Aggregator

கொழும்பு பேர வாவியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

1 month 1 week ago

(இராஜதுரை ஹஷான்)

உள்ளக விமான சேவையை அபிவிருத்தி செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்துள்ளது. ஆகவே உள்ளக விமான சேவைக்கு தனியார் துறையினர் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பு பேர வாவியை பயன்படுத்தி  நீர் விமான சேவையை ஆரம்பிக்கும் திட்டம்  கொழும்பு சினமன் லேக் ஹோட்டல் முனையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நேற்று வருகைத் தந்த சிறிய ரக நீர் விமானத்தை அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பாதுகாப்பு செயலாளர் சம்பத் துய்யகொந்த, ஜோன்ஸ் கீல்ஸ் குழுமம் மற்றும் சினமன் ஹோட்டல் குழுமத்தின் தலைவர் கிருஷான் பாலேந்திர ஆகியோர் வரவேற்றனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க,கொழும்பு துறைமுக நகரத்தை அண்மித்த வகையில் உள்ளக விமான சேவையை ஆரம்பிப்பதில் பாதுகாப்பு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பல பிரச்சினைகள் கடந்த காலங்களில் காணப்பட்டன.

சுமார் 12 ஆண்டுகால முயற்சியின் பயனாக பாதுகாப்பு அமைச்சின் முழுமையான கண்காணிப்புடன் இந்த உள்ளக விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உள்ளக விமான சேவையை அபிவிருத்தி செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்துள்ளது. ஆகவே உள்ளக விமான சேவைக்கு தனியார் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜோன்ஸ் கீல்ஸ் குழுமம் மற்றும் சினமன் ஹோட்டல் குழுமத்தின் தலைவர் கிருஷான் பாலேந்திர,கொழும்பு பேர வாவியை அண்மித்து உள்ளக விமானசேவையை ஆரம்பித்துள்ளமை சிறந்ததாகும்.

இந்த சேவை ஊடாக அனைவரும் பயனடைவார்கள்.குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் இலகுவானதாக அமையும்.சினமன் எயார் விமானம் பிரதானமாக கொழும்புக்கு வெளியில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பயணத்தை மேற்கொள்கிறது.

இருப்பினும் தற்போது கொழும்பு பேரா வாவியை அண்மித்து விமானசேவையை ஆரம்பித்துள்ளமை சிறந்ததாகும்.இந்த சேவை ஊடாக அனைவரும் பயனடைவார்கள்.குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் இலகுவானதாக அமையும்.

கொழும்பு நகரில் பிரதான சுற்றுலா ஹோட்டல்கள் அமையப்பெற்றுள்ளது.இந்த புதிய திட்டத்தின் ஊடாக சுற்றுலாத்துறை மேம்படும்.

உள்ளக விமான சேவைக்கும் புதிய அனுபவமாக அமையும்.ஆகவே இந்த புதிய சேவையானால் நாட்டின் சுற்றுலாத்துறை கைத்தொழில் அபிவிருத்தியடையும் என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுநிலை) சம்பத் துய்யகொந்த, இந்த திட்டத்துக்குரிய பாதுகாப்பு வசதிகள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து இந்த உள்ளக விமான சேவையை ஆரம்பிப்பதற்கு அனுமதியளித்துள்ளோம்.

இந்த திட்டத்தை மேலும் விரிவுப்படுத்துவதற்கு பாதுகாப்பு சட்டங்களுக்கமைய அனுமதி வழங்குவோம் என்றார்.

552666304_1290859939011319_4999689086854

553217298_1126057939114966_3304820325213

552935646_1355114189305331_3043923164704

552656862_737672326106975_90969196229741


கொழும்பு பேர வாவியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம் | Virakesari.lk

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 month 1 week ago
அரசியல் எதிரியை விட கொள்கை எதிரி மேல் என்று நினைக்கும் வாய்ப்பு உள்ளது. சீமான் அனைத்து இழப்புகளையும்(சுப முத்துக்குமார்,கலயாணசுந்தரம் ,ராஜீவ் காந்தி ,காளியம்மாள்) தாண்டி முன்னேறிக் கொண்டிருக்கிறார் என்பதையே கள நிலவரங்கள் காட்டுகின்றன.அதுதான் ஒரு உறுதியான தலைமைக்கு இருக்க வேண்டும்.

கிழக்கில் தொடரும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் மீதான அச்சம் ; வாணி விழா நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு!

