தமிழகச் செய்திகள்

தமிழ்நாட்டில் கனமழை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரில் இருந்த 3 பேர் மீட்கப்பட்டது எப்படி?

2 weeks 3 days ago

தமிழ்நாடு, கனமழை, பருவமழை, மழை பாதிப்பு

படக்குறிப்பு,கனமழை பாதிப்பு

26 மே 2025, 08:45 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தமிழ்நாட்டில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில் திங்கள் காலை வரை அதிகபட்சமான நீலகிரி மாவட்டத்தின் அவலாஞ்சியில் 35 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் சின்னக்கல்லாரில் 21 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக கோவை மாவட்டத்தின் வால்பாறையில் 29.5 செ.மீ மழையும், கோவை மாநகரில் 22 செ.மீ மழையும் பதிவாகியிருந்தது. அதே போல் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் கனமழை செய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. தமிழ்நாட்டிக்கு வருகிற மே 29ம் தேதி வரை கணமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி கேரளாவில் மழை பெய்வதன் மூலம் தனது வருகையை அறிவிக்கும் தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு மே 27-ம் தேதியே தொடங்கிவிடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.

2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு கேரளாவில் முதல் முறையாக பருவ மழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கேரளாவில் மே 24-ம் தேதியே தென் மேற்கு பருவ மழை கேரளாவில் தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று தினங்களில் தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு

தென் மாநிலங்களில் தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கெனவே நீலகிரி, கோவை மாவட்டங்களில் தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று மற்ற இடங்களுக்கும் இது பரவும் என வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் கேரளாவிலும், மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிராவின் சில பகுதிகளிலும், பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகாவின் சில பகுதிகளிலும், ஆந்திர மற்றும் தெலங்கானாவில் பல இடங்களிலும் தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நிலை என்ன?

நீலகிரி, தமிழ்நாடு, கனமழை, பருவமழை, மழை பாதிப்பு

படக்குறிப்பு,நீலகிரியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கனமழையுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது. குறிப்பாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் மழையின் தாக்கம் அதிக அளவில் காணப்பட்டது.

குறிப்பாக உதகை அருகே உள்ள அவலாஞ்சியில் அதிகபட்சமாக 35 சென்டிமீட்டர் மழையும் அப்பர் பவானி பகுதியில் 30 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது. இதனால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது

இந்த கன மழையின் காரணமாக உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம், தேயிலை பூங்கா, அவலாஞ்சி சூழல் சுற்றுலா, உதகை படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், குன்னூர் லேம்ஸ் ராக், பைகாரா நீர்வீழ்ச்சி ஆகிய சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மூடப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

மரம் விழுந்ததில் உயிரிழந்த சிறுவன்

அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டிருந்த நிலையில் நேற்று கேரளா மாநிலம் கள்ளிக்கோட்டை வடகரை தாலுகாவைச் சேர்ந்த பிரசித் என்பவரது குடும்பம் உதகையிலிருந்து கூடலூர் செல்லும் சாலையில் சாலையோரம் உள்ள பைன் ஃபாரஸ்ட் வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். அப்போது அங்கு மரம் விழுந்ததில் பிரசித்தின் மகனான 15 வயது நிரம்பிய ஆதிதேவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அண்டை மாநிலங்களுக்கு மழை எச்சரிக்கை

தமிழ்நாடு, கனமழை, பருவமழை, மழை பாதிப்பு

படக்குறிப்பு,மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்

நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அண்டை மாநிலங்களான கேரள மாநிலம் வயநாடு மற்றும் மலப்புறம் மாவட்ட ஆட்சியர்களுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் அந்தப் பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதால் அவர்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுக்க கோரிக்கை விடுத்ததாகவும், மேலும் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்ட ஆட்சியருக்கும் நீலகிரி மாவட்டத்தின் மழை எச்சரிக்கை கொடுத்து தங்களது மாவட்ட மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கூடலூர் அருகே உள்ள ஓவேலி பகுதியில் கேரளாவைச் சேர்ந்த 4 பேர் பயணித்த கார் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. காருக்குள் மூன்று பேர் சிக்கிக் கொண்டனர். அவர்கள் கூச்சலிட்டதை அப்பகுதிக்கு வந்த தீயணைப்பு துறையினர் மூன்று மணி நேரம் போராடி அவர்களை மீட்டனர்.

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள்

தமிழ்நாடு, கனமழை, பருவமழை, மழை பாதிப்பு

கூடலுார் அருகேயுள்ள வடவயல் என்ற கிராமத்தில் கனமழை காரணமாக, வீடுகள் மிகவும் சேதம் அடைந்திருப்பதால் அரசு பள்ளி ஒன்றில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கூடலூரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தொரப்பள்ளி அருகே உள்ள தேன்வையில் கிராமத்தை ஆற்று வெள்ளம் சூழ்ந்தது. அங்குள்ள குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்து குளம் போல காட்சி அளிக்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் 30க்கும் மேற்பட்ட நபர்கள் தங்களது வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் குழந்தைகளுடன் தவித்து வருகின்றனர்.

வால்பாறையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

தமிழ்நாடு, கனமழை, பருவமழை, மழை பாதிப்பு

படக்குறிப்பு,வால்பாறையில் சரிந்து விழுந்த மரம்

கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதனை ஒட்டியுள்ள எஸ்டேட் பகுதிகளில் சாலைகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

வால்பாறையை அடுத்த பாலாஜி கோயில் செல்லும் பிரதான சாலையான கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் சாலைகளில் விழுந்து அக்கா மலையிலிருந்து வால்பாறை நோக்கி வரும் பேருந்து லாரி ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் சாலையில் கிடந்த மரத்தை அப்புறப்படுத்தி சாலையை சீர் செய்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

முழு கொள்ளளை எட்டிய பில்லூர் அணை

தமிழ்நாடு, கனமழை, பருவமழை, மழை பாதிப்பு

படக்குறிப்பு,பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவான 97 அடியை எட்டியுள்ளது.

அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டம் மற்றும் கேரளாவின் அட்டப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக பருவ மழை பெய்து வருவதால் அனைக்கான நீர்வரத்து வினாடிக்கு 18000 கன அடியாக இருந்து வருகிறது.

அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 18,000 கன அடி தண்ணீர் நான்கு மதகுகள் மூலம் உபரியாக பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது

பவானி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ துணி துவைக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பாக நெல்லித்துறை மேட்டுப்பாளையம், ஸ்ரீரங்க ராயன் ஓடை, சிறுமுகை, ஆலங்கொம்பு, வச்சினம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் தொடர்ந்து பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை ஒலிபெருக்கி மூலம் தெரிவித்து வருகின்றனர்.

கோவையில் பழமையான மரங்கள் அகற்றம்

கோவை, தமிழ்நாடு, கனமழை, பருவமழை, மழை பாதிப்பு

படக்குறிப்பு,கோவையில் வேப்ப மரம் வீட்டின் சுவரின் மீது சாய்ந்தது

கோவையில் பருவமழை துவங்கியுள்ள நிலையில் மாநகராட்சியால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் காணப்படும் பழமையான மரங்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டு வருகின்றன.

நேற்று மாலை உக்கடம் கோட்டைமேடு வின்சென்ட் ரோட்டில் உள்ள 35 ஆண்டு கால பழமையான மே பிளவர் மரத்தை மாநகராட்சி ஊழியர்கள் வெட்டி அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு காரணத்திற்ளாக வின்சென்ட் ரோடு சாலை மூடப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

குனியமுத்தூர் பகுதியில் மின் நகரில் கனமழையின் காரணமாக வேப்ப மரம் வீட்டின் சுவரின் மீது சாய்ந்தது. இதையடுத்து தீயணைப்புத் துறையினர் அந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

ராமநாதபுரத்தில் சூறைக்காற்று

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் ராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் சாலைகளில் புழுதி காற்று வீசி வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தென் தமிழக கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் 40 முதல் 55 வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தின் சுற்றுவட்டார பகுதிகளான பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், உச்சிப்புளி ஆகிய கடலோர பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக சூறைக்காற்று வீசி வருகின்றன.

காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள், ஆங்காங்கே போடப்பட்டிருந்த பந்தல்கள் காற்றில் பறக்கின்றன.

தென்னை மரங்கள், வாழை மரங்கள் இந்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வளைந்து அங்கும், இங்குமாக அசைந்து ஆடுகிறது. சாலைகளில் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு காற்றின் வேகம் உள்ளதால் பாதசாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வீசி வரும் சூறைக்காற்று ஏற்பட்ட புழுதியால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கடலுக்குச் செல்லாத நாட்டுப்படகு மீனவர்கள்

நெல்லை, திருநெல்வேலி, தமிழ்நாடு, கனமழை, பருவமழை, மழை பாதிப்பு

படக்குறிப்பு,நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.

அரபிக்கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் 10 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 600 நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கூடங்குளம், உவரி, கூத்தங்குழி, கூட்டப்புளி, பெருமணல், தோமையார்புரம், பஞ்சல், இடிந்தகரை உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களைச் சேர்ந்த சுமார் 6000 நாட்டு படகு மீனவர்கள் இன்று மீன் பிடிக்க செல்லவில்லை.

குமரி மீனவர்களுக்கு எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதிகளில், இன்று தொடங்கி வருகிற 29 வரை சூறாவளி காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை வீச கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது அதே போன்று சுற்றுலா பயணிகளும் கடற்கரை, நீர் நிலைகளில் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீர் வீழ்ச்சிகளுக்குச் செல்லத் தடை

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர் வீழ்ச்சிகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சிறுவாணி அருகே அமைந்துள்ள கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சிக்குச் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள திருமூர்த்தி அணைக்கு மேல் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவி நீர்வீழ்ச்சியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அங்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தென்காசி மாவட்டம் குற்றால நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு, தமிழ்நாடு, கனமழை, பருவமழை, மழை பாதிப்பு

படக்குறிப்பு,முல்லைப் பெரியாறு அணை

தமிழக - கேரளா எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்து இருப்பதால் அணைக்கு நீர்வரத்து ஆயிரம் கன அடிக்கும் மேலாக அதிகரித்துள்ளது.

அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்ந்து 115.65 அடியாக உள்ளது.

அணைக்கு வரும் நீர்வரத்து 1,648.03 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 100 கன அடியாகவும், அணையின் மொத்த நீர் இருப்பு 1844.00 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் 55.08 மில்லி மீட்டரும் அளவும் தேக்கடி பகுதியில் 36.2 மில்லி மீட்டர் அளவும் மழை பதிவாகியிருந்தது. இங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு படை கேரளா விரைவு

கேரளாவிற்கு அடுத்த மூன்று நாட்களுக்கு அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கக் கூடிய நிலையில் தமிழ்நாட்டில் இருந்து பேரிடர் மீட்பு படையினர் கேரளா விரைந்துள்ளனர்.

அரக்கோணத்தை மையமாகக் கொண்டுள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் கேரள மாநிலம் விரைகின்றனர்.

கேரளாவின் காசர்கோடு, மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு 30 பேர் கொண்ட மூன்று குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும் மோப்ப நாய்கள் பிரின்ஸ் மற்றும் மிக்கி ஆகியோர் கொண்ட குழுவினர் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள விரைவதாக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/crk2j7ye5z8o

நெய்வேலி நிலக்கரி சுரங்கங்களை அண்மித்த 'நீரில் 115 மடங்கு அதிக பாதரசம்' - பிபிசி தமிழ் கள ஆய்வு

2 weeks 3 days ago

'நீரில் 115 மடங்கு அதிக பாதரசம்' - என்எல்சியை ஒட்டிய கிராமங்களில் என்ன நடக்கிறது? பிபிசி தமிழ் கள ஆய்வு

என்.எல்.சி, நெய்வேலி, நிலக்கரி சுரங்கம், அனல்மின் நிலையம், கடலூர், சுகாதாரப் பிரச்னைகள்

பட மூலாதாரம்,NLC

படக்குறிப்பு,என்.எல்.சி

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

"வேலைக்குப் போனால் 200 ரூபாய் சம்பளம் வரும். மாதம் மருந்து செலவுக்கே மூன்றாயிரம் தேவைப்படுகிறது. தனியார் மருத்துவரிடம் தான் சிகிச்சை பெறுகிறேன். எங்கள் கிராமத்தில் மருத்துவ வசதிகள் இல்லை"

நெய்வேலி நிலக்கரி சுரங்கங்களை ஒட்டியுள்ள சிறிய கிராமமான அம்மேரியைச் சேர்ந்த மணி என்பவரின் கூற்று இது. விவசாய கூலியாக இருக்கும் அவரது 2 சிறுநீரகங்களுமே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் (NLC) நிறுவனத்தை ஒட்டியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கு அனல்மின் நிலையம் மற்றும் சுரங்கத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் காற்று மாசு ஆகியவையே காரணம் என்று சுற்றுச்சூழல் அமைப்புகள் குற்றம் சுமத்துகின்றன.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நெய்வேலியில் நடத்திய ஆய்வில், நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு பாதரசம் இருப்பதைக் கண்டறியப்பட்டிருப்பதாக, பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஆனால், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என என்எல்சி நிர்வாகம் கூறுகிறது. அப்படியானால் நிலக்கரி சுரங்கங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் என்ன பிரச்னை? பிபிசி தமிழின் கள ஆய்வில் தெரியவந்தது என்ன?

என்.எல்.சி, நெய்வேலி, நிலக்கரி சுரங்கம், அனல்மின் நிலையம், கடலூர், சுகாதாரப் பிரச்னைகள்

படக்குறிப்பு,நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு பாதரசம் இருப்பது தெரியவந்துள்ளது

64 ஆயிரம் ஏக்கர் திறந்தவெளி சுரங்கம்

கடலூர் மாவட்டத்தில் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன் இந்தியா லிமிடெட் இயங்கி வருகிறது.

சுமார் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளி சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வெட்டியெடுக்கப்படும் நிலக்கரி, நான்கு அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அனல் மின் நிலையத்தில் 3390 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் உள்ளதாக என்எல்சியின் இணையதளம் கூறுகிறது. நிலக்கரி சுரங்கத்துக்காக 1956-ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

திறந்தவெளி நிலக்கரி சுரங்கங்கள் அமைந்துள்ள இடத்துக்கு சுமார் 2 கி.மீ தொலைவில் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அம்மேரி, ஆதண்டார் கொல்லை, கரிவெட்டி, கூரைப்பேட்டை, மூலப்பட்டு ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன.

நீர் நிலைகளில் பாதரசம்

என்.எல்.சி, நெய்வேலி, நிலக்கரி சுரங்கம், அனல்மின் நிலையம், கடலூர், சுகாதாரப் பிரச்னைகள்

படக்குறிப்பு,கிராமங்களில் உள்ள நீர் ஆதாரங்களில் காட்மியம், துத்தநாகம், போரான் (Boron), செலினியம் போன்ற உலோகங்கள் இருப்பது தெரியவந்ததாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு நெய்வேலி, பரங்கிப்பேட்டை ஆகிய பகுதிகளில் மக்கள் பயன்பாட்டில் உள்ள குடிநீர், நிலத்தடி நீர், நீர்நிலை, விவசாய நிலம் ஆகியவற்றில் 'பூவுலகின் நண்பர்கள்' என்ற சுற்றுச்சூழல் அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது.

இங்கு சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வகங்களுக்கு அனுப்பி சோதனை செய்தபோது, வடக்கு வெள்ளூரில் உள்ள குடிநீர்த் தொட்டியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு பாதரசம் இருப்பது தெரியவந்தது என அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

இதுதவிர, கிராமங்களில் உள்ள நீர் ஆதாரங்களில் காட்மியம், துத்தநாகம், போரான் (Boron), செலினியம் போன்ற கன உலோகங்கள் இருப்பது தெரியவந்ததாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாயின. இதனைக் கண்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தது தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம்.

மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகங்கள், கடலூர் மாவட்ட ஆட்சியர், மெட்ரோ குடிநீர் வாரியம் ஆகியோர் எதிர்மனுதாரர்களாக வழக்கில் சேர்க்கப்பட்டனர்.

களநிலவரம் என்ன?

என்.எல்.சி, நெய்வேலி, நிலக்கரி சுரங்கம், அனல்மின் நிலையம், கடலூர், சுகாதாரப் பிரச்னைகள்

படக்குறிப்பு,நெய்வேலி முதல் சுரங்கத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் ஆதாண்டார் கொல்லை, மூலப்பட்டு, அம்மேரி உள்பட சுமார் 65 கிராமங்கள் உள்ளன.

நெய்வேலி முதல் சுரங்கத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் ஆதாண்டார் கொல்லை, மூலப்பட்டு, அம்மேரி உள்பட சுமார் 65 கிராமங்கள் உள்ளன.

இந்தக் கிராமங்களின் அருகில் சுரங்கத்தில் இருந்து நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகள் நடந்து வருவதை பிபிசி தமிழ் கள ஆய்வின் போது பார்க்க முடிந்தது. பல இடங்களில் மிகப் பெரிய அளவில் குழிகள் தோண்டப்பட்டிருந்தன.

சுரங்கம் செயல்படும் இடங்களுக்குச் சென்றபோது, முழுதாக கம்பி வேலி அமைக்கப்பட்டு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் (CISF) தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அங்கு நம்மிடம் பேசிய சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி ஒருவர், "எந்தப் பகுதியில் இருந்து வருகிறீர்கள்?" என விசாரித்தார். அந்த வழியாக செல்லும் ஒவ்வொருவரையும் அவர் தீவிரமாக கண்காணிப்பதைப் பார்க்க முடிந்தது.

நிலத்தடி நீரால் சிறுநீரக பாதிப்பா?

என்.எல்.சி, நெய்வேலி, நிலக்கரி சுரங்கம், அனல்மின் நிலையம், கடலூர், சுகாதாரப் பிரச்னைகள்

படக்குறிப்பு,சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்பட்டதால் அதற்கான மருந்துகளை தொடர்ந்து உட்கொண்டு வருகிறார் தனசேகரன்.

அங்கிருந்து ஆதண்டார் கொல்லை கிராமத்துக்கு பிபிசி தமிழ் குழுவினர் சென்றோம். ''இங்கு குடியேறி 45 ஆண்டுகள் ஆகிவிட்டd. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கை, கால்களில் வலி, வீக்கம் இருந்ததால் ஆஸ்பத்திரிக்குப் போனேன். உப்பு அதிகமானதாக கூறி பரிசோதனைகளை எடுத்தார்கள்' எனக் கூறுகிறார், தனசேகரன்.

இவருக்கு சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்பட்டதால் அதற்கான மருந்துகளை தொடர்ந்து உட்கொண்டு வருகிறார். 'எனக்கு மது, சிகரெட் என எந்தப் பழக்கமும் இல்லை. நிலத்தடி நீரைத் தான் குடிப்பதற்கு பயன்படுத்தி வருகிறேன்.' எனக் கூறினார்.

தனது வீட்டில் இருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் நிலக்கரிச் சுரங்கம் இருப்பதாக கூறுகிறார் தனசேகரனின் மகன் சத்தியமூர்த்தி.

"என் அப்பாவுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் மருத்துவ செலவுக்கு தேவைப்படுகிறது. ஒருநாள் மருந்து சாப்பிடாவிட்டால் கால் வீக்கம் அதிகமாகிவிடும். இதைக் கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் டயாலிஸில் வரை சென்றிருக்கும்" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் சத்தியமூர்த்தி.

மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் சொன்னது என்ன?

என்.எல்.சி, நெய்வேலி, நிலக்கரி சுரங்கம், அனல்மின் நிலையம், கடலூர், சுகாதாரப் பிரச்னைகள்

படக்குறிப்பு,கடலூரில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 115 மடங்கு பாதரசம் உள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது.

கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கூடுதல் முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளர் விஜயலட்சுமி கூடுதல் அறிக்கை ஒன்றை தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தார்.

அதில், நீர்நிலைகள் (Surface water), நிலத்தடி நீர், மண், சாம்பல் துகள் என 22 மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

ஆய்வில் 17 நீர்நிலைகளில் 15 இடங்களில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவில் பாதரசம் (0.0012 mg/l to 0.115 mg/l) உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடலூரில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 115 மடங்கு பாதரசம் உள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது. இவை குடிநீர் மற்றும் பாசனத்துக்கு ஏற்றதல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்.எல்.சி, நெய்வேலி, நிலக்கரி சுரங்கம், அனல்மின் நிலையம், கடலூர், சுகாதாரப் பிரச்னைகள்

பட மூலாதாரம்,NLC

படக்குறிப்பு,வானதி ராயபுரம் பகுதிகளில் நிலத்தடி நீர் மாதிரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 62 மடங்கு அதிகம் பாதரசம் இருப்பது அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்

"வளையமாதேவி கூட்டுக் குடிநீர்த் திட்டம், வாலஜா ஏரி, அய்யன் ஏரி, பரவனாறு ஆகியவை குடிநீர் ஆதாரமாக இருந்துள்ளன. நீர்நிலைகளில் இயற்கையாக பாதரசம் உருவாகாது. இவற்றில் எப்படி உருவானது" என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பிரபாகரன் வீரஅரசு கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சோதனையில் 9 நிலத்தடி நீர் மாதிரிகளில் ஆறு இடங்களில் பாதரசம் இருந்துள்ளது. அதன் அனுமதிக்கப்பட்ட அளவு என்பது 0.001 Mg/1 என, இந்திய அரசின் குடிநீர் தரக்கட்டுப்பாடு வரையறுத்துள்ளது.

குடிநீரில் 0.006 mg/L என்ற அளவில் பாதரசம் இருக்கலாம் எனவும் செலினியத்தில் 0.01 என்ற அளவிலும் இருக்கலாம் எனவும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

அப்படியிருக்கும்போது, இங்கு 0.0025 Mg/l முதல் 0.0626 வரை பாதரசம் காணப்பட்டுள்ளது. "இது அனுமதிக்கப்பட்ட அளவைவிட 2.5 முதல் 62 மடங்கு வரை அதிகம்" எனக் கூறுகிறார், பிரபாகரன் வீர அரசு.

அதிலும், வானதி ராயபுரம் பகுதிகளில் நிலத்தடி நீர் மாதிரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 62 மடங்கு அதிகம் பாதரசம் இருப்பது அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

"நிலக்கரி சுரங்கங்களை ஒட்டி வாழும் மக்கள் இந்த நிலத்தடி நீரைத் தான் பயன்படுத்துகின்றனர்" எனவும் அவர் கூறினார்.

"இது வெறும் வாழ்வாதார பிரச்னை மட்டும் அல்ல. மக்களின் ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஏராளமானோர் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் டயாலிஸிஸ் செய்து வருகின்றனர். அவர்களுக்கு முறையான சிகிச்சை வசதிகள் கிடைப்பதில்லை" என்கிறார், பிரபாகரன் வீர அரசு.

