Aggregator

யாழ். பருத்தித்துறையில் கடற்படை புலனாய்வு பிரிவு பின் தொடர்வதாக சிஜடி யினர் நீதிமன்றில் தெரிவிப்பு

1 month 2 weeks ago
Published By: Vishnu 04 Aug, 2025 | 02:32 AM யாழ். பருத்திதுறையில் காணாமல் போன தனிநபர்கள் குறித்து விசாரிக்கச் சென்ற குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளை கடற்படை புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் பின்தொடர்ந்து வருவதாக குற்றப் புலனாய்வுத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறையில் காணாமல்போன தொடர்புடைய ஒரு விஷயத்தை விசாரிக்க தங்கள் துறைஅதிகாரிகள் சென்றபோது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் நான்கு நபர்கள் அவர்களைப் பின்தொடர்ந்ததாகவும் இவர்களை நிறுத்தி சோதனை செய்ததில் அவர்கள் கடற்படை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் என்பது உறுதி செய்யப்பட்டதாகவும். அதனடிப்படையில் பின்தொடர்ந்த கடற்படை புலனாய்வு அதிகாரிகளிடம் விசாரணை செய்தபோது குற்ற புலனாய்வு பிரிவினரை பின்தொடருமாறு கடற்படை புலனாய்வுப் பிரிவின் லெப்டினன்ட் கமாண்டர் உத்தரவு பிறப்பித்ததாக அவர்கள் குற்றப் புலனாய்வுத் துறையிடம் தெரிவித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்திற்கு மேலும் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/221733

யாழ். பருத்தித்துறையில் கடற்படை புலனாய்வு பிரிவு பின் தொடர்வதாக சிஜடி யினர் நீதிமன்றில் தெரிவிப்பு

1 month 2 weeks ago

Published By: Vishnu

04 Aug, 2025 | 02:32 AM

image

யாழ். பருத்திதுறையில் காணாமல் போன தனிநபர்கள் குறித்து விசாரிக்கச் சென்ற குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளை கடற்படை புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் பின்தொடர்ந்து வருவதாக குற்றப் புலனாய்வுத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறையில் காணாமல்போன தொடர்புடைய ஒரு விஷயத்தை விசாரிக்க தங்கள் துறைஅதிகாரிகள் சென்றபோது  இரண்டு மோட்டார் சைக்கிள்களில் நான்கு நபர்கள் அவர்களைப் பின்தொடர்ந்ததாகவும் இவர்களை நிறுத்தி சோதனை செய்ததில் அவர்கள் கடற்படை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் என்பது உறுதி செய்யப்பட்டதாகவும்.

அதனடிப்படையில் பின்தொடர்ந்த கடற்படை புலனாய்வு அதிகாரிகளிடம் விசாரணை செய்தபோது குற்ற புலனாய்வு பிரிவினரை பின்தொடருமாறு கடற்படை புலனாய்வுப் பிரிவின் லெப்டினன்ட் கமாண்டர் உத்தரவு பிறப்பித்ததாக அவர்கள் குற்றப் புலனாய்வுத் துறையிடம் தெரிவித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்திற்கு மேலும் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/221733

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

1 month 2 weeks ago
கேப்டனாக தடுமாறும் கில்: ஆதிக்கம் செலுத்திய இந்தியா வெகுமதியை தவறவிடக் காரணமான தவறுகள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இங்கிலாந்தின் ஜோ ரூட் - ஹாரி புரூக் இணை கட்டுரை தகவல் தினேஷ் குமார் பிபிசி தமிழுக்காக 4 ஆகஸ்ட் 2025, 02:01 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஆண்டர்சன்–டெண்டுல்கர் தொடரில் இதுவரை இந்தியா 31 செஷன்களை கைப்பற்றியுள்ளது. ஆனால், 20 செஷன்களை மட்டும் வெற்றி கொண்ட இங்கிலாந்து அணி தொடரில் 2–1 என முன்னிலை வகிக்கிறது. இந்தியா சிறப்பான கிரிக்கெட் விளையாடியும் அதற்கான வெகுமதியை பெற முடியாததற்கு முக்கிய தருணங்களில் செய்யும் தவறுகளே காரணம். ஓவல் டெஸ்டிலும் அப்படிப்பட்ட சில தவறுகள்தான் ஆட்டத்தை ஐந்தாம் நாள் வரை கொண்டுசென்றுள்ளன. வெற்றிக்கு 324 ரன்கள் தேவை என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் இன்னிங்ஸை டக்கெட்டும் போப்பும் தொடர்ந்தனர். மேகமூட்டத்தையும் ஈரப்பதத்தையும் பயன்படுத்திக் கொண்டு, சிராஜும் ஆகாஷ் தீப்பும் நல்ல ரிதத்தில் பந்துவீசினர். குறிப்பாக டக்கெட்டுக்கு எளிதாக பவுண்டரிகள் கொடுத்துவிடக் கூடாது என்பதில் உறுதியுடன் இருந்தனர். எதிர்பார்த்த வேகத்தில் ரன் குவிக்க முடியவில்லை என்ற அழுத்தத்தில், பிரசித் கிருஷ்ணாவின் முழு நீளப் பந்தை கவர் டிரைவ் விளையாட முயன்று, இரண்டாவது ஸ்லிப்பில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதிரடி தொடக்க வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில், இன்னிங்ஸை கட்டியெழுப்ப வேண்டிய சுமை போப், ரூட் ஆகியோரின் தலையில் இறங்கியது. பிரசித் கிருஷ்ணா ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசிய போப், அடுத்த ஓவரிலேயே சிராஜின் வோபுள் பந்துக்கு எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இந்த தொடர் முழுக்க வோபுள் சீம் (wobble seam) பந்துக்கு நிறைய விக்கெட்டுகள் விழுவதை பார்த்து வருகிறோம். வோபுள் சீம் பந்துவீச்சு என்பது பந்தை நேராக வைத்து, தையலை தளர்வாக பிடித்து வீசும் பாணிக்கு பெயர். வோபுள் சீம் (Wobble Seam) பந்தை இரண்டு விதமாக வீசலாம். தையலை (seam) வழக்கத்தைக் காட்டிலும் தளர்வாகப் பிடித்து வீசுவது ஒருமுறை. விரல்களை தையலின் மேல் அகலப் படரவிட்டுக் கொண்டும் வீசலாம். காற்றில் ஊசலாடியபடி பயணிக்கும் பந்தின் தையல் ஆடுகளத்தில் எந்தப் பக்கம் விழுகிறதோ அந்தப் பக்கம் பந்து திரும்பும். (seam). இதிலுள்ள சுவாரஸ்யமே தையல் எந்தப் பக்கத்தைப் பார்த்து விழுமென்பது பேட்டருக்கு மட்டுமில்லாமல் பந்து வீச்சாளருக்கும் தெரியாது என்பதுதான். இந்த எதிர்பாராத் தன்மைதான் வழக்கமான ஸ்விங் மற்றும் சீம் பந்துவீச்சில் இருந்து இதனை வேறுபடுத்திக் காட்டுகிறது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹாரி புரூக் நெருக்கடிக்கு உள்ளாக்கிய புரூக் 106 ரன்களுக்கு 3 விக்கெட்களை தொலைத்த நிலையில், பாஸ்பால் பாணியை கைவிட்டு, அடக்க ஒடுக்கமாக ரூட்–புரூக் ஜோடி விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அழுத்தமான சமயங்களில் எதிரணி மீது அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற பாஸ்பால் வரையறையின்படி, இந்திய பந்துவீச்சாளர்களை புரூக் நெருக்கடிக்கு உள்ளாக்கினார். முன்னும் பின்னும் நகர்ந்து விளையாடி, அவர்களின் லைன் அண்ட் லெந்த்தை சிதைத்ததோடு உளவியல் ரீதியாகவும் இந்திய பந்துவீச்சாளர்களை நிலைகுலைய வைத்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹாரி புரூக் அடித்த பந்தை கேட்ச் பிடித்த முகமது சிராஜ் தவறுதலாக எல்லைக் கோட்டை மிதித்துவிட்டதால் நடுவரால் 6 ரன்கள் கொடுக்கப்பட்டன. 19 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்தில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை சிராஜ் தவறவிட, அதை கெட்டியாக பிடித்துக்கொண்ட புரூக் சதத்தில்தான் போய் நின்றார். கடந்த 70 ஆண்டுகளில் குறைந்த டெஸ்ட்களில் 10 சதங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். உலகின் தலைசிறந்த பேட்டரும் உலகின் முதல்நிலை டெஸ்ட் பேட்டரும் எவ்வித பதற்றமும் இன்றி, வெற்றி இலக்கை நோக்கி வீறுநடை போட்டனர். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் நான்காவது வேகப்பந்து வீச்சாளர் இல்லாதது வேகப்பந்து வீச்சாளர்களின் வேலைப்பளுவை அதிகரித்ததால் லைன் அண்ட் லெந்த்தில் அவர்கள் தவறு செய்தனர். களத்தடுப்பில் தாக்குதல் பாணியா, தற்காப்பு பாணியா என்பதை முடிவுசெய்ய முடியாமல் கில் தடுமாறியதை பார்க்க முடிந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் களைப்பில் தவித்த போதும் சுழற்பந்து வீச்சாளர்களை தாமதமாக கொண்டுவந்தது ஏன் என்பது சுத்தமாக விளங்கவில்லை. முந்தைய இன்னிங்ஸில் பிரசித் கிருஷ்ணாவுடனான மோதலால் கவனத்தை தொலைத்த ரூட், ஒன்றிரண்டு ரன்களை ஓடுவதை மறந்து, பவுண்டரிகளை மட்டும் குறிவைத்து சொதப்பினார். ஆனால், இந்தமுறை வழக்கமான ஒரு ரூட் இன்னிங்ஸ் எப்படி இருக்குமோ அப்படி விளையாடினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வழக்கமான ஒரு ரூட் இன்னிங்ஸ் எப்படி இருக்குமோ அப்படி விளையாடினார். களத்தில் இந்திய அணியினரின் உடல்மொழி, ஆட்டம் இங்கிலாந்து பக்கம் நகர்ந்துவிட்டதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது. குல்தீப் அணியில் இருந்திருந்தால் ஆட்டம் வேறுமாதிரி, இந்தியாவுக்கு சாதகமாக கூட அமைந்திருக்கலாம். ஆகாஷ் தீப் பந்துகளில் தொடர்ச்சியாக இரு பவுண்டரிகள் விளாசிய புரூக் , இறங்கிவந்து அடிக்கப் பார்த்து, பேட்டை காற்றில் பறக்கவிட்டு சிராஜிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்தியாவுக்கு திறந்த கதவு ரூட்–புரூக் இணை, நான்காவது விக்கெட்டுக்கு 195 ரன்களை குவித்து ஆட்டத்தை முழுவதுமாக இங்கிலாந்து பக்கம் திருப்பிவிட்டது. களமிறங்கியது முதலே பொறுப்பில்லாமல் கண்ணை மூடிக் கொண்டு பேட்டை சுழற்றிக் கொண்டிருந்த பெத்தேல், 5 ரன்னில் பிரசித் பந்தில் போல்டாகி சென்றார். இங்கிலாந்து அணி இலக்கை சிரமமின்றி நெருங்கி கொண்டிருந்த போது , பிரசித் கிருஷ்ணாவின் ஒரு அற்புதமான பேக் ஆஃப் எ லெந்த் (back of a length)பந்தின் மூலம் ரூட் (105) விக்கெட்டை கைப்பற்றினார். ரூட் விக்கெட்டுக்கு பிறகு, ஆட்டத்தில் மீண்டும் இந்தியாவுக்கு ஒரு கதவு திறந்தது. ஜேமி ஸ்மித்தும் ஓவர்டனும் களத்தில் இருந்தபோது, மழை காரணமாக நான்காம் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. எப்படியும் நான்காம் நாளில் ஆட்டம் முடிந்துவிடும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ஐந்தாம் நாளை நோக்கி ஆட்டத்தை இயற்கை நகர்த்தியிருக்கிறது. இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அதிசயத்தை நிகழ்ந்தினால் ஒழிய, இந்தியாவால் இந்த ஆட்டத்தில் தலையெடுக்க முடியாது. 9 பந்துகளில் பிரசித் கிருஷ்ணா ரூட், பெத்தேல் விக்கெட்களை தூக்கியிருப்பது இந்தியாவுக்கு ஒரு சிறு நம்பிக்கையை கொடுத்துள்ளது. இன்று 3 ஓவர்களுக்கு பிறகு புதிய பந்து கிடைக்குமென கூறப்படும் நிலையில், புதிய பந்தில் விக்கெட் எடுக்க இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முயற்சிக்க வேண்டும். இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. எதிர்பாராததை எதிர்பார்க்க வைக்கும்படி சென்று கொண்டிருக்கும் இந்த டெஸ்ட் தொடர், கடைசி நாளில் என்ன ஆச்சரியங்களை வைத்திருக்கிறது என்று பார்க்கலாம். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce9382en8njo

