Aggregator

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

2 months ago
சென்னைக்கு புதுப் பையன் விளையாடுகிறான். உர்வில் பட்டேல். கந்தப்பு அறிமுகப் படுத்திய அதிரடி வீரன். சென்னை இதுவரை 22 வீரர்களைப் பயன்படுத்தியிருக்கு. சரியான அணிக்கட்டமைப்பை தேடிக்கொண்டிருக்கினம்.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இரத்துச்செய்யும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதி - ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகளிடம் இலங்கை எடுத்துரைப்பு

2 months ago
(நா.தனுஜா) பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இரத்துச்செய்யும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியக்குழுவிடம் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைப் பிரதிநிதிகள், சர்வதேச தராதரங்களுக்கு அமைவான புதிய சட்டத்தின் ஊடாக அதனைப் பதிலீடு செய்வதற்கு அவசியமான கால எல்லை குறித்து அவர்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை கூட்டு ஆணைக்குழுவின்கீழ் இயங்கும் ஆட்சியியல் நிர்வாகம், சட்டவாட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பணிக்குழுவின் 8 ஆவது கூட்டம் கடந்த திங்கட்கிழமை (5) கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இக்கூட்டத்தின்போது ஊழலை இல்லாதொழிப்பதற்கான முயற்சிகள், தொழிலாளர் உரிமைகள் உள்ளடங்கலாக மனித உரிமைகளை உறுதிப்படுத்தல், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தல், சிவில் சமூக அமைப்புக்களின் இயங்குகைக்கு அவசியமான இடைவெளியை வழங்கல், தேர்தல் செயன்முறைகளை வலுப்படுத்தல், பாலினம் மற்றும் பாலியல் நோக்கை அடிப்படையாகக்கொண்ட பாகுபாடுகளை முடிவுக்குக்கொண்டுவரல் என்பன உள்ளடங்கலாக இருதரப்பினரதும் பரஸ்பர அக்கறைக்குரிய விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்தோடு கடந்த ஆண்டு ஜனாதிபதித்தேர்தல் மற்றும் பாராளுமன்றத்தேர்தல்கள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டு, அமைதியான முறையில் நடாத்தப்பட்டமை குறித்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இலங்கையைப் பாராட்டினர். அதற்குப் பதிலளித்த இலங்கை வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள், ஜனாதிபதித்தேர்தலின்போது ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட தேர்தல் கண்காணிப்புப்பணிகள் தொடர்பில் தமது பாராட்டை வெளிப்படுத்தினர். அதேபோன்று பொருளாதார ஸ்திரத்தன்மை, மீட்சியை இலக்காகக்கொண்ட தொடர் முயற்சிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட நிர்வாக மறுசீரமைப்புக்கள் உள்ளிட்ட முற்போக்கான முக்கிய நகர்வுகள் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் நேர்மறையான பிரதிபலிப்பை வெளிப்படுத்தினர். அதனைத்தொடர்ந்து ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவை வலுப்படுத்துவதற்கும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கைப் பிரதிநிதிகள் விளக்கமளித்தனர். அதுமாத்திரமன்றி தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியதிலிருந்து ஜனநாயக செயன்முறை, நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, மனித உரிமைகள் என்பவற்றைப் பாதுகாப்பதற்கும், வலுப்படுத்துவதற்கும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் எடுத்துரைத்தனர். அதேவேளை சட்டம், ஒழுங்கை வலுப்படுத்துவதற்கான நிர்வாகம் மற்றும் நீதித்துறைசார் செயன்முறைகளின் முக்கியத்துவத்தினையும், ஜனநாயக சமூகங்களுக்குள் சகல அம்சங்களையும் உள்ளடக்கியதும், ஆலோசனை அடிப்படையிலான சட்ட செயன்முறைகளைப் பேணுவதிலும் சிவில் சமூக அமைப்புக்கள் கொண்டிருக்கும் பிரதான வகிபாகத்தினையும் இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனர். மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும், சர்வதேச மனித உரிமைகள்சார் நடைமுறைகளை திறம்பட அமுல்படுத்துவதற்கும் தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக இதன்போது ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் உறுதியளித்தனர். அதனையடுத்து பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இரத்துச்செய்யும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியக்குழுவிடம் சுட்டிக்காட்டிய இலங்கைப் பிரதிநிதிகள், சர்வதேச தராதரங்களுக்கு அமைவான புதிய சட்டத்தின் ஊடாக அதனைப் பதிலீடு செய்வதற்கு அவசியமான கால எல்லை குறித்துத் தெளிவுபடுத்தினர். அதற்குப் பதிலளித்த ஐரோப்பிய ஒன்றியக்குழுவினர், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை ஊடாக ஐரோப்பிய ஒன்றிய சந்தையைத் தொடர்ந்து அணுகுவதை உறுதிசெய்வதற்கு சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் நியமங்களுக்கு ஏற்பட்ட பொருத்தமான சட்டத்தைக் கொண்டுவரவேண்டியது அவசியம் என வலியுறுத்தினர். மேலும் இனவாதத்தை முடிவுக்குக்கொண்டுவந்து தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும், அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய பங்கேற்பு செயன்முறை மூலம் இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்கக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான உறுதிமொழியையும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் வரவேற்றனர். பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இரத்துச்செய்யும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதி - ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகளிடம் இலங்கை எடுத்துரைப்பு | Virakesari.lk

