியுரிமை சட்டம் 1955 பிரிவு 2(1) (b) நாடற்றவர்களையும், அகதிகளையும் 'சட்டவிரோத குடியேறிகள்' என்று வரையறுக்கிறது.

"நான் எப்போதுமே என்னை இந்திய குடிமகனாகவே நினைத்திருக்கிறேன். இத்தனை ஆண்டுகளில் யாரும் என்னை இந்திய குடிமகன் இல்லை என்று எங்கும் கூறியதில்லை. என்னிடம் உள்ள ஆவணங்களை முறையாகவே பெற்றுள்ளேன். என் பெற்றோர் இலங்கை நாட்டவர் என்பதை எங்கும் மறைத்ததில்லை.

ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் காவல் நிலையத்துக்குச் சென்று நாங்கள் கையெழுத்திட்டு வருகிறோம். நாங்கள் வசிக்கும் இடத்திலும் எங்கள் அடையாளத்தை மறைத்து எந்த தவறான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.

முதல் முறையாக நான் 'நாடற்றவன்' , இந்தியன் அல்ல என்று என்னிடம் கூறிய போது, என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது தெரிந்தவுடன், உடனே சட்டப்படி இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்தேன்" என்று பிபிசி தமிழிடம் பேசிய ஆர்.பகிசன் கூறினார்.

1991-ம் ஆண்டு இந்தியா வந்த பகிசனின் குடும்பம்

பகிசனின் குடும்பத்தினர் 1991-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர். அப்போது அவரது தாய் பகிசனை கர்ப்பத்தில் கொண்டிருந்தார். ராமேஸ்வரம் மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளாக தங்களை பதிவு செய்தனர். பின்னர் புதுக்கோட்டையில் உள்ள செந்தலை முகாமுக்கு மாற்றப்பட்டனர்.

"1991 மே மாதத்துக்குப் பிறகான காலத்தில் இலங்கை தமிழர்கள் மீதான கோபம் இருந்தால், சில முகாம்கள் மூடப்பட்டன. அப்போது நாங்கள் இருந்த முகாமும் மூடப்பட்டதால், 1992-ம் ஆண்டில் அங்கிருந்து பொது சமூகத்தில் வாழ அனுப்பப்பட்டோம். எனினும் தலைமை குடியேற்ற அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் தொடர்ந்து இருந்து வந்தோம். சென்னையில் முதலில் சிறிய காலம் வளசரவாக்கத்தில் இருந்தோம். பிறகு ராமாபுரத்துக்கு வந்த நாங்கள் அங்கேயே தான் இருந்து வருகிறோம்" என்கிறார் பகிசன்.

பகிசன் 2024-ம் ஆண்டு பாஸ்போர்ட் விண்ணப்பித்து பெற்றுள்ளார். அவருக்கு 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கை நாட்டைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்தது. இலங்கையில் அவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. "என் மனைவியை திருமணம் செய்வதற்காக மட்டுமே நான் இலங்கை சென்றுள்ளேன். அதற்கு முன் சென்றதில்லை." என்று அவர் கூறுகிறார்.

அவர் இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்த பிறகு, அவர் சட்டவிரோதமாக இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தது உட்பட்ட காரணங்களுக்காக பாஸ்போர்ட் சட்டம் 1967-ன் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.

புழல் சிறையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தார். முதல் முறை மறுக்கப்பட்ட அவரது ஜாமீன் மனு, இரண்டாவது முறை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அக்டோபர் 8ம் தேதி வரை பகிசன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில் அவரை திருச்சி சிறப்பு முகாமில் அடைக்க உள்ளதாக அரசு தரப்பில் அவரது ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு தன்னை முகாமில் அடைத்தால் தனது பெற்றோர்களை பார்த்துக் கொள்ள முடியாது, தான் பணிக்கு செல்ல முடியாது என்று பகிசன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பி ஆர் ராமன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி அக்டோபர் 8ம் தேதி வரை பகிசன் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

பகிசன் தற்போது தனது இந்திய ஆவணங்களை அதிகாரிகளிடம் சரண் செய்துள்ளார்.

இலங்கையிலிருந்து அகதிகளாக வந்தவர்களுக்கும், இந்தியாவில் பிறந்த அவர்களது குழந்தைகளுக்கும் இந்திய குடியுரிமை பெறுவது சாத்தியமில்லை.

1987-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் கூடுதல் நிபந்தனைகள் இல்லாமல் இந்திய குடியுரிமை வழங்கப்படும். இந்திய குடியுரிமை சட்டம் 1955 திருத்தப்பட்ட பிறகு, அதாவது 1987-ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அல்லது அதற்கு பிறகு ஒருவர் இந்தியாவில் பிறந்திருந்தாலும், அவரது பெற்றோரில் ஒருவராவது இந்தியராக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் இருவரும் சட்டவிரோத குடியேறிகளாக இருக்கக் கூடாது என்று விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் அடிப்படையிலேயே பகிசன் 'நாடற்றவர்' என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவர் தற்போது குடியுரிமை சட்டம் 1955, பிரிவு 6- ன் கீழ் 'naturalization' (இயல்புப்படுத்துதல்) அடிப்படையில் தனக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோருகிறார். " Naturalization அடிப்படையில் குடியுரிமை வழங்குவதற்கான நிபந்தனைகளை அவர் பூர்த்தி செய்கிறார்.

குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் முன், ஓராண்டு காலம் தொடர்ந்து இந்தியாவில் வசித்திருக்க வேண்டும். அதற்கு முன்பு 14 ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும் சட்டம் கூறும் நிபந்தனைகளை அவர் பூர்த்தி செய்கிறார். குடியுரிமை சட்டத்தின் படி, இலங்கை அகதிகளுக்கு எந்த உரிமைகளும் கிடையாது. அரசின் கருணையை நம்பியே அவர்கள் இருக்க வேண்டியுள்ளது" என்று இந்த வழக்கில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர் சந்தேஷ் சரவணன் கூறினார்.

குடியுரிமைக்காக காத்திருக்கும் இலங்கைத் தமிழர்கள்

தமிழ்நாட்டில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழர்கள் உட்பட 58,357 இலங்கைத் தமிழர்கள் (19,300 குடும்பங்கள்) தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிறப்பு முகாம் உட்பட 105 முகாம்களில் இருக்கின்றனர். முகாம்களுக்கு வெளியே, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பதிவு செய்த 13,400 குடும்பங்களில் 33,479 இலங்கைத் தமிழர்கள் வசிக்கின்றனர் என்று வெளிநாடு தமிழர்களின் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகத்தின் தரவுகள் (2023) தெரிவிக்கின்றன.

இலங்கைத் தமிழர்களின் நலன் மற்றும் தீர்வுகளுக்காக 2021-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு உருவாக்கிய ஆலோசனைக் குழுவின் இடைக்கால அறிக்கை 2023-ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது. இலங்கை தமிழர்களுக்கான நீண்ட கால தீர்வுகள் குறித்து பேசிய அந்த குழுவின் அறிக்கை, பகிசனைப் போன்று 1987-க்கு பிறகு, பெற்றோர் இருவரும் இலங்கை நாட்டவராக இருக்கும் குடும்பங்களில் இந்தியாவில் பிறந்த 22,058 பேர் இருப்பதாக கூறுகிறது.

இவர்களை தவிர மேலும் 848 பேர், இலங்கைத் தமிழர் பெற்றோர்களுக்கு 1987-ம் ஆண்டு பிறகு பிறந்து, ஆனால் பிறந்த இடம் குறிப்பிடாமலும் உள்ளனர். இவை தமிழ்நாட்டில் 104 முகாம்களில் உள்ள 57,391 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தரவுகள் பெறப்பட்டன.

"இலங்கைத் தமிழர்களை இந்தியாவுக்குள் அனுமதிப்பது மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன் நேரடி ஈடுபாட்டுடன் நடைபெற்றது. எனவே அவர்களை 'சட்டவிரோத குடியேறிகள்' என்று வகைப்படுத்துவதை மறு ஆய்வு செய்ய வேண்டும்" என்று ஆலோசனைக் குழு பரிந்துரைத்தது.

தமிழ்நாடு அரசின் இலங்கைத் தமிழர் நலன் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான கோவி லெனின், பிபிசி தமிழிடம் பேசும் போது, " இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை பெறுவதில் ஆவணங்கள் இல்லாதது முக்கிய பிரச்னையாக உள்ளது. இதில் சிலர் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மலையக தமிழர்களாக இருப்பார்கள். அவர்கள் முன்னோர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்திருப்பார்கள், ஆனால் அதற்கான ஆவணங்கள் இருந்திருக்காது.

இந்த ஆவணங்களைப் பெற்று தருவதில் தமிழ்நாடு அரசு உதவி வருகிறது. இந்திய குடியுரிமை கேட்டு நீதிமன்றத்தை நாடிய 13 பேருக்கு அவ்வாறான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சுமார் 56 ஆயிரம் பேர் முகாம்களில் உள்ளனர். அவர்களில் 35 வயதுக்கு கீழ் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களாக தான் இருப்பார்கள். முதலில் இவர்களுக்கு மட்டுமாவது இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும்" என்று கூறினார்.

திருச்சி முகாமில் இருந்த கே.நளினி இந்திய குடிமகளாக 2022-ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டார். இலங்கை அகதிகள் முகாம்களில் வசிப்பவர்களில் இந்திய குடியுரிமை பெற்ற முதல் நபர் அவர் ஆனார். அவர் 1986-ம் ஆண்டு இந்தியாவில் மண்டபம் முகாமில் பிறந்திருந்தார்.

1950-க்கும் 1987-க்கும் இடையில் இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்திய குடிமக்கள் ஆவர் என்று இந்திய குடியுரிமைச் சட்டம் கூறுவதால், அவரது குடியுரிமையை அங்கீகரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை 2022-ம் ஆண்டு தெரிவித்திருந்தது. நளினி போன்று 1987-க்கு முன்பு இந்தியாவில் பிறந்த 148 பேர் முகாம்களில் இருப்பதாக இலங்கைத் தமிழர் நலன் ஆலோசனைக் குழுவின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை

படக்குறிப்பு, வழக்கறிஞர் ரோமியா ராய்

நளினி உட்பட பல இலங்கைத் தமிழர்களின் குடியுரிமை வழக்குகளை கையாண்டு வரும் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரோமியோ ராய், "இந்தியாவில் அகதிகளுக்கான தனிச் சட்டம் இல்லாதது பாகுபாடுகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்துகிறது. 'அகதிகள்' யார் என்ற தெளிவான வரையறை கிடையாது. திபெத்திய அகதிகளுக்கு இமாச்சல பிரதேசத்தில் கிடைக்கும் வசதிகள், வெளிநாடு செல்லும் அனுமதி ஆகியவை இலங்கைத் தமிழர்களுக்கு கிடைப்பதில்லை.