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா ஒரு குழந்தைக்கு 1500 டொலர்!

1 month 2 weeks ago
துருக்கியர் ஒருவருக்குத் தமிழ் வாசிக்க தெரிந்து அவருக்கு யாழ்களத்திலும் உறவு இருந்தால்…தம்பி தமிழ் சிறி இனித் துருக்கிக்கு ஊர்உலா செல்லவோ, அங்கு தலைகாட்டவோ முடியாது.😭

செம்மணி மனிதப் புதைகுழியின் சர்வதேச விசாரணைக்கு சோமரத்ன ராஜபக்ச தயார் : அநுரவிற்கு பறந்த கடிதம்

1 month 2 weeks ago
சோமரத்ன ராஜபக்ஷவின் கருத்து முக்கிய திருப்புமுனை: சர்வதேச விசாரணை தான் உண்மையை வெளிக்கொணரும் என தமிழ்த்தேசியக்கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தல் Published By: Vishnu 03 Aug, 2025 | 11:18 PM (நா.தனுஜா) செம்மணி பற்றிய உண்மைகளை சர்வதேச விசாரணையில் வெளிப்படுத்தத் தயாராக இருப்பதாக லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ கூறியிருப்பது இவ்விவகாரத்தில் மிகமுக்கிய திருப்புமுனையாக அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த்தேசியக்கட்சிகளின் பிரதிநிதிகள், இதனை ஒரு சர்வதேச கட்டமைப்பின் முன்னிலையில் விசாரிப்பதன் ஊடாக மாத்திரமே சகல உண்மைகளையும் வெளிக்கொணரமுடியும் எனவும், அதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதியும் சர்வதேச சமூகமும் முன்னெடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். யாழ் செம்மணி மனிதப்புதைகுழு விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில், அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருப்பதாக கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டு அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அத்தோடு யுத்தகாலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் நடாத்தப்பட்டுவந்த சித்திரவதைக்கூடங்கள் என்பன பற்றிய விபரங்களை வெளியிடுவதற்குத் தனது கணவர் தயாராக இருப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன், 'செம்மணி பற்றிய உண்மைகளை வெளிப்படுத்துவதற்குத் தயாராக இருப்பதாக சோமரத்ன ராஜபக்ஷ கூறியிருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும். மரணதண்டனை விதிக்கப்பட்ட அவர், இப்போது உண்மையைச் சொல்வதற்குத் தயாராக இருக்கிறார். இருப்பினும் இந்த நாட்டுக்குள் உண்மைகளை வெளிப்படுத்தும் பட்சத்தில் தனக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கருதுவதனாலேயே அவர் சர்வதேச விசாரணையைக் கோருகிறார். இந்த சர்வதேச விசாரணையையே நாம் 2010 ஆம் ஆண்டிலிருந்து கோரிவருகிறோம். அவ்வாறிருக்கையில் தற்போது சிங்களத்தரப்பிலிருந்து, அதுவும் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஒருவரிடமிருந்து அந்தக் கோரிக்கை வந்திருப்பதை நாம் எமக்கான ஒரு விடையாகவே பார்க்கிறோம். அதேபோன்று தனக்கு ஆணையிட்ட உயரதிகாரிகள், படுகொலைக் குற்றங்களைப் புரிந்தவர்கள் உள்ளிட்ட சகலரது விபரங்களையும் வெளிப்படுத்துவதற்குத் தயார் எனவும் அவர் கூறியிருக்கிறார். எனவே நீதிக்கான பயணத்தில் சர்வதேசத்தின் தலையீடு அல்லது பங்களிப்பு இல்லாவிடின், அது உண்மையான நீதியாக இருக்காது என சிங்களவர்களே கூறுமளவுக்கு இன்று நிலைமை மாறியிருக்கிறது. எனவே இலங்கை அரசாங்கம் முதலில் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும். அதுமாத்திரமன்றி மீண்டும் மீண்டும் உள்ளகப்பொறிமுறை எனக்கூறி சகல தரப்பினரையும் ஏமாற்றுவதை விடுத்து, நீதியானதொரு சர்வதேசப்பொறிமுறையை நோக்கி நகரவேண்டும். அப்பொறிமுறை தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தரக்கூடியதாக இருக்கவேண்டும்' என வலியுறுத்தினார். அதேவேளை சோமரத்ன ராஜபக்ஷவின் கடிதம் தொடர்பில் கருத்துரைத்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், 'கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கு விசாரணைகளின்போதே செம்மணியில் சுமார் 300 - 600 பேர் வரை புதைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அதனை ஒரு முக்கிய விடயமாகக் கருதி அடுத்தகட்ட விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. மாறாக அவ்வேளையில் உரிய முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் பலர் சிறை செல்லவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். 'இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் சூழ்நிலையில், சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படுமாயின் இதுபற்றிய உண்மைகளைக் கூறத்தயாராக இருப்பதாக சோமரத்ன ராஜக்ஷ தெரிவித்திருக்கிறார். எனவே இவ்விவகாரத்தை ஒரு சர்வதேச கட்டமைப்பின் முன்னிலையில் விசாரிப்பதன் ஊடாக மாத்திரமே சகல உண்மைகளையும் வெளிக்கொணரமுடியும். ஆனால் எவ்வேளையிலும் இராணுவத்தைப் பாதுகாப்பதற்கு முற்படும் இலங்கை அரசாங்கம், சர்வதேச விசாரணைக்கான நகர்வுகளை ஒருபோதும் முன்னெடுக்காது. ஆகவே மிகச்சிறந்த இந்தத் திருப்பத்தை சரியாகப் பயன்படுத்தக்கூடியவகையில் ஜனாதிபதியும், அரசாங்கமும் ஒரு தீர்மானத்தை மேற்கொள்ளவேண்டும்' எனக் குறிப்பிட்டார். மேலும் சோமரத்ன ராஜபக்ஷ சர்வதேச விசாரணையில் சாட்சியம் அளிப்பதற்குத் தயாராக இருப்பதாகக் கூறியிருப்பது இவ்விவகாரத்தில் மிகமுக்கிய திருப்புமுனையாக அமைந்திருப்பதாகத் தெரிவித்த புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், இதுகுறித்து ஜனாதிபதி உரியவாறான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அதுமாத்திரமன்றி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நடைபெறவிருக்கும் நிலையில், இதுகுறித்து சர்வதேச சமூகம் அவதானம் செலுத்தவேண்டும் எனவும், நியாயமான சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும் எனவும் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/221729

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையில் சாரதி அனுமதி பத்திரத்தை எவ்வாறு பெறலாம்?