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இரத்துச்செய்யும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதி - ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகளிடம் இலங்கை எடுத்துரைப்பு

2 months ago

(நா.தனுஜா)

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இரத்துச்செய்யும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியக்குழுவிடம் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைப் பிரதிநிதிகள், சர்வதேச தராதரங்களுக்கு அமைவான புதிய சட்டத்தின் ஊடாக அதனைப் பதிலீடு செய்வதற்கு அவசியமான கால எல்லை குறித்து அவர்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளனர்.

 ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை கூட்டு ஆணைக்குழுவின்கீழ் இயங்கும் ஆட்சியியல் நிர்வாகம், சட்டவாட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பணிக்குழுவின் 8 ஆவது கூட்டம் கடந்த திங்கட்கிழமை (5) கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.

 இக்கூட்டத்தின்போது ஊழலை இல்லாதொழிப்பதற்கான முயற்சிகள், தொழிலாளர் உரிமைகள் உள்ளடங்கலாக மனித உரிமைகளை உறுதிப்படுத்தல், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தல், சிவில் சமூக அமைப்புக்களின் இயங்குகைக்கு அவசியமான இடைவெளியை வழங்கல், தேர்தல் செயன்முறைகளை வலுப்படுத்தல், பாலினம் மற்றும் பாலியல் நோக்கை அடிப்படையாகக்கொண்ட பாகுபாடுகளை முடிவுக்குக்கொண்டுவரல் என்பன உள்ளடங்கலாக இருதரப்பினரதும் பரஸ்பர அக்கறைக்குரிய விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

 அத்தோடு கடந்த ஆண்டு ஜனாதிபதித்தேர்தல் மற்றும் பாராளுமன்றத்தேர்தல்கள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டு, அமைதியான முறையில் நடாத்தப்பட்டமை குறித்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இலங்கையைப் பாராட்டினர். அதற்குப் பதிலளித்த இலங்கை வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள், ஜனாதிபதித்தேர்தலின்போது ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட தேர்தல் கண்காணிப்புப்பணிகள் தொடர்பில் தமது பாராட்டை வெளிப்படுத்தினர். 

அதேபோன்று பொருளாதார ஸ்திரத்தன்மை, மீட்சியை இலக்காகக்கொண்ட தொடர் முயற்சிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட நிர்வாக மறுசீரமைப்புக்கள் உள்ளிட்ட முற்போக்கான முக்கிய நகர்வுகள் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் நேர்மறையான பிரதிபலிப்பை வெளிப்படுத்தினர்.

அதனைத்தொடர்ந்து ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவை வலுப்படுத்துவதற்கும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கைப் பிரதிநிதிகள் விளக்கமளித்தனர். அதுமாத்திரமன்றி தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியதிலிருந்து ஜனநாயக செயன்முறை, நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, மனித உரிமைகள் என்பவற்றைப் பாதுகாப்பதற்கும், வலுப்படுத்துவதற்கும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் எடுத்துரைத்தனர்.

