வாழும் புலம்

நீதிக்காய் எழு தமிழா! யேர்மனியின் தலைநகரில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் 10.06.2025

1 day 20 hours ago

நீதிக்காய் எழு தமிழா! யேர்மனியின் தலைநகரில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் 10.06.2025

பதிவேற்றுனர்: திரு வேந்தனார்

திகதி: 04 Jun, 2025

breaking

யேர்மனிய நாட்டிற்கு வரும் பேரினவாத சிங்கள அரசின் சனாதிபதி    அனுரா மீதான எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம்

நீதிக்காய் எழு தமிழா! யேர்மனியின் தலைநகரில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் 10.06.2025

https://www.thaarakam.com/news/436c2aba-f27e-4714-9bee-63bdd7be0a6f

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 59 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பம்

2 days 10 hours ago

08 JUN, 2025 | 12:26 PM

image

(நா.தனுஜா)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 59 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (16) ஆம் திகதி ஆரம்பமாகி, ஜுலை மாதம் 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான அறிக்கையுடன் ஜெனீவாவில் ஆரம்பமாகவிருக்கும் இக்கூட்டத்தொடரின் விடயதான மற்றும் நேர ஒழுங்கு அட்டவணையில் இலங்கையுடன் தொடர்புடைய விடயங்கள் உள்வாங்கப்படவில்லை.

அதேவேளை இக்கூட்டத்தொடருக்கு மத்தியில் எதிர்வரும் 23 ஆம் திகதி மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு வருகைதர உத்தேசித்திருப்பதுடன், இவ்வருகை தொடர்பில் உள்ளக மற்றும் சர்வதேச தரப்புக்கள் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரிலேயே இலங்கை தொடர்பில் உயர்ஸ்தானிகரின் வாய்மொழிமூல அறிக்கை வெளியிடப்படவிருப்பதுடன், புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவருவது குறித்தும் ஆராயப்படும்.

https://www.virakesari.lk/article/216919

கனடா: அமைச்சர் ஆனந்த சங்கரியின் திரிசங்கு நிலை

3 days 2 hours ago

Gary_A-e1748991074857.jpeg

Columnsசிவதாசன்

கனடா: அமைச்சர் ஆனந்த சங்கரியின் திரிசங்கு நிலை

சிவதாசன்

கனடாவின் உள்ளக பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் இன்று, ஜூன் 03, 2025, மாண்பு மிகு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி புதியதொரு சட்டமூலத்தை அறிவித்திருக்கிறார். ‘கனடியர்களைப் பாதுகாப்பாக வைத்திருத்தல்’ என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் இச்சட்டத்திற்கு பலமான எல்லைகள் சட்டம் (Strong Borders Act) எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. ‘நாடு கடந்த திட்டமிடப்பட்ட குற்றத்தை எதிர்கொள்ளல்’ (combat transnational organized crime), சட்டவிரோதமான ஃபென்ரனில் போதை வஸ்து கடத்தலைத் தடுத்தல் (stop the flow of illegal fentanyl) மற்றும் கருப்புப் பணச்சலவைச் செயற்பாடுகளைத் (crack down on money laundering) தடுத்தல் ஆகியவற்றின் பின்னாலுள்ள அதி நவீன வலையமைப்புக்களை எதிர்கொள்ள வல்லதாக கனடிய பாதுகாப்பு அம்சங்களைப் பலப்படுத்தல் இச்சட்டத்தின் முக்கிய நோக்கமாக இருப்பினும் குடிவரவு விடயங்களிலும் அமைச்சரின் அதிகாரம் தலையை நீட்டுவதற்கான அனுமதியும் இருக்கிறது போலத் தெரிகிறது.

அதிகாரப் பரவலாக்கம்


  • போதை வஸ்து, ஆயுதங்கள் கடத்தல் வாகனத் திருட்டு ஆகியவற்றைக் காண்காணிக்கும் அதிகாரம் சுங்கச் சட்டத்தின் கீழ் வந்தாலும் சில எல்லைகளினூடு வரும் / போகும் பொருட்களைத் தேக்கி வைத்திருக்கும் / பொதிகளைத் தயாரிக்கும் கிட்டங்கிகள் (warehouses), கொள்கலன்கள் (containers), அல்லது பாரவண்டிகளைப் (trucks) பரிசோதிக்கும் அனுமதி தற்போது இல்லை என்பதால் அச்சட்டத்தை மாற்றுவது;

  • கரையோரப் பாதுகாப்ப்பில் ஈடுபடும் காவற் படையினர் சந்தேகத்திற்கிடமாக நடமாடும் கலங்களை வழிமறித்து அல்லது அவற்றுக்கிடையேயான தொடர்பாடல்களைக் கிரகித்து பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் சமுத்திர சட்டத்தை (Oceans Act) மாற்றுவது;

  • சர்வதேச சட்ட நிர்வாக அமைப்புகளுடன் பரிமாறல்களை அதிகரிக்கும் வகையில் RCMP காவல்துறையின் அதிகாரங்களை விரிவாக்குவது;

  • புதிய ‘தகுதியின்மை’ (ineligibility) விதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் சடுதியாக அதிகரிக்கும் அகதிகள் கோரிக்கைகளிலிருந்தும் நாட்டைப் பாதுகாப்பது;

  • அகதிக்கோரிக்கைகள் எவ்வழியில் பெறப்படுகின்றன, ஆராயப்படுகின்றன, தீர்மானிக்கப்படுகின்றன ஆகிய விடயங்களைக் கூர்மைப்படுத்தல்;

  • குடிவரவுப் பத்திரங்களை ரத்து செய்யவோ, இடைநிறுத்தவோ அல்லது மாற்றுவற்கோ அல்லது அகதிகோரிக்கைகளுக்கான புதிய விண்ணப்பங்களை ரத்துசெய்யவோ, தற்காலிகமாக இடைநிறுத்தவோ அல்லது முற்றாக நிறுத்தவோ தேவையான அதிகாரங்களை திணைக்களங்களுக்கு வழங்குதல்;

  • குடிவரவாளர் பற்றிய பிரத்தியேக தகவல்களை குடிவரவு,அகதிகள், பிரஜாவுரிமைத் திணைக்களம் ஏனைய மத்திய, மாகாண மற்றும் பிரதேச அதிகாரங்களுடன் பகிர்ந்துகொள்ளல்;

ஆகிய விடயங்களில் மாற்றங்களைக் கொண்டுவர அமைச்சரால் முன்மொழியப்படும் புதிய சட்டமூலம் வழிவகுக்கிறது.