1 month 2 weeks ago
போக்குவரத்து திணைக்களம் முகவரி: இல. 341, எல்விட்டிகல மாவத்தை, கொழும்பு 05, நாராஹேன்பிட்ட, இலங்கை. தொலைபேசி: +94 112 033333 E mail - Werahera : dmtweraheracom@gmail.com

வாழ்வோரும் இறந்தோரின் எலும்புகளும்  நீதியையே, மாற்றத்தையே   விரும்புகின்றன — கருணாகரன் —

1 month 2 weeks ago
வாழ்வோரும் இறந்தோரின் எலும்புகளும் நீதியையே, மாற்றத்தையே விரும்புகின்றன August 3, 2025 — கருணாகரன் — யாழ்ப்பாணம் – செம்மணிப்பகுதியில் அகழப்படும் மனிதப்புதைகுழிகளிலிருந்து இதுவரை(30.07.2025) 115 க்கு மேற்பட்டமனித எலும்புக்கூடுகள்(எச்சங்கள்) மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் பெண்கள், குழந்தைகள் அல்லது சிறார்களின் எலும்புத் தொகுதிகளும் இனங்காணப்பட்டுள்ளன. இதயத்தை உலுக்கும் விதமாக இருப்பது, இந்த எலும்புக்கூடுகளோடு குழந்தைகளின் பாற்புட்டிகளும் விளையாட்டுப்பொருட்களும் சேர்ந்து கிடப்பது. அகழ்வுப் பணிகள் தொடர்கின்றன. இன்னும் இன்னும் என்னென்னவெல்லாம் மீட்கப்படுமோ? என்று தெரியவில்லை. ஆனால், ஒன்றுமட்டும் உண்மை. இந்த மீட்பில் ஒரு கூட்டுக் கொலை நடந்திருக்கிறது என்பது நிரூபணமாகியுள்ளது. இருந்தாலும் இதையிட்டு அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் நாம் உடனடியாக வந்து விடமுடியாது. காரணம், இது முறைசார் ஆராய்ச்சிக்குரியது. முறையான ஆராய்ச்சிக்குப் பின்னரே தெளிவான முடிவுகளை- தீர்வை நோக்கிச் செல்லமுடியும். மட்டுமல்ல, சட்டம், நீதி, நீதிகோரல் எனப் பல அடுக்குகளோடு தொடர்புபட்டது. என்பதால் நிதானமாகவே இதைக் கையாள வேண்டும். இதுவரையில் மீட்கப்பட்ட எலும்புத் தொகுதிகள் சில உண்மைகளைச் சொல்லவிளைகின்றன. சம நேரத்தில் சில கேள்விகளையும் எழுப்புகின்றன. உண்மைகள்: 1. குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். செம்மணியில் பலர் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர் என்று நீண்டகாலமாகவே தெரிவிக்கப்பட்டு வந்த உண்மை நிரூபணமாகியுள்ளது. 2. மீட்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகளோடு அடையாளம் காணப்பட்டுள்ள உடை, பிள்ளைகளின் விளையாட்டுப்பொருட்கள் போன்றவை எந்தக் காலகட்டத்துக்குரியவை என்பதைச் சொல்கின்றன. அல்லது அவற்றை வைத்து காலகட்டத்தை ஓரளவு தீர்மானிக்கலாம். முறைசார் ஆய்வுகளுக்கு இவையும் வலுச்சேர்க்கக்கூடியன. ஆகவே கொலைகள் நடந்த காலத்தைத் தெளிவாக அடையாளம் காண முடியும். 3. இவை அரசியல் ரீதியான படுகொலைகள். 4. இந்தக் கொலைகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். 5. மிகப் பெரிய துயரம். மிகப் பெரிய அநீதி. மிகப்பெரிய அவலம். மிகக்கொடிய செயல். மனச்சாட்சியை உலுக்கும் இந்த விடயம். 6. கொல்லப்பட்டவர்களை வெறுமனே இறந்தவர்கள் என்ற கணக்கில் சேர்க்க முடியாது. அப்படிச்சேர்த்தால், அப்படிச் சேர்ப்பதற்கு அனுமதித்தால் அது கொல்லப்பட்டோருக்கு இழைக்கும் அநீதியாகும். கொலைகளுக்கு உடந்தையாகும். 7. இது மிக மோசமானமனித உரிமை மீறல் செயல். மக்களின் வாழும் உரிமை மறுதலிக்கப்பட்டுள்ளது. ஆகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் வழங்க வேண்டும். இப்படி இந்த உண்மைகளின் பட்டியல் நீள்கிறது. அடுத்த்தாக இது குறித்து எழுகின்ற கேள்விகள் – 1. இந்தப் புதைகுழிகளைக் குறித்து சமூகத்தின் புரிதல் என்ன? இந்தக் கேள்வி ஏன் எழுகின்றதென்றால், தினமும் மீட்கப்படும் எலும்புக்கூடுகள் வெறுமனே புள்ளிவிவரங்களாக முடிந்து விடுவதாகவே தெரிகிறது. அதைக் கடந்து, இவை சமூகத்தில் வேறு எத்தகைய உணர்வலைகளையும் ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. அரசியற்கட்சிகள், ஊடகங்கள், மனிதஉரிமை அமைப்புகள், ஆர்வலர்கள் போன்ற தரப்புகளும் சரியான அவதானத்தைக் கொள்ளாமலே உள்ளன. அல்லது இது குறித்து எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது? இந்தப்பிரச்சினையை எப்படிக்கையாள்வது என்பது தொடர்பில் அவற்றுக்குக் குழப்பங்கள் இருக்கலாம். ஆனாலும் இந்தத் தடுமாற்றமும் குழப்பமும் தாமதமும் ஏன்? 2. புதைகுழிகளில் மீட்கப்படும் என்புக்கூடுகள் சொல்லுகின்ற சேதிகளின் அடிப்படையில் நோக்கினால், இவற்றில் குடும்பங்களாகக் கொல்லப்பட்டிருக்கக் கூடிய சூழலும் உண்டு. அல்லது, தாய் அல்லது தந்தை அல்லது கொல்லப்பட்டோருடன் கூட இருந்த சிறுவர்கள், குழந்தைகளும் சேர்த்துக்கொலை செய்யப்பட்டிருக்கலாம். அப்படியென்றால், அது யார்? அதைக் கண்டறிவதில் ஏன் தாமதங்கள்? குடும்பங்களாகக் கடத்தப்பட்ட, கைது செய்யப்பட்ட, காணாமலாக்கப்பட்ட விவரங்களைத் தேடினால் இதைக் கண்டறியக்கூடியதாக இருக்கும். ஆனால், அப்படியான சம்பவங்கள் கடந்த காலத்தில் பெருமளவில் நடந்திருக்கிறதா? அதற்கான முறைப்பாடுகள் எங்காவது பதிவு செய்யப்பட்டுள்ளனவா? என்பது பற்றிச் சரியாகத் தெரியவில்லை. அப்படியில்லை என்றாலும், அவ்வாறு காணாமலாக்கப்பட்டோர் அல்லது கைது செய்யப்பட்டோர் பற்றி சம்மந்தப்பட்ட உறவினர்கள் எவராவது இப்போது கூட முறையிடலாம். விவரங்களை வெளியிடலாம். அது ஏன் நிகழாதிருக்கிறது? 3. இந்தப் புதைகுழி விடயம்1996 லிருந்து நீடிக்கிறது. அதாவது, செம்மணிப்பகுதியில் 600 க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டது. ஏறக்குறைய அது மெய்யென இன்றைய இந்த எலும்புத்தொகுதிகளின் மீட்புகள் உரைக்கின்றன. என்றால், இதைச் சர்வதேச மட்டத்திலும் உள்நாட்டிலும் நீதிக்கான கோரிக்கையாக ஏன் முன்னிறுத்த முடியாமலுள்ளது? 4. 100 க்கு மேற்பட்ட மனித எலும்புத்தொகுதிகளும் அவற்றோடான எச்சங்களும் மீட்கப்பட்டன என்ற சேதிக்கு அப்பால், இது தொடர்பாக அரசாங்கம் மேற்கொள்ளப்போகும் நடவடிக்கைகள் என்னவாக இருக்கவுள்ளது? இந்த அகழ்வுக்கு அரசாங்கம், நீதி அமைச்சின் வழியாக ஒரு தொகை பணத்தை உத்தியோகபூர்வமாக வழங்கியுள்ளது. என்றால், இந்த அகழ்வை அரசாங்கம் ஆதரிக்கிறது என்றே அர்த்தமாகும். அப்படியென்றால், அடுத்த கட்டமாக இதைப்பற்றிய முறைசார் ஆய்வுக்கும் அரசாங்கம் ஒத்துழைக்கும் எனத் தெரிகிறது. அந்த முறைசார் ஆய்வு சர்வதேச நிபுணத்துவத்துடன் நடக்குமா? உள்நாட்டு மட்டத்தில் நடக்குமா? என்பது கேள்வியே! சரி, அப்படித்தான் ஆய்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வந்தால், அடுத்த கட்டமாக இவற்றோடு தொடர்பான ஏனைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும். முக்கியமாக கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இது எந்தளவுக்குச் சாத்தியமாகும்? இதைச்சாத்தியப்படுத்துவது எப்படி? அதில் எத்தகைய பங்களிப்புகளை – தூண்டல்களை – யாரெல்லாம் செய்யவேண்டும்? 5. செம்மணிப் புதைகுழியை மட்டும் கவனப்படுத்தப்பட வேண்டுமா? மன்னார், கொக்குத்தொடுவாய் மற்றும் கிழக்குமாகாணத்தில் பல்வேறு இடங்கள் என அடையாளம் காணப்பட்ட – சந்தேகிக்கப்படும் புதைகுழிகளைப் பற்றிய கரிசனைகள் எந்தளவுக்கு உள்ளன? அவற்றில் புதைக்குப்பட்ட உண்மைகளுக்கும் புதைக்கப்பட்டோருக்குமானா நீதி என்ன? அதை எப்படிப் பெறுவது? அதற்கான குரல்கள் ஏன் கூட்டாக முன்னெடுக்கப்படாமல் உள்ளன? 6. இந்த மாதிரியான புதைகுழிகளைக் குறித்து சிங்கள, முஸ்லிம், மலையக மக்களின் புரிதல் – அக்கறைகள் என்ன? சிங்கள, ஆங்கில ஊடகங்களின் கவனம் எப்படியுள்ளது? ஏன் இவை கவனிக்கப்படாமல் உள்ளன? அல்லது மந்தமாக இருக்கின்றன? 7. சர்வதேச சமூகம் என்று சொல்லப்படும் தரப்புகள் இவற்றைக் குறித்து எந்தளவுக்கு அக்கறை கொள்கின்றன? அந்த அக்கறையின் அளவும் பயனும் என்ன? இப்படிப் பல கேள்விகள்எழுகின்றன. இப்பொழுது நம்முன்னுள்ள பிரச்சினை, இந்த உண்மைகளை நாம் எப்படி முன்கொண்டு செல்லப்போகிறோம்? அதாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியாக இதை எப்படி மாற்றப்போகிறோம்? இரண்டாவது, இந்தக் கேள்விகளுக்கான பதிலை எப்படிக் காணப்போகிறோம்? இதற்கு ஏனைய தரப்புகளை எப்படி ஒருங்கிணைக்கலாம்? அதற்கான பொறிமுறைகள், செயற்பாட்டுத்திட்டங்கள் என்ன? போர் முடிந்து விட்டது. ஆட்சிகள்பல மாறி விட்டன. காலம் நீண்டு 15 ஆண்டுகள் கடந்து விட்டன. தீர்வுக்கான பரிந்துரைகள் பல தரப்புகளாலும் முன்வைக்கப்பட்டன. பல்வேறு யோசனைகள் பரிசீலிக்கப்பட்டன. ஆனாலும் துயரும் பிரச்சினைகளும் முடியவில்லை. போர் முடிந்தால் நாட்டின் பிரச்சினைகள் எல்லாம் தீரும் என்றே பெரும்பாலான மக்களும் நம்பினார்கள். அல்லது அப்படி நம்ப வைக்கப்பட்டனர். குறிப்பாக தென்பகுதி மக்களின் நம்பிக்கை அதுவாகவே இருந்தது. ஆனால், போர் முடிந்த பிறகும் பிரச்சினைகள் தீரவில்லை. எல்லாமே கொதிநிலையில்தான் உள்ளன. குண்டுகளும் துப்பாக்கிகளும் வெடிக்கவில்லை. கொலை மற்றும் உயிர் பற்றிய அச்சம் குறைந்துள்ளதே தவிர, இதற்கு அப்பால் வேறெதுவும் நடக்கவில்லை. பொருளாதார நெருக்கடி தணியவே இல்லை. அரசியற் பிணக்குகள் – அதிகாரப் போட்டிகள், அதிகாரப் பகிர்வுப் பிரச்சினைகள் அப்படியேதான் உள்ளன. அப்படியென்றால், அடிப்படையில் பெருங்கோளாறு இருக்கிறது என்றுதானே அர்த்தம்? உண்மையும் அதுதான். இலங்கையை மீட்க வேண்டுமானால், இலங்கையை சரியாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் என்றால், அடிப்படைகளைச் சரியாக்க வேண்டும். அடிப்படைகள் பல வழிகளிலும் தகர்க்கப்பட்டுள்ளன. அதைச் சரிப்படுத்தாத வரையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மாற்றம் – முன்னேற்றம் – தீர்வு எதுவும் கிட்டப்போவதில்லை. செம்மணிப் புதைகுழி உள்ளிட்ட விடயங்கள் அப்படிச் சீர்ப்படுத்த வேண்டியவற்றில் ஒன்று. இப்படி ஒவ்வொன்றாகச் சீர்ப்படுத்தினால்தான் நாட்டில் மாற்றம் ஏற்படும். குறிப்பாக நீதியுணர்ச்சி வலுத்து, நடைமுறையாக வேண்டும். அரசியலில் நீதியுணர்ச்சி என்பதற்கு ஏராளம் வியாக்கியானங்கள் உண்டு. அப்படி ஒன்று இல்லை என்ற கருத்தும் உண்டு. ஆனாலும் சட்டமும் நீதியும் மக்களின் நம்பிக்கையோடும் நாட்டின் நலனோடும் சம்மந்தப்பட்டது. அதை நோக்கிச் செல்ல வேண்டும் என்றே செம்மணி என்புக்கூடுகளும் வலியுறுத்துகின்றன. ஆம், உயிரோடு உள்ளவர்கள் மட்டுமல்ல, இறந்தவர்களின் (கொல்லப்பட்டவர்களின்) எலும்புக்கூடுகளும் நீதியை – மாற்றத்தை – யே விரும்புகின்றன. அதுவே தேவை. https://arangamnews.com/?p=12224

