Aggregator

நிபா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இலங்கை நடவடிக்கை

1 month ago

நிபா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இலங்கை நடவடிக்கை

06 Feb, 2026 | 12:55 PM

image

இலங்கையில் நிபா வைரஸ் (NiV) பரவலைக் கண்டறியவும், அதற்குப் பதிலளிக்கவும் சுகாதாரத் துறை தனது தயார்நிலையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இலங்கையின் முதன்மை ஆய்வகமான வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் (Medical Research Institute - MRI) நிபா வைரஸைக் கண்டறியும் திறனை அதீத தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தியுள்ளது.

இதன் மூலம் வைரஸ் தொற்று சந்தேகத்திற்குரிய நபர்களுக்கு ஆரம்பத்திலேயே பரிசோதனைகளை மேற்கொண்டு வைரஸ் பாதிப்பை உறுதி செய்ய முடியும். இதற்காக நவீன தொழில்நுட்பக் கருவிகள் ஆய்வகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் வட்டாரம் தெரிவித்துள்ளது.

நிபா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒரு வகை நச்சுயிரி (Zoonotic disease) ஆகும்.

முக்கியமாக 'பழம் தின்னும் வௌவால்கள்' (Fruit bats) மூலம் பரவுகிறது. அசுத்தமான உணவு மற்றும் பாதிக்கப்பட்ட மனிதர்களுடனான நேரடித் தொடர்பின் மூலமும் இது பரவக்கூடும்.

இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களில் 40% முதல் 75% வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான தொற்றுநோய்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

தற்போது இந்த வைரஸிற்குச் சிகிச்சையளிக்கத் தடுப்பூசிகளோ அல்லது பிரத்யேக மருந்துகளோ இல்லை. தீவிரமான மருத்துவக் கண்காணிப்பு (Supportive care) மட்டுமே ஒரே வழி ஆகும்.

https://www.virakesari.lk/article/237974

’’45 பவுனைவிட நேர்மைதான் முக்கியம்” பத்மாவுக்கு மலேசிய அமைச்சர் பாராட்டு

1 month ago

’’45 பவுனைவிட நேர்மைதான் முக்கியம்” பத்மாவுக்கு மலேசிய அமைச்சர் பாராட்டு

image_4ed76e7029.jpg

சென்னையில் குப்பையில் கிடந்த 45 சவரன் நகையை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை மலேசிய அரசு கவுரவித்துள்ளது. அவருக்கு தங்க மோதிரத்தையும் பரிசாக அனுப்பியுள்ளது.

குப்பையில் கிடந்த 45 பவுன் தங்கத்தை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவுக்கு அன்றாடம் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் தற்போது கடல் கடந்தும் அவருக்கு கவுரவம் தேடி வருகிறது.

பத்மாவின் செயலால் நெகிழ்ந்து போன மலேசிய அரசின் சட்டத் துறை அமைச்சர் குலசேகரன், தனது உதவியாளர் வடிவுக்கரசியை சென்னை அனுப்பியிருந்தார். அவரிடம் பத்மாவுக்கு அணிவிக்குமாறு கூறி மோதிரத்தையும் பரிசாக கொடுத்துள்ளார்.

இதையடுத்து சென்னை வந்த வடிவுக்கரசி, நேராக பத்மா இருப்பிடத்தை தேடி வந்து அவருக்கு பாராட்டுகளை தெரிவித்ததுடன் அமைச்சர் கொடுத்த மோதிரத்தையும் அணிவித்தார். மேலும் அமைச்சருக்கு வீடியோ கால் போட்டு பத்மாவை பேச வைத்தார். அப்போது பத்மாவுக்கு அமைச்சர் குலசேகரன் பாராட்டுகளை தெரிவித்தார். இதனால் பத்மா நெகிழ்ந்து போனார்.

திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 48 வயது பத்மா, தூய்மைப் பணியாளர். கடந்த ஜனவரி 11 அன்று, தி.நகர் வண்டிக்காரன் பகுதியில் பணியிலிருந்தபோது, சாலையில் கிடந்த ஒரு பையைக் கண்டெடுத்தார். அதில் 45 பவுன் தங்க நகைகள் இருந்தன.

உடனடியாக, அந்த நகைகளை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில், அவை நங்கநல்லூரைச் சேர்ந்த 46 வயது பரமேஷுக்குச் சொந்தமானது எனத் தெரியவந்து, உரியவரிடம் நகைகள் ஒப்படைக்கப்பட்டன. இந்நேர்மைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கினார்.

தொடர்ந்து, சென்னை மத்திய கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம், பத்மாவின் புகைப்படத்துடன் கூடிய 'மை ஸ்டாம்ப்' அஞ்சல் தலையை வெளியிட்டுச் சிறப்பித்தது. இச்செயல் பல தரப்பிலும் பாராட்டுக்களைப் பெற்றது. இதனிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் பத்மாவை அழைத்து "முன்களப் பணியாளரான பத்மாவின் செயலை அங்கீகரித்து, அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் தங்கச் சங்கிலி அணிவித்து கௌரவித்தார்.

அந்த வகையில் தற்போது நடிகர் பார்த்திபனும், பத்மாவை பாராட்டியுள்ளார். பத்மாவுக்கு காலணியை அணிவித்த பார்த்திபன், அவருக்கு பாத பூஜை செய்து கௌரவப்படுத்தினார். பாதணியை பார்த்திபன் கீழே வைத்து அணிய சொன்ன போது பத்மா, நெகிழ்ச்சி அடைந்தார். பின்னர் அவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தங்கத்தின் மதிப்பு ஏற ஏற, மனிதத்தின் மரியாதை குறைந்துகொண்டே போய், ஒரு கிராம் ஒரு லட்ச ரூபாயை நெருங்கும்போது, லட்சக்கணக்கான உயிர்கள் கொல்லப்படுவது உறுதியாகிவிடும்.

வருடத்தில் 360 நாளாவது உழைக்கும் துப்புரவு பணியாளர் திருமதி பத்மா அவர்கள், குப்பையில் கிடந்த 360 கிராம் நகையை உரியவரிடம் சேர்ப்பித்து, அந்த ஒரு செயலின் மூலம் உலகமகா உன்னத மனுஷியாக அவதாரம் எடுத்திருக்கிறார்.

என்னை Chief Guest-ஆக அழைத்த எத்திராஜ் கல்லூரிக்கு, நான் வெறும் Guest-ஆகவும் Chief-ஆக திருமதி பத்மாவை அழைத்துச் சென்று, பாதணி அணிவித்து, பாத பூஜை செய்து, புடவை போர்த்தி, 'உலக அழகி' என்ற கிரீடம் சூட்டி நான் பேரழகன் ஆனேன்... இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இவ்வாறு பத்மாவுக்கு நாளுக்கு நாள் பாராட்டுகளும் கௌரவங்களும் குவிந்து வரும் நிலையில் மலேசியாவில் இருந்தும் பாராட்டு மழை பெய்துள்ளது. மலேசிய அமைச்சர் குலசேகரன் பத்மாவுக்கு தங்க மோதிரம் அணிவித்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

https://www.tamilmirror.lk/செய்திகள்/45-பவுனைவிட-நேர்மைதான்-முக்கியம்-பத்மாவுக்கு-மலேசிய-அமைச்சர்-பாராட்டு/175-372088