1 month 1 week ago
இந்த செய்தியின் மூலம் எது கொழும்பான்? செய்திகள் இணைக்கும் போது அது பிரதி பண்ணப்பட்ட செய்தி தளத்தின் அதற்குரிய பக்கத்தின் இணைப்பை (Link) வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி

1 month 1 week ago
வாட்சப் செயலிக்கு மாற்று. Zoho ஸ்ரீதர் வேம்பு அவரது பதிவு வாட்சப் செயலிக்கு மாற்று. Zoho ஸ்ரீதர் வேம்பு அவரது பதிவு 🟢 அரட்டை (Arattai) மெசஞ்சர் அப்டேட் 🟢 இது எங்கள் நிதானமான பொறியியல் முயற்சியின் இன்னொரு சிறந்த உதாரணம். நாங்கள் நேரம் எடுத்துக்கொண்டது காரணம்: • குறைந்த விலை போன்களில் கூட செயல்பட வேண்டும் • குறைந்த இன்டர்நெட் வேகத்திலும் (8 kbps வரை சோதித்து வருகிறோம்) நன்றாக இயங்க வேண்டும் • மிகச்சிறந்த தனியுரிமை மற்றும் பாதுகாப்பை வழங்க வேண்டும் • அதே நேரத்தில் மிக எளிதாக பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் ✅ ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து அப்டேட் செய்கிறோம். நீங்கள் எதிர்பார்க்கும் பல அம்சங்கள் (features) இன்னும் ஒரு மாதத்தில் நிறைவடையும். அதோடு, அதிகமான பயனர்களை தாங்கும் சர்வர் அடிப்படை (infrastructure) வளர்ச்சியில் முதலீடு செய்து வருகிறோம். நான் தினசரி நேரடியாக எங்கள் எஞ்சினீயர்களுடன் இதைப் பற்றி கலந்துரையாடி வருகிறேன். 📢 இது முடிந்தவுடன், ஒரு பெரிய மார்க்கெட்டிங் பிரச்சாரம் (big marketing campaign) நடத்த இருக்கிறோம். அது உங்களுக்கு பிடிக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை. 🌍 எங்கள் அரட்டை மெசஞ்சர் உலகின் சிறந்த மெசேஜிங் அனுபவத்தை (best messaging experience) வழங்கும் என்ற எங்கள் உறுதி தொடர்கிறது. 👉 மேலும் அப்டேட்களுக்கு காத்திருங்கள்! --Sridhar Vembu CEO ZOHO Download link:- https://chat.arattai.in/app/download

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 month 1 week ago
போன‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் பின‌லுக்கு வ‌ந்த‌ தென் ஆபிரிக்கா மக‌ளிர் இந்த‌ உல‌க‌ கோப்பையில் முத‌ல் விளையாட்டில் ப‌டு சுத‌ப்ப‌ல்...............................

கிழக்கில் தொடரும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் மீதான அச்சம் ; வாணி விழா நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு!

1 month 1 week ago
இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு சரியான ட்றீட்மண்ட் தரப்படல் வேண்டும். இதற்கான நல்ல மருந்துகளை இஸ்ரேலிடமிருந்து இலங்கை வாங்கிக்கொள்ளவேண்டும்!

கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.

1 month 1 week ago
புஸ்ஸி (நல்லா வச்சான்யா பேரு😂) ஆனந்தை கைது செய்ய கூடுமாம். விஜை அரசியல் சரியான வழியில் செல்ல இது கடைசி வாய்ப்பாக இருக்கும் 🤣. ஆனால் ஒன்று நீங்கள் சொல்வது போல் ரசிகர் ஏறிய மரம் முறிந்து விழுந்தோ, ரசிகர்கள் கலவரம் செய்தோ தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக எப் ஐ ஆர் கூட சொல்லவில்லை. காரணம் கட்டுக்கடங்காத கூட்டம். அதை வேண்டும் என்றோ அல்லது அசட்டையாகவோ பொலிஸ் கட்டுப்படுத்த தவறியது. இது சதிக்கோட்பாடு அல்ல. பிளேட்டால் கீறினார்கள் இதர கதைகள்தான் ஆதாரம் இல்லாதவை. ஆனால் ஒரு பெரும் கூட்டத்தில் ஒரு நூறு பேர் இறங்கி தள்ளுமுள்ளு பட்டாலே, கூட்டம் கல்லைகலைய போதுமானதாக இருக்கும் என்பதும் உண்மையே. திமுகவின் மாபியாதனமும் தெரியும் என்பதால் இதில் நிச்சயம் ஒரு open mind அணுகுமுறை தேவை.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 month 1 week ago
தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் வ‌ந்த‌ கையோட‌ மைதான‌த்தை விட்டு போகின‌ம்.............பாக்கிஸ்தான் ம‌க‌ளிர் அடிச்ச‌ ஸ்கோர‌ தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் அடிப்பின‌மோ தெரியாது😁...................................

கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.

1 month 1 week ago
மரத்தின் உச்சாணிக்கொம்பில் ஏறிக்குந்தியிருந்துகொண்டு இந்த உலகமே எனக்கு கீழே என்று ரீல்ஸ் போடும் காக்கா கூட்டத்திற்கு காவல் துறையால் பாதுகாப்புக்கொடுத்திருக்க முடியாது. இந்திய விமானப்படை வேண்டுமென்றால் முயற்சிசெய்து பார்த்திருக்கலாம். அணில்குஞ்சுகளின் ஒவ்வொரு சதிக்கோட்பாட்டிற்குமான counter காணொளிகளாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. இவர்கள் எப்படியான ஒரு சமூக குப்பைகள் என்பதும் இப்படியான கும்பலிடம் ஒரு ஆட்சியதிகாரம் சென்றால் அதன் நிலை எப்படியிருக்குமென்பதும் நடுநிலையான மக்களுக்கு விளங்க ஆரம்பித்திருக்கிறது. மிகவிரைவில் இவர்கள் காணாமல் போவதுடன் இவர்களது தலைவர் பெரிய அணில் இப்போது head down coalition எவருடனாவது போனாலொழிய இனி அவருக்கு அரசியலெதிர்காலம் இல்லை. இந்த கும்பல் மிகவிரைவில் சினிமாவில் தனது அடுத்த நாயகனை தேடிப்போய்விடும். உண்மையில் பாவம் பெரிய அணில் சினிமாவும் அரசியலும் இரண்டு எதிரெதிர் தளங்கள் என்பதை புரியாமல் காலை விட்டுவிட்டார். சினிமாவில் மக்களை அதிகமாக சந்திக்காமல் கற்பனையான கதாபாத்திரங்கள் மூலம் மாஸ் காட்டி மக்கள்மனதில் இடம் பிடிக்கும் கனவுத்தொழிற்சாலை அது. அங்கே மக்களை நேரே சந்திக்காமல் திரைப்படம் மூலம் சந்திக்க சந்திக்க கிரேஸ் ஏறும். அரசியல் அப்படியே நேரெதிர் தன்மை கொண்டது இங்கே மக்களை நேரடியாக சந்த்தித்தால் தான் மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம் அதே நேரம் நடிகனாக உருவாக்கிய வேற்றுப்பிம்பம் மக்களை சந்திக்க சந்திக்க கலைய ஆரம்பிக்கும் பாவம் விஜய் 4 வது சந்திப்பிலேயே காலி. இனி என்ன பாஜகவை கூப்பிட்டு சம பந்தியில் உட்காரவைக்க வேண்டியதுதான்

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 month 1 week ago
ந‌ன்றி செம்பாட்ட‌ன் அண்ண‌🙏👍............... யாழில் இருக்கும் பெரிசுங்க‌ கூட‌ விளையாட்டு திரியில் ஜாலியா ப‌ம்ப‌ல் அடிக்க‌ எனக்கு மிக‌வும் பிடிக்கும்................அந்த‌க் கால‌த்தில் இருந்து ம‌க‌ளிர் கிரிக்கேட்டை பார்த்து வ‌ருகிறேன்................உட‌ல் நிலை ச‌ரி இல்லாட்டியும் இப்ப‌டியா திரிக்குள் வ‌ந்து சிரித்து எழுதுவ‌தால் என‌க்கு யோச‌னை மிக‌ மிக‌ குறைவு🙏...................... ந‌ன்றி அண்ணா🙏👍......................

கிழக்கில் தொடரும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் மீதான அச்சம் ; வாணி விழா நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு!