அதேவேளை சட்டம், ஒழுங்கை வலுப்படுத்துவதற்கான நிர்வாகம் மற்றும் நீதித்துறைசார் செயன்முறைகளின் முக்கியத்துவத்தினையும், ஜனநாயக சமூகங்களுக்குள் சகல அம்சங்களையும் உள்ளடக்கியதும், ஆலோசனை அடிப்படையிலான சட்ட செயன்முறைகளைப் பேணுவதிலும் சிவில் சமூக அமைப்புக்கள் கொண்டிருக்கும் பிரதான வகிபாகத்தினையும் இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.

 மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும், சர்வதேச மனித உரிமைகள்சார் நடைமுறைகளை திறம்பட அமுல்படுத்துவதற்கும் தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக இதன்போது ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.

 அதனையடுத்து பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இரத்துச்செய்யும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியக்குழுவிடம் சுட்டிக்காட்டிய இலங்கைப் பிரதிநிதிகள், சர்வதேச தராதரங்களுக்கு அமைவான புதிய சட்டத்தின் ஊடாக அதனைப் பதிலீடு செய்வதற்கு அவசியமான கால எல்லை குறித்துத் தெளிவுபடுத்தினர். அதற்குப் பதிலளித்த ஐரோப்பிய ஒன்றியக்குழுவினர், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை ஊடாக ஐரோப்பிய ஒன்றிய சந்தையைத் தொடர்ந்து அணுகுவதை உறுதிசெய்வதற்கு சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் நியமங்களுக்கு ஏற்பட்ட பொருத்தமான சட்டத்தைக் கொண்டுவரவேண்டியது அவசியம் என வலியுறுத்தினர். 

மேலும் இனவாதத்தை முடிவுக்குக்கொண்டுவந்து தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும், அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய பங்கேற்பு செயன்முறை மூலம் இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்கக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான உறுதிமொழியையும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் வரவேற்றனர். 

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இரத்துச்செய்யும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதி - ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகளிடம் இலங்கை எடுத்துரைப்பு | Virakesari.lk

ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வீதம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது

2 months ago
07 May, 2025 | 06:57 PM (எம்.ஆர்.எம்.வசீம்) நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தனித்து யானை சின்னத்தில் போட்டியிட்டிருந்தது. கடந்த ஐந்து வருடங்களுக்கு பின்னர் முதல் தடவையாகவே ஐக்கிய தேசிய கட்சி இவ்வாறு தேர்தல் ஒன்றில் யானை சின்னத்தில் போட்டியிட்டிருந்தது. உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி நாடுபூராகவும் மொத்தமாக 4இலட்சத்தி 88ஆயிரத்தி 406 வாக்குகளை பெற்றுள்ளது. இது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 9.17வீதமாகும். இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்தையும் வெற்றிகொள்ள முடியவில்லை. மொத்தமாக 381 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 2020ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து சஜித் அணி பிரிந்து சென்று ஐக்கிய மக்கள் சக்தியாக தொலை பேசி சின்னத்தில் போட்டியிட்டது. இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி யானை சின்னத்தில் தனித்து போட்டியிட்டது. இதில் ஐக்கிய தேசிய கட்சி மொத்தமாக 2 இலட்சத்தி 49ஆயிரத்தி 435 வாக்குகளை பெற்றிருந்தது. இது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 2.15 வீதமாகும். என்றாலும் ஐக்கிய தேசிய கட்சி 2019 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக களமிறக்கி இருந்தது. இதில் சஜித் பிரேமதாசவுக்கு 55இலட்சத்தி 64ஆயிரத்தி 239 வாக்குகள் கிடைக்கப்பெற்றிருந்தன. அதன் பின்னர் 2020 பொதுத் தேர்தலுக்கு பின்னர் ஐக்கிய தேசிய கட்சி தற்போது இடம்பெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலிலேயே யானை சின்னத்தில் தனித்து போட்டியிட்டது. இந்த தேர்தல் பெறுபேறுகளை பார்க்கும்போது வீழ்ச்சியடைந்திருந்த ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வீதம் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சி புதிய ஜனநாயக முன்னணியில் சிலிண்டர் சின்னத்தில் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வீதம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது | Virakesari.lk

ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வீதம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது

2 months ago

07 May, 2025 | 06:57 PM

(எம்.ஆர்.எம்.வசீம்)

நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தனித்து யானை சின்னத்தில் போட்டியிட்டிருந்தது. கடந்த ஐந்து வருடங்களுக்கு பின்னர் முதல் தடவையாகவே ஐக்கிய தேசிய கட்சி இவ்வாறு தேர்தல் ஒன்றில் யானை சின்னத்தில் போட்டியிட்டிருந்தது. உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி நாடுபூராகவும் மொத்தமாக 4இலட்சத்தி 88ஆயிரத்தி 406 வாக்குகளை பெற்றுள்ளது. இது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 9.17வீதமாகும். இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்தையும் வெற்றிகொள்ள முடியவில்லை. மொத்தமாக 381 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

2020ஆம் ஆண்டு  பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து சஜித் அணி பிரிந்து சென்று ஐக்கிய மக்கள் சக்தியாக தொலை பேசி சின்னத்தில் போட்டியிட்டது. இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி யானை சின்னத்தில் தனித்து போட்டியிட்டது. இதில் ஐக்கிய தேசிய கட்சி மொத்தமாக 2 இலட்சத்தி 49ஆயிரத்தி 435 வாக்குகளை பெற்றிருந்தது. இது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 2.15 வீதமாகும். 

என்றாலும் ஐக்கிய தேசிய கட்சி 2019 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக களமிறக்கி இருந்தது. இதில் சஜித் பிரேமதாசவுக்கு 55இலட்சத்தி 64ஆயிரத்தி 239 வாக்குகள் கிடைக்கப்பெற்றிருந்தன. அதன் பின்னர் 2020 பொதுத் தேர்தலுக்கு பின்னர்  ஐக்கிய தேசிய கட்சி தற்போது இடம்பெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலிலேயே யானை சின்னத்தில் தனித்து போட்டியிட்டது. இந்த தேர்தல் பெறுபேறுகளை பார்க்கும்போது  வீழ்ச்சியடைந்திருந்த ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வீதம் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சி புதிய ஜனநாயக முன்னணியில் சிலிண்டர் சின்னத்தில் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வீதம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது | Virakesari.lk

அரசின் பொய்களுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் வலுவான பொது எதிரணியை உருவாக்குவேன் - சஜித் பிரேமதாச

2 months ago
07 May, 2025 | 07:02 PM (எம்.மனோசித்ரா) உள்ளுராட்சிமன்ற தேர்தல் முடிவுகள் ஊடாக அரசாங்கத்தின் பொய்களுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அத்துடன் உண்மையான மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கான அங்கீகரித்தை எதிக்கட்சிக்கு வழங்கியுள்ளனர் என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, சகல எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டி வலுவான பொது எதிரணியை உருவாக்க மக்கள் வழங்கிய ஆணையை முழு மூச்சுடன் முன்னெடுக்க கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். உள்ளராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின் பின்னர் புதன்கிழமை (7) விசேட அறிவிப்பை வெளியிட்ட போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், அவமானங்கள், அச்சுறுத்தல்கள், சேறுபூசும் வார்த்தைகள், சதித்திட்டங்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து ஆதரவு வழங்கிய மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த முன்வந்து தேர்தல் வெற்றிக்கு ஒத்துழைப்பை நல்கிய நாட்டின் அனைத்து இன மக்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்களிலும் பெரும் மக்கள் ஆணைகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், 6 மாதங்கள் என்ற குறுகிய காலத்தில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளமையை உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. எனவே எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல தரப்பினர்களையும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும் என்ற செய்தியை நாட்டு மக்கள் இத்தேர்தலின் ஊடாக எமக்கு முன்வைத்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலை கையாண்டது போலவே இந்த உள்ளூராட்சித் தேர்தலையும் ஜே.வி.பி கையாண்டது. தேர்தலுக்காக மதத்தைக் கூட அரசாங்கம் பயன்படுத்தயது. நாட்டு மக்கள் அரசாங்கத்தின் பொய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். உண்மையான மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கான அங்கீகரித்தை எதிக்கட்சிக்கு வழங்கியுள்ளனர். பொய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பொய்களை முறியடித்து, உண்மையான பலம் வாய்ந்த மக்கள் சேவைக்காக எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல தரப்புகளையும் ஒன்றிணைய வேண்டும் என்ற பொதுமக்களின் அபிலாஷையின் அடிப்படையில் இந்த சவாலான பொறுப்பிற்கு தலைமை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பவர்களாக, நாங்கள் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளுக்கு தலைவணங்கி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல தரப்பினர்களையும் ஒன்றிணைப்போம். அதன் ஊடாக வெளிப்படைத்தன்மை வாய்ந்ததும், கொள்கை ரீதியானதுமான சிறந்த மக்கள் சேவையை வழங்க உள்ளோம். இதற்கான தலைமைத்துவத்தை ஐக்கிய மக்கள் சக்தி வழங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார். அரசின் பொய்களுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் வலுவான பொது எதிரணியை உருவாக்குவேன் - சஜித் பிரேமதாச | Virakesari.lk

