Aggregator

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம்: கையெழுத்து விவகாரம் குறித்து தமிழரசுக்கட்சியின் தீர்மானம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

1 month 2 weeks ago
முன்னணி தயாரித்த கடிதத்தில் கையொழுத்திடோம் – சுமந்திரன் உறுதி! adminAugust 3, 2025 தமிழ் தேசிய மக்கள் முன்னணி சில சிவில் அமைப்புக்களுடன் தயாரித்த ஜெனீவா தொடர்பான கடிதத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கையொப்பம் இடாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு பதில் வழங்கியபோதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஜெனீவா தொடர்பான கடிதத்தை தயாரிக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி சில சிவில் அமைப்புக்களுடன் ஒரு கூட்டத்தை கூட்டியிருந்தார்கள். நாங்கள் அந்த கூட்டத்திலே பங்கு கொள்ளவில்லை. அதற்கான காரணங்களை ஏற்கனவே எமது கட்சி தலைவர் ஊடகங்களுக்கு சொல்லி இருக்கிறார். அவர்கள் அந்த கூட்டத்தில் ஏதோ ஒரு கடிதம் ஒன்றை கொடுக்க வேண்டும் என்று கடிதத்தை தயாரித்திருக்கின்றார்கள். தயாரித்த கடிதத்தை எனக்கும் தலைவருக்கும் அனுப்பி வைத்தார்கள். கடிதம் தொடர்பாக நாங்கள் கூடி பேசி ஒரு தீர்மானத்தை எடுப்போம் என தலைவர் அவர்களுக்கு சொன்னார். அதை சொன்ன பிறகும் கூட எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் அதனை தனித்தனியாக அனுப்பி அவர்களுடைய கையொப்பத்தையும் கேட்டிருக்கிறார்கள். எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே கட்சி தீர்மானமாக தான் நாங்கள் செயல்படுவோம். நாங்கள் தனியாக கையொப்பம் வைக்கமாட்டோம் என்று அறிவித்திருக்கிறார்கள். வேறு பல முக்கியமான விடயங்கள் சம்பந்தமாக நாம் கூடியிருந்தாலும் கூட இந்த விடயமும் ஒன்று இருந்த அடிப்படையினால் அதைப்பற்றி நாங்கள் இறுதியில் பேசியிருக்கிறோம். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தமிழ் மக்கள் சார்பாக எப்படியான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது சம்பந்தமாக நாங்கள் பலதரப்பட்ட எங்களுடைய பிரதிநிதித்துவத்தை சொல்லியிருக்கிறோம். அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வந்தபோது கூட 2021ம் ஆண்டு நானும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இறுதி செய்த ஆவணம், அது சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் கையெழுத்திட்டார்கள். அது எமது நிலைப்பாடு. அதில் மாற்றமில்லை. ஆனால் இன்றைய சூழலில் நாங்கள் எதை சொல்ல வேண்டும். அதை எப்படியாக சொல்ல வேண்டும் என்பது குறித்து நாங்கள் ஒரு கருத்து பரிமாற்றம் செய்திருக்கிறோம். அதன் அடிப்படையில அவர்கள் தாங்களாக தயாரித்துவிட்டு எங்களுடைய மேசையிலே வைத்து கையொப்பம் கேட்கிற கடிதத்தில் நாங்கள் கையொப்பம் இடவில்லை. நாங்கள் அதைவிட தீர்க்கமாக பல விடயங்களை ஆராய்ந்து, நாங்கள் சொல்ல வேண்டிய விதத்தில் சொல்ல வேண்டிய முறையிலே தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிற பிரதான கட்சி என்ற வகையிலே, உகந்த தருணத்திலே சரியான நேரத்திலே நாங்கள் அதை வெளிப்படுத்துவோம். கடிதம் மூலமாகவோ வேறு விதமாகவோ அதனை செய்வோம். ஆனால் தற்போதைக்கு அவர்கள் தாங்களாக தயாரித்துவிட்டு நீங்களும் கையொப்பம் வையுங்கள் என்று சொல்லி தரும் கடிதத்தில் கையொப்பம் இடுவதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது – என்றார் https://globaltamilnews.net/2025/218756/

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது

1 month 2 weeks ago
Explorify · Suivre rstepoSondf32g1ith9 215l4uiugulu70tm6mm301i0i0ah729c2ih3f63a · Two high school seniors just rewrote the history of mathematics. Calcea Johnson and Ne’Kiya Jackson, students from St. Mary’s Academy in New Orleans, accomplished what generations of mathematicians thought was impossible, they created a new proof of the Pythagorean theorem using trigonometry, without falling into the trap of circular reasoning. Their discovery stunned the academic world, not only for its brilliance but because it came from two teenagers still in high school. For over 2,000 years, mathematicians believed that any attempt to prove the Pythagorean theorem using trigonometry would inevitably loop back on itself, rendering the argument invalid. Johnson and Jackson, however, approached the problem with fresh eyes. Working as part of a math enrichment program, they independently crafted a proof that cleverly sidestepped the logical pitfalls that had frustrated so many before them. They presented their groundbreaking work in March 2023 at the American Mathematical Society's Southeastern Sectional Meeting, earning praise for their clarity and originality. While they were not the first to explore this avenue, their version was new, independent, and mathematically rigorous. In October 2024, their proof was officially published in the prestigious American Mathematical Monthly, validating their work and placing them in the company of history’s greatest thinkers. What makes this even more inspiring is that these two young Black women challenged centuries of academic assumptions, showing that genius doesn’t need a PhD, just passion, curiosity, and bold thinking. Their story is a powerful reminder that brilliance can come from anywhere, and that young minds are more than capable of solving age-old mysteries when given the opportunity. Follow our page for more incredible stories #MathGenius #PythagoreanTheorem #WomenInSTEM #YoungInnovators #MathHistory #BlackExcellence #STEMEducation....... !

