Aggregator
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
குட்டிக் கதைகள்.
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
ஜெனீவா தீர்மானமும் சுமந்திரனின் சதிக்கூட்டணியும்.
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
முஸ்லிம்களின் இழப்புகளும் நீதிக்கான கோரிக்கைகளும்
ஜெனீவா தீர்மானமும் சுமந்திரனின் சதிக்கூட்டணியும்.
ஜெனீவா தீர்மானமும் சுமந்திரனின் சதிக்கூட்டணியும்.
இனப்படு*கொ*லை | முன்னணியின் மூடிமறைப்பு அரசியல் .
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையில் சாரதி அனுமதி பத்திரத்தை எவ்வாறு பெறலாம்?
முஸ்லிம்களின் இழப்புகளும் நீதிக்கான கோரிக்கைகளும்
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
முஸ்லிம்களின் இழப்புகளும் நீதிக்கான கோரிக்கைகளும்
19 வருடங்களிற்கு முன்னர் அலுவலகத்தில் படுகொலை செய்யப்பட்ட அக்சன்பாம் மனிதாபிமான பணியாளர்கள்
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
வடக்கின் கல்வித் துறை பின்னடைய நிர்வாக பிரச்சனையே காரணம்!
மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்வதாயின் முழுமையாக, முறையாக பகிர வேண்டும் ; தயாசிறி ஜயசேகர
மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்வதாயின் முழுமையாக, முறையாக பகிர வேண்டும் ; தயாசிறி ஜயசேகர
04 Aug, 2025 | 04:23 PM
(இராஜதுரை ஹஷான்)
மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்வதாயின் முழுமையாக, முறையாக பகிர வேண்டும். அல்லது ஒன்றும் செய்யாமலிருக்க வேண்டும். அதிகாரங்களை முறையாக பகிராமல் மாகாண சபைகள் வெள்ளை யானை என்று சித்தரிக்கப்படுவது முறையற்றது. வலது கையில் அதிகாரத்தை வழங்கி இடதுகையில் பறித்த நிலையே காணப்படுகிறது. இது முறையற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்கினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுயநிர்ணயம் தோற்றம் பெறும் என்று ஒரு தரப்பினர் தவறானதொரு நிலைப்பாட்டை ஏற்படுத்தியுள்ளார்கள். இதற்கு ஒருசில அரசியல் கட்சிகள் பொறுப்புக்கூற வேண்டும். மாகாண சபைத் தேர்தலை நடத்த எடுத்துள்ள நடவடிக்கைகளை அரசாங்கம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
கொழும்பில் திங்கட்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
மாகாண சபை முறைமை தொடர்பில் பாராளுமன்றத்தில் பல தனிநபர் பிரேரணைகளை முன்வைத்துள்ளேன். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அவசியம் அரசாங்கத்துக்கு காணப்படுகின்ற நிலையில் அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது.
மாகாண சபைத் தேர்தல் பற்றி அடுத்தாண்டு ஜனவரிக்கு பின்னர் தீர்மானிக்க முடியும் என்று அமைச்சர் ஒருவர் குறிப்பிடுகிறார். மாகாண சபை முறைமையில் காணப்படும் தொழில்நுட்ப சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கு 06 மாதங்களேனும் செல்லும் என்று பிறிதொரு அமைச்சர் குறிப்பிடுகிறார்.
மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதான செல்வாக்கு குறைவடைந்துள்ளதால் மாகாண சபை முறைமையை இரத்துச் செய்யவோ அல்லது மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்து பிற்போடுவதற்கோ இடமளிக்க முடியாது.
2013 ஆம் ஆண்டுக்கு பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாத சூழலே காணப்படுகிறது. இதற்கு 2010 இற்கு பின்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் பொறுப்புக்கூற வேண்டும்.
2015-2019 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு மாகாண சபைத் தேர்தலை பிற்போட்டது. திருத்த யோசனையை முன்வைத்த அமைச்சரே குறித்த பிரேரணைக்கு எதிராக வாக்களித்தார்.
ஒன்று பழைய தேர்தல் முறைமைக்கு அமைய விகிதாசார முறைமையில் சிறு திருத்தங்களை மேற்கொண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்.