’’45 பவுனைவிட நேர்மைதான் முக்கியம்” பத்மாவுக்கு மலேசிய அமைச்சர் பாராட்டு

1 month ago
’’45 பவுனைவிட நேர்மைதான் முக்கியம்” பத்மாவுக்கு மலேசிய அமைச்சர் பாராட்டு சென்னையில் குப்பையில் கிடந்த 45 சவரன் நகையை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை மலேசிய அரசு கவுரவித்துள்ளது. அவருக்கு தங்க மோதிரத்தையும் பரிசாக அனுப்பியுள்ளது. குப்பையில் கிடந்த 45 பவுன் தங்கத்தை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவுக்கு அன்றாடம் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் தற்போது கடல் கடந்தும் அவருக்கு கவுரவம் தேடி வருகிறது. பத்மாவின் செயலால் நெகிழ்ந்து போன மலேசிய அரசின் சட்டத் துறை அமைச்சர் குலசேகரன், தனது உதவியாளர் வடிவுக்கரசியை சென்னை அனுப்பியிருந்தார். அவரிடம் பத்மாவுக்கு அணிவிக்குமாறு கூறி மோதிரத்தையும் பரிசாக கொடுத்துள்ளார். இதையடுத்து சென்னை வந்த வடிவுக்கரசி, நேராக பத்மா இருப்பிடத்தை தேடி வந்து அவருக்கு பாராட்டுகளை தெரிவித்ததுடன் அமைச்சர் கொடுத்த மோதிரத்தையும் அணிவித்தார். மேலும் அமைச்சருக்கு வீடியோ கால் போட்டு பத்மாவை பேச வைத்தார். அப்போது பத்மாவுக்கு அமைச்சர் குலசேகரன் பாராட்டுகளை தெரிவித்தார். இதனால் பத்மா நெகிழ்ந்து போனார். திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 48 வயது பத்மா, தூய்மைப் பணியாளர். கடந்த ஜனவரி 11 அன்று, தி.நகர் வண்டிக்காரன் பகுதியில் பணியிலிருந்தபோது, சாலையில் கிடந்த ஒரு பையைக் கண்டெடுத்தார். அதில் 45 பவுன் தங்க நகைகள் இருந்தன. உடனடியாக, அந்த நகைகளை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில், அவை நங்கநல்லூரைச் சேர்ந்த 46 வயது பரமேஷுக்குச் சொந்தமானது எனத் தெரியவந்து, உரியவரிடம் நகைகள் ஒப்படைக்கப்பட்டன. இந்நேர்மைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கினார். தொடர்ந்து, சென்னை மத்திய கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம், பத்மாவின் புகைப்படத்துடன் கூடிய 'மை ஸ்டாம்ப்' அஞ்சல் தலையை வெளியிட்டுச் சிறப்பித்தது. இச்செயல் பல தரப்பிலும் பாராட்டுக்களைப் பெற்றது. இதனிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் பத்மாவை அழைத்து "முன்களப் பணியாளரான பத்மாவின் செயலை அங்கீகரித்து, அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் தங்கச் சங்கிலி அணிவித்து கௌரவித்தார். அந்த வகையில் தற்போது நடிகர் பார்த்திபனும், பத்மாவை பாராட்டியுள்ளார். பத்மாவுக்கு காலணியை அணிவித்த பார்த்திபன், அவருக்கு பாத பூஜை செய்து கௌரவப்படுத்தினார். பாதணியை பார்த்திபன் கீழே வைத்து அணிய சொன்ன போது பத்மா, நெகிழ்ச்சி அடைந்தார். பின்னர் அவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தங்கத்தின் மதிப்பு ஏற ஏற, மனிதத்தின் மரியாதை குறைந்துகொண்டே போய், ஒரு கிராம் ஒரு லட்ச ரூபாயை நெருங்கும்போது, லட்சக்கணக்கான உயிர்கள் கொல்லப்படுவது உறுதியாகிவிடும். வருடத்தில் 360 நாளாவது உழைக்கும் துப்புரவு பணியாளர் திருமதி பத்மா அவர்கள், குப்பையில் கிடந்த 360 கிராம் நகையை உரியவரிடம் சேர்ப்பித்து, அந்த ஒரு செயலின் மூலம் உலகமகா உன்னத மனுஷியாக அவதாரம் எடுத்திருக்கிறார். என்னை Chief Guest-ஆக அழைத்த எத்திராஜ் கல்லூரிக்கு, நான் வெறும் Guest-ஆகவும் Chief-ஆக திருமதி பத்மாவை அழைத்துச் சென்று, பாதணி அணிவித்து, பாத பூஜை செய்து, புடவை போர்த்தி, 'உலக அழகி' என்ற கிரீடம் சூட்டி நான் பேரழகன் ஆனேன்... இவ்வாறு தெரிவித்திருந்தார். இவ்வாறு பத்மாவுக்கு நாளுக்கு நாள் பாராட்டுகளும் கௌரவங்களும் குவிந்து வரும் நிலையில் மலேசியாவில் இருந்தும் பாராட்டு மழை பெய்துள்ளது. மலேசிய அமைச்சர் குலசேகரன் பத்மாவுக்கு தங்க மோதிரம் அணிவித்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார். https://www.tamilmirror.lk/செய்திகள்/45-பவுனைவிட-நேர்மைதான்-முக்கியம்-பத்மாவுக்கு-மலேசிய-அமைச்சர்-பாராட்டு/175-372088

🚨யாழில். மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் காவல்துறை உத்தியோகஸ்தர் – 20 கிலோ மீட்டர் துரத்தி சென்று கைது செய்த காவல்துறையினா்

1 month ago
🚨யாழில். மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் காவல்துறை உத்தியோகஸ்தர் – 20 கிலோ மீட்டர் துரத்தி சென்று கைது செய்த காவல்துறையினா் adminFebruary 6, 2026 யாழ்ப்பாணத்தில் காவல்துறையினாின் கட்டளையை மீறி 20 கிலோமீட்டர் தூரம் துரத்திச் செல்லப்பட்ட முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் கைது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரைகாவல்துறையினர் சினிமா பாணியில் துரத்திச் சென்று பிடித்துள்ளனர். பருத்தித்துறையில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை காவல்துறையினா் நிறுத்தச் சொன்னபோது, சாரதி வாகனத்தை நிறுத்தாமல் அதிவேகமாகச் செலுத்தி தப்பியோடியுள்ளார். சுமார் 20 கிலோமீட்டர் தூரம் காவல்துறையினா் அந்த வாகனத்தைத் துரத்திச் சென்றுள்ளனர். ஒரு கட்டத்தில் வாகனத்தை வீதியில் நிறுத்திவிட்டு சாரதி ஓட முயற்சித்தபோது காவல்துறையினா் அவரை மடக்கிப் பிடித்தனர். கைது செய்யப்பட்ட நபரை விசாரித்தபோது, அவர் ஒரு முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர் என்பது தெரியவந்தது. ஏற்கனவே சட்டவிரோத செயல்களுக்காக அவர் காவல்துறை சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர் என்பதும் அம்பலமானது. கைது செய்யப்பட்ட நபர், தனக்கு காவல்துறை திணைக்களத்தில் இருந்த பழைய தொடர்புகள் மற்றும் செல்வாக்கைப் பயன்படுத்தி நீண்டகாலமாக சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். தற்போது அவர் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. https://globaltamilnews.net/2026/228485/

🚨யாழில். மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் காவல்துறை உத்தியோகஸ்தர் – 20 கிலோ மீட்டர் துரத்தி சென்று கைது செய்த காவல்துறையினா்

1 month ago

🚨யாழில். மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் காவல்துறை உத்தியோகஸ்தர் – 20 கிலோ மீட்டர் துரத்தி சென்று கைது செய்த காவல்துறையினா்

adminFebruary 6, 2026

Global-1.png?fit=940%2C788&ssl=1

யாழ்ப்பாணத்தில் காவல்துறையினாின் கட்டளையை மீறி 20 கிலோமீட்டர் தூரம் துரத்திச் செல்லப்பட்ட முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் கைது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரைகாவல்துறையினர் சினிமா பாணியில் துரத்திச் சென்று பிடித்துள்ளனர்.  பருத்தித்துறையில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை காவல்துறையினா் நிறுத்தச் சொன்னபோது, சாரதி வாகனத்தை நிறுத்தாமல் அதிவேகமாகச் செலுத்தி தப்பியோடியுள்ளார்.