நல்லூரானை தரிசித்தார் பிரதமர் !

1 month 2 weeks ago
நல்லூரானை தரிசித்தார் பிரதமர் ! யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்றைய தினம் (03) நல்லூர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் (02) விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் , யாழில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் இன்றைய தினம் காலை நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். நல்லூர் ஆலய மகோற்சவ திருவிழாவின் 6ஆம் திருவிழா இன்றைய தினம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441570

நல்லூரானை தரிசித்தார் பிரதமர் !

1 month 2 weeks ago

IMG-20250803-WA0034.jpg?resize=750%2C375

நல்லூரானை தரிசித்தார் பிரதமர் !

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்றைய தினம் (03) நல்லூர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் (02) விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் , யாழில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் இன்றைய தினம் காலை நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.

நல்லூர் ஆலய மகோற்சவ திருவிழாவின் 6ஆம் திருவிழா இன்றைய தினம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG-20250803-WA0017.jpg?resize=600%2C338

IMG-20250803-WA0031.jpg?resize=600%2C338

https://athavannews.com/2025/1441570

செம்மணி மனிதப் புதைகுழி: இன்று இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

1 month 2 weeks ago
செம்மணி மனித புதைகுழியில் இருந்து 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்! யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம்(02) மேலும் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக 126 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 05 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக இதுவரையில் 117 மனித எலும்புக்கூட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 28 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் கடந்த 13 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு அகழ்வு பணியில், 52 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1441565

ரஷ்யாவிற்கு அருகே இரண்டு அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்களை நிறுத்த உத்தரவு!

1 month 2 weeks ago
ரஷ்யாவிற்கு அருகே இரண்டு அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்களை நிறுத்த உத்தரவு! ரஷ்யாவிற்கு அருகே இரண்டு அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்களை நிலைநிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அணு ஆயுதம் குறித்து அச்சுறுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமித்ரி மெட்வெடேவின்(Dmitry Medvedev) கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யாவுக்கிடையிலான போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகின்ற நிலையில், டிரம்ப் உக்ரைனில் போரை நிறுத்த, ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு வழங்கிய 50 நாள் காலக்கெடுவை 12 நாட்களாக குறைத்துள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தார். இதேவேளை, தமது நிபந்தனையை மீறினால் ரஷ்யா மீது வர்த்தக கட்டுப்பாடுகளும் மற்றும் 100 சதவீத வரியும் விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்தார். இந்நிலையில் ரஷ்ய முன்னாள் ஜனாதிபதியும் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத்தலைவருமான டிமித்ரி மெட்வதேவ் அமெரிக்க ஜனாதிபதியின் எச்சரிக்கைக்கு தனது எக்ஸ் தளத்தில், பதில் கருத்தினை வெளியிட்டிருந்தார். ரஷ்யா ஒன்றும் இஸ்ரேலோ, ஈரானோ அல்ல என்றும் ரஷ்யா மீதான மிரட்டல்கள் அமெரிக்க ஜனாதிபதிக்கே அச்சுறுத்தலாக அமையும் என குறிப்பிட்டார். அத்துடன் அமெரிக்காவின் பனிப்போர் காரணமாக, தன்னிச்சையாக ரஷ்யாவின் ஒட்டுமொத்த அணு ஆயுதங்களையும் அமெரிக்காவை நோக்கி ஏவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி டிமித்ரியின் மிரட்டலை தொடர்ந்து ரஷ்யாவை நோக்கி அணு ஆயுதம் தாங்கிய இரண்டு நீர்மூழ்கி கப்பல்களை அனுப்புமாறு டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேவேளை, வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை என்றும் அந்த வார்த்தைகள் சில சமயங்களில் காரணமற்ற விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் டொனால் டிரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். https://athavannews.com/2025/1441578

ரஷ்யாவிற்கு அருகே இரண்டு அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்களை நிறுத்த உத்தரவு!

1 month 2 weeks ago

25-688d006f17fdf.jpg?resize=600%2C375&ss

ரஷ்யாவிற்கு அருகே இரண்டு அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்களை நிறுத்த உத்தரவு!

ரஷ்யாவிற்கு அருகே இரண்டு அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்களை நிலைநிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அணு ஆயுதம் குறித்து அச்சுறுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமித்ரி மெட்வெடேவின்(Dmitry Medvedev) கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் – ரஷ்யாவுக்கிடையிலான போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகின்ற நிலையில்,
டிரம்ப் உக்ரைனில் போரை நிறுத்த, ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு வழங்கிய 50 நாள் காலக்கெடுவை 12 நாட்களாக குறைத்துள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தார்.