வாழ்வோரும் இறந்தோரின் எலும்புகளும்  நீதியையே, மாற்றத்தையே   விரும்புகின்றன — கருணாகரன் —

1 month 2 weeks ago

வாழ்வோரும் இறந்தோரின் எலும்புகளும்  நீதியையே, மாற்றத்தையே   விரும்புகின்றன

August 3, 2025

வாழ்வோரும் இறந்தோரின் எலும்புகளும்                நீதியையே, மாற்றத்தையே   விரும்புகின்றன

— கருணாகரன் —

யாழ்ப்பாணம் – செம்மணிப்பகுதியில் அகழப்படும் மனிதப்புதைகுழிகளிலிருந்து இதுவரை(30.07.2025) 115 க்கு மேற்பட்டமனித எலும்புக்கூடுகள்(எச்சங்கள்) மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் பெண்கள், குழந்தைகள் அல்லது சிறார்களின் எலும்புத் தொகுதிகளும் இனங்காணப்பட்டுள்ளன. இதயத்தை உலுக்கும் விதமாக இருப்பது, இந்த எலும்புக்கூடுகளோடு குழந்தைகளின் பாற்புட்டிகளும் விளையாட்டுப்பொருட்களும் சேர்ந்து கிடப்பது. அகழ்வுப் பணிகள் தொடர்கின்றன. இன்னும் இன்னும் என்னென்னவெல்லாம் மீட்கப்படுமோ? என்று தெரியவில்லை. ஆனால், ஒன்றுமட்டும் உண்மை. இந்த மீட்பில் ஒரு கூட்டுக் கொலை நடந்திருக்கிறது என்பது நிரூபணமாகியுள்ளது. இருந்தாலும் இதையிட்டு அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் நாம்  உடனடியாக வந்து விடமுடியாது. காரணம், இது முறைசார் ஆராய்ச்சிக்குரியது. முறையான ஆராய்ச்சிக்குப் பின்னரே தெளிவான முடிவுகளை- தீர்வை நோக்கிச் செல்லமுடியும். மட்டுமல்ல, சட்டம், நீதி, நீதிகோரல் எனப் பல அடுக்குகளோடு தொடர்புபட்டது. என்பதால் நிதானமாகவே இதைக் கையாள வேண்டும்.  

இதுவரையில் மீட்கப்பட்ட எலும்புத் தொகுதிகள் சில உண்மைகளைச் சொல்லவிளைகின்றன. சம நேரத்தில் சில கேள்விகளையும் எழுப்புகின்றன. 

உண்மைகள்:

1.   குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். செம்மணியில் பலர் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர் என்று நீண்டகாலமாகவே தெரிவிக்கப்பட்டு வந்த உண்மை நிரூபணமாகியுள்ளது.

2.   மீட்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகளோடு அடையாளம் காணப்பட்டுள்ள உடை, பிள்ளைகளின் விளையாட்டுப்பொருட்கள் போன்றவை எந்தக் காலகட்டத்துக்குரியவை என்பதைச் சொல்கின்றன. அல்லது அவற்றை வைத்து காலகட்டத்தை ஓரளவு தீர்மானிக்கலாம். முறைசார் ஆய்வுகளுக்கு இவையும் வலுச்சேர்க்கக்கூடியன. ஆகவே கொலைகள் நடந்த காலத்தைத் தெளிவாக அடையாளம் காண முடியும்.