நாடுகடந்த திட்டமிட்ட வகையில் செயற்படும் குற்ற அமைப்புக்கள் மற்றும் ஃபென்ரனில் போதை வஸ்து கடத்தல்
  • ஃபென்ரனில் போதை வஸ்து தயாரிப்பிற்குத் தேவையான மூலப்பொருட்கள் இறக்குமதியாவதை அவதானித்து விரைவாகக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சுக்கு அதிகாரங்களை வழங்கல்

  • தேவையேற்படின் ஒருவரது பிரத்தியேக தகவல்களைப் பெறும் வகையில் Criminal Code, MLACMAct, CSIS Act ஆகிய சட்டங்களை மாற்றி இத்திணைக்களங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்குதல்

  • எலெக்ட்றோனிக் ஊடகங்களை ஊடுருவி ஒருவரது பிரத்தியேக தொடர்பாடல்களைக் கண்காணிக்க்கும் வகையில் புலனாய்வு திணைக்களங்களுக்கு அதிகாரங்களை வழங்கும் வகையில் புதிய சட்டமொன்றை உருவாக்குதல்

  • கனடா போஸ்ட் மூலம் விநியோகிக்கப்படும் தபால்கல், பொதிகளைத் திறந்து பரிசோதிக்கவும், தேவையானால் குற்றங்களைப் பதியவும் காவற்துறையினருக்கு அனுமதி வழங்கும் வகையில் சட்ட மாற்றத்தைக் கொண்டு வருதல்

கருப்பு பண வருகையைத் தடுத்தல்
  • கருப்புப் பணத்தைச் சலவை செய்தல் மற்றும் பயங்கரவாதிகளுக்குப் பணம் வழங்கல் போன்ற விடயங்களைத் தடுக்க கடினமான தண்டனைகளை வழங்கும் வகையில் சட்டங்களை இயற்றுதல் /மாற்றுதல்

  • பெரிதளவான பண மாற்றம், மூன்றாம் தரப்பு பண மாற்றம் ஆகியவற்றைக் கண்காணித்தல்

  • வங்கிக் கணக்குகளில் காணப்படும் சந்தேகத்துக்கிடமான பண மாற்றங்கள் பற்றி சம்பந்தப்பட்ட அரச, தனியார் நிறுவனம்ங்களிடையே தகவற் பரிமாற்றத்துக்கு வழி செய்தல்

மேலும் வரவிருக்கும் புதிய சட்டங்கள் , மாற்றங்கள்

கனடாவைப் பாதுகாப்பதற்கெனக் கொண்டுவரப்படும் ‘பலமான எல்லைகள் சட்டம்’ துப்பாக்கிகளின் பிரயோகத்தைக் கட்டுப்படுத்தியும், தொடர் குற்றவாளிகள் இலகுவில் பிணை பெறுவதைத் தடுக்கவும், வாகனத் திருடர்கள், வீடுகளை உடைத்து திருடுபவர்கள், ஆள் மற்றும் போதை வஸ்து கடத்தல்காரர்கள் ஆகியவர்களிடமிருந்து பிரஜைகளுக்கு பாதுகாப்பு வழங்கவும் அரசு உத்தேசம் கொண்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். இதற்காக $1.3 பில்லியன் தொகையைச் செலவிடத் தயாராகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

அமைச்சர் ஆனந்தசங்கரியின் திரிசங்கு நிலை

இச்சட்டமூலம் அறிவிக்கப்பட்டபோது உடனடியாக ஒரு ஊடகவியலாளர் மாண்புமிகு அமைச்சரை இக்கட்டில் மாட்டிவிடும் வகையில் கேள்வியொன்றைக் கேட்டார். “சில வருடங்களுக்கு முன் வான்கூவரில் கரை தட்டிய கப்பலில் வந்த அகதிகள் விடுதலைப் புலிகள் அல்லவா. அப்போது நீங்கள் கனடிய தமிழர் பேரவையின் சட்ட ஆலோசகராக இருந்தீர்களே. இப்பின்னணியில் இப்போது அறிமுகமாகும் சட்டமூலத்தை எப்படி நடைமுறைப்படுத்தப்போகிறீர்கள்” என்ற சாரத்தில் அக் கேள்வி இருந்தது. இதற்குப் பதிலளித்த அமைச்சர், விடுதலைப் புலி, கனடிய தமிழர் பேரவை போன்ற ஆபத்தான பதங்களைச் சாதுரியமாகத் தவிர்த்து அவரது அமைச்சர் தொப்பியை மாற்றிவிட்டு ஒருகணம் வழக்கறிஞராக மாறிப் பதிலளித்து ‘வாய்ப்பில்லை ராஜி’ எனக்கூறி அவரை அனுப்பிவிட்டார் (எனது பார்வையில்).

இக்குறிப்பிட்ட ஊடகவியலாளரிடமிருந்து வந்த அம்பு நீண்ட நாட் தயாரிப்பாக இருந்திருக்குமென்று நினைக்கிறேன். ஆனால் இதைவிட மோசமான பல அம்புகள் இன்னும் பலவித ஊடகவியாளர்களின் அம்பறாத்துணியில் பதுங்கியிருக்க வாய்ப்புண்டு. குடிவரவு, வெளிவிவகாரம், தபால், சுகாதாரம், தகவற் தொடர்பு என ஏகப்பட்ட அமைச்சர்களின் அதிகாரங்களை அள்ளிக் கொண்டுவந்து அமைச்சர் ஆனந்தசங்கரியின் பாசறையில் போட்டுவிட்டு “ஏலுமெண்டால் செய்துபார்” என்று கார்ணி தப்பித்துக்கொண்டுவிட்டார். இவற்றில் பெரும்பாலானவை பெரியவர் ட்றம்பைத் திருப்திப்படுத்துவதற்காக என்பது பளிச்சென்று தெரிகிறது.

காளிஸ்தான் பயங்கரவாதிகள் என யாராவது தொண்டை கிழியக் கத்துவது அமைச்சரது செவிப்பறைக்குள் நுழையும் போது அது ‘விடுதலைப் புலிகள்’ ஆகவே அவருக்குக் கேட்கும். கத்துபவர்களின் நோக்கமும் அதுவாகவே இருக்கும். இப்பின்னணியில் தமிழ்ச் சமூகத்துடனான அவரது ஊடாடல்களை அவர் மட்டுப்படுத்தத் தள்ளப்படுவார். பாதுகாப்பு காரணங்களுக்கென குடிவரவு விண்ணப்பங்கள் ரத்துச் செய்யப்படும்போது அதனால் பெருவளவு பாதிக்கப்படப் போபவர்கள் வெள்ளையரல்லாதவர்கள். இதனால் அமைச்சருக்கு எதிராக அவரது ‘தோலினமே’ கொடி பிடிக்க (பனர் பிடிக்க (?)) கிளம்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எல்லைகளைப் பாதுகாத்தல் என்ற பெயரில் தனியார் சுதந்திர எல்லைகளை மீறும் பல சட்ட மாற்றங்கள் அமைச்சருக்குப் பல வகையான எதிரிகளையும் தேடித்தர வாய்ப்புண்டு.

அதைவிடவும் அச்சம் தரும் விடயம் இந்த ‘ஓர்கனைஸ்ட் கிரைம்’ கும்பல்கள். அமைச்சர் முன்பு போல ரொயோட்டா கொரோல்லாவில் பயணம் செய்யக்கூடாது. மாறாக இலான் மஸ்க்கிடமிருந்து ஒரு ‘சைபர் ட் ரக்’ ஒன்றை (இதுவரை வாங்காமலிருந்தால்) வாங்கி வைத்திருப்பது நல்லது.

ஆனால் அமைச்சரது இந்த சட்ட மூலம் ஒரு விடயத்தில் சில நல்ல விடயங்களைச் செய்யும் எனவும் எதிர்பார்க்கலாம். சமூக ஊடகங்களில் உலவும் தலை மாறிகளும், தலையாட்டிகளும் கொஞ்சம் ஓரமாக நிற்கவேண்டி ஏற்படலாம். அமைச்சருக்கு விருப்பமிருக்கிறதோ இல்லையோ எதிரிகளைச் சமாளிக்க சில தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்தேயாகவேண்டும். இதனால் நண்பர்கள் எதிரிகளாகவும் எதிரிகள் நண்பர்களாகவும் மாறுவதற்கான சூழல் ஏற்படுமெனப் பட்சி சொல்கிறது.

