Aggregator
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தாலிபான் ஆளுகைக்குட்பட்ட நாட்டிற்கே ஆப்கானியர்களை நாடு கடத்த ஐரோப்பா திட்டம்!
தாலிபான் ஆளுகைக்குட்பட்ட நாட்டிற்கே ஆப்கானியர்களை நாடு கடத்த ஐரோப்பா திட்டம்!

தாலிபான் ஆளுகைக்குட்பட்ட நாட்டிற்கே ஆப்கானியர்களை நாடு கடத்த ஐரோப்பா திட்டம்!
ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) தங்குவதற்கு சட்டப்பூர்வ உரிமை இல்லாத ஆப்கானியர்களை மீண்டும் அவர்களின் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பும் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் தீவிரப்படுத்தியுள்ளது.
இது நடைமுறைச் சிக்கல்களையும், ஐநா அகதிகள் முகமையின் கவலையையும் தூண்டியுள்ளது.
சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று உறுப்பு நாடுகளிடமிருந்து வரும் அழுத்தத்தினால், பிரஸ்ஸல்ஸ் (ஐரோப்பிய ஒன்றிய தலைமையகம்) காபூலில் உள்ள தாலிபான் அரசாங்கத்துடன் தொடர்புகளைத் தொடங்கியுள்ளது.
இந்த நாடு கடத்தல் நடவடிக்கையின் சாத்தியக்கூறுகளை ஆராய ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இதுவரை இரண்டு “தொழில்நுட்பப் பயணங்களை” (Technical missions) மேற்கொண்டுள்ளனர்.
இதில் மிகச் சமீபத்திய பயணம் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது.
“மீண்டும் அனுமதிப்பது (Readmission) மற்றும் திரும்புதல் நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பது குறித்த பணிகளை ஆராய்வதற்காக” இந்த பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாக ஐரோப்பிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் மார்கஸ் லாம்மெர்ட் தெரிவித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இத்தகைய நாடு கடத்தல் என்பது கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது.
இது சட்ட மற்றும் தார்மீக ரீதியான பல கவலைகளை எழுப்புகிறது.
தாலிபான் அதிகாரிகள் கடந்த ஆண்டில் “தங்கள் ஒடுக்குமுறையை அதிகரித்துள்ளதாக” மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) இந்த வாரம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக ஊடக சுதந்திரத்திற்கு எதிரான புதிய விதிகள் மற்றும் பெண்கள், சிறுமிகள் மீதான கட்டுப்பாடுகளை அது சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும், ஐரோப்பாவின் 27 உறுப்பு நாடுகளில் பெரும்பாலானவை இப்போது இந்த நாடு கடத்தலை வலியுறுத்துகின்றன.
குடியேற்றத்திற்கு எதிரான பொதுமக்களின் கருத்து மாற்றம் மற்றும் ஐரோப்பா முழுவதும் வலதுசாரி கட்சிகளின் தேர்தல் வெற்றி போன்றவை இதற்கு முக்கியக் காரணமாகின்றன.