3.   இவை அரசியல் ரீதியான படுகொலைகள்.

4.   இந்தக் கொலைகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். 

5.   மிகப் பெரிய துயரம். மிகப் பெரிய அநீதி. மிகப்பெரிய அவலம். மிகக்கொடிய செயல். மனச்சாட்சியை உலுக்கும் இந்த விடயம்.

6.   கொல்லப்பட்டவர்களை வெறுமனே இறந்தவர்கள் என்ற கணக்கில் சேர்க்க முடியாது. அப்படிச்சேர்த்தால், அப்படிச் சேர்ப்பதற்கு அனுமதித்தால் அது கொல்லப்பட்டோருக்கு இழைக்கும் அநீதியாகும். கொலைகளுக்கு உடந்தையாகும். 

7.   இது மிக மோசமானமனித உரிமை மீறல் செயல். மக்களின் வாழும் உரிமை மறுதலிக்கப்பட்டுள்ளது. ஆகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் வழங்க வேண்டும். 

இப்படி இந்த உண்மைகளின் பட்டியல் நீள்கிறது. அடுத்த்தாக இது குறித்து எழுகின்ற கேள்விகள் – 

1.   இந்தப் புதைகுழிகளைக் குறித்து சமூகத்தின் புரிதல் என்ன? இந்தக் கேள்வி ஏன் எழுகின்றதென்றால், தினமும் மீட்கப்படும் எலும்புக்கூடுகள் வெறுமனே புள்ளிவிவரங்களாக முடிந்து விடுவதாகவே தெரிகிறது. அதைக் கடந்து, இவை சமூகத்தில் வேறு எத்தகைய உணர்வலைகளையும் ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. அரசியற்கட்சிகள், ஊடகங்கள், மனிதஉரிமை அமைப்புகள், ஆர்வலர்கள் போன்ற தரப்புகளும் சரியான அவதானத்தைக் கொள்ளாமலே உள்ளன. அல்லது இது குறித்து எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது? இந்தப்பிரச்சினையை எப்படிக்கையாள்வது என்பது தொடர்பில் அவற்றுக்குக் குழப்பங்கள் இருக்கலாம். ஆனாலும் இந்தத் தடுமாற்றமும் குழப்பமும் தாமதமும் ஏன்?

2.   புதைகுழிகளில் மீட்கப்படும் என்புக்கூடுகள் சொல்லுகின்ற சேதிகளின் அடிப்படையில் நோக்கினால், இவற்றில் குடும்பங்களாகக் கொல்லப்பட்டிருக்கக் கூடிய சூழலும் உண்டு. அல்லது, தாய் அல்லது தந்தை அல்லது கொல்லப்பட்டோருடன் கூட இருந்த சிறுவர்கள், குழந்தைகளும் சேர்த்துக்கொலை செய்யப்பட்டிருக்கலாம். அப்படியென்றால், அது யார்? அதைக் கண்டறிவதில் ஏன் தாமதங்கள்? குடும்பங்களாகக் கடத்தப்பட்ட, கைது செய்யப்பட்ட, காணாமலாக்கப்பட்ட விவரங்களைத் தேடினால் இதைக் கண்டறியக்கூடியதாக இருக்கும். ஆனால், அப்படியான சம்பவங்கள் கடந்த காலத்தில் பெருமளவில் நடந்திருக்கிறதா? அதற்கான முறைப்பாடுகள் எங்காவது பதிவு செய்யப்பட்டுள்ளனவா? என்பது பற்றிச் சரியாகத் தெரியவில்லை. அப்படியில்லை என்றாலும், அவ்வாறு காணாமலாக்கப்பட்டோர் அல்லது கைது செய்யப்பட்டோர் பற்றி சம்மந்தப்பட்ட உறவினர்கள் எவராவது இப்போது கூட முறையிடலாம். விவரங்களை வெளியிடலாம். அது ஏன் நிகழாதிருக்கிறது?

3.   இந்தப் புதைகுழி விடயம்1996 லிருந்து நீடிக்கிறது. அதாவது, செம்மணிப்பகுதியில் 600 க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டது. ஏறக்குறைய அது மெய்யென இன்றைய இந்த எலும்புத்தொகுதிகளின் மீட்புகள் உரைக்கின்றன. என்றால், இதைச் சர்வதேச மட்டத்திலும் உள்நாட்டிலும் நீதிக்கான கோரிக்கையாக ஏன் முன்னிறுத்த முடியாமலுள்ளது?

4.   100 க்கு மேற்பட்ட மனித எலும்புத்தொகுதிகளும் அவற்றோடான எச்சங்களும் மீட்கப்பட்டன என்ற சேதிக்கு அப்பால், இது தொடர்பாக அரசாங்கம் மேற்கொள்ளப்போகும் நடவடிக்கைகள் என்னவாக இருக்கவுள்ளது? இந்த அகழ்வுக்கு அரசாங்கம், நீதி அமைச்சின் வழியாக ஒரு தொகை பணத்தை உத்தியோகபூர்வமாக வழங்கியுள்ளது. என்றால், இந்த அகழ்வை அரசாங்கம் ஆதரிக்கிறது என்றே அர்த்தமாகும். அப்படியென்றால், அடுத்த கட்டமாக இதைப்பற்றிய முறைசார் ஆய்வுக்கும் அரசாங்கம் ஒத்துழைக்கும் எனத் தெரிகிறது. அந்த முறைசார் ஆய்வு சர்வதேச நிபுணத்துவத்துடன் நடக்குமா? உள்நாட்டு மட்டத்தில் நடக்குமா? என்பது கேள்வியே! சரி, அப்படித்தான் ஆய்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வந்தால், அடுத்த கட்டமாக இவற்றோடு தொடர்பான ஏனைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும். முக்கியமாக கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இது எந்தளவுக்குச் சாத்தியமாகும்? இதைச்சாத்தியப்படுத்துவது எப்படி? அதில் எத்தகைய பங்களிப்புகளை – தூண்டல்களை – யாரெல்லாம் செய்யவேண்டும்? 

5.   செம்மணிப் புதைகுழியை மட்டும் கவனப்படுத்தப்பட வேண்டுமா? மன்னார், கொக்குத்தொடுவாய் மற்றும் கிழக்குமாகாணத்தில் பல்வேறு இடங்கள் என அடையாளம் காணப்பட்ட – சந்தேகிக்கப்படும் புதைகுழிகளைப் பற்றிய கரிசனைகள் எந்தளவுக்கு உள்ளன? அவற்றில் புதைக்குப்பட்ட உண்மைகளுக்கும் புதைக்கப்பட்டோருக்குமானா நீதி என்ன? அதை எப்படிப் பெறுவது? அதற்கான குரல்கள் ஏன் கூட்டாக முன்னெடுக்கப்படாமல் உள்ளன?

6.   இந்த மாதிரியான புதைகுழிகளைக் குறித்து சிங்கள, முஸ்லிம், மலையக மக்களின் புரிதல் – அக்கறைகள் என்ன? சிங்கள, ஆங்கில ஊடகங்களின் கவனம் எப்படியுள்ளது? ஏன் இவை கவனிக்கப்படாமல் உள்ளன? அல்லது மந்தமாக இருக்கின்றன?

7.   சர்வதேச சமூகம் என்று சொல்லப்படும் தரப்புகள் இவற்றைக் குறித்து எந்தளவுக்கு அக்கறை கொள்கின்றன? அந்த அக்கறையின் அளவும் பயனும் என்ன?

இப்படிப் பல கேள்விகள்எழுகின்றன. 

இப்பொழுது நம்முன்னுள்ள பிரச்சினை, இந்த உண்மைகளை நாம் எப்படி முன்கொண்டு செல்லப்போகிறோம்? அதாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியாக இதை எப்படி மாற்றப்போகிறோம்? இரண்டாவது, இந்தக் கேள்விகளுக்கான பதிலை எப்படிக் காணப்போகிறோம்? இதற்கு ஏனைய தரப்புகளை எப்படி ஒருங்கிணைக்கலாம்? அதற்கான பொறிமுறைகள், செயற்பாட்டுத்திட்டங்கள் என்ன? 

போர் முடிந்து விட்டது. ஆட்சிகள்பல மாறி விட்டன. காலம் நீண்டு 15 ஆண்டுகள் கடந்து விட்டன. தீர்வுக்கான பரிந்துரைகள் பல தரப்புகளாலும் முன்வைக்கப்பட்டன. பல்வேறு யோசனைகள் பரிசீலிக்கப்பட்டன. ஆனாலும் துயரும் பிரச்சினைகளும் முடியவில்லை. 

போர் முடிந்தால் நாட்டின் பிரச்சினைகள் எல்லாம் தீரும் என்றே பெரும்பாலான மக்களும் நம்பினார்கள். அல்லது அப்படி நம்ப வைக்கப்பட்டனர். குறிப்பாக தென்பகுதி மக்களின் நம்பிக்கை அதுவாகவே இருந்தது. 

ஆனால், போர் முடிந்த பிறகும் பிரச்சினைகள் தீரவில்லை. எல்லாமே கொதிநிலையில்தான் உள்ளன. குண்டுகளும் துப்பாக்கிகளும்  வெடிக்கவில்லை. கொலை மற்றும் உயிர் பற்றிய அச்சம் குறைந்துள்ளதே தவிர, இதற்கு அப்பால் வேறெதுவும் நடக்கவில்லை. பொருளாதார நெருக்கடி தணியவே இல்லை. அரசியற் பிணக்குகள் – அதிகாரப் போட்டிகள், அதிகாரப் பகிர்வுப் பிரச்சினைகள் அப்படியேதான் உள்ளன. 