இலங்கை தமிழர்களின் நிலையை விட ரோஹிங்க்யா மக்களின் நிலை மோசமாக உள்ளது. இந்திய குடியுரிமை வழங்குவது மத்திய உள்துறை அமைச்சகத்தின் பிரத்யேக அதிகாரங்களில் ஒன்று. ஒரு துறையில் சிறந்து விளங்கும், வேறு நாட்டை சேர்ந்தவருக்கு கூட அரசு நினைத்தால் குடியுரிமை வழங்க முடியும். எனவே அரசு நினைத்தால் எந்த நிபந்தனைகளையும் தளர்த்தி மனிதாபிமான அடிப்படையில் குடியுரிமை வழங்க முடியும்" என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvg976gl5zeo

கீழ்நமண்டி: திருவண்ணாமலைக்கும் சிந்துச் சமவெளிக்கும் என்ன தொடர்பு? - ஆச்சர்யப்படுத்தும் ஆய்வு முடிவுகள்

1 month 1 week ago

தமிழ்நாடு, அகழாய்வு, தொல்லியல் துறை, திருவண்ணாமலை, சிந்துசமவெளி நாகரீகம், ஹராப்பா

பட மூலாதாரம், TN Archaeology Department

கட்டுரை தகவல்

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  • பிபிசி தமிழ்

  • 23 செப்டெம்பர் 2025

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி தொல்லியல் தளத்தில் கிடைத்த காலக் கணிப்பும் தொல்பொருட்களும், அந்த இடத்திற்கும் சிந்துச் சமவெளி பிரதேசத்திற்கும் இடையில் வர்த்தகத் தொடர்பு இருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டுன்றன.

திருவண்ணாமலை மாவட்டத்தின் கீழ்நமண்டி தொல்லியல் தளத்தில் கிடைத்த கரிமப் பொருளைக் காலக் கணிப்புக்கு உட்படுத்தியதில் அதனுடைய காலம் கி.மு. 17ஆம் நூற்றாண்டு எனத் தெரியவந்திருக்கிறது. அதே பகுதியில் வடமேற்கிந்தியப் பகுதிகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய, வேலைப்பாடுகள் மிகுந்த சூதுபவள மணிகளும் கிடைத்திருக்கின்றன.

இந்த கண்டுபிடிப்புகள், இந்தப் பகுதிக்கும் சிந்து சமவெளிப் பகுதிக்கும் இடையில் வர்த்தகத் தொடர்பு இருந்திருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டுவதாக தொல்லியலாளர்கள் கருதுகின்றனர்.

தமிழ்நாடு தொல்லியல் துறை சமீபத்தில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வு முடிவுகள், சிந்துச் சமவெளி கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்டதன் நூற்றாண்டு குறித்த நூல் என நான்கு நூல்கள் சமீபத்தில் மதுரையில் தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டன.

இந்த நான்கு நூல்களில் Archaeological Excavations in Tamil Nadu: A Preliminary Report சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த கண்டுபிடிப்புகள் குறித்த தகவல்களைத் தருகிறது.

சென்னனூர், மருங்கூர், கீழ்நமண்டி, கீழடி, கொங்கல்நகரம், பொற்பனைக்கோட்டை, வெம்பக்கோட்டை, திருமால்புரம் ஆகிய 8 இடங்களில் நடந்த தொல்லியல் அகழாய்வுகளில் கிடைத்த முடிவுகளை இந்த அறிக்கை தந்திருக்கிறது. அதில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டியில் கிடைத்த காலக் கணிப்புகள்தான் தற்போது கவனத்தை ஈர்த்திருக்கின்றன.

தமிழ்நாடு, அகழாய்வு, தொல்லியல் துறை, திருவண்ணாமலை, சிந்துசமவெளி நாகரீகம், ஹராப்பா  தொடர்பு

பட மூலாதாரம், TN Archaeology Department

திருவண்ணாமலை மாவட்டத்தின் வந்தவாசியில் இருந்து தென்மேற்கு திசையில் 18 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது கீழ்நமண்டி கிராமம். தற்போது கீழ்நமண்டி கிராமம் அமைந்திருக்கும் இடத்திலிருந்து சுமார் மூன்றே கால் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த ஒரு நிலப்பரப்பு பெருங்கற்காலத்தைச் சேர்ந்ததாகக் கண்டறியப்பட்டது.

இந்த இடத்தில் சுமார் 55 ஏக்கர் தரிசு நிலப்பரப்பில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஈமக் குழிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த இடத்தில் 2022-இல் இருந்து 2024 வரை இரு கட்டங்களாக தொல்லியல் ஆய்வுகள் மாநில தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டன.

கீழ்நமண்டியில் மொத்தம் 7 இடங்கள் தொல்லியல் ஆய்வுக்காக அடையாளம் காணப்பட்டன. இதில் முதல் இடத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஈமக்குழிகள் (இறந்தோரைப் புதைத்த இடங்கள்) இருந்தன. அதில் அகழாய்வுக்காக 18 குழிகள் அடையாளம் காணப்பட்டன. மற்ற ஆறு இடங்களைப் பொறுத்தவரை அவற்றிலிருந்து சில தொல்பொருட்கள் கிடைத்ததோடு, இரும்பு உலை இருந்ததற்கான அடையாளங்களும் இருந்தன. இரண்டு இடங்கள் ஈமக் குழிகளுக்காக கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட இடங்களாக இருந்தன.

கீழ்நமண்டியில் கிடைத்த ஈமக் குழிகள் இரு வகைகளாக இருந்தன. முதலாவது வகையில், நிலத்தைத் தோண்டி நான்கு புறமும் பலகையைப் போன்ற கற்களை இறக்கி ஒரு குழி உருவாக்கப்பட்டு அதில் மண்ணால் ஆன ஈமப்பேழைகள் (sarcophagus) வைக்கப்பட்டிருந்தன. சில இடங்களில், வெறுமனே குழியைத் தோண்டி ஈமப் பேழைகள் புதைக்கப்பட்டிருந்தன.

தமிழ்நாடு, அகழாய்வு, தொல்லியல் துறை, திருவண்ணாமலை, சிந்துசமவெளி நாகரீகம், ஹராப்பா

பட மூலாதாரம், TN Archaeology Department

சில ஈமக் குழிகளில் ஒரே ஒரு சவப்பெட்டி மட்டுமே இருந்தது. சில ஈமக் குழிகளில் இரண்டு மூன்று சவப்பெட்டிகள் இருந்தன. 18 இடங்களில் மொத்தம் 27 ஈமப்பேழைகள் கிடைத்தன. இதில் எட்டு பேழைகள் மட்டுமே உடையாமல் இருந்தன. மற்ற பேழைகள், மேலே இருந்த மண்ணின் அழுத்தத்தால் சிதைந்து நொறுங்கியிருந்தன.

ஒரே ஒரு ஈமப்பேழை மட்டுமே இருந்த இடங்களில் அந்தப் பேழையிலேயே மனித எலும்புகளின் எச்சங்களும் ஈமச் சடங்குக்கான பொருட்களும் ஒன்றாக வைக்கப்பட்டிருந்தன. இரண்டு, மூன்று ஈமப்பேழைகள் இருந்த ஈமக் குழிகளில் ஒரு சவப்பெட்டியில் மனித எலும்பின் எச்சங்களும் மற்ற இரண்டு பெட்டிகளில் ஈமச் சடங்குகளுக்கான பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன.

ஈமப் பொருட்களைப் பொறுத்தவரை, உயர்தரமான கறுப்பு - சிவப்பு பானைகள், மூடியுடன் அல்லது மூடி இல்லாத சிவப்புப் பானைகள், இரும்புப் பொருட்கள், அலங்கார மணிகள் ஆகியவை இருந்தன. இந்த சவப்பெட்டிகளும் அதிலிருந்த பொருட்களும் இங்கே புதைக்கப்பட்டிருக்கும் மனிதர்களின் சமூகச் செல்வாக்கை குறிப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.

அதாவது முதல் வகை ஈமக்குழிகளை உருவாக்குவதற்கு 10 - 15 பேர் சில நாட்களாவது பணியாற்றியிருக்க வேணடும். இரண்டாம் வகை மிகச் சிலரால், சில நாட்களில் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆகவே, முதல் சவக்குழியில் இருந்த நபர், இரண்டாவது நபரைவிட உயர்ந்த சமூக அந்தஸ்தில் இருந்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு, அகழாய்வு, தொல்லியல் துறை, திருவண்ணாமலை, சிந்துசமவெளி நாகரீகம், ஹராப்பா

பட மூலாதாரம், TN Archaeology Department

மொத்தமுள்ள 18 குழிகளில் 6 குழிகளில் மட்டுமே மனித எச்சங்கள் கிடைத்தன. இவை எல்லாமே இரண்டாம் நிலை எச்சங்கள்தான். அதாவது, இதுபோன்ற ஈமக்குழிகளை உருவாக்க நாட்கள் ஆகும் என்பதால், ஒருவர் இறந்தவுடன் அந்த நபர் தற்காலிகமாக ஒரு இடத்தில் புதைக்கப்படுவார்.

இந்த ஈமப்பேழையுடன் கூடிய ஈமக்குழி உருவாக்கப்பட்ட பிறகு, முதலில் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து எச்சங்கள் தோண்டியெடுக்கப்பட்டு, இந்த இடத்தில் புதைக்கப்படும். ஆகவே, ஒரு மனிதனின் எல்லா எலும்புகளும் இந்தப் பேழைகளில் இருக்காது. எஞ்சியிருந்த எலும்புகள் மட்டுமே இங்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த எலும்புகளோடு இறந்தவர்களுக்குத் தகுந்த ஈமப் பொருட்கள் வைத்து குழிகள் மூடப்பட்டுள்ளன.