அமைச்சருக்கு எனது அட்வைஸ்? விளக்குக் கொழுத்துவதையும் பட்டயம் வழங்குவதையும் சற்றுத் தவிர்த்து அதிக காலத்தை ஒட்டாவாவில் கழிப்பது நல்லது.

|
No image previewகனடா: அமைச்சர் ஆனந்த சங்கரியின் திரிசங்கு நிலை |
சிவதாசன் கனடாவின் உள்ளக பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் இன்று, ஜூன் 03, 2025, மாண்பு மிகு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி புதியதொரு சட்டமூலத்தை அறிவித்திருக்கிறார். 'கனடியர்களைப் பாதுகாப்பாக...

யாழ் மருத்துவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன ? கனடா தமிழர் ஒருவரின் அனுபவம்

6 days 14 hours ago

யாழ் மருத்துவமனை குருதிப்பெருக்கின் மத்தியில் ஒரு கலங்கரை விளக்கம் - யாழ் மருத்துவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன ? கனடா தமிழர் ஒருவரின் அனுபவம்

Published By: RAJEEBAN

04 JUN, 2025 | 04:33 PM

image

A beacon amidst the bleeding: What Jaffna’s doctors taught me about life — Abbi Kanthasamy

malay mail

எனது வாழ்க்கையின் பெரும்பகுதியை நான் பொருட்களை தேடுவதில் செலவிட்டுள்ளேன். வணிகம் பிராண்ட்கள் வீடுகள் வாக்குவாதங்கள் - எப்போதும் எதனையாவது துரத்துவது, துரத்திக்கொண்டேயிருப்பது. அடுத்த இலக்கு அடுத்த ஒப்பந்தம் மைல்கற்கள் இலாபங்களை வைத்து மதிப்பிடும் இந்த உலகில்.

ஆனால் கடந்தவாரம் இலங்கையின் வடபகுதியில் உள்ள சிறிய மருத்துவனையொன்றில் எனது தாயார் உயிருக்காக போராடுவதை பார்த்தபின்னர் எனக்கு ஒரு விடயம் நினைவிற்கு வந்தது - எல்லா வீரர்களும் கதாநாயர்களும் எப்போதும் எதனையும் துரத்திக்கொண்டிருப்பவர்கள் இல்லை எதன் பின்னாலும் ஓடிக்கொண்டிருப்பவர்கள் இல்லை.

அது குமுழமுனையில் ஆரம்பமானது. மாரடைப்பு, உண்மையானது அமைதியானது ஆனால் கடும் ஆபத்தானது.

நீரிழிவுநோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டிருந்த எனது தாயார் முழுமையான அடைப்பினால் பாதிக்கப்பட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வலது தமனியில் கிட்டத்தட்ட 99 வீத அடைப்பு காணப்பட்டது.

jaffna_hospital_1.jpeg

அவர் பல நாட்களாக ஆபத்தான நிலையைநோக்கி அமைதியாக சென்றுகொண்டிருந்தார். மருத்துவ நூல்களில் - புத்தகங்களில் தெரிவிக்கப்படும் அறிகுறிகள் எவையும் தென்படவில்லை. ஒரு ஆபத்தான பாறையின் நுனியை நோக்கி அமைதியான பயணம்.

முல்லைத்தீவு மருத்துவமனையின் வைத்தியர்கள் குழுவினர் வேகமாகவும் உறுதியாகவும் செயற்பட்டனர்.

அவர்கள் ஒரு த்ரோம்பொலிடிக்கை அம்மாவிற்கு செலுத்தினர். நாங்கள் இதனை இரத்த ஓட்டத்தை தடுக்கும் இரத்த கட்டிகளை கரைக்க உடைக்க பயன்படுத்தப்படும் மருந்துகள் என இதனை அழைப்போம். அம்மாவிற்கு தேவையாகயிருந்த மிகவும் விலைமதிப்பற்ற் நேரத்தை முல்லைத்தீவு மருத்துவர்கள் வழங்கினார்கள்.

பின்னர் அம்மாவை யாழ்ப்பாண மருத்துவமனைக்கு மாற்றினார்கள்.அங்கு போதுமான கையுறைகள் கூட இல்லாத மருத்துவர்கள் மற்றும் தாதிமார் குழுவினர் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்பட்ட அம்மாவிற்கு அஞ்சியோபிளாஸ்டி சத்திரசிகிச்சையை செய்தனர். ஒரு ஸ்டெண்டை வைத்து உயிரை காப்பாற்றினார்கள். அவர்களின் வாயிலிருந்து 'மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம்" என்ற வார்த்தையை ஒரு தடவை கூடநான் கேட்கவில்லை. அந்த மருத்துவர்களின் திறமை குறித்து ஒருமுறை கூட எனக்கு சந்தேகம் எழவில்லை.

எனக்கு கடும் ஆச்சரியத்தை அளித்த விடயம் இதுதான் -

கடந்த மூன்றுவருட காலப்பகுதியில் இரண்டாயிரம் மருத்துவர்கள் இலங்கையிலிருந்து வெளியேறிவிட்டனர். அவர்கள் பிரிட்டன், அவுஸ்திரேலியா மத்திய கிழக்கிற்கு சென்றுவிட்டனர். சிறந்த ஊதியத்தை வழங்கும் சிறந்த நேரத்தை வழங்கும் சிறந்த விடயங்கள் அனைத்தையும் வழங்கும் எல்லா இடங்களிற்கும் அவர்கள் சென்றுவிட்டனர்.

இலங்கையிலிருந்து வெளியேறாமலிருந்த மருத்துவர்கள் - பிடிவாதக்காரர்கள் சுயநலமற்றவர்கள் - ஊதியம் சலுகைகளை விட குறிக்கோளிற்கு முக்கியத்துவம் வழங்குபவர்கள்.

நான் அவர்களுடன் சிறிது நேரத்தை செலவிட்டேன். அவர்கள் தங்கள் பணிகளை இடைநிறுத்தாமல் ஆரவாரம் இல்லாமல் புகார் சொல்லாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்தனர்.

ஒரு இருதயநோய் நிபுணர் ஒருவர் ஒரு நோயாளிக்கு (முதியவர்) அருள்பாலிக்கும் நினைப்பு எதுவுமின்றி சரளமாக தமிழிலில் விளங்கப்படுத்திக்கொண்டிருந்ததை பார்த்தேன்.

ஒரு மருத்துவதாதியொருவர் தனது சொந்த குழந்தையை போல தலையணையை கவனமாக சரிசெய்வதை பார்த்தேன்.

குணப்படுத்துதலில் அவர்கள் மகிழ்ச்சியடைவதை பார்த்தேன். உண்மையான மகிழ்ச்சி.

நான் ஒன்றை உணர்ந்தேன் - இந்த மக்கள் எங்களை விட மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள்.

நோக்கத்திலேயே அமைதி உள்ளது நோக்கமே அமைதியை ஏற்படுத்துகின்றது. எண்ணிக்கையில் காணமுடியாத செல்வம் ஆனால் கௌரவத்தில் காணக்கூடிய செல்வம்.

அது இங்கு தாரளமாக கிடைக்கின்றது.

jaffna_hospital.jpg

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு முன்னர் எனது தாயார் கனடாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உயர் இரத்த அழுத்தம் கவலையளிக்கும் அறிகுறிகள். ஆனால் நெறிமுறைகள் மற்றும் அதிகளவான கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள கனடாவின் சுகாதார கட்டமைப்பு எனது தாயார் மாரடைப்பினால் பாதிக்கப்படலாம் என்பதை தவறவிட்டுவிட்டது.

ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட நிதிப்பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள அரசமருத்துவமனை ஆபத்தை உடனடியாக இனம் கண்டு ஒரு சத்திரசிகிச்சையின்; துல்லியத்துடன் சிகிச்சையளித்தது.

https://www.virakesari.lk/article/216581

யாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு! பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி.

1 week 2 days ago

யாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு! பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி.

9d0229d1fabcc616d20cd99669b16a9e?s=32&d=Posted on June 1, 2025 by சமர்வீரன்

WhatsApp-Bild-2025-06-01-um-20.05.35_64c

யாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு! – யாழ் பொது நூலக எரிப்பின் 44 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி எங்கு நூல்கள் எரிக்கப்படுகின்றதோ அங்கு மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் – யேர்மனியில் நடைபெற்ற யாழ் நூலக எரிப்பின் நினைவுவேந்தல் தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டு 44 ஆண்டுகள் கடக்கின்றது. தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாததொழிக்கும் சிறிலங்கா அரசின் கட்டமைப்புசார் இனவழிப்பின் ஓர் அங்கமான பண்பாட்டுப் படுகொலையாக அரங்கேற்றப்பட்டதே யாழ் நூலக எரிப்பாகும்.

மேற்படி நூலக எரிப்பின் 44 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யேர்மனியில் பேர்லின் நகரில் ஹிட்லர் ஆட்சியில் யூத மக்களின் நூல்கள் எரிக்கப்பட்ட நினைவிடத்தின் (Bebelplatz) முன்றலில் 01.06.2025 அன்று மதியம் நடைபெற்றது.

“எங்கு நூல்கள் எரிக்கப்படுகின்றதோ அங்கு மனிதர்களும் எரிக்கப்படுவார்கள்” எனும் வாசகம் பதாதையில் பொறிக்கப்பட்டு, 44 ஆண்டுகளை நினைவுபடுத்தும் முகமாக தமிழ் இளையோர் அமைப்பால் கண்காட்சி வைக்கப்பட்டது பல்லினமக்களை ஈர்க்கும் வண்ணம் அமைந்தது. பிரசித்திபெற்ற நினைவிடத்தில் வித்தியாசமான முறையில் இக் காட்சிப்படுத்தல் நடைபெற்றதால் பல்லின மக்கள் அதிகம் ஆர்வத்தோடு கவனித்ததோடு, மட்டும்மல்லாமல் மேலதிகமான விளக்கங்களை பெற்றுக்கொள்ள உரையாடல்களிலும் ஈடுபட்டனர். அத்தோடு ஆர்வம் கொண்டவர்களுக்கு ஆங்கிலத்திலும் யேர்மன் மொழியிலும் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

WhatsApp-Bild-2025-06-01-um-20.05.53_349

WhatsApp-Bild-2025-06-01-um-20.05.52_3fa

WhatsApp-Bild-2025-06-01-um-20.05.35_f53

WhatsApp-Bild-2025-06-01-um-20.05.35_b75

WhatsApp-Bild-2025-06-01-um-20.05.35_d80

WhatsApp-Bild-2025-06-01-um-20.05.34_097

WhatsApp-Bild-2025-06-01-um-20.05.35_64c

WhatsApp-Bild-2025-06-01-um-20.05.34_9d2

WhatsApp-Bild-2025-06-01-um-20.05.35_335

WhatsApp-Bild-2025-06-01-um-20.05.34_5c5

WhatsApp-Bild-2025-06-01-um-20.05.34_817

WhatsApp-Bild-2025-06-01-um-20.05.34_dfa

WhatsApp-Bild-2025-06-01-um-20.05.33_6b2

WhatsApp-Bild-2025-06-01-um-20.05.33_23f

WhatsApp-Bild-2025-06-01-um-20.05.33_e90

WhatsApp-Bild-2025-06-01-um-20.05.33_0a5

WhatsApp-Bild-2025-06-01-um-20.05.33_a9f

WhatsApp-Bild-2025-06-01-um-20.05.32_e00

WhatsApp-Bild-2025-06-01-um-20.05.33_cb3

WhatsApp-Bild-2025-06-01-um-20.05.31_810

WhatsApp-Bild-2025-06-01-um-20.05.32_540

WhatsApp-Bild-2025-06-01-um-20.05.32_a6c

WhatsApp-Bild-2025-06-01-um-20.05.32_b03

WhatsApp-Bild-2025-06-01-um-20.05.32_e2b

WhatsApp-Bild-2025-06-01-um-20.05.30_af0

WhatsApp-Bild-2025-06-01-um-20.05.30_ee9

WhatsApp-Bild-2025-06-01-um-20.05.30_fbc

https://www.kuriyeedu.com/?p=677349

யேர்மனியில் உணர்பூர்வமாக நடைபெற்ற மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு.

1 week 2 days ago

யேர்மனியில் உணர்பூர்வமாக நடைபெற்ற மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு.

9d0229d1fabcc616d20cd99669b16a9e?s=32&d=Posted on June 1, 2025 by சமர்வீரன்

70 0

K800_DSC04419-300x200.jpgதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் இறுதிவரை எதிரிகளுடன் களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களில்,அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையினால் உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்டு மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு ஆரம்பமாகி நடைபெற்று.

தமிழீழ விடுதலைக்காக இறுதி மூச்சுள்ளவரை போராடி வீரகாவியமானவர்களது வீரவணக்க நிகழ்வைச் செய்யமுடியாது எமது தாயகம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், புலம்பெயர் நாடுகளில் இவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற இவ்வேளையில், வீரஞ்செறிந்த தமிழீழ விடுதலைவரலாற்றில் இவர்களது வீரவரலாறும் பதியம்பெற்று, எதிர்காலச் சந்ததியினருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இம்மாவீரர்களின் இலட்சியத்தை நாமும் சுமந்து தமிழீழம் விடுதலையடையும் வரை தொடர்ந்து போராடுவோம் என்ற உறுதியுடன் தாயகம் நோக்கி பயணிப்போம்.

உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களின் பெயர் விபரம்.

01. வீரவேங்கை ஆனந்தி – அருண்மொழி
02 – வீரவேங்கை கோபி
03 – வீரவேங்கை முத்தப்பன்
04 – வீரவேங்கை ஆண்டாள்
05 – வீரவேங்கை அகழிசை
06 – வீரவேங்கை பேரின்பன்
07 – வீரவேங்கை பிரதீப்
08 -வீரவேங்கை சீத்தா
09- வீரவேங்கை மதுவிழி
10 – வீரவேங்கை கோமதி – நிதர்சனா
11 – வீரவேங்கை அருளினி
12 – வீரவேங்கை இளையவன்
13 – வீரவேங்கை புனிதா
14 – காவல்துறை மாவீரர் அம்பிகைபாலன்
15 – வீரவேங்கை சுபேசினி
16 – வீரவேங்கை காதாம்பரி
17 – வீரவேங்கை காந்தன்
18 – வீரவேங்கை சந்திரன்
19 – வீரவேங்கை இரும்பொறை –

