சமூகவலை உலகம்

பிரித்தானியா வாழ் தமிழனுக்கு தெற்கில் நிகழ்ந்து கொண்டிருக்கும் இனத்துவேசம்....முகநூலில் பிரதி பண்ணப்பட்டது..நன்றி..Thapes Vlogger

2 days ago

Thapes Vlogger is at Ahangama Beach, Sri Lanka.

deposSntro68a15fm785396h318iitflm7g0uf89i11694g2clmmf1acg4cf ·

🇬🇧" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t96/1/16/1f1ec_1f1e7.png" style="border: 0px; border-start-start-radius: 0px; border-end-end-radius: 0px; border-start-end-radius: 0px; border-end-start-radius: 0px; object-fit: fill;"> பிரித்தானியா வாழ் தமிழனுக்கு தெற்கில் நிகழ்ந்து கொண்டிருக்கும் இனத்துவேசம்..

கீழே படத்தில் இருப்பவர் எனது நண்பர்.

இலங்கையில் பிறந்து சிறு வயதிலையே பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்து அங்கு உயர் படிப்பை முடித்து தொழில்நுட்பத்துறையில் நல்லதொரு வேலையில் இருந்தவர்.

ஆனாலும் இலங்கை மீது அவருக்கு தீராத காதல்..

அதனால் பிரித்தானியாவில் எல்லாவற்றையும் உதறித்தள்ளி விட்டு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் வந்து குடியேறினார்..

அதற்க்கு இலங்கையில் தேர்த்து எடுத்த இடம், தெற்கு,

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகப் பிரபலமான அந்த Ahangama பிரதேசம்.

தான் படித்ததற்கும், தொழில்நுட்ப துறையில் செய்த வேலைக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ஆனால் தான் ஆழமாக காதலித்த இசைத்துறையில்..

DJ ஆக அறிமுகமானார் தெற்கில்..

இந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் தெற்கின் முக்கியமான எல்லா உணவகங்கள், Bars, Clubs என அவரின் இசை விருந்து நடக்காத இடங்களே இல்லை என்று சொல்லலாம்..

அது மட்டுமல்ல Jaffna, Goa, Chennai,Dhaka, Singapore என பல நகரங்களில் தனது DJ இசையரங்கை நடத்தியிருக்கிறார்..

Instagram வளைத்தளத்தில் 45000 பின்தொடர்பாளர்களுடன் தனது இந்த DJ துறையில் பிரபலமாக இருக்கும் ஒருவர்.

இந்த ஆண்டு February எனது தெற்கு பயணத்தின் போது Ahangama சென்றிருந்தேன்..

நீண்ட நேரம் உரையாடினோம்.

அந்த நேரம் தான் அந்த இடத்தில் ஒரு இந்திய உணவகம் இல்லை, தான் ஒரு சிறிய இந்திய உணவகம் திறக்க இருப்பதாக சொன்னார்.

அதற்கான வேலைகளும் நடந்துகொண்டிருந்தது..

நானும் அது பற்றி ஒரு காணொளி போட்டிருந்தேன்.

அந்த நேரம் என்னை பின் தொடர்ந்தவர்களுக்கு அது ஞாபகம் இருக்காலாம்.

அவர் இன்று தனது Facebook பக்கத்தில் ஒரு செய்தியை பகிர்ந்திருந்தார்..

அந்த செய்தியை பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அந்த சிறிய இந்திய உணவகத்தை சில மாதங்களுக்கு முன்பு Ahangama வில் திறந்திருந்தார்.

இன்று அது எப்பவும் மூடப்படும் நிலையில் இருக்கிறது என்று அறிவித்திருக்கின்றார்.

காரணங்கள்..??

பல தடவை உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது அந்த இடத்தில்..

காரணம் ஒரே ஒரு தமிழன் அதில் வியாபாரம் தொடங்கியதற்காக..

இந்த சம்பவத்தை அவர் Facebook ல் பகிர முன்பும் கடைக்கு வந்து காசு கேட்ட ஒரு காடையனால், காசு தர மறுத்ததற்க்காக கழுத்தில் பிடித்து நெரித்து கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது..

தீபாவளி அன்று கடையில் தமிழ் பாட்டு போடக்கூடாது என்றும், நீ திரும்பி உன் யாழுக்கே போய்விடு என்றும் மிரட்டியிருக்கிறார்கள்.

அவர்களின் அதே கீறல் விழுந்த பழைய “நீயொரு 🐅" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/td1/1/16/1f405.png" style="border: 0px; border-start-start-radius: 0px; border-end-end-radius: 0px; border-start-end-radius: 0px; border-end-start-radius: 0px; object-fit: fill;">பயங்கரவாதி” என்ற மிரட்டல்கள்..

ஒரு சுற்றுலாப்பயணியாக தெற்கை சுற்றும் போது, பார்ப்பவர்களெல்லாம் நல்லவர்களாக தெரிந்தார்கள்..

இதையொரு வியாபார போட்டியாகவும் பார்க்கமுடியாது.

Ahangama வில் இருக்கும் சுற்றுலா சம்பந்தமான வியாபாரங்கள் முக்கால்வாசி வெளிநாட்டுக்காரர்கள் உடையது..

அதுவும் அந்த இடத்தில் இன்னொரு தென்னிந்திய உணவகமும் இல்லை, அதை போட்டியாக பார்ப்பதற்க்கு..

சில நாட்களுக்கு முன் ஒரு பதிவில் எழுதியிருந்தேன்..

புலம்பெயர்ந்த தமிழர்கள் ஏன் இலங்கையில் முதலீடுகள் செய்ய விரும்புகிறார்கள் இல்லை என்று..

அதில் நீங்கள் பல பேர் கூறியிருந்தீர்கள்..

இவர்களை நம்ப முடியாது, எப்போ என்ன செய்வார்கள் என்று..

அதென்னவோ உண்மை தான்..

அவர்களில் பல நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள், ஆனால் பல பேருக்கு இனத்துவேசமும் இருக்கிறது..

போகும் போதெல்லாம் தெற்க்குக்கும் போய், தெற்கின் மகிமைகளை எல்லாம் காணொளியாக போட்டதை நினைத்தால் இப்ப ஒரு Guilty feeling ஆ இருக்கிறது..

புலம்பெயர்ந்த தேசத்திலிருந்து போய் அங்கு வியாபாரம், அதுவும் தெற்கு போன்ற சுற்றுலாபயணிகள் அதிகளவில் கூடும் நகரங்களில் வியாபாரம் தொடங்க நினைப்பவர்கள், அது சரியான தெரிவு தானா என யோசிக்க வைக்கிறது இந்த சம்பவம் அதுவும் இந்த 2025ல்..☹️" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/td3/1/16/2639.png" style="border: 0px; border-start-start-radius: 0px; border-end-end-radius: 0px; border-start-end-radius: 0px; border-end-start-radius: 0px; object-fit: fill;">

இது அங்கிருக்கும் ஒருவருக்கு நடந்திருந்தாலும் அது என்னை பெரிதாக பாதித்து இருக்காது, காரணம் நாங்கள் சின்ன வயதிலிருந்தே அவர்களின் துவேசத்தை பார்த்து வளர்ந்தவர்கள்.

ஆனால்..

6-7 வயதில் இலங்கையை விட்டு புலம்பெயர்ந்து போன ஒருவன், எல்லா வசதிகள் இருக்கும் ஒரு நாட்டில் இருந்தும், தனது நாட்டின் மீது உள்ள காதலால் மீண்டும் இலங்கையில் வந்து வாழ வேண்டும் என்ற ஆசையில் வந்த ஒருவனுக்கு கிடைத்த இந்த அனுபவம் மிக மோசமானது..☹️" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/td3/1/16/2639.png" style="border: 0px; border-start-start-radius: 0px; border-end-end-radius: 0px; border-start-end-radius: 0px; border-end-start-radius: 0px; object-fit: fill;">

அவரது Facebook பதிவை Commentல் இணைத்துவிடுகிறேன். #fblifestyle

ஈசல்கள் மழை நேரத்தில் மட்டும் வருவது ஏன்? உணவாகச் சாப்பிடுவது நல்லதா?

3 days ago

ஈசல்கள் மழை நேரத்தில் மட்டும் வருவது ஏன்? அவற்றை உணவாகச் சாப்பிடுவது நல்லதா?

பட மூலாதாரம், Getty Images

31 அக்டோபர் 2025

பருவமழை மேகங்கள் கூடி மழை பெய்யத் தொடங்கிவிட்டால் போதும், பல வீடுகளில் ஈசல்கள் கூட்டம் கூட்டமாக மொய்த்துவிடும்.

அப்படி மழையின்போது வீட்டு உள்ளேயும் வீட்டைச் சுற்றியும் வரும் ஈசல்களைப் பிடித்து இறக்கைகளை பிய்த்துவிட்டு மூங்கில் கூடை ஒன்றில் சேகரிப்பதை ஊர்ப்புறங்களில் பார்த்திருப்போம்.

ஒரு கூடை நிறைய ஈசல் சேர்ந்த பிறகு அவற்றை வாணலியில் நன்கு வறுத்தெடுப்பார்கள். அப்போதே, ஈசல்களின் தலை தனியே உடல் தனியே பிரிந்துவிடும்.

பின்னர், தலை மற்றும் மீதமுள்ள இறக்கையை முறம் கொண்டு புடைத்து பிரித்துவிட்டு, வறுக்கப்பட்ட ஈசலை பொறியில் கலந்து சாப்பிடுவது, பொடியாக்கி உணவுடன் சேர்த்துக் கொள்வது எனப் பல வடிவங்களில் அது உணவாகிறது.

ஆனால், இந்த ஈசல்கள் எப்போதும் மழை நேரத்தில் மட்டுமே வருவது ஏன்? அவற்றின் மொத்த ஆயுளே ஒருநாள்தான் என்பது உண்மையா? அவற்றை உணவாகச் சாப்பிடுவது நல்லதா?

அதுகுறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள பூச்சியியல் ஆய்வாளர்களிடம் பேசினோம்.

ஈசல்கள் மழை நேரத்தில் மட்டும் வருவது ஏன்? அவற்றை உணவாகச் சாப்பிடுவது நல்லதா?

பட மூலாதாரம், Getty Images

ஈசல்கள் எங்கிருந்து வருகின்றன?

ஈசல் என்பது ஒரு தனிப்பட்ட பூச்சியினம் கிடையாது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. உண்மையில், இறக்கைகள் முளைத்த கரையான்களே ஈசல்கள். அவ்வளவு ஏன், கரையான்களின் அடுத்த சந்ததிகள் பிறப்பதற்கே ஈசல்கள்தான் அடிப்படைக் காரணமாகத் திகழ்கின்றன.

கரையான்கள், எறும்புகளைப் போலவே ஒரு சமூகமாக வாழும் பண்புடையவை. ஒரு புற்றில் சில ஆயிரங்கள் முதல் பல லட்சங்கள் வரை என்ற எண்ணிக்கையில் கரையான்கள் வாழக்கூடும்.

தேனீக்கள், எறும்புகள் போன்ற கூட்டு சமுதாய வாழ்க்கை முறையைக் கொண்ட பிற பூச்சிகளைப் போலவே கரையான்களிலும் ஒரு புற்றில் ராணி, ராஜா, வேலைக்கார கரையான்கள், காவல்கார கரையான்கள் ஆகிய நான்கு பிரிவுகளாக அவை வாழ்கின்றன.

அதில், அந்தப் புற்று உருப்பெறக் காரணமாக இருக்கும் ராணி கரையான் நிமிடத்திற்கு 25 முட்டைகள் முதல் நாளொன்றுக்குச் சில ஆயிரம் முட்டைகள் வரை இடுகின்றன.

ஈசல்கள் மழை நேரத்தில் மட்டும் வருவது ஏன்? அவற்றை உணவாகச் சாப்பிடுவது நல்லதா?

படக்குறிப்பு, பூச்சியியல் ஆய்வாளர் முனைவர் பிரியதர்ஷன் தர்ம ராஜன்

தேனீக்கள், எறும்புகள் போன்ற சமூக வாழ்வுமுறை கொண்ட பிற பூச்சிகளில் இல்லாத ஒரு தனித்துவம் கரையான்களுக்கு உள்ளது.

"பொதுவாக, இனப்பெருக்க செயல்பாடுகள் முடிந்தவுடன் ஆண் எறும்பு அல்லது ஆண் தேனீ இறந்துவிடும். ஆனால், கரையான்களைப் பொறுத்தவரை ராணி, ராஜா இரண்டும் சேர்ந்துதான் ஒரு புற்றையே உருவாக்குகின்றன" என்றார், பெங்களூருவில் உள்ள அசோகா சுற்றுச்சூழல் ஆய்வு அறக்கட்டளையைச் சேர்ந்த பூச்சியியலாளர் முனைவர் பிரியதர்ஷன் தர்ம ராஜன்.

மேலும், "ராணி கரையானின் உடலில் விந்தணுவை சேகரித்து வைக்கும் தன்மை இல்லை என்பதால், ராஜா கரையான் அதனுடனே இருந்து பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து இனப்பெருக்கத்தில் ஈடுபடும்" என்றும் விளக்கினார்.

அதுமட்டுமின்றி, ஒரு புற்றில் முதன்மையாக ராணி, ராஜா இருப்பதைப் போலவே, இரண்டாவது, மூன்றாவது நிலைகளில் சில ஆண் மற்றும் பெண் கரையான்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

"ஒருவேளை புற்றின் முக்கிய அங்கமாக இருக்கும் ராஜாவோ, ராணியோ இறந்துவிட்டால், அவர்களின் இடத்தை நிரப்பிக் கொள்வது இந்த இரண்டாம் நிலை ஆண், பெண் கரையான்களின் வேலையாக இருக்கும். அதன்மூலம், ஒரு புற்று பல்லாண்டுக் காலத்திற்குப் பற்பல சந்ததிகளைக் கொண்டு செழுமை பெற அவற்றின் சமூகக் கட்டமைப்பு உதவுகிறது."