கீழ்நமண்டியில் கிடைத்துள்ள தொல் பொருட்கள் இந்தப் பகுதியில் ஒரு மிகப் பெரிய இரும்புக்கால குடியிருப்பு இருந்திருக்கலாம் என்பதைக் குறிப்பதாக தொல்லியல் துறையின் அறிக்கை குறிப்பிடுகிறது. இங்கு கிடைத்துள்ள ஈமக் குழிகளை வைத்து, இந்தப் பகுதியில் வசித்தவர்களின் ஈமச் சடங்குகள் குறித்த சில தகவல்களையும் அறிக்கை தருகிறது.

இங்கு வைக்கப்பட்டிருந்த ஈமப்பேழைகள் உறுதியாக இல்லாத சார்னோகைட் (charnokite) கற்களால் மூடப்பட்டிருந்தன. இதன் காரணமாகவே பெரும்பாலான ஈமப்பேழைகளின் மூடிகள் உடைந்திருந்தன. "இம்மாதிரி கற்களை வெட்டி எடுத்து மெல்லிய பலகைகளைப் போலச் செய்ய அவர்களிடம் தரமான இரும்புக் கருவிகள் இருந்திருக்க வேண்டும். கற்கள் வெட்டியெடுக்கப்பட்ட இடத்திலிருந்து மரத்தாலான உருளைகளால் இந்தக் கற்கள் இங்கே கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும்" என்கிறது இந்த அறிக்கை.

"3,700 ஆண்டுகள் பழமையான ஈமப்பேழைகள்"

தமிழ்நாடு, அகழாய்வு, தொல்லியல் துறை, திருவண்ணாமலை, சிந்துசமவெளி நாகரீகம், ஹராப்பா

பட மூலாதாரம், TN Archaeology Department

இந்த ஈமக் குழியில் இருந்து கிடைத்த கரித் துண்டும் சில இரும்புப் பொருட்களும் ஏஎம்எஸ் (Accelerator Mass Spectrometry) காலக் கணிப்புக்காக பீட்டா அனலிட்டிக் டெஸ்டிங் சோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. அந்த ஆய்வின்படி, அந்தக் கரிமப் பொருளின் காலம் கி.மு. 1450 (3400 ± 30) எனக் கண்டறியப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட காலக் கணிப்பின்படி (Calibrated AMS) இது கி.மு. 1769ஆம் ஆண்டு முதல் கி.மு. 1615ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என இந்த அறிக்கை கூறுகிறது.

ஆகவே, சராசரியாக இந்தக் கரிமப்பொருள் கி.மு. 1692 ஆண்டை ஒட்டியதாக இருக்கலாம் என்கிறது அறிக்கை. இதற்கு முன்பு தமிழ்நாட்டில் சிறுதாவூர், பல்லாவரம் ஆகிய இடங்களில் கிடைத்த ஈமப்பேழைகளின் கரிமப் பொருட்கள் காலக் கணிப்புக்கு அனுப்பப்பட்டபோது, அவற்றின் காலம் கி.மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவே இருந்தது.

அந்த வகையில், தமிழ்நாட்டில் கிடைத்த ஒரு ஈமப்பேழையின் காலம் கி.மு. 1692ஐத் தொடுவது இதுவே முதல் முறை. மேலும் இந்த ஈமக் குழுயில் இருந்து கீறல்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும் கிடைத்தன. இவையும் மறைமுகமாக இவற்றின் காலத்தை கி.மு. 17ஆம் நூற்றாண்டு என்றே குறிக்கின்றன என்கிறது அறிக்கை.

இந்த ஈமக்குழிகளில் உளி, கோடாரி போன்ற பொருட்களும் கிடைத்தன. மேலும், சில இடங்களில் வேலைப்பாடுகள் மிகுந்த சூதுபவள (carnelian) மணிகளும் கிடைத்தன. இங்கே கிடைத்த பானைகளின் விளிம்பில் சூலாயுதம், U போன்ற குறியீடுகளும் கிடைத்தன.

கீழ்நமண்டிக்கு சிந்துச் சமவெளியோடு தொடர்பா?

தமிழ்நாடு, அகழாய்வு, தொல்லியல் துறை, திருவண்ணாமலை, சிந்துசமவெளி நாகரீகம், ஹராப்பா

பட மூலாதாரம், TN Archaeology Department

கீழ்நமண்டியில் இருந்தவர்கள் சிந்துச் சமவெளி பகுதிகளோடு தொடர்பில் இருந்திருக்கலாம் என்கிறார் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையின் ஆய்வு ஆலோசகர் பேராசிரியர் கே. ராஜன்.

"சூதுபவள மணிகளைப் பொறுத்தவரை, அவை தென்னிந்தியப் பகுதிகளில் கிடைப்பதில்லை. இந்த மணிகள் மகாராஷ்டிரா, குஜராத் பகுதிகளைச் சேர்ந்தவை. இந்தப் பகுதியில் இவை கிடைக்கின்றதென்றால், அவை அங்கிருந்ததுதான் வந்திருக்க வேண்டும். இங்கிருந்தவர்கள், அந்தப் பகுதிகளோடு வர்த்தகத் தொடர்பில் இருந்திருக்கலாம். இங்கு கிடைத்த ஈமப் பேழைகளின் காலம் கி.மு. 17ஆம் நூற்றாண்டு எனத் தெரியவந்திருக்கிறது. இதற்கு இணையாக வடமேற்கு இந்தியப் பகுதியில் பிற்கால ஹரப்பா (Late Harappan 1900-1300 BCE) நாகரிகமே நிலவியது. ஆகவே அதனோடு இதனை இணைத்துப் பார்க்கலாம்" என்கிறார்.

குறியீடுகளைப் பொறுத்தவரை, இங்கு கிடைத்த சில குறியீடுகள், சிந்துச் சமவெளியில் கிடைத்த சில குறியீடுகளைப் போலே இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இந்த இடத்தில் கிடைத்த கரிமப் பொருளின் காலம் ஏஎம்எஸ் காலக் கணிப்பில் கி.மு. 17ஆம் நூற்றாண்டு எனத் தெரியவந்தாலும், இங்கு கிடைத்த வேறு சில பொருட்களை OSL (Optically Stimulated Luminescence) காலக் கணிப்புக்கு அனுப்ப மாநில தொல்லியல் துறை முடிவுசெய்திருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1l8qqvn0r7o

அண்ணா நகர் தமிழ்ப்பேரவையின் தமிழ்ப்பேருரை- 21/9/25

1 month 1 week ago

அண்ணா நகர் தமிழ்ப்பேரவையின் தமிழ்ப்பேருரை- 21/9/25

அண்ணா நகர் தமிழ்ப்பேரவையின் இலக்கியக் கூட்டமான, 21 9 25 ஞாயிற்றுக்கிழமை அளவில்மாலை 5 மணி சென்னை அண்ணாநகர் லியோ ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் பள்ளியில் தமிழ் இலக்கியப் பேருரை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பேராசிரியர் முனைவர் ரூபா எம்..ஏ., எம்.பில்., பி.எச்டி., அவர்கள் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாட, அதை அடுத்து மதிப்பிற்குரிய பாவலர் சீனி பழனி அவர்கள் வரவேற்பு ஆற்றினார்கள். பின்னர் பேராசிரியர் முனைவர் மா. இளங்கோவன் (க்ஷ தலைவர்) அவர்கள் மிகச் சிறப்பாகத் தலைமை உரையாற்றினார்கள். பின்னர் பேரவையின் இணைச் செயலாளரும், இந்துக் கல்லூரியின் பேராசிரியருமான,பேராசிரியர் முனைவர் ஜா. திரிபுர சூடாமணி அவர்கள், பெருங்கதை காப்பியம் தொடர் சொற்பொழிவின் தொடக்க உரையாக றற்யமிகச் சிறப்பாக சொற்பொழிவு ஆற்றினார்கள்.

பேராசிரியர் முனைவர் ம.இளங்கோவன் சிற்றுரை ஆற்றிய பிறகு, ஆவடி வேல்டெக் கலைக் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் செ.சு. நா.சந்திரசேகரன் அவர்கள் இணையத் தமிழ் என்பது பற்றி மிகச் சிறப்பாகப் பேசினார்கள். அவர் உரையாற்றும் பொழுது, ”உலகளாவிய நிலையில், தமிழ் வளர்ச்சிநிலை பெற்றுள்ளதை தமிழ் ஆர்வலர்கள் இன்னும் வளர்க்க முயலவேண்டும்” என்றார். இணையத்தமிழ் என்ற தலைப்பில் மிகச் சிறப்பான இச்சொற்பொழிவில் பல துறைகளின் மேம்பாடுகள் விளக்கப்பட்டன.

பிறகு, பேராசிரியர் முனைவர் ரூபா அவர்கள் தொகுப்புரை வழங்கினார்கள்.பின்னர் பேரவையின் ப் யங்தொண்டர் திலகம் திரு சுதாகர் அவர்கள் தனக்கே உரித்தான முறையில் பெருங்கதையின்பெருமையைப் பற்றியும், இணையத் தமிழ்ப் பற்றியும் பேசிய பிறகு, நன்றி உரையாற்றினார்கள். இத்துடன் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நிறைவடைந்தது. கூட்டத்தில் பல தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர்.WhatsApp Image 2025-09-21 at 10.19.55 PM.jpeg

தமிழ்நாட்டில் ஒருவர் மரணம்: தேனீக்கள் கொட்டினால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

1 month 1 week ago

தேனீக்கள் கொட்டினால் என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

கட்டுரை தகவல்

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  • பிபிசி தமிழ்

  • 21 செப்டெம்பர் 2025, 08:17 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் மரணமடைந்திருக்கிறார். பத்து பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தேனீக்கள் கொட்டினால் ஏன் மரணம் ஏற்படுகிறது? இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தியாகதுர்கம் அருகே கூத்தக்குடி சிவன் கோவில் பகுதியில் அரச மரம் ஒன்று இருக்கிறது. இந்த மரத்தில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தன. இந்த தேன் கூட்டை புதன்கிழமையன்று காலையில் சிலர் கலைத்தனர். அதிலிருந்த தேனீக்கள் அங்கிருந்தவர்களை கொட்டத் தொடங்கின. பத்துக்கும் மேற்பட்டோரை தேனீக்கள் தாக்கியுள்ளன.