இதேவேளை, தமது நிபந்தனையை மீறினால் ரஷ்யா மீது வர்த்தக கட்டுப்பாடுகளும் மற்றும் 100 சதவீத வரியும் விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் ரஷ்ய முன்னாள் ஜனாதிபதியும் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத்தலைவருமான டிமித்ரி மெட்வதேவ் அமெரிக்க ஜனாதிபதியின் எச்சரிக்கைக்கு தனது எக்ஸ் தளத்தில், பதில் கருத்தினை வெளியிட்டிருந்தார்.

ரஷ்யா ஒன்றும் இஸ்ரேலோ, ஈரானோ அல்ல என்றும் ரஷ்யா மீதான மிரட்டல்கள் அமெரிக்க ஜனாதிபதிக்கே அச்சுறுத்தலாக அமையும் என குறிப்பிட்டார்.

அத்துடன் அமெரிக்காவின் பனிப்போர் காரணமாக, தன்னிச்சையாக ரஷ்யாவின் ஒட்டுமொத்த அணு ஆயுதங்களையும் அமெரிக்காவை நோக்கி ஏவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி டிமித்ரியின் மிரட்டலை தொடர்ந்து ரஷ்யாவை நோக்கி அணு ஆயுதம் தாங்கிய இரண்டு நீர்மூழ்கி கப்பல்களை அனுப்புமாறு டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை என்றும் அந்த வார்த்தைகள் சில சமயங்களில் காரணமற்ற விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் டொனால் டிரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

https://athavannews.com/2025/1441578

செம்மணியில் சான்று பொருட்களை காணொளிகள், ஒளிப்படங்கள் எடுக்க தடை

1 month 2 weeks ago
03 Aug, 2025 | 09:37 AM செம்மணி மனித புதைகுழிகள் அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட, ஆடைகள் உள்ளிட்ட பிற சான்று பொருட்களை பொதுமக்கள் அடையாளம் காணும் வகையில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (05) 1.30 மணி முதல் 05 மணி வரை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு சான்று பொருட்களை காண்பிப்பது தொடர்பில் நீதிமன்றினால் வழங்கப்பட்ட கட்டளை தொடர்பான ஒழுங்குவிதிகள் பின்வருமாறு: மேற்படி, நடவடிக்கையானது ஒரு நீதிமன்ற நீதிமன்ற நடவடிக்கைக்குரிய நடவடிக்கையாக காணப்படுவதால், கண்ணியம். அந்நடவடிக்கையில் பங்கேற்கும் நபர்களால் பேணப்பட வேண்டும். காணாமல் போன நபர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்த உறவினருக்கே முன்னுரிமை வழங்கப்படும். அவர்கள் தம்முடைய உறவுகள் காணாமல் போனதை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணம் ஒன்றினைச் சமர்ப்பிப்பது விரும்பத்தக்கது. ஏனைய நபர்களை அனுமதிப்பது தொடர்பில், முற்படுத்தப்படும் தரவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். மேற்படி நடவடிக்கையில் பங்குபற்றும் நபர்களது பெயர், அடையாள அட்டை இலக்கம் (அல்லது கடவுச்சீட்டு இலக்கம் அல்லது சாரதி அனுமதிப்பத்திர இலக்கம்). முகவரி என்பன நீதிமன்ற உத்தியோகத்தர்களால் பதிவு செய்யப்படும். இருபத்தொரு (21) வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மாத்திரம், மேற்படி நடவடிக்கையில் பங்குபற்ற அனுமதிக்கப்படுவார்கள் பங்குபற்றும் நபர்கள்; மேற்படி நீதிமன்ற நடவடிக்கையையோ அல்லது காண்பிக்கப்படும் பொருட்களையோ, ஒலி, ஒளிப்பதிவு செய்யவும், எந்தவொரு இலத்திரனியல் உபகரணங்களை எடுத்துவரவும் தடை விதிக்கப்படுகின்றது. மேற்படி நடவடிக்கையில் பங்குபற்றும் காணாமல் போன நபர்களின் உறவினர்கள் சட்டத்தரணி ஒருவருடன் தோன்றவும் நீதிமன்றம் அனுமதி வழங்குகின்றது. பங்குபற்றும் நபர்கள்; காண்பிக்கப்படும் சான்று பொருட்களை கையாளுவதற்குத் தடை விதிக்கப்படுகின்றது. மேற்படி நடவடிக்கை ஒரு நீதிமன்ற நடவடிக்கையாகக் காணப்படுவதனால், மேற்படி நடவடிக்கைகளை ஒளிப்பதிவு செய்வது தடை செய்யப்படுகின்றது. ஆகவே, இந்நடவடிக்கை நடைபெறும் வேளையில், அரியாலை சித்துப்பாத்தி இந்து மயான வளாகத்திற்குள் ஊடகவியலாளர்கள் எவரும் ஒளிப்பதிவு செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள். மேற்படி ஒழுங்குவிதிகளை மீறும் நபர்களுக்கு எதிராக, நீதிமன்றினால் உரிய சட்ட ஏற்பாடுகளுக்கமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அக்கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/221650