1.jpg

2.jpg

3.jpg

4-e1748776043831.jpg

5.jpg

DSC_3619-scaled.jpg

DSC_3622-scaled.jpg

K800_DSC_3619.jpg

K800_DSC_3622.jpg

K800_DSC_3637.jpg

K800_DSC_3638.jpg

K800_DSC_3642.jpg

K800_DSC_3643.jpg

K800_DSC_3644.jpg

K800_DSC_3649.jpg

K800_DSC_3655.jpg

K800_DSC03779.jpg

K800_DSC03781.jpg

K800_DSC03782.jpg

K800_DSC03783.jpg

K800_DSC03785.jpg

K800_DSC03786-e1748767234286.jpg

K800_DSC03788-e1748767245579.jpg

K800_DSC03802.jpg

K800_DSC03803.jpg

K800_DSC03804.jpg

K800_DSC03805.jpg

K800_DSC03806.jpg

K800_DSC03807.jpg

K800_DSC03808.jpg

K800_DSC03812.jpg

K800_DSC03817.jpg

K800_DSC03829.jpg

K800_DSC03833.jpg

K800_DSC03834.jpg

K800_DSC03835.jpg

K800_DSC03836.jpg

K800_DSC03837.jpg

K800_DSC03838.jpg

K800_DSC03839.jpg

K800_DSC03840.jpg

K800_DSC03848.jpg

K800_DSC03849.jpg

K800_DSC03854.jpg

K800_DSC03863.jpg

K800_DSC03865.jpg

K800_DSC03874.jpg

K800_DSC03876.jpg

K800_DSC03877.jpg

K800_DSC03878.jpg

K800_DSC03879.jpg

K800_DSC03880.jpg

K800_DSC03884.jpg

K800_DSC03894.jpg

K800_DSC03897.jpg

K800_DSC03900.jpg

K800_DSC03915.jpg

K800_DSC03918.jpg

K800_DSC03919.jpg

K800_DSC03920.jpg

K800_DSC03921.jpg

K800_DSC03923.jpg

K800_DSC03929.jpg

K800_DSC03941.jpg

K800_DSC03944.jpg

K800_DSC03945.jpg

K800_DSC03946.jpg

K800_DSC03947.jpg

K800_DSC03948.jpg

K800_DSC03949.jpg

K800_DSC03950.jpg

K800_DSC03957.jpg

K800_DSC03959.jpg

K800_DSC03967.jpg

K800_DSC03968.jpg

K800_DSC03976.jpg

K800_DSC03987.jpg

K800_DSC03992.jpg

K800_DSC03996.jpg

K800_DSC04005.jpg

K800_DSC04012.jpg

K800_DSC04016.jpg

K800_DSC04035.jpg

K800_DSC04043.jpg

K800_DSC04046.jpg

K800_DSC04051.jpg

K800_DSC04053.jpg

K800_DSC04055.jpg

K800_DSC04061.jpg

K800_DSC04066.jpg

K800_DSC04071.jpg

K800_DSC04081.jpg

K800_DSC04091.jpg

K800_DSC04098.jpg

K800_DSC04103.jpg

K800_DSC04104.jpg

K800_DSC04111.jpg

K800_DSC04121.jpg

K800_DSC04124.jpg

K800_DSC04125.jpg

K800_DSC04132.jpg

K800_DSC04141.jpg

K800_DSC04155.jpg

K800_DSC04164.jpg

K800_DSC04169.jpg

K800_DSC04174.jpg

K800_DSC04183.jpg

K800_DSC04204.jpg

K800_DSC04210.jpg

K800_DSC04214.jpg

K800_DSC04220.jpg

K800_DSC04235.jpg

K800_DSC04240.jpg

K800_DSC04251.jpg

K800_DSC04259.jpg

K800_DSC04260.jpg

K800_DSC04270.jpg

K800_DSC04271.jpg

K800_DSC04272.jpg

K800_DSC04273.jpg

K800_DSC04274.jpg

K800_DSC04275.jpg

K800_DSC04281-e1748766735282.jpg

K800_DSC04282-e1748766815687.jpg

K800_DSC04284.jpg

K800_DSC04285.jpg

K800_DSC04286.jpg

K800_DSC04288.jpg

K800_DSC04290.jpg

K800_DSC04292.jpg

K800_DSC04293.jpg

K800_DSC04295.jpg

K800_DSC04297.jpg

K800_DSC04298.jpg

K800_DSC04300.jpg

K800_DSC04304-e1748766843800.jpg

K800_DSC04305-e1748766919280.jpg

K800_DSC04306-e1748766939502.jpg

K800_DSC04307-e1748767053458.jpg

K800_DSC04309.jpg

K800_DSC04311.jpg

K800_DSC04316.jpg

K800_DSC04317.jpg

K800_DSC04318.jpg

K800_DSC04319.jpg

K800_DSC04323.jpg

K800_DSC04324.jpg

K800_DSC04325.jpg

K800_DSC04326.jpg

K800_DSC04328-e1748768595141.jpg

K800_DSC04329-e1748768577345.jpg

K800_DSC04330.jpg

K800_DSC04334.jpg

K800_DSC04336.jpg

K800_DSC04340.jpg

K800_DSC04341.jpg

K800_DSC04342.jpg

K800_DSC04343.jpg

K800_DSC04345.jpg

K800_DSC04346.jpg

K800_DSC04347.jpg

K800_DSC04348.jpg

K800_DSC04349.jpg

K800_DSC04351.jpg

K800_DSC04352.jpg

K800_DSC04353.jpg

K800_DSC04354.jpg

K800_DSC04355.jpg

K800_DSC04356.jpg

K800_DSC04357.jpg

K800_DSC04358.jpg

K800_DSC04361.jpg

K800_DSC04362.jpg

K800_DSC04365.jpg

K800_DSC04366.jpg

K800_DSC04369.jpg

K800_DSC04370.jpg

K800_DSC04371.jpg

K800_DSC04372.jpg

K800_DSC04374.jpg

K800_DSC04376.jpg

K800_DSC04377.jpg

K800_DSC04378.jpg

K800_DSC04380.jpg

K800_DSC04381.jpg

K800_DSC04383.jpg

K800_DSC04385.jpg

K800_DSC04386.jpg

K800_DSC04387.jpg

K800_DSC04389.jpg

K800_DSC04391.jpg

K800_DSC04392-e1748767101782.jpg

K800_DSC04393-e1748767117435.jpg

K800_DSC04394-e1748767133644.jpg

K800_DSC04396-e1748767147538.jpg

K800_DSC04398-e1748767162909.jpg

K800_DSC04399-e1748767179696.jpg

K800_DSC04400.jpg

K800_DSC04401.jpg

K800_DSC04402.jpg

K800_DSC04403.jpg

K800_DSC04404.jpg

K800_DSC04405.jpg

K800_DSC04406.jpg

K800_DSC04407.jpg

K800_DSC04408-e1748768487243.jpg

K800_DSC04409-e1748768472979.jpg

K800_DSC04410.jpg

K800_DSC04411.jpg

K800_DSC04412-e1748768504216.jpg

K800_DSC04414.jpg

K800_DSC04415.jpg

K800_DSC04416.jpg

K800_DSC04417.jpg

K800_DSC04418.jpg

K800_DSC04419.jpg

K800_DSC04420.jpg

K800_DSC04421.jpg

K800_DSC04425.jpg

K800_DSC04430.jpg

K800_DSC04436.jpg

K800_DSC04445.jpg

K800_DSC04446.jpg

K800_DSC04454.jpg

K800_DSC04466.jpg

K800_DSC04479.jpg

K800_DSC04492.jpg

K800_DSC04513.jpg

K800_DSC04515.jpg

K800_DSC04516.jpg

K800_DSC04517.jpg

K800_DSC04522.jpg

K800_DSC04527.jpg

K800_DSC04532.jpg

K800_DSC04534.jpg

K800_DSC04537.jpg

K800_DSC04542.jpg

K800_DSC04544.jpg

K800_DSC04545.jpg

K800_DSC04548.jpg

K800_DSC04553.jpg

K800_DSC04556.jpg

K800_DSC04558.jpg

K800_DSC04561.jpg

K800_DSC04563.jpg

K800_DSC04564.jpg

K800_DSC04565.jpg

K800_DSC04566.jpg

K800_DSC04568.jpg

K800_DSC04571.jpg

K800_DSC04574.jpg

K800_DSC04577.jpg

K800_DSC04578.jpg

K800_DSC04581.jpg

K800_DSC04583.jpg

K800_DSC04584.jpg

K800_DSC04587.jpg

K800_DSC04588.jpg

K800_DSC04595.jpg

K800_DSC04597.jpg

K800_DSC04601.jpg

K800_DSC04602.jpg

K800_DSC04603.jpg

K800_DSC04604.jpg

K800_DSC04605.jpg

K800_DSC04607.jpg

K800_DSC04613.jpg

https://www.kuriyeedu.com/?p=676900

சுவிட்சர்லாந்தில் கால்பந்தாட்டத்தில் கலக்கும் ஈழத் தமிழன்

1 week 4 days ago