அல்லது தற்போது காணப்படுகின்ற திருத்தங்களுடன் குழுவின் அறிக்கையின் யோசனையை பிரதமரால் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து புதிய தேர்தல் முறைமையின் கீழ் தேர்தலை நடத்த முடியும்.
இரண்டு முறைமையில் ஒன்றை தெரிவு செய்து காலம் தாழ்த்தாது அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும். மாகாணசபை முறைமை மற்றும் மாகாணசபைத் தேர்தல் குறித்து மூன்று திருத்த யோசனைகளை பாராளுமன்றத்துக்கு முன்வைத்துள்ளேன்.
1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாண சபை திருத்த பிரேரணை, 1989 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க மாகாண சபைகள் உப ஏற்பாடுகள் சட்ட திருத்த பிரேரணை, 1992 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க மாகாண அதிகார பரவலாக்க திருத்த பிரேரணை ஆகியன அவையாகும்.
மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தனிநபர் பிரேரணைகள் குறித்து சட்டமாக அதிபர் 6 வார காலத்துக்குள் தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.
ஆனால் 15 அல்லது 20 வாரங்கள் கடந்துள்ள போதும் சட்டமா அதிபர் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு சட்டமா அதிபரை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்கிறதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.
அரசியலமைப்பின் பிரகாரம் மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்வதாயின் அவற்றை சிறந்த முறையில் முறையாக பகிர வேண்டும். மாகாண சபை அதிகார பகிர்வில் பாரிய சிக்கல் நிலை காணப்படுகிறது.
வலது கையில் வழங்கிய அதிகாரத்தை இடது கையில் பறிக்கும் நிலைக்கு மாகாண சபை அதிகார நிலை தள்ளப்பட்டுள்ளது. மாகாணங்களுக்கு உரித்தான அதிகாரங்களை ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தின் ஊடாக பறித்துக் கொண்டுள்ளார். சுகாதாரம், கல்வி மற்றும் நிர்வாக கட்டமைப்பில் இந்த நெருக்கடி நிலைமை காணப்படுகிறது. மாகாணங்களுக்குரிய விடயதானங்கள் பலவந்தமான முறையில் மத்திய அரசுக்கு மீளப்பெறப்பட்டுள்ளன.
மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்வதாயின் முழுமையாக, முறையாக பகிர வேண்டும்.அல்லது ஒன்றும் செய்யாமலிருக்க வேண்டும்.
அதிகாரங்களை முறையாக பகிராமல் மாகாண சபைகள் வெள்ளை யானை என்று சித்தரிக்கப்படுவது முறையற்றது. மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்காமல், கைவிலங்கிட்டு எதனையும் செய்ய முடியாது. இவ்வாறான செயற்பாடுகளினால் மாகாண சபைகள் வினைத்திறாக செயற்படாமல், வெள்ளையானை போன்றே காட்சியளிக்கும்.
மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்கினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுயநிர்ணயம் தோற்றம் பெறும் என்று ஒரு தரப்பினர் தவறானதொரு நிலைப்பாட்டை ஏற்படுத்தியுள்ளார்கள். இதற்கு ஒருசில அரசியல் கட்சிகள் பொறுப்புக்கூற வேண்டும்.
மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் பற்றி விசேட அவதானம் செலுத்தப்படுகிறது. பொலிஸ் அதிகாரங்களை மாகாண முதலமைச்சருக்கு வழங்கினால் அது அரசியல் மயப்படுத்தப்படும் என்பதில் உறுதியாக உள்ளேன்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஊடாக இந்த அதிகாரம் கண்காணிக்கப்பட வேண்டும். அத்துடன் காணி அதிகாரங்கள் தொடர்பில் காணி ஆணைக்குழு விசேட திட்டத்தை அல்லது வழிமுறையை செயற்படுத்த வேண்டும்.
மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசாங்கம் மந்தகதியில் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. முடிந்தால் மாகாண சபை விரைவாக நடத்துங்கள் என்று அரசாங்கத்திற்கு சவால் விடுக்கிறோம்.
மாகாண சபை அதிகாரத்தை எதிர்க்கட்சிகள் முழுமையாக கைப்பற்றும்.அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம் என்றார்.