"நிலத்தடி நீரைத் தவிர வேறு ஆதாரம் இல்லை"

என்.எல்.சி, நெய்வேலி, நிலக்கரி சுரங்கம், அனல்மின் நிலையம், கடலூர், சுகாதாரப் பிரச்னைகள்

படக்குறிப்பு,அம்மேரி கிராமத்தில் சுமார் 25 வருடங்களாக வசிக்கும் மணி என்பவருக்கும் இதே பிரச்னை தான்.

அம்மேரி கிராமத்தில் சுமார் 25 வருடங்களாக வசிக்கும் மணி என்பவருக்கும் இதே பிரச்னை தான். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் உடல் வீக்கம் அதிகமானதால், தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

"இரண்டு சிறுநீரகமும் சுருங்கிப் போய்விட்டதாக மருத்துவர் கூறினார். ஒவ்வொரு முறையும் சிகிச்சைக்குச் செல்லும்போது 3 ஆயிரம் செலவாகிறது." என்கிறார் மணி.

"மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்றால் கடலூர் அல்லது புதுச்சேரி போக வேண்டும். எங்கள் கிராமத்துக்கு ஒரு செவிலியர் கூட வந்ததில்லை" எனவும் அவர் குறிப்பிட்டார்.

"நிலத்தடி நீரைத் தவிர வேறு எந்தத் தண்ணீரும் எங்களுக்கு வருவதில்லை." என்கிறார் மணி.

அரசு மருத்துவமனை உள்ளது.. ஆனால்?

என்.எல்.சி, நெய்வேலி, நிலக்கரி சுரங்கம், அனல்மின் நிலையம், கடலூர், சுகாதாரப் பிரச்னைகள்

படக்குறிப்பு,இக்கிராமத்தில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் என்எல்சி அரசு மருத்துவமனை அமைந்துள்ளது.

அம்மேரி கிராமத்தில் மட்டும் சுமார் 700 குடும்பங்கள் வசிக்கின்றன. இக்கிராமத்தில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் என்எல்சி மருத்துவமனை அமைந்துள்ளது.

"இங்கு பொதுமக்கள் சென்றால் முதலுதவி சிகிச்சை மட்டும் செய்வார்கள். என்எல்சி ஊழியர்களுக்கு மட்டுமே அங்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. கிராமத்தில் எந்த மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டதில்லை" என்கிறார், ஆதண்டார் கொல்லை கிராமத்தைச் சேர்ந்த மணி.

நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வெளியே வரும் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து என்எல்சி டவுன்ஷிப்புக்கு (TownShip) கொடுப்பதாகக் கூறும் மணி, "கிராமங்களுக்கு அந்த நீர் வருவதில்லை. சுரங்கத்தில் மண்ணை இலகுவாக்குவதற்கு வெடி வைக்கின்றனர். அதன் கழிவுகள் ஓடை வழியாக செல்கிறது" எனக் குறிப்பிட்டார்.

என்.எல்.சி, நெய்வேலி, நிலக்கரி சுரங்கம், அனல்மின் நிலையம், கடலூர், சுகாதாரப் பிரச்னைகள்

படக்குறிப்பு,சுரங்கத்தின் பரப்பளவு அதிகரிப்பதால் கிராமத்துக்கு பிரச்னை அதிகரிப்பதாகக் கூறும் ரவி

சுரங்கத்தின் பரப்பளவு அதிகரிப்பதால் கிராமத்துக்கு பிரச்னை அதிகரிப்பதாகக் கூறும் ரவி, "கீழே படியும் கரி உள்பட அனைத்துக் கழிவுகளையும் வெளியேற்றுகின்றனர். அது இங்குள்ள ஓடை வழியாக செல்கிறது" என்கிறார்.

அனல்மின் நிலையத்தின் கழிவுகள், வாலஜா ஏரியில் இருந்து பக்கிங்ஹாம் கால்வாய் சென்று அங்கிருந்து பெருமாள் ஏரி மூலமாக கடலில் சென்று கலப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆதண்டார் கொல்லையைச் சுற்றி வந்தபோது, ஊருக்குள் நீரோடை போல தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. "அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இது" எனக் கூறினார் ரவி. அந்த நீர் கருப்பு நிறத்தில் இருந்தது.

என்.எல்.சி, நெய்வேலி, நிலக்கரி சுரங்கம், அனல்மின் நிலையம், கடலூர், சுகாதாரப் பிரச்னைகள்

படக்குறிப்பு,"அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இது" எனக் கூறினார் ரவி. அந்த நீர் கருப்பு நிறத்தில் இருந்தது."

என்னென்ன பாதிப்புகள் வரும்?

"பாதரசம் உள்ளிட்ட கன உலோகங்களால் மனித உடலுக்கு என்னென்ன பாதிப்புகள் வரும்?" என, சூழலியலுக்கான மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த புகழேந்தியிடம் பிபிசி தமிழ் கேட்டது.

"சிறுநீரகங்களால் கன உலோகங்கள் வடிகட்டப்படும்போது அவை அதில் தங்கி பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவை மோசமான புற்றுநோய் பாதிப்பையும் ஏற்படுத்தும்" என்று அவர் கூறுகிறார்.

தொழிற்சாலைக் கழிவுகளில் இருந்து ஆற்றில் கலக்கும் கன உலோகங்களால் புற்றுநோய், சிறுநீரக பாதிப்புகள் வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

என்.எல்.சி, நெய்வேலி, நிலக்கரி சுரங்கம், அனல்மின் நிலையம், கடலூர், சுகாதாரப் பிரச்னைகள்

படக்குறிப்பு,என்.எல்.சி

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் பதில்

நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு ஏற்பட்டுள்ள உடல்ரீதியான பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் பிபிசி தமிழ் கேட்டது.

"இதுவரை என் கவனத்துக்கு வரவில்லை. அங்குள்ள நிலவரம் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கிறேன்" என்று மட்டும் பதில் அளித்தார்.

என்எல்சியின் விளக்கம் என்ன?

என்எல்சியின் மக்கள் தொடர்புத் துறையின் துணைப் பொது மேலாளர் கல்பனா தேவியிடம் பிபிசி தமிழ் பேசியது.

"உடல்நலப் பிரச்னைக்கு பாதரசம் உள்ளிட்டவை காரணம் எனக் கூறுகின்றனர். அதற்கான காரணம் குறித்து எந்த ஆவணங்களும் (Records) இல்லை" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள அறிக்கைக்கு நீதிமன்றத்தில் பதில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். இந்த விவகாரத்தை சட்டரீதியாகவே நாங்கள் கையாண்டு வருகிறோம்" எனக் கூறினார்.

மக்களுக்கு மருத்துவ முகாம்களை நடத்தாமல் இருப்பது குறித்துக் கேட்டபோது, "ஏராளமான மருத்துவ முகாம்கள் நடந்து வருகின்றன. சில விஷயங்கள் மக்களிடையே தவறாக கொண்டு செல்லப்படுகிறது. இதை சட்டரீதியாக என்எல்சி நிர்வாகம் கையாள உள்ளது" என்கிறார் கல்பனா தேவி.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/clyg6npd68po

சென்னையில் மகிழும் மாற்றுத்திறனாளி பெண்கள்

2 weeks 4 days ago

"மற்ற ஜிம்களில் எங்களையே உற்றுப் பார்ப்பார்கள்" - சென்னையில் மகிழும் மாற்றுத்திறனாளி பெண்கள்

24 மே 2025, 01:14 GMT

மாற்றுத்திறனாளி பெண்களுக்காக செயல்படும் இலவச உடற்பயிற்சிக் கூடம் தற்போது சென்னை மாநகராட்சியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இங்கே உடற்பயிற்சி மேற்கொள்ள வரும் பெண்கள், இந்த உடற்பயிற்சிக் கூடங்கள் குறித்து கூறுவது என்ன? அவர்களின் வாழ்வில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த உடற்பயிற்சி கூடங்கள். முழு விவரம் வீடியோவில்!

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c771v21v01vo

தமிழரின் தொன்மை கூறும் கீழடி ஆய்வறிக்கையை கேள்வி எழுப்பும் இந்திய தொல்லியல் துறை - என்ன நடக்கிறது?

2 weeks 5 days ago

கீழடி, தமிழர் நாகரிகம், இந்திய தொல்லியல் துறை, அமர்நாத் ராமகிருஷ்ணன்

பட மூலாதாரம்,ARCHAEOLOGICAL SURVEY OF INDIA

படக்குறிப்பு,கீழடி

கட்டுரை தகவல்

  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் இந்தியத் தொல்லியல் துறையின் சார்பில் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட இரண்டு அகழாய்வுகள் தொடர்பான ஆய்வறிக்கையை அவர் தாக்கல் செய்திருக்கும் நிலையில், சில விளக்கங்களைக் கோரி அந்த ஆய்வறிக்கை திருப்பி அனுப்பப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி என்ன?

982 பக்க அறிக்கை தாக்கல்

மதுரையில் இருந்து 13 கி.மீ. தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடி தொல்லியல் தளத்தை 2014-ஆம் ஆண்டுவாக்கில் இந்தியத் தொல்லியல் துறையின் (ஏஎஸ்ஐ) கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் கண்டறிந்தார்.

இதற்குப் பிறகு இந்த இடத்தில் 2014-15, 2015-16 ஆகிய இரண்டு ஆண்டுகளில் அவரது தலைமையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்குப் பிறகு, இந்தியத் தொல்லியல் துறை மேலும் ஒரு முறை அகழாய்வு நடத்தியது. இதன் பின்பு மாநிலத் தொல்லியல் துறை அங்கு தொடர்ந்து அகழாய்வுகளை மேற்கொண்டுவருகிறது.

இந்தியத் தொல்லியல் துறை நடத்திய முதல் இரண்டு அகழாய்வுகளின் ஆய்வறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏஎஸ்ஐயிடம் சமர்ப்பித்தார். இந்த அறிக்கை 982 பக்கங்களுக்கு எழுதப்பட்டிருந்தது.

கீழடி, தமிழர் நாகரிகம், இந்திய தொல்லியல் துறை, அமர்நாத் ராமகிருஷ்ணன்

பட மூலாதாரம்,KEELADIMUSEUM.TN.GOV.IN

படக்குறிப்பு,கீழடி அகழாய்வுத் தளம் - வான்வழிப் பார்வை

அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இரண்டாண்டுகள் கழிந்துவிட்டாலும் இந்த அறிக்கையை ஏஎஸ்ஐ வெளியிடவில்லை. தற்போது, இந்த அறிக்கை தொடர்பாக சில கேள்விகளை எழுப்பி, அறிக்கை அமர்நாத் ராமகிருஷ்ணனிடமே திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது.

அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்ப்பித்த அறிக்கையை இரண்டு நிபுணர்களிடம் அனுப்பியதாகவும், அறிக்கையை மேலும் நம்பகத்தன்மையுள்ளதாக ஆக்க, அந்த நிபுணர்கள் சில கேள்விகளை எழுப்பியிருப்பதாகவும் ஏஎஸ்ஐ தெரிவித்திருக்கிறது.

இரண்டு அகழாய்வுகளிலும் கிடைத்த பொருட்களை வைத்துப் பார்க்கும்போது, அந்த இடத்தில் மூன்று பண்பாட்டு காலகட்டம் நிலவியிருக்க வேண்டும் எனக் கருதுவதாக அமர்நாத் ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியிருந்தார். இதில் முதலாவது காலகட்டம் கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுவரை நிலவியிருக்க வேண்டும் என்றும் இரண்டாவது காலகட்டம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. முதலாம் நூற்றாண்டின் முடிவு வரை இருந்திருக்கலாம் என்றும் மூன்றாவது காலகட்டம் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டின் முடிவிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டையும் தாண்டிச் செல்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதன் அடிப்படையில் சில கேள்விகள் ஏஎஸ்ஐயால் எழுப்பப்பட்டுள்ளன.

கீழடி, தமிழர் நாகரிகம், இந்திய தொல்லியல் துறை, அமர்நாத் ராமகிருஷ்ணன்

பட மூலாதாரம்,KEELADIMUSEUM.TN.GOV.IN

படக்குறிப்பு,இரண்டு அகழாய்வுகளிலும் கிடைத்த பொருட்களின் அடிப்படையில் மூன்று பண்பாட்டு காலகட்டம் அங்கே நிலவியிருக்க வேண்டும் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையில் கூறியிருந்தார்

ஏஎஸ்ஐயால் எழுப்பப்பட்ட கேள்விகள்

1. கீழடியில் நிலவியதாகச் சொல்லப்படும் மூன்று காலகட்டங்களுக்கும் சரியான பெயர்களை (nomenclature) வழங்க வேண்டும் எனச் சொல்லப்பட்டுள்ளது.

2. முதலாவது காலகட்டம், கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுவரை நிலவியிருக்க வேண்டும் என அறிக்கை கூறும் நிலையில், அதற்கு உறுதியான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். மற்ற இரண்டு காலகட்டங்களையும் ஏஎம்எஸ் காலக் கணிப்பு முறைப்படி (Accelerator Mass Spectrometry) உறுதிசெய்ய வேண்டும். முதல் காலகட்டத்திற்கு தற்போது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காலக் கணிப்பு மிகக் கூடுதலாகத் தெரிவதாகவும் அதிகபட்சமாக இந்தக் காலகட்டம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் குறிப்படப்பட்டுள்ளது.

3. அறிவியல்ரீதியாக கிடைத்த தேதிகளுக்கு ஆழத்தைக் குறிப்பிடுவது மட்டும் போதுமானதல்ல. பண்பாட்டு அடுக்குகளின் எண்களையும் தரவேண்டும். அப்போதுதான் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.

4. அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள வரைபடங்களுக்குப் பதிலாக மேம்பட்ட வரைபடங்களை வழங்க வேண்டும். கிராமத்தின் வரைபடம் தெளிவில்லாமல் உள்ளது. ஏற்ற இறக்கங்களைக் குறிப்பிடும் வரைபடம், பண்பாட்டு அடுக்குகளின் வரைபடம், எங்கு தோண்டப்பட்டது என்பதைக் குறிப்பிடும் வரைபடங்கள் தேவை என இந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

கீழடி, தமிழர் நாகரிகம், இந்திய தொல்லியல் துறை, அமர்நாத் ராமகிருஷ்ணன்

பட மூலாதாரம்,KEELADIMUSEUM.TN.GOV.IN

படக்குறிப்பு,கீழடி அகழ்வாய்வு தளம் (கோப்புப்படம்)

நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம்

இந்தத் தகவல் வெளியான நிலையில், மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். "கீழடியின் உண்மைகளை அதிகாரபூர்வமாக அறிவிக்க ஒன்றிய தொல்லியல் துறை எளிதில் முன்வராது. தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும் என்றென்றும் எதிரிகள் யார் என்பதை ஒன்றிய தொல்லியல் துறையின் ஒவ்வொரு செயலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது" என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

சு. வெங்கடேசன் வேறொரு குற்றச்சாட்டைச் சுமத்துகிறார். "அதாவது, கீழடி ஆய்வறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்பித்த பிறகு, அந்த அறிக்கை எப்போது வெளியிடப்படும் என நாடாளுமன்றத்தில் பல முறை கேள்வியெழுப்பப்பட்டிருக்கிறது. கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் கூட கேள்வி எழுப்பப்பட்டது. விரைவில் சமர்ப்பிப்போம் எனத் தெரிவித்தார்கள்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறதா என்பதை ஆராயும் நாடாளுமன்ற உறுதிக்குழுவின் கூட்டம் வரும் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை ஊட்டியில் நடக்கவிருக்கிறது. கீழடி அறிக்கையை தாக்கல் செய்யாதது ஏன் என அங்கு பதிலளிக்க வேண்டும் என்பதால் இப்போது கேள்வி எழுப்பியிருக்கின்றனர்," என்கிறார் சு. வெங்கடேசன்.

கீழடி, தமிழர் நாகரிகம், இந்திய தொல்லியல் துறை, அமர்நாத் ராமகிருஷ்ணன்

பட மூலாதாரம்,SU VENKATESAN MP/FACEBOOK

படக்குறிப்பு,இந்திய தொல்லியல் துறையின் நடவடிக்கைக்கு சு.வெங்கடேசன் கண்டனம்

இது ஒரு வழக்கமான நடவடிக்கையா?

இது குறித்து பிபிசியிடம் பேசிய உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும் Journey of a Civilization: Indus to Vaigai நூலின் ஆசிரியருமான ஆர். பாலகிருஷ்ணன், இது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகத் தெரிவித்தார். "இந்த நடவடிக்கை மிக விசித்திரமானதாக இருக்கிறது. அறிக்கையைத் தாக்கல் செய்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இது நடக்கிறது. இந்த அறிக்கையை உருவாக்கி, பதிப்பிப்பதற்கே நீதிமன்றம் தலையிட வேண்டியிருந்தது. இது பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த அகழாய்வு. இது ஒரு தனித்த நிகழ்வல்ல. ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கைகூட 15 ஆண்டுகள் கழித்துதான் வெளியானது" என்கிறார் அவர்.

மேலும், "எந்த ஒரு நாட்டின் தேசிய வரலாறும் பிராந்திய வரலாற்றுப் போக்குகளை ஒரு அடிப்படைக் கட்டுமானமாகக் கொள்ள வேண்டும். தமிழ்ச் சமூகத்தின் தனித்துவமிக்க பண்பாட்டு ஆழத்தையும் இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் அதற்கான சரியான இடத்தையும் புறக்கணிக்க முடியாது. இது வருத்தத்தை அளிக்கிறது. அறிவியல் கருத்துகள்கூட, கேள்வியெழுப்பப்பட்டு, மதிப்பிடப்பட வேண்டியவைதான். ஆனால், ஓர் அனுபவம் மிக்க தொல்லியலாளரின் அறிக்கை பதிப்பிக்கப்படுவதற்கு முன்பாகவே இம்மாதிரியான ஒரு நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்க வேண்டியதில்லை" என்கிறார் அவர்.

ஆனால், இது ஒரு வழக்கமான நடைமுறைதான் என்கிறார் ஏஎஸ்ஐயின் முன்னாள் கண்காணிப்பாளரான தி. சத்தியமூர்த்தி. "ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்த பிறகு, அந்த அறிக்கை நிபுணர்களிடம் கருத்துக்காக அனுப்பப்படும். அவர்கள் சில கேள்விகளை எழுப்புவார்கள். அதாவது, தற்போது அகழாய்வுச் செய்யப்பட்ட இடத்தில் கிடைத்த முடிவுகளை வைத்து மட்டும் பார்க்காமல், மற்ற இடங்களோடும் ஒப்பீடு செய்தும் கேள்வியெழுப்புவார்கள். இது வழக்கமான நடைமுறையே தவிர, வேறு இல்லை. எல்லாவற்றையும் தமிழ்நாட்டிற்கு எதிரானதாகப் பார்க்க வேண்டியதில்லை" என்கிறார் தி. சத்தியமூர்த்தி.

கீழடியில் ஏஎஸ்ஐ மேற்கொண்ட அகழாய்வின் ஆய்வறிக்கையை வெளியிட வேண்டுமென தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சு. வெங்கடேசன், து. ரவிக்குமார், கனிமொழி உள்ளிட்டோர் தொடர்ந்து கேள்வியெழுப்பிவந்துள்ளனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. அந்த வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பதிலளித்த ஏஎஸ்ஐ, இன்னும் 9 மாதங்களில் அறிக்கை வெளியிடப்படும் எனக் கூறியது. அப்படிக்கூறி ஒன்றேகால் ஆண்டுகளுக்குப் பிறகு அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் விரும்பவில்லை. அவர் தற்போது மத்தியத் தொல்லியல் துறையின் Antiquity பிரிவின் இயக்குநராக இருந்துவருகிறார்.

கீழடி, தமிழர் நாகரிகம், இந்திய தொல்லியல் துறை, அமர்நாத் ராமகிருஷ்ணன்

பட மூலாதாரம்,R.BALAKRISHNAN/FACEBOOK

படக்குறிப்பு, இந்த நடவடிக்கை மிக விசித்திரமானதாக இருக்கிறது என ஆர்.பாலகிருஷ்ணன் கருத்து

அமர்நாத் ராமகிருஷ்ணன் அளித்த கீழடி அறிக்கையில் என்ன தகவல்கள் இடம்பெற்றுள்ளன?

கீழடியில் தான் மேற்கொண்ட இரண்டு அகழாய்வுகள் தொடர்பான ஆய்வறிக்கையை 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்தார். அந்த ஆய்வறிக்கையில் பின்வரும் முக்கிய முடிவுகள் குறிப்பிடப்பட்டிருந்தன:

1. கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை மேற்கொண்ட இரண்டு அகழாய்வுகளிலும் கிடைத்த பொருட்களை வைத்துப் பார்க்கும்போது, இங்கே மூன்று பண்பாட்டு காலகட்டங்கள் நிலவியிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. இதில் முதலாவது காலகட்டம் கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுவரை நிலவியிருக்க வேண்டும். இதற்கான தரவுகள் 2 மீட்டர் ஆழத்தில் உள்ள மண் அடுக்கில் கிடைத்திருக்கின்றன. இந்த காலகட்டத்தில், கீழடியில் எளிதில் மட்கிப் போகக்கூடிய (செங்கல் அல்லாத, மரம் போன்ற) பொருட்களால் கட்டுமானங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. கீழடி இரும்புக் காலத்தில் வளரத் தொடங்கியிருக்கலாம் என்ற முடிவுக்கு வர முடியும் என்றாலும்கூட, தொடர்ந்து இந்தத் திசையில் ஆய்வுகளை நடத்த வேண்டும்.

2. கீழடியின் இரண்டாவது காலகட்டம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. முதலாம் நூற்றாண்டின் முடிவுவரை இருந்திருக்கலாம். இதுதான் கீழடி, ஒரு முதிர்ந்த வாழிடப் பகுதியாக இருந்த காலகட்டம். பெரிய மற்றும் சிறிய அளவிலான செங்கல் கட்டுமானங்கள் இந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இங்கே கிடைத்த செங்கலால் ஆன மேடைகள், சிக்கலான செங்கல் கட்டுமானங்கள், இரட்டைச் சுவர்களைக் கொண்ட உலைகள் ஆகியவை இந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை. இந்த காலகட்டத்தில் கீழடி நகரப் பண்புகளைக் கொண்ட மிக முக்கியமான இடமாக இருந்திருக்க வேண்டும். இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, கீழடி மதுரைக்கு அருகில் இருப்பதும், வரலாற்றுக் கால துறைமுகமான ஆலங்குளத்திற்கு செல்லும் வழியில் இருப்பதும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், மிக முக்கியமாகக் கவனிக்கத்தக்கது இங்கு கிடைத்த கட்டடத் தொகுதிகள்தான். அரிக்கமேடு, காவிரிப்பட்டனம், கொற்கை போன்ற ஒரு சில இடங்களைத் தவிர, தமிழ்நாட்டில் வேறு எங்கு இந்த காலகட்டத்தைச் சேர்ந்த கட்டடத் தொகுதிகள் கிடைத்ததில்லை. இந்தப் பின்னணியில்தான் கீழடியில் கிடைத்த கட்டடத் தொகுதிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

3. கீழடியின் மூன்றாவது காலகட்டம் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டின் முடிவிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டையும் தாண்டிச் செல்கிறது. இந்த இரு அகழாய்விலும் இங்கு கிடைத்த காசுகள், அதற்கு முன்பாக இங்கு கிடைத்த ராஜராஜன் காலத்து காசுகள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, இந்த மூன்றாவது காலகட்டம் பத்தாம் நூற்றாண்டு வரை நீண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆகவே, கீழடியின் காலகட்டம் என்பது கி.மு. எட்டாம் நூற்றாண்டில் துவங்கி கி.பி. பத்தாம் நூற்றாண்டுவரை நீண்டிருக்கிறது.