செம்மணியில் சான்று பொருட்களை காணொளிகள், ஒளிப்படங்கள் எடுக்க தடை

1 month 2 weeks ago

03 Aug, 2025 | 09:37 AM

image

செம்மணி மனித புதைகுழிகள் அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட, ஆடைகள் உள்ளிட்ட பிற சான்று பொருட்களை பொதுமக்கள் அடையாளம் காணும் வகையில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (05) 1.30 மணி முதல் 05 மணி வரை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்களுக்கு சான்று பொருட்களை காண்பிப்பது தொடர்பில் நீதிமன்றினால் வழங்கப்பட்ட கட்டளை தொடர்பான ஒழுங்குவிதிகள் பின்வருமாறு:  

மேற்படி, நடவடிக்கையானது ஒரு நீதிமன்ற நீதிமன்ற நடவடிக்கைக்குரிய நடவடிக்கையாக காணப்படுவதால்,  கண்ணியம். அந்நடவடிக்கையில் பங்கேற்கும் நபர்களால் பேணப்பட வேண்டும்.

காணாமல் போன நபர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்த உறவினருக்கே முன்னுரிமை வழங்கப்படும். அவர்கள் தம்முடைய உறவுகள் காணாமல் போனதை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணம் ஒன்றினைச் சமர்ப்பிப்பது விரும்பத்தக்கது. ஏனைய நபர்களை அனுமதிப்பது தொடர்பில், முற்படுத்தப்படும் தரவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

மேற்படி நடவடிக்கையில் பங்குபற்றும் நபர்களது பெயர், அடையாள அட்டை இலக்கம் (அல்லது கடவுச்சீட்டு இலக்கம் அல்லது சாரதி அனுமதிப்பத்திர இலக்கம்). முகவரி என்பன நீதிமன்ற உத்தியோகத்தர்களால் பதிவு செய்யப்படும்.

இருபத்தொரு (21) வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மாத்திரம், மேற்படி நடவடிக்கையில் பங்குபற்ற அனுமதிக்கப்படுவார்கள்

பங்குபற்றும் நபர்கள்; மேற்படி நீதிமன்ற நடவடிக்கையையோ அல்லது காண்பிக்கப்படும் பொருட்களையோ, ஒலி, ஒளிப்பதிவு செய்யவும், எந்தவொரு இலத்திரனியல் உபகரணங்களை எடுத்துவரவும் தடை விதிக்கப்படுகின்றது.

மேற்படி நடவடிக்கையில் பங்குபற்றும் காணாமல் போன நபர்களின் உறவினர்கள் சட்டத்தரணி ஒருவருடன் தோன்றவும் நீதிமன்றம் அனுமதி வழங்குகின்றது.

பங்குபற்றும் நபர்கள்; காண்பிக்கப்படும் சான்று பொருட்களை கையாளுவதற்குத் தடை விதிக்கப்படுகின்றது. 

மேற்படி நடவடிக்கை ஒரு நீதிமன்ற நடவடிக்கையாகக் காணப்படுவதனால், மேற்படி நடவடிக்கைகளை ஒளிப்பதிவு செய்வது தடை செய்யப்படுகின்றது. ஆகவே, இந்நடவடிக்கை நடைபெறும் வேளையில், அரியாலை சித்துப்பாத்தி இந்து மயான வளாகத்திற்குள் ஊடகவியலாளர்கள் எவரும் ஒளிப்பதிவு செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மேற்படி ஒழுங்குவிதிகளை மீறும் நபர்களுக்கு எதிராக, நீதிமன்றினால் உரிய சட்ட ஏற்பாடுகளுக்கமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அக்கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

01.jpg

02.jpg

https://www.virakesari.lk/article/221650

இலங்கைக்கு எதிராக மீண்டும் ஜெனிவாவில் தீர்மானம் ; எந்தவொரு தீர்மானத்தையும் வலுவாக எதிர்கொள்வோம் - அமைச்சர் விஜித ஹேரத்