1 month 1 week ago
மட்டக்களப்பு முஸ்லீம் பகுதியில் உள்ள பிரதே செயலகம் ஒன்றில் உள்ள தமிழ் உத்தியோகத்தர்களுக்கு வாணி விழா நிகழ்வு செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் புரையோடிப் போயுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் தீவிரம் இன்னும் களையப்படவில்லை. இலங்கையில் எத்தனை அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் அரச திணைக்களங்களை ஆக்கிரமித்து நிற்கும் இஸ்லாமிய மத அடிப்படைவாதம் நீங்கியதாக தெரியவில்லை. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் பிரதேசங்களில் உள்ள பல அரச திணைக்களங்களில் இன்னும் இஸ்லாமிய மத அடைப்படைவாத குழுக்களின் ஆதிக்கம் மேலோங்கியே உள்ளது. அங்குள்ள அரச திணைக்களங்களில் பணியாற்றும் தமிழ் உத்தியோகத்தர்களால் நாடு முழுவதும் நடைபெறும் வாணி விழா நிகழ்வைக் கூட செய்யமுடியாத நிலை காணப்படுகிறது.ஏறாவூர் நகர பிரதேச செயலகம், காத்தான்குடி நகர பிரதேச செயலகம் உள்ளிட்ட பல அரச திணைக்களங்களின் தலைவர்கள் இன்றுவரை இஸ்லாமிய மத அடைப்படைவாதிகளுக்கு பயந்தே நிர்வாகம் செய்து வருகின்றனர். கடந்த காலங்களில் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் வாணி விழா நிகழ்வு செய்ததற்காக அது இஸ்லாமிய சரியா சட்டத்திற்கு எதிரானது என கூறி இஸ்லாமிய அடிப்படைவாத குழு ஒன்று அப்போதிருந்த பிரதேச செயலாளரை கடுமையாக அச்சுறுத்தியதோடு பிரதேச செயலக பகுதியில் குண்டுத் தாக்குதலையும் நடாத்தியிருந்தனர்.அன்றில் இருந்து இன்று வரை ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் வாணி விழா நிகழ்வு நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களின் ஆட்சியிலாவது ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் வாணி விழா நிகழ்வு செய்யலாம் என்ற எதிர்பார்ப்போடுபிரதேச செயலாளரிடம் அனுமதி கோரிய தமிழ் உத்தியோகத்தர்களுக்கு வழமை போல் இம்முறையும் அனுமதி கிடைக்கவில்லை. அரச திணைக்களங்கள் என்பது அரசின் சுற்று நிருபங்களுக்கு ஏற்ப செயற்படும் திணைக்களங்களாகும். இவ்வாறு இருக்கையில் ஏறாவூர் நகர பிரதேச செயலகம் போன்று இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களுக்கு பயந்து இன்றும் முஸ்லீம் பகுதிகளில் உள்ள பல திணைகள தலைவர்கள் செயற்பட்டு வருகின்றனர். அதற்கான ஒரு சிறந்த உதாரணமாக இந்த சம்பவத்தை கூறலாம். அனுர அரசு என்னதான் இலங்கையில் உள்ள அரச திணைக்களங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளதாக கூறினாலும் கிழக்கில் முஸ்லீம் பிரதேசங்களில் உள்ள பல அரச திணைக்கள தலைவர்களுக்கு இன்றுவரை சில மதவாத அடைப்படைவாத குழுக்களின் அச்சுறுத்தலை மீறி செயற்பட முடியாத நிலை காணப்படுகிறது என்பதே உண்மை கிழக்கில் தொடரும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் மீதான அச்சம் ; வாணி விழா நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு! - ஜே.வி.பி நியூஸ்

கிழக்கில் தொடரும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் மீதான அச்சம் ; வாணி விழா நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு!

1 month 1 week ago

மட்டக்களப்பு முஸ்லீம் பகுதியில் உள்ள பிரதே செயலகம் ஒன்றில் உள்ள தமிழ் உத்தியோகத்தர்களுக்கு வாணி விழா நிகழ்வு செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் புரையோடிப் போயுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் தீவிரம் இன்னும் களையப்படவில்லை. இலங்கையில் எத்தனை அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் அரச திணைக்களங்களை ஆக்கிரமித்து நிற்கும் இஸ்லாமிய மத அடிப்படைவாதம் நீங்கியதாக தெரியவில்லை.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் பிரதேசங்களில் உள்ள பல அரச திணைக்களங்களில் இன்னும் இஸ்லாமிய மத அடைப்படைவாத குழுக்களின் ஆதிக்கம் மேலோங்கியே உள்ளது.

கிழக்கில் தொடரும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் மீதான அச்சம் ; வாணி விழா நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு! | Fears Of Continued Islamic Extremism In The East