4. கீழடியில் குதிரையின் எலும்புகள் கிடைத்திருப்பது தென்னிந்திய தொல்லியல் ஆய்வுகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சங்கப் பாடலான பட்டினப்பாலையில் குதிரை குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதன் எச்சங்கள் முதல் முறையாக கீழடியில்தான் கிடைக்கின்றன.

5. இந்திய தொல்லியல் துறை நடத்திய இரண்டு அகழாய்வுகளிலும் 88 கரிம பொருட்கள் கிடைத்தன. இவற்றில் 18 கரிமப் பொருட்கள் ஃப்ளோரிடாவில் உள்ள பீட்டா அனலிடிகள் லெபோரட்டரியில் ஏஎம்எஸ் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 5 கரிமப் பொருட்கள் புது டெல்லியில் உள்ள இன்டர் யுனிவர்சிடி அக்சலரேட்டர் சென்டரில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

6. இரண்டு அகழாய்வுகளிலும் சேர்த்து மொத்தமாக 2,447 பானை ஓட்டு கிறுக்கல்கள் கிடைத்துள்ளன. பல தமிழ் பிராமி எழுத்துகளும் கிடைத்துள்ளன. 'திசன்' போன்ற பிராகிருத வார்த்தைகளும் கிடைத்துள்ளன. கீழடியில் கிடைத்த பிராகிருத வார்த்தைகள் இலங்கையின் தாக்கத்தில் வந்தவை. இங்குள்ள தமிழ் பிராமி அல்லது தமிழி எழுத்து, அசோக பிராமியின் தாக்கத்தைக் கொண்டதல்ல. மாறாக இலங்கையில் கிடைத்த பிராமி எழுத்துகளோடு ஒத்துப்போகக்கூடியவை என்றது அறிக்கை.

7. வைகை நதிக் கரையில் அமைந்த ஒரு நகர நாகரீகத்தின் ஆரம்பக்கட்டத் தகவல்களை மட்டுமே இந்தத் தொல்லியல் ஆய்வு முடிவுகள் அளித்திருக்கின்றன என்றும் அந்தத் தொல்லியல் தளத்தில் மேலும் பல ஆய்வுகளைச் செய்ய வேண்டுமென்றும் அவர் கூறியிருக்கிறார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c14ke648kexo

"சிசுவும், பிளாஸ்டிக்கும்" மரணித்த யானை வயிற்றில் இருந்தது இதுதான்

3 weeks ago

20 மே 2025

புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த மே17-ம் தேதி கோவை மருதமலை அடிவாரத்தில் ஒரு கர்ப்பிணி யானை தனது குட்டியுடன் நீண்ட நேரம் எந்த அசைவும் இன்றி நின்று கொண்டிருந்ததாக உள்ளூர் மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். யானையை மீட்க கும்கி யானையை வனத்துறை அழைத்து வந்துள்ளனர். கும்கியை பார்த்ததும் குட்டி யானை நகர்ந்தது. ஆனால், கர்ப்பிணி யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

உடற்கூராய்வில் உயிரிழந்த பெண் யானையின், வயிற்றில் இருந்த குட்டி யானையும் உயிரிழந்தது என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த யானையின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததாக மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் தெரிவித்துள்ளார். மேலும் யானையின் இருதயம் பாதிக்கப்பட்டிருக்கிறது. கல்லீரல் கடுமையாக வீங்கி பாதிக்கப்பட்டிருந்தது என வன கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx2qqq41e10o

ஆசியாவில் கொரோனாஅலை: பொது இடங்களில் மாஸ்க் அணிய தமிழக சுகாதாரத் துறை அறிவுரை

3 weeks 1 day ago

ஆசியாவில் கொரோனாஅலை: பொது இடங்களில் மாஸ்க் அணிய தமிழக சுகாதாரத் துறை அறிவுரை

21 May, 2025 | 10:47 AM

image

சென்னை: ஆசியாவில் மீண்டும் புதியகொரோனா அலை உருவாகியுள்ள நிலையில் பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

ஆசியாவில் மீண்டும் புதிய கொரோனா அலை உருவாகியுள்ளது. இந்தியாவில்கொரோனா  பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 257-ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் மே 12-ம் தேதியிலிருந்து 164 பேர் கொரோனா தாக்கத்துக்கு ஆளாகியுள்ளதாகவும் தமிழகத்தில் 34 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளானதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இந்நிலையில் தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உலக சுகாதார நிறுவனத்தால் கடந்த 2020-ம் ஆண்டு பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக அளவில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது. ஆனாலும் தமிழக அரசு மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசியை விரிவாக வழங்கியதன் மூலம்  பெருந்தொற்றில் இருந்து மீண்டு தற்போது சமூக பரவலாக வீரியம் குறைந்து காணப்படுகிறது.

நடப்பாண்டில் கொரோனா பரவல் மிக குறைந்த அளவே காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எவ்வித தீவிர அறிகுறிகளும் இல்லை. இந்தியாவில் நடப்பாண்டில் கொரோனா தொற்றால் எந்த உயிர் இழப்பும் ஏற்படவில்லை.

உலக சுகாதார நிறுவனத்தின் மூலமாக கடந்த 4-ம் தேதி வெளியிடப்பட்ட வாராந்திர கொரோனா அறிக்கையின்படி தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா நேபாளம் வங்கதேசம் இந்தோனேசியா தாய்லாந்து போன்ற நாடுகளில் கொரோனாபரவல் மிக குறைவாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் விரீயம் இழந்த ஓமைக்கரான் வகை வைரஸின் உட்பிரிவுகளான ஜெஎன்1 எக்சி ஆகிய தொற்றுகளே காணப்படுவதாகவும் புதிதாக உருமாறிய வைரஸ் பரவவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் வியட்நாம் பிலிப்பின்ஸ் போன்ற நாடுகளிலும் கொரோனா தொற்று விகிதம் குறைந்துள்ளதாகவே உலக சுகாதார நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் இந்நோயின் தாக்கம் மற்றும் இறப்பின் விகிதம் மிகவும் குறைந்தே காணப்படுவதை இதன் மூலம் உணர முடிகிறது.

ஆனாலும் பொது மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதுவடன் சரியான தொற்று தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்தல் வேண்டும். அறிகுறிகள் உள்ளவர்களும் குறிப்பாக காய்ச்சல் நுரையீரல் சார்ந்த இணைநோயினால் பாதிக்கப்பட்டவர்களும் அருகிலுள்ள மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/215297

ஈழத்தமிழர்களை ஒடுக்க இந்தியா எடுத்த புதிய ஆயுதம்: நம்பி நம்பி ஏமாறும் தமிழர்கள்

3 weeks 1 day ago

ஈழத்தமிழர் விவகாரத்தில் தொடர்ந்தும் வெறுப்பை வெளிப்படுத்தி வரலாற்று துரோகங்களை அரங்கேற்றி வரும் இந்தியா தம்மை நம்பி வந்த ஈழ தமிழர்களை 30 ஆண்டுகளுக்கு மேல் அகதிகளாகவே நடாத்துகின்ற அவலம் நேற்று இந்திய உச்சநீதிமன்றத்தில் ஈழ அகதி ஒருவர் தொடர்பான தீர்ப்பின் மூலம் மீளவும் தன்னை ஒரு ஈழத்தமிழர்களுக்கு எதிரான ஒரு நாடாக அடையாளப்படுத்தியிருக்கிறது.

இலங்கையில் காந்தி சதுக்கம் ,காந்தி பூங்கா , மகாத்மா காந்திக்கு சிலை என்று இலங்கையர்கள் இந்தியாவின் மீதான ஆதரவை வெளிப்படுத்தினாலும் இந்தியாவோ ஒரு எதிரியை பாவிப்பது போலவே பாவித்து வருகிறது.

 இந்த நிலையில் ஈழத்தமிழர்களுக்கு இந்தியா இதுவரை என்ன செய்திருக்கிறது என்று கேட்டால் உண்மையில் இதுவரை எதுவுமே செய்யவில்லை என்பதுதான் பதில்.

இந்தியாவின் ஈழத்தமிழர்கள் தொடர்பான நிலைப்பாடுகளை பற்றியும் தமிழரின் தேசிய வேட்கையை சிதைத்த இந்திய நகர்வுகள் தொடர்பாகவும் ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு.

வணக்கம். இன்றைய நாளும் மற்றுமொரு ஐபிசி

தமிழின் இன்றைய அதிர்வின் ஊடாக உங்கள்

அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்று

2052025 இன்றைய நாளை பொறுத்தவரை நாங்கள்

பேச வேண்டிய விடயம் அல்லது பேசுகின்ற மிக

முக்கியமான ஒரு விடயமாக மாறியிருப்பது ஒரு

அகதியினுடைய கோரிக்கை

நிராகரிக்கப்பட்டிருப்பது மாத்திரமல்லாமல்

அதற்கு சொல்லப்பட்டிருக்கக்கூடிய காரணம்

என்பது ஈழத்தமிழ் மக்களிடையே அவர்களுடைய

மனங்களில் இவ்வளவு காலமும் இந்தியா

தன்னுடைய தந்தைய நாடு என்பதும் இந்தியா

எங்களுக்கு ஆதரவாக இப்போதாவது ஒரு நாள்

வரும் என்ற நம்பிக்கையோடும் இருந்த

மக்களுக்கு மிகப்பெரிய அதிர்வலைகளையும்

அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நேற்றைய தினம் இந்தியாவிலிருந்து ஒரு

செய்தி வெளிவந்தது. அந்த செய்தியை நான்

உங்களோடு இப்போது பகிர்ந்து கொள்கிறேன்.

140 கோடி மக்கள் தொகையுடன் ஏற்கனவே போராடி

வரும் நிலையில் உலகம் முழுவதும் உள்ள

அகதிகளுக்கு இடமளிக்கக்கூடிய இந்தியா

ஒன்றும் தர்மசாலை அதாவது இலவச தங்குமி

இடம் அல்ல என்று இந்திய உச்சநீதிமன்றம்

தெரிவித்திருப்பதாகவும் இலங்கை

தமிழகதியினுடைய தங்குமிடத்திற்கான அனுமதி

கோரிக்கையை நிராகரித்திருப்பதாகவும் அந்த

செய்தி வெளிவந்தது. தமிழில் விடுத்தலை

புலிகள் அமைப்புடன் தொடர்பு

கொண்டிருந்ததாக இலங்கை தமிழரான ஒரு

மனுதாரர் கடந்த 2015ஆம் ஆண்டு கைது

செய்யப்பட்டார். தனிநபர் அல்லது

அமைப்புகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை

தடுத்து நிறுத்தும் யுஏபிஏ என்று

சொல்லக்கூடிய சட்டத்தின் கீழ் 2018ஆம்

ஆண்டு விசாரணை நீதிமன்றத்தினால் அந்த நபர்

குற்றவாளி என தீர்ப்பாளிக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம்

அவரது சிறைதண்டனையை 10 ஆண்டுகளில்ிருந்து

ஏழு ஆண்டுகளாக கடந்த 2022 ஆம் ஆண்டு

குறைத்திருந்தது. அதன் அத்தோடு அவரது

சிறைதண்டனை முடிந்தவுடன் நாட்டை விட்டு

வெளியேறும்படி கேட்டுக்கொண்டது. மேலும்

மூன்று வருடங்களாக அகதி முகாமில் தடுத்து

வைக்கப்பட்டிருக்கக்கூடிய அந்த நபர்

இலங்கைக்கு திரும்பினால் தன்னுடைய

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும்

எனவே தன்னை இலங்கைக்கு நாடு கடத்து விளைதை

தடுத்து நிறுத்த கூறியும் உச்ச

நீதிமன்றத்திலே மனுதாக்கல்

செய்திருந்தார்.

தான் முறையான விசாவின் மூலமாக இந்தியா

வந்ததாகவும் தன்னுடைய மனைவி மற்றும்

குழந்தைகள் இப்போது இந்தியாவிலே குடியேறி

விட்டனர் எனவும் அந்த மனுதாரர்

குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை

விசாரித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளான

தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி கே வினோத்

சந்திரன் ஆகியோர் அடங்கிய அந்த அமர்வு

உலகம் முழுவதிலும் இருந்து வரும் அகதிகளை

இந்தியா வரவேற்க வேண்டுமா? நாங்கள் 140

கோடியுடன் போராடுகிறோம். இது எல்லா

இடங்களிலும் இருந்து வரும் வெளிநாட்டினரை

மகிழ்விக்க கூடிய தர்மசாலை அல்ல. இங்கே

குடியேற உங்களுக்கு என்ன உரிமை

இருக்கிறது? இலங்கையில் உங்களது உயிருக்கு

ஆபத்து இருந்தால் வேறு நாட்டுக்கு

செல்லுங்கள் என கூறி இந்த மதுவை தள்ளுபடி

செய்ய உத்தரவிட்டிருக்கிறது என்பதை

சொல்லிக்கொள்ளலாம். அதே நேரம் குறிப்பாக

ஒரு விடயத்தையும் இந்த நேரத்தில்

ஞாபகப்படுத்திக் கொள்கிறேன். கடந்த

2024ஆம் ஆண்டு மதுரை உயர் நீதிமன்றத்திலே

ஒரு இலங்கை தமிழர்களுடைய குடியுரிமை மனைவை

பரிசலித்து மத்திய உள்துறை

அமைச்சகத்திற்கு அதனை விரைவாக

தீர்மானிக்குமாறு நீதிமன்றம்

உத்திரவெற்றிருந்த ஒரு வழக்கையும் நான்

உங்களுக்கு மேற்கொள் காட்டி விடுகிறேன்.

ஆக இந்த வழக்கினுடைய தீர்ப்பில் நான்

இறுதியாக கூறியது. இங்கே குடியேற

உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

இலங்கையில் உங்களது உயிருக்கு ஆபத்து

இருந்தால் வேறு நாட்டுக்கு செல்லுங்கள் என

கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்ய

உத்தரவிட்டுருந்தார்கள். ஆக இந்தியா எந்த

ஒரு சந்தர்ப்பத்திலும்

ஈழத்ததமிழர்களுக்கான தீர்வுக்காகவோ அல்லது

ஈழத்ததமிழர்களுடைய பிரச்சனையிலோ தலையிட

போவதில்லை. அவர்களுக்காக பரிந்து பேச

போவதில்லை என்ற ஒரு விடயத்தை மிக் தெளிவாக

இந்திய நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது.

ஆக இந்த விவகாரத்திலே இன்று ஒரு நாள்

இந்தியா எங்களுக்காக ஒரு தீர்வை பெற்று

தரும். இந்தியாவால் தான் எங்களுக்கு

விடிவு கிடைக்கும் என்று சொல்லி நம்பி

இருக்கக்கூடிய ஆயிரம் ஆயிரம் ஈழ தமிழ்

உள்ளங்களை இந்தியா இந்த தீர்ப்பின் மூலமாக

மாற்றி இருக்கிறது. குறிப்பாக

சொல்லக்கூடிய வேண்டுமாக இருந்தால் நான்

ஏழவே குறிப்பிட்டிருக்கக்கூடிய ஒரு

விடயம்தான். இந்த இந்தியாவினுடைய

அமைதிப்படை இலங்கைக்கு வந்தது. அப்போது

அந்த அமைதிப்படை இலங்கைக்கு வந்த நாளினை

மிக கோலாகலமாக கொண்டாடினார்கள். அவர்களை

தலையிலே தூக்கி வைத்து கொண்டாடினார்கள்

ஈழத்தின் தமிழ் மக்கள். அதாவது எங்களை

காப்பாற்றுவதற்காக இந்திய ராணுவம்

வந்திருக்கிறது. ஸ்ரீலங்க அரசினுடைய தொடர்

நடவடிக்கைகளில் இருந்து ஈழ தமிழ் மக்களாக

எங்களை காப்பாற்றுவதற்காக இந்திய ராணுவம்

வந்திருக்கிறது என்று சொல்லி அவர்கள்

சந்தோஷப்பட்டார்கள் ஊர்வலங்க செய்தார்கள்

மகிழ்ந்து கொண்டார்கள். ஆனால் அந்த நிலைமை

முற்றாக மாறி ஈழ தமிழ் மக்கள் கண்டு அஞ்சி

ஒழிக்கின்ற ஒரு ராணுவமாக இந்திய ராணுவம்

இருந்தது. இந்திய ராணுவம் படுகொலைகளை

செய்தது பாலியல் வல்லுறவுகளை மேற்கொண்டது.

இன்னும் இன்னும் சொல்லிக்கொள்ள வேண்டுமாக

இருந்தால் மிக காடைனமாக வைத்திய

சாலைக்குள் புகுந்து நோயாளர்களை சுட்டு

கொண்டது. இப்படியான நடவடிக்கைகளை செய்தது.

அந்த நிலைமையிலும் கூட அதன் பின்பதாகவும்

கூட இளதமிழ் மக்கள் இன்றுவரை இந்தியா

எங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவி

செய்யும் என்று சொல்லி நம்புகிறார்கள்.

அன்பான தமிழக உறவுகளே என்னுடைய இந்த

பேச்சை கண்டு நீங்கள் கொதைத்து எழலாம்.

உங்களுடைய ஆக்ரோசமான கருத்துக்களை

வெளிப்படுத்தலாம். ஆனால் நான் சில

விடயங்களை உங்களுக்கு தெளிவுபடுத்திக்

கொள்ள விரும்புகிறேன். நாங்கள் எப்போதும்

இந்தியாவை விரோதிகளாக பார்த்தது இல்லை.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் சண்டை

வருகிற போது பெரும்பாலான இழத்து தமிழ்

மக்களுடைய மனநிலை இப்போதும்

ஆகியிருக்கிறது பாகிஸ்தானுடைய பக்கமாக

என்று சொல்லி நீங்கள்

குறிப்பிடுகிறீர்கள். பாகிஸ்தானுக்கும்

இந்தியாவுக்கும் துடுப்பாட்டம் அதாவது

கிரிக்கெட் போட்டி ஒன்று இடம்பெற்றால் கூட

எங்களுடில் பலரினுடைய ஆதரவு என்பது

இந்தியாவினுடைய பக்கமாக இருக்கும்.

ஏனென்று சொன்னால் இந்தியாவினுடைய

எதிரிநாதரி பாகிஸ்தான். ஆகவே எங்களுக்கு

பாகிஸ்தான் மீது விருப்பமில்லை.

பாகிஸ்தானோடு உடன்பட நாங்கள் தயாரில்லை

என்று மனநிலையில் தான் இளத்தமிழர்கள்

இருந்திருக்கிறார்கள்.

எங்களுடைய ஒவ்வொரு வீதிகளிலும் ஒவ்வொரு

ஊர்களிலும் வடக்குக்கிழக்கில்

இருக்கக்கூடிய பெரும்பாலான இடங்களிலே

மகாத்மா காந்திக்கு சிலை

வைத்திருக்கிறார்கள். எங்கெல்லாம்

இருக்கக்கூடிய ஒவ்வொரு இடங்களிலும் ஒரு

வீதிக்கு காந்தி வீதி என்று

பெயரிட்டிருப்பார்கள். அதேபோல காந்தி

சதக்கம் என்று சொல்லி ஒரு சதக்கத்தை

ஒதுக்கி இருப்பார்கள். அதை தாண்டி மகாத்மா

காந்தி பூங்கா என்று சொல்லி பூங்காவை

வைத்திருப்பார்கள். இப்படி நிறையவே

இந்தியாவினுடைய விவகாரங்களிலும் இந்தியாவை

சார்ந்தவர்களையும் அவர்கள்

தூக்கி எறிந்ததாகவோ நிராகரித்ததாகவோ

அல்லாமல் பெருமைப்படுத்தக்கூடிய வகையிலே

செயல்பட்டிருக்கிறார்கள். எங்களுடைய

பலரினுடைய ஒரு தலைமுறைக்கு முற்பட்ட

பெயர்களை பார்க்கிற போது இந்திரா

சந்திரபோஸ் இப்படியான பெயர்களை எங்களுடைய

மக்கள் சூடி இருந்தார்கள். அந்த அளவுக்கு

நாங்கள் இந்தியாவோடு மிக நெருக்கமாக

எங்களுடைய உணர்வுகளை பேணி இருந்தோம்.

ஆனால் இந்தியா தொடர்ந்து

ஈழத்தமிழர்களுக்கு என்ன செய்கிறது?

பெரும்பாலான உறவுகள் குறிப்பிடக்கூடிய

விடயம் இந்தியா வீடு கட்டி

கொடுத்திருக்கிறது. சந்தோஷமாக

வைத்திருக்கிறது ஈழத்ததமிழர்களுக்கு நன்றி

இல்லை என்பது. இந்தியா வீடு கட்டி

கொடுத்திருக்கிறது என்பது ஈழதமிழர்களுடைய

தேவை வீடு கட்டி தருவது அல்ல. எங்களால்

உழைத்து எங்களுக்கான வீடுகளை கட்ட

முடியாமல் இல்லை. ஆக இந்த விவகாரத்திலே

வீடு கட்டி கொடுத்தது இந்தியா

தமிழர்களுக்கு நன்றி இல்லை என்ற

வார்த்தைகளை சொல்லுகின்றவர்கள் நீங்கள்

உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

குறிப்பாக ஒரு விடயத்தை நான் இங்கு

மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்த

விரும்புகிறேன். ஈழ தமிழர்கள் தங்களுடைய

கடந்த கால யுத்தத்தின் காரணமாக

உலகமங்கிலுமே பரவிச் சென்றார்கள். அப்படி

அவர்கள் பதவி சென்ற நாடுகளிலே ஒவ்வொரு

நாடுகளிலும் அவர்களுக்கான அங்கீகாரம்

என்பது எந்த அளவுக்கு இருந்திருக்கிறது

என்று சொன்னால் அந்த நாடுகளிலே நாடாளுமன்ற

உறுப்பினர்களாக அந்த நாடுகளினுடைய

அமைச்சர்களாக மாறும் அளவுக்கு

இருந்திருக்கிறது. கனடாவிலே இப்போது

இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள்

இருக்கிறார்கள். இரண்டு அமைச்சர்கள்

இருக்கிறார்கள். பிரதானியாவுக்கு

பார்க்கிற போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்

இருக்கிறார். உமாகுமரன் என்று

சொல்லக்கூடிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்

இருக்கிறார். ஆவஸ்திரேலியாவிலே ஒரு தமிழ்

நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கிறார்.