அப்படியென்றால், அடிப்படையில் பெருங்கோளாறு இருக்கிறது என்றுதானே அர்த்தம்? உண்மையும் அதுதான்.

இலங்கையை மீட்க வேண்டுமானால், இலங்கையை சரியாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் என்றால், அடிப்படைகளைச் சரியாக்க வேண்டும். அடிப்படைகள் பல வழிகளிலும் தகர்க்கப்பட்டுள்ளன. அதைச் சரிப்படுத்தாத வரையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மாற்றம் – முன்னேற்றம் – தீர்வு எதுவும் கிட்டப்போவதில்லை. 

செம்மணிப் புதைகுழி உள்ளிட்ட விடயங்கள் அப்படிச் சீர்ப்படுத்த வேண்டியவற்றில் ஒன்று. இப்படி ஒவ்வொன்றாகச் சீர்ப்படுத்தினால்தான் நாட்டில் மாற்றம் ஏற்படும். குறிப்பாக நீதியுணர்ச்சி வலுத்து, நடைமுறையாக வேண்டும். அரசியலில் நீதியுணர்ச்சி என்பதற்கு ஏராளம் வியாக்கியானங்கள் உண்டு. அப்படி ஒன்று இல்லை என்ற கருத்தும் உண்டு. ஆனாலும் சட்டமும் நீதியும் மக்களின் நம்பிக்கையோடும் நாட்டின் நலனோடும் சம்மந்தப்பட்டது. அதை நோக்கிச் செல்ல வேண்டும் என்றே செம்மணி என்புக்கூடுகளும் வலியுறுத்துகின்றன. 

ஆம், உயிரோடு உள்ளவர்கள் மட்டுமல்ல, இறந்தவர்களின் (கொல்லப்பட்டவர்களின்) எலும்புக்கூடுகளும் நீதியை – மாற்றத்தை – யே விரும்புகின்றன. அதுவே தேவை.

https://arangamnews.com/?p=12224

'ஒருவனுக்கு ஒருத்தி' மனிதனின் இயல்பான குணமா? கலாசாரங்களில் பலதார மணம் எப்படி இருந்தது?

1 month 2 weeks ago
கலாசாரங்களில் பலதார மணம் எப்படி இருந்தது? பலதார மணம் நறுமணமா? நாற்றமா?? 😌😮‍💨

வனவிலங்கு திணைக்களத்திற்குச் சொந்தமான காணியினை சீதையம்மன் ஆலயத்திற்கு வழங்கத் தீர்மானம்!

1 month 2 weeks ago
வனவிலங்கு திணைக்களத்திற்குச் சொந்தமான காணியினை சீதையம்மன் ஆலயத்திற்கு வழங்கத் தீர்மானம்! வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதையம்மன் ஆலையத்திற்கு வனவிலங்கு திணைக்களத்திற்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணியினை ஆலயத்திற்கு பெற்றுக்கொடுக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்தஹேரத் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தியானசாலை மண்டபத்தை திறந்து வைத்து உறையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”இந்த சீதையம்மன் ஆலயம் வரலாற்று சிறப்புமிக்கது. இந்தியாவிலிருந்து அநேகமான பக்த அடியார்கள் வழிபாடுவதற்காக இந்த ஆலயத்திற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். நாளுக்கு நாள் இங்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இன்று இலங்கைக்கு வருகின்ற வெளிநாட்டு பயணிகைளை எடுத்துகொண்டால் இந்தியாவில் இருந்து தான் அதிகமான பயணிகள் வருகை தருகிறார்கள். வழிபாட்டுத் தலங்களை பார்வையிடவே அதிகமானோர் நாட்டுக்கு வருகின்றார்கள். அதிலும் சீதையம்மன் ஆலயம், கோணேஸ்வர ஆலையம், கதிர்காமம், போன்ற புனித ஸ்தலங்களுக்கு வழிபாடுகளை மேற்கொள்ள அதிகளவில் வருகை தருகின்றனர். எமது பொருளாதார நிலையை மாற்றியமைக்க வேண்டுமானால் வெளிநாட்டு பயணிகள் வருவதை மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டும். இவ் வருடத்தில் 30 இலட்சம் வெளிநாட்டு பயணிகளை ஈர்க்க வேண்டும் என்பதே எமது இலக்காகும். தற்பொழுது 1.3சதவீதமான வெளிநாட்டு பயணிகள் வருகை தந்துள்ளனர் அதிலும் அதிகமாக வருகின்றவர்கள் இந்திய நாட்டை சேர்ந்தவர்கள். வெளிநாட்டு பயணிகளின் வருகையால் கடந்த ஆறு மாதகாலப்பகுதியில் 3.7 பில்லியன் டொலர்கள இலாபமாக கிடைத்துள்ளது. இந்த வருடத்திற்குள் பில்லியன் 7.5 டொலர் இலாபத்தை பெற்றால் பொருளாதாரத்தை அதிகரித்து கொள்ள முடியும். அதிகமான அடியார்களை இந்தியாவிருந்து இந்த சீதையம்மன் ஆலையத்திற்கு அழைத்து வரும் நோக்கில் இந்த ஆலயத்தினை மேலும் அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளோம். அத்தோடு இந்த பகுதியில் அதிகமான சுற்றுலா விருந்தகங்கள் அமைந்துள்ளது இந்த பிரதேசத்தை பிரதிநிதித்துவம் படுத்தி இராமயண வரலாற்றை இனைத்த வெளிநாட்டவர்கள் எதிர்வரும் காலங்களில் இங்கு வருகை தருவார்கள். மேலும் பல அபிவிருத்தி திட்டங்களை நுவரெலியா பிரதேசத்தி்ற்கு மேற்கொள்ளும் போது இந்த பிரதேச மக்களின் பொருளாதாரத்தை அதிகரிக்க முடியும்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1441658

வனவிலங்கு திணைக்களத்திற்குச் சொந்தமான காணியினை சீதையம்மன் ஆலயத்திற்கு வழங்கத் தீர்மானம்!

1 month 2 weeks ago

seethaiyamman-koyil.jpg?resize=600%2C375

வனவிலங்கு திணைக்களத்திற்குச் சொந்தமான காணியினை சீதையம்மன் ஆலயத்திற்கு வழங்கத் தீர்மானம்!

வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதையம்மன் ஆலையத்திற்கு வனவிலங்கு திணைக்களத்திற்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணியினை ஆலயத்திற்கு பெற்றுக்கொடுக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்தஹேரத் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம்  நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் புதிதாக  அமைக்கப்பட்டுள்ள தியானசாலை மண்டபத்தை திறந்து வைத்து உறையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”இந்த சீதையம்மன் ஆலயம் வரலாற்று சிறப்புமிக்கது. இந்தியாவிலிருந்து அநேகமான பக்த அடியார்கள் வழிபாடுவதற்காக இந்த ஆலயத்திற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.  நாளுக்கு நாள் இங்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

இன்று இலங்கைக்கு வருகின்ற வெளிநாட்டு பயணிகைளை எடுத்துகொண்டால் இந்தியாவில் இருந்து தான் அதிகமான பயணிகள் வருகை தருகிறார்கள். வழிபாட்டுத்  தலங்களை பார்வையிடவே அதிகமானோர்  நாட்டுக்கு வருகின்றார்கள். அதிலும் சீதையம்மன் ஆலயம், கோணேஸ்வர ஆலையம், கதிர்காமம், போன்ற புனித ஸ்தலங்களுக்கு வழிபாடுகளை மேற்கொள்ள அதிகளவில் வருகை தருகின்றனர்.

எமது  பொருளாதார நிலையை மாற்றியமைக்க வேண்டுமானால் வெளிநாட்டு பயணிகள் வருவதை மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டும்.  இவ் வருடத்தில் 30 இலட்சம் வெளிநாட்டு  பயணிகளை ஈர்க்க வேண்டும்  என்பதே  எமது இலக்காகும்.

தற்பொழுது 1.3சதவீதமான வெளிநாட்டு பயணிகள் வருகை தந்துள்ளனர் அதிலும் அதிகமாக வருகின்றவர்கள் இந்திய நாட்டை சேர்ந்தவர்கள்.

வெளிநாட்டு பயணிகளின் வருகையால் கடந்த ஆறு மாதகாலப்பகுதியில் 3.7 பில்லியன் டொலர்கள  இலாபமாக கிடைத்துள்ளது. இந்த வருடத்திற்குள் பில்லியன் 7.5 டொலர் இலாபத்தை பெற்றால் பொருளாதாரத்தை அதிகரித்து கொள்ள முடியும்.

அதிகமான  அடியார்களை இந்தியாவிருந்து இந்த சீதையம்மன் ஆலையத்திற்கு அழைத்து வரும் நோக்கில் இந்த ஆலயத்தினை மேலும்  அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளோம்.

அத்தோடு இந்த பகுதியில் அதிகமான சுற்றுலா விருந்தகங்கள் அமைந்துள்ளது இந்த பிரதேசத்தை பிரதிநிதித்துவம் படுத்தி இராமயண வரலாற்றை இனைத்த வெளிநாட்டவர்கள் எதிர்வரும் காலங்களில் இங்கு வருகை தருவார்கள். மேலும் பல அபிவிருத்தி திட்டங்களை  நுவரெலியா பிரதேசத்தி்ற்கு மேற்கொள்ளும் போது இந்த பிரதேச மக்களின் பொருளாதாரத்தை அதிகரிக்க முடியும்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2025/1441658

வடக்கின் கல்வித் துறை பின்னடைய நிர்வாக பிரச்சனையே காரணம்!