சுமார் 20 கிலோமீட்டர் தூரம் காவல்துறையினா்  அந்த வாகனத்தைத் துரத்திச் சென்றுள்ளனர். ஒரு கட்டத்தில் வாகனத்தை வீதியில் நிறுத்திவிட்டு சாரதி ஓட முயற்சித்தபோது காவல்துறையினா் அவரை மடக்கிப் பிடித்தனர்.

கைது செய்யப்பட்ட நபரை விசாரித்தபோது, அவர் ஒரு முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர் என்பது தெரியவந்தது. ஏற்கனவே சட்டவிரோத செயல்களுக்காக அவர் காவல்துறை சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர் என்பதும் அம்பலமானது.

கைது செய்யப்பட்ட நபர், தனக்கு காவல்துறை திணைக்களத்தில் இருந்த பழைய தொடர்புகள் மற்றும் செல்வாக்கைப் பயன்படுத்தி நீண்டகாலமாக சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். தற்போது அவர் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

https://globaltamilnews.net/2026/228485/

யாழ் சுதுமலை பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்!

1 month ago
யாழ் சுதுமலை பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்! யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோவிலைச் சூழ உள்ள பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சுதுமலை பொதுச் சுகாதார பரிசோதகர் ம.ஜெயபிரதீப் இன் ஏற்பாட்டில் சுதுமலை அம்மன் ஆலய வளாகமும் அதனைச் சூழ உள்ள பிரதேசமும் புகையிலை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு மானிப்பாய் பரிஸ் அரிமா கழகத்தினர் அனுசரணை வழங்கியிருந்தார்கள். இதில் கிராம சேவையாளர் சுதுமலை சிந்மய பாரதி வித்தியாசாலை மாணவர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். https://athavannews.com/2026/1463439

யாழ் சுதுமலை பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்!

1 month ago

1-1.jpeg?resize=750%2C375&ssl=1

யாழ் சுதுமலை பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்!

யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோவிலைச் சூழ உள்ள பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

சுதுமலை பொதுச் சுகாதார பரிசோதகர் ம.ஜெயபிரதீப் இன் ஏற்பாட்டில் சுதுமலை அம்மன் ஆலய வளாகமும் அதனைச் சூழ உள்ள பிரதேசமும் புகையிலை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு மானிப்பாய் பரிஸ் அரிமா கழகத்தினர் அனுசரணை வழங்கியிருந்தார்கள்.

இதில் கிராம சேவையாளர் சுதுமலை சிந்மய பாரதி வித்தியாசாலை மாணவர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

https://athavannews.com/2026/1463439

எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!

1 month ago
எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்! நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியங்கள் (நீக்குதல்) சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிக்கும் முரணாக அமையவில்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அதன்படி, இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. சட்டமூலத்துக்கு எதிரான சட்டப்பூர்வ சவாலைத் தொடர்ந்து, அரசியலமைப்பின் பிரிவு 121(1) இன் படி, இந்தத் உயர் தீர்ப்பு சபாநாயகருக்குத் தெரிவிக்கப்பட்டது. இன்று (6) நாடாளுமன்றத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிவித்த சபாநாயகர், சட்டமூலத்தின் எந்த விதிகளும் அரசியலமைப்பு விதிகளை மீறவில்லை என்பதை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், இது அதை நிறைவேற்றுவதற்கான வழியைத் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை இரத்து செய்வது தொடர்பான முன்மொழியப்பட்ட சட்டமூலம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஜனவரியில் வெளியிடப்பட்டது. இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு அனுமதிக்கும் தற்போதைய சட்ட விதிகளை நீக்குவதற்கு இந்த சட்டமூலம் வழிவகுக்கிறது. நீண்டகாலமாக பொதுமக்களின் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியிருந்த இந்த சலுகையை ஒழிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை முழுமையாக இரத்து செய்ய இந்த சட்டமூலம் பரிந்துரைக்கிறது. இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், தற்போது ஓய்வூதியம் பெற்றுவரும் முன்னாள் உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகளும் நிறுத்தப்படும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய, அரசாங்கத்தின் செலவீனங்களைக் குறைக்கும் ஒரு நடவடிக்கையாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1463455

எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!

1 month ago

Court.jpg?resize=750%2C375&ssl=1

எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியங்கள் (நீக்குதல்) சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிக்கும் முரணாக அமையவில்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

அதன்படி, இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

சட்டமூலத்துக்கு எதிரான சட்டப்பூர்வ சவாலைத் தொடர்ந்து, அரசியலமைப்பின் பிரிவு 121(1) இன் படி, இந்தத் உயர் தீர்ப்பு சபாநாயகருக்குத் தெரிவிக்கப்பட்டது.

இன்று (6) நாடாளுமன்றத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிவித்த சபாநாயகர், சட்டமூலத்தின் எந்த விதிகளும் அரசியலமைப்பு விதிகளை மீறவில்லை என்பதை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், இது அதை நிறைவேற்றுவதற்கான வழியைத் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை இரத்து செய்வது தொடர்பான முன்மொழியப்பட்ட சட்டமூலம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஜனவரியில் வெளியிடப்பட்டது.

இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு அனுமதிக்கும் தற்போதைய சட்ட விதிகளை நீக்குவதற்கு இந்த சட்டமூலம் வழிவகுக்கிறது. நீண்டகாலமாக பொதுமக்களின் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியிருந்த இந்த சலுகையை ஒழிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை முழுமையாக இரத்து செய்ய இந்த சட்டமூலம் பரிந்துரைக்கிறது.

இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், தற்போது ஓய்வூதியம் பெற்றுவரும் முன்னாள் உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகளும் நிறுத்தப்படும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய, அரசாங்கத்தின் செலவீனங்களைக் குறைக்கும் ஒரு நடவடிக்கையாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2026/1463455

“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

1 month ago
நான் நினைக்கிறேன் சிங்களம் தமிழ் மக்களின் மீதுள்ள அவநம்பிக்கையினை களைந்து (தமிழ் தேசியம் தொடர்பான) ஒரே இலங்கைக்குள் சமாதானமாக செல்ல முயற்சிப்பதற்கான (அதிகார பகிர்வு) நல்லெண்ண சமிஞ்சையாக இருக்கும். சிங்கள மக்களின் மனங்களில் உருவாக்கப்படுகின்ற சிந்தனைகளின் பின்னணியில் துட்டகைமுனு கதைகள் அவர்களது எண்ணத்தில் தமிழர்கள் ஒரு முடிக்கப்படாத பிரச்சினையாக சிறுவயதிலிருந்து உருவகிக்கப்படுகின்றது. அதேநேரம் தமிழ் மக்களிடமும் தமிழ்த்தேசியம் அவர்களின் வரலாற்று வழியாக வரும் போது இரண்டும் எதிரும் புதிருமாக ஒரு தீர்வை எட்ட முடியாது, அதற்காக இரண்டு தரப்பும் இறங்கி வரவேண்டும். தற்போது தமிழ் தரப்பிடம் ட்ரம்ப் கூறுவது போல சீட்டு இல்லை அதனால் இறங்கி வந்து விட்டார்கள் ஆனால் சிங்களத்தரப்பு இறங்கிவராது அப்படி இறங்கிவரவேண்டுமானால் இலங்கை ஒரு பொருளாதார நெருக்கடி போன்ற அனைத்துலக சமூகத்தில் தங்கிநிற்கின்ற நிலை எதிர்காலத்தில் உருவாகவேண்டும் அதுவே தமிழ் மக்களிற்கான Window of opportunity.

சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது!

1 month ago
சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது! யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை பகுதியில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தை பொலிஸார் வழி மறித்த போது, பொலிசாரின் கட்டளையை மீறி சாரதி டிப்பர் வாகனத்தை தொடர்ந்து செலுத்தியுள்ளார். அதனை அடுத்து பொலிஸார் டிப்பர் வாகனத்தை சுமார் 20 கிலோ மீற்றர் தூரம் துரத்தி சென்ற நிலையில் , சாரதி டிப்பர் வாகனத்தை மணலுடன் வீதியில் நிறுத்தி விட்டு , வாகனத்தில் இருந்து இறங்கி ஓடியுள்ளார். தப்பியோடிய சாரதியை பொலிஸார் துரத்தி சென்று கைது செய்தனர். கைது செய்த சாரதியை பொலிஸார் விசாரித்த வேளை , குறித்த நபர் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் எனவும், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றத்தில் பொலிஸ் சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது. இதேவேளை, மேலதிக விசாரணைகளில் , பொலிஸ் உத்தியோகத்தில் இருந்த வேளை பொலிசருடன் இருந்த நெருக்கத்தினை பயன்படுத்தி , சட்டவிரோத மணல் கடத்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமையும் தெரியவந்துள்ளது. குறித்த நபரை தொடர்ந்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2026/1463445

அமெரிக்கா – ஈரான், இன்று ஓமானில் உயர்மட்ட பேச்சுவார்தை!

1 month ago
அமெரிக்கா – ஈரான், இன்று ஓமானில் உயர்மட்ட பேச்சுவார்தை! பல மாதங்களாக அதிகரித்து வரும் பதட்டங்கள், மாறிவரும் இராஜதந்திர சமிக்ஞைகளுக்குப் பின்னர் அமெரிக்காவும் ஈரானும் இன்று (06) ஓமான் தலைநகர் மஸ்கட்டில் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளன. சர்வதேச அளவில் தீவிரமான கண்காணிப்பை ஈர்த்துள்ள இந்தப் பேச்சுவார்த்தைகள், அண்மைய இராணுவ மோதல்கள், ஈரான் போராட்டக்காரர்கள் மீதான தெஹ்ரானின் கொடிய ஒடுக்குமுறை மற்றும் மத்திய கிழக்கில் ஒரு பரந்த மோதல் வெடிக்கும் என்ற தொடர்ச்சியான அச்சங்கள் ஆகியவற்றின் பின்னணியில் வருகின்றன. இரு தரப்பினரும் மோதலுக்கும் இராஜதந்திரத்திற்கும் இடையில் ஊசலாடிய ஒரு சரித்திரத்தின் அண்மைய அத்தியாயமாக இந்தப் பேச்சுவார்த்தைகள் அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ஓமான் ‍உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ள இந்த பேச்சுவார்தையில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி மற்றும் அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் பங்கேற்பார்கள். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மூத்த ஆலோசகர் ஜாரெட் குஷ்னரும் இந்தப் பேச்சுவாத்தையில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவும் ஈரானும் ஆரம்பத்தில் துருக்கியின் இஸ்தான்புல்லில் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு ஒப்புக்கொண்டன. எனினும், பின்னர் பேச்சுவார்த்தைகளை ஓமானுக்கு நகர்த்தவும், அணுசக்தி பிரச்சினைகளுக்கு நிகழ்ச்சி நிரலை சுருக்கவும் ஈரான் வலியுறுத்தியது. 1979 ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் ஈரானின் இறையாட்சி இப்போது அதன் பலவீனமான கட்டத்தில் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ போன்ற அதிகாரிகள் நம்புகின்றனர். கடந்த மாதம் நாடு தழுவிய போராட்டங்கள் 86 வயதான உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆட்சிக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தன. கமேனியின் படைகள் இரத்தக்களரியான ஒடுக்குமுறையுடன் பதிலளித்தன. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர், பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாட்டை குறிவைத்து புதிய இராணுவ அச்சுறுத்தல்களை முன்வைத்தார். 1980 முதல் அதிகாரப்பூர்வ இராஜதந்திர உறவுகள் இல்லாத இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திரத்தை புதுப்பிக்கும் முயற்சியில் ஈரானிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் சந்திப்பது இது முதல் முறை அல்ல. ஜூன் மாதம், அணுசக்தி ஒப்பந்தம் குறித்து விவாதிக்க அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் ஓமானி தலைநகரில் கூடினர். ஆனால் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கியதால் இந்த செயல்முறை ஸ்தம்பித்தது. பின்னர் அமெரிக்கா சிறிது காலம் போரில் இணைந்தது, பல ஈரானிய அணுசக்தி தளங்களை குண்டுவீசித் தாக்கியமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1463433

அமெரிக்கா – ஈரான், இன்று ஓமானில் உயர்மட்ட பேச்சுவார்தை!

1 month ago

New-Project-1-7.jpg?resize=750%2C375&ssl

அமெரிக்கா – ஈரான், இன்று ஓமானில் உயர்மட்ட பேச்சுவார்தை!

பல மாதங்களாக அதிகரித்து வரும் பதட்டங்கள், மாறிவரும் இராஜதந்திர சமிக்ஞைகளுக்குப் பின்னர் அமெரிக்காவும் ஈரானும் இன்று (06) ஓமான் தலைநகர் மஸ்கட்டில் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளன.

சர்வதேச அளவில் தீவிரமான கண்காணிப்பை ஈர்த்துள்ள இந்தப் பேச்சுவார்த்தைகள், அண்மைய இராணுவ மோதல்கள், ஈரான் போராட்டக்காரர்கள் மீதான தெஹ்ரானின் கொடிய ஒடுக்குமுறை மற்றும் மத்திய கிழக்கில் ஒரு பரந்த மோதல் வெடிக்கும் என்ற தொடர்ச்சியான அச்சங்கள் ஆகியவற்றின் பின்னணியில் வருகின்றன.

இரு தரப்பினரும் மோதலுக்கும் இராஜதந்திரத்திற்கும் இடையில் ஊசலாடிய ஒரு சரித்திரத்தின் அண்மைய அத்தியாயமாக இந்தப் பேச்சுவார்த்தைகள் அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. 

ஓமான் ‍உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ள இந்த பேச்சுவார்தையில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி மற்றும் அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் பங்கேற்பார்கள். 

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மூத்த ஆலோசகர் ஜாரெட் குஷ்னரும் இந்தப் பேச்சுவாத்தையில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவும் ஈரானும் ஆரம்பத்தில் துருக்கியின் இஸ்தான்புல்லில் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு ஒப்புக்கொண்டன.

எனினும், பின்னர் பேச்சுவார்த்தைகளை ஓமானுக்கு நகர்த்தவும், அணுசக்தி பிரச்சினைகளுக்கு நிகழ்ச்சி நிரலை சுருக்கவும் ஈரான் வலியுறுத்தியது.

1979 ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் ஈரானின் இறையாட்சி இப்போது அதன் பலவீனமான கட்டத்தில் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ போன்ற அதிகாரிகள் நம்புகின்றனர். 

கடந்த மாதம் நாடு தழுவிய போராட்டங்கள் 86 வயதான உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆட்சிக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தன. 

கமேனியின் படைகள் இரத்தக்களரியான ஒடுக்குமுறையுடன் பதிலளித்தன. 

இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர், பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாட்டை குறிவைத்து புதிய இராணுவ அச்சுறுத்தல்களை முன்வைத்தார்.