இதில் அதே ஊரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் வீராசாமி என்பவரும் ஒருவர். அவர்கள் அனைவரும் அதே ஊரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இந்த நிலையில் வீட்டில் இருந்த வீராசாமிக்கு அன்று இரவு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அவருடைய உறவினர்கள் மீண்டும் வீராசாமியை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்தார்.

இதையடுத்து தேனீக்களால் பாதிக்கப்பட்ட 10 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். தேன் கூட்டை கலைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி, கூத்தக்குடி கிராம மக்கள் கள்ளக்குறிச்சி வேப்பூர் சாலையில் அரை மணி நேரம் சாலை மறியல் செய்தனர்.

இருப்பினும் சற்று நேரத்தில் வீராசாமி இறந்து போனார். தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த 10 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கு முன்பாக கடந்த மார்ச் மாதத்தில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பரவக்கம் கிராமத்தில் இதேபோல தேனீக்கள் கொட்டியதில் செந்தில்குமார் என்பவர் பலியானார். மேலும் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

தேனீக்கள் கொட்டினால் என்ன நடக்கும்?

தேனீக்கள் கொட்டினால் என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தேனீக்களின் கொடுக்கில் நச்சுப் பொருட்கள் உண்டு என்கிறார் மருத்துவர் அமலோற்பவநாதன் ஜோசப்.

பொதுவாக ஓரிரு தேனீக்கள் கொட்டுவதில் இதுபோன்ற விபரீத சம்பவங்கள் நடப்பதில்லை. தேன் கூட்டை கலைப்பது போன்ற நிகழ்வுகளின் போதுதான் பெரும் எண்ணிக்கையிலான தேனீக்கள் மனிதர்களைக் கொட்டுகின்றன. அதில் ஒரு சிலர் இறக்கவும் நேரிடுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

"தேனீக்களின் கொடுக்கில் நச்சுப் பொருட்கள் உண்டு. இவற்றில் இரண்டு நச்சுகள்தான் கவனிக்கத்தக்கவை. ஒன்று, மெலிட்டின் (Melittin) என்ற நச்சு. மற்றொன்று, பாஸ்போலைபேஸ் ஏ2 (Phospholipase A2) என்ற நச்சு." என்கிறார் மருத்துவர் அமலோற்பவநாதன் ஜோசப்.

மேலும் "மெலிட்டினைப் பொறுத்தவரை அது ரத்த அணுக்களின் சுவற்றை உடைத்து, உள்ளிருக்கும் பொருட்களை வெளியில் கொண்டுவந்துவிடும்." என்கிறார் அவர்

"அதேபோல, தசைச் செல்களையும் உடைத்து, உள்ளே உள்ள பொருட்களை வெளியில் கொண்டுவந்துவிடும். இவை ரத்தத்தில் கலந்து சிறுநீரகத்தை அடையும்போது சிறுநீரகம் பாதிப்படைந்து, அது வேறு பல உறுப்புகளையும் பாதித்து மரணம் ஏற்படலாம். பாஸ்போலைபேஸ் ஏ2 என்ற நச்சைப் பொறுத்தவரை, அதுவும் இதேபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். கூடுதலாக, நரம்பு மண்டலத்தையும் பாதிக்கும்" என்கிறார் மருத்துவர் அமலோற்பவநாதன் ஜோசப்.

தேனீக்கள் கடித்துவிட்டால் நிலைமை மோசமாவதை அறிய சில அறிகுறிகள் இருக்கின்றன என்கிறார் நச்சுயியல் (Toxicology) பிரிவில் ஆய்வுகளை மேற்கொண்டவரும் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் பேராசிரியருமான மருத்துவர் வி. ராஜேந்திரன்.

"தேனீக்கள் கொட்டும்போது அனாபிலாக்ஸிஸ் (anaphylaxis) எனப்படும் அதீத ஒவ்வாமை ஏற்படலாம். ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். தொண்டை அடைக்கும். மாரடைப்பு ஏற்படுவதைப் போன்ற உணர்வு ஏற்படும். இந்த நிலையில் உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படும். ஒருவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தேனீக்கள் கொட்டினால், நிச்சயம் மருத்துவமனையில் சேர்ந்து கண்காணிப்பில் இருக்க வேண்டும்" என்கிறார் மருத்துவர் வி. ராஜேந்திரன்.

எத்தனை தேனீக்கள் கடித்தால் ஆபத்து?

தேனீக்கள் கொட்டினால் என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பொதுவாக 100 தேனீக்கள் கொட்டினால், மரணம் ஏற்படும் என மருத்துவர் அமலோற்பவநாதன் ஜோசப் கூறுகிறார்.

"ஒரு தேனீ கடித்து உயிரிழந்த நிகழ்வுகளும் உண்டு." என விளக்குகிறார் மருத்துவர் அமலோற்பவநாதன்.

"காரணம், தேனீயால் கொட்டப்பட்ட நபருக்கு மேலே சொன்ன நச்சுப் பொருட்கள் ஒவ்வாமை ஏற்படுத்துபவையாக இருந்தால், இதுபோல அரிதாக நிகழும். மற்றபடி, ஒரே ஒரு தேனீ கொட்டினால் பெரிய அளவில் ஆபத்து இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்." என்கிறார் அவர்.

மேலும் "கொடுக்கை எடுத்துவிட்டு வலி அதிகம் இருந்தால் வலி நிவாரணிகளைச் சாப்பிட்டால் சரியாகிவிடும். ஆனால், ஒரே ஒரு தேனீ கொட்டியவுடன் தொண்டை இறுகுவது, நாக்கு தடிப்பது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் சேர வேண்டும்" என எச்சரிக்கிறார் அவர்.

ஆனால், தேன் கூட்டைக் கலைப்பது போன்ற நிகழ்வுகளில் அருகிலிருப்போரை நூற்றுக்கும் அதிகமான தேனீக்கள் கொட்டிவிடுகின்றன.

இதுகுறித்து பேசுகையில், "தேன்கூட்டைக் கலைக்கும் போது தேனீக்கள் அருகிலிருப்போரை துரத்தித் துரத்திக் கொட்டும். அதிலிருந்து தப்புவதற்காக ஓடும்போது எவ்வளவு தேனீக்கள் கொட்டின என்பது தெரியாது." எனக் கூறுகிறார்.

"பொதுவாக 100 தேனீக்கள் கொட்டினால், மரணம் ஏற்படும்." எனக் கூறும் அவர், "ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களில் 1,000 தேனீக்கள் கொட்டிய நிகழ்வுகளும் உண்டு." என்றார்.

"ஆகவே, தேன்கூட்டை கலைத்து தேனீக்கள் கொட்டும் நிகழ்வு நடந்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர வேண்டும். குறைந்தது ஒரு நாளாவது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும்" என்றார் மருத்துவர் அமலோற்பவநாதன்.

தேனீக்கள் கடித்தால் என்ன சிகிச்சை அளிக்கப்படும்?

தேனீக்கள் கொட்டினால் என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நச்சுக்களால் ஏற்படும் ஒவ்வாமைக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும்.

தேனீக்கள் கொட்டினால், நச்சுக்களால் ஏற்படும் ஒவ்வாமைக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும்.

"தொண்டை கட்டுவது, நாக்கு வீங்குவது போன்றவை நடக்கும்போது ஸ்டீராய்ட்களைச் செலுத்துவார்கள். அதற்குப் பிறகு அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படும்" என்கிறார் மருத்துவர் அமலோற்பவநாதன்.

கடந்த ஏப்ரல் மாதம் நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஊசிமலை வியூ பாயிண்டில் கேரளா மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த 26 வயது சபீர் என்பவர் நூற்றுக்கணக்கான தேனீக்களால் கொட்டப்பட்டு, உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c701xr3wllxo

கோவை: வனத்துறையிடம் பிடிபடாத 'ரோலக்ஸ்' - நள்ளிரவில் மருத்துவரை தாக்கிவிட்டு தப்பியது எப்படி?

1 month 1 week ago

யானை-மனித மோதல், ரோலக்ஸ் யானை, கோவை யானை பிரச்னை

பட மூலாதாரம், TN Forest Department

படக்குறிப்பு, ரோலக்ஸ் யானை

கட்டுரை தகவல்

  • சேவியர் செல்வகுமார்

  • பிபிசி தமிழ்

  • 20 செப்டெம்பர் 2025

கோவை அருகே 4 பேரைக் கொன்றதாகக் கருதப்படும் ரோலக்ஸ் என்ற ஆண் யானையை, 3 கும்கி யானைகளைக் கொண்டும், மயக்க ஊசி செலுத்தியும் பிடிப்பதற்காக எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன. ஆனால் கடந்த 7, 8 ஆண்டுகளில் இந்த யானையால் தாக்கப்பட்டு 8 பேருக்கும் மேல் இறந்திருப்பதாகக் கருதப்படுவதால் இதைப் பிடிக்கும் முயற்சியை வனத்துறை தீவிரமாக்கியுள்ளது.

யானைக்கு மயக்க ஊசி செலுத்தும் முயற்சியின் போது யானை தாக்கியதில் ஆனைமலை புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் விஜயராகவன் காயமடைந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த யானையால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அதைப் பிடிப்பதற்கு தலைமை வனக் காப்பாளர் உத்தரவிட்டுள்ளதால் இந்த முயற்சி தொடருமென்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.

ரோலக்ஸ் யானை என்ற பெயர் வந்தது எப்படி?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வனத்துறையிடம் பெறப்பட்ட தகவல்களில், 2011–2022 இடையிலான 12 ஆண்டுகளில், கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட 85 கிராமங்களில், யானைகள் தாக்கி 147 பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களில் 102 பேர், வனப்பகுதிக்கு வெளியே இறந்துள்ளனர். இதே காலகட்டத்தில், பல்வேறு காரணங்களால் 176 யானைகள் இறந்துள்ளன. அவற்றில் 109 யானைகள், மனித நடவடிக்கைகளால் பலியாகியிருக்கின்றன என்றும் தெரியவந்திருந்தது.