1 month 2 weeks ago
வடக்கின் கல்வித் துறை பின்னடைய நிர்வாக பிரச்சனையே காரணம்! adminAugust 4, 2025 வட மாகாணத்தில் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாக பிரச்சனையே காரணமாக இருப்பதாக தெரிவித்த, பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய விரைவில் கல்வி நிர்வாக அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி தீர்வினை காண இருப்பதாகவும் தெரிவித்தார். வவுனியா மாவட்ட கல்வி நிலைமை மற்றும் கல்வி மறு சீரமைப்பு தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு நேற்று (03.08.25) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் வவுனியா மாவட்ட கல்விசார் திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது. ஆசிரியர்கள், அதிபர்கள் பற்றாக்குறை அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆசிரியர் தொழிற்சங்கங்கள், அதிபர் தொழிற்சங்கங்கள், கல்வி நிர்வாக அதிகாரிகள் சங்கம் மற்றும் பாடசாலை மட்டங்களில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அதிபர்கள், ஆசிரியர்கள் சிலரும் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். இக்கருத்துக்களை செவிமடுத்த பிரதமர் கருத்து தெரிவித்த போது, “ஆசிரியர் நியமனங்கள் கடந்த ஐந்து வருடங்களாக வழங்கப்பட முடியாமல் இருப்பதற்கு அபிவிருத்தி உத்தியோதர்களாக உள்வாங்கப்பட்டவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டதன் பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அவ் வழக்கு விசாரணையில் இருப்பதே காரணம். விரைவில் இதற்கான தீர்ப்பு கிடைக்கும் என நம்புகின்றேன். அதன் பின்னர் ஆசிரியர் நியமனங்களை வழங்கவுள்ளோம். 2 “கல்வி மாணவர்களுக்கானது. அதனை நாம் சரியாக வழங்க வேண்டும். 50 மாணவர்களுக்கு குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக கவனம் செலுத்தப்படும். வட மாகாணத்தில் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாக பிரச்சனையே காரணம். விரைவில் கல்வி நிர்வாக அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி தீர்வினை காண இருக்கின்றேன் எனத் தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/218785/

வடக்கின் கல்வித் துறை பின்னடைய நிர்வாக பிரச்சனையே காரணம்!

1 month 2 weeks ago

வடக்கின் கல்வித் துறை பின்னடைய நிர்வாக பிரச்சனையே காரணம்!

adminAugust 4, 2025

Harini-1.jpeg?fit=700%2C393&ssl=1

வட மாகாணத்தில் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாக பிரச்சனையே காரணமாக இருப்பதாக தெரிவித்த, பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய விரைவில் கல்வி நிர்வாக அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி தீர்வினை காண இருப்பதாகவும் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட கல்வி நிலைமை மற்றும் கல்வி மறு சீரமைப்பு தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு நேற்று (03.08.25) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் வவுனியா மாவட்ட கல்விசார் திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

ஆசிரியர்கள், அதிபர்கள் பற்றாக்குறை அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆசிரியர் தொழிற்சங்கங்கள், அதிபர் தொழிற்சங்கங்கள், கல்வி நிர்வாக அதிகாரிகள் சங்கம் மற்றும் பாடசாலை மட்டங்களில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அதிபர்கள், ஆசிரியர்கள் சிலரும் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.

இக்கருத்துக்களை செவிமடுத்த பிரதமர் கருத்து தெரிவித்த போது,

“ஆசிரியர் நியமனங்கள் கடந்த ஐந்து வருடங்களாக வழங்கப்பட முடியாமல் இருப்பதற்கு அபிவிருத்தி உத்தியோதர்களாக உள்வாங்கப்பட்டவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டதன் பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அவ் வழக்கு விசாரணையில் இருப்பதே காரணம். விரைவில் இதற்கான தீர்ப்பு கிடைக்கும் என நம்புகின்றேன். அதன் பின்னர் ஆசிரியர் நியமனங்களை வழங்கவுள்ளோம். 2

“கல்வி மாணவர்களுக்கானது. அதனை நாம் சரியாக வழங்க வேண்டும். 50 மாணவர்களுக்கு குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக கவனம் செலுத்தப்படும். வட மாகாணத்தில் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாக பிரச்சனையே காரணம். விரைவில் கல்வி நிர்வாக அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி தீர்வினை காண இருக்கின்றேன் எனத் தெரிவித்தார்.

https://globaltamilnews.net/2025/218785/

செம்மணி மனிதப் புதைகுழியின் சர்வதேச விசாரணைக்கு சோமரத்ன ராஜபக்ச தயார் : அநுரவிற்கு பறந்த கடிதம்

1 month 2 weeks ago
சோமரத்ன ராஜபக்ச மனைவியின் கோரிக்கையை ஏற்று, அனுர தன்னை நிரூபிக்க வேண்டும்..! மனோ கணேசன் தெரிவிப்பு! “..கிருஷாந்தி குமாரசுவாமி மட்டும் அல்ல, இன்னமும் பல நூற்று கணக்கானோர் கொலை செய்யப்பட்டனர். இதை நான் 1998ம் வருடமே என் சாட்சியத்தில் சொன்னேன். இன்று ஐந்து அல்லது ஆறு மனித புதை குழிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. நான் சொன்னது உண்மை ஆகி உள்ளது.” “மொத்தமாக 250 முதல் 300 பேர் வரை சித்திரவதைக்கு உள்ளாகி கொன்று புதைக்க பட்டார்கள். இன்று தண்டனைக்கு உள்ளாகி இருக்கும் நானும், ஏனைய நால்வரும் மட்டும் இத்தனை பேரை கைது செய்து, சித்திரவதை செய்து, கொன்று, குழி வெட்டி, புதைக்க முடியுமா?” “யாழ்ப்பாணத்துக்கு செல்லும் பிரதான, சாலையில் அமைந்துள்ள, செம்மணி காவல் சாவடியில், பகல் நேரங்களில், அடையாளம் காட்டப்படுவோர், உடன் கைது செய்ய பட்டு, இராணுவ வாகனத்தில் , ஏற்றப்பட்டு, 7ம் இராணுவ படை தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, விசாரணை என்ற பெயரில், சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்டு, சடலங்களாக இரவு மீண்டும் செம்மணி காவல் சாவடிக்கு கொண்டு வரப்படுவர். மேலதிகாரிகளின் கட்டளை படி நாம் அந்த சடலங்களை அங்கே புதைப்போம். தொடர்ந்து புதைத்தோம். இதுதான் நடந்தது. கொலை செய்த மேலதிகாரிகள் தப்பி விட்டனர். புதைத்த நாம் தண்டனைக்கு உள்ளாகி உள்ளோம். சில மேலதிகாரிகள் கைதாகி வழக்கு தொடரப்பட்டு, பின் அந்த வழக்கு நின்று போய் விட்டது. அதிகாரிகள் தப்பி விட்டார்கள். நாம் அகப்பட்டுள்ளோம். இது அநீதி. சர்வதேச விசாரணை நடக்கும் பட்சத்தில் நான் சாட்சியம் அளித்து குற்றம் இழைத்த அதிகாரிகளின் பெயர்களை வெளி படுத்த தயாராக உள்ளேன்” லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்கிரம மூலம் இவ்வாறு கூறி உள்ளதாக தெரிவித்த, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், இவ்விதம், வெளி கொணர பட்டுள்ள கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கின் புதிய திருப்பம் தொடர்பில் மேலும் கூறியுள்ளதாவது, கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை குற்றவாளியான, லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவின் மனைவி திருமதி எஸ்.சி.விஜேவிக்கிரம, ஜனாதிபதி அனுர குமாரவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன் நகல்களை பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் அனுப்பி உள்ளார். ஐ.நாவுக்கும் அனுப்பி உள்ளார். அக்கடிதத்தில் அவரது கணவர் அவரிடம் கூறிய மேற்கண்ட விடயங்களை, அவர் எழுதியுள்ளார். ஆகவே இன்று இந்த கடிதம், அனுரகுமார திசாநாயக்கவின் “கோர்ட்டில்” நிற்கிறது. சர்வதேச கண்காணிப்பு விசாரணைக்கு ஜனாதிபதி அனுர உடன் பட வேண்டும். அதில் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச சுதந்திரமாக சாட்சியம் அளிக்க வேண்டும். ஆனால், இவற்றுக்கு முன், இன்று சிறையில் இருக்கும் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவுக்கு, உடனடியாக அங்கே அதி உயர் விசேட பாதுகாப்பு வழங்க பட வேண்டும். இது தொடர்பில், அரசியல் சிவில் சமூகமாக நாம் கூட்டு மேல் நடவடிக்கைக்கு தயார் ஆவோம். ஐநா மனித உரிமை ஆணையர் வொல்கர் டர்க்கிடம் நாம் அதிகார பூர்வமாக கோரிக்கை விடுப்போம். பிரசித்தி பெற்ற சித்திரவதை, பாலியல் வல்லுறவு, படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, தனக்கு ஆணை இட்ட மேலதிகாரிகளை அடையாளம் காட்ட தயார் என்கிறார். இலங்கை வரலாற்றில் இதுவரை, இப்படி ஒரு இராணுவத்தை சேர்ந்த நபர் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்து, தனக்கு ஆணை இட்ட மேலதிகாரிகளை அடையாளம் காட்ட தயார் என கூறவில்லை. ஆகவே, இதை ஏற்று மேல் நடவடிக்கை எடுக்க அனுர குமார அரசாங்கம் முன் வர வேண்டும். சர்வதேச நெருக்குதல்களை முறையாக தர ஐநா மனித உரிமை ஆணையகமும் முன் வர வேண்டும். இதை செய்ய முடியா விட்டால், இது ஒரு அரசாங்கமாகவோ, அது ஒரு ஐநா சபையாகவோ இருக்க முடியாது. இது இன்று சர்வதேச விவகாரம் ஆகி விட்டதை அனுர குமாரவும், வொல்கர் டர்க்கரும் உணர வேண்டும். அதனால்தான், அனுரவுக்கு செம்மணி விவகாரம் ஒரு அக்னி பரீட்சை என்று அன்றே சொன்னேன். இன்று மீண்டும் கூறுகிறேன். https://athavannews.com/2025/1441628

பிரித்தானிய நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்ற நூல்களை வன்பிரதியாகப் யாழ். நூலகத்திற்கு பெற்றுக்கொள்ள நடவடிக்கை!