1980 முதல் அதிகாரப்பூர்வ இராஜதந்திர உறவுகள் இல்லாத இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திரத்தை புதுப்பிக்கும் முயற்சியில் ஈரானிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் சந்திப்பது இது முதல் முறை அல்ல. 

ஜூன் மாதம், அணுசக்தி ஒப்பந்தம் குறித்து விவாதிக்க அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் ஓமானி தலைநகரில் கூடினர்.

ஆனால் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கியதால் இந்த செயல்முறை ஸ்தம்பித்தது. 

பின்னர் அமெரிக்கா சிறிது காலம் போரில் இணைந்தது, பல ஈரானிய அணுசக்தி தளங்களை குண்டுவீசித் தாக்கியமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2026/1463433

பிட்கொயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி!

1 month ago
பிட்கொயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கிரிப்டோகரன்சிக்கு (டிஜிட்டல் நாணயம்) தனிப்பட்ட மற்றும் பொது ஆதரவை அளித்த போதிலும், பிட்கொயினின் விலை 15 மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. அதன்படி, ஒரு பிட்கொயினின் பெறுமதி இப்போது 66,000 அமெரிக்க டொலர்களாக (£48,700) உள்ளது. இது 2024 ஒக்டோபருக்குப் பின்னர் அதன் மிகக் குறைந்த அளவாகும். இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து முன்னணி டிஜிட்டல் நாணயத்தின் விலையானது 24% குறைந்துள்ளது. பல மாதங்களாக உயர்ந்து வந்த பிட்கொயின் விலைகளைத் தொடர்ந்து இந்த சரிவு ஏற்பட்டது. இதன் விளைவாக 2025 ஒக்டோபரில் கிரிப்டோகரன்சி எப்போதும் இல்லாத அளவுக்கு 122,200 அமெரிக்க டொலர்களை எட்டியிருந்தது. இந்தத் துறையில் ட்ரம்பின் ஈடுபாடும், கிரிப்டோகரன்சிகளுக்கு அவர் அளித்த வெளிப்படையான ஆதரவும், இந்தத் துறையில் பரிமாற்றத்தை எளிதாக்குவதாக அளித்த வாக்குறுதிகளும் முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தின. 2025 ஜனவரியில் வெள்ளை மாளிகையில் மீண்டும் நுழைந்த ட்ரம்ப் எடுத்த முதல் நடவடிக்கைகளில், அமெரிக்காவை ” உலகின் கிரிப்டோ தலைநகராக” மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நிர்வாக உத்தரவும் அடங்கும். இந்த நிலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட சரிவுடன், கடந்த 12 மாதங்களில் பிட்கொயின் விலைகள் 32% குறைந்துள்ளன. மேலும் 2024 மற்றும் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் காணப்பட்ட விலைகளை நோக்கிச் செல்கின்றன. பிட்கொயின் என்பது உலகின் முதல் மற்றும் மிகவும் பிரபலமான டிஜிட்டல் நாணயமாகும். இது 2009-ஆம் ஆண்டு சதோஷி நாகமோட்டோ (Satoshi Nakamoto) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது வங்கி, அரசு அல்லது மத்திய அமைப்புகள் இல்லாமல், ப்ளாக்செயின் (Blockchain) தொழில்நுட்பத்தின் மூலம் இயங்குகிறது. https://athavannews.com/2026/1463427

மகளிர் பிரீமியர் லீக் கோப்பையை வென்றது ஆர்சிபி - ஜெமிமாவின் கனவைத் தகர்த்த ஸ்மிரிதி மந்தனா

1 month ago
மகளிர் பிரீமியர் லீக் கோப்பையை வென்றது ஆர்சிபி - ஜெமிமாவின் கனவைத் தகர்த்த ஸ்மிரிதி மந்தனா பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மகளிர் பிரீமியர் லீக்கில் ஆர்சிபி அணிக்கு இது இரண்டாவது கோப்பை ஆகும். 3 மணி நேரங்களுக்கு முன்னர் 2026 மகளிர் பிரீமியர் லீக்கின் (WPL) இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. குஜராத் மாநிலம், வதோதராவில் நேற்று (பிப்ரவரி 5) நடைபெற்ற இறுதிப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி, 204 ரன்கள் எடுக்க வேண்டுமென்ற இலக்கை ஆர்சிபி அணிக்கு நிர்ணயித்திருந்தது. ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் 87 ரன்களும், ஜார்ஜியா வோல்லின் 79 ரன்களும் அந்த அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவியது. குறிப்பாக ஸ்மிருதி மந்தனா- ஜார்ஜியா வோல் 92 பந்துகளில் 165 ரன்கள் குவித்தனர். இது மகளிர் பிரீமியர் லீக்கின் நான்காவது சீசன். டெல்லி கேபிடல்ஸ் அணி நான்கு முறையும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது, ஆனால் சாம்பியன் பட்டத்தை வெல்லத் தவறிவிட்டது. மும்பை இந்தியன்ஸ் மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் மற்றும் மூன்றாவது சீசன்களை வென்றது, அதே சமயம் ஆர்சிபி இரண்டாவது மற்றும் நான்காவது சீசன்களை வென்றுள்ளது. ஐபிஎல் கோப்பை உட்பட, கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்றாவது கோப்பையை ஆர்சிபி அணி வென்றுள்ளது. டாஸ் வென்ற ஆர்சிபி பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 57 ரன்கள் எடுத்தார் வதோதராவில் உள்ள பிசிஏ மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில், ஆர்சிபி டாஸ் வென்று முதலில் பந்து வீசத் தேர்வு செய்தது. டெல்லி கேபிடல்ஸ் அணியின் லிசெல் லீ மற்றும் ஷாஃபாலி வெர்மா தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 49 ரன்களை சேர்த்தது. ஐந்தாவது ஓவரில் ஷாஃபாலி வெர்மா, அருந்ததி ரெட்டி பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடி வந்த லிசெல் லீ, 7வது ஓவரில் ஆட்டமிழந்தார். 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் அவர் 30 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். அதன் பின்னர், டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ்- லாரா வால்வார்ட் ஜோடி அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 37 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 15வது ஓவரில் ஆட்டமிழந்தார். லாரா வால்வார்ட் 25 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து இறுதி ஓவரில் ஆட்டமிழந்தார். சினெல் ஹென்றி 15 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை எடுத்தது. 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கியது ஆர்சிபி. ஸ்மிருதி மந்தனா- ஜார்ஜியா வோல் ஜோடி பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஸ்மிருதி மந்தனா- ஜார்ஜியா வோல் 92 பந்துகளில் 165 ரன்கள் குவித்தனர். ஆர்சிபியின் தொடக்க வீராங்கனைகளாக கிரேஸ் ஹாரிஸ் மற்றும் ஸ்மிருதி மந்தனா களமிறங்கினர். 2வது ஓவரில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து கிரேஸ் ஆட்டமிழக்க ஆர்சிபி அணிக்கு அதுவொரு அதிர்ச்சியான தொடக்கமாகவே இருந்தது. அடுத்து ஜார்ஜியா வோல் களமிறங்கினர். இறுதிப்போட்டி என்பதை கவனத்தில் கொண்டு, ஸ்மிருதி மந்தனா- ஜார்ஜியா வோல் ஜோடி மிகச்சிறப்பாகவே விளையாடியது. 2வது ஓவரில் 9 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற நிலையில் இருந்த ஆர்சிபி அணி, 2வது விக்கெட்டை 16வது ஓவரில் தான் இழந்தது. ஸ்மிருதி மந்தனா- ஜார்ஜியா வோல் 92 பந்துகளில் 165 ரன்கள் குவித்தனர். 54 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் எடுத்த ஜார்ஜியா வோல், 16வது ஓவரில் மின்னு மணி பந்தில் ஆட்டமிழந்தார். 41 பந்துகளில், 12 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் குவித்த ஸ்மிருதி மந்தனா, 18வது ஓவரில் சினெல் ஹென்றி வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆர்சிபி அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுக்கு 'பிளேயர் ஆப் தி மேட்ச்' விருது வழங்கப்பட்டது. மகளிர் பிரீமியர் லீக்கின் நான்கு சீசன்களிலும், டெல்லி கேபிடல்ஸ் அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது, இருப்பினும் அந்த அணி இதுவரை கோப்பையை வெல்லவில்லை. டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் நெருங்கிய தோழிகளாகக் கருதப்படுகிறார்கள், இருவரும் மும்பையைச் சேர்ந்தவர்கள். இருவரும் தங்கள் அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடினார்கள், ஆனால் தனது அணியை முதல் முறையாக சாம்பியனாக்க வேண்டுமென்ற ஜெமிமாவின் கனவை அவரது தோழி ஸ்மிருதி மந்தனா தகர்த்துவிட்டார். வெற்றிக்குப் பிறகு ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, "இறுதிப் போட்டியில் 200 ரன்களுக்கு மேல் சேஸ் செய்கிறோம் எனும்போது, நிச்சயமாக ஒரு அழுத்தத்தை உணர்ந்தோம். பேட்டிங் செய்வதற்கு ஏற்ற பிட்ச் இது. எங்களது அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆர்சிபி ரசிகர்கள் தான் எங்களோடு எப்போதும் உடன் நிற்கிறார்கள், இதுபோல ஒரு ரசிகர் கூட்டத்தை பார்க்க முடியாது. இந்த வெற்றி அவர்களுக்கானது" என்று கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg7ylx0ymyxo