அரசின் பொய்களுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் வலுவான பொது எதிரணியை உருவாக்குவேன் - சஜித் பிரேமதாச

2 months ago

07 May, 2025 | 07:02 PM

image

(எம்.மனோசித்ரா)

உள்ளுராட்சிமன்ற தேர்தல் முடிவுகள் ஊடாக அரசாங்கத்தின் பொய்களுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அத்துடன் உண்மையான மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கான அங்கீகரித்தை எதிக்கட்சிக்கு வழங்கியுள்ளனர் என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, சகல எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டி வலுவான பொது எதிரணியை உருவாக்க மக்கள் வழங்கிய ஆணையை முழு மூச்சுடன் முன்னெடுக்க கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

உள்ளராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின் பின்னர் புதன்கிழமை (7) விசேட அறிவிப்பை வெளியிட்ட போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

அவமானங்கள், அச்சுறுத்தல்கள், சேறுபூசும் வார்த்தைகள், சதித்திட்டங்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து ஆதரவு வழங்கிய  மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த முன்வந்து தேர்தல் வெற்றிக்கு ஒத்துழைப்பை நல்கிய நாட்டின் அனைத்து இன மக்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்களிலும்  பெரும் மக்கள் ஆணைகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், 6 மாதங்கள் என்ற குறுகிய காலத்தில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளமையை உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. எனவே எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல தரப்பினர்களையும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும் என்ற செய்தியை நாட்டு மக்கள் இத்தேர்தலின் ஊடாக எமக்கு முன்வைத்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலை கையாண்டது போலவே இந்த உள்ளூராட்சித் தேர்தலையும் ஜே.வி.பி கையாண்டது. தேர்தலுக்காக மதத்தைக் கூட அரசாங்கம் பயன்படுத்தயது.  

நாட்டு மக்கள்  அரசாங்கத்தின் பொய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். உண்மையான மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கான அங்கீகரித்தை எதிக்கட்சிக்கு வழங்கியுள்ளனர். பொய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பொய்களை முறியடித்து, உண்மையான பலம் வாய்ந்த மக்கள் சேவைக்காக எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல தரப்புகளையும் ஒன்றிணைய வேண்டும் என்ற பொதுமக்களின் அபிலாஷையின் அடிப்படையில் இந்த சவாலான பொறுப்பிற்கு தலைமை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது.