பல கரையான் புற்றுகள் நன்கு உயர்ந்து நிற்பதைப் பல இடத்தில் பார்த்திருப்போம். இனி அதைப் பார்க்கையில், அந்தப் புற்று அவ்வளவு அதிகமான சந்ததிகளைப் பார்த்துள்ளது எனப் புரிந்து கொள்ளலாம்.

இப்படிப்பட்ட சுவாரஸ்யமான கரையான் புற்று உருப்பெறுவதில் முக்கியப் பங்கு வகிப்பதே மழைக் காலத்தில் கூட்டம் கூட்டமாக வீடுகளை மொய்க்கும் ஈசல்கள்தான்.

ஈசல்கள் மழை நேரத்தில் மட்டும் வருவது ஏன்? அவற்றை உணவாகச் சாப்பிடுவது நல்லதா?

பட மூலாதாரம், Getty Images

ஈசல்கள் மழை நேரத்தில் மட்டும் வருவது ஏன்?

முனைவர் பிரியதர்ஷனின் கூற்றுப்படி, ஒரு புற்றில் அதன் தோற்றம் மற்றும் நீட்சிக்குக் காரணமாக இருக்கும் ராணி, ராஜா கரையான்கள் மட்டுமின்றி, மேலும் பல ஆண், பெண் கரையான்கள் இனப்பெருக்க திறனுடன் இருக்கும்.

அவை, "மழைக் காலத்தின்போது வெளியேறி வந்து உயரப் பறந்து இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. அப்படி இறக்கைகளுடன் புற்றுகளில் இருந்து வெளியேறி வரும் கரையான்களையே ஈசல்கள் என அழைக்கிறோம்," என்று விவரித்தார் அவர்.

இதுகுறித்து விரிவாகப் பேசிய பூச்சியியல் ஆய்வாளர் சஹானாஸ்ரீ ராமகிருஷ்ணய்யா, "இனப்பெருக்கம் செய்து புதிய புற்றுகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஈசல்கள் தாங்கள் ஏற்கெனவே வாழ்ந்து வந்த புற்றுகளை விட்டு வெளியே வருகின்றன," என்றவர், அவை அதற்கு உகந்த காலமாக மழைக் காலத்தை தேர்வு செய்வது ஏன் என்பது குறித்தும் விளக்கினார்.

மழைக்காலம் மிகவும் ஈரப்பதம் நிறைந்திருக்கும். ஈரப்பதம் மற்றும் வெப்பத்தின் கலவை அவற்றுக்கு உகந்த சூழ்நிலையை வழங்குவதாகக் கூறுகிறார் சஹானாஶ்ரீ.

மழைக்காலம் ஈசல்களுக்கு மட்டுமின்றி பெரும்பாலான உயிரினங்களின் இனப்பெருக்க காலமாகவும் இருக்கிறது. மழையின்போது அதிகளவில் உணவு கிடைப்பதும் அதற்கான ஒரு காரணமாக இருக்கிறது.

இவற்றோடு ஈசல்களைப் பொறுத்தவரை, "மழைக்குப் பிறகு நில அமைப்பு ஈரப்பதம் கொண்டு, மண் நிறைவுற்று இருக்கும். அதன் விளைவாக மண் மென்மையான தன்மையில் இருப்பதால், புதிதாக இணைந்த கரையான் ஜோடிகள் துளையிட்டுப் புதிய புற்றைக் கட்டுவது எளிதாகிறது," என்று விவரித்தார் சஹானாஸ்ரீ.

அவரிடம் ஈசல்களின் ஆயுள் ஒருநாள்தான் என்று கூறப்படுவது குறித்துக் கேட்டபோது, "அது உண்மையில்லை" என்று தெரிவித்தார்.

"பொதுவாக பல ஆயிரம் ஜோடிகள் புற்றை விட்டு இனப்பெருக்கம் செய்யக் கிளம்பினாலும், இறப்பு விகிதம் அதிகம் என்பதால் அதில் குறைந்த அளவிலானவையே உயிர் பிழைத்து, புற்று அமைக்கின்றன. எனவே பல நூறு ஈசல்கள் விரைவில் மடிவதைப் பார்த்ததன் அடிப்படையில் இந்தக் கட்டுக்கதை உருவாகியிருக்கலாம்."

மழைக்காலம், ஈசல், கரையான்

படக்குறிப்பு, பூச்சியியல் ஆய்வாளர் சஹானாஸ்ரீ ராமகிருஷ்ணய்யா

ஈசல்களை மக்கள் உணவாகச் சாப்பிடலாமா?

புற்றை விட்டு வெளியே வரும் ஈசல்களின் இறப்பு விகிதம் அதிகளவில் இருப்பதற்கு, பறவைகள், வேட்டையாடிப் பூச்சிகள், தவளை போன்ற வேட்டையாடி உயிரினங்கள் பலவும் காரணமாக இருக்கின்றன.

அதேவேளையில் அவற்றின் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதற்கு மனிதர்களும் ஒரு காரணம் என்கிறார் பூச்சியியலாளர் முனைவர் பிரியதர்ஷன்.

இந்தியாவின் பல பகுதிகளில் ஈசல்களை உணவாகக் கொள்ளும் பழக்கம் பல்வேறு கலாசாரங்களில் இருப்பதாகக் கூறுகிறார் சஹானாஸ்ரீ.

"மழை நேரத்தில் ஈசல்கள் அதிக எண்ணிக்கையில் வெளியே வரும்போது அவற்றை உணவுக்காக கிராமப்புறங்களில் மக்கள் சேகரிப்பார்கள். சில இடங்களில், அவற்றை உலர்த்தி, வறுத்து கொள்ளுப் பருப்பு போன்ற தானியங்களுடன் கலந்து பயன்படுத்துவது உண்டு."

ஈசல்கள் ஒரு காலத்தில் ஊட்டச்சத்து நிறைந்த, சுவைமிக்க உணவாகக் கருதப்பட்டது எனக் கூறும் சஹானா, "இது கிராமப்புற உணவு மரபுகளுக்கும் நிலையான புரத மூலங்களுக்கும் இடையிலுள்ள ஆழமான தொடர்பைப் பிரதிபலிப்பதாக" குறிப்பிட்டார்.

ஈசல்களை உணவாகச் சாப்பிடுவது நல்லதா, அவை உண்மையாகவே புரதம் நிறைந்த உணவுதானா என்று ஊட்டச்சத்து நிபுணர் பிரியங்காவிடம் கேட்டபோது, "அவற்றை உணவாக உட்கொள்ளும் பழக்கம் பல்வேறு பகுதிகளில் இன்றளவும் உள்ளது. கோழி, ஆடு, மாடு ஆகியவற்றைச் சாப்பிடுவது போலத்தான் இவையும்.

எனவே, ஈசல்களை சுகாதாரமான முறையில் உட்கொள்வதால் எந்தவிதப் பிரச்னையும் இல்லை. அதோடு அவை புரதம் மிக்க உணவு எனச் சொல்லப்பட்டாலும், அதுகுறித்த அறிவியல்பூர்வ ஆய்வுகள் இந்தியாவில் இன்னும் விரிவாகச் செய்யப்படவில்லை," என்று தெரிவித்தார்.

இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, ஒடிஷா, ஜார்கண்ட், சட்டீஸ்கர், மேகாலயா, அசாம் போன்ற மாநிலங்களில் இன்றளவும் ஈசல்களை உணவாகப் பயன்படுத்தும் வழக்கம் இருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5y938124ylo

இது NPP க்கு சொம்பு தூக்கும் பதிவல்ல!

3 days 13 hours ago

இது NPP க்கு சொம்பு தூக்கும் பதிவல்ல!

அண்மையில் இளங்குமரன் பற்றி பதிவு போட்டதும் திடீரென NPP யிட்ட காசு வாங்கிட்டார் என்று கொஞ்சபேர் பேச தொடங்கிட்டினம். நான் முகநூலில் எழுதுவதை குறைக்க நினைப்பதற்கான காரணம் இதுதான். இங்கே இருக்கும் அநேகமான வாசிப்பாளர்களுக்கு யதார்த்தத்தை புரிந்துகொள்ளும் ஆர்வமில்லை .

தங்களுக்கு தேவையான பொய்களையும், புரட்டுகளையும் மட்டுமே எதிர்பார்ப்பவர்களாக பெரும்பாலானோர் மாறிவிட்ட சமூகமாகிவிட்டோம். இளங்குமரன் பற்றி நான் அவதானிப்பை வெளியிட்டேன். கட்சி அவரை பயிற்சி கொடுத்து வளர்த்து எடுக்கிறது என்று அவரது நடவடிக்கைகளை பார்த்து கூறி இருந்தேன்.

அதற்குப்பிறகு நடந்த ஒரு நேர்காணலில் இளங்குமரனே அதை ஒத்துக்கொண்டு உள்ளார். பாராளுமன்ற நாட்களில் இரவு 11 மணிவரை கூட வகுப்பு வைத்து கட்சி அவர்களுக்கு பயிற்சி வழங்குவதாக சொல்லி உள்ளார். அந்த நேர்காணலில் கட்சி எப்படி வடகிழக்கில் கால் ஊன்றுகிறது என்று தெளிவாக சொல்லி இருந்தார்.

அது கூட நான் பல தடவை சொன்னதுதான். ஒவ்வொரு பிரதேச மட்டத்திலும் இணைப்பாளர்கள் உள்ளார்கள். அரசியலுக்கு அப்பால் கட்சியை வளர்ப்பதில் கபிலன் போன்றோர் கடுமையாக உழைக்கிறார்கள்.

இளங்குமரன் அந்த பேட்டியில், "கபிலன் இங்கே இருந்து செயற்படுவதால் தான் எங்களால் ஓரளவு நிம்மதியாக கொழும்பிலே சென்று பாராளுமன்றத்தில் கலந்துகொள்ள முடிகிறது" என்று சொல்லியிருந்தார்.

தமிழ் எந்திரன் என்ற யூ டியூப் தளத்தில் அந்த பேட்டி உள்ளது. பாருங்கள், ஆச்சரியப்படுவீர்கள், சில மாதங்களுக்கு முன் வாய் தடுமாறி உளறிக்கொட்டி ஊரெல்லாம் மீம்ஸ் ஆன ஒருத்தர் குறுகிய காலத்திற்குள் எப்படி இப்படி ஒரு பேட்டி கொடுக்க கூடிய ஆளாக மாற முடிந்தது?

நான் ஒரு ஊகத்தில்தான் எழுதினேன். ஆனால், சத்தியமாக பாராளுமன்றத்தினுள்ளேயே எக்ஸ்ரா கிளாஸ் வச்சு வகுப்பு எடுக்கும் அளவுக்கு யோசிக்கவில்லை. ஏதோ நான் எழுதுவதெல்லாம் உண்மை என்று சொல்வதற்காக இதை எழுதவில்லை.

எச்சரிக்கை மணிகளை புரிந்து கொள்ளுங்கள்.

சுமந்திரன் மாகாண சபை தேர்தலில் நின்றால் படு கேவலமாகத் தோற்பார்.

சைக்கிள் கட்சி தனித்து நின்றாலும் படு கேவலமாக தோற்கும்.

கஜேந்திரகுமார் மற்றும் மற்றைய கட்சிகள், (மறைமுகமாக) சிறீதரனின் ஆதரவுடன் முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் போன்ற ஒருவரை முன்நிறுத்தினால் மட்டுமே மாகாண சபை தேர்தலில் வடக்கில் NPP நிறுத்துபவர் முதலமைச்சர் ஆவதை தடுக்க முடியும் என்று நான் எழுதியது போன வருசம்.

இளம்செழியனுக்கு கருத்து கணிப்பு நடத்தி ஆறு மாதம் ஆகிவிட்டது.

ஆனால், மாகாண சபை தேர்தலை எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்று தமிழ் தலைவர்கள் யோசிக்கத் தொடங்க முன்னமே NPP ஒரு பல்கலைக்கழக விரிவுரைளாளரை மாகாண சபை முதல்வர் வேட்பாளராக முன்நிறுத்தி மக்கள் மத்தியில் நன்கு தெரியப்பட்ட ஆளாக வளர்த்து எடுத்துள்ளது.

இப்போதைய நிலைமையில் வடமாகாண சபை தேர்தலில் NPP யை தோற்கடிப்பது கடினமாகிவிட்டது.

கடைசி நேரத்தில் விக்னேஸ்வரன் போன்று ஒருத்தரை திடீரென ஃபேமஸ் ஆக்கி கைகாட்டினால் சனம் வாக்கு போடும் என்று சினிமா தன அரசியலையே நம்மட ஆட்கள் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால், NPP நேர்த்தியாக திட்டமிட்டு தன்னை வளர்த்தெடுத்து அரசியல் சித்தாந்த வகுப்பெடுக்கிறது.

ஜே.வி.பி. என்ற சிங்கள கட்சி யாழ்ப்பாணத்தில் அலுவலகம் திறந்து அங்கே தமிழ் நூலகம் வச்சு இங்கே எந்தநாளும் எவரும் வந்து புத்தகத்தை எடுத்து போகலாம். இங்கே வேறு எந்த பாதுகாப்பும் இல்லை என்று சொல்லுகிறது என்பதைவிட அந்தக் கட்சியின் அரசியல் திட்டமிடலை விபரிக்க வேறு என்ன தேவை?