மகளிர் பிரீமியர் லீக் கோப்பையை வென்றது ஆர்சிபி - ஜெமிமாவின் கனவைத் தகர்த்த ஸ்மிரிதி மந்தனா

1 month ago

மகளிர் பிரீமியர் லீக் கோப்பையை வென்றது ஆர்சிபி - ஜெமிமாவின் கனவைத் தகர்த்த ஸ்மிரிதி மந்தனா

மகளிர் பிரீமியர் லீக் 2026, ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸ்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,மகளிர் பிரீமியர் லீக்கில் ஆர்சிபி அணிக்கு இது இரண்டாவது கோப்பை ஆகும்.

3 மணி நேரங்களுக்கு முன்னர்

2026 மகளிர் பிரீமியர் லீக்கின் (WPL) இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

குஜராத் மாநிலம், வதோதராவில் நேற்று (பிப்ரவரி 5) நடைபெற்ற இறுதிப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி, 204 ரன்கள் எடுக்க வேண்டுமென்ற இலக்கை ஆர்சிபி அணிக்கு நிர்ணயித்திருந்தது.

ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் 87 ரன்களும், ஜார்ஜியா வோல்லின் 79 ரன்களும் அந்த அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவியது. குறிப்பாக ஸ்மிருதி மந்தனா- ஜார்ஜியா வோல் 92 பந்துகளில் 165 ரன்கள் குவித்தனர்.

இது மகளிர் பிரீமியர் லீக்கின் நான்காவது சீசன். டெல்லி கேபிடல்ஸ் அணி நான்கு முறையும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது, ஆனால் சாம்பியன் பட்டத்தை வெல்லத் தவறிவிட்டது.

மும்பை இந்தியன்ஸ் மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் மற்றும் மூன்றாவது சீசன்களை வென்றது, அதே சமயம் ஆர்சிபி இரண்டாவது மற்றும் நான்காவது சீசன்களை வென்றுள்ளது. ஐபிஎல் கோப்பை உட்பட, கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்றாவது கோப்பையை ஆர்சிபி அணி வென்றுள்ளது.

டாஸ் வென்ற ஆர்சிபி

மகளிர் பிரீமியர் லீக் 2026, ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸ்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 57 ரன்கள் எடுத்தார்

வதோதராவில் உள்ள பிசிஏ மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில், ஆர்சிபி டாஸ் வென்று முதலில் பந்து வீசத் தேர்வு செய்தது.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் லிசெல் லீ மற்றும் ஷாஃபாலி வெர்மா தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 49 ரன்களை சேர்த்தது. ஐந்தாவது ஓவரில் ஷாஃபாலி வெர்மா, அருந்ததி ரெட்டி பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சிறப்பாக ஆடி வந்த லிசெல் லீ, 7வது ஓவரில் ஆட்டமிழந்தார். 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் அவர் 30 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார்.

அதன் பின்னர், டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ்- லாரா வால்வார்ட் ஜோடி அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

37 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 15வது ஓவரில் ஆட்டமிழந்தார். லாரா வால்வார்ட் 25 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து இறுதி ஓவரில் ஆட்டமிழந்தார். சினெல் ஹென்றி 15 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை எடுத்தது. 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கியது ஆர்சிபி.

ஸ்மிருதி மந்தனா- ஜார்ஜியா வோல் ஜோடி

மகளிர் பிரீமியர் லீக் 2026, ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸ்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஸ்மிருதி மந்தனா- ஜார்ஜியா வோல் 92 பந்துகளில் 165 ரன்கள் குவித்தனர்.

ஆர்சிபியின் தொடக்க வீராங்கனைகளாக கிரேஸ் ஹாரிஸ் மற்றும் ஸ்மிருதி மந்தனா களமிறங்கினர். 2வது ஓவரில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து கிரேஸ் ஆட்டமிழக்க ஆர்சிபி அணிக்கு அதுவொரு அதிர்ச்சியான தொடக்கமாகவே இருந்தது.

அடுத்து ஜார்ஜியா வோல் களமிறங்கினர். இறுதிப்போட்டி என்பதை கவனத்தில் கொண்டு, ஸ்மிருதி மந்தனா- ஜார்ஜியா வோல் ஜோடி மிகச்சிறப்பாகவே விளையாடியது. 2வது ஓவரில் 9 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற நிலையில் இருந்த ஆர்சிபி அணி, 2வது விக்கெட்டை 16வது ஓவரில் தான் இழந்தது.

ஸ்மிருதி மந்தனா- ஜார்ஜியா வோல் 92 பந்துகளில் 165 ரன்கள் குவித்தனர். 54 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் எடுத்த ஜார்ஜியா வோல், 16வது ஓவரில் மின்னு மணி பந்தில் ஆட்டமிழந்தார்.

41 பந்துகளில், 12 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் குவித்த ஸ்மிருதி மந்தனா, 18வது ஓவரில் சினெல் ஹென்றி வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

மகளிர் பிரீமியர் லீக் 2026, ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸ்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா

ஆர்சிபி அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுக்கு 'பிளேயர் ஆப் தி மேட்ச்' விருது வழங்கப்பட்டது.

மகளிர் பிரீமியர் லீக்கின் நான்கு சீசன்களிலும், டெல்லி கேபிடல்ஸ் அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது, இருப்பினும் அந்த அணி இதுவரை கோப்பையை வெல்லவில்லை.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் நெருங்கிய தோழிகளாகக் கருதப்படுகிறார்கள், இருவரும் மும்பையைச் சேர்ந்தவர்கள்.

இருவரும் தங்கள் அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடினார்கள், ஆனால் தனது அணியை முதல் முறையாக சாம்பியனாக்க வேண்டுமென்ற ஜெமிமாவின் கனவை அவரது தோழி ஸ்மிருதி மந்தனா தகர்த்துவிட்டார்.