அங்குள்ள அரச திணைக்களங்களில் பணியாற்றும் தமிழ் உத்தியோகத்தர்களால் நாடு முழுவதும் நடைபெறும் வாணி விழா நிகழ்வைக் கூட செய்யமுடியாத நிலை காணப்படுகிறது.ஏறாவூர் நகர பிரதேச செயலகம், காத்தான்குடி நகர பிரதேச செயலகம் உள்ளிட்ட பல அரச திணைக்களங்களின் தலைவர்கள் இன்றுவரை இஸ்லாமிய மத அடைப்படைவாதிகளுக்கு பயந்தே நிர்வாகம் செய்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் வாணி விழா நிகழ்வு செய்ததற்காக அது இஸ்லாமிய சரியா சட்டத்திற்கு எதிரானது என கூறி இஸ்லாமிய அடிப்படைவாத குழு ஒன்று அப்போதிருந்த பிரதேச செயலாளரை கடுமையாக அச்சுறுத்தியதோடு பிரதேச செயலக பகுதியில் குண்டுத் தாக்குதலையும் நடாத்தியிருந்தனர்.அன்றில் இருந்து இன்று வரை ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் வாணி விழா நிகழ்வு நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களின் ஆட்சியிலாவது ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் வாணி விழா நிகழ்வு செய்யலாம் என்ற எதிர்பார்ப்போடுபிரதேச செயலாளரிடம் அனுமதி கோரிய தமிழ் உத்தியோகத்தர்களுக்கு வழமை போல் இம்முறையும் அனுமதி கிடைக்கவில்லை.

அரச திணைக்களங்கள் என்பது அரசின் சுற்று நிருபங்களுக்கு ஏற்ப செயற்படும் திணைக்களங்களாகும். இவ்வாறு இருக்கையில் ஏறாவூர் நகர பிரதேச செயலகம் போன்று இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களுக்கு பயந்து இன்றும் முஸ்லீம் பகுதிகளில் உள்ள பல திணைகள தலைவர்கள் செயற்பட்டு வருகின்றனர். அதற்கான ஒரு சிறந்த உதாரணமாக இந்த சம்பவத்தை கூறலாம்.

அனுர அரசு என்னதான் இலங்கையில் உள்ள அரச திணைக்களங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளதாக கூறினாலும் கிழக்கில் முஸ்லீம் பிரதேசங்களில் உள்ள பல அரச திணைக்கள தலைவர்களுக்கு இன்றுவரை சில மதவாத அடைப்படைவாத குழுக்களின் அச்சுறுத்தலை மீறி செயற்பட முடியாத நிலை காணப்படுகிறது என்பதே உண்மை

கிழக்கில் தொடரும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் மீதான அச்சம் ; வாணி விழா நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு! - ஜே.வி.பி நியூஸ்

கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.

1 month 1 week ago
என்னது? வருகிறார்களா? வந்து ஆராய்ந்து, பேட்டியும் கொடுத்து விட்டு போய் இரெண்டு நாள் ஆகிறது. வாட் ப்ரோ…இட்ஸ் வெரி ராங் ப்ரோ… உங்களின் கருத்தில் இருந்த பொருளுக்கான பதிலை ரசோ அண்ணா தந்துள்ளார். நாலு பேர் சீரியசாக பேசி கொண்டிருக்கும் நடுவீட்டில் யாராவது அதை தூக்கி கொண்டு வந்து போடுவார்களா, இல்லைத்தானே😂

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 month 1 week ago
கருணா இயக்கத்தை விட்டு விலகிய பின்னும்…. சுப முத்துகுமார் கொலைக்கு சற்று முன் சீமானுக்கு ஏற்பட்டதை போன்றதுமான… ஒரு இக்கட்டு விஜைக்கு ஏற்பட்டுள்ளது என்கிறீர்கள். வாய்ப்புகள் உள்ளது.

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

1 month 1 week ago
வணக்கம் வாத்தியார் . ........! பாடகி : பவதாரணி பாடகா் : காா்த்திக் இசையமைப்பாளா் : இளையராஜா....! ஆண் : ஒளியிலே தொிவது தேவதையா ஒளியிலே தொிவது தேவதையா உயிாிலே கலந்தது நீ இல்லையா இது நெசமா நெசம் இல்லையா நினைவுக்கு தொியலையா கனவிலே நடக்குதா கண்களும் காண்கிறதா காண்கிறதா பெண் : சின்ன மனசுக்கு விளங்கவில்லையே நடப்பது என்னென்ன என்ன எண்ணியும் புாியவில்லையே நடந்தது என்னென்ன ஆண் : கோவில் மணியை யாரு அடிக்கிறா தூங்கா விளக்க யாரு ஏத்துறா ஒரு போதும் அணையாம நின்று ஒளிரனும் ஆண் : புத்தம் புதியதோா் பொண்ணு சிலை ஒன்னு குளிக்குது மஞ்சளிலே பூவ போல ஓா் சின்ன மேனியும் கலந்தது பூவுக்குள்ளே பெண் : அறியா வயசு கேள்வி எழுப்புது நடந்தா தொியும் எழுதி வச்சது எழுதியதை படிச்சாலும் எதுவும் புாியல ........! --- ஒளியிலே தொிவது தேவதையா ---