இப்போதைய நிலையில் NPP முன் நிறுத்தும் ஆள்தான் வட மாகாண முதலமைச்சர்.

கபிலனை விட இன்னும் அதிக தகுதியானவரை முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்து நாங்கள் பதவிக்காக அரசியல் செய்பவர்கள் இல்லை என்று அதிரடி காட்டுவது பற்றியும் அந்த கட்சி யோசிக்கிறது.

தமிழ் தேசிய கட்சிகளுக்கு இருக்கும் ஒரே வழி கூட்டணி வச்சு பொது வேட்பாளரை நிறுத்தி, கணிசமான அளவு புதிய வேட்பாளர்களை நிறுத்துவது மட்டும்தான். அதுவும் இப்போதே செய்யவேண்டும். கடைசி நேரம் வரை காத்திருந்தால் அரோகரா தான்தான்.

சினிமா பாணியில் கடைசி நேரத்தில் திடீர் கூட்டணி அமைச்சு அதிரடி காட்டி, புதுசா ஒருத்தரை வேட்பாளராக காட்டி திடீர் முதல்வர் ஆக்கலாம் என்ற தேய்ந்து போன மக்களை முட்டாளாக்கும் அரசியல் இனி சரி வராது.

ஏனென்றால் உங்களுக்கு போட்டியாக இருப்பது சாதாரண ஆள் அல்ல!

NPP என்ற, வெளியே காட்டிக்கொள்ளாத அறிவுஜீவிகளால் நடத்தப்படும் பெரிய அமைப்பு!

திரும்பவும் சொல்லுறன், இது NPP யிற்கு சொம்பு தூக்கும் பதிவல்ல, தமிழ் அரசியலின் தற்போதைய நிலையை விளக்கும் பதிவு.

ஆறு மாதங்களுக்கு முன் நீதிபதி இளம்செழியனை முன்நிறுத்தி கருத்து கணிப்பு நடத்தியபோது பலர் திட்டி இருந்தார்கள். அப்போது அதை நான் செய்ய காரணம் இப்படி நிலை வரக்கூடாது என்பதற்காகத்தான்.

இன்னும் ஆறு மாதம் கழித்து இந்த பதிவை காட்டி நான் இதை அப்போதே சொல்லி விட்டேன் கேட்டீர்களா என்று எழுதும் நிலை வந்தால், வடமாகாணத்தில் NPP யின் முதலமைச்சரே இருப்பார்.

குறித்து வைத்துக்கொள்ளுங்கள்!

சிவச்சந்திரன் சிவஞானத்தின் முகநூல் பக்கத்தில் இருந்து...

காணி மோசடிகள்⚠️: மக்களே அவதானம்❗| வெளிப்படுத்தல் உறுதி சட்டரீதியானதா? 🤔🤷‍♂| Thananchayan LL.B LL.M

1 week ago

In this video I explain,

Kinds of Deeds,

Legality of Deed of Declaration,

Procedure of Deed of Declaration,

Problems in the North and East Sri Lanka,

Land Scams through Deed of Declaration,

Duty of Notary Public,

Procedure of Deed Attestation,

Registration of Land,

Prevention of Fraud,

Land Sale Scams,

And Etc.

இந்த வீடியோவில், உறுதிகளின் வகைகள் எவை? வெளிப்படுத்தல் உறுதி என்றால் என்ன ? காணிப் பதிவு, வெளிப்படுத்தல் உறுதிகள்-காணி மோசடிகள், காணி மோசடிகளை தவிர்ப்பது எவ்வாறு ? என்ற தகவல்களுடன் விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இது, தெரிஞ்சா... MRI ஸ்கேன் அறைக்குள் நுழையவே மாட்டீ ங்க.

1 week 2 days ago

571315221_122197693334293440_65666361895

இது, தெரிஞ்சா... MRI ஸ்கேன் அறைக்குள் நுழையவே மாட்டீ ங்க.

கடந்த காலங்களில் மருத்துவத்துறையில் இன்று இருப்பதுப்போல நவீன கருவிகள் அன்று இல்லை. எனவே நோயாளியின் நோய்க்கான காரணத்தை கண்டறிவது ஒரு சவாலான காரியமாக இருந்து வந்தது. பின்னர் எக்ஸ் ரே, ஈசிஜி, எம்ஆர்ஐ போன்ற தொழில்நுட்ப கருவிகள் வந்த பின்னர் மருத்துவர்களுக்கு நோயாளிகளின் பிரச்சனையை கண்டறிவது மிகவும் எளிதாவிட்டது. அதிலும் எம்ஆர்ஐயின் வருகைக்கு பின்னர் நோய்களை துல்லியமாக கணித்து அதற்கு தகுந்த மருத்துவ நடைமுறைகளை எடுக்க மருத்துவர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது.

எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழையும் போது நம்முடைய அணிகலங்களை கழற்றுமாறு அங்குள்ளவர்கள் அறிவுறுத்துவார்கள். இது பலருக்கும் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தும். ஆனால் இதற்கு பின்னால் ஒரு மிக முக்கியமான பாதுகாப்பு காரணம் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? என்ன காரணம் என்பதை இங்கு பார்ப்போம்.

எம்ஆர்ஐ கருவியானது உடலின் உள்ளுருப்புகள் மற்றும் திசுக்களின் கட்டமைப்பை எக்ஸ் ரேயின் உதவியில்லாமல் பதிவு செய்வதற்கான ஒரு செயல் முறையாகும். இந்த செயல் முறையில் எம்ஆர்ஐ ஸ்கேன் உயர்தர காந்தங்களை பயன்படுத்தி மிக அதிக சக்திவாய்ந்த காந்தப்புலங்களை இந்த கருவி ஏற்படுத்துமாறு வடிவமைக்கப்படுள்ளது. இந்த காந்தப்புலங்கள் மனித உடல் உள்ளுறுப்பகளின் உயர்த்தர முப்பரிமாண படத்தை உருவாக்க பயன்படுகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் இந்த முப்பரிமாண படங்கள் உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் காயங்கள் அல்லது தேவையற்ற வளர்ச்சி இருக்கிறதா என்பதை தீர்மானிக்க மருத்துவர்கள் மிகப்பெரிய உதவியாக இருக்கிறது.

இந்த எம்ஆர்ஐ கருவி எப்படி வேலை செய்கிறது என்றால், ஒரு உளுந்த வடையை நிற்க வைத்தது போல் ஒரு உள்ள அமைப்பில் நடுவே படுக்கை ஒன்று நகரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த படுக்கையில் படுத்திருக்கும் நபர் மெதுவாக உள்ளே நகர்த்தப்படுவார். எம்ஆர்ஐ உள்ளே உள்ள சக்திவாய்ந்த காந்த புல சக்தி ஸ்கேன் செய்யப்படும் ஒவ்வொரு திசுக்களின் புரோட்டானையும் வரிசைப்படுத்துகிறது. அதே நேரத்தில் ரேடியோ அதிர்வலைகள் இந்த புரோட்டங்களில் மின்சார சமிஞ்க்கைகளை உருவாக்கி அவற்றின் வரிசையை சிதறடித்துவிடுகிறது. இப்போது எம்ஆர்ஐயின் காந்த புலங்கலையும், ரேடியோ அதிர்வலையையும் நிறுத்திவிடுவார்கள்.

இதனால் உறுப்பின் புரோட்டான்கள் காந்தத்தன்மையை இழந்து தங்களது பழைய அமைவிடத்திற்கு திரும்பும். அவ்வாறு திரும்பும்போது புரோட்டான்கள் தங்களை சிதறடித்த ரேடியோ அதிர்வலைகளை வெளியில் அனுப்பும். இதை எம்ஆர்ஐ கருவியில் பொருத்தபட்டிருக்கும் ஒரு சென்சார் கிரகித்து அதனை கணினிக்கு அனுப்பும்.

கணினியானது சென்சார் அனுப்பிய ரேடியோ அலைகளை ஒருகிணைத்து அதனை முப்பரிமாண படங்களை தயாரித்து திரையில் காண்பிக்கும்.

எம்ஆர்ஐ கருவியின் முக்கிய பாகமாக இருப்பது அதன் சக்தி வாய்ந்த காந்தங்களாகும்.

இவை ஸ்கேன் செயல் முறையின் முக்கிய அங்கமாக இருக்கிறது. இந்த காந்தங்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்றால் சுமார் 15அடி தூரத்தில் உள்ள உலோகத்தையும் ஈர்க்கவல்லது. காந்தங்கள் இந்த அதீத சக்திகொண்டதால் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யும் அறைக்குள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இப்போது புரிந்திருக்கும் ஏன் எம்ஆர்ஐ அறைக்குள் ஆபரணங்களை கழற்ற சொல்கிறார்கள் என்று. சிலர் எச்சரித்தும் அதை மதிக்காமல் இந்த ஆபரணங்களை அணிந்திருந்தால் என்னவாகும் என்றால் எல்லா ஆபரணங்களையெல்லாம் அந்த காந்தங்கள் வேகமாக இழுத்துக்கொள்ளும்.

எந்த அளவிற்கு இழுத்துக்கொள்ளும் என்றால் ஒரு வழிப்பறி கொள்ளையன் நகையை திருடுவதற்கு வேகமாக கழுத்திலிருந்து பிடுங்கிக்கொள்ளும் வேகமும் அதன் வேகமும் சமமாக இருக்கும். இதனால் காயம் ஏற்படும் சமயத்தில் மரணம் சம்பவிக்கவும் வாய்ப்புகள் உண்டு. எனவே அடுத்த முறை எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழையும் போது சென்மெட் பார்க்காமல் அணிந்திருக்கும் ஆபரணங்கள் கழற்றி வைத்துவிட்டு உள்ளே செல்லவும்.

சிந்திக்க வைக்கும் சிறுகதைகள் 

அதென்ன குதிரை திறன்? ஏன்... கழுதை திறன், புலி திறன், சிங்க திறன், இருக்கக் கூடாதா?

1 week 4 days ago

2dpY.gif

அதென்ன குதிரை திறன்? ஏன் கழுதை திறன், புலி திறன், சிங்க திறன், இருக்கக் கூடாதா?

எனது பள்ளி நாட்களில் நான் இப்படித்தான் சிந்தித்தேன்!

மிக அருமையான வினா!

குதிரையை விட வேகமாக ஓடி, அடித்துத் தின்னும் வலிமை படைத்த, புலி, சிங்கம் ஆகிய வலிமையான விலங்குகள் பெயரில் திறன்-அலகு தீர்மானிப்பதுதானே இயல்பாகவும், பொருத்தமாகவும் இருக்கும்!

இன்னும் சொல்லப்போனால், சிறுத்தைகள், ஒரு மணிக்கு, 74 மைல் வேகத்தில் ஓடும்!

ஏன் இவற்றை எல்லாம் ஒதுக்கிவிட்டு, குதிரைத்திறன் - HorsePower என்று சொன்னார்களோ?

ஒருவேளை, திறன்-அலகு தீர்மானித்தவர்கள், சைவர்களாக இருப்பார்களோ?

அப்போதும் உதைக்கிறதே!

குதிரையைவிட வேகமாக ஓடும் மான்கள் இருக்க, குதிரைக்கு ஏன் ஓட்டு விழ வேண்டும்?

ஒரு மணிக்கு, 74 மைல் வேகத்தில் ஓடும் சிறுத்தையும், மணிக்கு 60 மைல் வேகத்தில் ஓடும் சிங்கம், புலி போன்ற விலங்குகள், சில-நிமிட நேரத்திலேயே, சோர்வடைந்து, வேகம் குறைந்து நின்றுவிடும்.

இவற்றுக்கு, அதிக-வேக ஓட்டத்தை, வெகுநேரம் தாக்குப்பிடிக்கும் திறன் - STAMINA - இல்லை!

குறுகிய தூரத்துக்குள் அடிக்க இயலவில்லை என்றால், இவற்றின் இரை-விலங்குகள் தப்பிவிடும்!

மாறாக, மற்ற எல்லா விலங்குகளிடமும் இல்லாத ஒரு திறன் குதிரையிடம் உண்டு!

சீராக, ஒரே வேகத்தில், நீண்ட நேரம் ஓடக் கூடிய திறன் - STAMINA, குதிரையிடம் மட்டுமே உண்டு!

எனவேதான், குதிரைத்திறன் (HORSE POWER) திறன்-அலகாகக் கொள்ளப்படுகின்றது!

வெகுநேரம் தாக்குப் பிடிக்கும் திறனில், குதிரைக்கு இணையான விலங்குகள் இவ்வுலகில் இல்லை.

Umamahesvari Ck

சோழன் உலக சாதனை படைத்த 2 வயது பதுளைக் குழந்தை

2 weeks 3 days ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

பதுளையில் வசித்து வரும் ஜீவநேசன் காஞ்சனா தம்பதிகளின் மகன் 2 வயதும் 11 மாதங்களுமேயான மிர்திக் தேவ். 

இவர் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற 195 நாடுகளின் அமைவிடத்தை 10 நிமிடங்களில் அடையாளம் காட்டி சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் தனது பெயரைப் பதிவு செய்தார். 

இதற்கான நிகழ்வு நேற்று (16) ஹாலிஎல ஹெவன்ஸ் ஹொட்டலில் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவானி ராஜா முன்னிலையில் நடைபெற்றது. 

குழந்தையின் உலக சாதனை நிகழ்வை கூர்மையாக கண்காணித்த நடுவர், குழந்தையின் முயற்சியை உலக சாதனையாக உறுதி செய்தார். 