வெற்றிக்குப் பிறகு ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, "இறுதிப் போட்டியில் 200 ரன்களுக்கு மேல் சேஸ் செய்கிறோம் எனும்போது, நிச்சயமாக ஒரு அழுத்தத்தை உணர்ந்தோம். பேட்டிங் செய்வதற்கு ஏற்ற பிட்ச் இது. எங்களது அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆர்சிபி ரசிகர்கள் தான் எங்களோடு எப்போதும் உடன் நிற்கிறார்கள், இதுபோல ஒரு ரசிகர் கூட்டத்தை பார்க்க முடியாது. இந்த வெற்றி அவர்களுக்கானது" என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cg7ylx0ymyxo

அநுரவின் ஆட்சியிலும் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் முன்னேற்றமில்லை; மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம் ; 2024-25இல் பயங்கரவாதத் தடைச் சட்டப் பிரயோகம் அதிகரித்ததாகவும் சுட்டிக்காட்டு

1 month ago
அநுரவின் ஆட்சியிலும் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் முன்னேற்றமில்லை; மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம்; 2024-25இல் பயங்கரவாதத் தடைச் சட்டப் பிரயோகம் அதிகரித்ததாகவும் சுட்டிக்காட்டு 05 Feb, 2026 | 05:45 PM (நா.தனுஜா) பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும், பொதுச்சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் சமத்துவமின்மைக்குத் தீர்வுகாண்பதற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தினால் குறிப்பிடத்தக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான முன்னேற்றமே எட்டப்பட்டுள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. 2025 ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு நாடுகளினதும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிக்கையில் இலங்கை தொடர்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் பதிவான தன்னிச்சையான தடுத்துவைப்புகள், பொலிஸ்காவலின் கீழான சித்திரவதைகள் மற்றும் உயிரிழப்புக்கள் என்பன பற்றிய விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன், கடந்தகால மீறல்களுக்குக் காரணமாக அமைந்த கட்டமைப்பு ரீதியான நிலைவரங்கள் இன்னமும் தொடர்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்புத்தரப்பினரின் தொடர் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்துவருவதுடன், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பாலும் அரச அதிகாரிகளினாலேயே காணி உரிமைகள் மற்றும் மத உரிமைகள் என்பன மீறப்படுகின்றன. அதேவேளை 1983 - 2009 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஆயுதப்போராட்டத்தின்போது நிகழ்த்தப்பட்ட மிகமோசமான போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு அரசாங்கங்கள் தவறியிருக்கின்றன. தேசிய நல்லிணக்கம் சார்ந்த வாக்குறுதிகளின் இடையே, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் மிகச்சொற்ப விடயங்களையே செய்திருக்கிறது. அதேபோன்று சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகத்தை ஸ்தாபித்தல், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குதல் மற்றும் நிகழ்நிலைக்காப்புச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளல் என்பன உள்ளடங்கலாக சட்ட மறுசீரமைப்புக்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. அதுமாத்திரமன்றி இலங்கையின் குற்றவியல் தண்டனைச்சட்டக்கோவையின் பிரகாரம் ஓரினச்சேர்க்கை மற்றும் அதுசார்ந்த நடவடிக்கைகள் குற்றமாக்கப்பட்டுள்ளன. உலக உணவுத்திட்டத்தின் தரவுகளின் பிரகாரம் மூன்றில் ஒன்று பங்கு சிறுவர்கள் மந்தபோசணையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பெரும் எண்ணிக்கையான குடும்பங்கள் கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட தமது உரிமைகளை அனுபவிப்பதற்கு அவசியமான பொருட்கள், சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றன. அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தில் சமூகப்பாதுகாப்பு செலவினங்கள் மிகக்குறைந்த மட்டத்திலேயே பேணப்படுவதனால், பல்வேறு உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்துக்கு அமைவாக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கொள்கைகள், ஏற்கனவே நலிவுற்ற நிலையில் இருக்கும் மக்கள் மீதான நிதியியல் மீட்சி சார்ந்த அழுத்தங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இருப்பினும் ஊழலை முறியடிப்பதில் ஓரளவு முன்னேற்றம் அடையப்பட்டிருக்கிறது. குறிப்பாக அரச நிதியின் முறைகேடான பயன்பாட்டுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைதுசெய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அடுத்ததாக இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையில் இடம்பெற்ற 26 வருடகால யுத்தத்தில் சுமார் 100,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இக்காலப்பகுதியில் அரச படையினர் சித்திரவதைகள், சட்டவிரோதப் படுகொலைகள், பாலியல் வன்புணர்வு, பாலியல் வன்முறைகள், வலிந்து காணாமலாக்கல் மற்றும் பொதுமக்கள் மீதான ஒடுக்குமுறைத் தாக்குதல்கள் உள்ளிட்ட மிகமோசமான மீறல்களில் ஈடுபட்டனர். அதேபோன்று தற்கொலைக்குண்டுத்தாக்குதல், பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் சிறுவர் போராளிகள் உள்ளிட்ட மீறல்களில் விடுதலைப்புலிகள் இயக்கமும் ஈடுபட்டது. இம்மீறல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கான நம்பத்தகுந்த உள்ளகப்பொறிமுறைகள் இன்மை மற்றும் பாதிக்கப்பட்ட சில சமூகங்களுக்கு எதிராகத் தற்போதும் தொடரும் ஒடுக்குமுறைகள் என்பவற்றின் காரணமாக இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தை மேலும் இரு வருடங்களுக்குத் தொடர்வதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை செயற்பாட்டாளர்கள் பலரும் வரவேற்றிருந்தனர். இந்தக் குற்றங்களை புதியதொரு உள்ளகப்பொறிமுறையின் ஊடாக அணுகுவதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்த போதிலும், அதுபற்றிய விபரங்கள் எதனையும் அறிவிக்கவில்லை. அதேவேளை மறுபுறம் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளகப்பொறிமுறைகள் தொடர்பில் தமது நம்பிக்கையீனத்தை அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னைய அரசாங்கங்களினால் குறைந்தபட்சம் சுமார் 10 ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்ட போதிலும், அவை பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படுவதற்கோ அல்லது வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான உண்மைகள் வெளிப்படுத்தப்படுவதற்கோ வழிவகுக்கவில்லை. அதுமாத்திரமன்றி 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களுக்கு அரசு உடந்தையாக செயற்பட்டதாக சில தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆதரித்திருப்பினும், அத்தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கம் இன்னமும் நம்பத்தகுந்த விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு வலுவடைந்தமையானது மீறல்கள் தொடர்வதற்கு இடமளித்தது. அத்தோடு மனிதப்புதைகுழிகள் தொடர்பில் செயற்திறன்மிக்க விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான போதிய தொழில்நுட்ப வசதிகள் அரசாங்கத்திடம் இல்லை. அதேவேளை கடந்த காலங்களில் நிலவிய அரசியல் தன்முனைப்பின்மையானது இதுபற்றிய விசாரணைகள் மழுங்கடிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்தது. அதன் அர்த்தம் எந்தவொரு எலும்புக்கூடும் யாருடையவை எனக் கண்டறியப்படவோ அல்லது ஏனைய ஆதாரங்கள் முறையாகப் பேணப்படவோ இல்லை. மேலும் நீண்டகால யுத்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீதிக்காகப் போராடும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை பொலிஸார் மற்றும் புலனாய்வுப்பிரிவினர் தொடர்ச்சியாகக் கண்காணித்தும், அவர்களுக்கு எதிராக ஒடுக்குமுறைகளைப் பிரயோகித்தும் வருகின்றனர். அதேவேளை பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த போதிலும், கடந்த காலங்களில் அச்சட்டத்தின் பிரயோகம் வெகுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக 2024 ஆம் ஆண்டு 38 வழக்குகளிலும், 2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் 49 வழக்குகளிலும் பொலிஸாரால் பயங்கரவாதத்தடைச்சட்டம் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/237930