சமீபகாலமாக கோவை வனக்கோட்டத்தில் குறிப்பாக கோவை மற்றும் போளுவாம்பட்டி ஆகிய 2 வனச்சரகப் பகுதிகளில் யானை தாக்கி, 4 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவருமே ஒரு குறிப்பிட்ட யானை தாக்கியே இறந்திருப்பதும் வனத்துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுமார் 20 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் யானையின் நடமாட்டம், இந்த 2 வனக் கோட்டத்துக்குட்பட்ட தொண்டாமுத்துார், நரசிபுரம், தடாகம், தாளியூர், கெம்பனுார், குப்பேபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை வனக்கோட்டத்தில் யானை–மனித மோதல் அதிகம் நடப்பதால் இதற்கென யானை துரத்தும் காவலர்கள் அடங்கிய குழு, காட்டை விட்டு வெளியேறும் யானைகளை தொடர்ச்சியாகக் கண்காணித்து, 'தடம்' எனப்படும் வாட்ஸ்ஆப் குழுக்களில் தகவல் பகிர்ந்து வருகின்றனர். இந்த குழுவினர் இந்த யானையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

யானை-மனித மோதல், ரோலக்ஸ் யானை, கோவை யானை பிரச்னை

பட மூலாதாரம், TN Forest Department

படக்குறிப்பு, தோட்டப் பகுதியில் ரோலக்ஸ் யானை ஏற்படுத்தியுள்ள சேதம்.

கடந்த சில மாதங்களில் அட்டுக்கல், ஜவ்வுக்காட்டுப்பகுதி, நரசிபுரம், வைதேகி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் செல்வி, ரத்தினம், மருதாசலம் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகள் அனைத்தும் இந்த யானையால்தான் நிகழ்ந்துள்ளன என்று வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர். இதன் வருகையையும், நடவடிக்கைகளையும் பார்த்து சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், இந்த யானைக்கு ரோலக்ஸ் என்று பெயரிட்டுள்ளனர்.

கமல் நடித்து வெளியான 'விக்ரம்' திரைப்படத்தின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்து இந்த பெயர் சூட்டப்பட்டிருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அந்த யானை வரும் வீடியோவுடன் ரோலக்ஸ் காட்சிகளில் வரும் பின்னணி இசையையும் கோர்த்து சமூக ஊடகங்களில் பலரும் பரவவிட்டுள்ளனர். அதிலிருந்தே இந்த யானையின் பெயரும் ரோலக்ஸ் என்றே நிலைத்துவிட்டது.

இந்த யானையைப் பிடிப்பதற்கு தமிழக அரசின் தலைமை வனப்பாதுகாவலரால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதற்குப் பின் இதைப் பிடிப்பதற்கு, டாப்ஸ்லிப் யானைகள் முகாமிலிருந்து முத்து, நரசிம்மர் ஆகிய 2 யானைகளும், வால்பாறையிலிருந்து கபில்தேவ் என்ற கும்கி யானையும் வரவழைக்கப்பட்டுள்ளன.

'ரோலக்ஸ்' யானையை பிடிப்பதில் என்ன சிக்கல்?

கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி இரவில், கெம்பனுார்–தாளியூர் ஆகிய இரு ஊர்களுக்கு இடையில், ரோலக்ஸ் யானையை மயக்கஊசி செலுத்திப் பிடிப்பதற்கு முயற்சி நடந்துள்ளது. யானைகள் மீட்புப் பணிகளில் வனத்துறையுடன் இணைந்து நீண்ட காலமாகப் பணியாற்றிய கால்நடை பராமரிப்புத்துறையின் ஓய்வு பெற்ற உதவி இயக்குநர் கால்நடை மருத்துவர் மனோகரன், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வன கால்நடை மருத்துவர் விஜயராகவன் மற்றும் குழுவினர், ரோலக்ஸ் யானைக்கு மயக்கஊசி செலுத்துவதற்காக, அதற்கான துப்பாக்கிகளுடன் காத்திருந்தனர். ஒரே நேரத்தில் இருவரும் மயக்க ஊசியைச் செலுத்திய போது, யானை அதில் சிக்காமல் தப்பிவிட்டதாக வனத்துறையினர் கூறுகின்றனர்.

யானை-மனித மோதல், ரோலக்ஸ் யானை, கோவை யானை பிரச்னை

படக்குறிப்பு, கால்நடை மருத்துவர் விஜயராகவன்

மயக்க ஊசி செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வனத்துறை கால்நடை மருத்துவர் விஜயராகவன் பிபிசி தமிழிடம் பேசியபோது, ''அன்றிரவு மயக்கஊசி செலுத்த (tranquillize) முயற்சி செய்தோம். ஊசிகளைச் செலுத்தியபோது, அது தவறிவிட்டது. இரவு நேரங்களில்தான் அந்த யானை அதிகமாக வெளியில் வருகிறது. இதனால் அதனை பிடிப்பது சற்று கடினமாக இருக்கிறது.'' எனத் தெரிவித்திருந்தார்.

பகலிலும் யானை வெளியில் வருகிறதா என்பதற்காக தொடர்ந்து முயற்சிகள் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். பகலில் கும்கிகளைக் கொண்டு அந்த யானையைப் பிடிப்பதற்கு முயற்சி செய்தால், அதன்பின்னால் பெரும் கூட்டம் கூடிவிடுவதால் அந்த முயற்சியைத் தொடர முடியவில்லை என்று வனத்துறையினர் வருந்துகின்றனர். டிரோன் உதவியுடனும் வனத்துறையினர் ரோலக்ஸ் யானையை தேடி வருகின்றனர்.

ரோலக்ஸ் யானைக்கு ஒரே நேரத்தில் 2 மயக்க ஊசிகளைச் செலுத்த வேண்டியிருப்பதன் அவசியம் குறித்து, வனத்துறை கால்நடை மருத்துவர்கள் விளக்கினர். அந்த யானை மிகவும் ஆரோக்கியமாக இருப்பதுடன், தற்போது இனப்பெருக்கத்துக்குத் தயார் நிலையில் (மஸ்த்) இருப்பதால் அதற்கு 3 விதமான மருந்துகளை இணைத்துக் கொடுக்க வேண்டியுள்ளது என்கின்றனர். ஒரே ஊசியில் அவ்வளவு மருந்தைச் செலுத்த முடியாது என்பதால்தான் இரண்டு ஊசிகளில் ஒரே நேரத்தில் செலுத்த முயற்சிப்பதாகக் கூறினர்.

யானை-மனித மோதல், ரோலக்ஸ் யானை, கோவை யானை பிரச்னை

படக்குறிப்பு, யானைக்கு மயக்க ஊசி செலுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதுபற்றி பெயர் கூற விரும்பாத வனத்துறை கால்நடை மருத்துவர் ஒருவர், ''வீட்டுப் பிராணிகளை மயக்கமுற வைப்பதற்கும், காட்டுவிலங்குகளை மயக்கமுற வைப்பதற்கும் வெவ்வேறு விதமான மருந்துகள், வெவ்வேறு விதமான அளவுகளில் (எம்ஜி) மருந்துகள் செலுத்த வேண்டியிருக்கும். அதேபோன்று இரவு நேரமாக இருந்தால் யானை நின்று கொண்டே துாங்குவதற்கு ஒருவிதமான மருந்தும், பகல் நேரமாக இருந்தால் மயங்கி சாயும் வகையிலுமாக மற்றொரு வகை மருந்தும் பயன்படுத்தப்படும்.'' என்றார்.

அதுபற்றி மேலும் விளக்கிய அவர், ''சமீபகாலமாக யானைகளைப் பிடிக்கும் எல்லா முயற்சிகளிலும் யானைகள் நின்று கொண்டு துாங்கும் மருந்தே (ஹிப்னாடிசனம்) பயன்படுத்தப்படுகிறது. அதற்கான மருந்தை ஊசிகளில் செலுத்திவிட்டு அருகில் சென்றாலும் அதனால் எதையும் செய்ய இயலாது. காட்டுயானைகள் பெரும்பாலும் இரவில் வெளியில் வருகின்றன. ஆனால் இரவு நேரத்தில் இருளுக்கு மத்தியில் யானைகள் நிற்குமிடத்தை துல்லியமாக அறிந்து ஊசியைச் செலுத்துவது பெரும் கஷ்டம்.'' என்றார்.

ரோலக்ஸ் யானை பற்றி வனத்துறையினர் கூடுதல் தகவல்

யானை-மனித மோதல், ரோலக்ஸ் யானை, கோவை யானை பிரச்னை

படக்குறிப்பு, கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் வெங்கடேஷ்

பிபிசி தமிழிடம் பேசிய போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் ஜெயச்சந்திரன், ''கடந்த சில மாதங்களில் இந்த யானையால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இரு ஆண்டுகளுக்கு முன் மருதமலை பகுதியிலும் வயதானவர் ஒருவரை தாக்கிக் கொன்றுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் 8 முதல் 10 பேர் இந்த யானையால் உயிரிழந்திருக்கலாம் என்று கருதுகிறோம். ஆனால் இந்த யானை ஊருக்குள் ஊடுருவி யாரையும் கொன்றதில்லை. அதன் வழியில் வந்தவர்களைத் தாக்கியுள்ளது.'' என்றார்.

ரோலக்ஸ் யானையால் கடந்த 2 ஆண்டுகளில் 5க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவித்த கோவை வனச்சரக அலுவலர் திருமுருகன், தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவுக்குப் பின் அதைப் பிடிக்கும் முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது என்றார். இப்போது 3 கும்கி யானைகளுடன், 3 குழுவினர் கண்காணித்து வருவதால் விரைவில் பிடித்துவிடுவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மயக்க ஊசி செலுத்தப்பட்டதா, செலுத்தப்படவில்லையா என்பது குறித்து கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் வெங்கடேஷிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ''மயக்க ஊசி செலுத்த முயற்சி நடந்தது. ஆனால் செலுத்த முடியவில்லை. அதற்குள் யாரோ ஒருவர் விளக்கு ஒளியைக் காண்பித்ததால் அது நகர்ந்து வாழைத்தோட்டத்திற்குள் புகுந்துவிட்டது. ட்ரோன் மூலமாகக் கண்காணித்தும் அதைப் பின்தொடர முடியவில்லை.'' என்றார்.

யானை தாக்கி கால்நடை மருத்துவர் காயம்

சனிக்கிழமை அதிகாலை தொண்டாமுத்தூரை அடுத்த பரமேஸ்வரன்பாளையத்தில் தனியார் தோட்டத்திற்குள் காட்டு யானையை பிடிக்கும் பணியின்போது கால்நடை மருத்துவர் விஜயராகவனை யானை தாக்கியுள்ளது.