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
மக்கள் பிரதிநிதித்துவத்தின் தார்மீகப் பொறுப்பும் ஓய்வூதிய சர்ச்சையும்
மக்கள் பிரதிநிதித்துவத்தின் தார்மீகப் பொறுப்பும் ஓய்வூதிய சர்ச்சையும்
மக்கள் பிரதிநிதித்துவத்தின் தார்மீகப் பொறுப்பும் ஓய்வூதிய சர்ச்சையும்
on February 6, 2026

Photo, THE PARLIAMENT OF SRI LANKA
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தான் பெற்று வந்த ஓய்வூதியத்தை நிறுத்தினால் சாகப்போவதாக ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) முன்னாள் முக்கிய தலைவர்களில் ஒருவரும் 1999 ஜனாதிபதி வேட்பாளருமான நந்தன குணதிலக கடந்த ஓகஸ்டில் செய்த எச்சரிக்கை தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. தன்னை ஒரு ‘கெரில்லா’ என்று வர்ணித்த அவர் தன்னந் தனியாளாக சாகப் போவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். ஓய்வூதியம் நிறுத்தப்படும் பட்சத்தில் வாழ்வாதாரத்தை இழந்தால் வேறு பலரையும் கொலை செய்துவிட்டுத் தானும் உயிரை மாய்ப்பதற்கு ‘தற்கொலைத் தாக்குதலை’ நடத்துவதற்கு அவர் திட்டமிட்டிருந்தாரோ தெரியவில்லை.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இல்லாமல் செய்வதற்கான சட்டமூலத்தை அவரது முன்னாள் தோழர்களின் அரசாங்கம் ஜனவரி 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து அது குறித்து அரசியல் அரங்கில் ஒரு விவாதம் மூண்டிருக்கும் வேளையில், குணதிலக உயிருடன் இல்லை. குறுகியகால சுகவீனத்துக்குப் பிறகு ஜனவரி 18ஆம் திகதி அவர் காலமானார். தனது வாழ்வின் இறுதியில் மருத்துவச் செலவைக் கூட செலுத்த முடியாத நிலையில் அவர் இறந்ததாக கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதிகள் அரச செலவில் அனுபவித்து வந்த ஆடம்பரமான வரப்பிரசாதங்களை இல்லாமல் செய்த சட்டம் நிறைவேற்றப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்த நிலையில், சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்ற உறப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்டமூலத்தை ஆட்சேபித்து பல மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தையும் இல்லாமல் செய்வதாக 2024 தேசிய தேர்தல்களில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருக்கிறது என்று அரசாங்கத் தலைவர்கள் கூறுகிறார்கள்.
சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்ட அன்றைய தினமே தற்போது ஓய்வூதியத்தை பெறுகின்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அதற்காக அரசாங்கத்துக்கு ஏற்படுகின்ற செலவினங்கள் பற்றிய விபரங்களை அரசாங்க உறுப்பினர் காமினி இரத்நாயக்க நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.
பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கமே சட்டம் ஒன்றைக் கொண்டுவந்து நாடாளுன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை 1976ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. இலங்கையின் மூத்த இடதுசாரி தலைவர்களில் ஒருவரான கலாநிதி என்.எம். பெரேரா அப்போது நிதியமைச்சராக இருந்தார். குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
காமினி இரத்நாயக்க வெளியிட்ட விபரங்களின் பிரகாரம் தற்போது 330 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தைப் பெற்று வருகிறார்கள். இதற்கு மேலதிகமாக, மரணமடைந்த 182 நாடாளுமன்ற உறுப்பினர்களின் விதவை மனைவிமாரும் ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் தங்கியிருந்த ஏழு பேர் அரச கொடுப்பனவுகளைப் பெறுகின்றார்கள்.
ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக மாதந்தம் 23,541,645 ரூபாவும் விதவைகளுக்காக 11,025,216 ரூபாவும் தங்கியிருந்தவர்களுக்காக 420,121 ரூபாவும். அரசுக்கு செலவாகுவதாக அவர் சபையில் கூறினார். ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தை இம்மாத இறுதியளவில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த ஓய்வுதிய ஒழிப்பு திட்டம் தொடர்பில் தனது விசனத்தை வெளிப்படுத்தியிருக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய சகல கட்சிகளினதும் பிரதிநிதிகள் கொண்ட குழுவொன்றுடன் ஆராய்ந்து சட்டமூலத்துக்கு ஒரு மனிதாபிமான பரிமாணத்தை கொடுக்கக்கூடிய திருத்தங்களைச் செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவிடம் கேட்டிருக்கிறார்.