அவர்கள் எல்லாம் ஆவஸ்திரேலியாவிலேயும்

பிரதானியாவிலும் கனடாவிலும் பிறந்து

விளந்தவர்கள் அல்ல. இந்த நாட்டில இருந்து

அகதியாக சென்றவர்கள் அந்த நாட்டிலே

இருந்து அகதியாக சென்றவர்களுடைய பிள்ளைகள்

அவர்களுக்கு அந்த நாடுகள் அங்கீகாரம்

கொடுத்திருக்கிறது. பிரதானியாவை

பொறுத்தவரை ஒரு ஐந்து ஆண்டுகள் அந்த

நாட்டிலே அகதியாக இருந்தால் பெர்மனன்ட்

ரெசிடன்ட் என்று சொல்லக்கூடிய பிஆர்

வழங்குவார்கள். அதேபோல 10 ஆண்டுகளிலே அந்த

நாட்டினுடைய குடியுரிமை வழங்குவார்கள்.

ஆனால் இந்த இந்தியாவிலே கடந்த 30

ஆண்டுகளுக்கு மேலாக 84ஆம் ஆண்டுக்கு

பின்பதாக நிறைய பேர் எங்களுடைய தமிழ்

மக்கள் இந்தியாவிலே தஞ்சம் கூறினார்கள்.

அவர்கள் 30 35 ஆண்டுகள் கடந்தும் இன்னமும்

அகதிகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆக

யாரோ யாரோ எல்லாம் அநிய நாடுகள் எல்லாம்

இந்த தமிழர்களுக்குரிய உரிமையையும்

அவர்களுக்கான அகதி அந்தஸ்தை நீக்கி

அவர்களை தங்களுடைய குடிமக்களாக

அரவணைத்துக் கொள்கிற போது நாங்கள்

முழுவதுமாக நம்பி இருந்த இந்தியா எங்களை

அகதிகளாக வைத்து பார்க்கிறது 30 ஆண்டுகள்

கடந்தும் அகதி முகாம்களிலே அடிப்படை

உரிமைகள் இல்லாமல் இருக்கக்கூடிய ஒரு

நிலைமை இருக்கிறது. நிச்சயமாக ஒரு

விடயத்தை நாங்கள் குறிப்பிட்டே ஆக

வேண்டும். இந்த இலங்கையில் இந்திய

தமிழர்கள் இருக்கிறார்கள். இப்போது

அவர்களுக்கு குடியுரிமை இருக்கிறது. ஒரு

காலத்திலே அவர்களுடைய குடியுரிமை

கேள்விக்கு உட்படுத்தப்பட்டபோது இதே

ஈழத்ததமிழர் சமூகம் அவர்களுக்காக

பின்னின்றது. தந்தை செல்வநாயகம் அவர்கள்

எதிர்த்து நின்றார். அந்த தமிழர்களுக்காக

பேசினார். அவர்களும் எங்களுடைய மக்கள்

என்று பேசினார். ஆனால் இந்தியா அப்படியாக

பேசுவதற்கான வாய்ப்பையே

நிராகரித்திருக்கிறது. இப்படி

இருக்கக்கூடிய சூழலில் அன்பான தமிழக

உங்களிடம் விரயமாக வேண்டுகின்ற விடயம்.

உங்களைப் போலவே நாங்களும் இருக்கிறோம்.

உங்களை போல உங்களை மீது நாங்கள் பற்றுத்தி

கொண்டிருக்கிறோம். உங்களை நாங்கள்

நேசிக்கிறோம். உங்களின் மீது மிகுந்த

அன்பு செலுத்துகிறோம். நீங்கள் எங்களுடைய

உணர்வுகளில் கலந்து எங்களுடைய தொப்புள்

கொடி உறவுகளாக நாங்கள் உங்களை

பார்க்கிறோம். இந்தியா எங்களுடைய தந்தையர்

தேசம் என்று சொல்லி நாங்கள் அடிக்கடி

சொல்லி கொள்வோம். அப்பா என்று அழைத்து ஒரு

பிள்ளையை தள்ளிவிட்டு நீ மாற்றான் பிள்ளை

என்று சொல்வதுதான் நியாயமாக இருக்கிறதா

இந்தியாவுக்கு என்ற ஒரு கேள்வி இருந்து

கொண்டிருக்கிறது. ஈழ தமிழர்கள் இன்று ஒரு

நாள் இந்தியா எங்களுடைய விவகாரத்தில்

தலையிடும் எங்களுக்காக ஒரு தீர்வை பெற்று

தரும் நாங்கள் சுதந்திரமாகவும் நிம்மதியான

ஒரு வாழ்க்கையை வாழ வழி அமைத்து தரும்

என்று சொல்லி எதிர்பார்ப்போடுதான்

இருந்தார்கள். ஆனால், இப்போது அந்த நிலைமை

கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருக்கிறது.

இந்த தீர்வு மிகப்பரிய அதிர்வலைகளையும்,

மிகப்பெரிய மாற்றங்களையும் உண்டு பண்ணும்

என்பதை மறந்து விடாதீர்கள். ஆக அன்பான

சொந்தங்களே எங்களுடைய தமிழ்நாட்டு

சொந்தங்கள் எங்களுக்காக பேசுகிறார்கள்.

அவர்கள் எங்களுடைய வரலாறுகளை

கடத்துகிறார்கள். எங்களுடைய கருத்துக்களை

எங்களுடைய கதைகளை பேசுகிறார்கள் நினைவுகளை

பகிர்ந்து கொள்கிறார்கள். நாங்கள் அவர்களை

குற்றம் சொல்லவில்லை. ஒரு ஒன்றிய நாடாக

ஒருமித்த நாடாக இந்தியாவிடம் இதனை

வலியுறுத்துங்கள் அன்பான உறவுகளே ஈழ

தமிழர்கள் நம்முடைய சொந்தங்கள் நம்முடைய

மக்கள் இந்த நிலைப்பாட்டை அவர்களுக்கு

தெளிவுபடுத்துங்கள். அவர்கள் நிச்சயமாக

இந்தியா எங்களுக்கு என்ன செய்தது என்ற

கேள்வியை நாங்கள் மீண்டும் மீண்டும்

கேட்கிறோம். குறிப்பாக இந்த

இளத்தமிழர்களுடைய போராட்ட வரலாற்றை

பொறுத்தவரை அன்றைய காலகட்டத்திலே

இந்தியாவில் இருந்து பயிற்சி பெற்று வந்த

போராளிகளினுடைய மொத்த எண்ணிக்கை 40,000ஆக

இருந்தது. அந்த நேரத்தில்

ஸ்ரீலங்காவினுடைய ராணுவ எண்ணிக்கை வெறும்

9,000ஆக இருந்தது. அந்த நேரத்தில்

நினைத்திருந்தால் தமிழ் தரப்புகள் எந்த

வகையான போராட்டங்களை எந்த வகையான

நகர்வுகளை மேற்கொண்டிருப்பார்கள் என்று

சிந்தித்து பாருங்கள். ஆனால் இந்தியா

ஒற்றுமைக்கு கொஞ்சம் விளைவிக்க முடியாது

என்ற அடிப்படையில் அவர்களை கட்டுப்படுத்தி

வைத்திருந்தது. அதேபோல பிரட் என்று

சொல்லக்கூடிய அமைப்புக்கு

வந்திருக்கக்கூடிய அந்த காலப்பகுதியிலே

ஆயுதம் ஏakே47 என்று சொல்லக்கூடிய

ஆயுதங்கள் வந்தது. அதனை பறைத்துக்

கொண்டதுமே இந்தியா. இப்படியாக நிறைய

சம்பவங்களை செய்தது. ஒற்றுமையாக இருந்து

அந்த 40,000 போராளிகளை பிளவுபடுத்தி

அவர்களுக்குள் ஒருவருக்குள் ஒருவர்

சண்டையிட்டு ஒருவர் ஒருவர் தங்களுடைய

இனத்தினுடைய கூடாரை காம்புகளாக அவர்களை

மாற்றிய பெருமை இந்தியாவை சார்ந்ததாக

இருக்கிறது. ஆகவேதான் இந்த விவகாரத்திலே

நாங்கள் தொடர்ச்சியான அதிர்வனைகளை

ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. வேந்த

புண்ணிலே வேல் பாற்றுவது போலவே இந்தியா

நடந்து கொண்டே இருக்கிறது. இந்தியா ஈழ

தமிழர்களுடைய சுய நிர்ணயத்தை மறக்கிறது.

ஈழ தமிழர்களுக்கு

இழைக்கப்பட்டிருக்கக்கூடிய இனப்படுகொலையை

நிராகரிக்கிறது. உலக நாடுகள் எல்லாம்

இலங்கையிலே இனப்படுகொலை இடம்பெற்றது என்று

சொல்லுகிற போது இந்தியா அது தொடர்பாக வாயை

துறக்கவில்லை. யாரோ யாரோ என்று

சொல்லக்கூடியவர்கள் எல்லாம் எங்களுக்காக

பரிந்து பேசுகிற போது எங்களுடைய உணர்வோடு

தொடர்புபட்டு எங்களுடைய உறவுகளாக

இருக்கக்கூடிய இந்தியா இந்த விவகாரத்தில்

இப்படியான ஒரு நிலைப்பாட்டையில் இருப்பது

எந்த வகையில் நியாயம் என்பதுதான் ஒவ்வொரு

ஈழ தமிழனின் கேள்வியுமாக இருக்கிறது.

குறிப்பாக சொல்லிக்கொள்ள வேண்டுமாக

இருந்தால் இந்த

விவகாரத்திலே தமிழ்நாட்டு தலைவர்கள்

தங்களுடைய எதிர்ப்புகளையும்

கருத்துக்களையும் பதிவு

செய்திருக்கிறார்கள். அந்த வகையில்

நாங்கள் எப்போதுமே இந்த தமிழ்நாட்டு

தமிழர்களை நாங்கள் குற்றம் சாட்டியதில்லை.

அவர்கள் எங்களுக்காகவே தங்களுடைய

கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள்.

ஈழத்தமிழர்களுடைய சுயநிர்மை

உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் 21க்கும்

அதிகமான தமிழ்நாட்டு தலைவர்கள்

தங்களினுடைய உயிர்களை தியாகம்

செய்திருக்கிறார்கள். அவர்களை நாங்கள்

ஒருபோதும் மறந்து விட மாட்டோம். அவர்கள்

எங்களுடைய நினைவுகளில் கலந்தவர்கள். ஆனால்

இந்தியா என்று ஒருமித்த நாடு என்று வருகிற

போது இந்தியா எங்களுக்காக செய்கின்றது

விடயங்களை பற்றிதான் நாங்கள்

பேசுகின்றோம். எங்களினுடைய உரிமைகளை

பறைக்கிறது எங்களுடைய இறப்பை

கேள்விக்குள்ளாக்குகிறது. மீண்டும்

மீண்டும் இப்படியான சம்பவங்களை இடம்

பெறுகிறது. குறிப்பாக இளத்தமிழனே ஒரு

சோகத்தின் வடுக்களிலே தாங்கி தங்களுடைய

இழப்புகளை பேசி கொண்டிருக்கக்கூடிய

காலப்பகுதியில் இலங்கைக்கான இந்திய

தூதுவர் சந்தோஷ் ஜியா கென்றிக்கு சென்று

அங்கே இருக்கக்கூடிய மகாநாயக தேர்களை

சந்தித்து அவர்களுக்கு தன்னை அவர்களிடம்

அரசு தன்னுடைய எதிர்காலத்திற்காக தன்னுடைய

நாட்டினுடைய எதிர்காலத்திற்காக அவர்களிடம்

ஆசி பெற்று வந்ததாக செய்தி

வெளியிடுகிறார்கள். ஆக ஒரு பக்கமாக

ஈழத்ததமிழ் மக்கள் தங்களுடைய உறவுகளை

தொலைத்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக

வீதிகளில் காத்திருக்கிறார்கள்.

கொல்லப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி ஒரு

பக்கமாக இருக்கிறார்கள். ஆனால் இந்த

விவகாரத்தில் தனக்கு ஏதும் சம்பந்தம்

இல்லை என்பது போல இந்தியா நகர்ந்து

கொண்டிருக்கிறது. இந்தியா இந்த

விவகாரத்தில் தலையிடாமல் ஒரு பக்கமாக

இருந்தால் கூட போதும். ஆனால் மீண்டும்

மீண்டும் ஈழ தமிழர்களுடைய மனதில்

வெஞ்சினத்தை பாற்றி வெந்த புண்ணிலே வேலை

பாற்றுவது போன்ற நகர்வுகளை எப்படி

ஏற்றுக்கொள்வது என்ற ஒரு கேள்வி இருந்து

கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக இந்த

விவகாரத்திலே திமுகாவினுடைய தலைவர் முக

ஸ்டாலின் ஒரு அதிர்விலைகளை வெளிப்படுத்தி

இருந்தார். அதேபோல இன்னும் சொல்லக்கொள்ள

வேண்டுமாக இருந்தால் அன்புமணி ராமதாஸ்

இதனை கண்டித்திருக்கிறார். இப்படிக்காக

சில கருத்துக்கள் இப்போது வந்து

கொண்டிருக்கிறது. அதே நேரத்தில்

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பாஜாகா

தலைவர் அண்ணாமலை இந்த தீர்ப்பை வரவேற்றி

இருப்பதாக சோதி இருக்கிறார்கள்.

இந்தியாவினுடைய சட்டங்களை மதிக்க வேண்டும்

என்று சொல்லியும் வெளிநாட்டவர்களுக்கு

குடியுரிமை வழங்குவது தொடர்பான சட்டங்களை

கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லியும்

அவர் சொல்லியிருக்கிறார். இந்த விவகாரம்

எந்த அளவுக்கு பாரதரமான நிலைமை

ஏற்படுத்துகிறது என்று பாருங்கள். ஒரு

தமிழனாக தமிழனுடைய உணர்வை புரிந்து கொள்ள

முடியாத நிலையில் எங்களுடைய தமிழர்கள்

இருந்து கொண்டிருக்கிறார்களா என்ற

கேள்வியையும் நான் இந்த நேரத்தில்

முன்வைத்து விடுகிறேன். அதே நேரம் நான்

உங்களோடு இன்னும் சில விடயங்களையும்

பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வழக்கு

துருவான செய்தி

வெளியிடப்பட்டிருக்கக்கூடிய ஒரு செய்தி

தளத்திலே சில தமிழ்நாட்டு உறவுகள் இப்படி

கருத்துக்களை இட்டிருந்தார்கள். இதனை

வாசிக்கின்ற போது எங்களுடைய மனம் எந்த

அளவுக்கு வெந்திருக்கும் என்று சொல்லி

நீங்கள் ஊகித்து கொள்ளுங்கள். அதாவது இந்த

சில மேற்கொள் காட்டக்கூடிய கருத்துக்களை

நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

அப்போ இதுக்கு அகதிகள் முகாம் கட்டி

இலங்கை அகதிகளை தங்க வைத்திருக்கிறீர்கள்.

அடிச்சு துரத்த வேண்டியதுதானே. ஒருவேளை

இங்கே அகதிகள் முகாம் இருப்பது இந்த

நீதிபதிகளுக்கு தெரியாதா? அடுத்தது

சம்மட்டி வழக்கி பதிவு செய்யும்போது இந்த

மாதிரியான தீர்ப்பை உடனே வழங்கி விட

வேண்டும். இன்னும் ஒரு கருத்து

இந்தியாவில் இலங்கை குடிமகன் தங்க

சட்டபூர்வ உரிமை இல்லை. சட்டபூர்வ விதி

அதிகாரம் இல்லாத கோரிக்கை உச்ச

நீதிமன்றத்தில் வழக்கறிஞன் வனுவாக தாக்கல்

செய்வது சட்ட விரோதம். நீதிபதி கருத்தும்

தீர்வும் சரியானது அப்படிங்கற கருத்து.

அதேபோல திருட்டு ரயிலே வந்த வினைதான்

இலங்கை அகதிகள் அனுபவிக்கிறார்கள்.

மீண்டும் சொல்கிறேன். திருட்டு ரயிலேறி

வந்த வினைதான் இலங்கை அகதிகள் மீண்டும்

அனுபவிக்கிறார்கள். இப்போதாவது நீதிபதிகள்

உணர்ந்தார்களே இதை போல தட்டி வைத்து கொள்ள

வேண்டும் அவர்களை அப்படியும்

கருத்துக்கள். ஆனால் சில கருத்துக்கள்

வந்திருக்கிறது. கேள்விகள் கேட்கும் உரிமை

இந்த நீதிமன்றத்திற்கு இருக்கும் என்று

சொன்னால் இனப்படுகலக்கு இந்திய ராணுவத்தை

அனுப்பியது சரியா? ஒதுங்கி இருந்தால்

அவர்கள் அங்கேயே இருந்திருப்பார்கள் இந்த

விடயத்தை நாங்கள் ஒரு முக்கியமான விடயமாக

பார்க்கலாம். கனம் நீதிபதி அவர்களே

ஏற்கனவே நமது சத்திரத்தில் பல

டோகங்கியாக்கள் இருக்கிறார்கள். அவர்களை

என்ன செய்ய போகிறீர்கள் என்று சொல்லி ஒரு

கேள்வி இருக்கிறது. சில கருத்துக்களைதான்

நான் உங்களோடு பகிர்ந்து

கொண்டிருக்கிறேன். அதாவது எங்களுடைய

விவகாரத்திலே நீங்கள் தலையிடாமல்

இருந்திருந்தால் உங்களுடைய அமைதிப்படை

என்ற போர்டையில் அட்டூடிய படை இலங்கைக்கு

வந்து வடக்கு கிழக்கிலே எங்களுடைய மக்களை

இருப்பை அவர்களின் மீது துப்பாக்கி

சூடுகளை அவர்களுடைய இருப்பின் மீதான ஆயுத

பிரயோகத்தை மேற்கொள்ளாமல் இருந்திருந்தால்

எங்களுடைய மக்கள் எங்களுடைய நாட்டில் ஏதோ

ஒன்று செய்து கொண்டிருந்திருப்பார்கள்.

எங்களுடைய மக்களுக்கான போராட்டம்

அவர்களுக்கானதாக இருந்திருக்கும். நீங்கள்

ஆயுதம் கொடுத்து படையினரை அனுப்பி 2009லே

முள்ளிவாய்க்காலிலே அந்த பேரவலத்தை

நிகழ்த்தாமல் இருந்திருந்தால் எங்களுடைய

மக்கள் உங்களிடம் வந்து அகதிகளாக

இருந்திருக்க மாட்டார்கள். இந்த நிலைக்கு

அவர்கள் தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள்.

அவர்கள் தங்களுடைய சுய நிர்ணய ஆட்சியை

நிரூபித்திருப்பார்கள். நான் ஒரே ஒரு

விடயத்தை இந்த நேரத்தில்

ஞாபகப்படுத்திவிட்டு வருகிறேன். அதாவது

2009க்கு முற்பட்ட காலப்பகுதியிலே

வடக்கிலே குறிப்பாக இந்த புதுக்குடியி

இருப்பு வந்திரி பிராந்தியத்திலே ஒரு

யாசகம் பெறுகின்ற நபரை கூட நீங்கள்

அடையாளம் காட்ட முடியாது. அந்த அளவுக்கு

எங்களுடைய நிலமும் எங்களுடைய மக்களும்

எங்களை காப்பாற்றிக் கொண்டவர்களும்

எங்களுடைய காவலர்களாக இருந்தவர்களும்

இருந்திருந்தார்கள். இந்த தேசம்

தன்னிறைவான ஒரு தேசமாக எங்களுடைய தேசம்

இருந்தது. நாங்கள் யாருக்கு இடமும்

சோற்றுக்காக பிச்சை எடுக்கவில்லை.

அரிசிதாரங்கள் பரப்பு தாருங்கள் என்று

சொல்லி வீதிக்கு செல்லவில்லை. நாங்கள்

நிறைவானவர்களாக இருந்தோம். ஆனால் அந்த

அத்தனை விடயங்களையும் மாற்றியதில்

இந்தியாவுக்கு மிகப்பெரிய பங்கு

இருக்கிறது. நீங்கள் செய்த இந்த வினைகளின்

பாரதூரங்களை உணர்ந்து என்றாலும் எங்களுடைய

மக்களினுடைய இருப்பின் மீதான கேள்விக்கு

உட்படுத்தலை தொடர்ந்து தவிர்த்து

விடுங்கள். இது ஒரு அன்பான வினயமான

வேண்டுகோள். மீண்டும் மீண்டும் சொல்லிக்

கொடுக்கிறேன். எங்களுடைய தமிழ்நாட்டு

உறவுகளின் மீது எங்களுக்கு மிகப்பெரிய

மதிப்பு இருக்கிறது. உங்களிடம் அன்பான

வேண்டுகோள். எங்களுடைய ஈழத் தமிழ்

மக்களினுடைய அந்த இறப்புக்காக உங்களுடைய

பிராந்திய ஒன்றிய அரசுகளை

வலியுறுத்துங்கள். அன்பான உறவுகளே நாளை

மற்றுமொரு இன்றைய அதிர்வினோடாக உங்கள்

அனைவரையும் சந்திக்கிறேன் அதுவரை வணக்கம்

https://tamilwin.com/

வேகமாக மூழ்கும் நகரங்கள் பட்டியலில் சென்னை - அதிகபட்சமாக தரமணி எவ்வளவு வேகத்தில் மூழ்குகிறது?

3 weeks 2 days ago

காலநிலை மாற்றம், வேகமாக மூழ்கும் நகரங்கள், சென்னை, இந்தியா

படக்குறிப்பு,ஜகார்த்தா, இந்தோனீசியா

கட்டுரை தகவல்

  • எழுதியவர், அக்னியா அட்ஸ்கியா, அன்ட்ரோ சய்னி, அர்வின் சுப்ரியாடி, அயு இட்ஜஜா

  • பதவி, பிபிசி உலக சேவை

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (என்.டி.யூ) மேற்கொண்ட ஆய்வில், உலகம் முழுவதிலும் கவலைப்படத்தக்க வகையில் வேகமாக மூழ்கி வரும் கடலோர நகரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள சுமார் 48 நகரங்கள் எந்தளவுக்கு மூழ்கி வருகின்றன என்பது குறித்து ஆய்வுக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். காலநிலை மாற்றத்தால் உந்தப்பட்ட கடல் மட்ட உயர்வால் நிலப்பகுதிகள் மூழ்கும் அபாயம் கொண்ட நகரங்கள் இவை.

ஆய்வுகள் மற்றும் ஐ.நாவின் மக்கள்தொகை தரவுகள் வாயிலாக இந்த பகுதிகளில் கிட்டத்தட்ட 16 கோடி மக்கள் வாழ்வதாக பிபிசி மதிப்பிட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து சென்னை உட்பட 5 நகரங்கள் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த 5 நகரங்களில் நிலைமை என்ன?

ஆமதாபாத், குஜராத்

காலநிலை மாற்றம், வேகமாக மூழ்கும் நகரங்கள், சென்னை, இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆமதாபாத்தின் மூழ்கும் பகுதிகளில் 51 லட்சம் பேர் வசிப்பதாக பிபிசி மதிப்பிட்டுள்ளது

நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, ஆமதாபாத்தின் சில பகுதிகள் 2014ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை ஆண்டுதோறும் சராசரியாக 0.01 செ.மீ-5.1 செ.மீ என்ற அளவில் மூழ்கியுள்ளது.

இந்த மூழ்கும் பகுதிகளில் 51 லட்சம் பேர் வசிப்பதாக பிபிசி மதிப்பிட்டுள்ளது.

ஆமதாபாத்தின் பிப்லஜ் பகுதி வேகமாக மூழ்கும் பகுதிகளுள் ஒன்றாக என்.டி.யூ கண்டறிந்துள்ளது. இங்கு ஆடை நிறுவனங்கள் அதிகம் காணப்படுகின்றன. இப்பகுதி ஆண்டுக்கு சராசரியாக 4.2 செ.மீ அளவில் மூழ்குகிறது. இது 2024 ஆம் ஆண்டில் கடல் மட்டத்தில் ஏற்பட்ட 0.59 செ.மீ உயர்வுடன் ஒப்பிடப்படுகிறது என, நாசாவால் வழிநடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.

அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை பயன்படுத்துவது, கடல் மட்டம் உயர்வு மற்றும் அதீத மழைப்பொழிவு ஆகியவை இதற்கான காரணங்களாக உள்ளன. இந்நகரம் இன்னும் மோசமான வெள்ளத்தால் வருங்காலத்தில் பாதிக்கப்படும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதைத் தடுக்க, ஆமதாபாத் மாநகராட்சி காலநிலை தடுப்பு செயல் திட்டத்தை வடிவமைத்துள்ளது, மழைநீரை சேமிப்பது மற்றும் நிலத்தடி நீரை மீள்நிரப்பு செய்வதிலும் கவனம் செலுத்துகிறது.

கொல்கத்தா, மேற்கு வங்கம்

காலநிலை மாற்றம், வேகமாக மூழ்கும் நகரங்கள், சென்னை, இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கொல்கத்தாவில் பாத்பரா (Bhatpara) எனும் பகுதி வேகமாக மூழ்கி வருவதாக இந்த ஆய்வு கண்டுபிடித்துள்ளது

இந்த ஆய்வின்படி, 2014-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை கொல்கத்தாவின் சில பகுதிகள் ஆண்டுக்கு சராசரியாக 0.01 செ.மீ-2.8 செ.மீ அளவுக்கு மூழ்கியுள்ளன.

இப்படி மூழ்கும் பகுதிகளில் 90 லட்சம் பேர் வசிப்பதாக பிபிசி கணக்கிட்டுள்ளது.

கொல்கத்தாவில் பாத்பரா (Bhatpara) எனும் பகுதி வேகமாக மூழ்கி வருவதாக இந்த ஆய்வு கண்டுபிடித்துள்ளது, இப்பகுதி ஆண்டுக்கு சராசரியாக 2.6 செ.மீ. எனும் அளவுக்கு மூழ்கியுள்ளது. இது 2024 ஆம் ஆண்டில் கடல் மட்டத்தில் ஏற்பட்ட 0.59 செ.மீ உயர்வுடன் ஒப்பிடப்படுகிறது என, நாசாவால் வழிநடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.

கட்டுப்படுத்தப்பட்ட நீர்நிலைகளில் நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுதல், நிலத்தடி நீரை சேமித்து வைக்கும் மண் அடுக்குகளிலிருந்து நீரை உறிஞ்சுவதுதான் காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இத்தகைய பகுதிகளில் நிலநடுக்க அபாயங்கள், வெள்ளம் மற்றும் கடல்நீர் ஊடுருவல் ஆகியவை நிகழ்வதற்கான ஆபத்துகள் உள்ளதாக, நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதைத் தடுக்க நிலத்தடி நீர் மேலாண்மை, நீர்நிலைகளை வரைபடமாக்குதல் (map aquifers), சுற்றுச்சூழல் தாக்க அறிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக கட்டுமானங்களை கண்காணித்தல் போன்ற பல்வேறு திட்டங்களை இந்திய அரசு உருவாக்கியுள்ளது.

மும்பை, மகாராஷ்டிரா

காலநிலை மாற்றம், வேகமாக மூழ்கும் நகரங்கள், சென்னை, இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மிக உயரமான கட்டடங்கள் மும்பை மூழ்குவதற்கான காரணங்களுள் ஒன்றாக நிபுணர்கள் கூறுகின்றனர்

என்.டி.யூ ஆய்வின்படி, மும்பையின் சில பகுதிகள் 2014-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு சராசரியாக 0.01 செ.மீ.-5.9 செ.மீ என்ற அளவில் மூழ்கியுள்ளதாக கூறுகிறது.

இந்த மூழ்கும் பகுதிகளில் சுமார் 32 லட்சம் பேர் வசிப்பதாக பிபிசி மதிப்பிட்டுள்ளது.

கிழக்கு மடுங்காவில் உள்ள கிங்ஸ் சர்க்கிள் நிலையம் மிகவும் வேகமாக மூழ்கும் பகுதியாக என்.டி.யூவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. அப்பகுதி சராசரியாக ஆண்டுக்கு 2.8 செ.மீ என்ற அளவில் மூழ்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2024 ஆம் ஆண்டில் கடல் மட்டத்தில் ஏற்பட்ட 0.59 செ.மீ உயர்வுடன் ஒப்பிடப்படுகிறது என, நாசாவால் வழிநடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.

நிலத்தடி நீரை அதிகளவில் உறிஞ்சுதல், மிக உயரமான கட்டடங்கள், மெட்ரோ வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் ஈரநிலங்களை அரசு மற்றும் தொழில் நிறுவனங்கள் மறுபயன்பாட்டுக்கு உட்படுத்துதல் ஆகியவை இதற்கு காரணங்களாக உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றன.

இதைக் கட்டுப்படுத்த இந்திய அரசாங்கம் நிலத்தடி நீர் மேலாண்மை, நீர்நிலைகளை வரைபடமாக்குதல் மற்றும் உள்கட்டமைப்பு விதிமுறைகளை உருவாக்குதல் போன்ற திட்டங்களை உருவாக்கியுள்ளன.

சூரத், குஜராத்

காலநிலை மாற்றம், வேகமாக மூழ்கும் நகரங்கள், சென்னை, இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சூரத்தில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதே இதற்கு காரணமாக உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

என்.டி.யூ ஆய்வின்படி, சூரத்தின் சில பகுதிகள் 2014-ஆம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை ஆண்டுக்கு சராசரியாக 0.01 செ.மீ-6.7 செ.மீ என்ற அளவில் மூழ்கியுள்ளதாக கூறுகிறது.

இந்த மூழ்கும் பகுதிகளில் 30 லட்சம் பேர் வசிப்பதாக பிபிசி மதிப்பிட்டுள்ளது.

சூரத்தில் கரஞ்ச் (Karanj) எனும் பகுதி வேகமாக மூழ்கிவரும் பகுதிகளுள் ஒன்றாக என்.டி.யூ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது, இப்பகுதி ஆண்டுக்கு 6.7 செ.மீ எனும் அளவுக்கு மூழ்கிவருகிறது. இது 2024 ஆம் ஆண்டில் கடல் மட்டத்தில் ஏற்பட்ட 0.59 செ.மீ உயர்வுடன் ஒப்பிடப்படுகிறது என, நாசாவால் வழிநடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.

வேளாண்மை மற்றும் தொழில் நகரமான சூரத்தில், பாசனம், ஆடை தொழிற்சாலைகள் மற்றும் வீட்டுப் பயன்பாடுகளுக்காக அதிகளவு நிலத்தடி நீரை உறிஞ்சுவதே இதற்கு காரணமாக உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

உகாய் அணையின் (ukai dam) செயல்பாட்டை மேம்படுத்துதல் முதல் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துதல், மழைப்பொழிவை முன்னறிவிப்பதற்கான மாதிரியை உருவாக்குதல், வெள்ள பாதிப்புக்கான முன்னெச்சரிக்கை அமைப்பை உருவாக்குவது ஆகிய திட்டங்களை உள்ளூர் அரசாங்கம் நிறைவு செய்துள்ளது.

சென்னை, தமிழ்நாடு

2014-ஆம் ஆண்டிலிருந்து 2020-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு சராசரியாக 0.01 செ.மீ-3.7 செ.மீ என்ற அளவில் சென்னையின் சில பகுதிகள் மூழ்கியுள்ளதாக என்.டி.யூ. ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த பகுதிகளில் 14 லட்சம் பேர் வசிப்பதாக பிபிசி மதிப்பிட்டுள்ளது.

சென்னையில் வேகமாக மூழ்கும் பகுதியாக தரமணி இருப்பதாக என்.டி.யூ ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த பகுதி ஆண்டுக்கு சராசரியாக 3.7 செ.மீ அளவுக்கு மூழ்குவதாக அந்த ஆய்வு கூறுகிறது. இது 2024 ஆம் ஆண்டில் கடல் மட்டத்தில் ஏற்பட்ட 0.59 செ.மீ உயர்வுடன் ஒப்பிடப்படுகிறது என, நாசாவால் வழிநடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.

விவசாயம், தொழில் மற்றும் வீட்டுப் பயன்பாடுகளுக்கு அதிகளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் பகுதிகள் வேகமாக மூழ்கிவருவதாக சென்னையில் உள்ள நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதைத் தடுக்க நிலத்தடி நீர் மேலாண்மை, நீர்நிலைகளை வரைபடமாக்குதல் (map aquifers), சுற்றுச்சூழல் தாக்க அறிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக கட்டுமானங்களை கண்காணித்தல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு உருவாக்கியுள்ளது.

ஜகார்த்தா, இந்தோனீசியா

இந்த ஆய்வில், வேகமாக மூழ்கிவரும் நகரங்களுள் ஒன்றாக இந்தோனீசியாவின் ஜகார்த்தா நகரம் கண்டறியப்பட்டுள்ளது. ஜகார்த்தாவின் சில பகுதிகள் 1970களைக் காட்டிலும் 4 மீட்டர் அளவுக்கு மூழ்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதனால், 1,200 கி.மீ தொலைவில் உள்ள போர்னியோ எனும் மற்றொரு தீவில் உள்ள நுசந்தராவில் புதிய தலைநகரத்தைக் கட்டமைக்க இந்தோனீசியா திட்டமிட்டுள்ளது.

இது கடற்கரையிலிருந்து வெகு தொலைவில் உள்ளது மற்றும் ஆற்றுநீர், மழைநீரை சேமிக்க ஒரு பெரிய அணை மற்றும் நீர்த்தேக்கத்தை நம்பியுள்ளது. புதிய தலைநகரில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கும் தண்ணீரை சுத்திகரித்து விநியோகிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம், இதனால் நிலத்தடி நீரை உறிஞ்சும் தேவை நீக்கப்படுகிறது.

இருப்பினும், புதிய நகரம் பல்லுயிர் பெருக்க இடத்தில் கட்டமைக்கப்படுவதால் சுற்றுச்சூழல் தாக்கங்களுக்காக விமர்சிக்கப்படுகிறது.

டோக்கியோ எப்படி இந்த பிரச்னையை தீர்த்தது?

டோக்கியோ நகரத்தின் சில பகுதிகள் மூழ்குவதாக கண்டறியப்பட்ட போது, அந்நகரம் வேறொரு அணுகுமுறையை மேற்கொண்டது, அந்த பிரச்னையின் வேரைக் கண்டறிந்து தீர்க்க முடிவு செய்தது.

நிலத்தடி நீரை உறிஞ்சுவதில் கடுமையான கட்டுப்பாடுகளை டோக்கியோ நடைமுறைப்படுத்தியதையடுத்து 1970களில் அந்நகரம் மூழ்குவது குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தது.

தண்ணீர் விநியோக மேலாண்மை அமைப்பையும் அந்நகரம் உருவாக்கியது. நகரம் மூழ்குவதை நிறுத்துவதில் இந்த நடவடிக்கை அதிகளவில் செயலாற்றியதாக விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர்.

தற்போது இந்த நகரம் அதிகளவில் நிலையானதாக உள்ளதாகவும் 2014ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை சில பகுதிகள் 0.01 முதல் 2.4 செ.மீ என்ற அளவில் மூழ்கியதாகவும் என்.டி.யூ ஆய்வில் தெரியவந்துள்ளது.

என்ன செய்தது டோக்கியோ?

நகருக்கு வெளியே உள்ள 2 அணைகளால் தடுக்கப்படும் ஆறுகள் மற்றும் வனங்களில் இருந்தே டோக்கியோவுக்கு அதிகளவிலான நீர் பெறப்படுகிறது.

இந்த தண்ணீர் 10 ஆலைகளில் சுத்திகரிக்கப்பட்டு, விநியோக மையத்துக்கு அனுப்பப்படுகின்றன.

இந்த மையம், தண்ணீரின் அளவு மற்றும் அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது.

இந்த மையத்திலிருந்து வீடுகள் மற்றும் ஆலைகளுக்கு, நிலநடுக்கத்தால் சேதமடையாத பைப்புகள் வாயிலாக விநியோகிக்கப்படுகின்றன.

டோக்கியோ இதை திறம்பட செயல்படுத்தினாலும், அதை நிர்வகிப்பதில் ஆகும் அதிக செலவுகள் காரணமாக, இதை பரவலாகச் செயல்படுத்த முடியுமா என்பதில் சந்தேகம் நிலவுவதாக, ஜப்பானின் வாசெடா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மிகுவெல் எஸ்டெபேன் கூறுகிறார்.

எனினும், சில ஆசிய நகரங்கள் டோக்கியோவின் அணுகுமுறையை மாதிரியாகப் பார்ப்பதாகவும் அவர் கூறுகிறார்.

உதாரணமாக, 1970களில் தைவானில் தைபே நகரம் நிலத்தடி நீர் உறிஞ்சுவதை குறைத்துள்ளது, இதனால் அந்நகரம் மூழ்கும் வேகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx27yk10dkzo

பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான், இன்றும் உயிர்வாழ்கின்றான், என்றென்றும் உயிர்வாழ்வான் - நாம் தமிழர் கட்சியின் மாநாட்டில் பஞ்சாபின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

3 weeks 3 days ago

Published By: RAJEEBAN

19 MAY, 2025 | 08:20 AM

image

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் அவன் இன்றும் உயிர் வாழ்கின்றான் என்றென்றும் உயிர்வாழ்வான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  ஜக்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

மே 18ம் திகதி கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் இடம்பெற்ற நாம் தமிழர் கட்சியின் தமிழனப் பேரெழுச்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பிரபாகரன் முதல் அனைவரையும் கொன்றுவிட்டோம் என தெரிவித்தார்கள்.

இங்கு கூடியிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பிரபாகரன்.

இந்த குழந்தை பாலசந்திரன் 12 வயதில் கொல்லப்பட்டபோது, நான் அவரின் கதையை எழுதினேன். அவரை நேரடியாக பார்த்திராத போதிலும் நான் அவரை பற்றி எழுதினேன்.

தந்தையும் தாயும்  எவ்வாறு சிந்திப்பார்கள் சமூகம் எவ்வாறு சிந்திக்கும் என நான் எழுதினேன். கைதுசெய்யப்பட்ட பின்னர் 12 வயது சிறுவன் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டமை குறித்து என்ன நினைப்பார்கள் என எழுதினேன்.

ஆனால் இன்று பாலசந்திரன் எங்கிருக்கின்றார். பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான். இங்கிருக்கின்ற ஒவ்வொருவரினதும் உடலின் இடது பக்கத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றான்.

பாலசந்திரன் இன்றும்  வாழ்கின்றான் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருப்பான்.

இனப்படுகொலையின் காலடிச்சுவடுகள் என்ற இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கின்ற ஒவ்வொரு கதையையும் மீண்டும் மீண்டும் சொல்லவேண்டும்.

https://www.virakesari.lk/article/215115

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் : நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் - த.வெ.க. தலைவர் விஜய்

3 weeks 3 days ago

Published By: VISHNU

18 MAY, 2025 | 07:55 PM

image

உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று (மே 18) இல்  உறுதி ஏற்போம் என த.வெ.க. தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

மேலும் குறித்த எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;

மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும் என தனது வணக்கத்தை பதிவில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/215098

கிணற்றுக்குள் பாய்ந்த வேன்: குழந்தை உட்பட 5 பேர் பரிதாப பலி..!

3 weeks 4 days ago

Published By: DIGITAL DESK 3

18 MAY, 2025 | 10:33 AM

image

இந்தியாவில் 50 அடி ஆழ கிணற்றுக்குள் வேன் ஒன்று  பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்றரை வயது குழந்தை, 2 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள வெள்ளாளன்விளை ஆலயத்தில் பிரதிஷ்டை விழா நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக, கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூரில் இருந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் வேனில் சென்றுள்ளனர்.

சனிக்கிழமை (17) மாலை 4 மணி அளவில், சாத்தான்குளம் அருகே உள்ள சிந்தாமணி- மீரான்குளம் பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த 50 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்துள்ளது.

இந்த விபத்தில், ஒன்றரை வயது குழந்தை ஸ்டாலின் ஆகிய 5 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 3 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் விரைந்து சென்று 5 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

https://www.virakesari.lk/article/215021

நான்கு பேருக்கு மறுவாழ்வளித்த மூளைச்சாவு அடைந்த சிறுவன்..!

3 weeks 5 days ago

Published By: DIGITAL DESK 2

17 MAY, 2025 | 10:58 AM

image

வீதி விபத்தில் மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதில் நான்கு நபர்கள் பயன் பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டிலுள்ள விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே, உறவினர் ஒருவருடன் கடந்த புதன்கிழமை (14)  மோட்டார் சைக்கிளில் சென்றபோது, தனியார் பஸ் ஒன்று மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. 

அருப்புக்கோட்டை அரசு வைத்தியசாலையிலும், பின்னர் வேலம்மாள் மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன், வெள்ளிக்கிழமை (16)  மூளைச்சாவு அடைந்ததாக வைத்தியர்கள் உறுதி செய்தனர்.

இந்நிலையில், சிறுவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன் வந்தனர். அதற்காக, சிறுவனின் தந்தையிடம் ஒப்புதல் பெறப்பட்டது.

இதையடுத்து, கல்லீரல் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரிக்கும், சிறுநீரகங்கள், கருவிழிகள் மதுரை அரசு ராஜாஜி வைத்தியசாலை மற்றும் அப்பல்லோ  வைத்தியசாலைக்கும் தானமாக வழங்கப்பட்டது. 

இச் சிறுவனின் உடல், உறுப்பு தானத்தால் நான்கு நபர்கள் பயன் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/214950

தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் பிஹார் அளவை விட பாதியாக சரிவு - விளைவுகள் என்ன?

4 weeks 1 day ago

தென் மாநிலங்களில் குறையும் குழந்தைப் பிறப்பு விகிதம், அதிகரிக்கும் முதியவர் மக்கள் தொகை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சாரதா வி

  • பதவி, பிபிசி தமிழ்

  • 13 மே 2025, 02:46 GMT

    புதுப்பிக்கப்பட்டது 13 மே 2025, 02:50 GMT

தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் தென் மாநிலங்களில் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது. சமீபத்திய SRS -Sample Registration Survey 2021 தரவுகள் படி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் 1.5, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் 1.6 ஆக உள்ளது. மக்கள் தொகை நிலையாக பராமரிக்க தேவையான 2.1 என்ற குழந்தைப் பிறப்பு விகிதத்தை விட இது குறைவாகும்.

இந்தியாவின் தேசிய குழந்தைப் பிறப்பு விகிதம் 2.0 ஆக உள்ள நிலையில், பிஹார் மாநிலத்தில் உச்சபட்சமாக இந்த விகிதம் 3.0 ஆக உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் உத்தர பிரதேசம் (2.7), மத்திய பிரதேசம் (2.6), ராஜஸ்தான் (2.4), ஜார்கண்ட் (2.3) என தேசிய சராசரிக்கும் கூடுதலாக கொண்டுள்ளன.

தென் மாநிலங்கள் உட்பட 15 மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் 2.1க்கு குறைவாக உள்ளது. டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் 1.4 ஆக குழந்தைப் பிறப்பு விகிதம் உள்ளது.

இதுபோன்ற ஏற்றத்தாழ்வான நிலைமை புதிதாக உருவாகவில்லை என்றாலும், கடந்த கால தரவுகளுடன் ஒப்பு நோக்கினால் தென் மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் மேலும் சரிந்திருக்கிறது. முன்னர் வெளியான தேசிய குடும்ப நல ஆய்வு NFHS -5 தரவுகள் படி தமிழ்நாட்டில் குழந்தைப் பிறப்பு விகிதம் 1.8 ஆக இருந்தது. தற்போது 0.3 புள்ளிகள் குறைந்துள்ளது.

இந்தியாவின் தேசிய குழந்தைப் பிறப்பு விகிதம் 1950-ம் ஆண்டில் 5.7 ஆக இருந்தது. தற்போது SRS 2021 தரவுகள் படி அது தற்போது 2.0 ஆக உள்ளது. ஒரு நாட்டில், நிலையான மக்கள் தொகையை பராமரிக்க இந்த விகிதம் 2.1 ஆக இருக்க வேண்டும். கேரள மாநிலம் இந்த நிலையை 1988 ஆம் ஆண்டில் எட்டியது. அதையே தமிழ்நாடு 1993 ஆம் ஆண்டிலும், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் 2000 ஆம் ஆண்டுகளிலும் எட்டின.

குழந்தைப் பிறப்பு விகிதம் சரியும் போது மக்கள் தொகை வளர்ச்சி விகிதமும் குறையும். அதே சமயம், மக்களின் நல்வாழ்வில் ஏற்படும் தாக்கம் சராசரி ஆயுளை அதிகரிக்கும். இந்த இரண்டு போக்குகளையுமே SRS 2021 தரவுகளில் பார்க்கலாம். அதன்படி, 0-14 வயது பிரிவில் மக்கள் தொகை மெல்ல குறைந்து வந்துள்ளது.

1971-ல் 41.2% ஆக இருந்தது 2021-ல் 24.8% ஆக குறைந்துள்ளது. அதே காலகட்டத்தில் பொருளாதாரத்தில் பங்களிக்கும் 15-59 வயது பிரிவினரின் மக்கள் தொகை 54.4%லிருந்து 66.2% ஆக அதிகரித்துள்ளது. அதே போல, 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் மக்கள் தொகை 5.3% லிருந்து 5.9% ஆக உயர்ந்துள்ளது, அதே போல, 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் மக்கள் தொகை 6% லிருந்து 9% ஆக அதே காலகட்டத்தில் அதிகரித்துள்ளது.

தென் மாநிலங்களில் குறையும் குழந்தைப் பிறப்பு விகிதம், அதிகரிக்கும் முதியவர் மக்கள் தொகை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மக்கள் தொகையை நிலையாக பராமரிக்க தேவையான 2.1 என்ற குழந்தைப் பிறப்பு விகிதத்தை விட தென் மாநிலங்களின் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது.

முதியவர்கள் அதிகம்

இந்தியாவின் அதிகரித்து வரும் முதியவர்களின் எண்ணிக்கை குறித்து, ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம், 2023-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், 2050-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள் தொகையில் 20% பேர் 60 வயதுக்கு மேலானவர்களாக இருப்பர் என்று கூறுகிறது. 2046-ம் ஆண்டுக்குள் முதியவர்கள் 0-15 வயது பிரிவினரை விட அதிகமாக இருப்பார்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

நாட்டிலேயே அதிக முதியவர்கள் கொண்ட மாநிலங்கள் வரிசையில் கேரளாவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு உள்ளது. கேரள மக்கள் தொகையில் 14.4% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். தமிழ்நாட்டில் இது 12.9% ஆக உள்ளது என்று SRS 2021 தரவுகள் கூறுகின்றன. பிஹாரில் மிகக் குறைவாக 6.9%, அசாமில் 7%, தில்லியில் 7.1% முதியோர் உள்ளனர்.

தென் மாநிலங்களில் குறையும் குழந்தைப் பிறப்பு விகிதம், அதிகரிக்கும் முதியவர் மக்கள் தொகை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்தியாவிலேயே முதியவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் கேரளா முதலிடம், தமிழ்நாடு இரண்டாவது இடம்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய பொருளாதார நிபுணரும் பேராசிரியருமான ஜோதி சிவஞானம், "முதியவர்களின் மக்கள் தொகை அதிகரிப்பு, மக்கள் தொகை மாற்றத்தின் போக்கில் ஏற்படும் இயல்பான வேறுபாடுதான். முதியவர்களுக்கு தேவையான உடல்நலம், மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியம், முதியவர்கள் காப்பகம் போன்றவற்றுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டியிருக்கும். இது தமிழ்நாட்டை பாதிக்காது என்று கருதுகிறேன்," என்று கூறினார்.

"ஏனென்றால், தமிழ்நாட்டில் உயர்கல்வி படித்தவர்களின் விகிதம் அதிகமாக இருக்கிறது. இங்குள்ள இளைஞர்கள் திறன்மிக்கவர்கள், ஆங்கிலம் தெரிந்தவர்கள். எனவே, வேலை செய்யும் மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் அவர்களின் உற்பத்தித் திறன் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது அதிகமாகவே இருக்கிறது.

1990களின் பிற்பகுதியில் மக்கள் தொகையின் பலன்களை நாம் (demographic dividend) அனுபவித்தோம். பணியாற்றும் வயதிலான மக்கள் தொகை அதிகரித்தது. இப்போது நாம் அந்தக் கட்டத்தைத் தாண்டி விட்டோம். வளர்ந்த நாடுகளை போல முதியவர்களின் மக்கள் தொகை அதிகரிக்கிறது" என்றார் அவர்.

தென் மாநிலங்களில் குறையும் குழந்தைப் பிறப்பு விகிதம், அதிகரிக்கும் முதியவர் மக்கள் தொகை

படக்குறிப்பு,முதியவர்கள் மக்கள் தொகை அதிகரிப்பை ஒரு பிரச்னையாக பார்க்க வேண்டாம் என்கிறார் பேரசிரியர் ஜோதி சிவஞானம்

முதியோர் விகிதம் மேலும் உயரும்!

"கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து செல்வது அதிகரித்து வருகிறது. எனவே, முதியவர்களின் பராமரிப்பு சுமை அரசுக்கு அதிகரிக்கும். அதே நேரம், உள்ளூரில் வேலை செய்வதற்கான இளைஞர்கள் குறைவாக இருப்பார்கள்" என்று கூறுகிறார் சென்னைப் பல்கலைக்கழக மக்கள் தொகை ஆய்வுகள் மையத்தின் தலைவர் டாக்டர் சத்யவான்.

அவர் மேலும் கூறும்போது, "ஒரு நாட்டில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறையும் போது எழும் முக்கிய சவால் முதியவர்களை பராமரிப்பது. அவர்களுக்குத் தேவையான திட்டங்களை உருவாக்க வேண்டும். முதியவர்கள் அனைவரையும் மருத்துவமனையில் அனுமதித்து பார்த்துக் கொள்ள முடியாது. அவர்களை வீட்டில் வைத்து பார்த்துக் கொள்வதற்கான வசதிகள் வேண்டும்." என்று கூறினார்.

இந்தியாவில் வயது முதிர்ந்தவர்கள் 40% ஏழைகளாக இருக்கின்றனர். இந்தியாவில் முதியோர் மக்கள் தொகையில் தென் மாநிலங்களுக்கும் பிற பகுதிகளுக்கும் இடையிலான இடைவெளி 2036-ம் ஆண்டுக்குள் மேலும் விரிவடையும் என்கிறது ஐ.நாவின் மக்கள் தொகை நிதியம்.

தென் மாநிலங்களில் குறையும் குழந்தைப் பிறப்பு விகிதம், அதிகரிக்கும் முதியவர் மக்கள் தொகை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,முதியோர் நலன் சார்ந்த திட்டங்களையும், சேவைகளையும் வழங்க அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டியிருக்கும்.

குழந்தைப் பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பது எதை காட்டுகிறது?

"ஒரு பிராந்தியத்தில் குழந்தைப் பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பது அந்த பகுதி பின் தங்கியிருப்பதன் அறிகுறியாகும். எனவே, இந்த பிரச்னையின் அரசியல் விளைவுகளை பார்க்க வேண்டும்" என்கிறார் பேராசிரியர் ஜோதி சிவஞானம்.

அவர் கூறும்போது, "படிப்பறிவு அதிகமாக உள்ள இடத்தில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கும். இந்த விகிதம் அதிகரிப்பது பின் தங்கிய நிலையின் ஒரு நேரடி அறிகுறியே" என்றார்.

கல்வியறிவு குறைந்திருப்பதாலேயே இது நடப்பதாக கூறினார், டாக்டர் சத்தியவான், அவர் கூறுகையில், "தென் மாநிலங்களில் கல்வியறிவு காரணமாக ஒரு குழந்தை அல்லது அதிகபட்சம் இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொண்டனர். எண்ணிக்கையா? அல்லது தரமா? என்ற கேள்வியில் தென் மாநிலங்கள் தரத்தை நோக்கி நகர்ந்துவிட்டன. ஒரு குழந்தைக்கு தரமான சுகாதாரம், கல்வி ஆகியவற்றை வழங்க வேண்டும் என்ற விழிப்புணர்வு உள்ளது. ஆனால், வட மாநிலங்கள் இன்னும் இந்த நிலைக்கு வரவில்லை" என்றார்.

மேலும் அதனால், "வட இந்தியாவிலிருந்து புலம் பெயர்வோர் தென் மாநிலங்களுக்கு குடும்பம் குடும்பமாக வருவதை காண முடிகிறது, வேலை செய்பவர்களாக மட்டுமல்ல, தொழில் தொடங்குபவர்களாகவும் வட இந்தியர்கள் தமிழ்நாட்டுக்கு வருகின்றனர். மற்ற தென் மாநிலங்களை விட தமிழ்நாட்டில் நகரங்கள், சிறு நகரங்கள் அதிகமாக இருப்பதால் இடம்பெயர்ந்து வருபவர்கள் அதிகமாக உள்ளனர்" என்று கூறினார்.

தென் மாநிலங்களில் குறையும் குழந்தைப் பிறப்பு விகிதம், அதிகரிக்கும் முதியவர் மக்கள் தொகை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,முதியவர்கள் மக்கள் தொகை தொடர்ந்து அதிகமாக இருந்து வரும் நாடுகளில் ஒன்று ஜப்பான்.

உத்திகள் மாற வேண்டும் !

இதன் அரசியல் விளைவுகளை பற்றி பேசிய பேராசிரியர் ஜோதி சிவஞானம், மாநிலத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி வெட்டப்படுவதாக கூறினார். அவர், "மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி பெரும்பாலும் மக்கள் தொகை அடிப்படையிலும், தனி நபர் வருமானத்தின் அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படுகிறது. தனிநபர் வருமானம் என்பதும் மக்கள் தொகை அடிப்படையிலேயே கணக்கிடப்படுகிறது. எனவே, கிட்டத்தட்ட 45% நிதி மக்கள் தொகையை கொண்டு வழங்கப்படுகிறது. உற்பத்தியின் அடிப்படையில் கணக்கிட்டால், குறைந்த மக்கள் தொகை இருந்தாலும் அதிக உற்பத்தி கொண்டதாக தமிழ்நாடு இருக்கும், ஆனால் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை" என்கிறார்.

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிதா, "நாம் ஒரு சமூகமாக செயல்பட முடியுமா, இல்லையா என்ற விளிம்பில் இருக்கிறோம்" என்று குறைந்து வரும் குழந்தைப் பிறப்பு விகிதத்தையும் அதிகரிக்கும் முதியவர்களின் மக்கள் தொகையையும் குறிப்பிட்டு 2023-ம் ஆண்டில் பேசியிருந்தார்.

அந்நாட்டின் தேசிய தரவுகள் படி ஜப்பானின் மக்கள் தொகையில் 29.1% பேர் 65வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தனர். அதே போன்று, இத்தாலியில் 24.5% ஆகவும், பின்லாந்தில் 23.6% ஆகவும், இந்த வயதினரின் மக்கள் தொகை இருந்தது.

உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பா இயக்குநர் டாக்டர் ஹான்ஸ் ஹென்ரி பி.குலூஜ், "ஐரோப்பாவின் மக்கள் தொகை நிலவரம் வேகமாக மாறி வருகிறது. குறைந்து வரும் பிறப்பு விகிதம், நகரமயமாக்கல், இடப்பெயர்வு ஆகியவை நமது சுகாதாரம், பராமரிப்பு, சமத்துவம் குறித்த அணுகுமுறையை மறுவடிவமைத்து வருகிறது. இதனை அச்சப்பட வேண்டிய பிரச்னையாக பார்க்க வேண்டாம், மாறாக ஆதாரத்தின் அடிப்படையிலான உத்திகளை வகுத்தெடுப்போம்" என்று பேசியிருந்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cg71gnxvzl9o

பொள்ளாச்சி சம்பவத்தில் 09 பேருக்கு ஆயுள்தண்டனை!

4 weeks 2 days ago

New-Project-62-1.jpg?resize=600%2C300&ss

பொள்ளாச்சி சம்பவத்தில் 09 பேருக்கு ஆயுள்தண்டனை!

கடந்த 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் 8 க்கும் மேற்பட்ட பெண்களை காணொளி எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கை பொள்ளாச்சி பொலிஸார் முதலில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த வழக்கு மாநில அரசின் குற்றபுலனாய்வுக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த 25 தொடக்கம் 28 வயதுக்கிடைப்பட்ட 05பேர் கைது செய்யப்பட்டனர்.

அதை தொடர்ந்து 2021ஆம் ஆண்டு மேலும் 04பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர் குறித்த வழக்கு மீதான விசாரணை கோவை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் பாதிக்கப்பட்ட 8 பெண்களும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக சாட்சி அளித்தனர்.

வழக்கின் ஒவ்வொரு விசாரணையின்போதும் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் சேலம் சிறையில் இருந்து நிகழ்நிலை மூலமாக நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வழக்கில் சாட்சி விசாரணை முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று (13) அறிவிக்கப்படும் என கடந்த 28ம் திகதி நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் , இந்த வழக்கில் கைதான 9 பேரும் நீதிபதி முன்பு நேரில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டனர்.

தொடர்ந்து, இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த வழக்கில் கைதான 9 பேரும் குற்றாவாளிகள் என கோவை மகளீர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ள நிலையில் அவர்களுக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று நண்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1431749

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் - கோவை மகளிர் நீதிமன்ற தீர்ப்பு விவரம்

4 weeks 2 days ago

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

13 மே 2025, 05:26 GMT

புதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர்

(இந்த சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)

கடந்த 2019-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி சற்று முன்பு தீர்ப்பு வழங்கினார். 9 பேர் மீதும் முன்வைத்த குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு நிரூபித்திருப்பதாக நீதிபதி தெரிவித்தார். அவர்களுக்கு என்ன தண்டனை என்ற விவரம் நண்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வெளிச்சத்துக்கு வந்த இந்த பாலியல் வழக்கு காரணமாக, அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன.

இந்த பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிமுக பின்புலம் இருப்பதாக தொடர்ந்து திமுக குற்றம் சாட்டி வந்தது, எனினும் அதை அதிமுக மறுத்தது.

அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியது என்ன?

அரசு தரப்பு வழக்கறிஞர் சுந்தர மோகன் , பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

படக்குறிப்பு,அரசு தரப்பு வழக்கறிஞர் சுந்தர மோகன்

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அரசு வழக்கறிஞர் சுந்தரமோகன், "கைதான 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வயதை காரணம் காட்டி குறைவான தண்டனை வழங்குமாறு குற்றவாளிகள் கேட்டுள்ளனர். அரசுத் தரப்பில் கடுமையான வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது அரிதான வழக்கு. பெண்கள் தொடர்பான இந்த வழக்கில் நீதிமன்றம் கடும் தண்டனை வழங்க வேண்டும்" என தெரிவித்தார்.

இவ்வழக்கில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 D (கூட்டுப் பாலியல் வன்கொடுமை) மற்றும் 276 (2)(N) (தொடர்ந்து பாலியல் குற்றத்தில் ஈடுபடுவது) ஆகிய இரு முக்கியமான பிரிவுகளில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த வழக்கில் நண்பகல் 12 மணிக்கு தண்டனை வழங்கப்பட உள்ளது.

"உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பெண்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்" என தெரிவித்தார் சுந்தர மோகன்.

இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட 48 பேரும் இறுதிவரை பிறழ்சாட்சிகளாக மாறவில்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் சுரேந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

வழக்கில் அழிக்கப்பட்ட ஆதாரங்கள் தொழில்நுட்ப நிபுணர்கள் மூலம் மீட்கப்பட்டதாக அவர் கூறினார். விஞ்ஞானப்பூர்வமாக அடையாளம் காணுதல் உள்ளிட்ட பலவற்றுக்கு வழக்கில் தொழில்நுட்பம் உறுதுணையாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.

இதுவரை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் 8 பேரை விசாரித்ததாக கூறினார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

படக்குறிப்பு,குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கக்கோரி, நீதிமன்ற வளாகத்தில் கோஷம் எழுப்பிய பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்

வழக்கின் பின்னணி

2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பொள்ளாச்சி பாலியல் வல்லுறவு வழக்கு.

கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இளம் பெண்களை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அதனை காணொளி ஆக பதிவு செய்து பாதிக்கப்பட்டவர்களை ஒரு கும்பல் மிரட்டி வந்துள்ளது.

இவர்களால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், தனது சகோதரரிடம் அது பற்றி கூறவே, தங்கையை பாலியல் சீண்டல் செய்த இளைஞர்களை சுற்றி வளைத்த அவரது சகோதரர் அவர்களை விசாரித்திருக்கிறார். அப்போது அந்த இளைஞர்கள் வைத்திருந்த செல்போன்களில் ஏராளமான இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு துன்புறுத்தப்படும் காணொளிகள் இருந்துள்ளன.

இதையடுத்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டவுடன் திருநாவுக்கரசு, சபரிராஜன் என்கிற ரிஷ்வந்த், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சியில் இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அடித்து துன்புறுத்தப்படும் காணொளிகள், பொதுமக்கள் மத்தியில் பரவி வந்த நிலையில், இதில் அரசியல் கட்சி நிர்வாகிகளின் வாரிசுகளும் ஈடுபட்டிருப்பதாக கூறப்பட்டது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

படக்குறிப்பு,தீர்ப்பையொட்டி பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள போலீஸார்

வழக்கு கடந்து வந்த பாதை

* பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்த நாள்: 2019 பிப்ரவரி 12

* முதல் தகவல் அறிக்கை பதியப்பட்ட நாள்: 2019 பிப்ரவரி 24. அதன் அடிப்படையில் சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

* திருநாவுக்கரசு என்பவரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவானார். தலைமறைவாக இருந்த அவர், ''தனக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பு இல்லை'' என வீடியோ வெளியிட்டார். 2019 மார்ச் 5 அன்று அவர் கைது செய்யப்பட்டார்.

* திருநாவுக்கரசின் ஐஃபோனில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் பதியப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதுவே இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக, திருப்புமுனையாக அமைந்தது.

* வழக்கு பதியப்பட்ட ஒரு மாதத்துக்குள் அதாவது 2019 மார்ச் மாதத்தில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

* வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபரான சபரிராஜன் வீட்டில் கைப்பற்றப்பட்ட லேப் டாப் இந்த வழக்கின் மிக முக்கியமான மற்றொரு ஆதார ஆவணமானது.

* 2019 ஏப்ரல் 25 அன்று இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. செல்போன்கள், லேப்டாப் போன்றவற்றில் இருந்து கைப்பற்றப்பட்ட வீடியோக்கள் மின்னணு ஆதார ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டன.

* பாதிக்கப்பட்ட 20 பெண்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், முதற்கட்டமாக கைதான சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகியோருக்கு எதிராக 2019 மே 24 அன்று முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

* சிபிஐ வசம் வழக்கு வந்தபின்பு, இந்த வழக்கில் அருளானந்தம், ஹெரன்பால் மற்றும் பாபு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டு, அரசியல் அரங்கில் பரபரப்பான பேசுபொருளானது.

* இந்த 3 குற்றவாளிகள் மீதும் 2021 பிப்ரவரி 22 அன்று இரண்டாவது கூடுதல் குற்றப்பத்திரிக்கை, கோவை மகிளா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

* வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பதாவது நபராக அருண்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு, அவர் மீதான குற்றப்பத்திரிக்கை, 2021 ஆகஸ்ட் 16 அன்று, கூடுதல் குற்றப்பத்திரிகையாக தாக்கல் செய்யப்பட்டது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

* இந்த வழக்கில் 100க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அவர்களில் 48 பேர் மட்டுமே, சிபிஐ அதிகாரிகளால் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தப்பட்டனர்.

* பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவானபோது, காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரகாஷ் முதல் விசாரணை அதிகாரியாக இருந்தார். சிபிசிஐடியிடம் மாற்றப்பட்ட பின்பு, எஸ்பி நிஷா பார்த்திபன் விசாரணை நடத்தினார். அதன்பின் சிபிஐ அதிகாரிகள் விஜய் வைஷ்ணவி, ஆய்வாளர் பச்சையம்மாள் ஆகியோர் விசாரணை நடத்தியுள்ளனர்.

* இவ்வழக்கில் எலக்ட்ரானிக் பொருட்களே முக்கிய ஆதாரங்களாக சேர்க்கப்பட்டுள்ளன. ஐஃபோனில் எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் ஆகியவற்றை வைத்து குற்றம் நடந்த தேதி, நேரம் ஆகியவை எடுக்கப்பட்டுள்ளன.

* வாட்ஸ்ஆப் குழுவை தொடங்கி அதில் ஆபாச வீடியோக்களை பகிர்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

* பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் புகார் கொடுக்க அச்சப்பட்டுள்ளனர். இவர்களை அச்சுறுத்துவதற்காக சில ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். விசாரணையின்போது அவை நீக்கப்பட்டன.

* இந்த வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, வழக்கு பதியப்பட்ட நாளிலிருந்து குற்றம் சாட்டப்பட்ட யாருக்கும் பிணை வழங்கப்படவில்லை.

* பாதிக்கப்பட்ட 8 பெண்களில் ஏழு பேர் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகி சாட்சியம் கூறினர். இவர்களிடம் நீதிமன்ற அறையில் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது.

கனிமொழி

படக்குறிப்பு,குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் நடத்தப்பட்ட போராட்டம்

* குற்றப்பத்திரிகைகளில் இவர்கள் மீது 76 விதமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. அரசு தரப்பில் 205 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 12 ஆவணங்கள் குறித்துத் தரப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர்த்து நீதிமன்றம் தானாக 11 ஆவணங்களை எடுத்துக் கொண்டுள்ளது. வழக்கு விசாரைணயில் கைப்பற்றப்பட்ட செல்போன்கள், லேப்டாப், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட முக்கியமான 30 பொருட்கள் ஆதார ஆவணமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

* பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இறுதிவரை பிறழ்சாட்சியாக மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* முதல் குற்றப்பத்திரிகை துவங்கி இறுதிவரை மொத்தம் 1500 பக்கங்களில் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. சாட்சிகளிடம் 236 கேள்விகள் கேட்கப்பட்டு, அவை பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

* இந்த வழக்கை கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி, தொடர்ந்து 5 ஆண்டுகளாக விசாரித்து வருகிறார். இடையில் அவருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டு, உயர் நீதிமன்ற உத்தரவால் அது தடுத்து நிறுத்தப்பட்டது.

* இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

9 குற்றவாளிகள் யார்?

  • சபரி ராஜன்

  • திருநாவுக்கரசு

  • சதீஷ்

  • வசந்தகுமார்

  • மணிவண்ணன்

  • ஹெரன்பால்

  • பாபு

  • அருளானந்தம்

  • அருண்குமார்

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cwy6482jyjgo

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் உயிருக்கு யாரால் ஆபத்து? பிபிசி தமிழுக்கு பேட்டி

1 month ago

சகாயம், கிரானைட் முறைகேடு, தமிழ்நாடு, மதுரை, சட்டம்

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்

"மதுரையில் கிரானைட் வெட்டி எடுப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அரிட்டாபட்டி போன்ற பகுதிகளைக் காப்பாற்றியிருக்கிறேன். இதற்கு அடிப்படையாக நான் சமர்ப்பித்த அறிக்கை உள்ளதால், என் மீது அவர்களுக்கு கோபம் இருக்கலாம்" என்று கூறுகிறார், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்.

கிரானைட் முறைகேட்டில் தொடர்புடைய நபர்களால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது தொடர்பாக சகாயம் முன்வைத்த குற்றச்சாட்டுகளை, காவல்துறை டி.ஜி.பி சங்கர் ஜிவால் மறுத்துள்ளார்.

சகாயத்துக்கு எந்த தரப்பில் இருந்தும் அச்சுறுத்தல் தரப்பட அரசு அனுமதிக்காது என்று தமிழ்நாடு கனிம வளங்கள் மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

'1 லட்சம் கோடி ரூபாய் இழப்பு'

மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்த சகாயத்தை 2014 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது.

கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததில் அரசுக்கு சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக, 2015ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் சகாயம் குழு அறிக்கையைத் தாக்கல் செய்தது.

தற்போது சட்டவிரோத கிரானைட் குவாரிகள் தொடர்பான வழக்கு மதுரை கனிம வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜராக வருமாறு இரண்டு முறை நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

கிரானைட் முறைகேட்டை வெளிக்கொண்டு வந்ததால் தன் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் தனக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டதால் ஆஜராக முடியவில்லை எனவும் சமீபத்தில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் சகாயம் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த மே 5-ஆம் தேதியன்று மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் கிரானைட் குவாரி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போதும் சகாயம் ஆஜராகவில்லை. இதைக் குறிப்பிட்டுப் பேசிய நீதிபதி லோகேஸ்வரன், "சகாயத்துக்கு ஏன் பாதுகாப்பு வழங்கவில்லை. என்ன காரணம் என்பதை நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டும்" என்றார்.

மேலும், "சகாயத்துக்கு பாதுகாப்பு கொடுக்கப்படாவிட்டால் உரிய பாதுகாப்பு வழங்குமாறு மத்திய பாதுகாப்புப் படைக்கு உத்தரவிடப்படும்" எனக் கூறி வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

பிபிசி தமிழிடம் சகாயம் கூறியது என்ன?

சகாயம், கிரானைட் முறைகேடு, தமிழ்நாடு, மதுரை, சட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சகாயத்துக்கு பாதுகாப்பு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

"உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்?" என சகாயத்திடம் பிபிசி தமிழ் கேட்டது.

"2012ஆம் ஆண்டு மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த போது கிரானைட் வெட்டி எடுத்ததில் அரசுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, அறிக்கை ஒன்றை அனுப்பினேன். இது பேசுபொருளாக மாறியதால் அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு நிறைய குவாரிகள் மூடப்பட்டன. ஏராளமானோர் மீது வழக்கு தொடரப்பட்டது. எனக்கு பணிமாறுதல் வழங்கப்பட்டதால் கோ ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராக பணியைத் தொடங்கினேன். அப்போதே கவனமாக இருக்குமாறு பலரும் எச்சரித்தனர்" என்று கூறினார்.

இதன் பிறகு கிரானைட் முறைகேடு வழக்கை விசாரிப்பதற்காக 2014ஆம் ஆண்டு சகாயத்தை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

"இது சவாலான பணி. இதன் பின்புலத்தில் இருந்தவர்களின் பின்னணி, அவர்களின் கடந்தகால செயல்பாடுகள், முறைகேடுகளின் அளவு, நிதி இழப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பாதுகாப்பு கொடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் கூறியது" என்றார் சகாயம்.

சகாயத்துக்கு 2-வது முறையாக பாதுகாப்பு விலக்கம்

சகாயம், கிரானைட் முறைகேடு, தமிழ்நாடு, மதுரை, சட்டம்

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு,2021 ஆம் ஆண்டு ஜனவரியில் அரசுப் பணியில் இருந்து சகாயம் விருப்ப ஓய்வு பெற்றார்

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, சகாயத்தின் பாதுகாப்புக்கு ஆயுதம் ஏந்திய பாதுகாவலர் ஒருவர் நியமிக்கப்பட்டார். 2014 டிசம்பர் முதல் 2020 ஆம் ஆண்டு வரை இந்தப் பாதுகாப்பு தொடர்ந்தது. "2020 அக்டோபர் மாதத்தில், எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று கூறி பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது" என்றார் சகாயம்.

2021 ஆம் ஆண்டு ஜனவரியில் அரசுப் பணியில் இருந்து சகாயம் விருப்ப ஓய்வு பெற்றார். "பதவியில் இல்லாவிட்டாலும் பாதுகாப்பை விலக்க முடியாது. பதவிக் காலத்தைத் தாண்டியும் அச்சுறுத்தல் நீடிக்கும் என்பது தெரிந்த ஒன்று" என்கிறார் சகாயம்.

பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது தொடர்பான செய்தி, ஊடகங்களில் வெளியாகவே, 'எங்கள் அனுமதியில்லாமல் பாதுகாப்பை எவ்வாறு விலக்கிக் கொள்ள முடியும்?' என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கின் விசாரணையின்போது இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

"நீதிமன்றம் கூறியதால் உடனே பாதுகாப்பு வழங்கினார்கள். ஆனால், 2023 மே மாதம் எந்த தகவலும் இல்லாமல் பாதுகாப்பை விலக்கிக் கொண்டனர். இதன்பிறகு, கீழ்ப்பாக்கத்தில் உள்ள எனது வீட்டுக்கு சந்தேகத்துக்கு இடமான சிலர் வந்து விசாரித்த நிகழ்வுகள் நடந்தன" என்று சகாயம் கூறினார்.

தலைமைச் செயலருக்கு கடிதம்

சகாயம், கிரானைட் முறைகேடு, தமிழ்நாடு, மதுரை, சட்டம்

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு,"கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு என் மீது கோபம் இருக்கலாம்" என்கிறார் சகாயம்

கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவான நிலைப்பாடாக இதைப் பார்ப்பதாகக் கூறிய சகாயம், "இந்தியாவின் மிகப் பெரிய கிரானைட் ஊழலை வெளியில் கொண்டு வந்த அதிகாரிகளுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. அதைத் தான் காவல்துறை சொல்ல விரும்புகிறது" எனவும் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.

2023 மே முதல் தற்போது வரை தனது பாதுகாப்புக்கு காவலர்கள் இல்லை எனக் கூறும் சகாயம், 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் தலைமைச் செயலாளர், டி.ஜி.பி ஆகியோருக்கு கடிதம் எழுதியதாக கூறினார்.

"நான் எழுதிய கடிதத்துக்கு டிசம்பர் மாதத்தில் டி.ஜி.பி அலுவலகத்தில் இருந்து பதில் வந்தது. பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக பாதுகாப்பு மறுஆய்வுக் குழுவில் (security reveal commitee) விவாதித்து பிரச்னை இல்லை என்று முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டிருந்தது. 2023 மார்ச் மாதம் எடுத்த முடிவைக் கூட டிசம்பர் மாதம் தான் தெரிவித்தனர்" என்கிறார் சகாயம்.

'உளவியல் ரீதியாக நெருக்கடி'

சகாயம், கிரானைட் முறைகேடு, தமிழ்நாடு, மதுரை, சட்டம்

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு,கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததில் அரசுக்கு சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக, 2015 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் சகாயம் குழு அறிக்கையைத் தாக்கல் செய்தது

"என்னுடைய நடவடிக்கைக்குப் பிறகு மதுரையில் சட்டத்துக்குப் புறம்பாக கிரானைட் வெட்டி எடுப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அரிட்டாபட்டி போன்ற பகுதிகளைக் காப்பாற்றியிருக்கிறேன். அதனால் என் மீது அவர்களுக்கு (கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள்) கோபம் இருக்கலாம்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பை விலக்கும் விவகாரத்தில் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து தகவல்களைத் திரட்டிய பிறகே காவல்துறை முடிவை எடுத்திருக்க வேண்டும் என்றார், சகாயம்.

ஏப்ரல் 29-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, இதுதொடர்பாக 10 பக்கங்களில் விரிவான கடிதம் ஒன்றையும் தான் அனுப்பியுள்ளதாக, சகாயம் குறிப்பிட்டார்.

"பாதுகாப்பு பிரச்னை நீடிப்பதால், பொது இடங்களுக்குச் செல்வதை பெருமளவு குறைத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் மூலம் உளவியல் ரீதியாக நெருக்கடி கொடுப்பதாகவே பார்க்கிறேன்" என்றார் சகாயம்.

காவல்துறை டி.ஜி.பி விளக்கம்

சகாயம், கிரானைட் முறைகேடு, தமிழ்நாடு, மதுரை, சட்டம்

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு,பாதுகாப்பு விலக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு பின்னரே இதுகுறித்து சகாயம் பேசிவருவதாக டி.ஜி.பி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் மறுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '2023 மார்ச் 20 ஆம் தேதி நிலவரப்படி, சகாயத்துக்கு அச்சுறுத்தல் உள்ளதா என்பது குறித்து கவனத்துடன் பரிசீலனை செய்யப்பட்டு பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் முடிவு எடுக்கப்பட்டது' எனத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு விலக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு பின்னரே இதுகுறித்து சகாயம் பேசி வருவதாக டி.ஜி.பி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

'நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகும் போது ஏதேனும் குறிப்பிடும் படியான அச்சுறுத்தல் இருந்தால் அவருக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படும்' எனவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து அந்த அறிக்கையில், "சட்டவிரோத கிரானைட் சுரங்கம் தொடர்பான முறைகேட்டை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக சகாயம் இருந்த காலத்தில் 2014 நவம்பர் முதல் 2020 அக்டோபர் வரை மெய்க்காப்பாளர் ஒருவர் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டார். 2020 ஆம் ஆண்டு பாதுகாப்பு மறு ஆய்வுக் குழு கூட்டத்தில் பாதுகாப்பை விலக்கிக் கொள்வது என முடிவெடுப்பட்டது. இருப்பினும், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மீண்டும் பாதுகாப்பு வழங்கப்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது.

'அச்சுறுத்தல் இல்லாத 22 பேர்'

ஜனவரி 2021ஆம் ஆண்டு சகாயம் விருப்ப ஓய்வில் சென்றதை சுட்டிக் காட்டியுள்ள சங்கர் ஜிவால், '2023 ஆம் ஆண்டில் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் எந்த அச்சுறுத்தலும் இல்லாத 22 நபர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது' எனக் கூறியுள்ளார்.

சகாயத்துக்கு குறிப்பிடத்தக்க எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை என்பதால்தான் அவருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2023 ஆகஸ்ட், 2023 அக்டோபர் மாதங்களில் தலைமைச் செயலாளர், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆகியோருக்கு சகாயம் கடிதம் எழுதியுள்ளதைக் குறிப்பிட்டுள்ள சங்கர் ஜிவால், 'எந்த அச்சுறுத்தலும் இல்லாத காரணத்தால் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாக 2023 டிசம்பர் மாதம் சகாயத்துக்கு பதில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது' என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அமைச்சர் ரகுபதி கூறியது என்ன?

சகாயத்துக்கு எந்த தரப்பில் இருந்தும் அச்சுறுத்தல் தரப்பட அரசு அனுமதிக்காது என்று தமிழ்நாடு கனிம வளங்கள் மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கனிம வள கொள்ளை தொடர்பான வழக்கில் தனது விசாரணை அறிக்கை குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவிக்கலாம். எந்த விதமான கட்டுப்பாடும் அச்சுறுத்தலும் அவருக்கு எந்த தரப்பில் இருந்தும் கொடுப்பதற்கு அரசு அனுமதிக்காது. அச்சமின்றி அவர் நீதிமன்றத்தில் தன்னுடைய விசாரணை அறிக்கை குறித்து கூறலாம்" என்று தெரிவித்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ce81vggrp03o

கண்முன்னே தாய், தந்தை பலி: இரவு முழுவதும் கால்முறிந்து தவித்த சிறுமி - தாராபுரம் விபத்துக்கு காரணம் யார்?

1 month ago

விபத்தில் கணவன், மனைவி பலி

பட மூலாதாரம்,VIGNESH

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சேவியர் செல்வகுமார்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 5 மே 2025

உரிய அறிவிப்புப் பலகை மற்றும் தடுப்புகள் வைக்காததால், தாராபுரம் அருகே பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்டிருந்த 12 அடி குழியில், இரு சக்கர வாகனத்துடன் விழுந்த கணவன், மனைவி உயிரிழந்தனர். அவர்களின் 13 வயது மகள் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்தில் ஒரே இருசக்கர வாகனத்தில் மூவர் சென்றதும் குறிப்பிடத்தக்கது. இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணிப்பது சட்ட விரோதமானதாகும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்ப அதற்கு விதிக்கப்படும் அபராதம் மாறுபடுகிறது.

இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், மாநில நெடுஞ்சாலைத்துறையின் உதவிப் பொறியாளர் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபராகவும், ஒப்பந்ததாரர் 4வது நபராகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து வழக்கில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவரை வழக்கில் சேர்த்திருப்பது இதுவே முதல் முறை என்பதோடு, 2 அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலிருந்து காங்கேயம் செல்லும் மாநில நெடுஞ்சாலைத்துறையில் குள்ளக்காய் பாளையம் என்ற இடத்தில், மாந்தோப்புக்கு அருகில் சாலை விரிவாக்கத்துடன் அங்குள்ள பாலத்தை அகலப்படுத்தும் பணியும் நடந்து கொண்டிருக்கிறது.

இதற்காக பாலத்தை ஒட்டி 12 அடி அளவுக்கு மிகப்பெரிய குழி தோண்டப்பட்டுள்ளது. இந்த குழியில் இரு சக்கர வாகனத்துடன் விழுந்ததில் தாராபுரம் அருகேயுள்ள சேர்வக்காரன்பாளையத்தைச் சேர்ந்த நாகராஜ் (42), அவருடைய மனைவி ஆனந்தி (38) ஆகியோர் அதே இடத்தில் உயிரிழந்துவிட்டனர். அவர்களின் மகள் தீக்சனா (13) பலத்த காயங்களுடன் கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இரவெல்லாம் சத்தமிட்டும் உதவி கிடைக்காத சிறுமி

தாராபுரம் அருகேயுள்ள சேர்வக்காரன்பாளையத்தைச் சேர்ந்த நாகராஜ், திருப்பூர் பஞ்சம்பாளையம் டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்துள்ளார். அவரும் அவருடைய மனைவியும், எட்டாம் வகுப்புப் படிக்கும் மகள் தீக்சனாவும் திருநள்ளாறு கோவிலுக்குச் சென்று விட்டு திரும்பும்போதுதான் இந்த விபத்து நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

மே 4 அன்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மூவரும் திருநள்ளாறு சென்றுவிட்டு, பேருந்து நிலையத்திலிருந்து மீண்டும் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போதுதான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ஆனந்தி

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

படக்குறிப்பு, ஆனந்தியும் அவருடைய நாகராஜும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

விபத்து பற்றி நாகராஜின் சகோதரர் வேலுசாமி தான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பேருந்து நிலையத்திலிருந்து வண்டியை எடுத்துக் கொண்டு வந்தபோது, அந்த இடத்தில் எதுவுமே தெரியவில்லை என்றும் பள்ளத்தில் வண்டி விழுந்ததும் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு பெற்றோர் இறந்து விட்டதாகவும் தீக்சனா தங்களிடம் தெரிவித்ததாக வேலுசாமி கூறியுள்ளார்.

"தீக்சனா இரவெல்லாம் கத்திக் கொண்டிருந்தாலும் யாருக்கும் கேட்கவில்லை. ஆனால், காலையில் அந்த வழியே சென்ற கல்லுாரி மாணவர்கள் பேருந்து ஒன்றிலிருந்து இந்த சத்தம் கேட்டு, பின்பு தகவல் தெரிவித்தனர். தீக்சனாவுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. நாங்கள்தான் அவளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்.'' என்றும் வேலுசாமி புகாரில் தெரிவித்துள்ளார்.

முறையான அறிவிப்புப் பலகை, தடுப்புகள் வைக்காததால்தான் தனது தம்பி குடும்பத்துக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டதாக வேலுசாமி தனது புகாரில் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் குண்டடம் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் முதல் குற்றவாளியாக மாநில நெடுஞ்சாலைத்துறையின் உதவிப் பொறியாளர் கணேஷ் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாலம் கட்டும் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்தின் சைட் இன்ஜினியர் குணசேகரன், சைட் மேற்பார்வையாளர் கெளதம், ஒப்பந்ததாரர் சிவகுமார் ஆகியோரும் அடுத்தடுத்த குற்றம் சாட்டப்பட்ட நபர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது பிஎன்எஸ் 285 (அலட்சியத்தால் பொதுவழியில் ஆபத்தை ஏற்படுத்துதல்), பிஎன்எஸ் 125 (a) -(அவசரமாக அல்லது அலட்சியமாக செய்யும் காரியத்தால் மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது) மற்றும் 106(1) (அலட்சியத்தால் ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த பிரிவுகளின் கீழ், பத்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புண்டு.

அமைச்சர் வருவதற்கு முன் அவசரமாக வைத்த தடுப்பு

விபத்து நடந்த இடத்தை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்து ராஜ் நேரில் ஆய்வு செய்து, ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டுள்ளார். தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக அமைச்சருமான கயல்விழி, விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தார். அமைச்சர் ஆய்வுக்கு வருவதை முன்னிட்டு, அந்த இடத்தில் அவசர அவசரமாக தகரத்தாலான தடுப்புகள் வைத்து மறைக்கப்பட்டிருந்ததாக புகார் எழுந்தது.

அமைச்சர் வந்தபோது அங்கிருந்த ஆனந்தியின் தாயார், ''இத்தனை பேர் இருந்தும் இப்படி என் பிள்ளையை அநியாயமாக இறக்கவிட்டு விட்டீர்களே...இதையெல்லாம் முதலிலேயே செய்திருந்தால் இப்படி இரண்டு பேர் இறந்திருக்க மாட்டார்களே...நான் இருக்கும்போது என் பிள்ளை போய்விட்டதே.'' என்று கூறி கதறி அழுதார். அவரை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

நாகராஜ், தீக்‌ஷனா

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

படக்குறிப்பு, தீக்சனா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இறந்து போன இருவருக்காகவும் தலா 3 லட்ச ரூபாய், சிகிச்சை பெறும் தீக்சனாவுக்கு ஒரு லட்ச ரூபாய் என மொத்தம் ஏழு லட்ச ரூபாய் நிவாரணமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், அதிகாரிகளின் அலட்சியத்தால் போன உயிருக்கு இது எந்த வகையில் ஈடு செய்யும் என்று இறந்து போனவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். சாலைப் பணி செய்வோருக்கும் கிராமவாசிகளுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் நடந்து போலீசார் சமாதானம் செய்துள்ளனர்.

கடந்த ஆண்டில் பொள்ளாச்சி அருகில் சாலையோரத்தில் தோண்டப்பட்டிருந்த குழியில் வாகனம் விழுந்ததில், அதில் இருந்த கான்கிரீட் கம்பிகளால் இருவர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டில் பெரியநாயக்கன்பாளையம் புதிய பாலத்தின் கீழே இருந்த நடுத்திட்டில் ஒளிர் விளக்கு இல்லாததால் பைக்கில் வேகமாக வந்த இளைஞர் நடுத்திட்டில் மோதி உயிரிழந்தார். சென்னையிலும் இதேபோன்று பல விபத்துக்களும், உயிரிழப்புகளும் நடந்துள்ளன. ஆனால் ஒப்பந்ததாரர், சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் யார் மீதும் பெரும்பாலும் வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை.

உரிய அடையாளங்கள் மற்றும் அறிவிப்புப் பலகைகள் வைக்காததால், சாலைப்பணிகளில் ஏற்படும் விபத்து உயிரிழப்புகளுக்கு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரே குற்றவியல் அலட்சியத்துக்கு பொறுப்பாவார் என்று மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் கடந்த 2024 ஜூலையில் ஓர் உத்தரவை வழங்கியது. ஆனால், ஒப்பந்ததாரர்களை விட, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மீது வழக்குகள் பதிவு செய்ய வேண்டுமென்ற கோரிக்கை, தமிழகத்தில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

விபத்துகளை ஏற்படுத்தும் காரணிகள்

சாலைகளில் விபத்துகளில் சிக்குவோருக்கு தரப்படும் கோல்டன் ஹவர் (விபத்து நடந்த முதல் ஒரு மணிநேரத்திற்குள் வழங்கப்படும் அதிஅவசர நிலை சிகிச்சை) சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்க வேண்டுமென்று 'உயிர்' அமைப்பின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முக்கியக் காரணமாக இருந்த கோயம்புத்துார் கன்ஸ்யூமர் காஸ் செயலாளர் கதிர்மதியோன், இந்த கோரிக்கையையும் வலியுறுத்தியிருந்தார். அதன்படி, இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தில், விபத்துக்குக் காரணமாக இருந்த அதிகாரிக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கலாம் என்ற 198 ஏ என்ற பிரிவு அதன்பின்பே சேர்க்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

விபத்தில் கணவன், மனைவி பலி

பட மூலாதாரம்,VIGNESH

படக்குறிப்பு,தாராபுரம் அருகே பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது

''இந்த விபத்து தொடர்பாக, உதவிப் பொறியாளர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதை ஒரு நல்ல துவக்கமாக கருதுகிறோம். பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் எந்த விபத்திலும் எந்த அதிகாரிகளையும் வழக்கில் சேர்ப்பதில்லை. இப்போது சேர்த்திருப்பதால், அரசுத்துறை அதிகாரிகள் தங்கள் பணியில் கூடுதல் கவனம் செலுத்தவும், இத்தகைய தவறுகளை களையவும் வாய்ப்பு ஏற்படும்.'' என்றார் கதிர்மதியோன்.

இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான விபத்துகளுக்கு இன்ஜினியரிங் தவறே காரணம் என்பதை மத்திய அமைச்சர் நிதின்கட்கரி இதுவரை 3 முறை ஒப்புக் கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டும் கதிர்மதியோன், அதை ஒப்புக் கொள்வதால் மட்டும் விபத்துக்கள் குறைந்து விடாது என்கிறார். அதற்கேற்ப கடுமையான சட்டங்களை உருவாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்கிறார் அவர்.

அதிகாரிகளின் அலட்சியத்தால் நடக்கும் விபத்துக்களை அவர் பிபிசி தமிழிடம் பட்டியலிட்டார்.

* வேகத்தடை அமைத்துவிட்டு, அதற்கான அறிவிப்புப் பலகை வைக்காமலும், வேகத்தடை மீது பெயிண்ட் அடிக்காததாலும் விபத்துகள் நடக்கின்றன.

* இந்திய சாலைக்குழும விதிகளின்படி, பெரும்பாலான வேகத்தடைகளை அமைக்காமல் இஷ்டத்துக்கு அமைப்பதும் விபத்துகளை ஏற்படுத்துகின்றன.

* பல இடங்களில் வேகத்தடைக்கும், பாதசாரிகள் கடப்பதற்கும் ஒரே மாதிரியாக கோடுகள் அமைப்பதாலும் வாகன ஓட்டிகளுக்கு வித்தியாசம் தெரியாமலிருப்பதும் விபத்துக்குக் காரணமாகிறது.

விபத்தில் கணவன், மனைவி பலி

பட மூலாதாரம்,VIGNESH

படக்குறிப்பு, பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளம்

* ஒரே சாலையாக இருந்து அகலமான சாலையை இரு சாலையாகப் பிரிக்கும்போது, நடுத்திட்டில் ஒளிர் விளக்கு அமைக்காததால் வேகமாக வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின்றன.