அநுரவின் ஆட்சியிலும் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் முன்னேற்றமில்லை; மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம் ; 2024-25இல் பயங்கரவாதத் தடைச் சட்டப் பிரயோகம் அதிகரித்ததாகவும் சுட்டிக்காட்டு

1 month ago

அநுரவின் ஆட்சியிலும் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் முன்னேற்றமில்லை; மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம்; 2024-25இல் பயங்கரவாதத் தடைச் சட்டப் பிரயோகம் அதிகரித்ததாகவும் சுட்டிக்காட்டு

05 Feb, 2026 | 05:45 PM

image

(நா.தனுஜா)

பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும், பொதுச்சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் சமத்துவமின்மைக்குத் தீர்வுகாண்பதற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தினால் குறிப்பிடத்தக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான முன்னேற்றமே எட்டப்பட்டுள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

2025 ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு நாடுகளினதும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிக்கையில் இலங்கை தொடர்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் பதிவான தன்னிச்சையான தடுத்துவைப்புகள், பொலிஸ்காவலின் கீழான சித்திரவதைகள் மற்றும் உயிரிழப்புக்கள் என்பன பற்றிய விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன், கடந்தகால மீறல்களுக்குக் காரணமாக அமைந்த கட்டமைப்பு ரீதியான நிலைவரங்கள் இன்னமும் தொடர்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்புத்தரப்பினரின் தொடர் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்துவருவதுடன், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பாலும் அரச அதிகாரிகளினாலேயே காணி உரிமைகள் மற்றும் மத உரிமைகள் என்பன மீறப்படுகின்றன.

அதேவேளை 1983 - 2009 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஆயுதப்போராட்டத்தின்போது நிகழ்த்தப்பட்ட மிகமோசமான போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு அரசாங்கங்கள் தவறியிருக்கின்றன. தேசிய நல்லிணக்கம் சார்ந்த வாக்குறுதிகளின் இடையே, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் மிகச்சொற்ப விடயங்களையே செய்திருக்கிறது.

அதேபோன்று சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகத்தை ஸ்தாபித்தல், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குதல் மற்றும் நிகழ்நிலைக்காப்புச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளல் என்பன உள்ளடங்கலாக சட்ட மறுசீரமைப்புக்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. அதுமாத்திரமன்றி இலங்கையின் குற்றவியல் தண்டனைச்சட்டக்கோவையின் பிரகாரம் ஓரினச்சேர்க்கை மற்றும் அதுசார்ந்த நடவடிக்கைகள் குற்றமாக்கப்பட்டுள்ளன.

உலக உணவுத்திட்டத்தின் தரவுகளின் பிரகாரம் மூன்றில் ஒன்று பங்கு சிறுவர்கள் மந்தபோசணையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பெரும் எண்ணிக்கையான குடும்பங்கள் கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட தமது உரிமைகளை அனுபவிப்பதற்கு அவசியமான பொருட்கள், சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றன. அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தில் சமூகப்பாதுகாப்பு செலவினங்கள் மிகக்குறைந்த மட்டத்திலேயே பேணப்படுவதனால், பல்வேறு உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்துக்கு அமைவாக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கொள்கைகள், ஏற்கனவே நலிவுற்ற நிலையில் இருக்கும் மக்கள் மீதான நிதியியல் மீட்சி சார்ந்த அழுத்தங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இருப்பினும் ஊழலை முறியடிப்பதில் ஓரளவு முன்னேற்றம் அடையப்பட்டிருக்கிறது. குறிப்பாக அரச நிதியின் முறைகேடான பயன்பாட்டுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைதுசெய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அடுத்ததாக இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையில் இடம்பெற்ற 26 வருடகால யுத்தத்தில் சுமார் 100,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இக்காலப்பகுதியில் அரச படையினர் சித்திரவதைகள், சட்டவிரோதப் படுகொலைகள், பாலியல் வன்புணர்வு, பாலியல் வன்முறைகள், வலிந்து காணாமலாக்கல் மற்றும் பொதுமக்கள் மீதான ஒடுக்குமுறைத் தாக்குதல்கள் உள்ளிட்ட மிகமோசமான மீறல்களில் ஈடுபட்டனர். அதேபோன்று தற்கொலைக்குண்டுத்தாக்குதல், பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் சிறுவர் போராளிகள் உள்ளிட்ட மீறல்களில் விடுதலைப்புலிகள் இயக்கமும் ஈடுபட்டது.

இம்மீறல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கான நம்பத்தகுந்த உள்ளகப்பொறிமுறைகள் இன்மை மற்றும் பாதிக்கப்பட்ட சில சமூகங்களுக்கு எதிராகத் தற்போதும் தொடரும் ஒடுக்குமுறைகள் என்பவற்றின் காரணமாக இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தை மேலும் இரு வருடங்களுக்குத் தொடர்வதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை செயற்பாட்டாளர்கள் பலரும் வரவேற்றிருந்தனர். இந்தக் குற்றங்களை புதியதொரு உள்ளகப்பொறிமுறையின் ஊடாக அணுகுவதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்த போதிலும், அதுபற்றிய விபரங்கள் எதனையும் அறிவிக்கவில்லை. அதேவேளை மறுபுறம் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளகப்பொறிமுறைகள் தொடர்பில் தமது நம்பிக்கையீனத்தை அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னைய அரசாங்கங்களினால் குறைந்தபட்சம் சுமார் 10 ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்ட போதிலும், அவை பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படுவதற்கோ அல்லது வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான உண்மைகள் வெளிப்படுத்தப்படுவதற்கோ வழிவகுக்கவில்லை.

அதுமாத்திரமன்றி 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களுக்கு அரசு உடந்தையாக செயற்பட்டதாக சில தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆதரித்திருப்பினும், அத்தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கம் இன்னமும் நம்பத்தகுந்த விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு வலுவடைந்தமையானது மீறல்கள் தொடர்வதற்கு இடமளித்தது.

அத்தோடு மனிதப்புதைகுழிகள் தொடர்பில் செயற்திறன்மிக்க விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான போதிய தொழில்நுட்ப வசதிகள் அரசாங்கத்திடம் இல்லை. அதேவேளை கடந்த காலங்களில் நிலவிய அரசியல் தன்முனைப்பின்மையானது இதுபற்றிய விசாரணைகள் மழுங்கடிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்தது. அதன் அர்த்தம் எந்தவொரு எலும்புக்கூடும் யாருடையவை எனக் கண்டறியப்படவோ அல்லது ஏனைய ஆதாரங்கள் முறையாகப் பேணப்படவோ இல்லை.

மேலும் நீண்டகால யுத்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீதிக்காகப் போராடும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை பொலிஸார் மற்றும் புலனாய்வுப்பிரிவினர் தொடர்ச்சியாகக் கண்காணித்தும், அவர்களுக்கு எதிராக ஒடுக்குமுறைகளைப் பிரயோகித்தும் வருகின்றனர்.

அதேவேளை பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த போதிலும், கடந்த காலங்களில் அச்சட்டத்தின் பிரயோகம் வெகுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக 2024 ஆம் ஆண்டு 38 வழக்குகளிலும், 2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் 49 வழக்குகளிலும் பொலிஸாரால் பயங்கரவாதத்தடைச்சட்டம் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/237930

“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

1 month ago
கருத்து கசக்கிறதா? அதற்கு கருத்தியல் ரீதியான பதில் இல்லையா? உடனே துரோகி என்று முத்திரை குத்து, அல்லது இழிவான இனக்குழுமத்தை சேர்ந்தவர், என்று வசைபாடு. அதுவே எமது அரசியல். அதைச் செய்யவே நாம் பயிற்றுவிக்கப்பட்டுள்ளோம்.