ஜெயசூரியவை போன்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வசதி படைத்த வாழ்க்கைப் பின்புலத்தைக் கொண்டவர்கள் என்பதால் அவர்கள் வாழ்வாதாரத்துக்காக ஓய்வூதியத்தில் தங்கியிருப்பவர்கள் அல்ல. ஓய்வூதியத்தை சமூக சேவைக்கு தன்னால் செலவிடக்கூடியதாக இருப்பதை போன்று பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் செய்யமுடியாது என்றும் அவர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டால் அவர்கள் பெரும் இடர்பாட்டுக்கு உள்ளாகும் ஆபத்து இருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமைப்பின் பதில் தலைவராக இருக்கும் ஜெயசூரிய ஜனாதிபதிக்கு கடந்த வாரம் எழுதிய கடிதம் ஒன்றில் ஊழல்வாதிகள் என்று அடையாளம் காணப்பட்டிருக்கும் அரசியல்வாதிகள் சார்பில் தான் பேசவில்லை என்பதை குறிப்பிடத்தவறவில்லை. பொதுவில் அரசியல்வாதிகளை பழிபாவத்துக்கு அஞ்சாத பேர்வழிகளாகவே மக்கள் நோக்குகிற அளவுக்கு இலங்கையின் அரசியல் ஊழல்மயமாகியிருக்கிறது என்பதால் ஜனாதிபதியிடம் தன்னால் முன்வைக்கப்படும் கோரிக்கை மக்களினால் எவ்வாறு நோக்கப்படும் என்பதில் ஜெயசூரிய கொண்டிருக்கும் கரிசனை கடிதத்தில் தெளிவாக பிரதிபலித்தது.
“சகல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஊழல்வாதிகள் என்று அழைப்பது நியாயமானதல்ல. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஜே.வி.பியின் 30 முன்னாள் உறுப்பினர்கள் உட்பட மக்களின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் பெற்ற நேர்மையான இடதுசாரி அரசியல்வாதிகள் பலரும் அடங்குகிறார்கள்.
“எதிர்கால ஓய்வூதியத்தை பற்றி அக்கறைப்படாமல் வாழ்க்கையின் சிறந்த பருவத்தில் அரசாங்க சேவையில் இருந்து விலகி அரசியலுக்கு வந்த பலர் இருக்கிறார்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இல்லாமல் செய்தால் அவர்கள் பெரும் கஷ்டத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும். தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பவர்களும் எதிர்காலத்தில் அதே கஷ்டத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும்.
“நாடு சுதந்திரமடைந்த நேரத்தில் தனவந்தர்கள், நிலச்சுவாந்தர்கள் மற்றும் சமூகத்தின் உயர்மட்டத்தில் இருந்தவர்களும் அரசியலில் முதன்மை வாய்ந்தவர்களாக விளங்கினார்கள். 1956ஆம் ஆண்டில் இடம்பெற்ற சமூக மாற்றம் அந்த நிலைவரத்தை பெருமளவுக்கு மாற்றியமைத்து சாதாரண மக்களும் அரசியல் வாய்ப்புக்களில் நியாயமான பங்கைப் பெறுவதற்கு வழிசமைத்தது.
“நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய உரிமையை இல்லாமல் செய்தால் முறைகேடாக சொத்தைக் குவிக்கும் முதலாளித்துவவாதிகளும் பெரும் வர்த்தகர்கள் மற்றும் ஊழல்வாதிகளும் மீண்டும் அரசியல் களத்தை ஆக்கிரமிக்கும் சூழ்நிலை உருவாகும். சமுதாயத்தின் நலன்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய பிறகு மன அமைதியுடன் வாழ்வதற்காக மக்கள் பிரதிநிதிகளுக்கு பல வசதிகளை வழங்குவது பல நாடுகளில் பாரம்பரிய நடைமுறையாக இருக்கிறது” என்று முன்னாள் சபாநாயகர் கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் தொடர்பிலான விவாதம் நேர்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் பல கேள்விகளை எழுப்புகிறது. பொதுமக்கள் பாதூரமான பொருளாதார இடர்பாட்டுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், அதுவும் குறிப்பாக நான்கு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட முன்னென்றுமில்லாத பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நாட்டை மீட்பதற்காக விதிக்கப்பட்டிருக்கும் கடுமையான வரிகள் உட்பட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளின் விளைவான நெருக்குதல்களினால் அவலப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு நேரத்தில் அரசியல்வாதிகள் வரப்பிரசாதங்களை அனுபவிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.
அரச சேவை ஊழியர்கள் தங்களது 60 வயதுவரை 25 – 30 வருடங்கள் பணியாற்றிய பிறகு பெறுகின்ற ஓய்வூதியங்களை விடவும் பெருமளவுக்கு அதிகமான ஓய்வூதியத்தை அரசியல்வாதிகள் வெறுமனே ஒரு ஐந்து வருடங்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த பிறகு வாழ்நாள் பூராவும் பெறுவதை மக்கள் ஒரு முறைகேடாகவே நோக்குகிறார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர்களாக வருவதற்கு முன்னர் பெரும்பாலான அரசியல்வாதிகளிடம் இருந்த சொத்துக்களையும் பல வருடங்களாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த பிறகு அவர்களிடம் இருக்கும் சொத்துக்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அரசியலை அவர்கள் மக்கள் சேவையாக அன்றி செல்வத்தைக் குவிப்பதற்கான ஒரு வழிமுறையாகவே பயன்படுத்துகிறார்கள் என்பது தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.
உலகின் பல நாடுகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் வசதிகள் வழங்கப்படுவது நடைமுறையாக இருந்து வருகிறது. எமது அயல் நாடான இந்தியாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதாந்தம் 25 ஆயிரம் ரூபாவை ஓய்வூதியமாகப் பெறுகிறார்கள். முதல் ஐந்து வருடங்களுக்கு அப்பால் நாடாளுமன்றத்தில் அவர்கள் அங்கம் வகித்த ஒவ்வொரு வருடத்துக்கும் 2 ஆயிரம் ரூபா மேலதிகமாக வழங்கப்படுகிறது. இந்தியா, இலங்கை போன்று அரசியலிலும் ஆட்சிமுறையிலும் ஊழலும் முறைகேடுகளும் தலைவிரித்தாடிய நாடுகளில் அரசியலைப் பயன்படுத்தி பெரும் தனவந்தர்களாக மாறிய எத்தனை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஓய்வூதியங்களை பெறுகிறார்கள் என்பது முக்கியமான ஒரு கேள்வி.
அதேவேளை, தென்கிழக்காசியாவில் மிகவும் வறிய நாடுகளில் ஒன்றான கிழக்கு திமோரில் அரச அதிகாரிகள் அனுபவிக்கும் ஆடம்பரமான சலுகைகளுக்கு எதிராக மாணவர்கள் தலைமையில் இடம்பெற்ற போராட்டங்களை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ஒழிப்பதற்கான சட்டம் கடந்த செப்டெம்பரில் நிறைவேற்றப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்கு தங்களுக்குள் கருத்தொருமித்துச் செயற்படமுடியாத அரசியல்வாதிகள் தங்களுக்கான வரப்பிரசாதங்களை அதிகரிப்பதற்கு நாடாளுமன்றத்தில் ஒன்றுபட்டு சட்டங்களை நிறைவேற்றிய பல சந்தர்ப்பங்களை நாம் கண்டிருக்கிறோம். தவறான ஆட்சிமுறைக்கும் ஊழலுக்கும் எதிராக இலங்கையின் வரலாறு முன்னென்றும் கண்டிராத 2022 மக்கள் கிளர்ச்சிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்திருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் அத்தகைய நடவடிக்கைகள் இடம்பெறுவதற்கு பெரும்பாலும் வாய்ப்பில்லை.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இல்லாமல் செய்யும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில் கரு ஜெயசூரிய போன்ற தலைவர்கள் அரசாங்கத்திடம் முன்வைத்திருக்கும் கோரிக்கையை நாட்டு மக்கள் சாதகமான முறையில் நோக்க முடியாத அளவுக்கு இலங்கையின் அரசியல் வர்க்கம் ஊழல் நிறைந்ததாக இருந்து வந்திருக்கிறது. இதன் விளைவாக தவிர்க்க முடியாத வகையில் நேர்மையான அரசியல்வாதிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மை.
முன்னாள் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் காலஞ்சென்ற சாம் விஜேசிங்க தனது இறுதிக்காலத்தில் ஆங்கிலப்பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறிய ஒரு கதையை இச்சந்தர்ப்பத்தில் நினைவுமீட்டுவது மிகவும் பொருத்தமாக இருக்கும்.
புதிதாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவானவர்களுக்கு நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்து விளக்கமளிப்பதற்காக ஏற்பாடுசெய்யப்படும் பயிற்சிப் பட்டறைகளில் விரிவுரை நிகழ்த்துவதற்கு விஜேசிங்க அழைக்கப்படுவது வழமை. ஒரு பயிற்சிப் பட்டறையில் புதிய உறுப்பினர்களிடம் நாடாளுமன்றத்துக்கு வந்த நோக்கம் குறித்து அவர் கேட்டபோது, அவர்கள் எல்லோருமே மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே வந்திருப்பதாகக் கூறினார்களாம். அப்போது விஜேசிங்க, ‘இல்லை, நீங்கள் குறுகிய காலத்திறகுள் பணம் குவிப்பதற்காகவே நாடாளுமன்றத்துக்கு வந்திருக்கிறீர்கள்’ என்று நேரடியாகவே கூறிவிட்டாராம்.
வீரகத்தி தனபாலசிங்கம்
தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முழுமையாகப் புனரமைக்கும் தீர்மானம்
தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முழுமையாகப் புனரமைக்கும் தீர்மானம்
தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முழுமையாகப் புனரமைக்கும் தீர்மானம்
February 5, 2026
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பிரதேசத்திலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முழுமையாகப் புனரமைத்து அதனை அவரின் சகோதரிக்கு ஒப்படைக்க வேண்டுமென்று வல்வெட்டித்துறை பிரதேச சபையில் முன்வைக்கப்பட்ட யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த யோசனை வல்வெட்டித்துறை பிரதேச சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் சபைக்கு முன்வைக்கப்பட்டது. இந்த யோசனையை சபைக்கு முன்வைத்து சபையில் உரையாற்றிய அவர், ‘‘உலகில் அநேகமான தலைவர்களின் வீடுகள் இவ்வாறு புனரமைக்கப்பட்டு அடுத்த சந்ததியினர் பார்வையிடுவதற்காகப் பாதுகாக்கப்படுவதால் சகலரும் பிரபாகரனின் வீடென்று கூறும் அந்த வீட்டை முழுமையாக புனரமைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அந்த வீட்டின் பாதுகாப்பு மற்றும் நடத்துகைக்காக அந்த வீட்டை புனரமைப்புப் பணிகளின் பின்னர் பிரபாகரனின் சகோதரிக்கு வழங்குவது மிகவும் ஏற்புடைய செயற்பாடாக இருக்குமென சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டி முன்வைத்துள்ள அந்த யோசனைக்கு சபையில் ஏகமனதாக விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.ilakku.org
தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முழுமையாகப் புனரமை...அரசிடம் விலை போன பாராளுமன்ற உறுப்பினரும்! ஆபத்தை உணராத மட்டக்களப்பு பண்ணையாளர்களும்!
மட்டக்களப்பில் சடலத்துடன் போராட்டம்.!
மட்டக்களப்பில் சடலத்துடன் போராட்டம்.!
மட்டக்களப்பில் சடலத்துடன் போராட்டம்.!
Vhg பிப்ரவரி 05, 2026
மட்டக்களப்பு, வந்தாறுமூலைப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கறடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் சமுளையடிப் பொத்தானை எனும் இடத்தில் கடந்த (16) ஆம் திகதி இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ தினத்தன்று, குறித்த நபர் அவரது வயலில் இருந்தபோது குழுவாகச் சென்ற நபர்கள் சிலர் அவரை கூரிய ஆயுதங்களால் தாக்கியும் வெட்டியும் அடித்தும் உள்ளனர்.
இதில் படுகாயமடைந்தவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு 20 நாட்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (04.02.2026)ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இன்று (05.02.2026)ஆம் திகதி உயிரிழந்தவரின் சடலத்தை சுமந்தவாறு அவரது உறவினர்கள் மரணித்தவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அச்சத்தில் உதவாத அயலவர்கள்
சம்பவத்தை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் எனத் தெரிவித்து, வந்தாறுமூலை அம்பலத்தடி சந்தியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் வந்தாறுமூலை பொது மயானத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.