1 month 2 weeks ago
03 Aug, 2025 | 09:14 AM (லியோ நிரோஷ தர்ஷன்) ஜெனிவா மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத் தொடரில் பிரித்தானியா, கனடா, வடக்கு மாசிடோனியா, மலாவி மற்றும் மொண்டெனேகுரோ உள்ளிட்ட நாடுகளின் அனுசரனையுடன் இலங்கை குறித்து தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள நிலையில், இந்த விடயம் குறித்து பன்னாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து கலந்துரையாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மேலும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழு ஜெனிவாவுக்கு செல்லவும், தீர்மானத்தை முன்வைக்க உள்ள நாடுகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மனித உரிமைகளை பாதுகாப்பதிலும் கடந்தகால விடயங்களில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதிலும் முழு அளவிலான ஈடுப்பாடுடன் அரசாங்கம் செயல்படுகிறது. ஆகவே இலங்கைக்கு எதிராக எந்தவொரு நாடும் ஜெனிவாவில் கொண்டுவரக்கூடிய தீர்மானங்களை வலுவாக எதிர்கொள்ள முடியும் என்பதுடன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் வழங்கிய உத்தரவாதத்தின் பிரகாரம் செப்டெம்பரில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத்தொடர் இலங்கைக்கு சாதகமாகவே அமையும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள பன்னாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான மீளாய்வு கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. பிரித்தானியா மற்றும் கனடா உள்ளிட்ட சில நாடுகள் இந்த தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்க உள்ளது. இருப்பினும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இலங்கைக்கு விஜயம் செய்து நேரடியாக நிலைமைகளை ஆராய்ந்து சென்றுள்ளார். அவர் வழங்கிய உத்தரவாதத்தின் பிரகாரம் செப்டெம்பரில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் இலங்கைக்கு சாதகமாகவே அமையும். மேலும் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசாங்கம் நேர்மையாக செயல்படுகிறது என தெரிவித்தார். எவ்வாறாயினும் கடந்தகால மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் விடயத்தில் நிலவிவரும் அதிருப்தியை அடுத்து, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வு கூட்டத் தொடரில், இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக் கூறலை மையப்படுத்திய புதிய தீர்மானம் ஒன்றை முன்வைக்க சர்வதேச நாடுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்த நடவடிக்கையானது, இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்த சர்வதேச கண்காணிப்பையும், அழுத்தத்தையும் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த புதிய தீர்மானத்தை பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ, மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இலங்கைக்கான கேந்திரிய குழு (Core Group on Sri Lanka) முன்வைக்கவுள்ளது. கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட 46/1 மற்றும் 51/1 போன்ற தீர்மானங்களின் தொடர்ச்சியாகவே இது அமைய உள்ளது. குறிப்பாக, 51/1 தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்து, பகுப்பாய்வு செய்து, பாதுகாக்கும் 'இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டம்' (Sri Lanka Accountability Project) என்ற பொறிமுறையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதே இந்த புதிய தீர்மானத்தின் பிரதான நோக்கமாக இருக்கும் என இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதும், எதிர்காலத்தில் இத்தகைய மீறல்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதும் இதன் முக்கிய இலக்குகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221646

இலங்கைக்கு எதிராக மீண்டும் ஜெனிவாவில் தீர்மானம் ; எந்தவொரு தீர்மானத்தையும் வலுவாக எதிர்கொள்வோம் - அமைச்சர் விஜித ஹேரத்

1 month 2 weeks ago

03 Aug, 2025 | 09:14 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

ஜெனிவா மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத் தொடரில் பிரித்தானியா, கனடா, வடக்கு மாசிடோனியா, மலாவி மற்றும் மொண்டெனேகுரோ உள்ளிட்ட நாடுகளின் அனுசரனையுடன் இலங்கை குறித்து தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள நிலையில், இந்த விடயம் குறித்து பன்னாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து  கலந்துரையாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மேலும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழு ஜெனிவாவுக்கு செல்லவும், தீர்மானத்தை முன்வைக்க உள்ள நாடுகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மனித உரிமைகளை பாதுகாப்பதிலும் கடந்தகால விடயங்களில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதிலும் முழு அளவிலான ஈடுப்பாடுடன் அரசாங்கம் செயல்படுகிறது.

ஆகவே இலங்கைக்கு எதிராக எந்தவொரு நாடும் ஜெனிவாவில்  கொண்டுவரக்கூடிய தீர்மானங்களை வலுவாக எதிர்கொள்ள முடியும் என்பதுடன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் வழங்கிய உத்தரவாதத்தின் பிரகாரம் செப்டெம்பரில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத்தொடர் இலங்கைக்கு சாதகமாகவே அமையும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள பன்னாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான மீளாய்வு கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. பிரித்தானியா மற்றும் கனடா உள்ளிட்ட சில நாடுகள் இந்த தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்க உள்ளது.

இருப்பினும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இலங்கைக்கு விஜயம் செய்து நேரடியாக நிலைமைகளை ஆராய்ந்து சென்றுள்ளார்.

அவர் வழங்கிய உத்தரவாதத்தின் பிரகாரம் செப்டெம்பரில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் இலங்கைக்கு சாதகமாகவே அமையும். மேலும் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசாங்கம் நேர்மையாக செயல்படுகிறது என தெரிவித்தார்.

எவ்வாறாயினும் கடந்தகால மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் விடயத்தில் நிலவிவரும் அதிருப்தியை அடுத்து, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வு கூட்டத் தொடரில், இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக் கூறலை மையப்படுத்திய புதிய தீர்மானம் ஒன்றை முன்வைக்க சர்வதேச நாடுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்த நடவடிக்கையானது, இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்த சர்வதேச கண்காணிப்பையும், அழுத்தத்தையும் மீண்டும் அதிகரித்துள்ளது.

இந்த புதிய தீர்மானத்தை பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ, மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இலங்கைக்கான கேந்திரிய குழு  (Core Group on Sri Lanka)  முன்வைக்கவுள்ளது. கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட 46/1 மற்றும் 51/1 போன்ற தீர்மானங்களின் தொடர்ச்சியாகவே இது அமைய உள்ளது.

குறிப்பாக, 51/1 தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்து, பகுப்பாய்வு செய்து, பாதுகாக்கும் 'இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டம்' (Sri Lanka Accountability Project) என்ற பொறிமுறையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதே இந்த புதிய தீர்மானத்தின் பிரதான நோக்கமாக இருக்கும் என இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதும், எதிர்காலத்தில் இத்தகைய மீறல்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதும் இதன் முக்கிய இலக்குகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/221646

குணச்சித்திர நடிகர் மதன் பாப் காலமானார்

1 month 2 weeks ago
நடிகர் மதன்பாபு காலமானார் 02 Aug, 2025 | 09:40 PM பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் மதன்பாபு, தனது 71 ஆவது வயதில் காலமானார். அவர் கடந்த சில காலமாக புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். மதன்பாபுவின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. இசையமைப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பின்னர் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான 'வானமே எல்லை' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தமிழ்,மலையாளம்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தனது தனித்துவமான பாணியால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். 'தேனாலி', 'ஃப்ரெண்ட்ஸ்', 'ரெட்' போன்ற பல படங்களில் அவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அவரது மறைவுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/221643

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

1 month 2 weeks ago
கில் சாதனை, ஜெய்ஸ்வால் சதம்: இங்கிலாந்தின் திட்டங்களை தவிடுபொடியாக்கிய ஆகாஷ் தீப் - யாருடைய கை ஓங்கியுள்ளது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் ஆகாஷ் தீப் கட்டுரை தகவல் தினேஷ் குமார் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் ஆண்டர்சன்–டெண்டுல்கர் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. ஸ்டோக்ஸ், பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத போதும், இரு அணிகளும் சரிக்கு சமமாக சண்டையிடுகின்றன. இன்றைய தினம் தொடரின் முடிவு தெரிந்துவிடும். ஓவல் டெஸ்டின் இரண்டாம் நாளில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, மூன்றாம் நாளிலும் தன் பிடியை விடாமல் பார்த்துக்கொண்டது. நைட் வாட்ச்மேனாக முதல் நாளில் களம்புகுந்த ஆகாஷ் தீப், நேற்று உடும்பு போல விக்கெட்டை இறுக்கிப் பிடித்துக்கொண்டு விளையாடி, இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் நிம்மதியை கெடுத்தார். கிடைக்கும் ஒவ்வொரு ரன்களும் அணிக்கு லாபம் என்று, ஜெய்ஸ்வாலும் அவருக்கு அதிக ஸ்ட்ரைக் கிடைக்கும்படி பார்த்துக்கொண்டார். இரண்டாம் நாளின் முதல் ஓவரிலேயே, பெத்தேல் பந்தில் பவுண்டரி அடித்து அதிரடியை ஆரம்பித்த ஆகாஷ் தீப் ஒருவரையும் விட்டுவைக்கவில்லை. உயிரைக் கொடுத்து வேகப்பந்து வீச்சாளர்கள் வீசிய பந்துகளை, அலட்சியமாக ஸ்லிப் பிராந்தியத்திலும் மிட் விக்கெட் திசையிலும் பறக்கவிட்டு ரன் சேர்த்தார். ஆகாஷ் தீப் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை இங்கிலாந்து பீல்டர்கள் சொல்லிவைத்தது போல போட்டிப் போட்டுக்கொண்டு தவறவிட்டனர். ஆகாஷ் தீப் மீது இங்கிலாந்து அணியின் பார்வை திரும்பியதை பயன்படுத்திக் கொண்டு, ஜெய்ஸ்வால் சத்தமின்றி சதத்தை நோக்கி நகர்ந்தார். ஜெய்ஸ்வால் பெரிதாக எந்த பரீட்சார்த்த முயற்சிகளையும் எடுக்கவில்லை. தனக்கு தோதான பந்துகள், தனக்கு விருப்பமான திசையில் கிடைக்கும் போது நம்பிக்கையுடன் பேட்டை விளாசினார். ஒரு நல்ல தொடக்க பேட்டருக்கு, பந்தின் வேகத்தை எப்படி தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற வித்தை தெரிந்திருக்க வேண்டும். கழுத்தை குறிவைத்து வீசப்பட்ட பந்துகளை ரொம்பவும் லாவகமாக தேர்ட் மேன் திசையில் அப்பர் கட் விளையாடினார்; தவறான லைனில் வீசப்பட்ட பந்துகளை பாயிண்ட் திசையிலும் சீவிவிட்டார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சதம் அடித்ததைக் கொண்டாடும் ஜெய்ஸ்வால் வோக்ஸ் இல்லாத குறை இங்கிலாந்து பந்துவீச்சில் அப்பட்டமாக வெளிப்பட்டது. மொத்த ஓவர்களில் 80 சதவிகிதத்துக்கும் மேல் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுமே பங்கிட்டு வீசினர். அதிர்ஷ்டத்தின் துணையுடன் 67 ரன்கள் குவித்த ஆகாஷ் தீப், ஓவர்டனின் பேக் ஆஃப் எ லெந்த் பந்தை லெக் சைடில் அடிக்க முயன்று, அட்கின்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆகாஷ் தீப் முக்கியமான ரன்களை குவித்ததோடு மட்டுமின்றி, மூன்று வேகப்பந்து வீச்சாளர்களையும் களைப்படைய செய்தார். இது ஆட்டத்தின் பின்பகுதியில் இந்திய பேட்டர்களுக்கு கைகொடுத்தது. ஜெய்ஸ்வால்–ஆகாஷ் தீப் ஜோடி, 107 ரன்களை குவித்தது. ஐந்தாவதாக களமிறங்கிய கில், அடுத்தடுத்து அட்டகாசமான பவுண்டரிகள் விளாசி, ரசிகர்களை குஷிப்படுத்தினார். இந்தியா–இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த கிரஹாம் கூச்சின் (752) சாதனையை கில் (754) முறியடித்தார். ஆனால், உணவு இடைவேளைக்கு பிறகான முதல் பந்திலேயே அட்கின்சன் பந்தை கால்காப்பில் வாங்கி, எல்பிடபிள்யூ முறையில் மீண்டும் ஒருமுறை ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸை போலவே மிகவும் எளிதாக விக்கெட்டை தூக்கிக் கொடுத்த விதம், கில் போன்ற ஒரு மிகத்திறமையான பேட்டருக்கு அழகல்ல. 700 ரன்களுக்கு மேல் குவித்தாலும், உள்ளே வரும் பந்துகளுக்கு தொடர்ச்சியாக அவர் விக்கெட்டை பறிகொடுப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்த பலவீனத்தை விரைவில் சரிசெய்யாவிட்டால், எதிரணிகள் அவருடைய காலைக் குறிவைத்து வியூகம் வகுக்க ஆரம்பித்துவிடுவார்கள். கில் தனது ஆட்டத்தில் விடாப்பிடித்தனத்தை வெளிப்படுத்த வேண்டும். ஜெய்ஸ்வாலிடம் இங்கிலாந்து மண்ணில் தாக்குப்பிடித்து விளையாடுவதற்கான டெக்னிக் இல்லை. கில் அளவுக்கு அவருக்கு பேட்டிங்கில் டைமிங்கும் கிடையாது. ஆனால், எப்படியாவது தாக்குப்பிடித்து விக்கெட்டை பத்திரப்படுத்தி விளையாடி ரன் சேர்க்கும் நுட்பம் அவருக்கு வாய்த்துள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஐந்தாவதாக களமிறங்கிய கில், அடுத்தடுத்து அட்டகாசமான பவுண்டரிகள் விளாசி, ரசிகர்களை குஷிப்படுத்தினார் அபாரமாக விளையாடிய ஜெய்ஸ்வால் 127 பந்துகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய ஆறாவது சதத்தை பதிவுசெய்தார்; இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டும் 4 சதங்களை குவித்துள்ளார். கில் பெவிலியன் திரும்பிய பிறகு களமிறங்கிய கருண் நாயர், தொடக்கம் முதலே தடுமாறினார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் அவர் தடுமாறியதை பார்க்கும்போது தான், ஜெய்ஸ்வால் இன்னிங்ஸின் மதிப்பு புரிந்தது. ஆடுகளம் முழுவதுமாக தட்டையாகவில்லை; இன்னும் உயிர்ப்புடன்தான் உள்ளது என்பதை கருண் நாயரின் குறுகிய நேர இன்னிங்ஸ் உணர்த்தியது. ஒவ்வொரு பந்துக்கும் விக்கெட்டை கொடுப்பதற்கு தயாராக இருந்த கருண், அட்கின்சன் பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது கடைசி இன்னிங்ஸை கருண் நாயர் விளையாடிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். 118 ரன்களில் டங் பந்தில் ஆஃப் சைடில் தனக்கு பிடித்த ஷாட் விளையாட ஆசைப்பட்டு, பவுண்டரி லைனில் கேட்ச் கொடுத்து ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் கொடுத்த மூன்று கேட்ச் வாய்ப்புகளை இங்கிலாந்து அணி கோட்டைவிட்டது. ஒட்டுமொத்தமாக ஆறு கேட்ச் வாய்ப்புகளை கோட்டைவிட்டது. முதல் டெஸ்டில் தான் தவறவிட்ட கேட்ச்களுக்கு பரிகாரம் தேடியதை போல, கிடைத்த வாய்ப்புகளை ஜெய்ஸ்வால் கெட்டியாக பிடித்துக்கொண்டார். எட்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜுரெல் ஆரம்பம் முதலே நல்ல ஷாட்கள் விளையாடி ரன் குவித்தார். நறுக்கென்று நான்கு பவுண்டரிகளுடன் 34 ரன்கள் சேர்த்த ஜுரெல், ஓவர்டன் வீசிய அருமையான அவுட் ஸ்விங்கரில் விக்கெட்டை பறிகொடுத்தார். டங் பந்தில் பவுண்டரி விளாசி, அரைசதத்தை கடந்த ஜடேஜா, ஒன்பதாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய சுந்தருடன் ஜோடி சேர்ந்து வேகமாக ரன் சேர்த்தார். கடந்த டெஸ்டின் நாயகர்கள் இருவரும் சீக்கிரம் ரன் சேர்த்தாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாடியது போல தெரிந்தது. 77 பந்துகளில் 53 ரன்களை குவித்த ஜடேஜா, இந்த தொடரில் முதல்முறையாக இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழந்தார். அடுத்த இரு பந்துகளில் சிராஜும் வெளியேற, ஓவல் மைதானத்தில் சிக்ஸர் மழை பொழிய வைத்தார் வாஷிங்டன் சுந்தர். 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உடன் 53 ரன்கள் எடுத்த அவர், கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார். வாஷிங்டன் சுந்தரின் கடைசிகட்ட வாணவேடிக்கை, 335 இல் இருந்த ஸ்கோரை ஐந்தே ஓவர்களில் 374 ரன்களுக்கு கொண்டு சென்றது. 374 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டுவதற்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி, நம்பிக்கையுடன் அடித்து விளையாடியது. கிராலி–டக்கெட் இருவரின் ஆட்டமும், ஆடுகளம் இன்னும் பேட்டிங்குக்கு சாதகமாக இருப்பதை காட்டியது. போகப் போக கவனமாக விளையாடத் தொடங்கிய இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விக்கெட் கொடுக்காமல் விளையாடினர். முன்றாம் நாளின் கடைசி ஓவரின், ஐந்தாவது பந்தில் சிராஜின் யார்க்கரில் கிராலி வீழ்ந்தார். நாளின் கடைசி ஓவரில் ஷேன் வார்ன்தான் இதுபோன்ற மாயாஜாலங்களை நிகழ்த்துவார். இல்லாத ஒன்றை இருப்பது போல பேட்டரை நம்பவைத்து, எதிர்பாராத ஒன்றை செய்து விக்கெட் எடுப்பது அவருடைய பாணி. ஜெய்ஸ்வாலை லெக் சைடில் பவுண்டரி லைனுக்கு நகர்த்தி, பவுன்சர் போடப் போவதாக போக்கு காண்பித்து, யார்க்கரில் ஆளை காலிசெய்தார். அதிரடி டக்கெட்டை 'அன்புடன்' வழியனுப்பிய ஆகாஷ்: இந்தியா - இங்கிலாந்து தொடரில் அடுத்த சர்ச்சை ஓவல் டெஸ்ட்: ஒரு ரன்னுக்காக விக்கெட்டை விட்ட கில் - 8 ஆண்டுகளுக்குப் பின் கருண் நாயரின் போராட்டம் ஓவல் டெஸ்ட் : காயத்தால் பென் ஸ்டோக்ஸ் விலகல் - இந்திய அணிக்கு சாதகமான 3 அம்சங்கள் கடைசி டெஸ்டிற்கான பிட்ச் எப்படி இருக்கும்? பார்வையிட்ட கம்பீர் மைதான ஊழியருடன் வாக்குவாதம் ஆட்ட நேர இறுதியில் விக்கெட்டை இழந்தாலும், இங்கிலாந்துக்கு நல்ல தொடக்கம் என்றே சொல்ல வேண்டும். இன்னும் 324 ரன்கள் தேவை என்கிற நிலையில், நான்காவது நாளில் இங்கிலாந்து அணிக்கு பெரிய பார்ட்னர்ஷிப் ஒன்று தேவைப்படுகிறது. ஹெடிங்லி டெஸ்டில் 371 ரன்கள் இலக்கை அநாயசமாக விரட்டிய இங்கிலாந்து அணி, ஓவலிலும் அதை நிகழ்த்திக் காட்டாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இங்கிலாந்து அணி, இந்த இலக்கை வெற்றிகரமாக விரட்டி எட்டும்பட்சத்தில், அது இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச சேஸாக அமையும். 2021–2022 தொடரில் இந்தியாவுக்கு எதிராக எட்ஜ்பஸ்டன் டெஸ்டில் 378 ரன்களை சேஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. வோக்ஸ் பேட் செய்ய களமிறங்க 99 சதவிகிதம் வாய்ப்பில்லாத நிலையில், இந்திய அணி டெஸ்டை வென்று தொடரை சமன்செய்ய 8 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. ஆட்டத்தின் முடிவு எப்படியும் நான்காவது நாளிலேயே தெரிந்துவிட அதிக வாய்ப்புள்ளது. ஒன்று இந்தியா வென்று தொடரை சமன் செய்யும். அல்லது இங்கிலாந்து வென்று 3–1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும். டிராவுக்கு வாய்ப்பே இல்லை என்பது மட்டும் நிச்சயம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c30zd27z71po

நியூயோர்க் நகரத்தில் அவசரகால சட்டம்

1 month 2 weeks ago
அவுஸ்ரேலியாவில் உள்ள குவின்ஸ்லான்ட் எனுமிடத்தில் ஒரு சூறாவளியின் போது சுறா ஒன்று வீதிக்கு வந்ததாக செய்தி வந்தது நினைவிலுள்ளது, அமெரிக்க அன்பர்களுக்கு சுறா வர வாய்ப்பில்லாவிட்டாலும் முன்னால் இரஸ்சிய அதிபர் வாய்கொழுப்பில் கதைத்ததிற்கு பதிலடியாக இரண்டு அணு நீர்மூழ்கியினை இடம் குறிப்பிடாத இடத்தில் நிலை நிறுத்தியுள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார், இந்த வெள்ளத்தினால் நியுயோர்க் நகரவாசிகளின் கால்களில் இந்த இரண்டு அணு நீர்மூழ்கிகள் இடறவாய்ப்புள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்.🤣