சுவிட்சர்லாந்தில் கால்பந்தாட்டத்தில் கலக்கும் ஈழத் தமிழன்

Vhg மே 30, 2025

1000515300.jpg

சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் கால்பந்தாட்ட போட்டிகளில் ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் அபார திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனார்.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அஸ்வின் பாலரூபன் என்ற இளைஞர் இவ்வாறு கால்பந்தாட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார்.

1000515298.jpg

சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் சுவிஸ் செலென்ஜ் லீக் கால்பந்தாட்ட போட்டித் தொடரில் எப்.சீ துன் கழகத்தின் சார்பில் அஸ்வின் விளையாடி வருகின்றார்.

ஐரோப்பிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட போட்டித் தொடரில் எப்.சீ துன் கால்பந்தாட்டக் கழகம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

அணியின் வெற்றிக்காக அஸ்வின் வழங்கிய பங்களிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளது.

1000515299.jpg

சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி வரும் அஸ்வினுக்கு சமூக ஊடகங்களில் பெருமளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

அஸ்வின் சுவிட்சர்லாந்தில் இடம்பெற்று வரும் பல்வேறு கழக மட்டப் போட்டிகளில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார். https://www.battinatham.com/2025/05/blog-post_888.html

போலி ஆவணங்களுடன் அல்பேனியா எல்லைக்குள் நுழைய முயன்ற 3 இலங்கையர்கள் கைது

2 weeks ago

Published By: DIGITAL DESK 3

27 MAY, 2025 | 09:47 AM

image

போலி ஆவணங்களுடன் அல்பேனிய எல்லையான கெப்டானா (Qafë Thana) வை கடக்க முயன்ற 3 இலங்கையர்கள் அல்பேனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இத்தாலியில் வழங்கப்பட்ட குடியிருப்பு அனுமதிப் பத்திரங்களை வைத்திருந்ததாகவும், அவை போலியானவை எனவும் சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அல்பேனிய அதிகாரிகள் 36, 51 மற்றும் 57 வயதுடைய 3 இலங்கையர்களையும் கைது செய்துள்ளனர்.

வீசா மோசடி குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் பொருள் ஆதாரங்களாகக் கைப்பற்றப்பட்டன.

https://www.virakesari.lk/article/215782

கரி ஆனந்தசங்கரியின் பதவி ஏற்பு நிகழ்வு

2 weeks 2 days ago

கரி ஆனந்தசங்கரியின் பதவி ஏற்பு நிகழ்வு

hari.jpg

கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரியின் பதவி ஏற்பு நிகழ்வு மிகவும் அழகான முறையில் நேற்று நடைபெற்றது

அண்மையில் கனடாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான தரப்பு வெற்றி பெற்ற நிலையில் புதிய அமைச்சரவை நியமனங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மார்க் கார்னி 28 அமைச்சர்களை அமைச்சரவை பதவிகளுக்கும், மேலும் 10 பேரை வெளியுறவுச் செயலாளர்களாகவும் நியமித்துள்ளார்.

அந்தவகையில் பொது பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட ஹரி ஆனந்தசங்கரி முன்னதாக பல அமைச்சரவை அமைச்சுபதவிகளை வகுத்துள்ளார்.

இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி கடந்த 2015 ஒக்டோபர் 19 இல் நடைபெற்ற கனேடிய பொதுத் தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பில் இசுக்கார்பரோ-ரூச் பார்க் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதற்தடவையாக பாராளுமன்றம் சென்றார்.

முன்னதாக சுதேச உறவுகளுக்கான அமைச்சராகவும் 2025 மார்ச் 14 முதல் நீதி அமைச்சராகவும், கனடிய சட்டமா அதிபராகவும் பணியாற்றி வருகிறார். கனடாவில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் வன்முறைகளை தீர்த்து வைக்கும் வகையில், கனடாவில் இளைஞர்கள் சேவை நிலையமொன்றை அவர் ஆரம்பித்துள்ளார்.

மேலும், கனேடிய தமிழ்க் காங்கிரஸ் அமைப்பின் வளர்ச்சிக்காகவும் அவர் முன்னின்று செயற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


https://akkinikkunchu.com/?p=325957

கனடாவில் Toronto நகரிலும், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கான வாய்ப்பு உள்ளதா?

2 weeks 4 days ago


கனடாவில் Toronto நகரிலும், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கான வாய்ப்பு உள்ளதா? மாநகரசபை உறுப்பினர் பார்த்தி கந்தவேள் அவர்களுடன் May 18 சிறப்பு நேர்காணல்.

கனடாவில் Toronto நகரிலும், முள்ள...
No image preview5,110 次播放 · 56 个心情 | கனடாவில் Toronto நகரிலும், முள்ளிவாய...
கனடாவில் Toronto நகரிலும், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கான வாய்ப்பு உள்ளதா? மாநகரசபை உறுப்பினர் பார்த்தி கந்தவேள் அவர்களுடன் May 18 சிறப்பு நேர்காணல்....

https://www.instagram.com/eastfmtamil/reel/DJpmSzJJCy6/

ரப் பாடகர் வேடன்

3 weeks ago

அறிவுக்கு அடுத்தபடியாக , மலையாளத்து ராப்பர் வேடனின் பாடல்களை விரும்பி கேட்ப்பேன். அவருடைய ஈழத்து தொடர்பு அண்மையில் தான் அறியமுடிந்தது, அகதியாக இந்தியா சென்ற யாழ்ப்பாணத் தமிழ்த் தாய்க்கும், மலையாளி தகப்பனுக்கும் கேரளா திரிச்சூரில் பிறந்த ரப் பாடகர் வேடன், மேடைகளில் ஈழத்தில் நடந்த கொடுமைகளை தனது ரப் பாடல்கள் மூலமும் வெளிப்படுத்தியுள்ளார்.

ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்தகுற்றவாளிகள் இறுதியாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களிற்காக பொறுப்புக்கூறச்செய்யப்படும் ஒரு நாளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் - பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன்

3 weeks 1 day ago

ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்தகுற்றவாளிகள் இறுதியாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களிற்காக பொறுப்புக்கூறச்செய்யப்படும் ஒரு நாளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் - பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன்

Published By: Rajeeban

19 May, 2025 | 10:26 AM

image

ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்தகுற்றவாளிகள் இறுதியாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களிற்காக பொறுப்புக்கூறச்செய்யப்படும் ஒரு நாளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

இன்று நாங்கள் தமிழ் இனப்படுகொலை தினைத்தை நினைவுகூறுகின்றோம்.-தமிழ் மக்களிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் பாரிய இனப்படுகொலையில் ஈடுபட்ட யுத்தத்தின் 16வது வருட நிறைவை நினைவுகூருகின்றோம்.

உயிர் தப்பிய பலர் கனடாவிற்கு பாதுகாப்பிற்காக தப்பியோடிவந்தனர்.

நாங்கள் இழக்கப்பட்ட உயிர்களை சிதறடிக்கப்பட்ட குடும்பங்களை,நிரந்தரமாக பாதிக்கப்பட்ட சமூகங்களை நினைவுகூருகின்றோம்.

இந்த வலியின் சுமையையும் அன்புக்குரியவர்களின் நினைவுகளையும் தொடர்ந்து சுமக்கும்  பிரம்டன் மற்றும் கனடா தமிழ் சமூகத்துடன் உறுதியாக இணைந்திருக்கின்;றோம்.

பிரம்டன் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியின் இருப்பிடம் என்பதால் இந்த வருடம் பிரம்டனிற்கு மிகவும் விசேடமானது.இது ஒரு சக்திவாய்ந்த நினைவுச்சின்னமாகும்.

இந்த நினைவுச்சின்னம் கடந்த காலத்தை நினைவூட்டுவதாகவும்,உண்மை பொறுப்புக்கூறல் மற்றும் அமைதியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட எதிர்காலத்திற்கான அழைப்பாகவும் விளங்குகின்றது.

ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்தகுற்றவாளிகள் இறுதியாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களிற்காக பொறுப்புக்கூறச்செய்யப்படும் ஒரு நாளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்

நீதிக்காகவும் நினைவுகூரலிற்காகவும்,ஒற்றுமையுடன் ஒன்றாக நிற்பதற்கும் எங்களை அர்ப்பணிப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை கௌரவிப்போம்.இன்றும் எப்போதும்.

https://www.virakesari.lk/article/215122

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: பிரித்தானியவில் ஆர்ப்பாட்டம்!

3 weeks 1 day ago

Sri-Lanka.jpg?resize=650%2C375&ssl=1

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: பிரித்தானியவில் ஆர்ப்பாட்டம்!

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தினை நினைவு கூர்ந்து  பிரித்தானியாவில் அமைந்துள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் (Parliament Square ) நேற்றைய தினம் (18) அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் இறுதி யுத்ததில் உயிர் நீத்த தமிழ் உறவுகளுக்கு நீதி கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பியிருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் ஐக்கிய இராச்சியம் என்பன ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1432250

தமிழினப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கும் உண்மை, நீதியை அடைய எடுக்கப்படும் சர்வதேச முயற்சிகளை ஆதரிக்கிறோம் - கனேடிய பிரதமர்

3 weeks 2 days ago

18 MAY, 2025 | 08:08 PM

image

பொறுப்புக் கூறலுக்கும் உண்மை, நீதி ஆகியவற்றை அடைவதற்கும் எடுக்கப்படும் சுதந்திரமான சர்வதேச முயற்சிகளை கனடா தொடர்ந்தும் ஆதரிக்கிறது என அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்ணி தெரிவித்துள்ளார்.

தமிழ் இனப்படுகொலை நினைவேந்தலை முன்னிட்டு கனேடியப் பிரதமர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் ஆயுதப்போர் முடிவடைந்து இன்றுடன் 16 வருடங்கள் ஆகிவிட்டன. 26 வருடங்களுக்கும் அதிகமாக நீடித்த இந்தப் போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளில், இழந்த உயிர்களையும் சிதறிப்போன குடும்பங்களையும் பேரழிவடைந்த சமூகங்களையும் இன்றுவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களாகவே இருப்போரையும் நாம் நினைவுகூருகின்றோம்.

அத்துடன் தமது அன்புக்குரியவர்களின் நினைவுகளைச் சுமக்கும் கனேடிய தமிழ்ச் சமூகத்தையும் கனடாவின் பல பகுதிகளிலும் திட்டமிடப்பட்டுள்ள நினைவேந்தல் நிகழ்வுகளையும் நாம் மனதிற்கொள்கின்றோம்.

பொறுப்புக்கூறலுக்கும் உண்மை, நீதி ஆகியவற்றை அடைவதற்கும் எடுக்கப்படும் சுதந்திரமான சர்வதேச முயற்சிகளைக் கனடா தொடர்ந்தும் ஆதரிக்கின்றது.

இந்த நினைவேந்தல் நாளை நாம் கடைப்பிடிக்கும் போது, துணிவுடன் அஞ்சலி செலுத்துவதற்கான உறுதிப்பாட்டையும், நீடித்திருக்கும் அமைதிக்காகச் செயற்படுவதற்கான உறுதிப்பாட்டையும் அது பலப்படுத்தட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/215099

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை: பிரித்தானிய எம்.பி வெளியிட்ட அறிக்கை

3 weeks 2 days ago

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக, அமைதிக்காக, பொறுப்புக் கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் (Uma Kumaran) தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவு செய்தியில் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தின் போது நாங்கள் இலங்கையின் யுத்தத்தின் இறுதி தருணங்களில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் நினைவுகளை கௌரவிக்கின்றோம்.

16 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இன்னமும் நீதி நிலைநாட்டப்படவில்லை. காயமும் மன அதிர்ச்சியும் எங்களின் கூட்டு நினைவுகளில் ஆழமாக உணரப்படுகின்றது, குடும்பங்கள் இன்னமும் நீதியை கோரிநிற்கின்றன, உயிர்பிழைத்தவர்கள் இழப்பின் பெரும் வலியை இன்னமும் சுமக்கின்றனர்.

மேலும் எங்களின் உலகளாவிய புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். மே 18 என்பது எங்கள் அனைவருக்கும் ஆறாத காயங்கள் நீதிக்கான கதறல் ஆகியவற்றின் வலிமிகுந்த நினைவுபடுத்தல்.

தமிழ் பாரம்பரியத்தை உடைய பிரித்தானியாவின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில், பிரித்தானிய சமூகத்திற்கான எனது பங்களிப்பு குறித்த பெருமிதத்தை மாத்திரம் நான் சுமக்கவில்லை, உண்மைக்காக பொறுப்புக்கூறலிற்காக மனித உரிமைகளிற்காக குரல் கொடுக்கவேண்டிய பொறுப்பையும் நான் சுமக்கின்றேன்.

முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்டவர்களிற்கான நீதி என்ற விடயம் தமிழர் விவகாரம் இல்லை மனிதாபிமான விவகாரம். நாங்கள் உயிர்பிழைத்தவர்களின் குரல்களிற்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்கவேண்டும், அவர்களின் குரல்கள் மௌனமாக்கப்படாததை உறுதி செய்யவேண்டும்.

இலங்கையில் நிரந்தர அமைதி சமாதானம் நல்லிணக்கத்திற்காக நாங்கள் தொடர்ந்தும் பாடுபடவேண்டும். நீதிக்கான பாதை கடினமானதாக வலிமிகுந்ததாக காணப்படுகின்ற போதிலும், உலக நாடுகளிலும் பிரித்தானியாவிலும் காணப்படுகின்ற எங்கள் மக்களின் வலிமை மற்றும் மீள் எழும் தன்மை, நம்பிக்கை நீடிப்பதை வெளிப்படுத்துகின்றது.

 பிரித்தானிய அரசாங்கம் விதித்த தடை

கடந்து செல்லும் ஒவ்வொரு வருடமும் உண்மைக்கான குரல் மேலும் வலுவடைகின்றது, பொறுப்புக்கூறலிற்கான வேண்டுகோள் மேலும் வலுவடைகின்றது.

பிரித்தானியால் தொழில்கட்சி அரசாங்கம் நீதியை நிலைநாட்டுவதை நோக்கி குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த வருடம் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் யுத்த குற்றங்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட முக்கிய தனிநபர்களிற்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் தடைகளை விதித்தது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை: பிரித்தானிய எம்.பி வெளியிட்ட அறிக்கை | Tamil Genocide Remembrance Day Uk Mp Uma Kumaran

தடைகள் ஒரு முக்கியமான திருப்புமுனையை குறிக்கின்றன, நீதி என்பது ஒரு தெரிவல்ல அவசியமான விடயம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளது போல, கடந்த கால மனித உரிமை மீறல்களை எதிர்கொள்வது, நிரந்தர அமைதி நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அவசியமானதாகும்.

மேலும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதல் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது என்ற வலுவான செய்தியையும் இது தெரிவித்துள்ளது.

நாங்கள் எப்போதும் கடந்தகாலத்தை கௌரவிப்போம் ஆனால் எதிர்காலத்தை நாங்கள் நம்பிக்கையுடன் நோக்கவேண்டும், நீதிநிலவும் எதிர்காலம், உயிர்பிழைத்தவர்களின் குரல்கள் செவிமடுக்கப்படும் எதிர்காலம், நல்லிணக்கம் காயங்களை ஆற்றுவதற்கு வழிசமைக்கும் எதிர்காலம்.

எதிர்கால தலைமுறைகள் ஒருபோதும் மறக்காத ஆனால் ,வரலாறு ஏற்றுக்கொள்ளப்படும் கௌரவம் மதிக்கப்படும் அவர்களுடைய உரிமைகள் நிலைநாட்டப்படும் உலகில் வாழும் எதிர்காலம்.

இன்று இந்த நாளை நினைவுகூரும் அனைவருக்கும் - நீங்கள் தனியாக இல்லை. நாங்கள் நினைவுகூருகின்றோம், நாங்கள் துயருகின்றோம், துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம்.

எங்கள் ஐக்கியம், விடாமுயற்சி, எங்கள் கூட்டு குரல்கள் நாங்கள் முன்னோக்கி செல்லும் நிலையை ஏற்படுத்தும். நாங்கள் இணைந்து இழக்கப்பட்டவர்களின் நினைவுகளை நினைவுகளை கௌரவிக்கும் எதிர்காலத்தை உருவாக்குவோம், மீண்டும் அந்த கொடுமைகள் நிகழாமலிருப்பதை உறுதி செய்வோம்.“ என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://ibctamil.com/article/tamil-genocide-remembrance-day-uk-mp-uma-kumaran-1747560081

இலங்கையின் யுத்தகுற்றவாளிகளிற்கு எதிராக தடைகளை விதித்துள்ளமை குறித்து ‘திருப்தியடைகின்றேன்’- பிரிட்டிஸ் பிரதமர்'

3 weeks 3 days ago

Published By: RAJEEBAN

17 MAY, 2025 | 08:54 AM

image

இலங்கையில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிற்கு உள்ளான தனிநபர்களிற்கு எதிராக பிரிட்டன்  சமீபத்தில் இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதித்துள்ளமை  குறித்து திருப்தியடைகின்றேன் என பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் தெரிவித்துள்ளார்

அறிக்கையொன்றில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் யுத்தத்தில்  கொல்லப்பட்டவர்கள் மற்றும் பரந்துபட்ட மனித உரிமை மீறல்களை அனுபவித்தவர்களை நினைவுகூருவதற்காக இலங்கையிலும் உலகம் எங்கிலும் உள்ள தமிழர்கள் ஒன்றுதிரள்கின்றனர்.

பாதிக்கப்பட்ட அனைத்து தமிழர்களையும், நினைவுகூருவதில் நான் உங்களுடன் இணைந்துகொள்கின்றேன், அந்த அநீதிகளின் கொடுமைகளின் பாதிப்புகள் நினைவுகளுடன் வாழும் உயிர் பிழைத்தவர்கள் அன்புக்குரியவர்களுடன் உடன்நிற்கின்றோம்.

சமூகங்கள் ஒன்றிணைந்து முன்னோக்கி செல்வதற்கு, கடந்தகால அட்டுழியங்களை ஏற்றுக்கொள்வதும், பொறுப்புக்கூறலும் அவசியம் என்பதை நான் அறிவேன்.

குற்றமிழைத்தவர்களை நீதியின் முன்நிறுத்தவேண்டும் என கடந்த வருடம் நான் எழுதியிருந்தேன்.

இதன்காரணமாக இம்முறை இலங்கையில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிற்கு உள்ளான தனிநபர்களிற்கு எதிராக நாங்கள் சமீபத்தில் இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதிக்க முடிந்தமை குறித்து திருப்தியடைகின்றேன்.

நீதி மற்றும் அமைதியை தொடர்ந்து பின்பற்றவேண்டியதன் அவசியத்தை இந்த புனிதமான நாள் நினைவூட்டுகின்றது.

நீடித்த நல்லிணக்கம் மற்றும் ஸ்திரதன்மையை அடைவதற்கு இலங்கையின் புதிய அரசாங்கத்துடனும், இலங்கையின் வடக்குகிழக்கில் உள்ள சிவில் சமூகஅமைப்புகள் மற்றும் அரசியல்  தலைவர்களுடன் இணைந்து நாங்கள் ஆக்கபூர்வமாக பணியாற்றிவருகின்றோம்.

https://www.virakesari.lk/article/214947

சாகும்வரை இந்த வலி இருந்துகொண்டேயிருக்கும்

3 weeks 4 days ago

கடந்த இரண்டு நாள்களாக வேலைக்குப் போகவில்லை. இன்றும் போகவில்லை. சுகவீனம் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் தான் நிற்கின்றேன். என் உடலில் சுகவீனம் எதுவுமில்லை. மனம் உள்ளுக்குள்ளே அழுதுகொண்டேயிருக்கின்றது. நாங்கள் வாங்கிக்கொண்டு வந்த வரம் இது. சாகும்வரை இந்த வலி இருந்துகொண்டேயிருக்கும்.

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அடிப்படையாக கொண்ட அரசியல் தீர்விற்கு ஆதரவு - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஹேர்ப் கொனாவே

3 weeks 4 days ago

Published By: RAJEEBAN

16 MAY, 2025 | 10:32 AM

image

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அடிப்படையாக கொண்ட அரசியல் தீர்வினை ஆதரித்து அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஹேர்ப் கொனாவே கருத்து வெளியிட்டுள்ளார்.

சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நியுஜேர்சியிலும் அமெரிக்கா முழுவதிலும் வாழும் தமிழ் அமெரிக்கர்களுடன் இணைந்து  இலங்கையின் இனமோதலின் போது கொல்லப்பட்ட அல்லது பலவந்தமாக காணாமலாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் நினைவுகளை நான் கௌரவிக்கின்றேன்.

தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்விற்காக நாங்கள் தொடர்ந்தும் பரப்புரை செய்கின்றோம்.

https://www.virakesari.lk/article/214860

Checked
Wed, 06/11/2025 - 01:54
வாழும் புலம் Latest Topics
Subscribe to வாழும் புலம் feed