ஜனநாயகத்தைப் பாதுகாப்பவர்களாக, நாங்கள் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளுக்கு தலைவணங்கி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல தரப்பினர்களையும் ஒன்றிணைப்போம். அதன் ஊடாக வெளிப்படைத்தன்மை வாய்ந்ததும், கொள்கை ரீதியானதுமான சிறந்த மக்கள் சேவையை வழங்க உள்ளோம். இதற்கான தலைமைத்துவத்தை ஐக்கிய மக்கள் சக்தி வழங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

அரசின் பொய்களுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் வலுவான பொது எதிரணியை உருவாக்குவேன் -  சஜித் பிரேமதாச | Virakesari.lk

கருத்துக்களில் மாற்றங்கள் - 2025

2 months ago
வணக்கம், அண்மைக் காலமாக செய்திகளில் (ஊர்புதினம், தமிழக, இந்திய மற்றும் உலகச் செய்திகளில்) சகட்டு மேனிக்கு பலவகையான மீம்ஸ்கள் ஒட்டப்பட்டு வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. இவற்றில் பல செய்திளின் தரத்தை, அதன் நம்பகத்தன்மைகளை பாதிக்கும் வண்ணம் அமைந்திருப்பதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது. இன்னும் சில, அரசியல் காழ்ப்புணர்வுகளை வெளிப்படுத்தும் வண்ணமாக அமைந்துள்ளதையும் உணர முடிகின்றது. இனி வரும் காலங்களில் செய்திகளில் இவ்வாறான மீம்ஸ் கள் ஒட்டப்படுவதை கூடிய வரைக்கும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். அதே நேரம் மீம்ஸ்களை விட தரமான செய்தித்தளங்களில் இருந்து கார்ட்டூன்கள் / கருத்துப்படங்கள் பகிரப்படுவதை வரவேற்கின்றோம். நன்றி

ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்

2 months ago
இந்தியா சொன்ன மாதிரி பாகிஸ்தானை தாக்கிவிட்டது. பாகிஸ்தான் அணுகுண்டு எல்லாம் தங்களிடம் உள்ளது, அவற்றால் திருப்பி தாக்குவோம் என்ற மாதிரி சொன்ன கதையை எப்போது செய்து காட்டப் போகின்றார்கள்?

இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் - 2025

2 months ago
இதில் ஒரு சில இடங்களைத் தவிர, எந்த இடங்களிலும் தமிழ் கட்சி எதுவும் பெரும்பான்மை பெறவில்லை. தமிழரசுக் கட்சியும், தமிழ் தேசிய பேரவையும் அதிக உறுப்பினர்களை பெற்ற இடங்களில் ஒன்றில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவில் சபைகளை கொண்டு நடத்த வேண்டும், அல்லது இருவரும் (தமிழரசுக் கட்சி + தமிழ் தேசிய பேரவை) இணைந்து சபைகளை கொண்டு நடத்த வேண்டும். இன்னும் சில இடங்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யின் ஆதவில் சபைகளை நடாத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிடின், தேசிய மக்கள் சக்தியுடன் அல்லது ஈபிடியுடன் தான் கூட்டு சேர வேண்டி வரும். முக்கியமாக தமிழரசுக் கட்சியும், தமிழ் தேசிய பேரவையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் ஒற்றுமையாக இல்லாவிடின், ஈபிடியும், தேசிய மக்கள் சக்தியும் பலம் பெறும் வாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும்.

ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்

2 months ago
ரபேல் விமானங்களை இலகுவாக வீழ்த்த முடியாது. தரையிலிருந்து விமான ஏவுகளை ஏவப்பட்டால் அதனை உடனே கண்டுகொண்டு எதிர் நடவடிக்கையை மேற்கொள்ளும். அதுவும் 3 ரபேல் விமானங்கள் என்பது ஆச்சரியம். இச் செய்தி உண்மையாக இருந்தால் சீனாவின் அதியுயர் தொழில்நுட்பம் பாகிஸ்தானுக்குள் நன்றாக ஊடுருவி உள்ளதாக அனுமானிக்கலாம். இந்திய விமானங்கள் வரும் என்று காத்திருந்து தாக்கியுள்ளனர். ஒரு சிறு தாக்குதலுக்கு இந்தியா பெரிய விலை கொடுத்தது அவமானம். தாக்குதல்கள் மாறிமாறித் தொடருமாக இருந்தால் முதலில் பாதிக்கப்படுவது பாகிஸ்தான்தான். இந்தியா போன்று பொருளாதார உறுதி அதனிடம் இல்லை. ஏற்கனவே விளிம்பில் உள்ள அதன் பொருளாதார வீழ்ச்சி மேலும் பலவீனம் அடையும்.