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் விஜயராகவனுக்கு முதுகெலும்பு மற்றும் இடது மோதிர விரலில் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அவருக்கு தற்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனரும் கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலருமான வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvg4vj37nz1o

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

1 month 1 week ago

20 Sep, 2025 | 06:14 PM

image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நாகப்பட்டினத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது தமிழர்களின் கடமை என வலியுறுத்திப் பேசினார்.

கடலில் மீன்பிடிக்கும் போது பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தமிழக மீனவர்களுக்காகக் குரல் கொடுப்பது அவசியம் என்று குறிப்பிட்ட விஜய், "மீனவர்களின் உயிர்கள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களின் வாழ்க்கையும், கனவுகளும் மிக மிக முக்கியம்" என்றார்.

இலங்கை உட்பட உலகின் எந்த மூலையில் இருந்தாலும், ஈழத்தமிழர்கள் "தாய்ப்பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கும்" நிலையில், அவர்களுக்காகக் குரல் கொடுப்பதும், துணை நிற்பதும் நமது கடமை அல்லவா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த உரை, தமிழக அரசியல் மற்றும் சமூக அரங்கில் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்த விவாதத்தை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/225604

விருது கேட்க போன எடப்பாடி பழனிசாமி ஏன் முகத்தை மூடிக்கொண்டு வரணும்?”- சீமான் அட்டாக்!

1 month 2 weeks ago

“விருது கேட்க போன எடப்பாடி பழனிசாமி ஏன் முகத்தை மூடிக்கொண்டு வரணும்?”- சீமான் அட்டாக்!

Vignesh SelvarajUpdated: Thursday, September 18, 2025, 17:27 [IST]

Seeman Criticizes EPS Over Meeting With Amit Shah Says No Need to Come With Covered Face

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனை குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அமித்ஷாவை சந்தித்து விட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி காரில் செல்லும்போது கைக்குட்டையால் முகத்தை மூடியபடி இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலினும் நேற்று கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் இதுகுறித்துப் பேசி இருந்தார். இந்நிலையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடியிருந்தது தொடர்பாக விமர்சித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "எடப்பாடி எதற்காக ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால், முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது கேட்க போனாருனு செய்தி வருது. விருது கேட்க போனவர் முகத்தை மூடிக்கொண்டு வரவேண்டிய அவசியம் இல்லை" என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மேலும், நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை அமைத்த கூட்டணியோடு எடப்பாடி பழனிசாமி நின்றிருந்தால், இன்று இங்கு 15 எம்.பிக்கள், 2 அமைச்சர்கள் கிடைத்திருப்பார்கள். ஆனால் அதை எடப்பாடி பழனிசாமி செய்யவில்லை. என்னை முன்னிறுத்தி தமிழக அரசியல் களம், சீமான் தி.மு.க இடையேதான் போட்டி என மாறிவிடுமோ என எடப்பாடி பழனிசாமிக்கு பயம். அந்த வேலை நடக்கிறது என தெரிந்ததும் மீண்டும் பா.ஜ.கவோடு போய் எடப்பாடி பழனிசாமி சேர்ந்துவிட்டார். சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து வெளியேற்றி விட்டார்." எனக் கூறியுள்ளார்.

மேலும் பேசிய சீமான், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை எதிர்த்து பேசினால் திமுக கைக்கூலி என்கிறார்கள். விஜய்யை விமர்சிப்பதால் திமுகவிடம் நான் பெட்டி வாங்கிவிட்டது போல் பேசுகிறார்கள். திமுகவை எதிர்த்து பேசினால் ஆர்எஸ்எஸ் பாஜகவின் கைக்கூலி என்கிறார்கள். தேர்தலில் திமுக தனித்து நின்று போட்டியிட வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது.

தமிழக வெற்றிக் கழக இளைஞர்கள் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் பக்குவம் அடைய நாளாகும். உச்சத்தை விட்டுவிட்டு வருவேன் என சொன்னால் உங்களை யார் வரச் சொன்னது என்கிற கேள்வி வருகிறது. அரசியலுக்கு வந்த பிறகு சேவை செய்ய வேண்டும். பெருமை பேசக் கூடாது. திமுக, அதிமுகவை அழிக்க போராடிக் கொண்டிருக்கும்போது மீண்டும் அண்ணா, எம்ஜிஆரை கொண்டு வந்தால் என்ன செய்வது?

அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரை கொள்கை தலைவர்களாக அறிவித்ததற்கான விளக்கத்தை விஜய் தெரிவிக்க வேண்டும். கல்வியையும், மருத்துவத்தையும் தனியாருக்கு தாரைவார்த்தது யார்? தமிழ் பாட மொழி, ஆங்கிலம் பயிற்று மொழியாக மாறியது எப்போது? பின்னர் இந்தி பயிற்று மொழி, தமிழ் விருப்ப மொழி என மாறியது. இப்படி மாறினால் அதனை எந்த தமிழர்கள் விரும்புவார்கள். இந்த நிலைக்கு வர யார் காரணம்.

நான் கட்சி ஆரம்பிப்பதற்காக ஏசி அறையில் இருந்து யோசிக்கவில்லை, சிறையில் இருந்து யோசித்தேன். 2007, 2008- ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் திமுக கூட்டணியை எதிர்க்கும் போது, விடுதிகளில் எனக்கு தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. சிறைக்குள் தனி சிறையில் 6 மாதம் அடைக்கப்பட்டிருந்தேன்." எனக் கூறியுள்ளார் சீமான்.

https://tamil.oneindia.com/news/chennai/seeman-criticizes-eps-over-meeting-with-amit-shah-says-no-need-to-come-with-covered-face-736601.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

டிஸ்கி

எடப்பாடி ஆட்சியில் தாதுமணல் கொள்ளை, கொலைகள் என பலதில் கள்ள மெளனம் சாதித்து எடப்பாடியை சித்தப்பா என வாஞ்சையாக அழைத்த சீமான்…

இப்போ எடப்பாடி மீது சீறி பாய்கிறார்.

சபரீசன் கொடுத்த 100 கோடி பேசுகிறது.

#பெட்டிக்கு முன், பெட்டிக்கு பின்

சுய மரியாதை இயக்கம் தமிழ்நாட்டின் அரசியல், மொழி, பண்பாட்டுத் தளத்தில் ஏற்படுத்திய மாற்றம் என்ன?

1 month 2 weeks ago

சுயமரியாதை இயக்கம், பெரியார், ஈவெரா, தமிழ்நாடு, திராவிடர் கழகம், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு

பட மூலாதாரம், Facebook/DravidarKazhagam

கட்டுரை தகவல்

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  • பிபிசி தமிழ்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

பெரியார் துவங்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு தற்போது கடைபிடிக்கப்படுகிறது. சுயமரியாதை இயக்கத்தின் பயணம் எப்படித் துவங்கியது? இந்த இயக்கம் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்ன?

தமிழ்நாட்டின் அரசியலிலும் பண்பாட்டுத் தளத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய சுயமரியாதை இயக்கம் துவங்கப்பட்டு நூறாண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. வாழ்வின் எல்லா தளங்களிலும் சுயமரியாதையை முன்னிறுத்திய இந்த இயக்கம், அதற்குப் பிந்தைய பல தசாப்தங்களுக்கு தமிழ்நாட்டின் அரசியல், பண்பாடு, மொழி ஆகிய தளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

1925-ல் காங்கிரசை விட்டு வெளியேறிய பிறகே பெரியார் சுயமரியாதை இயக்கத்தை துவங்கினார் என்று புரிந்துகொள்ளப்பட்டாலும், அதற்கு சில மாதங்களுக்கு முன்பே இதற்கான விதை ஊன்றப்பட்டுவிட்டது. தனது சிந்தனைகளை பரப்புவதற்காக குடிஅரசு என்ற இதழை அதே ஆண்டு மே மாதத்தில் பிரசுரிக்க ஆரம்பித்தார் பெரியார்.

"அந்த காலகட்டம் வரை பெரியார் காங்கிரசின் கருத்தையே எதிரொலித்துவந்தார். ஆனால், அதற்குப் பிறகு அவரது கருத்துகளில் மாற்றங்கள் ஏற்பட்டபோது, அவருடைய சிந்தனைகளுக்கு, எண்ணங்களுக்கு காங்கிரஸ் சார்பான இதழ்களில் இடம்கிடைக்கவில்லை. ஆகவேதான் தனக்கென ஒரு இதழை அவர் துவங்க வேண்டியிருந்தது. அப்படி அவர் குடிஅரசு இதழைத் துவங்கிய காலகட்டத்தையே சுயமரியாதை இயக்கத்தின் துவக்கமாகக் கொள்ளலாம்" என்கிறார் "நீடாமங்கலம்: சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்" நூலை எழுதியவரும் வரலாற்றுத் துறை பேராசிரியருமான ஆ. திருநீலகண்டன்.

1925ஆம் ஆண்டு நவம்பர் 21, 22ஆம் தேதிகளில் காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு காங்கிரசின் 31வது மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் பெரியார் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார். "ராஜீய சபைகளிலும் பொது ஸ்தாபனங்களிலும் பிராமணர், பிராமணரல்லாதர், தீண்டாதார் எனக் கருதப்படுவோர் என இம்மூன்று பிரிவினருக்கும் தனித்தனியாக ஜனத்தொகை விழுக்காடு தங்கள் சமூகத்திலிருந்து பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள உரிமை ஏற்படுத்த வேண்டும் என இம்மாநாடு தீர்மானிக்கிறது" என்றது அந்தத் தீர்மானம்.

ஆனால், அந்தத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, "காங்கிரஸால் பிராமணரல்லாதார் நன்மை பெற முடியாது. காங்கிரசை ஒழிப்பதே என் முதல் வேலை" எனக் கூறிவிட்டு அந்த மாநாட்டை விட்டு வெளியேறினார் பெரியார். சிலர் இந்த நாளையே சுயமரியாதை இயக்கத்தின் துவக்க நாளாகக் கருதுவதும் உண்டு.