சோழன் உலக சாதனை படைத்த மிர்திக் தேவிற்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், அடையாள அட்டை, நினைவுக் கேடயம் மற்றும் பைல் போன்றவை வழங்கிப் பாராட்டப்பட்டது.‌ 

ஊவா மாகாண பிரதி கல்வி பணிப்பாளர் திரு.நடராஜ் வெங்கடேஸ்வரன், ஊவா மாகாண ஆசிரிய ஆலோசகர்கள்,அதிபர்கள்,ஆசிரியர்கள் என பலரும் இந்த நிகழ்வில் பங்குகொண்டார். 

சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்துடன் இணைந்து பீபல்ஸ் ஹெல்பிங் பீபல்ஸ் பவுண்டேஷன் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

https://adaderanatamil.lk/news/cmgub9xog011gqplp35xryhh5

பிச்சை எடுத்த மாற்றுத்திறனாளி 16 வயதில் வாசிக்க கற்று, பின் மருத்துவராகி மலையேற்றமும் சென்று சாதித்த கதை

2 weeks 5 days ago

மருத்துவர் லீ சுவாங்யே

பட மூலாதாரம், Dr Li Chuangye

படக்குறிப்பு, மருத்துவர் லீ சுவாங்யே

கட்டுரை தகவல்

  • பென்னி லு

  • பிபிசி சைனீஸ்

  • விபெக் வெனிமா

  • பிபிசி உலக சேவை

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

37 வயதான மருத்துவர் லீ சுவாங்யேவின் துயரங்களை வென்றெடுத்த கதை மற்றும் மலை ஏறுதல் மீதான அவரது காதல் ஆகியவை சீனாவில் வைரலானது. போலியோவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சிறுவயதில் பிச்சை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். 16 வயதில்தான் இவர் வாசிக்கக் கற்றுக்கொண்டார்.

1988 ஆம் ஆண்டு ஹெனான் மாகாணத்தில் வறுமையில் வாடிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த லீ சுவாங்யேவுக்கு ஏழு மாத குழந்தையாக இருந்தபோது போலியோ தாக்கியது. இது அவரை குதி கால்களில் குந்தி அமர்ந்தால் அன்றி, நடக்க முடியாத நிலைக்கு எடுத்துச் சென்றது.

சிறுவயதில், மற்ற குழந்தைகளைப் போலப் பள்ளிச் சீருடையுடன் செல்வதே லீயின் கனவாக இருந்தது. ஆனால், அவர் நிறைய ஏளனத்தைச் சந்தித்தார். சில குழந்தைகள் அவரை "வீணானவர்" என்றும், அவரால் "சாப்பிட மட்டுமே முடியும், வேறு எந்தப் பயனும் இல்லை" என்றும் கூறினர்.

"இது என்னை மிகவும் காயப்படுத்தியது," என்று லீ கூறுகிறார்.

லீக்கு ஒன்பது வயதாக இருந்தபோது, கால்களுக்கு அறுவை சிகிச்சை செய்தால் அவரால் நடக்க முடியும் என்று அவரது பெற்றோர் கேள்விப்பட்டனர். எனவே, அவர்கள் மேலும் கடன் வாங்கி அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.

அந்த அறுவை சிகிச்சை மீது லீ மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். "நான் வார்டில் குணமடைந்து வந்தபோது, மற்ற குழந்தைகள் அழுது கொண்டிருந்தார்கள். ஆனால் நான் சிரித்துக் கொண்டிருந்தேன், ஏனென்றால் என்னால் விரைவில் ஒரு சாதாரண மனிதரைப் போல நடக்க முடியும் என்று நினைத்தேன்," என்று அவர் கூறுகிறார்.

ஆனால், அறுவை சிகிச்சை தோல்வியடைந்தது. லீயின் நடக்கும் நம்பிக்கை சிதைந்ததுடன், அவர் ஆழமான மன அழுத்தத்திற்கு ஆளானார். தன் வாழ்க்கை அர்த்தமற்றது என்பதைப் போல உணர்ந்த அவர், தன் தாயிடம் தான் இறந்துவிட விரும்புவதாகக் கூறினார்.

மருத்துவர் லீ சுவாங்யே

பட மூலாதாரம், Dr Li Chuangye

படக்குறிப்பு, மருதுவர் லீ சீனாவின் ஐந்து புனித மலைகள் மற்றும் ஹுவாங்ஷன் மலை, அத்துடன் சீனப் பெருஞ்சுவர் அனைத்திலும் ஏறியுள்ளார்.

ஆனால், அவருடைய தாயார் அவரிடம் நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்று கூறினார். "நாங்கள் வயதான காலத்தில் பேசுவதற்கு ஒருவர் இருக்க வேண்டும் என்பதற்காக உன்னை வளர்க்கிறோம். ஒரு பூனையோ நாயோ பேச முடியாது, ஆனால் உன்னால் பேச முடியும்," என்று அவர் கூறினார்.

அவரது வார்த்தைகள் ஆழமாகப் பதிந்தன. "எனக்காக என் பெற்றோரும் குடும்பத்தினரும் எவ்வளவு தியாகம் செய்தார்கள் என்று நான் நினைத்தேன். கண்ணீர் விட்டு அழுதேன். நான் எனக்காக மட்டுமல்ல, அவர்களுக்காகவும் வாழ வேண்டும் என்று உணர்ந்தேன்," என்கிறார் லீ.

அதன்பிறகு சிறிது காலத்திலேயே, வெளியூர் நபர் ஒருவர் கிராமத்திற்கு வந்து, கோவில்களில் ஊதுபத்தி விற்க மாற்றுத்திறனாளி குழந்தைகளைத் தேடினார். அந்த நபர், லீ அந்த நேரத்தில் அவரது தந்தையின் மாதச் சம்பளத்திற்குச் சமமான தொகையை வீட்டிற்கு அனுப்புவார் என்று உறுதியளித்தார்.

"என் பெற்றோர் அதை உறுதியாக எதிர்த்தனர். ஆனால், பணம் சம்பாதிக்கவும், என் குடும்பத்தின் சுமையைக் குறைக்கவும் எனக்கு இது ஒரு வாய்ப்பாகத் தெரிந்தது," என்று லீ கூறுகிறார். அவர் அந்த நபருடன் செல்ல ஒப்புக்கொண்டார்.

மருத்துவர் லீ சுவாங்யே

பட மூலாதாரம், Dr Li Chuangye

படக்குறிப்பு, மருத்துவர் லீ சுவாங்யே

தெருவில் பிச்சை எடுக்க நேரிட்ட துயரம்

ஆனால், வேலை குறித்த வாக்குறுதி ஒரு ஏமாற்றுவேலை என்று லீ விரைவில் அறிந்தார்.

அந்த வெளியூர் நபர் ஒரு பிச்சை எடுக்கும் கும்பலை நடத்தி வந்ததாக மருத்துவர் லீ கூறுகிறார். அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு, அவர் மற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் தெருக்களில் பிச்சை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தனது புதிய "முதலாளியுடன்" கழித்த முதல் நாள் இரவில், மற்ற குழந்தைகளில் ஒருவர், கடினமாக உழைக்கவில்லை என்றால் அடிக்கப்படுவீர்கள் என்று லீயை எச்சரித்தார். இது உண்மையாகவும் ஆனது.

அடுத்த நாள் காலையில், லீ சட்டை இல்லாமல், நாணயங்களுக்கான ஒரு கிண்ணத்துடன், அதிக அனுதாபத்தைத் தூண்டும் வகையில் அவரது கால்கள் முதுகுப்புறமாக முறுக்கப்பட்ட நிலையில் நடைபாதையில் விடப்பட்டார்.

மக்கள் தன் கிண்ணத்தில் பணம் போடுவது ஏன் என்று லீக்கு முதலில் புரியவில்லை. அப்போது, பாதசாரிகள் அவரிடம், பள்ளியில் இருக்க வேண்டிய நேரத்தில் ஏன் பிச்சை எடுக்கிறாய் என்று கேட்டபோதுதான் அவருக்கு உண்மை புரிந்தது.

"என் சொந்த ஊரில், பிச்சை எடுப்பது அவமானகரமானது. நான் அதையே செய்து கொண்டிருக்கிறேன் என்று உணர்ந்திருக்கவில்லை. உண்மை தெரிந்தபோது நொறுங்கிப் போனேன்," என்று லீ கூறுகிறார்.

லீ ஒரு நாளைக்குச் சில நூறு யுவான்களைச் சம்பாதிக்க முடிந்தது – இது 1990களில் ஒரு பெரிய தொகையாகும் – ஆனால் அது அனைத்தும் அவரது முதலாளியிடம் சென்றது.

"நான் மற்ற குழந்தைகளை விடக் குறைவாகச் சம்பாதித்தால், அவர் நான் சோம்பேறித்தனமாக இருப்பதாகக் குற்றம்சாட்டி, சில சமயங்களில் என்னைத் தாக்குவார். அதனால் அந்த ஆண்டுகள் மிகவும் வேதனையாக இருந்தன." என்று அவர் கூறுகிறார்.

அடுத்து வந்த ஆண்டுகளில் மற்ற குழந்தைகள் ஓடிவிட்டனர் அல்லது காவல்துறையால் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். ஆனால், தன் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்ற உறுதியுடன் லீ அங்கேயே தங்கினார். காவல்துறை உதவி வழங்கிய போது, அவர் மறுத்துவிட்டார்.

ஏழு ஆண்டுகளாக கோடை மற்றும் குளிர்காலத்தில், லீ நாடு முழுவதும் சுற்றித் திரிந்து பிச்சை எடுத்தார்.

"அது நரகத்தில் வாழ்வது போல் இருந்தது. நான் வெட்கப்பட்டேன், கண் தொடர்பைத் தவிர்த்தேன். பரிதாபத்தைத் தூண்டுவதற்காக என் காலை வலி நிறைந்த நிலையில் பின்புறமாக முறுக்கிக் கொள்வேன். பிச்சை எடுப்பதைத் தவிர்க்க மழை அல்லது இருளுக்காக நான் பிரார்த்தனை செய்தேன்," என்று அவர் பிபிசி உலக சேவை அவுட்லுக் நிகழ்ச்சியில் கூறினார்.

ஒவ்வொரு புத்தாண்டுக்கு முந்தைய தினம் அவர் வீட்டிற்கு அழைத்து, எல்லாம் நன்றாக இருக்கிறது என்றும், கவலைப்பட வேண்டாம் என்றும் தன் பெற்றோரை ஆசுவாசப்படுத்துவார்.

"ஆனால், அழைப்புக்குப் பிறகு, நான் என் அறையில் அழுது கொண்டிருப்பேன். நான் தெருவில் பிச்சை எடுக்கிறேன் என்பதை அவர்களிடம் சொல்ல முடியவில்லை." என்று அவர் கூறுகிறார்.

இப்போதும், 20 ஆண்டுகளுக்குப் பிறகும், அந்த வேதனை நீங்கவில்லை எனக் கூறும் அவர், "பிச்சை எடுத்தது ஆழமான உளவியல் காயங்களை விட்டுச் சென்றது - நான் இன்னும் அதைப் பற்றி கொடிய கனவு காண்கிறேன். அது ஒரு கனவு மட்டுமே என்று அறிந்து நிம்மதியுடன் எழுந்திருக்கிறேன்." என்கிறார்.

ஹுவா மலையில் 2154 மீட்டர் உயரத்தில்  ஒரு அறிவிப்பு பலகை அருகே  இருக்கும் மருத்துவர் லீ.

பட மூலாதாரம், Dr Li Chuangye

படக்குறிப்பு, மலையேறுவது தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக மருத்துவர் லீ கூறுகிறார்.

கல்வி மூலம் ஒரு புதிய பாதை

லீ தெருவில் ஒரு செய்தித்தாளைக் கண்டெடுத்து, அதில் தனது பெயரில் உள்ள எழுத்துகளை மட்டுமே வாசிக்க முடிந்ததை உணர்ந்தபோது எல்லாம் மாறியது. அப்போது 16 வயதான அவர், வீட்டிற்குத் திரும்பி இறுதியாகப் பள்ளிக்குச் செல்ல முடிவு செய்தார்.

"என்னால் படிக்கவோ எழுதவோ முடியாது, கல்வி மூலம் மட்டுமே என் வாழ்க்கையை மாற்ற முடியும்," என்று அவர் நினைத்தார்.

அந்த நேரத்தில், மாற்றுத்திறனாளி குழந்தைகளைப் பிச்சை எடுக்கப் பயன்படுத்துவது குற்றமாக ஆக்கும் புதிய கொள்கையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. தனது குடும்பத்தின் நிதி நிலைமை மேம்பட்டுள்ளதாகவும் லீ கேள்விப்பட்டார். அவர் தனது முதலாளியிடம் தான் தனது குடும்பத்தைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார். அவர் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

தனது பெற்றோருடன் மீண்டும் இணைந்த போது, அவர் உண்மையில் எப்படி வாழ்ந்து வந்தார் என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். அவரைச் சுரண்டியவர் உறுதியளித்ததை விட மிகக் குறைவான பணத்தை அவர்களுக்கு அனுப்பியிருந்ததைக் கண்டு லீ கோபமடைந்தார்.

தனது பெற்றோரின் ஆதரவுடன், லீ ஆரம்பப் பள்ளியின் இரண்டாம் வகுப்பில் சேர்ந்தார். அங்குப் படிக்கும் மாணவர்கள் அவரை விட 10 வயது இளையவர்கள். அவர் முதல் நாள் பள்ளிக்குச் சென்றபோது, குழந்தைகள் அவரது மேசையைச் சுற்றி மொய்த்தனர் – ஆனால் அவர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

"நான் வருத்தப்படவில்லை - அதற்கு முன்பு நான் நிறைய ஏளனங்களையும் கஷ்டங்களையும் சந்தித்திருந்தேன். இப்போது, ஒரு மாணவனாக, நான் கற்றலில் மட்டுமே கவனம் செலுத்த விரும்பினேன்," என்று அவர் கூறுகிறார்.

லீ மிகவும் அர்ப்பணிப்புள்ள மாணவராக ஆனார், இருப்பினும் அவரது உடல்நிலை கழிப்பறைக்குச் செல்வது போன்ற வேலைகளைக் கூடச் சிரமமாக்கியது. "கழிப்பறைக்குச் செல்ல நிறைய முயற்சி தேவைப்படும். அதனால் நான் பெரும்பாலும் பள்ளியில் தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று என்னைக் கட்டுப்படுத்திக் கொள்வேன்," என்று அவர் கூறுகிறார்.

தளர்வில்லாத உறுதியுடன், லீ ஒன்பது ஆண்டுகளில் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை முடித்தார். அவர் கிராமத்தில் உள்ள குழந்தைகளை விளையாட அழைத்து, பின்னர் வீட்டுப் பாடத்தில் உதவி கேட்பார்.

கல்லூரிக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் வந்தபோது, அவரது உடல்நிலை அவருக்கு இருந்த வாய்ப்புகளை குறைத்தது. ஆனால், அவர் மருத்துவத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். "தான் ஒரு மருத்துவரானால், என் சொந்த நிலையைப் பற்றி ஆராய்ச்சி செய்யலாம், என் குடும்பத்திற்கு உதவலாம், உயிர்களைக் காப்பாற்றலாம் மற்றும் சமூகத்திற்குப் பங்களிக்கலாம்," என்று அவர் நினைத்தார்.

மருத்துவர் லீ சுவாங்யே

பட மூலாதாரம், Dr Li Chuangye

படக்குறிப்பு, கல்லூரிக்குச் செல்ல, லீ தனது மொபிலிட்டி ஸ்கூட்டரில் பல மணி நேரம் பயணிக்க வேண்டியிருந்தது.

25 வயதில் லீ மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அங்குள்ள வசதிகள் அவருக்கு மிகவும் அணுகக்கூடியதாக இருந்தன. ஆனால், செய்முறை வகுப்புகள் மிகவும் கடினமானதாக இருந்ததை அவர் கண்டார்.

"சக மாணவர்கள் ஆசிரியரைப் பின்தொடர்ந்து நோயாளிகளைப் பார்க்கச் செல்ல அல்லது இன்டர்ன்ஷிப்பின் போது வார்டுகளுக்கு இடையில் ஓட முடிந்தாலும், எனது நடமாடும் பிரச்னைகள் அதைக் கடினமாக்கின. மற்றவர்கள் ஒரு நாளில் கற்றுக்கொண்டதை நான் கற்றுக்கொள்ள அதிக நேரம் ஆகும்." என் றார்.

லீ தான் பலமடைய வேண்டும் என்று உணர்ந்தார். மலை ஏறுதலைத் தொடங்க முடிவு செய்தார். தனது முதல் மலையேற்றத்தில், தைய் மலையின் உச்சியை அடைய அவருக்கு ஐந்து பகலும் இரவும் ஆனது. அவரது கைகளும் கால்களும் வெடித்து ரத்தக் கசிவு ஏற்பட்டபோதும், அவர் கைவிடவில்லை. ஒவ்வொரு கல் படியையும் தனது பிட்டத்தைப் பயன்படுத்தி நகர்ந்து ஏறினார்.

மருத்துவர் லீ தனது மலை ஏறும் காணொளிகளைப் பகிர்ந்தபோது, அது இந்த கோடையில் வைரலாக மாறியது. மலை ஏறுவது அவருக்கு இப்போதும் ஒரு விருப்பமான விஷயமாக உள்ளது.

இப்போது மருத்துவர் லீ, ஜின்ஜியாங்கில் ஒரு சிறிய கிராமப்புற கிளினிக்கை நடத்தி வருகிறார். அவர் இரவு பகலாகப் பணி செய்ய தயாராக உள்ளார். அவரது நோயாளிகள் அவரைத் தங்களின் "அற்புத மருத்துவர்" என்று அழைக்கிறார்கள்.

"என் சொந்தக் கைகளால் நோயாளிகளைக் கவனிப்பது, என் அண்டை வீட்டாரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது – இது எனக்கு எல்லாவற்றையும் விட அதிக திருப்தியை அளிக்கிறது," என்று அவர் கூறுகிறார்.

உலகம் முழுவதும் சீன சமூகத்திடம் முழுவதும் அவரது கதை சென்றடைந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்ட அவர், இது மக்களின் மனப்பான்மையை மாற்ற உதவும் என்று நம்புகிறார்.

"சிலர் மாற்றுத்திறனாளிகளைப் பயனற்றவர்களாகப் பார்க்கிறார்கள். உணவகங்களில் நான் அமர்ந்திருக்கும்போது பிச்சைக்காரன் என்று தவறாகப் புரிந்துகொண்டு, உணவு இல்லை என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள். நான் சிரித்துவிட்டு வெளியேறுவேன் - பெரும்பாலான மக்கள் கனிவானவர்கள்," என்று அவர் கூறுகிறார்.

மருத்துவர் லீ சுவாங்யே

பட மூலாதாரம், Dr Li Chuangye

படக்குறிப்பு, ஒரு கிராமப்புற கிளினிக்கை நடத்துவதை மருத்துவர் லீ விரும்புகிறார்.

நம்பிக்கை மற்றும் நோக்கமுள்ள வாழ்க்கை

லீயைச் சுரண்டியவர் குறித்து ஏன் புகார் அளிக்கவில்லை என்று பலர் அவரிடம் கேட்டுள்ளனர். "நான் கடந்த காலத்தைக் கடந்த காலத்திலேயே விட்டுவிட முடிவு செய்தேன்," என்று அவர் கூறுகிறார். "அந்த ஏழு ஆண்டுகள் ஒரு வேதனையான அனுபவம், ஆனால் அவை என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தன."

லீயின் பயணம் அவரது கண்ணோட்டத்தை மாற்றியமைத்தது. "பள்ளிக்குச் செல்ல முடிந்த பிறகு, மற்றவர்களின் கருத்துகள் அல்லது மதிப்பீடுகள் பற்றி நான் கவலைப்படுவதை நிறுத்திவிட்டேன். அந்த விஷயங்கள் அர்த்தமற்றவை என்று நான் உணர்ந்தேன். எனது நேரத்தையும் ஆற்றலையும் படிப்பதிலும், என் வாழ்க்கையின் நோக்கத்தை அடைவதிலும் செலுத்த விரும்பினேன்," என்று அவர் கூறுகிறார்.

பல மாற்றுத்திறனாளிகள் மற்றவர்கள் தங்களை மதிப்பிடுவார்கள் அல்லது கேலி செய்வார்கள் என்று பயப்படுவதால் "முன்னோக்கிச் செல்ல அஞ்சுகிறார்கள்" என்று அவர் கூறுகிறார்.

"ஆனால், என்னைப் பொறுத்தவரை, அது முக்கியமில்லை. நான் வளாகத்திலும் நகரங்களிலும் வகுப்புகளுக்காகவோ, பட்டறைகளுக்காகவோ, அல்லது எனது வேலை மூலம் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு உதவுவதற்காகவோ குந்திக் கொண்டும், தவழ்ந்தும் செல்கிறேன். அதைச் செய்யும்போது நான் நம்பிக்கையுடன் இருப்பதாக நினைக்கிறேன். நான் மற்றவர்களின் பார்வையைப் பற்றி இப்போது கவலைப்படுவதில்லை." என்கிறார்.

பொதுமக்களுக்கு அவர் இந்த அறிவுரையையும் கூறுகிறார்: "நம் வாழ்க்கை மலைகளைப் போன்றது - நாம் ஒன்றில் ஏறுகிறோம், அதற்கு முன்னால் இன்னொன்று உள்ளது. நாம் தொடர்ந்து பாடுபட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறோம்."

"ஒருவர் எப்போதும் நேர்மறையாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். மேலும், தங்கள் கனவுகளை ஒருபோதும் விட்டுவிடக்கூடாது என்று நான் நினைக்கிறேன்."

மருத்துவர் லீ சுவாங்யே பிபிசி உலக சேவை அவுட்லுக் நிகழ்ச்சியில் பேசினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/crexdg0lnx0o

நடிகர் விஜய்யை பேட்டி காணச்சென்ற ஈழத்துச் செயற்பாட்டாளர் ஒருவருடைய தொகுக்கப்பட்ட அனுபவம்..

2 weeks 6 days ago

தமிழகத்தோடு நெருங்கிய தொடர்புடைய ஈழத்தைச் சேர்ந்த ஒரு சமூக அரசியல் செயற்பாட்டாளர் சொன்னார்,நடிகர் விஜய்யை நேர்காணல் செய்வதற்காக அவருடைய அலுவலகத்தோடு கதைத்து ஒரு நேரத்தை எடுத்திருக்கிறார்.குறிப்பிட்ட நேரத்துக்கு அங்கே போனபோது அங்கே விஜயினுடைய தகப்பன் இருந்திருக்கிறார். விஜய்க்கு பதிலாக அவர்தான் பதில் கூறுவார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நேர்காணல் விஜயின் பெயரில்தான் வரும். விஜயின் படங்கள்தான் காணப்படும்.

அந்த அலுவலகத்தில் நாலைந்து பேர் அமர்ந்திருந்து விஜய்யின் இலக்கத்துக்கு வரும் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருப்பதையும் மேற்படி செயற்பாட்டாளர் கவனித்திருக்கிறார்.அவர்கள் அனைவரும் விஜய்யின் குரலில் விஜய்யின் பாணியில் விஜய்யைப் போலவே கதைக்கிறார்களாம்.அழைப்பை எடுப்பவர்கள் தமக்கு விஜய்தான் பதில் கூறுகிறார் என்று நம்புவார்கள்.

மேலும் நமது ஈழத்துச் செயற்பாட்டாளர் அங்கிருந்த வேளையில் விஜய்யின் ரசிகர் ஒருவர் கௌரவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் யார் என்றால் விஜய்க்கு தன்னுடைய அன்பை தெரிவிப்பதற்காக தன்னுடைய சுண்டு விரலை அறுத்து கூரியரில் அனுப்பியவர்.அவரை அங்கு அழைத்து கௌரவித்திருக்கிறார்கள்.அப்பொழுது நமது செயற்பாட்டாளர் விஜய்யின் தகப்பனிடம் கேட்டிருக்கிறார்…”இது போன்ற விடயங்களை நீங்கள் புரொமோட் பண்ணுவது சரியா?” என்று. அதற்கு விஜய்யின் தகப்பன் சொன்னாராம், அப்படிச் செய்ய வேண்டும். ஏனென்றால் விஜய்யின் படத்தை ஒரு முறை பார்ப்பவர் அடுத்தடுத்த படங்களையும் தொடர்ந்து பார்க்குமாறு தூண்ட வேண்டும். அப்படித் தூண்டினால்தான் படங்கள் ஓடும், அதற்கு இதுபோன்ற புரமோஷன்கள் தேவை என்று.அதாவது ரசிகரைப் பக்தராக மாற்றுவது. அதற்கு ரசிகர் செய்யும் தியாகங்களைப் புரமோட் பண்ணுவது.

இது நடிகர் விஜய்யை பேட்டி காணச்சென்ற ஈழத்துச் செயற்பாட்டாளர் ஒருவருடைய தொகுக்கப்பட்ட அனுபவம்..

https://www.facebook.com/share/1CyQMi7DN3/

இடி, மின்னலின் போது செல்போன் பேசலாமா? - பாதுகாப்பாக இருப்பது எப்படி?

3 weeks 2 days ago

மின்னல் தாக்குதல், உயிரிழப்பு, மின்னல் பாதிப்பை தவிர்ப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • மோகன்

  • பிபிசி தமிழ்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னையைச் சேர்ந்த 20 வயதான முகுந்தன் மொட்டை மாடியில் செல்போன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது மின்னல் தாக்கியத்தில் உயிரிழந்துள்ளார். அவரின் செல்போனும் எரிந்த நிலையில் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

முகப்பேரைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவரான முகுந்தன் திங்கட்கிழமை திருமங்கலத்தில் உள்ள அவரது நண்பர் தனுஷின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

நண்பர்கள் அவரது வீட்டின் மொட்டை மாடியில் நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது முகுந்தன் செல்போனில் பேசிக் கொண்டிருக்கையில் மின்னல் தாக்கியதால் உயிரிழந்தார்.

தமிழ்நாட்டில் பருவமழை நெருங்கி வரும் சூழலில் மின்னல் தாக்கி உயிரிழப்பு ஏற்படும் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.

இந்த சம்பவத்தை ஒட்டி மின்னல் நேரங்களில் செய்ய வேண்டியது என்ன, மின்னனு சாதனங்களைப் பயன்படுத்தலாமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

பொதுவெளிகளில் தான் மின்னல் மரணங்கள் நிகழும் என்கிற கருத்து இருந்தாலும் வீடுகளில் இருக்கும்போது மின்னல் ஏற்படும் சாத்தியங்கள் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் மின்னல் தாக்கி ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவங்கள்

ஆகஸ்ட் 23: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த சகோதரிகளான அஸ்பியா பானு (13 வயது) மற்றும் சபிக்கா பானு (9 வயது) விடுமுறை தினத்தன்று வெளிவே சென்றுள்ளார். அப்போது திடீரென மழை பெய்யவே மரத்தின் கீழ் ஒதுங்கியுள்ளனர். அப்போது மின்னல் தாக்கி இருவரும் சம்பவம் இடத்திலே உயிரிழந்தனர்.

செப்டம்பர் 18: ராமநாதபுரம் பரமக்குடியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான ரமேஷ் மழைக்கு மரத்தின் கீழ் ஒதுங்கியபோது மின்னல் தாக்கி உயிரிழந்தார்.

செப்டம்பர் 23: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்தவர் கொளஞ்சியம்மாள். விவசாயியான இவர் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை கவனிக்கச் சென்றபோது மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.

மின்னல் தாக்கினால் மிகக் கடுமையான காயங்கள் மற்றும் மரணம் கூட ஏற்படலாம் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.டி.எம்.ஏ) தெரிவிக்கிறது.

இந்தியாவில் கடந்த 2023-ஆம் ஆண்டு மட்டும் மின்னல் தாக்கியதில் 2,560 பேர் உயிரிழந்தனர். இயற்கை சீற்றங்களால் உயிரிழந்தவர்களில் கிட்டத்தட்ட 40% பேர் மின்னல் தாக்கியதால் உயிரிழந்ததாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

மின்னல் தாக்குதல், உயிரிழப்பு, மின்னல் பாதிப்பை தவிர்ப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

கடலை ஒட்டிய பகுதிகளில் தான் மின்னல் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்கிறார் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநரான ரமணன்.

மின்னல்கள் 7000 டிகிரி வரை வெப்பத்தை உருவாக்கக்கூடும் என்று கூறும் அவர் திறந்தவெளிகளில் தான் மின்னல் தாக்குதவதற்கான ஆபத்துகள் அதிகம் இருக்கிறது எனக் குறிப்பிடுகிறார்.

"மின்னல் மற்றும் மழை பெய்கிறபோது திறந்தவெளிகளில் இருக்கக்கூடாது. குறிப்பாக ஒற்றை மரத்தின் கீழ் நிற்கக்கூடாது. நிறைய மரங்கள் இருக்கும் இடங்களில் உயரமான மரங்களின் கீழ் நிற்கக்கூடாது. அதே போல ஈரமான சுவர்களின் மீது சாய்ந்து நிற்கக்கூடாது. ஈரம் மூலமாகவும் மின்சாரம் கடத்தப்படுவதற்கு வாய்ப்புண்டு." என்று தெரிவித்தார் ரமணன்.

அதே வேளையில் வீடுகளில் இருக்கிறபோதும் மின்னல் தாக்கும் வாய்ப்பு இருப்பதால் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மலைப்பகுதிகளில் நேரடி மின்னல் தாக்குதல் நிகழும் வாய்ப்புகள் அதிகம் என்கிறார் பொது மருத்துவரும் எஸ்.ஆர்.எம் குளோபல் மருத்துவமனையின் மூத்த ஆலோசகருமான ஆர்.நந்தகுமார்.

பொதுவெளிகளில் தான் மின்னல் மரணங்கள் நிகழும் என்கிற கருத்து இருந்தாலும் வீடுகளில் இருக்கும்போது மின்னல் ஏற்படும் சாத்தியங்கள் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மின்னல்கள் தாக்குவது நான்கு விதங்களில் நடக்கும் என்று விவரிக்கிறார்.

  • நேரடியாக ஒருவர் மீது மின்னல் தாக்குவது

  • மரம் அல்லது ஒரு சுவர் மீது மின்னல்பட்டு அருகில் இருப்பவரை தாக்குவது

  • மின்னல் தாக்கிய இடத்திலிருந்து நிலத்தின் வழியாக அருகில் இருப்பவர்களை பாதிப்பது.

  • மின்னல் தாக்கிய இடத்தில் உலோகங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் பாதிப்பது

மின்னணு சாதனங்களை மின்னல் தாக்குமா?

செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை இடி, மின்னல் சமயங்களில் பயன்படுத்தலாமா என்பது தொடர்பான கேள்விகளும் இதனையொட்டி எழுகின்றன. இதற்கான விளக்கத்தை பிபிசியிடம் முன்வைத்தார் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முன்னாள் முதுநிலை விஞ்ஞானியும் தற்போது மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகவும் பணியாற்றும் த.வி. வெங்கடேஸ்வரன்.

"உராய்வினால் மின்னல் ஏற்படுகிறபோது நிலையான மின்சாரம் (static electricity) இறங்குவதற்கான ஒரு தளம் தேவைப்படுகிறது. அவை ஒன்று நிலத்தில் இறங்கும் அல்லது துருதுருத்திக் கொண்டிருக்கும் கம்பி போன்ற உலோகங்களில் இறங்கும். நாம் தரையில் நிற்கிறபோது நமது காலுக்கு அடியில் ஈரம் இருந்தாலும் அங்கு இறங்கும். அதனால் தான் பொதுவெளிகளில் இருப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது."

"மின்னல் என்பது மின்னணு சாதனங்களில் இறங்காது. அதனால் மின்னல் தாக்குதலால் நமது கைகளில் அல்லது பயன்பாட்டில் இருக்கும் மின்னணு சாதனங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. வீடுகளில் இருக்கின்றபோது சார்ஜிங்கில் உள்ள செல்போனை பயன்படுத்தக்கூடாது. வெளியிலும் பாதுகாப்பான இடத்தில் இருந்தால் செல்போன் பயன்படுத்துவதில் எந்த ஆபத்தும் இல்லை." எனத் தெரிவித்தார்.

எனவே மின்னணு சாதனங்களை பயன்படுத்தவது பிரச்னை இல்லை. அவற்றை எங்கிருந்து எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்தே மின்னல் ஆபத்து உள்ளது.

இடி, மின்னல் சமயத்தில் என்ன செய்ய வேண்டும்?

இடி மற்றும் மின்னல் ஏற்படுகிறபோது மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்களையும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.எம்.டி.ஏ) வழங்கியுள்ளது.

வீட்டில் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

  • மொட்டை மாடி மற்றும் பால்கனிக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும்.

  • கதவுகள் மற்றும் ஜன்னல்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்

  • குழாய்களில் மின்சாரம் கடத்தப்பட வாய்ப்பு இருப்பதால் அவற்றுடனான தொடர்பை தவிர்க்க வேண்டும்

  • குளிக்கவோ, கை கழுவவோ, பாத்திரங்களை சுத்தம் செய்யவோ கூடாது

  • லேண்ட்லைன் அலைபேசிகளைப் பயன்படுத்தக்கூடாது.

  • சார்ஜிங்கில் இல்லாத திறன்பேசி, டேப்லட் போன்ற மின்னணு சாதனங்களை வீடுகளில் பயன்படுத்தலாம்.

வெளியில் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

  • முழுவதுமாக மூடப்பட்ட கட்டடங்கள் அல்லது காருக்குள் செல்ல வேண்டும்

  • திறந்தவெளி வாகனங்களில் இருக்கக்கூடாது

  • தகரத்தால் ஆன கூடாரங்கள், திறந்தவெளி வாகன நிறுத்தம், கட்டுமானத்தின் கீழ் உள்ள கட்டிடங்கள் ஆகிய இடங்களை தவிர்க்க வேண்டும்

  • மறைவான இடங்களில் எங்கும் ஒதுங்க முடியவில்லையென்றால் நிலத்தில் கால்கள் இரண்டையும் அருகருகே வைத்து காதுகளை அடைத்துக் கொண்டு குனிய வேண்டும்

  • நிலத்தில் படுப்பதை தவிர்க்க வேண்டும்

  • நீர்நிலைகளிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும்.

மின்னல் தாக்குதல், உயிரிழப்பு, மின்னல் பாதிப்பை தவிர்ப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

மின்னல் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

உயிரிழப்பைத் தாண்டி மின்னல் தாக்குவதால் நீண்ட கால காயங்கள் மற்றும் குறைபாடு ஏற்படலாம் எனவும் என்.டி.எம்.ஏ தெரிவிக்கிறது.

மின்னல் தாக்குதலில் வெளிப்புற காயங்கள், உட்புற காயங்கள் இரண்டு வகைகளாகவும் பாதிப்புகள் இருக்கும் என்கிறார் நந்தகுமார் "தோல், தசை தொடங்கி அனைத்து உறுப்புகளையும் மின்னல் தாக்குதல் பாதிக்கும். ஒரு தீக்காயம் ஏற்பட்டால் என்ன பாதிப்புகள் எல்லாம் நிகழுமோ அவை அனைத்தும் உருவாகும். தசைகளை கடுமையாக பாதிக்கும்." என்றார்.

"பார்வை மற்றும் செவித் திறன் குறைபாடு, மூச்சுத் திணறல், சீரற்ற இதய துடிப்பு, நெஞ்சு வலி, தலைவலி, தூங்குவதில் பிரச்னை, தலைசுற்றல், தசை பிடிப்பு மற்றும் உடல் சோர்வு ஏற்படும்." என்றும் குறிப்பிட்டார்.

மின்னல் தாக்குவதில் மூளை மற்றும் இதயம் சார்ந்த பாதிப்புகள் தான் அதிகம் நிகழ்வதாகக் குறிப்பிடுகிறார் நந்தகுமார். "மிக தீவிரமாக தாக்கினால் மூளைச் சாவு அடைவதற்கும் வாய்ப்புகள் உண்டு. காயமடைபவர்களுக்கு மறதி போன்ற நீண்டகால சிக்கல்கள் ஏற்படும்."

"இதயத்தில் ரத்த அழுத்தம் கடுமையாகப் பாதிக்கப்படும். உடனடியாக மாரடைப்பு ஏற்படுவதற்கும் ரத்த குழாய்கள் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. இதனால் தான் மின்னல் தாக்குதலில் உயிர் பிழைப்பவர்கள் விகிதம் மிக குறைவாக இருக்கிறது." என்றார்.

மின்னல் தாக்கியவர்களுக்கு வழங்க வேண்டிய முதலுதவிகளையும் என்.டி.எம்.ஏ பட்டியலிட்டுள்ளது. அவை,

  • மின்னல் தாக்கியவருக்கு மூச்சு இல்லையென்றால் மாரடைப்பு ஏற்பட்டிருக்கும். அதனால் அவசர உதவி கிடைக்கும் வரை பாதிக்கப்பட்டவருக்கு சி.பி.ஆர் வழங்க வேண்டும்.

  • மின்னல் தாக்கியவருக்கு நினைவிருந்தால், அவரை தரையில் படுக்க வைத்து காலை உயரமான இடத்தில் வைக்க வேண்டும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c62qyq1l4q0o

சிவவாக்கியம் எனும் தேன்

3 weeks 4 days ago

திருச்சிற்றம்பலம்….

இலக்கியாவும், பீரோ ஆண்டியும், பலூன் அக்காவும் டிரெண்ட் ஆகும் தமிழ் சமூகவலை உலகில், அவ்வப்போது அரிதாக முருகனும் டிரெண்ட்டாவது உண்டு.

ஆனால்….

நாமே ஓ எல் பரீட்சைக்காக படித்த, மறந்த, 9ம் நூற்றாண்டின் சிவவாக்கியர் டிரெண்ட் ஆவது….

புதுசு கண்ணா…புதுசு…

அதுவும் மனிசன் என்னமா எழுதி இருக்கார்ன்னு பார்க்க, பார்க்க…..

படிக்க, படிக்க…

அட…..அட…

இவர் பெரியாருக்கு முதலே பெரியாரிசம் பேசி இருக்கிறாறே, அதுவும் 9ம் நூற்றாண்டில் என்ற வியப்பு எழுவது மட்டும் அல்ல….

ஆசார மறுப்பையும், பக்தியையும், நிலையாமையையும் குழைத்து அப்படியே அதை சிவ நம்பிக்கையில் முக்கி சிவவாக்கியர் நமக்கு அளிக்கும் விருந்து…..

தேன்…தேன்…

தித்திக்கும் தேன்.

நீங்களும் பருகுங்காள்….மக்காள்.

முழுத் தொகுப்பு

எனக்குப் பிடித்த பகுதி😂

15 நிமிட காணொளியாக. இதை மீள பிரபலபடுத்தியவர் இவர் என எண்ணுகிறேன்.

எல்ஹெச்டி(LHT) மற்றும் ஆர்ஹெச்டி(RHT) என்றால் என்ன?

3 weeks 6 days ago

அபிஷேக் ஷர்மாவுக்கு பரிசாக வந்த 30 லட்ச ரூபாய் காரை இந்தியாவில் ஓட்ட முடியாது ஏன்?

இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அபிஷேக் ஷர்மா ஆசிய கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரின் சிறந்த வீரர் விருதை வென்றார்

கட்டுரை தகவல்

  • பரத் ஷர்மா

  • பிபிசி செய்தியாளர்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

போட்டிகள்: 7

ரன்கள்: 314

சராசரி: 44.85

ஸ்ட்ரைக் ரேட்: 200

அதிகபட்ச ஸ்கோர்: 75

பவுண்டரிகள்: 32

சிக்ஸர்கள்: 19

இது ஆசிய கோப்பை 2025-இல் அபிஷேக் ஷர்மாவின் சாதனையாகும்.

இறுதிப் போட்டியைத் தவிர, மற்ற அனைத்து போட்டிகளிலும் அவர் இந்திய அணிக்குச் சிறந்த தொடக்கத்தை அளித்தார். இதன் காரணமாக, அவருக்கு 'தொடரின் சிறந்த வீரர்' விருது கிடைத்தது.

ஆனால், இன்று நாம் அவரைப் பற்றிப் பேசாமல், அவரது காரைப் பற்றிப் பேசுவோம்.

பரிசாக அவருக்கு ஒரு விலையுயர்ந்த கார் கிடைத்தது. துபையில் அந்தக் காருடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஆனால், அவரால் அந்தக் காரை இந்தியாவில் ஓட்ட முடியாது.

ஆனால் ஏன் ஓட்டமுடியாது?

ஏன் என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் முன், அது என்ன எஸ்.யு.வி (SUV) கார் என்று தெரிந்து கொள்வோம்.

ஆசிய கோப்பையின் தொடர் நாயகனுக்குக் கிடைத்த கார், ஹவால் ஹெச்9 (Haval H9) ஆகும். இதைச் சீனாவின் கிரேட் வால் மோட்டார் கம்பெனி தயாரித்துள்ளது.

சீனச் சந்தையில் இதன் விலை சுமார் 29,000 முதல் 33,000 டாலர்கள் ஆகும். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய்.

ஆனால், அபிஷேக் ஷர்மாவால் இதை இந்தியாவுக்குக் கொண்டு வர முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்குக் காரணம், இந்தக் கார் இடது கை டிரைவ் (Left Hand Drive) ஆக இருப்பதுதான்.

அதாவது, இந்தக் காரில் ஸ்டீயரிங் இடது பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இது இந்தியச் சாலைகளில் ஓடும் வாகனங்களுக்கான விதிமுறைகளுக்கு இணங்கவில்லை.

சில விதிவிலக்குகளைத் தவிர்த்து, இந்தியாவில் ஓடும் அனைத்து வாகனங்களிலும் ஸ்டீயரிங் வலது பக்கத்தில் இருக்கும். இது வலது கை ஸ்டீயரிங் கட்டுப்பாடு (Right Hand Steering Control - RHD) என்று அழைக்கப்படுகிறது.

தொடரின் சிறந்த வீரருக்கான பரிசை பெரும் அபிஷே ஷர்மா

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஆசிய கோப்பை 2025-இல் அபிஷேக் ஷர்மா சிறப்பாக பேட்டிங் செய்தார்

அபிஷேக் நாடு திரும்பியுள்ளார், ஆனால் பரிசு கார் இன்னும் வரவில்லை என்ற செய்தி வந்தபோது ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர் என்கிறது நியூஸ் 24 செய்தி.

இப்போது கேள்வி என்னவென்றால், ஏன் சில நாடுகளில் வாகனங்கள் வலது பக்கம் செல்கின்றன, சில நாடுகளில் இடது பக்கம் செல்கின்றன? மேலும், வாகனங்களில் ஸ்டீயரிங் வலது பக்கத்தில் இருக்குமா அல்லது இடது பக்கத்தில் இருக்குமா என்பது எப்படித் தீர்மானிக்கப்படுகிறது?

எல்ஹெச்டி(LHT) மற்றும் ஆர்ஹெச்டி(RHT) என்றால் என்ன?

சாலையில் கார்கள் செல்லும் புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சாலையில் வாகனம் ஓட்ட நீங்கள் பல விதிகள் மற்றும் சட்டங்களைப் பின்பற்ற வேண்டும் (சித்தரிப்புப் படம்)

முதலில், இந்தச் சொற்கள் என்னவென்று புரிந்து கொள்வோம்.

இடது கை போக்குவரத்து (Left Hand Traffic - LHT) மற்றும் வலது கை போக்குவரத்து (Right Hand Traffic - RHT) ஆகியவை இரு திசை போக்குவரத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகள்.

அதாவது, இரண்டு திசைகளிலும் போக்குவரத்து ஓடும் சாலையில், இந்த இரண்டு விதிகளில் ஒன்று நிச்சயம் இருக்கும்.

இதில், வாகனங்கள் சாலையின் இடது அல்லது வலது பக்கத்தில் ஓடுகின்றன. இது போக்குவரத்து ஓட்டத்திற்கு மிகவும் அவசியம். இது 'சாலையின் விதி' (Rule of the Road) என்றும் அழைக்கப்படுகிறது.

வலது மற்றும் இடது கை டிரைவ் என்பது வாகனத்தில் ஓட்டுநர் மற்றும் ஸ்டீயரிங் சக்கரம் இருக்கும் நிலையை (Position) குறிக்கிறது.

உதாரணமாக, இந்தியாவைப் போல் இடது கை போக்குவரத்து (LHT) உள்ள நாடுகளில், வாகனங்கள் வலது பக்கத்தில் முந்திச் செல்கின்றன.

மறுபுறம், சீனா, ரஷ்யா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் ஓடும் கார்கள் வலது கை டிரைவ் (RHD) ஆகும். அதாவது, அங்குள்ள கார்களில் ஸ்டீயரிங் இடது பக்கத்தில் இருக்கும். இது இந்தியாவிற்கு நேர் எதிரானது.

உலகில் ஒரே நேரத்தில் இடது கை டிரைவ் மற்றும் வலது கை டிரைவ் கார்களை அனுமதிக்கக்கூடிய நாடு எதுவும் நிச்சயமாக இல்லை.

ஒரு நாட்டில் அனைத்துக் கார்களும் வலது கை டிரைவில் ஓடும்போது, ஒரு இடது கை டிரைவ் கார் குழப்பத்தை ஏற்படுத்தும், மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்.

இந்த விதி எங்கிருந்து வந்தது, எப்போது வந்தது?

முதலில், இடது கை டிரைவ் மற்றும் வலது கை டிரைவ் எப்போது தொடங்கியது என்று தெரிந்து கொள்வோம்.

இதற்காக நாம் ரிவர்ஸ் கியரை போட்டு வரலாற்றிற்குச் செல்ல வேண்டும்.

வெவ்வேறு நாடுகளில் ஓட்டுநர் விதிகள் தீர்மானிக்கப்பட்ட தேதிகள் வேறுபட்டாலும், இந்த வரலாற்றில் பிரிட்டன் மற்றும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளன.

ஆஸ்க்கார்குருவின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் அமித் காரே, "பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியபோது, அவர்களுடன் அவர்களது கார்கள் மட்டுமல்ல, கார் ஓட்டும் விதிகளும் பல்வேறு நாடுகளை அடைந்தன" என பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

"இதன் காரணமாக, பிரிட்டன் ஆட்சி செய்த பெரும்பாலான நாடுகளில் இன்றும் இடது கை போக்குவரத்து (LHT) உள்ளது. அதாவது, அங்கு வலது கை டிரைவ் (RHD) உள்ளது. இதன் பொருள், காரின் ஸ்டீயரிங் வலது பக்கத்தில் இருக்கும். இடதுபுறத்தில் இல்லை. ஹாங்காங், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தாய்லாந்து, இந்தோனீசியா அல்லது பிரிட்டனில்கூட இதுதான் நிலை," என காரே தெரிவித்தார்.

"பிரிட்டிஷார் இருந்திராத உலகின் பல நாடுகளில் வலது கை போக்குவரத்து (RHT) உள்ளது. அதாவது, காரின் ஸ்டீயரிங் இடது பக்கத்தில் இருக்கும். அதாவது, இந்தியாவில் ஓடும் கார்களுடன் ஒப்பிடும்போது, சரியாக நேர் எதிர்ப்புறத்தில்," என்று அவர் மேலும் கூறுகிறார்.

ஸ்டீயரிங் கட்டுப்பாடு குறித்து விதிகள் என்ன சொல்கின்றன?

மோட்டார் வாகனச் சட்டம் 1988-இன் அத்தியாயம் ஏழு, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மோட்டார் வாகனமும் வலது கை ஸ்டீயரிங் கட்டுப்பாட்டுடன் தயாரிக்கப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறது.

இதன் பிரிவு 120-இல், 'குறிப்பிட்ட தன்மை கொண்ட' இயந்திர அல்லது மின் சமிக்ஞை சாதனம் (Mechanical or Electrical Signalling Device) வேலை செய்யும் நிலையில் இருந்தால் தவிர, இடது கை ஸ்டீயரிங் கட்டுப்பாட்டுடன் கூடிய வாகனத்தை பொது இடங்களில் இயக்க யாருக்கும் அனுமதி இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் இடது கை ஸ்டீயரிங் கட்டுப்பாட்டுடன் கூடிய வாகனங்கள் ஓடவில்லையா?

சாலையின் இடதுபுறம் போக்குவரத்து செல்லும் காட்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பல நாடுகளில் வாகனங்கள் இடது கை ஸ்டீயரிங் கட்டுப்பாட்டுடன் ஓடுகின்றன.

இடது கை ஸ்டீயரிங் கட்டுப்பாட்டுடன் கூடிய வாகனம் தற்போது இந்தியச் சாலையில் ஓடவில்லை என்று கூறுவது தவறாக இருக்கலாம். ஏனெனில், இந்திய அரசு சில விதிவிலக்குகளுக்கு அனுமதி அளிக்கிறது.

ஒரு வெளிநாட்டு அல்லது உள்நாட்டு நிறுவனம் ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்காக (R&D) இடது கை டிரைவ் யூனிட்டை இந்தியாவிற்குக் கொண்டு வர விரும்பினால், அதுகுறித்து அரசிடம் அனுமதி கேட்கலாம், அதற்கு அனுமதியும் வழங்கப்படுகிறது என்றுஇந்துஸ்தான் டைம்ஸ் ஆட்டோவின் செய்தி தெரிவிக்கிறது.

மேலும், அமெரிக்கா போன்ற பல நாடுகளில் இடது கை ஸ்டீயரிங் கட்டுப்பாடுள்ள கார்கள் ஓடுகின்றன. அமெரிக்க அதிபர் அல்லது வேறு எந்த உயர்நிலை தலைவரும் இந்தியாவிற்கு வரும்போது, அவர்களுடன் அவர்களது கார் பாதுகாப்பு வாகனங்களும் வருகின்றன. இந்தக் கார்கள் இடது கை டிரைவ் ஆகும்.

அத்தகைய சூழ்நிலையில், இந்தக் கார்கள் சாலைகளில் செல்லும் போது சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

இது தவிர, சில பழங்காலக் (Vintage) கார்களும் உள்ளன, அவை சிறப்புச் சந்தர்ப்பங்களில் காட்சிப்படுத்தப்படுகின்றன.

அவற்றில் சில இடது கை டிரைவ் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளன. கடந்த காலத்தில், இத்தகைய பல கார்கள் இந்தியாவில் உள்ள பழைய அரச குடும்பத்தினரிடம் இருந்தன.

"இந்தியாவில் நீங்கள் இடது கை ஸ்டீயரிங் கட்டுப்பாட்டு வாகனத்தை ஓட்ட முடியாது என்று அர்த்தமல்ல. நீங்கள் ஓட்டலாம், ஆனால் அதற்காக நீங்கள் சிறப்பு அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதி வரையறுக்கப்பட்ட நேரத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது, நிரந்தரமாக அல்ல," என்று காரே பிபிசி-யிடம் தெரிவித்தார்.

"இடது கை டிரைவ் கொண்ட சில பழைய கார்கள் இன்றும் இந்தியாவில் உள்ளன, ஆனால் அவை சிறப்புச் சந்தர்ப்பங்களில் மட்டுமே வெளியே எடுக்கப்படுகின்றன அல்லது ஓட்டப்படுகின்றன," என்று அவர் கூறினார்.

காரேயின் கூற்றுப்படி, சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு வந்த ஆஸ்டன் மார்ட்டின் (Aston Martin) அல்லது மோரிஸ் (Morris) போன்ற கார்கள் அனைத்தும் வலது கை டிரைவ் ஆகும், இன்றும் இந்தியாவில் உள்ள பெரும்பாலான கார்கள் அப்படித்தான் இருக்கின்றன.

மறுபுறம், அமெரிக்கா அல்லது ஜெர்மனியிலிருந்து வந்த கார்களின் ஸ்டீயரிங் கட்டுப்பாடு இடதுபுறத்தில் இருந்தது.

நிறுவனங்கள் ஒரே மாதிரியான கார்களைத் தயாரிக்கின்றனவா, இரண்டு வகைகளையும் தயாரிக்கின்றனவா?

கார் தயாரிப்பு தொழிற்சாலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பல பயணிகள் இடது பக்கத்தில் ஸ்டீயரிங் கட்டுப்பாடுள்ள கார்களில் வருகிறார்கள்

சர்வதேசச் சந்தையில் தங்கள் தயாரிப்புகளை கொண்டு சேர்க்க, உலகின் அனைத்துப் பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இடது கை டிரைவ் (LHD) மற்றும் வலது கை டிரைவ் (RHD) ஆகிய இரண்டு வகைக் கட்டமைப்புகளுடன் கார்களைத் தயாரிக்கின்றன.

போக்ஸ்வேகன் குழுமம், பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற ஐரோப்பிய நிறுவனங்களும், ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற வட அமெரிக்க நிறுவனங்களும் இதில் அடங்கும்.

இப்போது ஹோண்டா, ஹூண்டாய், மாஸ்டா, டொயோட்டா, நிஸ்ஸான் போன்ற ஆசிய கார் நிறுவனங்களும் இரண்டு வகைகளில் கார்களைத் தயாரிக்கின்றன. இந்திய நிறுவனங்களும் இதைச் செய்கின்றன.

"கார் நிறுவனங்கள் உலகளாவிய சந்தைக்காக ஒரு காரை வடிவமைக்கும்போது, இரண்டு வகையான சந்தைகளிலும் கவனம் செலுத்துகின்றன. இதனால், அவர்கள் தங்கள் கார்களை வலது கை டிரைவ் மற்றும் இடது கை டிரைவ் என இரண்டு வகையான சந்தைகளுக்கும் வழங்க முடியும்" என்று அவர் கூறினார்.

அடுத்த முறை கார் ஓட்ட அமரும்போது, ஸ்டீயரிங் இருக்கும் இடத்தில் இல்லாமல், அருகில் உள்ள இருக்கைக்கு முன்னால் இருந்தால் எப்படி உணருவீர்கள் என்று சற்று யோசித்துப் பாருங்கள்!

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cdxq08x58nyo

விசேட தேவையுடைய சிறுவர்களின் வாழ்வை மாற்றியமைக்கும் “நம்பிக்கை” நிலையம் அயத்தி

4 weeks 1 day ago

Published By: Digital Desk 3

05 Oct, 2025 | 12:06 PM

image

“வாழ்க்கையே முடிந்தது என எண்ணினேன்…” – விசேட தேவையுடைய பிள்ளைகளின் பெற்றோர்களின் உணர்வுபூர்வ பகிர்வுகள்!

(சரண்யா பிரதாப்)

இலங்கையின் சுகாதார மற்றும் சமூகத் தளத்தில் ஒரு மைல்கல்லாக, விசேட தேவையுடைய சிறுவர்களுக்காக சகல வசதிகளுடன் உருவாக்கப்பட்ட முதலாவது தேசிய நிலையமான “அயத்தி” (Ayati), பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வருகிறது. சமஸ்கிருதத்தில் “நம்பிக்கை” எனப் பொருள்படும் இந்த நிலையம், சவால்களை எதிர்கொள்ளும் சிறுவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் வாழ்வின் இரண்டாவது அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையம் 2016 ஆம் ஆண்டு அறக்கட்டளையாக நிறுவப்பட்டு, 2020 முதல் செயல்பட்டு வருகிறது. களனி பல்கலைக்கழகம், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், மாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இராணுவத்தின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட இந்த நிலையம், இலங்கையின் விசேட தேவையுடைய சமூகத்துக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

இந்த நிலையம் கம்பஹா மாவட்டத்தில், ராகமையில் களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்குள் அமைந்துள்ளது.

ayati-centre-1.jpg

அயத்தி நிலையத்தின் முக்கியத்துவம் மற்றும் சேவைகள்

இலங்கையில் ஐந்து சிறுவர்களில் ஒருவர் ஏதேனும் ஒரு விசேட தேவையுடையவராக உள்ளார். உரிய நேரத்தில் கண்டறியப்படாததால், இந்தச் சிறுவர்கள் கல்வி மற்றும் சமூக வாய்ப்புகளில் பின்தள்ளப்படுகிறார்கள். அயத்தி நிலையம் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு , பல்துறை பராமரிப்பை வழங்குவதோடு, இவர்களுக்காக நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

அயத்தி நிலையத்தில், வைத்திய நிபுணர்களால் ஆரம்ப பரிசோதனைகள், பேச்சு மற்றும் மொழி சிகிச்சை, ஒலியியல் (audiology), இயன்முறை மருத்துவம் (physiotherapy) மற்றும் தொழிற்பாட்டு சிகிச்சை (occupational Therapy) எனப் பல்துறை சிகிச்சை வழங்கப்படுகிறது. இங்கு இலங்கையின் முதலாவது உணர்திறன் அறை மற்றும் நவீன மறுவாழ்வு வசதிகள் உள்ளன. தலைமை நிறைவேற்று அதிகாரியன பிரபல வரத்தகர் தனஞ்சய் ராஜபக்ஷ கூறுகையில், இதுவரை 14,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பயனடைந்துள்ளனர். எனினும், மருத்துவர்களின் புலம்பெயர்வு, மருத்துவ உபகரணங்களின் அதிக செலவு போன்ற சவால்களை எதிர்கொள்வதாகவும், அவசர தேவைகளுக்கு 30 மில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பெற்றோர்களின் மனமுருகும் அனுபவங்கள்

அயத்தி நிலையம், விசேட தேவையுடைய குழந்தைகளின் பெற்றோர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சில பெற்றோர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

“எனது மகள் ஆன்யா, 33 வாரத்தில் பிறந்தாள். வைத்தியர்கள் அவளுக்கு மூளை வாதம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். அப்போது என் வாழ்க்கை முடிந்தது போல உணர்ந்தேன். கடும் மன அழுத்தத்துக்குள்ளானேன். குழந்தையைக் கொன்றுவிட்டு நானும் இறந்துவிடலாம் என நினைத்தேன்.” என தாயாரான டான்யா அரச குலசேகர கூறினார். ஆனால் 2019ல் ஆன்யாவை ‘அயத்தி’க்கு கொண்டு சென்றபின், அவள் ஓரளவு முன்னேற்றம் அடைந்தாள். இன்று ஆன்யா படுக்கையிலேயே இருப்பாள் என நினைத்த இடத்திலிருந்து, நிகழ்வுகள், திருமணங்களில் கலந்துகொள்கிறாள். குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் அவளது நிலையை புரிந்து ஆதரவு வழங்குகின்றனர்; அவளை ஒரு சாதாரணக் குழந்தையாகவே நடத்துவதாக தெரிவித்தார்.

2.jpg

ராகமையில் வசிக்கும் சானிக்கா ருவன்குமாரி, தனது மகள் நிஷாலி ஏஞ்சலி. அவளுக்கு தற்போது 8 வயது. அவள் விசேட தேவையுடைய குழந்தை தெரிந்து, அயத்தி நிலையத்துக்கு வந்ததாகவும், இங்குள்ள வைத்தியர்கள் அளித்த ஊக்கம் மிகுந்த உதவியாக இருந்ததாகவும் தெரிவித்தார். சமூகத்தில் களங்கம் ஏற்படுத்துவது போன்று பேசுவது இன்னும் சவாலாக உள்ளன. “சில நேரங்களில் பலர் கேள்விகள் கேட்கிறார்கள் அல்லது கருத்துகள் தெரிவிக்கிறார்கள். அப்போது, அவளுக்கு சிறிய நோய் உள்ளது என நாங்கள் விளக்குகிறோம். அவள் சாதாரண வாழ்க்கையிலேயே வாழ்கிறாள்; அதைப் பாதுகாக்க நாங்கள் முயற்சிக்கிறோம்.”தற்போது என் மகள் முன்பள்ளிக்குச் செல்கிறாள், அங்கே இரண்டு பதக்கங்களையும் வென்றுள்ளாள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார்.

தனது மூன்றாவது மகள் செலோமி செமாயா, மனவளர்ச்சி குன்றி இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தபோது கவலை அடைந்ததாக வினிதா நில்மினி தெரிவித்தார். ஆனால், அயத்தியிலுள்ள வைத்தியர்கள் ஆறுதல் கூறியதாகவும், அது தனக்கு நம்பிக்கையை அளித்ததாகவும் தெரிவித்தார். “என் பிள்ளையை சமூகத்துக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என ஒரு தந்தை அறிவுரை வழங்கினார். அப்போதுதான், பிள்ளைகளை வீட்டுக்குள் மட்டும் வைத்திருக்கக் கூடாது, அவர்கள் சமூகத்தைப் பற்றி அறிய வேண்டும் என்பதை நான் உணர்ந்தேன்,” என்றார்.

ராகமையில் வசிக்கும் தரிந்து சேனாதித், தனது 5 வயது மகள் லிடியா யொஹானி, தனது ஆறாவது குழந்தை என்றும், ஏனைய  ஐந்து குழந்தைகளும் பிறந்து இறந்ததாகவும் தெரிவித்தார். தனது மகள் மனவளர்ச்சியில் பின்தங்கி இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தபோது மிகவும் மனமுடைந்ததாகவும், ஆனால் அயத்தியில் பெற்ற சிகிச்சைகள் மற்றும் மனதளவில் கிடைத்த ஆதரவு, அவளை தற்போது சுயமாகச் செயல்பட வைத்துள்ளது என்றும் தெரிவித்தார். “அயத்தியின் பணியாளர்கள் எங்களை மரியாதையுடன் நடத்துகிறார்கள். நாங்கள் சந்திக்கும் மன அழுத்தங்களை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். சிகிச்சையளிக்கும் நிபுணர்களுடன் உள்ள உறவு மிகவும் வலிமையானதும் முக்கியமானதுமாக உள்ளது. எங்களுக்கும் எங்கள் குழந்தைக்கும் ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதற்கு அவர்கள் முழுமையாக பாடுபடுகிறார்கள் என்றார்.

இந்த உணர்வுபூர்வமான பகிர்வுகள், அயத்தி நிலையத்தின் தேவை, அதன் முக்கியத்துவம் மற்றும் ஒரு சமூக மாற்றத்தை உருவாக்கும் சக்தி ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன. மன அழுத்தம், சமூகத் தயக்கம், மற்றும் களங்கம் போன்ற சவால்களை இந்த மையம் பெற்றோர்களிடமிருந்து களைகிறது. இந்த முயற்சிகள், இலங்கையில் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான பராமரிப்பை மேம்படுத்துவதோடு, உள்ளடங்கிய சமூகத்தையும் உருவாக்குவதை நோக்கமாகக்கொண்டுள்ளன.

பலவகையான பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமாக அயத்தி நிலையம் திகழ்வதோடு, சுமார் 200 இளங்கலை மாணவர்கள் தற்போது மருத்துவப் பயிற்சியை பெறுகின்றனர். அயத்தி நிலையத்துக்கு தூர பிரதேசங்களில் இருந்து சிகிச்சைக்கு வருகை தருபவர்களுக்கு போக்குவரத்து செலவு மற்றும் உணவு வழங்கப்படுகிறது. இதேவேளை, அயத்தி நிலையத்தை புனரமைத்தல் மற்றும் அபிவிருத்தி பணிகளுக்காக தற்போது 30 மில்லியன் ரூபா தேவைப்படும் நிலையில், அயத்தி நன்கொடையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகளிடமிருந்து உதவியை எதிர்பார்த்து நிற்கின்றது.

மேலதிக தகவல்களுக்கு ; www.ayati.lk

தொடர்புகளுக்கு ; +94 11 7878501

https://www.virakesari.lk/article/226933

இன்று உலக விலங்குகள் தினம்

4 weeks 2 days ago

உலக விலங்குகள் தினம் இன்று

04 Oct, 2025 | 12:19 PM

image

ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 04 ஆம் திகதி உலக விலங்குகள் தினமாக (World Animal Day) கொண்டாடப்படுகின்றது.

இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான பிரான்சிஸ் அசிசியின் நினைவு தினம் ஒக்டோபர் 04 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுவதால் இந்நாள் விலங்குகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

1925 ஆம் ஆண்டில் ஒக்டோபர் 04 ஆம் திகதி உலக விலங்குகள் தினமாக பிரகடனப்படுத்தபட்டது.

விலங்குகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல் மற்றும் அவற்றை பாதுகாத்தல் ஆகியவை தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

உலகில் அழிந்துவரும் விலங்கு இனங்களைப் பாதுகாப்பது மனிதர்களதும் கடமையாகும்.எனவே விலங்குகளை பாதுகாத்து அவற்றை பராமரிப்போம்.

https://www.virakesari.lk/article/226865

தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி

1 month ago

தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட 'அரட்டை ' எனும் செயலியின் அதிகரித்து வரும் பயன்பாடு பேசு பொருளாகியுள்ளது. அமெரிக்கா எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் காரணமாக, உலக நாடுகள் பலவும் சொந்தக் காலில் நிற்பது பற்றி அதிகம் சிந்தித்துச் செயற்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் சேவையான WhatsApp இற்குப் பதிலாக அரட்டை எனும் செயலியினைப் ( Arattai App) பலரும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். WhatsApp, Snapchat போன்ற செயலிகளைப் போன்றே அரட்டையும் பயன்படுகின்றது. தமிழ்நாட்டினைச் சேர்ந்த சோகோ நிறுவனத்தால் ( Zoho corporation) உருவாக்கப்பட்ட செயலி இதுவாகும். சென்னையினைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த நிறுவனம் செயற்படுகின்றது. இச் செயலியின் பெயர் தமிழ்ச் சொல்லாக இருப்பதுடன், 'அ' என்ற எழுத்தினை அடையாளமாகவும்கொண்டுள்ளது. நாமும் பயன்படுத்துவோமே! இச் செயலி வெற்றி பெற்றால் , அது ஒரு வகையில் தமிழின் வெற்றியாகவும் அமையும்.

பதினாறு ஆண்டுகள் அருகில் இல்லாத அப்பாக்கு தவித்த குரல்

1 month ago

தந்தையுடன் செல்லம் விளையாடும் வயதை தொலைத்த ஒரு மகளின் ரணவலி…

பதினாறு ஆண்டுகள் அருகில் இல்லாத அப்பாக்கு தவித்த குரல்…

தமிழ் தேசியத்தின் பெயரால் நாலு குறுப்,நாலுபேர் வாழ்வுக்கு சிறைவாசம் இருக்கும் கைதியின் பிள்ளையின் கோவம்…

தமிழர்கள் விழா என தென்னிந்திய கூத்தாடிகளை கூப்பிட செலவு செய்யும் பணத்தில் ஒருவீதம் இவர்களுக்கும் செலவு செய்யலாம்…

எவரிடமும் பதில் இல்லாத கேள்விகள் 👌

https://www.facebook.com/share/v/1A1pbW9429/?mibextid=wwXIfr

சிறுமியின் சிற்றுரையை

சிறிதுநேரம் செவிமடுத்து

கேழுங்கள்.

Checked
Tue, 11/04/2025 - 05:46
சமூகவலை உலகம் Latest Topics
Subscribe to சமூகவலை உலகம் feed