ஜேர்மனியில் சேன்சலர் தேர்தல்: தோல்வியைத் தழுவிய ஃபிரிடிரிக் மெர்ஸ்!

2 months ago
தொங்குபொறியில் இருந்தவர் இரண்டாவது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுவிட்டார்.இப்படி நடப்பது ஜேர்மனிய பாராளுமன்ற வரலாற்றில் இதுதான் முதல் தடவை. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக ஜேர்மனிய எல்லைகளின் பாதுகாப்பு பரிசோதனைகளை தீவிரமாக்கியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த அகதிகள் வருகையை நிறுத்துகின்றனர். ஜேர்மனியில் வசிக்கும் உள்நாட்டு/வெளிநாட்டு தீவிரவாதிகளை ஒரு கைபார்க்கப்போகின்றார்கள்.குறிப்பாக முஸ்லீம் தீவிரவாதிகள் மீது என அழுத்தி சொல்லப்படுகின்றது. Afd எனும் கட்சி எதை காரணம் காட்டி உச்சத்திற்கு முன்னேறினார்களோ அதே காரணங்களை சட்டங்கள் மூலம் தீர்ப்பார்கள் போல் இருக்கின்றது. அத்துடன் Afd கட்சியை இனவாத, தீவிர கட்சியாக காரணம் காட்டி தடைசெய்யவும் போகின்றார்கள்.

இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் - 2025

2 months ago
கரைச்சியில் தமிழரசு வரலாறு காணாத வெற்றி💜 வாழ்த்துகள் 💜💕 Shritharan Sivagnanam சேர் 21 வட்டரங்களில் 20 வீடு, ரெலிபோன் 1💜 கிளிநொச்சி மாவட்டத்தின் 40 வட்டாரங்களில் 36 வட்டாரங்களை தமிழரசுக்கட்சி தன்வசப்படுத்தியிருக்கிறது. கரைச்சி 21 இல் 20 🏠 பூநகரி 11 இல் 10 🏠 பளை 8 இல் 6 🏠 K J Arun Kumar

இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் - 2025

2 months ago
இந்த 6 மாதங்களில் தெற்கில், பல மாவட்டங்களில் மூன்றாமிடத்தில் இருந்தாலும் மொட்டுக் கட்சியின் வாக்குகளில் மீண்டும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. SJB ம் கணிசமான வாக்குகளை அதிகரித்துள்ளது. NPP தனது வாக்குவங்கியை அனைத்து மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கில் இழந்துள்ளது. இந்த வீழ்ச்சியின் வேகம் மீண்டும் 3% வெகுதொலைவில் இல்லை என்பதைக்காட்டுகிறது. ஆகையால் இனி அவர்கள் தமது முகமூடிகளை அகற்றத்தொடங்குவார்கள் என்பதை ஊகிக்க முடிகிறது. அதைக்கொண்டுதான் மாகாண சபை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும். Monisha Kokul

3000 நாட்களை எட்டிய காணாமல் போன உறவுகளின் போராட்டம்!

2 months ago
3000 நாட்களை எட்டிய காணாமல் போன உறவுகளின் போராட்டம்! தமிழர் தாயகத்தின் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் 3000 நாளை எட்டியுள்ள நிலையில் கவனயீர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இறுதிப்போரின்போதும்,அதற்கு முன்னரும் காணாமல் போன தமது உறவுகளின் உண்மைநிலையினை வலியுறுத்தி தமிழர் தாயகத்தின் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா அஞ்சல் அலுவலகத்திற்கு அருகில் சுழற்சி முறை உணவுத்தவிர்ப்பு போராட்டம் கடந்த 8 வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் போராட்டம் ஆரம்பித்து இன்றுடன் 3000 நாட்களை கடக்கின்ற நிலையில் அவர்களது போராட்டம் தீர்வின்றி தொடர்ந்து செல்கின்றது. இதனையடுத்து இன்றையதினம் அவர்களால் கவனயீர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் ஐரோப்பிய அமெரிக்க கொடிகளை ஏந்தியிருந்ததுடன், தங்களுக்கு சர்வதேசநீதி வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தனர். https://athavannews.com/2025/1431117