1 month 2 weeks ago
பிரித்தானிய நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்ற நூல்களை வன்பிரதியாகப் யாழ். நூலகத்திற்கு பெற்றுக்கொள்ள நடவடிக்கை! adminAugust 4, 2025 யாழ்ப்பாண நூலகம் தொடர்பில் தான் முன் வைத்த வேண்டுகோள்களை செயற்படுத்தத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள பிரதமர் பூரண சம்மதத்தை வழங்கியுள்ளார் என யாழ் . மாநகர சபை உறுப்பினர் சு. கபிலன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பிராந்தியங்கள் சார்ந்து 1800 கள் தொடக்கம் 1950 வரையான காலப்பகுதிக்குட்பட்டு வெளியிடப்பட்ட அல்லது சேகரித்து பாதுகாக்கப்பட்டு தற்போது பெரிய பிரித்தானியாவினுடைய நூலகத்தில் இலத்திரனியல் பிரதியாக்கம் செய்யப்பட்டுள்ள நூல்களை யாழ்ப்பாண நூலகத்திலிருந்தும் கையாளக்கூடிய வகையில் இணையவழியில் இணைப்பித்தல். மற்றும் யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பிராந்தியங்கள் சார்ந்து 1800 கள் தொடக்கம் 1950 வரையான காலப்பகுதிக்குட்பட்டு வெளியிடப்பட்ட அல்லது சேகரித்து பெரிய பிரித்தானியாவினுடைய நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்ற நூல்களை வன்பிரதியாகப் பெற்றுக்கொள்ளல் அல்லது வன்பிரதியாக்கம் செய்து பெற்றுக்கொள்ளல். அத்துடன் நெதர்லாந்து பல்கலைக்கழகங்களிலும் எமது நூல்கள் இருப்பதாக அறியக்கிடக்கிறது. அவை தொடர்பிலும் உரிய தகவல்கள் ஆதார பூர்வமாகக் கிடைக்கப்பெற்றதும் கவனம் செலுத்தப்படும். இவற்றின் மூலமாக எமது யாழ்ப்பாண நூலகத்தில் 1981 ல் எரித்து அழிக்கப்பட்ட சில அரிய நூல்கள் மற்றும் ஆவணங்களை மீளப்பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்திருந்த பிரதமரிடம் கோரியுள்ளார். https://globaltamilnews.net/2025/218779/

பிரித்தானிய நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்ற நூல்களை வன்பிரதியாகப் யாழ். நூலகத்திற்கு பெற்றுக்கொள்ள நடவடிக்கை!

1 month 2 weeks ago

பிரித்தானிய நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்ற நூல்களை வன்பிரதியாகப் யாழ். நூலகத்திற்கு பெற்றுக்கொள்ள நடவடிக்கை!

adminAugust 4, 2025

Kabilan.jpg?fit=1170%2C591&ssl=1

யாழ்ப்பாண நூலகம் தொடர்பில் தான் முன் வைத்த வேண்டுகோள்களை செயற்படுத்தத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள பிரதமர் பூரண சம்மதத்தை வழங்கியுள்ளார் என யாழ் . மாநகர சபை உறுப்பினர் சு. கபிலன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பிராந்தியங்கள் சார்ந்து 1800 கள் தொடக்கம் 1950 வரையான காலப்பகுதிக்குட்பட்டு வெளியிடப்பட்ட அல்லது சேகரித்து பாதுகாக்கப்பட்டு தற்போது பெரிய பிரித்தானியாவினுடைய நூலகத்தில் இலத்திரனியல் பிரதியாக்கம் செய்யப்பட்டுள்ள நூல்களை யாழ்ப்பாண நூலகத்திலிருந்தும் கையாளக்கூடிய வகையில் இணையவழியில் இணைப்பித்தல்.

மற்றும் யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பிராந்தியங்கள் சார்ந்து 1800 கள் தொடக்கம் 1950 வரையான காலப்பகுதிக்குட்பட்டு வெளியிடப்பட்ட அல்லது சேகரித்து பெரிய பிரித்தானியாவினுடைய நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்ற நூல்களை வன்பிரதியாகப் பெற்றுக்கொள்ளல் அல்லது வன்பிரதியாக்கம் செய்து பெற்றுக்கொள்ளல்.

அத்துடன் நெதர்லாந்து பல்கலைக்கழகங்களிலும் எமது நூல்கள் இருப்பதாக அறியக்கிடக்கிறது. அவை தொடர்பிலும் உரிய தகவல்கள் ஆதார பூர்வமாகக் கிடைக்கப்பெற்றதும் கவனம் செலுத்தப்படும்.

இவற்றின் மூலமாக எமது யாழ்ப்பாண நூலகத்தில் 1981 ல் எரித்து அழிக்கப்பட்ட சில அரிய நூல்கள் மற்றும் ஆவணங்களை மீளப்பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்திருந்த பிரதமரிடம் கோரியுள்ளார்.

https://globaltamilnews.net/2025/218779/

ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை!

1 month 2 weeks ago
சுற்றுலா பயணிகளின் வருகை மூலம் $3.7 பில்லியன் வருமானம்! கடந்த 06 மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 3.7 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் உள்ள சீதைஅம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்றைய தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், கடந்த ஆறு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் $3.7 பில்லியன் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு அடுத்த சில மாதங்களில் மேலும் $3.7 பில்லியன் வருவாய் இலக்கை எதிர்பார்க்கிறது என்றும் அவர் கூறினார். இந்த ஆண்டு இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மூலம் இந்திய சுற்றுலாப் பயணிகள் முன்னணியில் உள்ளனர். மேலும் இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மத சுற்றுலாப் பயணிகளில் முன்னணியில் உள்ளனர். எனவே மதப் பயணத்தை ஊக்குவிக்கும் நம்பிக்கையில் அரசாங்கம் ஆலயத்துக்கு மேலும் ஒரு ஏக்கர் நிலத்தை வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க மற்றும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுரா செனவிரட்ன ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். https://athavannews.com/2025/1441652

சூட்கேஸுக்குள் இருந்து 2 வயது குழந்தை மீட்பு; நியூஸிலாந்தில் சம்பவம்!

1 month 2 weeks ago
சூட்கேஸுக்குள் இருந்து 2 வயது குழந்தை மீட்பு; நியூஸிலாந்தில் சம்பவம்! பேருந்து ஒன்றிலிருந்த சூட்கேஸுக்குள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு வயது குழந்தை ஒன்று உயிருடன் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் நியூஸிலாந்தில் பதிவாகியுள்ளது. குறித்த குழந்தையை கைவிட்ட குற்றச்சாட்டில் நியூசிலாந்து பெண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (03) கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை ஆக்லாந்திலிருந்து 60 மைல் வடக்கே உள்ள கைவாகாவில் திட்டமிடப்பட்ட ஒரு நிறுத்தத்தின் போது, ஒரு பயணி லக்கேஜ் பெட்டியை அணுக அனுமதி கேட்டதை அடுத்து, பேருந்து சாரதி பைக்குள் அசைவு ஒன்று ஏற்படுதை கவனித்தார். சாரதி, சூட்கேஸைத் திறந்தபோது, அவர்கள் அந்த 2 வயது பெண் குழந்தையை கண்டுபிடித்தனர். இதன்போது, குழந்தையின் உடல் சூடாக இருந்ததாகவும், உடல் ரீதியாக எந்தப் பாதிப்பும் இல்லாமல் தோன்றியதாகவும் அதிகாரிகள் கூறினர். மீட்பின் பின்னர், குழந்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், அங்கு விரிவான மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டது. குறித்த குழந்தை சூட்கேஸில் எவ்வளவு நேரம் இருந்தாள், அல்லது பேருந்து எந்த நகரங்களுக்கு இடையே பயணித்தது என்பது குறித்து அதிகாரிகள் எந்தக் கருத்தையும் கூறவில்லை. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பெயர் குறிப்பிடப்படாத 27 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் குழந்தையை மோசமாக கையாண்டமை அல்லது புறக்கணித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார். அந்தப் பெண் திங்கட்கிழமை (04) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். https://athavannews.com/2025/1441659