ஆனால், சுயமரியாதை இயக்கத்தின் துவக்க விழாவோ, பொதுக்கூட்டமோ நடக்கவில்லை. இந்த இயக்கம் தோன்றியது குறித்து, 1937ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி குடிஅரசு இதழில் 'சுயமரியாதை இயக்கம்' என்ற பெயரில் பெரியார் ஒரு கட்டுரையை பிரசுரித்தார். அந்தக் கட்டுரையில் "சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒரு இயக்கம் 1925ல் என்னால் துவங்கப்பட்டது யாவரும் அறிந்ததேயாகும்" என்று குறிப்பிடுகிறார். ஆனால், அந்த இயக்கத்தின் வரலாற்றை அவர் அந்தக் கட்டுரையில் எழுதவில்லை. ஆகவே இந்த இயக்கத்தின் துவக்கப் புள்ளியாக ஒரு தினத்தைக் குறிப்பிட முடியாது.

சுயமரியாதை இயக்கம், பெரியார், ஈவெரா, தமிழ்நாடு, திராவிடர் கழகம், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு

பட மூலாதாரம், Facebook/DravidarKazhagam

காங்கிரசை விட்டு வெளியேறிய பெரியார் சுயமரியாதை, தீண்டாமை ஒழிப்பு, மனிதர்களிடம் ஏற்றத்தாழ்வு கூடாது போன்ற விஷயங்களை தொடர்ந்து பேசிவந்தார். இதற்குப் பிறகு, 1926ஆம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் தேதி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளைப் பட்டியலிட்டார். "மனிதர்களிடம் ஏற்றத் தாழ்வு கூடாது, தீண்டாமை - சேர்க்காமை போன்றவற்றுக்கு இடமேயில்லை, மனிதர்களை வேறுபடுத்திப் பார்க்கும் சடங்குகளும் ஜாதிகளும் வேறோடு களையப்பட வேண்டும். தன்மான உணர்ச்சியும் சிந்திக்கும் ஆற்றலும் ஒவ்வொருவருக்கும் வேண்டும், எதிர்காலம் அறிவியலுக்கு உரியதே அல்லாமல், மதத்திற்கு உரியது அல்ல" உள்ளிட்டவை அந்தக் கொள்கைகளாக இருந்தன. பெரியாரின் பேச்சும் செயல்பாடுகளும் ஒரு இயக்கமாக மாறியதை இந்த மாநாடு குறித்தது.

காங்கிரசைவிட்டு வெளியேறியிருந்தாலும் 1925-26 காலகட்டத்தில் காந்தியின் கொள்கைகளையும் பெரியார் ஆதரித்துவந்தார். "நூல் நூற்றல், தீண்டாமை ஒழிப்பு, மது ஒழிப்பு ஆகியவற்றை காந்தி வலியுறுத்துவது ஊக்கமூட்டுவதாக இருந்ததாக பெரியார் கருதினார்" என 'அயோத்தி தாசிலிருந்து பெரியார் வரை பிராமணரல்லாதோர் ஆயிரமாண்டு காலத்தை நோக்கி' (Towards a non-Brahmin millennium from Iyothee Thass to Periyar) என்ற நூலில் வ. கீதாவும் எஸ்.வி. ராஜதுரையும் குறிப்பிடுகின்றனர். அதே காலகட்டத்தில் நீதிக் கட்சிக்கும் ஆதரவு காட்டினார் பெரியார்.

இந்த நிலையில், 1927ல் பெங்களூரில் மகாத்மா காந்தியை பெரியார் சந்தித்துப் பேசினார். அப்போது, பிராமணர்கள் குறித்தும் இந்து மதம் குறித்தும் பெரியார் கடுமையான கருத்துகளை முன்வைத்தார். அதனைக் காந்தி ஏற்கவில்லை. இந்தக் கட்டத்திலிருந்து காந்தியிடமிருந்து விலக ஆரம்பித்தார் பெரியார். இதற்குப் பிறகு தொடர்ந்து சுயமரியாதைக் கொள்கைகள் குறித்து தமிழ்நாடு முழுவதும் பல சிறு கூட்டங்களில் பேச ஆரம்பித்தார் பெரியார். பல இடங்களில் சுயமரியாதைச் சங்கங்கள் அமைக்கப்பட்டன. ஆங்காங்கே சில மாவட்ட மாநாடுகளும் நடத்தப்பட்டன.

இந்த நிலையில்தான் மாகாண சுயமரியாதை மாநாடு செங்கல்பட்டில் 1929-ஆம் ஆண்டு பிப்ரவரி 17, 18 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. "அதுவரை சுயமரியாதை இயக்கத்தின் சார்பாக நடைபெற்றுவந்த பணிகளை மதிப்பீடு செய்யும் ஒரு மாநாடாகவும் சட்டதிட்டங்கள், கொள்கை, குறிக்கோள்கள், நிர்வாக அமைப்பு போன்றவற்றை ஒழுங்குபடுத்தும் மாநாடாகவும் இது அமைந்தது" என்கிறது கி. வீரமணி எழுதிய திராவிடர் கழக வரலாறு நூல். இந்த மாநாட்டில் சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி ஆகியவற்றில் பணியாற்றிய பலரும் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் கொள்கை தொடர்பான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அடுத்த மாகாண மாநாடு கூடும்வரை இந்த இயக்கத்திற்கு டபிள்யு.பி.ஏ. சவுந்திரபாண்டியன் தலைவராகவும் பெரியாரும் சர். ஏ.டி. பன்னீர்செல்வம் ஆகியோர் துணைத் தலைவர்களாக இருப்பதென்றும் முடிவுசெய்யப்பட்டது. இதற்குப் பிறகு இரண்டாவது, மூன்றாவது மாநாடுகள் ஈரோட்டிலும் விருதுநகரிலும் நடைபெற்றன. 1932ல் பெரியார் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுவந்த பிறகு, சுயமரியாதை இயக்கத்தின் மூலம் சமதர்மக் கொள்கைகளையும் பரப்ப விரும்பினார்.

1932 டிசம்பர் 17, 18-ல் கூடிய மாநாட்டிற்கு ம. சிங்காரவேலர் தலைமை தாங்கினார். இந்த மாநாட்டில் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளில் சமதர்மக் கொள்கையும் முக்கியமான ஒன்று என தீர்மானிக்கப்பட்டது. இயக்கத்தைச் சேர்ந்த சிலர், சுயமரியாதை இயக்கம் தொடர்ந்து சமூகச் சீர்திருத்தத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினாலும் இறுதியில் அந்த முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தப் புதிய திட்டத்தைச் செயல்படுத்த, இயக்கத்தின் பெயர் 'சுயமரியாதை சமதர்ம இயக்கம்' என பெயர் சூட்டப்பட்டது.

இதற்கிடையில் குடியரசு இதழில் இடம்பெற்ற கட்டுரைகளுக்காக அந்த இதழ் தடைசெய்யப்பட்டது. இதற்குப் பிறகு 1933ல் புரட்சி என்ற புதிய இதழ் துவக்கப்பட்டது. பிறகு அதுவும் தடைசெய்யப்பட்டது. இதற்குப் பிறகு 1934ல் பகுத்தறிவு என்ற புதிய இதழ் துவங்கப்பட்டது. இந்த நிலையில், 1933ல் குடியரசில் இன்றைய ஆட்சி முறை ஏன் ஒழிய வேண்டும் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியதற்காக சிறை தண்டனையும் 300 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. பெரியார் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டார். அந்தத் தருணத்தில் அங்கு அடைக்கப்பட்டிருந்த ராஜாஜியை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது. அப்போது, அவர் பெரியாரை மீண்டும் காங்கிரசிற்குத் திரும்ப வேண்டுமென அழைத்தார்.

சுயமரியாதை இயக்கம், பெரியார், ஈவெரா, தமிழ்நாடு, திராவிடர் கழகம், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு

பட மூலாதாரம், Facebook/DravidarKazhagam

ஆனால், பெரியாரின் செயல்திட்டத்தை காங்கிரஸ் ஏற்க மறுத்துவிட்ட நிலையில் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. அதேநேரத்தில், பொப்பிலி அரசர் போன்றவர்கள் அவர் நீதிக்கட்சிக்கு வர வேண்டுமென்றும் கூறிவந்தனர். இந்த நிலையில், 15 செயல்பாடுகள் அடங்கிய ஒரு பட்டியலை அளித்த பெரியார், அந்தச் செயல்திட்டத்தை ஏற்கும் கட்சியில் இணைவதாகக் கூறினார்.

நீதிக் கட்சி அதனை முழுமையாக ஏற்றது. இருந்தபோதும் சுயமரியாதை இயக்கத்தில் இருந்தவர்களில் சிலர் அதனை ஏற்கவில்லை. நீதிக் கட்சி பணக்காரர்கள், ஜமீன்தார்கள் போன்றாரின் ஆதிக்கம் நிரம்பிய கட்சி எனக் கருதினர். இதனால் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த பலர் அதிலிருந்து விலகி காங்கிரசில் சேர முயன்றனர். ம. சிங்காரவேலர், ப. ஜீவானந்தம், கோவை அய்யாமுத்து போன்றோர் சுயமரியாதை இயக்கத்தை விட்டு வெளியேறினர்.

இந்த நிலையில் 1934-ல் நடந்த தேர்தலில் நீதிக் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால், சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த மேலும் பலர் விலகினர். 1937ல் நடந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் பெரும் வெற்றிபெற்றது. அந்த ஆண்டு ஜூலை 14ஆம் தேதி பதவியேற்ற ராஜாஜி, எல்லா உயர் நிலைப்பள்ளிகளிலும் இந்தியை கட்டாயமாக்கப் போவதாக அறிவித்தார். இதையடுத்து பெரியார் ஏராளமான அளவில் இந்தி எதிர்ப்பு கூட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தினார்.

இந்த காலகட்டத்தில்தான் ஈ.வெ. ராமசாமிக்கு பெரியார் பட்டம் வழங்கப்பட்டது. 1938ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி சென்னை ஒற்றை வாடை நாடகக் கொட்டகையில் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அவருக்கு பெரியார் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை சுயமரியாதை இயக்கம் தொடர்ந்து நடத்திய நிலையில் பெரியார் கைது செய்யப்பட்டு, அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சுயமரியாதை இயக்கம், பெரியார், ஈவெரா, தமிழ்நாடு, திராவிடர் கழகம், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு

பட மூலாதாரம், Getty Images

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட நடராஜனும் தாளமுத்துவும் சிறையிலேயே உயிரிழந்தார்கள். 1939ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ராஜாஜி பதவி விலகினார். இதற்குப் பிறகு பம்பாய் (தற்போது மும்பை) சென்ற பெரியார், அங்கே அம்பேத்கர் போன்ற தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இதற்குப் பிறகும் பல ஊர்களுக்குத் தொடர்ந்து பயணம் செய்தார் பெரியார்.