* சர்வீஸ் சாலைகளை ஒரே அளவில் அமைக்காமல் ஓரிடத்தில் அகலமாகவும், மற்றொரு இடத்தில் குறுகலாகவும் அல்லது வளைவாகவும் அமைப்பதும் விபத்துக்களுக்குக் காரணமாகிறது.

* சாலைகளில் உள்ள குழிகளை அவ்வப்போது மூடாமல் இருப்பதால், குழியில் விழாமலிருக்க வாகனங்கள் வலது அல்லது இடது புறமாகத் திடீரெனத் திரும்பும்போது, பின்னால் வரும் வாகனங்களில் விபத்துக்குள்ளாகின்றனர். இதுபோன்ற விபத்துக்களில் உயிரிழப்புகள் அதிகம் நடக்கின்றன.

இத்தகைய விபத்துகள் அனைத்துக்கும் அந்தப் பணியை சரியாகச் செய்யாத அல்லது கண்காணிக்காத நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் காரணமென்று குற்றம்சாட்டுகிறார் கதிர்மதியோன்.

'மண் சுவர் எழுப்பி கருப்பு வெள்ளை வர்ணமடிக்க வேண்டும்'

இதே கருத்தை வலியுறுத்தும் தமிழக நெடுஞ்சாலைத்துறையின் ஓய்வு பெற்ற சிறப்பு தலைமைப் பொறியாளர் (திட்டங்கள்) கிருஷ்ணகுமார், ''ஒவ்வொரு ஒப்பந்தப் பணிக்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகும்போது, அந்தப் பணியின்போது எச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன செய்ய வேண்டுமென்பது குறித்து தெளிவாக அதில் அறிவுறுத்தப்பட்டிருக்கும். அதை பெரும்பாலான ஒப்பந்ததாரர்கள் செய்யாமல் மிச்சம் பிடிப்பதே விபத்துக்கு வழிவகுக்கிறது.'' என்றார்.

சாலை விரிவாக்கத்துக்காக தோண்டும் மண்ணை வைத்து, குழியை ஒட்டி தடுப்புச்சுவர் அமைத்து, அதில் கருப்பு வெள்ளை பெயிண்ட் அடிப்பதுடன், அதற்கு 100 மீட்டர் துாரத்துக்கு முன்பே, 'சாலைப்பணி நடக்கிறது, மெதுவாகச் செல்லவும்' என்றோ அல்லது மாற்றுப்பாதையில் செல்லவும் என்றோ அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் என்கிறார் கிருஷ்ணகுமார். நீளமான இடங்களில் மாற்றுப்பாதை அமைப்பது மிக முக்கியம் என்று கூறும் அவர், தற்போது பல இடங்களில் இதை அமைப்பதில்லை என்கிறார்.

தற்போது விபத்து நடந்த இடத்தில் எந்தவித தடுப்புகளும், எச்சரிக்கை அறிவிப்புகளும் இல்லாமல் அங்கு பணி நடந்ததற்கு, அந்த இடத்தை எந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் கள ஆய்வு செய்யாததுதான் காரணம் என்று கூறும் கிருஷ்ணகுமார், இப்போதுள்ள பெரும்பாலான அதிகாரிகள் களப்பணி செய்யாமலிருப்பதுதான் இதுபோன்ற நிறைய தவறுகளுக்கும், விபத்துக்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் காரணமாகிறது என்கிறார் அவர்.

விபத்தில் கணவன், மனைவி பலி

பட மூலாதாரம்,VIGNESH

படக்குறிப்பு, பெரும்பாலான அதிகாரிகள் களப்பணி செய்யாமலிருப்பதுதான் இதுபோன்ற நிறைய தவறுகளுக்கும், விபத்துக்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் காரணமாகிறது என்கிறார் கிருஷ்ணகுமார்

இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் மாநில நெடுஞ்சாலைத்துறை திருப்பூர் கண்காணிப்புப் பொறியாளர் (கூடுதல் பொறுப்பு) ரமேஷ், ''அந்த இடத்தில் இரண்டு தடுப்புகளை வைத்திருந்துள்ளனர். இந்த விபத்து நடப்பதற்கு சற்று நேரத்துக்கு முன்பு, அவ்வழியே வேகமாக வந்த இளைஞரின் பைக் அந்தத் தடுப்புகள் மீது மோதியதில் வண்டியும் தடுப்புகளும் குழிக்குள் விழுந்துவிட்டன. ஆனால் அவர் மேலேயே சாலையில் விழுந்து விட்டார். அவரே எழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிவிட்டார்.'' என்றார்.

அந்தத் தடுப்புகள் இல்லாததால்தான், குழி இருப்பது தெரியாமல் நாகராஜ் வாகனத்துடன் உள்ளே விழுந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும், இருவருடைய உயிரிழப்புகளுக்குக் காரணமாக ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் தரப்பட்டிருப்பதுடன், உதவி கோட்டப் பொறியாளர், உதவிப் பொறியாளர் ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

''அமெரிக்காவில் சாலை பாதுகாப்பு வாரியம் (Road Safety Board) என்ற தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு உள்ளது. அதற்கு தனித்துவமான அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் என எந்தத் துறையின் தலையீடும் இல்லாத சாலை பாதுகாப்பு ஆணையத்தை (Road Safety Authority) மத்திய அரசு உருவாக்கி, அதற்கு சகலவித அதிகாரங்களையும் அளிக்க வேண்டும். அதுவரை இந்தியாவில் விபத்துக்களை குறைக்கவே முடியாது.'' என்கிறார் கோவை மாவட்ட சாலை பாதுகாப்புக்குழு உறுப்பினராகவுள்ள கதிர்மதியோன்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c045wgg169lo

24 இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

1 month 1 week ago

New-Project-18-1.jpg?resize=600%2C300&ss

24 இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

இந்தியாவின் கிழக்கு கடற்பகுதியில் வைத்து, 24 இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து நாகப்பட்டினம் மீனவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையை சேர்ந்த சிலர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக இந்திய மீனவர்கள் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்திய கடல் எல்லைப்பகுதியில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தாக்குதலில் காயமடைந்த மீனவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

காயமடைந்த 17 மீனவர்கள் நாகை ஒரத்தூர் அரச மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில் படுகாயமடைந்த மீனவர்கள் தாக்குதல் நடத்திய கடற்கொள்ளையர்களிடம் உடமைகளை இழந்து கரை திரும்ப முடியாமல் தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்களை அதிவேக படகில் வந்த குழு ஒன்று சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியதாக, தமிழக மீனவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். 6 பேர் கொண்ட கடற்கொள்ளையர்கள் குழுவே கத்திமுனையில் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1430503

கோவை: 7ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம் - சிறுமிகளுக்கு நேரும் கொடுமையும், மீட்கும் வழிகளும்

1 month 1 week ago

பாலியல் சம்பவங்களால் சிறுமிகளுக்கு ஏற்படும் பாதிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மிக இளவயதுள்ள சிறுமிகள் அதிகமான பாதிப்புக்கு உள்ளாவது இந்த வழக்குகளிலிருந்து தெரியவந்துள்ளது (சித்தரிப்புப்படம்)

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சேவியர் செல்வக்குமார்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 2 மே 2025

கோவையைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி ஒருவர், ஒன்றரை மாத கர்ப்பமாகியுள்ளார். இதுதொடர்பாக அந்த சிறுமியின் உறவுக்கார இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுபோன்ற பாதிப்புக்குள்ளாகும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இத்தகைய சிறுமிகளுக்கு, உடல், உளவியல் ரீதியான சிகிச்சையை தொடர்ந்து வழங்க வேண்டியது அவசியமென்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

கோவையைச் சேர்ந்த 12 வயது சிறுமி, தான் வசிக்கும் பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

கோவை மாநகர காவல்துறை அதிகாரிகள் பகிர்ந்த தகவலின்படி, கடந்த வாரத்தில் அந்தச் சிறுமி கடும் வயிற்றுவலி என்று கூறியதையடுத்து, அவரின் பெற்றோர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளனர்.

அப்போது அந்த சிறுமி ஒன்றரை மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. சிறுமியிடம் விசாரித்தபோது, இவர்களின் உறவினரான 20 வயது இளைஞர் இதற்கு காரணம் என தெரியவந்ததை அடுத்து, பெற்றோர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

மற்றொரு வழக்கில், கோவையில் வசிக்கும் வடமாநிலத் தொழிலாளியின் தங்கையை, வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் தொந்தரவு செய்த 22 வயது இளைஞர் இதே நாளில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் வன்முறைகளால் சிறுமிகளுக்கு ஏற்படும் பாதிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கிறிஸ்தவ மதபோதகர் ஜான் ஜெபராஜ், அவருடைய மைத்துனர் பெனட் ஹாரீஸ் என்பவரும் போக்சோ சட்டத்தில் கடந்த மாதத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சமீபகாலமாக கோவையில் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கையும், அதில் கைதாகும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. அதிலும் சிறுமிகள் அதிகமான பாதிப்புக்கு உள்ளாவதும் இந்த வழக்குகளிலிருந்து தெரியவந்துள்ளது.

விழிப்புணர்வு காரணமாகவே புகார்கள் அதிகரிப்பு!

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கோவை மாநகர காவல்துறையின் மத்திய காவல் உதவி ஆணையர் சிந்து, ''இப்போது தான் பாலியல் தொந்தரவு சம்பவங்கள் அதிகமாகியுள்ளது என்று கூறமுடியாது. போக்சோ சட்டம் குறித்து பொதுமக்களிடம் எழுந்துள்ள விழிப்புணர்வு காரணமாகவே, பெற்றோர் துணிவுடன் வந்து புகார் கொடுக்கின்றனர். தற்போது 12 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து உறவினர் மீதே கூறப்பட்டுள்ள புகாரும் இந்த விழிப்புணர்வு காரணமாக தரப்பட்டிருப்பதுதான்.'' என்றார்.

முன்பு நிறைய குற்றங்களில் உறவினர்கள், நண்பர்கள் என்று கருதி, பலரும் புகார் கொடுக்காமல் தவிர்த்து வந்ததாகக் கூறும் உதவி ஆணையர் சிந்து, அதேபோல முன்பு தனியார் மருத்துவமனைகளில் நடந்த சட்டவிரோத கருக்கலைப்புகள் பற்றி தகவல் தராமல் இருந்ததாகவும், இப்போது எல்லோருமே முறையாக காவல்துறைக்குத் தகவல் தருவதும் இத்தகைய வழக்குகள் அதிகரிப்பதற்குக் காரணமென்று தெரிவித்தார்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், ''இதுபோல நிறைய குற்றங்கள் குறித்து, காவல்துறையின் கவனத்துக்கு வந்தாலும், பல சம்பவங்களில் புகார் கொடுக்க பெற்றோர் மறுத்துவிடுகின்றனர். ஆனால் இந்த சம்பவத்தில் பெற்றோரே முன் வந்து புகார் கொடுத்து இருப்பதை ஒரு நல்ல மாற்றமாகத்தான் நாங்கள் கருதுகிறோம்'' என்றார்.

இந்த சிறுமிக்கு பெற்றோர் ஒப்புதலுடன் கருக்கலைப்பு செய்வதற்கு சட்டத்தில் அனுமதியிருப்பதாக உதவி ஆணையர் சிந்து தெரிவித்தார்.

அதே நேரத்தில் சில பெற்றோர் சிறு வயதிலேயே திருமண பந்தத்தைப் பற்றிப் பேசி முடிவு செய்வதும் இத்தகைய குற்றங்கள் நடக்க முக்கிய காரணமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பாலியல் சம்பவங்களால் சிறுமிகளுக்கு ஏற்படும் பாதிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப்படம்

உடல்ரீதியாக ஏற்படும் பாதிப்புகள் என்ன?

இந்த 12 வயது சிறுமிக்கு உடல் ரீதியான தொடர் சிகிச்சையும், கண்காணிப்பும், உளவியல் ஆலோசனையும் மிக அவசியமென்று பெண் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

''12 வயது சிறுமியான அவருக்கு இந்த கர்ப்பம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். கரு கலைப்பு உடலை பெருமளவில் பலவீனப்படுத்தும் என்பதால், அந்த சிகிச்சைக்குப் பிந்தைய கவனிப்புதான் மிக முக்கியம்.'' என்கிறார் மகப்பேறு மருத்துவர் உஷா.

உடலியல் ரீதியாக அந்த சிறுமி மீள்வதற்கு சற்று கால அவகாசம் தேவைப்படும் என்று கூறும் மருத்துவர் உஷா, சிறுமிக்குத் தேவையான உளவியல் ஆலோசனையும் கொடுத்தால் மட்டுமே முழுமையாக மீட்டெடுக்க முடியும் என்கிறார்.

மருத்துவர்களின் ஆலோசனைப் படி தொடர்ச்சியாக, அவர்கள் பரிந்துரைக்கும் காலம் வரை சிகிச்சையை பாதிப்புக்கு ஆளான சிறுமி பெற வேண்டும்.

பாதிப்புக்குள்ளான 12 வயது சிறுமிக்குத் தரப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பெண் மருத்துவர் ஹரிப்ரியா தேவி சஜாத், ''முதலில் அந்த சிறுமிக்கு இடமாறுதல் அவசியம். தற்போதுள்ள சூழ்நிலையில் அவரை கண்டிக்க வேண்டுமென்று நினைக்காமல், அவர் மீது தனி கவனம் செலுத்தி, அவருக்குள் இருக்கும் உடல்ரீதியான பாதிப்புகளை அறிய வேண்டியது பெற்றோரின் பொறுப்பு. உளவியல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது முக்கியம் என்றாலும், வீட்டிலுள்ள சூழ்நிலைதான் அவரை முழுமையாக மீட்டெடுக்க உதவும். அதை நல்ல விதமாக உருவாக்கித்தர வேண்டும்.'' என்கிறார்.

இதுபோன்ற பாதிப்புக்குள்ளாகும் சிறுமிகளுக்கு, அரசு மருத்துவமனையிலேயே உளவியல் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் இருப்பதாகக் குறிப்பிடும் காவல் அதிகாரிகள், கோவை மாநகர காவல் துறை சார்பிலும் இளவயது பெண்களுக்கு தனிப்பட்ட முறையில் கவுன்சிலிங் கொடுப்பதற்கு மனநல ஆலோசகர்களை ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்தனர்.

சிறுமிக்குத் தரப்பட வேண்டிய உளவியல் சிகிச்சை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மனநல மருத்துவர் சந்தோஷி, ''இந்த சம்பவத்தைப் பொறுத்தவரை, அந்த சிறுமியின் தனிப்பட்ட பாதிப்பு, அவருக்கு நேர்ந்த அனுபவம், அவருக்குள் இப்போது இருக்கும் உணர்வு, அவருடைய புரிதல் திறன் ஆகியவற்றை அறிந்தபின்பே, அவருக்கு எவ்வாறு உளவியல் சிகிச்சை கொடுப்பது என்பதை முடிவு செய்ய முடியும். பொதுவாக எல்லோருக்கும் தருவது போன்ற சிகிச்சையை இந்த சிறுமிக்குத் தருவது பலன் தராது.'' என்கிறார்.

இந்த நேரத்தில் அவரை உடல்ரீதியாக பலப்படுத்துவதை விட உளவியல்ரீதியாக திடப்படுத்துவது அவசியம் என்கிறார் சந்தோஷி.

இதில் மனநல மருத்துவர்களின் ஆலோசனை மிக முக்கியம் என்றாலும் அதை விட அதிமுக்கியமாகப் பங்களிக்க வேண்டியவர்கள் பெற்றோர்கள்தான் என மனநல மருத்துவர் சந்தோஷி கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cevdwplrz7vo

தமிழ்நாட்டில் நாளை முதல் அக்னி நட்சத்திரம் - மழையும் வருமா?

1 month 1 week ago

அக்னி நட்சத்திரம், கத்திரி வெயில், இன்றைய செய்திகள், முக்கியச் செய்திகள், தலைப்பு செய்திகள், தமிழ்நாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

5 மணி நேரங்களுக்கு முன்னர்

மே 3, சனிக்கிழமை அன்று தமிழ் நாளேடுகள் மற்றும் இணைய செய்தி ஊடகங்களில் வெளியான முக்கியச் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் நாளை (மே 4) தொடங்குகிறது என்று இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு - மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (மே 3) ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை முதல் 8-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மே 6-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம்.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 84 டிகிரி முதல் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது. இது மே 28-ம் தேதி வரை நீடிக்கிறது. பொதுவாக, இந்த காலகட்டத்தில் கடும் வெயில் சுட்டெரிக்கும். ஆனால், சமீபகாலமாக அக்னி நட்சத்திர காலகட்டத்தில் பரவலாக பல பகுதிகளில் கோடை மழை பொழிந்து குளிர்ச்சியை கொடுத்து வருகிறது," என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'போலி சாதி சான்றிதழ் குறித்த விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும்' - உயர் நீதிமன்றம்

இன்றைய செய்திகள், முக்கியச் செய்திகள், தலைப்பு செய்திகள், தமிழ்நாடு , போலி சாதிச் சான்றிதழ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இடஒதுக்கீட்டு கொள்கையை பாதுகாக்கும் விதமாக போலி சாதி சான்றிதழ் தொடர்பான விசாரணையை குறித்த காலத்துக்குள் விரைவாக முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், பாங்க் ஆப் பரோடா வங்கியின் உதவி பொது மேலாளர் ஜீவன் தாக்கல் செய்துள்ள மனுவில், ''எங்கள் வங்கியில் இடஒதுக்கீடு அடிப்படையில் ஏராளமான ஊழியர்கள் சாதி சான்றிதழ்களை கொடுத்து வேலைக்கு சேருகின்றனர். அவர்கள் தரும் சாதி சான்றிதழ்கள் பல போலியாக உள்ளன.

ஊழியர்களின் சான்றிதழின் உண்மைத்தன்மையை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் உள்ள தமிழ்நாடு மாநில அளவிலான ஆய்வுக்குழு உறுதி செய்யவேண்டும். ஆனால் இந்த குழு குறித்து காலத்துக்குள் விசாரித்து, உறுதி செய்வது இல்லை. இதனால், எங்கள் வங்கியின் ஊழியர்கள் ஓய்வூதிய பலன்களை நிர்ணயிக்க முடியவில்லை. எனவே, சாதி சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை உறுதிசெய்ய கால அளவை நிர்ணயித்து உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில், " போலி சாதிச் சான்றிதழ் தொடர்பான விசாரணையை முடிக்கும் காலத்தை நிர்ணயிக்க இந்த உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. அது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால், இந்த வழக்கில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளரை தாமாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்த்தோம்.

இடஒதுக்கீட்டு கொள்கையின் புனித்தன்மையையும், பொதுநலனையும் பாதுகாக்கும் விதமாக, போலி சாதி சான்றிதழ் குறித்த புகார்களை குறிப்பிட்ட நேரத்தில் விரைவாக விசாரித்து முடிக்க மாநில ஆய்வுக்குழுவுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் உத்தரவிட வேண்டும். மேலும், போதுமான எண்ணிக்கையில் மாநில ஆய்வுக்குழுக்களை உருவாக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல அனைத்து விதமான விசாரணைகளையும் தீவிரமாக மேற்கொண்டு, இறுதியில்தான் சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

அதனால், இந்த விவகாரம் குறித்து தகுந்த உத்தரவை 6 வாரத்துக்குள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் பிறப்பிக்க வேண்டும்," என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

சிவகிரி அருகே வயதான தம்பதி படுகொலை

சிவகிரி அருகே வயதான தம்பதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபர்களைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், "பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு முடிந்த தம்பதியினரினர் உடல்களை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மற்றும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் சிவகிரியைச் அடுத்த விளக்கேத்தி கீழ்பவானி வாய்க்கால் கரையில் உள்ள மேகரையான் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (75). இவரது மனைவி பாக்கியம் (65). இவர்களது மகன், மகள் இருவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். வயதான தம்பதி மட்டும் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், இவர்களது வீட்டில் இருந்து வியாழக்கிழமை துர்நாற்றம் வீசியதை அடுத்து, அருகில் வசித்த உறவினர் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது இருவரின் சடலங்களில் இருந்தே துர்நாற்றம் வந்தது தெரிந்துள்ளது. தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டனர்.

கொலைச் சம்பவம் நடைபெற்று மூன்று நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் உடல்கள் அழுகி துர்நாற்றம் வீச ஆரம்பித்துவிட்டதாகவும், நகை பணத்துக்காக கொலை நடைபெற்றுள்ளதாகவும், கொலையில் சம்பந்தப்பட்ட நபர்களை பிடிக்க பிடிக்க ஈரோடு ஏ.டி.எஸ்.பி. விவேகானதன் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளாதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கொலை நடந்த இடத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்," என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விழிஞ்சம் துறைமுகத்தால் பொருளாதார ஸ்திரத்தன்மை: மோதி

நாட்டின் முதலாவது தானியங்கி துறைமுகமான விழிஞ்சம் துறைமுகம் கேரளாவுக்கும் நாட்டுக்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்று இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் பகுதியில் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகம் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்ட துறைமுகத்தின் கட்டுமான பணிகள் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கின. விழிஞ்சம் துறைமுகத்தில் முதற்கட்ட பணிகள் முடிவுற்ற நிலையில் நேற்று நடைபெற்ற விழாவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

துறைமுக திறப்பு விழாவில் பிரதமர் மோதி, "கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் கடல்சார் வலிமை மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்தியாவின் துறைமுகத் திறன் இரட்டிப்பாகியுள்ளது. செயல்திறன் மேம்பட்டுள்ளது.

விழிஞ்சம் துறைமுகம் ரூ.8,867 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் சரக்கு கையாளும் திறனை விரைவில் மூன்று மடங்காக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இது பெரிய சரக்குக் கப்பல்களை நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விழிஞ்சம் துறைமுகம் கேரள மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் என்பது நிச்சயம். இந்தியாவின் கடலோர மாநிலங்கள், துறைமுக நகரங்கள் முக்கிய வளர்ச்சி மையமாக மாறும். பெரிய சரக்கு கப்பல்களை நிறுத்த இடமளிக்கும் வகையில் துறைமுகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் முதலாவது தானியங்கி துறைமுகமான விழிஞ்சம் துறைமுகம் கேரளாவுக்கும் நாட்டுக்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும்," என்று கூறினார்.

இன்றைய செய்திகள், முக்கியச் செய்திகள், தலைப்பு செய்திகள், தமிழ்நாடு, நரேந்திர மோதி, விழிஞ்சம் துறைமுகம்,

பட மூலாதாரம்,@NARENDRAMODI/X

அதானி குழுமத்துடன் இணைந்து இந்த விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செயல்பாட்டுக்கு வந்த இந்த துறைமுகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்று வந்தது. பல்வேறு நாடுகளில் இருந்தும் சரக்கு கப்பல்கள் இங்கு வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cly109p1llno

Checked
Thu, 06/12/2025 - 11:09
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed