Aggregator
யாழ். பருத்தித்துறையில் கடற்படை புலனாய்வு பிரிவு பின் தொடர்வதாக சிஜடி யினர் நீதிமன்றில் தெரிவிப்பு
யாழ். பருத்தித்துறையில் கடற்படை புலனாய்வு பிரிவு பின் தொடர்வதாக சிஜடி யினர் நீதிமன்றில் தெரிவிப்பு
Published By: Vishnu
04 Aug, 2025 | 02:32 AM
யாழ். பருத்திதுறையில் காணாமல் போன தனிநபர்கள் குறித்து விசாரிக்கச் சென்ற குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளை கடற்படை புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் பின்தொடர்ந்து வருவதாக குற்றப் புலனாய்வுத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறையில் காணாமல்போன தொடர்புடைய ஒரு விஷயத்தை விசாரிக்க தங்கள் துறைஅதிகாரிகள் சென்றபோது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் நான்கு நபர்கள் அவர்களைப் பின்தொடர்ந்ததாகவும் இவர்களை நிறுத்தி சோதனை செய்ததில் அவர்கள் கடற்படை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் என்பது உறுதி செய்யப்பட்டதாகவும்.
அதனடிப்படையில் பின்தொடர்ந்த கடற்படை புலனாய்வு அதிகாரிகளிடம் விசாரணை செய்தபோது குற்ற புலனாய்வு பிரிவினரை பின்தொடருமாறு கடற்படை புலனாய்வுப் பிரிவின் லெப்டினன்ட் கமாண்டர் உத்தரவு பிறப்பித்ததாக அவர்கள் குற்றப் புலனாய்வுத் துறையிடம் தெரிவித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்திற்கு மேலும் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா ஒரு குழந்தைக்கு 1500 டொலர்!
செம்மணி மனிதப் புதைகுழியின் சர்வதேச விசாரணைக்கு சோமரத்ன ராஜபக்ச தயார் : அநுரவிற்கு பறந்த கடிதம்
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையில் சாரதி அனுமதி பத்திரத்தை எவ்வாறு பெறலாம்?
வாழ்வோரும் இறந்தோரின் எலும்புகளும் நீதியையே, மாற்றத்தையே விரும்புகின்றன — கருணாகரன் —
வாழ்வோரும் இறந்தோரின் எலும்புகளும் நீதியையே, மாற்றத்தையே விரும்புகின்றன — கருணாகரன் —
வாழ்வோரும் இறந்தோரின் எலும்புகளும் நீதியையே, மாற்றத்தையே விரும்புகின்றன
— கருணாகரன் —
யாழ்ப்பாணம் – செம்மணிப்பகுதியில் அகழப்படும் மனிதப்புதைகுழிகளிலிருந்து இதுவரை(30.07.2025) 115 க்கு மேற்பட்டமனித எலும்புக்கூடுகள்(எச்சங்கள்) மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் பெண்கள், குழந்தைகள் அல்லது சிறார்களின் எலும்புத் தொகுதிகளும் இனங்காணப்பட்டுள்ளன. இதயத்தை உலுக்கும் விதமாக இருப்பது, இந்த எலும்புக்கூடுகளோடு குழந்தைகளின் பாற்புட்டிகளும் விளையாட்டுப்பொருட்களும் சேர்ந்து கிடப்பது. அகழ்வுப் பணிகள் தொடர்கின்றன. இன்னும் இன்னும் என்னென்னவெல்லாம் மீட்கப்படுமோ? என்று தெரியவில்லை. ஆனால், ஒன்றுமட்டும் உண்மை. இந்த மீட்பில் ஒரு கூட்டுக் கொலை நடந்திருக்கிறது என்பது நிரூபணமாகியுள்ளது. இருந்தாலும் இதையிட்டு அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் நாம் உடனடியாக வந்து விடமுடியாது. காரணம், இது முறைசார் ஆராய்ச்சிக்குரியது. முறையான ஆராய்ச்சிக்குப் பின்னரே தெளிவான முடிவுகளை- தீர்வை நோக்கிச் செல்லமுடியும். மட்டுமல்ல, சட்டம், நீதி, நீதிகோரல் எனப் பல அடுக்குகளோடு தொடர்புபட்டது. என்பதால் நிதானமாகவே இதைக் கையாள வேண்டும்.
இதுவரையில் மீட்கப்பட்ட எலும்புத் தொகுதிகள் சில உண்மைகளைச் சொல்லவிளைகின்றன. சம நேரத்தில் சில கேள்விகளையும் எழுப்புகின்றன.
உண்மைகள்:
1. குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். செம்மணியில் பலர் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர் என்று நீண்டகாலமாகவே தெரிவிக்கப்பட்டு வந்த உண்மை நிரூபணமாகியுள்ளது.
2. மீட்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகளோடு அடையாளம் காணப்பட்டுள்ள உடை, பிள்ளைகளின் விளையாட்டுப்பொருட்கள் போன்றவை எந்தக் காலகட்டத்துக்குரியவை என்பதைச் சொல்கின்றன. அல்லது அவற்றை வைத்து காலகட்டத்தை ஓரளவு தீர்மானிக்கலாம். முறைசார் ஆய்வுகளுக்கு இவையும் வலுச்சேர்க்கக்கூடியன. ஆகவே கொலைகள் நடந்த காலத்தைத் தெளிவாக அடையாளம் காண முடியும்.
3. இவை அரசியல் ரீதியான படுகொலைகள்.
4. இந்தக் கொலைகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.
5. மிகப் பெரிய துயரம். மிகப் பெரிய அநீதி. மிகப்பெரிய அவலம். மிகக்கொடிய செயல். மனச்சாட்சியை உலுக்கும் இந்த விடயம்.
6. கொல்லப்பட்டவர்களை வெறுமனே இறந்தவர்கள் என்ற கணக்கில் சேர்க்க முடியாது. அப்படிச்சேர்த்தால், அப்படிச் சேர்ப்பதற்கு அனுமதித்தால் அது கொல்லப்பட்டோருக்கு இழைக்கும் அநீதியாகும். கொலைகளுக்கு உடந்தையாகும்.
7. இது மிக மோசமானமனித உரிமை மீறல் செயல். மக்களின் வாழும் உரிமை மறுதலிக்கப்பட்டுள்ளது. ஆகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் வழங்க வேண்டும்.
இப்படி இந்த உண்மைகளின் பட்டியல் நீள்கிறது. அடுத்த்தாக இது குறித்து எழுகின்ற கேள்விகள் –
1. இந்தப் புதைகுழிகளைக் குறித்து சமூகத்தின் புரிதல் என்ன? இந்தக் கேள்வி ஏன் எழுகின்றதென்றால், தினமும் மீட்கப்படும் எலும்புக்கூடுகள் வெறுமனே புள்ளிவிவரங்களாக முடிந்து விடுவதாகவே தெரிகிறது. அதைக் கடந்து, இவை சமூகத்தில் வேறு எத்தகைய உணர்வலைகளையும் ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. அரசியற்கட்சிகள், ஊடகங்கள், மனிதஉரிமை அமைப்புகள், ஆர்வலர்கள் போன்ற தரப்புகளும் சரியான அவதானத்தைக் கொள்ளாமலே உள்ளன. அல்லது இது குறித்து எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது? இந்தப்பிரச்சினையை எப்படிக்கையாள்வது என்பது தொடர்பில் அவற்றுக்குக் குழப்பங்கள் இருக்கலாம். ஆனாலும் இந்தத் தடுமாற்றமும் குழப்பமும் தாமதமும் ஏன்?
2. புதைகுழிகளில் மீட்கப்படும் என்புக்கூடுகள் சொல்லுகின்ற சேதிகளின் அடிப்படையில் நோக்கினால், இவற்றில் குடும்பங்களாகக் கொல்லப்பட்டிருக்கக் கூடிய சூழலும் உண்டு. அல்லது, தாய் அல்லது தந்தை அல்லது கொல்லப்பட்டோருடன் கூட இருந்த சிறுவர்கள், குழந்தைகளும் சேர்த்துக்கொலை செய்யப்பட்டிருக்கலாம். அப்படியென்றால், அது யார்? அதைக் கண்டறிவதில் ஏன் தாமதங்கள்? குடும்பங்களாகக் கடத்தப்பட்ட, கைது செய்யப்பட்ட, காணாமலாக்கப்பட்ட விவரங்களைத் தேடினால் இதைக் கண்டறியக்கூடியதாக இருக்கும். ஆனால், அப்படியான சம்பவங்கள் கடந்த காலத்தில் பெருமளவில் நடந்திருக்கிறதா? அதற்கான முறைப்பாடுகள் எங்காவது பதிவு செய்யப்பட்டுள்ளனவா? என்பது பற்றிச் சரியாகத் தெரியவில்லை. அப்படியில்லை என்றாலும், அவ்வாறு காணாமலாக்கப்பட்டோர் அல்லது கைது செய்யப்பட்டோர் பற்றி சம்மந்தப்பட்ட உறவினர்கள் எவராவது இப்போது கூட முறையிடலாம். விவரங்களை வெளியிடலாம். அது ஏன் நிகழாதிருக்கிறது?
3. இந்தப் புதைகுழி விடயம்1996 லிருந்து நீடிக்கிறது. அதாவது, செம்மணிப்பகுதியில் 600 க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டது. ஏறக்குறைய அது மெய்யென இன்றைய இந்த எலும்புத்தொகுதிகளின் மீட்புகள் உரைக்கின்றன. என்றால், இதைச் சர்வதேச மட்டத்திலும் உள்நாட்டிலும் நீதிக்கான கோரிக்கையாக ஏன் முன்னிறுத்த முடியாமலுள்ளது?
4. 100 க்கு மேற்பட்ட மனித எலும்புத்தொகுதிகளும் அவற்றோடான எச்சங்களும் மீட்கப்பட்டன என்ற சேதிக்கு அப்பால், இது தொடர்பாக அரசாங்கம் மேற்கொள்ளப்போகும் நடவடிக்கைகள் என்னவாக இருக்கவுள்ளது? இந்த அகழ்வுக்கு அரசாங்கம், நீதி அமைச்சின் வழியாக ஒரு தொகை பணத்தை உத்தியோகபூர்வமாக வழங்கியுள்ளது. என்றால், இந்த அகழ்வை அரசாங்கம் ஆதரிக்கிறது என்றே அர்த்தமாகும். அப்படியென்றால், அடுத்த கட்டமாக இதைப்பற்றிய முறைசார் ஆய்வுக்கும் அரசாங்கம் ஒத்துழைக்கும் எனத் தெரிகிறது. அந்த முறைசார் ஆய்வு சர்வதேச நிபுணத்துவத்துடன் நடக்குமா? உள்நாட்டு மட்டத்தில் நடக்குமா? என்பது கேள்வியே! சரி, அப்படித்தான் ஆய்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வந்தால், அடுத்த கட்டமாக இவற்றோடு தொடர்பான ஏனைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும். முக்கியமாக கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இது எந்தளவுக்குச் சாத்தியமாகும்? இதைச்சாத்தியப்படுத்துவது எப்படி? அதில் எத்தகைய பங்களிப்புகளை – தூண்டல்களை – யாரெல்லாம் செய்யவேண்டும்?
5. செம்மணிப் புதைகுழியை மட்டும் கவனப்படுத்தப்பட வேண்டுமா? மன்னார், கொக்குத்தொடுவாய் மற்றும் கிழக்குமாகாணத்தில் பல்வேறு இடங்கள் என அடையாளம் காணப்பட்ட – சந்தேகிக்கப்படும் புதைகுழிகளைப் பற்றிய கரிசனைகள் எந்தளவுக்கு உள்ளன? அவற்றில் புதைக்குப்பட்ட உண்மைகளுக்கும் புதைக்கப்பட்டோருக்குமானா நீதி என்ன? அதை எப்படிப் பெறுவது? அதற்கான குரல்கள் ஏன் கூட்டாக முன்னெடுக்கப்படாமல் உள்ளன?
6. இந்த மாதிரியான புதைகுழிகளைக் குறித்து சிங்கள, முஸ்லிம், மலையக மக்களின் புரிதல் – அக்கறைகள் என்ன? சிங்கள, ஆங்கில ஊடகங்களின் கவனம் எப்படியுள்ளது? ஏன் இவை கவனிக்கப்படாமல் உள்ளன? அல்லது மந்தமாக இருக்கின்றன?
7. சர்வதேச சமூகம் என்று சொல்லப்படும் தரப்புகள் இவற்றைக் குறித்து எந்தளவுக்கு அக்கறை கொள்கின்றன? அந்த அக்கறையின் அளவும் பயனும் என்ன?
இப்படிப் பல கேள்விகள்எழுகின்றன.
இப்பொழுது நம்முன்னுள்ள பிரச்சினை, இந்த உண்மைகளை நாம் எப்படி முன்கொண்டு செல்லப்போகிறோம்? அதாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியாக இதை எப்படி மாற்றப்போகிறோம்? இரண்டாவது, இந்தக் கேள்விகளுக்கான பதிலை எப்படிக் காணப்போகிறோம்? இதற்கு ஏனைய தரப்புகளை எப்படி ஒருங்கிணைக்கலாம்? அதற்கான பொறிமுறைகள், செயற்பாட்டுத்திட்டங்கள் என்ன?
போர் முடிந்து விட்டது. ஆட்சிகள்பல மாறி விட்டன. காலம் நீண்டு 15 ஆண்டுகள் கடந்து விட்டன. தீர்வுக்கான பரிந்துரைகள் பல தரப்புகளாலும் முன்வைக்கப்பட்டன. பல்வேறு யோசனைகள் பரிசீலிக்கப்பட்டன. ஆனாலும் துயரும் பிரச்சினைகளும் முடியவில்லை.
போர் முடிந்தால் நாட்டின் பிரச்சினைகள் எல்லாம் தீரும் என்றே பெரும்பாலான மக்களும் நம்பினார்கள். அல்லது அப்படி நம்ப வைக்கப்பட்டனர். குறிப்பாக தென்பகுதி மக்களின் நம்பிக்கை அதுவாகவே இருந்தது.
ஆனால், போர் முடிந்த பிறகும் பிரச்சினைகள் தீரவில்லை. எல்லாமே கொதிநிலையில்தான் உள்ளன. குண்டுகளும் துப்பாக்கிகளும் வெடிக்கவில்லை. கொலை மற்றும் உயிர் பற்றிய அச்சம் குறைந்துள்ளதே தவிர, இதற்கு அப்பால் வேறெதுவும் நடக்கவில்லை. பொருளாதார நெருக்கடி தணியவே இல்லை. அரசியற் பிணக்குகள் – அதிகாரப் போட்டிகள், அதிகாரப் பகிர்வுப் பிரச்சினைகள் அப்படியேதான் உள்ளன.
அப்படியென்றால், அடிப்படையில் பெருங்கோளாறு இருக்கிறது என்றுதானே அர்த்தம்? உண்மையும் அதுதான்.
இலங்கையை மீட்க வேண்டுமானால், இலங்கையை சரியாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் என்றால், அடிப்படைகளைச் சரியாக்க வேண்டும். அடிப்படைகள் பல வழிகளிலும் தகர்க்கப்பட்டுள்ளன. அதைச் சரிப்படுத்தாத வரையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மாற்றம் – முன்னேற்றம் – தீர்வு எதுவும் கிட்டப்போவதில்லை.
செம்மணிப் புதைகுழி உள்ளிட்ட விடயங்கள் அப்படிச் சீர்ப்படுத்த வேண்டியவற்றில் ஒன்று. இப்படி ஒவ்வொன்றாகச் சீர்ப்படுத்தினால்தான் நாட்டில் மாற்றம் ஏற்படும். குறிப்பாக நீதியுணர்ச்சி வலுத்து, நடைமுறையாக வேண்டும். அரசியலில் நீதியுணர்ச்சி என்பதற்கு ஏராளம் வியாக்கியானங்கள் உண்டு. அப்படி ஒன்று இல்லை என்ற கருத்தும் உண்டு. ஆனாலும் சட்டமும் நீதியும் மக்களின் நம்பிக்கையோடும் நாட்டின் நலனோடும் சம்மந்தப்பட்டது. அதை நோக்கிச் செல்ல வேண்டும் என்றே செம்மணி என்புக்கூடுகளும் வலியுறுத்துகின்றன.
ஆம், உயிரோடு உள்ளவர்கள் மட்டுமல்ல, இறந்தவர்களின் (கொல்லப்பட்டவர்களின்) எலும்புக்கூடுகளும் நீதியை – மாற்றத்தை – யே விரும்புகின்றன. அதுவே தேவை.
'ஒருவனுக்கு ஒருத்தி' மனிதனின் இயல்பான குணமா? கலாசாரங்களில் பலதார மணம் எப்படி இருந்தது?
வனவிலங்கு திணைக்களத்திற்குச் சொந்தமான காணியினை சீதையம்மன் ஆலயத்திற்கு வழங்கத் தீர்மானம்!
வனவிலங்கு திணைக்களத்திற்குச் சொந்தமான காணியினை சீதையம்மன் ஆலயத்திற்கு வழங்கத் தீர்மானம்!
வனவிலங்கு திணைக்களத்திற்குச் சொந்தமான காணியினை சீதையம்மன் ஆலயத்திற்கு வழங்கத் தீர்மானம்!
வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதையம்மன் ஆலையத்திற்கு வனவிலங்கு திணைக்களத்திற்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணியினை ஆலயத்திற்கு பெற்றுக்கொடுக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்தஹேரத் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தியானசாலை மண்டபத்தை திறந்து வைத்து உறையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”இந்த சீதையம்மன் ஆலயம் வரலாற்று சிறப்புமிக்கது. இந்தியாவிலிருந்து அநேகமான பக்த அடியார்கள் வழிபாடுவதற்காக இந்த ஆலயத்திற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். நாளுக்கு நாள் இங்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
இன்று இலங்கைக்கு வருகின்ற வெளிநாட்டு பயணிகைளை எடுத்துகொண்டால் இந்தியாவில் இருந்து தான் அதிகமான பயணிகள் வருகை தருகிறார்கள். வழிபாட்டுத் தலங்களை பார்வையிடவே அதிகமானோர் நாட்டுக்கு வருகின்றார்கள். அதிலும் சீதையம்மன் ஆலயம், கோணேஸ்வர ஆலையம், கதிர்காமம், போன்ற புனித ஸ்தலங்களுக்கு வழிபாடுகளை மேற்கொள்ள அதிகளவில் வருகை தருகின்றனர்.
எமது பொருளாதார நிலையை மாற்றியமைக்க வேண்டுமானால் வெளிநாட்டு பயணிகள் வருவதை மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டும். இவ் வருடத்தில் 30 இலட்சம் வெளிநாட்டு பயணிகளை ஈர்க்க வேண்டும் என்பதே எமது இலக்காகும்.
தற்பொழுது 1.3சதவீதமான வெளிநாட்டு பயணிகள் வருகை தந்துள்ளனர் அதிலும் அதிகமாக வருகின்றவர்கள் இந்திய நாட்டை சேர்ந்தவர்கள்.
வெளிநாட்டு பயணிகளின் வருகையால் கடந்த ஆறு மாதகாலப்பகுதியில் 3.7 பில்லியன் டொலர்கள இலாபமாக கிடைத்துள்ளது. இந்த வருடத்திற்குள் பில்லியன் 7.5 டொலர் இலாபத்தை பெற்றால் பொருளாதாரத்தை அதிகரித்து கொள்ள முடியும்.
அதிகமான அடியார்களை இந்தியாவிருந்து இந்த சீதையம்மன் ஆலையத்திற்கு அழைத்து வரும் நோக்கில் இந்த ஆலயத்தினை மேலும் அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளோம்.
அத்தோடு இந்த பகுதியில் அதிகமான சுற்றுலா விருந்தகங்கள் அமைந்துள்ளது இந்த பிரதேசத்தை பிரதிநிதித்துவம் படுத்தி இராமயண வரலாற்றை இனைத்த வெளிநாட்டவர்கள் எதிர்வரும் காலங்களில் இங்கு வருகை தருவார்கள். மேலும் பல அபிவிருத்தி திட்டங்களை நுவரெலியா பிரதேசத்தி்ற்கு மேற்கொள்ளும் போது இந்த பிரதேச மக்களின் பொருளாதாரத்தை அதிகரிக்க முடியும்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கின் கல்வித் துறை பின்னடைய நிர்வாக பிரச்சனையே காரணம்!
வடக்கின் கல்வித் துறை பின்னடைய நிர்வாக பிரச்சனையே காரணம்!
வடக்கின் கல்வித் துறை பின்னடைய நிர்வாக பிரச்சனையே காரணம்!
adminAugust 4, 2025
வட மாகாணத்தில் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாக பிரச்சனையே காரணமாக இருப்பதாக தெரிவித்த, பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய விரைவில் கல்வி நிர்வாக அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி தீர்வினை காண இருப்பதாகவும் தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட கல்வி நிலைமை மற்றும் கல்வி மறு சீரமைப்பு தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு நேற்று (03.08.25) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் வவுனியா மாவட்ட கல்விசார் திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது.
ஆசிரியர்கள், அதிபர்கள் பற்றாக்குறை அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆசிரியர் தொழிற்சங்கங்கள், அதிபர் தொழிற்சங்கங்கள், கல்வி நிர்வாக அதிகாரிகள் சங்கம் மற்றும் பாடசாலை மட்டங்களில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அதிபர்கள், ஆசிரியர்கள் சிலரும் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.
இக்கருத்துக்களை செவிமடுத்த பிரதமர் கருத்து தெரிவித்த போது,
“ஆசிரியர் நியமனங்கள் கடந்த ஐந்து வருடங்களாக வழங்கப்பட முடியாமல் இருப்பதற்கு அபிவிருத்தி உத்தியோதர்களாக உள்வாங்கப்பட்டவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டதன் பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அவ் வழக்கு விசாரணையில் இருப்பதே காரணம். விரைவில் இதற்கான தீர்ப்பு கிடைக்கும் என நம்புகின்றேன். அதன் பின்னர் ஆசிரியர் நியமனங்களை வழங்கவுள்ளோம். 2
“கல்வி மாணவர்களுக்கானது. அதனை நாம் சரியாக வழங்க வேண்டும். 50 மாணவர்களுக்கு குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக கவனம் செலுத்தப்படும். வட மாகாணத்தில் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாக பிரச்சனையே காரணம். விரைவில் கல்வி நிர்வாக அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி தீர்வினை காண இருக்கின்றேன் எனத் தெரிவித்தார்.
கருத்து படங்கள்
செம்மணி மனிதப் புதைகுழியின் சர்வதேச விசாரணைக்கு சோமரத்ன ராஜபக்ச தயார் : அநுரவிற்கு பறந்த கடிதம்
பிரித்தானிய நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்ற நூல்களை வன்பிரதியாகப் யாழ். நூலகத்திற்கு பெற்றுக்கொள்ள நடவடிக்கை!
பிரித்தானிய நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்ற நூல்களை வன்பிரதியாகப் யாழ். நூலகத்திற்கு பெற்றுக்கொள்ள நடவடிக்கை!
பிரித்தானிய நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்ற நூல்களை வன்பிரதியாகப் யாழ். நூலகத்திற்கு பெற்றுக்கொள்ள நடவடிக்கை!
adminAugust 4, 2025
யாழ்ப்பாண நூலகம் தொடர்பில் தான் முன் வைத்த வேண்டுகோள்களை செயற்படுத்தத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள பிரதமர் பூரண சம்மதத்தை வழங்கியுள்ளார் என யாழ் . மாநகர சபை உறுப்பினர் சு. கபிலன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பிராந்தியங்கள் சார்ந்து 1800 கள் தொடக்கம் 1950 வரையான காலப்பகுதிக்குட்பட்டு வெளியிடப்பட்ட அல்லது சேகரித்து பாதுகாக்கப்பட்டு தற்போது பெரிய பிரித்தானியாவினுடைய நூலகத்தில் இலத்திரனியல் பிரதியாக்கம் செய்யப்பட்டுள்ள நூல்களை யாழ்ப்பாண நூலகத்திலிருந்தும் கையாளக்கூடிய வகையில் இணையவழியில் இணைப்பித்தல்.
மற்றும் யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பிராந்தியங்கள் சார்ந்து 1800 கள் தொடக்கம் 1950 வரையான காலப்பகுதிக்குட்பட்டு வெளியிடப்பட்ட அல்லது சேகரித்து பெரிய பிரித்தானியாவினுடைய நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்ற நூல்களை வன்பிரதியாகப் பெற்றுக்கொள்ளல் அல்லது வன்பிரதியாக்கம் செய்து பெற்றுக்கொள்ளல்.
அத்துடன் நெதர்லாந்து பல்கலைக்கழகங்களிலும் எமது நூல்கள் இருப்பதாக அறியக்கிடக்கிறது. அவை தொடர்பிலும் உரிய தகவல்கள் ஆதார பூர்வமாகக் கிடைக்கப்பெற்றதும் கவனம் செலுத்தப்படும்.
இவற்றின் மூலமாக எமது யாழ்ப்பாண நூலகத்தில் 1981 ல் எரித்து அழிக்கப்பட்ட சில அரிய நூல்கள் மற்றும் ஆவணங்களை மீளப்பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்திருந்த பிரதமரிடம் கோரியுள்ளார்.