1943ஆம் சேலம் செவ்வாய்ப் பேட்டையில் நடந்த நீதிக் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில், தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற பெயரை, தென்னிந்திய திராவிடர் கழகம் என மாற்ற வேண்டும் என தீர்மானம் கொண்டுவந்தார். அடுத்த மாநாட்டில் பெயரை மாற்றுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த காலகட்டத்தில் நீதிக் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. ஏ.பி. பத்ரோ, பி. பாலசுப்ரமணியம், சுந்தர்ராவ் நாயுடு ஆகியோர் இதற்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருந்தனர். அவர்கள் தனித்தும் செயல்பட ஆரம்பித்தனர்.

இந்த நிலையில், 1944 ஆகஸ்ட் 27ஆம் தேதி சேலத்தில் 16வது தென்னிந்திய நல உரிமைச் சங்க மாநாடு நடந்தது. இதில் இரு தரப்பினருக்கும் பெரும் மோதல் ஏற்பட்டது. இதில் பெயர் மாற்றத் தீர்மானம் சி.என். அண்ணாதுரையின் பெயரில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்குப் பிறகும் நீதிக் கட்சியைச் சேர்ந்த சிலர், நீதிக் கட்சி என்ற பெயரிலேயே தொடர்ந்து செயல்பட்டனர். சிலர் சுயமரியாதை சங்கம் என்ற பெயரில் தொடர்ந்து செயல்பட்டனர்.

"நீதிக் கட்சியும் சுயமரியாதை இயக்கமும் 1944-ல் ஒன்றாக இணைந்தன. அதற்குப் பிறகும் சுயமரியாதை இயக்கத்தின் செயல்பாடுகள் நீடித்தன என்றாலும்கூட, சுயமரியாதை இயக்கம் என்ற பெயரில் மிகத் தீவிரமாக பெரியார் இயங்கிய காலகட்டமாக இந்த இரு தசாப்தங்களைக் குறிப்பிடலாம்" என்கிறார் ஆ. திருநீலகண்டன்.

சுயமரியாதை இயக்கம், பெரியார், ஈவெரா, தமிழ்நாடு, திராவிடர் கழகம், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு

பட மூலாதாரம், Facebook/Dravidar Kazhagam

சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகமாக உருவான தருணத்தில் இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்தது. இந்தியாவில் அந்த காலகட்டத்தில் விடுதலை இயக்கமும் உச்சத்தில் இருந்தது. ஆகவே, அப்போது தமிழ்நாட்டில் அரசியல் விடுதலையும் பூகோள விடுதலையுமே மிகத் தீவிரமாக பேசப்பட்ட காலகட்டமாக இருந்தது.

"இந்த காலகட்டத்தில் பெரியார் சமூக விடுதலையையும் அரசியல் விடுதலையையும் சேர்த்துப் பேச ஆரம்பித்தார். பிரிட்டிஷார் இந்த நாட்டில் இருக்கும்போதே, தமிழர்கள் தங்களுக்கான அரசியல் - பூகோள விடுதலையைப் பெற வேண்டும் என அவர் கூறிவந்தார். எல்லோரும் இந்திய தேசிய விடுதலையைப் பேசியபோது, இவர் அதற்கு எதிர் திசையிலான அரசியல் - பூகோள விடுதலையைப் பேசினார்" என்கிறார் அவர்.

காங்கிரசிலிருந்து வெளியேறிய பெரியார், சுயமரியாதை இயக்கத்தைத் துவங்கி நூறாண்டுகள் ஆகிவிட்டன. பெரியார் மறைந்து ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்த இயக்கம் தமிழ்நாட்டில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?

"சமூகம், பண்பாடு, மொழி ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த இயக்கம் இல்லாத மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இது புரியும். வட இந்திய மாநிலங்களில் இங்கிருப்பதைப் போல சாதி சார்ந்த வன்முறைகள் கிடையாது. காரணம், யாரும் அங்கே சாதி கட்டமைப்பைக் கேள்வி கேட்பதே கிடையாது. ஆனால், இங்கே சாதிய ஏற்றத் தாழ்வுக்கு எதிரான குரல்கள் எழுகின்றன. அதைப் பொறுக்க முடியாத ஆதிக்க சக்திகள் வன்முறையைக் கையில் எடுக்கிறார்கள்.

அடுத்ததாக, இங்கே சாதிமறுப்புத் திருமணங்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நடக்கின்றன. அதற்கு கடுமையான எதிர்ப்பு ஏற்படுவதற்குக் காரணம், ஆதிக்க சக்திகளுக்கு அவை கடும் நெருக்கடியை ஏற்படுத்துகின்றன. இதற்கு பெரியாரின் சிந்தனைகள்தான் காரணம். தமிழ்நாட்டில் தொடர்ந்து சாதி கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அது சமூக தளத்தில் நிகழ்ந்த முக்கிய மாற்றம்" என்கிறார் வரலாற்றாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி.

சுயமரியாதை இயக்கம், பெரியார், ஈவெரா, தமிழ்நாடு, திராவிடர் கழகம், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு

பட மூலாதாரம், Facebook/Dravidar Kazhagam

வேறு சில விஷயங்களைப் பட்டியலிடுகிறார் ஆ. திருநீலகண்டன். "இந்த இயக்கத்தின் காரணமாகவே தமிழ்நாடு சமூக - பண்பாட்டு விடுதலையில் மிக முக்கியமான இடத்திற்கு நகர்ந்திருக்கிறது. சாதிப் பட்டம் ஒழிப்பு, பெண்கள் மேம்பாடு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ந்திருக்கிறது. பெரியார் தமிழ் மீது வைத்த ஆக்கப்பூர்வமான விமர்சனங்களால் சில விஷயங்கள் நடந்திருக்கின்றன. பகுத்தறிவு சார்ந்த நவீன இலக்கியம் வெளியாகத் துவங்கியது. அம்பேத்கரின் எழுத்துகள் தமிழில் வெளியாயின.

சுயமரியாதை இயக்க காலகட்டத்தில்தான் பெரியார் தன் பெயருக்குப் பின்னால் இருந்த சாதிப் பட்டத்தை நீக்கினார். 1927ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான முதல் இதழ் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் என்ற பெயரும் வெளியானது. அதற்கு அடுத்த இதழில் வெறும் ஈ.வெ. ராமசாமி என்று மட்டுமே அவரது பெயர் இடம்பெற்றது. அதேபோல, 1929-ல் நடந்த செங்கல்பட்டு மாநாட்டில் சாதிப் பட்டத்தை ஒழிக்கும் தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. அப்படி சாதிப் பட்டத்தை ஒழித்தவர்களின் பெயர்கள் அடுத்த குடிஅரசு இதழில் வெளியாயின. 1929லேயே பெண்களுக்கு சொத்துரிமை அளிக்க வேண்டும் என்ற தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.

சுயமரியாதை இயக்கம் தோன்றும்வரை, தமிழ்நாட்டின் வரலாற்றுப் பண்பாட்டுப் பதிவுகள் பெரும்பாலும் வைதீகம் சார்ந்தவையாகவே இருந்தன. இவற்றையெல்லாம் அவர் கடுமையாக கேள்விக்குள்ளாக்கினார். அவர் எழுப்பிய எதிர்ப்புகள்தான் எதிர் வைதீக நூல்கள், அவைதீக ஆராய்ச்சிகள், எதிர் பண்பாட்டு நூல்கள் வர வழிவகுத்தன. தமிழைத் தொடர்ந்து விமர்சனம் செய்வதன் மூலம் ஒரு முற்போக்கு பண்பாட்டு நகர்வை செய்தார்.

அடிப்படையில், சுயமரியாதை இயக்கம் பார்ப்பனரல்லாத சாதியினரை முற்போக்கு திசையில் நகர்த்தியது என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு முன்பே வள்ளலார், வைகுண்டர், சென்னை வியாக்கியான சங்கம் ஆகியோர் முற்போக்கு சிந்தனை மரபை உருவாக்கினார்கள். பெரியார் ஐரோப்பிய நவீன சிந்தனையை எடுத்துக்கொண்டு, அதை ஒரு இயக்கமாக முன்வைத்தார் என்பதுதான் முக்கியம்" " என்கிறார் ஆ. திருநீலகண்டன்.

சுயமரியாதை இயக்கத்திற்கு முன்பாக, இந்தியாவில் அதுபோன்ற இயக்கங்களுக்கு மிகச் சில உதாரணங்களே இருந்தன என்கிறார்கள் வ. கீதாவும் எஸ்.வி. ராஜதுரையும். அவர்களது பிராமணரல்லாதோர் ஆயிரமாண்டு காலத்தை நோக்கி (Towards a Non - Brahmin Millennium) என்ற நூலில் இந்த இயக்கத்தின் முக்கியப் பங்களிப்பைப் பற்றிக் கூறும்போது, "மகாத்மா ஜோதிபா பூலே ஒரு முன்னோடிதான்; ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் இந்தியா என்ற தேசம் முழுமையாக வடிவமைக்கப்படவில்லை. ஆனால், சுயமரியாதைக்கார்களைப் பொறுத்தவரை அவர்கள், தேசியவாத அரசியலின் உச்சகட்டத்தில் செயல்பட வேண்டியிருந்தது. அவர்கள் காந்தியை எதிர்த்து நின்றது மட்டுமல்ல, உரிமை, அதிகாரம், நீதி ஆகியவற்றை பற்றிய தனித்துவமான ஒரு சிந்தனைக் கட்டமைப்பையும் முன்வைத்தனர். சுயமரியாதை என்ற லட்சியத்தால் மட்டுமே பிணைக்கப்பட்ட புதிய வரலாற்றுப் பொருளை உருவாக்கினர்" என்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckg2rg9eqrlo

Checked
Sun, 11/02/2025 - 17:37
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed